Showing posts with label இட்லிவடை. Show all posts
Showing posts with label இட்லிவடை. Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-11-11-2010


11-11-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபகாலமாக இட்லி, வடை பதிவுகளை ஏன் எழுதவில்லை என்று தொலைபேசியிலும், இமெயிலிலும், பின்னூட்டங்களிலும் தொடர்ந்து விசாரித்தவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!.

இட்லி-வடை பதிவுகளில் போட வேண்டியதையெல்லாம் நான் அவ்வப்போது தனித்தனிப் பதிவுகளாகப் போட்டுவிட்டதால்தான் இட்லி-வடை என்ற தலைப்பில் எதையும் எழுத முடியவில்லை.. மன்னிக்கவும்..!

ஏற்கெனவே நான் எழுதியிருந்த இட்லி-வடை பதிவுகளைப் படித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்... அவைகள் அத்தனையையும் தனிப் பதிவுகளாக போட்டிருக்க வேண்டிய விஷயங்கள்தான் என்று..!

அவ்வப்போது எழும் கடுமையான வேலைப் பணிகளுக்கிடையேயும், என் அப்பன் முருகன் கொடுக்கும் சோதனைகளையும் தாண்டி இட்லிவடைக்காக விஷயங்களைத் தேட வேண்டுமெனில் நிரம்ப நேரம் பிடிக்கிறது. சேர்த்து வைத்து போட மனமும் மறுக்கிறது. சட்டென்று பதிவாய்ப் போட்டு பின்னூட்டங்களைப் பார்க்கவே விரும்புகிறது மனம்.

இந்த ஊசலாட்ட மனதின் விளைவாக இன்றைய இட்லி-வடை குறைவான பத்தியச் சாப்பாடு போலத்தான் இருக்கும்..!

நினைத்துப் பார்க்காத எதிர் ஓட்டுகள்..!

இந்த வலையுலகத்தில் நுழைந்து கிட்டத்தட்ட நான்காண்டை நெருங்கி வந்திருக்கும் சூழலில் முதல் முறையாக நேற்றுத்தான் எனது இந்த உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள் பதிவுக்கு மிக அதிகமான எதிர்ப்பு ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. கூடவே அர்ச்சனைகளும்தான்..!

மக்கள் மசாலா படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளைப்போல உடனுக்குடன் தீர்வை எதிர்நோக்குவதை இதிலிருந்து அறிய முடிகிறது. நீதிமன்றங்களில் தீர்வுக்கான காலக்கட்டம் தாமதமாகிறது என்பதை அனைத்துப் பதிவர்களும் சுட்டிக் காட்டினாலும் அந்த தாமதத்திற்கு யார் காரணம் என்பதையும், அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் “உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.

மக்களின் கருத்துப்படி இந்தப் படுகொலை நல்ல விஷயம் என்றே வைத்துக் கொண்டாலும், இதையே உதாரணமாகக் காட்டி பல அநியாயமான படுகொலைகளையும் இந்த என்கவுண்ட்டர் மூலமாகவே போலீஸார் இனியும் நடத்துவார்கள். இதற்கு முன்னும் நடத்தியிருக்கிறார்கள். உதாரணம் வீரப்பன் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள்..!

இனி பலியாகப் போகும் பல அப்பாவிகளுக்காக இந்த மோகனகிருஷ்ணனை எத்தனை ஆண்டுகளானாலும் பரவாயில்லை என்று சிறையில் வைத்து விசாரித்திருக்கக் கூடாதா..? ஒரு உயிர் முக்கியமா? அல்லது பல உயிர்கள் முக்கியமா?

யோசியுங்கள் மக்களே..!

“சேர்ந்து செஞ்ச தப்பெல்லாம் வெளில வரும்..” - விஜயகாந்துக்கு நடிகர் சந்திரசேகர் எச்சரிக்கை..!

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிய பேச்சு இது..!

“இந்த நாட்டுல ஒருத்தன், நான் ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ன்னு சொல்றான். ஒரு நாள் விஜயகாந்த் கலைஞரிடம் வந்து, ‘எனக்கு சரியா தமிழ் உச்சரிப்பு வர மாட்டேங்குது. என்ன செய்யலாம்னு ஒரு யோசனை சொல்லுங்க’ன்னு கேட்டான். அதற்கு கலைஞர் ஒரு வாக்கியத்தை எழுதிக் கொடுத்து, ‘இதைத் தினமும் படித்துப் பயிற்சி செய். தமிழ் உச்சரிப்பு தானாக வந்துவிடும்..’ என்றார். ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதுதான் அந்த வாசகம். அப்படி தமிழ் சொல்லிக் கொடுத்த என் தலைவனையே திட்ட இவனுக்கு என்ன தகுதியிருக்கு..?

கலைஞரைத் திட்டினால் பெயர் கிடைக்கும் என்று நினைக்கிறான் இந்த விஜயகாந்த். எழவெடுத்தவனுக்கு என்னத்தைச் சொல்ல..? ஏய் விஜயகாந்த்.. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் தலைவரைத் திட்டுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால்.. நீயும் நடிகன்.. நானும் நடிகன்.. நாம் இருவரும் சேர்ந்து செய்த தவறையெல்லாம், எனக்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தயங்க மாட்டேன்..” என்று பேசியிருக்கிறார்.

என்னய்யா இது அக்கிரமம்..? ஒரே கட்சில இருக்கும்போது கூடமாட விழுந்து எந்திரிக்கிறது.. அப்புறம் வேற கட்சின்னு பிரிஞ்சுட்டா உடனே கூத்தடிச்சதையெல்லாம் வெளில சொல்லிருவேன்னு மிரட்டுறது.. என்ன பிரெண்ட்ஷிப்போ..?

அப்போ இத்தனை நாளா செஞ்ச 'சேட்டை'களையெல்லாம் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இவரும் யோக்கியம் பேசுறாரா..? இப்படியும் யோசிக்கலாமில்லையா..? உண்மையாக விஜயகாந்தைவிட சந்திரசேகர் மாதிரியான நண்பர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெர்மனியின் ஹோமோ அமைச்சர்..!

ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிடோ வெஸ்ட்டர்வில்லி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணை அல்ல.. ஒரு ஆணை..

