போலி உண்மைத்தமிழன் யார்?

28-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தெரிந்தோ, தெரியாமலோ நான் உங்களிடமோ அல்லது உங்களிடம் நானோ மாட்டிக் கொண்டு உண்மைத்தமிழன் என்ற பெயரில் குப்பை கொட்டி வருகிறேன்.

'போலிகளிடம் ஏமாறாதீர்கள்' என்ற வசனத்தை ஊதுபத்தி வியாபாரத்திலிருந்து காயகல்பம் வியாபாரம்வரையிலும் நான் கேட்டிருக்கிறேன்.. இந்தப் போலி என்ற முகமூடி போட்ட நபர்களால் உங்களில் சிலரைப் போலவே நானும் என்ன பாடுபட்டிருக்கிறேன் என்பதனை இந்தப் பதிவிலும் , தொடர்ந்து இந்தப் பதிவிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்த போலி உண்மைத்தமிழன் கடந்த சில நாட்களாக வீறு கொண்டு எழுந்து முடி வெட்ட வருபவனுக்கு மொட்டையே அடித்து விடுபவனைப் போல் பின்னூட்டங்களைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். நானும் வழக்கம்போல புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என் புலம்பலை கேட்டவர்களில் பலரும் வழக்கம்போல ஆறுதல் சொல்லிவிட்டு, "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கண்ணா.." என்கிறார்கள். சிலர் ஆறுதலையும் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் போலியையும் தெரியாத்தனமாக அனுமதித்து விடுகிறார்கள்.

போலியால் நான் வாங்கிய முதல் குட்டு மோதிரக்கையால் கிடைத்ததுதான்.


நண்பர் மிதக்கும்வெளி ஐயாவின் பெரியார் படம் பற்றிய இந்தப் பதிவில் போய் தன் வீரத்தைக் காட்டியிருக்கிறான் போலி. அதுவும் எப்படி பாருங்கள்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..


இதற்குப் பதில் எப்படி வந்திருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? இதோ இப்படித்தான்..

உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.



எனக்கு இது தேவையா..?

கோவையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு நான் போயிருந்த சமயம் பாலபாரதி, "தலைவா.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. விட்டுத் தொலைங்க.. அவன் உங்களோட ரசிகனா இருக்கான். அதான் ரசிகர் மன்றம்னு பிளாக்கர் ஆரம்பிச்சிருக்கான்.. விடுவீங்களா இதைப் போயி.." என்றார்.

அங்கே வந்திருந்த நண்பர்கள் வினையூக்கி, முகுந்த்ராஜ், மா.சிவக்குமார், மோகன்தாஸ் ஆகியோரும் இதையே முன் மொழிந்தார்கள். சரி விட்டுத் தொலைவோம் என்ற நினைப்புடன்தான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அதே கோவையில் மிதக்கும்வெளி ஐயாவிடமும் அவர் பதிவில் போட்டிருக்கும் போலியின் பதிவுகளை நீக்கும்படி சொன்னேன்.. நான் இப்படிச் சொன்னதையே கோவை சந்திப்பு பற்றிய இந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.

மறுபடியும், மறுபடியும் அவருடைய பதிவுகளில் போலி உண்மைத்தமிழன் தலைகாட்ட ஆரம்பிக்க, நிஜமாகவே எனக்கு அவர் மீது வருத்தம் இருந்தது. ஆனால் இன்றுதான் ஐயா ஒரு கேள்வி கேட்டார்.. "எலிக்குட்டி சோதனை என்றால் என்ன?" என்று.. 'அடக்கடவுளே..!' இவரையெல்லாம் என்ன செய்றது..? வேறு வழியில்லாமல் நானும் அதைச் சொன்னேன். "இனிமே பார்த்துக்குறேன் ஸார்.." என்றிருக்கிறார்.

ஆச்சா.. சென்ற திங்களன்று சகோதரி கவிதாவின் இந்தப் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான் போலி. அதுவும் எப்படி? MNC-யில் பணியாற்றும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும்விதமாக..

கவிதா இதைப் படித்துவிட்டு, இது போலி உண்மைத்தமிழன் எழுதியது என்பதையும் தெரிந்து கொண்டு அதை அனுமதித்து, அதற்கு பதிலும் எழுதினார்.

அவரைப் பொறுத்தவரை அது சரி.. "போலியாக இருந்தாலும் அவன் மனதுக்குள் இந்த எண்ணம் இருக்கே.. அதுக்கு நான் பதில் சொல்லிருக்கேன்.." என்று எனக்கு மெயில் செய்தார். நானோ, "அது தப்பும்மா.. இப்போ போலியோட மனசுக்குள்ள நான்தான் இருக்கேன். என் பேரை ரிப்பேராக்கணும்னுதான் உனக்குப் போட்டிருக்கான்.. மொதல்ல டெலீட் பண்ணிரு.. இல்லாட்டி நாளைக்கும் போடுவான்.. உனக்கு ஒரு வேலை கூட வரும்.." என்றேன்.. "சரி.." என்று பெருந்தன்மையோடு டெலீட் செய்தார். இவரிடம் போலியின் IP அட்ரஸ் கேட்டேன். "ஸாரி ஸார்.. அது என்னுடைய பெர்ஸனலுக்கு மட்டும்தான்.." என்றார். சரி என்றுவிட்டுவிட்டேன்.

இது இப்படி.. இன்னொருவர் 'தோழர்' வரவனையான்.. அவரோட இந்தப் பதிவிலேயும் போய் போட்டுட்டான் போலி.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளு..? "தலைவா அது போலி போட்டதா..? தெரியாமப் போச்சு.. தூக்கிர்றேன்.." என்றவர், போலியை நீக்கிவிட்டு, அடுத்து இந்தப் பதிவில் அனுமதித்துவிட்டார். "என்ன ஸார்..?" என்று நான் சண்டைக்குப் போனவுடன், "ஸாரி ஸார்.. அசுரன், மாமா, ம.க.இ.க. பிடுங்கி, மயிரு என்ற டென்ஷன்ல இருந்தேன்.. அதான்.. இப்ப தூக்கிர்றேன் தலைவா.." என்றார். சொன்னபடியே டெலீட்டும் செய்தார். "சரி.. உங்களுக்குப் போட்டவரைக்கும் சந்தோஷம்தான் சாமி.. அந்த IP நம்பரை மட்டும் கொடுங்க.. மீதியை நான் பார்த்துக்குறேன்.." என்று ஏதோ பெரிய சிபிஐ கார்த்திகேயன் மாதிரி சவுடால் விட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் IP நம்பர் டீடெயில்ஸை மெயில் செய்தார் வரவனையான். அது இதுதான்.. அவருக்கு கோடானுகோடி நன்றிகள்..

IP Address:
Host: dsl-TN-static-204.247.22.125.airtelbroadband.in
ISP: Btnl-chn-dsl
Entry Page Time : 26th June 2007 13:01:51
Visit Length: 14 mins 54 secs
Browser: MSIE 6.0
OS: Windows XP
Resolution: 1024x768
Location: Tamil Nadu, Chennai, India
Returning Visits: 5


இது சென்னையில் உள்ள Airtel Company-யின் கனெக்ஷன் நம்பர். ஆனால் நான் IP Address கண்டறியும் வலைத்தளங்களில் இதை செக் செய்தால் ஆத்தாடி.. கலிபோர்னியாவுக்கு போய் நிக்குதுங்கோ.. உள்ளூர்லேயே என்னை அடிச்சுப் போட்டாக்கூட கேட்க நாதியில்லை. இதுல கலிபோர்னியால இருந்து ஒரு உடன்பிறப்பாம்.. நம்பவா முடியுது.. தலை சுத்தி உக்காந்திருந்தேன்.

