ஐந்தாம்படை..! - சினிமா விமர்சனம்

24-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான பக்கா கமர்ஷியல் திரைப்படம்தான்.. புதுமை என்று எதுவுமில்லை.

ஐந்து அண்ணன், தம்பிகள். இதில் மூத்தவர் நாசர். அடுத்தவர் முகேஷ், மூன்றாவது தம்பிதான் பிரபாகரன் என்னும் சுந்தர்.சி. நான்காமவர் விவேக். ஐந்தாவது ஒரு டிவி நடிகர். எதிரணியிலும் அண்ணன், தம்பிகள் கூட்டம்தான். அதற்குத் தலைமை தாங்குவது தனுஷ்கோடி என்னும் அண்ணன்.

அண்ணன் ஒன்று என்றால் இரண்டாக இருந்தாலும் ஒன்றை ஒடித்துப் போட்டு ஒன்றாக்கிக் காட்டும் செல்லத் தம்பி சுந்தர்.சி. தெருவில் கோலம் போடும் இடத்தில் கதாநாயகியைப் பார்த்து ஜொள்ளிவிட்டு தனது காதலைத் துவக்குகிறார்.

அதே ஊரில் ஒரு திருவிழாவுக்காக நடனமாட வரும் நாட்டியத் தாரகையாக சிம்ரன். சுந்தரும், விவேக்கும் சிம்ரனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்ததால் கோபப்பட்டு தனது சலங்கையை கழட்டி எறிந்து இனி எப்போதும் நடனமாடப் போவதில்லை என்று சூளுரைக்கிறார் சிம்ரன்.

இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கப் போன நாசரை சிம்ரனின் பெரியப்பாவான தனுஷ்கோடி அண்ட் கோ அடித்துவிட கோபம் கொண்ட உடன்பிறப்புகள் சுந்தரும், விவேக்கும் சிம்ரன் வீட்டுக்குள் நுழைந்து ரகளை செய்கிறார்கள். பின்பு நாசரின் தலையிட்டீல் மன்னிப்பு கேட்டு உடைத்தவைகளை ஒட்ட வைக்க அங்கேயே தங்குகிறார்கள். தங்குவதற்கு இன்னொரு காரணம் சுந்தரின் காதலி அங்கே பரதம் பயில்வதுதான்.

உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் இருக்கும் சுந்தரின் இந்த பெவிகால் வேலையை பார்த்ததும் சிம்ரனுக்குள் காதல் கெமிஸ்ட்ரி உருவாகிறது. இதை அறியாத நாசர் தனது முதல் தம்பி முகேஷுக்கு சிம்ரனை பேசி முடிக்கிறார். திருமண நாளன்றுதான் தனக்கு ஜோடி முகேஷ் என்பது சிம்ரனுக்குத் தெரிய வருகிறது.

இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுந்தரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் சிம்ரன். சுந்தர் மறுத்துவிட.. சிம்ரன் வேறு வழியில்லாமல் முகேஷை திருமணம் செய்து கொண்டாலும் சுந்தரை பழி வாங்க பத்தினி சபதம் எடுக்கிறார்.

தனது பெரியப்பாவான தனுஷ்கோடி குடும்பத்தாருடன் கூட்டணி சேர்ந்து வாக்கப்பட்டு வந்த ஐந்து சகோதரர்கள் குடும்பத்தை டெர்ரராக்குகிறார். இரண்டு சகோதர குடும்பங்களுக்கும் என்ன மோதல் என்பது பிளாஷ்பேக்கில் கொட்டப்படுகிறது.

தனுஷ்கோடியின் தம்பிகளில் ஒருவரான ராஜ்கபூர் சாராயம் காய்ச்சுகிறார். அதைக் குடித்து சிலர் சிவலோகத்திற்கு கப்பல் ஏறிப் போய்விட.. நாசருக்கு பேசி முடிக்கப்பட்டிருந்த பிரபல சமூக சேவகி தேவயானி, அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டி ராஜ்கபூரை எதிர்க்கிறார். துணைக்கு சூப்பர் கொழுந்தன் சுந்தரும் வருகிறார். தனுஷ்கோடியும் தனது ஆதரவாளர்களுடன் வந்து ரகளை செய்ய.. போலீஸ் வர.. கலவரம் வெடிக்க.. அந்த ஊர் அல்லலோகப்படுகிறது.

“இனிமேல் இந்த ஊரில் சாராயம் காய்ச்ச மாட்டோம்..” என்று தனுஷ்கோடி சகோதரர்கள் கலெக்டர் முன்னிலையில் பாண்டு பேப்பரில் கை நாட்டு வைத்துவிட்டு வருகிறார்கள்.
ராஜ்கபூர் தனக்கு செருப்பு மாலை போட்டு, சாணித் தண்ணியைக் கரைத்து ஊத்தி அழகு பார்த்த தேவயானியை மனதில் நினைத்து கொதிக்கிறார்.

நாசர்-தேவயானி திருமணத்தில் இடையில் புகுந்து கலாட்டா செய்கிறார் ராஜ்கபூர். கோவிலுக்கு எதிரே நட்ட நடுரோட்டில் தேவயானியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார். தடுக்கப் பாய்ந்த நாசரை ராஜ்கபூர் வீச்சறிவாளால் வெட்ட வர.. அது அவர் கழுத்திலேயே பூமாராங்காக பாய.. ஸ்பாட்டிலேயே மண்டையை போடுகிறார் ராஜ்கபூர். நிமிடத்தில் தேவயானி பைத்தியமாகிறார். இத்தனை நாட்களாக அவர் தனுஷ்கோடியின் வீட்டில்தான் அடைந்து கிடக்கிறார்.
Back to the current story..

மணல் குவாரியை ஏலம் விடும் கவுரவப் போட்டியில் சிம்ரன் இரட்டை வேடம் போட்டுவிட, கான்ட்ராக்ட் தனுஷ்கோடியின் கைகளுக்குச் சென்றுவிடுகிறது. சிம்ரன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று விவேக்கும் தெரிந்து கொள்கிறார்.

சுந்தருக்காக அவளது காதலியை பெண் கேட்டு அந்த வீட்டுக்கு சிம்ரன் தலைமையில் குடும்பமே செல்ல.. அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகத்தான் தனுஷ்கோடியின் கடைசித் தம்பிக்கு அந்தக் காதலியை நிச்சயம் செய்துவிட்டு அந்த டீம் வெளியே வருகிறது. சிம்ரனின் சதி வேலைதான் இது என்று புரிந்து கொள்கிறார் சுந்தர்.

மறுநாளே திருமணம். “தனது காதலியின் கழுத்தில் நான்தான் தாலியைக் கட்டுவேன். அதையும் நீதான் எடுத்துக் கொடுக்கப் போற...” என்று பத்து லட்சத்து பத்தாயிரத்து பத்தாவது முறையாக ஹீரோ சுந்தர் சபதமெடுக்க சிம்ரன் “அதையும் பார்ப்போம்..” என்கிறார். கட்டுனாரா இல்லையான்றதுதான் கிளைமாக்ஸ்.

இது மாதிரி கமர்ஷியல் திரைப்படங்களில் அதிகமாக நடிப்புக்கு ஸ்கோப் இருக்காது. இது சுந்தர் படம் வேற.. ஸோ.. சுத்தமா சுந்தருக்கு இல்லே.. பாவம் அவரு.. ஏதோ அவரால வந்தவரைக்கும் நடிச்சு முடிச்சிட்டாரு..

சிம்ரன் இப்பவும் நல்லாவே டான்ஸ் ஆடுறாரு.. நிறுத்தி, நிறுத்தி வசனம் பேசுறாரு.. மத்தபடி முகம்தான் பார்க்கவே முடியாத கோலத்துல இருக்கு.. 60 ரூபா கொடுத்து உள்ள போனதால பார்த்துத் தொலைச்சுட்டோம்.. ஆனாலும் நடிப்பு.. அதேதான்.

ஹீரோயினா அதிதி. புது ஹீரோயின்னு புடிச்சா சம்பளத்தை கர்ச்சீப்புல சுருட்டிக் கொடுக்கலாம்ன்ற சுருட்டல் ஐடியாலதான் இந்தப் படத்துக்கு புது ஹீரோயின் என்கிறார்கள். நடிப்பு பரவாயில்லை ரகம். அடுத்து ஏதாவது படத்துல சான்ஸ் கிடைச்சு நடிச்சா பார்த்துக்கலாம்..
அடுத்தது தேவயானி. குஷ்புவின் சொந்தப் படம் என்றவுடன் பைசா வாங்காமல் ப்ரீ சர்வீஸாக நடித்துக் கொடுத்திருப்பதாக சுந்தரே சொல்லியிருக்கிறார். ஆனால் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். நடனமும் ஆடியிருக்கிறார். ஆக எப்படியோ பிள்ளை பெத்த இரண்டு ஹீரோயின்கள் டான்ஸ் ஆடியிருக்கும் திரைப்படம் எது என்ற மொக்கை கேள்விக்கு உதாரணமாகிவிட்டது இத்திரைப்படம்.

இசை இமான்.. ரீமிக்ஸ் என்கிற பெயரில் “ஓரம்போ.. ஓரம்போ ருக்மணி வண்டி வருது” என்கிற அட்டகாசமான பாட்டை குதறித் தள்ளியிருக்கிறார்கள். இதுக்கு புதுசா வேற பாட்டை போட்டிருக்கலாம். அப்படியொரு கொடுமை அது..

இன்னொரு பாடல் யாரோ ஒரு அம்மணியோ, ஐயாவோ.. குடிகார குரலில் மென்று ஏதோ ஒரு பாடலை பாடித் துப்பியிருக்கிறார். எப்படித்தான் கேக்குறாங்களோ தெரியலப்பா.. மற்றபடி சுந்தருக்கு ஒரு கஷ்டமும் இல்லை. பாட்டு சீன்லகூட ஜாலியா வர்றார்.. போறார்.. கூட ஆடுறவங்கதான் பாவம்..

சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுக்காரர் தடா போட்டுவிட்டார் போலிருக்கிறது. இந்த மட்டுக்கும் சந்தோஷம்.

சிம்ரனின் ஹஸ்பெண்ட்டாக வரும் முகேஷ் பேச்சிலேயே மலையாளம் தெறிக்க, தெறிக்கப் பேசுகிறார். சிம்ரனை பார்க்க ஆசைப்பட்டு அண்ணன், தம்பிகளுக்குத் தெரியாமல் தென்காசிக்கு ஓடி அல்லல்படும் காட்சியில் கொஞ்சூண்டு சிரிக்க வைக்கிறார். பாவம், மசாலா படத்துல வந்து மாட்டுனதால இதுக்கு மேல அவரால ஒண்ணும் பண்ண முடியல..

நாசர் அதேதான்.. அலுங்காம, குலுங்காம தேவயானிக்கு மாப்பிள்ளையா வந்து நடிச்சிருக்காரு. ரொம்ப நாள் ஆயிருக்கும் இவரு மாப்பிள்ளை கோலத்துல உக்காந்து..

சொல்லி வைச்ச மாதிரி பாட்டும், சண்டையும் மாறி மாறி வந்து போறதால திட்டவட்டமா இதுதான் கமர்ஷியல் பார்முலான்னு முடிவு பண்ணிக் கொடுத்திருக்காங்க.

கமர்ஷியல்ன்னு சொன்னாலும் சீன் போட வேண்டிய சீன்லயெல்லாம் சட்டு.. சட்டுன்னு பிளாஷை போட்டு சீனை பிரேக் பண்ணிட்டதால, டச்சிங் சீன்ஸ்கூட மனசுல நிக்க மாட்டேங்குது.

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை..

விவேக் மட்டும் இந்தப் படத்துல இல்லேன்னா..!

அவ்ளோதான்..!

மனிதர் நெல்லைத் தமிழில் புகுந்து விளையாடியிருக்கிறார்.. ஏதோ அவரால முடிஞ்சதையெல்லாம் செஞ்சு குஷ்பூவை காப்பாற்றியிருக்கிறார். வாழ்த்துவோம்.

பரத நாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ் அதே பெயரில் அதே குருவாகவே ஒரு சீனுக்கு மட்டும் வந்து சிம்ரனின் “இனி சலங்கையை கட்ட மாட்டேன்..” என்கிற சபதத்தை முறித்துவிட்டுப் போகிறார்.

கிளைமாக்ஸ் காட்சி திருப்பமாக மந்திரி ராதாரவியும் அவரது செட்டப்பாக குகிலி பாபிலோனாவும் வந்து செல்கிறார்கள். எவ்வளவோ செலவு செய்றோம்.. இதுனால என்ன ஆயிறப் போகுதுன்னு நினைச்சு நம்ம குஷ்பக்கா கடைசி நேரத்துல துட்டை வாரி இறைச்சிருக்கிற மாதிரி தெரியுது.

‘மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்திற்கு முன்பாகவே இப்படம் தயாராகி காத்திருந்தது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்ததாம். கேட்பவர்கள் ஏரியாவுக்கு ஏரியா அடிமாட்டு விலைக்கு கேட்க.. யாரிடமாவது மொத்தமாக படத்தை தள்ளிவிட நினைத்து காத்திருந்தார்கள்.

கடைசியில் கோடம்பாக்கத்தின் ஆஸ்தான சினிமா பைனான்ஸியர்கள் கை கொடுக்க.. படத்தினை ஐங்கரன் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டிருப்பதாகத் தகவல்.

பார்க்கவே வேண்டாத திரைப்படம் அல்ல.. பார்த்தே தீர வேண்டிய படமும் இல்லை..

போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!

டிஸ்கி : இடைவேளைல போட்ட ‘நந்தலாலா' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் ‘மிஸ் பண்ணவே கூடாத படம் அது' என்பது புரிந்தது.. காத்திருப்போம்..!

வெடிகுண்டு முருகேசன்..! - விமர்சனம்

24-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"சரியும், தவறுமாக வாழ்பவனின் வாழ்க்கை சரிதம்" என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் கதையை சந்தேகப்பட முடியவில்லை.

'நகைச்சுவை தர்பார்' என்று இதன் விளம்பரங்களிலும், பத்திரிகை செய்திகளிலும் அறிவிக்கப்பட்டுவிட்டதால் 'லாஜிக்' என்கிற வார்த்தையை புறம்தள்ள வேண்டியிருக்கிறது.

இது இரண்டையும் ஒதுக்கிவிட்டுவிட்டு பார்த்தால் இத்திரைப்படம் பார்க்கக் கூடிய திரைப்படமாகத்தான் எனக்குப் பட்டது.

பெட்டி கேஸ்களில் ஆள் கிடைக்காவிட்டால் அள்ளிப் போடுகிற பெர்மணன்ட் ஸ்டெப்னியாக ஊரில் வலம் வரும் அஞ்சாத சிங்கம் ‘வெடிகுண்டு' முருகேசன். அவ்வப்போது கோர்ட்டிற்கு வந்து பஞ்ச் டயலாக்குகளையும், கருத்துகளையும் தெளித்துவிட்டுப் போகும் இவன் ஒரு ‘கருத்து கந்தசாமி'.

படத்தின் துவக்கத்திலேயே இவனது அப்பா இவனைத் தலை முழுகிவிட்டதால் குடும்பம் பற்றிய பேச்சில்லை. நடுவில் இவனுடன் பள்ளியில் படித்து இப்போது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகத் திரியும் பொன்னியையும் உடன் வைத்துக் காப்பாற்றி அவளுக்கும் கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறான்.

அப்பாவின் தொந்தரவால் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குப் போயிருக்கும் நாச்சியார்தான் ஹீரோயின். அவ்வப்போது ஸ்டேஷனின் குற்றப் பதிவேட்டில் கை நாட்டு வைக்க வரும் முருகேசனை பார்த்து அருவருப்படையும் நாச்சியாருக்கு பொன்னி விஷயம்தான் மனதைக் கரைக்கிறது.. முருகேசனின் மீது காதலும் பிறக்கிறது.
ஊருன்னு ஒண்ணு இருந்தா வில்லனுக யாராவது இருக்கத்தான செய்வாங்க.. அண்ணன், தம்பியான இரண்டு வில்லனுக.. அதுல தம்பி கொஞ்சம் காமெடியும் பண்ணுவான். அந்தக் காமெடி தம்பி பண்ணின வில்லத்தனத்தால் பொன்னி கற்பிழந்துபோக ஆத்திரப்படும் முருகேசன் அவனை ‘கைமா' வாங்கி விடுகிறான்.

