Showing posts with label போலிகள் ஜாக்கிரதை. Show all posts
Showing posts with label போலிகள் ஜாக்கிரதை. Show all posts

சைபர் கிரைம்-செந்தழல் ரவிக்கு எனது பதில்..!

ரவி..

என்னை என்ன கேணையன்னு நினைச்சியா..? கோயம்புத்தூர் மீட்டிங்ல வைச்சு என் பதிவுக்கு வர்ற அனானி கமெண்ட்டை பத்தியும், என்னோட போலி பிளாக் பத்தியும் புலம்பினப்ப.. அண்ணே.. இது லக்கியோட வேலையாத்தான் இருக்கும். அவன் இப்ப மூர்த்தியோட ஆள்.. அவன்கிட்ட ஜாக்கிரதையா இருண்ணேன்னு நீதானடா சொன்ன.

நீ சொன்ன அனானி கமெண்ட் அடையாளமெல்லாம் யுவகிருஷ்ணா கமெண்ட்டோட ஒத்துப் போன பின்னாடிதான், நான் சுத்தமா அவன்கிட்டேயிருந்து ஒதுங்கினேன்.

இந்த அருண்குமாரை பத்தியும் நீதான என்கிட்ட முதல்முதல்லா சொன்ன.. அருண் போன் பண்ணி பேசும்போதெல்லாம் அவன் யுவகிருஷ்ணாவை பத்தி சொன்னதையெல்லாம் உன்கிட்ட திருப்பி சொன்னனே.. நீயும் கேட்டுட்டு ஆமாண்ணே.. ஆமாண்ணேன்னு தலையாட்டுன.

அருண்குமாரோட ஏதோ ஒரு சைட் பாஸ்வேர்டை லக்கி மூர்த்திக்கு பார்வர்டு பண்ணியிருக்கான்.. மூர்த்தி அதை யூஸ் பண்ணி அருண்குமாரோட அம்மா, அப்பா போட்டோவையெல்லாம் போலி டோண்டு பதிவுல எடுத்துப் போட்டு கதையெழுதிட்டான்.. பாவம்ணே அருண்.. அப்படீன்னு வெண்ணை நீதானடா சொன்ன..

அதுக்கப்புறம்தான அருண்கிட்ட ஆதாரத்தை அனுப்புடான்னு கேட்டு வாங்கி உனக்கும் அனுப்பி வைச்சனே.. அப்போ தெரியலையா.. உன் பிரெண்டு நல்லவன்னு..

நீ புகார் கொடுக்க வந்தப்பவே இதுக்கு பாலபாரதியையும், யுவகிருஷ்ணாவையும் கூப்பிட வேண்டாம்.. நாமளே பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு சரி.. சரின்னு தலையாட்டிட்டு கடைசில உன் மாப்ளை வரவனையானை பார்த்தவுடனே உல்டா அடிச்சுட்ட.. பாலபாரதி மீடியாவை கூப்பிட உதவுவாருன்னு சொல்லி என் வாயை அடைச்ச.. உன் பிரெண்டு யுவகிருஷ்ணாவை கடைசி நிமிஷத்துல கூப்பிட்டுத் தொலைச்சீங்க. அதுக்கு நானா பொறுப்பு..? செய்றதையெல்லாம செஞ்சுட்டு கடைசி நிமிஷத்துல அவன் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு அஸிஸ்டெண்ட் கமிஷனர் ரூமுக்குள்ளேயும் வந்து உக்காந்து சிரிச்சுட்டுப் போயிட்டான்.. கடைசியா நானும் காசியும், டோண்டுவும்தான் முட்டாளாயிட்டோம்..

யுவகிருஷ்ணாதான் முன்னாடியே ஒரு பதிவுல நான் போலியுடன் இருந்தேன். அது ஒரு காலம்.. கனவு மாதிரி மறந்திட்டேன்னு ஓப்பன் டாக்ல எழுதி வைச்சானே. படிச்சு பார்த்துட்டு நான் உனக்கு போன் அடிச்சு சொல்லலை.. இப்ப அவன் ரொம்ப ஜாக்கிரதையா பழைய பதிவு எல்லாத்தையும் அழிச்சிட்டான். நான் எங்கேயிருந்து ஆதாரம் காட்டுறது..?

எனக்கென்ன அவன்கூட வாய்க்கா, வரப்பு சண்டையா..? இல்ல பங்காளி சண்டையா..? நான் எதுக்கு அவன்கூட வீணா சண்டைக்குப் போகணும்..? பொழுதன்னிக்கும் அவனைப் பத்தி பேசுறதுதான் என் வேலைன்னு நினைச்சியா..? என்னை அனானியா திட்டி கமெண்ட்டும், மறைமுகமா திட்டி பதிவும் போட்டதுனாலதான் நான் அவன் மேல கோபமானேன்..

இப்பக்கூட எங்களுக்குள்ள என்னடா சண்டை..? நீதான் சொன்ன.. அண்ணே பாவம்ணே.. இப்பத்தாண்ணே எழுத ஆரம்பிச்சிருக்கான்.. விட்ருங்கண்ணே.. நல்லா வர வேண்டிய பையன்ணேன்.. நல்லா எழுத்தாளரா வருவாண்ணேன்னு நீ சாட்டிங்ல சொன்ன.. அப்பவும் நான் சொன்னது.. அவன் போலி டோண்டு மேட்டரை பத்தி எழுதினா மட்டும்தான் நான் பதிலுக்கு என்கிட்ட இருக்குறதை வைச்சு எழுதுவேன்னு சொன்னேன். அவ்ளோதான..

ஆனா அவன் சாரு மேட்டரை எழுதுவான்னு எனக்கென்ன தெரியும்..? அதுல நான் ஒரு பக்கம் இன்வால்வ் ஆயிருக்கேன்னு அவனுக்கும், உனக்கும் நல்லாத் தெரியும்.. தெரிஞ்சும் அப்படி பட்டும்படாம எழுதிட்டான்னு கோபம் வந்துச்சு. அதான் போஸ்ட் போட்டேன்.. அதுலேயும் எப்பவோ போலியோட தொடர்புன்னு ஒத்துக்கிட்டு எழுதிட்டானே.. அதோட நாம சொல்லித்தான் பல பேருக்குத் தெரிய வேண்டியதில்லை. இங்க நிறைய பேருக்கும் தெரியுமே.. கேஷூவலா எடுத்துக்குவான்னு நினைச்சுத்தான் சாரு பதிவுல அவனுடைய முன்னாள் நண்பர்ன்னுதான் குறிப்பிட்டேன்.. திரும்பி படிச்சுப் பாரு.. முன்னாள் நண்பர்ன்னுதான் சொல்லித் தொலைஞ்சிருக்கேன்.

உன் பிரெண்டு என்னடான்னா அப்படியே உல்டா அடிச்சு எதோ ஒரு வலைப்பதிவொன்றில் அப்படீன்னு என் பேர் போடாம மூஞ்சில அடிக்கிறாப்புல ஒரு விட்ஜெட்டை உருவாக்கி வைச்சுட்டான்.. அதைப் படிக்கிறவன் என்ன நினைப்பான்..? நான்தான் ஏதோ பைத்தியம் மாதிரி விடியற்காலை எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குவறைவரைக்கும் பொழப்பில்லாம உன் பிரெண்ட்டை பின்னாடியே விரட்டிருக்கேன்னு நினைச்சுக்க மாட்டானா..? இப்ப நான் என்ன செய்யறது..? அதான் அருண்குமாரை அனத்தி அந்த பதிவை போட வைச்சேன்.. அவனும் பாவம்.. அவன் அப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு நாயா அலைஞ்சிட்டிருந்தவன் எனக்காக இருக்குற வேலைகளுக்கு நடுவுல இதையும் போட்டுத் தொலைஞ்சான்..

இதுக்கு நீ என்ன பதில் போடுற..? என்னடா நினைச்சுக்கிட்டிருக்க நீ..? இந்த மூர்த்தி விஷயத்துல மட்டும் எல்லாம் நீ சொல்ற மாதிரி.. சொன்ன மாதிரிதான நடந்துக்கிட்டேன்.. இந்த விஷயத்தைத் தவிர.. உன் பிரெண்டு விஷயத்துல மட்டும் மாட்டேன்னு நான் சொன்னதுக்குக் காரணம் உனக்கே தெரியும்.. தனிப்பட்ட முறையில உன் பிரெண்டு எத்தனை தடவை அனானி பேர்ல என்னைத் தாக்கி என் பதிவுலேயே கமெண்ட்டு போட்டிருக்கான்னு தெரியும்ல.

இவனை அனானியா வந்து திட்டிட்டு இவனே வலைப்பதிவர் சந்திப்பு வாண்ணே கூப்பிடுறானேன்னுதான் எனக்குக் கோபம்.. சோ பத்தி எழுதின பதிவுல போய் பாரு.. ஒரே நிமிஷத்துல அண்ணேன்னு போட்டுட்டு அடுத்த செகண்ட்டுல அனானியா முட்டாத்தமிழன்.. உட்டாலக்கடி தமிழன். அப்படி இப்படின்னு போட்டு வைச்சான்.. ஒரு செகண்ட்டுல எவனாவது அனானி கமெண்ட்டை அப்ரூவ் பண்ண முடியுமாடா..? இதையும்தான உன்கிட்ட சொல்லி வைச்சேன்.. அவன் அந்த விட்ஜெட்டை போடாம இருந்து தொலைஞ்சிருந்தா நானும் விட்டதுடா சனியன்னு என் வேலையை பார்த்துட்டுப் போயிருப்பேன்.. அவன் போட்டு வைச்சா அதுக்கு நான் எங்க போய் எவன் மயித்தப் புடுங்குறது..?

ஏதோ உன் பிரெண்ட்டு.. பிரெண்ட்டுன்னு சொல்லி கொஞ்சிக் குலாவுறியே.. நேர்ல பார்த்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே.. அந்த கருத்து கந்தசாமியும், மகேந்திரனும் உன் பிரெண்டுகூட இன்னிக்கு சேர்ந்து நின்னு மும்மூர்த்திகளா போஸ் கொடுத்திருக்காங்க.. இதுக்கு என்ன செய்யப் போற..?

விடாது கருப்பு டீம்ல ஆபாசப் பதிவு எழுதின லிஸ்ட்ல மகேந்திரன் பேரும் இருக்கு. அவரையும் சேர்த்துதான் மூர்த்தி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கான். லைவ் டெலிகாஸ்ட் மாதிரி விசாரணை நடக்கும்போதே உன்கிட்ட போன்ல இதை சொன்னனே.. ஞாபகமிருக்கா..? இப்போ உன் பிரெண்டுதான் அவன்கூட ஜோடியா கோல்கேட் விளம்பரம் போஸ் கொடுத்திருக்கான்.. என்னத்த புடுங்கப் போற..?