48 வயதான கிடோ, தான் ஒரு ஹோமோ என்பதை 2003-ம் ஆண்டு தற்போதைய ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் 50-வது பிறந்த நாள் விழாவின்போது மீடியாக்களிடம் வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதே ஆண்டில் இருந்து தனக்குப் பழக்கமான மைச்சேல் மிரான்ஸ் என்னும் தனது ஹோமோ நண்பரை, இப்போது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

இந்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சுபயோக, சுபதினத்தில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்தேறியதாம். பான் நகரின் மேயர்தான் இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

ஆனாலும் இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம்.. ஜெர்மனியில் ஹோமோக்கள் திருமணத்திற்கு இன்னமும் முறைப்படியான அங்கீகாரம் தரப்படவில்லையாம். ஆதலால் இது தற்போதைக்கு பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்றே அழைக்கப்படுமாம்..

கிராஸ் சேர்க்கை திருமணத்தில் இருக்கும் சில உரிமைகள்  மட்டுமே பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்ற இந்த விதிமுறையின் கீழ் ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு தரப்படுகிறதாம்.

ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் போன்ற வி.வி.ஐ.பி.யின் மனைவியாக இருந்தால் வெளிநாட்டிற்குப் போகும்போது ஜோடியாக கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்கலாம். இங்கே இவர்கள் எப்படி? அதுவும் மணமகன் வெளியுறவுத் துறை மந்திரியாச்சே. வருடத்தில் பாதி நாட்கள் சுற்றிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.. சந்தேகம் வருகிறதல்லவா?

ஏன் எங்களுக்கு மட்டும் என்ன குறைஞ்சா போச்சு? நாங்களும் முறையான ஜோடிகள்தான் என்பதைப் போல் கிடோ அரசு முறைப் பயணமாக சமீபத்தில் ஜப்பான், சீனாவுக்குச் சென்றபோது தனது பார்ட்னர் மைச்சேலையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அத்தோடு சீன அதிபர், பிரதமருக்கு தனது பார்ட்னரையும் அறிமுகப்படுத்தி வைத்து அசத்தியிருக்கிறார். இவரல்லவோ ஹஸ்பெண்ட்..? சரி. இதில் யார் ஹஸ்பெண்ட், யார் வொய்ப் என்பது தெரியாததால் கிடோவுக்கு முதல் மரியாதை அளிப்போம்.(புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்தான் கிடோ)

வாழ்க மணமக்கள்..!

மும்பையில் அசத்துகிறார் ஸ்வப்னா கண்ணா..!

'டிக் டிக் டிக்' படத்தில் தனது மின்னலடிக்கும் கண்களால் கைது செய்த ஸ்வப்னாவை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். அம்மணியைத் தேடியதற்கு காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.

படத்தில் ஸ்வப்னா வருகின்ற காட்சிகளிலெல்லாம் வஞ்சகமில்லாமல் சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார். அடப்பாவிகளா..! இதெல்லாம் முன்கூட்டியே நம்ம தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்குத் தெரி்ஞ்சிருந்தா ஸ்வப்னாவுக்கு இன்னும் நிறைய சான்ஸ் கிடைச்சிருக்குமேன்னு தோணுச்சு. அப்புறம்தான் ஆளு எங்க இருக்காங்கன்னு பார்க்கலாம்னு தோணி, தேடிப் பார்த்தேன்.

கிடைக்காத சூழலில் முத்து நிவாஸ் ஹரிஹரசுப்ரமணியன் என்னும் பேஸ்புக் நண்பர் ஒருத்தர் தேடிப் பார்த்து கண்டுபிடிச்சு சொல்லிட்டார். அவருக்கு எனது கோடானுகோடி நன்றி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு ரவுண்டு அடித்து முடித்த ஸ்வப்னா பின்னாட்களில் ஹிந்தி படங்களில்தான் அதிகம் நடித்தார். தற்போது ராமன் கண்ணா என்னும் ஹிந்தி நடிகருக்கு வாழ்க்கைப்பட்டு மும்பையில் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், எடிட்டிங், டப்பிங் தியேட்டர்கள் நடத்தும் Sangini Entertainment என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறாராம் ஸ்வப்னா. கூடவே தனது கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடனப் பள்ளியொன்றையும் அமைத்து நடனம் சொல்லித் தருகிறாராம்.

இந்தப் பள்ளியின் மூலம் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறாராம் ஸ்வப்னா.. இந்தக் காணொளி ஆக்லாந்தில் ஸ்வப்னா நடத்திய ஒரு நடன நிகழ்ச்சி பற்றியது.


நீடுழி வாழட்டும்..!

மல்லு படங்களைக் காப்பியடிக்கும் சிங்களத் திரையுலகம்

ஒரு விஷயத்திற்காக சிங்களத் திரைப்படங்களை கூகிளாண்டவரில் வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது இத்திரைப்படம் கண்ணில்பட்டது.

படத்தின் காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே என்று யோசித்தால் மண்டையில் பளிச்சென்று பல்பு ஒளிர்ந்தது. அட இது பயர் படமாச்சே என்று..

டோரண்ட்டில் டவுன்லோடிட்டு முழு படத்தையும் பார்த்தேன். ஒரு சீன்கூட மாற்றமில்லாமல் அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து எடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். ம்.. இந்த அளவுக்கு இலங்கையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டும் அதீத சுதந்திரத்தில் சிங்கள சினிமாக்கள் இருப்பதை அடுத்தடுத்து பார்த்த சில திரைப்படங்களின் காட்சிகள் சொல்லிக் காட்டின. இதாவது பரவாயில்லை.. நான் ஆதி காலத்தில் பார்த்திருந்த ‘தம்புராட்டி’, ‘ரதி நிர்வேதம்’, ‘வைன் அண்ட் வுமன்’, ‘மழு’ போன்ற பிட்டு படங்களைக்கூட அட்டர்காப்பி செய்திருக்கிறார்கள்.

பாவம் நமது மலையாள சினிமா எழுத்தாளர்கள். சில நூறு ரூபாய்களுக்காகவும், ஆயிரம் ரூபாய்களுக்காகவும் எழுதிக் கொடுத்த அவர்களுடைய கதை, படம் இப்படி நாடு விட்டு நாடு போய் படமாகியதுகூட தெரியாமல் மேலே போய்ச் சேர்ந்திருக்கிறார்களே என்று நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது..!

சிங்களப் படவுலகம் சிறக்கட்டும்..!

சிரஞ்சீவி  ஜென்டில்மேனா..!?

சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு நடிகை(பெயர் வேண்டாமே..!)  சிரஞ்சீவியைப் பற்றிக் குறிப்பிட்டு “சிரு பக்கா ஜென்டில்மேன். அவரை மாதிரியொரு குட் பிரெண்ட் அண்ட் ஆக்டரை நான் பார்த்ததில்லை..” என்று குறிப்பெழுதி வைத்திருந்தார்.

