சிந்தாநதியாரின் தடாலடிப் போட்டிக்காக ராகுல் டிராவிட்டுடன் ஒரு சந்திப்பு

தமிழ்மணம் பதிவில் எனது தளம் வரும்வரை புதிதாக எந்தக் கதையையும் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பை மறக்க வைத்துவிட்டது இந்த http://tamiltalk.blogspot.com/-ல் இருந்த சிந்தாநதியாரின் தடாலடி போட்டி..

சரி.. வலைத்தளத்தில் 'அனாதைப் பயல்'ன்னு பேர் வாங்கியாச்சு. இப்படியாச்சும் முயற்சி செஞ்சு நாலு பேர் 'பய யாரு?'ன்னு கேக்குற அளவுக்குப் பண்ணுவோமேன்னு நினைச்சு நானும் இந்தத் தடாலடி போட்டில 'தடால்'ன்னு குதிச்சிட்டேன்..
நேயர்களே.. ரசிகர்களே.. இதோ தடாலடி போட்டிக்காக உண்மைத் தமிழனின் கிரிக்கெட் சந்திப்பு..
கோவளம் பீச்சில் ரெஸ்ட்டில் இருந்த ராகுல் டிராவிட்டை சந்தித்தேன். பேட்டி தொடர்கிறது.

நான் : என்ன அக்கிரமம் ஸார் இது?

டிராவிட் : கரெக்ட்.. எனக்கும் அக்கிரமமாத்தான் தெரியுது.. ஆனா என்ன செய்ய?

நான் : இங்க 110 கோடி பேர் உங்களுக்காக கோவில், குளம்னு சுத்துக்கிட்டிருந்தோம்..

டிராவிட் : அதான் நாங்களும் உங்ககூடவே கோவில், குளம்னு சுத்தலாம்னுதான் சீக்கிரமா வந்துட்டோம்..

நான் : அதென்ன ஸார் பங்களாதேஷ்கிட்ட போய் தோக்கலாமா? நம்ம கவுரவம் என்னாகுறது?

டிராவிட் : தப்புதான்.. ஆனா என்ன பண்றது? நம்ம பங்காளி பாகிஸ்தான் தோத்துச்சுன்றே பீலிங்ல நாங்களும் விட்டுட்டோம்..

நான் : அது சரி. அப்ப பெர்முடாவை ஏன் இப்படி சாத்துனீங்க..?

டிராவிட் : இங்க இந்தியால என் வொய்ப்கிட்டேயிருந்து வெளில தலை காட்ட முடியலைன்னு பேக்ஸ் மேல பேக்ஸ்.. போன் மேல போன்.. அதான் கொஞ்சம் ரிலாக்ஸா ஆடினோம்..

நான் : ரிலாக்ஸா ஆடினீங்களா? பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே..?

டிராவிட் : அந்த மேட்சல எந்தப் பந்து ஸ்டம்ப்பை பார்த்து வந்துச்சு.. ?
நான் : அப்ப இலங்கையோட தோத்தீங்களே..?

டிராவிட் : எல்லா பந்தையும் ஸ்டம்புக்கு நேராவே போட்டுட்டாங்க.. நாங்க என்ன செய்றது?

நான் : இவ்ளோ பேர் காட்டுக் கத்துக் கத்தியும் 'தோற்போம்'னு பிடிவாதமா சொல்லி தோத்துட்டு வந்து நிக்குறீங்களே? உங்களுக்கு எவ்ளோ தைரியம்?

டிராவிட் : எப்படியும் டீம்ல நாங்க இருப்போம்ன்ற தைரியம்தான்..

நான் : சரி அத விடுங்க.. இலங்கையோட விளையாடுற மேட்ச் முக்கியம்னு உங்களுக்கே தெரியும்.. அப்படியிருந்தும் டாஸ் வின் பண்ணிட்டு எதுக்காக பீல்டிங்கை எடுத்தீங்க..?