ரெண்டு நாளைக்கு முன்னாடி திபிசிதியை கண்டிச்சு ஒரு பதிவு போட்டியே.. என்ன மயித்துக்கு..? அவர் விடாது கருப்புவோட லின்க்கை வைச்சிருக்காருன்னு சொல்லித்தான.. ங்கொய்யால.. இங்க விடாது கருப்பு தளத்துல பதிவு எழுதினவர்கூடத்தாண்டா உன் பிரெண்டு சிரிச்சுக்கிட்டு நிக்குறான்.. இப்ப எங்கடா போய் நாண்டுக்கிட்டு சாவ..? இனிமே திபிசிதியையும், கோவியையும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு மூர்த்தியோட தோஸ்த்துக, அல்லக்கைகள்ன்னு சொல்லுவ..?

இந்த எழவுக்காகத்தான் அப்பவே மூர்த்தியோட யார், யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்ககிட்டேயிருந்து நான் ஒதுங்கினேன்.. திபிசிதி, கோவி, யுவகிருஷ்ணா, மகேந்திரன்னு இவங்க பதிவு பக்கம் போகாம ஒதுங்கி ஒரு வருஷமாச்சுடா.. என் கமெண்ட்டை இவங்க பதிவுல பாத்திருக்கியா..? ஒரு கொள்கைன்னு இருந்தா ஒரே மாதிரி இருந்திரணும்.. இல்லைன்னா ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டு கூட்டத்தோட கூட்டமா சேர்ந்து கோவிந்தா போட்டுட்டு போயிரணும்..

டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன பின்னாடிதான் நான் எந்தப் பதிவர் கூட்டத்துக்கும் போகாம ஒதுங்கியிருக்கேன்.. ஒண்ணு பதிவர்கள் மேல ஒரு அக்கறை இருக்கணும். அவனுக்கு ஒண்ணுன்னா உதவணும்.. அதில்லாம அவனை அடிச்சு விரட்டணும்னு நினைச்சு எதிர்க்கிறவனுக்கு மறைமுகமாக ஆதரவையும் கொடுத்துப்புட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்கன்னா கேக்குறவன்லாம் கேணையனா..? எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு நான் அங்க போய் செவிட்டு எழவுன்னு என்னைக் கூப்பிட்டவன்கிட்டபோய் இளிச்சுக்கிட்டு நிக்குறது..?

போதுண்டா சாமிகளா.. ஆளாளுக்கு தேவைன்னா ஓடி வருவீங்க.. நாங்களும் இருக்குற பொழைப்பையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக ஓடி வரணும்.. கடைசியா நீங்கள்லாம் ஒண்ணு சேர்ந்துக்குவீங்க. நாங்க விரலைச் சூப்பிக்கிட்டு நடுரோட்டுல தனியா பைத்தியக்காரன் மாதிரி நிக்கணும்.. எனக்கென்ன தலையெழுத்தா..?

உங்களுக்குள்ள சண்டைன்னா நீங்களே முட்டி, மோதிக்கிட்டு சாவ வேண்டியதுதானடா.. என்னை மாதிரி ஆளுகளை என்ன எழவுக்குடா இழுத்துவிடுறீங்க.. இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து எனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் போச்சு.. இதுக்காக உழைச்ச நேரத்துக்கு எங்கிட்டாச்சும் போய் பிச்சையாவது எடுத்திருந்தா, எனக்கு இன்னிக்கு சோத்துக்காச்சும் உதவும்.. எவ்ளோ உழைப்பு வேஸ்ட்டு.. ஏண்டா இந்த பிளாக் சனியனைத் தொட்டோம்னு இருக்கு எனக்கு..

இவ்ளோ தூரம் நாய்படாதபாடா அலைஞ்சிருக்கேன்.. கூலா கொரியால உக்காந்துக்கிட்டு அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்ன்னு பீலா வுடுறே.. அப்ப இத்தனை நாளா என்கிட்ட விட்டதென்ன உல்டாவா..?

கடைசியா அதென்ன எவனோ ஒரு எழுத்தாளனின் சதியா..? எந்த கேப்மாரி, சொமாறி அந்த எழுத்தாளன். அவன் யாருன்னாவது சொல்லித் தொலையேன்.. அவன் மூஞ்சியையாவது பார்த்துத் தொலையறேன்.. படிக்கிற அத்தனை பேரும் இப்ப என்ன நினைப்பான்..? ஏதோ உண்மைத்தமிழன் யார் என்ன சொன்னாலும் கேப்பான்.. சுய அறிவே இல்லாதவன்.. கேணப்பய.. எடுப்பார் கைப்பிள்ளைன்னு நினைச்சு இருக்குற மரியாதையும் போயிருச்சு.. ஏண்டா எழுதும்போது முன்ன பின்ன யோசிச்சு எழுத மாட்டியா..? அந்த பிரபல எழுத்தாளன் யாருன்னாவது சொல்லேன்.. நானும் தெரிஞ்சுக்குறேன்..

எனக்குத் தேவைதான்.. ஒழுங்கு மரியாதையா டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்கன்னு அன்னிக்கே உங்களை மாதிரி சொல்லிட்டுப் போயிருந்தா எனக்கு இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நான்தான் படிக்காத முட்டாளாச்சே. இன்னிக்குத் தெரியுது.. உனக்காகவும், உன் பிரெண்டுக்காகவும் நூத்தியெட்டு தடவை சொல்றேன்னு நினைச்சுக்க டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்க.. போதுமா..?

ஐயா சாமி.. எனக்கு இன்னும் என்னென்னவோ வாய்ல வருது.. முடியலை.. போதும்டா கண்ணு.. நீ நினைக்கிற மாதிரி ரப்பர் மாதிரி வளைஞ்சு கொடுக்குற ஆளும்.. கட்சிக்காரன் மாதிரி கால்ல விழுந்துகிடக்குற ஆளும் நான் இல்ல ராசா..

மெட்ராஸ் வந்தப்ப ஹோட்டலுக்கு கூப்பிட்டு நல்லா சோறு போட்ட.. சைபர் கிரைம் ஆபீஸுக்கு அலையறதுக்கு கொஞ்சம் காசு கொடுத்த.. தம்பி முருகன் சத்தியமா சொல்றேன்.. திரும்பி உன்னை பார்க்குறப்ப மருவாதையா அந்தக் காசை திருப்பிக் கொடுத்துர்றேன். இல்லேன்னா இப்ப உடம்புல இருக்குற ஒத்தை எலும்பும் நிக்காது.. சத்தியமா சொல்றேன்.. திருப்பிக் கொடுத்துர்றேன்..

இந்த மட்டுக்கும்போதும்பா..

நீயும் நல்லா இரு.. உன் பிரெண்ட்டும் நல்லா இருப்பான்.. அவன் நல்ல பெரிய எழுத்தாளனா வரட்டும்.. வாழ்த்துறேன்.. அந்த மூர்த்தியும் குடும்பத்தோட நல்லாயிருக்கட்டும்.. அல்லக்கைகளும் நல்லா வாழட்டும்..

சைபர் கிரைம்ல என் கேஸ் மட்டும்தான நிக்குது.. இனிமே நானே அதை பார்த்துக்குறேன். எவன் தயவும் எனக்குத் தேவையில்லை..

குட்பை..

பதிவு முழுக்க எப்பவும்போல டா போட்டுட்டேன்.. மன்னிச்சுக்க தம்பி.. கோச்சுக்காத.. திருப்பி திருத்த உக்காந்தா என் பொழப்பு கெட்டிரும்.. அதுனால நேர்ல என்னை பார்க்கும்போது உன் செருப்பை கழட்டி என்னை எவ்ளோ அடிக்கணுமோ அவ்ளோ அடிச்சுக்க..

நல்லாயிருப்பா ராசா..

சைபர் கிரைம்-பதில்..!

09-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவின் சைபர் கிரைம் இது..

இதற்கு பதில் அளித்து எழுதியிருக்கும் தம்பி பெங்களூர் அருண்குமாரின் சைபர் கிரைம் இது.

அருண்குமார் தமிழ்மணத்தில் இன்னமும் சேரவில்லை. பல திரட்டிகளிலும் இணையவில்லை. ஆகவேதான் எனது தளத்தில் இந்த லின்க் கொடுக்கும் பதிவு.

வேறொன்றுமில்லை..

நன்றி..

சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..!

02-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது அரசியல்வாதிகள் நீதி, நேர்மை, நியாயம், இவைகளைப் பற்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எந்த அளவுக்கு வேடிக்கையாக இருக்குமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' என்கிற வாரப் பத்திரிகையில் தம்பி யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக், 'சைபர் கிரைம்' பற்றி தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளும் அவருடைய முனைப்பான உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்..

சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தொடர் கட்டுரையில் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் இ-மெயில் ஹாக்கிங் செய்யப்பட்டது பற்றி எழுதியிருந்தார் தம்பி. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் ஊடாக மேலும் சில விஷயங்களை நான் இந்தப் பதிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

அன்றைய பகல் 12 மணியளவில்தான் சாருவின் ஈ-மெயில் ஹேக்கிங் பற்றியச் செய்திகள் தமிழ்மணத்தில் பதிவாக வெளி வந்தன. அதைப் படித்துவிட்டு உடனடியாக நான் சாருவுக்கு போன் செய்து பேசினேன். "சரவணன்.. நீங்க நூத்தியொண்ணாவது ஆள்.. நான் மெட்ராஸ்லதான் இருக்கேன். மலேசியாவுக்குப் போகலை.. எவனோ ஒருத்தன் செஞ்சிருக்கான். யாருன்னு தெரியலை. இது பொய். யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லி நீங்க ஒரு பதிவா உங்க பிளாக்ல போட்டிருங்களேன்.." என்றார் சாரு.

தொடர்ந்து நானும் சாருவிடம் பேசியதையும், அவர் சொன்ன விஷயத்தையும் அந்த எச்சரிக்கை பதிவில் பின்னூட்டமாக இட்டேன். அடுத்து யார் அந்த வேலையைச் செய்திருப்பார் என்று தேடுவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் இப்படி சாருவுக்கு எதிரான ஒரு வினையை நான் அப்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், சாருவின் 'மம்மி ரிட்டர்ன்ஸ்' கடிதம். அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் 'போலி டோண்டு'வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தமிழ் வலையுலகத்தை தனது தீந்தமிழால் மிரட்டிக் கொண்டிருந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி' என்ற அந்த 'போலி டோண்டு' தன்னை எதிர்ப்பவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிர்ப்பான் என்பது நமக்கும் தெரியும்தானே.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்றுதான் நான் நினைக்கவில்லை.

தன்னை எதிர்ப்பவர்களின் வலைத்தளங்களை பறிப்பது.. மெயில் முகவரிகளை ஹேக்கிங் செய்வது, அந்தப் பதிவர்கள் பெயரில் போலித்தளங்களை உருவாக்குவது.. அத்தளங்களில் பதிவர்களின் புகைப்படங்களை வைத்து காமக்கதைகளை எழுதி நிரப்புவது.. என்கின்ற அத்தனை நல்ல வேலைகளையும் செவ்வனே செய்து வந்த உத்தமத் தமிழனான மூர்த்திதான் இதையும் செய்திருப்பான் என்பதை அன்றைக்கே, தொலைபேசியில் சாருவிடம் சொன்னேன்.