அதற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் கடுமையாக எதிர்த்து எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர் எழுதியிருந்த விஷயம் என்னை அதிகம் கவர்ந்தது.

ஒரு படத்தைக் குறிப்பிட்டிருந்த அந்த வாசகர், “இந்தப் படத்தைப் போய் பாருங்க.. இந்தப் படத்தை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் எந்த அளவுக்கு போராட்டம் நடத்துனாங்கன்றதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அப்புறமா உங்க சிரு ஜென்டில்மேனா, இல்லையான்னு சொல்லுங்க..” என்று காரத்தைக் கொட்டியிருந்தார்.

ஆர்வமிகுதியில் அந்தப் படத்தைப் பற்றி கூகிளாண்டவரிடம் துழாவி, துழாவி கண்டு பிடித்துப் பார்த்தேன். படித்தேன். அந்தப் படத்தின் பெயர் அல்லுடு மஜாகா..!

இ.வி.வி.சத்யநாராயணராவ் இயக்கம் செய்த இத்திரைப்படம் டபுள் மீனிங் டயலாக்குகளாலும், ஆபாசமான காட்சியமைப்புகளாலும் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். பெண்கள் அமைப்புகளெல்லாம் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் படம் என்னவோ சூப்பர் டூப்பர் ஹிட்..! 75 தியேட்டர்களில் 50 நாளையும், 27 தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து ஓடியதாம்..
படத்தை அப்படியே மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தபோது இடையில் வந்த இந்த பாடல் காட்சியைப் பார்த்து கொஞ்சம் பேஸ்த்தடித்துப் போனது உண்மைதான்.

கதைப்படி ரம்பாவும், ரம்யா கிருஷ்ணனும் கதையல்ல நிஜம் லட்சுமியின் பெண்கள் இருவருமே சிரஞ்சீவியை விரும்புகிறார்களாம். ஒரு கனவுப் பாடலில் மாமியாரான லட்சுமியும் சிரஞ்சீவியுடன் களத்தில் குதிக்க.. இந்த நால்வருக்குமான கனவுப் பாடலாகிவிட்டது இது..!

லட்சுமியம்மாவா இது..? ஏன் தெலுங்கில் மட்டும் இப்படி நடிக்கிறார். தமிழ் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ..?



மூன்று நாட்கள் படுத்தியெடுத்த ஒபாமா..!

ஒபாமா வைரஸ் என்று பெயர்தான் வைக்கவில்லை. ஆனால் அத்தனை டெல்லி தொலைக்காட்சிகளும் ஒபாமாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டுத் தாளித்துவிட்டன. இன்னும் ஒபாமா எந்த நேரத்தில் கக்கூஸ் போனார்..? எப்போது குளித்தார் என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மீதி அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டார்கள்.

ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.

மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஒரு மாணவி பாகிஸ்தான் பற்றிக் கேட்ட கேள்விக்கு “நான் முன்பே எதிர்பார்த்தேன்..” என்றபடியே அவர் பதில் சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது. என்றாலும் இன்னும் நெருக்கிப் பிடித்து நிறைய அவரிடம் கேட்டிருக்கலாம். அப்படியெல்லாம் சங்கடப்படுத்தக் கூடாது என்று முன்கூட்டியே கேள்விகளையெல்லாம் முடிவு செய்துதான் அமர வைத்திருக்கிறார்கள் என்பது சொல்லாமலேயே புரிந்தது.

சரி நம்ம மன்னமோகனசிங்காவது உருப்படியாக பேச்சுவார்த்தை நடத்தினாரா என்றால் அதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்காக அமெரிக்காவுக்காக ஒற்றர் வேலை பார்த்து 2004-ம் ஆண்டே  நமது நாட்டை விட்டு ஓடிப் போன ரவீந்திரசிங் என்ற ரா அதிகாரியை ஒப்படைப்பது பற்றி பேசவே இல்லையாம்..

ராஜமரியாதையோடு காங்கிரஸ் அரசே அனுப்பி வைத்த போபால் யூனியன் கார்பைடு ஆலை அதிபர் ஆண்டர்சனை பற்றியும் பேசவில்லையாம்..! அப்புறம் என்ன மயிறுதாண்டா பேசுனீங்கன்னா.. வேலை வாய்ப்பு, நம்ம காசைக் கொட்டி விமானங்களை வாங்கும் விற்பனை இது பற்றித்தான் பேசினார்களாம்.

என்ன கொடுமை இது..? அப்ப நட்பு நாடுகளை இது மாதிரி ஒற்றர் வேலை பார்க்கிறதெல்லாம் தப்பி்ல்லைன்னு பகிரங்கமா ரெண்டு நாட்டு ஜனாதிபதிகளும் ஓப்பனா சொல்லிரலாமே.. எதுக்காக இப்படி பிடிக்கற மாதிரி, தேடுற மாதிரி, துரத்துற மாதிரியெல்லாம் டிராமா போடுறாங்க..? ம்ஹும்.. முடியல.. இவனுகளையெல்லாம் நினைச்சா கோபம் கோபமா வருது..!

தண்ணி படுத்திய பாடு..!

தண்ணியடித்தால் என்ன தப்பு என்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது..!

மும்பையில் ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரக்கடித்து போதையான தயாரிப்பாளர், மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஆல்பத்தில் நடித்திருந்த ஒரு நடிகையைப் படுத்திய பாட்டை பாருங்கள்..!

ஏதோ தயாரிப்பாளர் என்பதால் விட்டுத் தொலைத்தார்கள். வேறு ஆளாக இருந்தால் என்னவாயிருக்கும்..?



சுமலதாவின் கதையல்ல நிஜம்..!

ஊர் நாட்டாமைகள், கிராம நாட்டாமைகள், பஞ்சாயத்து நாட்டாமைகள், நீதிமன்ற நாட்டாமைகள், அரசியல் நாட்டாமைகள், வலையுலக நாட்டாமைகள் என்ற வரிசையில் தொலைக்காட்சி நாட்டாமைகளும் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை சுமலதாவும் இணைந்திருக்கிறார். 50 வயதைக் கடந்தும் இப்போதும் ‘முரட்டுக்காளை’யில் பார்த்த அதே சுமலதாவைப் போலவே தென்படுகிறார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இப்போதும் அமிதாப்பச்சன், மோகன்லாலுடன் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் தனது காதல் கணவர் அம்பரீஷுடனேயே ஜோடி சேர்ந்து கல்லா கட்டி வருகிறார்.