அப்பத்தான் பெங்களூர்ல இருந்து ஒரு அனானி எனக்கு போன் செஞ்சாரு.. "இதெல்லாம் போலி பிராக்ஸி வேலை ஸார்.. IP நம்பரையே மாத்திக் கொடுத்து உங்களை ஏமாத்துறாங்க.. அது நிச்சயம் கலிபோர்னியா நம்பரா இருக்காது. அதே மெட்ராஸ் நம்பராத்தான் இருக்கும்..." என்றவர் சில உறுதியான முன் உதாரணங்களையும் சொல்லி இருந்த மூளையையும் தலைகீழா புரட்டிட்டார்.. அந்த அனானிக்கும் எனது நன்றிகள்..

அடுத்து நம்ம மிதக்கும்வெளி இன்னொரு பதிவைப் போட்டாரு. அது இதுதான். அவரு இருந்ததே வெளியூர்ல.. அங்கன இருந்துக்கிட்டே சென்னைல நடந்த வலைப்பதிவர் கூட்டத்தைப் பத்தி அப்படியே நிசமா பக்கத்துல உக்காந்து எழுதின மாதிரி எழுதியிருந்தாருப்பா. 'புரிஞ்சுக்குங்க'.. அதுலயே என்னைப் பத்தியும் ஒரு பாரால...

"பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு போட்டும் பின்நவீனம், மார்க்சியம், மொக்கை, ஜல்லி என்று எந்த பதிவாக இருந்தாலும் பின்னூட்டம் போட்டு கருத்துரிமையைக் காப்பாற்றிவரும் உண்மைத்தமிழன் ஊருக்குச்சென்றுவிட்டதால் சந்திப்புக்கு வரமுடியாது என்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை சென்னை நந்தனம் சிக்னலில் கைலியுடன் பார்த்ததாக பட்சிகள் தெரிவிக்கின்றன." - இப்படி எழுதிருந்தாரு..

நானும் அதுக்குப் பதிலா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. போட்டுட்டு அவர்கிட்ட போன்ல பேசினா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு. "உங்க போட்டோவோடயே இப்ப கமெண்ட்ஸ் வருதே.. தெரியாதா உங்களுக்கு?" அப்படீன்னு அசலாட்டா சொன்னாரு. "வரவனையான் பதிவுல நேத்து பார்த்தேன்"னாரு.. 'அதெப்படி போட்டோவும் வந்துச்சு.. வர்றதுக்கு சான்ஸ் இல்லையே'ன்னு தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மிதக்கும்வெளி ஐயாவோட அதே பதிவிலேயே வந்துட்டான் போலி. இதைப் படிச்சுப் பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வெளியே மிதக்கும் அய்யா.. என்னை நந்தனம் சிக்னலில் கைலியோடு பார்த்த அய்யா லக்கிலுக் அய்யா தான்.. அவர் பதிவர் சந்திப்பில் இதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கியது இல்லாமல் உங்களிடமும் சொல்லிவிட்டாரா அய்யா.. அவர் நல்லா இருக்கட்டும் அய்யா..


இதைப் படிச்சப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சது.. போலி உண்மைத்தமிழன் கலிபோர்னியால இல்ல.. இங்கனதான் மெட்ராஸ்ல என் பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கான்னு..

எப்படின்னா மிதக்கும்வெளி ஐயா, தன்னோட பதிவுல "என்னை கைலியோட பார்த்ததா ஒரு பட்சி சொல்லுச்சு.." என்றுதான் எழுதியிருக்கிறார். கமெண்ட்ஸ் போட்ட நான்தான் "பேண்ட் அணிந்திருந்தேன்.." என்று திருத்தினேன்..

ஆனால் இந்த போலி உண்மைத்தமிழன் , தம்பி லக்கிலுக் அனைவரிடமும் உண்மைத்தமிழனை நந்தனம் சிக்னலில் பார்த்ததைச் சொல்லிப் பரப்பியதாக சொல்கிறான்.

இங்கே ஒரு விஷயம். 24-06-2007 ஞாயிறு மதியம் 2.45 மணிக்கு நந்தனம் சிக்னலில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்த்துப் பேசியது தம்பி லக்கிலுக்தான். நான் அப்போதே சொன்னேன், "என்னால் கூட்டத்துக்கு வர முடியாது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது.." என்று.. "சரி.. முடிந்தால் வரப் பாருங்கள்.." என்று சொல்லிவிட்டுச் சென்றார் லக்கிலுக்.

இப்போது போலி உண்மைத்தமிழன் சொல்வதைப் படித்துப் பார்த்தால் மிதக்கும்வெளி ஐயாவும் வெளியில் சொல்லாமல் இருக்கும்போதே, போலி உண்மைத்தமிழனுக்கு என்னைச் சந்தித்தது லக்கிலுக்தான் என்பதும், லக்கிலுக் அனைவரிடமும் சொல்லி, அனைவருக்கும் அது தெரிந்திருக்கிறது என்றும் சொல்லியிருப்பதைப் பார்த்தால், அந்தச் சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தப் போலி உண்மைத்தமிழன் என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நான் யார் மீது குற்றம்சாட்ட முடியும்? யாருக்கு என் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

சரி இவர்களில் ஒருவர் இல்லை என்றால், லக்கிலுக் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிந்தது என்றால் போலி உண்மைத்தமிழனுக்கும், லக்கிலுக் சொல்லித்தானே இது தெரிந்திருக்க முடியும். அப்படியானால் லக்கிலுக் என்னைச் சந்தித்ததை யாரிடமெல்லாம் சொன்னார் என்பதை கொஞ்சம் வெளிப்படுத்தினால் நான் அவர்களிடம் கேட்க ஏதுவாக இருக்குமே...

மேலும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவரிடமும் என்னைச் சந்தித்ததை தம்பி லக்கிலுக் சொன்னாரா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. காரணம் திங்கட்கிழமையன்று(25-06-2007) நான் நண்பர் மா.சிவக்குமார் அவர்களிடம் பேசியபோது "லக்கி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே.." என்றார். ஸோ.. லக்கிலுக் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் சொல்லியிருக்கலாம். அந்தச் சிலரில் ஒருவர் இந்த போலி உண்மைத்தமிழன் இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

"விட்டுத் தொலை சாமி.. காமெடி பண்றானுகய்யா.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே. நொச்சா இருக்கய்யா நீரு..." என்று பாலபாரதி சொன்னாலும், நேற்று என் பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களின் இந்தப் பதிவில் போலி உண்மைத்தமிழன் விளையாடியதை 'காமெடி' என்று என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால்தான் இந்தப் பதிவையே நான் போட வேண்டி வந்தது..

திரு.மாலன் அவர்கள் பத்திரிகையியலில் எனது குருவுக்கு குருவானவர். பெரும் மதிப்பிற்குரிய வலைப்பதிவர். அவரிடம் போய் "என்ன உளறுகிறீர்கள்..?" என்று கமெண்ட்ஸ் போட்டால் இதை எப்படி 'காமெடி' என்று ஒத்துக் கொள்வது?

நல்லவேளை.. நான் அந்தப் பதிவில் கமெண்ட் போட்ட போதுதான் போலியின் கமெண்ட்டையும் படித்தேன். உடனேயே பதில் கமெண்ட்டையும் நான் போட்டேன். பின்பு இரவில் திரு.மாலன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்த போலியின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டு.. எனக்கு எத்தனை சிரமங்கள்..

இவர்கள் மட்டுமல்ல.. பல பதிவர்களுக்கும் இது போல் பதிவுகளைப் போட்டு அதை அவர்கள் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து தடை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..

