திட்டக்குடி - திரை விமர்சனம்


28-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு சிறுகதைக்கே உரித்தான அத்தனை இலக்கணங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் திரைப்படம் இது..!


'பருத்தி வீரன்' டைப் கதைதான்.. ஆனால் அதில் இருந்த அளவுக்கான  உருக்கமான காட்சியமைப்புகளும், இயக்கமும் இதில் இல்லாததால் மனதை வருடச் செய்கிறதே தவிர.. 'பருத்தி வீரனைப்' போல் உட்புகவில்லை.

“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.. இதற்கொரு உதாரணம் இத்திரைப்படம்..

பால்ய வயதில் ஏற்பட்ட மோதலின் வடு வளர்ந்தும் மறையாமல் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்குள் நடைபெறும் மோதலில் ஒரு அப்பாவிப் பெண் பலியாகும் கதை..

ரஜினி ரசிகன் தனது நீண்ட கால எதிரியான கமல் ரசிகனை எப்படி பழிக்குப் பழி வாங்கினான் என்ற கதை..

வாலிப வயதுக்கேரிய அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண் சூழ்நிலையில் தன்னைத்தானே பலியாக்கிக் கொள்ளும் கதை..

குடி குடியைக் கெடுக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் கதை..

எத்தனையோ காதல்களை பெரியவர்களுக்குள் இருக்கும் வீம்பான ஈகோ மோதலே கெடுத்துவிடுகிறது என்பதைச் சொல்லியிருக்கும் கதை..

இப்படி ஒவ்வொரு கோணத்தில் இருந்து இத்திரைப்படத்தைப் பார்த்தாலும் அது ஒரு தனிக்கதையைச் சொல்வதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு..

இது எதையுமே இத்திரைப்படம் முழுமையாகவும், அழுத்தமாகவும் சொல்ல முற்படாததால் காலச்சக்கரத்தில் சிக்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிய நிலையில் இத்திரைப்படம் முடிக்கப்பட்டுவிட்டது.

வேலு என்கிற அந்தச் சிறுவனுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பு ஏறவில்லை. ஆனால் தானைத் தலைவர் ரஜினி மட்டுமே அவனுக்குக் கடவுளாகத் தெரிகிறார். அவருடைய திரைப்படங்களே வேலுவுக்கு பாடங்களாகத் தெரிகிறது..

பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லும் பழக்கம், காசு வேண்டி பள்ளியை முற்றிலுமாகத் துறந்துவிட்டு செங்கல் சுமக்கும் வேலைக்குப் போக வைக்கிறது. அந்தத் தொழிலைக் கச்சிதமாகக் கற்றுக் கொள்கிறான். கண்டிக்கவோ, தண்டிக்கவோ, திசை மாற்றவோ, அறிவுரை சொல்லவோ ஆள் இல்லாத காரணத்தினால் வாழ்க்கை திசை மாறுகிறது..

கற்கக் கூடாததையெல்லாம் அந்த வயதிலேயே கற்றுத் தெளிந்து கொள்கிறான். பெண் மோகமும், ரவுடித்தனமும், குடிப் பழக்கமும் அவனைத் தொற்றிக் கொள்கிறது.


சிறு வயதில் இருந்தே அவனை நேசித்து வரும் ஹீரோயினின் அன்பு அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அடைய முடியாததை அடைந்துவிடும் அந்த வெறி மட்டுமே அவனுக்குள் இருக்கிறது. தனது வருங்காலக் கணவன்தானே என்று நினைத்து ஹீரோயின் தன்னை அவனிடம் ஒப்படைக்க.. அவனோ இதுவும் ஒரு கேஸ் போலத்தான் என்றெண்ணி பணத்தை அவளிடம் விட்டெறிந்துவிட்டுப் போகிறான்.

சுக்குநூறாகிப் போன மனதுடன் இருக்கும் ஹீரோயினை அதே கோலத்திலேயே கண்டுபிடிக்கிறான் அப்பன்காரன். காதும் காதும் வைத்தாற்போல் முடிக்க வேண்டியதை ஊருக்கே ஒப்பாரி வைத்துச் சொல்லி சூட்டைக் கிளப்ப.. அதுவரையில் ஹீரோயினின் அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கும் வேலுவின் தந்தை திருமணத்திற்கு மறுக்கிறார்.

வேறு வழியில்லாத நிலையில் ஊரில் இருந்தால் நாலு பேர் வாயில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறாள் ஹீரோயின்.

தன் உடல் சூட்டைத் தணிக்க வந்த இடத்தில் இருந்த காமக்கிழத்தி ஒருவள், அவனுக்கு அறிவுரை சொல்லி ஹீரோயினின் காதலைப் பற்றி அவனிடம் சொல்ல இப்போதுதான் அவனுக்கு உறைக்கிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இது தெரிந்த வேலுவின் அப்பா அன்றைக்கு பார்த்து விஷத்தைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக.. சரியான நேரத்துக்கு தனது திருமணத்திற்காக கோவிலுக்குப் போக முடியாத சூழல் வேலுவுக்கு..


வேலு இந்த முறையும் ஏமாற்றிவிட்டான் என்று தவறாக நினைத்த ஹீரோயினின் தந்தை, தனது மகளை எப்போதும் பிச்சையெடுத்தே குடிக்கும் பழக்கமுள்ள பெரும் குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தன்னை வழி மறித்ததால் தன்னால் அதனை மீற முடியவில்லை என்பதை வேலுவால் வெளியில் சொல்ல முடியவில்லை..

பிச்சைக்கார கணவனால் தன்னை நேசித்த, தன்னால் கெடுக்கப்பட்ட ஹீரோயின் விபச்சாரியாக உருமாற்றப்பட்டிருப்பதை அறிந்த சோகத்துடன் இருக்கும் வேலுவுக்கு விதி, அவளது அண்ணி ரூபத்தில் வந்து விளையாடுகிறது.

வேலுவின் பால்ய எதிரியோடு அண்ணி தொடுப்பு வைத்துக் கொள்ள இதை வேலு பார்த்து அவனுடன் சண்டையிட.. அண்ணியோ தன்னை அவன்தான் கரும்புக் காட்டுக்குள் வைத்து கெடுத்துவிட்டதாக ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துத் தொலைக்கிறாள்.


இப்படியொரு சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தாற்போல் ஊரும், சுற்றமும் அவனைத் திட்டித் தீர்க்க.. தனது தாயே தன்னை மோக வெறி பிடித்தவனாக பார்ப்பதை உணர்ந்தவன் இறுதியில் தன்னை புரிந்து கொள்ளாத இந்த உலகத்தில் இருந்து பயனில்லை என்பதால் தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டானா..? அல்லது உயிருடன் இருக்கிறானா..? என்பதை நமக்குச் சொல்லாமலேயே முடித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் முதலில் பாராட்டுக்குரியவர்கள் அத்தனை நடிகர்களும்தான். லோக்கல் முகங்களையே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்.. அத்தனை நேட்டிவிட்டி. ஹீரோயினின் தந்தையும், ஹீரோவின் தந்தையும் உருக்கியிருக்கிறார்கள்.

அதிலும் ஹீரோயினின் தந்தை குடி போதையில் தனது மகளின் நிலைமையை எண்ணி புலம்புகின்ற காட்சியும், பஞ்சாயத்தார் முன்னிலையில் தலை குனிந்து நின்று அமைதிப் பார்வை பார்க்கின்றபோதும், தனது மகளுக்காக தனது அக்கா வீட்டுக்குப் போய் பெண்ணை எடுத்துக்க என்று கெஞ்சுகின்ற காட்சியிலும், ஹீரோவை மருமகனாக்க ஒப்புக் கொண்டு அவனுக்காக சாராய பாட்டிலை வாங்கி உபசரிக்கும் இடத்திலும் வெகு இயல்பான நடிப்பு..

இதேபோல் ஹீரோ வேலுவின் குடும்பத்தினர்.. அவனது அப்பா, அம்மாவோடு அண்ணியாக நடித்த மீனாளும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.. அந்த நடுவீதி ஒப்பாரி பாட்டு ஒன்றே போதும்.. கிராமத்து மண்ணில் அறிவார்ந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அத்தனையும் உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுபவையாகத்தான் இருக்கும்.. இதற்கு நல்லதொரு உதாரணம் இந்தக் காட்சி..


ஒருவன் குடிகாரனாகவே இருந்து தொலைந்துவிட்டால் அவன் செய்யாத தவறுகளெல்லாம் அவன் செய்தது போலவே இந்த உலகத்தில் கற்பிக்கப்படும். இந்தக் கொடுமையைச் சுமக்கும் அப்பாவி கேரக்டர் வேலுவுக்கு.. புதுமுகம் என்றாலும் கொடுத்த பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பாராட்டுக்கள் உரித்தாகுக..


அடுத்த அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியம். ஹீரோயின்.. சின்ன வயது.. கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்தான்.. வயதுக்கு வந்த விழாவில் ஊரே திரண்டு தனக்கு மஞ்சத்தண்ணி ஊற்றியதையும், இப்போது தான் கெட்டுப் போனவள் என்பது தெரிந்தவுடன் ஊரே திரும்பிப் பார்க்காமல் போவதையும் தனது கண்களாலேயே சொல்லிவிடும் அந்தக் காட்சி நினைத்துப் பார்க்க வைக்கிறது. ஹீரோவிடமிருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க நினைத்து முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு  காட்சியிலும் இயக்கம் அருமை.

ஒவ்வொரு காட்சியும் அதன் இயல்புத் தன்மையோடுதான் இருக்கிறது என்றாலும் மிகக் குறைவான கால நேரங்களே கொடுக்கப்பட்டிருப்பதால்  மனதை டச் செய்ய மறுக்கின்றன. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்..


ஹீரோயினின் அப்பாவுக்கும், சித்தாளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தை எந்தவித விரசமும் இல்லாமல் வெறும் ஈர்ப்பாகக் காட்டியிருப்பதற்கு இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்.

பருத்திவீரனை விடவும் விரசக் காட்சிகள் குறைவாகவே இருந்தாலும் அதற்கான முனைப்புகள் இதில் சீரியஸாக இருப்பதால் அது போன்ற திரைப்படமோ என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது. ஆனாலும் நெருக்கமான காட்சிகளில்கூட விரசமில்லாமல் எடுத்துக் காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு நன்றி..


ஊரில் அக்மார்க் முத்திரையுடன் இருக்கும் மல்லிகா என்ற விபச்சாரப் பெண் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகச் சொல்கிற காட்சியில் வேண்டுமென்றே ஒரு பாடல் காட்சியைத் திணிக்க அந்தச் சூழலில் ஸ்பீடாக போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் டெம்போ குறைந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது. அந்தப் பாடல் காட்சியை தூக்கியிருக்கலாம்.

மகனது திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கும் தந்தைகளும், தாய்களும் கையாளுகின்ற அதே விஷம் குடித்தல் என்கிற விஷயத்தை அவனது தந்தை பயன்படுத்துவதையும், ஹீரோ அதனால் தடுக்கப்பட்டு பாதிக்கப்படுவதையும் காட்சிகளாக அழகுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால் கூடவே நம்மை டென்ஷனாக்கும் அந்த ரீரெக்கார்டிங் என்னும் வாஸ்து இந்த இடத்தில் சுத்தமாக படுத்துவிட்டதால் நமக்கு ஒன்றும் தோன்றவில்லை..

கமல் ரசிகனான ஹீரோயினின் முறைப் பையனை அசிங்கப்படுத்தத்தான் ஹீரோயினை தான் மடக்கியதாக வேலு சொல்லியிருந்தால் கதையின் போக்கு மாறியிருக்கும்.. இப்படி இந்தக் கதையின் போக்கு மாறும் சூழல் படத்தில் பல இடங்களில் இருந்தாலும் இயக்குநர் அனைத்திற்கும் தொடர்பளிக்காமல் போனது ஏன் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. ஒரு சிறுகதையாக புத்தகத்தில் படிப்பதற்கு இது தோதான கதை. ஆனால் நமது திரைப்படங்களின் தற்போதைய போக்கில் கதைக்கருவும், கதை எதைப் பற்றியது என்பதைச் சொல்லியாக வேண்டிய கட்டாயமும் இருப்பதால் இந்தப் படத்தில் அந்தக் குழப்பம்தான் ஏற்பட்டிருக்கிறது.

சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் எப்படி ஒரு இளைஞனின் கதையை முடித்திருக்கின்றன என்பதற்கு இந்தப் படமும் சாட்சியம் அளித்திருக்கிறது.

என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும்கூட.!!!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com
 

மிளகா - திரை விமர்சனம்

26-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் உயிர்நாடியான கதைக்கரு எதைச் சுற்றியிருக்கிறது தெரியுமா..? ஒரு இளம் பெண்ணின் இடுப்பைத்தான்...! சூப்பரா இருக்குல்ல..!????????

“அந்த அழகான, மடிப்பான இடுப்பில் தைரியம் இருந்தால் கை வைத்து கிள்ளி விடுடா பார்ப்போம்.. அப்பத்தான் நீ ஆம்பளை.. எவ்வளவு பெட்டு?” என்று ஹீரோவை அவனது அல்லக்கை கூட்டம் உசுப்பிவிட.. இதனால் ரோஷப்பட்டு, தூண்டப்பட்ட ஹீரோ, ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளி விட்டு விட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இதில்தான் கதையே ஆரம்பிக்கிறது..!

கோபத்துடன் திரும்பிய ஹீரோயின் தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு வில்லனை அடித்துவிட.. அதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்தத் தம்பி வில்லன்.. அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடத்த முயல்கிறான்.