தம்பியின் ‘கைமா'விற்கு பதிலடியாக முருகேசனை ‘காவு' வாங்கத் துடிக்கிறான் அண்ணன். அண்ணனுக்குப் பயந்து ஜெயிலுக்குப் போகிறான் முருகேசன். “அங்கேயே போய் அவன் கதையை முடிக்கிறேன்” என்று பிளான் போட்டு அண்ணன்காரன் ஜெயிலுக்கு வர..

இருவரையும் ரிமாண்டுக்கு அனுப்பின பெண் நீதிபதி அதே நாளில் தடாலடியாக முருகேசனுக்கு ஜாமீன் கொடுத்து அவனை வெளியே அனுப்புகிறார்.

வெளியே வந்த முருகேசனை வெட்டி வீழ்த்த அடியாட்களை அனுப்புகிறான் அண்ணன்காரன். வருகின்ற ரெளடியான காமெடியன்களை காமெடியாகவே அடித்துவிரட்டுகிறான் முருகேசன். “எத்தனை நாளைக்குத்தான் பயந்து பயந்து சாகிறது. அவன் வூட்ல புகுந்து நியாயம் கேட்போம்..” என்று நினைத்து அண்ணன்காரனின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து அவன் அப்பன்காரனை ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்து நோயால் துடித்துக் கொண்டிருப்பவர்களைக் காட்டி ‘மனநல சிகிச்சை' செய்கிறான் முருகேசன்.

பொன்னிக்கு வயிற்று வலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு போய்ச் சேர.. அதே நேரம் அண்ணன்காரன் வெளியில் வந்து முருகேசனுக்கு ‘சுளுக்கெடுக்க' நினைக்கிறான். முருகேசனின் செண்ட்டிமெண்ட்டில் மனம் கரைந்த வில்லன் அண்ணனின் அப்பா, தனது மூத்த மகனையும் கரைக்கப் பார்க்கிறான். ஆனால் மருத்துவமனையில் முருகேசனை பார்த்த அண்ணன்காரன் அடியாட்களை ஏவ..

இங்கேதான் நிஜ சண்டை நடக்கிறது.. ஆனாலும் இறுதியில் செண்ட்டிமெண்ட் ஜெயிக்க.. பொன்னிக்கு குழந்தை பிறக்க.. நொடியில் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கிறார்கள்.
இவ்வளவுதான் கதை..!

முதலில் வித்தியாசமான ஸ்டில்களை வெளியில்விட்டு ஆழம் பார்த்தார்கள் தயாரிப்பாளர்கள். அதில் கவிழ்ந்தார்கள் சன் டிவியினர். தாங்களே படத்தினை வாங்கிக் கொள்வதாக உறுதியளிக்க இதையும் ஒரு பெரிய செய்தியாக்கி படத்தினை மேலும், மேலும் நகாசு செய்யத் துவங்கினார்கள்.

ஆனால் எடுத்தவரைக்கும் போட்டு பார்த்த பலரும் தங்களது உதட்டினைப் பிதுக்கி தலையை ஆட்ட சன் டிவி யோசித்தது. அதைச் சொல்லியே அங்கிட்டும், இங்கிட்டுமாக புரட்டி புரட்டி படத்தை எடுத்தவர்கள்.. படத்தில் இருந்த சில விஷயங்களாலேயே முற்றிலுமாக சன் டிவியின் வியாபாரத்தை இழந்தார்கள்.

'குவைத் ராஜா' என்கிற தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்தெட்டாவது வள்ளலின் பெருமையை அரை ரீலில் தேவையில்லாமல் சொல்லி வைக்க.. “ஆஹா.. இது நம்ம கவுரவத்துக்கு இழுக்காச்சே..” என்று கருதி சன் டிவி ஆப்பு வைத்துவிட்டது. 'குவைத் ராஜா' என்ற அந்த வள்ளல் பெருமளவு பண உதவி செய்திருப்பதனால்தான் படம் தயாரித்து முடிக்கப்பட்டது என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

எல்லாம் முடிந்த பின்பு “படம் ஒரே டிரையா இருக்கு..” என்ற பீலிங் அனைவருக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. பசுபதி வித்தியாசமான நடிகர்தான்.. நடிக்கத் தெரிந்த நடிகர்தான். ஆனால் மார்க்கெட்னு ஒண்ணு வேணுமே..? நம்ம சினிமாலதான் கருவாட்டு கடைக்கே விளம்பரம் வைச்சாக வேண்டியிருக்கே.. அதான் வடிவேலு கடைசியாக எண்ட்ரியானார். அவரை வைத்து தனி காமெடி டிராக்கை வைத்து எடுத்து முடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் நக்கல், நையாண்டியை அள்ள அள்ள குறையாத அளவுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் மூர்த்தி. கொஞ்சம் விவரம் தெரிந்த இயக்குநராக இருக்கிறார் போலும்..

ஊரில் வீதி வீதியாக டிரெம்களில் தண்ணீர் எடுத்து விற்கும் முருகேசனின் கையில் தமிழகத்தில் வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகள் அனைத்துமே தவழ்கின்றன. ‘காலச்சுவடிற்கு' பல காட்சிகளில் இலவச விளம்பரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். இது மாதிரியான ஒரு காமெடி திரைப்படத்தில் குறியீடுகளை காண்பது ஆச்சரியம்தான். இதில் நான் பார்த்தவகையில் அதுதான் நடந்திருக்கிறது.

‘காலச்சுவடு' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் முருகேசனுக்கு வலிப்பு வந்து துடிக்கிறான். “அப்போது ஏன் அந்தப் பத்திரிகை..?” என்றுதான் தெரியவில்லை. அதே போல் ஒரு பாடல் காட்சியில் பல இலக்கியப் பத்திரிகைகள் மாறி, மாறி அவன் கைகளில் தென்படுகிறது. தெருவில் கழைக்கூத்தாடும் சிறுமியைக் காட்டும்போது பின்புலத்தில் கம்யூனிஸத்தின் சின்னத்தை கொடிமரத்துடன் காட்டுவதுகூட குறியீடு என்றே நினைக்கிறேன்.

“தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடையை திறந்து வைச்சுட்டு ‘குடிக்காதடா..' ‘குடிச்சுட்டு ரோட்டுல நடக்காதடா'.. ‘ஏண்டா குடிக்கிறே'ன்னுல்லாம் கேட்டா எப்படி ஸார்..?” என்று போலீஸாரிடம் முருகன் கேட்டபோதே இயக்குநர் வித்தியாசமானவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

கோர்ட்டில் பெட்டி கேஸிற்காக ஒவ்வொரு தடவையும் வந்து நிற்கும்போதும் கருத்து கந்தசாமியாக பொங்கி எழுவதைப் பார்த்தால் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும் போல் உள்ளது.

கடைக்கு வந்த சிறுமியை சணல் வாங்க அனுப்பிய கடைக்காரரை சிறுமியின் அப்பா கடிந்து கொள்ளும்போது முருகேசன் சொல்லும் அறிவுரைக்கு அடடா.. என்ன கை தட்டல்ங்குறீங்க..? இயக்குநர் ஸார்.. வாழ்த்துக்கள்..

முருகேசனான பசுபதி காமெடிக்கு புதியவர் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முடிந்த அளவுக்கு பேசியிருக்கிறார். நடிக்க வேண்டிய கட்டாயம் இதில் இல்லை என்பதால் இயல்பாக தோன்றி, கஷ்டமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். வேறென்ன சொல்ல..?

ஹீரோயின் நாச்சியாராக ஜோதிர்மயி.. இந்த நடிகையை இவ்வளவு அசிங்கமாக இதுவரையில் எந்தத் திரைப்படத்திலும் காண்பிக்கவில்லை. எந்தக் கோணத்திலெல்லாம் இவர் அசிங்கமாக தெரிவாரோ அந்தக் கோணத்திலேயே எடுத்துத் தொலைத்திருக்கிறார் இயக்குநர். கண்றாவி.. போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லை.

இயக்குநர்தான் என்ன செய்வார்..? ஹீரோ பசுபதி என்றவுடன் பல நடிகைகளும் ஜகா வாங்கி ஓடிவிட.. இவர் மட்டுமே ஓகே சொல்லியிருக்கிறார். அவர் கஷ்டத்தையும் நாம பார்க்கணுமில்லே.. நடிக்க வாய்ப்பு கொடுத்தமைக்காக பாடல் காட்சிகளில் கொஞ்சம் வஞ்சகமில்லாமல் காட்டியிருக்கிறார்.
கல்யாணமான நடிகை ஒருவர் இந்த அளவுக்கு ‘ஓப்பன் சோர்ஸாக' திரைப்படத்தில் நடிப்பது இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இவருடைய கணவருக்கு, தமிழ்த் திரையுலக ரசிகர்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தப் பொன்னி என்ற கேரக்டர் எப்படி படம் முழுவதும் தனது பைத்தியக்காரனமான சேட்டைகளைத் தொடர்ந்திருக்கிறார் என்பது ஆச்சரியம்தான்.. நன்றாகத்தான் நடித்திருக்கிறார்.

வில்லன் அண்ணனாக நடித்திருக்கும் வீராவிற்கு ரசிகர் மன்றமே உள்ளதாம். நமக்குத் தெரியாம போச்சு பாருங்க.. தட்டியெல்லாம் வைச்சு தியேட்டரை அமர்க்களப்படுத்திருக்காங்கப்பா.. ஆனாலும் ஓவரா கத்தி, கத்தி நம்ம காதை இன்னும் கொஞ்சம் செவிடாக்கிட்டாரு..

அடுத்து நம்ம வைகைப் புயல் வடிவேலு.. தனிக்காட்டு ராஜா போல அடி வாங்கியே நம்மை சிரிக்க வைக்கிறார். அவரை அடித்தால் நமக்கு சிரிப்பு வருகிறதே.. ஏன் என்று எனக்குத் தெரியலை..? ஆனா அவர் அடி வாங்குறதை பார்த்தா பாவமாவே இருக்க மாட்டேங்குது.. அதுனால அண்ணன் இது போல நிறைய அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கட்டும்.

ஹோட்டலில் சாப்பிடும்போது “ஈ செத்துக் கிடக்கு..” என்று சொல்லி ஒருவர் டான்ஸ் ஆட.. “மீன் செத்துக் கிடக்கு.. கோழி செத்துக் கிடக்கு.. இறால் செத்துக் கிடக்கு.. கோழிக் குஞ்சு செத்துக் கிடக்கு..” என்று ஒவ்வொன்றாகச் சொல்லி அவரை மடக்கும் இடத்தில் “ச்சே.. இத்தனை நாளா நாமளும் கதை யோசிக்கிறோம்.. இப்படி ஒரு வசனம் நமக்கு சிக்கலையே?”ன்னு வெட்கமாத்தான் இருக்கு.. நல்லதொரு காமெடி டிராக்..

தொலைக்காட்சி செய்தி வாசிப்புகளில் ஒரு தனி ஆவர்த்தனமே செய்து கொண்டிருந்த நிர்மலா பெரியசாமி, இதில் தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். பெண் நீதிபதி வேடம். கண்ணாடி அணிந்திருந்ததால் முதலில் அடையாளமே தெரியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில்தான் அம்மணி யாரென்று தெரிய வந்தது.. செய்தி வாசிப்பை போலவே பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அப்படியில்லாமல் சினிமா தமிழிலேயே பேசி என்னை ஏமாற்றிவிட்டார். ஆனாலும் என்ன..? அடுத்த அம்மா கேரக்டருக்கு ஆள் ரெடி..

படத்தின் பாடல் வரிகளில் இலக்கிய வாடை அதிகம் அடித்துள்ளது. அதிலும் சாரல் சாரல் பாடலை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் பாடல் காட்சியை எடுத்தவிதம் சராசரி திரைப்படத்தின் காட்சி போல் ஆகிவிட்டதால் பரபரப்பில்லாமல் போய்விட்டது.

இரண்டு பாடல்களுக்கு கேட்க விரும்புவதைப் போல இசை அமைந்துள்ளது. ஆனால் வெடிகுண்டு முருகேசன் பாடலில் இசைக் கருவிகளின் அதீத ஒலியில் வரிகள் தொலைந்து போய்விட்டது ஒரு குறை. ம்.. எந்தப் படத்துலதான் இந்தக் குறை இல்லை..

படத்தின் துவக்கத்தில் படம் பார்க்க வந்தவர்களை விசில் அடிக்கச் சொல்லியும், கை தட்டச் சொல்லியும் சிச்சுவேஷனை உருவாக்கியிருக்கும் இயக்குநர் படத்தின் இறுதியிலும் பெல் அடிக்கச் சொல்லி படத்தினை முடித்து நம்மை அனுப்பியிருக்கும் அந்த இணைப்புக் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நகைச்சுவை தர்பார் எனில் இப்படித்தான் இருக்க வேண்டும்..

நீள, நீளமான அறிவுரைகள் சில சமயங்களில் அலுப்புத் தட்டினாலும் அதில் இருக்கும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் வசனகர்த்தாவான இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடச் சொல்கிறது.

இது போன்று நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து படங்கள் நிறைய வர வேண்டும். இப்போது தமிழ்ச் சினிமாவுலகில் நகைச்சுவை திரைப்படங்களுக்குத்தான் மெகா பஞ்சம். சீரியஸ் டைப் திரைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு வித்தியாசமாக அமைய, திரைப்படங்களுக்கு போக வேண்டிய ஆர்வம் அதன் ரசிகர்களுக்கு சற்று கூடும் என்று நினைக்கிறேன்.

கிளைமாக்ஸ் செண்ட்டிமெண்ட்டால் பெரும் ஏமாற்றம் கிட்டினாலும், எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் எனக்கு ஓரளவுக்கு மன நிறைவையே தந்தது..

இயக்குநர் மூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள்.

டிஸ்கி : கிளைமாக்ஸ் காட்சியில் பொன்னிக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் ‘நடிப்புத் தாரகையை' இதற்கு முன் திரைப்படங்களில் பார்த்திருப்பவர்கள் “எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி..!

வணக்கம்!

ஒரு நட்பு முறிந்த சோகக் கதையைக் கேளுங்க..!

21-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ரொம்ப நாளாக தொடர்பு கொள்ளாமல் இருந்த தம்பி சக்தி(புனை பெயர்) இன்று காலை திடீரென்று தொடர்பு கொண்டு தடித்த வார்த்தைகளால் கதறினான்.

“அண்ணே.. நம்ம கோபி(புனை பெயர்) இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே.. மானம், மரியாதை போச்சுண்ணே.. வீட்ல வொய்ப் திட்டித் தீர்க்குறா.. போன் மேல போன் வருது.. மாமனார் ஊர்ல இருந்து கிளம்பிட்டாராம்.. மாமியாரே நொச்சுப் பிடிச்சாப்புல பேசுறாங்க.. இவனுக்கு ஏண்ணே இந்த வேலை..? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிட்டு வர வேண்டியதுதாண்ணே..” என்றான்.

இவனது போனை எதிர்பார்த்து நான் காத்திருந்ததால் எனக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இவனும் இவனது சார்பு கதையை முழுதாகச் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே இவனும் அவனது கதையைச் சொன்னான்.

அதற்கு முன்பாக இருவரின் கடந்த கால வாழ்க்கைக் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். கோபியும், சக்தியும் நீண்ட கால குடும்பத்து நண்பர்கள். இருவர் வீடும் அடுத்தடுத்தத் தெருக்களில்.. ஒரே பள்ளியில் ஒன்றாகவே படித்து வளர்ந்தவர்கள். பள்ளி நாட்களில் சக்தியின் வீட்டில் சமைக்கவில்லையெனில் அவன் நேராக கோபியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் சோத்தையும் அங்கேயே கட்டி பார்சல் செய்து எடுத்துச் செல்வான்.

அதேபோலத்தான் கோபியும். தன் வீட்டுக்கு காய்கறி வாங்கப் போகும்போது அவர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ சக்தியின் வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களிடமும் லிஸ்ட் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பான். இருவர் குடும்பமும் இந்த அளவுக்கு அன்னியோண்யம்..

காலம்தான் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி படைத்ததே.. கோபி படிப்பில் பின் தங்கி தனது அப்பாவின் மரக்கடையை பார்த்துக் கொள்ளச் சென்றான். சக்தி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்து சென்னைக்குச் சென்றுவிட்டான்.

