நரேந்திர மோடியின் அமைச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம்..!

27-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நேற்று பதவியேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்களுக்கான இலாகாக்களின் முழு பட்டியல் இது :

பிரதமர் நரேந்திர மோடி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளி மற்றும் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
கேபினட் அமைச்சர்கள் :
1.ராஜ்நாத் சிங் – உள்துறை அமைச்சகம்.
2.அருண் ஜேட்லி – நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ் – வெளியுறவு அமைச்சகம்.
4.வெங்கய்ய நாயுடு – நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.
5.கோபிநாத் முண்டே – பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.
7.நிதின் கட்கரி – போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.
8.மேனகா காந்தி – பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.
9.கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
10.நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மை விவகாரத்துறை.
11.ஆனந்த் குமார் – ரசாயனம் மற்றும் உரத்துறை.
12.ரவிசங்கர் பிரசாத் – தொலைதொடர்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.
13.ஆனந்த கீதே – கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.
14.உமா பாரதி – நீர் வள மேலான்மை.
15.அசோக் கஜபதி ராஜூ – விமான போக்குவரத்துத் துறை.
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல் – உணவு பதப்படுத்துதல் துறை.
17.நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை.
18.ஜூவல் ஓரம் – பழங்குடியின் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி – மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங் – விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா – ரயில்வே அமைச்சர்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) :
1. ஜெனரல் வி.கே.சிங் – வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.
2. இந்திரஜித் சிங் ராவ் – திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார் – ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல் – விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.
8. பியுஷ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.
இணை அமைச்சர்கள் :
1. ஜி.எம்.சித்தேஸ்வரா – விமான போக்குவரத்துத் துறை
2. மனோஜ் சின்ஹா – ரயில்வே துறை
3. நிஹால் சந்த் – ரசாயனம் மற்றும் உரத் துறை.
4. உபேந்திர குஷ்வாஹா – ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.
5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில்துறை.
6. கிரண் ரிஜிஜு – உள்துறை.
7. கிரிஷன் பால் குர்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.
8. சஞ்சீவ் குமார் பாலியான் – விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.
9. மன்சுக்பாய் வாசவா – பழங்குடியின விவகாரத் துறை.
10. ராவ் சாஹிப் தான்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.
11. விஷ்ணுதேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.
12. சுதர்சன் பகத் – சமூக நீதித் துறை.

பதவியேற்றுள்ள சில மந்திரிகளின் கல்வித் தகுதி பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன. அது இங்கே :


5 comments:

ராஜ நடராஜன் said...

அண்ணே!மறுபடியும் விமர்சனமோன்னு நினைச்சு நம்ம பங்குகள் ஒருத்தரையும் காணோம் போல இருக்குதே!

இன்னும் துறைகளை விரிவாக்கம் செய்யலாம்.ஒருவரே 2,3 துறை என எடுத்துக்கொண்டு செயல்படுவது துரித வளர்ச்சிக்கு உதவுமா?ஒருவருக்கான அலுவலக நேரம் சுமார் 10 மணி நேரம் என்றாலும் கூட ஒருவரே 2 துறைகளை கவனிப்பது சிரமம்.

ராஜ நடராஜன் said...

எந்த துறையில் காசு தேறும் என்று சொல்லிக்கொடுத்ததே காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள்தான். என் கண்கள் அதைத்தான் நோட்டமிட்டது:)

ராஜ நடராஜன் said...

ஹர்ச வர்த்தன் மட்டுமே பொறுத்தமாக சுகாதார துறை தேர்வு சரியாக இருக்கிறது.

ரவி சங்கர் பிரசாத்துக்கு சட்டத்துறையை மட்டும் கொடுத்து விட்டு மற்றவற்றை பிடுங்கி விடலாம்.

ஆனந்த குமார் அய்யோ பாவம்.

நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை துறை வரவேற்க தக்கதே.

நிர்மலா சீதாராமனுக்கு நாடளுமன்ற துறை மற்றும் எதிர்க்ட்சிகளுக்கு கடிவாளம் போடுவது எப்படியென்ற பொது தொடர்பை உருவாக்கலாம்.

ஜெனரல் வி.கே.சிங்கும் பரவாயில்லை.

சுஷ்மா ஸ்வராஜ் இலங்கைக்கு சாதகமான துறை.

அருண் ஜெட்லிதான் கூழுக்கும் ஆசை மீசை இல்லாமலும் ஆசை என நிதி,பாதுகாப்பு என்ற இரண்டு முக்கியமான துறை.ஒரு வேளை பாதுகாப்புத்துறை கொடுத்தாலும் வேண்டாம் என பலரும் பந்தை தள்ளி விட தற்காலமாக வைத்திருக்கலாம்.

பாகிஸ்தான் வாலாட்டினால் பிரியாணிதான் என்பதை பிரியாணி போட்டே மோடியும் நிருபித்து விட்டார்.இருந்தாலும் ஆளும் திறனை எடை போட ஒரு வருட காலம் அவகாசம் தரலாம்.

தனிமரம் said...

தெரிந்துகொள்ள பகிர்ந்தமைக்கு நன்றிகள்

சூனிய விகடன் said...

முப்பது வருடங்களுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த மோடியின் ஆளுமையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் இன்று ஒரு தகவல் மாதிரி சவ சவ என்று பதிவு போடுவது உங்கள் மனசாட்சிக்கே சரியென்று படுகிறதா ?