தற்போது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ‘கதையல்ல நிஜம்’ பாணியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று கச்சிதமாகத் தீர்ப்புகளை வாரி வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இவரைப் பார்த்தால் நாட்டாமை மாதிரி தெரியவில்லை என்றாலும், டிவி கிளாமருக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..!

தெலுங்கு தெரியாததால் பல இடங்களில் புரியவில்லை என்றாலும் சுமலதாவே கண் கலங்கி அழுவதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு அழுவாச்சி காவியம்தான் ஓடுகிறது என்பது புரிந்து எனக்கும் கண்ணு கலங்கிருச்சு. நீங்களும் பார்த்து, கேட்டு அழுவுங்கள்..!



படித்ததில் பிடித்தது

“...........மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி-பேஸ்ட் செய்பவர்களும் உண்டு........”

“.............முதல் நாள், முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் படத்தைப் பார்க்காதீங்க’ என்று அதிரடியாகச் சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட்வரை கதையை அப்படியே ‘விமர்சனமென்ற’ பெயரில் எழுதுவார்கள்.........”

“............பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, ‘ஏய் மனிதனே’ டைப்பில் 'பக்கெட்டுக் கவிதைகள்' எழுதுவார்கள் அல்லது வாசித்த செய்தியை அப்படியே டைப் அடித்து வலையில் ஏற்றுவார்கள்..........”

நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா

பார்த்ததில் பிடித்தது



இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-24-06-10

24-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இட்லி

'குமுதம்' - பங்கு பிரிச்சாச்சு

அந்தக் காலம் வேற.. இந்தக் காலம் வேறன்னு பெரியவங்க வீட்ல முக்காலில உக்காந்து பெருமூச்சுவிட்டுப் பேசுவாங்க. அது 'குமுதம்' குடும்பத்துலேயும் நடந்திருச்சு..!


பெரியவர் எஸ்.ஏ.பி.யும், பி.வி.பார்த்தசாரதியும் நட்புடன் இருந்த காலம் போய்.. அவர்களுடைய வாரிசுகள் எதிரிகளாக உருமாறி கைது, கோர்ட், கேஸ் என்றாகி படபடத்துவிட்டது பத்திரிகை உலகம்.

ஆனாலும் நம்ம பத்திரிகையாச்சே என்ற பாசத்தில் மெகா மெகா ஆட்களெல்லாம் இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்..!

முடிவாக 'குமுதம்' பத்திரிகைகளை இரண்டாகப் பிரித்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று 'தினத்தந்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் நடந்ததைப் போல் முடிவெடுத்திருக்கிறார்களாம்..

இதன்படி 'குமுதம் ரிப்போர்ட்டர்', 'குமுதம் சிநேகிதி' என்ற இரண்டு இதழ்கள் மற்றும் 'ஆஹா எஃப்.எம்.', 'குமுதம்.காம்' ஆகிய இரண்டு பிரிவுகளுடன் கூடவே, கணிசமான ரொக்கப் பணத்துடன் வரதராஜன் தனியாகப் பிரிகிறாராம். 


அவர் கைக்கு அனைத்தும் வந்தவுடன் அவற்றில் இருக்கும் 'குமுதம்' என்கிற பெயர் மட்டும் நீக்கப்பட்டுவிடுமாம். 'குமுதம்' என்ற பிராண்ட் நேம், ஜவஹர் பழனியப்பனுக்கு மட்டுமே என்பதுதான் பெரியவர்களின் தீர்ப்பாம்..!

இதற்கிடையில் அந்த பிராண்ட் நேம் சாம்ராஜ்யத்தையே விலைக்குக் கேட்டு தென் மண்டல தளபதியின் சொந்த பந்தங்கள் மருத்துவரை நெருக்குவதாகவும் பத்திரிகையுலகில் பேச்சு..!

ம்.. கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. வரட்டும் பார்ப்போம்..!


தோசை

தடம் புரண்ட இயக்குநர்


தங்களது துறையில் வளர்ந்த பலர் வாழ்க்கையில் சறுக்கி விடுகிறார்கள். வாழ்க்கையில் சிறந்து விளங்கும் சிலர் தங்களது துறையில் சறுக்கி விடுகிறார்கள். இரண்டிலுமே சிறந்து விளங்குபவர்கள் ரொம்ப ரொம்பச் சிலர்தான்.

மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு புகழ் உச்சிக்கு வருபவர்கள் திடீரென்று வருகின்ற புகழையும், கவர்ச்சியையும் உண்மை என்று நம்பி அலட்டுகின்ற அலட்டலில் இருக்கின்ற வாழ்க்கையையும் தொலைக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவரும் அவர்களில் ஒருவர்தான். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. ஒரு பாட்டுக்காகவே ஓடிய படம். அடுத்த படம் ஹீரோவுக்காகவும், கதைக்காகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தவர் இப்போது அந்த முடிவெடுக்க நினைத்து அவரசத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். இயக்குநரிடம் முதலில் சிக்கியவர் ஒரு துணை நடிகை. இவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவரை வாழ்க்கைத் துணையாக்கும் அளவுக்குத் துணிந்துவிட்டார் இயக்குநர். இதில் ஒரு விசேஷம். இந்த துணை நடிகையான பெண்ணிற்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.

இன்னொரு பெண் சினிமாவில் இருக்கும் நடனப் பெண்மணி. அந்தப் பெண்மணியின் வயிற்றில் இயக்குநரின் குழந்தை வேறு.. இந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வீடு தேடி வந்து சண்டையிட்டுக் கொண்டு அந்த இயக்குநரின் பெயர் கோடம்பாக்கத்தில் கெட்டதுதான் மிச்சம்..!

இரண்டாவது படத்தின் ஹீரோவான பெரிய இயக்குநரே இடையில் தலையிட்டு நடனப் பெண்மணியை பஞ்சாயத்து செய்து விலக்கி வைக்க.. இயக்குநர் இதுவரையில் சம்பாதித்து வைத்திருந்ததெல்லாம் இதற்கான நஷ்ட ஈடாகவே போய்விட்டதாம்.

“அவதான் போயிட்டாள்ள.. நம்ம கல்யாணம் எப்போ..?” என்று துணை நடிகை அனத்தத் தொடங்க.. நம்ம இயக்குநருக்கு இப்போதுதான் நிஜ சூழல் புரிந்திருக்கிறது. தனது வயதான தாய், தந்தையரின் பேச்சைக் கேட்டு துணை நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்தார் இயக்குநர்.. கோபமான துணை நடிகை வீடு தேடி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம்..!