அதன் பின்னர் சக்தியின் குடும்பத்தில் ஒருவனானான் கோபி. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவன்தான் செய்வான். சக்தியின் அப்பாவும், அம்மாவும் டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தபோது தனது மரக்கடையைக்கூட விட்டுவிட்டு பக்கத்திலேயே இருந்து மகனைப் போல பார்த்துக் கொண்டான் கோபி.

சக்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வந்து பார்த்துவிட்டு செல்வான். சக்திக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் வயதான அவனது தாய், தந்தையர்க்கு செய்ய வேண்டிய அனைத்துவித உதவிகளுக்கும் அப்போதிலிருந்து கோபிதான் கை கொடுத்து வந்தான்.

சக்தி வேளச்சேரியில் சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்க முனைந்தான். பிளாட்டை விற்க வந்தவர் முன்பணமாக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் பிற்பாடு மீதித் தொகையை தவணையில் வாங்கிக் கொள்ளத் தயார் என்றார். உடனேயே விழுந்தடித்து ஊருக்கு ஓடி வந்த சக்தி கோபியிடமும், அவனது தந்தையிடமும் பேசி எட்டு லட்சம் ரூபாயை பைசா வட்டியில்லாமல் வாங்கிச் சென்று வீட்டை பேசி முடித்து குடியேறினான்.

வீடு கிடைத்தவுடன் அவனாகவே பெண் தேடினான் சக்தி. அவனது அலுவலகத்திலேயே வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்தான். திருமணம் செய்ய அவனது அப்பா, அம்மாவிடம் கேட்க அனுமதி மறுத்தார்கள். முடியவே முடியாது என்று சாதித்தார்கள்.

இப்போதும் கோபிதான் கை கொடுத்து அவனுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து அவனை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னான். சக்தியின் பெற்றோரை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். சக்தியும் தனது நண்பர்கள் உதவியோடு சென்னையில் தனது காதலியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டான். இது நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

சக்தியின் பெற்றோரோ அவன் தங்களைப் பார்க்க வரவேகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அங்கே அவர்களுக்கு கோபியே போதும் என்று அவர்கள் சொல்லிவிட இப்போது சக்திக்கு கோபியின் மீது ஒரு இனம் புரியாத கோபம் முளைத்துவிட்டது. ஆனாலும் இருவரும் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

சமீபத்தில்.. அதாவது நேற்றைய தினம் காலை கோபி சென்னைக்கு விஜயம் செய்திருக்கிறான். தொழில் விஷயமாக புதுப்பேட்டை பகுதிக்கு வந்தவன், அங்கேயிருந்து கால்டாக்சியில் வேளச்சேரியில் சக்தியின் வீட்டுக்கு வந்திருக்கிறான் கோபி.

அவன் வந்த நேரம் பாருங்க.. சக்தியின் துணைவி வீட்டின் முன் கதவை லேசாகத் திறந்துவைத்துவிட்டு துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக வீட்டின் பின்புறமாகச் சென்றிருக்கிறார். அந்த வீடுதான் என்பதை சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்ட கோபி விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட்டியை வைத்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்த கடமை இருந்ததால் அதற்கு சென்றிருக்கிறான்.

இவன் உள்ளே போன நேரம் சக்தியின் துணைவி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பாத்ரூமில் தண்ணி கொட்டுவதை பார்த்து திகைத்திருக்கிறார். லேசாக பயந்து போய் வெளியில் வந்து நின்று பார்க்க நம்ம கோபியண்ணன்.. அலட்சியமாக அறைகளை நோட்டம் விட்டபடியே சமையல்கட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்.

என்ன.. ஏதுவென்று யோசிக்க முடியாத சக்தியின் துணைவி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல.. அவர்கள் ஐடியாபடி கதவை இழுத்து வெளிப்புறமாகச் சாத்தியிருக்கிறார்கள். திருடன் ஒருவன் வந்திருக்கிறான் என்று திடமாக நம்பி போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள்.

அதற்குள்ளாக வீட்டின் உள்ளேயிருந்த சிட்அவுட் பக்கம் போய் நின்று கொண்டு கோபி ரிலாக்ஸாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க.. ஒட்டு மொத்த பிளாட்டும் அந்த பக்கமாக வந்து அவனை வேடிக்கை பார்த்திருக்கிறது.

அவனுக்குள் ஏதோ ஒன்று சந்தேகப்பட வேகமாக வந்து கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். முடியவில்லை. ஏதோ சந்தேகப்பட்டவன் சிட்அவுட் பக்கம் வந்து நிற்க.. அவன் தப்பிக்க முயல்வதாக நினைத்து கீழே நின்றிருந்த அப்பாவி பொதுஜனங்கள் கைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு தயாராக நிற்க.. பயலுக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.

மக்களின் நண்பனான காவல்துறை மின்னல் வேகத்தில் வந்திருக்கிறது. காவல்துறை வந்து கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்த இரண்டு காவலர்களைப் பார்த்து கோபி திகைத்துப் போய் நின்றிருக்கிறான். தான் சக்தியை பார்க்க வந்ததாகவும், தான் அவனது நண்பன் என்றும் ஊரிலிருந்து வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறான்.

காவல்துறை நம்பாமல் அவனது செல்போனில் இருந்து சக்திக்கு போன் செய்து சொல்லியிருக்கிறது. இடையில் சக்தியின் மனைவியிடம் போலீஸ் கோபியிடம் பேசும்படி சொல்ல “அவர் யாருண்ணே தெரியாது. நான் எப்படி பேசுறது.. என் ஹஸ்பெண்ட் வரட்டும்.. அவரே பேசுவாரு..” என்று சொல்லிவிட கோபிக்கு அவமானத்துடன் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துவிட்டது.

ஒட்டு மொத்த பிளாட்டும் உள்ளே வந்து “கதவு திறந்திருந்தா உள்ள வந்தர்றதா..? யார், என்னன்னு கேட்க வேணாமா? என்னய்யா நினைச்சிட்டிருக்க..? என்ன படிச்சிருக்க..” என்றெல்லாம் தாறுமாறான கேள்விகளோடு பயலை எகிறிவிட்டன.

சக்தி அரக்கப் பரக்க ஆட்டோவில் வீடு திரும்பியவன் கோபியை தனது நண்பன் என்று போலீஸிடம் அடையாளம் காட்ட.. போலீஸ் கோபியை லேசாக முறைத்துவிட்டு கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டுப் போனார்கள்.

சக்தியின் மனைவி ஒரு வார்த்தைகூட பேசாமல், ஸாரி என்றுகூட சொல்லாமல் பெட்ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள.. கோபிக்கு தன்மானம் பொங்கிவிட்டது. சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு அப்படியே தரையிரங்கி கோயம்பேட்டுக்கு ஆட்டோ பிடித்துவிட்டான்.

சக்திக்கு தனது மனைவியை சமாதானப்படுத்துவதா.. அல்லது கோபியை கூல் செய்வதா என்ற கவலையில் மனைவி மீது பாசம் அதிகமாகி வீட்டுக்குள்ளேயே இருந்துவிட.. இதுவும் கோபிக்கு கொஞ்சூண்டு வெறியை ஏற்படுத்திவிட்டது.

“முப்பது வருஷ நட்பு முப்பதே நிமிஷத்துல குழி தோண்டி புதைச்சுட்டாண்டா..” என்று ஒரு புல் ஓல்டு மாங்க் அடித்துவிட்டு என் குறை காதும் கிழிவதைப் போல் அழுதான் கோபி.

அவன் பேசிய பின்புதான் நம்ம சக்தி தம்பியும் என்னுடன் பேசி “கோபியை கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே..” என்கிறான்.

“ஏண்டா வெங்காயம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிருக்கீங்களே.. உன் ஆரூயிர் நண்பன்னு அவனைப் பத்தி நல்லவிதமா உன் வொய்ப்கிட்ட சொல்லி வைச்சிருக்கலாம்ல.. லவ் பண்ணும்போதோ, கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடியோ வொய்ப்கிட்ட போன்ல பேச வைச்சிருக்கலாம்ல..”ன்னு கேட்டேன்.

“நம்ம கோபிய பத்திதான் உனக்கே தெரியுமேண்ணே.. ஏதாவது உளறினாலும் உளறிருவான்னு நினைச்சுத்தான் தவிர்த்துட்டண்ணே..” என்று அராஜகத்தனமாகவே சொல்கிறான் சக்தி.

கோபியோ, “நான் செஞ்சது தப்புதாண்ணே.. தப்பாவே இருக்கட்டும். நான் கீழ இறங்கி வந்துட்டனே.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை பின்னாடி வந்து பேசியிருக்கலாம்ல.. அஞ்சு நிமிஷம் நின்னு பார்த்தேண்ணே.. வரலைண்ணே அந்த நாயி.. அதான் நம்ம பொழைப்பை பார்க்கலாம்னு திரும்பி வந்துட்டேன். போதும்ணே அவன் சகவாசம். உணர்த்திட்டாண்ணா படிச்சவனோட பிரெண்ட்ஷிப்புன்னா என்னன்னு..? நான் படிக்காத முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்..” - நடு மண்டையில் அடிப்பதைப்போல் ஒரு போடு போடுகிறான் கோபி.

இப்போது சக்திக்கு இது வேறு விதமாகத் திசை மாறி எட்டு லட்சம் ரூபாய் மேட்டரில் தனக்கு ஆப்பு வருமா என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது..

எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இரண்டு பேரும் மாறி, மாறி “நீ பேசு.. நீ பேசுண்ணே..”ன்னு சொல்லி என் உயிரை எடுப்பதில் பொங்கி வந்த கோபத்தில் இதையும் டைப்பு செய்து தொலைத்துவிட்டேன். நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..

அட்வைஸாவது மண்ணாவது.. !

இரண்டு பேர்கிட்டேயும் “ஒரு தெலுங்கு படத்தோட டிஸ்கஷனுக்கு ஹைதராபாத் போறேன்.. ஒரு வாரத்துல வந்திருவேன்.. வந்தவுடனே நேர்ல வந்து பேசுறேன்.. அதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருங்க. வந்து பேசிக்கலாம்...”னு சொல்லி வைத்திருக்கிறேன்.

உண்மையா ரெண்டு பேர்கிட்டேயுமே நான் எதையும் பேசப் போறதில்லை. அப்படியே விஷயத்தை ஊறப் போட்டு, ஆறப் போட்டுட்டு லூஸ்ல விட்டுற வேண்டியதுதான்..

ஏன்னா இந்தக் காலத்துப் பயலுகளை நம்பவே முடியாது.. எந்த நேரத்துல எப்படி கோஷ்டி சேருவாங்க.. எப்ப அத்து விடுவாங்கன்னே தெரியலை.. நமக்கெதுக்கு வம்பு..?

நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!

இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..


ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!

என்ன நான் சொல்றது..?

வேலுபிரபாகரனின் காதல் கதை..! ஒரு காம விமர்சனம்..!

17-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என் நேரம் கெட்டதோ.. அல்லது உங்க நேரம் நல்லதோ தெரியலை.. திடீர்னு என்னோட இந்த ஒரு பதிவு மட்டும் தமிழ்மணத்துல சேர மாட்டேன்னு அடம் புடிக்குது..

ஒரு வேளை காமமான படத்தைப் பத்தி காமமான முறைல விமர்சனம் எழுதியிருக்கேன்ல.. அதனால இருக்கலாம்..!

அதுனால இப்படி ஒரு சுருக்க வழில சொல்றேன்..

கீழ இருக்கிறது லின்க்கு..

படிச்சுப் பாருங்க..!

"வேலுபிரபாகரனின் காதல் கதை..! ஒரு காம விமர்சனம்..!"

வேலுபிரபாகரனின் காதல் கதை..! ஒரு 'காம' விமர்சனம்..!

17-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எவ்ளோ நாளாச்சு.. இது மாதிரி தியேட்டர்ல சுத்தமா பெண்களே இல்லாமல் ஆண்கள் மட்டும் தனித்திருக்க ஒரு தமிழ் படம் பார்த்து.. வருஷக்கணக்கா ஆச்சுங்க.. கடைசியா பரங்கிமலை ஜோதில பார்த்தது.. இன்றைக்கு மீண்டும்..

“பெண்களைப் புனிதமாகவும், தெய்வமாகவும் கொண்டாடும் இந்தத் தேசத்தில்தான் கள்ளக்காதலும், அது தொடர்பான கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. பாலியல் நோய்கள் மிக அதிக அளவில் தொற்றியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் பெண்களின் உடலை நாம் பொத்தி, பொத்தி பாதுகாத்து மறைத்து வைத்திருப்பதால்தான். அவைகள் வெளிப்படையாக இருந்துவிட்டால் நம் நாட்டில் காமத்தை அடிப்படையாகக் கொண்ட காதல்களும், காமமே முதல் என்கிற வார்த்தையும் அடிபட்டுப் போய்விடும்..” என்கிறார் வேலுபிரபாகரன்.

இதனை மையமாக வைத்தே திரைப்படம் எடுத்திருப்பதாகச் சொல்லும் வேலுபிரபாகரன் எடுத்திருப்பது என்னவோ தனது சொந்தக் கதையைத்தான்.. இதனால்தான் “காதல் அரங்கம்” என்கிற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பெயர் சென்ஸார் சர்டிபிகேட்டில், “வேலுபிரபாகரனின் காதல் கதை” என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.



ஆனால் ஊடாக தமிழ் சினிமா ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டி காதலுக்கு இடையூறு தரும் ஜாதியையும், அதனை எதிர்த்து போராடித் தோற்கும் காதலர்களையும், வேலைக்காரனின் மனைவியை காதலியாக்கும் ஜமீன்தார்களையும், அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் ஆண்களையும் ஒன்று சேர்த்து ஒரு 'கூட்டுக் கலவி'யைக் கொடுத்திருக்கிறார்.

'முதலில் எழுவது காதலே அல்ல.. காமம்'தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் வேலு இதற்கு உதாரணமாக தனது சொந்த வாழ்க்கையை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்துவிட்டு 'ஆபாசமாக இருக்கிறது' என்கிற குற்றச்சாட்டால் அதனை திரையிட முடியாமல் தவிக்கிறார். விஷயம் கோர்ட்டுக்கு வருகிறது. 'அதிகமான ஆபாசமான காட்சிகள் உடையது அவருடைய திரைப்படம்' என்பது எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் வாதம். 'காமமா, காதலா..?' என்று நீதிமன்றத்தில் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டு வெளியே வருபவரை டாடா சுமோவில் வரும் ரெளடிகள் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேலுவின் நினைவுகளில் இருந்து திரைப்படம் விரிந்து செல்கிறது ஒரு கிராமத்திற்கு.. தன் படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பார்க்கச் செல்லும் கிராமத்தில் தான் பார்த்த ஒரு காதலர்கள் கதையைத்தான் பகுதி, பகுதியாகச் சொல்கிறார். அவரைச் சந்திக்க வந்த பத்திரிகை பெண் ரிப்போர்ட்டர் மூலமாக அவரது இந்தக் கதை போலீஸாருக்கும் தெரிய வருகிறது. நமக்கும்தான்..

வழக்கம் போல மேல் சாதி, கீழ் சாதி காதலர்களுக்குள் காதல் பிறக்கிறது. ஆனால் காதல் தீ பற்றிக் கொண்ட பிறகு இருவருக்குமிடையில் காமம்தான் தலைவிரித்தாடுகிறது.


அதே ஊரில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கும் ஒரு வாத்தியாருக்கு பள்ளிப் பருவத்திலேயே குழந்தையை பெற்றுவிட்டு வாழாவெட்டியாக இருக்கும் தங்கம் என்னும் பெண் சமைத்துப் போட்டு தன் வயிற்றையும், பிள்ளையையும் காப்பாற்றி வருகிறாள். இந்த வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுப்பதைவிட, நம் 'இன' வழக்கப்படி தங்கத்தைக் கவிழ்ப்பதிலேயே குறியாக இருக்கிறான்.

காதலனின் அப்பன் ஒரு காமாந்தக்காரன். அதே சமயம் சாதி வெறி பிடித்தவனாகவும் இருக்கிறான். தங்கத்தின் அண்ணன் மனைவியை சமயம் கிடைக்குபோதெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இங்கேயும் காமம் 'பொங்கி வழிகிறது'. தங்கத்தின் அண்ணன் தனது மனைவியின் இன்ப லீலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாத அப்பாவி கணவனாக அதே ஜமீன்தாரிடம் வேலை பார்த்து வருகிறான்.

