05-03-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடலூர் மணியின் வீரமரணம்..!
தற்கொலை என்பது ஒரு மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளும் அநீதி.. ஆனால் அதே சமயம் அந்த அநீதியினால்தான் ஒரு நீதியை உருவாக்க கூடுமெனில் அதைச் செய்பவன் தியாகி..! இதனால்தான் தியாகி சங்கரலிங்கனாரும், முத்துக்குமாரும், செங்கொடியும் இன்றளவும் பேசப்படுகிறார்கள்..! இப்போது கடலூரைச் சேர்ந்த தோழர் மணி மத்திய, மாநில அரசுகளை உலுக்குவதற்காக தன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்..!
வெட்கம் மானமில்லாத எருமை மாட்டுத் தோலை பூண்டிருக்கும் நமது அரசியல்வியாதிகள் இதற்கெல்லாம் மயங்குபவர்களில்லை..! அவர்கள் வீட்டில் எழவு நடந்தால் மட்டுமே சாவு என்ற ஒன்றே இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதிசய பிறவிகள் அவர்கள்..!
இந்த மரணமும், வழக்கம்போல ஈழத்திற்கான உயிரிழப்புகளில் ஒன்றாக சேர்ந்துவிடும்..! நமது எதிரிகள் மனிதத்தன்மையோடு, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால் நாம் நமது உயிரை பணயம் வைக்கலாம்..! அவர்களே கொடுங்கோலர்களாக இருக்கும்போது நமது உயிரை மாய்த்து வெறுமனே வெளிச்சம் காட்டிவிட்டு சட்டென்று அணைந்து போவதற்கு நமது உயிரை இழக்கக் கூடாது..! போதும்.. இந்த உயிரிழப்பு.. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்களேன்..!
மீண்டு வந்தார் ஜெகதி..!
எதிரிகள் என்று நினைக்கப்படுபவர்களுக்குக்கூட இந்தக் கொடுமை நடக்கவே கூடாது..! 11 மாதங்களுக்கு முன்பாக ஒரு விடியற்காலையில் கோழிக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கும் மலையாள நகைச்சுவை நடிக மன்னன் ஜெகதி குமார் நேற்று முன்தினம்தான் வீடு திரும்பியிருக்கிறார் வெறும் உயிருள்ள உடலாக..!
அவருடைய உடல் செயல்பாடுகள் இன்னமும் முழுமையாக தேறவில்லை என்கிறார்கள். சக்கர நாற்காலியில் பொம்மை போல் அமர்ந்திருக்கும் இந்தக் கோலத்தைப் பார்க்கவும் முடியவில்லை.. அவர் இப்படி மெளனமாக மைக்குகள் முன்னால் அமர்ந்திருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்..! எதிரில் இருந்த பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு கொண்டாரா..? அல்லது தன்னுடைய நிலைமையை புரிந்துதான் இருக்கிறாரா என்பதே புரியவில்லை..! இன்னமும் சரளமான பேச்சு வரவில்லையாம்..! மனுஷனுக்கு பலமே அவருடைய பலவித மாடுலேஷன்கள்தான்..! இன்றைய அவரது மெளனம் என்னைப் போன்ற அவரது அதி தீவிர ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை..!
'அம்மா' அமைப்பில் திலகனுடன் பிரச்சினை வந்தபோது திலகன், “விஷமான மனிதர்” என்று வர்ணித்திருந்த நெடுமுடி வேணு மீதான சர்ச்சையில் தலையிட்டு திலகனிடம் உரிமையாக சண்டையிட்டவர்.. நெடுமுடி வேணுவுக்கு மிகப் பெரிய சப்போர்ட் செய்து பேசியிருந்தார்.. நகைச்சுவையில் இவர் கட்டாத வேடமே இல்லை என்றாலும் பொது மேடைகளிலும், விழாக்களிலும் மிக சீரியஸாகவே பேசுவாராம்..! “அதான் சினிமால்ல காமெடியா பேசுறோம்ல்ல.. போதாதா..? இங்கேயும் அப்படித்தான் பேசணுமா?” என்று கேட்பாராம்..!
ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி அவரது பெயர் டேமேஜ் ஆன போதிலும், கேரள திரைப்பட உலகம் இன்றுவரையிலும் அதனை நம்பவில்லை.. அந்த நேரத்தில் அவருக்கு முழு சப்போர்ட் செய்திருந்தார்கள்..! அந்தச் சம்பவம் நடந்தபோது ஜெகதி, சுவிட்சர்லாந்தில் இருந்தார் என்று பல சினிமாக்காரர்கள்தான் அடித்துச் சொல்லியிருந்தார்கள்..!
