சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..!

02-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது அரசியல்வாதிகள் நீதி, நேர்மை, நியாயம், இவைகளைப் பற்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எந்த அளவுக்கு வேடிக்கையாக இருக்குமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' என்கிற வாரப் பத்திரிகையில் தம்பி யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக், 'சைபர் கிரைம்' பற்றி தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளும் அவருடைய முனைப்பான உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்..

சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தொடர் கட்டுரையில் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் இ-மெயில் ஹாக்கிங் செய்யப்பட்டது பற்றி எழுதியிருந்தார் தம்பி. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் ஊடாக மேலும் சில விஷயங்களை நான் இந்தப் பதிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

அன்றைய பகல் 12 மணியளவில்தான் சாருவின் ஈ-மெயில் ஹேக்கிங் பற்றியச் செய்திகள் தமிழ்மணத்தில் பதிவாக வெளி வந்தன. அதைப் படித்துவிட்டு உடனடியாக நான் சாருவுக்கு போன் செய்து பேசினேன். "சரவணன்.. நீங்க நூத்தியொண்ணாவது ஆள்.. நான் மெட்ராஸ்லதான் இருக்கேன். மலேசியாவுக்குப் போகலை.. எவனோ ஒருத்தன் செஞ்சிருக்கான். யாருன்னு தெரியலை. இது பொய். யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லி நீங்க ஒரு பதிவா உங்க பிளாக்ல போட்டிருங்களேன்.." என்றார் சாரு.

தொடர்ந்து நானும் சாருவிடம் பேசியதையும், அவர் சொன்ன விஷயத்தையும் அந்த எச்சரிக்கை பதிவில் பின்னூட்டமாக இட்டேன். அடுத்து யார் அந்த வேலையைச் செய்திருப்பார் என்று தேடுவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் இப்படி சாருவுக்கு எதிரான ஒரு வினையை நான் அப்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், சாருவின் 'மம்மி ரிட்டர்ன்ஸ்' கடிதம். அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் 'போலி டோண்டு'வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தமிழ் வலையுலகத்தை தனது தீந்தமிழால் மிரட்டிக் கொண்டிருந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி' என்ற அந்த 'போலி டோண்டு' தன்னை எதிர்ப்பவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிர்ப்பான் என்பது நமக்கும் தெரியும்தானே.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்றுதான் நான் நினைக்கவில்லை.

தன்னை எதிர்ப்பவர்களின் வலைத்தளங்களை பறிப்பது.. மெயில் முகவரிகளை ஹேக்கிங் செய்வது, அந்தப் பதிவர்கள் பெயரில் போலித்தளங்களை உருவாக்குவது.. அத்தளங்களில் பதிவர்களின் புகைப்படங்களை வைத்து காமக்கதைகளை எழுதி நிரப்புவது.. என்கின்ற அத்தனை நல்ல வேலைகளையும் செவ்வனே செய்து வந்த உத்தமத் தமிழனான மூர்த்திதான் இதையும் செய்திருப்பான் என்பதை அன்றைக்கே, தொலைபேசியில் சாருவிடம் சொன்னேன்.

இது மாதிரி மொத்தமாக ஆட்டையைப் போடும் அளவுக்கான புத்திசாலி அவன் ஒருவனே என்ற எனது அதீத நம்பிக்கை, இரண்டு நாட்களில் நிஜமாகவே உண்மையாக மாறியிருந்தது.

சிங்கையில் இருக்கும் நமது சக பதிவர் குழலியும் என்னைப் போலவே மூர்த்திதான் இதை செய்திருப்பானோ என்று சிந்தித்திருக்கிறார். என்னைவிடவும் மூர்த்தி பற்றி நன்கு அறிந்தவர் அவர்தான். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

சாருவின் ஹேக் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியான charunivedita@hotmail.com-க்கு Read notify Software-ஐ பயன்படுத்தி தனது இ-மெயில் முகவரியில் இருந்து "What happened..?" என்று கேட்டு ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார் குழலி.

அது எங்கே ஓப்பன் செய்யப்பட்டது என்கிற தகவல் குழலிக்கு உடனேயே திரும்பக் கிடைத்திருக்கிறது. மலேசியாதான் என்றவுடன் உடனேயே குழலி எனக்குத் தகவல் கொடுத்தார். எனது சந்தேகம் நூறு சதவிகிதம் உறுதியானது மூர்த்திதான் என்று..!

அடுத்து உடனேயே மூர்த்தியின் சொந்த மெயிலுக்கு மெயில் அனுப்பினால் சந்தேகத்தில் திறக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு என்பதால், மறுநாள் மூர்த்தி பயன்படுத்தும் ஒரு மெயில் முகவரியான unmaisolli@gmail.com-ற்கு "டேய் மாப்புள்ள" என்று பாசத்தைக் கொட்டி ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறார் குழலி.

அந்த மெயிலும் ஓப்பன் செய்யப்பட்டதற்கான அத்தாட்சியை Read Notify அனுப்பியது. இதுவும் எதிர்பார்த்ததைப் போலவே மலேசியாவில்தான் திறக்கப்பட்டிருந்தது.

ஒரு வேளை 'உண்மைசொல்லி' தான் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்த குழலி, மீண்டும் அவனுடைய நீண்ட நாளைய மெயில் முகவரியான mmoorthee@gmail.comற்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுள்ளார். இந்த மெயிலும் அதே ஐ.பி.எண்ணில், மலேசியா கோலாலாம்பூரில்தான் திறக்கப்பட்டுள்ளது.

இங்கே இன்னுமொரு விஷயம்.. குழலி அனுப்பியிருந்த 'உண்மைசொல்லி' என்கிற மெயிலுக்குச் சொந்தக்காரனான 'உண்மைசொல்லி' என்னும் ஒருவர் அப்போதைய காலக்கட்டங்களில் சாருவைப் பற்றி கன்னாபின்னாவென்று ஆபாசமாகத் திட்டித் தீர்த்து பின்னூட்டங்களை பல இடங்களிலும் தெளித்துக் கொண்டிருந்தார். பதிவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஜிமெயிலும், மூர்த்தியின் நிஜமான ஜிமெயிலும் ஒரே ஐ.பி.எண்ணில் இருந்துதான் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் அவன் மீதான எனது சந்தேகத்தை பல மடங்கு உயர்த்தியது.

குழலி உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைச் சொல்லி சாருவிடம் இதனைத் தெரிவித்து மூர்த்தி மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தரச்சொல்லும்படி கூறினார்.

நானும் உடனடியாக சாருவைத் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். சாருவோ, "நான் ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் பண்ணிட்டேன்.. விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..?" என்றார். "ஏற்கெனவே புகார் கொடுத்துவிட்டதால் திரும்பவும் போக விருப்பமில்லை.(உண்மையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்) இதுவும் இருக்கட்டும். தேவைப்பட்டால் பின்பு பயன்படுத்துவோம்.." என்றார் சாரு.

என்னுடைய இந்த அவசரத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம், இதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் நானும், செந்தழல் ரவியும் இணைந்து சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூர்த்தி பற்றி புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தோம். இந்த நேரத்தில் சாருவின் இந்தப் புகாரும் சேர்ந்தால், எங்களுக்கு ஒரு கூடுதல் வலு கிடைக்கும் என்று நான் நினைத்தேன்.

இதனால் சாருவிடம் "கேஸ் என்னாச்சு..?" என்று வற்புறுத்தத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் இது விஷயமாக அனத்தியபடியே இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் எனது வழக்குக்காக 'போலி டோண்டு'வான மூர்த்தியின் ஆதி, அந்தங்களை அவனுடைய சொந்தத் தளமான முத்தமிழ்மன்றம்.காம்-ல் தோண்டித் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு க்ளூ கிடைத்தது.

'போலி டோண்டு' என்பது இந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி'தான் என்று வருடக்கணக்காக நமது டோண்டு ஸார் சொல்லி வந்ததால், மூர்த்தி ஒரு கட்டத்தில் 'முத்தமிழ்மன்ற'த்தில் தனது பெயரை 'முருகா' என்று மாற்றி வைத்துக் கொண்டான். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

அப்படி அந்த 'முருகா' என்கிற பெயரில் எழுதப்பட்ட பல செய்திகளை ஒன்று திரட்டிப் படித்துக் கொண்டிருந்தபோதுதான், இந்த செய்தி என் கண்ணில்பட்டது.

சாருவின் பெயரைச் சொல்லி பணம் பறிக்க முயன்ற கதைதான் இது. 'மங்கை' என்ற ஒரு பெண் தனக்கு அனுப்பிய மெயிலில் இது பற்றி சொல்லியிருப்பதாகவும், இதனால் இதனைப் படிக்கின்ற முத்தமிழ்மன்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்கும்படி இந்த ஒழுக்கசீலரான 'முருகா' என்கிற 'மூர்த்தி' அறிவுரையே நிகழ்த்தியிருக்கிறார். இதனை எழுதியிருப்பது 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி.

அந்த ஆங்கில கடிதத்தைப் படித்துப் பாருங்கள். இதுவும், சாருவுக்காக எழுதப்பட்ட ஆங்கில கடிதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெயர் மற்றும் இடங்கள் மட்டுமே வேறு வேறாக மாற்றப்பட்டுள்ளன. இதனைப் படித்த பின்பு மூர்த்தி மீது இருந்த எனது சந்தேகம் மிக, மிக உறுதியானது, இவனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று.. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சாருவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்.

கேஸ் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரியாத சூழல் இருந்ததால், சாருவிடம் அவ்வப்போது நான் இது தொடர்பாக விசாரித்தபடியே இருந்தேன். அப்படி ஒரு முறை நான் சாருவைத் தொடர்பு கொண்டபோது, "சரவணன்.. நான் மலையாள பத்திரிகைக்காக மும்முரமாக எழுதிக்கிட்டிருக்கேன். இப்ப பேசவே எனக்கு நேரமில்லை. நாளைக்கு பேசுவோம். விட்ருங்க.." என்றார் கண்டிப்பான குரலில்.

நான் அன்றைக்கு மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், அது தொடர்பாக மீண்டும் வற்புறுத்தினேன். சாரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிய வர.. "ஓகே ஸார்.." என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மூர்த்தி பற்றி சைபர் கிரைம் அலுவலகத்தில் நான் புகார் கொடுத்ததில் இருந்து நாள்தோறும் விசாரணைக்காக என்னை அழைத்தபடியே இருந்தார்கள். அப்படி என் வழக்கு தொடர்பாக சென்ற நேரத்தில் நண்பர் குழலி அனுப்பியிருந்த ஆதாரங்களையும், நான் முத்தமிழ்மன்றம்.காம்-ல் தேடியெடுத்த பழைய கடித நகலையும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து, "சாருவின் இ-மெயிலை ஹாக் செய்ததும் இந்த மூர்த்திதான்.." என்ற தகவலைத் தெரிவித்தேன்.

அங்கே வழக்குகளை எல்லாம் பிரித்து, பிரித்து விசாரிப்பதால் சாருவின் வழக்கை சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரே நேரடியாக விசாரிப்பதாகவும், "மேற்கொண்டு இது பற்றி நீங்கள் இன்ஸ்பெக்டரிடம்தான் சொல்ல வேண்டும்.." என்றும் சொன்னார்கள். நான் இன்ஸ்பெக்டரை சந்திக்க முயற்சித்தபோது அப்போது பார்த்து அவர் வெளியில் போய்விட்டார்.. மறுநாள் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்வதற்குள் சாருவிற்கு ஒரு போன் செய்து சொல்லிவிடலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்தால், மனுஷன் ஒரு அணுகுண்டையே தூக்கிப் போட்டார்.

"நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன் சரவணன்.." என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது வழக்கு, தம்பி ரவியின் வழக்கை விடவும் சாருவைத்தான் நான் அதிகம் நம்பியிருந்தேன். சாரு பெரிய எழுத்தாளர் என்பதாலும், கனிமொழியின் தீவிர சிபாரிசினால் வழக்கு பதியப்பட்டு இருந்ததினாலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். எனவே 'எந்த வகையிலும் மூர்த்தி தப்பிக்க முடியாது. நிச்சயம் அவனை பிடித்துவிடுவார்கள்' என்று கலர், கலராக நான் கொண்டிருந்த கனவை, ஒரு லாரி தண்ணீரை ஊற்றிக் கலைத்தார் சாரு.

"அவங்க இஷ்டத்துக்கு கூப்பிடுறாங்க.. 'அந்த நேரம் வாங்க'. 'இந்த நேரம் வாங்க'ன்றாங்க.. எனக்கு வேலையிருக்கு சரவணன்.. நான் புகார் கொடுத்தாச்சு.. அதுலயே டீடெயிலா எழுதிட்டேன்.. அப்புறம் எதுக்கு 'வா.. வா'ன்றாங்க.. நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா..? அதான் 'வர முடியாது'ன்னு சொன்னேன். 'அப்ப நேர்ல வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் போங்க'ன்னு சொன்னாங்க.. நானும் போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்றார்.

நான் அதற்குப் பிறகு அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், சாரு பிடிவாதமாக மறுத்துவிட்டார். "எனக்கு வேணாம் சரவணன்.. அது எவனா வேண்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. ப்ளீஸ்.. விட்ருங்க..." என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

இதன் பின் நான் சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். "உங்க எழுத்தாளர்தான் அவசரப்பட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டாரே..!? இப்ப என்ன ஸார் பண்றது..? இது விஷயமா மேல எதுவும் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. வேணும்னா உங்க கேஸ் விஷயமா பேசுங்க.. நிச்சயமா செய்யலாம்.." என்று நழுவலான பதிலைச் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.

இதையும் சாருவிடம் சொன்னேன். தான் ஒரு எழுத்தாளர் என்ற அக்கறையே இல்லாமல், தன்னை நினைத்த நேரத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அப்போதும் சொன்னார் சாரு. "போலீஸ் விசாரணையில் இது சகஜம்தான ஸார்..?" என்றேன். "இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு 'உள்ள' வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..?" என்று அதையே திருப்பிச் சொன்னார்.

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை. ஆனாலும் ஜீரணிக்கத்தானே வேண்டும். இதனையும் முழுங்கித் தொலைவோம் என்று நினைத்து மறந்தேன்.

பின்னாளில் வலையுலகம் வலைவீசித் தேடிக் கொண்டிருந்த அந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்தியை அதே சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த ஒரு கேள்வியையும் கேட்டுத் தொலைத்தேன். "சாரு இமெயிலை ஏன்யா ஹேக் செஞ்ச..? அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு..?" என்றேன். கேட்டவுடன் அந்த ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர் செய்துகொண்டிருந்த அதே ஆக்ஷனை.. சினிமா ஹீரோயின்களைப் போல தலையைக் குனிந்து கொண்டு, காலால் கோலம் போட்டுக் கொண்டு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தார். வாயைத் தொறக்கணுமே.. ம்ஹும்.. எல்லாம் எங்க நேரம்..?

சாருவுக்கும் போலி டோண்டு மேட்டர் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.. எனதருமை வாத்தியார் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, நான் சாருவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது டோண்டுவும் எங்களிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

அவர் அந்தப் பக்கம் போனவுடன் சாரு என்னிடம் டோண்டுவைக் காட்டி, "இவர்தான் போலி டோண்டுவா..?" என்றார். அந்த இடம் மரண வீடாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் சிரித்திருப்பேன். அவ்வளவு அதிர்ச்சியாகிப் போனேன். சாரு கேட்டது சாதாரணமாகத்தான் என்றாலும், அவருக்கு வலையுலக அரசியல் அவ்வளவுதான் தெரியும். மேற்கொண்டு நான்தான் அன்றைக்கு கிடைத்த நேரத்தில், எனக்குத் தெரிந்த அளவுக்கான டோண்டு-போலி டோண்டு விஷயங்களை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.

சாரு மீது இந்த விஷயத்தில் எனக்கு பலத்த அதிருப்தியும், வருத்தமும் இன்றளவும் உண்டு. அவர் மட்டும் சிரமம் பார்க்காமல், காவல்துறையுடன் கொஞ்சம் இணங்கிப் போயிருந்தால், இந்நேரம் மூர்த்தி கைது செய்யப்பட்டு வலையுலகத்திற்கு ஒரு பெரும் உதவி செய்த பெயரும் அவருக்குக் கிடைத்திருக்கும்.

இப்போது பாருங்கள்.. சாருவின் புகாருக்குக் கிடைத்த ஆதாரங்களைவிடவும், பல மடங்கு ஆதாரங்களை சுமார் 200 பக்கங்கள் அளவிற்கு எனது புகாருக்காகவும், ரவியின் புகாருக்காகவும் திரட்டிக் கொடுத்துள்ளபோதிலும், இன்னமும் நமது சைபர் கிரைம் போலீஸ் மூர்த்தியை கைது செய்யவில்லை. வரவழைத்து, வரவழைத்து, பேசி பேசியே திருப்பி அனுப்பினார்கள். பாஸ்போர்ட்டை மட்டும் முடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஆனால் நான் இதனை நம்பவில்லை)

"இன்னும் என்னதான் ஆதாரங்கள் வேண்டும்..?" என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ..! அல்லது எங்களுக்குப் பின்புலமாக அரசியல், பண பலம் இல்லையோ.. தெரியவில்லை..

எத்தனையோ நல்ல, நல்ல வலையுலக எழுத்தாளர்களை வீட்டுக்கு துரத்தியடித்து, பல பதிவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வருடக்கணக்காக மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சேடிஸ்ட்டான இந்த மகராசனை இப்படியே விட்டுவைத்தால் எப்படி?

சரி.. போய்த் தொலையட்டும்..!!!

மீண்டும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வருவோம்.

இந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்திதான் சாருவின் இ-மெயிலை ஹேக் செய்தவன் என்கிற தகவலை, அன்றைய நிலைமையில் என்னுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருந்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் நான் தெரிவித்திருந்தேன்.

செந்தழல் ரவி, வரவனையான், ஓசை செல்லா, மற்றும் மூர்த்தி மீது அசைக்க முடியாத ஒரு ஆதாரத்தைக் கொடுத்த பெங்களூர் அருண் என்று பலரிடமும் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் மூலமாக பலருக்கும் இந்தத் தகவல் சென்றடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

தம்பி யுவகிருஷ்ணாவுக்கும் இந்தத் தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும். தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க யாரோ ஒரு 'சைபர் கிரிமினல்' என்றே பொத்தாம் பொதுவாக பெயரிட்டு அழைத்து, அது தனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக காட்ட முனைந்திருப்பது கேலிக்குரிய செயல்.

ஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் சொல்லப்படாதவரையிலும் அவன் நிரபராதிதான் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதே சமயம் நம் மனசாட்சிக்கு ஏற்றவகையில், ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் அவன் மீதான நமது சந்தேகத்தை முன் வைக்கலாமே..!?

