முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?

31.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
 



முத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ' அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..

இரவு 2 மணி தாண்டியும் களைப்பு தெரியாமல் உழைத்துவிட்டு, மறுபடியும் இணையத்தைத் துழாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். அந்தத் துழாவுதல்.. தேடலின்போது எதை, எதையெல்லாம் முத்துக்குமார் கற்றுக் கொண்டாரோ, தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை.. ஆனால் இந்தத் தற்கொலை முடிவை எங்கேயிருந்து கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை.

முந்தைய இரவில்  தனது கொளத்தூர் வீட்டில் தன்னிடமிருந்த ஒரு டைரியில் தனது இறுதியறிக்கையைத் தயார் செய்திருக்கிறார்.  விடிந்தும், விடியாத அந்த அதிகாலையிலேயே தனது கொளத்தூர் வீட்டில் இருந்து கிளம்பி பெண்ணே நீ அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் முத்துக்குமார். அப்போது நேரம் அதிகாலை மணி 6.10.  டைரியில் இருந்த தனது மரண சாசனத்தை அலுவலக கணினியில் தட்டச்சு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துவிட்டு  மறுபடியும் 9.20 மணிக்கு வெளியேறியவர், நேராக சென்றது நுங்கம்பாக்கத்தில் தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த குருஷேத்திரத்திற்கு.

5 லிட்டர் கேனின் வாய்ப்பகுதி முழுவதையும் அறுத்தெறிந்துவிட்டு பெட்ரோலை தன் மேல் ஷவர்பாத் மாதிரி கொட்டுவதற்கு ஏற்பாடு செய்து எப்படியும் தான் உயிருடன் பிழைக்கவேகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீக்குளித்திருக்கும் முத்துக்குமாருக்கு தனக்கென்று ஒரு குடும்பம் உண்டு. தந்தை உண்டு. அக்காள் உண்டு என்பது ஏன் புரியாமல் போய்விட்டது?

முட்டாள்தனமானது.. மூடத்தனமானது.. என்றெல்லாம் ஒருவகையில் சொல்லிவிடலாம். ஆனால் அந்தத் தற்கொலை எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டு செத்து மடி என்று உத்தரவு பிறப்பித்த அந்தக் காரணி யார் என்பது அவருக்கே புரியாத நிலையில் அவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.

14 பக்க அளவில் அவர் எழுதியிருக்கும் இறுதிக் கடிதம் பல நூறு அரசியல் கதைகளை வெளிப்படையாக்கினாலும், இத்தனையையும் யாரோ ஒருவரிடமோ, நெருங்கிய நண்பரிடமோ அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடிய அளவுக்கான இடத்திலோ அவர் பரிமாறியிருந்தால் அவரது உள்ளத்து குமுறல்களுக்கு கொஞ்சமாவது வடிகால் கிடைத்திருக்கும்.

அனைத்தையும் உள்ளே வைத்து அடக்கிக் கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.

“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

தலைமுறை, தலைமுறையாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளின் குடும்பத்து பிள்ளைகளுக்கே வராத இந்தத் தீக்குளிப்பு எண்ணம் முத்துக்குமார் போன்ற சாதாரண ஒரு தொண்டனுக்கு மட்டும் வருகிறதே.. ஏன்..?

மிக, மிக வருந்துகிறேன்.. வேதனைப்படுகிறேன்.. இவருடைய செயலை எந்தவிதத்திலும் என்னால் நேர்மைப்படுத்த முடியவில்லை.

அதனைவிட வேதனை இங்கே அவரது பூதவுடலும், அடக்க ஏற்பாடுகளும் படுகின்ற பாடு.

கொளத்தூர் ஏரியாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கொளத்தூர் பகுதி வியாபாரிகள் தாங்களே முன் வந்து கடையடைப்பு செய்திருக்கிறார்கள். ஏதோ கலவர பூமி என்பதைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினர் அணிவகுப்பு.

முத்துக்குமாரின் வீட்டில் கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு புத்தகங்கள் குவிந்திருக்க.. அங்கே அவரது உடலை வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் கொளத்தூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு அருகில் மெயின் ரோட்டிலேயே ஒரு மேடை போட்டு அதில் அவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அவருடைய உடல் இருந்தபோதே முதலில் வந்து குவிந்தவர்கள் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்தான்.. அவர்களே நேற்று இரவோடு இரவாக பல தட்டிகளையும், போர்டுகளையும், போஸ்டர்களையும் தயார் செய்து வைத்திருக்க ஏரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் முத்துக்குமார் காட்சியளிக்கிறார்.

இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு ஒரு எல்லைக்கோடைக் காட்டி அதனைத் தாண்டி வந்தால் எதுவும் நடக்கும் என்று ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். காவலர்களும் அதனை மதித்து அங்கேயே நின்றிருந்தார்கள்.

அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே.. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது. ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தும் நண்பர்கள் திரளாக குழுமியிருந்தார்கள்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் வந்திருந்தார்கள். சூடாக இருப்பதும் இவர்கள்தான். இதுவரையில் முத்துக்குமாரை யார் என்றே தெரியாதவர்கள் இதில் அதிகப்பட்சம். உணர்வுகளால் ஒன்றுபட்ட இவர்களது கோரிக்கை, முத்துக்குமாரின் இறுதி சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் “தனது உடலை உடனேயே புதைக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும்..” என்பதுதான்..

“முத்துக்குமாரின் உடலை ஊர், ஊராக எடுத்துச் சென்று கடைசியாக தூத்துக்குடிக்கு அவர் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யலாம்..” என்றுகூட பேசினார்கள். பின்பு பேச வந்தவர்களால் இத்திட்டம் வேண்டாம் என்று நயமாகச் சொல்லி திசை திருப்பப்பட்டது.

முத்துக்குமார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினர் என்பதால் துணை இயக்குநர்கள், மற்றும் உதவி இயக்குநர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள்.

காலையில் அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காங்கிரஸ் தலைவர்களையும், அதன் தற்போதைய மாநிலத் தலைவர் தங்கபாலுவையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து ஆரம்பித்து வைத்த துவக்க விழா இப்போதுவரையில் கனஜோராக நடந்து வருகிறது.

மதியம் 1 மணி வரை காத்திருந்தும் கலைஞரிடமிருந்து இரங்கல் செய்தி வராததால் மேலும் கொதிப்பு கூடியது. எப்படி வரும்..? கலைஞரின் 70 வருட அரசியல் வாழ்க்கையின் உண்மையை, வெறும் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கும் முத்துக்குமாரின் அந்த இறுதியறிக்கையை கலைஞர் நிச்சயம் படித்திருப்பாரே...? (மாலையில்தான் கலைஞரின் அறிக்கை வெளியானதாக பின்பு தெரிந்தது) “கற்றது தமிழ்” இயக்குநர் ராம், “கருணாநிதி இங்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால், நாம் முத்துக்குமாரின் உடலை இங்கேயிருந்து எடுக்கக் கூடாது. யார் எடுத்தாலும் அதை அனுமதிக்கவும்கூடாது” என்று ஒரு வீராவேச உரையை நிகழ்த்திவிட்டார்.

அதுவரையில் மதியம் 3 மணிக்கு தூக்கிவிடலாம் என்ற நினைப்பில் அடக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக “இன்றைக்கு வேண்டாம்.. முடியாது.. கூடாது..” என்றெல்லாம் கூக்குரல்களும், கொந்தளிப்பான பேச்சுக்களும் பொறி கலங்க வைத்துவிட்டன.

2 மணி சுமாருக்கு மேடைக்கு வந்த இயக்குநர் சேரன் முத்தாய்ப்பாக ஒரு முடிவைச் சொன்னார். “முத்துக்குமாரே தனது உடலை வைத்து போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். நாம் இன்னும் ஒரு நாள் உடலை வைத்திருக்கக் கூடாதா..?” என்று கேட்டவர் “உடல் அடக்கத்தை நாளை வைத்துக் கொள்வோம்..” என்று சொல்லிவிட கூட்டத்தினரின் கை தட்டலில் கொளத்தூர் ஏரியாவே அரண்டுவிட்டது.

இதன் பின்பு வந்த வைகோ, நெடுமாறன், திருமாவளவன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் “இன்றைக்கே உடல் அடக்கத்தை செய்யலாம்..” என்று சொல்லியும் அது அங்கே இருந்தோரிடம் எடுபடவில்லை. “இதில் நீங்கள் தலையிடாதீர்கள்.. நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று கூடியிருந்த இளைஞர்கள் சொல்லிவிட.. அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

இடையில் நமது காவல்துறை அன்பர்கள் ஒரு அரிய காரியத்தைச் செய்து தொலைத்து, அதன் விளைவையும் அனுபவித்துவிட்டார்கள்.

புரசைவாக்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு தனது கட்சிக்காரர்களுடன் வந்தவர் அப்படியே வந்திருக்கலாம். கூடவே இரும்புத் தொப்பி அணிந்த போலீஸாரை துணைக்கு அழைத்துக் கொண்டு முத்துக்குமாரின் உடல் அருகில் வர.. கூட்டம் கொதித்துப் போய்விட்டது..!

“வெளியே போ..” என்று ஆரம்பித்த கோபவேசங்கள் எல்லை மீறிப் போக.. பாபு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். துணைக்கு வந்தவர்கள் அவரை இழுத்துக் கொண்டு ஓட.. செருப்புக்களும், கல்வீச்சுக்களும் அவரை நோக்கி பறந்தன. தெருமுனை வரையிலும் சென்று அவரை வழியனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்கள் இளைஞர்கள். பாவம்.. தனது உட்கட்சி பிரச்சினையில்கூட இப்படியொரு எதிர்ப்பை சந்தித்திருக்க மாட்டார் பாபு. இத்தனைக்கும் அவர் இதே ஏரியாவில்தான் பல ஆண்டுகளாக குடியிருக்கிறாராம்.

வைகோ பல முறை மைக்கில் பேசினார். “இனியும் வேறொரு முத்துக்குமார் உருவாகவே கூடாது..” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், முத்துக்குமாரின் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்து சொல்லியிருந்த செய்தியை யாரோ ஒருவர் செல்போனில் சொல்ல.. அதனை வைகோ சத்தமாக மறுஒலிபரப்பு செய்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய முத்துக்குமாரின் தந்தையும், மைத்துனரும் முத்துக்குமாரின் இந்த முடிவு குறித்து தாங்கள் பெருமையடைவதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழப் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இது நாளை(31-01-09) நடக்கவிருப்பதாக வைகோ அறிவித்தார். கூடவே “நாளை மூலக்கொத்தள சுடுகாட்டில் நடக்கவிருப்பது தமிழகத்தில் நடைபெறப் போகும் ஈழப் போராட்டத்திற்கு முதல் அத்தியாயம்..” என்றார்.

நல்லகண்ணு “இந்த நேரத்தில் இளைஞர்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடாது. அப்படி செய்தால் அது வேறுவிதமாக திசை திரும்பிவிடும் அபாயம் உண்டு..” என்று எச்சரிக்கை செய்தார். இதனையே பின்பு பேச வந்த அனைவருமே சுட்டிக் காட்டி பேசி முடித்தார்கள்.

ஒரு எம்.எல்.ஏ.வை அடித்துத் துரத்திய பின்பு, கொடும்பாவி எரிப்புகள் தொடர்ந்து மாலை வரையில் இடைவெளிவிட்டு நடைபெற்றது.

ராஜபக்சே, சோனியாகாந்தி, ஜெயலலிதா என்று மூவரையும் கொடும்பாவியாக போட்டு எரித்துவிட்டார்கள். வேறொரு இடமாக இருந்திருந்தால் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கே போலீஸாரின் கண் முன்பாகவேதான் இது நடந்தது. தடுக்கத்தான் யாருக்கும் உணர்வில்லை.

“கொஞ்சம் ஒத்துப் போங்கள்.. தகராறு வேண்டாம்..” என்று காவல்துறையினரிடம் மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள் போலும்.. ஒதுங்கியே இருந்தார்கள். இருக்கிறார்கள்..

பேச வந்த அனைவருமே மத்திய சர்க்காரையும், மாநில அரசின் கையாலாகதத்தனத்தையும் சுட்டிக் காட்டி காய்ச்சி எடுத்தார்கள். மருந்துக்குக்கூட பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடவில்லை. அவர்களும் தட்டி போர்டுகளையும், போஸ்டர்களையும் வைத்துவிட்டு ஏனோ பட்டும், படாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.

மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட.. பதில் முழக்கமும் அமோகமாக இருந்தது. என்னதான் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது மிக, மிக கஷ்டம் என்பதை இந்த இடத்தில்தான் நான் உணர்ந்தேன்.

காலையிலேயே நடிகர் வடிவேலு, நடிகர் சத்யராஜ், இயக்குநர் சீமான் போன்றோர் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சக நிர்வாகிகளோடு வந்து அஞ்சலி செலுத்தினார். தோழர் சி.மகேந்திரன், மற்றும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனும் பேசினார்கள். வர்த்தகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் காலையில் இருந்து இரவு வரையிலும் இருந்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இளைஞர்களும், பரிதாபப்படும் நிலையில் தமிழக மக்களும் நமது முத்துக்குமாரின் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, நமது ஊடகத் துறைகள் தங்களுடைய அரசியல் அரிப்புகளை இதில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள். வாழ்க இவர்களது அரசியல் நியாயம்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.

முத்துக்குமார் தான் இறந்த பின்பு என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதில் ஒரு கால்வாசியாவது இந்த இரண்டு நாட்களில் நடந்தேறும் என்று நான் நினைக்கிறேன்.

நாளை என்ன நடக்குமோ தெரியவில்லை.. பார்ப்போம்..

சரவணன்-நமீதா-கெளபாய்

27.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

பயப்பட வேண்டாம்..!

இன்று மாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நான் பார்த்த மூன்று குறும்படங்கள் பற்றி(கொஞ்சமாகத்தான்) உங்களிடம் பேசப் போகிறேன்.. அவ்வளவுதான்..

"பெண் புத்தி பின் புத்தி!"


படத்தின் பெயர் தெரியாது. ஆனால் திரைப்படம் போலவே எடுத்திருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் கொட்டுகின்ற மழையில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கிறாள். ஏதோ நிறைய நடந்து செல்லும் வேலை செய்திருக்கிறாள் போலிருக்கிறது. அலுப்பாய் இருக்கிறாள். கால் பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது நமது பருத்திவீரன் ஸ்டைலில் ஒரு இளைஞன் வாயில் பற்ற வைக்காத சிகரெட்டுடன் வருகிறான். அவனைப் பார்த்ததும் கையது, வாயது பொத்தி அடக்க ஒடுக்கமாக பயந்தவள் போலாகிறாள் பெண்.

பேருந்து வருகிறது. அந்த இளைஞனும், அவளும் கை காட்ட பேருந்து நிற்கிறது. பேருந்தில் ஏறும் இளைஞனிடம் “உள்ளே சிகரெட் பிடிக்கக் கூடாது..” என்று ஓட்டுநர் எச்சரிக்கிறார். பயல் கேட்காமல் அலட்சியமாக பார்க்கிறான். அவன் அருகில் நிற்கும் பதட்டத்தில் அந்தப் பெண் தனது பர்ஸை துழாவி, துழாவி நாணயத்தை எடுத்து உண்டியலில் போட்டுவிட்டு உள்ளே செல்கிறாள்.

டிரைவர் போட்ட பிரேக்கில் அவள் கையில் இருந்த பை நழுவி விழுக.. அதில் இருந்தவைகள் அனைத்தும் பேருந்தின் உள்ளே சிதற.. அவளும் கீழே விழுகிறாள். ஆபாத்பாந்தனாக இளைஞன் அவளுக்குக் கை கொடுத்துத் தூக்க முயல.. அவனது கையைத் தட்டிவிட்டுவிட்டு கீழே விழுந்தவைகளை பொறுக்கியெடுத்துக் கொண்டு பேருந்தின் ஒரு மூலைக்குச் சென்று அமர்கிறாள்.

இளைஞன் ஸ்டைலாக அவளைப் பார்த்தபடியே வர தன்னை நோக்கித்தான் வருகிறானோ என்று நினைத்து ஒரு நொடி பயப்படுகிறாள். ஆனால் இளைஞனோ சும்மா, அவளருகில் வருவதைப்போல் பாவ்லா காட்டிவிட்டு வேறொரு இடத்தில் சென்று அமர்கிறான். பெண் பெருமூச்சுவிடுகிறாள்.

அப்படியே தனது கைகளைப் பார்ப்பவள் திடுக்கிறாள். கையில் வாட்ச் இல்லை. எங்கே என்று சீட்டுகளுக்கு அடியில் குனிந்து தேடுகிறாள். அக்கம், பக்கம் தேடுகிறாள். அப்போது அந்த சண்டியர், தனது கையைப் பிடித்தது அவளது நினைவுக்கு வர அவன்தான் திருடியிருக்கிறான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் அந்த இளைஞனும் அவளுடைய படபடப்பையும், பயத்தையும் பார்த்து நக்கலாகச் சிரிக்க கோபாவேசம் ஏற்படுகிறது அவளுக்குள்.