அதற்குப் பின்தான் மேலும், மேலும் சினிமாவில வெறியாக நடிக்கத் துவங்கி ஒரு வருடத்தில் வெளியாகும் மலையாளப் படங்களில் 95 சதவிகிதப் படங்களில் இவர் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.. அந்த உழைப்போ என்னவோ இன்றைக்கு அவரை நிரந்தரமாக இப்படி படுக்க வைத்துவிட்டது..! அண்ணன் உடல் நலம் தேறி மீண்டு வர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
பாலச்சந்திரன் என்னும் மகன்..!
பிரபாகரனின் மகன் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே கொல்லப்பட்டிருக்கிறார் சிறுவன் பாலச்சந்திரன்..! 10-க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டணி அமைத்து திட்டமிட்ட கொலைக்களனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது உலக வரலாற்றில் ஒரு கறுப்புச் சம்பவம்.. அத்தனையையும் செய்துவிட்டு உதவிய நாடுகளெல்லாம் இப்போது தங்களது கைகளைக் கழுவிக் கொண்டு தப்பித்துவிட்டன..!
இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தே.. நடக்கட்டும் என்று எதிர்பார்த்தே காத்திருந்த அமெரிக்காவும், ஐ.நா.வும்.. இப்போது வந்து குரல் எழுப்பி விசாரிக்க வேண்டும் என்கிறார்கள்.. அன்றைய நிலைமையில் நாள்தோறும் எத்தனையோ கூப்பாடுகள்.. கதறல்கள்.. வேண்டுகோள்கள்.. என்று அத்தனையையும் காதில் வாங்கிக் கொள்ளாத இந்த உலக அரசியல் காவாலித்தனம்.. இன்றைக்கு தாங்கள் யோக்கியம் என்பதை போல வேஷம் போட்டு மனித உரிமை ஆணையத்தில் விசாரிக்க வேண்டும் என்கிறது..! அத்தனையும் நடிப்பு..!
ராஜபக்சே என்னும் இரண்டாவது ஹிட்லரின் கதை முடியும்வரையிலும் தமிழ் ஈழத்தின் புதிய நம்பிக்கைக்கான வழி பிறக்கவே வாய்ப்பில்லை..!
ஒரே படத்தில் அனைத்தும் காலி..!
கடல் படத்தின் தோல்வி மணிரத்னத்தை ரொம்பவே அசைத்துப் பார்த்துவிட்டது.. ராவணன் தோல்வியை அவர் புரிந்து ஏற்றுக்கொண்டாலும், அப்போதே விநியோகஸ்தர்களின் பலத்தை புரிந்து கொண்டு அப்படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று 60 சதவிகித பணத்தைத் திருப்பிக் கொடுத்து சமாளித்தார். இப்போது ‘கடல்’ படத்தை தானே தனியே தயாரித்து தியேட்டர்களை புக் செய்தோ அல்லது விநியோகஸ்தர்களிடம் பேசியோ சமாளிக்க முடியாது என்று நினைத்துதான் ஜெமினியை கூட்டணி சேர்த்து தயாரித்து முடித்தார்.
தயாரிப்புச் செலவை ஜெமினியிடம் இருந்து வாங்கிக் கொண்டு அவர்களிடமே மொத்த விநியோகத்தையும் விட்டுவிட.. இப்போது விநியோகஸ்தர்கள் ஜெமினி லேப்பை முற்றுகையிட்டுள்ளார்கள்.. ஏற்கெனவே 'துப்பாக்கி' பட விஷயத்தில் கடைசி நேரத்தில் சிக்கலுக்குள்ளாகி எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்கள் ஜெமினி லேப்பின் கண்ணாடி கதவுகளை உடைத்தெறியும் அளவுக்கு பிரச்சினை போனது.. இந்த முறை எதுக்கு வம்பு என்று சொல்லி போலீஸை கூப்பிட்டு காவல் காக்க வைத்திருக்கிறார்கள்..!
மீடியம் பட்ஜெட் படங்களை அவ்வப்போது வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த மன்னன் பிலிம்ஸ், இந்த கடல் படத்தினால் மொத்தமாக முழுகிப் போயுள்ளது.. மொத்தம் இவர்களுக்கு மட்டுமே 17 கோடி நஷ்டம் என்கிறார்கள்..! இதில் சென்னை, திருச்சி, கோவை ஏரியாக்களை வாங்கிய லிங்குசாமியின் நஷ்டம் 6 கோடியை விட்டுவிட்டு பார்த்தால் 11 கோடி ஸ்வாகா..!