இப்போது இந்தப் பிரச்சினைக்கென்று தனியாக பஞ்சாயத்து செய்ய ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர்..! சிறந்த திறமையோடு கனவுலகத்திற்குள் நுழையும் சிலர் ஏன் இப்படி தங்களது சொந்த வாழ்க்கையும் அழித்து, கேரியரையும் அழித்துக் கொள்கிறார்களோ என்று தெரியவில்லை..!

அவர்களுடைய இடத்தை அடைய முடியாமல் எத்தனை பேர் தவியாய்த் தவிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா..?


பொங்கல்

இளமைக் காலங்கள் - சசிகலா


தற்செயலாகத்தான் பார்த்தேன்.. இத்தனை நாள் எங்கிருந்தாய் என்று கேட்கத் தோன்றுவதைப் போல இருந்தது அம்மணியை பார்த்தவுடன்..!

இளமைக் காலங்களில் அறிமுகமான சசிகலா என்னும் இந்தத் தாரகை, தமிழிலும், தெலுங்கில் 1993 வரையிலும் தனது திறமையைக் காட்டிவிட்டு அதன் பின்பு சப்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்..! இப்போது அதே சப்தமில்லாமல் டைவர்ஸும் வாங்கிக் கொண்டு மீண்டும் திரையுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்..


 

தெலுங்கில் டிவி சீரியலில்தான் முதலில் கால் வைத்திருக்கிறார்.. 'டாக்டர் இந்திரா' என்பது சீரியலின் பெயராம்..! பலருக்கும் தெரியாத ஒன்று.. அம்மணிக்கு தமிழில் மட்டும்தான் 'சசிகலா' என்ற பெயர்.. தெலுங்கில் 'ரஜ்னி' என்ற பெயராம்..!

ஸ்பெஷல் தோசை

பாலகிருஷ்ணா - சிவபார்வதி

நந்தமூரி தாரக ராமாராவ் என்னும் என்.டி.ராமராவின் குடும்பத்து கதை உலகம் முழுக்கவே பேமஸ்தான்..! பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் வயதான காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என்ற கோபத்தில் தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதியை வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்டார் ஆந்திராவின் கிருஷ்ணன்.

இந்தத் திருமணத்தால் ராமராவின் வாரிசுகள் அத்தனை பேரின் கடும் எதிரியானார் சிவபார்வதி. ராமராவ்வின் மரணத்தன்று வீடு தேடி வந்த வாரிசுகள் எல்லாம் வீட்டில் இருப்பதையெல்லாம் எடுத்துப் போக பார்க்கிறார்கள் என்று ராமராவின் சடலத்தை வைத்துக் கொண்டே பெரும் ரகளை செய்தார் சிவபார்வதி.

அப்போது ஏற்பட்ட மனக்கசப்பினாலும் ராமராவ் தனியாக நடத்தி வந்த தெலுங்கு தேசக் கட்சியை சிவபார்வதி தொடர்ந்து நடத்தி வந்ததாலும் இத்தனை நாட்கள் மனக்கசப்போடு இருந்த ராமராவ் குடும்பத்தினர் சிவபார்வதியின் கட்சி கடலில் கரைந்த பெருங்காயமாக கரைந்த பின்புதான் மனதை ஆற்றிக் கொண்டது.

ஆனாலும் ராமராவ் கடைசி காலத்தில் வசித்து வந்த வீடும், அவர் பயன்படுத்திய பொருட்களும், சில சொத்துக்களும் இன்னமும் சிவபார்வதியின் வசமே உள்ளன. போதாக்குறைக்கு ராமாராவ்வின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருந்ததாகவும் பின்பு அது தானாகவே கலைந்துவிட்டதாகவும் சிவபார்வதி ஒரு செய்தியை எடுத்துவிட.. கடுப்பாகிவிட்டார்கள் மொத்தக் குடும்பத்தினரும்..!

இப்படி ராமாராவின் பத்துக் குடும்பங்களும் சிவபார்வதியை முறைத்தபடியே இருந்த நிலையில் அதில் ஒருவரான நடிகர் பாலகிருஷ்ணா திடீரென்று தனது சித்தியை நேரில் சென்று பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார். எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் சித்தி பட்ட பரவசத்தை வீடியோவில் பார்க்கவும்..!



சந்திப்பிற்கான காரணத்தை அப்போது பாலகிருஷ்ணா வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், என்.டி.ஆர். பெயரில் கட்டப்படும் மியூஸியத்திற்குத் தேவையான பொருட்களை பெறுவதற்காகவே பாலகிருஷ்ணா வந்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து ஒரு டிவி நிகழ்ச்சியிலும் பாலகிருஷ்ணா தனக்குப் பிடித்தமான மகன் என்று சொல்லி அவருடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்து அசத்தியிருந்தார் சிவபார்வதி.

எல்லாம் ஒரே மாசம்தான்.. கடந்த மாதம் நடந்த ஜூனியர் என்.டி.ஆரின் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு சிவபார்வதியை கூப்பிடாமல் போக.. “என் மகனே இப்படிச் செய்யலாமா..? நான் ஒருத்தி குடும்பத்துல பெரியவ உசிரோட இருக்கும்போது என்னைக் கூப்பிடாம எப்படி நடத்தலாம்?”னு கேட்டு கண்ணு கலங்கிட்டாங்க சித்தி..!

ஆனாலும் “பாலய்யா என்ற பாலகிருஷ்ணாதான் எத்தனை சினிமால நடிச்சிருப்பாரு.. அவருக்கா தெரியாது..? வேண்டியதையெல்லாம் வசூல் பண்ணியாச்சு. அதான் மறுபடியும் சிவபார்வதியை ஒதுக்கிட்டாங்க..” என்கிறார்கள் ஆந்திர மணவாடுகள்..!


வடை

மட்டக்களப்பு நகரில் ராவணன் வெளியீடு..!

ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..!

வருடாவருடம் சென்னையில் ஐ.சி.ஏ.எஃப். சார்பில் நடக்கும் சிங்களத் திரைப்பட விழா இரண்டு வருடங்களாக இங்கே நடக்கவில்லை. ஆனால் புதியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் தொடர்ந்து இலங்கையில் திரையிடப்பட்டு வருகிறது. புறக்கணிப்பு என்பது ஒரு வழிப் பாதையா..?

நாம் நடத்திய போராட்டத்தைப் போலவே ஈழத்திலும் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். மட்டக்களப்பு நகரில் ராவணன் படம் திரையிட இருந்த சாந்தி தியேட்டரை முதல் நாள் இரவு அடித்து நொறுக்கி திரையை எரித்துவிட்டார்கள்..!

