அ.தி.மு.க. வேட்பாளர்கள் - புதிய பட்டியல்

22-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது கணிப்பின்படி தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி தேர்தலை ஜெயலலிதா தற்போது சந்திக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில்  ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.

சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.

அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!

இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!

முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.

இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் இந்தக் குழப்பத்துக்கு ஜெயலலிதாவே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும்..! செய்தி வெளியான அன்றிரவே அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் போனில் அழைத்து நடந்ததை சொல்லியிருந்தால் மறுநாள் நடந்த 3-வது அணி எதிர்பார்ப்பு நடந்திருக்காது..

ஆனால் வறட்டு கவுரவம். இதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் நிச்சயமாக வரும் காலங்களில் அரசியல் மேடைகளில் இப்பேச்சு வெளியாகி தர்மசங்கடத்தை உருவாக்கிவிடும். சசிகலாவின் உறவினர்களின் பங்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் உண்டு என்பது வெட்டவெளிச்சமாகிவிடும் என்று கருதி ஆன வரைக்கும் பார்க்கலாம் என்று விட்டுவிட்டதாகத் தகவல்..!

மறுநாள் நடந்த கூத்தில் உளவுத்துறையின் மூலம் நன்றாகவே விளையாட்டு காட்டியது தி.மு.க. அரசு. சன், கலைஞர் தொலைக்காட்சிகள் மூலமாக எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிளவு பற்றிய செய்தி பிரதானமாக்கப்பட்டு ஓடத் துவங்கியபொழுதே இவன் வழியில் மயக்கம் போட்டு விழுந்துவிடுவான் என்று ஆரூடம் சொன்ன கதையாக கூட்டணியைப் பிளக்கும் வேலையைக் கச்சிதமாகவே செய்துவிட்டார்கள்.

கறையான் புற்றெடுக்க கருநாகம் வந்து குடி புகுந்ததாகச் சொல்வார்களே.. அது தற்போதைய அ.தி.மு.க.வின் நிலைமைக்கு மிகப் பொருத்தமான சொலவடை..! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியில் இன்றைக்கு யார், யாரோ வந்து உட்கார்ந்து கொண்டு வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்யும்விதத்தைப் பார்த்தால் எம்.ஜி.ஆர். பாவம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!

ஜெயலலிதா நேற்று 21-03-2011 வெளியிட்ட அ.தி.மு.க.வின் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்  இது :

1. ஸ்ரீரங்கம்:- ஜெ.ஜெயலலிதா (கழகப் பொதுச் செயலாளர்)

திருவள்ளூர் மாவட்டம்

2. பொன்னேரி (தனி):- பொன்.ராஜா (திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்)

3. திருவள்ளூர்:- பி.வி.ரமணா, (திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

4. பூவிருந்தவல்லி (தனி):- இரா.மணிமாறன், (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

5. ஆவடி:- எஸ்.அப்துல் ரஹீம் (ஆவடி நகர செயலாளர்)

6. அம்பத்தூர்:- எஸ்.வேதாச்சலம் (அம்பத்தூர் நகர செயலாளர்)

7. மாதவரம்:- வி.மூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்)

8. திருவொற்றியூர்:- கே.குப்பன் (திருவொற்றிïர் நகர செயலாளர்)

சென்னை மாவட்டம்

9. ராதாகிருஷ்ணன் நகர்:- பி.வெற்றிவேல் (வடசென்னை மாவட்ட பொருளாளர்)

10. கொளத்தூர்:- சைதை சா.துரைசாமி (தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர்)

11. வில்லிவாக்கம்:- ஜே.சி.டி.பிரபாகர், (சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர்)

12. திரு.வி.க.நகர் (தனி):- வ.நீலகண்டன் (வடசென்னை மாவட்ட அவைத் தலைவர்)

13. ராயபுரம்:- டி.ஜெயக்குமார் (வடசென்னை மாவட்ட செயலாளர்)

14. துறைமுகம்:- பழ.கருப்பையா (கொள்கை பரப்பு இணைச் செயலாளர்)

15. ஆயிரம்விளக்கு:- பா.வளர்மதி, (கழக அமைப்புச் செயலாளர்)

16. அண்ணாநகர்:- எஸ்.கோகுல இந்திரா, (மகளிர் அணிச் செயலாளர்)

17. சைதாப்பேட்டை:- ஜி.செந்தமிழன், (தென்சென்னை மாவட்ட செயலாளர்)

18. தியாகராயநகர்:- வி.பி.கலைராஜன், (இளைஞர் பாசறை செயலாளர்)

19. மைலாப்பூர்:- ஆர்.ராஜலட்சுமி, (இளைஞர் பாசறை இணைச் செயலாளர்)

20. வேளச்சேரி:- எம்.கே.அசோக், (வேளச்சேரி பகுதி செயலாளர்)

காஞ்சீபுரம் மாவட்டம்

21. சோழிங்கநல்லூர்:- கே.பி.கந்தன் (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்)

22. ஸ்ரீபெரும்புதூர் (தனி):- மொளச்சூர் இரா.பெருமாள், (ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெ பேரவை செயலாளர்)

23. பல்லாவரம்:- ப.தன்சிங், (பல்லாவரம் நகர செயலாளர்)

24. தாம்பரம்:- டி.கே.எம்.சின்னையா, (தாம்பரம் நகர செயலாளர்)

25. திருப்போரூர்:- தண்டரை கே.மனோகரன் (திருப்போரூர் ஒன்றிய செயலாளர்)

26. செய்யூர் (தனி):- வி.எஸ்.ராஜி, (லத்தூர் ஒன்றிய செயலாளர்)