இந்தக் களேபரத்தில் தற்செயலாக தலையில் அடிபட்டு தம்பி வில்லன் பைத்தியமாகிவிட.. ஹீரோயினை அண்ணன் வில்லன்கள் அவளது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து தங்கள் வீட்டில் பலத்த பாதுகாப்போடு தங்க வைத்து படிக்க வைக்கிறார்கள். அவளது படிப்பு முடிந்தவுடன் பைத்தியமான தம்பிக்கு அவளையே திருமணம் செய்து வைக்கக் காத்திருக்கிறார்கள்..!

இப்படியொரு சம்பவத்திற்குத் தான்தான் காரணம் என்பதே இடைவேளைக்குப் பிறகுதான் ஹீரோவே சொல்கிறார். அதே ஊரில் யாருக்கும் அடங்காமல் சலம்பிக் கொண்டிருக்கும் ஹீரோவையும், இவர்களையும் சண்டையில் கோர்த்துவிட்டால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஹீரோயின் ஹீரோவை இவர்களுடன் சேர்த்து வைத்து வம்பிழுக்க.. ஹீரோவுக்கும், வில்லன்களு்ககும் இடையில் சண்டை மூள்கிறது..!

கடைசியில் ஹீரோ கதி.. ஹீரோயின் கதி..? பைத்தியத்தின் கதி..? இதுக்கெல்லாம் முடிஞ்சா தியேட்டருக்கு போய் பார்த்து தெரிஞ்சுக்குங்க..!

இந்த கோடம்பாக்கத்து கதாசிரியர்கள் மதுரை மாவட்ட மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை..! மதுரையில் தெருவுக்குத் தெரு ரவுடிகள் மயம்தான் என்பதை சித்தரிப்பதுபோல் நமது கோடம்பாக்கத்து சினிமாக்கள் வருவதை கண்டிக்கத்தான் வேண்டும்..!

இதில் மதுரைக்கார பாஷை என்று சொல்லி தமிழை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமாக கொத்துப் புரோட்டா போட்டுக் குதறிக் கொண்டிருக்கிறார்கள்..!

நட்ராஜ் என்னும் ஹீரோவுக்கு பெரிதாக நடிப்பில்லை.. ஏதோ வருகிறார். பேசுகிறார்.. சண்டை போடுகிறார்.. நடனமாடுகிறார். அவ்வளவுதான். உடனிருந்து கலக்குவது சிங்கப்புலிதான்..

இதில் இன்னும் இரண்டு ரவுடிக் கூட்டம்.. ஒன்றுக்கு கராத்தே வெங்கடேசன் தலைவர்.. மற்றொன்று லோக்கல் ரவுடிக் கும்பல்.. இளவரசு தலைமை. அவரே சொல்கிறார்.. “அஞ்சாறு வைப்பாட்டிகளை வைச்சு ஒப்பேத்திக்கிட்டிருக்கேன்..” என்று..! இதைவிட மதுரைக்காரர்களை வேறு எப்படியும் கேவலப்படுத்திவிட முடியாது..!

அதிலும் இன்னுமொரு கேவலம்.. காமெடி என்கிற பெயரில் ஊமையாக நடிக்கின்ற ஒருவரை அவ்வப்போது மட்டம் தட்டிப் பேசுவது.. படம் முழுக்க இந்தக் கொடுமை.. இப்போதுதான் ஒரு அளவுக்கு தமிழ்ச் சினிமாவில் மாற்றுத் திறனாளிகளையும், திருநங்கைகளையும் அடையாளப்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் இப்படிச் செய்யலாமா..?


கதாநாயகியாக பூங்கொடி. அமைதியான தோற்றத்திற்கு செம பார்ட்டி. அம்மணியிடம் வேறு எந்த நடிப்பையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள். கோரிப்பாளையத்திலும் இதே போலத்தான்..! ஆனாலும் பாடல் காட்சிகளிலாவது கொஞ்சம் சிரிக்க வைத்தார்களே என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..! 


எப்படியாச்சும் ரசிகர்களை இழுக்க வேண்டுமே என்றெண்ணி சுஜா என்ற குத்தாட்ட நாயகியை வீட்டு ஓனராக்கி மஜா பாடல்களுக்கு செறிவூட்டியிருக்கிறார்கள். இடையில் வழக்கம்போல பிராமணப் பெண்களை கிண்டல் செய்வதையும் நிறுத்தவில்லை.. கூடவே இரட்டை அர்த்த வசனங்களையும் வைத்து சுள்ளான்களையும், குஞ்சுகளையும் திருப்திபடுத்தியிருக்கிறார்கள்..!


இப்படத்தின் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது எனக்கு ஆச்சரியம்தான்.. கருவாப்பையா ஸ்டைலில் ஒரு பாடல் கேட்பதற்கும், காண்பதற்கும் நன்றாக இருந்தது..! இறுதியில் எண்ட் டைட்டில் காட்சியில் ஒலிக்கும் “சிரிச்சுப் பார்க்குறேன்.. பழகிப் பார்க்கிறேன்..” என்ற பாடலை காட்சிகளுக்குள்ளேயே வைத்திருக்கலாம்.. நன்றாக இருந்தது..! கடைசிவரையில் டைட்டிலை படிக்க வைக்க இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..! சபேஷ் முரளிக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு திருப்பு முனைதான்..!


படத்தின் திரைக்கதையில் வேகம் இருந்தாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புறந்தள்ளும் வகையில் கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத வகையில் கதையை அமைத்திருப்பதுதான் பெரும் சோகம்..!

கல்லூரி பெண்ணை கடத்தி வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்களாம். அவர்களுடைய பெற்றோரை எங்கோ மறைத்து வைததிருக்கிறார்களாம்..! இந்தப் பெண்ணை படிக்க வைக்கிறார்களாம். கொஞ்சமாவது நம்பும்படியாகவாவது திரைக்கதை எழுதியிருக்கலாம். கடைசிவரையிலும் மதுரையில் போலீஸ் என்ற ஒரு பிரிவினர் என்னதான் செய்கிறார்கள் என்பதைக் காட்டவேயில்லை..!

எப்போது பார்த்தாலும் வீட்டில் யாராவது ஒருவரை கட்டி வைத்து உதைக்கிறார்கள்.. வாயில் வாழைப்பழத்தைத் திணித்து தண்ணீர் குடிக்க வைத்து அடிக்கிற அடியில் ரத்த வாந்தி எடுக்க வைக்கிறார்கள்..! இப்படி சித்ரவதையில் போலீஸையும் மிஞ்சிய ரவுடிகள்தான் மதுரையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் இந்த படமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!


படம் பார்க்கும்போது இதற்கு முன் மதுரையை மையப்படுத்தி வந்த படங்களின் பல காட்சிகள் கண் முன்னே வருவதைத் தவிர்க்க முடியவில்லை..

படத்தில் கதாநாயகனைவிடவும் உருப்படியாக நடித்திருப்பவர் வில்லன் தாண்டவன்தான்..! ஆனாலும் இன்னும் ஒரு படத்தில் இதேபோல் வில்லனாக நடித்தால் திகட்டிவிடும்.. அண்ணன் மனைவிகளை, தம்பி மனைவிகளை இப்படித்தான் வீட்டில் அத்தனை பேரும் “வாங்கடி.. போங்கடி” என்று சொல்லி முகத்தில் சோற்றை வீசுவார்களோ..? இது என்ன டைப் கலாச்சாரம் என்று தெரியவில்லை.. இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்.. யாராவது தமிழர்கள்தான் சொல்ல வேண்டும்..!

பைத்தியம் பிடிக்கும் தம்பியாக தானும் நடித்திருக்கிறார் இயக்குநர் ரவிமரியா. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. இன்னொரு வில்லனாக மூன்றே காட்சிகளில் வந்து போகிறார் வெயில் படத்தி்ன் வில்லன் கராத்தே வெங்கடேசன்..! இவரையாவது நன்கு பயன்படுத்திக் கொள்வதைப் போல் திரைக்கதையை மாற்றியிருக்கலாம்..!

சிங்கப்புலி வழக்கம்போல டைமிங்சென்ஸ் டயலாக்குகளை அள்ளி வீசுகிறார். ஆனாலும் பல இடங்களில் புரியவில்லை.. டயலாக்கே புரியாமல் கை தட்டுகிறார்கள் மக்கள்.. சிரிப்பு படம்ல்ல.. அதுதான்..!

இளவரசுவின் கட்டை விரல் துண்டாடப்படும் காட்சியில் அவரது தவிப்பும், அல்லக்கைகளின் அல்லாடலும், டென்ஷனும் பெரிதாக ரசிக்க வைத்தது..!

எல்லாவற்றையும்விட கிளைமாக்ஸில் வைக்கிறார்கள் பாருங்கள் ஒரு டிவிஸ்ட்டு.. படா தமாஷா கீதுப்பா.. அது நாள்வரையில் பைத்தியமாக இருந்த ரவிமரியா கார் ஆக்ஸிடெண்ட்டில் டக்கென்று குணமடைகிறாராம்.. பின்னிட்டாரு கதாசிரியர் ரவிமரியா..! அவார்டே கொடுக்கலாம்..!


பாலிவுட்டில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தமிழர் நட்ராஜ். மதுரைக்காரர்..! பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பதால் தானே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இவருக்கேற்றாற்போன்ற தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட.. ரவி மரியாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் இப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார்..!

புதுமுக நடிகர் என்பதால் கூட்டம் தியேட்டருக்கு வராது என்பதையறிந்து யார், யாரையெல்லாம் சீன் காட்ட வைத்தால் விளம்பரம் செய்ய எளிது என்பதைக் கண்டறிந்து அவர்களையே நடிக்க வைத்திருக்கிறார்..!

எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம்..? கதையில் ஒரு நம்பகத்தன்மை இல்லாததாலும், சீரியஸாக இருக்க வேண்டிய காட்சிகளிலெல்லாம் காமெடியைத் திணித்து இது சீரியஸ் படமா? காமெடி படமா? என்கிற குழப்பத்தைக் கொண்டு வந்து திணித்துவிட்டதாலும் படம் மனதில் நிற்க மறுக்கிறது..

இந்தப் படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம்.. “இந்தி ‌‌ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோன் நடிப்பதாகவும், படத்தை சு‌ஜித் சர்க்கார் இயக்கப் போகிறார். தெலுங்கு ரீமேக் உரிமையை தாணு வாங்கியிருக்கிறார். அதில் அல்லு அர்ஜூன் அல்லது பிரபாஸை நடிக்க வைக்க தாணு முடிவு செய்துள்ளதாக” ஹீரோ நட்ரா‌ஜ் தெ‌ரிவித்துள்ளார். இது தமிழ்ப் படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்பது தெளிவு..! இருந்தாலும் இதனை அப்படியே தெலுங்கிலும், இந்தியிலும் எடுத்து தொலைந்து போவார்கள் என்று நான் நம்பவில்லை..

அவர்களாவது பிழைத்துப் போகட்டும்..!

மிளகா - பொழுது போவலைன்னா போவலாம்..!

டிப்ஸ் -1

கோலாகலமாக கேஸட் வெளியிட்டு விழாவையும், படத்தின் முன்னோட்ட விழாவையும் நடத்தியும் படம் போணியாகவில்லை. தியேட்டர்கள் கிடைப்பதில் அல்லாடத் துவங்க.. கடைசி நேரத்தில் கலைப்புலி தாணு கை கொடுத்திருக்கிறார்.. புது மாதிரியான ஒரு வியாபாரத்திற்கு அவருடன் கை கோர்த்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள்.

தாணு முன் நின்று இப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து கொடுப்பார். அதற்கு குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை ஒவ்வொரு தியேட்டரில் இருந்தும் தாணு எடுத்துக் கொண்டு மிச்சப் பணத்தை தயாரிப்பாளருக்குக் கொடுத்துவிடுவார். இதுதான் பக்கா அக்ரிமெண்ட்டாம்..

தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக் கொண்டதால் தாணுவே அவசரம், அவசரமாக தனக்குத் தெரிந்த வழிகளில் தியேட்டர்களைப் பிடித்து படத்தை வெளியிட வழி செய்திருக்கிறார்..!

டிப்ஸ் -2 :

நான் நேற்று இரவு ஏவி.எம். ராஜேஸ்வரியில் பார்த்தேன்.. மொத்தம் 50 பேர் வந்திருப்பார்கள்.. ஏதோ பிட்டு படம் என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ எண்ணி 6 பெண்கள் மட்டுமே வந்திருந்தார்கள்..!

இதில் ஒருவர் ஏதோ ஒரு படத்தின் கதாநாயகி என்பதை ஸ்டில்களை பார்த்த ஞாபகத்தில் என் ஹைப்போதலாமஸ் சொன்னது..!

வரும்போது டிரைவருடன் மட்டும் தியேட்டருக்குள்ளே வந்தவர், இடைவேளையின்போது பெருத்த தொந்தியுடன் கூடிய ஒரு சினிமா பெருசுடன் ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தார். போகும்போது.. ஸாரி கவனிக்கவில்லை..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-24-06-10

24-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இட்லி

'குமுதம்' - பங்கு பிரிச்சாச்சு

அந்தக் காலம் வேற.. இந்தக் காலம் வேறன்னு பெரியவங்க வீட்ல முக்காலில உக்காந்து பெருமூச்சுவிட்டுப் பேசுவாங்க. அது 'குமுதம்' குடும்பத்துலேயும் நடந்திருச்சு..!


பெரியவர் எஸ்.ஏ.பி.யும், பி.வி.பார்த்தசாரதியும் நட்புடன் இருந்த காலம் போய்.. அவர்களுடைய வாரிசுகள் எதிரிகளாக உருமாறி கைது, கோர்ட், கேஸ் என்றாகி படபடத்துவிட்டது பத்திரிகை உலகம்.

ஆனாலும் நம்ம பத்திரிகையாச்சே என்ற பாசத்தில் மெகா மெகா ஆட்களெல்லாம் இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்..!