இன்னும் எத்தனை பேரிடம்தான் நான் மன்னிப்பு கேட்பது? கண்டு கொள்ளாமலேயே சென்றுவிடுங்கள் என்றால்.. மாலன் ஸாரிடம் நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நாளைப் பொழுதுகளில் நான் அவரிடம் பேச வேண்டிய கட்டாயம், சந்திக்க வேண்டிய அவசியமும் கண்டிப்பாக இருக்கிறது. அப்போது, "அது நான் இல்லை ஸார்.. போலி.." என்று நான் சொல்ல முடியுமா?

காமெடி செய்வதற்கும் ஒரு அளவு உண்டு.. மிதக்கும்வெளி, வரவனையான், டோண்டு ஸார் என்றால் நண்பர்கள் என்ற ரீதியில் போனில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். மற்ற எல்லாரிடமும் இதே போல் தினமும் பேச வேண்டும் என்றால் எனக்கு இதுதான் வேலையா..?

எனது கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் அந்தப் போலியிடம் இருக்கிறது என்றால் அனானியாகவோ, அல்லது வேறு ஒரு பெயரிலோ போட்டுத் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு எனது முகமூடி..? நான் கோபப்படுவது இதற்குத்தான்..

எனக்குக் கிடைக்கின்ற சொற்ப நேரத்திலேயே பதிவுகள் போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. இந்த லட்சணத்தில் பொழுது விடிந்து, பொழுது போனால் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஒப்பாரி வைக்க வேண்டும் என்றால் எப்படி?

"கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.." என்று அண்ணன் மா.சிவக்குமார் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் நட்பே பெரிதென்று நினைக்கும் எனக்கு போலியின் ஒவ்வொரு கமெண்ட்டும், என்னை அனைவரிடமிருந்தும் தூரத்திற்குத் தூக்கிச் செல்வதைப் போல் தெரிகிறது.

அதனால்தான் பல வலையுலக நண்பர்களின் எதிர்ப்பையும், அறிவுரையையும் மீறி இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன். வலைத்தமிழர்கள் தங்களைச் சந்தேகப்பட்டுவிட்டேன் என்பதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சூழல் என்னை அப்படி கேட்க வைத்துள்ளது. நீங்களே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. முட்டாள்தனமாக இருந்தால் சிரித்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தால் குண்டு எந்தத் துப்பாக்கியிலிருந்து வந்தது என்பதனைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.. இப்போது அது யாருடைய துப்பாக்கி என்பதனை தம்பி லக்கிலுக்தான் சொல்ல வேண்டும்.. இது அவருடைய கடமையும்கூட..

"இல்லை.. இல்லை.. வலைப்பதிவர் கூட்டத்துக்கு வந்தவர்கள் யாராவது வெளி நண்பர்களிடம் சொல்லியிருக்கலாம்.. அவர்களில் ஒருவர் உங்களுடைய போலி உண்மைத்தமிழன் இருக்கலாம்.." என்று லக்கிலுக் கருதினால் இது எனது தலையெழுத்து என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வலைப்பதிவர்களுக்கு கடைசியாகவும் ஒரு வேண்டுகோள். இது மாதிரியான போலிகளை நீங்கள் அனுமதித்தால், அது அவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல் ஆகும். இதே IP நம்பரில் இருந்து மேற்கொண்டும் கமெண்ட்ஸ் வந்தால் எனக்குத் தகவல் தெரிவித்தால் என்றென்றும் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்..

நன்றி..

சிறுகுறிப்பு : 24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது 'பிச்சை' போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

46 comments:

dondu(#11168674346665545885) said...

//24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது 'பிச்சை' போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது..//

இன்று இதே செய்தியை நீங்கள் என்னிடம் டெலிஃபோனில் கூறியதைக் கேட்டதிலிருந்து மனது கஷ்டப்படுகிறது. எனக்கே அப்படியென்றால் உங்கள் மன உளைச்சல் எனக்கு நன்றாகவே புரிகிறது.

எலிக்குட்டி சோதனை பற்றித்தான் விளக்கிக் கூறினேனே.போட்டோ வருவது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை. நம்மூர் மக்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியவில்லை. என்ன செய்வது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

We The People said...

இவ்வளவு ஃப்ல் பண்ணவேண்டிய தேவையில்லை தமிழன். நீங்க உங்க வேலையை பாருங்க.

வெறும் பயலுக வேலையில்லாம செய்யறவேலைக்கு இப்படி பதிவு எழுத ஆரம்பித்தால் உங்க வாழ்க்கை வேஸ்ட் ஆயிடும். மேட்டரை லூசுல விடுங்க!

பினாத்தல் சுரேஷ் said...

உண்மைத்தமிழன்,

போலி டோண்டு விவகாரமும், போலி உண்மைத் தமிழன் விவகாரமும் நிச்சயமாக ஒன்றல்ல, ஒரே மருந்து இரண்டுக்கும் பலன் தராது.

முக்கியமான காரணம் -- போலி டோண்டு மிகச்சில நாட்களே திறமையான ஆள்மாறாட்டம் செய்யமுடிந்தது, பிறகு சுலபமாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டவுடன், ஆபாசத்தில் இறங்கிவிட்டான்.

போலி உ த கதை, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மைத்தமிழனின் நடையே இன்னும் பிடிபடாமல் இருக்கையில், மூன்று நான்கு ப்ரொபைல்கள், அதுவும் போட்டொவுடன் என்று திட்டமிட்ட தனிநபர்த்தாக்குதல் நடக்கிறது. எது உண்மை, போலி என்பதைப் படித்துக் கண்டுபிடிக்க முடியாத நடை, எல்லோரின் ப்ரொபைலையும் சரிபார்த்து பப்ளிஷ் செய்ய அவகாசம் இல்லாத நிலை, ஆபாசம்-அவதூறு இல்லாத நேரடி மாற்றுக்கருத்துகள் -- போலி உண்மைத்தமிழனைக் கண்டு பப்ளிஷ் செய்யாமல் நிறுத்துவது கஷ்டம்தான்.

நீங்கள் செய்வது சரியான அணுகுமுறையே (என்னைப்பொறுத்தவரை) - இதன்மூலம் குறைந்தபட்சம் உண்மைத்தமிழனுக்கு ஒரு போலி இருக்கிறார் என்ற விவரமாவது பரவும், பப்ளிஷ் செய்யுமுன் ஒரு நொடி செலவழிக்க உதவும்.

இந்த விவகாரத்தில் உங்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(உ தவுக்கு பின்னூட்டம் போட்டாக்கூட இழுத்துகிட்டே போவுதுப்பா :-)

நந்தா said...

ரொம்ப கஷ்டம் உ.த.

தன்னுடைய அடிமனதின் வக்கிரங்களை தீர்த்துக் கொள்வதற்காகவே ஒரு சிலர் இது போன்று செய்து வருகிறார்கள்.

அவர் போடுகின்ற கமெண்ட்ஸை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது வெகு நிச்சயம் அவர் ஒரு ஓரளவு பிரபலமான வலைப் பதிவராக இருப்பார் என்று தோணுகிறது. வெளியில் சாதரண வலைப் பதிவராய் இருந்துகொண்டே அடிமனதில் இருக்கும் வக்கிர உணர்வுகளை தீர்த்துக் கொள்ள இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

நல்லா வருது வாயில....

வவ்வால் said...

உண்மைதமிழன் ,

இதற்கெல்லாம் கலங்காதீர்கள், உங்கள் மீது எந்த தவரும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள் இந்த பதிவின் மூலம் , இனி அவன் என்ன போட்டாலும் உங்களை யாரும் சாட மாட்டார்கள் எனவே புறம் தள்ளிவிட்டு தெம்பாக எழுதுங்கள் இது வெறும் வலைபதிவே இதனால் எல்லாம் ஒருவரின் வாழ்வாதாரம் பறிக்கபடாது, சிரம் கொய்யப்படாது.

