வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..!

31-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த இரண்டு நாட்களாக வலையுலகைச் சுழன்றடிக்கும் சூறாவளியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இங்கு நாம் என்கிற வார்த்தையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் நமக்குள்ளேயே இருக்கின்ற விஷயங்களை வெளியில் இருந்து ஒரு நபர் உள்ளே வந்து கொட்டிக் காண்பிக்கிறார். எக்காளமிட்டு தனக்கு இப்போது ஒரு வாய்ப்புக் கிட்டியது போல எள்ளி நகையாகிவிட்டு சந்திடிச்சாக்கில் இதுநாள்வரையில் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்த ஒரு சிலரை வன்கொடுமையையும், வன்புணர்ச்சியையும் செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கு நம்மில் சிலரே உடந்தையாக இருப்பதைக் கண்டு மிகவும் வேதனையாக இருக்கிறது..!

நர்சிம் எழுதிய அந்த பூக்காரி என்கிற பதிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை கிட்டத்தட்ட வலையுலகமே குறிப்பிட்டுச் சொல்லியாகிவிட்டது. நர்சிம் தனது தவறை உணர்ந்து வலையுலக மக்களிடம் தனது மன்னிப்பை கேட்டு அந்தக் குறிப்பிட்ட பதிவையும் நீக்கிவிட்டார். அதே சமயத்தில் தனக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாக அவர் சொல்லியிருக்கும் அவருடைய பேட்டிக்கான எதிர்ப்பதிவை நமது சக தோழியரான விஜியும் நீக்கிவிட்டார். சந்தோஷம்..

இதில் சம்பந்தமே இல்லாத வினவு போன்ற அரசியல் முதலாளிகளை நாம் ஏன் இதில் இழுக்க வேண்டும்..? நுழைக்க வேண்டும்..? அல்லது நுழைவதை வேடிக்கை பார்க்க வேண்டும்..?

அவர்களின் அரசியல் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படிப்பட்டவை என்பதை லீனா மணிமேகலையின் கூட்டத்திலேயே வலையுலகம் கண்டு கொண்டது. அப்படியிருந்த அந்த அடாவடிக் கூட்டத்திற்கு நமது வலையுலகத்தில் கால் பதித்து நாட்டாமை செய்ய நாம் ஏன் இடமளிக்க வேண்டும்..?

முதலில் அந்த நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள எனது இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..! அவர்களின் இரட்டை வேட நிலையையும், இப்போதுகூட அவர்கள் எதற்காக வலையுலகத்திற்குள் சிலரை இழுத்து வைத்துக் கொண்டு தாங்கள்தான் எழுத்துலகின் அத்தாரிட்டி என்பதைப் போல் காட்டுவதும் எதற்காக என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் இணையத்திற்குள் வந்த புதிதில் நான் உட்பட பல பதிவர்கள் அவர்களை விழுந்து, விழுந்து படிக்கத் துவங்கினோம். பலரிடமும் அறிமுகப்படுத்தினோம். அவர்களைப் பற்றி பாராட்டித்தான் பேசினோம். ஆனால் அவர்கள் நம்மை ஒரு பிளாட்பார்மாக பயன்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை மிக தாமதமாகத்தான் நான் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து நானும் அவர்களது தளத்தில் பின்னூட்டமிடுவதை நிறுத்திக் கொண்டேன்.

வலையுலகம் என்கிற இந்தச் சின்ன உலகத்தில் நாம் இதுவரையில் இருந்து வந்தது நட்பு என்கிற மூன்றெழுத்துக்காக. அதன் மூலம் நமக்குள்ளேயே பரவிவிட்ட தோழமையுணர்வு குடும்ப உறவாக வளர்ந்து இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் சிறு, சிறு குழுக்களாக உறவாடி வருகிறோம். இதுவெல்லாம் வினவு குழுமத்திற்குத் தெரியாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை.

அவர்கள் நம்மை அணுகியதற்குக் காரணம் அவர்களுடைய கொள்கையை நம்மிடத்திலே விதைப்பதற்குத்தான். நம்முடைய பேச்சுக்களும்,
எழுத்துக்களும் அவர்களைப் பொறுத்தவரையில் மொக்கைதான். ஏனெனில் அவர்கள் மட்டுமே இங்கே எழுத்தாளர்கள். மற்றவர்களெல்லாம் வெறும் சுள்ளான்கள் என்பது அவர்களது கணிப்பு..! இதைத்தான் அவர்கள் அவ்வப்போது பல்வேறு தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இவர்களிடையே இருக்கின்ற மிகப் பெரும் நல்ல குணமே, தங்களைத் தாங்களே உயர்த்திப் பேசி மற்றவர்களை இழித்துப் பேசுவது. போராட்டங்களை நடத்துவதால் தங்களுக்கு யாரையும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது என்று திமிராகப் பேசுவதும், வீடு தேடிச் சென்று கேள்வி கேட்பது போல் குடும்பத்தினரை மிரட்டுவதும்தான் இவர்களது கட்சியின் கொள்கை.

இவர்களது தளத்தில் மாற்றுக் கருத்துச் சொல்லும் பதிவர்களை வினவு என்கிற பெயரில் இருப்பவர் திட்டமாட்டார்.. ஆபாசமாக பேச மாட்டார். ஆனால் மற்றப் பெயர்களில் வருபவர்கள் கீழ்த்தரமாக பேசித் தள்ளுவார்கள். அதனை இன்றைக்கு ஆபாசத்தை எதிர்ப்பதாக போலிக் கூத்தடிக்கும் இந்தக் கண்ணீர்த் துளிகள் அன்றைக்கு கண்டு கொள்ளாமலேயேதான் இருந்தார்கள்.. இப்பவும் இருக்கிறார்கள்..!

பத்திக்கு பத்தி பொறுக்கி, பொறுக்கி என்று நர்சிமை எழுதியிருக்கும் இந்த தேவர்கள்தான்(இது தேவலோகத்து தேவர்கள் - இப்படி எழுதினால்தான் இவர்களுக்குப் பிடிக்கும்)

///கார்க்கி இனி நீ “கார்க்” பால்தான், வொக்காளி ஒன்ன வெளுக்கிறதுக்கு இதான்டா வழி..  நர்சிம்’க்கு பொறுக்கி சொல்வதைவிட வேற ஏதாச்சம் சொல்லியிருக்கலாம்.. பார்ப்பன ஓநாய், ஒரு பெண்ணிடம் உன்ற மொள்ளமாரித்தனத்த காட்றியே நீயெல்லாம்  #@@#$@!!   வேணா உன்  தாய் கொடுத்த பாலே  வெளி’ல வர்ற அளவுக்கு வார்த்தைய சொல்ல வச்சிறாதே….///

இப்படியொரு பின்னூட்டத்தை வெளியிட்டு தங்களது உள்ள அரிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களா யோக்கியவான்கள்..? நர்சிமின் பதிவை எதிர்ப்பதாகச் சொல்லியிருப்பவர்கள் அதே பாணியிலேயே நமது வலையுலக சக பதிவரையும் தாக்கியிருக்கிறார்கள்..! இவர்களுக்கு நர்சிம் மீது குற்றஞ்சொல்ல என்ன தகுதி இருக்கிறது..?

இந்தப் பதிவு முழுவதிலுமே ஆள், அட்ரஸ் இல்லாத முகமூடிகள்தான் அனானிகளாக தங்களது மன அரிப்பை வெளிக்கொட்டியிருக்கிறார்கள். உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் இவர்கள்தான் பொறுக்கிகள்.. இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை..!

இத்தனை நாட்களாக நாம் இந்த வலையுலகில் பழகி வந்திருக்கிறோம். பேசி வந்திருக்கிறோம். யாரை பார்த்தாலும் கைகளை குலுக்கி நலம் விசாரித்து அவரது பதிவுகளைப் பற்றி விமர்சித்திருக்கிறோம். வினா எழுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருவராவது நீங்க என்ன ஜாதி என்று கேட்டிருக்கிறோமா..? அப்படியொரு நிலைமைக்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள் இந்த வெளியாட்கள்..!

//சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.///

இப்படித்தான் தங்களது கொடுந்தாக்குதலை நம் மீது துவக்கியிருக்கிறார்கள் இந்தப் புண்ணியவான்கள். சந்தனமுல்லையும், நர்சிமும் என்ன ஜாதி என்பது பற்றி இதுவரையிலும் நாம் யோசித்துப் பார்த்திருப்போமா..? யாரிடமாவது கேட்டிருப்போமா..? எனக்கே இப்போதுதான் தெரியும்..!

இந்த எழவெடுத்த ஜாதியை மறந்துதானே வலையுலகம் என்ற ஒரு லேபிளின் கீழ் நாம் குடியிருந்து வருகிறோம். கறையான் புற்றுக்குள் பாம்பு புகுந்த கதையாக நமக்குள்ளேயே பிரிவினையைத் தூண்டிவிடும் அளவுக்கு ஒரு நச்சுப் பாம்பை நாம் ஏன் நமக்குள் அனுமதிக்க வேண்டும்..!

சற்று சிந்தித்துப் பாருங்கள் பதிவர்களே.. இதுவரையில் பதிவுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலாவது இவர்களை நாம் நேராக அழைத்திருக்கிறோமா.. இல்லையே..? இவர்களாவது தேடி வந்து நமக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்களா.. வரவே இல்லையே..? எத்தனையோ பதிவுலக் கூட்டங்களுக்கு பதிவர்களை அழைத்திருக்கிறோம். இவர்கள் வந்திருக்கிறார்களா..? வரவில்லையே..? கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பதிவர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்..?

எனக்கு ஒன்றிரண்டு முறை.. மற்றபடி நான் வேறு எந்தப் பதிவரின் தளத்திலும் வினவு என்கிற எழுத்தை பார்த்ததில்லை. ஆனால் தண்டோரா அண்ணன் வினவு வெங்காயங்களை விமர்சித்து எழுதிய பதிவின்போது அனானி பின்னூட்டங்களை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கினார்கள். இப்போது ஏதோ நமது வலையுலகம் மீது பாசம் பொங்கி வழிந்ததுபோல் விழுந்தடித்து ஓடி வந்திருக்கும் காரணத்தைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

நம்மிடையே இருக்கும் ஒற்றுமையை சிதைப்பது என்பதுதான் இவர்களது முதல் நோக்கம். அவர்களை நோக்கி நமது பதிவர்களை சிறுகச் சிறுக இழுத்து அவர்களது ஆதிக்கத்தை வலையுலகத்தின் மீது செலுத்துவது என்பதுதான் இவர்களது நோக்கம்.

இப்போது நமக்குள் என்ன பிரச்சினை..? சந்தனமுல்லை என்கிற பதிவருக்கும், நர்சிம் என்கிற பதிவருக்கும் இடையில் முட்டல், மோதல். இருவரையுமே பேச வைப்போம். முடிந்தால் பேசுங்கள். நேராகப் பேச விருப்பமில்லையெனில் இருவருக்குமே நெருக்கமான யாராவது சக பதிவர்களை அழையுங்கள். அவர்கள் மூலமாகப் பேசுங்கள்.

உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்காக நச்சுப் பாம்பு போன்ற வெளியாட்களான வினவு போன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று சந்தனமுல்லையை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நர்சிம் மீது தொடுக்கும் வினாக்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அதனை நம்மிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் புல்லுருவிகளின் துணையோடு செய்யாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.
ஏன்.. எதற்கு.. என்கிறீர்களா..? வினவின் பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்..

///இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு வெளியிடுகிறார்.///

அந்தப் பதிவை "அற்பத்தனம்" என்று குறிப்பிடுகிறார் மெத்தப் படித்த மேதாவியான இந்த வினவு. இப்படி உங்களது ஒரு பதிவை நமது சக பதிவர்களில் ஒருவர் குறிப்பிட்டாரென்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் தோழர்களே..! அற்பத்தனம் என்று குறிப்பிட இவருக்கு என்ன தகுதியிருக்கிறது.? யார் இவர்..?

///அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம் பூக்காரி என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார்.///

இதனை இந்த அறிவாளி சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. நமது பதிவர்களே குறிப்பிட்டது இதைத்தான். ஆனால் ஏன்.. எதற்கு..? பின்னூட்டத்தில் திட்டினால்கூட போனில் அழைத்து மென்மையாகப் பேசும் நர்சிம் ஒரு நாளில் மாறிப் போனது ஏன் என்கிற குழப்பத்துடன்தானே நாம் அத்தனை பேரும் இதனைப் பேசினோம்.. இந்தக் குழப்பமெல்லாம் தெருவோரத்தில் நிற்கும் இந்த அயலார்களுக்கு எப்படி புரியும்..?

///பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப்படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. ///

இங்கேதான் நமக்குள்ளேயே ஜாதி, மதம் என்னும் விஷத்தை நம் கண் முன்பாகவே உலாவ விடுகிறார்கள் இந்தக் கயவர்கள்..! நர்சிம் ஜாதிக் கண்ணோட்டத்திலா இந்தப் பதிவை எழுதியிரு்க்கிறார்.. நர்சிம் இதுவரையில் நம் அனைவரிடமும் பழகியது ஜாதிக் கண்ணோட்டத்தில்தானா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..!

///‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை - ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் - அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை - ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம்.///

இப்படியொரு சம்பவம் நடந்ததாகச் சொல்கிறார் வினவு. நடந்திருக்கலாம். இது தினம்தோறும் நம் வலையுலகில் நடப்பதுதானே.. இதற்காக சந்தனமுல்லைக்கும், ராப் என்கிற பதிவருக்கும் பிரச்சினைகள் எழுந்து அதுவே வளர்ந்து நிற்கிறது என்றாலும்கூட அது வலையுலகில் ஆயிரத்தில் ஒன்று..

ஏன் இன்னமும் என்னுடைய போலி டோண்டு பிரச்சினை அப்படியே நிற்கவில்லையா..? பிளாக்கரின் நம்பரை நானும் இன்னமும் என் பெயருக்குப் பின்பு போட்டுக் கொண்டுதானே உள்ளேன்.. ஆனால் இந்தச் சாதாரண சம்பவத்திற்கு இந்த வினவு கூட்டத்தினர் புகுத்துகின்ற பெயர்தான் நமது குடும்பத்திற்கே உலை வைப்பது போல் உள்ளது..

///இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.///

இதுதான் வினவு அண்ட் கோவின் ஒரு அம்சத் திட்டம். எப்படியாவது நம்மிடையே பார்ப்பனர்,. பார்ப்பனர் அல்லாதவர் என்கிற பிரிவினையை ஏற்படுத்தி குழப்பத்தை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கிறார்கள் இந்தக் கோஷ்டியினர்..!

சரி இதை விடுவோம்.. இந்தப் பொறுக்கித்தனமான விஷயத்தை பொறுக்கித்தனமான பதிவில் பொறுக்கித்தனமான வார்த்தைகளில் பொறுக்கியெடுத்திருக்கும் வினவு நமது சக பதிவர்களை எப்படியெல்லாம் நமக்கே அடையாளப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சற்றுப் பாருங்கள்..!

///கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை.///

அடேயப்பா எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு..? இதுவரையிலும் கார்க்கி என்ற இந்தத் தம்பியுடன் பழகிய நமக்கே தெரியாத விஷயம் இந்த அறிவுஜூவிகளுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் எப்படி..?

///ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக் கூடிய ஆண் வெறித் திமிரான  விலங்குதான் இந்த கார்க்கி///

ஆஹா.. ஒரு பதிவு பிடிக்காமல் எதிர்ப் பதிவு போட்ட வேறொரு பெண் பதிவரை முன்னிலைப்படுத்தும் சாக்கில் வினவு அண்ட் கோ நமது சக பதிவரை முன் வைத்துத் தாக்குகின்ற வார்த்தைதான் திமிரான விலங்கு..! அப்பாடா இந்தப் பாராட்டை நமக்கு வழங்குகின்ற தகுதியாவது கொஞ்சமாவது இவர்களுக்கு இருக்கிறதா..?

நமது வலையுலகில் நண்பர்கள் யாரையாவது நாம் இப்படி பேசியிருக்கிறோமா..? எழுதியிருக்கிறோமா..? வலையுலகை வாசிக்க மட்டுமே செய்யும் சிலர் அனானிகளாக குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் நாமும் ஒன்றா..?

///பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா - லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல.///

எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு..? இந்த மூன்று பதிவர்களின் எழுத்துக்களையாவது இந்த புத்தி ஜீவிகள் வாசித்திருப்பார்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது. இந்த வலையுலகத்தை ஒரு குடும்பமாக பாவித்து ஊர், ஊருக்கு பதிவர்களை தெரிந்து வைத்திருந்து ஒவ்வொருவரையும்  மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து ஒரு நல்ல நட்புணர்வை இன்றைக்கும் செய்து வருவது அபிஅப்பாதான்.. அவரும் ஜொள்ளு பார்ட்டியாம்.. இப்படி எழுதி இதுநாள் வரையில் அபியப்பாவுடன் நாம் பழகிய பழக்கத்தையே கேவலப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் பதிவுலகத் தோழர்களே..!

///புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள்.///

எத்தனையோ பெண் பதிவர்களின் திருமணங்களின் முன்னால் நின்று, அவர்களது குடும்பத்தில் ஒருவராக.. அவர்களுக்கு வேண்டிய அத்தனையையும் செய்து நட்புக்கு இலக்கணம் பாடியவர்கள் அபியப்பாவும், மங்களூர் சிவாவும்.. ஐயோ பாவம்.. இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது இதெல்லாம்..? இவர்கள்தான் வெளியாட்களாச்சே..!

///‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும்.///

இது அவர்களது அரசியல் கொள்கையின்படி எழுதியிருக்கும் வாசகங்கள். உள்ளுக்குள்ளேயே நாமே குத்திக் கொண்டு சாக வேண்டும். நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம் என்கிற ஆதங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள இதன் அர்த்தத்தை சம்பந்தப்பட்ட பதிவர்கள் இருவருமே புரிந்து கொள்வது நல்லது..!

ஆபரேஷன் சல்மாவில் நடந்தது என்ன என்பதை கொஞ்சம் வெளியில் விலாவாரியாக விசாரித்துவிட்டு வந்து பேசினால் இந்த அறிவாளிகளுக்குத் தெரியும்.. சல்மா மேட்டரில் முதல் துப்பை வெளியில் விட்டது நான்தான்..! இதெல்லாம் இந்த மகராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது.. இவர்கள்தான் காதுல விழுந்தது.. லேசா புரட்டிப் பார்த்தது என்று அத்தனையையும் லேசாகத் தூக்கி வைத்திருப்பவர்களாச்சே..!

///மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு  தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அபிஅப்பாவுக்கு, சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடை இப்போது பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கிறது. மிஸ்ஸஸ் டபுட், மிஸ்ஸ்ஸ் தேவ், பரணி என்ற பெயர்களில் எழுதிய ஒரு பெண்பதிவர் இப்போது வேறு பெயரில் எழுதுகிறார். என்ன காரணம்? செக்ஸ் டார்ச்சர்தான். அவரது பெயரை அவராகவே வெளியிடாத வரை நாங்கள் வெளியிட இயலாது என்றாலும் பதிவுலகின் யோக்கியதைக்கு இது ஒரு சான்று.///

எங்க யோக்கியதையைப் பற்றிப் பேச முதலில் உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மிஸ்டர் வினவு..? அதுதான் உங்களது யோக்கியதையை லீனாவின் கூட்டத்தில் நானே நேரில் பார்த்தனே.. நீங்கள் அழைத்து வந்த பெண்களும், நீங்களும் எவ்வளவு தெள்ளுத்தமிழில் உங்களுடைய கோரிக்கையை முன் வைத்தீர்கள் என்று..!?

///யார் இந்த நர்சிம்? பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.///

இதுதான் தோழர்களே.. நம்மை நமது ஆட்களை வைத்தே உரித்தெடுப்பது என்பது.. நர்சிமின் குடும்பம் எப்படி? அவருடைய மூதாதையர்கள் யார்..? என்ன ஜாதி? என்ன குலம்? இதெல்லாம் தெரியாமல்தானே இதுவரையிலும் ஐநூத்திச் சொச்சம் பதிவர்கள் அவருக்கு பாலோயர்ஸ்களாக இருக்கிறார்கள். இதைத்தான் இந்த அறிவின் சிகரங்கள் உடைத்துக் காண்பித்து நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்..!

///பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.///

எவ்வளவு துவேஷத்தை நமக்குள் விதைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது நர்சிமின் எழுத்துக்கள் மீதான இவர்களது விமர்சனங்கள் அல்ல. அவர் மீதான தனிப்பட்ட வெறுப்புக்களை நம்முள் புகுத்துவதுதான் இவர்களது ஒரே நோக்கம். இதற்காக இவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள்தான் வெட்கம், நேர்மை, சுரணையின்றி.. இத்யாதிகள்.. இவர்களுக்கு இந்த மூன்றுமே நிறையவே இருக்கிறது போலும்..!

///நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்?///

இதுவும் உங்களுக்கான எச்சரிக்கைதான் தோழர்களே.. அவர்களுடைய பார்வையில் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக இருக்குமளவுக்கு நீங்கள் எழுதுகின்ற திறன் உடையவராக வேண்டும். அப்படியிருந்தால்தான் நீங்கள் பதிவர்.. இல்லையெனில் நீங்கள் முட்டாளிலும் அடிமுட்டாள்.. மூன்றாம் தர எழுத்தாளன்.. இதைச் சொல்ல இவர்கள் யார்..? இவர்கள் பெரிய அறிவாளிகளோ.. இவர்களைத் தவிர மற்ற வலையுலக பதிவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைக்கின்ற முதலாளித்துவ கொள்கையுடைவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே..!

///எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?///

பொதுப் பிரச்சனைகளைப் பற்றி எழுதினால்தான் அவர்கள் பதிவர்களாம்..? அப்படி எழுதாதவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்கிறார்கள் இந்த முகமூடி ஜனநாயகவாதிகள்.. இதுதான் ஆதிக்கத் திமிர்..! நம்மில் எத்தனை பதிவர்கள் அரசியல் எழுதுகிறீர்கள்.. எத்தனை பேர் வெறும் அனுபவங்களை மட்டுமே எழுதுகிறீர்கள்..? நீங்களெல்லாம் இனிமேல் வினவு அண்ட் கோவிடம் சென்று நீங்கள் வலைப்பதிவர்தான் என்பதற்கு அத்தாட்சியாக உங்களுடைய பதிவைக் காண்பித்து அடையாள அட்டை வாங்கிவிடுங்கள்.. இல்லையெனில் நீங்கள் பார்ப்பனீயவாதிகளாக மாறிவிடுவீர்கள்.. ஜாக்கிரதை தோழர்களே..!

///தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா.///

இந்த விஷயத்தில் ரொம்பவே பீலா விடுகிறார் வினவு. தீபாவே தன்னுடைய பங்களிப்பு சிறியது என்பதைச் சொல்லிவிட்டார். அதன் பின்பு அதற்கான பணிகளையும், மேல் விவகாரங்களையும், கள ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியை செவ்வனே செய்தது நர்சிம், லக்கிலுக், அதிஷா மூவரும்தான் என்பது அந்த நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நன்கு தெரியும்..!

இதன் பின்னான ஜூனியர்விகடன் சம்பந்தப்பட்ட செய்திகளும், அது பற்றிய பதிவுகளும் அன்றைக்குச் சுழன்றடிக்க காரணமும் நமக்குள் இருந்த கருத்து வேறுபாடுதான்.. இதையும் அன்றைக்கு நாமேதான் நமக்குள் பேசி சரி செய்தோம்.. இப்போதும் அதையே செய்வோம் என்கிறேன்..!

///இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.///

பாலபாரதி நேரம் வரும்போதுதான் வெளியிட முடியும் என்று வினவுவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது உண்மையெனில் அப்போதே வெளியிட்டிருக்கலாம் பாலா. பாருங்கள்.. இப்போது நம் கையை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் சிலர். இதற்கு நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்..? இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. அந்த நபர் யார் என்பதையும், அதற்கான ஆதாரத்தையும் தைரியமாக, தாராளமாக வெளியிடுங்கள். இங்கே யாருக்கும் ஆட்சேபணையில்லை. ஆனால் இந்த அரசியல் ரவுடிகளிடம் மட்டும் கொடுத்து நம்மை கொண்டுபோய் அவர்களிடம் அடகு வைத்துவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்..

[[[கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன் மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.]]]

வாய்யா வா.. குசும்பன் என்பவன் எங்களது வலையுலகத்தில் அத்தனை பேருக்கும் பிடிக்கக் கூடிய செல்லப் பிள்ளை..! எந்தத் தளமாக இருந்தாலும் உரிமையுடன் உள்ளே செல்லும் உரிமையுள்ள தம்பி.. அவன் உங்களுக்கு அரசவைக் கோமாளி என்றால் நீரெல்லாம் கோமாளி என்ற லிஸ்ட்டில்கூட இருக்கத் தகுதியற்றவர்..

தினம்தோறும் வெளிவரும் அரசியல், அனுபவம், குடும்பம் பற்றிய புனைவுகளில் ஆழ்ந்து பெருமூச்சுவிட்டுத் தத்தளிக்கும் அத்தனை பதிவர்களையும் நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கின்ற மருத்துவர் வேலையைத்தான் என் தம்பி செய்து கொண்டிருக்கிறான்.. இவனையும் விட்டுவைக்காமல் திட்டித் தீர்க்கும் நீங்களெல்லாம் நிச்சயமாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவனையில் இருக்க வேண்டிய கேஸ்கள்..!

[[[இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.]]]

அந்தப் பதிவைப் போடச் சொன்னதே நாங்கள்தான்..! அவனாகப் போடவில்லை.. பிரச்சினை பெரிதாகி போய்க் கொண்டேயிருக்கிறது என்பதால்தான் அதிலிருந்து பதிவுலகம் கொஞ்சமாவது விடுதலையடைய. வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் போடச் சொன்னோம். அது சரி.. இது எங்களது வீட்டுப் பிரச்சினை.. உங்களுக்கென்னய்யா..? எதற்குத் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்கள்..!?

[[[குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா?]]]

இதனை முல்லையும், மயிலும் எங்களிடத்தில் கேட்டால் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம் மிஸ்டர் வினவு.. நீங்கள் கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை..!? மயிலின் அந்தப் பதிவை பெரிதாக எடு்த்துக் கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களது வலையுலகத்தில் பெரும்பான்மையினரின் கருத்து. இதனை நாங்கள் பதிவும் செய்திருக்கிறோம்..!

[[[ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரண மொக்கைகளை எழுதுவதில்லை.]]]

ஆமாமாம்.. நீங்கள் எழுதுவதுதான் தமிழ்.. நீங்கள் எழுதுவதுதான் எழுத்து.. நீங்கள் எழுதுவதுதான் கட்டுரை என்று தமிழன்னை போஸ்ட் கார்டில் சர்டிபிகேட் கொடுத்துவிட்டார் பாருங்கள்.. மரண மொக்கைகளை.. வலையுலகத்தின் அடிப்படை நோக்கமே தெரியாமல் இங்கு வந்து உளற வேண்டாம் வினவு..!

ஆனாலும் உங்களது பதிவிற்கு வந்து பின்னூட்டமிட்டாலும் நீங்கள் கொடுத்த மரியாதையைத்தான் நாங்கள் பார்த்தோமே.. நீங்கள் மட்டும் வர மாட்டீர்கள். ஆனால் உங்களுடைய அல்லக்கைகள், கைத்தடிகள் அர டிக்கெட்டு, கேள்விக்குறி என்று டிஸைன், டிஸைனாக பெயர்களை வைத்துக் கொண்ட முகமூடிகள் வந்து சக பதிவர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் அவருடைய குடும்பத்தினரையே பழித்தும், இழித்தும் பேசியதும், எழுதியதும் இன்றைக்கும் அப்படியே இருக்கிறதே.. இதனால்தானே நானே உங்களைப் புறக்கணித்தேன்..

[[[அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.]]]

ஆமாம்.. இதையும்தான் லீனாவின் விழாவிலேயே பார்த்தோமே..? நீங்கள் எப்பேர்ப்பட்ட பொதுநலவாதிகள் என்று..!  ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களை மாதிரி நாட்டில் உள்ள அத்தனை பேரும் எங்களுக்குக் குடும்பம் தேவையில்லை. பொது வாழ்க்கைதான் தேவை என்று கிளம்பி வந்தால் பாவம் நீங்கள்.. உங்களுக்கு கை தட்டக்கூட ஒரு ஆள் இருக்க மாட்டான். அவரவர்க்கு அவரவர் பிரச்சினைகள்.. இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரியும்..? நீங்கள்தான் வானத்தில் இருந்து குதித்தவர்களாயிற்றே..1

[[[சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?]]]

இது வலையுலகம்.. இங்கே நட்புக்குத்தான் முதலிடம். விஜிக்கு சந்தனமுல்லை எப்படியோ.. அப்படித்தான் நர்சிம் வட்டாரமும்.. இது இங்கே மிக இயல்பு. விஜி எழுதிய அந்தப் பகடி பேட்டியினால்தான் நர்சிம் அதை எழுதினார் என்பது எங்களது சக பதிவரான விதூஷ் என்பவரின் கருத்து. அந்தக் கருத்துக்கேற்ப அவருக்கு இந்தியத் திருநாட்டில் இருக்கின்ற கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவருடைய சொந்தத் தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதுதான் வலையுலகம்.

நீங்கள்தான் வெளி ஆளாச்சே.. உங்களுக்கு எப்படி இது தெரியும்..? அந்தக் கட்டுரை பிடிக்கவில்லையெனில் நீங்கள் எதிர் கட்டுரை எழுதுங்கள். யார் உங்களை வேண்டாம் என்று தடுத்தது. இது எங்களது தளம். இடம். எங்களது கருத்துச் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார்..? ஓ.. கருத்து சுதந்திரம்ன்னாலே உங்களுக்குப் பிடிக்காதே.. உங்களுக்குப் பிடிக்காததை எவன் எழுதினாலும் அவன் உங்களுக்கு விரோதிதானே. அந்தக் கொள்கையை இங்கேயும் கொண்டு வருகிறீர்களோ..?

[[[நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?]]]

“ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையா?” என்கிற இந்த மக்கள் நலத் தொண்டர்களின் கருத்துக்கு பதிவர்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..! நம்மையும் நாய் என்கிற நல்ல அடைமொழியோடு அழைக்கின்ற இந்த நபர் அல்லது கூட்டத்தினரின் சகவாசம் நமக்கு வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வினவு கேட்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் சம்பவம் நடந்தது முதல் அத்தனை பேரிடமும் போனிலும், நேரிலுமாக பேசி பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்து வருவது இந்த வெளியாட்களுக்குத் தெரியவே தெரியாது..! இவர்களுக்கு இப்போது தேவை நம்மிடையே ஒரு இடைவெளி.. அந்த இடைவெளியில் அவர்கள் உள்ளே நுழைய வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம்.. திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. இதுதான் இவர்களது நோக்கம்..!

[[[தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.]]]

தமிழ்மணத்திற்கு நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சக பதிவர்களை கேவலமாக தொடர்ச்சியாக எழுதியும்,. இதோ இந்தப் பதிவிலேயே 'நாய்' என்று திட்டியும், 'மரண மொக்கைகளை' எழுதி வருகிறார்கள் என்கிற பொய்க் கூப்பாட்டையும் போட்டு வலையுலகத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கின்ற இந்த வினவு போன்ற குள்ள நரி ஆட்களையும், அதன் கூட்டத்தினரையும், தயவு செய்து தமிழ்மணத்தில் இருந்து தூக்கிவிடுங்கள்.

ஏனெனில் தமிழ்மணம் வலைப்பதிவாளர்களுக்கானது.. அரசியல் வியாபாரிகளுக்கானது அல்ல.. இதுவரையிலும் தமிழ்மணத்திற்கு உற்றத்துணையாய் நின்றது வலைப்பதிவர்கள்தானே தவிர.. வினவு போன்ற சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கோழைகள் அல்ல என்பதை தமிழ்மணத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..!

[[[இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:
1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.
2) இத்தகைய நபர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை  கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.
3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழிசெயலை நேரில் சென்று விளக்கலாம்.
4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.
இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.
ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!]]]

நர்சிம் எழுதிய பதிவு ஆணாதிக்கத்தின் எடுத்துக்காட்டு என்றால், இவர்கள் இப்படி எழுதுவது சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு.. லீனாவின் விஷயத்திலும் இதையேதான் சொன்னார்கள் இந்தத் திருவாளர்கள்..!
 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவில் சூரியனுக்கு கீழே இருக்கின்ற அத்தனையும் பேசப்படும். எழுதப்படும்.  அதற்கான உரிமையை இந்திய அரசு நமக்குக் கொடுத்திருக்கிறது. இதில் யாருக்காவது பாதிப்பு எனில் அதனை நிவர்த்தி செய்யவும், பரிகாரத்திற்கும் போதுமான வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அதுவே போதும். 

இவர்களைப் போல வீடு தேடிச் சென்று மிரட்டுவது, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி கலகத்தை உண்டு செய்வதும்தான் இவர்களது கம்யூனிஸ கொள்கை இவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்பதை லீனா பற்றிய பதிவிலேயே நான் எழுதியிருந்தேன். இப்போது அதனையை நம் மீதும் திருப்புகிறார்கள் தோழர்களே..!
 
உனக்குப் பிடிக்கவில்லையெனில் எது உனக்கு கருத்து வேறுபாடாகத் தெரிகிறதோ.. அதனைத் தீர்க்க ஜனநாயக ரீதியாக என்ன வழியோ அதை நீயே போய் தேடிக் கொள்.. வீணாக எங்களுடன் உள் நுழைந்து எங்களுக்குள் பிரிவினையை பிரவேசித்து கலகம் செய்ய வேண்டாம்.
 
இவர்களிடத்தில் ஆட்கள் இருக்கிறார்களாம். பத்து, பதினைந்து பேர் ஒரே நிமிடத்தில் கூடிவிடுவார்களாம்.. என்ன ஒரு வகை மிரட்டல் பாருங்கள்..!

லீனாவின் விஷயத்தில் இவர்களின் இந்த மிரட்டலை ஆக்ரோஷமாக எதிர்த்த நமது சக பதிவர் மாதவராஜ் இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.. இதென்ன தந்திரம்..? சக பதிவர்களுக்கு ஒன்று எனில் முன்னே ஓடி வர வேண்டாமா..?  மாதவராஜ் அண்ணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

இதேபோல் அண்ணன் தியாகு, இவர்களது வீடு தேடி போய் மிரட்டும் கலாச்சாரத்தைக் கண்டித்து பதிவுகளை நிறையவே எழுதினார். ஆனால் இன்றைக்கு ஆதரிக்கிறார்.. இவர்கள்தான் அரசியல்வாதிகள்.. இந்த வெளங்காத, சர்வாதிகார அரசியல் நமக்குத் தேவையில்லை. 

இன்றைக்கு நர்சிமை குறி வைக்கிறார்கள். நாளைக்கு "லெனினை ஏண்டா திட்டுற? கார்ல்மார்க்ஸை ஏண்டா வையுற..? ஏண்டா கம்யூனிஸத்தை படம் போட்டு காண்பிக்கிற?” என்று பல வலைப்பதிவர்களின் வீடுகளுக்கும் இவர்கள் வரக்கூடும். இதன் முதல் படி இதுதான். புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே..!

படிப்படியாக நமக்குள் ஊடுறுவி இவர்களது வித்தையைக் காட்டலாம் என்கிற நினைப்பில்தான் நம்மிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மையை இவர்கள் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.!

நர்சிம், சந்தனமுல்லை, கார்க்கி, விஜி விஷயத்தை நாமே அவர்களிடத்தில் பேசித் தீர்த்து வைத்துக் கொள்ளலாம். எந்த வெளி நபர்களையும் பார்வைக்குக்கூட நாம் இதில் அனுமதிக்கக் கூடாது.. இந்த விஷயத்தில் சந்தனமுல்லையும், விஜியும் தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்.

இதுநாள்வரையில் அவர்களுக்கு உற்றத் துணையாய் இருந்து அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தது இந்த வலையுலகம்தான் என்பதை சந்தனமுல்லைக்கும், விஜிக்கும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஏதோ இன்றைக்கு எழுதுவதற்கு வாய்ப்புத் தருகிறார்களே என்பதற்காகவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையிலும் தப்பித் தவறிகூட வெளியாட்களுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.!

இத்தனை நாட்களாக சந்தனமுல்லை என்ன ஜாதி என்றுகூட தெரியாத அளவுக்கு நாமெல்லாம் அவருக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அதையே இன்றைக்கு தலைகீழாகத் திருப்பிப் போட்டு ஜாதியை வெளிப்படுத்தி வினவு தோழர்கள் செய்வது வலையுலகத்தின் அடிப்படை நோக்கத்தையே கேவலப்படுத்துகிறது. பிரிவினையை ஏற்படுத்துகிறது..!

சந்தனமுல்லை தனக்குத் தீர்வாக என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதனை நர்சிமுக்கும், அவருக்கும் பொதுவான ஒரு சக வலைப்பதிவரிடம் பேசி அவர் மூலமாக பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன்.

வலையுலகம் தழைக்க வேண்டுமெனில் இதனை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். நர்சிம் தனது தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு பதிவையும் நீக்கிவிட்டார். மென்மேலும் இந்தப் பிரச்சினையை வலுக்கச் செய்யாமல் பொதுநலன் கருதி ஒரு நல்ல முடிவை நமக்குள்ளேயே எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அத்தனை பதிவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

எக்காரணம் கொண்டும் நமக்கு வெளியாட்களின் அறிவுரையும், ஆலோசனையும், அரசியல் தளங்களின் கவனிப்பும் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன்.

புரிந்து கொள்ளுங்கள்..

நன்றி..!


279 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

test... 1...2...3...

Ganesan said...

உ.த,

இந்த பதிவின் மூலம் உங்கள் மீது எனக்கு இருந்த மரியாதை இன்னும் ஒருபடி அதிகரித்திருக்கிறது

Ganesan said...

சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்வது நீங்களே பேசி தீர்த்துகொள்ளுங்கள்..
தயவுசெய்து...

Ganesan said...

லீனாவின் விஷயத்தில் இவர்களின் இந்த மிரட்டலை ஆக்ரோஷமாக எதிர்த்த நமது சக பதிவர் மாதவராஜ் இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.. இதென்ன தந்திரம்..? சக பதிவர்களுக்கு ஒன்று எனில் முன்னே ஓடி வர வேண்டாமா..? மாதவராஜ் அண்ணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்..


அதற்குதான் மாதவ்ராஜ்க்கு பின்னுட்டம் போட்டேன்.மாதவ்ராஜ் முன்னின்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க சொல்லி..

தமிழ் அமுதன் said...

ஆமோதிக்கிறேன்...!

மணிஜி said...

நெத்தியடி உண்மையண்ணே....வினவுக்கு நர்சிமின் பர்சனல் விஷயங்களை எவனோ பைத்தியக்காரத்தனமாய் கொடுத்திருக்கிறான்.இன்று சந்திக்கலாம்.

Robin said...

வினவு கூட்டத்தின் சர்வாதிகாரம் பதிவுலகில் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான்.

தமிழ் உதயன் said...

உங்கள் கருத்தில் நான் உடன்படவில்லை... மற்றபடி திரு. நர்சிம் அவர்கள் செய்தது தவறு என்பதே என் கூற்று..

நன்றி

தமிழ் உதயன்

vasu balaji said...

நன்றி உண்மைத்தமிழன் சார்:).

கலகலப்ரியா said...

அட... வினவு உதாவக்கரைக் கூட்டம்... உலகத்தில் எந்த மூலையில் யார் இருந்தாலும்... அவங்க டாய்லெட்ட அங்க இருந்தே மோப்பம் புடிச்சு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரெக்ட்ட்டா ஜோஸ்யம் சொல்லிடுவாங்க சார்.. அவங்க சொல்ற எல்லா டீஈஈஈடெயிலும் கரீட்ட்ட்டா இருக்கும்...

எனக்கும் டாய்லெட் ஜோஸ்யம் கொஞ்சம் கத்துக் கொடுத்திருக்காய்ங்க.. பாத்திடுவோம்...

ம்.. அப்புறம்... உங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேரு இருக்கிறதாலதான் சார் இன்னும் மழை பெய்யுது...

அர டிக்கெட்டு ! said...

உ.த தலைப்பில் ஒரு பிழை..

''வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலக மொக்கைகளே!!'' என்று இருந்திருந்தால் உங்கள் உள்ளடக்கத்திற்கு சிறப்பாக இருக்கும்..

இதோ வினவின் மூத்த 'அல்லக்கை' என்ற உரிமையில் நானும் கேட்கிறேன்

தயவு செய்து ''வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலக மொக்கைகளே...''
மொக்கைகளில் ஊரிப்போன தமிழ்பதிவுகை மாற்றத்துடிக்கும் முற்றபோககு பதிவுகளில் ஒன்றான''எங்கள்''வினவை மொக்கைகள் வாசிக்கிறார்கள் என்றால் அது கேவலமே!!

பார்ப்பான் said...

Needful and Valuable post Mr Thamizhan

பார்ப்பான் said...

Needful and Valuable post Mr Thamizhan

Sabarinathan Arthanari said...

ஒரு குழு/அமைப்பின் மற்ற தனி மனிதர்களின் மீதான கற்றற்ற வன்முறைக்கு பெயர் தான் பாசிசம்.

அதை இப்போது செவ்வனே செய்து கொண்டிருப்பவர்கள் யார் ?

சாதாரண மக்களின் ஒரே கருத்து சுதந்திர நம்பிக்கை வலைப்பூ. எதிர்கால பதிவுலக சுதந்திரத்திற்கு இது போன்ற பதிவுகள் முக்கியமானவை.

நன்றி உ.த.

Sabarinathan Arthanari said...

தொடர

கலகலப்ரியா said...

//
அர டிக்கெட்டு ! said...
உ.த தலைப்பில் ஒரு பிழை..

''வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலக மொக்கைகளே!!'' என்று இருந்திருந்தால் உங்கள் உள்ளடக்கத்திற்கு சிறப்பாக இருக்கும்..

இதோ வினவின் மூத்த 'அல்லக்கை' என்ற உரிமையில் நானும் கேட்கிறேன்

தயவு செய்து ''வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலக மொக்கைகளே...''
மொக்கைகளில் ஊரிப்போன தமிழ்பதிவுகை மாற்றத்துடிக்கும் முற்றபோககு பதிவுகளில் ஒன்றான''எங்கள்''வினவை மொக்கைகள் வாசிக்கிறார்கள் என்றால் அது கேவலமே!//

அர்த்தமுள்ள பெயர் வைத்திருக்கும் அரை டிக்கெட்டு... ஆமாம்டா நாங்க எல்லாம் மொக்கைதான்... நாம வாசிக்கலைன்னா உனக்குப் பெருமைன்னா... இங்க என்ன புடுங்குறா... நீ மொக்கைய வாசிச்சா மட்டும் உன்னோட அறிவு வளந்துடுமா.. போ ராசா போ.. வந்ததே தீட்டு.. போய் நீ புரண்டுக்கிட்டிருக்கிற சேற்றில கையக் காலக் கழுவிட்டு வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாரு...

அர டிக்கெட்டு ! said...

@@அர்த்தமுள்ள பெயர் வைத்திருக்கும் அரை டிக்கெட்டு... ஆமாம்டா நாங்க எல்லாம் மொக்கைதான்... நாம வாசிக்கலைன்னா உனக்குப் பெருமைன்னா... இங்க என்ன புடுங்குறா... நீ மொக்கைய வாசிச்சா மட்டும் உன்னோட அறிவு வளந்துடுமா.. போ ராசா போ.. வந்ததே தீட்டு.. போய் நீ புரண்டுக்கிட்டிருக்கிற சேற்றில கையக் காலக் கழுவிட்டு வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாரு...@@

நீ என்ன நினைச்சிருக்க பிரியா? உன் பதிவுலகத்துல இருக்குற 300 பேருதான்
உலகம்னா?? சரியான வெகுளிப்பொண்ணா இருக்கியேம்மா?? ஐயோ பாவம்...

நல்லதந்தி said...

நீங்கள் சொல்வதெல்லாம் “உண்மை”தமிழன்!