இந்தக் காதலர்களுக்கு தங்களது ஊர் நிலைமையைப் பற்றி நன்கு தெரிந்துபோய் “இனி நோ கல்யாணம்.. நேரா மேல போயிரலாம்..” என்று பாலிடால் டப்பாவை வாங்கி கையில் வைத்துக் கொண்டு உருகுகிறார்கள். பொண்ணோ “சாகத்தான் போறோம்.. கடைசியா என்னையவே தர்றேன்.. எடுத்துக்க..” என்று உருகிப் போய் முந்தானை விரிக்கிறாள். காமம் இங்கே 'பரதநாட்டியமே' ஆடுகிறது.

ஆளுக்கு ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயில் திணிக்கப் போகும்போது வேலு உள்ளே வந்து ஆட்டையைக் கலைத்து விடுகிறார். “துணிஞ்சு நில்லுங்க. சொந்தக் கால்ல நிக்குறவரைக்கும் போராடுங்க..” என்று உசுப்பிவிட்டுப் போகிறார்.



தங்கத்தை கவிழ்க்க நினைத்த வாத்தியான் கடைசியில் திட்டம் போட்டு கவிழ்த்துவிடுகிறான். “என் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சவுடனே நம்ம கல்யாணம்தான்..” என்று சொல்லிச் சொல்லியே இழுத்து, இழுத்து 'வேலை'யை முடிக்கிறான். நம்ம பய புள்ளைகளுக்கா சொல்லித் தரணும்..? இங்கே காமம் 'குச்சுப்பிடி நடனம்' ஆடியிருக்கிறது. வாத்தியார் சும்மா இல்லாமல் அனைத்துவித காமக்கலைகளையும் இந்த அப்பாவி பெண்ணிடம் போட்டுக் கொடுத்து வாங்கி அனுபவிக்கிறான்.

தங்கத்தின் அண்ணியும் ஜமீன்தாரிடம் மெழுகுவர்த்தியாய் கரைகிறாள். 'ஆஸ்தா' திரைப்படத்தைப் போல் கலைக்கண்ணாக எடுத்திருக்கும் இந்தக் காட்சியிலும் காமம் 'கதகளி' ஆடியிருக்கிறது. எவ்ளோ நேரம்தான் ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாடுறது.. நோகாம நொங்கெடுக்க ஐடியா போடுகிறார் ஜமீன்தார். “உன் புருஷனை கொலை பண்ணிர்றேன்..” என்கிறார். பத்தினி தெய்வமான மனைவியோ, “நாம மாட்டிக்க மாட்டோமே..” என்கிறாள். இங்கதாங்க ஒரே கைதட்டல்.

ஊரில் தன்னை எதிர்த்து வரும் கீழ்சாதிக்கார ஒருவனை தங்கத்தின் அண்ணனிடம் மோதவிடுகிறார். சண்டையில் தோற்கும் தங்கத்தின் அண்ணனை சேரிக்கார தோழர் பெருந்தன்மையாக விட்டுவிட சோர்வுடன் வீடு திரும்புகிறான் தங்கத்தின் அண்ணன். அவன் வீட்டின் உள்ளே ஒரு ஜமீன்தாருக்கும், அவன் மனைவிக்கும் இடையே பெரிய 'காமப்போராட்டமே' நடந்து கொண்டிருக்கிறது. அரிவாளை எடுத்துக் கொண்டு மனைவியை வெட்டப் போக.. ஜமீன்தார் அவனை வெட்டி கதையை முடிக்கிறார். காமம் கண்ணை மறைத்து கொலை செய்ய வைத்துவிட்டதாம்.

வாத்தியான் திடீரென்று ஊரை விட்டுப் போக முடிவு செய்தவன் தங்கத்திடமே வந்து வசனம் பேசுகிறான். தனது அப்பாவும், அம்மாவும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதால், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால் அவனுடைய மனதில் அவளுக்கென்று ஒரு தனியிடம் எப்போதும் இருக்கும் என்கிறான். தங்கம் காரித் துப்பி அவனை வழியனுப்பி வைத்துவிட்டு தான் எங்கோ போகப் போவதாகச் சொல்கிறாள். இங்கே காமம் வழிந்து உருகி எங்கோ மறைந்துவிட்டது.. பாவம்..

ஊர் நிலைமை அநியாயத்திற்கு கலவர பூமியாக.. பெண் வீட்டை விட்டு ஒரு பையோடு ஓடி வருகிறாள். காதலனோடு ஓட.. காதலனின் தந்தை ஜமீன்தார் பார்த்துவிடுகிறார். காதலர்களைத் தேடிப் பிடித்துப் பிரிக்கிறார். காதலியின் தலையை வெட்டி தன் மகனான அந்தக் காதலனின் காலடியில் வீசி “நம்ம ஜாதி என்ன? அவ ஜாதி என்ன?” என்று வீர வசனம் பேசுகிறார். பையன் பார்க்கிறான். ஆத்திரப்படுகிறான். கட்டையைத் தூக்கி அப்பன் தலைல ஒரே போடு.. “மவனே இப்ப உன் சாதியைக் கூப்பிடுறா.. காப்பாத்துதான்னு பார்ப்போம்..” என்றவன் கடப்பாரையைத் தூக்கி அப்பன் வயிற்றில் சொருகுகிறான். இங்கே காதலுக்காக இந்தக் கொலை நடந்து முடிகிறது.

முடிந்தது உருவாக்கிய திரைப்படம். இனி தொடர்வது எல்லாம் வேலுபிரபாகரனின் காதல் கதை. சில்க் ஸ்மிதாவை தாடிக்காரனிடம் இருந்து பிரித்தது.. ஸ்மிதாவை திருமணம் செய்தது.. பின்பு அவரைவிட்டு விலகியது என்று அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இந்த ஒன்றுக்காக அவரை பாராட்டலாம்.

தனக்கு இதுவரையில் தோன்றியது எல்லாமே காமம்தான் என்றும், காதலே இல்லை என்று சாதிக்கிறார். தனக்குள் தோன்றிய காதல்களுக்கு அடிப்படை காமம்தான் என்கிறார் வேலு. இதை அவர் சொன்னவிதமும் காமமாகத்தான் இருக்கிறது.. போஸ்டர்களில்கூட அது மாதிரியான புகைப்படங்கள்தான். இதையெல்லாம் வெளிப்படையாக போட்டால்தான் காமம் பற்றிய புரிதல் மக்களுக்கு புரியும்.. தெளியும் என்கிறார்.

படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சியே அதிர வைக்கிறது. நல்லவேளை எந்த பெண்ணும் தியேட்டரில் இல்லாததால் தப்பித்தது தியேட்டர்.. காதல் காட்சிகளில் சும்மா புகுந்து, புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குநர். நடித்தவர்களுக்கு வாய் சுளுக்கும், கை சுளுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். எத்தனை டேக் வாங்கி உருண்டாங்களோ தெரியலை.. நிச்சயமா உதவி இயக்குநர்கள் பாடு ரொம்பத் திண்டாட்டமா இருந்திருக்கும்.. இது போன்ற கலையுணர்வு கொண்ட காட்சிகளை இயக்க வேண்டும் எனில் ஒரு நெஞ்சுரம் வேண்டும். அது வேலுவுக்கு மட்டுமே உண்டு என்று அடித்துச் சொல்லலாம்.


சந்தடிச்சாக்கில் பெரியார் வேடத்தில் வந்து கடவுள் மறுப்புக் கொள்கையையும் விதைத்திருக்கிறார். மடத்துப் பெரியவரிடம் பேசுவது போல் பேசி “நீங்க உங்க சாதியைக் கலைங்க.. நாங்க எங்க சாதியையும் கலைச்சிர்றோம்..” என்று உடன்பாடு காண துடிக்கிறார். என்னவோ போங்க..

திரைப்படத்தின் ஆண், பெண் காட்சிகள் மட்டுமல்ல கதையம்சம் உட்பட அனைத்துமே காமமாகத்தான் இருக்கிறது.

கதையே துணுக்குச் செய்தி போல் உள்ளதால் திரைக்கதை பற்றி நாம் சொல்லவே வேண்டாம். இசை இளையராஜா என்றார்கள். பின்னணி இசை யார் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பாடலை இளையராஜா பாடியிருப்பதுபோல் தெரிகிறது. பாடல் காட்சிகளிலும்கூட காமம் தெறித்ததால் பாட்டை எவன் கவனிப்பான்..?


கதாநாயகியாகளாக நடித்தவர்களில் ஷெர்லிதாஸ் பரவாயில்லை.. மூக்கும், முழியுமாக அடுத்து ஹீரோயினாகவே நடிக்கலாம். தங்கமாக நடித்த ப்ரீத்திதான் பாவம்.. நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியிருந்தார். இருவரையும் கிட்டத்தட்ட துகிலுரித்துத்தான் காட்டியிருக்கிறார். நல்லவேளை.. சென்ஸார் புண்ணியத்தில் அதுவெல்லாம் லேப்பில் தூங்க.. நாம் தப்பித்தோம். அந்தப் பெண்களும் தப்பித்தார்கள்.


இவ்வளவு கதையையும் அவருடன் இருந்து கேட்டு வாங்கிச் சொல்லும் அந்த பெண் பத்திரிகையாளர் கடைசியாக “காதல் நிச்சயமா இருக்கு ஸார்.. நான் உங்களை லவ் பண்றேன்”னு சொல்லும்போது வேலு சிரிக்கின்ற சிரிப்பு அநியாயம்.. நிஜமாகவே அந்தப் பெண்ணின் காதல் உணர்வு வேலுவின் படைப்பு மீதான ஆர்வத்தையும், அவரது தொழில் திறமையையும், பழகுகின்ற தன்மையையும் வைத்து வருவதாகத்தான் தெரிகிறது. அதுவும் காமம்தான் என்று மறுப்பது காதல் என்கிற வார்த்தையையே கொச்சைப்படுத்திவிட்டது.

சொல்ல மறந்துவிட்டனே.. வேலு வெட்டப்படுவதற்கான காரணம், ஸ்மிதாவைவிட்டுவிட்டு வேறொரு டீச்சரோடு காமவயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டாராம் வேலு. பிற்பாடு அந்த டீச்சரும் பேக் டூ தி பெவிலியனாக வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

இந்த நிலையில் வேலு உயிரோடு இருந்தால் எங்கே தனது கணவரிடம் போட்டுக் கொடுத்துவிடுவாரோ என்று நினைத்து அந்த முன்னாள் காதலியே அடியாள்கள் வைத்து வேலுவை கொலை செய்ய முயற்சிக்கிறாராம்.. எல்லாமே காமம்தான் என்று சொல்லி முடித்திருக்கிறார். அநியாயமா இல்லை..?

யாராவது உண்மையான காதலர்கள் கொதித்து எழலாம்.. வரும் வாரத்தில் விஜய் டிவியின் நீயா நானாவின் இப்படம் பற்றிய விவாதம் நிச்சயம் வரும்..

படத்தின் துவக்க விழாவிலேயே இத்திரைப்படத்தில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறும் என்று அதிரடியாக அறிவித்திருந்ததால் இத்திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகமாயின. அதற்கேற்றாற்போல் திரைப்படம் தயாரித்து மூன்றாண்டுகள் ஆன பின்பும் சென்ஸார் சர்டிபிகேடட் தராமல் கோர்ட், கேஸ், வாய்தாக்கள், ரிவ்யூ சென்ஸார்ஷிப் என்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது சென்ஸார் சொன்ன அத்தனை ‘கட்'டுகளையும் ஏற்றுக் கொண்டு கடைசியாக படத்தினை வெளியிட்டுள்ளார். "தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிகமான சென்ஸார் 'கட்'டுகள் வாங்கியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.." என்கிறார்கள் திரையுலகத்தினர்.

அப்படியிருந்தும் சென்ஸார் கண்களில் இருந்து தப்பித்த சில காட்சிகளும் படத்தில் இப்போது இடம் பெற்றுள்ளன. எப்படி என்றுதான் தெரியவில்லை.

டிஸ்கி-1 - இந்தப் படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ஏன் நிதியுதவி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

டிஸ்கி-2 - தயவு செய்து கமலா திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க ஆசைப்படாதீர்கள். அதற்கு திருட்டி டிவிடியிலாவது பார்த்துவிடுங்கள். பணத்தையும் கொடுத்து, மரியாதையையும் இழந்து, என்ன மயித்துக்கு அந்தத் தியேட்டருக்கு போகணும்..? கொடுமைடா சாமி..!


டிஸ்கி-3 : இத்திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று ஆதரவுக்கரம் நீட்டியவர்களில் சாருநிவேதிதாவும் ஒருவர். இதற்காக கோபப்பட்டு டிவிடியில்கூட பார்க்கமாட்டேன் என்று சபதமெல்லாம் எடுக்காதீர்கள்..

பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்..!

16-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல் பதிவுலகில் அனானிகளின் ஆட்டமும், முகம் தெரியாத முகமூடிகளின் அம்மண ஆட்டமும் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

நேற்றைய ஒரே நாளில் அனானிகளின் வம்பிழுப்பினால் பதிவர் நர்ஸிமின் விலகலும், முகமூடிகளின் அட்டகாசத்தால் பதிவர் கார்க்கியின் தளம் சில மணி நேரங்கள் இழக்கப்பட்டு பின்பு மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுவாகவே அனானிகள் என்கிற இடத்தில் பதிவிற்குத் தொடர்பான பெயர்களைக் குறிப்பிட்டு சைவமான வகையில் பின்னூட்டங்கள் இட்டு நகைச்சுவைப் பகுதிக்கு பங்களிப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் நமது வலையுலக கைப்புள்ளைகள்.

அவர்களுக்கு அனானி வசதி இல்லையெனில் இரண்டு கைகளும் ஒடிந்தது போலத்தான். ஆனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு. அவர்களைப் போலவே அனைவரும் இருந்துவிட்டால் நல்லதுதான். இல்லாதவர்களை ஒடுக்குவதற்கு அனானி வசதியை பூட்டி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஏற்கெனவே போதையுலகம் போலிருக்கும் இருந்த வலையுலகத்தில் கால் பதித்துவிட்டு வெளியேற முடியாமல் பாதிப் பேர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் திரட்டிகளைப் பார்க்காவிடில் பைத்தியம் பிடித்தாற்போல் ஆகிறது. இது ஒருவகையிலும் போதைதான்.

என்னையே கணக்கில் எடுத்துக் கொண்டால், எத்தனை பக்கங்களை தட்டச்சு செய்து வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்போது அதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் பக்கத்துக்கு பத்து ரூபாய் என்றால்கூட ஐம்பதாயிரம் ரூபாய் வரும்.

ஒரு பக்கத்தை தட்டச்சு செய்ய ஒரு நிமிடம் எனில் ஐயாயிரம் பக்கங்களுக்கு ஐந்தாயிரம் நிமிடங்கள் தட்டச்சிற்கே செலவாகியுள்ளது. அதன் பின்னர் பின்னூட்டங்களுக்கு பதில்.. பிற பதிவுகளை மேய்ந்தது.. அதற்கு பின்னூட்டங்கள் இட்டது.. திரட்டிகளை அடை காத்தது.. இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் இதுவரையிலும் கிட்டத்தட்ட 8 மாதங்கள் என்கிற அளவிலாவது இந்த வலைத்தளத்திலேயே மூழ்கிக் கிடந்தது போல் தெரிகிறது.

இது நேரத்தை விழுங்கும் போதை மருந்து என்றும் தெரிந்தும் இதிலேயே ஊர்ந்தும், திளைத்தும் கிடப்பது எதற்காகவெனில் சில நல்ல நண்பர்களின் நட்பும், காலத்தினாற் செய்த உதவியைப் போன்று கிடைக்கும் பல பொன்னான உதவிகளாலும்தான். மறக்கவில்லை. மறுக்கவில்லை.. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த வலையுலகத்தின் மூலம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், சோதனைகளை எதிர் கொண்டாலும் விட்டேனா பார் என்று நம்மை இழுக்கிறது.

பதிவுலகில் நட்புக்கு உலை வைக்கும் முதல் வேலையில் இருப்பது இந்த அனானிகள்தான். சில அனானிகள் நல்லவர்கள் போல் உதவிகள் செய்தாலும், பலரும் அனர்த்தம்தான் செய்து வைக்கிறார்கள். உதாரணம் நேற்றைய சக்திவேலின் பதிவில் அனானிகள் போட்டிருக்கும் ஆட்டம். அதில் பாதி அனானிகள் கிண்டலாகவும், மீதி பேர் பதிவர்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடும்விதமாகவும், பிரச்சினைகளை கிளப்பும் அர்த்தத்திலும் பின்னூட்டங்களை போட்டிருக்கிறார்கள்.