ஏதோ ஒருவர் இருவர்தான் இது போல் சின்ன பட்ஜெட் படங்களுக்கு காவலனாக வருகிறார்கள். அவர்களையும் இப்படி ஒரே படத்தில் அழித்தால் எப்படி..?
கே.பி. வீட்டு வாட்ச்மேன் படத்தின் ஹீரோ..!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும், கிடைக்கக் கூடியதை வேண்டி உழைத்தால் நிச்சயம் அடையலாம் என்பதற்கு இந்த அஸ்வின் பாலாஜியும் ஒரு உதாரணம்..!
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் வீட்டில் வாட்ச்மேனாக இருந்தவர்..! ச்சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் பேப்பரும், பேனாவுமாக இருப்பார்.. கவிதைகள், கதைகளாக எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்..! எப்படியாவது சினிமா துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தோடு கே.பி. வீட்டிற்கு வருபவர்களிடம் அனுசரனையாக பழகிக் கொண்டிருந்தார்..!
கே.பி. தனது வீட்டை இடித்து மாற்றி அமைக்க முடிவெடுத்தபோது சட்டென்று ஒரு நாள் வேலை போனது.. ஆனாலும் அதுவும் நல்லதாகி அடுத்து கமல்ஹாசனின் அலுவலகத்தில் வாட்ச்மேனாக வேலைக்குப் போனார்.. அங்கேயும் 2 வருடங்கள் கழித்துவிட்டு இறுதியாக ஒரு முடிவோடு கோடம்பாக்கத்தில் கால் வைத்து இன்றைக்கு ஒரு ஹீரோவாகவே வந்துவிட்டார்..! வரவிருக்கும் ‘கல்லாப்பெட்டி’ என்னும் படத்தில் அஸ்வின் பாலாஜிதான் ஹீரோ..! எப்பேர்ப்பட்ட வளர்ச்சி இது..!? ரொம்பவே பெருமையாக இருந்தது அஸ்வினை பார்க்க..!
கடுமையான காய்ச்சல்.. மூட்டு வலி இருந்தபோதிலும் அறிமுகப்படுத்தி வைக்க கே.பி.யே நேரில் வந்ததிலும் அஸ்வினுக்கு மிகப் பெரிய பெருமை..! வாழ்த்துகள் அஸ்வின்.. நல்லபடியா முன்னேறி வாங்க..!
பெரியவர் சசிபெருமாளின் போராட்டம்..!
மதுக் கடைகளை மூடும்படி மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி பூட்டு போடும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். அடுத்து வைகோ தனது பேவரைட் போராட்டமான நடை போராட்டத்தை துவக்கி நடத்தி வருகிறார். சசிபெருமாள் என்னும் காந்தியவாதி கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்து நேற்றுதான் கைவிட்டிருக்கிறார். இனிமேல் சாத்வீகமான வழிகளில் தனது மது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.. இடையில் அவரைத் தூக்கி புழல் சிறையில் வைத்தபோதும் போராட்டத்தைக் கைவிடாமல்.. மெரீனா பீச்சில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோதும் கைவிடாமல்.. நெல்லை ஜெபமணி வீட்டில் உண்ணாவிரத்த்தைத் தொடர்ந்த அவரது மன உறுதிக்கு சல்யூட் செய்ய வேண்டும்..!
வைகோவின் நடை யாத்திரை மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிதான் என்பது அவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் நடந்து வந்ததினால்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே தெரிகிறது என்னும்போது இந்தப் பெரியவரின் நிலைமை இந்தம்மாவுக்கு தெரியவா போகிறது..?
ச்சும்மா போகிற போக்கில் சரி.. நீக்கிரலாம் என்று சொல்வதற்கு அதென்ன அடுத்தவன் வீட்டுக் காசா..? சொந்த வீட்டுக்கே அதுனாலதான் கோடிகள்ல காசு கொட்டுது.. அதை வைச்சுத்தான் அடுத்த எலெக்சனை சமாளிக்கணும்..! சொந்த பந்தங்களுக்கு அள்ளிக் கொடுக்கணும்..! கட்சிக்குச் செலவழிக்கணும்..! இன்னும் நிறைய இருக்கே.. அந்தத் தொழிலையே மூடுங்கன்னா சொன்னா எப்படி..? டாஸ்மாக் மூலமாக யார் செத்தாலும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை..! செத்தவன் கொடுத்த காசில்தான் மத்தவர்களுக்கு அரிசி கொடுக்க முடிகிறது என்பார்..! அரிசி வாங்குபவர்கள் அமைதியாக இருக்கும்வரையிலும் இதற்கொரு தீர்வு வராது..!