இது மாதிரி மொத்தமாக ஆட்டையைப் போடும் அளவுக்கான புத்திசாலி அவன் ஒருவனே என்ற எனது அதீத நம்பிக்கை, இரண்டு நாட்களில் நிஜமாகவே உண்மையாக மாறியிருந்தது.

சிங்கையில் இருக்கும் நமது சக பதிவர் குழலியும் என்னைப் போலவே மூர்த்திதான் இதை செய்திருப்பானோ என்று சிந்தித்திருக்கிறார். என்னைவிடவும் மூர்த்தி பற்றி நன்கு அறிந்தவர் அவர்தான். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

சாருவின் ஹேக் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியான charunivedita@hotmail.com-க்கு Read notify Software-ஐ பயன்படுத்தி தனது இ-மெயில் முகவரியில் இருந்து "What happened..?" என்று கேட்டு ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார் குழலி.

அது எங்கே ஓப்பன் செய்யப்பட்டது என்கிற தகவல் குழலிக்கு உடனேயே திரும்பக் கிடைத்திருக்கிறது. மலேசியாதான் என்றவுடன் உடனேயே குழலி எனக்குத் தகவல் கொடுத்தார். எனது சந்தேகம் நூறு சதவிகிதம் உறுதியானது மூர்த்திதான் என்று..!

அடுத்து உடனேயே மூர்த்தியின் சொந்த மெயிலுக்கு மெயில் அனுப்பினால் சந்தேகத்தில் திறக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு என்பதால், மறுநாள் மூர்த்தி பயன்படுத்தும் ஒரு மெயில் முகவரியான unmaisolli@gmail.com-ற்கு "டேய் மாப்புள்ள" என்று பாசத்தைக் கொட்டி ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறார் குழலி.

அந்த மெயிலும் ஓப்பன் செய்யப்பட்டதற்கான அத்தாட்சியை Read Notify அனுப்பியது. இதுவும் எதிர்பார்த்ததைப் போலவே மலேசியாவில்தான் திறக்கப்பட்டிருந்தது.

ஒரு வேளை 'உண்மைசொல்லி' தான் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்த குழலி, மீண்டும் அவனுடைய நீண்ட நாளைய மெயில் முகவரியான mmoorthee@gmail.comற்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுள்ளார். இந்த மெயிலும் அதே ஐ.பி.எண்ணில், மலேசியா கோலாலாம்பூரில்தான் திறக்கப்பட்டுள்ளது.

இங்கே இன்னுமொரு விஷயம்.. குழலி அனுப்பியிருந்த 'உண்மைசொல்லி' என்கிற மெயிலுக்குச் சொந்தக்காரனான 'உண்மைசொல்லி' என்னும் ஒருவர் அப்போதைய காலக்கட்டங்களில் சாருவைப் பற்றி கன்னாபின்னாவென்று ஆபாசமாகத் திட்டித் தீர்த்து பின்னூட்டங்களை பல இடங்களிலும் தெளித்துக் கொண்டிருந்தார். பதிவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஜிமெயிலும், மூர்த்தியின் நிஜமான ஜிமெயிலும் ஒரே ஐ.பி.எண்ணில் இருந்துதான் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் அவன் மீதான எனது சந்தேகத்தை பல மடங்கு உயர்த்தியது.

குழலி உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைச் சொல்லி சாருவிடம் இதனைத் தெரிவித்து மூர்த்தி மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தரச்சொல்லும்படி கூறினார்.

நானும் உடனடியாக சாருவைத் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். சாருவோ, "நான் ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் பண்ணிட்டேன்.. விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..?" என்றார். "ஏற்கெனவே புகார் கொடுத்துவிட்டதால் திரும்பவும் போக விருப்பமில்லை.(உண்மையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்) இதுவும் இருக்கட்டும். தேவைப்பட்டால் பின்பு பயன்படுத்துவோம்.." என்றார் சாரு.

என்னுடைய இந்த அவசரத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம், இதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் நானும், செந்தழல் ரவியும் இணைந்து சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூர்த்தி பற்றி புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தோம். இந்த நேரத்தில் சாருவின் இந்தப் புகாரும் சேர்ந்தால், எங்களுக்கு ஒரு கூடுதல் வலு கிடைக்கும் என்று நான் நினைத்தேன்.

இதனால் சாருவிடம் "கேஸ் என்னாச்சு..?" என்று வற்புறுத்தத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் இது விஷயமாக அனத்தியபடியே இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் எனது வழக்குக்காக 'போலி டோண்டு'வான மூர்த்தியின் ஆதி, அந்தங்களை அவனுடைய சொந்தத் தளமான முத்தமிழ்மன்றம்.காம்-ல் தோண்டித் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு க்ளூ கிடைத்தது.

'போலி டோண்டு' என்பது இந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி'தான் என்று வருடக்கணக்காக நமது டோண்டு ஸார் சொல்லி வந்ததால், மூர்த்தி ஒரு கட்டத்தில் 'முத்தமிழ்மன்ற'த்தில் தனது பெயரை 'முருகா' என்று மாற்றி வைத்துக் கொண்டான். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

அப்படி அந்த 'முருகா' என்கிற பெயரில் எழுதப்பட்ட பல செய்திகளை ஒன்று திரட்டிப் படித்துக் கொண்டிருந்தபோதுதான், இந்த செய்தி என் கண்ணில்பட்டது.

சாருவின் பெயரைச் சொல்லி பணம் பறிக்க முயன்ற கதைதான் இது. 'மங்கை' என்ற ஒரு பெண் தனக்கு அனுப்பிய மெயிலில் இது பற்றி சொல்லியிருப்பதாகவும், இதனால் இதனைப் படிக்கின்ற முத்தமிழ்மன்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்கும்படி இந்த ஒழுக்கசீலரான 'முருகா' என்கிற 'மூர்த்தி' அறிவுரையே நிகழ்த்தியிருக்கிறார். இதனை எழுதியிருப்பது 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி.

அந்த ஆங்கில கடிதத்தைப் படித்துப் பாருங்கள். இதுவும், சாருவுக்காக எழுதப்பட்ட ஆங்கில கடிதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெயர் மற்றும் இடங்கள் மட்டுமே வேறு வேறாக மாற்றப்பட்டுள்ளன. இதனைப் படித்த பின்பு மூர்த்தி மீது இருந்த எனது சந்தேகம் மிக, மிக உறுதியானது, இவனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று.. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சாருவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்.

கேஸ் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரியாத சூழல் இருந்ததால், சாருவிடம் அவ்வப்போது நான் இது தொடர்பாக விசாரித்தபடியே இருந்தேன். அப்படி ஒரு முறை நான் சாருவைத் தொடர்பு கொண்டபோது, "சரவணன்.. நான் மலையாள பத்திரிகைக்காக மும்முரமாக எழுதிக்கிட்டிருக்கேன். இப்ப பேசவே எனக்கு நேரமில்லை. நாளைக்கு பேசுவோம். விட்ருங்க.." என்றார் கண்டிப்பான குரலில்.

நான் அன்றைக்கு மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், அது தொடர்பாக மீண்டும் வற்புறுத்தினேன். சாரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிய வர.. "ஓகே ஸார்.." என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மூர்த்தி பற்றி சைபர் கிரைம் அலுவலகத்தில் நான் புகார் கொடுத்ததில் இருந்து நாள்தோறும் விசாரணைக்காக என்னை அழைத்தபடியே இருந்தார்கள். அப்படி என் வழக்கு தொடர்பாக சென்ற நேரத்தில் நண்பர் குழலி அனுப்பியிருந்த ஆதாரங்களையும், நான் முத்தமிழ்மன்றம்.காம்-ல் தேடியெடுத்த பழைய கடித நகலையும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து, "சாருவின் இ-மெயிலை ஹாக் செய்ததும் இந்த மூர்த்திதான்.." என்ற தகவலைத் தெரிவித்தேன்.

அங்கே வழக்குகளை எல்லாம் பிரித்து, பிரித்து விசாரிப்பதால் சாருவின் வழக்கை சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரே நேரடியாக விசாரிப்பதாகவும், "மேற்கொண்டு இது பற்றி நீங்கள் இன்ஸ்பெக்டரிடம்தான் சொல்ல வேண்டும்.." என்றும் சொன்னார்கள். நான் இன்ஸ்பெக்டரை சந்திக்க முயற்சித்தபோது அப்போது பார்த்து அவர் வெளியில் போய்விட்டார்.. மறுநாள் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்வதற்குள் சாருவிற்கு ஒரு போன் செய்து சொல்லிவிடலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்தால், மனுஷன் ஒரு அணுகுண்டையே தூக்கிப் போட்டார்.

"நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன் சரவணன்.." என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது வழக்கு, தம்பி ரவியின் வழக்கை விடவும் சாருவைத்தான் நான் அதிகம் நம்பியிருந்தேன். சாரு பெரிய எழுத்தாளர் என்பதாலும், கனிமொழியின் தீவிர சிபாரிசினால் வழக்கு பதியப்பட்டு இருந்ததினாலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். எனவே 'எந்த வகையிலும் மூர்த்தி தப்பிக்க முடியாது. நிச்சயம் அவனை பிடித்துவிடுவார்கள்' என்று கலர், கலராக நான் கொண்டிருந்த கனவை, ஒரு லாரி தண்ணீரை ஊற்றிக் கலைத்தார் சாரு.

"அவங்க இஷ்டத்துக்கு கூப்பிடுறாங்க.. 'அந்த நேரம் வாங்க'. 'இந்த நேரம் வாங்க'ன்றாங்க.. எனக்கு வேலையிருக்கு சரவணன்.. நான் புகார் கொடுத்தாச்சு.. அதுலயே டீடெயிலா எழுதிட்டேன்.. அப்புறம் எதுக்கு 'வா.. வா'ன்றாங்க.. நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா..? அதான் 'வர முடியாது'ன்னு சொன்னேன். 'அப்ப நேர்ல வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் போங்க'ன்னு சொன்னாங்க.. நானும் போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்றார்.

நான் அதற்குப் பிறகு அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், சாரு பிடிவாதமாக மறுத்துவிட்டார். "எனக்கு வேணாம் சரவணன்.. அது எவனா வேண்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. ப்ளீஸ்.. விட்ருங்க..." என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

இதன் பின் நான் சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். "உங்க எழுத்தாளர்தான் அவசரப்பட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டாரே..!? இப்ப என்ன ஸார் பண்றது..? இது விஷயமா மேல எதுவும் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. வேணும்னா உங்க கேஸ் விஷயமா பேசுங்க.. நிச்சயமா செய்யலாம்.." என்று நழுவலான பதிலைச் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.