முடிவாக 'குமுதம்' பத்திரிகைகளை இரண்டாகப் பிரித்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று 'தினத்தந்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் நடந்ததைப் போல் முடிவெடுத்திருக்கிறார்களாம்..

இதன்படி 'குமுதம் ரிப்போர்ட்டர்', 'குமுதம் சிநேகிதி' என்ற இரண்டு இதழ்கள் மற்றும் 'ஆஹா எஃப்.எம்.', 'குமுதம்.காம்' ஆகிய இரண்டு பிரிவுகளுடன் கூடவே, கணிசமான ரொக்கப் பணத்துடன் வரதராஜன் தனியாகப் பிரிகிறாராம். 


அவர் கைக்கு அனைத்தும் வந்தவுடன் அவற்றில் இருக்கும் 'குமுதம்' என்கிற பெயர் மட்டும் நீக்கப்பட்டுவிடுமாம். 'குமுதம்' என்ற பிராண்ட் நேம், ஜவஹர் பழனியப்பனுக்கு மட்டுமே என்பதுதான் பெரியவர்களின் தீர்ப்பாம்..!

இதற்கிடையில் அந்த பிராண்ட் நேம் சாம்ராஜ்யத்தையே விலைக்குக் கேட்டு தென் மண்டல தளபதியின் சொந்த பந்தங்கள் மருத்துவரை நெருக்குவதாகவும் பத்திரிகையுலகில் பேச்சு..!

ம்.. கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. வரட்டும் பார்ப்போம்..!


தோசை

தடம் புரண்ட இயக்குநர்


தங்களது துறையில் வளர்ந்த பலர் வாழ்க்கையில் சறுக்கி விடுகிறார்கள். வாழ்க்கையில் சிறந்து விளங்கும் சிலர் தங்களது துறையில் சறுக்கி விடுகிறார்கள். இரண்டிலுமே சிறந்து விளங்குபவர்கள் ரொம்ப ரொம்பச் சிலர்தான்.

மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு புகழ் உச்சிக்கு வருபவர்கள் திடீரென்று வருகின்ற புகழையும், கவர்ச்சியையும் உண்மை என்று நம்பி அலட்டுகின்ற அலட்டலில் இருக்கின்ற வாழ்க்கையையும் தொலைக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவரும் அவர்களில் ஒருவர்தான். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. ஒரு பாட்டுக்காகவே ஓடிய படம். அடுத்த படம் ஹீரோவுக்காகவும், கதைக்காகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தவர் இப்போது அந்த முடிவெடுக்க நினைத்து அவரசத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். இயக்குநரிடம் முதலில் சிக்கியவர் ஒரு துணை நடிகை. இவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவரை வாழ்க்கைத் துணையாக்கும் அளவுக்குத் துணிந்துவிட்டார் இயக்குநர். இதில் ஒரு விசேஷம். இந்த துணை நடிகையான பெண்ணிற்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.

இன்னொரு பெண் சினிமாவில் இருக்கும் நடனப் பெண்மணி. அந்தப் பெண்மணியின் வயிற்றில் இயக்குநரின் குழந்தை வேறு.. இந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வீடு தேடி வந்து சண்டையிட்டுக் கொண்டு அந்த இயக்குநரின் பெயர் கோடம்பாக்கத்தில் கெட்டதுதான் மிச்சம்..!

இரண்டாவது படத்தின் ஹீரோவான பெரிய இயக்குநரே இடையில் தலையிட்டு நடனப் பெண்மணியை பஞ்சாயத்து செய்து விலக்கி வைக்க.. இயக்குநர் இதுவரையில் சம்பாதித்து வைத்திருந்ததெல்லாம் இதற்கான நஷ்ட ஈடாகவே போய்விட்டதாம்.

“அவதான் போயிட்டாள்ள.. நம்ம கல்யாணம் எப்போ..?” என்று துணை நடிகை அனத்தத் தொடங்க.. நம்ம இயக்குநருக்கு இப்போதுதான் நிஜ சூழல் புரிந்திருக்கிறது. தனது வயதான தாய், தந்தையரின் பேச்சைக் கேட்டு துணை நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்தார் இயக்குநர்.. கோபமான துணை நடிகை வீடு தேடி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம்..!

இப்போது இந்தப் பிரச்சினைக்கென்று தனியாக பஞ்சாயத்து செய்ய ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர்..! சிறந்த திறமையோடு கனவுலகத்திற்குள் நுழையும் சிலர் ஏன் இப்படி தங்களது சொந்த வாழ்க்கையும் அழித்து, கேரியரையும் அழித்துக் கொள்கிறார்களோ என்று தெரியவில்லை..!

அவர்களுடைய இடத்தை அடைய முடியாமல் எத்தனை பேர் தவியாய்த் தவிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா..?


பொங்கல்

இளமைக் காலங்கள் - சசிகலா


தற்செயலாகத்தான் பார்த்தேன்.. இத்தனை நாள் எங்கிருந்தாய் என்று கேட்கத் தோன்றுவதைப் போல இருந்தது அம்மணியை பார்த்தவுடன்..!

இளமைக் காலங்களில் அறிமுகமான சசிகலா என்னும் இந்தத் தாரகை, தமிழிலும், தெலுங்கில் 1993 வரையிலும் தனது திறமையைக் காட்டிவிட்டு அதன் பின்பு சப்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்..! இப்போது அதே சப்தமில்லாமல் டைவர்ஸும் வாங்கிக் கொண்டு மீண்டும் திரையுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்..


 

தெலுங்கில் டிவி சீரியலில்தான் முதலில் கால் வைத்திருக்கிறார்.. 'டாக்டர் இந்திரா' என்பது சீரியலின் பெயராம்..! பலருக்கும் தெரியாத ஒன்று.. அம்மணிக்கு தமிழில் மட்டும்தான் 'சசிகலா' என்ற பெயர்.. தெலுங்கில் 'ரஜ்னி' என்ற பெயராம்..!

ஸ்பெஷல் தோசை

பாலகிருஷ்ணா - சிவபார்வதி

நந்தமூரி தாரக ராமாராவ் என்னும் என்.டி.ராமராவின் குடும்பத்து கதை உலகம் முழுக்கவே பேமஸ்தான்..! பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் வயதான காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என்ற கோபத்தில் தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதியை வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்டார் ஆந்திராவின் கிருஷ்ணன்.

இந்தத் திருமணத்தால் ராமராவின் வாரிசுகள் அத்தனை பேரின் கடும் எதிரியானார் சிவபார்வதி. ராமராவ்வின் மரணத்தன்று வீடு தேடி வந்த வாரிசுகள் எல்லாம் வீட்டில் இருப்பதையெல்லாம் எடுத்துப் போக பார்க்கிறார்கள் என்று ராமராவின் சடலத்தை வைத்துக் கொண்டே பெரும் ரகளை செய்தார் சிவபார்வதி.

அப்போது ஏற்பட்ட மனக்கசப்பினாலும் ராமராவ் தனியாக நடத்தி வந்த தெலுங்கு தேசக் கட்சியை சிவபார்வதி தொடர்ந்து நடத்தி வந்ததாலும் இத்தனை நாட்கள் மனக்கசப்போடு இருந்த ராமராவ் குடும்பத்தினர் சிவபார்வதியின் கட்சி கடலில் கரைந்த பெருங்காயமாக கரைந்த பின்புதான் மனதை ஆற்றிக் கொண்டது.

ஆனாலும் ராமராவ் கடைசி காலத்தில் வசித்து வந்த வீடும், அவர் பயன்படுத்திய பொருட்களும், சில சொத்துக்களும் இன்னமும் சிவபார்வதியின் வசமே உள்ளன. போதாக்குறைக்கு ராமாராவ்வின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருந்ததாகவும் பின்பு அது தானாகவே கலைந்துவிட்டதாகவும் சிவபார்வதி ஒரு செய்தியை எடுத்துவிட.. கடுப்பாகிவிட்டார்கள் மொத்தக் குடும்பத்தினரும்..!

இப்படி ராமாராவின் பத்துக் குடும்பங்களும் சிவபார்வதியை முறைத்தபடியே இருந்த நிலையில் அதில் ஒருவரான நடிகர் பாலகிருஷ்ணா திடீரென்று தனது சித்தியை நேரில் சென்று பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார். எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் சித்தி பட்ட பரவசத்தை வீடியோவில் பார்க்கவும்..!



சந்திப்பிற்கான காரணத்தை அப்போது பாலகிருஷ்ணா வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், என்.டி.ஆர். பெயரில் கட்டப்படும் மியூஸியத்திற்குத் தேவையான பொருட்களை பெறுவதற்காகவே பாலகிருஷ்ணா வந்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து ஒரு டிவி நிகழ்ச்சியிலும் பாலகிருஷ்ணா தனக்குப் பிடித்தமான மகன் என்று சொல்லி அவருடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்து அசத்தியிருந்தார் சிவபார்வதி.

எல்லாம் ஒரே மாசம்தான்.. கடந்த மாதம் நடந்த ஜூனியர் என்.டி.ஆரின் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு சிவபார்வதியை கூப்பிடாமல் போக.. “என் மகனே இப்படிச் செய்யலாமா..? நான் ஒருத்தி குடும்பத்துல பெரியவ உசிரோட இருக்கும்போது என்னைக் கூப்பிடாம எப்படி நடத்தலாம்?”னு கேட்டு கண்ணு கலங்கிட்டாங்க சித்தி..!

ஆனாலும் “பாலய்யா என்ற பாலகிருஷ்ணாதான் எத்தனை சினிமால நடிச்சிருப்பாரு.. அவருக்கா தெரியாது..? வேண்டியதையெல்லாம் வசூல் பண்ணியாச்சு. அதான் மறுபடியும் சிவபார்வதியை ஒதுக்கிட்டாங்க..” என்கிறார்கள் ஆந்திர மணவாடுகள்..!


வடை

மட்டக்களப்பு நகரில் ராவணன் வெளியீடு..!

ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..!

வருடாவருடம் சென்னையில் ஐ.சி.ஏ.எஃப். சார்பில் நடக்கும் சிங்களத் திரைப்பட விழா இரண்டு வருடங்களாக இங்கே நடக்கவில்லை. ஆனால் புதியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் தொடர்ந்து இலங்கையில் திரையிடப்பட்டு வருகிறது. புறக்கணிப்பு என்பது ஒரு வழிப் பாதையா..?

நாம் நடத்திய போராட்டத்தைப் போலவே ஈழத்திலும் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். மட்டக்களப்பு நகரில் ராவணன் படம் திரையிட இருந்த சாந்தி தியேட்டரை முதல் நாள் இரவு அடித்து நொறுக்கி திரையை எரித்துவிட்டார்கள்..!

இப்போது ஒரு வாரத்திலேயே தியேட்டரைச் செப்பனிட்டுவிட்டு இப்போது ராவணன் படத்தினை திரையிட்டுவிட்டார்கள். ராவணன் படத்தை யாராவது எதிர்த்து ரகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறது இலங்கை அரசு. இதுவே ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவுவதைப் போலத்தானே..? நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்..?

நமது சொந்தங்கள் அங்கே போகக் கூடாது.. படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது.. நம்மால் அவர்களுக்கு எந்த பண வரவு ஆதாயங்களும் வரக்கூடாது என்றால் சரிதான்.. அதேபோல் நாம் நமது படங்களையும் அங்கே ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே..? இது மட்டும் எதற்காகவாம்..?

சில லட்சங்கள் கிடைக்கிறது என்பதற்காக நாமே நமது கொள்கையை அடகு வைக்கலாமா..? திரையுலகம் யோசிக்கட்டும்..!


காரச்சட்னி

ராதாரவியின் அடங்காத கோபம்


சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்திருந்த ஒரு செய்தி பரவலாக கோடம்பாக்கத்திலேயே ரீச் ஆகவில்லை..!

பல போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யினர் கடைசியாக நடிகர் சங்கத்தில் போய் நின்றிருக்கிறார்கள்.

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்கிற பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம் ' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

எப்போதும் கட் அண்ட் ரைட்டாக பேசும் ராதாரவி மனுவை வாங்கிக் கொண்டு அங்கேயே அவர்களுக்கு தடாலடியாக பதிலை அள்ளி வீசியிருக்கிறார். அவர் வீசியிருக்கும் பவுன்ஸரில் வழக்கம்போல இயக்குநர் இமயம் பாரதிராஜா மாட்டியிருக்கிறார். கூடவே கலைஞரும்..! இதுதான் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது..!

ராதாரவி தனது பதிலாக, “ஒரு பிரபல இயக்குநர்கூட(பாரதிராஜா) சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே கோரிக்கையை எங்கள் முன் வைத்தார். 'தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைத்த பின்புதான் எனது மகனை திரையுலகில் களமிறக்குவேன்' என்று எங்களிடம் வீராப்பு பேசினார். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய படத்தில்(பொம்மலாட்டம்) நானாபடேகரைத்தான் நடிக்க வைத்தார். ஏன் அந்த கேரக்டரை பண்ண தமிழ் நடிகர் யாருக்குமே தகுதியில்லையா..?” என்று கேட்டிருக்கிறார்..

”கலைஞர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கும் 'தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க'த்தின் பெயரை 'தமிழ் எழுத்தாளர் சங்கம் ' என்று மாற்ற அவரிடம் போய்ச் சொல்லுங்களேன். அப்படியே 'பெப்சி' அமைப்பை, 'தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் சங்கம்' என்று பெயர் மாற்றச் சொல்லுங்கள். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, நாங்களும் பெயர் மாற்றம் செய்கிறோம்.” என்று சுடச்சுடப் பதில் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மீதான கோபத்தில் கலைஞருடன் சமீப காலமாக இணக்கமாக இருந்து வரும் ராதாரவி இப்போது திடீரென்று இப்படி கலைஞர் மீது காட்டத்தைக் காட்டிய விவகாரம் என்னவெனில், அது எஸ்.வி.சேகரை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று கலைஞர் சொன்னதுதானாம்..

