என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வருடத்தின் கடைசி நாளும் அதுவுமாக என்னை இப்படித் தவிக்கவிட்ட கொடுமை இந்த ஆண்டே கடைசியாக இருக்கட்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.. கசப்பும், இனிப்புமாக, காயமும் உடனடி மருந்துமாக கழிந்துவிட்ட இந்த நாளை நான் மறக்கவே விரும்புகிறேன்.
இப்போதுதான் இணையத்தின் முன்பாக வந்தமர்ந்தவுடன் தமிழ்மணத்தின் புதிய வசதிகளில் ஒன்றாக ரேட்டிங் என்னும் பிரிவைப் பார்த்தேன். அதில் எனது தளம் 2-வது இடத்தைப் பிடித்திருப்பதாக அத்தளம் சொல்கிறது. மிக்க மகிழ்ச்சி.
இதற்கான காரணம் தமிழ் வலைப்பதிவர்களையே சேரும். அவர்கள் அடியேனை இப்படி புரட்டு புரட்டு என்று புரட்டியிருப்பதினால்தான் இந்தத் தளத்திற்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
அத்தோடு கூடவே “ம்” என்ற ஓரெழுத்துப் பின்னூட்டத்திற்குக்கூட பொறுப்பாக “மிக்க நன்றிகள் நண்பரே..” என்று கேணத்தனமாகப் பதில் சொல்லி எனது பதிவை நானே சில எண்ணிக்கைகள் கூடுமளவுக்கு உருட்டிப் பெருக்கிக் கூட்டிக் கழித்திருக்கிறேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.
என் அளவுக்கு இணையத்தின் முன்பாக 18 மணி நேரம் அமர்ந்திருந்து அதில் 17.30 மணி நேரம் வலையுலகத்தையே நோண்டுகின்ற சம்பளத்துடன் கூடிய பணி மற்ற பதிவர்களுக்கும் கிடைத்திருந்தால் அவர்களும் நிச்சயமாக இதனைச் செய்திருப்பார்கள். ஆகவே இந்த எனது ரேட்டிங் புள்ளி விபரத்தைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நானே அதனைக் கொண்டாட முடியாது. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் கதைதான்..!
அதே சமயம் நல்ல, நல்ல பதிவுகள் கிடைத்தால் பதிவர்கள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்கிற ஒரு செய்திக்கு இது ஒரு உத்வேகமாகவும் இருக்கட்டும். எனது இனிய தோழர்கள் 'வினவு கூட்டமைப்பு' இந்த ரேட்டிங் முறையில் முதலிடத்தில் இருப்பது இதற்கான ஒரு சான்று. அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
தமிழ்மண நிர்வாகிகளை இந்தச் செயலுக்குக்காக வாழ்த்துகின்ற அதே நேரத்தில், இன்று எனது தளத்திற்கு நேர்ந்த ஒரு கொடூரத்திற்கு தயவு தாட்சண்யமே இல்லாமல் குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறேன்.
தமிழ்மணத்தின் கருவிப்பட்டை ஓட்டளிப்பு முறையில் விக்கிலீக்ஸ் கணக்காக ஓட்டையைப் போட்டு, ஆட்டையைப் போட்டு அதைக் கொண்டு வந்ததற்கான நோக்கத்தையே சிதைக்கின்ற அளவுக்கு மாற்றக் கூடிய ஒரு புரோகிராமைத்தான் தமிழ்மணம் இப்போதுவரையிலும் பயன்படுத்தி வருகிறது என்பது வருத்தத்திற்குரியது.
இப்படி மிக எளிதாக ஒரு நிமிடத்தில் பிளஸ் ஓட்டும், மைனஸ் ஓட்டும் போடக் கூடிய சூழலில் இருக்கின்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருவது பற்றி தமிழ்மணம் நிர்வாகத்தினர் இப்போதுவரையிலும் கவலைப்படாமல் இருப்பது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லை.
நண்பன் மாயவரத்தான் என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர் என்றுதான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்குத்தான் தெரிகிறது அவர் ரொம்பவே "நல்ல நல்ல நல்ல" நண்பரென்று..