இதையும் சாருவிடம் சொன்னேன். தான் ஒரு எழுத்தாளர் என்ற அக்கறையே இல்லாமல், தன்னை நினைத்த நேரத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அப்போதும் சொன்னார் சாரு. "போலீஸ் விசாரணையில் இது சகஜம்தான ஸார்..?" என்றேன். "இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு 'உள்ள' வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..?" என்று அதையே திருப்பிச் சொன்னார்.

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை. ஆனாலும் ஜீரணிக்கத்தானே வேண்டும். இதனையும் முழுங்கித் தொலைவோம் என்று நினைத்து மறந்தேன்.

பின்னாளில் வலையுலகம் வலைவீசித் தேடிக் கொண்டிருந்த அந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்தியை அதே சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த ஒரு கேள்வியையும் கேட்டுத் தொலைத்தேன். "சாரு இமெயிலை ஏன்யா ஹேக் செஞ்ச..? அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு..?" என்றேன். கேட்டவுடன் அந்த ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர் செய்துகொண்டிருந்த அதே ஆக்ஷனை.. சினிமா ஹீரோயின்களைப் போல தலையைக் குனிந்து கொண்டு, காலால் கோலம் போட்டுக் கொண்டு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தார். வாயைத் தொறக்கணுமே.. ம்ஹும்.. எல்லாம் எங்க நேரம்..?

சாருவுக்கும் போலி டோண்டு மேட்டர் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.. எனதருமை வாத்தியார் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, நான் சாருவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது டோண்டுவும் எங்களிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

அவர் அந்தப் பக்கம் போனவுடன் சாரு என்னிடம் டோண்டுவைக் காட்டி, "இவர்தான் போலி டோண்டுவா..?" என்றார். அந்த இடம் மரண வீடாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் சிரித்திருப்பேன். அவ்வளவு அதிர்ச்சியாகிப் போனேன். சாரு கேட்டது சாதாரணமாகத்தான் என்றாலும், அவருக்கு வலையுலக அரசியல் அவ்வளவுதான் தெரியும். மேற்கொண்டு நான்தான் அன்றைக்கு கிடைத்த நேரத்தில், எனக்குத் தெரிந்த அளவுக்கான டோண்டு-போலி டோண்டு விஷயங்களை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.

சாரு மீது இந்த விஷயத்தில் எனக்கு பலத்த அதிருப்தியும், வருத்தமும் இன்றளவும் உண்டு. அவர் மட்டும் சிரமம் பார்க்காமல், காவல்துறையுடன் கொஞ்சம் இணங்கிப் போயிருந்தால், இந்நேரம் மூர்த்தி கைது செய்யப்பட்டு வலையுலகத்திற்கு ஒரு பெரும் உதவி செய்த பெயரும் அவருக்குக் கிடைத்திருக்கும்.

இப்போது பாருங்கள்.. சாருவின் புகாருக்குக் கிடைத்த ஆதாரங்களைவிடவும், பல மடங்கு ஆதாரங்களை சுமார் 200 பக்கங்கள் அளவிற்கு எனது புகாருக்காகவும், ரவியின் புகாருக்காகவும் திரட்டிக் கொடுத்துள்ளபோதிலும், இன்னமும் நமது சைபர் கிரைம் போலீஸ் மூர்த்தியை கைது செய்யவில்லை. வரவழைத்து, வரவழைத்து, பேசி பேசியே திருப்பி அனுப்பினார்கள். பாஸ்போர்ட்டை மட்டும் முடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஆனால் நான் இதனை நம்பவில்லை)

"இன்னும் என்னதான் ஆதாரங்கள் வேண்டும்..?" என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ..! அல்லது எங்களுக்குப் பின்புலமாக அரசியல், பண பலம் இல்லையோ.. தெரியவில்லை..

எத்தனையோ நல்ல, நல்ல வலையுலக எழுத்தாளர்களை வீட்டுக்கு துரத்தியடித்து, பல பதிவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வருடக்கணக்காக மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சேடிஸ்ட்டான இந்த மகராசனை இப்படியே விட்டுவைத்தால் எப்படி?

சரி.. போய்த் தொலையட்டும்..!!!

மீண்டும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வருவோம்.

இந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்திதான் சாருவின் இ-மெயிலை ஹேக் செய்தவன் என்கிற தகவலை, அன்றைய நிலைமையில் என்னுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருந்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் நான் தெரிவித்திருந்தேன்.

செந்தழல் ரவி, வரவனையான், ஓசை செல்லா, மற்றும் மூர்த்தி மீது அசைக்க முடியாத ஒரு ஆதாரத்தைக் கொடுத்த பெங்களூர் அருண் என்று பலரிடமும் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் மூலமாக பலருக்கும் இந்தத் தகவல் சென்றடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

தம்பி யுவகிருஷ்ணாவுக்கும் இந்தத் தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும். தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க யாரோ ஒரு 'சைபர் கிரிமினல்' என்றே பொத்தாம் பொதுவாக பெயரிட்டு அழைத்து, அது தனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக காட்ட முனைந்திருப்பது கேலிக்குரிய செயல்.

ஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் சொல்லப்படாதவரையிலும் அவன் நிரபராதிதான் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதே சமயம் நம் மனசாட்சிக்கு ஏற்றவகையில், ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் அவன் மீதான நமது சந்தேகத்தை முன் வைக்கலாமே..!?

ஒரு வேளை 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிகை இதனை ஏற்றுக் கொள்ளாது என்று தம்பி சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால் இதற்கு முந்தைய பகுதிகளில் எல்லாம் வெளிநாடுகளில் ஏமாற்றிய, ஆட்டைய போட்ட கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், சோமாறிகள், முடிச்சவிக்கிகள் என்று பல பெயர்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறாரே.. அதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?

உண்மையாகவே இவருக்கு சாருவின் இ-மெயில் ஹேக்கிங் விஷயத்தில் நடந்தவைகள் முழுமையாகத் தெரியாது எனில், எதற்காக இதனை எழுத வேண்டும்..?

நம் அருகில், நமது அண்டை வீட்டில் நடந்த ஒரு விஷயத்திலேயே இத்தனை விளக்கங்கள் வெளியில் தெரியாமல் காத்திருக்கும்போது அது எதனையும் விசாரிக்காமல் பொத்தாம் பொதுவாக, “நீங்கள் ஜாக்கிரதையா இருங்கள்.. திருடன் வர்றான்.. திருடன் வர்றான்..” என்று பூச்சாண்டி காட்டி பக்கத்தை நிரப்புவது தேவைதானா..?

அவருடைய அன்னியோன்ய நண்பர்களான வரவனையானுக்கும், செந்தழல் ரவிக்கும் இந்த அக்கப்போர்கள் நன்கு தெரியுமே. எழுதுவதற்கு முன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..?

சரி இவர்கள் வேண்டாம்.. சாருதான் இவருக்கு பெஸ்ட் பிரண்ட்டாச்சே..? ஏன்.. இந்த விஷயத்தை எழுதப் போகிறேன் என்று சாருவிடமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவரும் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாரே..!?

சாருவின் இ-மெயில் திருட்டு பற்றிச் சொன்னவர், அது பற்றிய மேல்விவரங்கள், வழக்கு பதிவு, சந்தேகங்கள், வழக்கு வாபஸான கதையையும் சேர்த்து சொல்லியிருந்தால், அது முழுமையான ரிப்போர்ட்டாக இருந்திருக்குமே.

ஆக.. சாருவிடமும் கேட்காமல் அவரை மையமாக வைத்தே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எனில், தம்பியின் இந்த 'சாதனை'யை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

இதுவுமில்லாமல் 'கிழக்குப் பதிப்பக'த்தின் தூண்களான நண்பர் பத்ரிக்கும், திருவாளர் பா.ராகவன் அண்ணாச்சிக்கும் மூர்த்தி செய்த இந்த தில்லாலங்கடி வேலையைப் பற்றி நன்கு தெரியும். அவர்களிடம் சொன்னது, சாட்சாத் நானேதான். சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதனை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாளை இந்தக் கட்டுரை புத்தக வடிவில் 'கிழக்குப் பதிப்பகம்' மூலமாக வெளிவர வாய்ப்பு உண்டு என்பதால்தான்..

சரி.. எழுதுவது நான்.. யாரிடமும் இது பற்றி பேசுவதில்லை என்றால், விசாரிக்ககூடவா முடியாது..? ஒரு விஷயத்தை முழுமையாக நடந்தது என்ன என்று விசாரிக்காமல் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது தப்பிக்க நினைக்கும் மனப்பான்மைக்கு ஒப்பானது.

இந்த 'தப்பிக்க நினைக்கும்' என்கிற வார்த்தையின் அர்த்தம், எழுதுகின்ற அந்தத் தம்பிக்கே தெரியும், என்பதால் அவரது மனசாட்சிக்கே அதனை விட்டுவிடுகிறேன். தம்பியின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, முழுக்கத் தெரிந்திருந்தும் தன்னுடைய முன்னாள் நண்பரான மூர்த்தியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், அவர் நழுவியிருக்கிறார் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இதனால்தான் முதல் பாராவில் இந்தப் பதிவின் முகவுரையை நான் அப்படித் துவக்கியிருக்கிறேன்.

மலேசியாவில் இருந்து என்றால், அவன் ஒருவன்தான் அங்கே இருக்கிறானா? வேறு யாரும் இல்லையா? வேறு ஒருத்தரும் இருக்கலாமில்லையா..? என்ற கேள்விகள் பலருக்கும் எழக்கூடும்.

அப்பாவி பதிவர்களின் பெயர்களில் இருந்த காமத்தளங்களைத் துவக்கியது போலி டோண்டு என்னும் இந்த முத்தமிழ்மன்ற மூர்த்திதான் என்று டோண்டுவும், தெரிந்தவர்கள் பலரும் கரடியாய் கத்தியபோது, பதிவர்கள் சிலர் இது போலத்தான் "எதற்கெடுத்தாலும் மூர்த்தியா..? அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? வேற யாராவது இருக்கலாமில்லையா..?" என்றெல்லாம் குதர்க்கமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால் சைபர் கிரைம் விசாரணையின்போது மூர்த்தி எழுதிக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின், ஒரே நாளில் அந்த அனைத்து காமத்தளங்களும் காணாமல் போனதே.. இது எப்படி என்பதையும் அவர்கள் இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கட்டும்.

மேற்கொண்டு அந்த வாரத்திய சைபர் கிரைம் கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளை வாசிக்கின்றபோது செம காமெடியாக இருந்தன.

"இ-மெயில் திருடப்பட்டால் போயே போச்சு.. ஒட்டு மொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.."

"உங்கள் இ-மெயில் பாஸ்வேர்டை திருடுபவன், உடனடியாக வெளிப்பட்டுவிட மாட்டான்.. தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான்.."

"ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு அந்தத் தகவல்களைக் கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால், அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.."

"உங்களது தனி நபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்படும் பட்சத்தில் சோம்பேறித்தனப்படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள்.. இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.."

இது மாதிரியான உண்மையான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் நானும், அருண் என்கிற பெங்களூரில் இருக்கும் நமது சக வலைப்பதிவரும் கடந்த இரண்டாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தோம்.