இப்போது ஒரு வாரத்திலேயே தியேட்டரைச் செப்பனிட்டுவிட்டு இப்போது ராவணன் படத்தினை திரையிட்டுவிட்டார்கள். ராவணன் படத்தை யாராவது எதிர்த்து ரகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறது இலங்கை அரசு. இதுவே ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவுவதைப் போலத்தானே..? நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்..?

நமது சொந்தங்கள் அங்கே போகக் கூடாது.. படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது.. நம்மால் அவர்களுக்கு எந்த பண வரவு ஆதாயங்களும் வரக்கூடாது என்றால் சரிதான்.. அதேபோல் நாம் நமது படங்களையும் அங்கே ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே..? இது மட்டும் எதற்காகவாம்..?

சில லட்சங்கள் கிடைக்கிறது என்பதற்காக நாமே நமது கொள்கையை அடகு வைக்கலாமா..? திரையுலகம் யோசிக்கட்டும்..!


காரச்சட்னி

ராதாரவியின் அடங்காத கோபம்


சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்திருந்த ஒரு செய்தி பரவலாக கோடம்பாக்கத்திலேயே ரீச் ஆகவில்லை..!

பல போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யினர் கடைசியாக நடிகர் சங்கத்தில் போய் நின்றிருக்கிறார்கள்.

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்கிற பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம் ' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

எப்போதும் கட் அண்ட் ரைட்டாக பேசும் ராதாரவி மனுவை வாங்கிக் கொண்டு அங்கேயே அவர்களுக்கு தடாலடியாக பதிலை அள்ளி வீசியிருக்கிறார். அவர் வீசியிருக்கும் பவுன்ஸரில் வழக்கம்போல இயக்குநர் இமயம் பாரதிராஜா மாட்டியிருக்கிறார். கூடவே கலைஞரும்..! இதுதான் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது..!

ராதாரவி தனது பதிலாக, “ஒரு பிரபல இயக்குநர்கூட(பாரதிராஜா) சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே கோரிக்கையை எங்கள் முன் வைத்தார். 'தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைத்த பின்புதான் எனது மகனை திரையுலகில் களமிறக்குவேன்' என்று எங்களிடம் வீராப்பு பேசினார். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய படத்தில்(பொம்மலாட்டம்) நானாபடேகரைத்தான் நடிக்க வைத்தார். ஏன் அந்த கேரக்டரை பண்ண தமிழ் நடிகர் யாருக்குமே தகுதியில்லையா..?” என்று கேட்டிருக்கிறார்..

”கலைஞர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கும் 'தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க'த்தின் பெயரை 'தமிழ் எழுத்தாளர் சங்கம் ' என்று மாற்ற அவரிடம் போய்ச் சொல்லுங்களேன். அப்படியே 'பெப்சி' அமைப்பை, 'தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் சங்கம்' என்று பெயர் மாற்றச் சொல்லுங்கள். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, நாங்களும் பெயர் மாற்றம் செய்கிறோம்.” என்று சுடச்சுடப் பதில் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மீதான கோபத்தில் கலைஞருடன் சமீப காலமாக இணக்கமாக இருந்து வரும் ராதாரவி இப்போது திடீரென்று இப்படி கலைஞர் மீது காட்டத்தைக் காட்டிய விவகாரம் என்னவெனில், அது எஸ்.வி.சேகரை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று கலைஞர் சொன்னதுதானாம்..

“எங்கப்பாவோட பெருமை என்ன..? புகழ் என்ன..? அவருக்கு நானே வாரிசா இருக்க முடியாது.. இதுல இந்த காமெடியன்தான் வாரிசா..? கலைஞருக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா..?” என்று தனக்கு நெருக்கமான சினிமா புள்ளிகளிடம் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..!


தக்காளி சட்னி

பார்த்திபனின் குத்திக் காட்டல்..!


சினிமாவை தயாரித்தால் மட்டும் போதாது..! அதனை விளம்பரப்படுத்த வேண்டும்.. அதற்கு தயாரிப்புச் செலவில் பாதியையாவது செலவழித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. இதற்காக சினிமாக்காரர்கள் சொல்கின்ற காரணம் 'மூன்று நிதி'களின் திரையுலக  ஊடுறுவலைத்தான்..!

அவர்கள் வாங்குகின்ற படங்களை மட்டுமே அவர்கள் பிரமோட் செய்து கொண்டேயிருப்பதால் மற்ற படங்களெல்லாம் ரிலீஸாகவில்லையோ என்கிற பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தி மற்ற படங்களுக்கு கூட்டத்தையும், வசூலையும் வர விடாமல் மறைமுகமாகத் தடுக்கிறார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு..!

அதேபோல் இன்னுமொரு குற்றச்சாட்டுத்தான் மிக முக்கியமானது. இந்த மூன்று நிதிகள் வெளியிடும் படங்களின் வி.சி.டி.க்கள் மட்டும் தமிழ்நாட்டில் வெளியாவதே இல்லை.. அந்த அளவுக்கு போலீஸ் கெடுபிடியாகிறது. ஆனால் மற்ற படங்களெனில் அடுத்த நாளே வந்துவிடுகிறது. காவல்துறை அதனை மட்டும் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் என்பதுதான் திரையுலகத்தினரின் கேள்வி. ஆனால் யாருக்கும் இங்கே முதுகெலும்பு இல்லாததால் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.

ஆனால் மேடைக்கு மேடை ஜொள்ளுவிட்டே பேசும் பார்த்திபன் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் இதனைப் பற்றி வெளிப்படையாக கேட்டது வந்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியை அளித்துவிட்டது. அன்று இரவு முழுவதும் பார்த்திபனின் செல்போனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்ததாம்..

இது பற்றி பார்த்திபன் சொன்னது இதுதான்.. “குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை. இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டு விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்குமே..”


சாம்பார்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

மறுபடியும் ஒரு பஞ்சாயத்து துவங்கியிருக்கிறது திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பொறுப்பாளராக இருந்த ஏவி.எம்.முருகனே இந்த முறையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 


சங்கத் தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டியே நிலவுகிறது. சென்ற ஆண்டு சன் டிவிக்கும், கலைஞருக்குமிடையே கபடியாட்டம் நடந்து கொண்டிருந்ததால் கலைஞரின் ஆசியோடு இராம.நாராயணன் தனி அணி அமைத்து போட்டியிட்டார். எதிரணியில் சன் டிவிக்காக ராதிகாவும், பஞ்சு அருணாச்சலமும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றார்கள். இதில் ராதிகாவை நிற்கவிடாமல் செய்வதற்காக 'அவர் தெலுங்குப் பெண்.. தமிழச்சி அல்ல..' என்றெல்லாம்கூட கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்யும் நிலைமைக்குச் சென்றது திரையுலகத்தைக் கலவரப்படுத்தியது.