தன் பையில் வைத்திருந்த ஸ்வெட்டர் பின்னும் ஊசியை எடுத்துக் கொண்டு பட்டென்று இளைஞனின் அருகில் வந்து அமர்கிறாள். ஊசியால் ஒரே குத்து.. “மரியாதையா வாட்ச்சை எடுத்து பேக்ல வை.. கமான்.. க்விக்..” என்று வெறி வந்தவள் போல் அவன் காதோரம் சொல்லியபடியே ஊசியால் குத்தத் துவங்க..

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன இளைஞன் தனது பையில் இருந்த வாட்ச்சை கழட்டி அவள் பேக்கில் போடுகிறான். விருட்டென்று எழும் அந்தப் பெண் பேருந்தை நிறுத்தும் சுவிட்ச்சை அழுத்திக் கொண்டேயிருக்கிறாள் டிரைவர் பிரேக் போடும்வரை.

கதவு திறந்தவுடன் மின்னல் வேகத்தில் தாவிக் குதித்து செல்கிறாள். சோர்வுடன் கதவைத் திறந்து வீட்டுக்குள் வருபவள் வந்த வேகத்தில் தனது பேகை அப்படியே கவிழ்க்கிறாள். ஒவ்வொன்றாக கீழே விழுகின்றன. அதில் அந்த இளைஞன் போட்ட வாட்ச்சும் விழுகிறது. அது அவளுடைய வாட்ச் இல்லை. அவனுடைய வாட்ச்.

அப்படியே அவளுடைய பார்வை அங்கேயிருக்கும் டேபிள் நோக்கிப் பாய.. அங்கே சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறது அவளுடைய வாட்ச்.

“ஐயோ” என்ற உணர்வோடு அவள் பார்க்க..

படம் முடிவடைகிறது.


இரண்டாவது குறும்படம்

சரவணன்-நமீதா-கெளபாய்


இது ஒரு அனிமேஷன் திரைப்படம்.

ஒரு குடியிருப்பில் குடியிருக்கும் நாய் ஒன்று எதிர் பிளாட்டில் குடியிருக்கும் நாய் போன்ற நிலையில் இருக்கும் ஒரு சரவணனைப் பார்த்து தினமும் குறைக்கிறது.. சரவணன் தாங்க முடியாத மனக்குடைச்சலில் இருக்கிறான். அக்கம்பக்கம் அனைவருமே தினமும் நடக்கும் கூத்து என்பதாகவே இதனைப் பார்க்கிறார்கள். வாழ்க்கை வெறுக்கிறது சரவணனுக்கு.

மொட்டை மாடிக்கு வருகிறான் சரவணன். அந்தக் கட்டிடத்தின் மேலே மாட்டப்பட்டிருக்கும் ஒரு வினைல் போர்டில் குதிரை ஓட்டியபடி கெளபாய் தோற்றத்தில் ஒருவன் காட்சியளிக்கிறான். அவன் நிற்கும் கட்டிடத்திற்கு நேர் எதிரே பிரம்மாண்டமான போர்டு. அதில் ஒரு நமீதா தனது முன்னழகை மட்டும் காட்டியபடியே இருக்கிறாள்.

இரண்டையும் மாறி, மாறி பார்த்த சரவணன் “நமக்கில்லை.. நமக்கில்லை.. இந்த ஜென்மத்தில் இல்லை.. முருகன்கிட்ட போய் சேருவோம்..” என்று நினைத்து ‘தொபுக்கடீர்' என்று கீழே குதிக்கிறான். அவன் குதிப்பை பார்த்தவுடன் பக்கத்து வீடு, எதிர் வீடு, என்று மனிதர்கள் அலற.. குரைத்த நாய் மேலும் கூடுதலாக குரைக்கத் துவங்குகிறது.

அதுவரையில் போர்டில் சிற்பமாக இருந்த நமீதா படாரென்று போர்டை உடைத்துக் கொண்டு உண்மையான நமீதாவாக வந்து சரவணனை பரிதாபமாக பார்க்கிறாள். நமீதாவே உண்மையாக வந்த பின்பு எதிர்த் திசையில் இருக்கும் கெளபாய் மட்டும் சும்மா இருப்பானா..? அவனும் உயிருடன் வந்தவன் வழக்கமான நம்மூர் சினிமா போல் நமீதாவிடம் சைட் டிராக் ஓட்ட வேண்டியிருப்பதால் தனது வீரத்தைக் காட்டுவதைப் போல் குதிரையில் கழுத்தில் வைத்திருந்த கயிற்றை கீழே போய்க்கொண்டேயிருக்கும் சரவணன் மீது வீசுகிறான்.

பாவிப் பய கெளபாய்.. சொர்க்கத்துல எண்ட்ரியாகி ரம்பா, மேனகா, ஊர்வசியைப் பார்க்க ஆசையாப் போன சரவணன் கழுத்துல கயிறு மாட்டி, அவனை ‘அம்போ'ன்னு அப்படியே தொட்டில் கட்டி ஆட்டுற மாதிரி ஆட்ட வைக்குது.

மேலே நமீதாவைப் பார்த்து கெளபாய், “எப்படி காப்பாத்திட்டேன் பாத்தியா..? வர்றியா கண்ணே.. ‘முக்காபுலா'ன்னு பாடிக்கிட்டே ஆடலாம்..” என்று கண் சிமிட்டி அழைக்கிறான். ஆனால் முருகனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கு.. வைச்சான் பாருங்க ஆப்பு..

தன் கழுத்தில் இறுகிக் கொண்டிருந்த கயிற்றை சரவணன் பிடித்திழுக்க.. அது இன்னொரு முனையைக் கையில் பிடித்திருந்த அந்த கெளபாயின் கையில் சுறுக்காக விழுந்து அவனை கீழே இழுத்து விடுகிறது.

ஒரு நொடியில் கெளபாய் முருகனனின் திருவடியைச் சேர.. தூக்கிவீசப்படும் அப்பாவி சரவணனோ நமீதாவின்............................................. “மார்புக்கு மத்தியிலே செத்துவிடத் தோணுதடி காதலியே” என்பதை நிஜமாகவே உணர்கிறான் அந்த அப்பாவி சரவணன்.

கெளபாயின் சடலத்தை போலீஸார் தூக்கிச் செல்ல..

இங்கே நமீதா உங்களது ‘செல்லத்தைத்' தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள..

படமும் முடிந்துவிட்டது.


மூன்றாவது குறும்படம்

இரண்டு முட்டாள்கள்!



இதுவும் அனிமேஷன் திரைப்படம்தான்..

ஒரு மைதானம் போன்ற நிலப்பரப்பு. வேகாத வெயிலில் ‘வெக்கு', ‘வெக்கு' என்று நடந்து வருகிறான் ஒரு சொட்டைத் தலை மனிதன். அவன் நடையைப் பார்த்தால் எதையோ ஒன்றைத் தேடி அலைகிறான் என்பது மட்டும் புரிகிறது.

வருபவனை வழி மறிக்கிறது ஒரு தடுப்புச் சுவர். வெறியில் வருபவன் திகைக்கிறான். கோபப்படுகிறான். ஆத்திரப்படுகிறான்.

என்ன செய்துவிடும் இந்த சுவர் என்று நினைத்து தனது உடல் வலுவால் அதன் மீது மோதி விழுகிறான். உடல் வலிக்கிறது. தலையால் முட்டுகிறான். தலை வலிக்கிறது. கை முஷ்டியால் குத்துகிறான். வலி தாங்காமல் கையைப் பிடித்துக் கொள்கிறான். காலால் எட்டி உதைக்கிறான். பாதத்தைப் பிடித்துக் கொண்டு அனத்துகிறான். ஓடி வந்து உதைக்கிறான். உதைத்த வேகத்தில் பின்புறமாகப் போய் விழுகிறான்.

எவன் கட்டியது இந்தச் சுவர்..? இதென்ன பெர்லின் சுவரா..? இடிபடாமல் போவதற்கு என்றவன் எவ்வளவோ முயன்றும் பயனளிக்காமல் சோர்ந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்து அமர்கிறான்.

கேமிரா மெல்ல, மெல்ல முழு மைதானத்தையும் காட்ட.. இப்போது அந்தச் சுவர் அந்த மைதானத்தின் பாதி அளவு நீளத்திற்குத்தான் உள்ளது. இரண்டு புற ஓரங்களிலும் செல்வதற்கு பாதை இருப்பது தெரிகிறது. பின் எதற்கு சுவரை உடைக்க முயலும் முட்டாள்தனம்..?

கேமிரா மேலே எழும்பி இந்தப் பக்கம் வர இங்கே கன்னியொருவள் அதே போன்று இந்தப் பக்கமிருந்து சுவற்றை இடிக்க முயற்சித்து முடியாமல் போய், அதே சுவரின் மறுபக்கத்தில் குறுகிப் போய் அமர்ந்திருக்கிறாள்.

இருவரையும் திரையில் ஒன்று சேர காண்பிப்பதோடு படம் நிறைவடைகிறது.

அவ்வளவுதான் மக்களே..

மெக்ஸிகன் நாட்டுத் திரைப்படம் என்று ஆசையோடு போனேன்.. அந்தத் திரைப்படத்திற்குப் பதிலாக முதலில் காட்டிய இந்த மூன்று குறும்படங்களே அருமையாக இருந்ததால் அவற்றையே எழுதிவிட்டேன்.

நன்றி..

எனது ‘புனிதப்போர்' படத்தையும் நான் எங்கிட்டு போய் யார்கிட்ட.. இது மாதிரி போட்டுக் காட்டுறது..? நாலு பேராவது பார்த்தாத்தானே எனக்கு மருவாதை.. முருகன் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குறான்பா..

2009-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு


25.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பத்மவிபூஷன் விருதைப் பெறுபவர்கள் - 10 நபர்கள்

மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் - மகாராஷ்டிரா

பிரபல சுற்றுச்சூழல் அறிஞர் சுந்தர்லால் பகுகுணா - உத்தர்காண்ட்

மிஷனரிஸ் ஆப் சாரிட்டி சிஸ்டர் நிர்மலா - மேற்கு வங்கம்

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் - கர்நாடகா

டாக்டர் சந்திரபிரகாஷ் வத்ஸவா - மகாராஷ்டிரா

எழுத்தாளர் டி.பி.சட்டோபாத்தியாயா - மேற்கு வங்கம்

பேராசிரியர் ஜஸ்பீர்சிங் பஜாஜ் - பஞ்சாப்

டாக்டர் புருஷோத்தம் லால் - உத்தரப்பிரதேசம்

கோவிந்த்நாராயண் - உத்தரப்பிரதேசம்

தொழிலதிபர் ஏ.எஸ்.கங்குலி - மகாராஷ்டிரா

பத்மபூஷன் விருதைப் பெறுபவர்கள் - 30 நபர்கள்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா - பஞ்சாப்

மின்னணுவியல் நிபுணர் சாம் பிட்ரோடா - டெல்லி

பத்திரிகையாளர் சேகர் குப்தா - டெல்லி

லெப்டினட் சதீஷ் நம்பியார் - டெல்லி

கல்வியாளரும், எழுத்தாளருமான சி.கே.பிரகலாத் - வெளிநாடு வாழ் இந்தியர்

சிற்பி கணபதி ஸ்தபதி - தமிழ்நாடு

நடனக் கலைஞர் தனஞ்செயன் - தமிழ்நாடு

நடனக் கலைஞர் சாந்தா தனஞ்செயன் - தமிழ்நாடு

எழுத்தாளர் ஜெயகாந்தன் - தமிழ்நாடு

விஞ்ஞானி கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி - தமிழ்நாடு

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் - தமிழ்நாடு

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா - ஆந்திரா

பேராசிரியர் ராமன்லால் சி.மேத்தா - குஜராத்

திருமதி சம்ஷத்பேகம் - மகாராஷ்டிரா

எஸ்.கே.மிஸ்ரா - ஹரியானா

பேராசிரியர் ஆலப்பட்டு தரன் மேனன் - கேரளா

திருமதி இஷார்ஜட்ஜ் அலுவாலியா - டெல்லி

குன்வார் நாராயணன் - டெல்லி

பேராசிரியர் மினரு ஹாரா - வெளிநாடு வாழ் இந்தியர்

ராமச்சந்திர குகா - கர்நாடகா

பிரிஜேந்திர குமார் ராவ் - டெல்லி

வைத்திய தேவேந்திர டிரிகுனா - டெல்லி

டாக்டர் காலீத் ஹமீது - வெளிநாடு வாழ் இந்தியர்

இந்தர்ஜித் கவுர் பரத்கவுர் - மேகலாயா

கிரித் சாந்திலால்பரீத் - டெல்லி

டாக்டர் பக்த பி.ராத் - வெளிநாடு வாழ் இந்தியர்

டாக்டர் குர்தீப்சிங் ரண்ட்வாரா - டெல்லி

பேராசிரியர் சர்வாக்யா சிங்கத்தியார் - உத்தரப்பிரதேசம்

பேராசிரியர் தாமஸ் கைலாத் - வெளிநாடு வாழ் இந்தியர்

அனில் மணிபாய்நாயக் - மகாராஷ்டிரா

பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் - 93 நபர்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் - மகாராஷ்டிரா

அக்ஷய் குமார் - மகாராஷ்டிரா

மகேந்திரசிங் தோனி - ஜார்க்கண்ட்

ஹர்பஜன் சிங் - பஞ்சாப்

பங்கஜ் அத்வானி - கர்நாடகா

ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார்-பஞ்சாப்

பாடகர் உதித் நாராயணன் - மகாராஷ்டிரா

நடிகர் விவேக் - தமிழ்நாடு

நடிகர் திலகன் - கேரளா

இசைப் பாடகி அருணா சாய்ராம் - தமிழ்நாடு

எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன் - தமிழ்நாடு

டாக்டர் அமீனாஅஹமத்அகுஜா

தேவயானி சாயமூட்டி

கீதா கவுர்

கோவிந்த்ராம் நிர்மால்கர்

குருமயம் கெளராஸ்கர் சர்மா

ஹஸ்மத் உல்லாகான்

திருமதி ஹெலன்கான்

திருமதி ஹேமிபாவா

பண்டிட் ஹிருத்யநாத் மங்கேஷ்கார்

கே.பி.உதயபானு - கேரளா

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் - ஆந்திரா

பேராசிரியர் கிரண்சேத்

குமார்ஷானு பட்டாச்சார்யா

திருமதி லீலா ஓமச்சரி

மாத்தனூர் சங்கரன்குட்டி மாரர்

நிரஞ்சன் கோஸ்வாமி

பாய் நிர்மல்சிங் கல்ஸா

பெனாஸ் மசானி

பிரகாஷ் என்.துபே

டாக்டர் பிரதாபாத்தியாபால்

ராம்கிஷோர் சிப்பா

திருமதி சோலி மித்ரா

சிக்கந்தர்வேல் சைமிள்ளி

டாக்டர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி - தமிழ்நாடு

சுரேஷ் தத்தா

டபசூல் அலி

கலாமண்டலம் கோபி

கோஷ் தாஸ்திதர்

அமீன் சயானி

அபய் சாஜிலினி

டாக்டர் சங்கரரெட்டி

அலோக் மேத்தா

டாக்டர் பெனான்ஜி கோவிந்தார்யா

டாக்டர் பிரேந்தரநாத் தத்தா

பேராசிரியர் கேஜி நவாங்சாம்டன்

பேராசிரியர் ஜலீஸ்அஹமத்கான் டரீன்

ஜயந்த மகாபத்ர

ஜான் ரால்ஸ்டன் மார்ச்

லலிதாங்கப்லா சைலோ

லஷ்மண் பாபு மனே

மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி

நோர்டன் டிசெரிங்

பஞ்சபாக்சே ஜெயராமன்

பேராசிரியர் ராம்சங்கர் திரிபாதி

பேராசிரியர் ரன்பீர் சந்தர்சோப்தி

ரவீந்திரநாத் ஸ்ரீவத்ஸவா

டாக்டர் ஷாம்ஷுர் ரஹ்மான் பரூக்கி

ஷாஷி தேஷ்பாண்டே

சன்னி வெர்கீ

சுரேஷ்க குண்டுஅமோன்கர்

டாக்டர் உத்பல் கே.பானர்ஜி

டாக்டர் ஏ.கே.குப்தா

டாக்டர் அலம்பூர் சாய்பாபா கவுத்

டாக்டர் அரவிந்த்லால்

டாக்டர் அசோக் கே.வைத்

டாக்டர் அசோக்குமார் குரோவர்

டாக்டர் பல்ஸ்வரூப் சவுபரி

டாக்டர் டி.எஸ்.ரானா

டாக்டர் கோவிந்தன் விஜயராகவன்

டாக்டர் கல்யாண் பானர்ஜி

பி.ஆர்.கிருஷ்ணகுமார் - தமிழ்நாடு

டாக்டர் ஆர்.சிவராமன் - தமிழ்நாடு

ஷேக் காதர் நூர்தின் - தமிழ்நாடு

பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் - தமிழ்நாடு
டாக்டர் யாஷ் குலாடி

கே.அசுங்பா சங்க்டம்

ஷியாமளா பாப்பு

சயீத் இக்பால் ஹஸ்னன்

கோரிபரதி நரஸிம்ம ராஜூ யாதவ்

பிரமோத் டாண்டன்ய

பன்ஸிலால் ரதி

பேகம் பில்கீஸ் லத்தீப்

செரீல் கிருஷ்ணமேனன்

ரெவ்ரண்ட் பாதர் ஜோஸப் ஹெச்.பெரைரா

கே.விஸ்வநாதன்

கீப்பு டிஸெரிங் லீப்ச்சா

பேராசிரியர் ஷியாம் சுந்தர் மஹேஸ்வரி

சுனில் காந்திராய்

சுரேந்தர் மேத்தா

ஆறுமுகம் சக்திவேல் - தமிழ்நாடு

பகவது ரகுராம் ஷெட்டி

ஆர்.கே.கிருஷ்ணகுமார்


பாரத்ரத்னா விருது

பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் திரு.பீம்சென்ஜோஷிக்கு வழங்கப்படுகிறது.

