Showing posts with label ராணிமுகர்ஜி. Show all posts
Showing posts with label ராணிமுகர்ஜி. Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-31-12-2010

31-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடத்திய கடைசி இட்லி-வடை பதிவு இது.


ஆகவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில நிஜமான சண்டைக் காட்சிகள் இருக்கும் வீடியோக்களை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்.. காரணமெல்லாம் கேட்கக் கூடாது.. புரிஞ்சுக்கணும்..! அம்புட்டுத்தான்..!




இது தாதாகிரி என்கிற டிவி நிகழ்ச்சியின்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கும், அதில் கலந்து கொண்டவருக்கும் இடையில் நடந்த மோதல். முதலில் அடித்தது பெண்தான் என்றாலும், பொம்பளைப் புள்ளையை கை நீட்டியா அடிக்கிற ராஸ்கல் என்று சொல்லி நம்ம பயலைப் போட்டுப் புரட்டி எடுத்துட்டாய்ங்க.. பாருங்க..








சினிமாவில்தான் புருஷனை பொண்டாட்டி அடிப்பதைப் போல் காமெடிக்காக காட்டுவார்கள். நிஜமாக, சீரியஸாக காட்டித் தொலைக்க மாட்டார்கள். அதே போல் சீரியலிலும் நம்மாளு ஒருத்தனை அக்குவேறு, ஆளு வேறா பிரிச்சிருக்காங்க. கன்னட சீரியலாம்.. நல்ல வேளை. தமிழ் சீரியல்ல இந்த அளவுக்கெல்லாம் இல்லை. கொஞ்சமா வெளக்கமாத்தால அடிக்கிற மாதிரிதான் இருந்தது. பார்த்து சூதானமா இருந்துக்குங்க..








இந்தச் சமாச்சாரம் எப்போ நடந்ததுன்னு எனக்குத் தெரியாமப் போச்சே. இப்பத்தான் பார்த்தேன்..

டான்ஸ் புரோகிராமுக்கு நடுவரா வந்த சின்ன இடையழகி சிம்ரனிடம் எடுத்த எடுப்பிலேயே ஏதோ ஹைகோர்ட் ஜட்ஜ் மாதிரி “சந்திரமுகில ஏன் நீங்க நடிக்கலைன்னு..” கேட்டு டென்ஷனாக்கிட்டாரு விஜய் ஆதிராஜ். அதுல சிம்ரன் அக்கா ஸாரி ஆண்ட்டி கோபமாகி வெளிநடப்பு செஞ்சிருக்காங்க.

அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வந்த மாதிரி தெரியுது. அப்படியே கூடவே இதுவும் செட்டப்புதான்ற மாதிரியும் தெரியுது. நம்ம வூட்டு ஜனங்களுக்கு இதெப்படி தெரியப் போகுது..? பாருடி சண்டையன்னு மோட்டுவாய்ல கையை வைச்சுக்கிட்டுப் பார்த்து டிஆர்பியை ஏத்திவிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.








இது கேரளாவில் டைவர்ஸ் கோர்ட்டுக்கு வந்த இரண்டு குடும்பத்துப் பெண்கள் கோர்ட்டுக்கு வெளியே தங்களுடைய பிரச்சினைகளைப் பேசும்போது பேச்சுவாக்கில் கை கலப்பாகி, ஆளாளுக்கு முடியைப் பிடித்திழுத்து காரசாரமாக்கியிருக்கிறார்கள்..








இது பஞ்சாப்பில் ஒரு பெண்கள் கல்லூரியில் இரண்டு குரூப் மாணவிகள் விருதகிரி விஜயகாந்த் மாதிரி எத்தி, எத்தி விளையாடும் சூப்பர் பன்ச் சண்டை..








செக் குடியரசு நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் ராத்தை அந்நாட்டின் துணை பிரதமர் மிராஸ்லாவ் மெசெக் பல் டாக்டர்கள் மாநாட்டு மேடையிலேயே  மண்டையில் ஒரு தட்டுத் தட்டியதுதான் இந்த வீடியோ.

தட்டியதைத் தட்டிக் கேட்டு அமைச்சரும் பின்பு துணை பிரதமரை ஒரு போடு போட.. இருவரும் உருண்டு புரண்டு மல்லுக் கட்டியுள்ளார்கள். சண்டைக்கான காரணத்தைக் கேட்டு செக் குடியரசு நாடே சிரிப்பாய் சிரித்திருக்கிறது.

துணை பிரதமர் மெசெக் தனது மனைவியை பணத்துக்காகத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று டேவிட்ராத் கட்சிக்காரர்கள் பலரிடமும் கிசுகிசு பரப்பினாராம். அதுதான் பொது மேடையிலையே ஒரு போடு போட்டிருக்கிறார் மெசெக். இப்போது இவர்கள் இருவரையுமே அவரவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.








தனி நபர்கள்தான் சண்டை போடுவாங்களா..? நாங்க போட மாட்டோமாக்கும் என்று சவால்விட்டுச் செய்து காட்டுகிறார்கள் பொலிவியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள். என்ன ஆவேசம் பாருங்கள்..








குங்பூ, கராத்தேக்கு புகழ் பெற்ற தென்கொரிய பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் நடத்திய சண்டைக் காட்சிகள்தான் இது. இதில் பெண் எம்.பி.க்களுக்கும் கலந்து கொண்டு தங்களது வீரதீரத்தைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது..