யாசவி said...

//[[[இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:
1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.
2) இத்தகைய நபர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.
3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழிசெயலை நேரில் சென்று விளக்கலாம்.
4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.
இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.
ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!]]] //

This is surprising they blamed Narsim but they want to dictate.

Also Vinavu linking other bloggers who are not related to this issue.

Nice work :)

யாசவி said...

keep going :)

எறும்பு said...

Good post..

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@அர்த்தமுள்ள பெயர் வைத்திருக்கும் அரை டிக்கெட்டு... ஆமாம்டா நாங்க எல்லாம் மொக்கைதான்... நாம வாசிக்கலைன்னா உனக்குப் பெருமைன்னா... இங்க என்ன புடுங்குறா... நீ மொக்கைய வாசிச்சா மட்டும் உன்னோட அறிவு வளந்துடுமா.. போ ராசா போ.. வந்ததே தீட்டு.. போய் நீ புரண்டுக்கிட்டிருக்கிற சேற்றில கையக் காலக் கழுவிட்டு வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாரு...@@

நீ என்ன நினைச்சிருக்க பிரியா? உன் பதிவுலகத்துல இருக்குற 300 பேருதான்
உலகம்னா?? சரியான வெகுளிப்பொண்ணா இருக்கியேம்மா?? ஐயோ பாவம்... //

ஐய்யயோ நீரெல்லாம் என்னைப் பார்த்து பாவம் பார்க்கற ரேஞ்சுக்கா இருக்கேன்.. ஆமாம் அந்த முன்னூறு பேர நம்பித்தான் நான் வாழ்க்கையே நடத்தறேன்... இதயும் உங்க கக்கூஸ் ஜோஸ்யம்தான் கண்டுபுடிச்சு சொல்லிச்சா... அல்ல்லோ நல்லா பாரு... எந்தக் குழுவும் இல்லை... எந்தக் கையையும் எதிர்பார்த்து நிக்கலை... நான் தனியா நிக்கறேன்.. உனக்கு இந்த மொக்கைங்க கிட்ட என்ன தேவைன்னு இங்க குத்த வச்சிட்டு உக்காந்திருக்கான்னு சொல்றியா கொஞ்சம்.....

Jackiesekar said...

நர்சிம் எழுதிய எழுத்துக்களை கண்டியுங்கள்... அங்கே எங்கே ஜாதி வந்தது...சந்தனமுல்லை தாழ்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை இப்போதுதான் அறிகின்றேன்...இதுவரை ஜாதி பார்த்து பழகாதஎனக்கு இப்படி இங்கும் ஜாதியால் பிரித்து பார்பதை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை..

வினவை எனக்கு பிடித்த விஷயம்... விளிம்புநிலை மக்களுக்காக வாதாடுவது...ஆனால் அதற்க்காக அவர்கள் எல்லா கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை...


தோழி சந்தன முல்லை எழுத்துக்ளின் மேல் தனி மரியாதை வைத்து இருப்பவன் நான்... எனக்கு நர்சிம் சந்தனமுல்லை இருவரும் நன்கு தெரியும்...


அதே போல் ஆச்சர்யமான விஷயம்... இதில் இது போல் நர்சிம் எந்த பதிவையும் எழுதியது இல்லை... ஆனால் இப்படி ஒரு புனைவை வன்மத்தை எழுத தூண்டியது எது..

நர்சிம் தப்பு செய்தவர் என்றால்.. அவர் வீடும் அவர் மனைவியும் என்ன தப்பு செய்தார்கள்...? அவர்கள் அலுவலகம் என்ன தவறு செய்தது....


அவர் வீட்டுக்கு போய் நியாம் கேட்க போவதாக சொல்பவர்கள்... அப்படி நியாயம் கேட்க போய்.. நர்சிம்மின் மனைவி குழைந்தகளுடன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு வினவு நண்பர்கள் பொறுப்பு ஏற்பார்களா?...

அப்படி வீட்டுக்கு போய் கருத்து கேட்பதுதான் உங்கள் வழக்கம் என்றால்...சென்னையில் இதைவிட மக்கள் சொத்துக்கு அதிகம் துரோகம் செய்து போயஸ் கார்டனில் இருக்கும் ஜேவும் கோபலாபுரத்தில் இருக்கும் முதல்வரும் இங்கேதான் சென்னையில் இருக்கின்றார்கள்...

அவர்கள் விலாசம் அனைவரும் அறிந்ததே... அங்கே போகலாம்... போய் கருத்து கேளுங்கள்....

ஆனால் ஒரு பக்கத்தில் தன் அறிவு மழுங்கி புத்திக்கெட்டதனமாக எழுதிய எழுத்துக்கு இரண்டுநாளக வலையுலகத்தில் அந்த பதிவுக்கு அவர் அதிகாகவே தண்டனை அனுபவித்துவிட்டார்

நர்சிம் எழுதிய புனைவை நியாம் என்று வாதாடவில்லை... அவர் எழுதிய எழுத்துக்களுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும்...ஆனால் அவர் மனைவியும் அவர் குழந்தைகளும் என்ன தவறு செய்தார்கள்....


சந்தனமுல்லை பற்றி எழுதிய பதிவுக்கு... துப்பிவிட்டீர்கள்... பதிவுலகில் வெறும் நர்சிம்மாக இருந்த அவர்
பொறுக்கி நர்சிம்மாக மாறி இரண்டு நாளாகிவிட்டது...

இரண்டு நாளாக அவர் தூங்கி இருந்து இருக்கமாட்டர்...சந்தனமுல்லை அந்த எழுத்துக்களை படித்த போது எப்படி துடித்து இருப்பாரோ அததே போல் இரண்டு மடங்கு துடித்து இருப்பார்..


உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும்...அதற்கு பலனை அனுபவித்து விட்டார்...

சரி நீ ஏன் கேட்கவில்லை... இரண்டு பக்கமுத் தவறு இருக்கின்றது... அதே போல் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை....

பதிவர் நர்சிம்மின் எழுத்துக்கு அவர் பிரச்சனை பற்றி பேசும் போது எதற்கு லக்கி, அதிஷா, அபிஅப்பா, மங்களுர் சிவா, கலகலபிரியா, எல்லோரும் ஏன் வந்தார்கள்... அவர்களை பற்றி சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்...

பொதுவாய் வினவின் கட்டுரைகளில் என்னை கவர்ந்த விஷயம்... பொது மக்களின் உண்மையான பிரச்சனைக்கு மிக அற்புதமாகவும் ஆளுவோரின் அராஜக முகமூடியை கிழிப்பதால் அந்த தளத்துக்கு எப்போதும் என் வாசிப்பு உண்டு... ஆனால் தற்போது அது தனிமனித தாக்குதலுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு வருகின்றது...


எழுதியவிஷயத்துக்கு பகீங்கர மன்னிப்பு கேட்டுவிட்டார்... பதிவை தூக்கிவிட்டார்...இன்னம் என்ன செய்யலாம்...???



நர்சிம்மை கொளபாய் ஸ்டைலில் தூக்கில் போட வேண்டும்.. இல்லை என்றால் காத்தவராயன் சிவாஜி படத்தில் வருவது போல் கழுமரம் ஏற்ற வேண்டும்... சொல்லுங்கள் ... என்ன செய்ய போகின்றீர்கள்...


குறிப்பு...

இதை தனியாக ஒரு பதிவாகவே எழுத இருந்தேன் ...என் தம்பியின் திருமணம் நாளை நடக்க இருப்பதால் கடலூர் போகின்றேன்.. இரண்டு நாள் கழித்துதான் நான் வருவேன்...

டவுசர் பாண்டி... said...

உங்களின் கருத்துக்களை வழி மொழிகிறேன் உண்மைதமிழன்...

ஐந்து வருடங்களுக்கு மேலாய் பதிவுலகில் பங்களிப்பவன் என்கிற வகையில் சொல்கிறேன்...வினவு கும்பல், போலி டோண்டுவின் பாலிஷ் செய்யப் பட்ட வடிவமே!

இந்த விஷப் பாம்புகளின் வன்மத்தை இத் தருணத்திலாவது சகபதிவர்கள் உணர்ந்து புறக்கணித்திட வேண்டும்.

சந்தனமுல்லைக்காக நர்சிம்மின் சட்டையை பிடிப்பதும், நர்சிம்முக்காக சந்தனமுல்லையை கடிந்து கொள்வதும் நம்முடைய தனிப்பட்ட உரிமை, இத்தனை காலமும் அப்படித்தான் செய்து வந்திருக்கிறோம். இனியும் அதையே செய்வோம்.

வெளியாட்களுக்கு இங்கே வேலை இல்லை....இல்லவே இல்லை...ம்ம்ம்ம்ம்

Sabarinathan Arthanari said...

//உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். //

//பாதிப்பு எனில் அதனை நிவர்த்தி செய்யவும், பரிகாரத்திற்கும் போதுமான வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அதுவே போதும்.

இவர்களைப் போல வீடு தேடிச் சென்று மிரட்டுவது, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி கலகத்தை உண்டு செய்வதும்தான் //

பாசிசம். கம்யூனிசம் அல்ல

Anonymous said...

//பதிவர் நர்சிம்மின் எழுத்துக்கு அவர் பிரச்சனை பற்றி பேசும் போது எதற்கு லக்கி, அதிஷா, அபிஅப்பா, மங்களுர் சிவா, கலகலபிரியா, எல்லோரும் ஏன் வந்தார்கள்... அவர்களை பற்றி சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்...//

நர்சிம் எழுதும் போது யாரிடமாவது அனுமதி கேட்டா எழுதினார்? இலையே..?

அவரைப்போல் வலையுலகத்தில் இருக்கும் கீழ்த்தரமான எண்ணங்களை கொண்டிருப்பவர்களை இனம் கண்டு வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது தவறே இல்லை. உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அர டிக்கெட்டு ! said...

@@உனக்கு இந்த மொக்கைங்க கிட்ட என்ன தேவைன்னு இங்க குத்த வச்சிட்டு உக்காந்திருக்கான்னு சொல்றியா கொஞ்சம்.....@@

சாதாரணமாய் கேட்ட கேள்வியை புரிஞ்சுக்குற அளவுக்கு இல்லயேம்மா நீ... சரி உனக்கு புரியுரமாதிரி எளிமையா கேக்குறேன்..

பதிவுலகம் பதிவர்களுடைய சொத்து அல்ல அதில் வாசகர்களும் அடக்கம்...
ஒரு 300 பதிவர்கள் இருந்தாங்கன்னா ஆயிரக்கணக்கான வாசகர்களும் இருக்காங்க. எனவே வாசகர்கள் இருக்கும் வரை உங்கள் கக்கூசும் எங்கள் ஜோசியமும் இருக்கம்.. இப்ப புரியுதா ... இதவிட ஜிம்பிளா எனக்கு சொல்ல தெரியாதும்மா...

மின்னுது மின்னல் said...

வினவு=புனைவு


::)

Anonymous said...

//எக்காரணம் கொண்டும் நமக்கு வெளியாட்களின் அறிவுரையும், ஆலோசனையும், அரசியல் தளங்களின் கவனிப்பும் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன்.//

நீங்கள் சொல்வதை பார்த்தால் வலையுலகம் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது.

வலையுலகில் இப்போது இருக்கும் பிரச்சனையே ஒரு குழுவாக இணைய முயற்சிப்பது தான்.ஒருவேளை அப்படி குழுவாக இணைந்தால் அதற்கு நாட்டாமைகளாக பார்ப்பனர்கள் தான் முதல் வரிசையில் இருப்பார்கள்,இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா..?

kathir said...

to follow

மின்னுது மின்னல் said...

வினவு பொறுக்கிகள்

வினவை கண்டிக்கிறேன்

மின்னுது மின்னல் said...

வினவின் புண்ணாக்கு புரட்சிகள்


நரசிம் எழுதிய அதே நரகல் நடை

butterfly Surya said...

சரியாக சொன்னீர்கள். நமக்கு நட்பு தேவை.. நாட்டாமைகள் தேவையில்லை.

புரிந்து கொண்டு புறந்தள்ளுவோம்..

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@உனக்கு இந்த மொக்கைங்க கிட்ட என்ன தேவைன்னு இங்க குத்த வச்சிட்டு உக்காந்திருக்கான்னு சொல்றியா கொஞ்சம்.....@@

சாதாரணமாய் கேட்ட கேள்வியை புரிஞ்சுக்குற அளவுக்கு இல்லயேம்மா நீ... சரி உனக்கு புரியுரமாதிரி எளிமையா கேக்குறேன்..

பதிவுலகம் பதிவர்களுடைய சொத்து அல்ல அதில் வாசகர்களும் அடக்கம்...
ஒரு 300 பதிவர்கள் இருந்தாங்கன்னா ஆயிரக்கணக்கான வாசகர்களும் இருக்காங்க. எனவே வாசகர்கள் இருக்கும் வரை உங்கள் கக்கூசும் எங்கள் ஜோசியமும் இருக்கம்.. இப்ப புரியுதா ... இதவிட ஜிம்பிளா எனக்கு சொல்ல தெரியாதும்மா...//



அடச் சை.. இந்த ஜோஸ்யக்காரங்க பொழைப்பே மத்தவங்கள ஏய்க்கிறதுதான் போல... உங்க கேள்வி புரியர்ர்ர்ற அளவுக்கு எனக்கு மண்டைல மசாலா இல்லை சார்.. இப்போதான் மசாலாக் கம்பனி நடத்தற வினவு கிட்டா ஆர்டர் கொடுத்திருக்கேன்...

ஆமா நீங்க கக்கூஸ் போறதில்லையா... முகமூடி போட்டா உங்க கக்கூஸ் நாத்தம் வெளில தெரியாதா... நீங்க மட்டும்தான் மத்தவங்க கக்கூஸ் எட்டிப் பார்க்கலாமின்னு உரிமை வாங்கி வச்சிருக்கியளா.. உங்க கக்கூஸ யாரும் பார்க்க முடியாதா.. அதுதான் ஊர் உலகமெல்லாம் நாறுதே.. முகமூடி இல்லைன்னா அது வேற விகாரமா.. கொடுமையா இருக்கும் போல... சாப்பாடும் அங்கதானா..

ம்ம்.. அப்புறம் சார்... எனக்கு இன்னைக்கு ஆபீஸ் லீவு... பொழுது போகலை.. இந்த மொக்கை கூட உக்காந்து மொக்கை போடுற உங்க பெரிய மனசுக்கு நன்றிங்ங் சார்...

மணிஜி said...

இதில் ஜாதி எங்கு வந்தது ? அப்படியே மயில், ஆதி இவர்களின் ஜாதியையும் சொல்லியிருக்கலாம். ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு உதவியாக இருந்திருக்கும்

அர டிக்கெட்டு ! said...

பிரியாவால் விவாதம் செய்ய முடியவில்லை மலச்சிக்கல் ச்சி மனச்சிக்கல்.. எனவே வேறு யாராவது அவரது உதவிக்கு வரவும்!!

Unknown said...

தனி மனித தாக்குதல் கோழைத்தனமானது..

vasu balaji said...

to follow

அர டிக்கெட்டு ! said...

@@இதில் ஜாதி எங்கு வந்தது ? அப்படியே மயில், ஆதி இவர்களின் ஜாதியையும் சொல்லியிருக்கலாம். ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு உதவியாக இருந்திருக்கும்@@

மணிஜீ,
நர்சிம் பூக்காரியில் ---
@@அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார். பாக்கலையா எதுக்கும் மாட்டுக்கறிக்கு பதிலா மீண் தின்று பாருங்கள்
கண் தெளிவாக தெரிய வாய்ப்புண்டு

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

பிரியாவால் விவாதம் செய்ய முடியவில்லை மலச்சிக்கல் ச்சி மனச்சிக்கல்.. எனவே வேறு யாராவது அவரது உதவிக்கு வரவும்!! //

வாவ்.. இவங்க ஜோஸ்யம் செரியா சொல்றாங்க சார்... அம்மா வாங்க... ஐயா வாங்க... மலச்சிக்கலா வினவு போஸ்ட் படிங்க.. அரை டிக்கட் முகமூடி பாருங்க... பேதி என்ன வாந்தியே வரும்... இந்த சுண்டக்க மலச்சிக்கல் பிரச்ச்னைக்கு எதுக்கு சார் மத்தவங்கள கூப்புடுறீங்க.. கக்கூஸ்ல வேவு பார்க்கற உங்க மூஞ்சியே போதும்...

vasu balaji said...

அரை டிக்கட் சார்,

ஒருத்தன் உயர்ந்தஜாதின்னு சொல்லுற ஒன்னில பொறந்து பொருக்கியா வளர்ந்துட்டான். இன்னொருத்தர் தாழ்ந்த ஜாதில பொறந்து ஒரு மனிதநேயம் மிக்கவனா, சமுதாயத்துக்கு நல்லது செய்யுறவனா வளர்ந்துட்டார். இப்ப பிறப்ப வச்சி ஜாதியா? வளர்ப்ப வச்சி ஜாதியா? இதுல ஜாதி எங்க சார் வருது. அது அது உள்ள இருக்குற சாக்கடை பொங்கி வந்துருக்கு. அம்புட்டுதான். சாக்கடைல மேல்சாதி என்ன கீழ்சாதி என்ன. அங்கமட்டும்தான் ஜாதியில்லை.

யோக்கியன் வரான் said...

//
மாற்றத்துடிக்கும் ,முற்றபோககு பதிவுகளில் ஒன்றான''எங்கள்''வினவை மொக்கைகள் வாசிக்கிறார்கள் என்றால் அது கேவலமே!//

அர டிக்கெட்டு பொறம்போக்கு முதலில் உன் பிழையை சரி செய்யடா. முற்றபோக்கு இல்லை மானிடனே அது ”முற்றின போக்கு”. கீல்பாக்கம் போக வேண்டிய கேசுங்கடா நீங்க

கலகலப்ரியா said...

//சாக்கடைல மேல்சாதி என்ன கீழ்சாதி என்ன//

வானம்பாடி சார்.. ஜாதியே போறேன்னு நின்னாலும் இவனுங்க விடமாட்டனுங்க சார்...

அர டிக்கெட்டு ! said...

வானம்பாடிகள், சாதியை வைத்து எழுதி, சாதியை உள்ளே கொண்டு வந்தது நர்சிம் என்பதுதான் நான் மணிஜிக்கு சொன்னது, உங்கள் பின்னூட்டதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று வருவதையே நான் எதிரக்கிறேன். மற்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்தான்

சென்ஷி said...

//சல்மா மேட்டரில் முதல் துப்பை வெளியில் விட்டது நான்தான்..! //

ஜயராமன் முகமுடி கிழிய உதவிய உங்களை மறக்க முடியுமா....!

யோக்கியன் வரான் said...

அரடிக்கெட்டு கபோதி
நாங்கள் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் நீங்கள் மொக்கைகள் என்று சொல்வதும் பார்ப்பனத்தனம் தானே. மனதுக்குள் பார்பப்னத்தனத்தை வைத்துக் கொண்டு வெளியில் வேஷம் மயிர் ? வினவு பொறுக்கிகள் அனைவரும் பொட்டை பசங்க. தைரியம் இருந்தால் வெளிப்படையாக இயங்குங்கள் பொறுக்கிகளே.

vasu balaji said...

//அர டிக்கெட்டு ! said...

வானம்பாடிகள், சாதியை வைத்து எழுதி, சாதியை உள்ளே கொண்டு வந்தது நர்சிம் என்பதுதான் நான் மணிஜிக்கு சொன்னது, உங்கள் பின்னூட்டதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று வருவதையே நான் எதிரக்கிறேன். மற்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்தான்//

இது சரி. இதுக்கு உங்களுக்கு சல்யூட். அப்படி என்றால் வினவுலயும் உங்க எதிர்ப்ப சொல்லுங்க சார். அவங்க ஆரம்பத்துலயே சொன்னத தான் நான் சொன்னேன்.

சரி உயர்ந்த தாழ்ந்தவ வாபஸ் வாங்கிக்கிறேன். நீங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க. எத வெச்சி ஜாதி?

மணிஜி said...

அரை டிக்கெட்..அது மீன்

எல்லாவற்றையும் சுழிச்சே பழகிட்டீங்க போல...

அர டிக்கெட்டு ! said...

மலச்சிக்கல் காரணமாக பிரியா கக்கூஸை விட்டு வெளியே வர இயலாத நிலை இருப்பதால் அவருடனான இந்த உரையாடல் நிறைவு பெருகிறது. சீக்கிரமே அவரது சிக்கல் தீர பிராத்தியுங்கள் வலையுலக தோழர்களே!!

அர டிக்கெட்டு ! said...

அரை டிக்கெட்..அது மீன்..
சாரி பிரதர் டிரான்ஸ்லிடரேசனுக்கு நான் புதுசு..
அது போகட்டும்
சாதியை நர்சிம்தான் அஜென்டாவில் கொண்டு வந்தது அதுக்கு என்ன சொல்றீங்க

மணிஜி said...

அரை டிக்கெட்..இது அப்பட்டமான தனி மனித தாக்குதல் . இந்த ஒழுங்கில் நீங்கள் சந்தனமுல்லைக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் ? ப்ரியாவின் இடுகை உங்களை உசுப்பியிருக்க வேண்டும்.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு, ஆனால் ஒரு விசயத்தில் நான் முரண்படுகிறேன்

தொடர்பு உடைய மூன்று பதிவர்கள் மட்டுமே சந்தித்தோ அல்லது சாட்டிலோ பேசி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.

நீங்கள், நான், எக்ஸ் ஓய போன்றோர் எல்லாம் தேவையே இல்லை.