பெயர்களை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவர்கள்

http://funkyysoul.wordpress.com/2009/01/25/padmavibhushanpadmabhushan-and-padmashri-awards-for-the-year-2009

இந்தத் தளத்திற்குச் சென்று படிக்கலாம்.

நன்றி :
http://funkyysoul.wordpress.com

கோத்தபாய பக்சே-சரத் பொன்சேகா மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

24.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தச் செய்தி நேற்றைய 'டெக்கான் கிரானிக்கல்' பத்திரிகையில் நான் படித்தது. இதுவரையில் நான் அறிந்திராத செய்தியாக இருந்ததினால், அதனை இங்கே கூடுமானவரையில் மிகச் சரியாக மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.

US LAWYER SEEKS ACTION AGAINST LANKA OFFICIALS

இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பஷில் ராஜபக்சே மற்றும் இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக 1000 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உரிய ஆவணங்களின் மூலம் வைக்கப்பட்டுள்ளதாம்.

புரூஸ்பெயின் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தயார் செய்திருக்கிறார். இவர் ரொனால்டு ரீகனின் ஆட்சிக் காலத்தில் அஸோஸியேட் டெபுடி ஜெனரல் அட்டர்னியாகப் பணியாற்றியவர். மனித உரிமை அமைப்புகளில் அதிக காலம் ஆர்வத்துடன் பணியாற்றியிருக்கிறார். வாஷிங்டன் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் மனித உரிமைகள் பற்றி பல காலம் கட்டுரைகள் எழுதியவராம். அமெரிக்க அரசியல் சட்டம் மற்றும் சர்வதேச நீதிமன்ற விவகாரங்களில் திறன் பெற்றவர்.



















தற்போது TAG(Tamils Against Genocide) என்கிற அமைப்பின் வழக்கறிஞராக உள்ளார்.

கொடுங்கோலர் இலங்கை அதிபர் ராஜபக்சே, இவரது உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்சே, இன்னொரு உடன்பிறப்பு பஷில் ராஜபக்சே, இராணுவத் தளபதி சரத் பொன்சாகே ஆகிய நால்வருக்கும் எதிரான படுகொலைக்கான எச்சரிக்கை தாக்கலை சமர்ப்பித்திருக்கும் புரூஸ், “இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இதன் மீது அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க அரசாங்கமே தனித்து இது போன்ற படுகொலை வழக்குகளை கையாள முடியும்” என்கிறார் இந்த சட்டத் தரணி. இதற்கு இவர் சொல்லும் முதல் காரணம், “கோத்தபாய ராஜபக்சே, பஷில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்” என்பதுதான். இந்த மூவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியிருமைக்கான கிரீன் கார்டை பெற்றுள்ளார்களாம்.








கோத்தபாய ராஜபக்சே கலிபோர்னியாவில் San Dimas என்கிற இடத்தில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டுக்குச் சொந்தக்காரராம்.












இவரது தம்பியும், மகிந்தாவுக்கு அரசியல் ஆலோசகருமான பஷில் ராஜபக்சே கலிபோர்னியாவில் Fontana என்கிற இடத்தில் 5 மில்லியன் டாலர் மதிப்பள்ள வீடு வைத்துள்ளாராம்.











இவர்களுக்கு சளைக்காத சரத்பொன்சேகா தன் மகள் பெயரில் ஓக்லஹாமாவில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.










“கிரீன் கார்டு வைத்துள்ள அமெரிக்க குடிமக்கள் யாரேனும் ஏதாவது திட்டமிட்ட படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பின் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சட்டமான US Genocide Accountability Act(18 U.S.C.1091) வலியுறுத்துகிறது..” என்கிறார் புரூஸ்.

இந்தச் சட்டத்தின்படிதான் தான் இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்திருப்பதாக கூறுகிறார் புரூஸ். இந்த ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் பக்சே சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா நால்வரும் இலங்கையில் தமிழர்களைத் திட்டமிட்டு கொன்று குவித்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

“இந்த ஆதாரங்களை வைத்து அமெரிக்க குடிமகன்களான கோத்தபாயவும், சரத்பொன்சேகாவும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்..” என்கிறார் புரூஸ்.

“ஒபாமா ஆட்சி இந்த அறிக்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..” என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் புரூஸ், “இதற்கான அழுத்தத்தை எமது அமைப்பும், தமிழ் மக்களும் அமெரிக்க அரசுக்குக் கொடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2005-ம் ஆண்டு பக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரையிலும் 13000 சாதாரண சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் சமர்ப்பிக்கட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த கொடூர யுத்தத்தால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ளார்.

“உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இந்த கொடூரத்தனம் வெட்டவெளிச்சமாக இருந்த காரணத்தினால்தான் ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் இலங்கை தோற்றுப் போனது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..?

இலங்கை : தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது என்ன?

குகன்நாதன் என்கிற இலங்கைத் தமிழர், இன்றைய நிலவரப்படி இலங்கையில் என்ன நடக்கிறது? இந்திய, தமிழக மக்கள், அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்கிற கருத்தில் இந்தக் கட்டுரையை எழுதியனுப்பியுள்ளார்.

கொஞ்சம் பெரியதாக இருந்ததாலும், விவரமாக இருந்ததாலும் தனிப் பதிவாக இடுகிறேன்..

இலங்கையில் என்ன நடக்கிறது?

இந்தக் கேள்விக்கு சரியான விடையைத் தெரிந்துகொள்ளாமலே தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

நீண்ட கட்டுரைகளை எழுதி-அவற்றைப் படித்துப்பார்க்கின்ற அளவிற்கு இன்று தமிழக மக்களிடம் பொறுமை இருக்குமா என்பது தெரியவில்லை.ஆனாலும் சில கேள்விகளை முன்வைப்பது இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புவோம்.

* 1) இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தவேண்டும்
* 2) அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மத்திய அரசு இலங்கையை நிர்ப்பந்திக்கவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராட்டங்களை நடாத்துகின்றன. திருமாவளவன் கூட சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். (சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தபோதே சில நாட்களில் நிறுத்திவிடுவது என்ற முடிவுடனேயே ஆரம்பித்தார் என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பது வேறு விடயம்) ஆக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காகத்தான் இந்த உண்ணாவிரதம் என்பதையும் இவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தை இடையில் முறித்துக்கொண்டு மணலாறு பகுதியில் 2005ம் ஆண்டு மோதலை ஆரம்பித்தபோது பிரபாகரன் மிகத் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். 'தமிழீழத்துக்கான இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்".

ஆக, பிரபாகரன் உலகத்துக்குச் சொன்னது, தமிழீழத்துக்கான போரை, இறுதிப் போரை தான் ஆரம்பித்துவிட்டதாக. இப்போது நடந்துகொண்டிருப்பது இந்தப் போர்தான். தமிழீழத்துக்காக பிரபாகரன் போரை நடாத்திக் கொண்டிருக்கும்போது அதனை நிறுத்தவேண்டும் என்று நீங்கள் யாரைக் கேட்கின்றீர்கள்? அங்கு நடைபெறும் யுத்தத்தில் ஐந்து லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற உங்களின் அக்கறை நியாயமானது என்றால், நீங்கள் அவசரமாக கோரவேண்டியது என்ன? இந்த மக்களை யுத்தம் நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேற்றி, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்பதையல்லவா நீங்கள் உடனடியாக கோரவேண்டும்? ஏன் இதை இன்னமும் நீங்கள் செய்யவில்லை?

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் என்பது உங்களது இரண்டாவது கோரிக்கை. அதுவும் நியாயமானதுதான்.

ஆனால் 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே, இந்நிலையில் அமைதிப் பேச்சுக்கு இலங்கையை வலியுறுத்தும் தார்மீக உரிமை இந்தியாவிடம் இருக்கின்றதா?

இதைத்தான் விடுவோம்.

நோர்வேயின் மேற்பார்வையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதும் பிரபாகரன் கோரியது என்ன?

முதலில் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வுகாணவேண்டும். அதன் பிறகுதான் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பற்றி பேசலாம். ஏ9 வீதி திறக்கப்படவேண்டும் .பிரபாகரன் பேச்சுவாத்த்தைக்கு முன் நிபந்தனையாக வைத்த வீதியைத்தான் ராணுவம் இப்போது மீட்டு, அதனை மக்கள் போக்குவரத்திற்காக திறக்கவிருக்கின்றது. மக்களின் அன்றாட பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியில்தான் சிறிலங்காப் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். புலிகள் கோரிக்கை விடுத்த மக்களின் அன்றாட பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்குத்தான் சிறிலங்கா அரசாங்கம் இன்று முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றது. அந்தப் பணி முடிவடைந்ததும் இனப்பிச்னைக்கான இறுதித் தீர்வை எட்டவேண்டிய கட்டாயம் இலங்கை அரசிற்கு வரும். அப்போது நீங்கள் அழுத்தங்களை கொடுங்கள்.

விடுதலைப் புலிகளைப் பற்றி இலங்கை அரசைப் பொறுத்தவரை அது ஒரு பயங்கரவாத இயக்கம். இலங்கை அரசை மாத்திரமல்ல, உலகம் எங்கும் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உலகிலுள்ள கொடுர பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகள் மூன்றாவது இயக்கமாக அமெரிக்கா கடந்த 2007ம் ஆண்டிலும் பதிவு செய்தது.

உலகை இன்று அச்சுறுத்தும் பாரிய பிரச்னை (உலகை என்கின்றபோது இந்தியாவையும்தான்) பயங்கரவாதம். மும்பையில் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு பல அப்பாவிகளை பயணம் வைத்திருந்தபோது, இந்தியா உடனே செய்தது என்ன? தனது கொமாண்டோ படையை களத்தில் இறக்கி பயங்கரவாதிகளுடன் போரிட்டது. அவ்வாறு உடனே போரிட்டிராமல், அவர்களுடன் பேச்சுவாhத்தை நடாத்தி பணயக் கைதிகளை உயிருடன் மீட்டிருக்கலாமே?

அவ்வாறு செய்யாமல், பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களை அழித்ததுடன், அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரையாவது உயிருடன் மீட்க முடிந்ததா? பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக களத்தில் இறங்கி யுத்தம் நடாத்திய இந்தியா- இலங்கையில் அந்த அரசு தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் புரிகின்றபோது, யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடாத்தவேண்டும் என்று கோருகின்ற தார்மீக உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றதா?

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று உலகம் சொன்னாலும், உங்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு விடுதலை இயக்கம். அப்படியே வைத்துக்கொண்டால், அவ்வாறு நீங்கள் நம்பினால், செய்யவேண்டியது என்ன?

உங்கள் நாட்டில் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் இருந்து முதலில் நீக்குங்கள். புலிகள் இயக்கத்தை உங்கள் நாட்டில் தடைசெய்து வைத்துக்கொண்டு அந்த இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று வேறு ஒரு நாட்டைக் கோருகின்ற தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இந்திய மத்திய அரசு நினைத்தால் சில மணி நேரங்களிலேயே புலிகள் மீதான தடையை நீக்கிவிடலாம். எனவே மத்திய அரசால் செய்யக்கூடிய ஒன்றை முதலில் செய்யுமாறு வலியுறுத்துங்கள். அதற்கான அழுத்தத்தை முதலில் கொடுங்கள்.

தோழர் திருமாவளவன் சில கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார். இந்தக் கோரிக்கைகளை இவர் யாரிடம் விடுக்கின்றார் என்பதே புரியவில்லை. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யவேண்டும் என்று அவர் முதல் கோரிக்கை வைத்திருக்கின்றார். அப்படியெனில் அவர் தனது முதல் கோரிக்கையை வைப்பது இலங்கை அரசாங்கத்திடமோ அல்லது விடுதலைப் புலிகளிடமோதான். இது சாத்தியமானது அல்ல என்பதும் அவருக்கு தெரியாதது அல்ல. ஆனால், பத்துக் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசிடம் முன்வைத்து புலிகளின் யர்ழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த திலீபன் சாகும்வரை தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் .இருந்தானே. அந்த பத்துக் கோரிக்கைகளையும் இந்தியாவால் அப்போது நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதனை அது செய்யவில்லை. அந்த மத்திய அரசிடம் நீங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்யுமாறு கேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று தமிழகம் உண்மையாகவே விரும்பினால், முதலில் செய்யவேண்டியது-

யுத்தத்தில் இடையில் அகப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களை (இது பொதுவான கணிப்பு. ஆனால் அங்கு ஒரு லட்சம் மக்களே தற்போது இருப்பார்கள்) பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றி அவர்கள் குடியிருக்கும் பகுதியை யுத்தமற்ற பகுதியாக பிரகடனப்படுத்தவேண்டும். அந்தப் பகுதியில் புலிகளும் சென்று பதுங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது. அதற்குப் பின்னர் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய (குறைந்த பட்சம் ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்ற) தீர்வு ஒன்றையாவது உடனே சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வலியுறுத்த வேண்டும்.

இதுவே தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது.

இனி நான்...

குகன்நாதன் ஸார்..

புலிகள் மீதான தடையை எமது அரசியல் தலைவர்கள் நீக்க மாட்டார்கள். அதற்கெல்லாம் ஒரு பரந்த மனப்பான்மையுள்ள தலைவர் வேண்டும். அந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு ஆளும் கட்சியில் யாருக்கும் தைரியம் வராது. ராஜீவ் கொலையை மக்கள் முன் வைத்துத்தான் காங்கிரஸ் ராஜீவ் இல்லாத நிலையில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது. பின்னர் ஆட்சியை இழந்தாலும், இன்றளவும் அது இங்கே தியாகமாகத்தான் கருதப்படுகிறது. அந்தச் சூழலில் புலிகள் மீதான தடையை நீக்கினால் அது அவர்களது எதிர்கால ஓட்டு வங்கியையும், காங்கிரஸ் கட்சியின் தியாக பிம்பத்தையும் உடைக்கும் என்பதால் அதனைச் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என்னைக் கேட்டால், நளினிக்கு மன்னிப்பு அளித்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கின்றபோது அதே மன்னிப்பை விடுதலைப்புலிகளுக்கும் வழங்கித் தொலைக்கலாம்.. ஒன்றும் தப்பில்லை என்பேன். எந்தத் தவறுமே தொடர் கதைகளாகத்தான் வருகின்றனவே தவிர திடீரென்று உருவாக்கப்பட்டவையல்ல..

நீங்கள் சொல்லியிருக்கும் யோசனை ஏற்கக்கூடியதுதான்..

ஆனால் எமது மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையை எப்படியாவது தேர்தல் வரைக்கும் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்று அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் இலங்கைப் பிரச்சினையினைத் தீர்த்துவைப்போம் என்று சொல்லி ஓட்டுப் பொறுக்க.. ஒரு நல்ல வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக பேசக்கூடிய, அவர்களைப் பற்றி நினைக்கக்கூடிய பிரதமர்கள் நமக்குக் கிட்டவில்லை.. இந்திராகாந்தியைத் தவிர..

இதோ எமது பிரதமர் பைபாஸ் ஆபரேஷன் செய்ய மருத்துவமனைக்குள் குடிபுகுந்து விட்டார். இனி அவர் வெளியே வந்தவுடன் "ஐயையோ.. ஸார்கிட்ட இப்படி அதிர்ச்சியான விஷயத்தையெல்லாம் சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க.." அப்படீன்னு சொல்லி எமது அரசியல்வியாதிகள் இன்னும் கொஞ்சம் காலம் கடத்தத்தான் போகிறார்கள். அதற்குள் தேர்தல் வந்துவிட்டால் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப் பதிவு என்று பிஸியாகிவிடலாம்.. தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதுதான் உண்மை.