டிராவிட் : சச்சினுக்கு காலைலயே பேட்டிங் பிடிக்கணும்னா அலர்ஜி.. கங்குலிக்கு டஸ்ட் அலர்ஜி.. டோனி தலைல வேப்பெண்ணெய் தடவிருந்ததால அது காய்ஞ்சாத்தான் நல்லா அடிக்க முடியும்னுட்டாரு.. சேவக் கிரவுண்ட்ல நாலு ரவுண்ட் ஓடிப் பார்த்தாத்தான் தன்னால ஓட முடியும்னுட்டாரு.. உத்தப்பா காலை தோசை சாப்பிட்டதால ஏப்பம், ஏப்பமா வருதுன்னுட்டாரு.. வேறென்ன செய்றது? நீங்களே சொல்லுங்க..

நான் : அப்ப மத்தவுங்க சொல்லித்தான் நீங்க பீல்டிங் எடுத்தீங்களா?

டிராவிட் : இல்ல.. இல்ல.. சேப்பல் பேட்டிங் எடுன்னாரு.. நான் எப்பவும் அவர் சொல்றதுக்கு ஆப்போஸிட்டாத்தான் செய்வேன். அதான் பட்டுன்னு பீல்டிங்ன்னு சொல்லிட்டேன்..

நான் : அதென்ன உத்தப்பா உடனே அவுட்..?

டிராவிட் : சேவக்கோட முதல்ல நான்தான் உள்ள போவேன்னு கங்குலி அடம் புடிச்சாரு.. அவரைச் சமாளிக்க முடியல. அதான் உள்ள போனவுடனே நாலு சாத்து சாத்திட்டு சீக்கிரமா வெளில வந்திருன்னு சொல்லியனுப்பிச்சேன்.. வந்துட்டாரு..

நான் : கங்குலி ஏன் அப்படி தடவினாரு..?

டிராவிட் : உலகக் கோப்பை முடிஞ்சவுடனே திரும்பவும் டீம்ல இருந்து தூக்கப் போறாங்கன்னு எவனோ ஒருத்தன் அவர்கிட்ட பிட்டை போட்டுட்டான். உடனே பயந்துட்டார் மனுஷன்.. எப்படியாவது ரொம்ப நேரம் கிரவுண்ட்ல நிக்கணும்னு நினைச்சாராம்.. அப்படின்னு என்கிட்டயே சொன்னாரு..

நான் : அப்புறம் ஏன் சச்சின் டக் அவுட்.. மேட்ச் பிக்ஸிங்கா?

டிராவிட் : ஐயோ.. அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.. அவருக்கு கொஞ்சம் மூட் அவுட்.. எத்தனை மேட்ச்ல நான் மேட்ச் வின்னரா இருந்திருக்கேன். இன்னிக்கு நீங்க யாராவது ஒருத்தர் இருந்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவ்ளோதான்..

நான் : அந்தப் பந்தை அடிக்கிறது எப்படின்னு சச்சினுக்குத் தெரியாதா?

டிராவிட் : நானும் வெளில வந்தவுடனே கேட்டேன்.. எதுக்குத் தொட்டீங்கன்னு.. தொடலைன்னா உன்னை எப்படி உள்ள கூப்பிடுறதுன்னு சொல்றாரு..

நான் : நீங்க ஏன் பொசுக்குன்னு அவுட்டானீங்க..? நின்னு செஞ்சுரி போட்டிருக்கலாம்ல..

டிராவிட் : எத்தனை செஞ்சுரிதான் போடுறது? போரடிக்குதுல்ல..

நான் : சேவக்கிட்ட கொஞ்சம் பார்த்து விளையாடச் சொல்லிருந்தா அரை செஞ்சுரியாவது போட்டிருப்பாருல்ல..

டிராவிட் : ச்சே... அதெல்லாம் தப்பு.. அவனுக்கு என் பார்ட்னர்ஷிப் பிடிக்கலையாம். அதான் போறேன்னான்.. போடான்னுட்டேன்..

நான் : யுவராஜ்சிங் ஒழுங்காத்தான ரம்பிச்சான்.. அவனை எதுக்கு ரன் அவுட்டாக்குனீங்க..?

டிராவிட் : அவனுக்குக் கொழுப்பு..

நான : நீங்கதான வரச் சொன்னீங்க..