பதிவை சுருக்குமாக எழுதுங்கள் தயவு செய்து. நீளம் கருதி நல்ல கருத்துக்கள் பலரை சென்று அடையாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

மலச்சிக்கல் காரணமாக பிரியா கக்கூஸை விட்டு வெளியே வர இயலாத நிலை இருப்பதால் அவருடனான இந்த உரையாடல் நிறைவு பெருகிறது. சீக்கிரமே அவரது சிக்கல் தீர பிராத்தியுங்கள் வலையுலக தோழர்களே!! ||

முகம் காட்ட முடியாத கோழை... பொறுக்கி.. புறம்போக்கு.. நீ முற்போக்கா... நீ இன்னும் நிறைய இறங்குவான்னு தெரியும்டா வெண்ணை... உன்னோட அரை டிக்கட்டு சீக்கிரம் முழு டிக்கெட் ஆகி அதே வினவு என்னும் நரகத்தில் ஆவியாக அலைய ஆசீர்வாதிக்கப் படுகிறாய்... என் பரம பிதாவே.. அல்லாவே... சிவனே... பெருமாளே... இந்த கக்கூஸில் எட்டிப் பார்க்கும் குழந்தைக்கு.. கக்கூஸில் ஒரு சொர்க்கம் செய்து வைக்கவும்... போடா போக்கத்தவனே... நீ என்னடா நிர்ர்ர்ர்ர்ர்ர்றைவு செய்யறது... நான் செய்யறேன் நிர்ர்ர்ர்றைவு.. நன்றி வணக்கம்...

ஆ.. அப்பால நீ திரும்ப புடிச்சு இழுத்தா வராம இருப்பேனுங்காட்டியும் ... வருவேண்டா கொக்கமக்கா...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... சிம்பிளி சூப்பர்.

மணிஜி said...

குறிப்பிட்ட ஜாதியை வச்சுதானே அரசியல் நடத்த முடியும்? ஜாக்கி சொன்னதுக்கு பதிலே காணும்? அங்க போய் பாருங்களேன்..

அர டிக்கெட்டு ! said...

@@இது சரி. இதுக்கு உங்களுக்கு சல்யூட். அப்படி என்றால் வினவுலயும் உங்க எதிர்ப்ப சொல்லுங்க சார். அவங்க ஆரம்பத்துலயே சொன்னத தான் நான் சொன்னேன்.@@

சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம்.... என்று வினவு எழுதியிருக்கிறார். அவர்கள் இப்படி எழுதியதற்கு நர்சிம் @@அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@
என்று சாதியை அஜென்டாவில் கொண்டு வந்ததுதான் காரணம். எனவே இதில் வினவை விமர்சிக்க ஒன்றும் இல்லை

மணிஜி said...

ப்ரியா கூல்..இவங்க இப்படித்தான் ...பிரோவோக் பண்ணுவாங்க.

கலகலப்ரியா said...

||மணிஜீ...... has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

அரை டிக்கெட்..இது அப்பட்டமான தனி மனித தாக்குதல் . இந்த ஒழுங்கில் நீங்கள் சந்தனமுல்லைக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் ? ப்ரியாவின் இடுகை உங்களை உசுப்பியிருக்க வேண்டும்.||

மணிஜி... அதேதான்... அங்க பின்னூட்டம் போட வக்கில்லை... முகமூடிகள் அங்கு பின்னூட்டமிட முடியாது... ஆதலால்... வெவ்வேறு இடங்களில் தளம் கொண்டு சேற்றை வாரி இறைக்கும் பணியில் இவர்கள்... அதை அப்படியே திருப்பும் பணியில் நான்...

vasu balaji said...

அய்யோ பைத்தியம் புடிக்குதே. வினவு நர்சிம் என்ற பார்ப்பன சாதின்னு சொன்னாங்கங்கறீங்க. சந்தனமுல்லை பிற்பட்ட சமூகம்னு சொன்னாங்கன்னு சொல்றீங்க. அதுல கண்டிக்க ஒன்னுமில்லைங்கறீங்க. பிற்போக்கு, பார்ப்பனன்னே வெச்சிட்டு பதில் சொல்லுங்க சார். ஜாதி பிறப்பாலயா வளர்ப்பாலயா. எப்புடி சார் ஜாதி கண்டுபுடிச்சீங்க.

அர டிக்கெட்டு ! said...

@@அரை டிக்கெட்..இது அப்பட்டமான தனி மனித தாக்குதல் . இந்த ஒழுங்கில் நீங்கள் சந்தனமுல்லைக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் ? ப்ரியாவின் இடுகை உங்களை உசுப்பியிருக்க வேண்டும@@@

எது தனிமனித தாக்குதல்?

@@@@அர்த்தமுள்ள பெயர் வைத்திருக்கும் அரை டிக்கெட்டு... ஆமாம்டா நாங்க எல்லாம் மொக்கைதான்... நாம வாசிக்கலைன்னா உனக்குப் பெருமைன்னா... இங்க என்ன புடுங்குறா... நீ மொக்கைய வாசிச்சா மட்டும் உன்னோட அறிவு வளந்துடுமா.. போ ராசா போ.. வந்ததே தீட்டு.. போய் நீ புரண்டுக்கிட்டிருக்கிற சேற்றில கையக் காலக் கழுவிட்டு வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாரு...@@@@

அப்புடின்னு பிரியா எழுதுனத சொல்றீங்களா..
இல்ல அதுக்கப்புறம் கக்கூசு கக்கூசுன்னு புலம்பிட்டிருக்கறத சொல்றீங்களா புரியலயே

அர டிக்கெட்டு ! said...

@@ப்ரியா கூல்..இவங்க இப்படித்தான் ...பிரோவோக் பண்ணுவாங்க.@@

இங்க பிரவோக் பண்ணுவது யாருங்க...? நானா?? நல்லா இருக்கு உங்க நாயம்!!

ரவி said...

///நர்சிம் எழுதிய அந்த பூக்காரி என்கிற பதிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை கிட்டத்தட்ட வலையுலகமே குறிப்பிட்டுச் சொல்லியாகிவிட்டது. நர்சிம் தனது தவறை உணர்ந்து வலையுலக மக்களிடம் தனது மன்னிப்பை கேட்டு அந்தக் குறிப்பிட்ட பதிவையும் நீக்கிவிட்டார்
///

அவர் ஆபாச தாக்குதல் நடத்திய சந்தனமுல்லையை நோக்கி கேட்டாரா ?

குழந்தையை கொல்ல சொன்ன கார்க்கி மன்னிப்பு கேட்டாரா ?

vasu balaji said...

அர டிக்கெட்டு ! said...

@@அரை டிக்கெட்..இது அப்பட்டமான தனி மனித தாக்குதல் . இந்த ஒழுங்கில் நீங்கள் சந்தனமுல்லைக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் ? ப்ரியாவின் இடுகை உங்களை உசுப்பியிருக்க வேண்டும@@@

எது தனிமனித தாக்குதல்? //

இடுகைக்கு சம்பந்தமேயில்லாத மிஸஸ் டவுட், கலகலப்ரியா, அபிஅப்பா, மங்களூர் சிவா, குசும்பன் இவங்கள இழுத்ததுக்கு பேரு என்ன?

நர்சிம் காசு குடுத்துதான் நாங்கள்ளாம் படிச்சி பின்னூட்டம் போட்டம்னு அந்தம்மா கும்முச்சே. ஒரு பைசா தரலை சார் அந்தாளு. நான் யார்ட்ட போய் வாங்கறது. நீங்க கேட்டு வாங்கி குடுங்க சார். இதும் தனிமனித தாக்குதல்தானே சார்.

K.MURALI said...

Excellent Post.

மணிஜி said...

அரை டிக்கெட் நண்பா..இது மாதிரியான சீண்டல்களால்தான் நர்சிம் அந்த மாதிரியான இடுகை எழுதும் அளவுக்கு போனார், தவறு இரண்டு பக்கமும் இருக்கலாம் அல்லவா? நீங்களும் நானும் இப்போது சந்தித்தால் இது பற்றியா பேசுவோம் ? நான் நிச்சயம் மாட்டேன் .

K.MURALI said...

for email follow up

ரவி said...

///நர்சிம், சந்தனமுல்லை, கார்க்கி, விஜி விஷயத்தை நாமே அவர்களிடத்தில் பேசித் தீர்த்து வைத்துக் கொள்ளலாம். எந்த வெளி நபர்களையும் பார்வைக்குக்கூட நாம் இதில் அனுமதிக்கக் கூடாது.. இந்த விஷயத்தில் சந்தனமுல்லையும், விஜியும் தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்
//

அண்ணே. நீங்களே இதில் வெளி நபர். ஆணாதிக்க வெறியர்களால் ஆபாச தாக்குதல் நடத்தப்பட்ட பெண்கள் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமா ? இப்படி வேண்டுகோள் விடுக்க கேவலமாக இல்லையா ?

ரவி said...

///எது தனிமனித தாக்குதல்?///

வானம்பாடிகள் சார்.

சந்தன முல்லையிடம் இருந்து தப்பித்து வந்த பெண் பதிவரிடம் கேட்டு தெரிந்துகொண்டதாக அபி அப்பா மாதவராஜ் பதிவில் எழுதியபோது அதனை நீங்கள் கேட்டீர்களா ?

ரவி said...

///நம்மிடையே இருக்கும் ஒற்றுமையை சிதைப்பது என்பதுதான் இவர்களது முதல் நோக்கம். அவர்களை நோக்கி நமது பதிவர்களை சிறுகச் சிறுக இழுத்து அவர்களது ஆதிக்கத்தை வலையுலகத்தின் மீது செலுத்துவது என்பதுதான் இவர்களது நோக்கம்.
///

பதிவர் சங்கத்துக்கு கூட்டம் போட்டபோது அங்கே வினவு இல்லையே ? அப்புறம் எப்படி ஒற்றுமைக்கு ஊறு உண்டானது ?

அர டிக்கெட்டு ! said...

@@முகம் காட்ட முடியாத கோழை... பொறுக்கி.. புறம்போக்கு.. நீ முற்போக்கா... நீ இன்னும் நிறைய இறங்குவான்னு தெரியும்டா வெண்ணை... உன்னோட அரை டிக்கட்டு சீக்கிரம் முழு டிக்கெட் ஆகி அதே வினவு என்னும் நரகத்தில் ஆவியாக அலைய ஆசீர்வாதிக்கப் படுகிறாய்... என் பரம பிதாவே.. அல்லாவே... சிவனே... பெருமாளே... இந்த கக்கூஸில் எட்டிப் பார்க்கும் குழந்தைக்கு.. கக்கூஸில் ஒரு சொர்க்கம் செய்து வைக்கவும்... போடா போக்கத்தவனே... நீ என்னடா நிர்ர்ர்ர்ர்ர்ர்றைவு செய்யறது... நான் செய்யறேன் நிர்ர்ர்ர்றைவு.. நன்றி வணக்கம்...@@@

கிழிந்ழுது போ! மலச்சிக்கல் மனிதனுக்கு மன அழுத்தத்தையும் எரிச்சலையும் வரவைக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன.. இருந்தாலும் ரொம்ப பாவம்மா தீ. எதுக்கும் நல்ல டாக்டரா பாரு!! நீ

@@ஆ.. அப்பால நீ திரும்ப புடிச்சு இழுத்தா வராம இருப்பேனுங்காட்டியும் ... வருவேண்டா கொக்கமக்கா...@@

சிக்கல் தீந்து தெளிவான மனநிலையில் ,நிதானமா.. வாம்மா. நான் எங்கேயும் போகமாட்டேன், உன்னோட பிளாகுல காத்து வாங்குது, அதான் இங்க... தப்பா எடுத்துக்காத!!

vasu balaji said...

ரவி சார் வணக்கம். நீங்களாவது சொல்லுங்க சார். பகடி இடுகைக்கா இந்த விளைவு. பின்னூட்டம்தானே. விஜி இடுகையை தூக்கமுடியாது. அப்புறம் எப்படி கும்முறதுன்னு சந்தனமுல்லை போட்ட பின்னூட்டம் இருக்கே சார். அது எந்த உரிமையில. உங்க இடுகையில நான் பின்னூட்டம் போட்டு, இடுகைய தூக்க முடியாதுன்னு சொல்ல முடியுமா சார். அப்படின்னா நீங்களும் நானும் பேசி இருக்கணுமா இல்லையா. அது அப்படியானால் திட்டமிடலா இல்லையா. தாக்கப்பட்டவர் நர்சிம் மட்டுமல்ல, அவரைப் படித்தவர்களும். Be fair. சந்தனமுல்லையை கேட்டாவது சொல்லுங்கள். எனக்குத் தெரியும். எங்கும் நீங்கள் நியாயம் தாண்டி பேசியதில்லை. இந்த ஒரு விஷயம் தவிர. நீங்களும் தகராரு வரும்னு தெரிஞ்சும் ஏன் நர்சிம்மை சீண்டணும்னு கேக்கமாட்டிங்களா சார். அதென்ன பிடிவாதம். குற்றம் செய்தவனை விட தூண்டியவனுக்கு அதிக தண்டனை என்பது சி.பி.சி. சட்டமாச்சே சார். எமோஷனல் அவுட் பர்ஸ்டுக்கு தண்டனை கம்மி. கடைக்குள்ள குப்பைய பொறுக்கி போட்டவனை கத்தியால் குத்தினான்னு படிச்சா நமக்கு பத்திகிட்டு வரும். அடங்கொய்யால இதுக்காடா இப்புடி. சாவடிக்கணும்டான்னு. சுப்ரீம் கோர்ட் அவன் அப்படி பண்ணனும்னு பண்ணல. எரிச்சல்ல கைல கிடைச்சத எடுத்து தாக்கினதுல போய்ட்டான். 5 வருஷம்னு சொல்லிட்டாங்க சார். உசிரோட வில அஞ்சு லட்சமதானான்னு மாசக்கணக்கில புலம்பலாம். ஆனா நியாயம் அப்படித்தான். Can you ask sandanamullai to publish an apology for the readers of Narsim like me who voted and appreciated whatever we like out of appreciation and not for a beer or biriyani or money?

அர டிக்கெட்டு ! said...

அரை டிக்கெட் நண்பா..இது மாதிரியான சீண்டல்களால்தான் நர்சிம் அந்த மாதிரியான இடுகை எழுதும் அளவுக்கு போனார், தவறு இரண்டு பக்கமும் இருக்கலாம் அல்லவா? நீங்களும் நானும் இப்போது சந்தித்தால் இது பற்றியா பேசுவோம் ? நான் நிச்சயம் மாட்டேன் .@@

நண்பர் மணிஜி அவர்களே இங்கே பிரியா என்னைகோழை... பொறுக்கி.. புறம்போக்கு.. என்று திட்டியிருக்கிறார். நான் அவரை ஒரு வார்த்தை தவறாக எழுதவில்லை
கக்கூஸ் குள் எட்டிப்பார்ப்பவன் , கக்கூஸை மோப்பம் பிடிப்பவன், கக்கூஸ் ஜோசியம் என கக்கூசையே கட்டிக்கொண்டு அழுவதால் மலச்சிக்கல் என முடிவு செய்து விட்டேன்..

ஆனால் நீங்களோ பிரியா என்னை திட்டினால் நானும் நர்சிமைப்போல எழுதலாம் என்று நியாயம் சொல்கிறீர்கள்.. நல்ல பிழைப்பு இது!

ஈரோடு கதிர் said...

@ செந்தழல் ரவி

அந்தப் ’பகடி’ இடுகை இப்போது நீக்கினார்களே... அதை ஏன் முதலிலேயே செய்திருந்தால் இத்தனை பிரச்சனையே வந்திருக்காதே....

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@ப்ரியா கூல்..இவங்க இப்படித்தான் ...பிரோவோக் பண்ணுவாங்க.@@

இங்க பிரவோக் பண்ணுவது யாருங்க...? நானா?? நல்லா இருக்கு உங்க நாயம்!! ||

ஐய்யய்யோ... நர்சிம் நாயத்த கேக்காம விட்டவைங்க எல்லாம்... இவரு நாயத்த கொஞ்சம் கேட்டு சொல்லுங்கடி.. இப்போ சொல்லுங்கடா வெண்ணைங்களா.. நர்சிம்ம மட்டும் கல்லால செஞ்சு வச்சிருக்கா... நீ நாம நாயமா நாலு கேள்வி கேட்டாலே டென்சன் ஆவறியே... அந்த மனுஷன் என்ன அனுபவிச்சாங்களோ... அதைக் கொஞ்சம் கேட்டு.. அந்த நாயத்தையும் எழுதேன்...

சம்மந்தப் பட்டவங்களே.. நான் யாரையும் தப்பா சொல்லலை...(வினவு சொம்பு தூக்கிங்களைத் தவிர..) நர்சிம் எழுதினதுக்கு வக்காலத்து வாங்கலை...

மணிஜி.. நீங்க புடிச்சீங்க பாயிண்ட...

ரவி said...

///அடச் சை.. இந்த ஜோஸ்யக்காரங்க பொழைப்பே மத்தவங்கள ஏய்க்கிறதுதான் போல... உங்க கேள்வி புரியர்ர்ர்ற அளவுக்கு எனக்கு மண்டைல மசாலா இல்லை சார்.. இப்போதான் மசாலாக் கம்பனி நடத்தற வினவு கிட்டா ஆர்டர் கொடுத்திருக்கேன்...

ஆமா நீங்க கக்கூஸ் போறதில்லையா... முகமூடி போட்டா உங்க கக்கூஸ் நாத்தம் வெளில தெரியாதா... நீங்க மட்டும்தான் மத்தவங்க கக்கூஸ் எட்டிப் பார்க்கலாமின்னு உரிமை வாங்கி வச்சிருக்கியளா.. உங்க கக்கூஸ யாரும் பார்க்க முடியாதா.. அதுதான் ஊர் உலகமெல்லாம் நாறுதே.. முகமூடி இல்லைன்னா அது வேற விகாரமா.. கொடுமையா இருக்கும் போல... சாப்பாடும் அங்கதானா..

ம்ம்.. அப்புறம் சார்... எனக்கு இன்னைக்கு ஆபீஸ் லீவு... பொழுது போகலை.. இந்த மொக்கை கூட உக்காந்து மொக்கை போடுற உங்க பெரிய மனசுக்கு நன்றிங்ங் சார்...

Tuesday, June 01, 2010 1///

கலகப்ரியா. உங்களை அறிந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். வினவு உங்களை மொக்கை பதிவர் என்றதும் பத்ரகாளியான நீங்கள், இப்படியான ஆபாச தாக்குதல் நடந்தும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ? ஆக தனக்கு வந்தால் ரத்தம், மத்தவனுக்கு வந்தால் தக்காளி ஜூஸ், அப்படித்தானே ?

ரவி said...

நர்சிம் மற்றும் கார்க்கி செய்த அய்யோக்கியத்தனத்தை அப்படியே பூசி மெழுகிட்டீங்களே ?

ரவி said...

///சரியாக சொன்னீர்கள். நமக்கு நட்பு தேவை.. நாட்டாமைகள் தேவையில்லை.

புரிந்து கொண்டு புறந்தள்ளுவோம்///

பட்டர்ப்ளை சூர்யா ? நீங்கள் எந்த இடத்திலும் இந்த அய்யோக்கியத்தனத்தை கண்டித்ததாக தெரியவில்லையே ?

கலகலப்ரியா said...

||கலகப்ரியா. உங்களை அறிந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். வினவு உங்களை மொக்கை பதிவர் என்றதும் பத்ரகாளியான நீங்கள், இப்படியான ஆபாச தாக்குதல் நடந்தும் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ? ஆக தனக்கு வந்தால் ரத்தம், மத்தவனுக்கு வந்தால் தக்காளி ஜூஸ், அப்படித்தானே ? ||

ஹல்லோ சார்... வினவு "என்னை".. அதாவது என்னை அது மொக்கைப் பதிவரோ மண்ணாங்கட்டியோ... என்னோட பெயரை இழுத்ததால் நான் தாக்குதல் நடத்தறேன்.. அது ஆபாசமுன்னு உங்க அகராதில போட்டிருந்தா... போய் ஸ்வாமி ரூம்ல உக்காந்து ஸ்லோகம் சொல்லவும்.. ஆனால் இது நான் சம்மந்தப்பட்ட பிரச்சனை அதனால் கேள்வி கேக்கறேன்..

மத்தவங்க பிரச்சனை எல்லாத்துக்கும் கேள்வி கேக்கனும்னு எந்த சட்டத்ல இருக்கு... நான் கேள்வி கேட்டா பயங்கரமா இருக்கும்... என்னையும் நர்சிம் கூடச் சேர்த்து தூக்கில போடலாம்... ரெடியா..?

அண்ட்.. என்னையும் இந்த வினவுவும் சரி.. வீணாப் போனவங்களும் செரி.. வம்புக்கு இழுத்தாங்க... நீங்க ஏன் அங்க வந்து நியாயம் கேக்கலை... அதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்..

இங்க பாருங் ரவி சார்.. என்னுடைய நண்பன் ஒருத்தன் உங்களுக்கு மரியாதை கொடுக்கச் சொன்னதால் நட்புக்கு மரியாதை கொடுத்து அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்..

கக்கூஸ்ன்னாலே உங்களுக்கு ஆபாசமா... ஆபாசம்ன்னு சகட்டு மேனிக்கு நீங்க என்ன வேணா சொல்லலாமா.. .

i've to tell you something... this is my own problem... they mentioned my name... and i fight for my right.. understand..?

can they remove my name from their bloody post..? can they..? if yes... i'll remove my post... and stop talking these shits.. understand..?

but... this is none of your business..!!!

just.. BE AWAY...!! I just dunno who you are..!!!

அர டிக்கெட்டு ! said...

@@ஐய்யய்யோ... நர்சிம் நாயத்த கேக்காம விட்டவைங்க எல்லாம்... இவரு நாயத்த கொஞ்சம் கேட்டு சொல்லுங்கடி.. இப்போ சொல்லுங்கடா வெண்ணைங்களா.. நர்சிம்ம மட்டும் கல்லால செஞ்சு வச்சிருக்கா... நீ நாம நாயமா நாலு கேள்வி கேட்டாலே டென்சன் ஆவறியே... அந்த மனுஷன் என்ன அனுபவிச்சாங்களோ... அதைக் கொஞ்சம் கேட்டு.. அந்த நாயத்தையும் எழுதேன்...

சம்மந்தப் பட்டவங்களே.. நான் யாரையும் தப்பா சொல்லலை...(வினவு சொம்பு தூக்கிங்களைத் தவிர..) நர்சிம் எழுதினதுக்கு வக்காலத்து வாங்கலை... @@

மணிஜி.. நீங்க புடிச்சீங்க பாயிண்ட...@@@

ஏம்மா சிக்கல் தீந்த பொறவுதான வரசொன்னேன் எதுக்கு விட்ட குறை தொட்ட குறையோடு வற...