ஈழத் தமிழர்கள் எதை நம்பினாலும் நம்புங்கள்.. தயவு செய்து எமது மாநில மற்றும் மத்திய அரசுகளை இம்மியளவுகூட நம்ப வேண்டாம்.. இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். இப்போதைக்கு இவர்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை.. அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது என்பதுதான்..

வேறு என்ன வழி..?

அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துள்ள புதியவர்களின் கடைக்கண் பார்வை கிடைத்தால், இப்பிரச்சினை தனது முடிவை நோக்கி முதல் புள்ளியை இடும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கான நடைமுறை வழியைப் பற்றி மட்டுமே நாம் யோசிப்போம்.. இதற்கு முதல் முயற்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம்.. இதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி.

2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!


22.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

2008-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.
நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே மதிப்புமிக்க சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றிருக்கும் ரஹ்மான், அதே slumdog millionaire திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதிற்கும், சிறந்த பாடல்கள் பிரிவில் இரண்டு முறையும் ஆக மூன்று முறைகள் ஆஸ்கர் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது நிச்சயம் மிகப் பெரிய சாதனைதான்.

இதற்கு முன் இந்திய அளவில் எந்தவொரு இசையமைப்பாளரும், அல்லது எந்த திரைப்படக் கலைஞரும் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்படவில்லை. இதுவே முதல் முறையாகும்.

“எல்லாம் அவன் செயல்” என்று இறைவன் பெயரில் பாரத்தை போட்டு தனது திறமையை மட்டுமே முன் வைத்து சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதினைப் பெற மனதார வாழ்த்துகிறேன்.

கலைக்கு மொழி கிடையாது என்பதும், திறமைக்கு மொழியும், நாடும் ஒரு இடைஞ்சலாகவோ, தடைக்கல்லாகவோ இருக்க முடியாது என்பதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முதல் உதாரணமாகத் திகழட்டும்.



ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்

Nominees for the 81st Academy Awards

Performance by an actor in a leading Role

ஃ Richard Jenkins in “The Visitor” (Overture Films)
ஃ Frank Langella in “Frost/Nixon” (Universal)
ஃ Sean Penn in “Milk” (Focus Features)
ஃ Brad Pitt in “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.)
ஃ Mickey Rourke in “The Wrestler” (Fox Searchlight)

Performance by an actor in a supporting role

ஃ Josh Brolin in “Milk” (Focus Features)
ஃ Robert Downey Jr. in “Tropic Thunder” (DreamWorks, Distributed by DreamWorks/Paramount)
ஃ Philip Seymour Hoffman in “Doubt” (Miramax)
ஃ Heath Ledger in “The Dark Knight” (Warner Bros.)
ஃ Michael Shannon in “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage)

Performance by an actress in a leading role

ஃ Anne Hathaway in “Rachel Getting Married” (Sony Pictures Classics)
ஃ Angelina Jolie in “Changeling” (Universal)
ஃ Melissa Leo in “Frozen River” (Sony Pictures Classics)
ஃ Meryl Streep in “Doubt” (Miramax)
ஃ Kate Winslet in “The Reader” (The Weinstein Company)

Performance by an actress in a supporting role

ஃ Amy Adams in “Doubt” (Miramax)
ஃ Penlope Cruz in “Vicky Cristina Barcelona” (The Weinstein Company)
ஃ Viola Davis in “Doubt” (Miramax)
ஃ Taraji P. Henson in “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.)
ஃ Marisa Tomei in “The Wrestler” (Fox Searchlight)

Best animated feature film of the year

ஃ “Bolt” (Walt Disney), Chris Williams and Byron Howard
ஃ “Kung Fu Panda” (DreamWorks Animation, Distributed by Paramount), John Stevenson and Mark Osborne
ஃ “WALL-E” (Walt Disney), Andrew Stanton

Achievement in art direction

ஃ “Changeling” (Universal), Art Direction: James J. Murakami, Set Decoration: Gary Fettis
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Art Direction: Donald Graham Burt, Set Decoration: Victor J. Zolfo
ஃ “The Dark Knight” (Warner Bros.), Art Direction: Nathan Crowley, Set Decoration: Peter Lando
ஃ “The Duchess” (Paramount Vantage, Path and BBC Films), Art Direction: Michael Carlin, Set Decoration: Rebecca Alleway
ஃ “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage), Art Direction: Kristi Zea, Set Decoration: Debra Schutt

Achievement in cinematography

ஃ “Changeling” (Universal), Tom Stern
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Claudio Miranda
ஃ “The Dark Knight” (Warner Bros.), Wally Pfister
ஃ “The Reader” (The Weinstein Company), Chris Menges and Roger Deakins
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Anthony Dod Mantle

Achievement in costume design

ஃ “Australia” (20th Century Fox), Catherine Martin
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Jacqueline West
ஃ “The Duchess” (Paramount Vantage, Pathளூ and BBC Films), Michael O'Connor
ஃ “Milk” (Focus Features), Danny Glicker
ஃ “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage), Albert Wolsky

Achievement in directing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), David Fincher
ஃ “Frost/Nixon” (Universal), Ron Howard
ஃ “Milk” (Focus Features), Gus Van Sant
ஃ “The Reader” (The Weinstein Company), Stephen Daldry
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Danny Boyle

Best documentary feature

ஃ “The Betrayal (Nerakhoon)” (Cinema Guild), A Pandinlao Films Production, Ellen Kuras and Thavisouk Phrasavath
ஃ “Encounters at the End of the World” (THINKFilm and Image Entertainment), A Creative Differences Production, Werner Herzog and Henry Kaiser
ஃ “The Garden” A Black Valley Films Production, Scott Hamilton Kennedy
ஃ “Man on Wire” (Magnolia Pictures), A Wall to Wall Production, James Marsh and Simon Chinn
ஃ “Trouble the Water” (Zeitgeist Films), An Elsewhere Films Production, Tia Lessin and Carl Deal

Best documentary short subject

ஃ “The Conscience of Nhem En” A Farallon Films Production, Steven Okazaki
ஃ “The Final Inch” A Vermilion Films Production, Irene Taylor Brodsky and Tom Grant
ஃ “Smile Pinki” A Principe Production, Megan Mylan
ஃ “The Witness - From the Balcony of Room 306” A Rock Paper Scissors Production, Adam Pertofsky and Margaret Hyde

Achievement in film editing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Kirk Baxter and Angus Wall
ஃ “The Dark Knight” (Warner Bros.), Lee Smith
ஃ “Frost/Nixon” (Universal), Mike Hill and Dan Hanley
ஃ “Milk” (Focus Features), Elliot Graham
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Chris Dickens

Best foreign language film of the year

ஃ “The Baader Meinhof Complex” A Constantin Film Production, Germany
ஃ “The Class” (Sony Pictures Classics), A Haut et Court Production, France
ஃ “Departures” (Regent Releasing), A Departures Film Partners Production, Japan
ஃ “Revanche” (Janus Films), A Prisma Film/Fernseh Production, Austria
ஃ “Waltz with Bashir” (Sony Pictures Classics), A Bridgit Folman Film Gang Production, Israel

Achievement in makeup

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Greg Cannom
ஃ “The Dark Knight” (Warner Bros.), John Caglione, Jr. and Conor O'Sullivan
ஃ “Hellboy II: The Golden Army” (Universal), Mike Elizalde and Thom Floutz

Achievement in music written for motion pictures (Original score)

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Alexandre Desplat
ஃ “Defiance” (Paramount Vantage), James Newton Howard
ஃ “Milk” (Focus Features), Danny Elfman
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), A.R. Rahman
ஃ “WALL-E” (Walt Disney), Thomas Newman

Achievement in music written for motion pictures (Original song)

ஃ “Down to Earth” from “WALL-E” (Walt Disney), Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
ஃ “Jai Ho” from “Slumdog Millionaire” (Fox Searchlight), Music by A.R. Rahman, Lyric by Gulzar
ஃ “O Saya” from “Slumdog Millionaire” (Fox Searchlight), Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam

Best motion picture of the year

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), A Kennedy/Marshall Production, Kathleen Kennedy, Frank Marshall and Ceநூn Chaffin, Producers
ஃ “Frost/Nixon” (Universal), A Universal Pictures, Imagine Entertainment and Working Title Production, Brian Grazer, Ron Howard and Eric Fellner, Producers
ஃ “Milk” (Focus Features), A Groundswell and Jinks/Cohen Company Production, Dan Jinks and Bruce Cohen, Producers
ஃ “The Reader” (The Weinstein Company), A Mirage Enterprises and Neunte Babelsberg Film GmbH Production, Nominees to be determined
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), A Celador Films Production, Christian Colson, Producer

Best animated short film

ஃ “La Maison en Petits Cubes” A Robot Communications Production, Kunio Kato
ஃ “Lavatory - Lovestory” A Melnitsa Animation Studio and CTB Film Company Production, Konstantin Bronzit
ஃ “Oktapodi” (Talantis Films), A Gobelins, L'ளூcole de l'image Production, Emud Mokhberi and Thierry Marchand
ஃ “Presto” (Walt Disney), A Pixar Animation Studios Production, Doug Sweetland
ஃ “This Way Up” A Nexus Production, Alan Smith and Adam Foulkes

Best live action short film

ஃ “Auf der Strecke (On the Line)” (Hamburg Shortfilmagency), An Academy of Media Arts Cologne Production, Reto Caffi
ஃ “Manon on the Asphalt” (La Luna Productions), A La Luna Production, Elizabeth Marre and Olivier Pont
ஃ “New Boy” (Network Ireland Television), A Zanzibar Films Production, Steph Green and Tamara Anghie
ஃ “The Pig” An M & M Production, Tivi Magnusson and Dorte Hல்gh
ஃ “Spielzeugland (Toyland)” A Mephisto Film Production, Jochen Alexander Freydank

Achievement in sound editing

ஃ “The Dark Knight” (Warner Bros.), Richard King
ஃ “Iron Man” (Paramount and Marvel Entertainment), Frank Eulner and Christopher Boyes
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Tom Sayers
ஃ “WALL-E” (Walt Disney), Ben Burtt and Matthew Wood
ஃ “Wanted” (Universal), Wylie Stateman

Achievement in sound mixing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), David Parker, Michael Semanick, Ren Klyce and Mark Weingarten
ஃ “The Dark Knight” (Warner Bros.), Lora Hirschberg, Gary Rizzo and Ed Novick
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Ian Tapp, Richard Pryke and Resul Pookutty
ஃ “WALL-E” (Walt Disney), Tom Myers, Michael Semanick and Ben Burtt
ஃ “Wanted” (Universal), Chris Jenkins, Frank A. Montaண்o and Petr Forejt

Achievement in visual effects

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Eric Barba, Steve Preeg, Burt Dalton and Craig Barron
ஃ “The Dark Knight” (Warner Bros.), Nick Davis, Chris Corbould, Tim Webber and Paul Franklin
ஃ “Iron Man” (Paramount and Marvel Entertainment), John Nelson, Ben Snow, Dan Sudick and Shane Mahan

Adapted screenplay

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Screenplay by Eric Roth, Screen story by Eric Roth and Robin Swicord
ஃ “Doubt” (Miramax), Written by John Patrick Shanley
ஃ “Frost/Nixon” (Universal), Screenplay by Peter Morgan
ஃ “The Reader” (The Weinstein Company), Screenplay by David Hare
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Screenplay by Simon Beaufoy

Original screenplay

ஃ “Frozen River” (Sony Pictures Classics), Written by Courtney Hunt
ஃ “Happy-Go-Lucky” (Miramax), Written by Mike Leigh
ஃ “In Bruges” (Focus Features), Written by Martin McDonagh
ஃ “Milk” (Focus Features), Written by Dustin Lance Black
ஃ “WALL-E” (Walt Disney), Screenplay by Andrew Stanton, Jim Reardon, Original story by Andrew Stanton, Pete Doctor

ஆஸ்கர் விருதுகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 22-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்

20.01.09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தாண்டு முதல் ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் நான் பார்க்கும் படங்களின் கதைச்சுருக்கத்தையாவது எப்பாடுபட்டாவது சுருக்கமாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தை பூண்டுள்ளேன்.

எல்லாம் நல்லபடியாக நடக்க முருகன் அருள் வேண்டும். வேண்டுகிறேன்.

இதில் முதல் நிகழ்ச்சியாக நேற்று 19-01-09 திங்கள்கிழமை பார்த்த “The Love Such a Love” என்ற மங்கோலிய நாட்டு திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இது.

சாதாரண கதைதான்.. இயக்கம் சுமார் என்று சொல்லலாம். திரைக்கதை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் சிற்சில இடங்களில் புன்னகை பூக்கவும், நகைக்கவும் செய்தது.

துலாய்க்கு(Tuulaikhuu) பள்ளி இறுதியாண்டு மாணவன். இவனது நண்பர்கள் பாயாரா(Bayaraa), துல்கா(Tulga.) தோழிகள் சோலங்கோ(Solongo), நவேச்சா(Navchaa).

படத்தின் ஹிரோ துலாய்க்கு ஒரு பேக்கு போல இருக்கிறான். இளைஞனுக்குரிய வயது வந்துவிட்டாலும், குணம் வந்துவிடவில்லை. ஆனால் இவனது நண்பன் பாயாரா, சோலங்கோவுடன் காதல் கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலவியிலும் ஈடுபடுகிறான்.

துலாய்க்கு ரெகுலராக ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சென்று அங்கு வெறும் ஒரு கிளாஸ் பால் மட்டுமே அருந்துகிறான். அதற்காகவே அவன் அங்கு செல்லவில்லை. புஜின்(Bujin) என்கிற அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணின் மீது அவனுக்கு ஒரு மையல். அவளைப் பார்ப்பதற்காகவே தினமும் அங்கு சென்று பால் குடிக்கிறான். அவள் கொடுக்கும் பில்களை பத்திரப்படுத்தி பாடப்புத்தகத்தின் நடுவில் வைத்து புத்தகத்தை தலைக்கு வைத்து தூங்குகிறான். இதுவரையிலும் ஒரு தலைக்காதல்.

சோலங்கோவின் அப்பா மீன் வேட்டைக்காக வெளியூர் சென்றுவிட இளசுகள் அவள் வீட்டில் கொட்டமடிக்கிறார்கள். துலாய்க்கா பீர் அடித்து குப்புறப் படுத்துவிடுகிறான். அவனை பெட்ரூமில் படுக்கையில் கிடத்தி ஒரு ஜாலிக்காக முக்கால் நிர்வாணமாக்கிவிட்டுப் போகிறார்கள் நண்பர்கள்.

மற்றொரு அறையில் சோலங்கோவும், பாயாரவும் ஈருடல் ஓருடலாக உருமாறுகிறார்கள். விடிகிறது. திடீரென்று சோலங்கோவின் அப்பா வந்துவிடுகிறார். நண்பர்கள் அவசரம், அவசரமாக கிளம்பி வெளியேறுகிறார்கள். அவசரத்தில் பெட்ரூமில் படுத்திருக்கும் துலாய்க்கை மறந்துபோய்விடுகிறார்கள்.

வீட்டின் உள்ளே வரும் சோலங்கோவின் அப்பா முக்கால் நிர்வாண துலாய்க்காவையும், அரை நிர்வாணக் கோலத்தில் நிற்கும் தன் மகள் சோலங்கோவையும் பார்த்து வழக்கமான அப்பாவைப் போல் கோபப்பட்டு துலாய்க்காவைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு செல்கிறார்.

சோர்ந்த முகத்துடன் வகுப்பறைக்குள் வரும் துலாய்க்காவிடம் நண்பர்கள் வட்டாரம் “ஸாரி..” சொல்லி அவனை சோலங்கோவின் அப்பா எங்கே அழைத்துச் சென்றார் என்று விசாரிக்கிறார்கள். HIV Test செய்ய தன்னை அழைத்துச் சென்றதாக சோகத்துடன் சொல்கிறான் துலாய்க்கா.

சோலங்கோ திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு பித்த வாந்தியெடுக்க அதை அவள் அப்பா பார்த்துவிட்டு காரணம் கேட்க.. சும்மனாச்சுக்கும் “நான் மாசமா இருக்கேம்ப்பா.. நீங்க கூடிய சீக்கிரம் தாத்தாவாகப் போறீங்க..” என்கிறாள். பிடித்தது சனி துலாய்க்காவுக்கு..

ஸ்கூலுக்கே வந்து துலாய்க்காவை தூக்குகிறார் சோலங்கோவின் அப்பன். ஆனால் நம்ம ஹீரோ நடுவழியிலேயே காரில் இருந்து இறங்கி தப்பித்து ஓடுகிறான். ஆனாலும் விடவில்லை மாமன். துலாய்க்கா வீட்டிற்கு வருவதற்குள் மாமன்காரன், “நாம சம்மந்தியாயிட்டோம்..” என்று துலாய்க்காவின் அப்பன், ஆத்தாவிடம் சொல்லி வீட்டில் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான்.