டிராவிட் : நான் வரச் சொன்னா வந்திர்றதா? அவனுக்கே அறிவு வேணாம்..

நான் : சேவக்கூட ஒழுங்கா பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்ல..

டிராவிட் : அதெப்படி? அவன் நல்ல பேர் எடுத்திருவானே?

நான் : டோனி நல்லா அடிக்கிறவனாச்சே.. ஏன் விட்டான்..?

டிராவிட் : யுவராஜ்சிங் அவுட்டான சோகம் அவனுக்கு. பெஸ்ட் பிரண்டு. அவனுக்கு மனசு கேக்குமா..? கம்பெனி கொடுக்க நானும் போகட்டுமான்னு கேட்டான். போடான்னுட்டேன்..

நான் : கடைசி வாலா ஆடினவங்களாச்சும் பொறுப்பா ஆடிருக்கலாம்ல..

டிராவிட் : தலையே வெளி வந்துட்டோம்.. வாலுக என்ன உள்ள போய் வாலாட்டுறது? அப்புறம் எங்களை எவன் மதிப்பான்..?

நான் : ஆக மொத்தம் வேணும்னே தோக்கணும்னு ஆடி தோத்துட்டீங்க.. அப்படித்தானே..

டிராவிட் : வேணும்னேல்லாம் ஆடலை.. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு நினைச்சோம். அதான் வந்துட்டோம்..

நான் : அதான் சொளையா லட்சம் லட்சமா அள்ளிக் கொடுக்குறாங்கள்லே.. அப்புறமென்ன?

டிராவிட் : கொடுத்தா.. இப்ப அதுவா முக்கியம்..?

நான் : அப்புறம்..

டிராவிட் : ஸார் மொதல்ல ஒண்ண நல்லா புரிஞ்சுக்குங்க.. அந்த நாட்டோட கிளைமேட் எவ்ளோ ஜில்லுன்னு இருந்துச்சு தெரியுமா? சும்மா கைல பீரோட சாயந்தரம் பிகரோட ரூட் விட்டுக்கிட்டு.. என்ஜாய் பண்றானுக ஸார் அல்லாரும்.. அதான் வீட்டு ஞாபகம் வந்திருச்சு..
நான் : உங்களுக்கு நாட்டை விட, வீடு முக்கியமா?

டிராவிட் : பின்ன.. இந்த முப்பத்திரண்டு வயசுல ஆடாமா ஐம்பத்திரண்டுல ஆடுனா நீங்களே போட்டா போட்டுக் கிழிச்சிர மாட்டீங்க..

நான் : ஏன் உங்க பொண்டாட்டிகளையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதான..?

டிராவிட் : நாங்களா மாட்டோம்னு சொன்னோம்.. சேப்பல்தான் கெடுத்திட்டாரு..

நான் : ஏன்..?

டிராவிட் : அவர் பொண்டாட்டி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.. அதுனால எல்லாரும் என்னை மாதிரியே தண்டனையை அனுபவிக்கணும்னு சொல்லிட்டாரு.. நல்லாயிருப்பாரா அந்த மனுஷன்..?

நான் : ஆக திட்டம் போட்டு.. பிளான் செஞ்சு.. மேட்டர் ரெடி பண்ணி.. மேப் போட்டு.. மிக்ஸிங் பண்ணி..

டிராவிட் : இது எல்லாமே ஒண்ணுதான்..

நான் : ஐயோ எனக்குத் தலையே சுத்துது..

டிராவிட் : இத தடவுங்க.. சரியாப் போயிரும்..

நான் : என்னது இது?

டிராவிட் : டிராவிட்டின் பாம்.. பார்க்கலை.. கிரிக்கெட் போட்டி நடுவுல ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்து வந்து நடிச்சனே.. ஒரு விளம்பரப் படம்.. இதுதான்.. சும்மா தடவுங்க.. தலைவலி பஞ்சா பறந்திரும்..

நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்..

1 comments:

✪சிந்தாநதி said...

போட்டி இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளது...

உங்கள் படைப்பு போட்டிக்கு இணைக்கப் படுகிறது.