நாளைய பொழுதுகளில் நாத்திகம், ஆத்திகம் போல்.. குடிகாரர்கள்.. குடியை வெறுப்பவர்கள் என்ற குழுக்களிடையே முட்டல், மோதல் நடக்கலாம்.. நடக்க வேண்டும்.. குடிகார கூமூட்டைகள் சமூக நலன் கருதியாவது தங்களது கொள்கையைக் கைவிடுவது அவர்களுக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்தினருக்கும் நல்லது..!
பாக்யராஜின் லொள்ளு..!
அவரும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பாரு..! ஏதோ பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நண்பர்கள் கூப்பிட்டால் ஓகே.. ஏதோ முருங்கைக்காய் வியாபாரி மாதிரி அவரை டீஸ் பண்ணினா கோபம் வராதா என்ன..? வந்திருச்சு பாக்யராஜுக்கு..! சொன்னது நிகழ்ச்சியின் தொகுப்பாளினி..!
தான் மைக்கை பிடித்ததும் தொகுப்பாளினியோட வயசு என்னன்னு கேட்டாரு பாக்யராஜ். அந்தப் பொண்ணு சொல்ல மாட்டேன்றுச்சு.. கல்யாணமாயிருச்சான்னு கேட்டாரு.. அதையும் சொல்ல மாட்டேன்றுச்சு.. “இல்ல.. முருங்கைக்காயை பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க.. உங்களுக்குக் கல்யாணம் ஆயிருந்தா பிரச்சினை இல்லை.. விட்ரலாம்.. அது உங்க பாடு.. உங்க வீட்டுக்காரர் பாடு..! ஆகலைன்னா நமக்குத் தோதுபடும்ன்னா கொஞ்சம் உங்களோட பேசிப் பார்க்கலாம்னுதான் கேட்டேன்..” என்று ஒரு போடு போட.. பாவம் சன் டிவி சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவின் முகம் பேயறைந்தது போலானது..! இனி ஜென்மத்திற்கும் தன் வீட்டில்கூட முருங்கைக்காயை தொட மாட்டார் என்றே நினைக்கிறேன்..!
சாதுவான முயலையும் முள்ளங்கியினால் பிராண்டினால் அதுவும் கடிக்கத்தானே செய்யும்..!
மயிரிழையில் தப்பிய தலைவர்..!
துப்பாக்கிய தூக்கினா மட்டும் போதாது.. கரெக்ட்டா சுடணும்.. இது இந்தப் பயபுள்ளைக்குத் தெரியலை போலிருக்கு..
பல்கேரியால எதிர்க்கட்சித் தலைவரான அஹமத் டோகன் என்பவர் ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நபர் மேடையேறி அவரை துப்பாக்கியால் சுட முயன்று சொதப்பிவிட்டார். ஆள், ஆளாக்கு மேடையிலேயே அந்த துப்பாக்கி வீரனை பிரித்து மேய்ந்துவிட்டார்கள்..! நம்மூருக்கு வந்து கொஞ்சம் டிரெயினிங் எடுத்துட்டு போலாமே..?
விஸ்வரூப கலெக்சன்..!
விஸ்வரூபம் நிசமாகவே விஸ்வரூபமெடுத்து ஒட்டு மொத்த வசூலாக 200 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.. இந்தச் சாதனைக்கு முழு முதற் காரணம் இஸ்லாமிய அமைப்புகளும், தமிழக அரசும்தான் என்பதில் சந்தேகமில்லை..! ஆபத்திலும் ஒரு நன்மையுண்டு என்பார்கள். அது கமல் விஷயத்தில் பொருத்தமாகவே நடந்தேறியுள்ளது..!