அரை லகரம் சம்பளம் வாங்கிக்கொண்டு சொகுசாக வாழ்ந்துகொண்டு பதிவிடுவதில் ஒன்றும் இல்லை உங்களைப்போன்றோர் தான் முன்மாதிரி பதிவர்கள். நான் பல நாள் வலைப்பக்கம் வர மாட்டேன் வேலையில் பிரச்சினை இதில் என்னத பதிவு வேறு என்று. உங்கள் மன உறுதியைப்பார்க்கும் போது எனக்கு வரும் சிரமம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனத்தோன்றுகிறது.

கவலையின்றி உங்கள் பணியினை தொடருங்கள்.

Santhosh said...

உ.த,
சக வலைபதிவர்கள் உங்களுக்கு உதவினால் உங்களால கண்டுபிடிக்க இயலும். அவர்கள் உங்களுக்கு அந்த கமெண்டு வரும் IP முகவரியை கொடுத்து உதவினால் ஒரு வேளை கண்டு பிடிக்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

பங்காளி... said...

மனசுக்கு ர்ர்ரொம்ப கஷ்டமா இருக்கு..ம்ம்ம்ம்

அப்பால வந்து எளுதறேன்....ம்ம்ம்ம்

Anonymous said...

அந்த போலிய உங்க விளம்பரத்துக்காக நீங்களே கிளப்பி விட்டதுனு பரவலா ஒரு பேச்சு அடிபடுதே அதை பத்தி நீங்க என்ன நினக்கிறிங்க

(நாராயணா நாராயணா)

Anonymous said...

//

அந்த போலிய உங்க விளம்பரத்துக்காக நீங்களே கிளப்பி விட்டதுனு பரவலா ஒரு பேச்சு அடிபடுதே அதை பத்தி நீங்க என்ன நினக்கிறிங்க

//

நெருப்பில்லாம புகையாதுன்னு நினைக்கிறேன்

மணிகண்டன் said...

உங்களை எட்டு போட அழைச்சிருக்கேன்..

http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html

Anonymous said...

Dear True Tamilan, I feel the Poli is one of your close friends only and I think they are doig this for fun only. I know it is giving you a very hard time. I hope they will understand your feelings and stop giving you trouble.

துளசி கோபால் said...

மனசுக்குக் கஷ்டமாப் போச்சுங்க.

ஏந்தான் வேலை மெனக்கெட்டு இப்படியெல்லாம் செய்யறாங்க?

இது மனோவியாதியா?

என்னமோ போங்க.

நாங்க எலிக்குட்டி வச்சுருக்கோம்.

உண்மை said...

உண்மை உண்மைத்தமிழன் அவர்களே,

நான் போலி உண்மைத் தமிழன் பேசுகிறேன்.

நீ டோண்டுவோடு தொடுப்பு வைத்திருப்பதும் பிராமன பயல்களோடு பேசுவதும் பழகுவதும் எனக்கு பிடிக்கவில்லை.

டோண்டு ராகவன் வலைப்பதிவை உன் வலைப்பதிவில் லிங் வைத்திருக்கே. அதையும் எடு.

இனிமேல் சோ பற்றி உன் பதிவில் எழுதாதே.

இதை எல்லாம் செய்தால் உன் பெயரில் நான் அசிங்கம் செய்ய மாட்டேன்.

அதெல்லாம் முடியாது, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் என் வலைப்பதிவுக்கு சென்று படித்துப் பார். பிறகு வருகிறேன்.

Anonymous said...

//விடாதுகருப்பு said...
உண்மைத் தமிழன்,
உங்கள் கவலையில் நானும் கலந்து கொள்கிறேன். இது கண்டிக்கப்பட வேண்டும்.
டோண்டு என்ற ஒரு *************************** நீங்கள் ஆதரவாக எழுதுவதும் துக்ளக் போன்ற நாலாந்தரமான பத்திரிக்கையை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதும் எதிர் கோஷ்டிக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
என் பதிவில் போலிகள் கொட்டம் இல்லை. வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.//

லக்கிலுக் said...

உண்மைத்தமிழன் அண்ணே!

தங்களது பதிவும், அதுகுறித்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். வருந்துவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

தங்களை சிக்னல் ஒன்றில் கண்டதை வலைப்பதிவர் சந்திப்பில் பொதுவாக தெரிவித்தேன். உண்மைத்தமிழன் வரவில்லையா என்று வெட்டியோ, கப்பியோ யாரோ கேட்டார்கள். அப்போது சொன்னேன் அவரை வரும் வழியில் சந்தித்தேன். வேலை நிமித்தமாக சென்றிருக்கிறார். வேலை முடிந்தால் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றேன். அதை யாரெல்லாம் கேட்டார்கள், யார் யாரிடமெல்லாம் சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது.

கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டிருந்ததால் யாரெல்லாம் என்னருகில் இருந்தார்கள் என்பதை என்னால் கவனிக்க இயலவில்லை. மேலும் சந்திப்புக்கு பின்னான டீக்கடை கூட்டத்திலும் கூட உங்களை பற்றி எதுவும் யாரும் பேசியதாக தெரியவில்லை.

என் பெயரை சம்பந்தப்படுத்தி போலி உங்களுக்கு பின்னூட்டமிட்டிருப்பது எனக்கும் சந்தேகத்தையே எழுப்பியிருக்கிறது. உங்களுடைய போலி உண்மைத்தமிழன் பின்னூட்டத்தால் நான் அவதிப்பட்டதும் உங்களுக்கு தெரியும்.

பின்னூட்டங்களில் ஒன்று உங்களது போலியோடு என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது போல தொனி எனக்கு தெரிகிறது. அதை விரும்பியே நீங்கள் அனுமதித்தீர்களா அல்லது வந்துவிட்டதே என்று அனுமதித்தீர்களா என்றும் புரியவில்லை.

நீங்கள் விரும்பினால் எதையும் என்னிடம் நேரிடையாக கேட்டே தெரிந்துகொள்ளலாம். சாடை மாடை பின்னூட்டங்கள் தேவையில்லை.

நான் உபயோகிக்கும் கணினிக்கு தனி மோடம் இருக்கிறது. Tataindicom கனெக்ஷனுடனான அகலப்பட்டை சேவை உபயோகப்படுத்துகிறேன். உங்களுக்கு தேவைப்பட்டால் என்னுடைய ஐ.பி எண்ணையும் தனிமடலில் தெரியப்படுத்துகிறேன்.

நன்றி!

உண்மைத்தமிழன் said...

டோண்டு ஸார்..
போட்டோவும் நம்பரை போலவே வராது என்று நினைத்திருந்தேன் நான்.. அதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.

Wethepeople ஸார்..
வெறும் பயலுகதான்.. ஆனா கண்டுக்காமயே இருந்தா நான் காணாமப் போயிருவேன் போலத் தெரியுது..
பினாத்தல் சுரேஷ் ஸார்..
//நீங்கள் செய்வது சரியான அணுகுமுறையே (என்னைப்பொறுத்தவரை) - இதன்மூலம் குறைந்தபட்சம் உண்மைத்தமிழனுக்கு ஒரு போலி இருக்கிறார் என்ற விவரமாவது பரவும், பப்ளிஷ் செய்யுமுன் ஒரு நொடி செலவழிக்க உதவும்.//

நன்றி சுரேஸ் ஸார்.. ஆனாலும் publish-ஐ கிளிக் செய்வதற்கு முன் எலிக்குட்டி சோதனை செய்வதற்கு ஒரு செகண்ட்தானே தேவை.. சக வலைப்பதிவர்களுக்காக ஒரு நொடி ஒதுக்கலாமே என்பதுதான் எனது ஆதங்கம்.