இன்று எழுதிய கடைசி இட்லி-தோசை பதிவை முதலில் நள்ளிரவு 12.15 மணிக்குப் போட்டுவிட்டு டிவிட்டரில் இதற்கான லின்க்கை கொடுத்தபோது மாயவரத்தான் அங்கே வந்து மைனஸ் ஓட்டுப் போட ஒரு லின்க்கை ஒரு நிமிடத்தில் தயார் செய்து கொடுத்தார்.
அப்போதே நான் அதை தடுத்தேன். “இது வேண்டாம். விட்ருங்க..” என்றேன். அவர் கேட்கவில்லை. நான் என்ன சொல்லியும், நான் ஏதோ பைத்தியம்போல் உளறுகிறேன் எனவும், அவர் நகைச்சுவைக்காக நள்ளிரவில் கும்மியடிப்பதுபோலவும் நினைத்து மைனஸ் குத்துக் கிடைக்கும் சுருக்கமான லின்க்கை ட்வீட் செய்துவிட்டார்.
இது மைனஸுக்கான சுருக்க லின்க் என்பதறியாமல் பல ட்வீட்டர்கள் அதனை கிளிக் செய்துவிட மைனஸ் ஓட்டுக்கள் 6-ஐ தாண்டியது. மாயவரத்தானை கடிந்து கொண்டு கடுப்போடு அந்த எனது அந்த முதல் பதிவினை நீக்கிவிட்டு மீண்டும் அதே பதிவினை புதிதாக இட்டேன்.
காலையில் மீண்டும் டிவிட்டரில் வந்த மாயவரத்தான் எனது புதிய பதிவில் அவரைப் பற்றி “கோமாளித்தனமான” என்ற வார்த்தையால் குறிப்பிட்டதற்கு(வேறு எப்படி அழைப்பார்களாம்?) கோபப்பட்டு மீண்டும் அதேபோல் ஒரு சுருக்க லின்க்கை தயார் செய்து ட்வீட் செய்துவிட்டார்.
ட்வீட்டரில் இருந்த தோழர்கள் பலரும் ஆர்வக் கோளாறில் என்ன..? ஏது..? என்றுகூட கேட்காமல் கிளிக் செய்துவிட தமிழ்ப் பதிவுலக வரலாற்றிலேயும், எனது தளத்தின் வரலாற்றிலேயும் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய இட்லி-தோசை பதிவுதான் அதிக மைனஸ் குத்துக்களை வாங்கியிருக்கிறது.
மாயவரத்தான் ஏற்கெனவே இதேபோல் கோவை என்கவுண்ட்டரை எதிர்த்து நான் போட்டிருந்த இந்தப் பதிவிற்கும் இதேபோல் மைனஸ் ஓட்டுக்கள் கிடைப்பதுபோல் லின்க்கை தயார் செய்து ட்வீட்டரில்விட்டு அதன் மூலம் ஏராளமான மைனஸ்களை பெற்றுக் கொடுத்தார். இதில் அப்படியென்ன இவருக்குச் சந்தோஷம் என்று தெரியவில்லை..
அன்றைக்கு ஏதோ இவர் ஒருவர்தான் போடப் போகிறார் என்று நினைத்து "பிடிக்காவிட்டால் போட்டுக் கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான்.. போட்டுத் தாளித்துவிட்டார். எனக்கு அன்றைக்கு சுத்தமாகத் தெரியாது இந்த சாப்ட்வேரை உடைத்தெறிந்து டிவிட்டரில் இருந்தே மைனஸ் ஓட்டுக்களைக் குத்தலாம் என்று..?
இன்றைக்கு 50 மைனஸ்கள் வரும்போது மாயவரத்தானிடம் அந்த லின்க்கை நீக்கும்படி டிவிட்டரில் சொன்னேன். கேட்கவில்லை. இதுதான் கட்டற்ற சுதந்திரமாச்சே.. “உன்னால் முடிந்தால் தடுத்துக் கொள்” என்பதைப் போல் அவரது பேச்சு இருந்தது. எனக்கு அந்த அளவுக்குச் சக்தியில்லை. வேறு வழியில்லாமல் ட்வீட்டரில் அவரைத் தடை செய்துவிட்டு வந்துவிட்டேன். இதுதான் என்னால் முடிந்தது. என்னைப் போன்ற ஏமாளியினால் வேறென்ன செய்ய முடியும்..?