“எங்கப்பாவோட பெருமை என்ன..? புகழ் என்ன..? அவருக்கு நானே வாரிசா இருக்க முடியாது.. இதுல இந்த காமெடியன்தான் வாரிசா..? கலைஞருக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா..?” என்று தனக்கு நெருக்கமான சினிமா புள்ளிகளிடம் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..!


தக்காளி சட்னி

பார்த்திபனின் குத்திக் காட்டல்..!


சினிமாவை தயாரித்தால் மட்டும் போதாது..! அதனை விளம்பரப்படுத்த வேண்டும்.. அதற்கு தயாரிப்புச் செலவில் பாதியையாவது செலவழித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. இதற்காக சினிமாக்காரர்கள் சொல்கின்ற காரணம் 'மூன்று நிதி'களின் திரையுலக  ஊடுறுவலைத்தான்..!

அவர்கள் வாங்குகின்ற படங்களை மட்டுமே அவர்கள் பிரமோட் செய்து கொண்டேயிருப்பதால் மற்ற படங்களெல்லாம் ரிலீஸாகவில்லையோ என்கிற பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தி மற்ற படங்களுக்கு கூட்டத்தையும், வசூலையும் வர விடாமல் மறைமுகமாகத் தடுக்கிறார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு..!

அதேபோல் இன்னுமொரு குற்றச்சாட்டுத்தான் மிக முக்கியமானது. இந்த மூன்று நிதிகள் வெளியிடும் படங்களின் வி.சி.டி.க்கள் மட்டும் தமிழ்நாட்டில் வெளியாவதே இல்லை.. அந்த அளவுக்கு போலீஸ் கெடுபிடியாகிறது. ஆனால் மற்ற படங்களெனில் அடுத்த நாளே வந்துவிடுகிறது. காவல்துறை அதனை மட்டும் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் என்பதுதான் திரையுலகத்தினரின் கேள்வி. ஆனால் யாருக்கும் இங்கே முதுகெலும்பு இல்லாததால் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.

ஆனால் மேடைக்கு மேடை ஜொள்ளுவிட்டே பேசும் பார்த்திபன் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் இதனைப் பற்றி வெளிப்படையாக கேட்டது வந்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியை அளித்துவிட்டது. அன்று இரவு முழுவதும் பார்த்திபனின் செல்போனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்ததாம்..

இது பற்றி பார்த்திபன் சொன்னது இதுதான்.. “குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை. இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டு விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்குமே..”


சாம்பார்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

மறுபடியும் ஒரு பஞ்சாயத்து துவங்கியிருக்கிறது திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பொறுப்பாளராக இருந்த ஏவி.எம்.முருகனே இந்த முறையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 


சங்கத் தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டியே நிலவுகிறது. சென்ற ஆண்டு சன் டிவிக்கும், கலைஞருக்குமிடையே கபடியாட்டம் நடந்து கொண்டிருந்ததால் கலைஞரின் ஆசியோடு இராம.நாராயணன் தனி அணி அமைத்து போட்டியிட்டார். எதிரணியில் சன் டிவிக்காக ராதிகாவும், பஞ்சு அருணாச்சலமும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றார்கள். இதில் ராதிகாவை நிற்கவிடாமல் செய்வதற்காக 'அவர் தெலுங்குப் பெண்.. தமிழச்சி அல்ல..' என்றெல்லாம்கூட கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்யும் நிலைமைக்குச் சென்றது திரையுலகத்தைக் கலவரப்படுத்தியது.

ஆனால் இந்த முறை அப்படியிருக்காது என்கிறார்கள். தங்களது டிவிக்காக படங்களை வாங்கிப் போடுவதற்கு தங்களது விரலசைவில் நடப்பவரே சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஆளும்கட்சி டிவி நினைப்பதால் 'போதுமடா சாமி.. ஆளை விடுங்கப்பா..' என்று கைகூப்பி வணங்கிவிட்டு வீட்டுக்கு போக நினைத்த இராம.நாராயணனை, கலைஞரே அழைத்து தட்டிக் கொடுத்து களத்தில் குதிக்கும்படி சொல்லியனுப்பியிருக்கிறாராம்.. அவருடைய அணியில் இருப்பவர்கள் யார், யார் என்பதுதான் இன்னமும் முடிவாகவில்லை.

பிலிம் சேம்பர் தலைவராக சமீப காலம்வரையிலும் இருந்த கே.ஆர்.ஜி., தைரியமாக இராம.நாராயணனை எதிர்த்து களமிறங்கியுள்ளார். இடையில் தயாரிப்பாளர்களுடன் சரிக்கு சமமாக மோதிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தலைவர் பாரதிராஜாவை நிறுத்தலாமா என்றுகூட யோசித்தது. ஆனால் சங்கத்தின் பை-லா ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.

எனவே சென்ற தேர்தலில் மனு செய்துவிட்டு பின்பு பஞ்சாயத்து செய்து கழட்டிவிடப்பட்ட அமீரை செயலாளர் பதவிக்கு நிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

இடையில் இராம.நாராயணனுக்கு முன்பாக தலைவராக இருந்த சத்யஜோதி தியாகராஜன் தான் நிற்கலாம் என்று நினைத்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால் கோபாலபுரத்தின் ஆசி இராம.நாராயணன் மீது இருப்பதை அறிந்து கப்சிப்பாகிவிட்டார்.

அடுத்த மாதத் துவக்கத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்..!


துவையல்

சூர்யாவின் அதிரடிப் பேச்சு


"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது” என்று  தைரியமாகச் சொல்லியுள்ளார் சூர்யா.

சம்பந்தமேயில்லாத அமிதாப்பச்சன், அனில்கபூர், ஷாரூக்கான் வீடுகளின் முன்பெல்லாம் உண்ணாவிரதம் இருந்த தொண்டர்களும், தோழர்களும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

ஆளுக்கொரு நீதியாக போராட்டம் திரும்பும்போதே அது நீர்த்துப் போய்விடுகிறது..! இதில் “தம்பிக்காக இந்த ஒரு முறை மட்டும் விட்டுவிடுகிறேன்” என்று 'ரத்த சரித்திரம்' படத்தை வெளியிட ஆட்சேபணையில்லை என்று சொல்லியிருக்கும் சீமானின் அரசியல் நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது..!

பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!


கேசரி

இரண்டு வலைத்தளங்கள்..!

1. அனிதா ரத்னம்


தற்செயலாகத்தான் இந்த பிளாக்கை பார்த்தேன். படித்தேன். ஆங்கிலத்தில்தான் உள்ளது. பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னத்தின் சொந்த வலைத்தளம்..!

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ் குடும்பத்தினரைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை செம காமெடி..!
 

http://anita-ratnam.blogspot.com/2010/05/sisters-of-imelda.html

2. சார்லஸ் அண்ணன்

முன்னாதாகவே இந்த வலைத்தளம் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும். சற்றுத் தாமதமாகிவிட்டது. எனக்கு முன்பாக நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிவிட்டார்..!


http://vaarthaikal.wordpress.com/

'ருத்ரவீணை', 'சிவமயம்', 'காத்து கருப்பு', 'என் தோழி, என் காதலி, என் மனைவி', 'ரோஜாக்கூட்டம்' என்ற சீரியல்களையும், 'ஜில்லுன்னு ஒரு சேலஞ்ச்', 'இசைக்குடும்பம்', 'சவால்', 'மென்பொருள்' என்ற ஷோக்களையும் இயக்கியிருக்கும் 'சார்லஸ்' என்ற அண்ணனின் தளம் இது.. இவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

தளத்தின் வடிவமைப்பு மிகக் கச்சிதமாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதேபோல் உள்ளடக்கமும்..! கொஞ்சமும் சுய விளம்பரம் இல்லாமல் முழுக்க, முழுக்க சினிமாவுக்காகவே தளத்தை இயக்கி வருகிறார்.. முழுவதையும் படித்துப் பாருங்கள்.. கிறுகிறுத்துப் போய்விடுவீர்கள்..! எளிமையான எழுத்து நடை..!

பார்த்ததில் பிடித்தது



என்ன கொடுமை பாருங்கள்..!? 

இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!

கோட்டா சீனிவாசராவுக்கு எனது ஆறுதலும், வருத்தங்களும்..!

21-06-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று மாலை அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது சட்டென ஒரு நிமிடம் எனக்குள் தூக்கிவாரிப் போட்டது, “ஏண்டா முருகா.. அவருக்கு ஏன் இந்தக் கொடுமை..?” என்று..

அவ்வளவுதான்.. அடுத்த நிமிடத்தில் நாட்டில் தினம்தோறும் நடக்கின்ற சாலை விபத்துக்களில் அதுவும் ஒன்றாகி மனம் தன்னைத்தானே சமாதானமாக்கிக் கொள்ள, மனமும் வேறு வேலைகளில் ஈடுபட்டாகிவிட்டது.

ஆனால் நேற்றைய இரவில் ஜெமினி தொலைக்காட்சியில் உடைந்து போய் சுக்குச் சுக்கலான நிலையில் இருந்த எனது அபிமானத்துக்குரிய அந்த மனிதரைப் பார்த்தவுடனேயே இடம் மாறிய எனது மனம் இந்த நிமிடம்வரையிலும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர மறுக்கிறது..

கோட்டா சீனிவாசராவ் என்கிற பெயரை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போய்விட முடியாது.. கம்பீரமான தோற்றம்.. கள்ளச் சிரிப்பு.. நொடிக்கொரு முறை மாறும் முக பாவனை.. வில்லனா.. நல்லவனா என்பதே தெரியாத வகையிலான நடிப்பு.. வில்லத்தனத்திலேயே நகைச்சுவையை கலந்து கொடுக்கும் சாமர்த்தியம்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே நடிகராக அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார்.


இவருடைய ஒரே மகன் கோட்டா பிரசாத். வயது 39. திருமணமாகி இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாக மதிய விருந்துக்கு ஹோட்டலில் போய் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்பியிருக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் காரில் பின்னால் வர.. பிரசாத் தனக்கு மிகவும் பிடித்தமான தனது வெளிநாட்டு பைக்கை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரசிங்கி என்னும் இடத்திற்கு வரும்போது எமன் ஒரு லாரி உருவத்தில் வந்து பிரசாத்தின் பைக்கை தாக்கியிருக்கிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் புண்ணியமில்லை.. உயிரற்ற உடலாகத்தான் பிரசாத்தை வெளியில் கொண்டு வர முடிந்திருக்கிறது.


ஷூட்டிங்கிற்காக பெங்களூர் சென்றிருந்த கோட்டா சீனிவாசராவ் ஹைதராபாத்துக்கு அவசரமாக ஓடி வந்தும் உயிரற்ற தனது மகனைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது..


எத்தனையோ சினிமாக்களில் அவரும் நல்ல, பாசமான, உண்மையான அப்பாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் பார்த்த ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். இன்றைக்கு தாங்க முடியாத ஒரு சோதனையை அவர் வெளிப்படுத்தியவிதம் அவர் மீது விவரிக்க முடியாத ஒரு ஈர்ப்பை வைத்திருந்த என்னை மாதிரியான சினிமா ரசிகர்களால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.


1978-ல் இருந்து நடித்து வரும் கோட்டா சீனிவாசராவை எனது பால்ய வயதில் இருந்தோ அல்லது எப்போது தெலுங்குத் திரைப்படங்களை விரும்பி பார்க்கத் துவங்கினேனோ அப்போதிலிருந்தே ரசிக்கத் துவங்கிவிட்டேன். முப்பத்தைந்து வருடங்களாக இன்றுவரையிலும் அவரைப் பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருக்க.. இன்றைக்கு அந்த பிம்பம் உடைந்து போன சூழலில் என்னாலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை..

கோட்டா பிரசாத் தற்போதுதான் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். சித்தம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஜெகபதிபாபுவிற்கு வில்லனாக நடித்து தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார். பின்பு தனது தந்தையுடனேயே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுநாள் வரையிலும் திரையுலகத்திற்குள் கால் வைக்காமல் தான் உண்டு, தனது கிரானைட் பிஸினஸ் உண்டு என்று இருந்தவர், கோட்டா சீனிவாசராவ் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திரையுலக லைம் லைட்டிற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

முதல் படத்திலேயே அடையாளம் காணும் அளவுக்கு நடித்திருக்கும் கோட்டா பிரசாத்திற்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர.. அத்தனையிலும் கையெழுத்திட்டுவிட்டு காத்திருந்தவரைத்தான் எமன் கொள்ளை கொண்டு போயிருக்கிறான்.


அஞ்சலி செலுத்த வந்தவர்கள் முன் அழுகையை கட்டுப்படுத்த பல்லைக் கடித்துக் கொண்டு கோட்டா சீனிவாசராவ் பட்ட கஷ்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்தக் கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது..


சோகத்தில் பெரும் சோகம், புத்திர சோகம் என்பார்கள். தான் உயிருடன் இருக்க தான் பெற்ற பிள்ளைக்கு கொள்ளி வைப்பது என்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள்.. தனக்கு மிகவும் நெருக்கமான பாபுமோகனையும், பிரம்மானந்தத்தையும் பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் மீறிய அவரது அழுகையை பார்த்து என் கண்களும் சட்டென்று கலங்கிவிட்டன.


பைக் ஓட்டுவதில் பெரும் ஆர்வமுள்ள பிரசாத் ஆசையாக அந்த பைக்கில் அமர்ந்த நிலையில் எடுத்திருந்த புகைப்படத்தை துக்கம் விசாரிக்க வந்தவர்களிடத்திலெல்லாம் காட்டியபடியே கண் கலங்கிய ஒரு தந்தையின் பரிதவிப்பை இன்றைக்கு சீனிவாசராவ் மூலமாக நான் பார்த்தேன்..