நந்தா ஸார்..
//அவர் போடுகின்ற கமெண்ட்ஸை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது வெகு நிச்சயம் அவர் ஒரு ஓரளவு பிரபலமான வலைப் பதிவராக இருப்பார் என்று தோணுகிறது. வெளியில் சாதரண வலைப் பதிவராய் இருந்துகொண்டே அடிமனதில் இருக்கும் வக்கிர உணர்வுகளை தீர்த்துக் கொள்ள இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.//

இன்றுவரையிலும் நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. நன்றி நந்தா..

வவ்வால் ஸார்..
//அரை லகரம் சம்பளம் வாங்கிக்கொண்டு சொகுசாக வாழ்ந்துகொண்டு பதிவிடுவதில் ஒன்றும் இல்லை//

புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் வவ்வால் ஸார்.. அதற்காகத்தான் இந்தப் பதிவையோ பலத்த மன உளைச்சலுக்கு இடையே போட்டுள்ளேன்..

//சந்தோஷ் ஸார்...
உ.த, சக வலைபதிவர்கள் உங்களுக்கு உதவினால் உங்களால கண்டுபிடிக்க இயலும். அவர்கள் உங்களுக்கு அந்த கமெண்டு வரும் IP முகவரியை கொடுத்து உதவினால் ஒரு வேளை கண்டு பிடிக்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.//

இந்த ஒரு உதவியைத்தான் நான் சக வலைப்பதிவாளர்களிடம் கேட்டுள்ளேன். தந்து உதவினால் நல்லது சந்தோஷ்..

//பங்காளி ஸார்...
மனசுக்கு ர்ர்ரொம்ப கஷ்டமா இருக்கு..ம்ம்ம்ம்..//
எனக்கும் அப்படி இருந்ததாலதான் உங்ககிட்ட வந்திருக்கேன் பங்கு.. பார்த்துக்குங்க..

//துளசி டீச்சர்...
மனசுக்குக் கஷ்டமாப் போச்சுங்க. ஏந்தான் வேலை மெனக்கெட்டு இப்படியெல்லாம் செய்யறாங்க? இது மனோவியாதியா? என்னமோ போங்க. நாங்க எலிக்குட்டி வச்சுருக்கோம்.//
மனவியாதியேதான்.. எதிர்ப்பை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் முகமூடி போட்டு அலைகிறார்கள் கோழைகள்.. பாருங்கள் எலி சின்னதுதான்.. ஆனால் வலைப்பதிவர்களுக்குச் செய்கின்ற உதவி எவ்வளவு பெரியது என்று பாருங்கள் டீச்சர்..

Anonymous said...

பாப்பார பசங்களோட சேர்ந்ததின் பலனை அனுபவித்தே ஆகனும் சரவணன் சவடமுத்து!!!

Anonymous said...

பாப்பார பசங்களோட சேர்ந்ததின் பலனை அனுபவித்தே ஆகனும் சரவணன் சவடமுத்து!!!

SurveySan said...

I support your cause.

Ignore the Idiots! :)

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
உங்களை எட்டு போட அழைச்சிருக்கேன்.. http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html//

மணிகண்டன் உங்களுடைய அழைப்புக்கு நன்றி.. மேலும் சேவியர் ஸார் முன்பே என்னை அழைத்திருந்தார். அப்போதே என்னால் அது பற்றி எழுத முடியவில்லை. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சோகச் செய்திகளும், துக்கச் சம்பவங்களுமாக மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. தங்களுடைய அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன்.. தங்களுடைய வருகைக்கும் எனது நன்றி..

உண்மைத்தமிழன் said...

//விடாதுகருப்பு said...
உண்மைத் தமிழன், உங்கள் கவலையில் நானும் கலந்து கொள்கிறேன். இது கண்டிக்கப்பட வேண்டும்.
டோண்டு என்ற ஒரு *************************** நீங்கள் ஆதரவாக எழுதுவதும் துக்ளக் போன்ற நாலாந்தரமான பத்திரிக்கையை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதும் எதிர் கோஷ்டிக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். என் பதிவில் போலிகள் கொட்டம் இல்லை. வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.//

கருப்பு ஸார்.. என்னைப் பற்றிய உங்களுடைய கவலைக்கு எனது நன்றிகள். ஆனாலும் டோண்டு என்கிற மனிதரும், துக்ளக் என்ற பத்திரிகையும்தான் இதற்குக் காரணம் என்றால் சொல்பவர்கள் முட்டாள்கள், மூடர்கள் என்றுதான் அர்த்தம். உலகம் தழைக்க மனிதம்தான் தேவை.. மனிதர்கள்தான் தேவை.. யாரும், யாருடைய உதவியும் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட முடியாது. ஒருத்தருக்குப் பிடித்தைத்தான் மற்றவரும் செய்ய வேண்டும் என்றால் அது அடிமைத்தனம். அதற்கு நான் தயாராக இல்லை..

உண்மைத்தமிழன் said...

தம்பி லக்கிலுக்,

மாலன் ஸார் பதிவில் போட்ட கமெண்ட்டுகள் என்னை மிகவும் பாதித்ததால்தான் பதிவு எழுதவே உட்கார்ந்தேன். மேலும் டோண்டு ஸாரின் ஒரு பதிவில் நான்தான் போலி உண்மைத்தமிழன் என்றும், நானே எனக்காக அவனை உருவாக்கி எழுதி வருகிறேன் என்ற ரீதியிலும் கமெண்ட்டுகள் வந்திருந்தன. இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் வலையுலகத்தில் பேச்சு வருமே என்பதால்தான் இதை எழுத வேண்டி வந்துவிட்டது. எனக்கு வேறு வழியில்லை.

உன்னைக் குற்றம் சொல்லி நான் எந்த இடத்திலும் எழுதவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு தரக்கூடாது என்பதற்காகவே மறுபடியும் மறுபடியும் பல முறை எடிட் செய்துதான் பதிவை வெளியிட்டேன். என் நிலைமையை நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு.. நந்தனம் சிக்னலில் உன்னை பார்த்தது. நீ செய்த ஒரே தவறும் அதுதான். எல்லாம் முருகனின் திருவிளையாடல்.. வேறென்ன சொல்வது?

//பின்னூட்டங்களில் ஒன்று உங்களது போலியோடு என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது போல தொனி எனக்கு தெரிகிறது. அதை விரும்பியே நீங்கள் அனுமதித்தீர்களா அல்லது வந்துவிட்டதே என்று அனுமதித்தீர்களா என்றும் புரியவில்லை.//

எந்தப் பின்னூட்டத்தைச் சொல்கிறாய் என்பது எனக்குப் புரியவில்லை. என்னையே சம்பந்தப்படுத்தி வந்ததையே நான் அனுமதித்திருக்கிறேன். தொடர்ந்து பேர் குறிப்பிடாமல் வந்ததைத்தான் வெளியிட்டுள்ளேன்.

பல பதிவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் அனானிகளிடமிருந்து பின்னூட்டங்கள் வந்தன. ரிஜெக்ட் செய்துவிட்டேன். இதிலும் கவனத்துடன்தான் இருக்கிறேன். நான் வேறென்ன செய்ய வேண்டும்? செய்ய முடியும்?

பதிவிலேயே சொல்லியிருப்பதைப் போல் "என் தலையெழுத்து" என்று நினைத்துக் கொள்கிறேன்.

உன்னுடைய வருகைக்கும், பதிலுரைக்கும் எனது நன்றிகள்..

Anonymous said...