ஒரு வேளை 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிகை இதனை ஏற்றுக் கொள்ளாது என்று தம்பி சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால் இதற்கு முந்தைய பகுதிகளில் எல்லாம் வெளிநாடுகளில் ஏமாற்றிய, ஆட்டைய போட்ட கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், சோமாறிகள், முடிச்சவிக்கிகள் என்று பல பெயர்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறாரே.. அதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?

உண்மையாகவே இவருக்கு சாருவின் இ-மெயில் ஹேக்கிங் விஷயத்தில் நடந்தவைகள் முழுமையாகத் தெரியாது எனில், எதற்காக இதனை எழுத வேண்டும்..?

நம் அருகில், நமது அண்டை வீட்டில் நடந்த ஒரு விஷயத்திலேயே இத்தனை விளக்கங்கள் வெளியில் தெரியாமல் காத்திருக்கும்போது அது எதனையும் விசாரிக்காமல் பொத்தாம் பொதுவாக, “நீங்கள் ஜாக்கிரதையா இருங்கள்.. திருடன் வர்றான்.. திருடன் வர்றான்..” என்று பூச்சாண்டி காட்டி பக்கத்தை நிரப்புவது தேவைதானா..?

அவருடைய அன்னியோன்ய நண்பர்களான வரவனையானுக்கும், செந்தழல் ரவிக்கும் இந்த அக்கப்போர்கள் நன்கு தெரியுமே. எழுதுவதற்கு முன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..?

சரி இவர்கள் வேண்டாம்.. சாருதான் இவருக்கு பெஸ்ட் பிரண்ட்டாச்சே..? ஏன்.. இந்த விஷயத்தை எழுதப் போகிறேன் என்று சாருவிடமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவரும் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாரே..!?

சாருவின் இ-மெயில் திருட்டு பற்றிச் சொன்னவர், அது பற்றிய மேல்விவரங்கள், வழக்கு பதிவு, சந்தேகங்கள், வழக்கு வாபஸான கதையையும் சேர்த்து சொல்லியிருந்தால், அது முழுமையான ரிப்போர்ட்டாக இருந்திருக்குமே.

ஆக.. சாருவிடமும் கேட்காமல் அவரை மையமாக வைத்தே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எனில், தம்பியின் இந்த 'சாதனை'யை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

இதுவுமில்லாமல் 'கிழக்குப் பதிப்பக'த்தின் தூண்களான நண்பர் பத்ரிக்கும், திருவாளர் பா.ராகவன் அண்ணாச்சிக்கும் மூர்த்தி செய்த இந்த தில்லாலங்கடி வேலையைப் பற்றி நன்கு தெரியும். அவர்களிடம் சொன்னது, சாட்சாத் நானேதான். சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதனை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாளை இந்தக் கட்டுரை புத்தக வடிவில் 'கிழக்குப் பதிப்பகம்' மூலமாக வெளிவர வாய்ப்பு உண்டு என்பதால்தான்..

சரி.. எழுதுவது நான்.. யாரிடமும் இது பற்றி பேசுவதில்லை என்றால், விசாரிக்ககூடவா முடியாது..? ஒரு விஷயத்தை முழுமையாக நடந்தது என்ன என்று விசாரிக்காமல் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது தப்பிக்க நினைக்கும் மனப்பான்மைக்கு ஒப்பானது.

இந்த 'தப்பிக்க நினைக்கும்' என்கிற வார்த்தையின் அர்த்தம், எழுதுகின்ற அந்தத் தம்பிக்கே தெரியும், என்பதால் அவரது மனசாட்சிக்கே அதனை விட்டுவிடுகிறேன். தம்பியின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, முழுக்கத் தெரிந்திருந்தும் தன்னுடைய முன்னாள் நண்பரான மூர்த்தியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், அவர் நழுவியிருக்கிறார் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இதனால்தான் முதல் பாராவில் இந்தப் பதிவின் முகவுரையை நான் அப்படித் துவக்கியிருக்கிறேன்.

மலேசியாவில் இருந்து என்றால், அவன் ஒருவன்தான் அங்கே இருக்கிறானா? வேறு யாரும் இல்லையா? வேறு ஒருத்தரும் இருக்கலாமில்லையா..? என்ற கேள்விகள் பலருக்கும் எழக்கூடும்.

அப்பாவி பதிவர்களின் பெயர்களில் இருந்த காமத்தளங்களைத் துவக்கியது போலி டோண்டு என்னும் இந்த முத்தமிழ்மன்ற மூர்த்திதான் என்று டோண்டுவும், தெரிந்தவர்கள் பலரும் கரடியாய் கத்தியபோது, பதிவர்கள் சிலர் இது போலத்தான் "எதற்கெடுத்தாலும் மூர்த்தியா..? அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? வேற யாராவது இருக்கலாமில்லையா..?" என்றெல்லாம் குதர்க்கமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால் சைபர் கிரைம் விசாரணையின்போது மூர்த்தி எழுதிக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின், ஒரே நாளில் அந்த அனைத்து காமத்தளங்களும் காணாமல் போனதே.. இது எப்படி என்பதையும் அவர்கள் இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கட்டும்.

மேற்கொண்டு அந்த வாரத்திய சைபர் கிரைம் கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளை வாசிக்கின்றபோது செம காமெடியாக இருந்தன.

"இ-மெயில் திருடப்பட்டால் போயே போச்சு.. ஒட்டு மொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.."

"உங்கள் இ-மெயில் பாஸ்வேர்டை திருடுபவன், உடனடியாக வெளிப்பட்டுவிட மாட்டான்.. தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான்.."

"ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு அந்தத் தகவல்களைக் கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால், அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.."

"உங்களது தனி நபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்படும் பட்சத்தில் சோம்பேறித்தனப்படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள்.. இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.."

இது மாதிரியான உண்மையான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் நானும், அருண் என்கிற பெங்களூரில் இருக்கும் நமது சக வலைப்பதிவரும் கடந்த இரண்டாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தோம்.

என்ன கொடுமை பாருங்க..?

இப்போது இந்த 'குமுதம் ரிப்போர்ட்டர்' 'சைபர் கிரைம்' கட்டுரையின் மூலம்தான், இதுவெல்லாம் எங்களுக்குத் தெரிய வருகிறது.. இந்த மட்டுக்கும் அந்த எழுத்தாளர் தம்பிக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்..

என்ன செய்வது..? எங்கள் தலையெழுத்து இப்படி..? அவர் தலையெழுத்து அப்படி? சைபர் கிரைம் தலையெழுத்துதான் மேற்படி..

பொறுமையுடன் படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..!!!

295 comments:

யுவகிருஷ்ணா said...

தலைப்பைப் பார்த்தேன். பதிவின் இடையில் என்னுடைய போட்டோவைப் பார்த்தேன். பதிவு ரொம்ப நீளம். முடிந்தால் படித்து விட்டு, தேவையானால் பதில் சொல்கிறேன் :-)

டவுசர் பாண்டி... said...

பதிவை படிச்சு முடிக்கறதுக்குள்ள டவுசர் கழண்டுருச்சு...

எல்லாந் தெரிஞ்சும் மூர்த்திய காப்பாத்தீட்டாய்ங்கன்னு ஒத்த வரியில் சொல்லீருக்கலாம்.

Anonymous said...

Irresponsible answer (comment) from yuvakrishna.......

Anonymous said...

Irresponsible answer (comment) from yuvakrishna.......

dondu(#11168674346665545885) said...

நானே ஒரு பதிவு போடவிருக்கிறேன். அதை இட்டுவிட்டு பிறகு இங்கு வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muhammad Ismail .H, PHD, said...

இந்த டோண்டு ராகவன் vs டூண்டு மலேசியா மூர்த்தி பிரச்சினை என்னவென புரியாமல் தவித்துக்கொண்டிருந்த பல புதிய பதிவர்களுக்கு இந்த இடுகையை நான் முழுவதும் படித்து பார்க்க பரிந்துரை செய்கின்றேன். :-0,

அகநாழிகை said...

நீண்ட பதிவு என்றாலும் எல்லாமே அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

Rajagopal.S.M said...

அண்ணே ரெம்ப நாள் சந்தேகத்த தீர்த்து வச்சிங்க... நன்றி... இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல... ஒரு அட்டேண்டன்சே போட்டு அபீட்டு ஆகிக்கிறேன்.....

Ashok D said...

//நீண்ட பதிவு என்றாலும் எல்லாமே அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.// ரிப்பிட் போட்டுக்கலாம்.

யுவகிருஷ்னா போட்டோ சூப்பரு. யாரு அழகா எடுத்துயிருக்காங்க? ;)

மாயவரத்தான் said...

நச்!

ஆனாலும் நீங்களும் ஒரு சில விஷயங்களை (வேண்டுமென்றே?) இங்கே தவிர்த்திருப்பது தெரிகிறது.

ரவி said...

டி.ஆர்.அசோக் அவர்களே. அந்த படத்தை எடுத்தது திரு.மோகன் தாஸ்.

உண்மையாரே.

எனக்கு ரெண்டு ஆப்ஷன்.

ஆப்ஷன் அ.

நட்பு.

ஆப்ஷன் ஆ.

உண்மை.

ஆப்ஷன் இ.

மவுனம்.

ஆப்ஷன் ஈ.

கள்ள மவுனம்.


என்னுடைய ஆப்ஷன் எது என்று தேர்ந்தெடுத்து கொடுத்தால் முழுமையான பின்னூட்டம் எழுதுகிறேன்.

Rajagopal.S.M said...

//அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் 'போலி டோண்டு'வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.//அண்ணே ஒரு பாரா எழுதினதுக்கே அவரு மெயில்ல புடிங்கிடாங்க....
நீங்க ஒரு கட்டுரையே எழுதி இருக்கீங்க.... எதுக்கும் உங்க டவுசர கொஞ்சம் நல்லா பிடிச்சிகோங்க......

பித்தன் said...

நானெல்லாம் ரொம்ப சின்ன குழ்ந்தை இப்பத்தான் நான் இந்த வலையுலகில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் இருந்தாலும் ஏதோ தப்பு மாதிரித்தான் தெரியுது. யுவக்ருஷ்ணவின் பின்னூட்டம் பொறுப்பற்றத் தனமாகவும், தட்டிக்கழிக்கும் விதமாகவும் இருக்கிறது.

Rangs said...

உ த அண்ணே..
யாருக்காக இப்படி கஷ்டப் படறீங்க? என்ன ரெஸ்பான்ஸ்ஸுனு பாருங்க.. பொழப்பப் பாப்போம் வாங்க..

ரங்ஸ்

பாலா said...

டோண்டு.., போலி டோண்டு, முத்தமிழ் மன்றம், மூர்த்தி, லக்கிலுக், யுவகிருஷ்ணா... இவங்கல்லாம் யாருங்க.. சரவணன்?!

மணிஜி said...

அண்ணே..பதிவை விட செந்தழல்ரவியின் பின்னுட்டத்தை மிகவும் ரசித்தேன்..ரவி சூப்பரப்பு

ரவி said...

எனக்கு அதில் இருந்து ரெண்டு ஆப்ஷன் ஏன் இன்னும் தரலை அவ்வ்வ்வ்வ்...

ரவி said...

அப்படியே சல்மா அயூப் பற்றியும் விளக்கி ஒரு போஸ்டு போட்டுவிடவும். அதுவும் Much Awaited.

ரவி said...

இப்படிப்பட்ட ஹிஸ்டாரிக்கல் பதிவில் என்னுடைய போட்டோ இடம்பெறாமைக்கும் கடுமையான கண்டனம்.

மணிஜி said...

ஜெர்கின் போட்ட ரவி போட்டோவை போட்டு வுட்ருங்க அண்ணே

Anonymous said...

உங்க நியாயமான வருத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.......

போட்டோவில கூட உங்களை பார்த்தா பாவமா இருக்குண்ணே. சாரு,லக்கி ஏன் மூர்த்தி கூட நல்லா போஸ் குடுத்திருக்காங்க...

முருகன்தான் உங்களுக்கு ஒரு நல்லவழி காமிக்கணும்ணே....

Anonymous said...

என்னய்யா இது கொடுமை. அனானி கொமெண்டு இத்தன கம்மியா இருக்கு. எல்லாம் திருந்தீட்டானுவளா?

குழலி / Kuzhali said...

உண்மை தமிழன் அண்ணா பதிவை படித்த போது எக்கச்சக்கமா எழுதனுமென்று தோன்றியது, கொஞ்சம் கடைக்கு போயிட்டு வந்தேன்... அப்படியே கொஞ்சம் அடங்கிவிட்டது...

முதலில் சாருநிவேதிதா... இதய அறுவைசிகிச்சை செய்தவர் உடல்நிலை முடியவில்லை என்ற காரணம் சொல்லியிருந்தால் சத்தியமாக பேச வேறொன்றுமில்லை... சாரு என்னை மணிக்கணக்கில் உட்கார வைக்கிறார்கள் என்றும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் அதையெல்லாம் விட அவர் மெயில் ஐடி என்பதால் பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் பற்றிய எந்தவிதமான மதிப்பும் இன்றி கேசை வாபஸ் வாங்கிக்கொண்டார் என்றும் தெரிந்து கொண்ட பின் சாரு போன்றவர்கள் எல்லாம் புரட்சி புண்ணாக்குகள் போராடுபவர்கள் என்ற பிம்பமெல்லாம் உடைந்துவிட்டது, இவர்களெல்லாம் பார் இல் உட்கார்ந்து தண்ணியடித்துக்கொண்டு புரட்சி பேசுபவர்கள், அல்லது போலிஸ்காரன் உதைக்காத வேற்று மாநிலத்தில் உள்ள ஒரு போராட்ட கூட்டத்தில் முடியும்போது கலந்து கொண்டு அதையும் சேகுவாரா புரட்சி ரேஞ்சுக்கு பீலா விடுவது...

தனக்கு மற்றும் தன் பெயரை வைத்து தம்மை நம்பியவர்களுக்கு ஒரு அநீதி நடந்த போதும் அதை எதிர்த்து கொஞ்சம் கூட போராடாது சாருவின் போராளி பிம்பம் உதிர்ந்த இடம் அது தான்....

அடுத்ததாக... இந்த பதிவின் நோக்கமென்ன? நீங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக இரண்டு வரியில் சொல்லியிருக்கலாம்... ஆனால் பாருங்க உங்களுக்கும் ஏதோ தடுக்குது பாருங்க... அது தான் செந்தழல் ரவி ஆப்ஷன் கேட்டிருப்பதற்கும் காரணமென நினைக்கிறேன்...

குமுதம் ரிப்போர்ட்டர் தான் முதன் முதலில் மூர்த்தியின் படத்தை போட்டு அவன் சைக்கோ தனத்தை ஊரறிய வைத்தது.... மூர்த்தியின் ஆப்புரேஷன் போது சில அல்லக்கைகளையும் சேர்த்து சுலுக்கெடுக்க சொன்னீர்கள், அதை வேண்டாம் விடுங்க என்று தடுத்தவர்கள் பலர், அதில் நானும் ஒருவன்...

ஒரு அல்லக்கை டோண்டு வலைப்பதிவர் சந்திப்பில் பேசும்போது தன் மொபைலை ஆன் செய்து வைத்து போலி மூர்த்திக்கு நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தான், அவன் நினைத்துக்கொண்டான் அவனை யாரும் கவனிக்கவில்லை என்று, ஆனால் அவன் பின்னாலிருந்த ஒரு பதிவருக்கு சந்தேகம் தட்ட அவர் அந்த அல்லக்கையின் மொபைல் எண்ணிற்கு தொடர்புகொள்ள அது எங்கேஜ்ட் ஆக இருந்துள்ளது, இந்த முறை மீண்டும் தம் அருகில் இருந்தவரை சாட்சியாக வைத்துக்கொண்டு அல்லக்கையின் மொபைலில் தொடர்புகொள்ள மீண்டும் எங்கேஜ்ட் ஆனால் அந்த நேரம் டோண்டுவின் பேச்சை உற்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தான் அந்த அல்லக்கை, சிறிது நேரம் கழித்து மூர்த்தியின் போன் டோண்டுவுக்கு, டோண்டு கூட்டத்தில் பேசியதையெல்லாம் சொல்லி திட்டியிருக்கின்றான், அல்லக்கையின் மீது சட்டநடவடிக்கை எடுப்பதென்றால் தாங்களே வந்துசாட்சி சொல்வதாக அந்த இரு பதிவர்களும் கூறினார்கள்... இன்னும் நிறைய விசயங்கள் உண்டு, இதை கிளறினால் சாக்கடை நாற்றம் அடிப்பது தான் மிச்சம்....

இதற்கும் ஆபாச பின்னூட்டம் என் குடும்ப போட்டோவை ஊரெல்லாம் அனுப்புவது இதானே செய்யமுடியும் இந்த ஆண்மையில்லாதவன்களால்...

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் சுட்டி தர மறந்து விட்டேன். http://dondu.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு பதிவில் பிண்ணோட்டம் பிரசுரிக்கபடவில்லை:-

டோண்டு சார்,
பாதிக்கபட்ட நீங்கள் உண்மையை மறைக்காமல் சொல்வது மிக்க உதவியாக சக பதிவர்களுக்கு அமையும்

லக்கிலுக் போலி டோண்டுக்கு அல்லைகையாக இருந்தாரா இல்லையா?

பதிவர்களின் தனிபட்ட தகவல்களை போலிக்கு அனுப்பினாரா?

ஸ்ரீனி said...

அண்ணாச்சி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதற்கான பதிலோ அல்லது வருத்தமோ லக்கியிடமிருந்து சத்தியமா வெளிப்படாது. அவர் ‘பிரபலம்’ என்கிற ஒற்றை வார்த்தை போதையில் இருக்கிறார். ‘வினவு புகழ்’ அத்தியாயம் என்று சொல்லி, அந்த அஜால் குஜால் வர்ணனைகளை அப்படியே எடுத்து பதிவாகப் போட்டு பொழப்பு நடத்துகிறார். நிச்சயமா படிக்கிற எல்லொருக்கும் சவீதா அண்ணியோட வனப்பு குறித்த வர்ணனை மட்டும் தான் மனசுல தங்கும். அதுக்காக நாம லக்கிய மட்டும் குற்றம் சொல்ல முடியுமா...குமுதம் ரிப்போர்டரோட தரம் அவ்வளவு தான். லக்கிக்கும் பாவம் பொழப்பு ஓடணும். ஆனா ஒண்ணு...’ரொம்ப நீளம். முடிந்தால் படித்து விட்டு...’ ‘த்ராபையான கருத்து’ ’நன் அவ்வளவு worth இல்ல’ இப்படியெல்லாம் ஒரெ வரியில் பதில் சொல்லி மிக எளிதா அடுத்தவங்களோட கருத்துக்களை உதாசீனப்படுத்தறதுல...லக்கிக்கு நிகர் லக்கிதான்...இப்படிப்பட்ட வார்த்தைப் ப்ரயோகங்களால் மட்டுமே தான் சுஜாதாவாகி விட முடியாது என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.