சாமியாடுற உன்ன நான் புரவோக் பண்ணல அது மலச்சிக்கல் பண்ண வேலன்னுதான் சொன்னேன்

அது சரி உன் பிளாகுல

http://kalakalapriya.blogspot.com/2010/05/blog-post_31.html?showComment=1275371893768#c3137705207093184449

ஒரு பொம்பளைய பாத்து தேவடியா முண்ட் அப்பிடின்னு திட்டுறான் நீ I Respect him அப்பிடீன்னு அவனுக்கு ஏன் சொம்பு தூக்குற ???கக்கூசுல இருக்க வசதியா போச்சா..சொம்பும் கையுமாவே இருப்பாங்களோ...வாட் அ பிட்டி வாட் அ பிட்டி

அர டிக்கெட்டு ! said...

@and stop talking these shits
என்னது டாக்கிங் ஷிட்டா??? சீரியஸ் மெடிக்கல் கண்டீசன்!!

vasu balaji said...

//ஒரு பொம்பளைய பாத்து தேவடியா முண்ட் அப்பிடின்னு திட்டுறான் நீ I Respect him அப்பிடீன்னு அவனுக்கு ஏன் சொம்பு தூக்குற ???//

தப்புதான் சார். சந்தனமுல்லை ஓட்டு போட்டு பின்னூட்டம் போட்டதுக்காக நரசிம் கிட்ட பொறுக்கி திங்கிறவன்னு சொல்லி இருக்காங்க. அத கேக்கமாட்டீங்கன்னா நானும் இப்படி உங்கள சொல்ல முடியுமா? சொன்னா அது சரியா?

பருப்பு (a) Phantom Mohan said...

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு!

நரசிம், கார்க்கிக்கு கண்டனம் தெரிவித்து..அடுத்தவர் மனம் காயப்படும் அளவிற்கு பதிவு எழுத வேண்டாம் என விஜிக்கும், சந்தனமுல்லைக்கும் கண்டனம் சொல்லி விட்டிருக்கலாம்.

தேவையே இல்லாம இந்த நாட்டாமை பண்ணுவதால் வீண் வம்பு வளர்ந்து கொண்டே போகும்! யாரையும் குறை சொல்வதை நிறுத்துங்கள், வினவு அவர் தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கிறார், ஆனால் இதை ஜாதிப்பிரச்சனையாய் கொண்டு போவது தவறு!

"இது எங்களது வீட்டுப் பிரச்சினை.. உங்களுக்கென்னய்யா..? எதற்குத் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்கள்..!?"

வலையுலகம் என்ன உங்கள் சொத்தா? நான் போன மாசம் தான் எழுத வந்தேன், அப்போ நான் வெளியாள்? அப்படித்தானே? உங்கள் ப்ளாக்கே உங்களுக்கு சொந்தம் இல்லை எனும் போது, வலையுலகம் ஒரு பொது இடம் யார் வேண்டுமானாலும் தத்தம் கருத்தை பதிவு செய்யலாம்! வினவின் எழுத்தில் எந்த ஒரு ஆபாசமோ, அருவேருப்போ இல்லை, ஆனால் உங்கள் வீட்டுப் பிள்ளை நரசிம் எழுதியதை நம் வீட்டுப் பெண்களிடம் காட்ட முடியுமா?

முதல்ல எங்காளு என்வீடு ன்னு சொல்றத நிறுத்துங்க! விட்டா முருகன் என் கடவுள், நான் மட்டும் தான் கும்பிடனும்ன்னு சொல்வீங்க போல?

இந்தப் பிரச்னையை இத்தோடு விடுவது நல்லது. நீங்கள் இந்த பதிவு இட்ட குற்றத்திற்காக அடுத்தபதிவு அனைவரும் சிரித்து ரசிக்கும் படி எழுத உத்தரவிடுகிறேன்! :)

butterfly Surya said...

@செந்தழலார்..

நர்சிம் எழுதிய அந்த பூக்காரி என்கிற பதிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

// சரியாக சொன்னீர்கள்.

Heam said...

For email followup

ரவி said...

நன்றி சந்தனமுல்லை. இனி நர்சிம் இல்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள். நிறைய எழுதுங்கள் தோழி. உங்கள் மீதிருந்த கோவம் போய்விட்டது. பதிவுலகம் மீதிருந்த ஆசையும் போய்விட்டது. ////

இப்படி நர்சிம் எழுதுகிறார். அதாவது அவருக்கு முல்லை மேல் ஆபாச தாக்குதல் நடத்தி அவரது வக்கிரத்தை பொழிந்துவிட்ட பிறகு அவரது கோபம் தீர்ந்துவிட்டதாம்.

முல்லையின் சகோதரனான எனக்கும், முல்லையில் கணவருக்கும் கோபத்தை எப்படி தீர்க்கவேண்டும் என்று தெரியும். நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

எங்களுக்கு நாட்டாமைகள் தேவையில்லை.

கலகலப்ரியா said...

//
ஏம்மா சிக்கல் தீந்த பொறவுதான வரசொன்னேன் எதுக்கு விட்ட குறை தொட்ட குறையோடு வற...

சாமியாடுற உன்ன நான் புரவோக் பண்ணல அது மலச்சிக்கல் பண்ண வேலன்னுதான் சொன்னேன்

அது சரி உன் பிளாகுல

http://kalakalapriya.blogspot.com/2010/05/blog-post_31.html?showComment=1275371893768#c3137705207093184449

ஒரு பொம்பளைய பாத்து தேவடியா முண்ட் அப்பிடின்னு திட்டுறான் நீ I Respect him அப்பிடீன்னு அவனுக்கு ஏன் சொம்பு தூக்குற ???கக்கூசுல இருக்க வசதியா போச்சா..சொம்பும் கையுமாவே இருப்பாங்களோ...வாட் அ பிட்டி வாட் அ பிட்டி //

ஏன்.. இப்போ வினவு பண்ணி இருக்கிறது என்ன.. அவன் இவளை ரேப் பண்ணி விட்டான்.. இன்னும் நிறைய ரேப் நடந்துக்கிட்டிருக்கு.. நாங்கள் வினவு க்ரூப் மொத்தமாக கேங் ரேப்புக்கு ரைட்டு வாங்கி வச்சிருக்கோம்... அதனால... அவங்க வீட்டுக்காரரும்... குடும்பமும்.. யாரு யாரை ரேப் பண்ணதுன்னு விசாரிச்சு முடிஞ்சா தூக்கில தொங்குங்கன்னு போட்டிருக்கா...

யோவ்... சாத்தான் வேதம் ஓதுறதுன்னா இதுதான்யா... இங்க பாரு நீ என்னோட கான்ஸ்டிபேஷன் பத்தி பேசி எனக்கு ஒரு மசிரும் புடுங்க முடியாது... எனக்கு கான்ஸ்டிபேஷன் ஒரு ப்ராப்ளம்னே இருக்கட்டு... அதையே சொல்லி சொல்லி நீ எஸ்கேப் ஆவாதடா மவனே...

நர்சிம்முக்கு மரியாதை கொடுப்பது என் சுதந்திரம்... அதற்கான பதிலும் அங்கேயே இருக்கு... உன்னைப் போல இருக்கிற பிறவியையே இந்தப் பூமி சகிச்சுக்கிட்டிருக்காம்... நர்சிம்ம சகிக்கிறது பெரிய விஷயமாடாங்...

இப்போ தெரியுது மத்தவங்களுக்கு மலச்சிக்கல்ன்னு சொல்லி.. முக்கி முக்கி முக்கி நீங்க எல்லாம் கஷ்டப்படுறது எதுக்குன்னு...

முற்போக்குவாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் பல்லாயிரமாண்டுப் பஞ்சாங்கப் பஞ்சாயத்துக் குல்லாவே... இந்த எளவை நம்பி... நானும் அவங்களை ஒதுக்கி வைக்கணும்னு நீ ஆசைப்படறது புரியுது... அதுக்கு வேற ஆளப் பாரு...

Sanjai Gandhi said...

தலைப்பை படிச்சேன்.. தமாஷா கீது :))
வினவு படிக்கிறதும் விஜய் படம் பாக்கறதும் ஒண்ணு.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா ரெண்டும் பார்க்கலாம்.. மனசு லேசாய்டும்.. அத விட்டு புறக்கணிக்கனுமாம்ல.. முடியாது.. முடியாது..


எனக்கு ஒரு சுமால் டவுட்டு.. இப்போவே கமெண்ட்ஸ் நிரம்பி வழியுதே.. இதுக்கெல்லாம் எங்கண்ணன் தனித் தனியா பதில் போடுவாரே. அவ்வ்வ்வ்வ்வ்.....

சரவணகுமார் said...

சூப்பர் பதிவு..

நல்ல செருப்படி அராஜக அரசியல் செய்யும் கூட்டத்துக்கு..

இவர்களுக்கு என்ன உரிமை இருக்குது மற்ற பதிவர்களை நாய்கள் என்று குறிப்பிட?

என்னமோ இவனுங்க எழுதுர ஒவ்வொரு பதிவும் ..டாஸ் காபிடல்" மாதிரியும் மத்தவன் எழுதுறது எல்லாமெ மொக்கை அப்படீன்னு பம்மாத்து வேற..

பதிவுலகுல நாலு பேர் நாலு மாதிரி எழுதுவான்.சண்டை வந்தால் அவனுங்க தீத்துப்பானுங்க..நீங்களா வலிஞ்சு பண்ற நாட்டாமை தேவையில்லை அப்பு

சரவணகுமார் said...

சூப்பர் பதிவு..

நல்ல செருப்படி அராஜக அரசியல் செய்யும் கூட்டத்துக்கு..

இவர்களுக்கு என்ன உரிமை இருக்குது மற்ற பதிவர்களை நாய்கள் என்று குறிப்பிட?

என்னமோ இவனுங்க எழுதுர ஒவ்வொரு பதிவும் ..டாஸ் காபிடல்" மாதிரியும் மத்தவன் எழுதுறது எல்லாமெ மொக்கை அப்படீன்னு பம்மாத்து வேற..

பதிவுலகுல நாலு பேர் நாலு மாதிரி எழுதுவான்.சண்டை வந்தால் அவனுங்க தீத்துப்பானுங்க..நீங்களா வலிஞ்சு பண்ற நாட்டாமை தேவையில்லை அப்பு

கலகலப்ரியா said...

// SanjaiGandhi™ said...
தலைப்பை படிச்சேன்.. தமாஷா கீது :))//

உண்மைத் தமிழன் ஐயா உணர்ச்சியுடன் எழுதிய எழுத்தைத் தமாஷு என்று சொல்லும் இந்தச் சஞ்சய் காந்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... (அம்மா பாருங்க.. ஐயா பாருங்க.. நான் கண்டனம் தெரிவிச்சிட்டேன்.. )

சரவணகுமார் said...

அவனவனை ஜாதி வாரியா பிரிச்சு பதிவுலகில் பிரிவினை பண்றதுல இவனுங்களுக்கு முக்கிய பங்கு உண்டு

பிரிச்சு வச்சு நாட்டாமை பண்றதுதான் இவனுகளோட குள்ளநரித் தந்திரம்

பதிவர்களே உஷார்

Sanjai Gandhi said...

என்னைக் கண்டிக்கும் வினவு கூட்ட பெண் ஆதரவாளரும் இந்து மதவெறிப் பதிவருமான கலகலப்ரியாவை நான் எச்சரிக்கிறேன்..

அர டிக்கெட்டு ! said...

@@@ஏன்.. இப்போ வினவு பண்ணி இருக்கிறது என்ன.. அவன் இவளை ரேப் பண்ணி விட்டான்.. இன்னும் நிறைய ரேப் நடந்துக்கிட்டிருக்கு.. நாங்கள் வினவு க்ரூப் மொத்தமாக கேங் ரேப்புக்கு ரைட்டு வாங்கி வச்சிருக்கோம்... அதனால... அவங்க வீட்டுக்காரரும்... குடும்பமும்.. யாரு யாரை ரேப் பண்ணதுன்னு விசாரிச்சு முடிஞ்சா தூக்கில தொங்குங்கன்னு போட்டிருக்கா...

@@

இதுல யாருக்காவது எதாவது புரியுதா??? ஜனங்களே ஹெல்பு பிளீஸ்


@@யோவ்... சாத்தான் வேதம் ஓதுறதுன்னா இதுதான்யா... இங்க பாரு நீ என்னோட கான்ஸ்டிபேஷன் பத்தி பேசி எனக்கு ஒரு மசிரும் புடுங்க முடியாது... @@

என்னது உன்னோட கான்ஸ்டிபேஷன் வேதமா? ஆத்தாடியோவ்..ரொம்பத்தான்..ஆனா அதுக்கப்புறம் என்ன எழுதியிருக்கேன்னு புரியல

@@@@எனக்கு கான்ஸ்டிபேஷன் ஒரு ப்ராப்ளம்னே இருக்கட்டு... அதையே சொல்லி சொல்லி நீ எஸ்கேப் ஆவாதடா மவனே... @@@

ஏம்மா மலச்சிக்கல் உனக்கு முதல்ல நீ கக்கூசுலேருந்து எஸ்கேப்பு ஆவும்மா


@@நர்சிம்முக்கு மரியாதை கொடுப்பது என் சுதந்திரம்... அதற்கான பதிலும் அங்கேயே இருக்கு... உன்னைப் போல இருக்கிற பிறவியையே இந்தப் பூமி சகிச்சுக்கிட்டிருக்காம்... நர்சிம்ம சகிக்கிறது பெரிய விஷயமாடாங்...
@@@

இல்ல, நீங்க தாராளமா சகிப்பிங்க, மலச்சிக்கலயே சகிச்ச சகியாச்சே நீங்க :-)

@@@இப்போ தெரியுது மத்தவங்களுக்கு மலச்சிக்கல்ன்னு சொல்லி.. முக்கி முக்கி முக்கி நீங்க எல்லாம் கஷ்டப்படுறது எதுக்குன்னு... @@

புரிஞ்சா சரி.!!!


முற்போக்குவாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் பல்லாயிரமாண்டுப் பஞ்சாங்கப் பஞ்சாயத்துக் குல்லாவே... இந்த எளவை நம்பி... நானும் அவங்களை ஒதுக்கி வைக்கணும்னு நீ ஆசைப்படறது புரியுது... அதுக்கு வேற ஆளப் பாரு...@@@

சரி கக்கூஸ விட்டு வெளியே வந்த மாதிரி தெரியுது அதனால மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ஆரம்பிப்போம்....

அதாவது இந்த

vasu balaji said...

SanjaiGandhi™ said...

என்னைக் கண்டிக்கும் வினவு கூட்ட பெண் ஆதரவாளரும் இந்து மதவெறிப் பதிவருமான கலகலப்ரியாவை நான் எச்சரிக்கிறேன்..//

ஒரு பெண் பதிவரை மதவெறியராக சித்தரிக்கும் சஞ்சையை நான் கண்டிக்கிறேன். அய்ய்ய்ய். நானும் கண்டிச்சிட்டேன்.

settaikkaran said...

வலையுலகத்தில் பிறரை ஓரளவு மகிழ்விக்கவும், தங்களது மனநிறைவுக்காகவும் தான் பெரும்பாலான பதிவர்கள் எழுதுகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. வினவு ஒரு சாடிஸ்ட்! இதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தொடர்ந்து இதையே செய்வார்கள் என்பதும் அச்சுறுத்துகிற நிஜம்! அவர்களின் அசிங்கத்தை நிறுத்த ஏதாவது செய்தே தீர வேண்டும்.

எனவே இந்த இடுகை ஒரு எச்சரிக்கை என்ற அளவிலே பாராட்டுக்குரியது தான்! அதே சமயம்....!

இந்தப் பிரச்சினையை வைத்து எந்த சம்பந்தமும் இல்லாத பதிவர்களை இழுத்து அசிங்கப்படுத்துமளவுக்கு வினவின் வாய்க்கு அவல் கொடுத்த நர்சிம்,சந்தனமுல்லை இருவரையும் சேர்த்தே கண்டிக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? புதியவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாம்; குறைந்தபட்சம் மோசமான உதாரணமாக இல்லாமல் இருந்து தொலைத்திருக்கலாமே?

என்னை ஒரு பதிவராக இன்னும் கருதத்துவங்கவில்லை; ஆனால், ஒரு வாசகனாக அண்மைக்கால நிகழ்வுகள் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றன.

இடுகைக்கு நன்றி உ.த! மீண்டும் வருவேன்!

அர டிக்கெட்டு ! said...

மிஸ்ஸாயிடுச்சு!!!
முற்போக்குவாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் பல்லாயிரமாண்டுப் பஞ்சாங்கப் பஞ்சாயத்துக் குல்லாவே... இந்த எளவை நம்பி... நானும் அவங்களை ஒதுக்கி வைக்கணும்னு நீ ஆசைப்படறது புரியுது... அதுக்கு வேற ஆளப் பாரு...@@@

சரி கக்கூஸ விட்டு வெளியே வந்த மாதிரி தெரியுது அதனால மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ஆரம்பிப்போம்....

அதாவது இந்த ஆளுங்கள ஒதுக்கி வைக்கனுமின்னு சொல்றதா சொல்றீங்களே
அது ஏன்னு புரியுதா?

கலகலப்ரியா said...

//SanjaiGandhi™ said...
என்னைக் கண்டிக்கும் வினவு கூட்ட பெண் ஆதரவாளரும் இந்து மதவெறிப் பதிவருமான கலகலப்ரியாவை நான் எச்சரிக்கிறேன்.//

ஆமாம் எச்ச்ச்சரிச்சு என்ன பண்ணப் போறீங்க சார்... கூட்டம் சேர்த்து கொடி புடிச்சு வாசல்ல வந்து நின்னு... கக்கூஸ் வாழ்க.. கலகலப்ப்ரியா ஒழிக அப்டின்னு கத்தப் போறியளா.. சரி நடக்கட்டு... நல்லா கெளப்புறாய்ங்கடா பீதிய..

கலகலப்ரியா said...

ஆ.. அப்புறம் அரை டிக்கட்டு.. நாம ஆரம்பிக்கலாம்... அந்த புறம்போக்கு பதிவில என்னன்னா... கண்டினியூ.. நான் டீ சாப்ட்டு கண்டினியூ..

அர டிக்கெட்டு ! said...

@@கக்கூஸ் வாழ்க@@

மறுபடியும் உள்ள போயாச்சா! அடச்சே!!

கலகலப்ரியா said...

100..

puduvaisiva said...

"செந்தழல் ரவி said...

///நர்சிம் எழுதிய அந்த பூக்காரி என்கிற பதிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை கிட்டத்தட்ட வலையுலகமே குறிப்பிட்டுச் சொல்லியாகிவிட்டது. நர்சிம் தனது தவறை உணர்ந்து வலையுலக மக்களிடம் தனது மன்னிப்பை கேட்டு அந்தக் குறிப்பிட்ட பதிவையும் நீக்கிவிட்டார்
///

அவர் ஆபாச தாக்குதல் நடத்திய சந்தனமுல்லையை நோக்கி கேட்டாரா ?

குழந்தையை கொல்ல சொன்ன கார்க்கி மன்னிப்பு கேட்டாரா ?"

ரவியின் இந்த கருத்தை ஆதரிக்கிறேன்.

கலகலப்ரியா said...

ஆமாங்... அரை டவுசரு.. அப்போதானே நீங் வேவு பார்க்க வஸ்ஸ்தியா இருக்கும்...

Sanjai Gandhi said...

கலகலப்ரியா, என்னிடம் உங்கள் அராஜகம் வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கு வந்து சேப்பு கலர் நோட்டிஸ் குடுப்போம்.. பக்கத்து வீட்டு பசங்களுக்கு காமிக்ஸ் வாங்கிக் குடுப்போம்.. ஆனால் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. நாங்க தான் அங்க வந்தும் பேர் சொல்ல மாட்டோமே.. இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க..

டவுசர் பாண்டி... said...

ஆஹா...இவ்ளோவ் பின்னூட்டமா?

அப்ப உண்மைதமிழனுக்கு ஒரு பதிவு ரெடியாய்ட்டு இருக்கும்....அங்க!

சீக்கிரத்துல நம்ம உண்மை தமிழன் சாதி உட்பட பல அரிய புள்ளி விவரங்களுடன் கூடிய பதிவை அங்கே இருந்து எதிர்பார்க்கலாம்.

Anonymous said...

//அவர் வீட்டுக்கு போய் நியாம் கேட்க போவதாக சொல்பவர்கள்... அப்படி நியாயம் கேட்க போய்.. நர்சிம்மின் மனைவி குழைந்தகளுடன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு வினவு நண்பர்கள் பொறுப்பு ஏற்பார்களா?...//

இந்த தத்துவ முத்தை இப்பொழுது உதிர்ப்பவர்கள் ஒரு பெண் பதிவரை வைத்து அசிங்க புனைவு எழுதும் பொழுது நர்சிமிடம் இதை சொன்னார்களா?

அப்படி பதிவு எழுத போய்..முல்லை குழந்தையுடன்
தற்கொலை செய்து கொண்டால் நர்சிம்மோ அல்லது அவரது (கார்க்கி போன்ற) நண்பர்கள் அதற்கு பொறுப்பு ஏற்பார்களா?

ஜாக்கி அண்ணே உங்களை உயர்வாக நினைத்திருந்தேன் ஆனால் இப்போதோ........?

கலகலப்ரியா said...

||SanjaiGandhi™ has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

கலகலப்ரியா, என்னிடம் உங்கள் அராஜகம் வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கு வந்து சேப்பு கலர் நோட்டிஸ் குடுப்போம்.. பக்கத்து வீட்டு பசங்களுக்கு காமிக்ஸ் வாங்கிக் குடுப்போம்.. ஆனால் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. நாங்க தான் அங்க வந்தும் பேர் சொல்ல மாட்டோமே.. இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க..||

அடங்கொக்கமக்கா... நீங்கதானா அந்தப் புள்ளபுடிக் கேஸூ... இருக்கட்டும்டியோ... அடுத்த வாட்டி காமிக்ஸ் யாராவது கொடுத்தாய்ங்கன்னா அதை வாங்கி கண்ணுக்குள்ளயே நீட்டிக் குடைய சொல்றேன் இருங்கடி...

இன்னும் என்ன ப்ளான்.. இரசாயனக் குண்டு... ஆஸிட்... அழுகின முட்டை... இப்பூடி எல்லாம் லிஸ்ட்டு இருக்குதுங்களா அமைச்சரே...

டவுசர் பாண்டி... said...

எங்க கடை ஓணரை கானோம்...