ஆனால் இந்த முறை அப்படியிருக்காது என்கிறார்கள். தங்களது டிவிக்காக படங்களை வாங்கிப் போடுவதற்கு தங்களது விரலசைவில் நடப்பவரே சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஆளும்கட்சி டிவி நினைப்பதால் 'போதுமடா சாமி.. ஆளை விடுங்கப்பா..' என்று கைகூப்பி வணங்கிவிட்டு வீட்டுக்கு போக நினைத்த இராம.நாராயணனை, கலைஞரே அழைத்து தட்டிக் கொடுத்து களத்தில் குதிக்கும்படி சொல்லியனுப்பியிருக்கிறாராம்.. அவருடைய அணியில் இருப்பவர்கள் யார், யார் என்பதுதான் இன்னமும் முடிவாகவில்லை.

பிலிம் சேம்பர் தலைவராக சமீப காலம்வரையிலும் இருந்த கே.ஆர்.ஜி., தைரியமாக இராம.நாராயணனை எதிர்த்து களமிறங்கியுள்ளார். இடையில் தயாரிப்பாளர்களுடன் சரிக்கு சமமாக மோதிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தலைவர் பாரதிராஜாவை நிறுத்தலாமா என்றுகூட யோசித்தது. ஆனால் சங்கத்தின் பை-லா ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.

எனவே சென்ற தேர்தலில் மனு செய்துவிட்டு பின்பு பஞ்சாயத்து செய்து கழட்டிவிடப்பட்ட அமீரை செயலாளர் பதவிக்கு நிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

இடையில் இராம.நாராயணனுக்கு முன்பாக தலைவராக இருந்த சத்யஜோதி தியாகராஜன் தான் நிற்கலாம் என்று நினைத்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால் கோபாலபுரத்தின் ஆசி இராம.நாராயணன் மீது இருப்பதை அறிந்து கப்சிப்பாகிவிட்டார்.

அடுத்த மாதத் துவக்கத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்..!


துவையல்

சூர்யாவின் அதிரடிப் பேச்சு


"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது” என்று  தைரியமாகச் சொல்லியுள்ளார் சூர்யா.

சம்பந்தமேயில்லாத அமிதாப்பச்சன், அனில்கபூர், ஷாரூக்கான் வீடுகளின் முன்பெல்லாம் உண்ணாவிரதம் இருந்த தொண்டர்களும், தோழர்களும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

ஆளுக்கொரு நீதியாக போராட்டம் திரும்பும்போதே அது நீர்த்துப் போய்விடுகிறது..! இதில் “தம்பிக்காக இந்த ஒரு முறை மட்டும் விட்டுவிடுகிறேன்” என்று 'ரத்த சரித்திரம்' படத்தை வெளியிட ஆட்சேபணையில்லை என்று சொல்லியிருக்கும் சீமானின் அரசியல் நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது..!

பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!


கேசரி

இரண்டு வலைத்தளங்கள்..!

1. அனிதா ரத்னம்


தற்செயலாகத்தான் இந்த பிளாக்கை பார்த்தேன். படித்தேன். ஆங்கிலத்தில்தான் உள்ளது. பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னத்தின் சொந்த வலைத்தளம்..!

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ் குடும்பத்தினரைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை செம காமெடி..!
 

http://anita-ratnam.blogspot.com/2010/05/sisters-of-imelda.html

2. சார்லஸ் அண்ணன்

முன்னாதாகவே இந்த வலைத்தளம் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும். சற்றுத் தாமதமாகிவிட்டது. எனக்கு முன்பாக நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிவிட்டார்..!


http://vaarthaikal.wordpress.com/

'ருத்ரவீணை', 'சிவமயம்', 'காத்து கருப்பு', 'என் தோழி, என் காதலி, என் மனைவி', 'ரோஜாக்கூட்டம்' என்ற சீரியல்களையும், 'ஜில்லுன்னு ஒரு சேலஞ்ச்', 'இசைக்குடும்பம்', 'சவால்', 'மென்பொருள்' என்ற ஷோக்களையும் இயக்கியிருக்கும் 'சார்லஸ்' என்ற அண்ணனின் தளம் இது.. இவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

தளத்தின் வடிவமைப்பு மிகக் கச்சிதமாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதேபோல் உள்ளடக்கமும்..! கொஞ்சமும் சுய விளம்பரம் இல்லாமல் முழுக்க, முழுக்க சினிமாவுக்காகவே தளத்தை இயக்கி வருகிறார்.. முழுவதையும் படித்துப் பாருங்கள்.. கிறுகிறுத்துப் போய்விடுவீர்கள்..! எளிமையான எழுத்து நடை..!

பார்த்ததில் பிடித்தது



என்ன கொடுமை பாருங்கள்..!? 

இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!

பதிவர் இட்லிவடைக்கு எனது கண்டனம்!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அன்பு அண்ணன் இட்லிவடையாரின் நேற்றைய இந்தப் பதிவில் http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_6932.html நான் பார்த்த ஒரு பின்னூட்டம் எனக்குள் திடீரென்று ஒரு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தடுக்க முடியவில்லை. மறைக்க விரும்பவில்லை. நானும் ஒரு பின்னூட்டமிட்டேன். ஆனால் அதனை இட்லிவடையார் வெளியிட மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "அது தனி மனிதத் தாக்குதல்" என்கிறார்.

நானும் ஒத்துக் கொண்டேன். ஆனாலும் அதனை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் ஒரு கடமையும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு உண்டு என்று வாதிட்டேன். அவர் மீண்டும் மறுத்துவிட்டார்.

ஆகவே வேறு வழியில்லாமல், (இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன்) அந்தப் பின்னூட்டத்தையும், அதற்கான எனது பதிலையும் இங்கே பதிவிடுகிறேன்.

ஒரு நபரைப் பற்றி நான் மிகக் கடுமையாக எழுதியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை.

"பழசைக் கிளராதே" என்பவர்களுக்கான எனது பதில் "நமது நேரத்தை இது போன்றவர்களுக்கு செலவிடக்கூடாது.." என்பதுதான்.

"பொத்திக் கொண்டு போ" என்று சொல்லாதீர்கள். எனக்கு எழுதியே ஆக வேண்டும்போல் உள்ளது. வருவதை நானே எதிர்கொள்கிறேன்..