Complete Box Office Report : Vishwaroopam
Viswaroopam 1st (first) Day box office total Collections: 8.35 Crores
Viswaroopam 2nd (second) Day box office Collections: 9.10 Crores
Viswaroopam 3rd (third) Day box office Collections: 8.56 Crores
Viswaroopam 4th (fourth) day (four days) box office collections: 6.23 crores
Viswaroopam 5th (fifth) day (5 days) box office collection: 7.10 crores
Viswaroopam 6th (sixth) day (6 days) box office collections: 7.65 crores
Viswaroopam 7th day (7 days) box office collections: 7.28 crores
Viswaroopam 8th day (8 days) box office collections: 7.05 crores
Viswaroopam 9th day (9 days) box office collections: 7.35 crores
Viswaroopam 10th day (10 days) box office collections: 8.70 crores
Viswaroopam 11th day (11 days) box office collection: 8.10 crores
Viswaroopam 12th day (12 days) box office collections: 7.23 crores
Viswaroopam 13th day (13 days) box office collection: 5.90 crores
Viswaroopam 14th day (14 days) box office collections: 8.36 crores
Viswaroopam 15th day (15 days) box office collections: 9.15 crores
Viswaroopam 16th day (16 days) box office collections: 9.28 crores
Viswaroopam 17th day (17 days) box office collections: 9.02 crores
Viswaroopam 18th day (18 days) box office collections: 8.40 crores
Viswaroopam 19th day (19 days) box office collections: 6.28 crores
Viswaroopam 20th day (20 days) box office collections: 6.03 crores
Viswaroopam 21st day (21 days) box office collections: 5.75 crores
Viswaroopam 22nd day (22 days) box office collections: 5.20 crores
Viswaroopam 23rd day (23 days) box office collections: 5.35 crores
Viswaroopam 24th day (24 days) box office collections: 5.42 crores
Viswaroopam 25th day (25 days) box office collections: 4.80 crores
Collections till Date: 181.81 Crores
இது பிப்ரவரி 20-வரைக்குமான கணக்கு மட்டுமே..!
இனி கமல் தன் வீட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.. போதுமான அளவுக்கு பணம் கிடைத்துவிட்டது.. இனி இதனைப் பத்திரப்படுத்திக் கொண்டு, தன்னை வைத்து படமெடுக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்தால் அவர்களும் கொஞ்சம் வாழ்த்துவார்கள்..!
ஹாலிவுட் போகட்டும்.. ஆனால் அங்கேயே குடியிருந்துவிடக் கூடாது.. கமலின் வேகத்தைப் பார்த்தால் அடுத்து ஆஸ்கர் விருது பெற்றுவிட்டுத்தான் தமிழகத்தின் கால் வைக்க வேண்டும் என்கிற வெறியில் இருப்பதுபோல் தெரிகிறது..! தமிழ் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுக்களை விடவா அவருக்கு ஆஸ்கர் இப்போது பெரிதாகிவிட்டது..?
இன்னொரு விஷயம். விஸ்வரூப சர்ச்சை விவகாரம் நடந்து கொண்டிருந்தபோது நடிகை ஆண்ட்ரியா தனது பேஸ்புக் பக்கத்தில் கமலுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். ஜெயலலிதா விஸ்வரூபம் பற்றி பேட்டியளித்த உடனேயே ஆண்ட்ரியா ஜெயலலிதாவை England prime Minister என்று கிண்டல் செய்து பல செய்திகளை போட்டுக் கொண்டே வந்தார்..! கடுமையான தாக்குதல்கள்..!
அட.. வேறு எந்த சினிமாக்காரனுக்கும் வராத கோபம், இந்த அம்மணிக்கு வந்திருக்கேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.. இப்போ போய் பார்த்தா ஒரேயொரு செய்தியைத் தவிர மீதியையெல்லாம் தூக்கிட்டாங்க.. சரி.. போகட்டும்.. அவங்களும் தமிழ்நாட்டுல வாழ வேண்டாமா..?
அமீரின் குற்றச்சாட்டு..!
‘ஆதிபகவன்’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தது பற்றி இப்போதுவரையிலும் அமீர் கோபத்துடன்தான் இருக்கிறார்..! ஏற்கெனவே பல ‘ஏ’ படங்களுக்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருந்த சூழலில், தன்னுடைய படத்துக்கு கொஞ்சம் பிரச்சனையைக் கொடுத்துவிட்டார்களே என்ற கோபத்தில் பேசிவிட்டார் அமீர்..!
கடந்த காலங்களில் ‘கந்தசாமி’, ‘நடுநசி நாய்கள்’ போன்ற படங்களுக்கெல்லாம் ‘யு’ சர்டிபிகேட் கொடுத்து தனது நடுநிலைமையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது சென்சார் போர்டு..! இப்போதுதான் கொஞ்சம் முனைப்போடு சர்டிபிகேட்டுகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..!