என்ன கொடுமை பாருங்க..?

இப்போது இந்த 'குமுதம் ரிப்போர்ட்டர்' 'சைபர் கிரைம்' கட்டுரையின் மூலம்தான், இதுவெல்லாம் எங்களுக்குத் தெரிய வருகிறது.. இந்த மட்டுக்கும் அந்த எழுத்தாளர் தம்பிக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்..

என்ன செய்வது..? எங்கள் தலையெழுத்து இப்படி..? அவர் தலையெழுத்து அப்படி? சைபர் கிரைம் தலையெழுத்துதான் மேற்படி..

பொறுமையுடன் படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..!!!

பதிவர்கள் ஜாக்கிரதை..! மீண்டும் வந்துவிட்டார்கள் போலிகள்..!

24-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாகப் போலிகளையும், போலியின் அல்லக்கைகளையும் கொஞ்சம் அடக்கி, ஒடுக்கி அனுப்பிவிட்டு வலையுலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனாலும் யாருக்கும் அடங்கமாட்டோம் என்பதைப் போல சில குள்ள நரிகள் அவ்வப்போது தங்களது வேலைகளைக் காட்டிக் கொண்டுதான் உள்ளன.

முதல் குறியாக ஒரு சிலரைக் குறி வைத்து அவர்களது தளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தம்பி பொடியன் சஞ்சய் மற்றும் எம்.எம்.அப்துல்லாவின் தளங்கள் பறி போயிருக்கின்றன. அடுத்து பரிசல்காரனின் பெயரில் பலவிடங்களில் பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன.

அடுத்து எனது பல பதிவுகளில் கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் சேலம் சிவகிரி என்கிற பெயரில் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் போடப்பட்டன.

“டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசு பெரிசா நீள நீளமா எழுதுற. ஏண்டா உணக்கு வேற வேலயே இல்லயாடா? நைட்டெல்லாம் உக்காந்து எழுதுவியாடா? அட மாணங்கெட்டவனே? ஏன்டா என் பதிவ நீக்குற. தைரியமிருந்தா பதில் சொல்லுடா.இப்படி ஓடி ஒளிய்யாத.
//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.//
நீ உயிரோட இருந்து இப்படி மொக்க பதிவுகளப் போட்டு எங்கள கொல்லுறதுக்கு பதில் நீ தூக்குல தொங்கலாம். அதையும் போட்டா எடுத்து உன் பதிவில போடு தேய்ந்து போன ரம்பமே!”

இப்படி ஆஸ்கார் விருதுக்குச் சமமான பாராட்டுரைகளோடு வந்த பின்னூட்டங்கள், எனது சமீபத்திய அனைத்துப் பதிவுகளிலும் இடப்பட்டன. அலுவலகத்தில் பின்னூட்டங்களை நீக்கும்படியான வசதி இல்லாத சூழலால், வீட்டிற்கு வந்துதான் அந்தப் பின்னூட்டங்களை நீக்கினேன்.

அதன் பிறகும் தொடர்ச்சியாக இதே பின்னூட்டம் எனது பதிவுகளில் வந்த வண்ணம் இருந்தது. நானும் மீண்டும், மீண்டும் நீக்கினேன்.

இவை அனைத்தும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க .. இப்போது அதை விடுத்து போனிலேயே ஆள் மாறாட்டம் செய்து மிரட்டல் விட்டிருக்கிறார்கள்., விடுகிறார்கள்.

திங்கட்கிழமை 23-03-2009 அன்று நள்ளிரவு 12.03 மணிக்கு +21356864482 என்ற எண்ணில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. போனில் பேசியவர் எடுத்த எடுப்பிலேயே “மொக்கைத் தமிழன் இருக்காரா..?” என்றார். “நீங்கள் யார்..?” என்றேன்.. “நான் பொய்த்தமிழன் பேசுறேன்..” என்றார். யாரோ வலைப்பதிவர்தான்.. நம்மிடம் விளையாடுகிறார் என்கிற நினைப்பில் நானும் நல்லவிதமாகப் பேசினேன்.

ஆனால் அந்த நபர் ஆரம்பத்தில் இருந்தே குத்தல், கேலி, குதர்க்கமாக பேசிக் கொண்டேயிருந்தார். தான் ஒரு வ.வா.சங்க உறுப்பினர் என்றும்.. எங்கே என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்றெல்லாம் பேசினார். எனக்கும் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. நிஜமாகவே நமது தம்பிமார்களில் யாரோதான் விளையாடுகிறார்களோ என்று நினைத்து இதமாகவே பேசினேன்..

பேச்சு தொடர்ந்ததே தவிர, என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையை உண்மையான நட்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால் சோர்வடைந்து நான் போனை வைக்கப் போவதாகச் சொன்னவுடன், “டேய்.. ஏண்டா மொக்கையைப் போட்டு உயிரை எடுக்குற..? ராத்திரில தூங்க மாட்டியாடா..? குட்நைட் சொல்லதடா.. குட்மார்னிங் சொல்லுடா.. டேய் குட்மார்னிங் சொல்லுடா..” என்று பேச்சு வாடா, போடா என்று ஏகவசனத்தில் குடிகாரன் பேச்சைப் போல் திரும்பி திரும்பிச் சொல்ல.. நான் உடனேயே போனை வைத்துவிட்டேன்.

திரும்பவும் அன்று இரவு 9.53 மணிக்கு +6628183917 என்ற எண்ணில் என்னை அழைத்த நபர் மீண்டும் அதே போல் பேச்சை ஆரம்பித்தார்.. மறுபடியும் “மொக்கைத் தமிழா.. மொக்கைத் தமிழா.. டேய் பொய்த் தமிழன் பேசுறேண்டா..” என்றெல்லாம் பேச்சு வர நானே போனை கட் செய்துவிட்டேன்..

நேற்று மதியம் எனது ஜேட்கூடி பதிவிலும் “சேலம் சிவகிரி” என்ற பெயரில் என்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த அதே விமர்சனம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதனை சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் நீக்கினேன்..

கூடவே திருலோகு என்ற புதிய பதிவரிடம் எனது பெயரில் யாரோ ஒருவர் பேசியிருக்கிறார். சத்தியமாக அது நான் இல்லை.. அவர் இந்தப் பதிவில் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_5220.html அது பற்றி எழுதியுள்ளார்.

அது நான் இல்லை என்பதை தெரிந்து கொண்டதாக இன்னொரு பதிவையும் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_24.html திரு. லோகு அவர்கள் போட்டுள்ளார். என்னால் இவருக்கும் ஒரு தேவையில்லாத வேலை..! கஷ்டம்.

பதிவுலகத்திற்குள் இனிமேல் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் இது போன்ற கலாட்டாக்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஓடிப் போன கயவர்கள் வேறு, வேறு ரூபத்தில் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அதற்கு உதாரணம், உதை வாங்கி மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓடிச் சென்ற "அனானி முன்னேற்றக் கழகம்" இப்போது திடுதிப்பென்று வந்து கடை விரித்துள்ளது. அந்தப் பதிவில் புதிய பதிவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன். போகாமல் இருப்பதே உத்தமம்.

இந்த பொய்த்தமிழன் யார், எவர் என்று தெரியாதபட்சத்தில் உங்களுக்கும் என் பெயரிலோ, அல்லது வேறு சில பதிவர்கள் பெயரிலோ தொலைபேசி அழைப்புகளோ, பின்னூட்டங்களோ இனிமேல் தாராளமாக வர வாய்ப்பிருக்கிறது.

ஆபாசமான அல்லது இதுவரையில் அந்தப் பெயருடைய பதிவர் பயன்படுத்திராத கிண்டல் வார்த்தைகள் அல்லது கெட்ட வார்த்தைகள் அந்தப் பின்னூட்டத்தில் இருந்தால், உடனேயே அந்தப் பதிவருடன் தொடர்பு கொண்டு அந்தப் பின்னூட்டம் நிஜமாக அவர் போட்டதுதானா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.. வேறு வழியில்லை..

ஓத வேண்டியது என் கடமை.. ஓதிவிட்டேன்.. பதிவர்கள் ஜாக்கிரதையாக அணுகவும்.. இருக்கவும்..

இதுவரையில் அடங்கியிருந்த பொறம்போக்குகளுக்கு முகமூடியுடன் பயன்படுத்துவதற்கு எங்காவது ஓரிடத்தில் கணினி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அதுதான் ஆரம்பித்துவிட்டார்கள் அனர்த்தத்தை..

எத்தனையோ எதிர்ப்புகளையும், திருட்டுத்தனங்களையும், மொள்ளமாரித்தனங்களையும், முடிச்சவிக்கித்தனங்களையும், சோமாறித்தனங்களையும் வலையுலகில் நாம் பார்த்தாகிவிட்டது.. புதிய ஸ்டைலில் வந்திருக்கும் இந்த டுபூரித்தனத்தையும் சமாளிப்போம்..!

நன்றி..!

போலி உண்மைத்தமிழன் யார்?

28-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தெரிந்தோ, தெரியாமலோ நான் உங்களிடமோ அல்லது உங்களிடம் நானோ மாட்டிக் கொண்டு உண்மைத்தமிழன் என்ற பெயரில் குப்பை கொட்டி வருகிறேன்.

'போலிகளிடம் ஏமாறாதீர்கள்' என்ற வசனத்தை ஊதுபத்தி வியாபாரத்திலிருந்து காயகல்பம் வியாபாரம்வரையிலும் நான் கேட்டிருக்கிறேன்.. இந்தப் போலி என்ற முகமூடி போட்ட நபர்களால் உங்களில் சிலரைப் போலவே நானும் என்ன பாடுபட்டிருக்கிறேன் என்பதனை இந்தப் பதிவிலும் , தொடர்ந்து இந்தப் பதிவிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்த போலி உண்மைத்தமிழன் கடந்த சில நாட்களாக வீறு கொண்டு எழுந்து முடி வெட்ட வருபவனுக்கு மொட்டையே அடித்து விடுபவனைப் போல் பின்னூட்டங்களைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். நானும் வழக்கம்போல புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என் புலம்பலை கேட்டவர்களில் பலரும் வழக்கம்போல ஆறுதல் சொல்லிவிட்டு, "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கண்ணா.." என்கிறார்கள். சிலர் ஆறுதலையும் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் போலியையும் தெரியாத்தனமாக அனுமதித்து விடுகிறார்கள்.

போலியால் நான் வாங்கிய முதல் குட்டு மோதிரக்கையால் கிடைத்ததுதான்.


நண்பர் மிதக்கும்வெளி ஐயாவின் பெரியார் படம் பற்றிய இந்தப் பதிவில் போய் தன் வீரத்தைக் காட்டியிருக்கிறான் போலி. அதுவும் எப்படி பாருங்கள்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..


இதற்குப் பதில் எப்படி வந்திருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? இதோ இப்படித்தான்..

உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.



எனக்கு இது தேவையா..?

கோவையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு நான் போயிருந்த சமயம் பாலபாரதி, "தலைவா.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. விட்டுத் தொலைங்க.. அவன் உங்களோட ரசிகனா இருக்கான். அதான் ரசிகர் மன்றம்னு பிளாக்கர் ஆரம்பிச்சிருக்கான்.. விடுவீங்களா இதைப் போயி.." என்றார்.

அங்கே வந்திருந்த நண்பர்கள் வினையூக்கி, முகுந்த்ராஜ், மா.சிவக்குமார், மோகன்தாஸ் ஆகியோரும் இதையே முன் மொழிந்தார்கள். சரி விட்டுத் தொலைவோம் என்ற நினைப்புடன்தான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அதே கோவையில் மிதக்கும்வெளி ஐயாவிடமும் அவர் பதிவில் போட்டிருக்கும் போலியின் பதிவுகளை நீக்கும்படி சொன்னேன்.. நான் இப்படிச் சொன்னதையே கோவை சந்திப்பு பற்றிய இந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.

மறுபடியும், மறுபடியும் அவருடைய பதிவுகளில் போலி உண்மைத்தமிழன் தலைகாட்ட ஆரம்பிக்க, நிஜமாகவே எனக்கு அவர் மீது வருத்தம் இருந்தது. ஆனால் இன்றுதான் ஐயா ஒரு கேள்வி கேட்டார்.. "எலிக்குட்டி சோதனை என்றால் என்ன?" என்று.. 'அடக்கடவுளே..!' இவரையெல்லாம் என்ன செய்றது..? வேறு வழியில்லாமல் நானும் அதைச் சொன்னேன். "இனிமே பார்த்துக்குறேன் ஸார்.." என்றிருக்கிறார்.

ஆச்சா.. சென்ற திங்களன்று சகோதரி கவிதாவின் இந்தப் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான் போலி. அதுவும் எப்படி? MNC-யில் பணியாற்றும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும்விதமாக..

கவிதா இதைப் படித்துவிட்டு, இது போலி உண்மைத்தமிழன் எழுதியது என்பதையும் தெரிந்து கொண்டு அதை அனுமதித்து, அதற்கு பதிலும் எழுதினார்.

அவரைப் பொறுத்தவரை அது சரி.. "போலியாக இருந்தாலும் அவன் மனதுக்குள் இந்த எண்ணம் இருக்கே.. அதுக்கு நான் பதில் சொல்லிருக்கேன்.." என்று எனக்கு மெயில் செய்தார். நானோ, "அது தப்பும்மா.. இப்போ போலியோட மனசுக்குள்ள நான்தான் இருக்கேன். என் பேரை ரிப்பேராக்கணும்னுதான் உனக்குப் போட்டிருக்கான்.. மொதல்ல டெலீட் பண்ணிரு.. இல்லாட்டி நாளைக்கும் போடுவான்.. உனக்கு ஒரு வேலை கூட வரும்.." என்றேன்.. "சரி.." என்று பெருந்தன்மையோடு டெலீட் செய்தார். இவரிடம் போலியின் IP அட்ரஸ் கேட்டேன். "ஸாரி ஸார்.. அது என்னுடைய பெர்ஸனலுக்கு மட்டும்தான்.." என்றார். சரி என்றுவிட்டுவிட்டேன்.

இது இப்படி.. இன்னொருவர் 'தோழர்' வரவனையான்.. அவரோட இந்தப் பதிவிலேயும் போய் போட்டுட்டான் போலி.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளு..? "தலைவா அது போலி போட்டதா..? தெரியாமப் போச்சு.. தூக்கிர்றேன்.." என்றவர், போலியை நீக்கிவிட்டு, அடுத்து இந்தப் பதிவில் அனுமதித்துவிட்டார். "என்ன ஸார்..?" என்று நான் சண்டைக்குப் போனவுடன், "ஸாரி ஸார்.. அசுரன், மாமா, ம.க.இ.க. பிடுங்கி, மயிரு என்ற டென்ஷன்ல இருந்தேன்.. அதான்.. இப்ப தூக்கிர்றேன் தலைவா.." என்றார். சொன்னபடியே டெலீட்டும் செய்தார். "சரி.. உங்களுக்குப் போட்டவரைக்கும் சந்தோஷம்தான் சாமி.. அந்த IP நம்பரை மட்டும் கொடுங்க.. மீதியை நான் பார்த்துக்குறேன்.." என்று ஏதோ பெரிய சிபிஐ கார்த்திகேயன் மாதிரி சவுடால் விட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் IP நம்பர் டீடெயில்ஸை மெயில் செய்தார் வரவனையான். அது இதுதான்.. அவருக்கு கோடானுகோடி நன்றிகள்..

IP Address:
Host: dsl-TN-static-204.247.22.125.airtelbroadband.in
ISP: Btnl-chn-dsl
Entry Page Time : 26th June 2007 13:01:51
Visit Length: 14 mins 54 secs
Browser: MSIE 6.0
OS: Windows XP
Resolution: 1024x768
Location: Tamil Nadu, Chennai, India
Returning Visits: 5


இது சென்னையில் உள்ள Airtel Company-யின் கனெக்ஷன் நம்பர். ஆனால் நான் IP Address கண்டறியும் வலைத்தளங்களில் இதை செக் செய்தால் ஆத்தாடி.. கலிபோர்னியாவுக்கு போய் நிக்குதுங்கோ.. உள்ளூர்லேயே என்னை அடிச்சுப் போட்டாக்கூட கேட்க நாதியில்லை. இதுல கலிபோர்னியால இருந்து ஒரு உடன்பிறப்பாம்.. நம்பவா முடியுது.. தலை சுத்தி உக்காந்திருந்தேன்.

அப்பத்தான் பெங்களூர்ல இருந்து ஒரு அனானி எனக்கு போன் செஞ்சாரு.. "இதெல்லாம் போலி பிராக்ஸி வேலை ஸார்.. IP நம்பரையே மாத்திக் கொடுத்து உங்களை ஏமாத்துறாங்க.. அது நிச்சயம் கலிபோர்னியா நம்பரா இருக்காது. அதே மெட்ராஸ் நம்பராத்தான் இருக்கும்..." என்றவர் சில உறுதியான முன் உதாரணங்களையும் சொல்லி இருந்த மூளையையும் தலைகீழா புரட்டிட்டார்.. அந்த அனானிக்கும் எனது நன்றிகள்..

அடுத்து நம்ம மிதக்கும்வெளி இன்னொரு பதிவைப் போட்டாரு. அது இதுதான். அவரு இருந்ததே வெளியூர்ல.. அங்கன இருந்துக்கிட்டே சென்னைல நடந்த வலைப்பதிவர் கூட்டத்தைப் பத்தி அப்படியே நிசமா பக்கத்துல உக்காந்து எழுதின மாதிரி எழுதியிருந்தாருப்பா. 'புரிஞ்சுக்குங்க'.. அதுலயே என்னைப் பத்தியும் ஒரு பாரால...

"பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு போட்டும் பின்நவீனம், மார்க்சியம், மொக்கை, ஜல்லி என்று எந்த பதிவாக இருந்தாலும் பின்னூட்டம் போட்டு கருத்துரிமையைக் காப்பாற்றிவரும் உண்மைத்தமிழன் ஊருக்குச்சென்றுவிட்டதால் சந்திப்புக்கு வரமுடியாது என்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை சென்னை நந்தனம் சிக்னலில் கைலியுடன் பார்த்ததாக பட்சிகள் தெரிவிக்கின்றன." - இப்படி எழுதிருந்தாரு..

நானும் அதுக்குப் பதிலா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. போட்டுட்டு அவர்கிட்ட போன்ல பேசினா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு. "உங்க போட்டோவோடயே இப்ப கமெண்ட்ஸ் வருதே.. தெரியாதா உங்களுக்கு?" அப்படீன்னு அசலாட்டா சொன்னாரு. "வரவனையான் பதிவுல நேத்து பார்த்தேன்"னாரு.. 'அதெப்படி போட்டோவும் வந்துச்சு.. வர்றதுக்கு சான்ஸ் இல்லையே'ன்னு தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மிதக்கும்வெளி ஐயாவோட அதே பதிவிலேயே வந்துட்டான் போலி. இதைப் படிச்சுப் பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வெளியே மிதக்கும் அய்யா.. என்னை நந்தனம் சிக்னலில் கைலியோடு பார்த்த அய்யா லக்கிலுக் அய்யா தான்.. அவர் பதிவர் சந்திப்பில் இதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கியது இல்லாமல் உங்களிடமும் சொல்லிவிட்டாரா அய்யா.. அவர் நல்லா இருக்கட்டும் அய்யா..


இதைப் படிச்சப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சது.. போலி உண்மைத்தமிழன் கலிபோர்னியால இல்ல.. இங்கனதான் மெட்ராஸ்ல என் பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கான்னு..

எப்படின்னா மிதக்கும்வெளி ஐயா, தன்னோட பதிவுல "என்னை கைலியோட பார்த்ததா ஒரு பட்சி சொல்லுச்சு.." என்றுதான் எழுதியிருக்கிறார். கமெண்ட்ஸ் போட்ட நான்தான் "பேண்ட் அணிந்திருந்தேன்.." என்று திருத்தினேன்..

ஆனால் இந்த போலி உண்மைத்தமிழன் , தம்பி லக்கிலுக் அனைவரிடமும் உண்மைத்தமிழனை நந்தனம் சிக்னலில் பார்த்ததைச் சொல்லிப் பரப்பியதாக சொல்கிறான்.

இங்கே ஒரு விஷயம். 24-06-2007 ஞாயிறு மதியம் 2.45 மணிக்கு நந்தனம் சிக்னலில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்த்துப் பேசியது தம்பி லக்கிலுக்தான். நான் அப்போதே சொன்னேன், "என்னால் கூட்டத்துக்கு வர முடியாது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது.." என்று.. "சரி.. முடிந்தால் வரப் பாருங்கள்.." என்று சொல்லிவிட்டுச் சென்றார் லக்கிலுக்.

இப்போது போலி உண்மைத்தமிழன் சொல்வதைப் படித்துப் பார்த்தால் மிதக்கும்வெளி ஐயாவும் வெளியில் சொல்லாமல் இருக்கும்போதே, போலி உண்மைத்தமிழனுக்கு என்னைச் சந்தித்தது லக்கிலுக்தான் என்பதும், லக்கிலுக் அனைவரிடமும் சொல்லி, அனைவருக்கும் அது தெரிந்திருக்கிறது என்றும் சொல்லியிருப்பதைப் பார்த்தால், அந்தச் சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தப் போலி உண்மைத்தமிழன் என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நான் யார் மீது குற்றம்சாட்ட முடியும்? யாருக்கு என் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

சரி இவர்களில் ஒருவர் இல்லை என்றால், லக்கிலுக் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிந்தது என்றால் போலி உண்மைத்தமிழனுக்கும், லக்கிலுக் சொல்லித்தானே இது தெரிந்திருக்க முடியும். அப்படியானால் லக்கிலுக் என்னைச் சந்தித்ததை யாரிடமெல்லாம் சொன்னார் என்பதை கொஞ்சம் வெளிப்படுத்தினால் நான் அவர்களிடம் கேட்க ஏதுவாக இருக்குமே...

