நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-6

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

முடிவுரை

"தகவல் அறியும் உரிமைச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தத் தகவல்களைப் பெற்றிருக்கவே முடியாது.

ஐக்கிய முன்னேற்ற கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிநாடு சென்று வந்த அமைச்சர்கள், அவர்கள் சென்ற நாடுகள், ஆன செலவு ஆகிய விவரங்களைக் கேட்டு ஒரு RDI மனுவை போன வருடம் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது இந்தியா டுடே பத்திரிகை.

செலவு பற்றிய விவரங்களைத் தவிர மற்ற எல்லாத் தகவல்களையும் கொடுத்தது பிரதமர் அலுவலகம். “வழங்கப்படும் தகவல்களில் பயணங்களின் செலவு விவரங்கள் இடம் பெறவில்லை. இந்த அலுவலகம் அந்த விவரங்களை வைத்துக் கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தும், அமைச்சகங்களிடமிருந்தும் அந்தத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதில் அளித்திருந்தது பிரதமர் அலுவலகம்.

உடனடியாக ஒவ்வொரு அமைச்சகத்திடமும் அந்த அமைச்சகத்தின் கேபினட் அமைச்சர், இணை அமைச்சர்கள் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் விவரங்களையும் உடன் சென்றவர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டு மனு செய்தது இந்தியா டுடே.

கபில்சிபலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அமைச்சருக்கும் உடன் சென்ற அதிகாரிகளுக்கும் ஆன செலவுக் கணக்கைத் தந்தது. ஆனால் விமானக் கட்டணம் பற்றி குறிப்பிடவில்லை.

பல அமைச்சகங்கள் நழுவலாகவே பதிலளித்துள்ளன. “சம்பந்தப்பட்ட பொதுத்துறை அல்லது கேபினட் செயலகத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியே அமைச்சரின் விஜயத்திற்கான செலவுகள் அமைந்தன..” என்று குறிப்பிட்டிருந்தது எ·கு அமைச்சகம்.

“இங்கே குறிப்பிட்டிருக்கும் செலவு மின்சாரத் துறை அமைச்சரின் விமானக் கட்டணத்திற்கு மட்டுமானது. அமைச்சரின் தினப்படி, ஹோட்டல் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவை குறித்த விவரங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களே கவனித்துக் கொண்டன. பிறகு அது பற்றிய கணக்குள் செலவு மற்றும் கணக்கு அலுவலகத்திற்கும் கேபினட் செயலகத்திற்கும் அனுப்பப்பட்டன..” என மின்சாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவாகவே பதிலளித்திருந்தாலும், செலவு பற்றிய கேள்விக்கு, “இவர்களுக்கு செலவு பி.ஏ.ஓ, கேபினட் செயலகங்களின் பயணங்களுக்குப் பிறகு செலவு குறித்த விவரங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்தே நீங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம்..” என்று பதிலளித்திருக்கிறது.

அதே போல் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகமும் செலவு தவிர்த்து பிற எல்லாத் தகவல்களையும் அளித்திருக்கிறது.

கடைசியாக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த செலவு விவரங்களைக் கேட்டு கேபினட் செயலகத்தை அணுகியது இந்தியா டுடே.

“மத்திய கேபினட் அமைச்சர்களின் சம்பளங்கள், படிகள் உள்ளிட்ட செலவுகளைப் பற்றிய தகவல்களுக்கும் கேபினட் செயலகத்திற்கும் சம்பந்தமில்லை. இவையெல்லாம் பில்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகம், கேபினட் விவகாரங்களுக்கான பி.ஏ.ஓ. இடையில் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன..” என்று பதிலளித்துள்ளது கேபினட் செயலகம்.

ரயில்வே, தொழிலாளர், சுற்றுலா, வெளியுறவு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு, நிதி, நீராதாரங்கள் போன்ற அமைச்சகங்கள் முழுத் தகவல்களையும் கொடுத்துள்ளன.

பல சிக்கலான நடைமுறைகளின் காரணமாக எவ்வளவு செலவாகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது ஒரு அலுவல் ரீதியான பயணத்திற்கு எந்த அளவுக்குச் செலவாகிறது என்பது இன்னமும் மர்மமான விஷயம்தான்.

அதிகாரப்பூர்வமாக வெளிநாடு செல்ல பிரதமர் அலுவலகம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையிலும் அமைச்சர்கள் தங்கள் பயணத்தில் பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த அளவுக்கு செலவழிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

பிரதமர் அலுவலகம் மட்டும் பல பயணங்களைத் தடுத்திருக்காவிட்டால், இந்தப் பட்டியல் இன்னும் பெரிதாகியிருக்கும். கூட்டணிக் கட்சிகளிலிருந்து வேண்டுகோள் வந்தால், பிரதமர் அலுவலகத்தால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதிகம் பறந்திருந்தது காங்கிரஸ் பெருந்தலைகள்தான்.

'முன்னகர்ந்து செல்லும் அரசு' என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டுபிடித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இப்போது அவர் உயிரோடு இருந்து ஐ.மு.கூட்டணி அரசு வெளிநாட்டுப் பயணங்களில் நகர்ந்து சென்றிருக்கும் தூரத்தைப் பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்."

நன்றி : இந்தியா டுடே, பிப்ரவரி 17, 2008

(தொடரும்)

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

2 comments:

உண்மைத்தமிழன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சோதனைப் பின்னூட்டம்..

ஏன்னா இதுக்கு ஒரு கமெண்ட்ஸ்கூட வராலைன்னா இந்தியாவுக்கே கேவலம்ல்ல..

abeer ahmed said...

See who owns otairmedia.com or any other website:
http://whois.domaintasks.com/otairmedia.com