பொதுத் தொண்டன் எப்படி இருக்க வேண்டும்?


பொதுத் தொண்டனுக்குத் தன்னால் பாதுகாக்க, பெருக்க வேண்டிய பெரிய தொழில், சொந்தத் தொழில் இருக்கக்கூடாது. இருந்தால் எதிரிகளுக்குப் பயந்து லட்சியத்தை விட்டுக் கொடுக்க நேரும். மனைவி, பிள்ளை, குட்டிகள் இருக்கக்கூடாது. இருக்கவே கூடாது. பொதுத்தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது. வாழவே கூடாது. வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து, ஆனால் நான் பொதுத் தொண்டன், தியாகி. கஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு. அப்படி நினைப்பாயேயானால், நீ மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

- தந்தை பெரியார்