“எங்க அப்பா கூடவே அவருக்கு சரிக்கு சமமான எதிர் வில்லனா நடிக்கணும்.. அதுதான் என்னோட திரையுலக லட்சியம்..” என்று கடைசியாக பேட்டியளித்திருக்கும் பிரசாத்தின் கனவு நிராசையானது சோகம்தான்..

இறந்தவர் யாராக இருந்தால்தான் என்ன..? யார் வீட்டில் நடந்தாலும் அது சாவுதானே..?

ஆனாலும் தந்தையர் தினத்தன்றே.. ஒரு தந்தைக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கக் கூடாதுதான்.. அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..

இராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும்..!


20-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2 வருடங்களாக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தப் படத்தினை முதல் நாளே பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அண்ணன் தடாலடி ஜி.கெளதமிற்கும், தனக்குப் பரிசாகக் கிடைத்த டிக்கெட்டை எனக்குப் பரிசாக அளித்த  அண்ணன் என்.சொக்கன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..!

முதலில் இது இராவணன் என்கிற சராசரி தமிழ்த் திரைப்படம்தான் என்கிற நோக்கில் கொஞ்சம் படிக்கலாம்..!

எல்லை மீறிய காதலைக் காட்டியாகிவிட்டது. சத்தியவான் சாவித்திரியைப் புரட்டியாகிவிட்டது. மகாபாரத்தை பல முறை படித்தாகிவிட்டது. பகவத்கீதையை காண்பித்தாகிவிட்டது.. கடைசியாக இந்த இராமாயணத்தையும் தொட்டுவிட்டால் இதிகாசங்கள் கதை முடிந்துவிடும் என்கிற நினைப்பில் மணிரத்னம் இத்திரைப்படத்தை எடுத்தாரோ என்னவோ..?

இராமாயணம்தான் பேஸ்மெண்ட் என்று தெரிந்தவுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே கதையும், கதையின் முடிவும் தெரிந்துவிட்டது..! ஆனால் மணி மீதான நல்ல அபிப்ராயத்தில் மேக்கிங் எப்படி என்பதை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் செல்கிறது என்று நினைக்கிறேன்..!


பழங்குடி மக்களுக்கு தளபதியாக இருக்கிறான் வீரா என்கிற வீரய்யா(விக்ரம், - ராவணன்). இவனது அண்ணன் சிங்கம்(பிரபு- கும்பகர்ணன்), தம்பி சக்கரை(முன்னா-விபீஷணன்), தங்கை வெண்ணிலா(ப்ரியாமணி- சூர்ப்பணகை) இவனை  வேட்டையாட வருகிறார் தேவ்(பிருத்விராஜ்-ராமன்). இந்த ராமனின் காதல் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்-சீதா). ராமனும், ராவணனும், சீதையும் இருக்கும்போது அனுமானும் இருந்துதானே ஆக வேண்டும். அது கார்த்திக். இப்படி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்.

என்னதான் வீரய்யாவை ஊர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், சட்டத்தின் முன் அவன் ஒரு தேடப்படும் குற்றவாளி. தனது இன மக்களை அழித்த அதிகாரவர்க்கத்தை அவன் எதிர்த்து போராடுகிறான். அதற்கு அவனது இன மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள்.

அதிகாரத்திற்கும், மக்களுக்குமான போட்டியில் வீரய்யாவின் தங்கை வெண்ணிலா அவளது திருமண தினத்தன்றே போலீஸாரால் கற்பழிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள். இந்தச் சோகத்தைத் தனது அண்ணன் வீரய்யாவிடம் சொல்லியவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் வெண்ணிலா.

இதற்குப் பழிக்குப் பழி வாங்க அதிகாரி தேவின் மனைவி ராகினியை கடத்திக் காட்டுக்குள் கொண்டு செல்கிறான் வீரய்யா. தனது மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டை முற்றுகையிடும் தேவ் மற்றும் காவல்துறையினருக்கும், வீரய்யா மற்றும் அவனது இனத்து மக்களுக்கும் இடையில் நடக்கும் அக்கப்போரே மிச்சம், மீதியான கதை..!

இந்திய திரைப்பட உலகின் இயக்கத்தில் தான் ஒரு குரு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணிரத்னம். பிரேமுக்கு பிரேம் காட்சிகளை வித்தியாசப்படுத்தியிருக்கும் மணி, சராசரி ரசிகனுக்குள் ஒரு ஈர்ப்பை உற்பத்திதான் செய்திருக்கிறார். இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பவர்கள் விக்ரம், ஐஸ்வர்யா, ஒளிப்பதிவாளர்கள் மணிகண்டன், சந்தோஷ் சிவன், எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத், கலை இயக்குநர் சமீர் சந்தா மற்றும் ஏராளமான துணை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்தான்..!

தன்னைத்தானே முரடனாகவும், ஒடுக்கப்பட்டவனாகவும், தாழ்த்தப்பட்டவனாகவும், முட்டாளாகவும் காட்டிக் கொள்ளும் விதமாக விக்ரமின் இயல்பும், பேச்சும் அமைக்கப் பெற்று அவருடைய பாடி லாங்குவேஜில் அத்தனை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்..!

வழக்கமான மசாலா படங்களில் தேன் தடவிய தேள் கொடுக்கைக் காட்டும்விதமான காட்சிகளில் நடித்து வந்ததற்கும், இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும், ராபின்ஹூட் வகையறாவாக தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அவருடைய கேரக்டர் இருப்பதினால் அதனை மீறாமல் அதற்குள்ளேயே வட்டமிட்டிருக்கிறார்..!

ஐஸ்வர்யாவை விரும்புகிறாரா இல்லையா என்பதைக்கூட வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பையும், “இங்கேயே இருந்துவிடேன்” என்று அவர் சொல்கின்ற காட்சியும், “இருந்து விடுகிறேன்” என்று ஐஸ்வர்யா சொல்கின்ற காட்சியிலும் காட்சியோடு ஒன்றத்தான் வைக்கிறார்..!

ஏற்கெனவே 'சேது'விலும், 'பிதாமகனி'லும் பேசாமலேயே நடித்துக் காட்டியிருக்கும் விக்ரமிற்கு இதில் கொஞ்சம் அதிகமான உடல் நடிப்பைக் காட்ட வேண்டிய நிலைமை.. ஆனாலும் அந்த 'டண்டண்டக்கா' வார்த்தை உச்சரிப்பும், திருப்பித் திருப்பித் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் முறையும் எரிச்சலைக் கூட்டியதையும் மறுக்க முடியாது..

இறுதிக் காட்சியில் ஐஸ்வர்யாவை பார்த்த மாத்திரத்தில் அவர் கொள்ளும் மகிழ்ச்சியும், ஆனந்தமும்.. அதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பும் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும்..!

ஆனால் அதனை உறுதியாக வாங்கியே தீருவது என்கிற லட்சியத்தில் உழைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.. இந்த அழகு தேவதைக்கு வயதாகிவிட்டது என்பது பிரேமில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பு என்ற ஒன்று அதன் முகத்திலேயே குடி கொண்டிருப்பதை மணிரத்னம், ஷங்கர் அளவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை..!

முதல் முறையாக விக்ரமிடம் இருந்து தப்பிக்க வேண்டி ஆற்றில் குதித்துவிட்டு கரையேறும் நிலையில் முகத்தை மட்டும் காட்டும் அந்த ஷாட் ஒன்றே போதும்..!

“உங்க பிரச்சினைல பொம்பளைங்களை எதுக்கு இழுக்குறீங்க?” என்று கேட்டு கோபப்படும் ஐஸ்வர்யாவையும், “தின்னாத் தின்னு திங்காட்டி போ..” என்று சொல்லிவிட்டு பிரபு சோற்றை வைக்கும் வேகத்தில், அதனை எடுத்து முழுங்கும் வேகத்திலும் நடிப்பென்னவோ அம்மணிக்கு பிய்த்துக் கொண்டு வருகிறது..!

விக்ரமின் மீதான தனது ஈர்ப்பு கூடிக் கொண்டே போவதை அந்தப் பாடல் காட்சியில் நின்று காட்டுவதிலும், பிரியாமணியைக் கற்பழித்த இன்ஸ்பெக்டரை காப்பாற்றத் துடிக்கின்ற வேகத்திலும் ஐஸோ ஐஸூ..!

“அவருக்கு ஒண்ணும் ஆகலியே..” என்று திரும்பித் திரும்பிக் கேட்பதாகட்டும்.. “நான் இங்கேயே இருக்குறேன். ஆனா அவரை விட்டிருவீங்களா?” என்று கேட்கும்போது அவரிடத்தில் இருக்கும் இரட்டை மனப்போக்கை வெளிக்காட்டுகின்ற காட்சியும்....

தான் இருக்கின்ற பிரேம்களில் முழுக் கவனத்தையும் ஈர்த்திருப்பது என்னவோ ஐஸ்வர்யாதான். இது ஒன்றே போதும்.. ஐஸின் ரசிகர்கள் இந்தப் படத்தில் அவருடைய நடிப்பிற்காக நி்ச்சயம் அவரைக் கொண்டாடலாம்..

அடுத்தது பிருத்விராஜ்.. எவ்வளவு தடுத்தாலும் மலையாள வாடை அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முதிர் கன்னியான ஐஸுக்கு, தம்பி மாதிரியான பிருத்வியை போட்டதை மலையாள மார்க்கெட்டுக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்..!

ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ் எப்போதுமே பிய்த்து வாங்குவார். உடன் பிருத்வியுடனும் அப்படியேதானா..? “எங்க நான் வைச்சுப் பார்க்குறேன்..” என்று ஐஸின் நெஞ்சில் கை வைக்கின்ற காட்சியில் தியேட்டரே திட்டித் தீர்த்தது பிருத்வியை..!

கேரக்டர்படி தனது நடிப்பை இயக்குநர் எதிர்பார்த்ததுபோல் கொட்டிக் காண்பித்திருக்கிறார்.. அவரது அப்பாவின் வெகு இயல்பான நடிப்பை மலையாளத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்..! இன்றைக்கு இவருக்கும் அது தானாகவே வருகிறது..! வந்திருக்கிறது..!

ரயிலில் ஐஸிடம் கேட்கின்ற கேள்வியை சலனமேயில்லாமல் தனது காதலி, மனைவி என்றெல்லாம் தோணாமல் விசாரணை அதிகாரியைப் போல அவர் பேசுகின்ற பேச்சும், ஐஸின் பதிலும் கச்சிதம்..! வண்டியை விட்டு இறங்குகின்ற அந்தக் காட்சி வரையிலும் அதுவொரு கவிதைதான்..!

அனுமார் வேடம் என்றால் மரம் விட்டு மரம் தாவித்தான் ஆக வேண்டுமோ.. கார்த்திக்கு அதனைக் கொடுத்து தாவ விட்டிருக்கிறார்கள்.. ஆனால் என்னவோ படத்தில் எனக்கு எரிச்சலைக் கொடுத்த கேரக்டர் இது ஒன்றுதான்..!

எல்லா கேரக்டர்களின் ஸ்கெட்ச்சுகளையும் அக்குவேறு, ஆணிவேறாக அலசியிருக்கும் மணி, கார்த்திக்கில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார். தனது அணியில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரையே சந்தேகக் கண்ணோடு பார்த்து உளவாளி என்று கண்டுபிடிக்கும் பிருத்வி, கார்த்திக் மீது காட்டும் டிபார்ட்மெண்ட் பாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வீரா பற்றித் தெரிந்த மலைவாழ் மக்கள் அனைவரும் டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் பிருத்வியிடம் பற்ற வைக்கும் காட்சியில் அருகிலேயே அமர்ந்து கமெண்ட் அடிக்கும் கார்த்திக்கின் செயல் எரிச்சலைத்தான் தந்தது..! இதனாலேயே வீரா பற்றிய அறிமுகம் மனதில் நிற்க முடியாமல் தத்தளிக்கத் துவங்கியது முதல் சில நிமிடங்களிலேயே..!

“எந்தக் கடைலதான் அரிசி வாங்குறாருன்னு தெரியலை” என்று கோடம்பாக்கமே வருடக்கணக்காக புலம்பும் அளவுக்கு தனது உடலை பிட்னெஸாக வைத்திருக்கும் அண்ணன் பிரபு கும்பகர்ணன் கேரக்டர்.. தம்பிக்காக.. என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற அந்தக் கேரக்டரில் குறையொன்றுமில்லை..!

ஆனால் இவரது மனைவியாக வரும் ரஞ்சிதா தோன்றும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் கை தட்டல் தூள் பறந்தது. யாருக்குமே கிடைக்காத கைதட்டல் இது. ரஞ்சிதாவே நேரில் பார்த்தால் அழுதுவிடுவார். யாராவது போனை போட்டுச் சொல்லுங்கப்பா..!

வெண்ணிலாவான முத்தழகி.. இவரும் கார்த்தியும் இனிமேல் ஒன்றுதான்.. மேற்கொண்டு புதிதாக எதையும் இவர்களிடமிருந்து கறக்க முடியாது போலிருக்கிறது..! ஆனாலும் அந்த தெனாவெட்டு தமிழ்ச் சினிமா கதாநாயகிகளிடம் பிரியாமணியிடம் மட்டுமே முத்திப் போன முருங்கைக்காய் போல் இருக்கிறது..!

விக்ரமை முறைத்துக் கொண்டு தனது வருங்கால கணவனைக் காப்பாற்ற நினைக்கும் முயற்சியிலும், “என் புருஷனை பார்த்தீங்களா மதினி.. பயந்துக்கிட்டு ஓடிட்டாரு. இப்படியொருத்தனை புருஷனா அடையறதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும்..” என்ற அமைதியான புலம்பலின்போதும் 'பருத்திவீரன்' முத்தழகிதான் தெரிந்தார்..!