போலி டோண்டு விவகாரம் பெரும் சண்டையாப் போய்க்கொண்டிருந்த காலத்தில், அது குறித்த ஓசை செல்லா, ரவி, உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். எனக்கென்னவோ உண்மையான நேர்மையான சைபர் க்ரைம் பற்றிய கட்டுரை உங்களுடையது தான் என்று தோன்றுகிறது.

பாரதி said...

நல்ல பதிவு

Anonymous said...

டோண்டு பதிவில் போட்ட பிண்ணோட்டம்

@அது குறித்து எனக்கு ஊகம் இருக்கிறது. கிட்டத்தட்ட அது 100% சரியான ஊகம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்போது கூற விரும்பவில்லை@

அப்போ எப்போதான் சொல்வீங்க?
இவ்வாறு தகவல்களை மறைப்பது குற்றவாளியை மேலும் ஊக்குவிப்பது தான்

iniya said...

Very confuse..

களப்பிரர் - jp said...
This comment has been removed by the author.
களப்பிரர் - jp said...

அண்ணே,
இவ்வளவு நாட்கள் கழித்து போலி டோண்டு விவகாரம் பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

இன்று மதிமாறனின் பதிவில் படித்த வரி: "ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்" !!! இது மூர்த்தி அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் சோகம் போலும்.

நான் கூட நம்ம சைபர் கிரைம் போலீஸ்தான் மூர்த்தியை வலை போட்டு புடித்தார்கள் என்று நினைத்திருந்தேன் !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

வால்பையன் said...

சைபர் கிரைமின் மெத்தனமும்,
சாருவின் மேதாவித்தனமும் மன்னிக்க முடியாதது!

குற்றவாளிகள் மேலும் குற்றம் புரிய இது தான் காரணம்!

Unknown said...

இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா???

சரி உண்மை தமிழன், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... எப்படி உங்களால இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி எழுத முடியுது? ஏதாவது சாப்ட்வேர் வச்சு இருக்கீங்களா? சொல்வதை எழுத?

பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....முடியல....

Arun Kumar said...

அண்ணே கடைசியாக நடந்த உண்மைகள் அனைத்தையும் தெளிவாக எழுதி வீட்டீர்கள்.

மூர்த்தி கொட்டம் அடங்கியதற்க்கு காரணம் உங்களின் முயர்ச்சியோடு ரவி + குழலி இவர்களின் ஒத்துழைப்பும் தான்.

மிக்க நன்றிகள்.

மூர்த்திக்கு பதிவர்களின் தனிபட்ட தகவல்களை தந்தது லக்கிலுக் என்பது தெரிந்த உண்மைதானே.

ஏன் என் தனிபட்ட தகவல் , என் குடும்ப புகைபடங்கள் என மொத்தமும் மூர்த்திக்கு சென்றது இவர் வழியாக தானே.

இதேல்லாம் just sampleதான்.. அடுக்கிகொண்டே போகலாம்.

என்னோட ஆர்குட் முகவரி கூட தப்பவில்லை..)

உங்களுக்கு ஆதாரங்கள் முன்னர் அனுப்பி வைத்து இருக்கிறேன். இன்னமும் என்னிடம் இருக்கிறது.


மூர்த்தியோடு சைபர் க்ரைமில் இருக்க வேண்டியவர் இன்று சைபர் க்ரைம் தொடர்பாக கட்டுரை எழுதுவது தான் விந்தையிலும் விந்தை.

குமுதம் போன்ற பிரபலமான பத்திரிக்கைகள் ஒரு எழுத்தாளருக்கு இதை போல தொடர் எழுத சொல்லும் முன்னர் கொஞ்சம் கூட விசாரிக்க மாட்டார்களா??

சரி விடுங்க பெரிய பெரிய இடங்களில் hacking தடுக்க ஆலோசகர்களாக இருப்பது தில்லாலங்கடி hackersதான்.

இப்படி நினைத்து கொண்டு போக வேண்டியது தான்..

மூர்த்தி ஒரு சைக்கோ அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.. ஆனால் அவனை ஆட்டுவித்தவர்களை என்னவென்று சொல்வது??

சென்ஷி said...

:-)

(இம்மாம் பெரிய பதிவுக்கு இத்தனூண்டு ஸ்மைலி.. ஓவரா இருக்குதோ!)

ஜோசப் பால்ராஜ் said...

//யுவகிருஷ்ணா said...
தலைப்பைப் பார்த்தேன். பதிவின் இடையில் என்னுடைய போட்டோவைப் பார்த்தேன். பதிவு ரொம்ப நீளம். முடிந்தால் படித்து விட்டு, தேவையானால் பதில் சொல்கிறேன் :-) //

ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவருங்க இது.

Anonymous said...

ரொம்ப போர் அடிக்குதுங்க இந்த மேட்டரு. எழுத எதுவும் இல்லைன்னா இதை ஆளு ஆளுக்கு எடுத்துக்கறீங்க. சல்மா அயூப்னு ஏதோ சொல்றாங்க. அது பற்றி நீங்கள் எழுதியதே இல்லையே. ஒருவேளை உங்களுக்கும் அதில் பங்கு இருக்குதா.

Anonymous said...

//தேவையானால் பதில் சொல்கிறேன் :-)//

புதுசா ஒரு பதிவு போட்டிருக்கீங்களே யுவா. அது தான் பதிலா. ரொம்ப மொக்கை பதில்.

Anonymous said...

மூர்த்தி இப்போ சிறையில் களி திங்கிறானா இல்லையான்னும் சொல்லுங்க தெய்வங்களா

வெற்றி-[க்]-கதிரவன் said...

//சென்ஷி said...
:-)

(இம்மாம் பெரிய பதிவுக்கு இத்தனூண்டு ஸ்மைலி.. ஓவரா இருக்குதோ!)


//

-:)

சென்ஷி ithu ellaam tooooooo macchi.

உண்மைத்தமிழன் said...

///யுவகிருஷ்ணா said...
தலைப்பைப் பார்த்தேன். பதிவின் இடையில் என்னுடைய போட்டோவைப் பார்த்தேன். பதிவு ரொம்ப நீளம். முடிந்தால் படித்து விட்டு, தேவையானால் பதில் சொல்கிறேன் :-)///

அது உன் இஷ்டம்..!

உண்மைத்தமிழன் said...

[[[டவுசர் பாண்டி... said...
பதிவை படிச்சு முடிக்கறதுக்குள்ள டவுசர் கழண்டுருச்சு... எல்லாந் தெரிஞ்சும் மூர்த்திய காப்பாத்தீட்டாய்ங்கன்னு ஒத்த வரியில் சொல்லீருக்கலாம்.]]]

எப்படி காப்பாத்துனாங்கன்னா யாராவது கேட்டா என்னன்னு பதில் சொல்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
Irresponsible answer (comment) from yuvakrishna.......]]]

அவருக்குத் தெரிஞ்சதைத்தான் அவர் சொல்வாரு..

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said...
நானே ஒரு பதிவு போடவிருக்கிறேன். அதை இட்டுவிட்டு பிறகு இங்கு வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

என்ன செய்யறது? போட்டுத்தான ஆகணும்..! போடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Muhammad Ismail .H, PHD, said...
இந்த டோண்டு ராகவன் vs டூண்டு மலேசியா மூர்த்தி பிரச்சினை என்னவென புரியாமல் தவித்துக்கொண்டிருந்த பல புதிய பதிவர்களுக்கு இந்த இடுகையை நான் முழுவதும் படித்து பார்க்க பரிந்துரை செய்கின்றேன். :-]]]

நல்லது இஸ்மாயில் ஸார்..

இன்னும் கூடுதல் தகவல்கள் வேண்டுமெனில் டோண்டு ஸாரின் பதிவில் போலி டோண்டு என்ற ஒரு அலமாரி இருக்கும். அதனை திறந்து அனைத்தையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[["அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
நீண்ட பதிவு என்றாலும் எல்லாமே அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.]]]

அகநாழிகை ஸார்..

எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. எல்லாம் பதிவர் நலன் கருதிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால் said...
அண்ணே ரெம்ப நாள் சந்தேகத்த தீர்த்து வச்சிங்க... நன்றி... இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல... ஒரு அட்டேண்டன்சே போட்டு அபீட்டு ஆகிக்கிறேன்.....]]]

ஓகே.. ஆஜரானதை ஏற்றுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...
//நீண்ட பதிவு என்றாலும் எல்லாமே அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.//

ரிப்பிட் போட்டுக்கலாம்.]]]

நன்றி அசோக்..

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...
நச்! ஆனாலும் நீங்களும் ஒரு சில விஷயங்களை (வேண்டுமென்றே?) இங்கே தவிர்த்திருப்பது தெரிகிறது.]]]

காரணத்தோடுதான் மாயவரத்தான் ஸார்..!

தம்பி அவருடைய குருநாதர் பற்றியும் எழுத இருக்கிறாராம். அப்போது அடுத்த பாகத்தை பேசுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
டி.ஆர்.அசோக் அவர்களே. அந்த படத்தை எடுத்தது திரு.மோகன்தாஸ்.]]]

தகவலுக்கு நன்றி ரவி..

[[[ உண்மையாரே.

எனக்கு ரெண்டு ஆப்ஷன்.

ஆப்ஷன் அ.

நட்பு.

ஆப்ஷன் ஆ.

உண்மை.

ஆப்ஷன் இ.

மவுனம்.

ஆப்ஷன் ஈ.

கள்ள மவுனம்.

என்னுடைய ஆப்ஷன் எது என்று தேர்ந்தெடுத்து கொடுத்தால் முழுமையான பின்னூட்டம் எழுதுகிறேன்.]]]

ஆப்ஷன் ஆ

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால் said...
//அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் 'போலி டோண்டு'வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.//

அண்ணே ஒரு பாரா எழுதினதுக்கே அவரு மெயில்ல புடிங்கிடாங்க....
நீங்க ஒரு கட்டுரையே எழுதி இருக்கீங்க.... எதுக்கும் உங்க டவுசர கொஞ்சம் நல்லா பிடிச்சிகோங்க......]]]

எச்சரிக்கைக்கு நன்றி ராஜகோபால்.. கொஞ்சம் கெட்டியாவே புடிச்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
நானெல்லாம் ரொம்ப சின்ன குழ்ந்தை இப்பத்தான் நான் இந்த வலையுலகில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் இருந்தாலும் ஏதோ தப்பு மாதிரித்தான் தெரியுது. யுவக்ருஷ்ணவின் பின்னூட்டம் பொறுப்பற்றத் தனமாகவும், தட்டிக்கழிக்கும் விதமாகவும் இருக்கிறது.]]]

தப்பு மாதிரி இல்லே.. தப்பேதான் பித்தன் அண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Rangs said...
உ த அண்ணே.. யாருக்காக இப்படி கஷ்டப்படறீங்க? என்ன ரெஸ்பான்ஸ்ஸுனு பாருங்க.. பொழப்பப் பாப்போம் வாங்க..
ரங்ஸ்]]]

முடியல ரங்ஸ்.. முடியல..! நல்லா தெரிஞ்ச நாமளே ஒதுங்கி நின்னா எப்படி?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
டோண்டு.., போலி டோண்டு, முத்தமிழ் மன்றம், மூர்த்தி, லக்கிலுக், யுவகிருஷ்ணா... இவங்கல்லாம் யாருங்க.. சரவணன்?!]]]

ஐயோ.. ஐயோ.. இப்படியொரு நேரத்துல இப்படியொரு காமெடி தேவையா..?

பாலா, இதுலயே ஏகப்பட்ட சினிமா கதை இருக்கு.. தொடர்ந்து படிச்சிட்டு வாங்க.. புரியும்..

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
அண்ணே.. பதிவை விட செந்தழல்ரவியின் பின்னுட்டத்தை மிகவும் ரசித்தேன்.. ரவி சூப்பரப்பு]]]

மெய்யாலுமே சூப்பர்தான் தண்டோராஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
எனக்கு அதில் இருந்து ரெண்டு ஆப்ஷன் ஏன் இன்னும் தரலை அவ்வ்வ்வ்வ்...]]]

ஒரே ஒரு ஆப்ஷன்தான்.. குடுத்திட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
அப்படியே சல்மா அயூப் பற்றியும் விளக்கி ஒரு போஸ்டு போட்டுவிடவும். அதுவும் Much Awaited.]]]

வேண்டாம்.. அதனை இழுத்து சம்பந்தப்பட்டவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்..

நம்மவர்களுக்காக அந்த ஆளை விட்டுத் தொலைப்போம்..

மறுபடியும் வந்தால் வைத்துக் கொள்வோம் கச்சேரியை..

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
இப்படிப்பட்ட ஹிஸ்டாரிக்கல் பதிவில் என்னுடைய போட்டோ இடம் பெறாமைக்கும் கடுமையான கண்டனம்.]]]

அச்சச்சோ.. மறந்துட்டேன் தம்பி..

அடுத்த பாகத்துல போட்டுர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
ஜெர்கின் போட்ட ரவி போட்டோவை போட்டு வுட்ருங்க அண்ணே]]]

அடுத்த பாகத்துல கண்டிப்பா.. நேயர் விருப்பத்துக்கு நன்றி தண்டோரா..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

உங்க நியாயமான வருத்தம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.......

போட்டோவில கூட உங்களை பார்த்தா பாவமா இருக்குண்ணே. சாரு, லக்கி ஏன் மூர்த்தி கூட நல்லா போஸ் குடுத்திருக்காங்க...

முருகன்தான் உங்களுக்கு ஒரு நல்லவழி காமிக்கணும்ணே....]]]

உங்க ஆசீர்வாதத்துக்கு நன்றி அனானியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
என்னய்யா இது கொடுமை. அனானி கொமெண்டு இத்தன கம்மியா இருக்கு. எல்லாம் திருந்தீட்டானுவளா?]]]

அதான.. எனக்கும்தான் ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் இருக்கு..!

ஜோ/Joe said...

வலையுலகில் வலை மூலமாக இருக்கும் தொடர்புகளை விட நேரடி தொடர்புகள் ,தொலைபேசி உரையாடல்கள் ,பதிவர் வட்ட அரசியல் ,உள்குத்து ,வெளிக்குத்து எல்லாம் அதிகம் போலிருக்கிறது.

எப்படித் தான் இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குதோ.

அப்புறம் சாருவின் டவுசரை நல்லவே கழட்டிடீங்க :)

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...
இந்த பதிவின் நோக்கமென்ன? நீங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக இரண்டு வரியில் சொல்லியிருக்கலாம்... ஆனால் பாருங்க உங்களுக்கும் ஏதோ தடுக்குது பாருங்க... அதுதான் செந்தழல் ரவி ஆப்ஷன் கேட்டிருப்பதற்கும் காரணமென நினைக்கிறேன்...]]]

இல்லை.. பகுதி, பகுதியாக பேசுவோம் என்று நினைக்கிறேன். நாம் இப்போது கேட்டு நான் பின்பு சொல்லப் போகிறனே என்று சொல்லிவிட்டால் சப்பென்றாகிவிடுமே.. அதனால்தான்.. விட்டுப் புடிப்போம் தம்பியை.. எங்க போயிறப் போறாரு..?

[[[குமுதம் ரிப்போர்ட்டர்தான் முதன் முதலில் மூர்த்தியின் படத்தை போட்டு அவன் சைக்கோ தனத்தை ஊரறிய வைத்தது. மூர்த்தியின் ஆப்புரேஷன் போது சில அல்லக்கைகளையும் சேர்த்து சுலுக்கெடுக்க சொன்னீர்கள், அதை வேண்டாம் விடுங்க என்று தடுத்தவர்கள் பலர், அதில் நானும் ஒருவன்...]]]

அப்போதே மொத்தமாக பெயர்களை வெளியிட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது..!

[[[ஒரு அல்லக்கை டோண்டு வலைப்பதிவர் சந்திப்பில் பேசும்போது தன் மொபைலை ஆன் செய்து வைத்து போலி மூர்த்திக்கு நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தான், அவன் நினைத்துக்கொண்டான் அவனை யாரும் கவனிக்கவில்லை என்று, ஆனால் அவன் பின்னாலிருந்த ஒரு பதிவருக்கு சந்தேகம் தட்ட அவர் அந்த அல்லக்கையின் மொபைல் எண்ணிற்கு தொடர்புகொள்ள அது எங்கேஜ்ட் ஆக இருந்துள்ளது, இந்த முறை மீண்டும் தம் அருகில் இருந்தவரை சாட்சியாக வைத்துக்கொண்டு அல்லக்கையின் மொபைலில் தொடர்புகொள்ள மீண்டும் எங்கேஜ்ட் ஆனால் அந்த நேரம் டோண்டுவின் பேச்சை உற்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தான் அந்த அல்லக்கை, சிறிது நேரம் கழித்து மூர்த்தியின் போன் டோண்டுவுக்கு, டோண்டு கூட்டத்தில் பேசியதையெல்லாம் சொல்லி திட்டியிருக்கின்றான், அல்லக்கையின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதென்றால் தாங்களே வந்து சாட்சி சொல்வதாக அந்த இரு பதிவர்களும் கூறினார்கள்... இன்னும் நிறைய விசயங்கள் உண்டு, இதை கிளறினால் சாக்கடை நாற்றம் அடிப்பதுதான் மிச்சம்....]]]

இவ்வளவு செய்தவர்கள்தான் கிரிமினல்தனம் பற்றி விலாவாரியாக மற்றவர்களுக்குச் சொல்ல முடியும்..

[[[இதற்கும் ஆபாச பின்னூட்டம் என் குடும்ப போட்டோவை ஊரெல்லாம் அனுப்புவது இதானே செய்ய முடியும் இந்த ஆண்மையில்லாதவன்களால்]]]

இந்த ஆண்மையில்லாத்தனத்தை வைத்துத்தான் இது ரத்த பூமி.. பார்த்து பேசு. நிதானமா எழுதுன்னு நமக்கே அட்வைஸ் பண்ணாய்ங்கோண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் சுட்டி தர மறந்து விட்டேன். http://dondu.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

தகுந்த நேரத்தில் தோள் கொடுக்க முன் வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
டோண்டு சார், பாதிக்கபட்ட நீங்கள் உண்மையை மறைக்காமல் சொல்வது மிக்க உதவியாக சக பதிவர்களுக்கு அமையும்

லக்கிலுக் போலி டோண்டுக்கு அல்லைகையாக இருந்தாரா இல்லையா?

பதிவர்களின் தனிபட்ட தகவல்களை போலிக்கு அனுப்பினாரா?]]]

ஆம்..

ஆம்..!

இதுதான் எனது பதில்..

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீனி said...
போலி டோண்டு விவகாரம் பெரும் சண்டையாப் போய்க் கொண்டிருந்த காலத்தில், அது குறித்த ஓசை செல்லா, ரவி, உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். எனக்கென்னவோ உண்மையான நேர்மையான சைபர் க்ரைம் பற்றிய கட்டுரை உங்களுடையதுதான் என்று தோன்றுகிறது.]]]

