அதிதி - சினிமா விமர்சனம்

28-06-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2007-ம் வருடம் ‘Butterfly on a Wheel’ என்ற பெயரில் இங்கிலாந்து-கனடா கூட்டுத் தயாரிப்பில் ஒரு படம் வெளியானது. அப்போதைய ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிரான்ஸன், அந்தப் படத்தில் ஒரு வில்லத்தனமான கேரக்டரை செய்திருந்தார். படத்தின் கதையும் மிக மிக வித்தியாசமானதுதான்..
இதே கதையை அனுமதி பெற்றார்களா இல்லையா என்பது இப்போதுவரையிலும் தெரியாது.. ஆனால் 2010-ம் ஆண்டு ‘காக்டெயில்’ என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்து வெளியிட்டார்கள்.  கதைக்கான இடத்தில் ஒரிஜினல் கதாசிரியரான William momssey-யில் பெயர் இடம் பெற்றிருந்தது. அருண்குமார் இயக்கியிருந்தார். ஜெயசூர்யா, அனூப் மேனன், சம்விருதா சுனில், பகத் பாஸில், இன்னசென்ட், மம்முகோயா மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
இப்போது 2014-ல் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை மலையாளத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று தமிழாக்கம் செய்திருக்கிறார்கள் ‘அதிதி’ என்ற பெயரில்.. ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் இயக்குநரும், சிறந்த வசனகர்த்தாவுமான இயக்குநர் பரதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.