விபீஷணனாக முன்னா.. ஐஸ், விக்ரம் தவிற வேறு யாருக்கும் குளோஸப் ஷாட்களை அதிகம் வைக்காமல் தவிர்த்திருப்பதால் இவர்களது நடிப்பையெல்லாம் இவர்கள் பேசிய வசனங்களே மென்று தின்று தீர்த்துவிட்டன..!

படத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் ஒளிப்பதிவாளர்களும், கலை இயக்குநரும்..!

இந்த மாதிரியான லொகேஷன்களில் ஷூட் செய்தால் எப்படி இயற்கை ஒளி கிடைக்குமோ அதனையே மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.. போலீஸாரின் டெண்ட் கொட்டகைகள் மாடுகளை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கும்போது கேமிராவி்ன் ஸ்பீடே காட்சியை நகர்த்துகிறது..!

ஒவ்வொரு லொகேஷனிலும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் உள்ளது ஒளிப்பதிவு. இரண்டு ஒளிப்பதிவாளர்களும் எதை, எதை ஷூட் செய்தார்கள் என்பது தெரியாததால் இருவருக்குமே நமது பாராட்டுக்கள்..!

மணிக்கு மிகவும் பிடித்தமான மழையும், இருட்டுமாக படத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதை பார்க்கின்றபோது இது தமிழ்ப் படம் போலத் தோன்றவே இல்லை. இந்த ஒரு வித்தியாசமான அனுபவமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தப் போகிறது..!

அத்துவானக் காட்டுக்குள் அந்த சிலையை எப்படி நிறுவினார்கள் என்றுதான் தெரியவில்லை. அசத்தல்.. ஒவ்வொரு காட்சிக்கும் கலை இயக்குநரின் உழைப்பு கச்சிதம்.. போலீஸின் டெண்ட்டில் அரிக்கேன் விளக்கைக்கூட விட்டு வைக்காமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..!

சிற்சில இடங்களில் லொகேஷன்களின் அற்புதமான காட்சியமைப்பில் நமது பார்வை கேரக்டர்களைத் தவிர்த்து பிற இடங்களின் மேல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை..

இரண்டு மலைகளுக்கு நடுவில் பாலத்தைக் கட்டி அதில் எடுத்திருக்கும் சண்டை காட்சிகள்.. சிறுவர்களைக் கவர வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆனால் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும்விதம் பாராட்டுக்குரியது..!

வழக்கம்போல மணியின் சிந்தர்சைஸர் ஒலிப்பதிவு..! வசனம் என்னவோ நாலு பக்கமே இருந்தாலும் அதனை உச்சரிப்பது நாலு டெசிபலில் மட்டுமே என்றால் எப்படி..? பாதி வசனங்கள் யாருக்குமே புரியவில்லை..! இந்தப் படத்தின் வசனத்தை புத்தகமாக வெளியிட்டால் மட்டுமே முழுமையான வசனங்களை  தெரிந்து கொள்ள முடியும்..!

வழமைபோல அதே “எங்க? ஏன்..? எப்படி..? எதுக்கு..?” என்ற ஒற்றை வரி டயலாக்குகளுடன் திருநெல்வேலி ஸ்லாங்கு்ம் சேர்ந்து கொள்ள ஆளாளுக்கு அதனை ஸ்டைலிஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.. தமிழகத்தின் மெட்ரோ சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு தியேட்டர்களில்தான் சவுண்ட் சிஸ்டம் பக்காவாக உள்ளது. இந்தப் படத்தை திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்..! ம்ஹூம்..!

“உசிரே போகுதே” பாடல் உயிரைக் குடிக்கிறது என்று பலரும் எழுதிக் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருக்க.. அந்தப் பாடலின் முதல் சரணம் மட்டுமே ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. அதுவும் கடைசியில்தான் அது இந்தப் பாடல் என்பதே புரிவதைப் போல் அமைந்திருந்தது நமது துரதிருஷ்டம்..!

பின்னணி இசையில்தான் பிய்த்திருக்கிறார் ரஹ்மான்..! ஆர்ப்பாட்டமான இசை..! படத்தின் கதைக்குத் தேவைக்கேற்ப பின்னணி இசையும் இழைந்து வந்திருக்கிறது.. முதல்முறையாக தமிழ்ப் படத்தின் பின்னணி இசையில் ரஹ்மான் என்னைக் கவர்ந்திருப்பது இந்தப் படத்தில்தான்..!

படத்தில் தென்பட்டதெல்லாம் நிறைகள்தானா..? மணிரத்னம் என்பதால் இப்படியா என்றெல்லாம் நினைக்கலாம்..! குறைகள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு எனக்கெல்லாம் தகுதியும் இல்லை. அனுபவமும் இல்லை.. எனது பார்வையில் கருத்தாக மட்டுமே முன் வைக்கிறேன்..!

முற்பாதியில் கதை எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாத அளவுக்கு ஐஸ், விக்ரமை சுற்றியே போய்க் கொண்டிருக்க.. அந்த ஜெட் வேகம் ஐஸின் மெழுகு உரித்த பொம்மை முகத்தினாலேயே கிடைத்துவிட்டது..! ஆனால் கதை..?

ஐஸை கடத்தியதே பிரியாமணியின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கத்தான் என்பதையே இரண்டாவது பாதியில்தான் சொல்கிறார்கள். இதிலேயே கதை நம்மிடமிருந்து எங்கோ வெகுதூரமாக போய்விட்டது. இதனை முற்பகுதியிலேயே ஐஸ்வர்யா, “உங்க சண்டைல பொம்பளைங்கள எதுக்கு இழுக்குறீங்க..?” என்று கேட்கும்போதே வைத்திருந்தால் அட்லீஸ்ட் நம் மனதில் கர்ச்சீப் அளவுக்காவது கதை டச் ஆயிருக்கும்...!

அதுவும் பிரியாமணியின் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லுமிடத்தில் காட்சியமைப்பு படு சொதப்பல்..! விக்ரமின் கத்தல்.. ஐஸின் கதறல்.. பிரபுவின் உறுமல் என்று மூன்றும் மாறி மாறி கட் டூ சீன்களாக வந்து தொலைக்க.. ஏதோ டாக்குமெண்ட்ரி பார்த்தது போலாகிவிட்டது..!

படத்தின் கதைக்குச் சம்பந்தமில்லாமல் லொகேஷன்கள் மாறுவது பிரியாமணியின் கல்யாணத்தின்போதுதான்..! கலை இயக்குநரின் கலை வித்தையை நாம் அங்கே ரசிக்கலாம். ஆனால் இடறுகிறதே..!

பரமாத்மாவாக நிம்மதியாக இருக்கும் வைகுந்தப் பெருமாளிடத்தில் போய் ஐஸ் புலம்புகின்ற காட்சியில் ஏன் இவ்வளவு கொடூரமான வசனங்கள்.. “கெட்டவங்களை கெட்டவங்களாவே வைச்சிரு.. நல்லவங்களை நல்லவங்களாவே வைச்சிரு” என்று..! இதனை சுஹாசினியிடம் கேட்டுப் புண்ணியமில்லை. ஒரிஜினல் வசனகர்த்தாவிடம்தான் கேட்க வேண்டும்..

திடுதிப்பென்று ஐஸின் பாரதியாரின் பாடலையும் மீதிப் பாடலை வீரா சொல்கின்ற இடத்தில் “ரோஜா” படத்தில் அரவிந்த்சாமி “ஜெய்ஹிந்த்” என்று சொல்கின்ற எபெக்ட்டை மணி எதிர்பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. படு சொதப்பலாகிவிட்டது அந்தக் காட்சி..!

“நான் பட்டியான்.. கிராமத்தான்.. ஒடுக்கப்பட்டவன். படிக்காதவன்.. முட்டாள்.. ஒண்ணுமில்லாதவன்..” என்றெல்லாம் தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வீராவின் கோபம் எதைப் பற்றியது.. யாரைப் பற்றியது.. என்பதையே டச் செய்யாமல் அவனை வீரனாக மட்டுமே சித்தரிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் இயக்குநர்.

ஐஸை விக்ரம் விரும்புகிறாரா இல்லையா என்பதைப் போல் கதையை மாற்றிவிட.. இது பழி வாங்கும் கதையில் இருந்து புதிய காதல் கதையாகி கிளை பரவி வேர்விட்டதில் நொறுங்கிப் போனது மணி வடிவமைத்த கதையின் பேஸ்மெண்ட்..!

என்ன இருந்தாலும் ஒரு நல்ல கதையை இப்படிச் சிதைத்திருக்கக் கூடாது..! இப்படி நானும், நீங்களும் புலம்பினாலும் இந்தப் படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் யார் என்பது டைட்டிலில் தெரியாததால் இயக்குநர் மணியையே இதற்குச் சொந்தமாக்கி அவர் மீதே பழியைச் சுமத்துவோம்..!

படத்தில் எத்தனையோ நிறை, குறைகளைப் பற்றிச் சொன்னாலும் இயக்குநரும், அவர்தம் குழுவினரும் காட்டியிருக்கும் உழைப்பைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது..! எத்தனை நாட்கள் ஷூட்டிங் என்றாலும் இத்தனையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பதும், அழுவதுமாக இரண்டு மொழிகளுக்கும் முகத்தைக் காட்டியிருக்கும் ஐஸ்வர்யா என்னும் தங்கத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.. எப்படித்தான் அவரால் முடிந்ததோ..?

இத்தனை லொகேஷன்களில் ஷூட்டிங் நடத்தி ஒரு வியத்தகு மேக்கிங்கை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்றால் தென்னிந்திய திரைப்பட ஊழியர்களின் திறமையை என்னவென்று சொல்வது..? அத்தனை பேருக்கும் எனது அப்ளாஸ்..!

தமிழ், இந்தி என்று அப்போதைக்கு அப்போதே அதே லொகேஷன்களில் உடனுக்குடன் காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள் என்றால் மணிரத்னத்தின் புயல் வேக உழைப்பும், அவருடைய யூனிட்டாரின் திறமையும் இந்திய திரைப்பட உலகத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான்..!

இத்தோடு இத்திரைப்படத்தின் பெருமைகளை நிறுத்திக் கொண்டு இதற்குள் பொதிந்திருக்கும் அரசியல் செய்திகளைப் பார்ப்போம்..!

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டுமென்று நானே பல முறை எனது பதிவுகளில் எழுதியிருக்கிறேன்..! “உன்னைப் போல் ஒருவனில்” வலையுலகமே ஆட்டமோ ஆட்டம் ஆடியபோது “இரண்டு வசனங்களை மட்டுமே வைத்து படம் மொத்தத்தையும் எடை போடக்கூடாது” என்று சொன்னேன்.

இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்து அப்படியே தோசையைத் திருப்பிப் போட வேண்டிய கட்டாயம்..!

'ரோஜா', 'தளபதி', 'பம்பாய்', 'இருவர்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'தில்சே' என்று தனது படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு சென்சிட்டிவ் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் மணிரத்னம், அதன் காரணம் என்னவாக இருக்கும் என்பதை மட்டும் கவனமாக டச் செய்யாமல் தன்னை வெறும் பார்வையாளனாக மட்டுமே வைத்துக் கொண்டு நடிகர்களைக் கொண்டு அதனை எதிர் கொள்ளும் தனி மனிதர்களின் பிரச்சினைகளாக உருவாக்கிக் கொண்டே சென்றுள்ளார். இதிலும் அதே கதைதான்..!

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின்  ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!

தண்டகாரண்யாவிலும், நந்திகிராமிலும் நடந்தவைகள் ஒன்றுதான்..! நந்திகிராம் அளவுக்கு தண்டகாரண்யாவின் நடந்தவைகள் பிளாஷ்லைட்டுக்கு கொண்டு வரப்படாததன் காரணத்திலும் பல அரசியல்கள் உள்ளன..!

இந்தப் படத்தின் கதைப்படி பழங்குடியினர் எதற்காக ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும்..? அதிகார வர்க்கம் எதற்காக அவர்களைப் பழி வாங்கத் துடிக்க வேண்டும்..? அந்த மக்களுடன் இயைந்து அவர்களுக்கு வேண்டியவைகளைச் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்திருக்கும் அதிகார வர்க்கம், அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. காப்பாற்றத் துடிக்கும் இளைஞனாக வீரய்யா.. இது இந்தியாவில் இப்போது பற்றியெரிந்து கொண்டிருக்கும் பொதுவான பிரச்சினை..

தேவ் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரிக்கும், வீரய்யா என்பவனுக்கும் சொந்தமாக வாய்க்கால், வரப்புத் தகராறு. அதனால் மனைவி கடத்தல் என்று கதையைக் கொண்டு போயிருந்தால் இது கிட்நாப்.. மனைவியின் கள்ளக்காதல் என்றாகி படம் வேறு திசையில் பயணித்திருக்கும்...!

ஆனால் கதை, தற்போது நாட்டின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கும் மாவோயிஸ்ட்டுகளைத் தொட்டுக் கொன்று சென்றுள்ளது.. ஆனால் அதனை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டு அந்த வீரய்யாவின் தனிப்பட்ட காதல் பிரச்சினையை பெரிதாக்கி.. எஸ்.பி.யின் மனைவியை மீட்பது என்ற ஒற்றை வரி பிரச்சினையையும் பெரிதாக்கி.. வேறு இடத்திற்கு கொண்டு போக முனைந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!

வீரப்பன் வேட்டையிலும் இதே கதைதானே நடந்தது.. சாதாரணமாக இருந்த வீரப்பனை துப்பாக்கி ஏந்திய வீரப்பனாக உருமாற்றியது இந்த பாழாய்ப் போன அதிகார வர்க்கம்தானே.. இராமாயணக் கதையோடு இழையோடும் வகையில் விபீஷணனாக முன்னாவை சமரசத்திற்கு அனுப்பி வைக்கும் இடத்தில், வீரப்பன் வேட்டையும் என் ஞாபகத்திற்கு வந்தது.