அந்தப் பதிவில் இருக்கும் ஒரு பின்னூட்டம் :

//ஜயராமன் said...
அண்மைப் பதிவுகளில், இட்லிவடையில் வீசும் துர்நாற்றம் சகிக்க முடியாததாய் இருக்கிறது. தேடிப்பிடித்து சாக்கடைப் பதிவுகளைப் போடுவதில் சாக்கடை மனமோ அல்லது ஹிட் தேடும் வெறியோ தெரிகிறது. டாய்லெட் விதிகள் போட்டது முதல் அருவருக்கத்தக்க எல்லா பொருள்களும் இட்லிவடையில் வரவேற்கப்படுகிறதோ என்னும் ஐயம் கிளம்புகிறது.
இந்த கட்-பேஸ்ட் பதிவுகளுக்குப் பொருத்தமாக, விவாதத்திற்குரிய பலப்பல கருத்துச்செறிவான பொருள்கள் இணையத்தில் இவருக்கு காணக் கிடைக்கவில்லையா என்ன? எத்தனையோ இருக்கிறதே.
இங்கு பதியப்பட்டிருக்கும் பல பொருட்களுக்கு பல நூறு விளக்கங்கள் எதிர்தரப்பினரால் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொய்களும், புரட்டுகளும் பல வருடங்களாக உலாவி வருகின்றன. அதை அறிந்துகொள்ளும் முனைப்பும், உண்மையான ஈடுபாடும் இ.வ விற்கு இல்லை? மாறாக வெறும் அருவருக்கும் அதிர்ச்சி யின் தேவைதான் தங்கள் பதிவுகளில் தெரிகிறது.
இந்த சுவாகா கதை போன்ற அசிங்கங்கள் கருணாநிதி தன் சொந்த பெயரில் ஒரு இருபது வருடம் முன்பு குமுதத்தில் எழுதி வந்த தொடரில் நான் படித்திருக்கிறேன். பின் பலப்பல களங்களில் இந்த இந்துமத விரோத பொய்கள் பரப்பப் பட்டு வருகின்றன. கத்துக்குட்டியாக ஏதோ பதிவுகள் என்ற பெயரில் ஆபாசத்தைப் பரப்பியிருக்கிறீர்கள். நீங்கள் செய்வதும் மதவிரோதம் என்ற பெயரில் சட்டப்படி குற்றம். ஆனால், கேட்க ஆளில்லை. வேதத்தில், முகம்மதுவைச்சொல்லியிருக்கிறது என்று ஜாகிர் நாயக் முதலான இஸ்லாமியர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். வேதத்தில் கிருத்துவைச்சொல்லியிருக்கிறது என்று தேவநாயகம் முதலான எவாஞ்சலிஸ்டுகள் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். வேதங்களில் ஆபாசம் இருக்கிறது என்று சாதிவெறி, இந்து துவேச கூட்டங்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றன. வேதங்களுக்கு இப்படி ஆளாளுக்கு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதில் இட்லிவடைக்கு இலக்கியப்பதிவு போட்டு லட்சம் லட்சமாக ஹிட் வேண்டும் என்று வேறு ஆசை. பரிதாப நிலையில் இருக்கிறீர்கள். இதே விடுதலையில் இஸ்லாமிய மதம் குறித்து ஓரிரு மாதம் முன்பு வந்த நீண்ட தொடரை நீங்கள் கட்-பேஸ்ட் போடவில்லையா? அதற்கு ஏன் துணிவில்லை? அதற்கு இஸ்லாமியர்கள் நீண்ட விளக்கம் கொடுத்திருப்பதையும் சேர்த்து போட்டு நடுநிலை பட்டயம் வாங்கியிருக்கலாமே. இம்மாதிரி பதிவுகள் போட்டு ஒருவேளை உங்கள் மேலிருக்கும் இந்துத்துவ தீட்டை துடைக்கப்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அய்யோ பாவம், இட்லிவடை. புது ஆண்டில் இன்னொரு மூக்கு வெளுத்துவருகிறது.
இப்படி நான் எழுதியிருப்பதால் ஏதாவது விளைவு நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதையும் பதித்து நீங்கள் ஹிட் பெருவீர்கள் என்ற நல்ல எண்ணமே காரணம்.
நன்றி
ஜயராமன்//

இட்லிவடையார் நிராகரித்த எனது பதில் பின்னூட்டம் :

யோவ் ஒழுக்க சிகரம்.. மொதல்ல நீ யாருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தியாய்யா..

"அருவெருப்பு, துர்நாற்றம், சாக்கடைப் பதிவு, அருவருக்கத்தக்க.."

அடேயப்பா மவனே.. இதையெல்லாம் நீ சொல்லி நாங்க கேட்க வேண்டிய நிலைமையா..?

இத்தனைக்கும் ஒட்டு மொத்த உருவமே நீதானய்யா.. நீ அடுத்தவனுக்கு அறிவுரை சொல்றியா..?

மொதல்ல உனக்கு பிளாக்ல எழுதறதுக்காவது ஏதாவது தகுதி இருக்கான்னு யோசிச்சிருக்கியா..? அயோக்கியத்தனமா ஒரு பொண்ணு பேர்ல ஆபாசக் கதை எழுதி, அதையும் நாலு பேருக்கு படிக்கணும்னு தைரியமா திரட்டில வேற சேர்த்து கூத்தடிச்சியே.. அது மட்டும் அருவருப்பு இல்லையாக்கும்.. சாக்கடை இல்லையாக்கும்.. துர்நாற்றம் இல்லையாக்கும்..

பின்ன.. அதெல்லாம் நீ எழுதின வேதமாக்கும்..? நல்லா வாய்ல வருது எனக்கு.. என்னய்யா படிச்சு கிழிச்ச நீ.. படிக்காத முட்டாள்கூட செய்ய மாட்டான்யா நீ செஞ்ச காரியத்தை.. என்னமோ பெரிசா எட்டு மாடி பில்டிங்ல கோட், சூட், டை கட்டிக்கிட்டு வேலை வேற பாக்குறியாம்.. த்தூ.. வெக்கமாயில்லை.. செய்றதையும் செஞ்சுட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ல வர்ற..

மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..

இருக்குற மானம், மரியாதையை காப்பாத்திட்டு பேசாம வீட்ல போய் உக்காந்து உன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா இருக்கப் பாரு..

அட்வைஸ் பண்றதுக்கும், அறிவுரை சொல்றதுக்குமெல்லாம் ஒரு தகுதி வேணும்யா.. வெங்காயம்.."

இவ்வளவுதான்..

இதனை வெளியிட மறுத்து, பதிவுலக ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்த இட்லிவடையாருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்