தமிழ் அமுதன் said...

கமெண்டுகள...படிச்சே டயர்டு ஆகுதே...! கமெண்டு போடுர உங்களுக்கு டயர்டே ஆகாதா???

கலகலப்ரியா said...

||தமிழ் அமுதன் has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

கமெண்டுகள...படிச்சே டயர்டு ஆகுதே...! கமெண்டு போடுர உங்களுக்கு டயர்டே ஆகாதா??? ||

இதுக்கெல்லாம் டயர்டு ஆனா.. எப்பூடி கொடி புடிக்கிறது.. எப்பூடி கோஷம் போடுறது.. ச்சும்மா இருப்பியளா..

Dr.Rudhran said...

blog is public, then how does one become an outsider? my tamil fonts are not working.

கலகலப்ரியா said...

||டவுசர் பாண்டி... said...
எங்க கடை ஓணரை கானோம்..||

ஆட்டோ கீட்டோ போயிருக்குமோ... கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்.. கொலைகாரப் பாவிங்க இருக்கிற ஊர்ங்க..

NO said...

அன்பான நண்பர் திரு உண்மை தமிழன்,

முதலில் "ப்ரெசென்ட் சார்" and வாழ்த்துகள்!!!

//சஞ்சய் காந்தி Said...

தலைப்பை படிச்சேன்.. தமாஷா கீது :))
வினவு படிக்கிறதும் விஜய் படம் பாக்கறதும் ஒண்ணு.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா ரெண்டும் பார்க்கலாம்.. மனசு லேசாய்டும்.. அத விட்டு புறக்கணிக்கனுமாம்ல.. முடியாது.. முடியாது..//

நண்பர் சஞ்சய், விஜய் என்னும் நடிகரை (ஆனால் யாரையும் ஏமாற்றாமல், இந்தியன் நான் என்று கூறி) உழைத்து பிழைக்கும் ஒரு வேலை வெட்டி செய்யும் மனிதரை வினவு கோஷ்டிக்கு கம்பேர் செய்யும் அராஜகத்தை முதலில் கண்டிக்கிறேன்!! வினவு எழுதும் சாக்கடை பொய்களை படிப்பதும் கண்ணை கட்டிக்கொண்டு, முகத்தில் கறியை பூசிக்கொண்டு காயும் வெயிலில் காலணி இல்லாமல் கள்ளி செடிகளில் மேல் நடப்பதற்கு வேண்டுமானாலும் ஒப்புமை கூறலாம்! இந்த அநாகரீக அசிங்கங்கள் எழுதுவது காமடி இல்லை! இவர்கள் கலாச்சார காவலர்களும் இல்லை! இவர்கள், இந்திய தேசிய எதிரியான மாவோவை துதித்து, நம் நாட்டு போர் வீரர்களை கொன்ற எதிரியின் காலை நக்கும் நாசக்காரர்கள்! ஆதலால் இதை தமாஷாக எடுத்து கொள்ள வேண்டாம்! இந்த விஷ விதைகள் இடம் கிடைத்தல் மண்ணில் புகுந்து விருட்ச்சமாக வளர்ந்து விடுவார்கள்!

நண்பர் திரு உண்மை தமிழனுக்கு என் வாழ்த்துகள்!

வீணா போன வெட்டி வம்பாளர்கலேல்லாம் வருவார்கள் (திரு அரை டிக்கெட்டு போல), உங்களை திட்டுவார்கள்! கவலை வேண்டாம்! (நான் அறுதல் சொல்லும் நிலையில் நீங்கள் இல்லை என்று தெரியும் இருந்தாலும் "just for support")! துணைக்கு பலர் இருக்கிறோம்!

நடத்துங்க!!! வாழ்த்துகள்!

நன்றி

NO said...

அன்பான நண்பர் திரு உண்மை தமிழன்,

முதலில் "ப்ரெசென்ட் சார்" and வாழ்த்துகள்!!!

//சஞ்சய் காந்தி Said...

தலைப்பை படிச்சேன்.. தமாஷா கீது :))
வினவு படிக்கிறதும் விஜய் படம் பாக்கறதும் ஒண்ணு.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா ரெண்டும் பார்க்கலாம்.. மனசு லேசாய்டும்.. அத விட்டு புறக்கணிக்கனுமாம்ல.. முடியாது.. முடியாது..//

நண்பர் சஞ்சய், விஜய் என்னும் நடிகரை (ஆனால் யாரையும் ஏமாற்றாமல், இந்தியன் நான் என்று கூறி) உழைத்து பிழைக்கும் ஒரு வேலை வெட்டி செய்யும் மனிதரை வினவு கோஷ்டிக்கு கம்பேர் செய்யும் அராஜகத்தை முதலில் கண்டிக்கிறேன்!! வினவு எழுதும் சாக்கடை பொய்களை படிப்பதும் கண்ணை கட்டிக்கொண்டு, முகத்தில் கறியை பூசிக்கொண்டு காயும் வெயிலில் காலணி இல்லாமல் கள்ளி செடிகளில் மேல் நடப்பதற்கு வேண்டுமானாலும் ஒப்புமை கூறலாம்! இந்த அநாகரீக அசிங்கங்கள் எழுதுவது காமடி இல்லை! இவர்கள் கலாச்சார காவலர்களும் இல்லை! இவர்கள், இந்திய தேசிய எதிரியான மாவோவை துதித்து, நம் நாட்டு போர் வீரர்களை கொன்ற எதிரியின் காலை நக்கும் நாசக்காரர்கள்! ஆதலால் இதை தமாஷாக எடுத்து கொள்ள வேண்டாம்! இந்த விஷ விதைகள் இடம் கிடைத்தல் மண்ணில் புகுந்து விருட்ச்சமாக வளர்ந்து விடுவார்கள்!

நண்பர் திரு உண்மை தமிழனுக்கு என் வாழ்த்துகள்!

வீணா போன வெட்டி வம்பாளர்கலேல்லாம் வருவார்கள் (திரு அரை டிக்கெட்டு போல), உங்களை திட்டுவார்கள்! கவலை வேண்டாம்! (நான் அறுதல் சொல்லும் நிலையில் நீங்கள் இல்லை என்று தெரியும் இருந்தாலும் "just for support")! துணைக்கு பலர் இருக்கிறோம்!

நடத்துங்க!!! வாழ்த்துகள்!

நன்றி

vasu balaji said...

எச்சூஸ் மி. நான் ஒருத்தர்ட ஜாதி எப்புடி இடுகைய வெச்சி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன். இன்னோருத்தருட்ட என்ன திட்டிட்டாங்கன்னு நாயம் கேட்டேன். எங்க அவங்க? யார்னா பார்த்தீங்களா?

கலகலப்ரியா said...

||நண்பர் சஞ்சய், விஜய் என்னும் நடிகரை (ஆனால் யாரையும் ஏமாற்றாமல், இந்தியன் நான் என்று கூறி) உழைத்து பிழைக்கும் ஒரு வேலை வெட்டி செய்யும் மனிதரை வினவு கோஷ்டிக்கு கம்பேர் செய்யும் அராஜகத்தை முதலில் கண்டிக்கிறேன்!! ||

ஆமாங்க... நானும் கண்டிக்கிறேன்.. அவ்வ்வ்வ்.. விஜய் இதைக் கேட்டாலே காமிக்ஸ் புத்தகம் சாப்ட்டு செத்துப் போவான்...

சஞ்சய் ஒரு கொலைக் குற்றத்திற்கு ஆளான பாவம் உங்களுக்கு வேண்டாம்...

ரவி said...

---அதே போல் ஆச்சர்யமான விஷயம்... இதில் இது போல் நர்சிம் எந்த பதிவையும் எழுதியது இல்லை... ஆனால் இப்படி ஒரு புனைவை வன்மத்தை எழுத தூண்டியது எது..

நர்சிம் தப்பு செய்தவர் என்றால்.. அவர் வீடும் அவர் மனைவியும் என்ன தப்பு செய்தார்கள்...? அவர்கள் அலுவலகம் என்ன தவறு செய்தது....
----

ஜாக்கிசேகர். உங்களது மேட்டிமைத்தனமான இந்த பின்னூட்டம் உங்களையும் யார் என்று சொல்லிவிட்டது.

நீங்கள் வைத்திருக்கும் பதிவில் இது குறித்து எதுவும் எழுதவில்லையே ?

நர்சிம்மை இது குறித்து என்ன கண்டித்தீர்கள் ? கார்க்கியை கண்டித்தீர்களா ?

இரட்டை நிலை எடுக்க உங்களை போதித்தவன் எவன் ?

அர டிக்கெட்டு ! said...

இதை கும்மிப்பதிவாக மாற்றி உண்மைத்தமிழனின் முயற்சிக்கு உரமேற்றும், கரத்தை வலுப்படுத்தும், வலையுலக தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

ஈரோடு கதிர் said...

போங்கப்பா எல்லாரும்..

போய் மத்யான சோறு தின்னுபோட்டு வாங்க...

அப்புறம் தெம்பா ஆரம்பிக்கலாம்

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

எச்சூஸ் மி. நான் ஒருத்தர்ட ஜாதி எப்புடி இடுகைய வெச்சி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன். இன்னோருத்தருட்ட என்ன திட்டிட்டாங்கன்னு நாயம் கேட்டேன். எங்க அவங்க? யார்னா பார்த்தீங்களா? ||

சார் சும்மா இருங்க சார்... அவங்க டயர்டு ஆவாங்கல்ல... தெம்பா பேச வேணாமா.. தண்ணியாவது சாப்ப்ட்டு வருவாய்ங்க... கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க..

கலகலப்ரியா said...

|| ஈரோடு கதிர் said...
போங்கப்பா எல்லாரும்..

போய் மத்யான சோறு தின்னுபோட்டு வாங்க...

அப்புறம் தெம்பா ஆரம்பிக்கலாம்||

ஸேம் ப்ளட்டுபா..

ரவி said...

---கலகலப்ரியா, என்னிடம் உங்கள் அராஜகம் வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கு வந்து சேப்பு கலர் நோட்டிஸ் குடுப்போம்.. பக்கத்து வீட்டு பசங்களுக்கு காமிக்ஸ் வாங்கிக் குடுப்போம்.. ஆனால் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. நாங்க தான் அங்க வந்தும் பேர் சொல்ல மாட்டோமே.. இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க

---


சஞ்ஜெய், இந்த பிரச்சினையை எள்ளலோடு அணுக முடிவதே உச்சபட்ச சாடிசம்.

ஈரோடு கதிர் said...

அடி.. ஆத்தி

மெயில்ல வுழுற கமெண்ட படிக்கவே பொழப்பு சரியா இருக்கு

அதே சமயம்..

சும்மா... ஜம்னு நின்னு களத்துல கமெண்ட் போடுறவங்களுக்கு சோறு, தண்ணி நாவகப் படுத்தோனும்ல


நாளைக்கு பின்னூட்டம் போட்டு பசியில மயங்கி யாராவது வுழுந்த அது பத்தி நாலு பேரு இடுகை போடுவாங்கள்ள

வரலாறு முக்கியம் இல்லையா பிரியா...

டவுசர் பாண்டி... said...

அரடிக்கட் உங்களுக்கு ப்ரொஃபைலே இல்லியே....

அப்படீன்னா நீங்க...!

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! said...
இதை கும்மிப்பதிவாக மாற்றி உண்மைத்தமிழனின் முயற்சிக்கு உரமேற்றும், கரத்தை வலுப்படுத்தும், வலையுலக தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!!!||

உங்களுக்கே நீங்க வாழ்த்தும் சொல்லுவீங்களா... அச்சோ பாவம்.. கும்மின்னா கொஞ்சமும் இஷ்டமில்ல... உண்மைத்தமிழன் சார் கை ரொம்ப வலுவாத்தான் இருக்கு... அதுக்கு வினவுப் பன்னாடைங்க மாதிரி ஆயிரத்தெட்டுப் பேரு முட்டுக்குடுக்க தேவையிருக்காது... வீக் பார்ட்டிங்களுக்குதான் அதெல்லாம்...

உண்மைத்தமிழன் சார் ஒத்தை ஆளா நின்னு உங்க க்ரூப் மாதிரி ஆயிரம் க்ரூப்ப சமாளிப்பாய்ங்க... நீங்க ரூட்ட மாத்தாம தெம்பா கும்முங்கப்பு...

இன்றைய கும்மியில்... இது வரை தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் அரை டிக்கெட்டுக்கு ஒரு ஓ போடுங்கப்பா எல்லாரும்...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

vasu balaji said...

செந்தழல் ரவி said...

---கலகலப்ரியா, என்னிடம் உங்கள் அராஜகம் வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கு வந்து சேப்பு கலர் நோட்டிஸ் குடுப்போம்.. பக்கத்து வீட்டு பசங்களுக்கு காமிக்ஸ் வாங்கிக் குடுப்போம்.. ஆனால் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. நாங்க தான் அங்க வந்தும் பேர் சொல்ல மாட்டோமே.. இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க

---


சஞ்ஜெய், இந்த பிரச்சினையை எள்ளலோடு அணுக முடிவதே உச்சபட்ச சாடிசம்.//

Is it? Then answer me Mr. Ravi. Be serious. Can you make sandanamullai to apologise for the slander. I voted narsim. i enjoyed his writing. I did it on my own. not for vote. not for comments. not for a beer, meals or money. Now answer me. If people are impartial you call them double standard. If you want only sandanamullai is the innocent victim sorry, you are doing it at the cost of all the admiration and a very great respect i have on you.

கலகலப்ரியா said...

||சஞ்ஜெய், இந்த பிரச்சினையை எள்ளலோடு அணுக முடிவதே உச்சபட்ச சாடிசம்||

ஆமாம் சஞ்சய்.. sadist-ஆ இருக்க கொஞ்சப் பேருக்குதான் தகுதி இருக்கு... நாம டிஸ்குவாலிஃபைட்...

கும்மிக்கு நன்றிப்பா...

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

அடி.. ஆத்தி

மெயில்ல வுழுற கமெண்ட படிக்கவே பொழப்பு சரியா இருக்கு

அதே சமயம்..

சும்மா... ஜம்னு நின்னு களத்துல கமெண்ட் போடுறவங்களுக்கு சோறு, தண்ணி நாவகப் படுத்தோனும்ல


நாளைக்கு பின்னூட்டம் போட்டு பசியில மயங்கி யாராவது வுழுந்த அது பத்தி நாலு பேரு இடுகை போடுவாங்கள்ள

வரலாறு முக்கியம் இல்லையா பிரியா... ||

அட... சோறுக்கு நினைவூட்டிய செம்மல் என்று வினவுவில் மற்றவர்களுக்குப் பட்டம் கொடுத்த வள்ளல்கள் சார்பில் உங்களுக்குப் பட்டமளிக்கிறோம்.. உங்கள் பெயர் வரலாற்றின் மக்கிப் போன சுவர்களின் பொன்னெழுத்தால் பொறிக்கப்படும்...

டவுசர் பாண்டி... said...

ஷோக்கா கேட்டீங்க வனம்பாடி!

அர டிக்கெட்டு ! said...

@@@உங்களுக்கே நீங்க வாழ்த்தும் சொல்லுவீங்களா... அச்சோ பாவம்.. கும்மின்னா கொஞ்சமும் இஷ்டமில்ல... உண்மைத்தமிழன் சார் கை ரொம்ப வலுவாத்தான் இருக்கு... அதுக்கு வினவுப் பன்னாடைங்க மாதிரி ஆயிரத்தெட்டுப் பேரு முட்டுக்குடுக்க தேவையிருக்காது... வீக் பார்ட்டிங்களுக்குதான் அதெல்லாம்...

உண்மைத்தமிழன் சார் ஒத்தை ஆளா நின்னு உங்க க்ரூப் மாதிரி ஆயிரம் க்ரூப்ப சமாளிப்பாய்ங்க... நீங்க ரூட்ட மாத்தாம தெம்பா கும்முங்கப்பு...

இன்றைய கும்மியில்... இது வரை தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் அரை டிக்கெட்டுக்கு ஒரு ஓ போடுங்கப்பா எல்லாரும்...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

@@@

அட அதானே இவ்வளவு நேரமா நீங்க இங்க உலாத்தும் போது ஒரு வேள உ.த. வீக் ஆயிட்டாரோன்னு நான் கூட ஒரு நிமிசம் நெனச்சேன். அப்ப நீங்க என்ன பண்றீங்க வேற யாராவது பண்ணாடைக்கு முட்டுக்கொடுக்கறீங்களா பிரியா???

தமிழ் அமுதன் said...

பாலா அண்ணே...! நாங்களும் காலைல இருந்து சோறு தண்ணி இல்லாம படம் பார்த்து கிட்டு இருக்க்கோம் இப்பொ திடீர்னு நீங்க


//Is it? Then answer me Mr. Ravi. Be serious. Can you make sandanamullai to apologise for the slander. I voted narsim. i enjoyed his writing. I did it on my own. not for vote. not for comments. not for a beer, meals or money. Now answer me. If people are impartial you call them double standard. If you want only sandanamullai is the innocent victim sorry, you are doing it at the cost of all the admiration and a very great respect i have on you.

Read more: http://truetamilans.blogspot.com/2010/06/blog-post.html#ixzz0paiefEBJ//


இப்படி இங்லீஷ்ல கமெண்ட் போட்டா எப்ப்டிண்ணே..? கொஞ்சம் பார்த்து பண்னுங்க அண்ணே...!

கலகலப்ரியா said...

||அட அதானே இவ்வளவு நேரமா நீங்க இங்க உலாத்தும் போது ஒரு வேள உ.த. வீக் ஆயிட்டாரோன்னு நான் கூட ஒரு நிமிசம் நெனச்சேன். அப்ப நீங்க என்ன பண்றீங்க வேற யாராவது பண்ணாடைக்கு முட்டுக்கொடுக்கறீங்களா பிரியா??? ||

அட நாந்தேன் சொல்றேனில்லீங்க.. நான் தனியா எனக்காக நின்னு போர்....ராடிட்டிருக்கேன்... என்னோட பெயர் அங்க போட்டது தப்பு எடுக்க சொல்லு...

யாராவது பன்னாடைன்னா.. இப்போதைக்கு நீதான்... உனக்கு முட்டு தேவையா... சொல்லு ப்ரச்சனை இல்ல... பேசித் தீர்த்துக்கலாம்..

டவுசர் பாண்டி... said...

அர டிக்கெட் அவர்களே....முதல்ல போய் சொந்தமா நாலு பதிவு போட்டுட்டு அப்புறமா இங்க வந்து முட்டுக் கொடுக்கற வேலைய பாருங்க...

பதிவரா நின்னு கூவறதுக்கும், அல்லக்கையா நின்னு கூவறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு நண்பரே!

அர டிக்கெட்டு ! said...

@@@அட நாந்தேன் சொல்றேனில்லீங்க.. நான் தனியா எனக்காக நின்னு போர்....ராடிட்டிருக்கேன்... என்னோட பெயர் அங்க போட்டது தப்பு எடுக்க சொல்லு...
@@@

நான் உன்னோட மவுத்பீஸ் கிடையாது, அதான் எதிர்பதிவு எழுதிட்டீயில்ல அப்புறம் என்ன??? அங்க யாரவது வந்து வினவு பேற எடுன்னு கேட்டமா???

@@@யாராவது பன்னாடைன்னா.. இப்போதைக்கு நீதான்... உனக்கு முட்டு தேவையா... சொல்லு ப்ரச்சனை இல்ல... பேசித் தீர்த்துக்கலாம்..@@@

எனக்கு நீ முட்டுக்குடுக்க வேணாம், பேசித்தீத்துக்குற அளவுக்கு உனக்கும் எனக்கும் பிரச்சனை இல்ல.

அர டிக்கெட்டு ! said...

@@அர டிக்கெட் அவர்களே....முதல்ல போய் சொந்தமா நாலு பதிவு போட்டுட்டு அப்புறமா இங்க வந்து முட்டுக் கொடுக்கற வேலைய பாருங்க...

பதிவரா நின்னு கூவறதுக்கும், அல்லக்கையா நின்னு கூவறதுக்கும் நெறய வித்தியாசமிருக்கு நண்பரே!@@@


டவுசரு, பதிவுலகம் பதிவனுக்கு சொந்தமில்லபு... அது என்ன மாதிரி வாசகனுக்கும் சொந்தம்.. 300 பதிவன நம்பிதான் தமிழ் பதிவுலகமே இருக்கா என்ன???

அர டிக்கெட்டு ! said...

@@I voted narsim. i enjoyed his writing. I did it on my own. not for vote. not for comments. not for a beer, meals or money. @@

உங்கள பெயர் சொல்லி முல்லை எழுதுன மாதிரி தெரியலியே, அதே நேரத்துல பதிவுலகத்துல நர்சிம் கிட்ட 'வாங்குன' பாசத்துக்காக பல பேர் ஜால்ரா அடிப்பதாக சிங்கப்பூர் வரை பேசிக்கொள்வது உங்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது.

Heam said...

//எனக்கு ஒரு சுமால் டவுட்டு.. இப்போவே கமெண்ட்ஸ் நிரம்பி வழியுதே.. இதுக்கெல்லாம் எங்கண்ணன் தனித் தனியா பதில் போடுவாரே. அவ்வ்வ்வ்வ்வ்....// same டௌட் ..

// உண்மைத் தமிழன் ஐயா உணர்ச்சியுடன் எழுதிய எழுத்தைத் தமாஷு என்று சொல்லும் இந்தச் சஞ்சய் காந்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... // நானும் கண்டிக்கிறேன் .. அய்யா நானும் கண்டிசிட்டேன் .

//கலகலப்ரியா, என்னிடம் உங்கள் அராஜகம் வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கு வந்து சேப்பு கலர் நோட்டிஸ் குடுப்போம்.. பக்கத்து வீட்டு பசங்களுக்கு காமிக்ஸ் வாங்கிக் குடுப்போம்.. ஆனால் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. நாங்க தான் அங்க வந்தும் பேர் சொல்ல மாட்டோமே.. இப்ப என்னா செய்வீங்க.. இப்ப என்னா செய்வீங்க..||// இது விஜய் படத்தை மிஞ்சிய நகைச்சுவை .. வாழ்க சஞ்சய் .. வளர்க அவர் பொது சேவை .