‘ஆதிபகவன்’ நிச்சயம் ‘ஏ’ சர்டிபிகேட்டுக்குரிய படம்தான்.. இதில் சந்தேகமில்லை.. அதீத வன்முறையும், ஆயுதங்களை பயன்படுத்தும் முறையும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், அதிகப்படியான புகைப்பிடிக்கும் காட்சிகளும் இருக்கின்றவரையில் இவை போன்ற படங்களுக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுக்க வேண்டும்..!
இந்தப் படத்துக்கு சென்சாரில் எழுப்பப்பட்ட ஆட்சேபணைகளும், கொடுத்த கத்திரிகளும் கீழே..!
1 Mute the following words: (Reel 3) (a) ‘Fucking’ which occurs twice. (b) ‘Bastard’. - (Sound muted)
2 Delete the dialogue ‘I have used German, Russian, Thailand all countries’. (Reel 3) - Deleted: & Replaced with appd. dialogue)
3 The title ‘Ammerin Aadhibaghavan’ should be changed in such a way that it denotes two different characters.(instead of ‘Aadhibhagavan’ which implies God’s name) (I.e. - ‘AMMERIN AADHI - BHAGAVAN) Changed as AMEERIN AADHI -BHAGAVAN.
4 The name of the heroine ‘Kaali’ should be changed. (Changed as Rani.)
5 Mute the following words: (Reel 2) (a) ‘Lanja kodukka’. (b) ‘Bitch’. (c) ‘Mayiru’. (d) ‘Martini’. (e) ‘Anaadhai naaye’. (f) The word ‘Ottikittu’ in the dialogue ‘Osiyiliye ottikittu poyidalaamnu’ which sounds like ‘Othukittu’.(a) & (c) Sound muted.(b),(d)(e)& (f) Deleted & Replaced with appd. words.
6 A disclaimer explaining that the intent of the film is not to hurt the sentiments of any particular religion/caste should be kept in Bold Letters in TAMIL at the beginning of the film. Also insert the disclaimer stating that the story and the characters portrayed in the film are fictitious and the incidents are only imaginary. INSERTED.
7 (a) a strong editorial justification explaining the necessity of the display of the tobacco products or their use in the film, to the Central Board of Film Certification; (b) anti-tobacco health spots, of minimum thirty seconds duration each at the beginning and middle of the films and television programmes. - INSERTED:
8 Replace the words ‘Un Bhagavaanai’ with ‘Un aalai’ in the dialogue ‘Nee mudhalla naragathukkup povanum, un bhagavaanai pinnala anuppi vaikkiren’. (Reel 8) - Replaced.
9 Reduce to a flash the shot of blood oozing from Kaali’s mouth. (Reel 8) - Reduced.
10 The Producer/Applicant should give a letter/undertaking stating that the Arabic words/sentences used in the film does not denigrate any religious sentiments of people. Undertaking Letter given.
11 Mute the following words: (Reel 7) (a) Bastard. Sound muted. (b) Maadharchod. Deleted & Replaced with ‘Haram hum simhare’.
12 Delete the scene of burning of a passport. (Reel 7) Deleted.
13 Replace the words ‘Bhagavaanaiyum kaaliyaiyum’ by ‘Avanga rendu peraiyum’ in the dialogue ‘Bhagavaanaiyum kaaliyaiyum en kaiyaala naane ponamaakkanum’. (Reel 7) Replaced:
14 Mute the following words: (Reel 6) (a) ‘Nottu, Nottittu, Notturadha, Oththa’. (b) ‘Baapuji’ which occurs four times. Sound muted. (Baapuji replaced with Bisakai)
15 Delete the scene of Bhagavan pouring liquor on the currency notes and burning it.(Reel 6) Deleted & Replaced with C.S.Bhagsvan.
16 Delete the word ‘Bhagavan’ in the dialogue ‘Bhagavan veliyila varuvaan seththum povaan’. (Reel 6) Sound muted.
17 Mute the words ‘Maadharchod’ and ‘Bastard’, wherever it occurs. (Reel 5) Sound muted.
18 Delete the word ‘Bhagavaan’ in the dialogue ‘Bhagavaan always likes red wine’.(Reel 5) Deleted & Replaced with ‘Romeo always.)