மேலும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவரிடமும் என்னைச் சந்தித்ததை தம்பி லக்கிலுக் சொன்னாரா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. காரணம் திங்கட்கிழமையன்று(25-06-2007) நான் நண்பர் மா.சிவக்குமார் அவர்களிடம் பேசியபோது "லக்கி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே.." என்றார். ஸோ.. லக்கிலுக் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் சொல்லியிருக்கலாம். அந்தச் சிலரில் ஒருவர் இந்த போலி உண்மைத்தமிழன் இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

"விட்டுத் தொலை சாமி.. காமெடி பண்றானுகய்யா.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே. நொச்சா இருக்கய்யா நீரு..." என்று பாலபாரதி சொன்னாலும், நேற்று என் பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களின் இந்தப் பதிவில் போலி உண்மைத்தமிழன் விளையாடியதை 'காமெடி' என்று என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால்தான் இந்தப் பதிவையே நான் போட வேண்டி வந்தது..

திரு.மாலன் அவர்கள் பத்திரிகையியலில் எனது குருவுக்கு குருவானவர். பெரும் மதிப்பிற்குரிய வலைப்பதிவர். அவரிடம் போய் "என்ன உளறுகிறீர்கள்..?" என்று கமெண்ட்ஸ் போட்டால் இதை எப்படி 'காமெடி' என்று ஒத்துக் கொள்வது?

நல்லவேளை.. நான் அந்தப் பதிவில் கமெண்ட் போட்ட போதுதான் போலியின் கமெண்ட்டையும் படித்தேன். உடனேயே பதில் கமெண்ட்டையும் நான் போட்டேன். பின்பு இரவில் திரு.மாலன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்த போலியின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டு.. எனக்கு எத்தனை சிரமங்கள்..

இவர்கள் மட்டுமல்ல.. பல பதிவர்களுக்கும் இது போல் பதிவுகளைப் போட்டு அதை அவர்கள் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து தடை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..

இன்னும் எத்தனை பேரிடம்தான் நான் மன்னிப்பு கேட்பது? கண்டு கொள்ளாமலேயே சென்றுவிடுங்கள் என்றால்.. மாலன் ஸாரிடம் நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நாளைப் பொழுதுகளில் நான் அவரிடம் பேச வேண்டிய கட்டாயம், சந்திக்க வேண்டிய அவசியமும் கண்டிப்பாக இருக்கிறது. அப்போது, "அது நான் இல்லை ஸார்.. போலி.." என்று நான் சொல்ல முடியுமா?

காமெடி செய்வதற்கும் ஒரு அளவு உண்டு.. மிதக்கும்வெளி, வரவனையான், டோண்டு ஸார் என்றால் நண்பர்கள் என்ற ரீதியில் போனில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். மற்ற எல்லாரிடமும் இதே போல் தினமும் பேச வேண்டும் என்றால் எனக்கு இதுதான் வேலையா..?

எனது கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் அந்தப் போலியிடம் இருக்கிறது என்றால் அனானியாகவோ, அல்லது வேறு ஒரு பெயரிலோ போட்டுத் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு எனது முகமூடி..? நான் கோபப்படுவது இதற்குத்தான்..

எனக்குக் கிடைக்கின்ற சொற்ப நேரத்திலேயே பதிவுகள் போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. இந்த லட்சணத்தில் பொழுது விடிந்து, பொழுது போனால் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஒப்பாரி வைக்க வேண்டும் என்றால் எப்படி?

"கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.." என்று அண்ணன் மா.சிவக்குமார் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் நட்பே பெரிதென்று நினைக்கும் எனக்கு போலியின் ஒவ்வொரு கமெண்ட்டும், என்னை அனைவரிடமிருந்தும் தூரத்திற்குத் தூக்கிச் செல்வதைப் போல் தெரிகிறது.

அதனால்தான் பல வலையுலக நண்பர்களின் எதிர்ப்பையும், அறிவுரையையும் மீறி இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன். வலைத்தமிழர்கள் தங்களைச் சந்தேகப்பட்டுவிட்டேன் என்பதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சூழல் என்னை அப்படி கேட்க வைத்துள்ளது. நீங்களே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. முட்டாள்தனமாக இருந்தால் சிரித்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தால் குண்டு எந்தத் துப்பாக்கியிலிருந்து வந்தது என்பதனைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.. இப்போது அது யாருடைய துப்பாக்கி என்பதனை தம்பி லக்கிலுக்தான் சொல்ல வேண்டும்.. இது அவருடைய கடமையும்கூட..

"இல்லை.. இல்லை.. வலைப்பதிவர் கூட்டத்துக்கு வந்தவர்கள் யாராவது வெளி நண்பர்களிடம் சொல்லியிருக்கலாம்.. அவர்களில் ஒருவர் உங்களுடைய போலி உண்மைத்தமிழன் இருக்கலாம்.." என்று லக்கிலுக் கருதினால் இது எனது தலையெழுத்து என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வலைப்பதிவர்களுக்கு கடைசியாகவும் ஒரு வேண்டுகோள். இது மாதிரியான போலிகளை நீங்கள் அனுமதித்தால், அது அவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல் ஆகும். இதே IP நம்பரில் இருந்து மேற்கொண்டும் கமெண்ட்ஸ் வந்தால் எனக்குத் தகவல் தெரிவித்தால் என்றென்றும் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்..

நன்றி..

சிறுகுறிப்பு : 24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது 'பிச்சை' போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

வலைப்பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தலைவலி வந்தா தைலம் தேய்க்கலாம். போனாலும் போயிரும்.. கால்வலி வந்தாலும் இதே மாதிரி தைலத்தைத் தடவலாம். ஒரு கால் வலியாச்சும் போகும்.. வயித்து வலி வந்தா.. அதுக்கும் 'தைலம்தான் தடவுவேன்'னு அடம் புடிச்சா என்ன ஆகும்? உண்மைத்தமிழன் நிலைமைதான் ஆகும்..

இந்த வலை உலகத்துக்குள்ள காலெடுத்து வைக்கும்போதே சின்னப் புள்ளைக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்றாப்புல சொன்னார் நம்ம 'தல' பாலபாரதி.
"ஒரு மூணு மாசத்துக்கு யாருக்கும் பின்னூட்டம் போடாதீங்க தலைவா.. உள்ள என்ன நடக்குது? என்ன பண்றாங்கன்னு பாருங்க.. இது ரத்த பூமி.. எசகுபிசகா எங்கிட்டாச்சும் கால் வைச்சீங்கன்னா போச்சு, யானைக் கால் மாதிரி வீங்கிப் போயிரும்.. ஜாக்கிரதை.. பேசாம உங்க பதிவுல மட்டும் உங்களுக்குப் பிடிச்சமானதைப் போட்டுக்கிட்டே போங்க.. யாரு வூட்டுக்குள்ளேயும் போய் சவுண்டு விடாதீங்க.. இங்கன இருக்குறவுக அல்லாரும் சக்கரைப்பாகுல இருந்தே சக்கரையைத் தனியாப் பிரிச்சு எடுக்குற ஆளுக.. பாட்டிலை பார்த்தே கிக் எம்புட்டுக்கு ஏறும்னு அலம்புற ஆளுக.. அம்புட்டுத்தான்.. சொல்லிப்புட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.."

- அப்படின்னு கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற மாதிரி கொடுத்தாரு. கேட்டனா? கேட்டானா இந்த உண்மைத்தமிழன்.. என்னமோ போன பிறவில அரிச்சந்திரன் பரம்பரைல பொறந்த மாதிரி 'நான் நினைச்சதைத்தான் பேசுவேன்.. பேசுறதைத்தான் எழுதுவேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்'னு ஏறுக்கு மாறா குதிச்சுப்புட்டு.. போகக்கூடாத இடத்துலேல்லாம் நுழைஞ்சு இப்போ பாருங்க..

பேச வேண்டியவங்ககிட்டல்லாம் சண்டை.. பார்க்கப் போறவங்ககிட்டேயெல்லாம் பிரச்சினை.. எந்தப் பக்கம் பார்த்தாலும் "எவன்டா அவன் உண்மைத்தமிழன்?"னு அக்கறையா விசாரிக்குறாக.. என்னத்துக்குன்னுதான் தெரியலை..

இவனை இப்படியே விட்டா சரிப்பட்டு வராதுன்னுட்டு நம்மாளுக வழக்கம்போல சூனியம் வைச்சிட்டாக.. ஒண்ணா, ரெண்டா..?

நான் போக முடியாத இடத்துக்கெல்லாம் போய் அங்கன என் பேர்ல, ஒரு ஸ்பெஷல் அர்ச்சனைத் தட்டை வாங்கி 108 தேங்கா உடைச்சு சாஷ்டாங்கமா பூஜையே நடத்தியிருக்காக..

எம்புட்டு பேருங்குறீங்க.. "மடத்தமிழன், பொய்த்தமிழன், சிங்காரத்தமிழன், செத்ததமிழன், சாகப் போறத் தமிழன், உண்மைத்தமிழன்-1, உண்மைத்தமிழன்-2, போலி உண்மைத்தமிழன், உண்மைத்தமிழன்-1, உண்மைத்தமிழன்-2, உங்கள் தமிழன், உ.தமிழன், ஊ.தமிழன்..." அப்படி, இப்படின்னு பொளந்து கட்டிருக்காங்க..

ஒவ்வொரு இடத்துக்கும் பின்னாடியே ஓடிப் போய் "அது பொய்யி.. நான்தான் நெசமான உண்மைத்தமிழன்"னு கத்திக் கத்தி.. இந்த வேகாத வெயில்ல என் அழகு மூஞ்சி, இன்னும் கொஞ்சம் கருத்துப் போச்சு கண்ணுகளா..

இதை இப்படியே விட்டா என் கலரையே மாத்திருவாகன்னுட்டு ஆலோசனை கேட்டேன்.. மொதல் போலிக்காக அங்கன போய் ஒரு ஒப்பாரி வைச்சனே.. அந்த மவராசனே இதுக்கு ஒரு ஐடியா கொடுத்தாரு. அவர் உங்களுக்கெல்லாம் ரொம்பப் புடிச்சமானவருதான்.. 'டோண்டு ராகவன்' அப்படீன்னு பேரு.

