25-12-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நன்றி.. நன்றி.. நன்றி..!!!
இப்படி எத்தனையோ நன்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்..
ஒரு மணி நேரம் எனது வலைத்தளம் திறக்கப்படவில்லையென்றவுடன் என்னுடைய கவலையைவிடவும் சக பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களுக்கேற்பட்ட துன்பம்போல பதறியடித்து விசாரித்த பண்பு இழந்ததை மீட்டே தீர வேண்டும் என்கிற வெறியையே எனக்குள் ஏற்படுத்தியது..
எனது வலைத்தளம் ஏதோ ஒரு மால்வேர் வைரஸை பரப்புகிறது என்றார்கள். முடக்கினார்கள். மிகச் சரியாக 25 நாட்கள் கழித்து இன்றைக்குத்தான் எனது தளம் எனக்கு மீள கிடைத்திருக்கிறது.. மிக்க மகிழ்ச்சி..
பதிவுலக நண்பர்கள்.. பார்வையாளர்கள்.. ரசிகர்கள்.. என்று அத்தனை தரப்பிலுமிருந்தும் விசாரணைகளையும், ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்று அத்தனையிலும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..!
பின்னூட்டமிடாவிட்டாலும் பின் தொடர்பவர்கள் இத்தனை பேரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு முன்பின் அறிந்திராதவர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது நாம் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறோம் என்று நினைத்து சோர்வடைந்த மனம் அதிலிருந்து மீண்டது.
மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தாலும், மீள வைப்போம் என்ற உறுதியுடன் இருந்த வலையுலக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
சோதனையைக் கொடுத்தாலும் இறுதியில் நல்லது செய்வான் என்கிற எனது நம்பிக்கையை பொய்யாக்காமல் தனது கடமையைச் செய்திருக்கும் என் அப்பன் முருகனுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..!
மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாதவண்ணம் தடுக்க சைட்பாரில் இருந்த பலவற்றையும் நீக்கிவிட்டேன்.. இப்போது இருப்பவைகள் பிளாக்கரின் உதவிகள்தான் என்பதால் வைரஸ்கள் அண்டாது என்று நினைக்கிறேன்..!
இருந்தபோதிலும் நண்பர்களே.. பதிவுகளை கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடரலாம் என்கிற ஒரு கட்டாயம்..
ஆகவே.. அவசரம் எதுவுமில்லாத சூழலில் ஒரு மாதம் கழித்து மீண்டும் வலையுலகில் சந்திப்போம்..
எழுதுவதில்தான் தற்காலிக நிறுத்தம்.. பின்னூட்டங்கள் இட அல்ல. அது வழமை போலவே செயல்படும்..!
பதிவுலக நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியைக் கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்..!
உண்மையுடன்,
உண்மைத்தமிழன்
|
Tweet |