19 Mute the word ‘Dharavi’. (Reel 5) Sound muted.
20 Distort the liquor label wherever it occurs in the film. (Reel 4) - Deleted: & Distorted for same duration.
21 Reduce to a flash the scene of a person being burnt alive. (Reel 4) - Reduced.
22 Mute the words ‘Fuck’ and ‘Maadharchod’, wherever it occurs. (Reel 4) Deleted & Replaced with micaner.
23 Delete the lyric lines ‘Mukthikkum bakthikkum nee kooruda’ from the song ‘Yei salaamey’. And change the saffron colour costume into some other colour which has no relevance to any religion. (Reel 2) (Lyric lines replaced with appd. words and colour changed for same duration)
24. NOC should be obtained from AWBI for using animals in the film. - NOC Submitted.
இப்போது குத்துப் பாடல்கள் இருந்தாலே ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவும் வரவேற்கத்தக்கதுதான்..! இப்படி செய்தாலாவது நம்ம சினிமாக்காரர்கள் அந்தக் கர்மத்தை விட்டுத் தொலைக்கிறார்களா என்று பார்ப்போம்..!
ஆர்.பி.ராஜநாயகத்தின் நேரு பற்றிய கட்டுரை
அண்ணன் ஆர்.பி.ராஜநாயகத்தின் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் நமது ஆட்சியாளர்கள் மீது வழக்கம்போல கோபம் கொப்பளிக்கிறது..! காந்தி தாத்தா, நேரு மாமா என்றெல்லாம் புகழ்ந்து, புகழ்ந்து சொல்லிக் கொடுக்கும் நமது கல்வி அமைப்புகள் இவர்களைப் பற்றிய இது போன்ற உண்மைச் செய்திகளை எப்போதுதான் சொல்லிக் கொடுப்பார்கள்..?
பள்ளியில் வேண்டாம்.. அட்லீஸ்ட் கல்லூரியிலாவது இது போன்ற விமர்சனங்களை முன் வைத்து ஒரு பாடமாக சொல்லித் தரலாமே..? காங்கிரஸுக்கு மாற்றுக் கருத்தே இருக்கவே கூடாது என்பதற்கு மாநில ஆளும் அரசுகளும் உடந்தையாகிப் போவது விந்தையாக இருக்கிறது..!
ரஜினியிடம் தேவர் அறிமுகமான கதை..!
‘அறியாதவன் புரியாதவன்’ படத்தின் விழாவுக்கு வந்த கே.பாக்யராஜ் சின்னப்பா தேவர் பற்றிச் சொன்ன சில விஷயங்கள் சுவாரஸ்யமாகவே இருந்தன..!
அப்போது கலைஞானம் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றி வந்தாராம்.. திடீரென்று ரஜினியை வைத்து ‘பைரவி’ படத்தை தயாரிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டவுடன் தேவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தாராம்..! “என்கிட்ட தொண்டை கிழிய கத்தி கத்தி சம்பாதிச்சு வைச்சிருக்குற.. அழிச்சிராதடா.. அந்தப் பையன் முகத்தைப் பாரு.. எவனாவது தியேட்டருக்கு வருவானா..? டேய் தூயவா.. நீயாவது அவன்கிட்ட சொல்லுடா.. கஷ்டப்பட்டு சம்பாதிச்சது..” என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்..
கலைஞானம் எதற்கும் மசியவில்லையாம்.. படத்தை எடுத்து முடித்து வெளியிட்டிருக்கிறார். படம் சக்கைப் போடு போட்டிருக்கிறது..! தேவர் கலைஞானத்தை பார்த்து வியந்திருக்கிறார்..! அடுத்து ரஜினியும் தனது நடிப்பு கேரியரில் உயர்ந்து கொண்டேயிருந்திருக்கிறார்.
இதற்குப் பின்பு ஒரு நாள் கலைஞானத்தை அழைத்த தேவர்.. “ஏம்ப்பா அந்தப் பையனுக்கு(ரஜினிக்கு) நம்ம கம்பெனியை பத்தி தெரியும்ல்ல.. கொஞ்சம் சொல்லி வைக்கலாம்ல்ல.. ஏன்னா நீதான அவனை முதன்முதல்லா ஹீரோவா வைச்சு படமெடுத்திருக்குற.. என்னைப் பத்தியும் கொஞ்சம் சொல்லேன்..” என்று நைச்சியமாக பேசித்தான், கலைஞானம் மூலமாகவே ரஜினியிடம் அறிமுகமானாராம்..!