நன்றி.. காரணம் நான் நேரிலும், அருகிலும் இருந்து தொலைத்துவிட்டேன். அதனால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரதி said...
நல்ல பதிவு]]]

நன்றி பாரதி..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

டோண்டு பதிவில் போட்ட பிண்ணோட்டம்

@அது குறித்து எனக்கு ஊகம் இருக்கிறது. கிட்டத்தட்ட அது 100% சரியான ஊகம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்போது கூற விரும்பவில்லை@
அப்போ எப்போதான் சொல்வீங்க?
இவ்வாறு தகவல்களை மறைப்பது குற்றவாளியை மேலும் ஊக்குவிப்பதுதான்]]]

நிச்சயமாக அவரே சொல்வார் அனானி.. சொல்ல வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[anamika said...

Very confuse..]]]

ஒரு குழப்பமும் இல்லை.. மறுபடியும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[களப்பிரர் - jp said...

அண்ணே, இவ்வளவு நாட்கள் கழித்து போலி டோண்டு விவகாரம் பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

இன்று மதிமாறனின் பதிவில் படித்த வரி:

"ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்"!!!

இது மூர்த்தி அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் சோகம் போலும்.

நான்கூட நம்ம சைபர் கிரைம் போலீஸ்தான் மூர்த்தியை வலை போட்டு புடித்தார்கள் என்று நினைத்திருந்தேன் !!!]]]

நாங்கள் அனைத்துத் தகவல்களையும் திரட்டிக் கொடுத்தோம். அவர்கள் மிச்சம், மீதியை செய்து ஆளை வரவழைத்தார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.]]]

அதனால்தான் வெளிப்படையாக்கினேன் ஐயா..

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
சைபர் கிரைமின் மெத்தனமும்,
சாருவின் மேதாவித்தனமும் மன்னிக்க முடியாதது! குற்றவாளிகள் மேலும் குற்றம் புரிய இதுதான் காரணம்!]]]

உண்மைதான். அவனை ஊர் அறிய, உலகம் அறிய காவல்துறையினர் கைது செய்து வெளிப்படுத்தியிருந்தால் இப்போது அனானி ஆட்டத்தில் ஆட்டம் காட்டும் சில்லறைகள்கூட இந்நேரம் தங்களது வாலைச் சுருட்டியிருப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mãstän said...
இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா???]]]

இன்னும் நிறைய இருக்கு மஸ்தான்..!

[[[சரி உண்மை தமிழன், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... எப்படி உங்களால இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி எழுத முடியுது? ஏதாவது சாப்ட்வேர் வச்சு இருக்கீங்களா? சொல்வதை எழுத?
பகிர்ந்தமைக்கு நன்றி.]]]

என்னைவிட அதிகமான நீளத்துக்கு எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க மஸ்தான்..!

நானெல்லாம் சும்மா ஜூஜூபிபிபி..

உண்மைத்தமிழன் said...

[[[Sri said...
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ். முடியல....]]]

இதுக்கேவா..?!!

இன்னும் நிறைய இருக்கே.. கொஞ்சம் ஸ்டாக் வைச்சுக்குங்க..

Sanjai Gandhi said...

குழலி பெரிய தில்லாலங்கடின்னு தெரியும். ஆனா இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா? :)) குழலி பின்னூட்டத்துல சாரு பத்தி சொல்லி இருக்கிறது சூப்பர்.. :)

உண்மைத்தமிழன் said...

[[[Arun Kumar said...
மூர்த்திக்கு பதிவர்களின் தனிபட்ட தகவல்களை தந்தது லக்கிலுக் என்பது தெரிந்த உண்மைதானே.
ஏன் என் தனிபட்ட தகவல், என் குடும்ப புகைபடங்கள் என மொத்தமும் மூர்த்திக்கு சென்றது இவர் வழியாகதானே.
இதேல்லாம் just sampleதான்.. அடுக்கிகொண்டே போகலாம்.
என்னோட ஆர்குட் முகவரி கூட தப்பவில்லை..) உங்களுக்கு ஆதாரங்கள் முன்னர் அனுப்பி வைத்து இருக்கிறேன். இன்னமும் என்னிடம் இருக்கிறது.
மூர்த்தியோடு சைபர் க்ரைமில் இருக்க வேண்டியவர் இன்று சைபர் க்ரைம் தொடர்பாக கட்டுரை எழுதுவதுதான் விந்தையிலும் விந்தை. குமுதம் போன்ற பிரபலமான பத்திரிக்கைகள் ஒரு எழுத்தாளருக்கு இதை போல தொடர் எழுத சொல்லும் முன்னர் கொஞ்சம்கூட விசாரிக்க மாட்டார்களா??
சரி விடுங்க பெரிய பெரிய இடங்களில் hacking தடுக்க ஆலோசகர்களாக இருப்பது தில்லாலங்கடி hackersதான்.
இப்படி நினைத்து கொண்டு போக வேண்டியதுதான்..
மூர்த்தி ஒரு சைக்கோ அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.. ஆனால் அவனை ஆட்டுவித்தவர்களை என்னவென்று சொல்வது??]]]

அருண் தம்பி..

நீ அனுப்பி வைத்த ஆதாரம் வலுவானது.. பத்திரமாக இருக்கிறது.. நான் நிச்சயம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னால் அதனைப் பார்த்த பின்புதான் சுதாரிக்க முடிந்தது.. அந்த வகையில் நான் உனக்கு நன்றி தெரிவித்தே தீர வேண்டும்..

நன்றிகள்..

இதுவரையிலும் நம்பாதவர்கள் இனிமேலாவது நம்புவார்கள் என்று நம்புகிறேன்..!

மன்னிப்பது மிகச் சிறந்த மன்னிப்புதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...
:-) (இம்மாம் பெரிய பதிவுக்கு இத்தனூண்டு ஸ்மைலி.. ஓவரா இருக்குதோ!)]]]

இருக்குதாவா..? மவனே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோசப் பால்ராஜ் said...

//யுவகிருஷ்ணா said...
தலைப்பைப் பார்த்தேன். பதிவின் இடையில் என்னுடைய போட்டோவைப் பார்த்தேன். பதிவு ரொம்ப நீளம். முடிந்தால் படித்து விட்டு, தேவையானால் பதில் சொல்கிறேன் :-) //

ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவருங்க இது.]]]

உங்களுக்குத் தெரிஞ்சா சரி..!

Sanjai Gandhi said...

//என்னுடைய ஆப்ஷன் எது என்று தேர்ந்தெடுத்து கொடுத்தால் முழுமையான பின்னூட்டம் எழுதுகிறேன்.]]]

ஆப்ஷன் ஆ//

எலேய் மாப்பு.. அண்ணன் வச்சிட்டாருய்யா ஆப்பு.. மருவாதியா உண்மையை எழுது மாமா.. அப்டியே லின்கு அனுப்புங்க :)

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
ரொம்ப போர் அடிக்குதுங்க இந்த மேட்டரு. எழுத எதுவும் இல்லைன்னா இதை ஆளு ஆளுக்கு எடுத்துக்கறீங்க. சல்மா அயூப்னு ஏதோ சொல்றாங்க. அது பற்றி நீங்கள் எழுதியதே இல்லையே. ஒருவேளை உங்களுக்கும் அதில் பங்கு இருக்குதா.?]]]

சல்மா அயூப்னு எழுதுனவரு தான் யோக்கியன்னு சொன்னதே இல்லை.. தப்பை ஒத்துக்கிட்டு வாக்குமூலம் கொடுத்திட்டு வலையுலகத்தை விட்டே காணாமப் போயிருக்காரு அனானி..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
மூர்த்தி இப்போ சிறையில் களி திங்கிறானா இல்லையான்னும் சொல்லுங்க தெய்வங்களா]]]

இல்ல தெய்வமே.. விட்டு வைச்சிருக்காங்க.. அதான் எதுக்குன்னு தெரியலை.

குப்பன்.யாஹூ said...

Really its very long post, u could have made it short and I dont know why so much seriousness on blogs, orkut etc. I do not have much patience to read full post, sorry for that.

With regard to kumudam reporter article, its meant for different age and different readers. IN one of the article lakkylook has written as in 1999 lot of rapes, sexual assaults happened etc.

We should take these blog, kumudam articles etc in a lighter manner. If you see JUnior vikatan they write about Tamil heroes. They write one tamil hero plays with 100 heroines. are all these true, They write just to promote their sales, thats it.

உண்மைத்தமிழன் said...

[[[[பி]-[த்]-[த]-[ன்] said...

//சென்ஷி said...
:-)(இம்மாம் பெரிய பதிவுக்கு இத்தனூண்டு ஸ்மைலி.. ஓவரா இருக்குதோ!)//

-:)

சென்ஷி ithu ellaam tooooooo macchi.]]]

இதெல்லாம் அவனுக்குத் தெரியாது பித்தன் ஸார்..!

அதென்ன வலையுலகத்துல ரெண்டு பித்தன் இருக்கீங்க..?

பெயர் குழப்பம் வந்துரப் போகுது.. ஜாக்கிரதைங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
வலையுலகில் வலை மூலமாக இருக்கும் தொடர்புகளை விட நேரடி தொடர்புகள், தொலைபேசி உரையாடல்கள், பதிவர் வட்ட அரசியல், உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் அதிகம் போலிருக்கிறது.
எப்படித்தான் இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குதோ. அப்புறம் சாருவின் டவுசரை நல்லவே கழட்டிடீங்க :)]]]

இங்கிருக்கும் அரசியல்தான் உங்களுக்கே தெரியுமே..?

நாட்டு அரசியலைவிட மோசமானதாக இருக்கிறது ஜோ..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi said...
குழலி பெரிய தில்லாலங்கடின்னு தெரியும். ஆனா இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா? :))]]]

பின்ன..? ஆனானப்பட்ட போலிக்கே தண்ணி காட்டுன காட்டானாச்சே அண்ணன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி.யாஹூ said...
Really its very long post, u could have made it short and I dont know why so much seriousness on blogs, orkut etc. I do not have much patience to read full post, sorry for that.]]]

அந்தக் கதைகளை தயவு செய்து முதலில் படியுங்கள் ராம்ஜி ஸார்..! படித்தீர்களானால் நீங்களே இப்படி பேச மாட்டீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi said...

//என்னுடைய ஆப்ஷன் எது என்று தேர்ந்தெடுத்து கொடுத்தால் முழுமையான பின்னூட்டம் எழுதுகிறேன்.]]]

ஆப்ஷன் ஆ//

எலேய் மாப்பு.. அண்ணன் வச்சிட்டாருய்யா ஆப்பு.. மருவாதியா உண்மையை எழுது மாமா.. அப்டியே லின்கு அனுப்புங்க :)]]]

லின்க் அனுப்புனாத்தான் உனக்கு எல்லாம் தெரியுமாக்கும்..!

சும்மா நடிக்காத மாப்ளேய்..!

களப்பிரர் - jp said...

அண்ணே, நான் சொல்ல வந்ததே வேற ... நண்பர்களாக காண்பித்து கொண்டவர்களால் தான் அவர் பிடிபட்டார் என்பது.

லக்கி அவர்கள் இதை எழுதினால், அப்புறம் விடாது கருப்புக்கு போட்டியாக விட்டது சிகப்பு எல்லாம் எழுத பட்டது; அது எல்லாம் சைபர் கிரைமுக்கு போகும் முன்னரே அழிக்கப்பட்டது என்பதையும் சொல்லியாகனுமே ... ஆழம் பார்த்து கால் விடாமல்; கனிமொழி வரை பெரிய இட தொடர்பு உள்ளவர்களை பற்றி எழுதி மாட்டிக்கொண்டார்...

அவர் வெளியே இருக்கிறார் என்பதற்காக எல்லாம் வருத்தப்படுவது ரெம்ப ஓவர், அண்ணே !!

வருசத்துக்கு நாப்பதாயிரம் வரை கொலைகள் நடக்கும் நாட்டில் ரெண்டு தனி நபர்களை பற்றி ஆபாசமாக பதிவு எழுதினார் என்பதற்காக எல்லாம் அவர் சிறையில் இருக்கவேண்டிய ஆள் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மூர்த்தி மீது அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் அவர் அரசியல்,சமூக கருத்துகளை எழுதி வந்தவர். இது போல ஆபாச பதிவு எழுத அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை.

gulf-tamilan said...

//அடுத்த பாகத்துல போட்டுர்றேன்..!//
சீக்கிரம் போடவும் !!!

gulf-tamilan said...

me the 100

gulf-tamilan said...

100 !!!

முகமூடி said...

இன்று வரை எங்காவது ”தனது” கருத்தை ஆண்மையோடு லக்கி பதிவு செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்போது எல்லாருக்கும் ”நல்லவனாக” இருப்பதே லக்கியின் நோக்கம் என்பது அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும். அது மற்றவரின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, எதிர்காலத்தில் எவர் மூலமாவது எதாவது அனுகூலம் கிடைக்கும் என்ற சுயலாபத்திற்காக என்பதாகவே அனுமானிக்க முடியும். வெகு சில சந்தர்ப்பங்களில் அவர் வீரம் காட்டியபோது நமக்கு எழுந்த ஆச்சரியங்களை கூட சில மணிநேரங்களிலேயே அவர்களிடம் வழிந்துகொண்டே இளித்து போடும் பின்னூட்டங்கள் மூலம் அழித்துவிடுவார். (நிறைய பேருக்கு போலவே) மூர்த்திக்கும் அடிவருடியாக லக்கி இருந்தார் என்ற என் திடமான நம்பிக்கையை நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அது அவர் இயல்பு. எதிர்கால அனுகூலத்திற்காக தெரிந்தே எழுத்து விபச்சாரம் செய்பவர்களை பற்றி என்ன சொல்லி என்ன. அண்ணே கலக்கிட்டீங்க என்று அவரிடமிருந்து உங்களுக்கு போன் வரும்போது எதிர்காலத்தில் அரசியலில் பெரும் இடத்திற்கு வரப்போகும் லக்கிக்கு என் வாழ்த்துக்ளை தெரிவித்து விடுங்கள்.

முகமூடி said...
This comment has been removed by the author.
முகமூடி said...

// வருசத்துக்கு நாப்பதாயிரம் வரை கொலைகள் நடக்கும் நாட்டில் ரெண்டு தனி நபர்களை பற்றி ஆபாசமாக பதிவு எழுதினார் என்பதற்காக எல்லாம் அவர் சிறையில் இருக்கவேண்டிய ஆள் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மூர்த்தி மீது அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் அவர் அரசியல்,சமூக கருத்துகளை எழுதி வந்தவர். இது போல ஆபாச பதிவு எழுத அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை. //

களப்பிரர்.. இப்படி நீங்கள் எழுதுவதை பார்த்தால் எனக்கு உங்கள் குடும்பத்தை இழுத்து ஆபாச பதிவு எழுத தூண்டும் வகையில்தான் என் மூளை அமைப்பு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். உடனே நான் என்ன செய்கிறேன், ஒற்றை எழுத்து மட்டும் மாற்றி உங்கள் மெயில் ஐ.டி மாதிரியே ஒன்றை உருவாக்கி உங்கள் தெரிந்தவருக்கு மெயில் அனுப்பி உங்கள் குடும்பத்தின் பெண்கள் இருக்கும் நிழற்படத்தை திருடிவிடுகிறேன். அப்புறம் உங்கள் மனைவி அல்லது மகள் முகத்தை மட்டும் எடுத்து வலையில் கிடைக்கும் ஒரு நிர்வாண பெண்ணின் உடம்போடு ஒட்டி அதை போஸ்டர் அடித்து அதில் உங்கள் பெண் உங்களோடு உடலுறவு கொள்கிறால் என்பதாக அணு அணுவாக விவரித்து ஒரு காமக்கதை எழுதி வெளியிட்டால் நீங்கள் நாப்பதாயிரம் கொலைகள் பற்றி யோசிப்பீர்களா அல்லது உங்கள் மகள்/மனைவி நிர்வாணப்படத்தையா? இதை மூர்த்தி செய்தான் என்பதற்கு ஆதாரம் நிறைய பேரிடம் இருக்கிறது. எப்போதிருந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் புகைப்படங்கள் வெளியிடுவது தவிர்க்கப்படுகிறது என்பது தெரியுமா. பச்சை குழந்தைகளை ரேப் செய்பவன் கூட தூண்டப்பட்டே செய்கிறான். அவன் நியூரான் அமைப்பு அப்படி. அவனுக்கும் போய் வக்காலத்து வாங்குங்கள். தூண்டப்பட்டார், புடுங்கப்பட்டார் என்றெல்லாம் டமில் ஹீரோ பாணியில் ஊருக்கு உபதேசம் செய்யாமல் போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியை பாருங்கள்.

களப்பிரர் - jp said...

முகமூடி,

நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவரே. எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை.

ஆனால், அவர் செய்ததில் , விட்டது சிகப்பு போன்ற பதிவு எழுதியவர்களின் தூண்டுதலும் பங்கு வகித்திருக்கிறது. அவைகள் எல்லாம் யார் உருவாக்கியது ??

இலவசக்கொத்தனார் said...

களபிரர் அண்ணா, நாப்பதாயிரம் கொலை சரிங்கண்ணா. அப்போ பிக்பாக்கெட் அலவுடாண்ணா? பீரோ புல்லிங் கூட ஓக்கேதானாண்ணா? கொலை செய்யாமல் வெறும் ரேப் செஞ்சா அவனுக்கு ஜெயில் வேணுமா வேண்டாமாண்ணா? சத்யம் மாதிரி பெரிய லெவலில் பணம் திருடினா அப்போ உதவித்தொகை எதாவது தந்து அவங்களை என்கரேஜ் பண்ணனுமாண்ணா?

பேசாம எது எதுக்கு என்ன தண்டனைன்னு கருடபுராணம் மாதிரி ஒரு லிஸ்ட் போட்டுக் குடுத்தீங்கன்னா படிக்கிற எங்களுக்கும், குடுக்கற நீதிபதிகளுக்கும், பத்திரிக்கையிலே தொடர் எழுதறதுக்கும் உதவியா இருக்குண்ணா. என்ன நான் சொல்லறது? சரிதானுங்களேண்ணா.

களப்பிரர் - jp said...

எது எதுக்கு என்ன தண்டனைனு எனக்கு தெரியாது பாஸ் !! ஆனா, அவருக்கு ஏற்கனவே கொடுத்திருக்கிற தண்டனை (வேலை போச்சு, அலை கிழிப்பு எல்லாம் ) அதிகம் - அவருக்கு போட்டியாக பதிவு எழுதியவர்கள் அனுபவிக்கும் தண்டனையை ஒப்பிட்டால் !!!!

Anonymous said...

கிட்டத் தட்ட நான்காண்டு காலமாக வலையுலகில் வாசித்து (மட்டுமே) வருகிறேன். டோண்டு சார், முகமூடி, உண்மைத் தமிழன், மாயவரத்தான், செந்தழல் ரவி, இ. கொ, மா சி என்று அனைவரையும் விடாமல் படித்திருக்கிறேன். போலி எபிசோட் ஆரம்பம் முதல் இறுதிவரை நடை பெற்ற விஷயங்களையும் படித்திருக்கிறேன்.