இதற்கு மேலும் உண்மையைச் சொல்லவில்லையெனில் தான் பலியாடாகிவிடுவோம் என்பதால் “சோலங்கோவின் கர்ப்பத்துக்கு காரணம் அந்த பாழாய்ப் போன பாயாராதான்..” என்ற உண்மையைச் சொல்கிறான் துலாய்க்கா. தப்பித்த திருப்தியில் துலாய்க்காவின் அப்பனும், ஆத்தாளும் சிரிக்க.. சோலங்கோவின் அப்பனுக்கு புரையேறி, “கயவாளிப் பய.. அவனை விட்டேன்னா பார்..” என்று பாயாராவைத் தேடி ஓடுகிறார்.

நவேச்சா துலாய்க்காவுடன் நெருங்குவதற்கு மிகவும் பிரயத்தனப்படுகிறாள். ஆனால் துலாய்க்காவோ புஜினை கண் கண்ட தெய்வமாக நினைக்கிறான். புஜினியிடம் தன் மனதைத் திறக்கிறான். அவள் தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அவனை அழைக்கிறாள்.

அவளுக்கு கிப்ட் பார்சல் வாங்கிக் கொண்டு வரும்போது நண்பர்கள் குழுமத்திடம் மாட்டிக் கொள்கிறான் துலாய்க்கா. அவர்கள் அவனை விருந்துக்கு அழைக்க.. தான் Durkhan என்ற ஊருக்குச் செல்லவிருப்பதாகவும், அங்கே ஒரு திருமணம் நாளை நடக்கவிருப்பதாகவும் சொல்கிறான்.

“டிரெயினுக்கு இன்னும் நேரம் இருக்கே..” என்று சொல்லி நண்பர்கள் கூட்டம் அவனைத் தூக்கிக் கொண்டு செல்கிறது. நவேச்சா அவன் யாரையோ பார்க்கப் போகிறான் என்பதை உணர்ந்து அவனை இன்னிக்கு மடக்கிரணும் என்று திட்டம் தீட்டுகிறாள்.

கிடைக்கிறது ஒரு வாய்ப்பு. பீர் பாட்டிலில் வோட்காவைக் கலக்குகிறாள். துலாய்க்கா குவார்ட்டர் அடித்து மட்டையாகிறான். புஜின் போன் செய்கிறாள். போனை எடுக்கிறாள் நவேச்சா.. “அவர் என்னுடன் சல்லாபித்துவிட்டு, சோர்ந்து போய் படுத்திருக்கிறார்..” என்று கூச்சநாச்சமில்லாமல் பொய் சொல்கிறாள். புஜின் கோபப்பட்டு துலாய்க்காவை மறந்துவிட முடிவு செய்கிறாள்.

மட்டையாகிப் போய் கிடக்கும் நம் சங்கத்து சிங்கம் துலாய்க்காவை பார்த்த கடமை தவறாத நண்பர்கள் கூட்டம். துலாய்க்கா பொய் சொன்னது தெரியாமல் டிரெயினில் துலாய்க்கா சொன்ன Durkhan-க்கு படுக்க வைத்தே அனுப்பி வைக்கிறார்கள்.

Durkhan வந்தவுடன் நட்ட நடு நசியில் துலாய்க்காவை எழுப்புகிறாள் டிக்கெட் பரிசோதகர். அவனை இறக்கிவிட்டுவிட்டு டிரெயின் சென்றுவிட அப்போதுதான் தன் நிலை அவனுக்குப் புரிகிறது. செல்போனில் நண்பர்களைத் தொடர்பு கொண்டு தான் பொய் சொன்னதாகச் சொல்லி தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி சொல்கிறான்.

நண்பர்கள் கூட்டம் தலைதெறிக்க கால்டாக்ஸி போட்டு அவனை அழைக்க வருகிறார்கள். அதே சமயம் ஸ்டேஷன் மாஸ்டர் துலாய்க்கா மேல் பரிதாபப்பட்டு அவனை வேறொரு காரில் அனுப்பி வைக்கிறாள். துலாய்க்கா வீட்டில் வந்து படுக்கவும், அவனது நண்பர்கள் அவனைத் தேடி அவன் Durkhan வரவும் நேரம் சரியாக இருக்கிறது.

நண்பர்கள் மறுபடியும் அவனைத் தேடி வந்து விசாரிக்க.. நடந்ததைச் சொல்கிறான். நண்பர்களுடன் அதே ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சென்று புஜின் பற்றி விசாரிக்கிறான். அங்கே உள்ள யாருமே அவளைப் பற்றிச் சொல்ல மறுக்கிறார்கள். “தெரியவில்லை..” என்கிறார்கள். “அவள் இப்போது அங்கே வேலை செய்யவில்லை..” என்கிறார்கள். துலாய்க்கா இடிந்து போய் விழாமல், ஒடிந்ததைப் போல் காட்டிக் கொண்டு நிற்கிறான்.

நவேச்சா தான் போய் விசாரித்து வருவதாகச் சொல்லி ஒரு ரெஸ்ட்டாரெண்ட் பெண்ணிடம் விசாரிக்கிறாள். புஜினின் அம்மாவுக்கு புற்று நோய் என்றும், புஜின் அவளுடன் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிகிறது. ஆனால் இதையும் நவேச்சா மறைத்துவிட்டு “என்னிடமும் எதுவும் சொல்லவில்லை..” என்று பொய் சொல்கிறாள்.

துலாய்க்கா காதல் நோயால் சவலைப் பிள்ளையாகிறான். “நேரம் கூடி வந்த வேளை.. நீ நெஞ்சை மூடி வைத்த கோழை..” என்று பாடாமலேயே தேவதாஸ் போல் ஆகிறான். நவேச்சா இதுதான் சமயம் என்று அவனை நெருங்க முயல்கிறாள். ஆனால் முடியவில்லை. “என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை.. கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை..” என்று மறுபடியும் சோககீதம் பாடுகிறான் துலாய்க்கா.

நவேச்சாவுக்கு அவனது உண்மையான காதல் புரிகிறது. அவளுக்குள்ளும் ஏதோ ஒன்று செய்ய.. துலாய்க்காவிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். தான்தான் அவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்து விளையாடிவிட்டதாகச் சொல்கிறாள்.

இறுதியில் நண்பர்கள் கூட்டத்தின் ஏற்பாட்டில் சோலங்கோவின் தந்தை மருத்துவமனைக்கு சென்று புஜினின் அம்மாவையும், அவளையும் அழைத்து வர.. துலாய்க்காவும், புஜினும் ஒன்று சேர்கிறார்கள்.

இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்.

நல்லா படிச்சு வைச்சுக்குங்க..

அப்பால.. இதே மாதிரி எதுனாச்சும் தமிழ்ப் படம் வந்தா சொல்லுங்க..

பிட் நியூஸ் போட்டு பேஜார் பண்ணிரலாம்..

பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!!

19.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இதற்கு முந்தைய பதிவில் பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!! என்கிற தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளேன்.

அவசரத்தில் தலைப்பிட மறந்துவிட்டதால் தலைப்பில்லாமல் அந்தப் பதிவு தமிழ்மணத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதனுடைய லின்க் கீழே..

பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!

படித்துவிட்டு பின்னூட்டங்களை தயவு செய்து அந்தப் பதிவிலேயே இடவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்..!

பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து..!


19-01-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

கடைசியாக ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு பதிவரும், மருத்துவருமான புருனோவுடன் சென்றிருந்தேன்.

அப்போது கிழக்குப் பதிப்பகத்தில் பத்ரி ஸாருடன் அங்கிருந்த பதிவர்கள் பலரும் பேசினோம். ‘விடுதலைப்புலிகள்', ‘பிரபாகரன்', ‘அல்கொய்தா' என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்ற காவல்துறையினரின் வாய்மொழி உத்தரவு பற்றி பேச்சு சென்றது.

அந்த உத்தரவை நீக்கும்படி கேட்பதற்காக காவல்துறை உயரதிகாரிகளிடம் தான் படையெடுத்த கதைகளை பத்ரி சொன்னார். “நான் சந்தித்த அனைவருமே நடிக்கிற மாதிரி தெரிஞ்சது.. இதற்கு மேல் இவர்களுடன் பேசியோ, மோதியோ எனது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்..” என்றார்.

இதன் பின் அவர் சொன்ன பல விஷயங்கள் ஆப் தி ரெக்கார்டாக இருக்க வேண்டியவை என்பதால் சொல்ல விரும்பவில்லை.

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றி தெருவுக்குத் தெரு, மூலை முடுக்கெல்லாம் மைக் பிடித்து ஆதரவுக் கூட்டங்கள் போட்டு வருகிறார்கள். பேசி வருகிறார்கள். திருமாவளவன், “நான் என்றைக்கும் புலிகளை ஆதரிப்பேன்..” என்கிறார். வைகோ திருமாவுடன் இந்த விஷயத்தில் போட்டி போட்டு “நானும்தான்..” என்று களத்தில் இருக்கிறார்.

இந்த புத்தகங்கள் கண்காட்சியில் விற்பனைக்குக் கூடாது என்றால் எதைக் கண்டு இந்த ஆட்சியாளர்களுக்கு பயம் என்று விளங்கவில்லை. இங்கே கவனிக்க வேண்டியது அந்தப் புத்தகங்களை எழுதியது, பதிப்பித்தது, அச்சிட்டது தவறில்லையாம்.. விற்பதும் தவறில்லையாம். ஆனால் விற்பனையை கண்காட்சியில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கண்காட்சியில் இல்லை என்றால், பதிப்பகத்திற்கே நேரில் வந்து வாங்கிச் செல்வார்களே.. பல்வேறு புத்தகக் கடைகளிலும் அந்தப் புத்தகங்கள் விற்கப்பட்டுதான் வருகின்றன. ஏன் தடுக்கவில்லை? கண்காட்சியில் மட்டும் விற்கக்கூடாது என்றால் தமிழ்நாட்டு பொதுமக்கள் கண்காட்சியில் மட்டும்தான் புத்தகங்கள் வாங்குவார்கள் என்று நமது காவல்துறையின் ‘உளவுப் புலி'கள் கருதுகிறார்களோ என்னவோ..?

ஆனாலும் காங்கிரஸ்காரர்களைப் பற்றிய பயம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கொஞ்சுண்டு இருக்கத்தான் செய்கிறது என்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம் காங்கிரஸ்காரர்களின் ‘அறிவு' பற்றி இன்றைய ஆட்சியாளர்களின் எண்ணமும் வெளிப்படையாகி கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.

ஏதோ இது போன்ற புத்தகக் கண்காட்சிக்கு மட்டும்தான் காங்கிரஸ்காரர்கள் வருவார்கள் போலவும்.. அவர்கள் மற்ற நேரங்களில் பத்திரிகைகள், நாளிதழ்களை வாசிப்பதே இல்லை என்பது போலவும் ஆட்சியாளர்கள் கதர் சட்டைக்காரர்களை நினைத்திருப்பது நகைப்புக்குரியதுதான்.

அதே சமயத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றி டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய புத்தகம் கண்காட்சியில் விற்பனையாகிக் கொண்டுதான் இருந்தது. இதிலும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகள் நிறையவே இருக்கின்றன. இது மட்டுமில்லாமல் ஈழம் பற்றிய புதிய 3 புத்தகங்களும் விற்பனையாகின. என்ன? அவற்றில் தலைப்பு புலிகள் சம்பந்தப்பட்டவை அல்ல. ஈழப் பிரச்சினை என்றுதான் இருந்தன. அதனால் நமது அறிவுத்திலகங்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.

புலிகளை விமர்சித்து எழுதியிருந்தால், அது என்ன வகை புத்தகமாக இருந்தாலும் அது ஓகே என்றும், புலிகளை ஆதரித்து எழுதியிருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ..

இது என்ன வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை..

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்கிற சட்டமே இங்கே கேலிக்கூத்தாகிப் போய்க் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் இப்படியொரு மறைமுகச் சட்டமா..? இதையாவது உருப்படியாகச் செய்து தொலைக்க வேண்டியதுதானே.. எதற்கு இப்படி முட்டாள்தனமான விதிமுறைகள்..?

ஆதரவாக பேசலாம்.. எழுதலாம்.. புத்தகமாக வெளியிடலாம்.. என்று அனைத்து வகை ஆதரவையும் அளித்துவிட்டு, கண்காட்சியில் மட்டும் வெளியிட வேண்டாம் என்றால், தடை விதிக்கச் சொன்னவர்களுக்கு உண்மையில் படிப்பறிவும், கல்வியறிவும் இருக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.

வாழ்க நமது அரசியல் அறிவுத் திலகங்கள்..!

ICAF- 2009 ஜனவரி, மாதத்திய திரைப்பட விழாக்கள்

17-01-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009, ஜனவரி மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.



19.01.2009 - முதல் 21.01.2009 வரையிலான மூன்று நாட்களும் மங்கோலியன் Film Festival நடைபெறப் போகிறது.

மங்கோலியத் திரைப்படங்களின் பட்டியல்

19.01.09 - 6.45 pm - The Love Such A Love(2008)

20.01.09 - 6.30 pm - The Story of The Weeping Camel(2003)

21.01.09 - 6.30 pm - Tsogt Taij(1958)



26.01.2009 - முதல் 29.01.2009 வரையிலான நான்கு நாட்களும் Mexican Film Festival நடைபெறப் போகிறது.

மெக்ஸிகன் திரைப்படங்களின் பட்டியல்

26/01/09 BAD HABITS - 6.30 p.m.

27/01/09 PAN’S LABYRINTH - 6.30 p.m.

28/01/09 SILENT LIGHT - 6.30 p.m.

29/01/09 CARNIVAL OF SODOM - 6.30 p.m.

(ஒவ்வொரு நாளும் பிரதான திரைப்படத்திற்கு முன் குறும்படங்கள் திரையிடப்படும்)



30/01/09 அன்று மாலை 6.30 மணிக்கு என்ற THE VERDICT ( A Paul Newman Retro )ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்படும்.



இந்த அனைத்துத் திரைப்படங்களும் சென்னை அண்ணா சாலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த ICAF அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முருகன்தான் காப்பாத்தணும்..!

15.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘மாயவலை’ வித்தகர் பா.ராகவன், தனது ‘யுத்தம் சரணம் கச்சாமி’ தொடரைப் படித்துவிட்டு ராஜபக்சே சகோதரர்கள் தன்னை ஏன் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை என்ற வருத்தத்திலேயே வண்டியோட்டி வந்தபோது, பிரபாகரன் என்ற பெயருடைய யாரோ ஒருவர் அவர் மீது தற்கொலைத் தாக்குதல் தொடுத்ததால் படுகாயமடைந்து மட்டக்களப்பின் புகழ் பெற்ற மாவுக்கட்டைப் போட்டுக் கொண்டு வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்பதையும் கேள்விப்பட்டபோது மனம் பொறுக்காமல் அவரிடம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரிக்க நினைத்தேன்.

முடியவில்லை.

பல இடங்களிலும் அவருடைய தொலைபேசி எண் தெரியவில்லை என்றார்கள். சில இடங்களில் “ஏன் இப்ப உன் உடம்பு நல்லாயிருக்கிறது பிடிக்கலையா..? உனக்கெதுக்கு இந்த வெட்டி வேலை..?” என்று அன்பாக விசாரித்தார்கள். 'கிழக்கு' திசை நோக்கியிருந்த கூட்டத்தினரோ சொல்லி வைத்தாற்போல் “வர்ட்ட கேளு.. இவர்ட்ட கேளு..” என்று கை காட்டியவர்கள், கடைசியாக, “யுத்தம் சரணம்' முடியற வரைக்கும் அவர் தலைமறைவா இருக்கப் போறாராம். அதுனால போன் நம்பரை யாருக்கும் தரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு ஸார்..” என்றார்கள்.

இதைத்தான் பா.ரா.வின் இந்தப் பதிவில் உள்ளதைச் சொல்லி “நலம் பெற வாழ்த்துகிறேன்” என்று என் துக்கத்தை முடித்திருந்தேன்.

அடுத்த நாள் நான் எழுதிய இந்தப் பதிவில் முதல் முறையாக எனது வீட்டுக்குள் வந்து பின்னூட்டம் போட்ட பா.ரா., “சின்னதாக ஒரு பதிவு போட்டால் நானே தொலைபேசியில் அழைப்பேன்..” என்று சொல்லியிருந்தார்.

சரி.. சின்னப் பதிவொண்ணை போடுவோம்.. பேசுவாரான்னு பார்ப்போம் என்று நினைத்து யார் சொன்னா என்னால ‘சின்னப்’ பதிவு போட முடியாதுன்னு..? ஒரு பதிவைப் போட்டேன்.