உண்மை உண்மைத் தமிழன் அவர்களே,

இனிமேலும் நீ திருந்தாவிட்டால் உனக்கு பெரிய ஆப்பா சீவி வெச்சு அடிக்கத்தான் போகிறோம்.

அதுசரி வீட்டில் அம்மா, பொண்டாட்டி, தங்கை அனைவரும் நலமா? எல்லாம் காரணமாத்தான் கேட்கிறேன்.

இது உனக்கு கடைசி சான்ஸ். டோண்டு பேச்சை கேட்டு ஆடினால் பாதிக்கப்படப் போவது நீதான். அவன் இல்லை.

மாலன் said...

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நீங்கள் தொலைபேசியில் அழைத்த இரவு நான் இன்னொரு தொலைபேசியில் ISD அழைப்பில் இருந்தேன். எனவே விரிவாகப் பேச இயலாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் பின்னூட்டம் யார் போட்டது என்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நம்முடைய கருத்திலிருந்து மற்றொருவர் மாறுபட்ட கருத்தைக் கொள்ள உரிமை கொண்டவர் என்பது ஆதாரமான நம்பிக்கைகளில் ஒன்று.

பின்னூட்டங்களை வைத்து நான் ஒருவரைப் பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதுமில்லை.எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

எனக்குத் தணிக்கையில் நம்பிக்கை கிடையாது.எனவே நான் மாடரேஷன் வசதியை இது நாள் வரை பயன்ப்படுத்திக் கொள்ளாமல் இருந்து வந்தேன்.

ஆனால் பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதலாகவோ, விளம்பரங்களாகவோ, எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பில்லாத வெற்று அரட்டைகளாகவோ இருந்தால் அதை நான் அனுமதிப்பதில்லை. அண்மைக்காலங்களில் இது போன்ற பின்னூட்டங்கள் அதிகரித்து வருவதால், நான் உங்கள் பின்னூட்டங்களுக்குப் பிறகு அதை நிறுவி உள்ளேன்.

என்றாலும் பின்னூட்டம் இடுப ஒவ்வொருவரின் authenticityயை ஒவ்வொருமுறையும் சரிபார்த்துக் கொண்டிருக்கும் அளவிற்கு இதே முழுநேரவேலையாக இருக்க எனக்கு முடியாது. எனவே கருத்துக்களின் அடிப்படையில் இனிப் பின்னூட்டங்களை அனுமதிக்க எண்ணி உள்ளேன்.

போலிப் பின்னூட்டப் பிரசினை உங்களை இந்த அளவிற்கு வருத்துமானால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது எல்லாவற்றையும் முயற்சித்துப் பாருங்கள்:
1. வேறு ஒரு பெயரில் பின்னூட்டமிட்டுப் பாருங்கள்.
2.வெவ்வேறு விதமான நடைகளில் பின்னுட்டமிடுப் பாருங்கள்.
3. எல்லாப்ப்பதிவுகளிலும் எல்லா நாள்களிலும் பின்னூட்டம் இடுவதைத் தவிர்த்து, மிக முக்கியமானவை என்று கருதுகிற பதிவுகளில் மட்டும் பின்னூட்டம் இடுங்கள்.

ஆனால் இதைச் செய்ய மனதளவில் நீங்கள் ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டும். என் கருத்துத்தான் முக்கியம், என் பெயர் அல்ல' என்ற நிலைப்பாடு அது.

வலைப்பதிவுகள் எழுதி,'புகழ்' அல்லது வெகுஜனக் கவனம் பெற முடியும் என யாராவது நினைத்தால் அதைப் போலக் குழந்தைத் தனம் ஏதுமில்லை.

பனி பெய்து குடம் நிரம்பாது

அன்புடன்,
மாலன்

உண்மைத்தமிழன் said...

அன்புள்ள மாலன் ஸாருக்கு எனது வணக்கங்கள்.

பின்னூட்டங்களின் மூலம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி என் பெயரில் ஒரு விமர்சனத்தை உருவாக்கத்தான் அந்தப் போலி இவ்வளவு சிரத்தையெடுத்து வலையுலகில் உழைத்துக் கொண்டிருக்கிறார். கண்டு கொள்ளாமலேயே விட்டால் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்குக்கூட என் பெயரில் குழப்பம் வந்துவிடுமே என்பதால்தான் இதை எழுதினேன் ஸார்..

எலிக்குட்டி சோதனை என்பது ஒரே ஒரு நொடிதான் ஸார்.. உங்களுடைய mouse-ஐ அந்த நம்பரின் மீது வைத்துவிட்டு கீழே மானிட்டரின் இடது புறத்தில் பார்த்தீர்களானால் நம்பர் தெரியும். அதில் தெரியும் நம்பரும் மேலேயுள்ள நம்பரும் ஒன்று என்றால் பின்னூட்டமிட்டிருப்பவர் உண்மையான வலைப்பதிவர். இல்லையென்றால் போலி.. இதைத்தான் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தாங்கள் சொல்லியிருப்பதைப் போல் வலையுலகில் எழுதி புகழ் பெற நினைப்பது முட்டாள்தனம்தான். பலரும் இங்கே இருப்பதற்குக் காரணம் பெரும்பாலான ஊடகங்கள் பலவும், தங்களுடைய சுய தேவைகளுக்காக, அல்லது சொந்தக் காரணங்களுக்காக பல விஷயங்களைத் தவற விடுகின்றன. அல்லது திசை திருப்புகின்றன. இந்த வலையுலகில் எத்தனை எத்தனை விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதனை நீங்களே அறிவீர்கள். அறிவுத்தாகம் உடையவருக்கு வலைப்பதிவுலகம் என்பது வரப்பிரசாதம்..

அதே போல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் துதான் அரிச்சுவடி. எழுதி, எழுதிப் பழகலாம். ஊக்குவிக்கத்தான் சக பதிவர்கள் இருக்கிறார்களே..

இந்தச் சூழ்நிலையில் நெல்மணியோடு சேர்ந்து வளர்ந்த களைகளைப் போல இந்த போலிகளையும் நாங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. சமாளிப்போம்..

தங்களுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் எனது நன்றிகள் ஸார்..

dondu(#11168674346665545885) said...

எலிக்குட்டி சோதனை ஒரு பகுதியே. சில சமயம் அதிலும் சரியான எண் வரும். அது அதர் ஆப்ஷனை உபயோகிக்கும்போது. ஆனால் அதில் ஃபோட்டோ வராது. ஆக, இரண்டு சோதனைகள் ஒன்றாக வெற்றிபெற வேண்டும். பதிவு எண் கூடவே ஃபோட்டோ.

ஆனால் இரண்டாவதில் இன்னொரு சிக்கல் உண்டு. அதாவது நீங்கள் பின்னூட்டமிடும் பதிவில் ஃபோட்டோ எனேபிள் செய்திருக்க வேண்டும். மேலும் பிளாக்கர் இல்லாத பதிவுகளில் இந்த இரண்டு சோதனைகளுமே பலிக்காது. ஆகவே எனது மூன்றாவது சோதனை, அதாவது மற்றவர் பதிவுகளில் நீங்கள் இடும் பின்னூட்டங்களின் நகலை அதற்காகவே வைத்திருக்கும் வலைப்பூவில் சேமிப்பது. எனது பதிவில் "போலி டோண்டு" என்ற லேபல்களின் கீழ் வரும் பதிவுகளில் இவற்றை அதிகமாக விளக்கியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கவிதா | Kavitha said...