அதில் பின்னூட்டம் போட்டிருக்கும் பலரது எண்ணங்களை சக்திவேல் எப்படி எடுத்துக் கொண்டார் என்று இன்னமும் நமக்குப் புரியாத நிலையில் அனானிகளின் கொட்டத்தை அவர் புரிந்து கொள்வாரா என்பது நமக்கு சந்தேகமே..

இதை முற்றிலுமாகத் தடுத்தால் ஒழிய வலையுலகில் மீண்டும், மீண்டும் சர்ச்சைகள் எழாமல் இருக்கப் போவதில்லை.. அனானிகளின் அநாகரிகமான பின்னூட்டங்களை விட்டுவைத்தால் அதுவே அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல் ஆகிவிடும். இதனை அனைத்துப் பதிவர்களும் புரிந்து கொண்டால் அத்தனை பேருக்கும் பலனையும், பயனையும் தரும்.

அனானி பின்னூட்ட அரசியலைக் கூர்ந்து கவனிக்க இயலாதவர்கள் தயவு செய்து மட்டுறுத்தல் செய்துவிடுவது மிகச் சிறந்தது. வேண்டவே வேண்டாம் இந்தத் தொல்லை என்று அனானிகளை முற்றிலுமாகத் தடை செய்துவிட்டால் பதிவர்களுக்குள் பிரச்சினைகள் எழாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

பதிவர் நர்ஸிமை தொடர்ந்து தாக்கி வரும் ஒரு மனநோயாளி சக்திவேலின் பதிவிலும் வேறு சில பதிவுகளிலும் எழுதி வருகிறார். இவர் பதிவர் என்றாலும் மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. சக்திவேலால் அதனை ஊகிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன். அவரே பாவம்.. பச்சைப் புள்ளை மாதிரியிருக்கிறார். ஆனால் இழப்பு நமக்குத்தான்..

தோழர் நர்ஸிம் திரட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தது நமக்குத்தான் நஷ்டம். இனி அவரது தளத்தை ரீடரிலும், பின் தொடர்வதிலும் மட்டுமே படிக்க முடியும். எத்தனை பேரால் அது முடியும்.. எத்தனை புதிய பதிவர்களுக்கு அவரது எழுத்து சென்றடையும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் அவர் திடமாக முடிவெடுத்து குட்பை சொல்லிவிட்டார். அதுகூட தேவையில்லாதது என்றுதான் நான் கருதுகிறேன். எந்த மடையன் என்ன சொன்னாலும் தூக்கிப் போட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டேயிருக்கலாம்.. பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் மூர்த்தி என்னும் சைக்கோவால் வலையுலகம் என்ன பாடுபட்டது என்பதை பலரும் அறிவீர்கள். அவனை ஒழித்துக் கட்ட என்னென்னவோ முயற்சிகளை வருடக்கணக்காக செய்து கடைசியில் ஒரு வழியாக ஓரம்கட்டி உட்கார வைத்திருக்கிறோம். இப்போது அதே பாணியில் "ஆப்பு", "ஆப்பரசன்" என்று இரண்டு புதிய வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதிவர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த இரண்டு போலியானவர்களுக்கு எந்தவிதத்திலும் ஊக்கம் கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் உங்களுடைய பதிவுகளுக்கு நாகரிகமாக பின்னூட்டமிட்டாலும் சரி.. அதனை அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களது தளத்தில் எழுதியிருப்பது அராஜகத்தனமான கட்டுரைகள்.

அதே போன்று நாளை நம்மைப் பற்றியும் எழுதலாம். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாக கருதி இது போன்ற பைத்தியங்களுக்கு சிலரோ அல்லது பலரோ ஆதரவுக் கரம் கொடுத்தால் அதே கத்தி பூமராங் மாதிரி அவர்கள் கழுத்துக்கே வந்து சேரும். இது கடந்த கால பதிவுலகம் நேரில் கண்ட காட்சி.

ஒரு பதிவரின் மேல் கருத்து வேறுபாட்டால் விமர்சித்து எழுதுவது பதிவர்களின் உரிமைதான். ஆனால் அதை முறைப்படி அவர் யார் என்பதை தெரிவித்துவிட்டு பின்பு விமர்சிக்க வந்தால் விமர்சிக்கப்படும் பதிவரும் தனது தரப்பு வாதத்தை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இது பற்றி எந்தவித வாய்ப்பும் தராமல் முகமூடி அணிந்து கொண்டு நர்ஸிமைத் தாக்குவதாகச் சொல்லியும், பதிவர் தம்பி அதிஷாவைத் தாக்கியும் பதிவு எழுதப்பட்டுள்ளது.

இவர்களெல்லாம் கோழைகள்.. தைரியம் இருந்தால் முகத்தை வெளிப்படுத்திக் கொண்டு போய் சொல்லட்டுமே.. சொல்ல மாட்டார்கள். இப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதிஷாவுக்கு நல்லதோ, கெட்டதோ நடந்துவிடட்டும் என்கிற எண்ணத்தில் இந்த மனநோயாளி உள் நுழைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

தப்பித்தவறி கூட இந்த சைக்கோக்களுக்கு உங்களது தளங்களில் இடம் கொடுத்து விடாதீர்கள் என்று பதிவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதது அல்ல. முறைப்படி புகார் கொடுத்தால் இரண்டு நாளில் முகமூடி கிழிந்துவிடும். ஏற்கெனவே கிழிக்கப்பட்டவரிடம் இந்த அண்ணாத்தைகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம் என்று எச்சரிக்கிறேன்.

இதே போன்று கணேஷ் என்கிற பெயரில் ஒரு சைக்கோ மலேசியாவில் இருந்து பின்னூட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். என்னுடைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களின் ஐ.பி.க்களை வைத்து சோதித்தபோது அது மலேசியாவைத்தான் காட்டுகிறது. இந்த கிறுக்கையும் அடக்க முடியலே.. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல் இவரது முகமூடியும் ஒரு நாள் கிழியும் என்பது உறுதி.

நேற்று நர்ஸிமின் பெயரில் அனானிகள் பல்வேறு தளங்களில் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்கள். இதில்தான் அவர் மிகவும் மனம் நொந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

இதுவும் சில ஆண்டுகளாகவே பதிவுலகில் நடந்து வருவதுதான். சக்திவேலின் பதிவில் பல பின்னூட்டங்கள் இப்படி அதர் ஆப்ஷனை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க ஒரே வழி நம் பெயருக்கு பின்பு பிளாக்கரின் எண்ணை போட்டுக் கொள்வதுதான், நான் போட்டிருப்பது மாதிரி..

ஏனெனில் எனக்கே இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இங்க போய் பாருங்க. இந்தத் தளத்தை உருவாக்கியது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றுவரையிலும் அது இருக்கிறது. முன்னொரு காலத்தில் நான் போகாத இடங்களிலெல்லாம் ஒரு அனானி இந்தத் தளத்தின் லின்க்குடன் சேர்த்து என் பெயரில் பின்னூட்டம் போட்டுத் தொலைவார். அத்தனையும் அசைவங்களாக இருக்கும்.

பலரும் என்னைத் திட்டுவார்கள். பல பெண் பதிவர்களின் பதிவிலும் இதே கதைதான் நடந்தது. அதன் பின்புதான் வேறு வழியில்லாமல் எனது பிளாக்கர் எண்ணை எனது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டேன். இப்போது ஒரிஜினல் உண்மைத்தமிழன் நான்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக எளிது.

என்னுடைய அவ்தாரின் மீது மவுஸ் கர்சரை வைத்தீர்களானால் மானிட்டரின் இடது பக்க கீழேயும் பிளாக்கர் எண் காட்டப்படும். அந்த எண்ணும், நான் குறிப்பிட்டுள்ள எண்ணும் சரியாக இருந்தால் ஆள் உண்மை என்று அர்த்தம். இதுதான் புகழ் பெற்ற எலிக்குட்டி சோதனை.

இது ஒரு பெரிய நொச்சாக இருக்கிறது என்றாலும், வேறு வழியில்லாமல் அதனை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். நண்பர் நர்ஸிம் தேவைப்பட்டால் இந்த வசதியை கையாண்டு கொண்டு, மீண்டும் திரட்டிகளில் இணைந்து தனது எழுத்துப் பணியைத் தொடரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதுகை அப்துல்லா, சஞ்சய் என்று நான் கேள்விப்பட்டு சிலரது வலைப்பூக்கள் ஹேக் செய்யப்பட்டதைப் போல நேற்று தம்பி கார்க்கியின் தளமும் சில மணி நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. பின்பு சக தோழர்களின் உதவியோடு அதனை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார் கார்க்கி.

அதனை செய்தவரைக் கண்டுபிடிப்பதற்கு கார்க்கியின் உதவிதான் இப்போது தேவை. அந்த நேரத்தில் உலா வந்த ஐ.பி. நம்பர்களை கார்க்கி வெளிப்படுத்தினால் நிச்சயம் அது யார் என உறுதிப்படுத்தி அம்பலத்தில் ஏற்றலாம். தம்பி கார்க்கி வலையுலகத்திற்கு செய்யும் உதவியாக நினைத்து இதனைச் செய்வார் என்று நினைக்கிறேன்.

நமக்கு எழுதுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. நமக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கின்றபட்சத்தில் திறம்பட எழுதுவோம். நம்மைப் பழிப்பவர்களை நாம் புறந்தள்ளிவிட்டு முன்னேறி போனாலே போதும்.. பின்னால் வரும் கூச்சலும், குழப்பமும் தானாகவே அடங்கி ஒடுங்கி, இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பதிவர்கள் தங்களது எழுத்து தொடர்பான வேறுபாடுகளைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருந்து வலையுலகம் ஆரோக்கியமாய் திகழ ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொறுமையாய் படித்தமைக்கு எனது நன்றிகள்..!

வாழ்க வளமுடன்..!

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்

14-07-2009

என்
இனிய வலைத்தமிழ் மக்களே..
!

பிரபாகரனின்
மகனா..? அடுத்த கதை ஆரம்பம்..!


உண்மை
உறங்கும்போது பொய் ஊர்வலம் வந்த கதையாக நந்திக்கடல் பகுதியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் நாம் தத்தளிக்க.. வாய்ப்புக் கிடைத்தவர்களெல்லாம் ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பிரபாகரன்
மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி, மகள் துவாரகா மரணம் என்று வரிசையாக வந்த செய்திகளுக்குப் பின் இப்போது கடைசியாக பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனும் சிங்கள இனவாத அரசப் படையினரால் கொல்லபட்டுவிட்டதாக நேற்று முன்தினம் முதல் செய்தி உலா வருகிறது.



வழக்கம்போல இதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாதவர்களைப் போல் ஈழத்து ஆதரவாளர்கள் வாய் மூடி மெளனியாகிவிட்டார்கள்.

புகைப்படத்தில்
இருப்பது அவரா.. அல்லது அவரைப் போன்ற வேறொருவரா என்றெல்லாம் சர்ச்சை கிளம்பும் அதே நேரத்தில், சிங்கள அரசும், ராணுவமும் மிகத் தந்திரமாக ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருவது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


மொத்தமாக
செய்திகள் வெளியானால் எழும் அனுதாபத்தை மூழ்கடிக்கவே கொஞ்சம், கொஞ்சமாக செய்திகளை வெளியிட்டு கொண்டே வருகிறது. முதலில் பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இன்னும் வசதியாகப் போய்விட்டது இலங்கை அரசுக்கு.


இப்போது
தவணை முறையில் செய்திகளைத் தரத் துவங்கிவிட்டது. இன்னமும் பாக்கியிருப்பது பிரபாகரனின் மனைவிதான். அவரைப் பற்றிய எந்த பயங்கரச் செய்தி எப்போது வருமோ தெரியாது..?


கவுரவம்
என்கிற ஒற்றைச் சொல்லில் நாமே நமது சொந்தங்களை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புலித் தலைமையின் தீவிர ஆதரவாளர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ தெரியவில்லை..?


துரைமுருகனின் பதவி பறிப்பு..!

கலைஞரும்
, மஞ்சள் சால்வையும்போல் பிரிக்க முடியாமல் இருந்த தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகனின் பொறுப்புகளைப் பறித்த நடவடிக்கை ஆளும்கட்சிக்குள் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கடந்த
சில நாட்களாகவே பல மூத்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக் குவிப்பு பிரச்சினைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது மாநில உளவுத்துறை.

தற்போதைய
அமைச்சரவையில் இருப்பவர்களில் 4 அல்லது 5 பேருக்கு மட்டுமே சொந்தமாக கல்லூரிகள் இல்லை. மற்ற அனைவரும் ஆளுக்கொன்றாக பொறியியல், கலை என்று பல்வேறு கல்லூரிகளை ஆரம்பித்துவிட்டார்கள். வாங்கியும் விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் முதல்வரின் கவனத்திற்குப் போயிருக்கிறது.


ஒரு
பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பது என்றால் இப்போதைக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாயாவது வேண்டும். மிக, மிக சமீபத்தில் அப்படியொரு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதும் தெரியாமல், கட்டியதும் தெரியாமல் ஒரே மூச்சில் கல்லூரியை நிறுவிவிட்டாராம் துரைமுருகன்.
இல்லை.. இல்லை.. முன்பே வேறொருவர் கட்டியதுதான்.. இவர் இப்போது விலைக்கு வாங்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

எது
உண்மை, எது பொய் என்று வழக்கம்போல தெரியவில்லை என்றாலும் அந்தக் கல்லூரிக்கும் துரைமுருகனுக்கும் தொடர்பு உண்டு என்பது மட்டும் உண்மையாகிவிட்டது.


இந்தக்
கோபமா..? பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வட மாவட்டங்களில் பல்வேறு கான்ட்ராக்ட்டுகளைத் தள்ளிவிட்டதினால் ஏற்பட்ட கோபமா தெரியவில்லை என்கிறார்கள் அறிவாலயத்து தம்பிகள்.

ஞாயிற்றுக்கிழமையும்
அதுவுமாக எப்போதும் சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போடும் கவர்னருக்கு ஒரு சின்ன வேலையைக் கொடுத்து கையொப்பம் வாங்கி நிமிடத்தில் கலைஞர் டிவியில் மட்டும் பிளாஷ் நியூஸாக கொடுத்து செய்தியை வெளியிட்டுவிட்டார்கள்.

துரைமுருகனைத் தவிர வேறு யாராலும் அந்தப் பொதுப்பணித்துறையை திறம்பட நடத்திவிட முடியாது என்று கலைஞர் கருதியதால்தான் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் அவரையே அத்துறை அமைச்சராக நியமித்திருந்தார்.

தமிழ்நாட்டில்
இருக்கும் குளம், ஆறு, குட்டை, நீர்ப்பாசன அணைகள் என்று அத்தனையும் அமைச்சருக்கு அத்துப்படி.. துரைமுருகனிடம் மட்டும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு அச்சமாக இருந்தது.


அப்படியிருந்தும்
.. இப்படியிருந்தும்... லஷ்மியின் கடைக்கண் பார்வை நழுவியதால் மனிதருக்கு ஒரு பார்வை அவுட்டாகிவிட்டது.

ஆனாலும்
கலைஞரின் குணம் அறிந்தவர்கள் “சீக்கிரமா திருப்பிக் கொடுத்திருவார்.. இல்லாட்டி அமைச்சரவையில் மாற்றம் வரும்.. இரண்டில் ஒன்று உறுதி” என்கிறார்கள். பார்க்கலாம்..


விஜயசாந்தியின் கோபம்..!

ஆந்திராவின் லேடி சூப்பர் ஸ்டாரிணி விஜயசாந்தி சமீபத்தில் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதியில் மலையேறி ஏழுமலைவாசனை நலம் விசாரித்தார்.

அப்போது
திரண்டு வந்த பத்திரிகையாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு வழக்கம்போல “இன்று உங்களுக்கு எத்தனாவது பொறந்த நாளுங்கோ மேடம்..?” என்று கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட..

அம்மணி
காரசாரமாக வாயில் வந்தததையெல்லாம் சொல்லி நிருபர்களுக்கு சுண்ணாம்பு தடவியிருக்கிறார்.