வீரப்பனின் தம்பி அர்ஜூனனையும் இதேபோல் கைதிகள் பரிமாற்றத்திற்காக சமரசப் பேச்சு நடத்த அனுப்பி வைத்தார் வீரப்பன். அதற்குள்ளாக வீரப்பனின் பிடியில் இருந்தவர்கள் தப்பியோடி வந்துவிட.. போலீஸின் பிடியில் இருந்த அர்ஜூனன் சித்ரவதை செய்யப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்..! இது அதிகார வர்க்கம் செய்த நயவஞ்சகத்தனம்..! அதேதான் முன்னாவுக்கும் நடந்தது..! பிரியாமணியின் கணவனுக்கும் நடந்தது..!

தனது மனைவியை மீட்பது ஒன்றே லட்சியம் என்ற நிலையில் இருக்கும் எஸ்.பி. தேவ், ஒரு கையை இழந்து துடித்துக் கொண்டிருக்கும் அந்த மாப்பிள்ளையை அந்தக் கோலத்திலும் சித்ரவதை செய்யும் மனநிலைக்கு போகிறாரே.. இதைத்தானே வீரப்பன் வேட்டையிலும் நமது காவல்துறை செய்தது..! படம் ரீலுக்கு ரீல் சுட்டிக் காட்டுவதெல்லாம் இந்த அரசியலைத்தான். ஆனால் அது நிஜமில்லை என்ற பொய் முகமூடியைப் போட்டு மறைத்துக் கொண்டுள்ளார் மணி. ஏன்..?

எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..! 




அதிலும் இந்திய சினிமாவின் ரசிகர்களில் 90 சதவிகிதம் பேர் பார்த்துவிடக் கூடிய சாத்தியமுள்ள மணிரத்னத்தின் படமாக இது இருப்பதினால் இந்த உண்மையான கதையை இந்திய மக்கள் முன் மணிரத்னம் வைத்திருந்தால் எத்தனை பெரிய பெருமையும், பெயரும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும்..?


ஆனால் மணி இதற்குள் ஆழமாகப் போக விரும்பாமல் அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ஐஸ்வர்யாவை நினைத்து வீரா ஏங்குவதைப் போலவும், வீராவை நினைத்து ஐஸ்வர்யா தவிப்பது போலவும் கதையைத் திருப்பிவிட கதை கந்தலாகிவிட்டது..!

மக்களுக்கு நன்மை செய்யவிருப்பவன், செய்து கொண்டிருப்பவன் என்கிற மேன்மையை அவன் மேல் திணித்து வைத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்படுபவனைப் போலவும் காட்டிவிட்டால் சராசரியான ஒரு பார்வையாளனுக்கு அந்தக் கேரக்டர் மீது என்ன ஈர்ப்பு வரும்..?

தீவிரவாதிகளாக யாரும் இங்கே பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அப்படியொரு சூழலில் இருக்கும் அந்த மக்களிடையே அது பற்றிய சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக்கூட காட்டாமல் அவர்களுடைய வாழ்க்கை முறையை சந்தோஷமும், கூத்தும், கும்மாளமுமாக மாற்றிக் காண்பித்ததில் படத்தின் டெம்போ குறைந்ததுதான் மிச்சம்..!

பிரியாமணியின் மாப்பிள்ளை எந்த இனம் என்பதை கல்யாணத்தில் காட்ட நினைத்த மணி அது ஒரு வர்க்க பேதத்தையும், ஜாதி வித்தியாசத்தையும் குறிப்பதை மாப்பிள்ளை வீட்டாரை அடையாளப்படுத்துவதிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. துப்பாக்கிச் சூடு, அதிகார வர்க்கத்தின் தாக்குல் என்றவுடனேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் சிட்டிலைட் மனப்பான்மையை அந்த மாப்பிள்ளையின் மூலமாக வெளிக்காட்டியிருக்கிறார் மணி. இந்த ஒன்றுதான் இத்திரைப்படத்தின் மூலம் அவர் செய்திருக்கும் ஒரேயொரு நல்ல விஷயம்..!

ஆதிக்க சக்திகளின் அபகரிக்கும் குணம், பன்னாட்டு நிறுவனங்களின் அகசாய சூறையாடல்.. இதற்கு ஒத்துப் போகும் அதிகார வர்க்கம்.. இவர்களை எதிர்க்கும் அப்பாவி மக்களின் போராட்டம் என்று ஐஸ்வர்யா என்கிற பெண்ணின் கடத்தல் மூலமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் இந்தியாவின் ரத்தினமாக சொல்லப்பட்டிருப்பார் மணிரத்னம்.

ஆனால் ஒரு திரைப்படத்தை செய்நேர்த்தியோடு செய்து முடித்திருப்பதில் மட்டுமே, மணி தனது பெயரை நிலை நாட்டியிருப்பதால் துரதிருஷ்டவசமாக இந்தியத் திரையுலகத்தின் ரத்தினம் என்ற பெயர் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கிறது..! வருந்துகிறேன்..!

இராவணன் - கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..?

17-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார்.


கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய  அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்குகளில் தமிழகக் காவல்துறையில் தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்படும் டக்ளஸூக்கு மத்திய அரசின் மரியாதையா..? அவரை கைது செய்து தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கருத்து உருவாக.. விவகாரம் பூதாகரமானது.

அதே சமயம், “டக்ளஸ் தேவானந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் டக்ளஸ். இந்தத் தகவலை டெல்லி போலீஸாருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்..” என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவிக்க.. இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் தங்களின் இந்தியப் பயணத்தை மிக ஜாலியாக முடித்துக் கொண்டு ஹாயாக இலங்கைக்குச் சென்றுவிட்டனர் ராஜபக்சேவும், டக்ளஸூம்.

தமிழகத்தின் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் மீது மிக வலிமையாக இருப்பது. இளைஞர் திருநாவுக்கரசை சுட்டுக் கொன்ற வழக்கு.

1986-ல் சென்னை சூளைமேட்டில் முத்துஇருளாண்டி காலனியில் நடந்த இந்த கொடூரம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கு உட்பட நிலுவையில் உள்ள வழக்குகளின்படி டக்ளஸை கைது செய்ய தமிழகத்திற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்கிற கருத்துக்கள் எதிரொலிக்கும் நிலையில் "அப்போது நடந்தது என்ன..?" என்பதை அறிய முத்து இருளாண்டி காலனிக்குச் சென்றோம்.

திருநாவுக்கரசு பற்றி அங்கேயிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, "மறக்கக் கூடிய சம்பவமா அது..? மிக கொடூரமாக நடந்த துப்பாக்கிச் சூடு. சினிமாவுல கூட பார்த்திருக்க மாட்டீங்க.. அப்படி இருந்தது அன்னிக்கு.." என்ற காலனி மக்கள், "திருநாவுக்கரசுவின் அப்பா, அம்மால்லாம் இறந்து போயிட்டாங்க. அவரோட அண்ணன் நடராஜன் குடும்பம் இங்கதான் இருக்கு. அவரைப் போய் பாருங்க.." என்றனர்.

தனது மனைவி ரத்னாவுடன் ஒண்டுக் குடும்பத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார் நடராஜன். அவரைச் சந்தித்து திருநாவுக்கரசு பற்றி பேசித் துவங்கியதும் அப்படியே சோகத்தில் மூழ்கிவிட்டார் நடராஜன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "இலங்கையிலும் சரி.. இங்கேயும் சரி.. தமிழன் உயிருன்னா அவங்களுக்கு கேவலமா போயிருச்சு. இந்த 24 வருஷத்துல ஒரு முறைகூட போலீஸ்காரங்க இந்த விஷயத்தைப் பத்தி எங்ககிட்ட விசாரிக்கவே இல்லைங்க.." என்று ஆதங்கப்பட்டார். அப்போது அவரது முகத்தில் கடந்த கால சம்பவத்தை நினைத்து ஆத்திரமும், கோபமும் கொப்பளித்தது.

மீண்டும் ஒரு முறை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசிய நடராஜன், "சின்ன வயசிலேயே எங்கப்பா செத்துட்டாரு. எங்கம்மாதான் எங்களை வளர்த்தாங்க. அவங்களும் என் தம்பி திருநாவுக்கரசு கொல்லப்பட்ட மறு வருஷம் இறந்துட்டாங்க. திருநாவுக்கரசுக்கு நேர் மூத்தவன் நான். எங்களுக்கு 1 அக்கா. 4 தங்கைகள். மொத்தம் ஏழு பேர் நாங்க.

இந்தக் காலனி முழுக்க அரிஜன மக்கள்தான். எங்க காலனிலேயே என் தம்பி திருநாவுக்கரசுதான் அப்போ அதிகம் படிச்சவன். எம்.ஏ. பட்டதாரி. அதனால அவனுக்கு ஏக மரியாதை. அவனும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைன்னா முன்னால வந்து நிப்பான். பொது சேவையைத்தான் தனது உயிராக நினைச்சான்.

இந்தப் பகுதி மக்களுக்காக 'உடற்பயிற்சிக் கழகம்'னு ஆரம்பிச்சு சேவை செஞ்சான். இந்த ஏரியா முனையில இப்போ கார்ப்பரேஷன் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. 1986-ல அந்த இடம் காலியா கெடந்துச்சு. அந்த இடத்துல ஒரு ஜிம் ரெடி பண்ணினான். எங்க காலனி மக்கள் மட்டுமல்லாது இதனையொட்டியுள்ள திருவள்ளுவர்புரம் மக்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்வாங்க.

இப்போ இருக்குற மாதிரி அன்னிக்கு வீடுகளெல்லாம் இல்ல. ஒரே ஒரு மாடிதான் வீட்டுக்கு. இந்த ஏரியாவுல ஒரு வீட்ல 10 இளைஞர்கள் தங்கியிருந்தாங்க. 25, 26 வயசு அவங்களுக்கு இருக்கும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான பத்மநாபா இயக்கத்தை(அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த இளைஞர்கள்ன்னு அரசல்புரசலா எல்லாருக்கும் தெரியும். இந்த குரூப்புக்கு டக்ளஸ்தான் லீடர் மாதிரி. ஆனா எல்லாருமே அவரைப் பேரைச் சொல்லியே கூப்பிடுவாங்க. காலையிலேயும், சாயந்தரமும் திருநாவுக்கரசோட ஜிம்முலதான் உடற்பயிற்சி செய்வாங்க. ராத்திரியானா தண்ணியடிச்சிட்டு ஒரே கும்மாளமாக இருக்கும். இலங்கையில பிரச்சினைங்கிறதால இங்க வந்து தங்கியிருக்காங்கன்னு நாங்கள்லாம் நினைச்சோம். ஆனா அந்தப் படுபாவிங்க.. என் தம்பியை சுட்டுக் கொல்லுவாங்கன்னு தெரியாமப் போச்சு..

1986 நவம்பர் 1-ம் தேதி. அன்னிக்கு தீபாவளி. ஊரே பட்டாசு வெடிச்சு கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. மதியம் ரெண்டரை, மூணு மணி இருக்கும். தீபாவளிங்கிறதால அந்த 10 பேரும் இங்குள்ள சாராயக் கடையில நல்லா குடிச்சிட்டு ஒரு பொட்டிக் கடையில நின்னு முறுக்கும், பழமும் வாங்கித் துன்னுட்டு காசு கொடுக்காம போகப் பார்த்திருக்காங்க.

'காசு கொடுங்க'ன்னு கடைக்காரர் கேட்க.. அவங்களுக்குள்ளே வாய்த் தகராறு. அந்த கடைக்காரரை அவங்க அடிக்க.. அப்போ அங்க நின்னுக்கிட்டு இருந்த எங்க காலனி ஆள் ஒருத்தர், கடைக்காரருக்கு சப்போர்ட் பண்ணி கடுமையா பேசியிருக்காரு. உடனே அவனுங்க எங்க ஆளைப் போட்டு கண்ணு மூக்கு தெரியாம தாக்க.. அவரோட அலறல் சப்தம் கேட்டு காலனி மக்கள் நாங்க எல்லாம் ஓடினோம்.

காலனி மக்கள் ஓடி வர்றதை பார்த்து அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிப் போய் ஆளாளுக்கு தூப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துட்டானுங்க. டக்ளஸ்ங்கிற ஆளோட கையில ஏ.கே.47 துப்பாக்கி.

'எவனாவது நெருங்கி வந்தீங்க.. சுட்டுப் பொசுக்கிருவேன்'னு காட்டுக் கத்துக் கத்திக்கிட்டே வானத்தை நோக்கி டக்ளஸூம் இன்னும் ரெண்டு, மூணு பேரும் படபடன்னு துப்பாக்கியால சுட்டாங்க. இதனால, மக்களெல்லாம் அப்படியே நின்னுக்கிட்டு கற்களைத் தூக்கி அவங்க மேல வீசினோம்.

அதுக்குள்ளே 'துப்பாக்கியால சுடுறானுங்க.. சுடுறானுங்க'ன்னு மக்கள் கூச்சல் போட.. அப்போ வீட்ல சாப்பிட்டுக்கிட்டிருந்த என் தம்பி திருநாவுக்கரசுவும், மச்சான் குருமூர்த்தியும் வெளில ஓடி வந்தாங்க. டக்ளஸ் கும்பல் துப்பாக்கியை வைச்சுக்கிட்டு வீதியில அங்குமிங்கும் நடந்துக்கிட்டே ஆக்ரோஷமா குரல் கொடுத்ததைக் கேட்டுக்கிட்டே 'சுட்டுடாதீங்க ஸார்.. சுடாதீங்க ஸார்'ன்னு அவர்களை நோக்கி என் தம்பி போனான்.