இதைத் தொடர்ந்து நமது பரமார்த்த குருவின் சிஷ்யர்கள் இருவரும் கூகிள் பஸ்ஸிலும், ட்வீட்டிரிலும் இந்த லின்க்கை பார்ப்போரிடத்தில் எல்லாம் கொடுத்து மைனஸ் ஓட்டைப் போட வைத்துவிட்டார்கள். இப்போதுவரையிலும் 105 மைனஸ் ஓட்டுக்கள்.. இதனால் இவர்களுக்கு என்ன திருப்தியோ, என்ன மகிழ்ச்சியோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது வருத்தமும், கண்ணீரும் இவர்களுக்குப் புரியுமா? தெரியுமா..?
நல்ல நாள்.. அதுவும் புது வருடத் துவக்கம் என்பதால் என்னால் மேற்கொண்டு அவர்களைப் பற்றிச் சொல்ல முடியவில்லை.
படித்துப் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று நினைத்துப் போட்டிருந்தால்கூட நிச்சயமாக நான் இப்படி கேட்க மாட்டேன். படிக்காமலேயே சக பதிவர்களை வம்படியாக ஒருவரின் பதிவில் மைனஸ் ஓட்டுக்களைப் போட வைத்து இவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கான காரணம்தான் என்ன..?
இதற்கான மூல காரணமான தமிழ்மண நிர்வாகிகளை இங்கே கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
விட்டால் ஒபாமாவுக்கே அட்வைஸ் செய்யும் அளவுக்கு புத்திசாலிகளான தமிழ்மணத்தின் இயக்குநர் சிகரங்கள்(நேர்ல வாங்கப்பூ.. வைச்சுக்குறேன்..) இப்படி மைனஸ், பிளஸ் ஓட்டுக்களை பதிவுக்கே வராமல், தளத்தையே ஓப்பன் செய்யாத நிலையிலேயே வேறு ஒரு புரோகிராமில் இருந்தும்கூட போடலாம் என்கிற அளவுக்கான ஒரு ஓட்டை சாப்ட்வேரை இதில் வைத்திருக்கலாமா..? இவர்களுடைய சாப்ட்வேர் நிச்சயம் தவறானதுதானே..? இந்த லட்சணத்துல இவங்க எல்லாருமே பொட்டி தட்டுறவங்கதானாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது..?
கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்தால் இன்னும் ஒரு 500 பேர் படிப்பார்களே என்கிற ஆதங்கத்தினாலும் வருங்காலத்தில் எனது பதிவைப் படிப்பவர்கள் இதனை எனக்கான தரைக்குறைவான நிலையாக கருதும் வாய்ப்பும் இருப்பதால்தான் இதனைச் சொல்கிறேன்.
அதே சமயம் முன்பே பல முறை இந்த ஓட்டளிப்பு முறையையும், சூடான இடுகை பிரிவையும் நீக்கும்படி மேன்மை தாங்கிய தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மடலும் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மணம் நிர்வாகத்தினர் அதனை இன்றுவரையில் ஏற்கவில்லை. ஓகே.. கம்பெனியின் முடிவு அது. அந்த நிறுவனத்தின் மூலம் நான் பயன்படுகிறேன் என்றால் நிறுவனத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பு நீக்கப்படும்வரையிலும் தமிழ்மணத்தின் வாசகன் என்கிற முறையில் அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனியாவது தமிழ்மண நிர்வாகிகள் இந்தக் கருவிப் பட்டையில் ஓட்டளிப்பது தொடர்பான சாப்ட்வேர்களைத் திருத்தியோ, சுருக்கியோ வேறு தளங்களில் இருந்து இதற்கு வாக்களிக்க முடியாதபடிக்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு அன்போடு வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற எளியவனால் இப்படித்தான் முறையிட முடியும்..
அந்த மூன்று நல்லவர்களுக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
|
Tweet |