“உங்களுக்குக் கொஞ்சமாவது டீஸென்ஸி இருக்கா..? பத்திரிகைன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு..? நான் இப்போ எவ்ளோ பொறுப்பானவ.. மதிப்புமிக்கவன்னு உங்களுக்குத் தெரியுமா..? எனக்கு எத்தனாவது பொறந்த நாளா இருந்தா உங்களுக்கென்ன..? இதெல்லாம் தேவையில்லாதது.. வந்தாரு.. சாமி கும்பிட்டாரு.. போயிட்டாருன்னு மட்டும் போடுங்க..” என்று சாமியாடிவிட்டுப் போயிருக்கிறார்.


“நாம அப்படியென்ன கேக்கக் கூடாத கேள்வியையா கேட்டுப்புட்டோம். எதுக்கு இந்தம்மா இப்ப இம்புட்டு தூரம் காய்ச்சிட்டுப் போகுதுன்னு. எல்லார்கிட்டேயும் வழக்கமா கேக்குறதுதானே..?”ன்னு பத்திரிகைகாரங்களுக்கு குழப்பமோ குழப்பமாம். எனக்குக் குழப்பம்தான்..

டீஸண்ஸியை
பத்தி தன்னோட 45-வது வயசுல அம்மணி நினைச்சுப் பார்க்கிறதை நினைச்சா அல்லாருக்கும் நம்மளை மாதிரியே வயசான பின்னாடிதான் ‘அது' வரும்னு நினைக்கத் தோணுது..


ஏதோ
ஒரு தெலுங்கு படம்.. பாலகிருஷ்ணா ஹீரோ. அம்மணிதான் ஹீரோயின்.. படத்துல பாலகிருஷ்ணாவோட வீர, தீரத்தை சோதிக்கிற மாதிரி விஜயசாந்தி இருக்குற இடத்துல எல்லாம் பாலகிருஷ்ணா திடீர், திடீர்ன்னு வந்து சண்டை போட்டு தன்னோட பராக்கிரமத்தைக் காட்டிட்டுப் போவாரு..


ஒவ்வொரு
தடவையும் ‘பைட்' முடிஞ்சுபோகும்போது பாலகிருஷ்ணாகிட்ட விஜயசாந்தி, “எப்படி பாபூ அவ்ளோ கரெக்ட்டா வந்துட்டீங்க..”ன்னு கேப்பாங்க.. “எனக்கு எல்லாமே தெரியும்..” என்று புகழ் பெற்ற இரட்டை அர்த்தத்தில் சொல்லும் பாலகிருஷ்ணா உதாரணத்துக்கு, “உன் ஜாக்கெட்டுக்குள்ள இருக்குறது இன்னிக்கு கருப்பு கலரு.. கரெக்ட்டா..?” என்பார். அம்மணியும் வாய் பொளந்து அதிர்ச்சியைக் காட்டி தனது ஜாக்கெட்டுக்குள் இருக்கும் உள்ளாடையின் பட்டையை வெளியே எடுத்துக் காட்டி “ஐயோ.. ஆமாம்.. எப்படி பாபூ..?” என்று வெட்கத்தில் நெளியறப்ப நமக்கே வெக்கம் சூடும்.


இப்படியேதான்
படம் முழுக்க எல்லா கலரு பட்டையையும் வெளில எடுத்துக் காட்டிட்டு கிளைமாக்ஸுக்கு முந்தின சண்டைல மட்டும் உள்பாவாடையையும் கரெக்ட்டா சொல்வாரு அவங்க பாபூ.. அம்மணி படார்ன்னு பாவாடையைத் தூக்கிக் காட்டுவாரு பாருங்க.. நாங்க கத்துன கத்துல திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரே அதிர்ந்து போச்சு போங்க. ரீவைண்ட் பண்ணிப் பார்க்குறேன்.. ம்.. எல்லாம் ஒரு காலம்தான்..


வெளிச்சத்துக்கு
வந்த மீனாவின் அப்பா..!


எப்படியோ
ஒரு வழியா எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த மீனாவின் கல்யாணம் கொஞ்சம் திருஷ்டிப் பொட்டோட முடிஞ்சிருச்சு.

என்னதான்
தாம்பூலத்தை மென்னுக்கிட்டு “வாழ்க”, “வளர்க”ன்னு சொல்லி பத்திரிக்கைரங்க நடையைக் கட்டினாலும் உள்ளார ரொம்பவே வருத்தம்,
இனிமே யாரை வைச்சு இவ்ளோ கிசுகிசு எழுத முடியும்னு..?

மீனான்னா சொக்கத் தங்கம்.. மனசுக்குள்ள எதையும் வைச்சுக்காது.. எம்புட்டு அடிச்சாலும் தாங்குற வின்னர் வடிவேலு மாதிரி.. எந்தப் பத்திரிகை என்ன மாதிரி என்ன எழுதியிருந்தாலும், அதையெல்லாம் மனசுல வைச்சுக்காம அடுத்த தடவை பாக்கும்போது “என்னங்கண்ணே..”ன்னு கூப்பிட்டு வைச்சு பேசுற வெள்ளந்தியான பொண்ணு..
கரையேறுனதுல யாருக்கு என்ன வருத்தம்..? இனிமே வேற யாரையாவது இது மாதிரி கும்ம முடியுமா..? பதிலுக்கு கும்மிற மாட்டாங்க..

இப்படித்தான்
மலையாளத்தின் முன்னாள் கனவுக் கன்னி ஒருத்தங்களை “வீட்ல சண்டை.. டைவர்ஸ் பண்ணப் போறாங்க”ன்னு மவுண்ட் ரோடு பத்திரிகை எழுதி வைக்க.. அன்னிக்கே அந்த நிருபரையும், ஆசிரியரையும் போன்ல புடிச்சு, மண்டகப்படியோ மண்டகப்படி அடிச்சதுல அதுக்கப்புறம் இன்னிவரைக்கும் அந்தம்மாவைப் பத்தி ஒத்த பிட்டு நியூஸ்கூட அந்தப் பத்திரிகைல வர்றது கிடையாது..


தமிழகத்து தற்போதைய நளினமான அம்மா நடிகையைப் பத்தி இதே மாதிரி ஒரு தடவை அதே பத்திரிகை எழுதிக் குமிச்சு அந்த பத்திரிகையோட வேறொரு ரிப்போர்ட்டர் அம்மணியின் தொடை நெருக்கில் வாங்கிய அடியை சமீபத்தில் அந்தணன் அண்ணன் பதிவுல படிச்சிருப்பீங்க..

இப்படித்தான்
பல பேரும் பல இடத்துல ரிப்போர்ட்டர்களை அங்கங்க சுளுக்கெடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா ஒண்ணுமே செய்யாத பொண்ணு மீனாதானாம்..

எத்தனை
கிசுகிசு.. எத்தனை வதந்திகள்.. பரவாயில்லை.. தாங்கிருச்சே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்.. இனிமேலாச்சும் நல்லாயிருக்கட்டும்..


பத்திரிகைக்காரங்களுக்கு
இதுல ஒரு சின்ன சந்தோஷம்.. அது மீனா அப்பாவோட புல்ஸ்கேப் தரிசனம் எல்லாருக்கும் இந்தக் கல்யாணத்துனால தெரிஞ்சதுதான்..

முதல்முதல்லா
நடிக்க வந்தப்ப ஒரு வாட்டி குமுதத்துக்கு அவங்கப்பா பேட்டி கொடுத்தார். அவ்ளோதான்.. அதுக்கப்புறம் எல்லாமே அவங்கம்மாதான். மனுஷன் நேத்தைக்கு போஸ் கொடுத்திருக்கிறாராரம் போட்டோவுக்கு.




கொசுறு நியூஸ்.. திமுகவின் சக்தி வாய்ந்த வீரமான அமைச்சரின் இரண்டாவது மனைவியும், மீனாவின் அம்மாவும் உடன்பிறந்தவர்கள் என்பதும் பத்திரிகையுலகச் செய்தி.


சிங்கத்தின்
பிடியில் பெண்
..!

அன்புப்
பிடி.. பாசப் பிடியெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம்.. ஆனா இந்தப் பிடி இதில் எந்த வகையானதுன்னு தெரியல்ல.. ஆனா இதுக்கெல்லாம் ஒரு தகரியம் வேணுமாக்கும்..


பெண்மையே நீ வாழ்க..

கொடுத்து
வைத்த கேமிராமேன் ரவீந்தர்
..!

சில
பழைய திரைப்படங்களைக் காண்கின்றபோது இவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? எங்கே இருப்பார்கள் என்கிற ஒரு ஆர்வம் நமக்குள் எட்டிப் பார்ப்பதுண்டு..

அப்படி
நம்மை அசைத்துப் பார்க்கின்ற கேரக்டர்கள் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்களாகவும், சிறுவர், சிறுமியராக நடித்தவர்களாகவும் இருக்கலாம்.


எனக்குக்
கூட ‘பாசமலரில்' சிவாஜியின் மகனாக நடித்த குழந்தையும், சாவித்திரியின் மகளாக நடித்த குழந்தையும் இப்போது எங்கே இருக்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்..? என்னவாக இருப்பார்கள் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.


இந்தப்
பட்டியலில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒருவர் தற்போது தான் நடித்த திரைப்படத்தை தானே பார்த்து, பார்த்து சொக்கிப் போகிறார் என்றார் அவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி..?


திரைப்பட
ஒளிப்பதிவாளர் ரவீந்திரனுக்கு அப்படியொரு பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதிலும் சாதாரண வாய்ப்பல்ல.. தவழும் குழந்தையாக இருந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் ‘பாவமன்னிப்பு' படத்தில் கைக்குழந்தையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். எவ்வளவு பெரிய கொடுப்பினை..? அவருடைய பெற்றோர்களைத்தான் நிச்சயம் பாராட்ட வேண்டும்..



மனிதருக்கு இதனாலேயே சினிமா மீது பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரையில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கேமிராமேனாக பணியாற்றியிருக்கிறார் ரவீந்திரன். அதில் குறிப்பிடத்தக்கது சின்னத்தம்பி.

வாசுவுடன்
இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக கொடைக்கானல் திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்தார். தற்போது ஒரு திரைப்படத்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


இவருடைய மனைவி நித்யாவும் நடிகைதான். அவரும் குழந்தைப் பருவத்திலேயே பெரிய திரையில் அறிமுகமாகி இன்றுவரையில் பெரிய திரை, சின்னத்திரை என்று இரண்டிலுமே கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க தம்பதிகள்..

தட்ஸ்தமிழ்.காமின் லொள்ளு..!

தமிழ்த்
திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் இந்த இணையத்தளத்தின் மீது கோபமான கோபத்தில் இருக்கிறார்கள்.

இதில்
சினிமா நடிகர், நடிகையர் மீது எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்கள் அளவு கடந்த விரசமாகவும், ஆபாசத்தின் உச்சமாகவும் இருப்பது கண்டு திரையுலக வில்லன்களைப் போல் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பொள்ளாச்சி
மகாலிங்கம் குரூப்பிற்கு சொந்தமானது இத்தளம் என்பதால் யாரிடம் புகார் செய்வது என்பதுகூட தெரியாத அளவுக்கு இத்தளத்தின் நடவடிக்கைகள் கமுக்கமாக உள்ளது.

இத்தளத்தின்
ஹெட் ஆபீஸ் பெங்களூரில் இருப்பதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. அங்கே போன் செய்து சொல்லிச் சொல்லி அழுத்துப் போன பிரபலங்கள் அத்தளத்திற்கு சென்னையில் இருக்கும் சினிமா ரிப்போர்ட்டர் யார் என்பதை கண்டுபிடிக்க முயன்று வருகிறார்களாம்.. இன்றுவரை முடியவில்லை என்கிறார்கள்.

இங்கே இருக்கின்ற செய்தியாளர்களில் யாரோ ஒருவர்தான் அதுக்கும் செய்திகளை மறைமுகமாக அளித்து வருவதுபோல் தெரிகிறது. என்றைக்காவது ஒரு நாள் இந்தக் கோபம் புயலாக வெடிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.

ஞாநியின்
கேணி..!


எழுத்துலக
ஞாநியின் வீட்டில் நடந்த இரண்டாவது கேணி நிகழ்ச்சிக்கு சற்றுத் தாமதமாகப் போய்ச் சேர்ந்தேன்.

அப்பன்
முருகன் வழக்கம்போல கடைசி நிமிடத்தில் நடத்திய ஒரு திருவிளையாடலால், எழுத்தாளர் பிரபஞ்சனின் முழு பரிமாணத்தையும் கேட்க முடியாமல் போய்விட்டது.


நான்
போன ஐந்து நிமிடத்தில் நான் வந்தது தெரிந்தோ அல்லது என்னைப் பார்த்துவிட்டு பயந்தாரோ தெரியவில்லை.. பிரபஞ்சன் ஸார் தன் பேச்சை சட்டென்று முடித்துக் கொண்டார்.

நான்
போனதற்கு வேறொரு காரணமும் இருந்தது.
வலையுலகின் ரவுடியான கோவையின் மைந்தன் ஓசை செல்லாவும் அங்கு வந்திருந்ததுதான்.. ஆள் கொஞ்சம் இளைத்துப் போயிருக்கிறார். தொந்தியையும் குறைத்துவிட்டார். எப்படின்னுதான் தெரியலே..

இப்போது
பிளாக்கை சுத்தமாக மூடிவிட்டு பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். பேஸ்புக்கில் கலக்குவதற்கு என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலை.


“இனிமே சென்னை பக்கமே தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனார் செல்லா. ஞாயித்துக்கிழமை அதுவுமா கொஞ்சமா இருந்த நம்மூர் டிராபிக்கை பார்த்தே இம்புட்டு வெறி மனுஷனுக்கு. கோயம்புத்தூர்ல மட்டும் நாலு சைக்கிள், ரெண்டு ஆட்டோ, ஒரு கார் ஓடுது போலிருக்கு..

என்ன
இருந்தாலும் எங்கூர் மாதிரி வருமான்னு நூறு தடவை சொன்னாரு.. சைதாப்பேட்டைல சைக்கிள்காரன் பஸ் மேல மோதி பஸ் டிரைவர்கிட்ட “இன்னா மாமு.. வூட்டாண்டை சொல்லிக்கின்னு வந்துட்டியா?”ன்னு கேப்பானே.. அது மாதிரி தூய தமிழ்ல கோயம்புத்தூர்ல எவனாவது இப்படி தகரியத்துடன் நெஞ்ச நிமிர்த்தி பேச முடியுமா..?

அன்றைக்கு முதல் முறையாக பதிவர் வல்லியம்மாவை தரிசித்தேன். பதிவைப் போலவே மென்மையாகப் பேசினார்.

நம்ம
நியூஸிலாந்து டீச்சரம்மா இவரையும் பிடித்து இழுத்து வந்துவிட்டாராம். டீச்சர் வழக்கம்போல தனது கேமிராவில் பிரபஞ்சனையும் படம் பிடித்து தனது புகைப்பட சாதனையில் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்.

டீச்சர் இப்படி தான் எடுத்த புகைப்படங்களையெல்லாம் ஆழ்வார்பேட்டை கல்ச்சுரல் அகாடமியில் மிக விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகச் செய்தி.. சுமாரா எட்டாயிரம் போட்டோவாவது இருக்கும்.. அது சமயம் மெட்ராஸ்ல இருக்குறவங்க எல்லாரும் ஓடிருங்கப்பா.. இருந்து மாட்டுனீங்கன்னா உங்க கண்றாவி முகத்தை நீங்களே பார்க்க வேண்டி வரும்..

ஞாநி
ஒரு மாதத்தில் நிறைய நெய் ஊற்றிச் சாப்பிட்டிருப்பார் போலிருக்கு.. ஆள் பழையபடி ஊதிவிட்டார். இலக்கியச் சேவையாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். நல்லாயிருக்கட்டும்..

ஓசை
செல்லா பாமரனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி காலில் அடிபட்டுவிட்டதை ஞாநியிடம் சொன்னபோது, “அப்போ பாமரன், பமரனாகிவிட்டாரா..?” என்றார் ஞாநி. புரியாமல் முழித்த எங்களிடம், “ப'-வுக்கு அடுத்து ஒரு ‘கால்' போயிருச்சு. அப்போ அது ‘பமரன்'தானே..” என்றார் ஞாநி. என்னா நக்கலு..?


ஏம்ப்பா
இதை யாராவது பாமரன்கிட்ட ஓதி விடுங்கப்பா.. ஏதாவது ஒண்ணு ஆகட்டும்.. இந்த வாரம் இந்தச் சண்டைன்னு வேடிக்கை பார்க்கலாம். சும்மாவே இருந்தா போரடிக்குதுல்ல.. ஏதோ நம்மளால முடிஞ்ச பத்த வைப்பு..