உ. த அண்ணன், இப்போது திடீரென்று இந்தப் பதிவு போட்டதன் காரணம் என்ன? லக்கி உண்மையை எழுதவில்லையென்றா? முதல் மரியாதை சிவாஜி சொல்வது மாதிரி "ஆமாங்கய்யா, லக்கி அல்லக்கை தான்" என்று டோண்டு சாரும் சொல்லவில்லை, உ த அண்ணனும் சொல்லவில்லை. காரணமும் தெரியவில்லை

நடந்த அடிதடிகளில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துக்குமரன் (சைக்கிள் நினைவுகள் எழுதியவர்) இவர்கள் பெயர்கள் சுத்தமாக மறக்கடிக்கப் பட்டது ஏன்?

உ த சார், நீங்கள் எழுதிய "ஆ தங்கம்" என்ற பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு ஃபோன் செய்து பேசியவன் நான். எனக்கென்று தனியாக வலைப்பூ கிடையாது என்பது உபரிச் செய்தி.

யட்சன் said...

திரு.மூர்த்தி என்பவர் தமிழ்வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது. இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.

நம்முடைய மூத்த பதிவருக்கும் மூர்த்தியின் புதிய அவதாரம் தனது வலையுலக வளர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் தேவைபட்டதால்....அவரே மூர்த்திக்கு போலி டோண்டு என்கிற நாமகரணமும் செய்வித்து மூர்த்தியை கொம்பு சீவினார் .

திருவாளர் மூர்த்தியால், மிக மோசமாயும், கேவலமாயும் தாக்கப்பட்டவர் பெரியவர் டோண்டுவாகத்தானிருக்க முடியும். பாவம் அப்போதெல்லாம் அவருக்கு காவல்துறை அலுவலகம் எந்த திசையில் இருக்கிறதென தெரியாது போயிருக்கிறது. மூர்த்தியை தானே கண்டுபிடிக்கப் போவதாயும், அதற்கென யுக்தி, உத்தி என தன் சார்ந்த ஒரு குழுவினை உருவாக்கவும், அவர்களுக்கு பிதாமகனாய் செயல்பட்டு தனக்கு புகழ்தேடிக்கொண்டார் என்பதை அப்போதைய தமிழ் வலைப்பதிவின் பங்களிப்பாளார்கள் அனைவரும் அறிவர்.

யட்சன் said...

தனக்கும் தான் சார்ந்தோருக்கும் ஏற்பட்ட இந்த பாதிப்புகளையும், அசிங்கங்களையும் ஏதோ தர்மயுத்தம் மாதிரியும், இவர் அதை காக்கப் புறப்பட்ட புரட்சியாளர் மாதிரியான பில்ட்டப்புகளினால், ஆத்திரத்தில் அறிவிழந்த மூர்த்தியும் பெரியவரின் பதிவுகளில் பின்னூட்டமிடும் சக பதிவர்களையும் வாசகர்களையும் குறிவைத்து வெறிநாய் போல விரட்டத்துவங்கினார்...இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவியான சக பெண் பதிவர்கள்தான்..... அதிலும் பிராமணர்கள் என தெரிந்தால் மூர்த்தியின் ஆபாசமும், அர்ச்சனையும் எல்லை மீறியது.

தனிமனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை....குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு....எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி....தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.

அனானிகளை கேவலமாய் விமர்சித்துவந்த இந்த பெரியவர், டஜன் கணக்கில் போலி பதிவுகளை வைத்திருந்தார் என்பதும், கையும் களவுமாய் மாட்டி சந்தி சிரித்தபின்னர் இல்லாத குட்டிக்கரணம் போட்டது சரித்திரம். இவருடைய அடிப்பொடியொருவர், சக பெண் பதிவர் ஒருவரை பற்றி எழுதிய ஆபாசப்பதிவிட்டு, கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த போது, தனது சிஷ்யருக்காய் இவர் அடித்த சப்பைக்கட்டுகளும், சல்ஜாப்புகளும் இப்போது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள்.

யட்சன் said...

இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது.பாராட்டும் வாழ்த்துகளும் இந்த இளையவர்களுக்கே போய்ச்சேர வேண்டும். நம் பெரியவருக்கு மூர்த்தியை முடக்கும் எண்ணம் எக்காலத்திலும் இருந்ததில்லை....போலி டோண்டு இல்லாவிட்டால் தான் காணாமல் போய்விடுவோம் என்பது மாதிரியான நினைப்பில், தொடர்ச்சியாய் அதைச்செய்கிறேன்...இதைச்செய்கிறேன் என சவடால் விட்டுக்கொண்டே, மலிவான விளம்பரங்களுக்காய் மூர்த்தியின் திருவிளையாடல்களை ஊக்குவித்தார் என்பதுதான் உண்மை.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் அவசியம்தான்....ஆனால் குற்றவாளியை தொடர்ந்து குற்றம் செய்ய தூண்டியவரை என்ன செய்யலாம்.இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது.(முந்தைய வரி எந்த பதிவிலிருந்தும் காப்பியடிக்கப்படவில்லை...நானே எழுதியதாக்கும் :-) )

Anonymous said...

டோண்டு மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆபாச தாக்குதலை நேர்கொண்டு அவர் செய்த போர் பாராட்டபட வேண்டியது.

மூர்த்தியோடு நேரடி தொடர்பிலிருந்த குழலி, கோவி கண்ணன் ஆகியோர் பிரச்சினை பெரிதானபோது மூர்த்தியை கைகழுவிவிட்டு விட்டார்கள்.

திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கிய அத்தனை பேருமே போலி டோண்டுவுக்கு அல்லக்கையாக செயல்பட்டவர்கள்.

ரவி போலியின் தீவிர அல்லக்கையாக இருந்ததுடன் டோண்டுவை பற்றி ஆபாச பதிவு எழுதியதும் எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த ரவியே போலி மீது குற்றம்சாட்டுவது வேடிக்கை வினோதம்.

Anonymous said...

உண்மைத்தமிழன் அண்ணன்,
டோண்டுவும், நீங்களும், இன்னும் பலரும் மூர்த்தியால் பாதிக்கப்பட்டது உண்மை. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி. அதேபோல் வேறு சிலரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையெல்லாம் டோண்டு தாங்கிப்பிடிக்கிறார். நீங்கள் டோண்டுவுக்கு வால் பிடிக்கிறீர்கள்.

உங்களுக்கும், உலகத்துக்கும் தெரிந்த ஆபாசப் பேர்வழி சல்மா அயூப் சயராமனை பாதுகாக்க டோண்டு மேற்கொள்ளும் தகிடுத்தங்களைப் பாருங்கள். தன்னுடைய அரசியல் எதிரிகளைப் அவதூறுப் பிரச்சாரம் செய்துவந்த திருமலை டோண்டுவின் நல்ல நண்பராம். பலரை ஆபாசமாகத் தாக்கி எழுதி வந்த இணையக் குசும்பனும், அடாவடியாகத் தாக்கி எழுதிவந்த முகமூடியும் நல்ல பதிவர்களாம், டோண்டு சர்டிபிகேட் கொடுக்கிறார்.

இன்னும் டோண்டுவுக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் தன் தந்தைக்கே உபதேசம் செய்த முருக பெருமான் தான் விரைவில் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும்.

[இது போன்ற பின்னூட்டத்தை அனுப்பினால் டோண்டு வெளியிட மறுக்கிறார். அதற்கு முன் அனுப்பிய இன்னொரு பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை. எப்பவும் போல டோண்டுவிடம் தனக்கும், தன் நண்பர்களுக்கும் ஒரு நியாயம். பிறருக்கு ஒரு நியாயம். அருள் கூர்ந்து உங்கள் பதிவில் வெளியிட்டால் உண்மைத்தமிழன் அண்ணனும், மற்றவர்களும் படிப்பார்கள்.]

Anonymous said...

இன்னைக்கு உ த அண்ணன் நல்லவே கல்லாக் கட்டுறார்.

இன்னைக்கு உ த அண்ணன் நல்லவே கல்லாக் கட்டுறார்.

107 வது கொமண்டு (நன்றி செ ரவி) போட்ட அனானி.

107 ஐப் பார்த்து 108, 109 மற்றும் 110 வது கொமண்டுகளைப் போட்டவர் யார்?

அது சரி(18185106603874041862) said...

என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் எனக்கு தெளிவாக தெரியாததால், எஸ்கேப்....

ஆனால், கட்டுரை சில சம்பவங்களை தெளிவாக்குகிறது...அதற்காக நன்றி!

உண்மைத்தமிழன் said...

///களப்பிரர் - jp said...

அண்ணே, நான் சொல்ல வந்ததே வேற ... நண்பர்களாக காண்பித்து கொண்டவர்களால்தான் அவர் பிடிபட்டார் என்பது. லக்கி அவர்கள் இதை எழுதினால், அப்புறம் விடாது கருப்புக்கு போட்டியாக விட்டது சிகப்பு எல்லாம் எழுதபட்டது; அது எல்லாம் சைபர் கிரைமுக்கு போகும் முன்னரே அழிக்கப்பட்டது என்பதையும் சொல்லியாகனுமே ... ஆழம் பார்த்து கால் விடாமல்; கனிமொழிவரை பெரிய இட தொடர்பு உள்ளவர்களை பற்றி எழுதி மாட்டிக்கொண்டார்... அவர் வெளியே இருக்கிறார் என்பதற்காக எல்லாம் வருத்தப்படுவது ரெம்ப ஓவர், அண்ணே!! வருசத்துக்கு நாப்பதாயிரம் வரை கொலைகள் நடக்கும் நாட்டில் ரெண்டு தனி நபர்களை பற்றி ஆபாசமாக பதிவு எழுதினார் என்பதற்காக எல்லாம் அவர் சிறையில் இருக்கவேண்டிய ஆள் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மூர்த்தி மீது அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் அவர் அரசியல்,சமூக கருத்துகளை எழுதி வந்தவர். இது போல ஆபாச பதிவு எழுத அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை.///

களப்பிரர் ஸார்..!

உங்கள் பாஷையில் சொல்லப் போனால் கொலை என்றாலும் சாதாரண கொலைதானே என்கிறீர்கள்..

உங்கள் மனோபாவத்தை நான் தடை செய்ய முடியாது..

இந்த மாதிரியான சைக்கோக்கள் மன ரீதியாக திருந்தாதவரைக்கும் பொதுஜனங்கள் மத்தியில் புழங்கவிட்டால் மக்களுக்குத்தான் ஆபத்து. அதனால்தான் அவர் வெளியில் இருக்கிறாரே என்று வருத்தப்படுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

///gulf-tamilan said...
//அடுத்த பாகத்துல போட்டுர்றேன்..!//
சீக்கிரம் போடவும் !!!]]]

நான் என்ன சினிமா கதையா சொல்றேன்.. உடனே போடுறதுக்கு..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[gulf-tamilan said...

100 !!!]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...
இன்று வரை எங்காவது ”தனது” கருத்தை ஆண்மையோடு லக்கி பதிவு செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்போது எல்லாருக்கும் ”நல்லவனாக” இருப்பதே லக்கியின் நோக்கம் என்பது அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும். அது மற்றவரின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, எதிர்காலத்தில் எவர் மூலமாவது எதாவது அனுகூலம் கிடைக்கும் என்ற சுயலாபத்திற்காக என்பதாகவே அனுமானிக்க முடியும். வெகு சில சந்தர்ப்பங்களில் அவர் வீரம் காட்டியபோது நமக்கு எழுந்த ஆச்சரியங்களை கூட சில மணிநேரங்களிலேயே அவர்களிடம் வழிந்துகொண்டே இளித்து போடும் பின்னூட்டங்கள் மூலம் அழித்துவிடுவார். (நிறைய பேருக்கு போலவே) மூர்த்திக்கும் அடிவருடியாக லக்கி இருந்தார் என்ற என் திடமான நம்பிக்கையை நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். அது அவர் இயல்பு. எதிர்கால அனுகூலத்திற்காக தெரிந்தே எழுத்து விபச்சாரம் செய்பவர்களை பற்றி என்ன சொல்லி என்ன. அண்ணே கலக்கிட்டீங்க என்று அவரிடமிருந்து உங்களுக்கு போன் வரும்போது எதிர்காலத்தில் அரசியலில் பெரும் இடத்திற்கு வரப்போகும் லக்கிக்கு என் வாழ்த்துக்ளை தெரிவித்து விடுங்கள்.]]]

கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன் அண்ணே..

உங்களை மாதிரியே நானும்தான் ஏமாந்து, ஏமாந்து இனியும் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான் இதனை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...

//வருசத்துக்கு நாப்பதாயிரம் வரை கொலைகள் நடக்கும் நாட்டில் ரெண்டு தனி நபர்களை பற்றி ஆபாசமாக பதிவு எழுதினார் என்பதற்காக எல்லாம் அவர் சிறையில் இருக்கவேண்டிய ஆள் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மூர்த்தி மீது அனுதாபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் அவர் அரசியல்,சமூக கருத்துகளை எழுதி வந்தவர். இது போல ஆபாச பதிவு எழுத அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை. //

களப்பிரர்.. இப்படி நீங்கள் எழுதுவதை பார்த்தால் எனக்கு உங்கள் குடும்பத்தை இழுத்து ஆபாச பதிவு எழுத தூண்டும் வகையில்தான் என் மூளை அமைப்பு உள்ளது என்று வைத்துக்கொள்வோம். உடனே நான் என்ன செய்கிறேன், ஒற்றை எழுத்து மட்டும் மாற்றி உங்கள் மெயில் ஐ.டி மாதிரியே ஒன்றை உருவாக்கி உங்கள் தெரிந்தவருக்கு மெயில் அனுப்பி உங்கள் குடும்பத்தின் பெண்கள் இருக்கும் நிழற்படத்தை திருடிவிடுகிறேன். அப்புறம் உங்கள் மனைவி அல்லது மகள் முகத்தை மட்டும் எடுத்து வலையில் கிடைக்கும் ஒரு நிர்வாண பெண்ணின் உடம்போடு ஒட்டி அதை போஸ்டர் அடித்து அதில் உங்கள் பெண் உங்களோடு உடலுறவு கொள்கிறால் என்பதாக அணு அணுவாக விவரித்து ஒரு காமக்கதை எழுதி வெளியிட்டால் நீங்கள் நாப்பதாயிரம் கொலைகள் பற்றி யோசிப்பீர்களா அல்லது உங்கள் மகள்/மனைவி நிர்வாணப் படத்தையா? இதை மூர்த்தி செய்தான் என்பதற்கு ஆதாரம் நிறைய பேரிடம் இருக்கிறது. எப்போதிருந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் புகைப்படங்கள் வெளியிடுவது தவிர்க்கப்படுகிறது என்பது தெரியுமா. பச்சை குழந்தைகளை ரேப் செய்பவன் கூட தூண்டப்பட்டே செய்கிறான். அவன் நியூரான் அமைப்பு அப்படி. அவனுக்கும் போய் வக்காலத்து வாங்குங்கள். தூண்டப்பட்டார், புடுங்கப்பட்டார் என்றெல்லாம் டமில் ஹீரோ பாணியில் ஊருக்கு உபதேசம் செய்யாமல் போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியை பாருங்கள்.]]]

நச் பதில் அண்ணே..

களப்பிரர் அண்ணன் இந்த விஷயத்தில் கலப்படமாக தனது எண்ணங்களை உருவாக்கி குழப்பத்தில் இருக்கிறார் போல் தெரிகிறது..!

அவரவர்க்கு பட்டால்தான் தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[களப்பிரர் - jp said...
முகமூடி, நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவரே. எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை.]]]

களப்பிரர் அண்ணே இந்த ஒரு பாராவிலேயே இந்த விஷயத்தில் உங்களது தொலைநோக்குப் பார்வை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அவர் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவரே என்று நீங்கள் சொல்லியிருப்பது நீங்கள் இந்த போலிகள் விஷயத்தில் ஜீரோ என்று அர்த்தமாகிறது..

வேண்டாம்.. விட்ருங்க..!

[[[ஆனால், அவர் செய்ததில், விட்டது சிகப்பு போன்ற பதிவு எழுதியவர்களின் தூண்டுதலும் பங்கு வகித்திருக்கிறது. அவைகள் எல்லாம் யார் உருவாக்கியது ??]]]

எனக்குத் தெரியவில்லை.

ILA (a) இளா said...

போன வருசம் நான் ஒரு பதிவு போட்டேன், ஒரு வாரம் பதிவுலகம் நாறுச்சு, இந்த வருசம் நீங்க.. அவ்வளவுதான். புது மக்களும் தெரிஞ்சிக்கட்டுமே.

உண்மைத்தமிழன் said...

[[[இலவசக்கொத்தனார் said...
களபிரர் அண்ணா, நாப்பதாயிரம் கொலை சரிங்கண்ணா. அப்போ பிக்பாக்கெட் அலவுடாண்ணா? பீரோ புல்லிங் கூட ஓக்கேதானாண்ணா? கொலை செய்யாமல் வெறும் ரேப் செஞ்சா அவனுக்கு ஜெயில் வேணுமா வேண்டாமாண்ணா? சத்யம் மாதிரி பெரிய லெவலில் பணம் திருடினா அப்போ உதவித் தொகை எதாவது தந்து அவங்களை என்கரேஜ் பண்ணனுமாண்ணா?

பேசாம எது எதுக்கு என்ன தண்டனைன்னு கருடபுராணம் மாதிரி ஒரு லிஸ்ட் போட்டுக் குடுத்தீங்கன்னா படிக்கிற எங்களுக்கும், குடுக்கற நீதிபதிகளுக்கும், பத்திரிக்கையிலே தொடர் எழுதறதுக்கும் உதவியா இருக்குண்ணா. என்ன நான் சொல்லறது? சரிதானுங்களேண்ணா.]]]

கொத்ஸ்.. கோபத்துல பொங்குறீங்கன்னு நினைக்கிறேன்..

உண்மைதான்.. களப்பிரர் அண்ணன் சும்மா வேடிக்கை பார்த்திட்டே இருந்தவர்ன்றதால அவருக்கு எந்த பீலிங்கும் வர வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன்.

அதுதான் இப்படி பேசுறார்..!

உண்மைத்தமிழன் said...

[[களப்பிரர் - jp said...
எது எதுக்கு என்ன தண்டனைனு எனக்கு தெரியாது பாஸ் !! ஆனா, அவருக்கு ஏற்கனவே கொடுத்திருக்கிற தண்டனை (வேலை போச்சு, அலை கிழிப்பு எல்லாம் ) அதிகம் - அவருக்கு போட்டியாக பதிவு எழுதியவர்கள் அனுபவிக்கும் தண்டனையை ஒப்பிட்டால் !!!!]]]

போட்டியாக பதிவு எழுதியவர்கள் என்ன செய்தார்கள்..?

