உரிமை

நமக்கு ஞாயம் இருக்கிறது. இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற.. நமக்கு ஞாயம் இருக்கிறது. நம் அரசாங்கத்தை அமைக்க.. அடியோடு இந்தியா பூராவுக்கும் மாற்றாவிட்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் தனிச் சுதந்திர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே - முன்னே நான் சொன்னாற்போல, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர, நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே.. இந்தியா என்கிற ஒரு தேசம் கணும். அதிலே நாம் ஒரு நாட்டானாக இருக்கணும். அதற்கு ஒரே தேசம்.. அப்படி என்று ஆரம்பிக்கவில்லையே..

- பெரியார் (09-12-1973)