பாஸ்கர்
சக்தி ஸார் ஒரு ஆரூடம் சொன்னார்.. “கோலங்கள் செப்டம்பரில் முடியலாம்..” என்று.. “எந்த வருஷத்து செப்டம்பர்ல..?” என்றேன்.. பதில் சொல்லாமல் சிரித்தார். இதிலிருந்து தெரிவது என்னவெனில்..?


இருக்கிற
இலக்கியவாதிகளின் தளங்களைப் படித்து மண்டை காய்ந்து போயிருக்கும் இலக்கிய ரசிகர்களே, இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஆகஸ்ட் 15-லிருந்து இன்னுமொரு மாபெரும் இலக்கியவாதியும் தனித்தளத்தில் இணையத்தில் வலம் வர இருக்கிறாராம். உறுதியுடன் சொன்னார் பிரபஞ்சன். வாங்க.. வாங்க.. வாங்க..


எத்தனையோ
தாங்கிட்டோம்.. இதைத் தாங்க மாட்டோமா..?


இரண்டுக்கும் எத்தனை வித்தியாசங்கள்..!

ஏம்ப்பா கண்ணுகளா நம்ம ஒபாமாவும், சர்கோஸியும் என்னதான் அப்படி உத்து பார்க்குறாங்கன்னு தெரியலையேப்பா.. ஆனா நம்ம இனத்தோட பெருமை இதுல நல்லா தெரியுது பார்த்தீங்களா..

அப்படியே கீழ ஒரு போட்டோ இருக்கு பாருங்க.. அதையும் பாருங்க.. ரெண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குங்களா..


ஒரு ஹாலிவுட் கிசுகிசு..!


ஹாலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளான பிராட்பிட்-ஏஞ்சலினா ஜூலியின் மண வாழ்க்கையில் கொஞ்சம் டர்ரு ஆயிருக்கிறதாம்.

இந்த டர்ருக்கு காரணம் ஒரு வேலைக்காரப் பெண்ணாம்.. அந்தப் பெண்ணுடன் நம்மாளு கொஞ்சம் அப்படி.. கொஞ்சம் இப்படின்னு இருந்ததை ஏஞ்சலினாக்கா பார்த்துட்டாங்க போலிருக்கு.. வூட்டுக்காரனுக்கு லெப்ட் அண்ட் ரைட்ல ரெண்டு குடுத்துட்டாங்களாம்..

பாவம் நம்மாளு.. வூட்டுக்கு வீடு அடி வாங்கினாக்கூட ஒரு பய வெளில சொல்ல மாட்டானே.. அதான் இவரும் சொல்லலை..
ஆனா அக்காவுக்கு கோபம் இன்னும் தணியலையாம்..

அவ்ளோ
பெரிய வீட்ல.. அவ்ளோ பெரிய பெட்ல ஒண்ணா சேராம.. நீ உன் வழியைப் பாரு.. நான் என் வழியைப் பாருக்குறேன்னுட்டு ஒத்த ரூம் இருக்குற கெஸ்ட் ஹவுஸ்லதான் அக்கா படுக்கையாம்..


இப்ப
நம்மாளு நாளை மக்கா நாளுக்கு என்ன செய்வாரு.. வேறொரு வேலைக்காரி தேடிர மாட்டாரா..? இப்படியெல்லாம் காய விட்டா மனுஷன் என்ன செய்வான்..? தப்பு மேல தப்பு பண்றாங்கப்பா..!



ஒரு
உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..
!

http://vijisekar.wordpress.com - இந்தப்
பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?

நிசமாவே
இது பெண்பால்தானா..? அல்லது பெண்பாலின் பெயரில் ஆண்பாலா..?

எங்கயோ போகுதுய்யா தமிழ் மொழி..

வாழ்க
வளர்க..!

வலையுலக வாத்தியார் சுப்பையா அவர்களின் கதைகள் - விமர்சனம்..!

06-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்வி எதற்காக..? உலகம் அறிந்து கொள்வதற்காக.. உலகமெனில் அசையும், அசையாப் பொருட்கள், அவற்றின் மூலதாரம், மனிதர்கள், இவர்தம் படைப்புகள், அந்தப் படைப்புகளின் வரலாறு, உலகத்தின் இயல்பு, நடப்பு, இவை அத்தனையையும் சுருக்கி ஒரு கடுகளவைவிட மிகக் குறைந்த அளவே நம்மால் கற்க முடிகிறது.

இதை வைத்து வாழ்ந்துவிட முடியுமா..? முடியாது.. கல்வி தரும் அங்கீகாரத்தில் கிடைக்கும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது கிடைக்கின்ற பாடங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமக்குக் கிடைத்த கல்வி நமக்கு உபயோகமாக இருக்கிறதா அல்லது வீணாகிப் போனதா என்பதே தெரிய வரும்.

“படித்தவன் பாழும் செய்தால் ஐயோவென்று போவான்” என்பார்கள். இதையே படிக்காதவன் செய்துவிட்டால் இந்த “ஐயோ..”வில் கொஞ்சம் இரக்கக் குணமும் சேர்ந்துவரும்.. “பாவம்.. படிக்காதவன்..” என்று..

ஆகக்கூடி வாழ்க்கையில் எது நல்லது.. எது கெட்டது என்று நாம் தெரிந்து கொள்ள கல்வி பயன்படுகிறது என்றாலும், அதனை பரிசோதித்து பார்க்கின்றபோது சில படித்தவர்கள் படிக்காதவர்கள் போலவும், பல படிக்காதவர்கள் படித்தவர்கள் போலவும் மாறிவிடுவது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில நிகழ்வுகள்.

அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளைத்தான் நமது வலையுலக வாத்தியார் திரு.சுப்பையா அவர்கள் தனது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஒன்றல்ல இரண்டல்ல.. இதுவரையில் 52 கதைகளை எழுதியிருக்கும் நமது வாத்தியார் அவற்றில் தேர்ந்தெடுத்த 20 கதைகளை மட்டும் இந்த முதல் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அத்தனையும் கற்கண்டுகள். சந்தேகமில்லை.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் செட்டி நாட்டு அறுசுவை மணக்கிறது. செட்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், நடை, உடை பாவனைகள் என்று அத்தனையையும் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

ஒருவர் மீதான இனம் காணாத வெறுப்பும், பார்த்த மாத்திரத்திலேயே எழும் கோபம் சுடுகாடுவரையிலும் நீடிக்கும் தன்மையும் இன்றைக்கும் நாட்டு மக்களிடையே புழங்கி வரும் இன்றைய இயந்திரச் சூழலில் இரண்டுக்கும் முடிச்சுப் போடுவது போல அன்பான பேச்சிலும், நடத்தையிலுமே ஒருவர் மனதை ஒருவரால் வெல்ல முடியும் என்பதை தனது கதைகளில் சொல்லியிருக்கிறார் வாத்தியார்.

வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்களை காணோம். முடிச்சுக்கள் தெரியவில்லை. சொற்றொடர்களின் ஆதிக்கம் உணரவில்லை.. ஆனால் அந்த செட்டி மண்ணின் மனம் மணக்கிறது. இந்த மணத்துடன் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தாற்போல் வாழ்க்கை அனுபவங்களை நம் முன் வைத்திருக்கிறார்.

செட்டி நாட்டு அரண்மனைகளின் வெளிப்புறம் நமக்கு அளிக்கும் தோற்றத்திற்கும் உட்புறமாக இருக்கும் மாந்தர்களின் மனப்போக்கிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை வேறொரு கோணத்தில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் வாத்தியார்.

முதல் கதையான ‘மதிப்பும், மரியாதை'யுமே என்னை அசர வைத்துவிட்டது.. என்னே ஒரு கதைக்கரு..! நிமிடத்தில் ஏற்படும் கோபத்தின் விளைவால் பெற்றெடுத்த பிள்ளைகள் வேண்டாதவர்களாகி விடுவார்களா என்ன..? வேண்டாம் என்கிறார் வாத்தியார். ஆனால் அதற்காக அவர் சொல்கின்ற சமாதானம்தான் அருமை..

ஒவ்வொருவரின் ஊரிலும், ஏதோவொரு தெருவில் மீனி ஆச்சியைப் போல ஒருத்தரை நம்மால் பார்க்க முடியும். எனது சொந்த அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன். “அது, அது கொழுப்பெடுத்து அலையுதுக..” என்று காலம் முழுவதும் பழிச்சொல்லை சுமந்து கொண்டு திரிந்த அந்த ஜீவன்களின் அகத்தையும், புறத்தையும் ஒருசேர கண்டுணர்ந்திருக்கிறார் அந்தக் கதையில்.. மெளனமும் ஒரு மொழி என்பதை அவர் காண்பிக்கும் அந்த இடம் ஒரு ஹைக்கூ கவிதை..

கருப்பஞ்செட்டியாரின் கஞ்சத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற கதையில் வாத்தியார் சொல்கின்ற நீதி, “போகும்போது எதைக் கொண்டு போகப் போகிறாய்..? இருக்கும்போது இருப்பவர்களுக்குக் கொடு.. அந்தப் புண்ணியமே நீ விடைபெறும்போது உடன் வரும்..” என்கிற தத்துவத்தை அழகாக போதிக்கிறது.

சந்தேகம்.. சந்தேகம்.. எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டு செய்துகொண்டு நேரமில்லை நேரமில்லை என்று அலுத்துக் கொள்வதிலும் சிலர் முனைப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு நீதிக்கதை உண்டு.. ‘நல்ல துணை'யில்.. உண்மையில் இது மாதிரியான ஒரு பக்கத்தை நாம் இதுவரையில் திரும்பிப் பார்க்காததால்தான் இந்த புலம்பல்கள் அதிகம் உலவுகின்றன என்று நினைக்கிறேன்.

உடன் பிறந்தோரை சந்தேகத்துடன் பார்க்கும் சில உடன்பிறப்புக்கள், பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், ஒன்று சேர வைக்கத் துடிக்கும் கணவன்மார்கள், விதவையான மாமியாரை தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்ட மனைவி, ஆசை, ஆசையாக வளர்த்த தனது பாட்டியின் பூர்வீக வீட்டை நிலை நிறுத்த ஆசைப்படும் பேரன்.. அம்மாவையும் அனுசரித்து மனைவி வீட்டாரையும் பெருமிதப்படுத்தும் கணவன், நட்சத்திரம், ஜாதகம் என்று நம்பிக் கொண்டு மகனுக்கு பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஒரு பெற்றோர் என்று நமது கண் முன்னே அக்கம்பக்கம் வீடுகளையே கொண்டு வந்து காட்டுகிறார் வாத்தியார்.

இவர்களுக்கு சொல்கின்ற தீர்வுதான் நாம் முன்பு யோசித்திராத கோணம். திரைப்படங்களில் இதுவரையில் பார்த்திராத காட்சியமைப்புகள்தான் கைதட்டல் பெறும். அதே போலத்தான் வாத்தியாரின் கதை சொல்லும் நீதி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

கோவிலுக்கு சமமான வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கும் தொழில் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் அவ்வளவுதான் என்று நினைத்த செட்டியாருக்கு, அதற்கான ‘பரிசு' கிடைத்தவுடன் அவர் மூலம் கேட்கின்ற கேள்வியில் இருக்கிறது நமது வாத்தியாரின் பாடம் சொல்லித் தரும் திறமை.

கொஞ்சமும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ஒவ்வொரு கதையாடலிலும் ஒரு விஷயத்தைச் சொல்லித் தருகிறார். பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். பூர்வீக மண்ணைத் துறந்து அயல் மண்ணில் பணம் ஈட்டும் மகனது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படும் பாட்டிகள் அத்தனை ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கவலைப்படுகின்ற விஷயம் அயல் நாட்டில் இருக்கின்ற அந்த இளசுகளுக்குத் தெரியுமா? புரியுமா..? புரிந்தாலும், புரியாவிட்டாலும் பாட்டிகளின் மனநிலை இதுதான் என்பதை புரிய வைக்கிறார் ஒரு கதையில்..

‘மண் கெட்டது மனசால.. பெண் கெட்டது வாயாலே' என்கிற பழமொழிக்கேற்ப பேசியே வம்பை வாங்கும் ஒரு மனைவியை திருத்த கணவன் செய்யும் முயற்சிகளை மிக, மிக வித்தியாசமாக அணுகியிருக்கிறார் வாத்தியார். சாட்சாத் இது மனோதத்துவ ரீதியான அனுபவம். சிறுகதைகளுக்குள் பெரும் உரையாடல் இது..

கதைகளைச் சொல்வதற்கு ரொம்ப மெனக்கெடவில்லை வாத்தியார். மிகச் சுலபமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி, மிக எளிமையாக, படிக்கத் தூண்டுகின்ற விதத்தில் ‘நச்' என்று முடிவை மட்டும் முடித்து வைத்து அடுத்த கதையை படிக்க வைக்கிறார்.

“பாடம், படிக்காமல் கெட்டது.. பிள்ளை, கண்டிக்காமல் கெட்டது.. கடன், கேட்காமல் கெட்டது.. உறவு, பார்க்காமல் கெட்டது..” என்று நமது வாழ்க்கை ரகசியங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் வாத்தியார்.

துணைக்கு என் அப்பன் முருகனையும், அவரது மற்றும் எனது ஆரூயிர்க் காதல் கவிஞன் கண்ணதாசனையும் அழைத்துக் கொண்டுள்ள வாத்தியார் பக்கத்திற்கு பக்கம் இவர்களை முறைப்படுத்தி பெருமிதப்பட்டுள்ளார்.

வாழ்க்கையை வாழ்வதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் வாழ விடுகிறதா வாழ்க்கை அனுபவம்..? சோகங்களும், ஆற்றாமைகளும் சேர்ந்து மனிதரை துயரக்கடலில் தள்ளிவிடும்போது துணைக்கு நம்முடன் நிற்பது அந்த இறைவன் மட்டுமே எனும்போது அதுதான் நமது கடைசி நம்பிக்கை.. இந்த 20 கதையிலும் யாரோ ஒருவருக்கு அந்த அப்பன்தான் துணைக்கு இருக்கிறான். இதுவே நெஞ்சுக்கு நிம்மதி என்கிறார் வாத்தியார்.

நூறு சுய முன்னேற்ற நூல்களைப் படித்தாலும் இதில் இருக்கும் கதைகளின் அனுபவத்தினையும், பாடத்தினையும் உங்களால் பெற முடியாது..

இதுவே வாழ்க்கை என்கிறார் வாத்தியார்..!

அதை வாழ்ந்து பார் என்கிறார் வாத்தியார்..!

நன்றியிலும் நன்றி வாத்தியாருக்கு...!

படித்துப் பாருங்கள்..! மனித வாசனை புரியும்..!!!


செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்
எழுதியவர் : SP.VR. சுப்பையா
பக்கங்கள் : 160
விலை : ரூபாய் 75.

வெளியீடு

உமையாள் பதிப்பகம்
பழைய எண் 94 : புது எண் 14
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம் நகர்
கோயம்புத்தூர் - 641 009.
அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்
18 / 171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600001
தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை-600017
தொலைபேசி எண் - 24353742

இட்லி - தோசை - வடை- பொங்கல் - சட்னி - சாம்பார் - 03-07-2009

03-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரபாகரன் மரணம் - உண்மைதான் என்ன..?!!



பிரபாகரனின் மரணம் இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் தமிழ்ப் பத்திரிகைகளின் சர்க்குலேஷனை தற்போது பிரபாகரனே தீர்மானித்து வருகிறார். நக்கீரனும், ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் கட்டாயமாக ஒவ்வொரு இதழிலும் 2, 3 பக்கங்களை பிரபாகரனுக்காகவே ஒதுக்கி வருகிறார்கள்.

அவர் மரணமடையவில்லை என்று சீமானும், வைகோவும், நெடுமாறனும் இன்ன பிற தீவிர ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். இறந்துவிட்டார் என்று எதிர்ப்பாளர்களும், நடுநிலையாளர்களும் சொல்லி வருகிறார்கள். இதில் எப்படி, எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று பத்திரிகைகள் தலையைப் பிய்த்துக் கொண்டுதான் உள்ளன.

நக்கீரனுக்கு பரவாயில்லை. ஜெகத் கஸ்பார் சிக்கியுள்ளார். மனிதர் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய புகைப்படங்களை வைத்து, புதிய புதிய சம்பவங்களைச் சொல்லி வருகிறார்.