அவர் சொன்னாரு.. "உண்மைத்தமிழன்.. இதெல்லாம் இந்த வலைத்தளம்ன்ற போர்க்களத்துல ரொம்ப சகஜம்.. நான் எத்தனை விழுப்புண், அம்புக் காயங்கள்லாம் பட்டிருக்கேன்னு நோக்குத் தெரியுமோ..? என் வலைத்தளத்துல வந்து படிச்சுப் பாரு.. அப்ப புரிஞ்சுக்குவ.. அவுங்க நாலு ஸ்டெப் எடுத்தா நாம பதினாறு ஸ்டெப் எடுக்கணும். அப்பத்தான் இந்த யுத்த பூமில ஜெயிக்க முடியும்.. மொதல்ல உங்க பேரோட டிஸ்பிளே நம்பரையும், போட்டோவையும் போட்டுக்கோங்கோ.. அதான் நல்லது. அப்படி போட்டா சுலபத்துல யாரும் உங்களை ஏமாத்தி உங்க பேர்ல நாமத்தை அவன் போட முடியாது.. நீங்க ஒருத்தர் மட்டும்தான் நாமத்தைப் போட முடியும்னு. என் 'எலிக்குட்டி' சோதனையும் நீங்களா இல்லையான்னு காட்டிக் கொடுத்திரும்..." இப்படி அக்கறையா, பொறுப்பா, ஒரு பெரிய மனுஷன் தோரணைல அட்வைஸ் செஞ்சாரு..

"சரிங்கய்யா.. ஆகட்டும்ய்யா.. அப்படியே செஞ்சுப்புடறேன்" அப்படின்னு நானும் சொல்லி ரெண்டு நாளாச்சு.. மறுபடியும் கொஞ்சுண்டு சோம்பேறித்தனம். இடைல நம்ம 'தல' பாலபாரதிகிட்ட இதைச் சொல்லிப் புலம்பினேன்.. வேற யார் நம்ம போனை எடுப்பாக? 'போட்டோ போட்டிருங்க தலைவா'ன்னு சொன்னார். போட்டோவுக்கு எங்கன கனெக்ஷன் கொடுக்கிறதுன்னு தெரியலைன்னு சொன்னேன்.. "அல்வா கிண்டறதுல இருந்து அண்டார்டிகாவரைக்கும் நல்லா வக்கனையாப் பேசுங்க.. உருப்படியா ஒண்ணு தெரிஞ்சு வைச்சுக்காதீங்க.." அப்படின்னு கொஞ்சுண்டு கோபத்தோட பாலபாரதி ஒரு லின்க் செஞ்சு அனுப்பி வச்சாரு..

நம்ம நேரம் பாருங்க.. அது வொர்க் ஆகலை.. "அப்துல்கலாமே வந்தாலும் இப்படித்தான் சாமி செய்யோணும்.. அதிசயமா உங்களுக்குத்தான் வர மாட்டேங்குது.. மொதல்ல உங்களையே டோட்டலா ஆபரேஷன் பண்ணணும்னு நினைக்கிறேன்.. வேற வழியிருக்கான்னு பார்க்கலாம்.." அப்படின்னாரு பாலா. சரி.. 'அப்புறம் பார்த்துக்கலாம்'னு நானும் விட்டுட்டேன்..
ஒரு நாள் முழுக்க பின்னூட்டம் போடலியா? நம்மாளுக புரிஞ்சுக்கிட்டாக.. 'பய ஆ•ப் ஆயிட்டான் போலிருக்கு'ன்னுட்டு.. மறுபடியும் என் பேர்ல ஒரு இடத்துல தாலியக் கட்டிட்டாங்க. கட்டின இடமாச்சும் நல்ல இடமா இருக்கக்கூடாதா?

நம்ம வரவனையான் செந்தில் வூட்டுக்குள்ள போய் வூடு கட்டிருக்கானுக.. என்னத்த சொல்றது? நானே அவரைப் பார்த்து பயந்து போய் ஒரு ஓரமா ஒதுங்கிப் போய் நின்றுக்கேன்.. இப்படியா பண்ணுவாக..?
அவருக்கும் ஒரு போனை போட்டு விஷயத்தைச் சொன்னேன்.. "தலைவா.. இதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.. நீங்க நிறைய எழுதிறீங்கன்னு பார்த்துட்டுத்தான் போடுறாங்க.. வேண்ணா உங்க போட்டோவையும், டிஸ்பிளே நம்பரையும் சேர்த்துக்குங்க.. வேற வழியில்லை.. இல்ல.. டெய்லி இது மாதிரியே ஒவ்வொருத்தனுக்கும் போன் போட்டு புலம்பிக்கிட்டேத்தான் இருக்கணும்... உங்க பொழைப்ப பார்க்க முடியாது.."ன்னாரு..

"போட்டோவே ஏறலையே சாமி.."ன்னேன்.. "நெட்ல போட்டோ ஏத்துறதுக்கு ஏகப்பட்ட சைட் இருக்கு தலைவா. அங்கன எதுக்குள்ளயாவது போய் உங்க போட்டோவை ஏத்துங்க.. அங்கேயிருந்து லின்க் கொடுங்க"ன்னாரு வரவனையான்.. "நான் யூஸ் பண்ற சிஸ்டத்துல வெப் பில்ட்டரிங் போட்டதுல இருந்து நம்ம படம் காட்டுற மச்சான், 'ஓசை செல்லா' சைட்ல இருக்குற 'இதய தெய்வம்' நமீதா போட்டோகூட இப்ப கொஞ்ச நாளா தெரியமாட்டேங்குது ஸார்.."னு புலம்பினேன்.. "அப்ப ஒண்ணும் பண்ண முடியாது.. சூனியத்தை முழுசா நீங்களே வாங்கிக்குங்க.." அப்படீன்னு சொல்லி முடிச்சிட்டாரு.

சரிதான்.. வேற வழியில்லை.. போட்டிருவோம்.. அப்படீன்னு நினைச்சு நேரம் இல்லாததால கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தேன்.. அதுக்குள்ள மறுபடியும் வரவனையான்கிட்டயே போய் வேலையைக் காட்டிட்டான் 'பொய்த்தமிழன்'. சரி இதுக்கு மேல தாங்காதுப்பான்னுட்டு 'தல' பாலபாரதிக்கு போனை போட்டேன்.

மனுஷன் பாவம்.. என்கிட்ட இருந்து போன் வந்தாலே 'ஐயையோ.. வந்துட்டானா பாவி'ன்னுவாரு. அம்புட்டு நல்ல பேரு நமக்கு அவர்கிட்ட.. மேட்டரைச் சொன்னேன்..

"மாப்ளை சைட்லயே போட்டுட்டானுகளா.. சரி தலைவா.. கூட்டிட்டு வந்த பாவத்துக்குக் கடைசியா ஒரு உதவி பண்ணித் தொலையறேன்.." அப்படின்னுட்டு என்னோட டிஸ்பிளே நம்பரை அவரே மெயில் அனுப்பினாரு.(உண்மைத்தமிழன் எவ்வளவு அப்பிராணின்னு பார்த்துக்குங்க.. அதைக்கூட பார்க்கத் தெரியலை).

அதை வைச்சு என் பேருக்குப் பக்கத்துல டிஸ்பிளே நம்பரை வைச்சு அட்டாச் பண்ணியாச்சு.. ஆசைக்கு, நம்ம இனமானப் பேராசிரியர் திரு.தருமி அவர்களின் வீட்டுக்குள்ள போய் ஒரு வம்பிழுத்து வைச்சிட்டு வந்துட்டேன்.

திருப்திக்கு மறுபடியும் வரவனையான் ஸார் வீட்ல போய் 'பொய்த்தமிழனைப்' பத்தி ஒரு புகாரை பதிவு செஞ்சு வைச்சேன்.

ஆனாலும் நம்ம டோண்டு ஸார் விடலை. அவருக்குத் திருப்தியாகலையாம். மறுபடியும் போனை போட்டார்.

"உண்மைத்தமிழன் இதெல்லாம் என்னோட 'எலிக்குட்டி' சோதனைக்குப் பத்தாதாக்கும். போட்டோ போட்டே ஆகணுமாக்கும்.. இல்லேன்னா இதையே காப்பி, பேஸ்ட் பண்ணி போட்டு உங்களை பல் விளக்க வைச்சிருவாங்கோ.. அனுபவஸ்தன் சொல்றேன். கேளுங்கோ.." அப்படின்னு இன்னும் கொஞ்சம் பொறுப்பா அட்வைஸ் பண்ணார்(கண்ணுல தண்ணி வருது ஸார்.. உண்மைத்தமிழன் மேல எம்புட்டு பாசம் பாருங்க..)

சரி.. இவ்ளோ பெரிய மனுஷன்.. நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு போன் பண்ணி அக்கறையா சொல்றாருன்னு அதையும் கேட்டுத்தான் செய்வோமே.. என்ன காசா? பணமா? அப்படின்னுட்டு மறுபடியும் என் போட்டோவை எப்படியோ ஒரு இடத்துல வைச்சு அட்டாச் பண்ணிப்புட்டேன்..

போட்டோவைத் திறக்கும்போது பக்கத்துல சின்னப்புள்ளைக யாரும் இல்லாம பார்த்துக்குங்க.. "உன் படத்தைப் பார்த்து குளிரடிச்சுப் போச்சு.. ஜனனி கண்டுபோச்சுன்னு" அப்பால யாரும் புலம்பக் கூடாது. அதான் முன்னாடியே சொல்லிட்டேன்..

போட்டோவை பாருங்க.. 'குவாலியர் இளவரசன்' மாதிரியில்லே..? சொல்ல மாட்டீகளே.. எல்லாம் பொறாமை.. பொறாமை.. தெரியுது.. தெரியுது..
இப்ப இதையெல்லாம் எதுக்காகச் சொல்ல வந்தேன்னா..?

வலையுலகத் தெய்வங்களா..
இனிமே உங்களுக்கு 'உண்மைத்தமிழன்'னு பேர் போட்டு எதுனாச்சும் கடுதாசி வந்தா.. அதுல என்னோட டிஸ்பிளே நம்பர், இந்த குவாலியர் ராஜகுமாரனின் 'அழகு' போட்டோ இருக்கான்னு செக் பண்ணிப்புட்டு.. அப்புறமா அதுக்கு பெர்மிஷன் கொடுங்க.. இல்லேன்னா பட்டுன்னு மூஞ்சில அடிச்சாப்புல 'முடியாது'ன்னு சொல்லி வெளிலேயும் சொல்லிருங்க.. அப்பத்தான் நானும் தெரிஞ்சுக்குவேன்ல பாசக்காரப் பயலுக எத்தனை பேர் இருக்காங்கன்னு..?

'இதுக்கேண்டா இப்படி ஒப்பாரி வைக்கிற மாதிரி, இருபத்தொரு பாரால எழுதித் தொலைஞ்சிருக்க. நாலு லைன்ல எழுதித் தொலைய வேண்டியதுதான..?' அப்படீன்னு நீங்க அல்லாரும் மனசுக்குள்ள திட்டுறது இந்த உண்மைத்தமிழனின் மனசுக்கும் கேட்குது.. ஆனா என்ன செய்ய?

கீபோர்ட்ல கை வைச்சா நிக்க மாட்டேங்குது சாமி.. சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி கை போய்க்கிட்டே இருக்குது.. என்னத்த செய்றது..?

அதுனால..

வேணாம்.. போதும்..

இத்தோட முடிச்சுக்குறேன்..