யாருடைய தாயை, யாருடைய மனைவியை, யாருடைய சகோதரிகளை விபச்சாரிகள் என்று எழுதினார்கள். புகைப்படம் போட்டுக் காண்பித்தார்கள்.. காமக்கதைகளை எழுதி வைத்தார்கள்..

களப்பிரர் சும்மா வக்காலத்து வாங்கிக்கிட்டே போகாதீங்க..! ரொம்ப கோபம் வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
கிட்டத்தட்ட நான்காண்டு காலமாக வலையுலகில் வாசித்து (மட்டுமே) வருகிறேன். டோண்டு சார், முகமூடி, உண்மைத் தமிழன், மாயவரத்தான், செந்தழல் ரவி, இ. கொ, மா சி என்று அனைவரையும் விடாமல் படித்திருக்கிறேன். போலி எபிசோட் ஆரம்பம் முதல் இறுதிவரை நடைபெற்ற விஷயங்களையும் படித்திருக்கிறேன்.]]]

ரொம்ப சந்தோஷம் அனானி..

[[[உ. த அண்ணன், இப்போது திடீரென்று இந்தப் பதிவு போட்டதன் காரணம் என்ன? லக்கி உண்மையை எழுதவில்லையென்றா?]]]

ஆமாம்.. செய்தவன் மூர்த்தி என்பது தெரிந்திருக்க அவர் அதை மூடி மறைத்து யாரோ ஒரு கிரிமினல் என்று பெயர் குறிப்பிடாமல் சொல்லிவிட்டு எஸ்கேப்பாகுகிறாரே.. அதனால்தான்..!

[[[முதல் மரியாதை சிவாஜி சொல்வது மாதிரி "ஆமாங்கய்யா, லக்கி அல்லக்கை தான்" என்று டோண்டு சாரும் சொல்லவில்லை, உ த அண்ணனும் சொல்லவில்லை. காரணமும் தெரியவில்லை.]]]

இல்லை. நான் எப்போதோ சொல்லிவிட்டேன். ஏன் இதற்கு முந்தைய டோண்டு ஸாரின் பதிவிலும் சொல்லியிருக்கிறேன் அனானி.

[[[நடந்த அடிதடிகளில் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துக்குமரன் (சைக்கிள் நினைவுகள் எழுதியவர்) இவர்கள் பெயர்கள் சுத்தமாக மறக்கடிக்கப்பட்டது ஏன்?]]]

மகேந்திரன் வகையறாக்கள் அன்றோடு தங்களது தளத்துக்கு பூட்டுப் போட்டுவிட்டு ஓடி விட்டார்கள். போலி டோண்டுவி்ன் வரலாறு எழுதப்படும்போது அவர்களது பெயரும் நிச்சயம் வரும்..

[[[உ த சார், நீங்கள் எழுதிய "ஆ தங்கம்" என்ற பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு ஃபோன் செய்து பேசியவன் நான். எனக்கென்று தனியாக வலைப்பூ கிடையாது என்பது உபரிச் செய்தி.]]]

மிக்க நன்றி மறவாமல் இருப்பதற்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[யட்சன் said...
திரு.மூர்த்தி என்பவர் தமிழ் வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது.]]]

எல்லா படுபாதக கொலைகாரர்களும் பலே கிரிமினல் மூளை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

[[[இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.]]]

ஒரு மனிதனை கொலை செய் என்று எவரும் சொல்லி அவன் கொலை செய்தால் அவன் அடியாளாகத்தான் இருப்பான்.. அடியாள் என்றால் அடிமுட்டாள்தான். நீங்கள்தான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டீர்களே மூர்த்தி பெரும் அறிவாளி என்று.. லாஜிக் இடிக்கிறதே யட்சன்..

[[[நம்முடைய மூத்த பதிவருக்கும் மூர்த்தியின் புதிய அவதாரம் தனது வலையுலக வளர்ச்சிக்கும், பரபரப்பிற்கும் தேவைபட்டதால் அவரே மூர்த்திக்கு போலி டோண்டு என்கிற நாமகரணமும் செய்வித்து மூர்த்தியை கொம்பு சீவினார்.]]]

யட்சன் கோபத்தைக் கிளறாதீங்க.. ஒட்டு மொத்தமாக தான் ஆரம்பித்து வைத்த 16 காமத்தளங்களின் பெயரையும் சொல்லி அதனுடைய லாகின், பாஸ்வேர்டையும் எழுதிக் கொடுத்துவிட்டு, மறுநாள் அத்தனையையும் அழித்துவிட்டு ஒப்புதல் வாக்குமூலமா கைப்பட எழுதிக் கொடுத்திருக்கிறார் போலி டோண்டு என்னும் மூர்த்தி.

சும்மா உளறாதீங்க ஸார்..

[[[திருவாளர் மூர்த்தியால், மிக மோசமாயும், கேவலமாயும் தாக்கப்பட்டவர் பெரியவர் டோண்டுவாகத்தானிருக்க முடியும். பாவம் அப்போதெல்லாம் அவருக்கு காவல்துறை அலுவலகம் எந்த திசையில் இருக்கிறதென தெரியாது போயிருக்கிறது. மூர்த்தியை தானே கண்டுபிடிக்கப் போவதாயும், அதற்கென யுக்தி, உத்தி என தன் சார்ந்த ஒரு குழுவினை உருவாக்கவும், அவர்களுக்கு பிதாமகனாய் செயல்பட்டு தனக்கு புகழ் தேடிக் கொண்டார் என்பதை அப்போதைய தமிழ் வலைப்பதிவின் பங்களிப்பாளார்கள் அனைவரும் அறிவர்.]]]

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ல. அதான் இப்போ வந்திருச்சு. கூட்டா சேர்ந்து பிடிச்சாச்சு. போதுமா..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[யட்சன் said...
தனக்கும் தான் சார்ந்தோருக்கும் ஏற்பட்ட இந்த பாதிப்புகளையும், அசிங்கங்களையும் ஏதோ தர்மயுத்தம் மாதிரியும், இவர் அதை காக்கப் புறப்பட்ட புரட்சியாளர் மாதிரியான பில்ட்டப்புகளினால், ஆத்திரத்தில் அறிவிழந்த மூர்த்தியும் பெரியவரின் பதிவுகளில் பின்னூட்டமிடும் சக பதிவர்களையும் வாசகர்களையும் குறிவைத்து வெறிநாய் போல விரட்டத் துவங்கினார்...இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது அப்பாவியான சக பெண் பதிவர்கள்தான். அதிலும் பிராமணர்கள் என தெரிந்தால் மூர்த்தியின் ஆபாசமும், அர்ச்சனையும் எல்லை மீறியது.]]]

அதனாலதான் அவன் மனிதனே இல்லை என்றும், சைக்கோ என்றும் சொல்கிறோம்..

[[[தனி மனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு.]]]

ஏன் உங்க மூர்த்தி சொந்த புத்தியெல்லாம் கிடையவே கிடையாதா..?

[[[எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.]]]

இப்போது நான்கூடத்தான் இதை எழுதியிருக்கிறேன். நான் என்ன விளம்பரத்திற்காகவா எழுதியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[யட்சன் said...
இன்றைக்கு கூட மூர்த்தி முடக்கப்பட்டது, செந்தழல்ரவி, ஓசைசெல்லா போன்ற இளைய்வர்களால்தான் என்பதை மறந்து விடக்கூடாது. பாராட்டும் வாழ்த்துகளும் இந்த இளையவர்களுக்கே போய்ச் சேர வேண்டும்.]]]

நானும் வாழ்த்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
டோண்டு மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆபாச தாக்குதலை நேர்கொண்டு அவர் செய்த போர் பாராட்டபட வேண்டியது.
மூர்த்தியோடு நேரடி தொடர்பிலிருந்த குழலி, கோவி கண்ணன் ஆகியோர் பிரச்சினை பெரிதானபோது மூர்த்தியை கைகழுவிவிட்டு விட்டார்கள்.
திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கிய அத்தனை பேருமே போலி டோண்டுவுக்கு அல்லக்கையாக செயல்பட்டவர்கள். ரவி போலியின் தீவிர அல்லக்கையாக இருந்ததுடன் டோண்டுவை பற்றி ஆபாச பதிவு எழுதியதும் எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த ரவியே போலி மீது குற்றம்சாட்டுவது வேடிக்கை வினோதம்.]]]

ரவி விஷயத்தில் அவரே என்ன நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லிவிட்டார்.. ஸோ நான் அதை முழுமையாக நம்புகிறேன்..!

திராவிடத் தமிழர்களில் சிலர் போலிக்கு அல்லக்கையாகவும், பலர் டோண்டு இருக்கின்றவரையில் போலி டோண்டுவும் இருக்கட்டுமே என்கிற குரூர எண்ணத்தில் மெளனமாக ஒதுங்கியும் இருந்தார்கள் என்பதுதான் எனது எண்ணம்.

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

இன்னைக்கு உ த அண்ணன் நல்லவே கல்லாக் கட்டுறார்.

இன்னைக்கு உ த அண்ணன் நல்லவே கல்லாக் கட்டுறார்.

107 வது கொமண்டு (நன்றி செ ரவி) போட்ட அனானி.

107 ஐப் பார்த்து 108, 109 மற்றும் 110 வது கொமண்டுகளைப் போட்டவர் யார்?]]]

எனக்கே தோணாத அளவுக்கு நடுராத்திரில உக்காந்து யார்யா இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கிறது..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...
என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் எனக்கு தெளிவாக தெரியாததால், எஸ்கேப். ஆனால், கட்டுரை சில சம்பவங்களை தெளிவாக்குகிறது. அதற்காக நன்றி!]]]

வருகைக்கு நன்றி அதுசரி.. தெரிஞ்சுக்கிட்டீங்கள்லே.. பத்திரமா ஞாபகத்துல வைச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA said...
போன வருசம் நான் ஒரு பதிவு போட்டேன், ஒரு வாரம் பதிவுலகம் நாறுச்சு, இந்த வருசம் நீங்க.. அவ்வளவுதான். புது மக்களும் தெரிஞ்சிக்கட்டுமே.]]]

அதான..!

தெரிஞ்சுக்கட்டுமே இளா.. ஒண்ணும் தப்பில்லையே..!

உங்கள் ராட் மாதவ் said...

ஒரு suspense thriller film paatha maathiru irukkunga...

தீப்பெட்டி said...

ரொம்ப நாள் கழிச்சு பதிவுலகம் வந்தேன்.. வந்ததும் உங்க பதிவா கண்ணுல படனும்.. ம்ம்..ம்ம்..

பதிவுகளை படிப்பதே வெட்டி வேலை போல இருக்கு.. இதுல இவளோ நடக்குதா..

பதிவுலகத்துல கொஞ்சநாள் குப்பை கொட்டிகிட்டு இருந்தா நம்ம நாட்டு அரசியல்ல பிரமாதமா வளரலாம் போல இருக்கே சார்..

இன்னும் கொஞ்ச நாள் கண்ண மூடிட்டு இருக்க வேண்டியதுதான்..

நிகழ்காலத்தில்... said...

உண்மைத்தமிழன் பெயருக்கேற்றபடி
உண்மையை நிலை நிறுத்த உழைத்து இருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

நான் உங்கள் பக்கம்தான் !!

கிஷோர் said...

நான் கூட அது க்ரைம் தொடர்னு நெனச்சேன்.

ஆனா அது பிரதிக்குள் இருந்து பிரதியை பகிடி பண்ணும் பின்னவீனத்துவத்தொடரா?

Unknown said...

உங்கள் பதிவையும் எல்லா பின்னூட்டங்களையும் படித்து முடித்தவுடன் எல்லாமே விளங்குகிறது. பதிவு எழுதுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நினத்திருந்தேன். கிரிமினல்களும், வக்கிர புத்திக்காரர்களும் நிறைய போலித்தனமானவர்களும் இருக்கிறார்கள் என்று இன்றுதான் தெரிந்தது. யுவகிருஷ்னாவின் யோக்கியதை என்ன என்று இங்கு சிலர் தோலுரித்து காட்டினார்கள். உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்னா என்று வகுப்பறை வாத்தியார் முன்பொரு முறை பதிவிட்டிருந்தார். எதை நினைத்து அப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் அது இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது.

ரவி said...

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனை நினைவுக்கு கொண்டுவந்தவருக்கு நன்றி.

துபாயில் இருந்து கிழுமத்தூர் மகேந்திரன் ஆப்பு பதிவை ஓப்பன் செய்து என்னுடைய குடும்பத்தை பற்றிய ஆபாச பதிவு ஒன்றை எழுதினார்.

நான் இதனை கண்டுபிடித்ததில் இருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் என்றாலே நரகலை மிதித்தவன் போன்ற வெறுப்புக்கு உள்ளானேன்.

ஆனால் பெங்களூரில் இருக்கும் டிபிசிடி என்ற அயோக்கியன், அவன் இந்தியா வந்தபோது பெரிதாக கொண்டாடினான்.

அதிலிருந்து டிபிசிடியும் ஒரு நரகல் என்று தெரிந்துகொண்டேன்.

டிபிசிடி வலையுலகுக்கு வந்தவுடன் என்னுடன் தான் முதலில் சேட் செய்தான்.

விடாது கருப்பு தளத்தில் என்னுடைய குடும்பத்தை பற்றி ஆபாசமாக எழுதியதால் அந்த தளத்துக்கு லிங்க் கொடுக்காதே என்றேன்.

உன்னுடைய எதிரி எனக்கும் எதிரி என்று பார்க்காதே என்றான்.

அதனால் அவனும் நரகலானான்.

/தொடரும்/

உண்மைத்தமிழன் said...

[[[RAD MADHAV said...
ஒரு suspense thriller film paatha maathiru irukkunga...]]]

ஆனா கிளைமாக்ஸ் மட்டும் எப்போன்னு தெரியலீங்க..! ஸாரி ராட் மாதவ்..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
ரொம்ப நாள் கழிச்சு பதிவுலகம் வந்தேன்.. வந்ததும் உங்க பதிவா கண்ணுல படனும்.. ம்ம்..ம்ம்..
பதிவுகளை படிப்பதே வெட்டி வேலை போல இருக்கு.. இதுல இவளோ நடக்குதா..? பதிவுலகத்துல கொஞ்சநாள் குப்பை கொட்டிகிட்டு இருந்தா நம்ம நாட்டு அரசியல்ல பிரமாதமா வளரலாம் போல இருக்கே சார்.. இன்னும் கொஞ்ச நாள் கண்ண மூடிட்டு இருக்க வேண்டியதுதான்]]]

தீப்பெட்டி சவுக்கியமா..?

என்னப்பா ரொம்ப நாளா ஆளைக் காணோம்..!

இப்படி லீவு லெட்டர் கொடுக்காம போனா எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[நிகழ்காலத்தில்... said...
உண்மைத்தமிழன் பெயருக்கேற்றபடி
உண்மையை நிலை நிறுத்த உழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நான் உங்கள் பக்கம்தான்!!]]]

கோடி நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிஷோர் said...
நான் கூட அது க்ரைம் தொடர்னு நெனச்சேன். ஆனா அது பிரதிக்குள் இருந்து பிரதியை பகிடி பண்ணும் பின்னவீனத்துவத்தொடரா?]]]

எப்படி வேணும்னாலும் வைச்சுக்கலாம் கிஷோர்..!

ஆனா உண்மையை மட்டும் அங்க போய் தேடாதீங்க...!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
உங்கள் பதிவையும் எல்லா பின்னூட்டங்களையும் படித்து முடித்தவுடன் எல்லாமே விளங்குகிறது. பதிவு எழுதுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நினத்திருந்தேன். கிரிமினல்களும், வக்கிர புத்திக்காரர்களும் நிறைய போலித்தனமானவர்களும் இருக்கிறார்கள் என்று இன்றுதான் தெரிந்தது. யுவகிருஷ்னாவின் யோக்கியதை என்ன என்று இங்கு சிலர் தோலுரித்து காட்டினார்கள். உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்னா என்று வகுப்பறை வாத்தியார் முன்பொரு முறை பதிவிட்டிருந்தார். எதை நினைத்து அப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் அது இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது.]]]

வாத்தியாரை விடுங்க ஆனந்த்..!

பாடத்தை புரிந்து கொண்டீர்கள்தானே..!

போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனை நினைவுக்கு கொண்டுவந்தவருக்கு நன்றி.
துபாயில் இருந்து கிழுமத்தூர் மகேந்திரன் ஆப்பு பதிவை ஓப்பன் செய்து என்னுடைய குடும்பத்தை பற்றிய ஆபாச பதிவு ஒன்றை எழுதினார். நான் இதனை கண்டுபிடித்ததில் இருந்து கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் என்றாலே நரகலை மிதித்தவன் போன்ற வெறுப்புக்கு உள்ளானேன்.
ஆனால் பெங்களூரில் இருக்கும் டிபிசிடி என்ற அயோக்கியன், அவன் இந்தியா வந்தபோது பெரிதாக கொண்டாடினான். அதிலிருந்து டிபிசிடியும் ஒரு நரகல் என்று தெரிந்துகொண்டேன். டிபிசிடி வலையுலகுக்கு வந்தவுடன் என்னுடன்தான் முதலில் சேட் செய்தான். விடாது கருப்பு தளத்தில் என்னுடைய குடும்பத்தை பற்றி ஆபாசமாக எழுதியதால் அந்த தளத்துக்கு லிங்க் கொடுக்காதே என்றேன். உன்னுடைய எதிரி எனக்கும் எதிரி என்று பார்க்காதே என்றான். அதனால் அவனும் நரகலானான்.
/தொடரும்/]]]

போச்சுடா.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இன்றைக்கு அனைவரும் சேர்ந்து கொண்டார்கள்..

அடுத்த பாகத்தில் யார் தம்பி..?

தொடரும்னு போட்டிருக்கியே..?

Anonymous said...

சீக்கிரமாக நல்ல பைத்தியகார டாக்டரிடம் சிகிச்சை எடுத்துகொண்டு கல்யாணம் காட்சியென்று வாழ முயற்சி செய் சரவணா

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
சீக்கிரமாக நல்ல பைத்தியகார டாக்டரிடம் சிகிச்சை எடுத்துகொண்டு கல்யாணம் காட்சியென்று வாழ முயற்சி செய் சரவணா]]]

பைத்தியக்கார டாக்டரிடம் வைத்தியம் செய்ய முடியாது தம்பி.. அவரே பைத்தியம்.. அவர்கிட்ட நாம எதுக்கு போகணும்..?

எங்களுக்கு மருத்துவம் தேவையில்லாதது.. அதனாலதான் சொந்தப் பெயர்ல பதிவே போட்டுச் சொல்றோம்..

பதிவு போடவும் முடியாம, பதிலும் போடவும் முடியாம தவிக்குற உன்னை மாதிரியான அன்புத் தம்பிகள்தான் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற டாக்டர்களிடம் போகணும்..

சீக்கிரமா போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்க ராசா..!