30 பகுதிகளுக்குப் பின்பு இன்றைக்குத்தான் பிரபாகரனின் மகள் துவாரகாவும் சிங்களப் படைகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்ததாக கஸ்பார் சொல்லியிருக்கிறார். கஸ்பார் இதை எப்போது, எங்கே போய் முடிப்பார் என்று தெரியவில்லை.. அதற்குள் புத்தகத்திற்கு ஆர்டரே சேகரிக்கத் துவங்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன்..

ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் அனைத்து வலைத்தளங்களையும், இணையத் தளங்களையும் அலசி, ஆராய்ந்து, மேய்ந்து அதிலிருந்து பெயர்த்தெடுத்து செய்திகளைத் தொகுத்தளித்து வருகிறார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது..

உண்மையாகவே பிரபாகரன் மரணமடையவில்லை எனில் அந்த வீடியோவில் காட்டப்படுபவர் யார் என்பது கேள்விக்குறிதான். இல்லை என்பவர்கள் முக அடையாளம் சற்று மாறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எதுவோ.. அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கட்டும். அது பிரபாகரன்தான் என்று உறுதியாகச் சொல்லும் ஜூனியர்விகடன் அவர் நெற்றியில் விழுந்திருக்கும் கோடாரி வெட்டு எப்படி விழுந்தது என்பதை கதையாகச் சொல்லியிருக்கிறது. வழக்கம்போல அர்ச்சனையை வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. தமிழகத்தில் பிரபாகரனின் மரணத்தை அவரது ஆதரவாளர்கள் ஒத்துக் கொண்டாலோ அல்லது இல்லை என்று நிரூபித்தால் ஒழிய, மறுபடியும் தமிழக மக்களிடையே ஈழம் குறித்தான கோபக்குரல் எழும்ப சாத்தியமில்லை.

----------------------

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..!

தமிழக சட்டசபையில் சென்ற வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் நேருவுக்கும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையில் சொற்போர்.

“1000 கோடி, 2000 கோடி என்று போக்குவரத்துக் கழகங்களின் வசூல் தொகை வந்தாலும் எப்போதும் பற்றாக்குறை என்றே கணக்குக் காட்டுகிறீர்களே.. மிச்சம், மீதியிருக்கும் தொகையெல்லாம் எங்கேதான் செல்கிறது..?” என்றார் செங்கோட்டையன்.

பதிலளித்த நேரு, “உங்களது ஆட்சியிலும் இதே தொகையைத்தான் சொன்னீர்கள். இதே கணக்கைத்தான் காட்டினீர்கள்.. அப்போதும் மிச்சம், மீதிருந்த தொகையெல்லாம் எங்கே போனதோ, அதே இடத்திற்குத்தான் இப்போதும் செல்கிறது..” என்றார்.

அள்ளுவதிலும், மிஞ்சுவதிலும், விஞ்சுவதிலும், காட்டிக் கொடுப்பதிலும் கழகத்தினர் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றால் சும்மாவா..?

-----------------------------

கலைஞர்களை மதிக்கத் தெரிந்த கேரள அரசு..!


சென்ற 29-ம் தேதியன்று கொச்சியில் மரணமடைந்த மலையாளத் திரைப்படக் கதாசிரியரும், இயக்குநருமான நீலலோகிததாஸின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சியில் பார்த்து கொஞ்சம் பெருமிதப்பட்டேன்.

தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றிருக்கும் அந்தக் கலைஞனுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்திக் கொடுத்திருக்கிறது கேரள அரசு. பாராட்ட வேண்டிய விஷயம்.

நடிகை ஸ்ரீவித்யாவையும் இதே போன்று போலீஸ் மரியாதையுடன்தான் மேலுலகம் அனுப்பி வைத்தது அப்போதைய கேரள அரசு.


இது போன்று கலைஞர்களை மதிக்கத் தெரிந்த அரசுகளும், மக்களும்தான் நமக்குத் தேவை. படிப்பறிவில் முதலிடம் என்பதோடு கலைஞர்களை கவுரவிப்பதிலும் முதலிடம் பிடிக்கிறது கேரளா.

வாழ்க அம்மாநில அரசும், மக்களும்..!

நம் ஊரிலும்தான் இந்த ஆண்டு மக்களால் போற்றத்தக்க கலைஞர்கள் மூவர் இறந்தார்கள். கண்டு கொண்டார்களா இவர்கள்..?

ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்..!

நமக்கு இம்புட்டுத்தான்..!

------------------------------

நல்லதொரு தீர்ப்பு..!


இன்றைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

“ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானதுதான்.. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதல்ல..” என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவும், நீதிபதி மல்ஹோத்ராவும்.

வரவேற்க வேண்டிய விஷயம்.

புனிதம், புனிதம் என்று நமக்குள்ளேயே ஆயிரத்தெட்டு சாக்கடைகளை வைத்துக் கொண்டு மருத்துவ ரீதியான குணங்களை உடையவர்களை சமூகக் கேடுகள் என்று விமர்சிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான எண்ணம் ஒருவருக்கு எப்போது, எப்படி ஏற்படுகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத சூழல் இருக்கின்றபோது அது பிறப்பிலேயே அப்படித்தான்.. மருத்துவ ரீதியான குணம் அல்லது குறைபாடு என்று நினைத்து நாம் அதை அரவணைத்துச் செல்லத்தான் வேண்டும்.

“உலக நாடுகளை பாருங்கள்.. என்ன வளர்ச்சி பாருங்கள்.. என்ன உழைப்பு பாருங்கள்..” என்றெல்லாம் வாய் கிழியப் பேசும், எழுதும் சிலர் இதை மட்டும் முகத்தைச் சுழித்துக் கொண்டு எதிர்ப்பது கேலிக்கூத்தான விஷயம்.

இது பொதுமக்களிடையே சாதாரண விஷயம் என்ற ரீதியில் வந்தால்தான் இது போன்ற கவர்ச்சிகள் பிஸ்கோத்தாகி வரவிருக்கும் நம்முடைய சந்ததியினரின் கவனம் வேறு பக்கம் திரும்பும். இந்தத் தீர்ப்பை மனதாரக் கை தட்டி வரவேற்கிறேன்.

இதேபோல் பாலியல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்து அவர்களையும் நெறிப்படுத்திவிட்டால் அதுவும் நியாயமானதுதான். எந்த ஆட்சி வந்தாலும், என்ன செய்தாலும் அந்தத் தொழிலை வீழ்த்த முடியாது என்பதால் நாம் அதற்கு இணங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம்.

ம்.. எல்லாம் நாம பேசலாம்.. நம்ம அரசியல்வியாதிகளுக்கு எங்க இதெல்லாம் தோணப் போகுது..?

-----------------------------

கிசுகிசு - 1

தமிழர்கள் எங்கே இருந்தாலும் ஒருவர் மாற்றி ஒருவர் காலை இழுத்துவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நண்டு கதையைச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதேபோல் தமிழர்களின் தலையாய்ந்த புண்ணியமார்த்தமான குழுமத்திலும் இப்போது அடிதடி, உட்கட்சிப் பூசல். நான்தான் அடுத்த ஆய்வாளர்.. எனக்குத்தான் பதவி.. அவனுக்குக் கொடுக்கக் கூடாது.. நான் எத்தனை எழுதியிருக்கேன் என்று கண்ணீர் விடாத குறையாக அப்ளிகேஷன்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பித்த கனவான் பாவம்.. விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

கிசுகிசு - 2

பல வருடங்களாக வலையுலகத்திற்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த வைரஸானவரின் தளத்திலும் இப்போது உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது.

என்னால்தான்.. உன்னால்தான்.. இல்லை அவனால்தான் என்றெல்லாம் மாறி, மாறி எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழை இருபத்திரண்டாம் நூற்றாண்டு அழைத்துப் போகப் போகிறார்களாம்.

தமிழ் வளரும்.. தமிழர்கள்..?

--------------------------------

அவங்க நடிகருங்க.. இவங்க..?

நடிகர் சங்கத்து பக்கம் டீ குடிக்கப் போயிருந்தேன். இரண்டு புள்ளிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். காது கொடுத்ததில் கிடைத்தது ஒரு பிட்டு நியூஸ்..

“கொச்சில அம்மா பங்ஷன்ல மோகன்லால் மேடைல உக்காந்திருக்கார். மம்முட்டி எதிர்த்தாப்புல கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்திருக்கார். ஒருத்தர் பாக்கியில்லே.. அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜர் ஆகியிருக்காங்க.. இங்க நம்ம சங்கத்துல வருஷத்துக்கு ஒரு தடவை நடத்துற பொதுக்குழுவுக்கு ஆயுட்கால உறுப்பினர்களே வர மாட்டேங்குறாங்க.. அப்புறம் எப்படிய்யா தமிழ் சினிமா வளரும்..?”

இன்னொருத்தர் சொன்ன பதில்.. “அவங்க மலையாள சினிமாவுக்காக நடிக்க வந்திருக்காங்க.. நம்மாளுக அவங்க குடும்பத்துக்காக நடிக்க வந்திருக்காங்க.. அவ்ளோதான்..”

“விடக்கூடாதுய்யா.. அடுத்த மீட்டிங்ல பாரு.. நான் எப்படி பேசுறேன்னு..?” என்றார் மூத்தவர்.

பார்ப்போம்.. என்ன நடக்கும்னு..?

-----------------------------------------

பதிவர்களின் தாகசாந்தி சந்திப்பு..!

வலையுலக நண்பர் தண்டோரா மணியை பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். மாலை மங்கியதும், அசத்தலான நடை, உடை பாவனையிலும், புல் மேக்கப்பிலும் கேபிள்சங்கர், நித்யகுமாரன், ஜாக்கிசேகர் மூவரும் வந்தனர்.

“சும்மா பதிவர் சந்திப்புதான்.. ஏன் நாங்க பேசக் கூடாதா..? பேசுவோம்ல.. என்ன அண்ணே..?” என்றெல்லாம் கொஞ்சியவர்கள், கெஞ்சியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து தாகசாந்தியில் ஐக்கியமான பின்பு பேசிய பேச்சு இருக்கிறதே பாருங்க..

எதையுமே எழுத முடியாதுங்கண்ணா.. அவ்ளோ மேட்டரை எடுத்து அள்ளி விடுறாங்க.. பவுன்ஸரா வருது.. சிக்ஸரா பறக்குது.. அண்ணன்ற வார்த்தை யோவ்ல போய் முடிஞ்சு எனக்கே ஜிகர்தண்டா சாப்பிடுற நிலைமை ஆயிருச்சு..

இனிமே இது மாதிரி தாகசாந்தி நிகழ்ச்சியை எல்லாம் ரகசியமா கேமிரால பதிவு பண்ணி வலையேத்தணும்யா.. எத்தனை பேர் வண்டவாளம்லாம் வெளில வரும்னு பார்க்கலாம்.

இதுல எனக்கே உலை வைக்கப் பார்த்தாரு ஜாக்கி. ரெண்டு 'நெப்போலியனை' கைல கொடுத்து “சும்மா தூக்கிப் பாருண்ணே”ன்னு சொல்ல, நானும் பாட்டிலை தூக்கிக் காட்டுன உடனேயே போட்டோ புடிச்சு பத்திரப்படுத்தி வைச்சிக்கிட்டாரு. எனக்கா தெரியாது என்ன செய்வாங்கன்னு..? நான் ரகசியமா அதை டெலீட் செஞ்சதுல ஜாக்கி தம்பிக்கு மனம் கொள்ளா வருத்தம்..

'பிரபல பதிவரின் உண்மை முகம்'ன்ற தலைப்புல பதிவா போட நினைச்சிருந்தவரோட நினைப்புல, மண்ணள்ளிப் போட்டுட்டேன்னு பொறுமிக்கிட்டிருக்காரு.

கொஞ்சம் கூல் வாட்டரா குடிண்ணே..! வயித்தெரிச்சல் அடங்கிரும்..!

--------------------------------

அசராமல் சிரிக்க வைக்கும் 'வில்லு..!'

'வில்லு' படம் ஓடி முடித்து டப்பாவில் சுருண்டிருக்கும் இப்போதும் அது தொடர்பான நகைச்சுவைகள் குறைந்தபாடில்லை போலும்.

நண்பர் ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பியிருந்த இந்த யூடியூப் படத்தில் இருக்கும் நகைச்சுவை ஏ ஒன் ரகம்.

கச்சிதமான வசனங்கள். அழுத்தமான, நியூஸ் ரீடிங்கை போன்ற படிப்பு, நல்ல குரல் வளத்தேர்வு, பேட்டி, முடிவுரை என்று கலக்கியிருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

யூடியூபை வலைத்தளத்தில் இணைப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே முகவரியை மட்டும் தருகிறேன். கோபிக்க வேண்டாம்.

http://www.youtube.com/watch?v=9S4cEcwV0IA

--------------------------------


FACEBOOK-ல் ஒரு கலகம்..!

முகம் தெரியாத நண்பர்கள் தெரிந்தவர்களுடன் சங்கிலித் தொடர்போல தொடர்பு கொண்டபடியே செல்ல இத்தளம் மிகவும் உதவுகிறது. ஆர்க்குட்டைவிட எனக்கு இதனை மிகவும் பிடிக்கிறது.

ஆனால் இதிலும் ஆர்க்குட் போலவே போலித்தனம் தலைவிரித்தாடுகிறது. இதில் கலைஞரின் மகள் கனிமொழியின் பெயரில் ஒரு முகவரி இருக்கிறது. அதில் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் லின்க் இருப்பதால் பலரும் இணைந்துவிட்டார்கள். கடைசியில் பார்த்தால் அது கனிமொழி கிடையாதாம். யாரோ அவர் பெயரில் நடத்தி வருகிறார்களாம்.

இது போன்று பல பிரபலங்களின் பெயர்களில், பல நடிகைகளின் புகைப்படங்களுடன், பல அடையாளம் தெரியாத பெண்களின் புகைப்படங்களுடன் முகவரிகள் திறக்கப்பட்டிருப்பதாக தெரிந்த நண்பர் தெரிவித்தார்.


நானும் பார்த்து பார்த்துத்தான் இணைந்தபடியுள்ளேன். சிலருடைய நட்பு சுவையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சூர்யா, தல அஜீத். நம்முடைய முன்னாள் வலைப்பதிவர் ஐகாரஸ் பிரகாஷ் தினமும் தவறாமல் இங்கு ஆஜராகி ஏதாவது ஒரு தத்துவத்தையோ, அல்லது செய்தியையோ சொல்லியபடியே இருக்கிறார். ஆனால் மூணே வரி.. பேஸ்புக்கின் பிரபலத்திற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.


'டயானா மரியம் கூரியன்' என்ற பெயரில் நயன்தாராவின் புகைப்படத்துடன் கூடிய முகவரி ஒன்றும் உள்ளது. அதில் நேற்றில் இருந்து திடீரென்று பிரபுதேவாவும் நயன்தாரா நிற்கும் புகைப்படம் சுயவிவரப் பக்கத்தில் இருக்கிறது. கேட்பவர்களிடமெல்லாம் நான்தான் நடிகை நயன்தாரா என்று பதில் வருகிறது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை. விசாரணை கமிஷன்தான் வைக்க வேண்டும் போலும்..!

அசத்துகின்ற நாடோடிகள் கூட்டம்..!



அருமையாக உள்ளது 'நாடோடிகள்' திரைப்படம். 'நிச்சயம் சூப்பர் ஹிட்' என்று இடைவேளையிலேயே சசிகுமாரின் சட்டையைப் பிடித்துக் கொஞ்சிப் பேசி சொல்லிவிட்டார்கள் ரசிகர்கள்.

இது போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போதுதான் இந்த 'அல்டாப்பு', 'சிக்ஸ்ட்டி பேக்கு'.. 'பார்ட்டி பேக்கு' ஹீரோக்கள் எல்லாம் டங்குவாரு அந்துபோயி வீட்டுக்கு ஓடுவாங்க..

கதைதாங்க ஹீரோ. அதைக் கச்சிதமா சுமக்கிறதுதாங்க ஹீரோத்தனம்.. இந்தப் படத்தின் வெற்றி சொல்லும் ரகசியம் என்னவெனில் இனிமேலும் தமிழ் சினிமா ரசிகனை ஏமாற்ற முடியாது என்பதுதான். வாழ்க சசிகுமாரும், சமுத்திரகனியும்.

எனது முழு நீள விமர்சனத்தை மிகச் சரியாக 'நாடோடிகள்' திரைப்படம் வெளியான 30-வது நாளில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். என்ன சரிதானே..?

மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!!!