அழகான, அமைதியான இல்லற வாழ்க்கையில் இருக்கும் ந்ந்தா மற்றும் அன்ன்யாவின் வாழ்க்கையில் நிகேஷ்ராம் மின்னலாய் நுழைகிறார். கையில் துப்பாக்கி. அவருடைய செல்போனின் மறுமுனையில் தம்பதிகளின் ஒரே மகளின் உயிர். இனி நிகேஷ் சொல்வதைத்தான் இந்த்த் தம்பதிகள் கேட்க வேண்டும்.. மறுத்தால் மகளின் உயிர் போய்விடும்.. தம்பதிகள் மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். நிகேஷ் கேட்பதையெல்லாம் செய்கிறார்கள்.. சொல்கிறார்கள்.. தருகிறார்கள். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!
காக்டெயிலாக வந்தபோதே கேரளாவில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது.. கணவன் மீது அதிருப்தியில் இருக்கும் ஒரு மனைவி இப்படியெல்லாம் செய்ய நினைப்பாளா என்கிற பட்டிமன்றம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நடந்தது.. மோசமான மனநிலையுடன் நடத்தப்படும் எக்ஸ்பிரிமெண்ட்டாக மட்டுமே இந்தக் கதையை எடுத்துக் கொள்ள முடியும்..! இந்தக் கதையை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.. ஒருவகையில் முட்டாள்தனமானதும்கூட..!
கணவனைத் திருத்த எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்க.. இப்படியொரு குறுக்கு வழியை.. அதிலும் வாழ்க்கையில் ரிஸ்க் வைத்து விளையாடும் இந்த்த் திரைக்கதை விளையாட்டு சினிமாவுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதை மட்டுமே ஒத்துக் கொள்ள வேண்டும்..!
மலையாள ஜெயசூர்யா கேரக்டரில் தமிழில் நிகேஷ்ராம். அடக்கமான, ஆக்ரோஷமான, அழுத்தமான கேரக்டரை பதிவு செய்திருக்கிறார். படத்தின் பிஸினஸுக்காக வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாமே என்றால்கூட யோசிக்க முடியவில்லை. அப்படியொரு அட்டாச்மெண்ட்டில் இருக்கிறார் அந்தக் கதாபாத்திரத்தில்..!
லெப்ட்ல திருப்புடா என்று ஆங்காரமாக ஒலித்த குரலுடன் கிளைமாக்ஸில் ந்ந்தாவின் உள் மனசு விகாரத்தை போட்டுடைக்கும் அந்த உடைஞ்சு போன மனசையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாவம் என்பது போல் தோன்றும்.. வெல்டன் இயக்குநர்..!
நந்தா பல படங்களில் நடித்தும் இன்றைக்கும் ஒரு லெவலுக்கு வர முடியாமல் தவிக்கும் நடிகர்.. திரைக்கதைதான் இந்தப் படத்தில் பிரதானம் என்பதாலும், திரைக்கதை ஓட்டைகளை கேரக்டர்களின் நடிப்பினால் பில்லப் செய்ய முயற்சித்திருப்பதாலும் ஆங்காங்கே விழும் தொய்வுகளினால் இவரையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் முயன்றிருக்கிறார்.
அனன்யா. வாயாடியாக இருந்தவர் இதில் கொஞ்சம் அடக்கமாக நடித்திருக்கிறார். கூடுதலான நடிப்பாக கிளைமாக்ஸில் மட்டுமே வார்த்தைகளை வீசியிருக்கிறார். இதே மாதிரி நான் தப்பு செஞ்சிட்டு வந்தா நீ என்ன செஞ்சிருப்ப என்ற கேள்விக்கு ந்ந்தாவின் பதில் தெரிந்த்துதான்.. இதே கேள்விதான் மறுபடியும் படத்தின் கிளைமாக்ஸிலும் ரேவதி, நிழல்கள் ரவியிடம் கேட்பார்..!
மலையாளத்தில் இன்னசென்ட் செய்த கேரக்டரில் தமிழில் தம்பி ராமையா… தவியாய் தவிக்க வைத்திருக்கிறார். காரில் செல்லும்போது நிகேஷ் பற்றி பிட்டு பிட்டு வைப்பதெல்லாம் திரைக்கதைக்கு உதவிய கதை..! ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாட்டிலை வீறாப்பாக வாங்கிவிட்டு பின்பு திருப்பிக் கொடுக்க அல்லல்லபட்டு.. நொந்து நூடுல்ஸாகி ஊர் திரும்பும் அந்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார்.. பாட்டில் பிரியர்கள் நிச்சயம் இந்தக் காமெடியை ரசிப்பார்கள்..
ஆங்கிலத்தில் இல்லாத ஒரு திரைக்கதை தமிழில் உண்டு. கிளைமாக்ஸில் நிகேஷ்ராமின் தற்போதைய நிலைமையைச் சொல்லவும் ஒரு கதையைத் திணித்திருக்கிறார்கள். அது மனதை வருடுகிறது என்றாலும் கனமில்லாமல் இருக்கிறது..!
வசனகர்த்தா பரதனுக்குத் தனியே சொல்லித் தர வேண்டியதில்லை. பல இடங்களில் வசனங்களே படத்தில் டென்ஷனை கூட்டுகிறது.. தம்பி ராமையா பேசியிருக்கும் படாபடா வசனங்களை கேட்பதற்காகவே இன்னொரு முறை படத்தை பார்த்தாக வேண்டும் போலிருக்கிறது..! வெல்டன் பரதன் அண்ணே..!
இசைதான் பாடாய் படுத்திவிட்டார்கள்..! பின்னணி இசையும், பாடல்களின் இசையும் நம்மை ரசனையில் ஆழ்த்தவில்லை.. இந்தப் படத்திற்கு குத்துப் பாடல்கள் தேவையே இல்லை.. ஆனாலும் வைத்திருக்கிறார்கள். அழகாய் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். எடிட்டிங் பின்னியிருக்கிறார்கள்.. இது போன்ற திரில்லர் படங்களில் அதுதானே முக்கியம்.. அந்த வேகத்தையும், காட்சிகளின் திருப்புதல்களையும் எடிட்டிங்கில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்..
முன்பே சொன்னதுபோல தமிழ்ச் சினிமாவுக்கு இதுவொரு புதுமையான பார்மெட். ஹீரோயின் சப்ஜெக்ட் படமே வரலியே என்று நினைப்பவர்களுக்காக வித்தியாசமான ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இந்தப் படம் வந்திருக்கிறது என்று சொல்லலாம்..! ஆனால் தமிழுக்கே உரித்தான முன்னணி ஹீரோக்களுடன் இந்தப் படம் வெளிவந்திருந்தால் ரிசல்ட் நிச்சயம் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்..!

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-