உங்களுக்கு உதவமுடியாததற்கு முன்பே வருத்தம் தெரிவித்துவிட்டேன். காரணம், நான் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் போதே ஐபி யை கண்டுபிடிக்க தலைமை தாங்குகிறேன் என்று நம்முடைய நண்பர்கள் சொல்லிவந்தார்கள். (பழைய கதை)

எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை என்றே ஒதுங்கிவிட்டேன். உங்களுக்கு உதவ நிச்சயம் மற்றவர்கள் முன் வருவார்கள் என்று தெரியும்.

தயவுசெய்து தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சதுர் said...

//எலிக்குட்டி சோதனை என்பது ஒரே ஒரு நொடிதான் ஸார்.. உங்களுடைய mouse-ஐ அந்த நம்பரின் மீது வைத்துவிட்டு கீழே மானிட்டரின் இடது புறத்தில் பார்த்தீர்களானால் நம்பர் தெரியும். //

சார், போலியின் பதிவிலும் அதே எண்தான் தெரிகிறது. எனவே உங்கள் எண் என்று தெளிவாக சொல்லுங்கள்.

அடுத்து உங்கள் எண்ணை எல்லோரும் ஞாபகம் வைத்து இருப்பார்களா என்பதும் கேள்விக்குறியே.

ஏன் தான் இப்படி பைத்தியமாக அலைகிறார்களோ?

உண்மைத்தமிழன் said...

டோண்டு ஸார்.. பதிவு எழுவதற்கும், பின்னூட்டமிடுவதற்குமே பலருக்கும் நேரமில்லை. 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்து கொண்டேயிருக்கும்போது பாதிக்காவது பின்னூட்டமிட வேண்டும் என்ற எண்ணமும் வரும். அப்பொழுது இந்த மூன்று சோதனைகளையும் செய்து போததாதற்கு நம் தளத்திற்குள் வந்து ஒரு காப்பி இருக்கிறதா என்று செக் செய்யவும் யாருக்கும் இங்கே பொறுமை இல்லை ஸார். அதனால்தான் இவ்வளவு குழப்பம்.. நமக்கும் வேறு வழியில்லை. சக பதிவர்களின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். இனி அவரவர் பாடு..

உண்மைத்தமிழன் said...

கவிதா அவர்களுக்கு எனது நன்றி. நான் ஒருபோதும் தவறாக நினைக்கவில்லை. ஆனால் நடந்ததைச் சொல்ல வேண்டும். அதனால்தான் அனைத்தையும் எழுதினேன். பின்னூட்டமிட வைத்த சிரமத்திற்கு வருந்துகிறேன்..

Anonymous said...

உண்மைத்தமிழன் உங்கள் சூழ்நிலை முழுவதும் புரிந்து கொள்ள முடிகிறது. சிரமமான சூழலிலும் (பொருளாதார ரீதியாகவும், பிற தனிப்பட்ட ரீதியாகவும்) பெரும் சிரத்தை எடுத்து தாங்கள் எழுதிவரும் பதிவுகளைப் படித்து வரும் வாசகன் என்ற முறையில் நான் கண்டது என்னவென்றால் உங்களுக்கு உண்மையிலேயெ இரண்டு போலிகள். ஒரு போலி நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவர் உங்களை கலாய்க்கும் நோக்கத்தில் தான் ரசிகர் மன்றமாய் தனிப்பதிவை தொடங்கி இருந்தார். இப்போ புதிதாய் முளைத்து இருக்கும் புரைபல் தான் டேஞ்சர்.. இதில் கதைகள் எல்லாம் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள், துக்ளக் படிக்க விரும்புபவர்கள் காசு கொடுத்து வாங்கிப்படிக்கட்டும்... காபி பேஸ்ட் வேலை வேண்டாமே!!! உங்கள் பார்வைகள் எல்லாம் வித்தியாசப்பட்டு இருக்கும் கட்டுரைகளை கருத்து மாறுபாடு இருந்தும் ரசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அடுத்த தீர்வு.. நீங்கள் யாருக்குமே இனி பின்னூட்டம் இடாதீர்கள்.. அட்லீஸ்ட் கொஞ்ச காலத்திற்காவது பின்னூட்டம் வேண்டாம்...

ஏதேனும் எதிர்வினை புரிய வேண்டி இருந்தால் உங்கள் பதிவிலேயே செய்துவிடுங்கள்.

உண்மைத்தமிழன் said...

//தகவல்.கோம் said...
உங்களுக்கு உண்மையிலேயெ இரண்டு போலிகள். ஒரு போலி நகைச்சுவை உணர்வு மிக்
கவர். அவர் உங்களை கலாய்க்கும் நோக்கத்தில் தான் ரசிகர் மன்றமாய் தனிப்பதிவை தொடங்கி இருந்தார்.//

ஸார். இந்தக் கலாய்க்கும் என்கிற வார்த்தைக்குத்தான் எனக்கு அர்த்தம் புரியவில்லை. கலாய்ப்பது என்றால் கிண்டல் செய்வது என்பதுதான் பொருள் என்றால் அது என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தவரிடம் போய் என்னைப் பொருட்டு கிண்டல் செய்யக்கூடாது. அதற்குப் பெயர் கிண்டல் அல்ல. கயமைத்தனம். அதான் நான் நேர்லயே இருக்கேனே ஸார்.. என் பதிவிலேயே போட்டுக் கொள்ளலாமே..

இன்னொன்று அப்படி கிண்டல் செய்வதாக இருந்தாலும் பெயரையும், அடையாளத்தையும் சொல்லிவிட்டு செய்யலாமே? ஏனெனில் அவர் பயன்படுத்துவது எனது பெயர் தாங்கிய முகமூடியைத்தானே.. ஏன் அவருக்கென்று ஒரு பெயர் இல்லையா? அவருடைய சொந்தப் பெயரையே பயன்படுத்தி எழுத முடியாதவர் அடுத்தவரைக் கிண்டல் செய்வது எதற்காக? அதெப்படி அடுத்தவரின் பெயரைப் பயன்படுத்தி அநாகரீகமாக எழுதுவதை கிண்டல் என்கிறீர்கள்?

//நீங்கள் யாருக்குமே இனி பின்னூட்டம் இடாதீர்கள்.. அட்லீஸ்ட் கொஞ்ச காலத்திற்காவது பின்னூட்டம் வேண்டாம்... ஏதேனும் எதிர்வினை புரிய வேண்டி இருந்தால் உங்கள் பதிவிலேயே செய்துவிடுங்கள்.//

இதைத்தான் செய்யலாம் என்று நினைத்து நினைத்து தோல்வியடைந்துவிடுவேன்.. கை நம நம என்கிறது தோழரே.. அப்ப உனக்கு வேணுன்டாங்குறீங்களா?

Anonymous said...

ஷொல்யூசன் நெம்பர் 1 : இது போன்ற விசயத்துக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். இனி ஏதாவது ஏடாகூட பின்னூட்டங்கள் வந்தால் பதிவர்களுக்கு உங்கள் விசயம் ஏற்கனவே போதுமான அளவு தெரிந்து விட்டதால் உங்களைத் தவறாக நினைக்க மாட்டார்கள்.

ஷொல்யூசன் நெம்பர் 2: பின்னூட்டம் மற்றும் துக்ளக் போன்ற ஸ்கேன் பண்ணி பதிவு போடுறது வேண்டாம்.. நீங்கள் போடும் துக்ளக் கார்டூன்கள் எல்லாம் மற்றவர்களை provoke பண்ணுகிற மாதிரி தான் இருக்கு... ஒரு வேளை "பகுத்தறிவாளர்களை" தாக்க வேண்டுமானால் நீங்களே கார்ட்டுன் போடுங்கள், கருத்துக்களை பதியுங்கள்... உங்கள் கார்ட்டுன் திறமைய வாதத்திறமையை மெச்சுவோம்..