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@@அட நாந்தேன் சொல்றேனில்லீங்க.. நான் தனியா எனக்காக நின்னு போர்....ராடிட்டிருக்கேன்... என்னோட பெயர் அங்க போட்டது தப்பு எடுக்க சொல்லு...
@@@

நான் உன்னோட மவுத்பீஸ் கிடையாது, அதான் எதிர்பதிவு எழுதிட்டீயில்ல அப்புறம் என்ன??? அங்க யாரவது வந்து வினவு பேற எடுன்னு கேட்டமா???||

சபாஷ்... சர்ர்ர்ர்ரியான கேள்விடா சாமீ... அப்போ... நீ என்னோட பேரத் தூக்க மாட்ட...

அப்புறம் நான் சொன்ன மொள்ளமாரி.. கேண... பொறுக்கி ... புறம்போக்கு எல்லாம் நீங்கன்னு.. வினவுவின் மூத்த அல்லக்கை என்ற பதவியிலிருக்கும் நீர் இதன் மூலம் ஒத்துக் கொள்கிறீர்.. சரியா...

இனிம்ம்மே வினவுக்கு முட்டுக் கொடுத்துக்கிட்டு யாராவது என் பதிவில வந்து வக்காலத்து வாங்குவாய்ங்க... அரை டிக்கெட்டு... அவங்களுக்கு நீ பதில் சொல்லுவால்ல... அது போதும்..

பை பை... ரொம்ப டாங்க்ஸ்பா... அரை டவுசரு..

உண்மைத் தமிழன் சார்... ஸாரி சார்.. என்னோட பதிவில முகமூடி இல்லாம வர பப்பி ஷேம்ன்னு இங்கயே உக்காந்துட்டாங்க.. அதனால பேசித் தீர்க்க வேண்டியதா போச்சு...

பிரபல பதிவர் said...

செல்லாது செல்லாது
நாட்டாமை தீர்ப்ப மாத்து

Heam said...

பிரியா அக்காவுக்கு ஒரு சோடா பார்சல் .. அப்படியே இங்க காமெடி பண்ற சஞ்சய்க்கு ஒரு 1 /4 பார்சல்

vasu balaji said...

அர டிக்கெட்டு ! said...

@@I voted narsim. i enjoyed his writing. I did it on my own. not for vote. not for comments. not for a beer, meals or money. @@

உங்கள பெயர் சொல்லி முல்லை எழுதுன மாதிரி தெரியலியே, அதே நேரத்துல பதிவுலகத்துல நர்சிம் கிட்ட 'வாங்குன' பாசத்துக்காக பல பேர் ஜால்ரா அடிப்பதாக சிங்கப்பூர் வரை பேசிக்கொள்வது உங்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது.//

அரை டிக்கட் சார், இந்த கேள்வி நான் உங்களுக்கு கேக்கலைங்களே. இது ரவிசாருக்குல்ல கேட்டேன். நீங்க ஜாதி எப்புடி கண்டுபுடிக்கறதுன்னு இன்னும் சொல்லலைங்க. சரி சொன்ன பதிலுக்கு நான் கேள்வி கேக்கணும்ல. நர்சிம் பூக்காரில கூட அவங்க பேர சொல்லலைங்களே. நீங்க எப்புடி அவங்கள சொல்லிட்டாருன்னு சொன்னீங்களோ நான் அப்புடித்தான் கேக்குறேன். நரசிம்மின் மொக்கையை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த ஜால்ரால நானும் ஒன்னு. நான் எந்த சிங்க்ப்பூர கண்டேன். அவங்க பொதுவா மொக்கைய ஆஹா ஓஹோன்னு சொல்றவங்க காசுக்கும் பீருக்கும்னா எனக்கு ஒன்னுமே வரலயேன்னு கேக்குறேன் தப்பா?

ஈரோடு கதிர் said...

//நான் எந்த சிங்க்ப்பூர கண்டேன்//

அண்ணெ... உங்களுக்குத்தான் பாஸ்போர்ட்டே கெடையாதே...

சினிமாவுல கீது கண்டீங்களோ!!!

அர டிக்கெட்டு ! said...

@@சபாஷ்... சர்ர்ர்ர்ரியான கேள்விடா சாமீ... அப்போ... நீ என்னோட பேரத் தூக்க மாட்ட...@@@

இது என்ன லூசுத்தனம்? போய் பதிவ எழுதுனவங்கள கேளு!!

@@அப்புறம் நான் சொன்ன மொள்ளமாரி.. கேண... பொறுக்கி ... புறம்போக்கு எல்லாம் நீங்கன்னு.. வினவுவின் மூத்த அல்லக்கை என்ற பதவியிலிருக்கும் நீர் இதன் மூலம் ஒத்துக் கொள்கிறீர்.. சரியா... @@@

திட்டுவதை தவிர வெறு எதுவும் இங்க நீங்க எழுதாதபோது எனக்கு என்ன சாய்சா இருக்கு???

@@@இனிம்ம்மே வினவுக்கு முட்டுக் கொடுத்துக்கிட்டு யாராவது என் பதிவில வந்து வக்காலத்து வாங்குவாய்ங்க... அரை டிக்கெட்டு... அவங்களுக்கு நீ பதில் சொல்லுவால்ல... அது போதும்.. @@@

வினவுக்கு உன்பதிவுல வந்து முட்டுக்கொடுக்க வாரவகளுக்கு பதில் சொல்றது என் வேலயில்ல
அது உன் பிரச்சனை!

@@பை பை... ரொம்ப டாங்க்ஸ்பா... அரை டவுசரு.. @@

போய் நல்லா ரெஸ்ட் எடும்மா, அப்புறமா புச்சு புச்சா திட்லாம்

@@உண்மைத் தமிழன் சார்... ஸாரி சார்.. என்னோட பதிவில முகமூடி இல்லாம வர பப்பி ஷேம்ன்னு இங்கயே உக்காந்துட்டாங்க.. அதனால பேசித் தீர்க்க வேண்டியதா போச்சு...@@

நான் உ.தவுக்கு போட்ட பின்னூடத்துக்கு பதில் சொல்லி பஞ்சாயத்த ஆரம்பிச்சது நீதான்மா?
உ.தவுக்கு நான் பேர மாத்த சொன்னது பத்தி அவரு எழுதும்போது
நான்பேசிக்கிறேன்.

@@ேசித் தீர்க்க வேண்டியதா போச்சு@@

திட்டித்தீக்க வேண்டியதா போச்சுன்னு மாத்திட
............
அடுத்து யாருப்பா???

Soona Paana said...

இங்க என்ன நடக்குது ?

அர டிக்கெட்டு ! said...

@@நீங்க ஜாதி எப்புடி கண்டுபுடிக்கறதுன்னு இன்னும் சொல்லலைங்க@@

அத சாதித்திமிரோட எழுதுன நர்சிமிடம் கேளுங்கள்

அர டிக்கெட்டு ! said...

@@@சரி சொன்ன பதிலுக்கு நான் கேள்வி கேக்கணும்ல. நர்சிம் பூக்காரில கூட அவங்க பேர சொல்லலைங்களே. நீங்க எப்புடி அவங்கள சொல்லிட்டாருன்னு சொன்னீங்களோ நான் அப்புடித்தான் கேக்குறேன்@@@

நர்சிமே நேற்று காலை முல்லைதான் என்பதை உறுதிப்படுத்தியபின் இந்த கேள்வி டிஸ்குவாலிஃபடு

அர டிக்கெட்டு ! said...

@@@நரசிம்மின் மொக்கையை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த ஜால்ரால நானும் ஒன்னு.@@@

அப்படியா???

@@@நான் எந்த சிங்க்ப்பூர கண்டேன். அவங்க பொதுவா மொக்கைய ஆஹா ஓஹோன்னு சொல்றவங்க காசுக்கும் பீருக்கும்னா எனக்கு ஒன்னுமே வரலயேன்னு கேக்குறேன் தப்பா?@@

இதுவும் நர்சிமை கேட்க வேண்டியது...

Prabhu said...

முடியல , சத்தியமா முடியல .... ஏன் பதிவர்கள் எல்லாம் இப்படி சண்டை போட்டுக்குறீங்க ? -7 வருட தமிழ்மண வாசகர் ....

vasu balaji said...

அரைடிக்கட் said..
/அடுத்து யாருப்பா//

சார். நான் இருக்கேன் சார். எனக்கு பதில் வரலைங்க சார். காசும் வரலைங்க சார். மன்னிப்புக்கும் கேரண்டி இல்ல சார். ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி ஆவுது. ஏன் சார் எனக்கு யாரும் பதில் சொல்லமாட்றாங்க. நான் தப்பா கேட்டனா சார். போய்ட்டே இருக்கோம். வழியில ஏதோ அசிங்கம் இருக்கு. ஒதுங்கிப்போனா தப்பா சார்? எவண்டா இங்க அசிங்கம் பண்ணதுன்னு ஏண்டா கேக்கலைன்னு திட்ராங்க சார். ஏன் சார் எனக்கு யாரும் பதில் சொல்லமாட்றாங்க.

கலகலப்ரியா said...

||
திட்டித்தீக்க வேண்டியதா போச்சுன்னு மாத்திட
............
அடுத்து யாருப்பா???||

அடச்சை... அழுவாதீங்கப்பு... மனச தேத்திக்குங்க... நாமதான் திட்டுவோம்.. அடிப்போம்... மத்தவங்க திட்டினா தாங்க மாட்டோம்னா எப்பூடி...

இங்க நிக்கிறாருய்யா அடுத்தது யாருப்பான்னு... காதைக் கடிச்ச நம்ம மைக் டைசன் கூட இப்பூடி நின்னிருப்பாரா... என்ன ஒரு வீரம்..

அதெல்லாம் நாசமாஆஆ போகட்டு.. ஏன் உண்மைத்தமிழன் சார்... நான் இவ்ளோ தூரம் மூச்சுப் புடிச்சு கத்துறேனே... யாரோ ஒரு பயபுள்ள சோடா கூட வாங்கிக் கொடுத்தானே... அடப்பாவி மக்கா.. நான் ஒரு உலகம் தெரியாத .. முன்னூறு பேருக்காகப் பதிவெழுதுற வெங்காயம்ன்னு தெரியுமில்லப்பு...

இந்த அரைடிக்கெட்டு எவ்ளோ நேர்மையா அரை டிக்கெட்டுன்னு பேரு வச்சிருக்கு... ஆனா நீங்க யாருமே என் கிட்ட இது ஜஸ்ட் அல்லக்கை... ஒரு எளவுக்கும் துப்பில்லை... அங்க உக்காந்து உன் கிட்ட கும்மியடிக்குதுன்னு சொல்லி இருக்கப்டாதாப்பு...

நானும் இந்த வீணாப்போன வெத்து வேட்டு கிட்டயா இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தேன்... ஓ.. ஓ... அந்த மூத்த முருங்கக்கான்னு ஏதோ சொன்னத வச்சு... ஏதோ வினவுல கக்கூஸ்ல எட்டிப் பார்க்கறவைங்களுக்கு ஸ்டூல் தூக்கிப் போடுற ஆளாவாவது இருப்பான்னு நினைச்சேன்.. கடைசில பார்த்தா... இதுவும் இப்பூடியா..

சாரிடிம்மா அரைடிக்கெட்டு... ஒரு அப்ப்ப்ப்ப்புராணியப் போட்டு இவ்ளோ நேரம் டார்ச்சர் பண்ணிட்டமே... ஹ்ம்ம்.. க்ளுக்கோஸ் சாப்பிடப்பு..

ஆமா... என்னாஆஆஆத்துக்கு அங்க உக்காந்து அலர்றா... போ... போய்த் தூங்கு... உதவாக்கரைங்க..

vasu balaji said...

என்னாங்க சார் அனியாயம் இது. நான் வினவுல சொன்னததானே சொன்னேன்னு சொல்றேன். நரசிம்முக்கு ஜாதி திமிர். பிற்படுத்தப்பட்ட வகுப்பு சந்தனமுல்லைன்னு. அதெப்புடி கண்டுபுடிச்சாங்கன்னா சொல்லணுமா வேணாமா? எல்லாத்துக்கும் நான் நர்சிம்ம கேட்டுப்பேன். ஆனா எங்களுக்கு தெரியிராமாதிரி கேளுன்னா நான் என்ன பண்ணுவேன். கேட்டு சொல்லுங்கன்னுதான் கேப்பேன்.

அர டிக்கெட்டு ! said...

இந்தாம்மா பிரியா, இப்பத்தான் வானம்பாடிகள்னு ஒருத்தரு உறுப்படியா பேசிகிட்டிருக்காறு.. உனக்கு தெளிவா நாலு வரி பேச வரல, அதுக்குள்ள கக்கூசு ஞாபகம் வந்திடுத்து.. அப்புறம் என்ன இங்க வேல கிளம்பு.. ஜோலிய முடி....

அர டிக்கெட்டு ! said...

என்னாங்க சார் அனியாயம் இது. நான் வினவுல சொன்னததானே சொன்னேன்னு சொல்றேன். நரசிம்முக்கு ஜாதி திமிர். பிற்படுத்தப்பட்ட வகுப்பு சந்தனமுல்லைன்னு. அதெப்புடி கண்டுபுடிச்சாங்கன்னா சொல்லணுமா வேணாமா? எல்லாத்துக்கும் நான் நர்சிம்ம கேட்டுப்பேன். ஆனா எங்களுக்கு தெரியிராமாதிரி கேளுன்னா நான் என்ன பண்ணுவேன். கேட்டு சொல்லுங்கன்னுதான் கேப்பேன்.@@

நர்சிம அவர் பதிவுல எழுதுனத கோட் செஞ்சேனே பாக்கல

@@@பூக்காரியில் ---
அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்
இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா???

vasu balaji said...

//@@@பூக்காரியில் ---
அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்
இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா??? //

அண்ணே ஏண்டா கைய புடிச்சி இழுத்தியாமாதிரி இது என்னாண்ணே. இதானேண்ணே கேட்டேன். பிறப்ப வெச்சி ஜாதியா? வளர்ப்ப வெச்சி ஜாதியா? இதில எப்புடி பார்ப்பான், பிற்படுத்தப்பட்டவர்னு கண்டு புடிக்கறது? ஒரு வேள நர்சிம் பாப்பான் நம்ம வளர்ப்புன்னு சொன்னதாலன்னே வெச்சிக்குவோம். மத்தது பிறப்புன்னு இருந்தா பிற்படுத்தப்பட்டவா சார். அப்போ ஓ.பி.சி. முஸ்லிம், கிறிஸ்டியன் எல்லாம் எப்புடிசார் கண்டு புடிக்கறது? சத்தியமா வினவு படிச்சிதான் இதுல ஜாதி இருக்குன்னே தெரிஞ்சதுங்க சார்

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

இந்தாம்மா பிரியா, இப்பத்தான் வானம்பாடிகள்னு ஒருத்தரு உறுப்படியா பேசிகிட்டிருக்காறு.. உனக்கு தெளிவா நாலு வரி பேச வரல, அதுக்குள்ள கக்கூசு ஞாபகம் வந்திடுத்து.. அப்புறம் என்ன இங்க வேல கிளம்பு.. ஜோலிய முடி.... //

ஜோலிய முடிக்க நான் என்ன வினவு கூடச் சேர்ந்து கொலை பண்றேனா..

வானம்பாடிகள் சார் உருப்படியாதான் பேசுவாரு... நீ உருப்படியா பேசுற வழியப் பாரு...

சார்.. வானம்பாடி சார்.. நீங்க ஆரம்பிச்சிட்டீங்க... இனி... ஆத்தா காசு குடு... சந்தைக்கு போவனும்தான்... இதுக்கு ஒரு நூறு வாட்டி அந்த வினவு பதிவையே படிக்கலாம்... இதெல்லாம் சொந்தமா பேசத் தெரியாத கேஸ்.. அங்க இருக்கிறத அப்டியே காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சுட்டிருக்கும்... டோட்டல் வேஸ்ட் சார் இது...

தமிழ் அமுதன் said...

வானம்பாடிகள் said...

///சத்தியமா வினவு படிச்சிதான் இதுல ஜாதி இருக்குன்னே தெரிஞ்சதுங்க சார்//

உண்மை ...! பதிவர் சண்டையை ஜாதி சண்டையா மாத்த முயற்சி பண்ணிது
வினவுதான்..!

Soona Paana said...

//அங்க இருக்கிறத அப்டியே காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சுட்டிருக்கும்... டோட்டல் வேஸ்ட் சார் இது... //
அதுனால தான் அரை டிக்கட்னு பேரு வெச்சி இருகாங்க சார் . சும்மாவா சொன்னங்க பெரியவங்க நிறை குடம் நீர் தழும்பாது இங்க பாருங்க ஒரு முழு டிக்கெட் அமைதியா இருக்கேன் . ஒரு அரை டிக்கெட் கூவிட்டு இருக்கு

vasu balaji said...

அய்யய்யோ. இந்த நாயத்த சொல்லுங்களேன். வினவுக்கே 108 பின்னூட்டம் (அதென்ன 108 பார்ப்பன சதியா?) உ.த. அண்ணனுக்கு 154..அவ்வ்வ்வ்வ்வ்வ்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Soona Paana said...

//அய்யய்யோ. இந்த நாயத்த சொல்லுங்களேன். வினவுக்கே 108 பின்னூட்டம் (அதென்ன 108 பார்ப்பன சதியா?) உ.த. அண்ணனுக்கு 154..அவ்வ்வ்வ்வ்வ்வ். //

ஐயோ என்ன கொடுமை இது .. இது முழுக்க முழுக்க பார்பன சதி .. அடுத்து வினவு பதிவு உங்களுக்கு தான் உண்மை அண்ணே

பருப்பு (a) Phantom Mohan said...

Unmaithtamizhan!

please delete saindhavi comment immediately.

too bad :(

vasu balaji said...

சைந்தவி முகமூடியில வந்த அல்லக்க்கையே. கலகலப்ரியாவுக்கு எதிரா பேசுறதால நீ வினவு க்ரூப்னா நர்சிம்ம கேக்க உனக்கு என்ன அருகதை.

தமிழ் அமுதன் said...

//Saindhavi//


இன்சியல் இல்லாம இருக்குரவன என்ன சொல்லுவாங்க தெரியுமா?

கலகலப்ரியா said...
This comment has been removed by a blog administrator.
Soona Paana said...

@ saindhavi ; வந்துட்டாங்க யா .. வந்துட்டாங்க .. இன்னைக்கு ஐநூறு புன்னூடம் confirm .

அர டிக்கெட்டு ! said...

@@சார்.. வானம்பாடி சார்.. நீங்க ஆரம்பிச்சிட்டீங்க... இனி... ஆத்தா காசு குடு... சந்தைக்கு போவனும்தான்... இதுக்கு ஒரு நூறு வாட்டி அந்த வினவு பதிவையே படிக்கலாம்... இதெல்லாம் சொந்தமா பேசத் தெரியாத கேஸ்.. அங்க இருக்கிறத அப்டியே காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சுட்டிருக்கும்... டோட்டல் வேஸ்ட் சார் இது...@@

கக்கூச தவிர உனக்கு வேற எதுவும் பேசவே தெரியல என்ன செய்ய மலச்சிக்கல் கேசுன்னா அப்படித்தான்...சிந்தனையெல்லாம் உரிய எடத்துலதான் இருக்கும்..

Soona Paana said...

@ saindhavi :
கேள்வி கேட்டால் .. பொம்பள பேர்ல ஒளிஞ்சிட்டு வந்து பேசுற நாயே .. உனக்கும் கரண்ட் கம்பத்துல ஒ ... அடிக்கிற மிருகத்துக்கும் என்ன டா / டி வித்யாசம் ?

அர டிக்கெட்டு ! said...

@@//@@@பூக்காரியில் ---
அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்
இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா??? //

அண்ணே ஏண்டா கைய புடிச்சி இழுத்தியாமாதிரி இது என்னாண்ணே. இதானேண்ணே கேட்டேன். பிறப்ப வெச்சி ஜாதியா? வளர்ப்ப வெச்சி ஜாதியா? இதில எப்புடி பார்ப்பான், பிற்படுத்தப்பட்டவர்னு கண்டு புடிக்கறது? ஒரு வேள நர்சிம் பாப்பான் நம்ம வளர்ப்புன்னு சொன்னதாலன்னே வெச்சிக்குவோம். மத்தது பிறப்புன்னு இருந்தா பிற்படுத்தப்பட்டவா சார். அப்போ ஓ.பி.சி. முஸ்லிம், கிறிஸ்டியன் எல்லாம் எப்புடிசார் கண்டு புடிக்கறது? சத்தியமா வினவு படிச்சிதான் இதுல ஜாதி இருக்குன்னே தெரிஞ்சதுங்க சார்@@@@

அவ பொறப்பு அப்படி - நம்ம வளர்ப்பு வேற --- ஒரு ஆதிக்க சாதி வெறியன் வாயிலிருந்து மட்டும் வரும் வார்த்தைகள் இது. இதை தட்டிக்கேட்க துப்பில்லாமல் முல்லையின் சாதி எப்படி தெரிந்த்து என்று பேசுவது நர்சிமின் சாதித்திமிருக்கு சாமரம் வீசுவது போல

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@சார்.. வானம்பாடி சார்.. நீங்க ஆரம்பிச்சிட்டீங்க... இனி... ஆத்தா காசு குடு... சந்தைக்கு போவனும்தான்... இதுக்கு ஒரு நூறு வாட்டி அந்த வினவு பதிவையே படிக்கலாம்... இதெல்லாம் சொந்தமா பேசத் தெரியாத கேஸ்.. அங்க இருக்கிறத அப்டியே காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சுட்டிருக்கும்... டோட்டல் வேஸ்ட் சார் இது...@@

கக்கூச தவிர உனக்கு வேற எதுவும் பேசவே தெரியல என்ன செய்ய மலச்சிக்கல் கேசுன்னா அப்படித்தான்...சிந்தனையெல்லாம் உரிய எடத்துலதான் இருக்கும்.. //

வாடி வா.. சைந்தவி பேசட்டும்ன்னு மரியாதையா ஒதுங்கி இருந்து வழி விட்டு.. அப்பூடி அட்டாக் பண்ணா எப்பூடி ரியாக்ட் பண்றான்னு பார்த்தியாக்கூ...