காலைல போட்ட பதிவுக்கு மனுஷன் ராத்திரி 7.45 மணிக்கு போன் செஞ்சாருங்கப்பா.. நான் அந்த நேரத்துல குளிர் காய்ச்சல் ஆரம்பித்த வேகத்தில் புத்தகக் கண்காட்சியிலிருந்து வீடு வந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் சப்தத்தால் கேட்காமல் போய்விட்டது.

வீடு வந்து சேர்ந்த பின்புதான் நம்பரை பார்த்து யாரோ என்று நினைத்து பதில் போன் செய்தால், “உண்மைத்தமிழா” என்று 'தீப்பொறி ஆறுமுகம்' ஸ்டைலில் உறுமியது பா.ரா.தான். மனிதர் இப்போதும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக' வீட்டு போனில் இருந்து அழைத்திருந்தார்.

முதலில் இருவரும் ஒருவரையொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டோம். நான் கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பதாகச் சொன்னேன்.. “முருகன் ரொம்ப சோதிக்கிறான்ல்ல” என்றார். “ஆமா ஸார்.. அதேதான் ஸார்..” என்றேன்.

நான் நேற்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததை சொன்னேன். அவருடைய எக்ஸலண்ட் வொர்க் ‘மாயவலை’ கிழக்குப் பதிப்பகத்தில் மிரட்டிக் கொண்டிருப்பதையும் சொன்னேன். எல்லாவற்றுக்கும் “ம்..”, “ம்..” என்றார். “நீங்க எனக்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கொடுத்தவுடனே, அதைவிட ஒரு பக்கம் கூடுதலா வைச்சு விமர்சனம் எழுதிருவேன்..” என்ற போது மட்டும் அந்த “ம்..” என்ற ஒரு வார்த்தையும் இல்லாமல் போனது.

“வேலை எப்படி இருக்கு..?” என்றார். “அடுத்த 'சத்யம்' யாருன்னு நினைச்சீங்க..?” என்றதும் சிரித்துக் கொண்டார்.

கடைசியாகத்தான் மேட்டருக்கு வந்தார்.


“நீங்க இன்னிக்கு போட்டிருக்குற பதிவுகூட நீளம்தான்..” என்றார். எனக்கு பக்கென்றது..

“ஏன் ஸார்.. அஞ்சு வார்த்தைதான் ஸார்.. பிளாக்கோட அமைப்புனால ரெண்டு வரியா போயிருச்சு..” என்றேன்..

“அதெல்லாம் சரி.. ஆனா பதிவோட நீளத்தை பாருங்க.. ஒரு போட்டோ போட்டிருக்கீங்களே.. அது 6 column. இது நீளமில்ல..” என்றார்.


நான் பேச்சுமூச்சில்லாமல்போய் இந்தத் திடீர் கண்டுபிடிப்பால் சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

“அதுனால இது நீளமான பதிவுதான்.. ‘சின்னப் பதிவு’ன்னு ஒத்துக்க மாட்டேன்.. வேண்ணா, நாளைக்கு இதைவிட சின்னப் பதிவா போட்டுக் காட்டுக்குங்க.. பார்ப்போம்..” என்றார்.


நம்ம பெயரைக் காப்பாத்தணுமேன்றதுக்காக மீண்டும் ஒரு ‘சின்ன’ பதிவு! பா.ராகவனுக்காக!!! அப்படீன்னு ஒண்ணை போட்டுட்டு ஜெயிச்சுட்டதா நினைக்கிறேன்..

மனுஷன் இதையும் படிச்சிட்டு “பதிவின் தலைப்பு நீளமா இருக்கு”ன்னு சொல்லுவாரோன்னு பயமா இருக்கு..

முருகன்தான் காப்பாத்தணும்..!

மீண்டும் ஒரு 'சின்னப்' பதிவு! பா.ராகவனுக்காக!!!


பதிவுலகத்தினருக்கு உழவர் திருநாள் வாழ்த்துகள்.

யார் சொன்னா என்னால 'சின்ன' பதிவு போட முடியாதுன்னு..?












வலையுலகத்தினர் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

புத்தகக் கண்காட்சி-11-01-2009-அனுபவம்-1


12-01-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நேற்று ஞாயிற்றுக்கிழமை. சோம்பலோடு கண் விழித்து இன்றைய பொழுதைக் கழிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பதிவர் ஜாக்கிசேகர் போன் செய்து “இப்பத்தான்.. பத்தே முக்காலுக்கு எந்திரிச்சேன்.. எத்தனை மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு போகலாம்..?” என்றார். நானும் பத்தரை மணிக்குத்தான் எழுந்தேன் என்பதைச் சொல்லாமல், “ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகன், இப்படி பத்தே முக்காலுக்கு எந்திரிச்சீன்னா.. நாடு எப்படிய்யா முன்னேறும்..?” என்று அக்கறையாகக் கண்டித்துவிட்டு, எனக்கிருந்த ஒரு அவசரமான பிச்சையெடுக்கும் வேலையைப் பற்றிச் சொல்லிவிட்டு அவரை மட்டும் போகச் சொன்னேன்.

ஆனால் சிறிது நேரத்தில் பிச்சை போடும் இடத்தில், “அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்..” என்று தகவல் கிடைக்க.. கை அனிச்சை செயலாக கணிணியை இயக்கித் தொலைத்துவிட்டது. ஜிமெயில் அண்ணன் கொட்டிய பின்னூட்டங்கள் கொடுத்த சூடு, நிவர்த்தி செய்ய முடியாததாக இருக்க.. கணிணியை மூடிவிட்டு ஓட வேண்டும்போல் இருந்தது.

நேரத்தைக் கடத்தியாக வேண்டும். ஆனால் வீட்டில் இருக்கக் கூடாது. அதே சமயம் இருக்குற காசும் காலியாகக் கூடாது என்கிற நினைப்பில் இருந்த எனக்கு, புத்தகக் கண்காட்சியைத் தவிர சரியான இடம் வேறேதுவும் இல்லை என்று தோன்றியது. கிளம்பினேன்.

4.30 மணிக்கு உள்ளே நுழைந்தபோது எதிரிலேயே வாய் கொள்ளாச் சிரிப்புடன் கைகூப்பி வரவேற்றார் காந்தி கண்ணதாசன். பரவாயில்லை.. இன்னமும் நம்மை மறக்காமல் இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். இரண்டு நிமிடங்கள் அவருடன் பேசுவதற்குள், மக்கள் தொலைக்காட்சியில் முகத்தைக் காட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க, “பேசிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சினிமா தியேட்டர் கியூவைப் போல் டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் நின்றிருந்ததை பார்த்து சந்தோஷம் பொங்கியது.. இந்தக் கூட்டம் சினிமா தியேட்டரையும் மிஞ்ச வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆசையும் வரத்தான் செய்கிறது.

இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள் கண்காட்சி அமைப்பினர். சென்ற ஆண்டு இரண்டே இரண்டு வழிகளை வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு நுழைவு வாயில் என்று அமைத்திருந்தார்கள். இப்போது நான்கு வாசல்களை வைத்து, நான்கு டிக்கெட் கவுண்ட்டர்களையும் அமைத்திருந்தார்கள். நன்றாக வசதியாகவே இருக்கிறது.

சென்ற ஆண்டு கண்காட்சியை திறந்து வைத்த கலைஞரின் மஞ்சள் துண்டில் கிழக்குப் பதிப்பகம் அல்லது விகடன் பிரசுரத்தின் ஸ்பான்ஸர் அட்டை இல்லை என்கிற குறைதான் இருந்தது. அந்த அளவுக்கு அந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களும் சென்ற ஆண்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. இந்தாண்டு நரேஷ்குப்தாவின் தம்பியோ.. யாரோ செய்த சதியால் விளம்பரங்களையெல்லாம் சுத்தமாக தடை செய்துவிட்டார்கள். போனால் போகிறது என்று “வெளியில் உங்களது கைவண்ணங்களை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்களாம். அரங்கத்திற்கு வெளியேதான் அரசியல்வியாதிகளை மிஞ்சிய சுவரொட்டிகளும், போஸ்டர்களும்..

சென்ற ஆண்டு ஒரு சில கடைகளை பார்த்தாலே அவர்களது பேலன்ஸ் ஷீட்டை நாமே சொல்லிவிடலாம் போல் இருந்தது. அந்த அளவுக்கு அவர்களது நிலைமையைத் தெளிவாக்கியிருந்தது கடை அமைப்பு. ஆனால் இந்த முறை அனைத்துக் கடைகளுக்கும் இரண்டு அறைகளுக்கு மேல் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் போலும். இரண்டு அறை கொண்ட கடைகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தது. ஒரு அறை கொண்ட கடைகளும் குறைவாகவே இருந்தன.

ஆனாலும் உள்ளரங்க வேலைப்பாடுகளில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான முறையில் அலங்காரங்களை செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தது எளிமையாக இருந்த ‘க்ரியா; பதிப்பகத்தின் ஸ்டால். அங்கேயே நான்கு தலகாணிகளை போட்டு, சினிமா டிஸ்கஷன் செய்யலாம் போல் இருந்தது அவர்களுடைய செட்டப். இரண்டாவது ;காலச்சுவடின்’ உள்ளரங்க அமைப்பு. மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டி உட்புறம் முழுவதும் கருப்பு வர்ணம் பூசியிருந்தார்கள். ஒருவேளை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வருகையை எதிர்பார்த்து செய்திருப்பார்களோ.. என்னவோ?

சென்ற வருடம் அடுத்த வரிசைக்கு செல்ல வேண்டுமென்றால் பி.டி.உஷா வேகத்தில் கடைசிக்கு ஓடிச் சென்று மாற வேண்டும். இந்த முறை அதிலும் ஒரு பெரிய மாற்றம் செய்திருந்தார்கள். பெரிய இரண்டு அறைகள் கொண்ட கடைகளுக்கு இரண்டு பக்கமும் வாசல் கதவு இல்லாமல், திறந்து வைத்து உள்ளே புகுந்து அடுத்த வரிசைக்குத் தாவிவிட வழி செய்திருந்தார்கள். உண்மையாகவே இது நல்ல திட்டம்தான். நிறைய பேர் இப்படித்தான் வரிசை தாவிக் கொண்டிருந்தார்கள்.

பதிப்பகங்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே போவதால் கடைசியாக வரிசை திரும்புகின்ற இடங்களிலும், எதிர் சுவற்றின் அருகிலும்கூட கடைகள் இருந்தன. ஒவ்வொரு திருப்பத்திலும் காபி, டீ, பஜ்ஜி, பப்பாளி கடைகள் காசை அள்ளிக் கொண்டிருந்தன. இதில் பதிப்பகங்கள், புத்தகக் கடைகள் என்றில்லாமல் எல்.ஐ.சி., சர்க்கரை நோய் செக் செய்வது, பி.எஸ்.என்.எல்., டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்று சில அந்நியர்களையும் உள்ளே அனுமதித்திருந்தார்கள்.

இதிலும் ஒரு அந்நியன் கூட்டம், அநியாயத்திற்கு அலப்பரை செய்து கொண்டிருந்தது. ரேடியோ மிர்ச்சிக்காரர்கள்தான்.. தமிழை படுகொலை செய்து துப்பிக் கொண்டிருந்ததை, வேறு வழியில்லாமல் சகித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த பொறுமைசாலி பக்கத்துக் கடைக்காரர்கள் திராவிடர் கழக பதிப்பகத்தார். நல்லாத்தான்யா பிளான் பண்ணியிருக்காங்க.

இதே போன்ற கொடுமையை நமது “ஓ பக்கங்கள்” ஞாநியும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய “ஓ ஞாநி” கடைக்கு அருகில் “தாய்மடி தமிழ்ச் சங்கம்” என்கிற பேனர் பெயரில், ‘ஜோ மல்லுரி’ என்பவர் கவிதை பாடி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

ஞாநி என்னைப் பார்த்தவுடன், “வாய்யா உண்மைத் தமிழா.. நீ நிஜமாவே உண்மைத் தமிழனா..? இல்ல பொய்த் தமிழனா..?” என்று பாசத்தோடு வரவேற்றார். நேற்றைய பதிவுலக விஷயங்கள் வரைக்கும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ஞாநி. எப்படி இவருக்கு நேரம் கிடைக்குதுன்னு தெரியலப்பா..

ஞாநிக்கு தமிழகம் முழுவதுமே நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு ஏன் பொறாமை..? உள்ளதைத்தான் சொல்கிறேன்.. கடந்த வருடம்வரையில் “நானும் உங்களை மாதிரி சாதாரணமானவன்தான். கையெழுத்தெல்லாம் நான் யாருக்குமே போடறதில்லை..” என்று சொல்லி அனைவரையும் திருப்பியடித்துக் கொண்டிருந்தவர், இந்த ஆண்டு கொஞ்சம் நல்ல பிள்ளையாகி வருபவர்களுக்கெல்லாம் கருப்பு கலர் குண்டு மை அச்சு பேனாவில் அமர்க்களமாக அவர்களது பெயரைக் கேட்டு கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். ‘காலம்’தான் எப்படியெல்லாம் ஒவ்வொருவரையும் மாற்றுகிறது பாருங்கள்.

அவரைப் போலவே அவருடைய கடையும் மிக, மிக எளிமையாக இருந்தது. அவருடைய “ஓ பக்கங்கள்” பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடையின் உள்ளே அவருடைய பேவரிட்டான வாக்கெடுப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பத்தாம் தேதியின் வாக்கெடுப்பு முடிவையும் எழுதி வைத்திருந்தார். பத்தாம் தேதியின் கேள்வி, “சாதியை ஒழிக்க வேண்டுமா?” என்பது. 90 சதவிகிதம் பேர் “ஆமாம்” என்றும், 10 சதவிகிதம் பேர் மட்டுமே “வேண்டாம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நேற்றைய கேள்வி “கடவுளும், மதமும் தேவையா?” என்பதுதான்.. நான், “கடவுள் தேவை. ஆனால் மதம் தேவையில்லை” என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து நல்ல ஓட்டு போட்டுவிட்டு வந்தேன். இங்கே எத்தனை கள்ள ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்றாலும், கள்ள ஓட்டுப் போட்டால் காசு வாங்க வேண்டும் என்ற லாஜிக்கின்கீழ் இங்கே பச்சைத் தண்ணிகூட கிடைக்காது என்பதால் அதனைச் செய்யவில்லை.

ஞாநியிடம் விடைபெற்று நகர்வலத்தைத் தொடர்ந்தபோது எதிரில் பதிவர் ஜாக்கிசேகரும், அவருடைய துணைவியாரும் வந்தார்கள். ஜாக்கியை ஞாநியிடம் அழைத்துச் சென்றேன். ஜாக்கி முதலில் சங்கடப்பட்டார்.
”நான் அவரை கடுமையாக எதிர்த்து பதிவெல்லாம் போட்டிருக்கேன் ஸார்” என்றார். “சோனியாகாந்தியே அவரை எதிர்த்து பேசினாலும், அவர் காதுல வாங்க மாட்டார். அப்படி ஆளு அவரு.. வாங்க..” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தேன்.

ஜாக்கி ஞாநியின் சிறந்த படைப்பான பாரதியாரின் ஓவிய சுவரொட்டியை வாங்கினார். வீட்டில் அதனை வைப்பதால் கிடைக்கும் அழகே தனி. என் வீட்டிலும் நான் அதனை சுவற்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். கம்பீரமாக இருக்கிறான் ஞாநியின் பாரதி.

புத்தகக் கடைகளும், பதிப்பகங்களும் மாறி, மாறி இருந்ததால் எந்த பதிப்பகத்தின் புத்தகங்களும் எந்த புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பதிப்பகங்களைவிடவும், ஒட்டு மொத்தப் புத்தகக் கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கீழைக்காற்று, மித்ர, தமிழினி, அடையாளம், விடியல், வம்சி, அலைகள், என்ற பதிப்பகக் கடைகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் குவிந்து கிடந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இன்றைய எழுத்தாள இளைஞர்களுக்கு அடையாளமாகத் திகழும் சேகுவேரா பற்றிய மொழி பெயர்ப்பு புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பதிப்பகங்களில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

தமிழினியில் வெங்கடேசன் எழுதிய “காவல்கோட்டம்” என்ற புத்தகத்தைப் பார்த்தேன். தலைக்கு வைச்சு தூங்குவதற்கு உதவுகின்ற சைஸில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பார்த்தால் படிக்கின்ற ஆர்வத்திற்குப் பதில் பயம்தான் வருகிறது. 3 பாகமாகவோ, அல்லது 5 பாகமாகவோ கொண்டு வந்திருக்கலாம். படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்குமல்லவா?

கலாநிதி குணசிங்க என்பவர் எழுதிய “கி.மு.200 முதல் கி.பி.200வரை இலங்கை வரலாறு” என்கிற புத்தகத்தை பார்த்தேன். இப்போதெல்லாம் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுகிறார்கள் என்று நினைத்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு பிரிக்க முடியாதபடிக்கு சில பதிப்பகங்கள் செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகமும் அப்படியேதான் இருந்தது.