ஷொல்யூசன் நெம்பர் 3: நாம ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகனும்... (வடிவேலு வசனம்)/இது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//ஸார். இந்தக் கலாய்க்கும் என்கிற வார்த்தைக்குத்தான் எனக்கு அர்த்தம் புரியவில்லை. கலாய்ப்பது என்றால் கிண்டல் செய்வது என்பதுதான் பொருள் என்றால் அது என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அடுத்தவரிடம் போய் என்னைப் பொருட்டு கிண்டல் செய்யக்கூடாது. அதற்குப் பெயர் கிண்டல் அல்ல. கயமைத்தனம். அதான் நான் நேர்லயே இருக்கேனே ஸார்.. என் பதிவிலேயே போட்டுக் கொள்ளலாமே..

இன்னொன்று அப்படி கிண்டல் செய்வதாக இருந்தாலும் பெயரையும், அடையாளத்தையும் சொல்லிவிட்டு செய்யலாமே? ஏனெனில் அவர் பயன்படுத்துவது எனது பெயர் தாங்கிய முகமூடியைத்தானே..//

என்னைய வெச்சி ஏதும் சீரியஸ், கீரியச் பண்ணலையே!

Anonymous said...

//ஷொல்யூசன் நெம்பர் 3: நாம ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகனும்... (வடிவேலு வசனம்)/இது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.//

இதை நாங்களும் வழிமொழிகிறோம்!

Anonymous said...

//தெரிந்தோ, தெரியாமலோ நான் உங்களிடமோ அல்லது உங்களிடம் நானோ மாட்டிக் கொண்டு உண்மைத்தமிழன் என்ற பெயரில் குப்பை கொட்டி வருகிறேன்.
//

நாங்கள்தான் உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்!

போலி மேட்டரைக் கூட கொஞ்சம் சின்னதா எழுத மாட்டீங்களா? இதைக் கூட 5 பக்கத்துக்குதான் எழுதணுமா?

நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கன்னித்தீவு (தினத்தந்தி)

Anonymous said...

எல்லோருக்கும் உங்கள் நிலை நன்றாக தெரிந்துவிட்டது.,... இதற்கு மேலும் ஏதேனும் அசிங்கம் செய்தால் அது நீங்களாக இருக்காதென்பதை எல்லோரும் அறிவார்கள்....என்பதால் நீங்கள் ஏதும் செய்யத் தேவையில்லை....உங்கள் கருத்துக்களை, அது துக்ளக்காக இருக்கட்டும், டோண்டுவாக இருக்கட்டும், தடுக்க போலிகள் யார்?.....Just Ignore them....

உண்மைத்தமிழன் said...

பேரவை உறுப்பினர் சிங்கங்களே.

நான் துக்ளக் கார்ட்டூன் போடுவதற்குக் காரணம் அதில் சொல்லியிருக்கும் விஷயம் எனக்குப் பிடித்திருப்பதுதான். இரண்டு எனக்கு கார்ட்டூன் வரையத் தெரியாது. ஒரு பத்து பக்கம் எழுத வேண்டிய மேட்டரையும் ஒரேயரு கால் பக்க கார்ட்டூனில் போட்டுவிடலாம். இது அல்லாமல், இந்தியா என்கிற சுதந்திர நாட்டில் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யக்கூடாது என்று தடுக்க இவர்கள் யார்? கேளுங்கள் சிங்கங்களே.. கேளுங்கள்.. கேட்டுக்கொண்டே இருங்கள்..

//நாம ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகனும்...//
இதுக்கு என்ன சாமி அர்த்தம்? ஒண்ணும் புரியலையே..?

மலைத்துப் போனவன் ஸார்.. உண்மைத்தமிழனின் பதிவு கன்னித்தீவு மாதிரியா..? முடிவே கிடையாதா? இது போதும் எனக்கு? இன்னிக்கே இன்னொரு 10 பக்கத்துக்கு மேட்டர் ரெடி..

பாசறை சிங்கங்களே.. இதையேதான் நானும் கேட்கிறேன். என் எழுத்துரிமையைத் தடுக்க இவர்கள் யார்? நான் எதை வேண்டுமானாலும் எழுதுவேன். எடுத்துப் போடுவேன்.. படிப்பேன்.. இதைத் தடுக்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.

கண்ணுகளா.. எங்கப்பா போயிருந்தீக.. ஒரு பத்து நாளா வூட்டுப் பக்கம் வரவேயில்லையே..

Anonymous said...

//பாசறை சிங்கங்களே.. இதையேதான் நானும் கேட்கிறேன். என் எழுத்துரிமையைத் தடுக்க இவர்கள் யார்? நான் எதை வேண்டுமானாலும் எழுதுவேன். எடுத்துப் போடுவேன்.. படிப்பேன்.. இதைத் தடுக்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.
//

:) :) :) :)

Anonymous said...

கண்ணுகளா!!! நம்ம உண்மைத்தமிழன் அண்ணே கும்மி அடிக்க கூப்பிடுறாரு... கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாமல் கும்மி அடிக்கலாம் வாங்க

Anonymous said...

//கண்ணுகளா!!! நம்ம உண்மைத்தமிழன் அண்ணே கும்மி அடிக்க கூப்பிடுறாரு... கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாமல் கும்மி அடிக்கலாம் வாங்க//

காத்துகிட்டிருக்கோம்னே!

உண்மைத்தமிழன் said...

கண்ணுகளா.. கடைய மூடும்போது கடைசி நேரத்துல வந்து நின்னா எப்படிப்பா.. நாளைக்கு பார்த்துக்கலாம்ப்பா.. அப்படியே இந்தப் பதிவுல படிச்சதை யார் யார் உங்களுக்கு எதிரியா இருக்காகளோ, அவுங்களுக்கெல்லாம் லின்க் பண்ணி அனுப்பிருங்க.. படிச்சுத் தெரிஞ்சுக்கட்டும்.. இப்ப நான் வரட்டுமா?

geethappriyan said...

அண்ணே உங்க பதிவை
கண்ணீர் வர சிரித்தபடி ,சிரிப்பு தொண்டையையும் அடித்தபடி படிக்கையில்
கீழே ஒவ்வொன்றையும் இரு முறை படித்தேன்..
கடைசியாக
அழுதேவிட்டேங்க அண்ணே
மிகவும் வருத்தப்படுகிறேன்..
உங்கள் இமெயில் முகவரி அனுப்புங்கள்
karthoo2k@yahoo.com

//சிறுகுறிப்பு : 24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது 'பிச்சை' போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..//

அந்த கேடு கேட்ட டாபர் அனானி உழைப்பில் உயரும் உங்களிடம் போய் இந்த வேலை காட்டியிருக்கிறானே?
அந்த விலைமகள் மகனை நினைக்கையிலே எனக்கு ஆத்திரமாக வருகிறது..

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நான் கூட உண்மைத் தமிழனுக்காக என்றொரு தலைப்பில் வலைப்பூவை தொடங்கினேன். அப்போதெல்லாம் தங்களை யாரென்றெ தெரியாது,.

அதில் முத்துக்குமாரின் கடிதம் மட்டும் இருக்கும்.

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

உண்மைத்தமிழன் said...

[[[ஜெகதீஸ்வரன். said...
நான் கூட உண்மைத் தமிழனுக்காக என்றொரு தலைப்பில் வலைப்பூவை தொடங்கினேன். அப்போதெல்லாம் தங்களை யாரென்றெ தெரியாது,.
அதில் முத்துக்குமாரின் கடிதம் மட்டும் இருக்கும்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/]]]

நன்றி ஜெகதீஸ்வரன்..

எப்படிங்க.. இதையெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு படிக்கிறீங்க..?

abeer ahmed said...

See who owns fc2.com or any other website:
http://whois.domaintasks.com/fc2.com