'போகாத தம்பி.. போகாத தம்பி'ன்னு காலனி மக்கள் சொல்ல.. அதைப் பொருட்படுத்தாம அவர்களைச் சமாதானப்படுத்துறேன்னு திருநாவுக்கரசு முன்னேற.. இதனால ஆத்திரமடைஞ்ச டக்ளஸ், என் தம்பியைப் பார்த்து படபடவென சுட.. நாலஞ்சு குண்டுகள் திருநாவுக்கரசு நெஞ்சைத் துளைத்தது. அதுல ஒரு குண்டு அவன் நெஞ்சைத் துளைச்சு வெளியேறி பக்கத்துல இருந்த சுவத்தைத் தூக்கியது. அந்தச் சுவத்துல அரை அடிக்குப் பள்ளம். அப்படின்னா அந்தத் துப்பாக்கியின் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க..

துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அப்படியே கீழே விழுந்து உயிருக்குப் போராடினான் என் தம்பி. டக்ளஸின் வெறிச்செயலைக் கண்டு கொதிச்சுப் போன எங்க மக்கள், 'டேய்.. டேய்.. டேய்..'ன்னு கத்திக்கிட்டே அவனுங்களை நோக்கி ஓடினோம். இதைப் பார்த்து மீண்டும் சுட்டது அந்தக் கும்பல். இதில் என் மைத்துனர் குருமூர்த்திக்கும் ரவி என்கிற இளைஞனுக்கும் குண்டடிபட்டது.

அவனுங்க துப்பாக்கியைக் காட்டி மிரட்ட காலனி மக்கள் எல்லாம் கற்களை வீசியும், டயர்களை கொழுத்தியும் அவனுங்க மீது வீசினோம். எரியாவே களவரமானது. பயந்த சுபாவம் உள்ள மக்களெல்லாம் வீட்டுக்குள்ளே போய் கதவைச் சாத்தி அடைச்சுக்கிட்டாங்க. உடனே அவனுங்க வீட்டுக்குள்ளே போய் ஹெல்மட்டையும் ராணுவ உடையையும் மாட்டிக்கிட்டு மொட்டை மாடிக்கு ஏறிட்டானுங்க. ஒவ்வொரு வீட்டு மொட்டை, மொட்டை மாடியா தாவிக்கிட்டே நடை போட்டானுங்க..

கையில இருந்த துப்பாக்கியைத் தூக்கித் தூக்கி வானத்துல சுட்டு மிரட்டுனாங்க.. அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிய சமயத்தில் சட்டென ஓடிப் போய் என் தம்பியைத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏத்திக்குட்டு பறந்தோம். ஆனா.. போற வழியிலேயே என் தம்பி உயிர் போயிருச்சு.." என்று சொல்லி கண் கலங்கினார்.

மேலும் தொடர்ந்த நடராஜன், "மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு துப்பாக்கியால் மக்களை மிரட்டிக் கொண்டிருக்க.. ஏரியாவே பதட்டமாயிருச்சு. இந்தச் சம்பவத்தை அறிந்து ஒரு வேனில் போலீஸ்காரங்க வர.. வேனில் இருந்த அவங்களை இறங்கவிடாமல் வேனை நோக்கி சராமரியா சுட்டாங்க. வேன் அப்படியே யூ டர்ன் எடுத்துக்கிட்டுப் பறந்தது.

கொஞ்ச நேரத்துல அப்போதைய சட்டம் ஒழுங்கு ஐ.ஜி.ஸ்ரீபால், போலீஸ்காரங்களோட வந்து இறங்கினார். ஏரியாவை முழுக்க தங்கள் கஸ்டடியில் எடுத்துக் கொண்டது போலீஸ். சரணடையுமாறு எவ்வளவோ கெஞ்சியும் அந்த கொலைகாரக் கும்பல் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனர் தேவாரம் இங்கு வர வேண்டும் என்று அவர்கள் சொல்ல.. அவரும் வந்தார். அதன் பிறகு அவரிடம்தான் அந்த 10 பேரும் சரணடைந்தார்கள்.

டக்ளஸ் உட்பட 10 பேர் மீதும் கொலை வழக்குப் போட்டது போலீஸ். ஆனா ஒரு முறைகூட எங்ககிட்ட விசாரிச்சு, சாட்சிகளை சேர்த்து அவனுங்களுக்குத் தண்டனை வாங்கித் தர போலீஸ் முயற்சி எடுக்கவே இல்லை.. என் தம்பியை சுட்டுக் கொன்னதுமில்லாம மக்களைக் கொல்லவும் துணிஞ்சிருக்கானுங்க..

ஆனா அவனுங்களுக்குத் தண்டனையே இல்லை. தமிழன் உயிரென்ன இவனுங்களுக்கு மயிரா..? இலங்கையிலும் சுட்டுக் கொல்றானுங்க.. இங்கேயும் சுட்டுக் கொல்றானுங்க.. இந்தச் சம்பவம் நடந்து 24 வருஷமாச்சு. தேடப்படுற குற்றவாளின்னு சொல்லுது போலீஸ். ஆனா அந்த டக்ளஸ் ராஜமரியாதையோட இந்தியாவுக்கு வர்றான். பிரதமரோட விருந்து சாப்பிடுறான். அவனை கைது பண்ண எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் தம்பியோட சாவுக்கு இந்தியாவுல நீதி கிடைக்காதா?" என்றார் கதறியபடியே..

நடராஜனின் மனைவியும், திருநாவுக்கரசின் அண்ணியுமான ரத்னா, "என் கொழுந்தனார் உயிரோட இருந்திருந்தா எங்க காலனியும், எங்க குடும்பமும் எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சிருக்கும். அன்னைக்கு நடந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது. மக்களை மிரட்டி, ஜனங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு கொலைகாரன் வெளிப்படையா உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சும் அரசாங்கம் கம்முன்னு இருக்குன்னா செத்துப் போனது ஒரு ஏழை. அதுவும் தாழ்த்தப்பட்டவன்கிறதாலதானே..? தாழ்த்தப்பட்டவங்க சுட்டுக் கொல்லப்பட்டா இந்தியாவுல நீதி கிடைக்காதா..? இலங்கையில் தமிழர்களைச் சுட்டுக் கொன்ற ராஜபக்சேவுக்கும், தமிழகத்தில் தமிழனைச் சுட்டுக் கொன்ன டக்ளஸூக்கும் விருந்து கொடுக்கிற இந்திய அரசாங்கமே.. எங்களுக்கு நீதி கிடைக்காதா..? அந்தக் குற்றவாளியை தூக்குல போட்டாத்தான் என் கொழுந்தன் ஆன்மா சாந்தியடையும்.." என்று குமுறினார்.

டக்ளஸ் கும்பலால் குண்டடிபட்டவரும், திருநாவுக்கரசுவின் தங்கை கணவருமான குருமூர்த்தி, "என் கை விரலில் குண்டுபட்டதால், ஓட்டை மட்டுமே விழுந்துச்சு. என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா என் மச்சினன் மாதிரியே ரவிங்கிற ஒருத்தருக்கும் குண்டடிபட்டுச்சு. அவனையும் தூக்கிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனாங்க. கே.எம்.சி.ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு பிறகு ஸ்டான்லியில் அட்மிட் பண்ணினாங்க. ஒரு நாள் அந்த ரவி உயிரோட இருந்தான். மறுநாள் செத்துட்டான். ஹாஸ்பிட்டலில் உயிர் போனதால இந்த மரணத்தை மறைச்சிட்டாங்க.." என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த குருமூர்த்தி, "இந்த கேஸ் ஹைகோர்ட்ல வந்தப்போ முதல் ஹியரிங்குக்கு என்னையும் அழைச்சுக்கிட்டு போனாங்க. அப்போ டக்ளஸ், ரமேஷ், ராஜன், முரளின்னு 10 பேரை நிறுத்தனாங்க.. அவ்வளவுதான்.. ரெண்டாவது ஹியரிங்கிற்கு போனப்போ அதுல 2 பேரை காணோம். அவங்க செத்துப் போயிட்டதா சொன்னாங்க. அப்புறம் 3-வது ஹியரிங்ல 3 பேர் செத்துப் போயிட்டதா சொன்னாங்க. 4-வது ஹியரிங் வந்தப்போ, 'எல்லோருமே செத்துப் போயாச்சு.. கேஸை மூடிட்டோம். இனிமே நீங்க வரத் தேவையில்லை'ன்னு அரசு வக்கீல் சொன்னாரு.  

அதுக்குப் பிறகு அந்த வழக்கு பத்தின நியூஸே வரலை. ஆனா இப்போ திடீரென டக்ளஸ் இந்தியாவுக்கு வரவும்தான் எங்களுக்கு அந்த கொலைகாரன் உயிரோட இருக்கிறதே தெரியுது. இவ்வளவு காலமும் உயிரோடுதான் இருந்திருக்கிறான். இலங்கையில மந்திரியாவும் இருக்கான். தேடப்படும் குற்றவாளின்னு இப்போ அறிவிக்கிற போலீஸ்.. இவ்வளவு காலமும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது..? என் மச்சான் சாவுக்கு நீதி கேட்க தமிழக மக்கள்தான் உதவணும்.." என்றார்.

இந்த நிலையில் 'தமிழக போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் கைது செய்யப்பட வேண்டும்' என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

அப்போது டெல்லியில் இருந்த டக்ளஸ், "1987-ல் நடந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது" என்றார்.

இது பற்றி வக்கீல் புகழேந்தியிடம் பேசியபோது, "1987-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 'இலங்கையில் போராளிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.. தமிழகத்தில் நடத்தப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

மேலும் திருநாவுக்கரசை டக்ளஸ் சுட்டுக் கொன்றது 1986-ல். ஒப்பந்தம் கையெழுத்தானது 1987-ல். அடுத்து டக்ளஸ் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கு 1988-1989-களில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திற்குப் பிறகும் இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் ஒப்பந்தத்தைக் காட்டி டக்ளஸ் தப்பிக்கவே முடியாது.

போலீஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி இலங்கை அரசில் மந்திரியாக இருப்பதும், இந்தியாவுக்கு சுதந்திரமாக வந்து போவதும் கண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்.. இந்தியச் சட்டத்திற்கு தலைக்குனிவையே ஏற்படுத்தும்.." என்றார்.

இதே நேரத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போது தே.மு.தி.க. கட்சியின் அவைத் தலைவருமாகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இது பற்றி அளித்துள்ள பேட்டி இது.

கேள்வி : இந்திய இலங்கை அரசுகள் செய்து கொண்டு ஒப்பந்தத்தின்படி டக்ளஸுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரியா..?

பண்ருட்டி பதில் : "1987-ல் இந்திய இலங்கை அரசுகள் உடன்பாடு செய்து கொண்டபோது தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்பட்டு அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன் நான். டக்ளஸ் சொல்வதுபோல அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படவில்லை. அத்தகைய பிரிவு எதுவும் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. போராளிக் குழுக்கள் முன் வந்தால் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மட்டுமே அதில் ஒரு ஷரத்தில் வழி வகை செய்யப்பட்டது. தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால் அதற்குச் சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பு.

டக்ளஸை பொறுத்தவரை சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றுவரை தேடப்படும் குற்றவாளிதான். எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை."

கேள்வி : டக்ளஸ் உங்களை அந்தச் சமயத்தில் சந்தித்தாரா..?

பண்ருட்டி பதில் : "இப்போது இலங்கையில் அமைச்சராக இருக்கும் அவர் அப்போது பெரிய ஆள் இல்லை. போராளிக் குழுக்களின் சார்பில் பத்மநாபா, முகுந்தன், சிறீசபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்கள்தான் எம்.ஜி.ஆரை சந்திக்க வருவார்கள். நான் உடன் இருப்பேன்.

1980-களின் கடைசியில் ஒரு முறை டக்ளஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து 'யாழ்ப்பாணம் சென்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த நிதியுதவி தாருங்கள்' என்று கேட்டார். நான் திருப்பியனுப்பிவிட்டேன். அதைத் தவிர எப்போதும் அவர் என்னைச் சந்தித்ததில்லை."

கேள்வி : டக்ளஸ் மீதான வழக்குகள் பற்றி, பத்திரிகை மூலம்தான் தெரிந்து கொண்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளாரே..?

பண்ருட்டி பதில் : "சட்டம், ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் என்றாலும், தமிழகத்திலும் மத்திய உளவுத்துறை செயல்படுகிறது. டக்ளஸ் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. இவரைப் போல யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் மத்தியஉளவுத்துறை அவர்களைக் குறித்து அறிக்கை அளிப்பது வழக்கம். பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்துவிட்டு உளவுத் துறை கூறியதன் பேரில்தானே பின்னர் திருப்பியனுப்பினார்கள். எனவே உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை.

போபர்ஸ் ஊழல் வழக்கு குவாத்ரோச்சி, போபால் விஷ வாயு கசிவு வழக்கு ஆண்டர்சன் என அரசுக்கு வேண்டியவர்கள் எத்தகைய தவறு செய்தாலும் அவர்களை வரவேற்பதும், வேண்டாதவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தொல்லை கொடுப்பதும்தான் இங்கே நடைமுறையாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களது நிலையைத் தெரிவிக்க வேண்டுமென்று கூறி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி : நக்கீரன் வார இதழ் - ஜூன் 16-18, 2010
 
ஜூனியர் விகடன் - 20-06-2010


இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..!

12-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இதுதான் அந்தச் செய்தி..

1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.


சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.

தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.

தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். "கிருஷ்ணன் ஏறிட்டானா?" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.

தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.

"டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?" என்று அதிர்ந்து போய் கேட்டார். "ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல.." என்றேன். "என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ.." என்று சத்தம் போட்டார்.

எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு  வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.

அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். "அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.

இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, "என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.

கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.

நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, "டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி.." என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா.." என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.

நான் ஆடிப் போனேன். "ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா.." என்று பதறினேன். "டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே.." என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.

நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.

அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி

(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)