நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-2

முதல் பாகம்

இந்தியா டுடே, பிப்ரவரி 27, 2008

மத்திய அமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு நிதியமைச்சகம் நிதி ஒதுக்குகிறது. ஒதுக்கப்படும் நிதியைவிட ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு செலவழித்து சாதனை நடத்தி வருகின்றனர் அமைச்சர்கள்.

சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணத்துக்காக ஒதுக்கீடு செய்தது 46 கோடி ரூபாய். ஆனால் செலவு செய்யப்பட்டதோ 80.2 கோடி.

கடந்த 2005-06ம் நிதியாண்டில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 28 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.

இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டைவிட சற்று கூடுதலாகவே அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணத்துக்கு 47.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் சிதம்பரம்.

முந்தைய ஆண்டைவிட 2006-06ம் நிதியாண்டில் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணச் செலவு குறைந்தாலும், ஒதுக்கீட்டைவிட அதிகரித்து ரூ.62.58 கோடி செலவு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தாண்டில் கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்தன. சிதம்பரம் 45.18 கோடியை ஒதுக்கீடு செய்ய, செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.

நிறைய செலவாகிறதே என்று 2007-08ம் நிதியாண்டில் தாராளமாக ரூ.75.5 கோடி ஒதுக்கீடு செய்தார் சிதம்பரம். இதனால் குஜாலான நமது அமைச்சர்கள் 150.43 கோடி செலவிட்டு அசத்திவிட்டனர்.

கடைசி நிதியாண்டில் தற்போதைய கூட்டணி அரசு இருக்கிறது. எனவே அமைச்சர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமல்லாது, அவர்களே வாய் பிளக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் ரூ.160.76 கோடி ஒதுக்கி மனம் குளிர வைத்தள்ளார் சிதம்பரம்.

போன வருடம் நவம்பர் மாதம் 30-ம் தேதியோடு கணக்கிட்டால் 1,287 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு. இந்த நாட்களில் இதன் அமைச்சர்கள் சுமார் 1 கோடி கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.

சொந்தப் பயணங்களும் இதில் அடங்கும் என்றாலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ விஜயங்களும்தான். இவர்கள் பயணம் செய்த மொத்த தூரத்திற்கு பூமியையே 256 முறை சுற்றி வந்துவிடலாம்.

பதவியிலிருந்த போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த அமைச்சர்களில் 47 அமைச்சர்கள் 27 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.

78 அமைச்சர்களில் 12 அமைச்சர்களாவது தலா இரண்டரை கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள்.

அலுவலைவிட சொந்த விஷயமாக வெளிநாடுகளைச் சுற்றிய அமைச்சர்கள் பட்டியலும் அதிகமாகவே இருக்கிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் எம்.ஏ.ஏ.·பத்மி, புரந்தேஸ்வரி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ்முன்ஷி, சுரங்கத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தின்ஷா ஜே.படேல், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த்குப்தா, எ·கு துறை இணையமைச்சர் அகிலேஷ்தாஸ் ஆகியோர்தான் சொந்த செலவில் அதிகம் தடவை நாடு சுற்றிய மகாதேவர்கள்.

ஆனால் பல சமயங்களில் அமைச்சகங்களுக்கும், அந்த அமைச்சர்கள் மேற்கொண்ட பயணங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான இணையமைச்சர் ஏன் உஸ்பெகிஸ்தானுக்கு மூன்று முறை செல்ல வேண்டும்?

ஏன் அமைச்சர்கள் அடிக்கடி செர்பியா செல்கிறார்கள்?

அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் செலவழிப்பதற்கென்று தனி விதிமுறைகள் இருந்தாலும் சிறந்த ஹோட்டல்களில் தங்கவும், விலையுயர்ந்த காரில் செல்லவும் விரும்புகிறார்கள். இதற்கு அங்கிருக்கும் தூதரகங்களை வற்புறுத்தவும் செய்கிறார்கள்.

பல அமைச்சர்கள் தங்கள் வேலைகளுக்குச் சம்பந்தமில்லாத இடங்களுக்கே செல்கிறார்கள். கிடைத்திருக்கும் தகவல்களின்படி 17 அமைச்சர்கள் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

14 அமைச்சர்கள் மலேசியாவிற்கு ஒரு முறையாவது சென்றிருக்கிறார்கள்.

தங்களுக்குப் போதுமான வேலை ஒதுக்கப்படவில்லை என்று மூக்கு சீந்திய இணையமைச்சர்கள்தான் அதிகம் வெளிநாடுகளில் டூர் அடித்திருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 40 இணையமைச்சர்களில் 33 பேர் 311 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 7 பேர் வெளிநாட்டு மண்ணையே மிதிக்காத ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி பிறந்த நாடான இத்தாலிக்கு ஏகப்பட்ட அமைச்சர்கள் சொந்த முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் சென்று வந்திருக்கிறார்கள்.

ரவிசங்கர்பிரசாத், சுஷில்குமார்ஷிண்டே, கமல்நாத், காந்திலால்புரியா, ஆர்.வேலு, சந்தோஷ்மோகன்தேவ், அம்பிகா சோனி, சுபோத்காந்த்சகாய், சங்கர்சிங்வகேலா, விலாஸ் முட்டெம்வர், எஸ்.ஜெய்பால்ரெட்டி, ஆஸ்கர் ·பெர்னாண்டஸ், பி.ஆர்.சிந்தியா, அகிலேஷ் பிரஸாத்சிங், அஸ்வினிகுமார், பிரகாஷ்ஜெய்ஸ்வால், ரேணுகா சவுத்ரி ஆகிய அமைச்சர்கள் இதில் அடக்கம்.

பிரணாப் முகர்ஜி, ஆனந்த் ஷர்மா, சரத்பவார்(விவசாயத் துறை அமைச்சகம் சார்பாக பறந்ததைவிட பி.சி.சி.ஐ சார்பாக பறந்ததுதான் அதிகம்), அன்புமணி ராமதாஸ், ரேணுகா செளத்ரி, கபில்சிபல், வயலார் ரவி, இந்தர்ஜித் சிங், அஸ்வினி குமார் ஆகியோர் அதிகம் பறந்த சில அமைச்சர்கள்.

(தொடரும்)

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

எட்டாம் பாகம்

4 comments:

உண்மைத்தமிழன் said...

சோதனைப் பின்னூட்டம்..

ஏன்னா இதுக்கு ஒரு கமெண்ட்ஸ்கூட வராலைன்னா இந்தியாவுக்கே கேவலம்ல்ல..

கூடுதுறை said...

அந்த 7 அப்பாவி அமைச்சர்கள் யாருன்னு சொல்லவில்லையே....

உண்மைத்தமிழன் said...

//கூடுதுறை said...
அந்த 7 அப்பாவி அமைச்சர்கள் யாருன்னு சொல்லவில்லையே....//

சொல்லிருக்கனே கூடுதுறை ஸார்..

http://truetamilans.blogspot.com/2008/08/4.html - இந்தப் பதிவுல போய் பாருங்க..

abeer ahmed said...

See who owns wackywednesdaysale.com or any other website:
http://whois.domaintasks.com/wackywednesdaysale.com