அடப் பொறம்போக்கு வெண்ணைங்களா நீங்க எல்லாம் எவ்ளோ தூரம் இறங்குவீங்கன்னு தெரியாமலாடா நான் இடுகை போட்டேன்... ஒரு பொம்பளையத் திட்டுறதுக்கு மிகமிகமிகமிகக் கேவலமான வார்த்தை என்ன இருக்கோ... அதைச் சொல்லித் திட்டுங்கடா... இந்த மசித்து பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சி ஒளியறதுக்காக நான் இங்க இல்லை... மவனே நரிங்கதாண்டா பின்னாடி கோர்த்து விட்டு நல்ல புள்ளைங்க மாதிரி புல்லு புடுங்கும்... கோழை நாயிங்களா... எந்த புடுங்கின்னாலும் என்ன வேணா பேசுடா... அவங்க அவங்களுக்கே அவங்க கேரக்டர்ல சந்தேகம் இருந்தா அரண்டு போகலாம்... எனக்கு எந்த எழவும் இல்லைடா... பேசுடா... பார்ப்போம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
என்பதற்கு அத்தாட்சியாக உங்களுடைய பதிவைக் காண்பித்து அடையாள அட்டை வாங்கிவிடுங்கள்.. இல்லையெனில் நீங்கள் பார்ப்பனீயவாதிகளாக மாறிவிடுவீர்கள்.. ஜாக்கிரதை தோழர்களே..!
//

athaana

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
என்பதற்கு அத்தாட்சியாக உங்களுடைய பதிவைக் காண்பித்து அடையாள அட்டை வாங்கிவிடுங்கள்.. இல்லையெனில் நீங்கள் பார்ப்பனீயவாதிகளாக மாறிவிடுவீர்கள்.. ஜாக்கிரதை தோழர்களே..!
//

athaana

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
என்பதற்கு அத்தாட்சியாக உங்களுடைய பதிவைக் காண்பித்து அடையாள அட்டை வாங்கிவிடுங்கள்.. இல்லையெனில் நீங்கள் பார்ப்பனீயவாதிகளாக மாறிவிடுவீர்கள்.. ஜாக்கிரதை தோழர்களே..!
//

athaana

அர டிக்கெட்டு ! said...

அட தமிழ் மணத்தை பார்க்காமல் போயிட்டனே... வானம்பாடிகள் பைத்தியக்காரன் சாதியத்தை பற்றிய சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார்

vasu balaji said...

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நான் உங்களதானே கேட்டேன். அவர் என்ன சொல்றார்னு அப்புறம் படிச்சி நீங்க சொல்றதையும் படிச்சி ஒரு முடிவுக்கு வரேன். இல்லைன்னா அவர் கருத்துதான் வினவுதும்னு சொல்லுங்க.

Soona Paana said...

//எந்த புடுங்கின்னாலும் என்ன வேணா பேசுடா... அவங்க அவங்களுக்கே அவங்க கேரக்டர்ல சந்தேகம் இருந்தா அரண்டு போகலாம்... எனக்கு எந்த எழவும் இல்லைடா... பேசுடா... பார்ப்போம்..//
அட்ரா அட்ரா .. அர டிக்கெட் இருக்கான் பொடி பய .. நீங்க அடிச்சி ஆடுங்க .. முழு டிக்கெட் இருக்க பயம் ஏன் ?

Soona Paana said...

//எந்த புடுங்கின்னாலும் என்ன வேணா பேசுடா... அவங்க அவங்களுக்கே அவங்க கேரக்டர்ல சந்தேகம் இருந்தா அரண்டு போகலாம்... எனக்கு எந்த எழவும் இல்லைடா... பேசுடா... பார்ப்போம்..//
அட்ரா அட்ரா .. அர டிக்கெட் இருக்கான் பொடி பய .. நீங்க அடிச்சி ஆடுங்க .. முழு டிக்கெட் இருக்க பயம் ஏன் ?

கலகலப்ரியா said...

//அர டிக்கெட்டு ! said...
அட தமிழ் மணத்தை பார்க்காமல் போயிட்டனே... வானம்பாடிகள் பைத்தியக்காரன் சாதியத்தை பற்றிய சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்//

ஆமாம்.. இதே மாதிரி இன்னும் பெரிய பெரிய பெரியவங்க எல்லாம் தீர்த்து வச்சிருக்காங்க சார்... அதை நீங்க படிங்க... இந்த அரை டிக்கெட்டு ஒரு புடலங்கா வெளக்கமும் இல்லைன்னு தெரிந்து கொண்டும்.. கும்மிக்கு கூப்புடுறான்னு உக்காந்து கும்மியடிக்க முடியுமா... அப்டியே நகர்ந்துடுங்க...

அர டிக்கெட்டு ! said...

@@வாடி வா.. சைந்தவி பேசட்டும்ன்னு மரியாதையா ஒதுங்கி இருந்து வழி விட்டு.. அப்பூடி அட்டாக் பண்ணா எப்பூடி ரியாக்ட் பண்றான்னு பார்த்தியாக்கூ...@@@

அவதூறு.

@@அடப் பொறம்போக்கு வெண்ணைங்களா நீங்க எல்லாம் எவ்ளோ தூரம் இறங்குவீங்கன்னு தெரியாமலாடா நான் இடுகை போட்டேன்... ஒரு பொம்பளையத் திட்டுறதுக்கு மிகமிகமிகமிகக் கேவலமான வார்த்தை என்ன இருக்கோ... அதைச் சொல்லித் திட்டுங்கடா... இந்த மசித்து பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சி ஒளியறதுக்காக நான் இங்க இல்லை... மவனே நரிங்கதாண்டா பின்னாடி கோர்த்து விட்டு நல்ல புள்ளைங்க மாதிரி புல்லு புடுங்கும்... கோழை நாயிங்களா... எந்த புடுங்கின்னாலும் என்ன வேணா பேசுடா... அவங்க அவங்களுக்கே அவங்க கேரக்டர்ல சந்தேகம் இருந்தா அரண்டு போகலாம்... எனக்கு எந்த எழவும் இல்லைடா... பேசுடா... பார்ப்போம்..@@

இந்த வெறுப்பு சந்தனமுல்லையை அதே வார்த்தைகளால் திட்டிய நர்சிமை கண்டும் வந்திருந்தால்... உன் கேரக்டர பாராட்டியிருக்கலாம்...

ஐயா/அம்மா சைந்தவி - உத பதிவில் மாடரேசன் கிடையாது என சிந்து பாட வேண்டாம்.. கொமெண்டை துக்கிக்கொண்டு ஓடிவிடு

அர டிக்கெட்டு ! said...

@@@ஆமாம்.. இதே மாதிரி இன்னும் பெரிய பெரிய பெரியவங்க எல்லாம் தீர்த்து வச்சிருக்காங்க சார்... அதை நீங்க படிங்க... இந்த அரை டிக்கெட்டு ஒரு புடலங்கா வெளக்கமும் இல்லைன்னு தெரிந்து கொண்டும்.. கும்மிக்கு கூப்புடுறான்னு உக்காந்து கும்மியடிக்க முடியுமா... அப்டியே நகர்ந்துடுங்க...@@@

உன்ன மாதிரி வெத்து வேட்டுக்கு நான் பதில் சொல்றதே அதிகம்... இதுல பெரிய பெரியவங்க வந்து வேற பேசுவாங்களோ???

அர டிக்கெட்டு ! said...

தமிழ்மணம் பரிந்துரையில் வினவு ஆதரவு பதிவுகள் நிரம்பி இருக்கின்றன... உ.த. வை கைவிட்டுடாங்களே!!!

டவுசர் பாண்டி... said...

வினவு கும்பலின் சாயம் வெளுக்குதோ?

அரடிக்கட், சைந்தவி அடுத்து யாருப்பா!

கலகலப்ரியா கலக்கறீங்க....

vasu balaji said...

அட பாதி ரேஸ்ல முதல்ல ஒடி வரத வெச்சி கணக்கு பண்ணாதீங்க அரைடிக்கட்டு. 10 நிமிஷம் கேப்ல 100 பதிவு போடுவானுவ பதிவருங்க. பொருத்திருந்து பார்ப்போம். குப்பை பெரிய மூட்டையா இருந்தாலும் குந்து மணிதங்கம் இத்துனூண்டா இருந்தாலும் மதிப்பு எதுக்கு அதிகம். உங்களுக்கு தெரியாதா?

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@@ஆமாம்.. இதே மாதிரி இன்னும் பெரிய பெரிய பெரியவங்க எல்லாம் தீர்த்து வச்சிருக்காங்க சார்... அதை நீங்க படிங்க... இந்த அரை டிக்கெட்டு ஒரு புடலங்கா வெளக்கமும் இல்லைன்னு தெரிந்து கொண்டும்.. கும்மிக்கு கூப்புடுறான்னு உக்காந்து கும்மியடிக்க முடியுமா... அப்டியே நகர்ந்துடுங்க...@@@

உன்ன மாதிரி வெத்து வேட்டுக்கு நான் பதில் சொல்றதே அதிகம்... இதுல பெரிய பெரியவங்க வந்து வேற பேசுவாங்களோ??? ||

அட.. இத நான் ஆரம்பத்திலயே சொல்லிட்டேனுங்க... உங்களுக்கு எம்மாஆஆஅம்புட்டு மனசு... எனக்கு பொழுது போகலை... கும்மி அடிப்பதற்கு நன்றின்னு... இப்போ வந்தும் அதயே ரிப்பீட்டா.. சொந்தமா பேசவே வராதா...

அப்புறம் நான் பெரியவங்க பதில் சொல்லுவாய்ங்கன்னு சொன்னது வானம்பாடிக்கு... நமக்கு நம்ம பவுசு தெரியும்லடி கொக்கமக்கா...

அர டிக்கெட்டு ! said...

@@ குப்பை பெரிய மூட்டையா இருந்தாலும் குந்து மணிதங்கம் இத்துனூண்டா இருந்தாலும் மதிப்பு எதுக்கு அதிகம். உங்களுக்கு தெரியாதா?@@

அதானே வினவு எதிர் மூட்டைதானே பதிவுலகுல அதிகம்... நீங்களே சொல்லிடிங்க மூட்டையில என்னான்னு

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! said...
தமிழ்மணம் பரிந்துரையில் வினவு ஆதரவு பதிவுகள் நிரம்பி இருக்கின்றன... உ.த. வை கைவிட்டுடாங்களே!!||

ஓ இதை வைத்துத்தான் உத்தம ரத்தினங்கள் தீர்மானிக்கப் பெறுகின்றனவா..

இதுக்காகவாவது அங்க எல்லாரும் ஒரு மைனஸ் குத்துங்கைய்யா... நாசமா போகட்டு..

Soona Paana said...

// தமிழ்மணம் பரிந்துரையில் வினவு ஆதரவு பதிவுகள் நிரம்பி இருக்கின்றன... உ.த. வை கைவிட்டுடாங்களே!!! // ஆமா அப்படியே நிரம்பி வழிஞ்சிடாலும் .. பார்த்து எதுக்கும் ஒரு அணை கட்டி நிறுத்திடுங்க .. தமிழ்நாடே அடிச்சிட்டு போய்ட போது .. போ பொய் எவனாவது குத்த வெச்சிட்டு உட்கார்ந்து இருப்பான் அவன் கிட்ட சொல்லு .. நாங்க தான் பெரிய பு...... ( புலவர்னு )

vasu balaji said...

அய்ய. நீங்க என்னாங்க எவ்ளோ மதிப்பா நெனச்சி பேசிட்டிருக்கேன். இப்புடி அரசியல் மாதிரி கட்சி மாறிட்டீங்களே. வினவுக்கு ஆதரவு அதிகம்னா இப்போ எதிர் அதிகம்ங்கறீங்க. என்னா வேலை இது. முதல்ல நீங்க தெளிவாகுங்க. வினவு ஒன்னு. எதிர்ப்பு 100ன்னாலும் வினவு க்ரேட். வினவுக்கு ஆதரவு 100 எதிர்ப்பு ஒன்னுன்னாலும் வினவு க்ரேட்னா எப்புடி. எப்புடின்னாலும் ஜெயிச்சிட்டோம்னு சொல்லிக்கவா?

அர டிக்கெட்டு ! said...

@@ஓ இதை வைத்துத்தான் உத்தம ரத்தினங்கள் தீர்மானிக்கப் பெறுகின்றனவா..

இதுக்காகவாவது அங்க எல்லாரும் ஒரு மைனஸ் குத்துங்கைய்யா... நாசமா போகட்டு..@@

அய்யே புலம்பாதம்மே..இன்னா நடந்துபோச்சு..???

கலகலப்ரியா said...

||டவுசர் பாண்டி... has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

வினவு கும்பலின் சாயம் வெளுக்குதோ?

அரடிக்கட், சைந்தவி அடுத்து யாருப்பா!

கலகலப்ரியா கலக்கறீங்க....||

டவுசர் பாண்டி நீங்க வேறப்பா... இவனுங்க சாயம் இப்பவா வெளுக்குது... அது எப்பவோ சாயம்போன தகரடப்பாதான்... ஆனா மக்கள் சுயநலம் கருதி அப்ப அப்ப பச்சக் பச்சக்குன்னு புடிச்சுக்கிறானுவ...

உஷாரு... நாளைக்கே கலகலப்ரியா என்னும் வீராங்கனைன்னு அவங்க பதிவு போட்டா நான் போய்... வினவு உம்மை நினைச்சா பெ..எர்ர்ர்ருமைய்யா இருக்குப்பான்னு பின்னூட்டுவேன்..

கலகலப்ரியா said...

||
அர டிக்கெட்டு ! said...
@@ஓ இதை வைத்துத்தான் உத்தம ரத்தினங்கள் தீர்மானிக்கப் பெறுகின்றனவா..

இதுக்காகவாவது அங்க எல்லாரும் ஒரு மைனஸ் குத்துங்கைய்யா... நாசமா போகட்டு..@@

அய்யே புலம்பாதம்மே..இன்னா நடந்துபோச்சு..??||

வாங்க நாட்டாமை... என்னைய சைந்தவி பலாத்காரம் பண்ணிட்டா... பதிவு போடச் சொல்லுங்க.. ஓ நீங்களா.. அடச்சை.. த ஸேம் உதவாக்கரை... கேள்வியப் பாரு... புடுங்கற மாதிரி..

Soona Paana said...

//வாங்க நாட்டாமை... என்னைய சைந்தவி பலாத்காரம் பண்ணிட்டா... பதிவு போடச் சொல்லுங்க.. ஓ நீங்களா.. அடச்சை.. த ஸேம் உதவாக்கரை... கேள்வியப் பாரு... புடுங்கற மாதிரி..//
அர டிக்கெட் இதுக்காகவாது .. நீ இது வரைக்கும் என்ன புடுங்கி இருக்கன்னு சொல்லு பா .. பாரு இன்ன கேள்வி வந்துடுச்சு .. நீ யார் யாரோட ம ..... த ( மானத்த ) புடுங்கி இருகனு சொல்லு

அர டிக்கெட்டு ! said...

@@வாங்க நாட்டாமை... என்னைய சைந்தவி பலாத்காரம் பண்ணிட்டா... பதிவு போடச் சொல்லுங்க.. ஓ நீங்களா.. அடச்சை.. த ஸேம் உதவாக்கரை... கேள்வியப் பாரு... புடுங்கற மாதிரி..@@@

இப்ப எத புடுங்கனுங்கற நீ... ஏன்பா இந்த பொண்ணு எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா???

செங்கொடி said...

வணக்கம் உண்மை(!)த்தமிழரே,

உள்ளாட்கள், வெளியாட்கள் என நீங்கள் பிரிக்கும் எல்லைக்கோடு எது? எந்த அடிப்படையில் 'நாங்கள்' வெளியாட்கள்? உள்ளாட்களான உங்களுக்கும் வெளியாட்களான எங்களுக்குமிடையேயான வித்தியாசத்தில் ஒழித்து வைத்திருக்கும் பொதி என்ன?

உங்கள் முடை நாற்றத்தை உங்களுக்கே குத்தியெடுத்து காட்டியதால் நாங்கள் ஜாதி பேசுகிறோம் என குதிக்கும் நீங்கள்; ஜாதி எனும் வார்த்தையை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் செயல்பாடாய் வைத்திருக்கும் உள்ளாட்களான நீங்கள் சமத்துவம் பேசுபவர்களென்றால்; உங்களின் அசிங்கங்களை உங்களின் முகத்திற்கு நேரே கண்பிப்பதால் தான் நாங்கள் வெளியாட்களா?

மொக்கைகள் எனும் வார்த்தையை வினவு தான் முதலில் பயன்படுத்தியதா? பதிவுலகில் புழக்கத்தில் இருக்கும் சொல்தானே. அதை வினவு சொன்னதாலேயே அதற்கு தனிப்பொருள் கொடுக்க முயலும் உங்களின் உள்ளக்கிடை பதிவுலகம் எனும் மண்ணுக்கு உரமாகாமல் கெடுக்கும் கிடை என்பதை என்ன சூழல் வந்தால் நீங்கள் புரிவீர்கள்?

எல்லோரும் பேசும் அரசியலை நாங்கள் பேசுவதில்லை, உள்ளொன்று வைக்காமல் வெளிப்படையாக பேசும் எங்களின் அரசியலாலேயே நாங்கள் வெளியாட்கள் என்றால், உள்ளாட்கள், வெளியாட்கள் என்று உங்களை பிரிக்கத்தூண்டிய அரசியல் எது?

உண்மையைச் சொல்லமுடியுமா தமிழரே

செங்கொடி

கலகலப்ரியா said...

||அர டிக்கெட்டு ! has left a new comment on the post "வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...":

@@வாங்க நாட்டாமை... என்னைய சைந்தவி பலாத்காரம் பண்ணிட்டா... பதிவு போடச் சொல்லுங்க.. ஓ நீங்களா.. அடச்சை.. த ஸேம் உதவாக்கரை... கேள்வியப் பாரு... புடுங்கற மாதிரி..@@@

இப்ப எத புடுங்கனுங்கற நீ... ஏன்பா இந்த பொண்ணு எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா??? ||

யோவ் அதுதான் வெத்து வேட்டுன்னு சொல்லியாச்சில்ல திரும்ப திரும்ப என்ன கேள்வி... நானே புடுங்கிக்கறேன்.. நீ தள்ளி நில்லு..

நான் எப்பவுமே இப்டித்தான்யா...

அர டிக்கெட்டு ! said...

@@அர டிக்கெட் இதுக்காகவாது .. நீ இது வரைக்கும் என்ன புடுங்கி இருக்கன்னு சொல்லு பா .. பாரு இன்ன கேள்வி வந்துடுச்சு .. நீ யார் யாரோட ம ..... த ( மானத்த ) புடுங்கி இருகனு சொல்லு@@@

ஆக இங்கே நிதானத்துடன் பேச ஒரு பயலுக்கு பவுசில்ல.. எல்லாம் வந்ததுலேருந்து என்ன திட்டிகிட்டே இருக்கானுவ..
உங்க பின்னூட்டத்தஅத வாசிக்கிறவங்களுக்கு நல்லா புரியும்பஃபா நீங்க யாருன்னு.

ஐயா உ.த. இந்தக்கூட்டத்த நம்பியா நீங்க....

vasu balaji said...

ஆக இங்கே நிதானத்துடன் பேச ஒரு பயலுக்கு பவுசில்ல.. எல்லாம் வந்ததுலேருந்து என்ன திட்டிகிட்டே இருக்கானுவ..
உங்க பின்னூட்டத்தஅத வாசிக்கிறவங்களுக்கு நல்லா புரியும்பஃபா நீங்க யாருன்னு.

ஐயா உ.த. இந்தக்கூட்டத்த நம்பியா நீங்க.... //

அய்யய்யோ. அரைடிக்கட் சார். ஒரு பயலுக்கு பவுசில்லைன்னு சொல்லிட்டீங்களே சார். என்னையுமா சார். நான் நிதானம் தப்பி பேசினனுங்களா சார். துண்ட சுத்தி அடிச்சா எப்புடி சார்.உ.த. சாருக்கு தெரியுமுங்க நான் அப்புடியெல்லாம் நிதானமில்லாம பேசமாட்டனுங்க.

அர டிக்கெட்டு ! said...

@@அய்யய்யோ. அரைடிக்கட் சார். ஒரு பயலுக்கு பவுசில்லைன்னு சொல்லிட்டீங்களே சார். என்னையுமா சார். நான் நிதானம் தப்பி பேசினனுங்களா சார். துண்ட சுத்தி அடிச்சா எப்புடி சார்.உ.த. சாருக்கு தெரியுமுங்க நான் அப்புடியெல்லாம் நிதானமில்லாம பேசமாட்டனுங்க.@@

நீங்க இல்ல.. உங்கள பத்தி ஏற்கனவே உறுப்படியா பேசுறீங்கன்னு எழுதிட்டேனேங்க...

அர டிக்கெட்டு ! said...

உ.த.பதிவில் பின்னூட்ட எனது சேவை இத்துடன் நிறைவுபெறுகிறது,, மீண்டும் அவர் ஏதாவது பதில் எழுதினால் தொடங்கலாம்.
நன்றி வானம்பாடிகள்... வாய்பிருந்தால் விரைவில் உரையாடுவோம்.

கலகலப்ரியா said...

ஆரம்பத்தில இருந்தே.. எல்லாரையும் மொக்கைங்கன்னு சொல்லிட்டு.. வினவுவ படிச்சாலே அது வினவுக்கு இழுக்குன்னு சொல்லிட்டு... ஐயா இங்கயே டேரா போட்டு... பவுசு பத்திப் பேசிட்டிருக்காரு... நம்ம பவுசுதான் தெரியுதில்ல... அப்புறம் எதுக்கு துண்டை விரிச்சு உக்காந்துக்கிட்டிருக்க... சரி உக்காரு... சில்ற விழுந்தாலும் விழும்..

பை பை... ஆல் த பெஸ்ட்...

கலகலப்ரியா said...

வானம்பாடிகள் சார்... உங்கள ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்ன்னு சொல்லிட்டாய்ங்கன்னு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா..?? :))... பை சார்.. டேக் கேர்..

Soona Paana said...

நன்றி அரை டிக்கெட் .. நாங்க நிதான தொட தான் பேசிட்டு இருந்தோம் .. உங்க கூட்டத்தை சேர்ந்த சைந்தவி வந்து வாந்தி எடுக்குற வரைக்கும் .. சரி சரி உங்கிட்ட எல்லாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை .. bye..
@ Priya : Good defence standing alone with a group.