இதேபோல் ஈழத்தை பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை பார்த்தேன். ஓவியர் புகழேந்தி எழுதிய “தமிழீழம்” என்னும் புத்தகமும், “ஈழம்-முடிவில்லாத பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற தலைப்பில் S.M.கோபாலரத்தினம் என்பவர் எழுதிய புத்தகமும் வெளிவந்துள்ளது. இவற்றை வாங்கிப் படித்த பின்பு ஈழப் பிரச்சினையில் நான் இன்னும் கொஞ்சம் ‘தெளிவாகி’விடலாம் என்று நினைக்கிறேன்.

கண்ணதாசன் பதிப்பகத்தில் வழக்கம்போல் எனது மானசீகக் காதலனின் விலை மதிக்க முடியாத “அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகம் பாக்கெட், பாக்கெட்டாக விலை போகிறது. இதே பதிப்பகத்தில் கிரண்பேடி எழுதிய “நான் துணிந்தவள்” என்கிற புத்தகத்தைப் பார்த்தேன். “வெரி இண்ட்ரஸ்ட்டிங்” என்று சொன்னபடியே ஒருவர் இரண்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு போனார்.

“பீப்பிள்ஸ் வாட்ச்” என்கிற கடையில் மனித உரிமை மீறல் பற்றிய அனைத்து தகவல்களையும் புத்தகங்களாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். “நீங்கள் கைது செய்யப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?” என்கிற தலைப்பில்கூட புத்தகம் இருந்தது. சீக்கிரமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதே கடையில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய “முதுகளத்தூர் கலவரம்” என்கிற புத்தகத்தையும் பார்த்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன். நிச்சயம் வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய புத்தகமும் என்னைக் கவர்ந்தது.

நமது சக வலைப்பதிவர் திரு.வினவு அவர்கள் தமது வலைத்தளத்தில் எழுதியவைகளை அதனதன் தலைப்புகளில் புத்தகமாக கொண்டு வந்துள்ளார். அனைத்திலும் நமது சக பதிவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களையும் விட்டுவிடாமல் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. விலை ஒவ்வொன்றும் 25 ரூபாய்தான். வாங்கியே ஆக வேண்டும். இது “கீழைக்காற்று பதிப்பகத்தில்” கிடைக்கிறது.

‘காலச்சுவடு’ கடை மிகவும் பரபரப்பாகத்தான் இருந்தது. புதிய, புதிய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். எப்படி இதையெல்லாம் வாங்கிப் படித்து மண்டையில் ஏற்றிக் கொள்வது என்ற குழப்பம் வந்ததால் சும்மா, நான்கு முறை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த மாதத்திய ‘காலச்சுவடு’ புத்தகம் ஒன்றை மட்டும் வாங்கி, இந்த வருடக் கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கியாச்சு என்று திருப்திப்பட்டுக் கொண்டேன்.

எங்கே கண்ணன் என்னை அடையாளம் கண்டுவிடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை யாருடனோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தவர் திரும்பவில்லை. சென்ற ஆண்டு ஏதோ ஒரு கோபத்தில் அவரிடத்தில் சென்று, “என்ன ஸார் திரும்பத் திரும்ப சுந்தரராமசாமி.. சுந்தரராமசாமின்னே எழுதிக்கிட்டே இருக்கீங்க. அவரோட குழந்தைகள், ஆண்கள், பெண்கள் புத்தகத்துல பத்து பக்கத்துக்கு மேல என்னால படிக்க முடியல.. ஒண்ணுமே புரியல ஸார்..” என்று கேட்டுவிட.. மனிதர் அதிர்ச்சியாகி முழித்ததை நான் மறக்க முடியாது.

நியாயப்படி ‘உயிர்மை’யில் இருக்க வேண்டிய கவிஞர் சல்மா, இங்கே ‘காலச்சுவடு’ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். கவிதாயினி பிரேமா ரேவதியை இங்கே சந்தித்தேன். அவருடைய நாகப்பட்டினம் குழந்தைகள் காப்பகம் நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். தான் மீண்டும் கவுதம்மேனனின் அடுத்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றப் போவதாகச் சொன்னார். வாழ்த்துத் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

‘உயிர்மை’யிலும் கடை கொள்ளாத கூட்டம். ‘என் இனிய சுஜாதா’வின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ செம சேல்ஸ். இப்போதும், எப்போதும் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லைதான்.. அடுத்து சாருநிவேதிதாவின் ‘கோணல் பக்கங்களும்’, எஸ்.ரா.வின் ‘சிறுகதை தொகுப்பும்’ அனைவரது கைகளாலும் புரப்பட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு எழுத்தாளரின் அனைத்துப் புத்தகங்களும் ஒரே பதிப்பகத்தின் மூலம் விற்பனையாவது அனைவருக்கும் சவுகரியமான விஷயம் என்பது ‘உயிர்மை’ பதிப்பகத்தில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்தது.

சுஜாதா, சாரு, எஸ்.ரா என்று மூன்று பேரின் மொத்தக் கதைகளும் இங்கே கிடைக்கிறது என்பதுதான் ‘உயிர்மை’யின் ஸ்பெஷலாட்டி. கூடுதலாக ஜெயமோகனும் இப்போது இங்கே ரேஸில் நிற்கிறார். வாசலில் மனுஷ்யபுத்திரன் மிக, மிக பிஸியாக பேசிக் கொண்டிருந்தார். முதலில் கல்லாப்பெட்டியில் இருந்த செல்வி மேடத்திற்கு ஒரு சலாம் வைத்துவிட்டு, பின்பு மனுஷ்யபுத்திரனிடம் வருகைப் பதிவேட்டை நிரப்பிவிட்டு கிளம்பினேன்.

டிக்கெட் வாங்க நின்ற கியூவைப் போல தண்ணீருக்கும் கியூ நின்றிருந்தது. கண்காட்சிக்கு வருபவர்கள் ஒரு பாட்டிலை கையோடு கொண்டு வருவது சாலச் சிறந்தது. தீர்ந்துவிட்டால் இங்கேயே பிடித்துக் கொள்ளலாம். ஆனால் டம்ளரை எதிர்பார்த்து நிற்பதற்கு, காவிரி நீர் தேடி கர்நாடகாவிற்கே ஓடிவிடலாம்.

“திருக்குடந்தை பதிப்பகம்” என்கிற பெயரில் ஒரு அறை கொண்ட கடையை திறந்து வைத்துக் கொண்டு, அதில் ஹாயாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் சினிமாவின் மூத்த பிரபலம் திரு.முக்தா சீனிவாசன். அவர் எழுதிய புத்தகங்களை அதில் வைத்துள்ளார். கூட்டம்தான் சுத்தமாக இல்லை. இது என்றில்லை.. பல கடைகளிலும் இதே நிலைமைதான்.

ஒரு முஸ்லீம் பதிப்பகத்தின் வாசலில் போர்டு வைத்து, அதில் “நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கிருஷ்ணன் பற்றி சொல்லியிருக்கும் புத்தகம் இங்கே கிடைக்கும்..” என்றும் எழுதி வைத்திருந்தார்கள். இது என்ன புது கரடி என்று தெரியவில்லை. தோண்டத் தோண்ட புதையலாக வருகிறதே..?

வயிற்றுக்கு கொஞ்சம் ஆக்ஸிஜனை ஏற்ற வேண்டி காபி குடித்துக் கொண்டிருக்கும்போது சாருநிவேதிதா எதிரில் வந்தார். அரசியல்வாதிகளை மிஞ்சும் தோரணையில், “செளக்கியமா..? வரேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆழி பதிப்பகத்தில் கவிஞர் அய்யப்ப மாதவனைச் சந்தித்தேன். அங்கே ஒபாமா பற்றிய புத்தகம்தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. இரா.செழியன் எழுதிய புத்தகம் இப்போதுதான் அறிமுகம் என்பதால், அதிகம் கவன ஈர்ப்பு இல்லாமல் இருந்தது.

விகடன் பிரசுரத்தார் இப்போது கிழக்குப் பதிப்பகத்துடன் போட்டி போடுகிறார்கள் என்று நினைக்கிறேன். கிழக்கு போலவே விகடனிலும் பொது அறிவுக் களஞ்சியமாக பல்வேறு தலைப்புகளில் சிறிய ரக புத்தகங்களை நிறைய உற்பத்தி செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்தி எழுத்தாளர்களுக்கு பஞ்சமேயில்லை போலும். கொளுத்துகிறது இவர்கள் இருவரின் போட்டிகள். அதனால் என்ன எழுத்தாளர்களாவது வாழட்டுமே..! என்ன தப்புன்றேன்..?

Blaft Publication என்று போர்டு மாட்டி அதில் Tamil Pulp Fiction Stories என்று எழுதப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள். கூடவே வாசலில் அடியாட்கள் போன்ற திடகாத்திரமான இரண்டு பெண்கள் வருவோர், போவோரையெல்லாம் கையைப் பிடித்திழுக்காத குறையாக நிறுத்தி, கிராமர் ஆங்கிலத்தில் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். எச்சரிக்கையாக தூரத்தில் போய் நின்று வேடிக்கை பார்த்த என்னை நோக்கியும் ஒரு பெண் வர.. விட்டேன் ஜூட்.. தமிழ்ல பேசினாலே சமயத்துல நமக்கு விளங்க மாட்டேங்குது.. இதுல ஆங்கிலம் வேறயா..?

குழந்தைகளுக்கான புத்தகங்கள் இந்தாண்டு நிறையவே வந்துள்ளன. அதில் அறிவுப்பூர்வமாக, பாடம் சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும் கடைகளில் பொறுப்பான அம்மா, அப்பாக்களின் கூட்டம் முண்டியடித்தது. பொம்மை கடையாக இருந்தால் குழந்தைகள் முன்புறமாகவும், புத்தகக் கடையாக இருந்தால் அம்மாக்களின் பின்புறமாக ஒளிந்து நிற்கும் குழந்தைகளையும் பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

எத்தனைதான் புத்தகங்கள் புதுசு, புதுசாக வந்தாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்ற கிராமர் இங்கிலீபீசு புத்தகங்களும் நிறையவே விலை போகின்றன. அனைத்திலுமே “அம்மா இங்கே வா வா..” “அதோ ஆடு..” “இதோ இலை..” என்றுதான் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி படிக்கத் துவங்கினால் புத்தகத்தை வாங்கியவர் சுடுகாடு போய்ச் சேர்வதற்குள் பாடத்தில் தேறிடுவார் என்று நம்பலாம்.

திராவிடன் பதிப்பகத்தில் வி.ஐ.பி. பாஸ் வைத்திருந்த ஒருவர் மட்டுமே கருப்பு சட்டை போட்டிருந்தார். சென்ற ஆண்டு வாசலில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் யூனிபார்மில் இருந்தார்கள். ஒருவேளை கருப்பு சட்டை சென்னையில் ஸ்டாக் இல்லையோ..? பெரியாரின் எழுத்துக்கள் தொகுதி, தொகுதியாக வெளியிடப்பட்டிருப்பதால் 10, 15 ரூபாய்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறது. ஆனால் இங்கேயும் கூட்டம் குறைவுதான்.

தமிழ்வாணன் பதிப்பகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது ஒரு கவலை.. அடுத்து புதிதாக எழுதுவதற்கு தலைப்பு கிடைக்கவில்லையாம். எதைப் பற்றியும் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் உடனேயே ஓடலாம். என்னுடைய சிபாரிசு தலைப்பு, “பெண் பார்க்கச் செல்லும்போது செய்ய வேண்டியது..”

நக்கீரன் பதிப்பகத்தில் வாத்தியார் சுஜாதா எழுதிய சிறுகதைகளைப் பார்த்தேன். இதை எப்போது எழுதினார் என்று தெரியாமல் குழம்பிப் போனேன். வாத்தியார் இன்னும் எதை, எதையெல்லாம் செய்திருக்கிறார் என்றே தெரியவில்லை. ‘வீரப்பன் வேட்டை’ கடையில் நன்கு கல்லாவை நிரப்பிக் கொண்டிருந்தது. வாசலில் அமர்ந்திருந்த நக்கீரன் கோபால், பேவரிட் புன்னகையோடு கேட்பவர்களுக்கெல்லாம் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம், “நக்கீரன் சார்பில் புது பிளாக் துவக்குங்கள்” என்றேன். “அதில் நக்கீரன் வெளியீடுகளை மொத்தமாக போட்டு வையுங்கள். இப்போதெல்லாம் பல ஐ.டி. நிறுவனங்களில் டாட்.காம், டாட்.நெட் என்று முடியும் இணையத்தளங்களை தடை செய்துவிட்டார்கள். பலரும் அதனைத் திறக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். நீங்கள் பிளாக்கில் செய்தீர்கள் என்றால் இன்னும் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள்..” என்றேன். “நல்ல யோசனை. நிச்சயம் செய்கிறேன்..” என்றார். ஏதோ நம்மளால முடிஞ்ச பத்த வைப்பு..

நூற்றாண்டு கண்ட அல்லையன்ஸ் பதிப்பகத்தில் ஏற்கெனவே ‘சோ’ அவர்களின் சோகக் கதைகள் நிறைய குவிந்திருக்கின்றன. போதாதுக்கு இன்னொரு சோகமாக பெரிய ‘சோ’வான திரு.லால்கிஷன் அத்வானியின், ‘என் தேசம் என் வாழ்க்கை’ என்கிற கட்டைப் புத்தகம் நிமிர்ந்து நிற்கிறது. எப்படியும் புத்தகத்தில் பாதி பொய்யும், புரட்டுமாகத்தான் இருக்கும் என்பது தலைப்பிலேயே தெரிகிறது. ‘என் தேசம்’ என்று பெயர் வைத்து பாசத்தைக் கொட்டத் தெரிந்த இவர்தான், பிரச்சினை வருமே என்றெண்ணி பலரும் கதறியழுது சொல்லியும் கேளாமல், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ரத யாத்திரை போய் தேசத்தின் ஒரு பெரிய அழிவுக்கு அஸ்திவாரத்தைத் தோண்டினார். இதைப் பற்றி புத்தகத்தில் எவ்வளவு அழகாக பொய் சொல்லியிருக்கிறார் என்பது படித்தால்தான் தெரியும். அரசியல்வியாதிகளின் பொய்தான் இருப்பதிலேயே அழகான பொய்யாக இருக்குமென்று நினைக்கிறேன். இங்கே ‘சோ’வின் ‘இராமாயணத்தை’ குறி வைத்திருக்கிறேன். அடுத்த முறை வரும்போது வாங்கிவிட வேண்டும்.

கிழக்குப் பதிப்பகத்தைத் தேடிக் கண்டுபிடித்து பத்ரி ஸார் இருந்தால் ‘எதையாவது ஆட்டைய போடலாம்’ என்று நினைத்துப் போனேன். “பத்ரி இல்லை..” என்றார்கள். கிழக்குப் பதிப்பகம் நலம், வரம், prodigy, New horizon media என்ற பெயர்களில் 5 கடைகளை வைத்திருந்தார்கள். சிறிய ரக புத்தகங்கள் பலவும் அடுக்கப்பட்டிருக்க.. “இங்கே 25 ரூபாயில் தி.முக., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.வின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்” என்று அழைக்கிறார்கள். இதோடு கூடவே ஆடியோ புத்தகங்களுக்கு என்று தனியாக ஒரு கடையை அமைத்திருந்தார்கள். பதிப்புலகம் எங்கயோ போகுது..

கடையில் ஹரன் பிரசன்னாவைத் தேடினேன். ஆனால் வந்தது எழுத்தாளர் யுவகிருஷ்ணா. ஆள் இப்போது எழுத்தாளராகவும் ஆகிவிட்டபடியால் கொஞ்சம் கலராக மாறியிருக்கிறார். உடைகளும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஜிகினா சட்டைகளைத் தவிர வேறெதையும் உடுத்துவதில்லையாம். நேற்று மடிப்பு கலையாத வெள்ளை நிற பளபள சட்டையில் இருந்தார்.


நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஹரன் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், இரண்டு நாட்களுக்கு முன் நான் அவருக்கு போன் செய்து கலாய்த்ததை நினைவுகூர்ந்தார். “என்னங்க இவர் பாட்டுக்கு எனக்கு போன் பண்ணி, இட்லிவடைக்கு ஒரு கமெண்ட் போட்டிருக்கேன். பப்ளிஷ் பண்ணுங்கன்றாரு..” என்று யுவகிருஷ்ணாவிடம் சொன்னார். “நீங்கதான ஸார் இட்லிவடை..” என்றேன். “நான் இல்லீங்க.. இவர்தான்..” என்று அருகில் அம்சமாக, அழகாக நின்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை NHM நாகராஜை
அடையாளம் காட்டினார். நாகராஜ் இதை மறுக்கவில்லை. ஆகவே, கழகக் கண்மணிகளே, இப்போது உங்களது பார்வையை கொஞ்சம் இந்த நாகராஜ் மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இட்லிவடை இவராகக் கூட இருக்கலாம்.