இதே மேடையில் ஆர்.வி.உதயகுமார் சொன்ன இன்னொரு விஷயமும் முக்கியமானது.. ‘தேவர் மகன்’ படத்தின் கதை கலைஞானத்துடையதாம். அவர் சொன்ன, “ஒரு ஊர்ல கோவில் வருஷக்கணக்கா பூட்டிக் கிடக்குது.. வெளியூர்ல படிச்ச ஊர்த்தலைக்கட்டு குடும்பத்து பையன் ஊருக்குத் திரும்பி வந்து அந்தக் கோயிலை திறக்கப் பாடுபடுறான். ஊரே ரெண்டாகுது.. எப்படிச் சமாளிச்சு கோவிலைத் திறக்கிறான்றதுதான் கதை..” - இந்த கதைச் சுருக்கத்தை வைத்துக் கொண்டுதான் கமல் விரிவாக திரைக்கதை அமைத்து எடுத்ததாகச் சொன்னார் உதயகுமார்..! இதைக் கேட்டால் கங்கைஅமரன் எந்த அளவுக்குக் கொதிப்பாரோ தெரியவில்லை..?
அசத்தல் குறும்படம்
பேஸ்புக்கில் சமீபத்தில் நண்பர் ஒருவர் பதிந்திருந்த வீடியோ இது..! 1994-ம் வருடம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ஜெர்மன் படம் இது..!
கருப்பர்கள் மீதான வெறுப்புணர்வை கக்கும் ஒரு வெள்ளைத் தோல் மூதாட்டியின் அர்ச்சனைகளைப் பொறுத்துக் கொண்டு கடைசியில், “இந்தப் பேருந்தில் நீயும் நானும் ஒண்ணுதான்.. வெறும் பயணிகள் மட்டுமே..” என்ற இறுதி பன்ச் அட்டகாசம்..!
பயணிகளின் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள்.. அந்த மூதாட்டியின் கள்ளமில்லாத நடிப்பு.. எதிர்கொள்ளும் அந்தக் நடிப்புக் கருவாயனின் அலட்சியம்.. இறுதியில் டிக்கெட்டை காட்டிவிட்டு அவர் காட்டும் புன்சிரிப்பு..! ஓராயிரம் அர்த்தங்கள்..! வாவ்..!
பார்த்ததில் பிடித்தது..!
படித்ததில் பிடித்தது..!
‘ராயல் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வந்தது. படம் எதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த நடிகர் சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக இந்தப் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ரவளி நடித்திருந்தார். வி.கே.ராமசாமி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான் எனக்கே தெரிய வந்தது.. இயக்குநர் ராஜேஷ்வர்மா வி.கே.ராமசாமியின் நெருங்கிய உறவினர் என்ற விஷயம்.
படப்பிடிப்பின்போது படு உற்சாகமாக இருப்பார் ராஜேஷ்வர்மா. இந்தப் படம் முடிவடைந்ததும் இன்னொரு கதையை இயக்கவிருக்கிறேன். அதில் கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் விஜயகாந்த். அவருக்கு இரட்டை வேடம். இதுவரை அவர் இப்படியொரு கதையில் நடித்ததே இல்லை. மிகச் சிறந்த படமாக அது வரும். அதற்குப் பிறகு வேறொரு படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர் விக்ரம்தான். அஜீத்திற்கு ஏற்ற ஒரு கதையையும் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்..” என்றார் என்னிடம். அவர் சொன்ன விஷயங்கள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமில்லாதவை என்று எனக்கு நன்கு தெரியும்.
எனினும் அதைச் சொல்லி அவருடைய ஆர்வத்தை ஏன் குறைக்க வேண்டும் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டேன். இத்தனை வருடங்கள் படத்துறையில் வலம் வந்தும், நடைமுறை சிந்தனையே இல்லாமல் இருக்கிறாரே ராஜேஷ்வர்மா என்று அப்போது நான் நினைத்துக் கொள்வேன்.
‘ராயல் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. அந்தச் சூழ்நிலையில் ராஜேஷ்வர்மாவிற்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தார். எய்ட்ஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். எங்கிருந்து அவருக்கு அந்த நோய் வந்ததோ தெரியவில்லை. ஒரு மாத காலம் நோயின் பிடியில் சிக்கிக் கிடந்த ராஜேஷ்வர்மா ஒரு நாள் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார்.
அவர் மரணத்தைத் தழுவிய அதே நாளில் ‘ராயல் பேமிலி’ படத்தின் இசையமைப்பாளர் கிறிஸ்டி, கிண்டிக்கு அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்ததும் ஒரு எதிர்பாராத கொடூர ஒற்றுமை என்றே சொல்ல வேண்டும். ராயல் பேமிலி முதல் பிரதி தயாராகி பல வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் வியாபாரம் ஆகாமல் இன்றுவரையில் அந்தப் படம் திரைக்கு வரவே இல்லை..!
நன்றி : கனவு ராஜாக்கள்
ஆசிரியர் : சுரா
சுரா பதிப்பகம் வெளியீடு