தகடூர் கோபி(Gopi) said...

// அது சரி said...
என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் எனக்கு தெளிவாக தெரியாததால், எஸ்கேப்....//

என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெளிவாக அப்போதே தெரிந்ததால் முதல்லயே நான் எஸ்கேப்.

இந்த பின்னூட்டம் மூலம் இந்த சிக்கலுக்கு தொடர்பே இல்லாத, ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க நினைத்த, என் போன்ற பார்வையாளர்களை "ஒன்னா நீ டோண்டு பக்கம். இல்லைன்னா போலி டோண்டு பக்கம்" அப்படீன்னு தீவிரமா இரு தரப்பிலும் குழு சேர்க்கும் முயற்சியும் ஒரு கட்டத்தில் நடந்தது என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த சிக்கல் மூலமாக இரு தரப்பிலும் இத்தகைய சில "நல்ல உள்ளங்களை" அடையாளம் கண்டு ஒதுங்க முடிந்தது.

அதற்காக இறைவனுக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

///தகடூர் கோபி(Gopi) said...

// அது சரி said...
என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எதுவும் எனக்கு தெளிவாக தெரியாததால், எஸ்கேப்....//

என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெளிவாக அப்போதே தெரிந்ததால் முதல்லயே நான் எஸ்கேப்.

இந்த பின்னூட்டம் மூலம் இந்த சிக்கலுக்கு தொடர்பே இல்லாத, ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க நினைத்த, என் போன்ற பார்வையாளர்களை "ஒன்னா நீ டோண்டு பக்கம். இல்லைன்னா போலி டோண்டு பக்கம்" அப்படீன்னு தீவிரமா இரு தரப்பிலும் குழு சேர்க்கும் முயற்சியும் ஒரு கட்டத்தில் நடந்தது என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த சிக்கல் மூலமாக இரு தரப்பிலும் இத்தகைய சில "நல்ல உள்ளங்களை" அடையாளம் கண்டு ஒதுங்க முடிந்தது.

அதற்காக இறைவனுக்கு நன்றி.///

நீண்ட நாட்கள் வராமல் இருந்த தம்பியை வரவழைத்த முருகனுக்கு நன்றிகள்..!

Anonymous said...

ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியது தானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது.

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியதுதானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது.///

தம்பீ..

முருகன் ஒருத்தனுக்கு கொடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டான்னா, அதை எவனாலும் தடுக்க முடியாது..

எனக்கு உன் மீது எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. பதிவுலகம் தொடர்பாக கடந்த 2 வருஷமா நடந்துக்கிட்டிருக்கிற விஷயம்தான் இது.. ஆரம்பிச்சு வைச்சது நீதான்.. என்னைக் குத்தம் சொன்னா எப்படி..?

இவ்ளோ நேரம் வழமையான அனானியாக வந்து கேரக்டர் கொலை என்று சொல்லப்படுவதுவரையிலும் சென்றுவிட்டு, மீண்டும் ஏன் இந்த உணர்ச்சிப் பொங்கல்..!

அஹோரி said...

இவ்ளோ நடந்து இருக்கா பதிவுலகத்துல. மொத்த பக்கத்தையும் படிக்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சி.
நிறைய தெரிஞ்சிகிட்டேன்.

Anonymous said...

\\ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியதுதானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது//

இது எதிர் பார்த்ததுதான்! ஏற்கனவே, "இவ்ளோ நாளா இவன் நம்முடன் இருந்தான், இப்போ ரெண்டு புக் எழுதி பிரபலமாயிட்டான் என்ற பொறாமை" என்று ஒருவர் எழுதியது நினைவில் வருகிறது.


செ ரவி சார், இணைய எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதால் யார் யார் எவரோடு கூட்டணி என்று யூகிக்க முடிந்ததாலேயே கிழுமத்தூர் எக்ஸ்பிரஸைக் குறிப்பிட்டேன். நீங்கள் சொன்ன டி பி சி டி யும் அதே ரகம் என்று நினைத்திருந்தேன். உறுதிப் படுத்தியதற்கு நன்றி. நீங்கள் எப்போதும் போல இம்சையில் இம்சையைக் கூட்டுங்கள், அதாவது ஜாலி பதிவுகள் ப்ளீஸ்.

எல்லாப் பதிவிற்கும் எதிர்ப்பதிவு போடுபவர் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?

107 வது கொமண்டு போட்ட அனானி.

Anonymous said...

\\ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியதுதானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது//

இது எதிர் பார்த்ததுதான்! ஏற்கனவே, "இவ்ளோ நாளா இவன் நம்முடன் இருந்தான், இப்போ ரெண்டு புக் எழுதி பிரபலமாயிட்டான் என்ற பொறாமை" என்று ஒருவர் எழுதியது நினைவில் வருகிறது.


செ ரவி சார், இணைய எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதால் யார் யார் எவரோடு கூட்டணி என்று யூகிக்க முடிந்ததாலேயே கிழுமத்தூர் எக்ஸ்பிரஸைக் குறிப்பிட்டேன். நீங்கள் சொன்ன டி பி சி டி யும் அதே ரகம் என்று நினைத்திருந்தேன். உறுதிப் படுத்தியதற்கு நன்றி. நீங்கள் எப்போதும் போல இம்சையில் இம்சையைக் கூட்டுங்கள், அதாவது ஜாலி பதிவுகள் ப்ளீஸ்.

எல்லாப் பதிவிற்கும் எதிர்ப்பதிவு போடுபவர் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?

107 வது கொமண்டு போட்ட அனானி.

Anonymous said...

\\ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியதுதானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது//

இது எதிர் பார்த்ததுதான்! ஏற்கனவே, "இவ்ளோ நாளா இவன் நம்முடன் இருந்தான், இப்போ ரெண்டு புக் எழுதி பிரபலமாயிட்டான் என்ற பொறாமை" என்று ஒருவர் எழுதியது நினைவில் வருகிறது.


செ ரவி சார், இணைய எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதால் யார் யார் எவரோடு கூட்டணி என்று யூகிக்க முடிந்ததாலேயே கிழுமத்தூர் எக்ஸ்பிரஸைக் குறிப்பிட்டேன். நீங்கள் சொன்ன டி பி சி டி யும் அதே ரகம் என்று நினைத்திருந்தேன். உறுதிப் படுத்தியதற்கு நன்றி. நீங்கள் எப்போதும் போல இம்சையில் இம்சையைக் கூட்டுங்கள், அதாவது ஜாலி பதிவுகள் ப்ளீஸ்.

எல்லாப் பதிவிற்கும் எதிர்ப்பதிவு போடுபவர் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?

107 வது கொமண்டு போட்ட அனானி.

கார்த்திக் பிரபு said...

Outside blogs are very dangerous romba kavanama irukanum pola :(

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//இதுல இருந்தே யாருக்கு எங்கே தொடர்புன்னு தெரிஞ்சுக்கலாம் கண்ணா..

இந்த மாதிரி மொள்ளமாரித்தனமெல்லாம் உங்க ரெண்டு பேரையும்விடடா வேற யார் செய்வா..?//

அண்ணே ,
எந்த கண்ணனை சொல்கிறீர்கள் ?


Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post.html#ixzz0Q3iUh9aw

Anonymous said...

குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்

வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!

சென்ஷி said...

//வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன் :)

சென்ஷி said...

//வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன் :)

செம்மயா சிரிச்சுட்டேன் வாலு :))

குழலி / Kuzhali said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//
அய்யோ பயமாயிருக்கே பயமாயிருக்கே... யாராவது சிகரெட் குடுங்க... ங்கொய்யால டிஎஸ்பி ஆபிஸ்ல பாக்கெட் பாக்கெட்டா ஊதி தள்ளுனயே பதட்டத்துல எங்கே மாட்டிப்போமான்னு அன்னைக்கே உன்னையும் சேர்த்து குத்தவச்சி உக்கார வச்சிருக்கனும்

Anonymous said...

குழலி உன் பிலிமெல்லாம் என்னிடம் வேண்டாம். யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். எனக்கும் நோண்டிவிடத் தெரியும். இப்போதைக்கு நேரமில்லை. பிழைத்துப் போகவும்.

Anonymous said...

//குழலி உன் பிலிமெல்லாம் என்னிடம் வேண்டாம். யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். எனக்கும் நோண்டிவிடத் தெரியும். இப்போதைக்கு நேரமில்லை. பிழைத்துப் போகவும்.//

அடடே அங்கே எனக்கு சம்பந்தம் இல்லை இங்கே ஒரே மிரட்டலாக இருக்கே

லக்கி அடங்குடா போதும்டா

நாமக்கல் சிபி said...

////வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன் :)

//

:))
ஹஹஹா

Santhosh said...

//ஒரு மனிதனை கொலை செய் என்று எவரும் சொல்லி அவன் கொலை செய்தால் அவன் அடியாளாகத்தான் இருப்பான்.. அடியாள் என்றால் அடிமுட்டாள்தான். நீங்கள்தான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டீர்களே மூர்த்தி பெரும் அறிவாளி என்று.. லாஜிக் இடிக்கிறதே யட்சன்..
//
ஹிஹி.. உ.தா அண்ணே உங்க கூட ஒரே காமெடி தான் போங்க.. இப்பவும் சரி அப்பவும் சரி இதை படிச்சிட்டு வாயால சிரிக்க முடியலை..அதெப்படி அண்ணே டோண்டு & கோ அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கீங்க.. நடத்துங்க.. அன்னைக்கு சொன்னதையே தான் இன்னமும் சொல்றேன் குழலி, செல்லா போன்றவர்கள் உள்ள வராட்டி உங்க கோஷ்டி மூர்த்தியை வெச்சி ரிப்போட்டரில் பேட்டி, வாரம் அவனை உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு பதிவு அப்பறம் அந்த லூசுப்பையன் எதாவது செய்ய போக அழுகாச்சியா ஒரு பதிவு..அப்படின்னு இன்னமும் கல்லா கட்டிட்டு தான் இருந்து இருப்பீங்க..

//ஏன் உங்க மூர்த்தி சொந்த புத்தியெல்லாம் கிடையவே கிடையாதா..? //
இந்த சப்பை கட்டுக்கு ஒரு கொறச்சலும் இல்ல..மனுஷனோட சைக்காலஜி எதுவுமே தெரியாத பாப்பா மாதிரி பேசுறீங்க.. ஆமா எல்லாரும் கழுதையா கத்திகிட்டு இருந்தோமுல்ல மூர்த்தி பேரை மட்டும் வெளியே சொல்லி இருக்கீங்க அவன் அல்லகைங்க யாருன்னு சொல்லுங்கன்னு.. அப்ப எல்லாம் சத்தமே காணோம்.. இப்ப என்னா உண்மை பீரிட்டு கிளம்புது உங்க குருநாதர் பதிவுல கல்லா ரொம்பலையோ?

இதுக்கு பதில் போடுறதுக்கு முன்னாடி உங்க குருநாதர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகோங்க.. அவர் எனக்கு ஒரு டெம்ப்ளேட் பதில் வெச்சி இருப்பாரு.. அதையே வாங்கி போட்டுங்க..

Anonymous said...

\\தம்பீ..

முருகன் ஒருத்தனுக்கு கொடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டான்னா, அதை எவனாலும் தடுக்க முடியாது..

எனக்கு உன் மீது எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. பதிவுலகம் தொடர்பாக கடந்த 2 வருஷமா நடந்துக்கிட்டிருக்கிற விஷயம்தான் இது.. ஆரம்பிச்சு வைச்சது நீதான்.. என்னைக் குத்தம் சொன்னா எப்படி..?//

அனானியையும் தம்பியாக பாவித்து அன்போடு அழைக்கும் உ த அண்ணனுக்கு என் வணக்கங்கள்.

ஆனால், நீங்கள் தம்பீ என்று பாசத்தோடு அழைப்பதைப் பார்த்தால் உங்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் என்று நினைக்கிறேன். எனக்கு, "கண்ணாமூச்சி ஏன் உ த அண்ணே" என்று பாட்டை மாற்றிப் பாடவேண்டும் போல இருக்கு.

அப்படியே எத ஆரம்பிச்சு வச்சாருன்னு சொன்னா யூஸ் புல்லா இருக்கும்.

ஒன் நாட் செவன் த் கொமண்டு போட்டவன்

Anonymous said...

My 2 cents....

do you guys wonder how this problem started.
look at this post esp the comments. (vazippokkan was moorthy.)


http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1


After this the issue was moved to Dondu's blog- "Velippadaiyana Ennagal"(i donnt want to go there even to get a link)

an another unrelated link, just to know more about "Nesamudan" venkatesh:-) (May be here you may know why he mention only kamal, aravithsamy and Madhavan)

http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=111&fldrID=1

.
.
.
.
.
.
.
STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham).

those who argue with Dondu will either become MOORTHY or atleast you will run away from this blogging world. i am just reading blogs since 2004 and at a certain point i too stopped reading blogs for 6 months just to avoid anything related DONDU's (you can see his comment everyware and you cannot avoid it). Because of this once Dee Jay started a hoax that he is getting married .....:-). Link...

http://elanko.net/?p=43#comment-243


Val this happen to many people. So BE AWARE OF DONDU.

etti ninu vedikkai paarththa
Anony :-)

dondu(#11168674346665545885) said...

@சந்தோஷ்
என்னடா இன்னும் வரல்லியேன்னு பார்த்தேன். முதலில் தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியபோதே அதை எதிர்த்தவர்தானே நீங்கள்? கடைசியில் இதுபற்றி மற்றவர்களுக்கு கொம்புசீவி விட்ட நீங்களே அதை போட்டுக் கொண்டது தனி காமெடி.

போலியை கண்டித்து அவன் பதிவில் நீங்கள் பின்னூட்டம் போட்டதாகத் தெரியவில்லையே. உபதேசம் எல்லாம் எனக்கு மட்டும்தான். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நான் சும்மா இருந்திருந்தால் இன்னும் மூர்த்தி கோலோச்சிக் கொண்டிருப்பான் இப்போது அவன் இல்லையல்லவா. ஆகவே ரிசல்டை பாருங்கள்.

அது சரி, மூர்த்திதான் எல்லாம் செய்தான் எனக் கடைசியில் நிரூபிக்கப்பட்டாலும், அது சம்பந்தமான எனது பதிவில் உங்கள் பின்னூட்டம் எதுவும் காணோமே? ஏன் இந்த இடிபோன்ற மௌனம்?

இப்போது உங்கள் அபிமான பதிவரை பற்றி எழுதும் போது மட்டும் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள் முன்னால் செய்தது போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sanjai Gandhi said...

//STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham).

those who argue with Dondu will either become MOORTHY or atleast you will run away from this blogging world.//

ஹிஹி.. அனானிஜி.. உங்களுக்கு எங்க வால் பத்தி தெரியலை.. ஒன்னு அவர் மத்தவங்களை பைத்தியம் பிடிக்க வைப்பார் அல்லது ஓட வைப்பார். சிங்கம்லே.. என்ன வால் நாஞ்சொல்றது? :))

மாயவரத்தான் said...

////வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

Hahahahhahahha

:)))))))))))

Kuzhali, ippadi usuppaeththi usuppaethiyae odamba punnakkiduvaanga polarukkae!

உண்மைத்தமிழன் said...

[[[அஹோரி said...
இவ்ளோ நடந்து இருக்கா பதிவுலகத்துல. மொத்த பக்கத்தையும் படிக்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சி.
நிறைய தெரிஞ்சிகிட்டேன்.]]]

நன்றி அஹோரி..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

\\ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியதுதானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது//

இது எதிர்பார்த்ததுதான்! ஏற்கனவே, "இவ்ளோ நாளா இவன் நம்முடன் இருந்தான், இப்போ ரெண்டு புக் எழுதி பிரபலமாயிட்டான் என்ற பொறாமை" என்று ஒருவர் எழுதியது நினைவில் வருகிறது.]]]

யார் இவர்..?

உண்மைத்தமிழன் said...

[[[கார்த்திக் பிரபு said...
Outside blogs are very dangerous romba kavanama irukanum pola :(]]]

ரொம்ப ரொம்ப கவனமா இருக்கோணும் கார்த்திக்..!

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...
//ஒருவன் வளர்ச்சியை தடுக்க இவ்வளவு சதியா? ஏன் இதனுடன் விட்டுவிட்டிர்கள் maalan@gmail.com மற்றும் குமுதத்துக்கு இந்த பதிவின் சுட்டியை ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டியது தானே. உங்கள் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடுமே. பொறாமையான உலகம் இது.//

தோடா பாருங்கடா சாகித்திய அகாடமி விருது, புக்கர் பரிசெல்லாம் வாங்கி விற்பனையில் சாதனை படைத்த எங்கே போனாலும் ஆட்டோகிராப் வாங்குற பிரபலத்தை, அடுத்தவன் பொண்டாட்டி அம்மா பெயரில் காமக்கதை எழுதிய பொறுக்கி மொள்ளமாறியோட‌ அல்லக்கை இது இதை பார்த்து பொறாமையாம்... தூத்தேறி]]]

குழலி.. இவ்ளோ காரம் தேவையில்லை.. நான் சொல்லியிருக்கும் பதிலே போதுமானது..!

வால்பையன் said...

//STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham). //

உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி!
இருந்தாலும் நீங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டியது டோண்டுவுக்கு தான்!
எதையும் நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது!
என் எதிரிகளிடம் அவர் மாட்டி கொள்ள போகிறார்!

உண்மைத்தமிழன் said...

[[[அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//இதுல இருந்தே யாருக்கு எங்கே தொடர்புன்னு தெரிஞ்சுக்கலாம் கண்ணா.. இந்த மாதிரி மொள்ளமாரித்தனமெல்லாம் உங்க ரெண்டு பேரையும்விடடா வேற யார் செய்வா..?//

அண்ணே, எந்த கண்ணனை சொல்கிறீர்கள்?]]]

இது கொஞ்சம் செல்லமா..? என்ன இருந்தாலும் பழகினதை மறந்திர முடியுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்]]]

எனக்கு இல்லையே..

அப்பா முருகா.. நான் தப்பிச்சேன்..

அவர் எதையும் தாங்கும் இதயம்.. எவ்ளோ அடிச்சாலும் அண்ணாத்த தாங்குவார்..

நாம அப்படியா..?

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//

குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க! நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!]]]

ஹா.. ஹா.. வாலுன்னா வாலுதான்..! சந்தேகமேயில்லை இது ஒண்ணாம் நம்பர் வாலு..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன்)]]]

இதுக்குத்தான் பேருதான் வாலு சேட்டைன்றது..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன் :)

செம்மயா சிரிச்சுட்டேன் வாலு :))]]]

நீ மட்டுமாடா ராசா..! நானும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//

அய்யோ பயமாயிருக்கே பயமாயிருக்கே... யாராவது சிகரெட் குடுங்க... ங்கொய்யால டிஎஸ்பி ஆபிஸ்ல பாக்கெட் பாக்கெட்டா ஊதி தள்ளுனயே பதட்டத்துல எங்கே மாட்டிப்போமான்னு அன்னைக்கே உன்னையும் சேர்த்து குத்தவச்சி உக்கார வச்சிருக்கனும்]]]

-))))))))))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
குழலி உன் பிலிமெல்லாம் என்னிடம் வேண்டாம். யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். எனக்கும் நோண்டிவிடத் தெரியும். இப்போதைக்கு நேரமில்லை. பிழைத்துப் போகவும்.]]]