கிழக்குப் பதிப்பகத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தலைப்பு, “ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்”. உலகின் முதல் 25 பணக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகம் இது. கிழக்கில் புத்தகத்தின் டிஸைனில்தான் விளையாட்டு காட்டுகிறார்கள் என்றில்லை.. தலைப்பிலும் பிச்சு உதறுகிறார்கள். வாழ்க வளமுடன்.

எழுத்தாளர் யுவகிருஷ்ணா, நாகராஜுடன் நகர்வலம் சென்றபோது எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். எழுத்தாளர் யுவகிருஷ்ணனையும், நாகராஜையும் எஸ்.ரா.விடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். தான் 15 காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கியதாகச் சொன்னார் எஸ்.ரா. உடனேயே நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. “எங்கே..? எங்கே..?” என்றார். எஸ்.ரா. எங்களை கையோடு ‘உயிர்மை’க்கு அழைத்து வந்து தான் வாங்கி வைத்திருந்த புத்தகங்களைத் தேடியெடுத்து புத்தகக் கடையின் பெயரைச் சொன்னார். அங்கே திடீர் சந்திப்பாக கவிஞரும், சக பதிவருமான தமிழ்நதி அவர்களைச் சந்தித்தோம்.

நாகராஜிடம் பா.ராகவனின்
போன் நம்பர் கேட்டேன். “என்னிடம் இல்லை. அவர் யாரிடமும் தரவில்லை..” என்றார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவும் “என்னிடமும் இல்லை. புதுசா நம்பர் மாத்திட்டார் போலிருக்கு” என்றார். ஹரன் பிரசன்னா, “பா.ராகவனைத் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள்” என்று அறிக்கையேவிட்டுவிட்டார். அவரிடமே பா.ரா.வின் நம்பர் கேட்டேன். “அவர் யாருக்கும் நம்பர் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..” என்றார். போன் நம்பர் கிடைக்காமல் எப்படி திட்டுவது..? இந்த எழுத்தாளர்களே இப்படித்தான் வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்..

எழுத்தாளர் யுவகிருஷ்ணாவுடன் காமிக்ஸ் புத்தகம் விற்ற அந்த கடைக்குச் சென்றேன். நிஜமாகவே பழைய காமிக்ஸ் புத்தகங்கள்தான் அவை. விலை 5 ரூபாய்தான். அனைத்தையும் வாங்கித் தூக்கிச் செல்வதென்றால் முடியாத காரியம் என்பதாலும், பர்ஸின் கனம் அப்போதைக்கு குறைவாக இருப்பதாலும் நமது எழுத்தாளர் யுவகிருஷ்ணா அவர்கள், “நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்..” என்றார்.

மறுபடியும் கிழக்குக் கடைக்கு வந்தோம். கடையில் ஜாக்கி சேகர் இருந்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நான் வாங்க வேண்டிய புத்தகம் ஒன்று அங்கே இருப்பதாகச் சொல்லி ‘திருமண கையேடு’ என்ற தலைப்பிலான புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. “அதை வாங்கிப் படித்தாலும் என் கர்மம் தொலையாது..” என்றேன்.

நேற்று வரையிலும் 2000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியதாகவும், இன்று மேலும் 600 ரூபாய் ஆகிவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார் எழுத்தாளர் யுவகிருஷ்ணா. எழுத்தாளர் ஆன பின்னாடி இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா..? இதையெல்லாம் முதலீடா நினைச்சு முன்னேற வேண்டியதுதான்.. என்ன நான் சொல்றது..?

ஹரன் ஸாரிடம் விடைபெற்று இருவரும் வெளியில் வந்தோம். அப்போது கேபிள் சங்கர் போன் செய்தார். எழுத்தாளர் யுவகிருஷ்ணாவிடமும் பேசினார். நானும் கேபிள் ஸாரும் முகம் பார்க்காமலேயே இதுவரையில் 100 முறையாவது பேசியிருப்போம். நேரில் சந்திப்பதற்கு நேரம் கிடைக்காமல் உள்ளது. போனிலேயே காதல்..

எழுத்தாளர் யுவகிருஷ்ணா, “நேரமாகிவிட்டது..” என்று சொல்லி விடைபெற.. அங்கே மேடையில் ‘தமிழ்க் கடல்’ திரு.நெல்லை கண்ணன் தமிழை அனைவருக்கும் வஞ்சகமில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருந்ததால், “அதைக் கேட்டுவிட்டு பின்பு வருகிறேன்..” என்று சொல்லி நமது எழுத்தாளரை வழியனுப்பிவைத்துவிட்டு கூட்டத்திற்குள் புகுந்தேன்.

‘தமிழ்க்கடல்..’ வெறுமனே சொல்லவில்லை. உண்மையான கடல்தான்.. ‘தமிழால் வாழ்வோம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். துணைக்கு அவ்வையாரையும், திருக்குறளையும் அவ்வப்போது அழைத்துக் கொண்டார்.

அவருடைய பேச்சில் என் நினைவில் இருந்து சில பகுதிகள் :

“ரோட்டுல பாக்குறேன்.. ஒரு வண்டில, புருஷன், பொஞ்சாதி, முன்னாடி ஒரு பிள்ளை, அடுத்து ஒரு பிள்ளை, ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பிள்ளை.. இது பத்தாதுன்னு பொஞ்சாதி மடியிலேயும் ஒரு பிள்ளை.. அது என்னடான்னா ‘ஸ்டெப்னி’ங்குறான்.. எவ்வளவோ முயற்சி செஞ்சும் தடுக்க முடியாம போய் பொறந்திருச்சாம். அதுனால அது ஸ்டெப்னியாம்..”

“கோவிலுக்கு போ.. சாமியைக் கும்பிடுன்னு எந்த தமிழும் நமக்குச் சொல்லித் தரலை.. சும்மா சும்மா கோவிலுக்குப் போய் சாமியை விரட்டாதீங்க.. மிரட்டாதீங்க.. ஒரே நாள்ல 10 லட்சம் பேர் போய் பெருமாள்கிட்ட வேண்டிக்கிறான்.. பெருமாள் ஒத்த மனுஷன்.. அவர் என்ன பண்ணுவார்..? எத்தனை பேர் குறையைத்தான் கேப்பாரு.. முடியற காரியமா அவரால..”

“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் முப்பது வருஷமா திருப்பதிக்கு போயிட்டு வந்திட்டிருக்கார்.. ‘பெருமாள் எப்படிய்யா இருக்கார்..?’ன்னு கேட்டேன். ‘ரெண்டு பெரிய திண்டு. நடுவுல ஒரு துண்டு’ன்னார்.. ‘என்னய்யா..?’ன்னு கேட்டா சொல்றாரு.. “பக்கத்துல போனவுடனேயே ஜலகண்டி.. ஜலகண்டின்னு விரட்டிட்டே இருப்பான். நானும் அவசரமா பாத்ததுல இத்தனை வருஷமா கோவில் பட்டரோட பின்பக்கத்தைத்தான் சாமின்னு நினைச்சு கும்பிட்டிருக்கேன்’னாரு..”

“நம்மூர் பெருமாள் கோவில்ல அட்சதையும், புளியோதரையும் கொடுப்பாங்க. கூடவே இலவச இணைப்பா டி.கே.எஸ்.பட்டணம் பொடியும் கிடைக்கும்.. ஒரு பட்டர் விடாம அத்தனை பேரும் மூக்குப் பொடி போடுறாங்க.. நீங்களே பார்த்திருப்பீங்களே.. இதெல்லாம் நமக்குத் தேவையா.. சாமி எங்கேயும் போகலை.. நமக்குள்ளதான் இருக்கு. நம்ம வீட்லதான் இருக்கு. நம்ம அப்பன், ஆத்தாளை கும்பிடுங்க.. அவுங்கதான் சாமி.. அதுதான் பக்தி..”

“இந்த செல்போன் வந்ததுலேயிருந்து ஒரு பயலும் பேச மாட்டேங்குறான். வீட்ல யாருக்கும், யாருக்குமிடையில் பேச்சு இல்லாம போச்சு. ஆனா செல்போன்ல மட்டும்தான் மணிக்கணக்கா பேசுறான்.. ரோட்டுல வண்டியோட்டும்போது செல்போன்ல பேசாதன்னு சட்டம் போட்டாச்சு.. ஆனா ஒரு பயலும் கேக்கலை. டாக்டர்ன்னு ஸ்டிக்கரை ஒட்டிருக்கிறவனே செல்போன்ல பேசிட்டேதான் வண்டியை ஓட்டுறான்.. அவன் அடிபட்டா, அவனுக்கு அவனே வைத்தியம் பார்த்துக்குவானா..?”

“துறவிகள் பின்னாடி போகாதீங்க.. அவங்கதான் உங்க பின்னாடி வரணும்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர். அவரோட பொஞ்சாதி அவரை மதிக்கவே மாட்டாங்க. அந்தம்மா ஒரு சாமியாரோட தீவிர பக்தையா இருந்தாங்க. டாக்டரும் பொறுத்து பொறுத்து பார்த்தாரு. சாமியாருக்கு ஒரு நாள் நோய் முத்திப் போச்சு. நம்ம டாக்டர்தான் காப்பாத்துனாரு. பொழைச்சவுடனே சாமியாரு டாக்டரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, ‘நீங்கதாங்க கடவுள்’ன்னாரு.. அப்புறம்தான் அந்தம்மாவுக்கு தெரிஞ்சது நம்ம வீட்டுக்குள்ளே ஒரு தெய்வம் இருக்கு.. நாமதான் வெளில தேடிக்கிட்டிருக்கோம்னு..”

“துறவின்றவன் நம்ம கால்ல விழுகணும்.. நாம அவன் கால்ல விழுகக்கூடாது. ஏன்னா அவன்தான் பற்றற்றவன். நாம அவன் கால்ல விழுந்தா, அவனுக்குள்ள தான் ஒரு பெரியவன்ற அகந்தை இருக்கு. அப்போ அவனுக்கு பெருமைல பற்று இருக்குன்னு அர்த்தம்.. இப்ப அவன் துறவியில்ல.. இதைத்தான் பட்டினத்தார் சொல்லியிருக்காரு.. எல்லாத்தையும் விட்ரு.. பிச்சையெடு.. திருவோடுகூட உனக்குச் சொந்தமா இருக்கக்கூடாது. அவன்தான் துறவின்னாரு.. இப்ப எல்லாரும் அப்படியா இருக்கானுக..”

“குழந்தைகளிடம் அன்பா இருங்க.. நேசிங்க.. பாசமா பழகுங்க.. அதுதான் உங்க உலகம். கடன் வாங்காதீங்க.. அதுக்கு சும்மாவே இருக்கலாம். ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினீங்கன்னா நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு செலவு பண்ணுங்க.. போதும்.. அதுலேயே சந்தோஷமா இருங்க.. கிடைச்சிருக்குற வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிங்க.. மகிழ்ச்சி உங்களுக்குள்ளதான் இருக்கு.. ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தாதீங்க..”

“ஆயிரம் ரூபா கொடுத்து வண்டியை எடுத்திட்டுப் போங்க’ன்றான்.. ‘அப்புறம் மாசா, மாசாம் பணத்தைக் கட்டுங்க.. கட்ட முடியலைன்னா நாங்களே தேடி வந்து வண்டியை எடுத்துக்குறோம்’ன்றான்.. எதுக்குன்றேன்.. தேவையில்லை.. கடன் உடன் இருந்தே கொல்லும் ஒரு வியாதி.. அது நமக்குத் தேவையில்லை..”

“ஆசைப்படுங்க.. அந்த ஆசை உங்க குழந்தைகளை நல்ல குணத்தோட வளர்க்கணும்ன்ற பேராசையா மட்டும்தான் இருக்கணும்..”

இப்படி சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கிறது தமிழ்க்கடலின் சொற்பொழிவு. மடைதிறந்த வெள்ளம்போல் எப்படித்தான் இப்படி அநாயசமாக வார்த்தைகள் இவரிடமிருந்து வந்து விழுகின்றன என்று தெரியவில்லை. அற்புதமான பேச்சு. குடும்பத்தில் ஒருவர் போன்ற தோற்றமும், அவருடைய பேச்சும் கூட்டத்தினரை பெரிதும் கவர்ந்திருந்தது.

பேச்சை முடித்ததும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க கியூவில் நின்றது கூட்டம். காங்கிரஸ் கட்சியிலேயே இப்படி பெருமைப்படத்தக்கவர் தமிழ்நாட்டிலேயே திரு.நெல்லைகண்ணன் மட்டும்தான் என்பது, அவருடைய தலைவி திருமதி.சோனியாகாந்திக்கு எப்போது தெரியப் போகிறது என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட, கூட்டத்தினரை கட்டிப் போடத் தெரிந்த ஆளுமை படைத்த பேச்சாளரின் அருமை தெரியாமலும், அவரைப் பயன்படுத்தவும் தெரியாமலும்தான் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி, தனது அடையாளத்தைத் தொலைத்து மாற்றுக் கட்சிகளின் கொல்லைப்புறத்தில் கால் கடுக்க நிற்கிறது.

நிகழ்ச்சி முடிந்தபோது சக பதிவர் வண்ணத்துப்பூச்சியாரை சந்தித்தேன். அவருடைய மகள், மற்றும் மகனுடன் வந்திருந்தார். அவரை வழியனுப்பிவிட்டு மேடைக்குச் சென்று காத்திருந்து திரு.நெல்லையார் அவர்களிடம் கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தேன்.

கொண்டு வந்தது 50 ரூபாய். செலவழித்தது ஒரு காலச்சுவடு புத்தகம், ஒரு காபி, இரண்டு வடை என்று 35 ரூபாய்.. இன்றைய பொழுதில் நேரத்தையும் நல்ல முறையில் கடத்தியாகிவிட்டது. செலவையும் கட்டுப்படுத்தியாகிவிட்டது. மனமும் சந்தோஷமாக இருக்கிறது என்ற பூரிப்புடன் நடந்தேன்.

விடுவானா முருகன்..?

எல்லாஞ் சரி.. ஒரு 6 மணி நேரம் அவனை மறந்தாச்சே.. மறக்கலாமா? அது தப்பில்லையா..? தப்புதானே.. அதான் முருகன் தன் வேலையை காட்டிட்டான்.

எனது டூவிலரின் அருகில் வந்து Side Lock-ஐ திறக்க முயல்கிறேன்.. முயற்சி செய்கிறேன்.. முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன். சாவி உள்ளே நுழையவேயில்லை. பல முறை செய்து பார்த்தும் முடியாமல் சோர்ந்து போய் பக்கத்தில் வண்டியை எடுக்க வந்தவர்களையும் அவர்களது ஹெல்மெட்டை கழட்ட வைத்து புகார் செய்து அவர்களின் ஜாதகமாவது நன்றாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். ம்ஹ¤ம்.. ஒருத்தராலும் முடியவில்லை..

களைத்துப் போய் நின்றிருந்தபோது ஜாக்கிசேகர் போன் செய்தார். “எங்க தலைவா இருக்கீங்க..?” என்றார். நிலவரத்தை சொன்னேன். துணைவியாருடன் எனது இடத்திற்கே வந்தார். “கொடுங்க நான் முயற்சி பண்றேன்..” என்றார். அவரும் என்னென்னமோ செய்து பார்த்தார். முடியவில்லை. “முடியல தலைவா.. உடைக்கிறதுதான் ஒரே வழி..” என்றார். வேறு வழியில்லாததால் தலையாட்டினேன்.

‘உடைப்பது’ என்றால் எதையாவது வைத்து சாவி துவாரத்தில் அடித்து உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஜாக்கிசேகரோ வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, ஸ்டியரிங்கை இப்படியும், அப்படியுமாக வேகமாக ரெண்டு திருப்பு, திருப்பினார். அடுத்த நொடி, Side Lock உடைந்து தொங்கியது. வேறென்ன செய்வது..? ஆறு மணி நேர சந்தோஷம் ஒரு நொடியில் உடைந்து போனது.

வழக்கமாக எனக்கு வரும் அன்றாட சோதனைகளில் இன்றைக்கு இது என்று நினைத்துக் கொண்டேன். முருகன் எப்பொழுது எனக்கு பிரச்சினையைக் கொடுத்தாலும், அதனைத் தீர்க்கவும் அவனே பின்னாலேயே வருவான். இது எனது பல வருட அனுபவம்.

அப்படி நேற்று வந்த முருகனின் பெயர் ‘தனசேகர்’ என்கிற ‘ஜாக்கிசேகர்’.

கந்தனுக்கு அரோகரா..

முருகனுக்கு அரோகா..

வேல்.. வேல்.. வெற்றிவேல்..

வேல்.. வேல்.. வெற்றிவேல்..

அரோகரா..