இது உக்ரைன் பாராளுமன்றத்தில் நடந்த போர்.. கல் வீச்சு, அம்பு வீச்சு, தடி வீச்சு, முட்டை வீச்சு என்று அனைத்து அம்புகளும் ஏவப்பட்டு, கை கலப்பாகி, மூக்கு உடைந்து, ரத்தம் கொட்டிய நிலையிலும் சபாநாயகர் மிகக் கர்மச் சிரத்தையாக ஓட்டெடுப்பு நடத்தி ஒரு தீர்மானத்தை நடத்தி முடித்திருக்கிறார். என்னவொரு கடமையுணர்ச்சி..? கடைசியில் பாராளுமன்றத்திற்குள்ளேயே கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித்தான் எம்.பி.க்களை வெளியேற்றியிருக்கிறார்கள்..





இது இலங்கை பாராளுமன்றத்தில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதியன்று நடந்த சிறிய தள்ளுமுள்ளு சண்டை..







உலகிலேயே தற்போதைக்கு பாராளுமன்றச் சண்டைக்குப் புகழ் பெற்ற நாடான தைவானின் பாராளுமன்றத்தில் நடந்த பல, பல சண்டைக் காட்சிகளின் அரியத் தொகுப்பு








நம்ம மட்டும் சளைத்தவர்களா என்ன..? இது 2007-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதியன்று உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் நடந்த அதி பயங்கர சண்டைக் காட்சி இது.. காணத் தவறாதீர்கள்..








இவ்வளவு சோகத்தையும் தாங்கிக்கிட்ட உங்களின் புண்பட்ட மனதை கூல் செய்ய வேண்டி இந்தச் செய்தி..


'நோ ஒன் கில்டு ஜெஸிகா' அப்படீன்ற படத்துல வித்யாபாலனும், ராணி முகர்ஜியும் நடிச்சுக்கிட்டிருக்காங்க. ஒரு பெரிய ஸ்டார் இருந்தாலே ஏதாவது ஒரு கிசுகிசு எழுதுவாங்க. ரெண்டு பெரிய ஸ்டாரிணிகள் இருக்கும்போது எழுத மாட்டாங்களா..?


ராணி முகர்ஜிக்கும், வித்யா பாலனுக்கும் முட்டிக்கிச்சு. ரெண்டு பேருமே படத்தில நடிக்க ஆர்வமில்லாம இருக்காங்க.. யாராவது ஒருத்தர் பிய்ச்சுக்கப் போறாங்க.. படம் நிக்கப் போகுது அப்படி, இப்படின்னு பிட்டு நியூஸா போட்டுத் தாளிச்சாங்களாம் பத்திரிகைக்காரங்க.


படம் புட்டுக்குமோன்னு பயந்து போன தயாரிப்பாளர்  பத்திரிகையாளர்களுடன் ஹீரோயின்களை நேர்ல சந்திக்க வைச்சு “நல்லா பார்த்துக்குங்க.. இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்காங்க. நோ சண்டை.. ஒரே பேமிலிதான்.. நல்ல பாசக்காரங்க.. படத்தை நல்லபடியா நடிச்சுக் கொடுப்பாங்க..” அப்படீன்னு சொல்றதுக்கு ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணியிருக்காரு..


கூட்டத்துக்கு ஸ்டாரிணிகள் ராணி முகர்ஜியும், வித்யாபாலனும் வந்தாங்க. “இவங்ககிட்ட என்னத்த சொல்லி.. என்னத்த செஞ்சு நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்தான்.. நமக்குள்ள சண்டையெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லிப் புரிய வைக்கிறது?” அப்படீன்னு வித்யாபாலன், ராணிகிட்ட கேட்டிருக்காங்க.


அதுக்கு ராணி "சொல்ல வேணாம். செஞ்சு காட்டுவோம்.. வா"ன்னு சொல்லி வித்யாபாலனை இறுக்கியணைச்சு லிப் டூ லிப் உம்மா கொடுத்து அசத்தியிருக்காங்க.. முதல்ல தயங்குன வித்யாபாலனை அடுத்தடுத்து அதே மாதிரி கிஸ் பண்ணி கலக்கியிருக்காங்க ராணியம்மா.. இனிமே எவனாச்சும் சொல்லுவீங்க.. அக்காமார்கள் ரெண்டு பேரும் சண்டை போடுறாங்கன்னு..?





டிரவுசரை கழட்டறதுன்னா சத்தியமா அது இதுதானுங்கோ..





படித்ததில் பிடித்தது

"சுரேஷ், உங்களுக்கு விரைவில் பண வசதி விரைவில் ஏற்படும்.  நான் பல காலம் சோற்றுக்கே வழியில்லாமல் வெறும் அழுகல் தக்காளியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன்.  இன்னமும் இந்தியாவில் உழைப்புக்குப் பலன் உண்டு என்பதற்கு நான் ஒரு சாட்சி.  ஆனால் உழைப்பே உயர்வு தரும் என்ற பொய் வாசங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஒரு ஆள் வாட்ச்மேனாக இருந்தால் வாழ்நாள் பூராவும் வாட்ச்மேனாகவே இருக்க வேண்டியதுதான்.   உழைப்போடு கொஞ்சம் புத்தியையும் கலக்க வேண்டும். அப்போது  பணம் வரும்.  வந்த பிறகு,  புத்தகம் வாங்க மறந்து விடாதீர்கள்."


- எழுத்தாளர் சாரு நிவேதிதா


பார்த்ததில் பிடித்தது




நன்றி..!