ஆமா.. நானும் சொல்லிட்டேன்.. குழலி நீங்க பொழைச்சுக்குவீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

//குழலி உன் பிலிமெல்லாம் என்னிடம் வேண்டாம். யார் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும். எனக்கும் நோண்டிவிடத் தெரியும். இப்போதைக்கு நேரமில்லை. பிழைத்துப் போகவும்.//

அடடே அங்கே எனக்கு சம்பந்தம் இல்லை இங்கே ஒரே மிரட்டலாக இருக்கே. லக்கி அடங்குடா போதும்டா]]]

-))))))))))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

////வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//

குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க! நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

ஆகா கலவர பூமியில கூட சலிக்காம மரண மொக்கை போடுறாரே வால் பையன் :)//

:))
ஹஹஹா]]]

என்ன ஹாஹாஹா..

இது யுத்த பூமி.. பார்த்து பேசு சிபி..!

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...

//ஒரு மனிதனை கொலை செய் என்று எவரும் சொல்லி அவன் கொலை செய்தால் அவன் அடியாளாகத்தான் இருப்பான்.. அடியாள் என்றால் அடிமுட்டாள்தான். நீங்கள்தான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டீர்களே மூர்த்தி பெரும் அறிவாளி என்று.. லாஜிக் இடிக்கிறதே யட்சன்..//

ஹிஹி.. உ.தா அண்ணே உங்க கூட ஒரே காமெடிதான் போங்க.. இப்பவும் சரி அப்பவும் சரி இதை படிச்சிட்டு வாயால சிரிக்க முடியலை.. அதெப்படி அண்ணே டோண்டு & கோ அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கீங்க.. நடத்துங்க..]]]

சந்தோஷ்.. எங்களுடைய உழைப்பை கேலிக்கூத்தாக்க வேண்டாம்.. பெருமளவுக்கு நேரத்தையும், பொருளையும் செலவழித்துத்தான் மூர்த்தியைப் பிடித்துக் கொடுத்தோம். உதவி செய்ய மனமில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருங்கள்.

உங்களுக்கும், எனக்குமிடையில் இதுவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.. விசாரணையில் நடந்து என்ன என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்பு காமெடி எது என்பது பற்றி பேசுங்கள்..

[[[அன்னைக்கு சொன்னதையேதான் இன்னமும் சொல்றேன் குழலி, செல்லா போன்றவர்கள் உள்ள வராட்டி உங்க கோஷ்டி மூர்த்தியை வெச்சி ரிப்போட்டரில் பேட்டி, வாரம் அவனை உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு பதிவு அப்பறம் அந்த லூசுப்பையன் எதாவது செய்ய போக அழுகாச்சியா ஒரு பதிவு. அப்படின்னு இன்னமும் கல்லா கட்டிட்டுதான் இருந்து இருப்பீங்க..]]]

குழலியும், செல்லாவும் உள்ளே வந்தது எங்களுக்குக் கிடைத்த பலம்தான்.. நான் இல்லை என்று மறுக்கவில்லை.

ஆனால் மூர்த்தியை வைத்து நாங்கள் ஒன்றும் வியாபாரம் செய்யவில்லை. உங்களது கருத்து எங்களது கடும் உழைப்பை கேலிக்கூத்தாக்குகிறது..

[[[//ஏன் உங்க மூர்த்தி சொந்த புத்தியெல்லாம் கிடையவே கிடையாதா..? //
இந்த சப்பை கட்டுக்கு ஒரு கொறச்சலும் இல்ல. மனுஷனோட சைக்காலஜி எதுவுமே தெரியாத பாப்பா மாதிரி பேசுறீங்க. ஆமா எல்லாரும் கழுதையா கத்திகிட்டு இருந்தோமுல்ல மூர்த்தி பேரை மட்டும் வெளியே சொல்லி இருக்கீங்க.. அவன் அல்லகைங்க யாருன்னு சொல்லுங்கன்னு.. அப்ப எல்லாம் சத்தமே காணோம்.. இப்ப என்னா உண்மை பீரிட்டு கிளம்புது உங்க குருநாதர் பதிவுல கல்லா ரொம்பலையோ?]]]

உடனேயே சொல்வதற்கு முன் நிறைய ஆதாரங்கள் அல்லது குறைந்தபட்சம் அவரவர் மனசாட்சி ஏற்றுக் கொள்ளுமளவுக்காவாவது வாய் மொழியான ஆதாரங்களையாவது தர வேண்டுமே.. அதற்காகத்தான் நான் காத்திருந்தேன்.. வேறொன்றுமில்லை..

[[[இதுக்கு பதில் போடுறதுக்கு முன்னாடி உங்க குருநாதர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகோங்க..]]]

எனக்கு இங்கே யாரும் குருநாதர் இல்லை.. வாத்தியார் மட்டும்தான் இருக்கிறார்..

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

\\தம்பீ.. முருகன் ஒருத்தனுக்கு கொடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டான்னா, அதை எவனாலும் தடுக்க முடியாது.. எனக்கு உன் மீது எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.. பதிவுலகம் தொடர்பாக கடந்த 2 வருஷமா நடந்துக்கிட்டிருக்கிற விஷயம்தான் இது.. ஆரம்பிச்சு வைச்சது நீதான்.. என்னைக் குத்தம் சொன்னா எப்படி..?//

அனானியையும் தம்பியாக பாவித்து அன்போடு அழைக்கும் உ த அண்ணனுக்கு என் வணக்கங்கள்.
ஆனால், நீங்கள் தம்பீ என்று பாசத்தோடு அழைப்பதைப் பார்த்தால் உங்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் என்று நினைக்கிறேன். எனக்கு, "கண்ணாமூச்சி ஏன் உ த அண்ணே" என்று பாட்டை மாற்றிப் பாடவேண்டும் போல இருக்கு.
அப்படியே எத ஆரம்பிச்சு வச்சாருன்னு சொன்னா யூஸ் புல்லா இருக்கும். ஒன் நாட் செவன் த் கொமண்டு போட்டவன்]]]

உன் நடிப்பை பார்த்து ரொம்ப டயர்டா இருக்குடா ராசா..!

வேண்டாம்.. விட்ரு.. அழுதுருவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...

My 2 cents.... do you guys wonder how this problem started. look at this post esp the comments. (vazippokkan was moorthy.)
http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1
After this the issue was moved to Dondu's blog- "Velippadaiyana Ennagal"(i donnt want to go there even to get a link) an another unrelated link, just to know more about "Nesamudan" venkatesh:-) (May be here you may know why he mention only kamal, aravithsamy and Madhavan)
http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=111&fldrID=1]]]

சரிங்க ஸார்.. பழசையெல்லாம் கிளறி விடுறீங்க.. படிச்சுக்குங்கன்னு.. படிக்கிறவங்க படிச்சுக்கட்டும்..!

[[[STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham). those who argue with Dondu will either become MOORTHY or atleast you will run away from this blogging world. i am just reading blogs since 2004 and at a certain point i too stopped reading blogs for 6 months just to avoid anything related DONDU's (you can see his comment everyware and you cannot avoid it). Because of this once Dee Jay started a hoax that he is getting married .....:-). Link...
http://elanko.net/?p=43#comment-243
Val this happen to many people. So BE AWARE OF DONDU. etti ninu vedikkai paarththa Anony :-)]]]

ஒண்ணும் பிரியலே..

யாராச்சும் தமிழாக்கம் பண்ணி போட முடியுமா?

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said...

@சந்தோஷ் என்னடா இன்னும் வரல்லியேன்னு பார்த்தேன். முதலில் தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியபோதே அதை எதிர்த்தவர்தானே நீங்கள்? கடைசியில் இது பற்றி மற்றவர்களுக்கு கொம்புசீவி விட்ட நீங்களே அதை போட்டுக் கொண்டது தனி காமெடி.]]]

-)))))))))))))

[[[போலியை கண்டித்து அவன் பதிவில் நீங்கள் பின்னூட்டம் போட்டதாகத் தெரியவில்லையே. உபதேசம் எல்லாம் எனக்கு மட்டும்தான். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நான் சும்மா இருந்திருந்தால் இன்னும் மூர்த்தி கோலோச்சிக் கொண்டிருப்பான் இப்போது அவன் இல்லையல்லவா. ஆகவே ரிசல்டை பாருங்கள்.]]]

ஆமா.. அதை ஏன் பார்க்க மறுக்கிறார். மூர்த்தி எங்களிடம் கொடுத்த வாக்குறுதியைப் போலவே அவர் துவக்கிய பல காமத்தளங்களை நீக்கிவிட்டாரே.. இப்போது எதுவுமே இல்லையே.. இப்போதும் மூர்த்தி அதையெல்லாம் செய்யவில்லை எனகிறாரா?

[[[அது சரி, மூர்த்திதான் எல்லாம் செய்தான் எனக் கடைசியில் நிரூபிக்கப்பட்டாலும், அது சம்பந்தமான எனது பதிவில் உங்கள் பின்னூட்டம் எதுவும் காணோமே? ஏன் இந்த இடிபோன்ற மௌனம்?]]]

அவர் இந்த திடீர் முடிவை எதிர்பார்க்கவில்லை போலும்..

[[[இப்போது உங்கள் அபிமான பதிவரை பற்றி எழுதும் போது மட்டும் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள் முன்னால் செய்தது போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

-)))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi said...
//STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham).

those who argue with Dondu will either become MOORTHY or atleast you will run away from this blogging world.//

ஹிஹி.. அனானிஜி.. உங்களுக்கு எங்க வால் பத்தி தெரியலை.. ஒன்னு அவர் மத்தவங்களை பைத்தியம் பிடிக்க வைப்பார் அல்லது ஓட வைப்பார். சிங்கம்லே.. என்ன வால் நாஞ்சொல்றது? :))]]]

சஞ்சய்.. என்னதான் சொல்றாரு இந்த அனானி..?

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...

////வால்பையன் said...

//Anonymous said...
குழலி உனக்கு இருக்குடி திரும்பவும்//


குழலி நீங்க திரும்பவே திரும்பாதிங்க!
நேராவே நில்லுங்க, என்ன செய்யுறாங்கன்னு பாப்போம்!//

Hahahahhahahha

:)))))))))))

Kuzhali, ippadi usuppaeththi usuppaethiyae odamba punnakkiduvaanga polarukkae!]]]

மாயம்ஸ்.. அதுதான் நடக்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

//STATUTORY WARNING TO VAL Payyan (i saw some DONDU's title in tamilmanam mentioning you name for some vivatham). //

உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி!
இருந்தாலும் நீங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டியது டோண்டுவுக்குதான்! எதையும் நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது! என் எதிரிகளிடம் அவர் மாட்டி கொள்ள போகிறார்!]]]

டோண்டுவுக்கே அட்வைஸா..?

வாலுன்னா வாலுதான்..!

Beski said...

பதிவு பெருசா இருந்தது, ஆனா சூடா இருக்கும்போதே படிச்சு முடிச்சிட்டேன். பெரியவங்க மேட்டரு, சின்ன பையன் நமக்கு எதுக்குன்னு கமண்டு போடல.

இப்ப வந்து பாத்தா கமண்டு ஏரியா அத விட பெருசா, அத விட சுவாரஸ்யமா பல தகவல்களைத் தருது. மொதல்லயே கமண்ட ஃபாலோ பண்ணாம விட்டுட்டமேன்னு வருத்தமா இருக்கு. இதுக்கு மேல கமண்டு வந்தா பாக்கனும். இரண்டாவது வருகைய பதிவு பண்ணிக்கறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா போலி விவகாரம் துவங்கிய போதுதான் நான் வலையுலகின் உள்ளே வந்தேன். இந்த பிரச்ச்னை த்நெரியாமல் நான் செந்தழல்ரவி அண்ணன் பதிவில் பின்னூட்டம் போடப்போக என் குடும்பத்தையே திட்டி மெயில் வந்தது இன்னும் மறக்க முடியாதது.

Osai Chella said...

ஓ, அப்படியா! மறந்தே போயிட்டேன்! நோ கமெண்ட்ஸ்! உள்ளேன் ஐயா மட்டுமே இப்போ!

Osai Chella said...

இருந்தாலும் மனசு விடவில்லை. எனக்கு பலருடன் பகைமை இருந்ததை எல்லோரும் அறிவார்கள்! பலர் பின்னாளில் நண்பர்களானதும் நிகழ்ந்தது. எனக்கும் தமிழ்மணம் ஆரியம் என்று பிரச்சினைகள் வந்தாலும் நாங்கள் அனைவரும் இன்றும் பேசிக்கொள்ளும் சூழலில் இருக்கிறோம். என்னால் சகிக்க முடியாதது இரண்டு மட்டுமே. ஒன்று மூர்த்தி என்றொரு பதிவர், இரண்டு அவரை ஞாயப்படுத்தி பேசுவத்ற்காக முண்டியடிக்கும் சில அனானிகள். இந்த நரகல்கள் மீது இன்னொரு கல் வேண்டாம் என்று இவ்விடத்தைவிட்டு அகலுகிறேன்!

Anonymous said...

இதுதான் தக்க சமயம்..

போலி டோண்டு என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் உடனடியாக புத்தகம் போடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Pot"tea" kadai said...

பெர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்ப்பா...

நைட்டுலாம் தூங்கவே இல்லியா?

எப்படி சாமி எல்லாத்துக்கும் பின்னூட்டம் போடறீங்க?

டவுசர் அவுந்து போச்சு...போலி டோண்டு நினைவு நாளா இன்னிக்கு?
ங்கொய்யால தொடர்பதிவாய் ஆளாளுக்கு கலாய் கலாய் கலாய்க்கிறீங்க.

உண்மைத்தமிழன் said...

///எவனோ ஒருவன் said...
பதிவு பெருசா இருந்தது, ஆனா சூடா இருக்கும்போதே படிச்சு முடிச்சிட்டேன். பெரியவங்க மேட்டரு, சின்ன பையன் நமக்கு எதுக்குன்னு கமண்டு போடல.
இப்ப வந்து பாத்தா கமண்டு ஏரியா அத விட பெருசா, அத விட சுவாரஸ்யமா பல தகவல்களைத் தருது. மொதல்லயே கமண்ட ஃபாலோ பண்ணாம விட்டுட்டமேன்னு வருத்தமா இருக்கு. இதுக்கு மேல கமண்டு வந்தா பாக்கனும். இரண்டாவது வருகைய பதிவு பண்ணிக்கறேன்.///

இப்படியுமாய்யா இருப்பீங்க உலகத்துல..!

அடுத்தவன் துக்கத்துல வருத்தப்படுங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா போலி விவகாரம் துவங்கியபோதுதான் நான் வலையுலகின் உள்ளே வந்தேன். இந்த பிரச்ச்னை த்நெரியாமல் நான் செந்தழல்ரவி அண்ணன் பதிவில் பின்னூட்டம் போடப்போக என் குடும்பத்தையே திட்டி மெயில் வந்தது இன்னும் மறக்க முடியாதது.]]]

அவ்ளோதான் தப்பிச்சிட்டியா..? உன் சாமர்த்தியம் எனக்கில்லப்பா.. வசமா மாட்டிக்கிட்டு இன்னிக்கிவரைக்கும் முழிச்சிட்டிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[OSAI Chella said...
ஓ, அப்படியா! மறந்தே போயிட்டேன்! நோ கமெண்ட்ஸ்! உள்ளேன் ஐயா மட்டுமே இப்போ!]]]

உதைபடுவ மவனே..!

உண்மைத்தமிழன் said...

[[[OSAI Chella said...
இருந்தாலும் மனசு விடவில்லை. எனக்கு பலருடன் பகைமை இருந்ததை எல்லோரும் அறிவார்கள்! பலர் பின்னாளில் நண்பர்களானதும் நிகழ்ந்தது. எனக்கும் தமிழ்மணம் ஆரியம் என்று பிரச்சினைகள் வந்தாலும் நாங்கள் அனைவரும் இன்றும் பேசிக்கொள்ளும் சூழலில் இருக்கிறோம். என்னால் சகிக்க முடியாதது இரண்டு மட்டுமே. ஒன்று மூர்த்தி என்றொரு பதிவர், இரண்டு அவரை ஞாயப்படுத்தி பேசுவத்ற்காக முண்டியடிக்கும் சில அனானிகள். இந்த நரகல்கள் மீது இன்னொரு கல் வேண்டாம் என்று இவ்விடத்தைவிட்டு அகலுகிறேன்!]]]

ஆனாலும் எல்லா பாராட்டும் உனக்கும், குழலிக்குமே கிடைக்குதே.. இதை நினைச்சாத்தான் என் வயிறு..!????

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
இதுதான் தக்க சமயம்.. போலி டோண்டு என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் உடனடியாக புத்தகம் போடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.]]]

டோண்டு ஸார் அவரோட பெயர் டைட்டில்ல வர்றதால ராயல்டி கேப்பாரு..

அவர் கேக்குற தொகைக்கு போடாம இருக்குறதே பெட்டர்ன்னு பேசாம இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Pot"tea" kadai said...
பெர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்ப்பா...
நைட்டுலாம் தூங்கவே இல்லியா?
எப்படி சாமி எல்லாத்துக்கும் பின்னூட்டம் போடறீங்க?
டவுசர் அவுந்து போச்சு...போலி டோண்டு நினைவு நாளா இன்னிக்கு?
ங்கொய்யால தொடர்பதிவாய் ஆளாளுக்கு கலாய் கலாய் கலாய்க்கிறீங்க.]]]

சரி.. சரி.. நீ எந்தப் பக்கம்? டோண்டு பக்கமா? போலி பக்கமா..? தெரிஞ்சாத்தான் தெளிவான பதில் கிடைக்கும்..!

Anonymous said...

ஆஹா இருநூத்தி 19....

அடிச்சு ஆடுங்க... ஐய்நூற தாண்டனும்

Rajagopal.S.M said...

ஆஹா இருநூத்தி 20....

Rajagopal.S.M said...

ஆஹா இருநூத்தி 20....

Anonymous said...

\\வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.//

ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா!

பதிவர் கூட்டத்தில் செல் பேசி மூலம் ஒலி பரப்பி இப்போது பசப்புபவர் யார்?

இதை போலியும் அவரது மற்ற அல்லக்கைகளும் படித்தால் இவரைப் பற்றி இவருடன் இனிமேல் ஸ்நானப்பிராப்தியே கூடாது என்று நினைப்பார்களா?

இப்படியெல்லாம் எழுதினால் சுஜாதாவாகி விட முடியுமா?

107 வதாக கொமண்டியவன்.