27. மதுராந்தகம் (தனி):- எஸ்.கணிதா சம்பத், (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

28. உத்திரமேரூர்:- வாலாஜாபாத் பா.கணேசன் (வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்)

29. காஞ்சீபுரம்:- வி.சோமசுந்தரம், (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்)

வேலூர் மாவட்டம்

30. அரக்கோணம் (தனி):- சு.ரவி, (வேலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்)

31. காட்பாடி:- எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன், (வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்)

32. ராணிப்பேட்டை:- அ.முஹம்மத்ஜான், (வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்)

33. ஆற்காடு:- ஆர்.சீனிவாசன் (ஆற்காடு நகர செயலாளர்)

34. வேலூர்:- டாக்டர் வி.எஸ்.விஜய், (வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

35. வாணியம்பாடி:- கோவி.சம்பத்குமார் (ஆலங்காயம் ஒன்றிய செயலாளர்)

36. ஜோலார்பேட்டை:- கே.சி.வீரமணி, (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

37. திருப்பத்தூர்:- கே.ஜி.ரமேஷ் (கந்திலி ஒன்றிய செயலாளர்)

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்

38. ஊத்தங்கரை (தனி):- மனோரஞ்சிதம் நாகராஜ் (கிருஷ்ணகிரி மாவட்ட இணை செயலாளர்)

39. பர்கூர்:- கே.இ.கிருஷ்ணமூர்த்தி (கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)

40. கிருஷ்ணகிரி:- கே.பி.முனுசாமி, (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்)

41. பாலக்கோடு:- கே.பி.அன்பழகன், (தருமபுரி மாவட்ட செயலாளர்)

42. பாப்பிரெட்டிப்பட்டி:- பி.பழனியப்பன், (தருமபுரி மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

திருவண்ணாமலை மாவட்டம்

43. திருவண்ணாமலை:- எஸ்.ராமச்சந்திரன் (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவர்)

44. கீழ்பென்னாத்தூர்:- ஏ.கே.அரங்கநாதன் (துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர்)

45. கலசபாக்கம்:- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்)

46. போளூர்:- எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன், (போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர்)

47. செய்யார்:- முக்கூர் என்.சுப்பிரமணியன், (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்)

48. வந்தவாசி (தனி):- செய்யாமூர் வே.குணசீலன் (அனக்காவூர் ஒன்றிய செயலாளர்)

49. மைலம்:- கே.பி.நாகராஜன், (மைலம் ஒன்றிய செயலாளர்)

50. திண்டிவனம் (தனி):- டாக்டர் த.அரிதாஸ், (விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர்)

51. வானூர் (தனி):- ஐ.ஜானகிராமன், (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)

52. விழுப்புரம்:- சி.வி.சண்முகம், (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்)

53. உளுந்தூர்பேட்டை:- இரா.குமரகுரு (விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்)

54. சங்கராபுரம்:- ப.மோகன், (விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

55. கள்ளக்குறிச்சி (தனி):- பா.அழகுவேல் பாபு, (விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்)

சேலம்-நாமக்கல் மாவட்டங்கள்

56. ஆத்தூர் (தனி):- எஸ்.மாதேஸ்வரன், (சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்)

57. ஏற்காடு (பழங்குடி):- செ.பெருமாள் (தொகுதி செயலாளர்)

58. ஓமலூர்:- பல்பாக்கி சி.கிருஷ்ணன் (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

59. எடப்பாடி:- எடப்பாடி கே.பழனிசாமி, (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)

60. சங்ககிரி:- விஜயலட்சுமி பழனிச்சாமி

61. சேலம் (மேற்கு):- ஜி.வெங்கடாஜலம், (சேலம் மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

62. சேலம் (தெற்கு):- எம்.கே.செல்வராஜ், (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்)

63. வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம் (சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

64. ராசிபுரம் (தனி):- ப.தனபால், (நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்)

65. நாமக்கல்:- கே.பி.பி.பாஸ்கர், (நாமக்கல் நகர செயலாளர்)

66. குமாரபாளையம்:- பி.தங்கமணி, (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

ஈரோடு-திருப்பூர் மாவட்டங்கள்

67. ஈரோடு (மேற்கு):- கே.வி.ராமலிங்கம், (ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்)

68. மொடக்குறிச்சி:- ஆர்.என்.கிட்டுசாமி (ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்)

69. தாராபுரம் (தனி):- கே.பொன்னுசாமி, (ஈரோடு மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

70. காங்கேயம்:- என்.எஸ்.என்.நடராஜ், (காங்கேயம் ஒன்றிய செயலாளர்)

71. பெருந்துறை:- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்)

72. பவானி:- பி.ஜி.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்)

73. அந்திïர்:- எஸ்.எஸ்.ரமணீதரன், (தொகுதி கழக செயலாளர்)

74. கோபிசெட்டிப்பாளையம்:- கே.ஏ.செங்கோட்டையன் (தலைமை நிலைய செயலாளர்)

75. உதகமண்டலம்:- புத்தி சந்திரன், (குந்தா ஒன்றிய செயலாளர்)

கோவை மாவட்டம்

76. மேட்டுப்பாளையம்:- ஓ.கே.சின்னராஜ் (கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்)

77. அவினாசி (தனி):- ஏ.ஏ.கருப்புசாமி (அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர்)

78. திருப்பூர் (வடக்கு):- எம்.எஸ்.எம்.ஆனந்தன் (திருப்பூர் நகர செயலாளர்)

79. பல்லடம்:- பல்லடம் கே.பி.பரமசிவம் (பல்லடம் ஒன்றிய செயலாளர்)

80. கவுண்டம்பாளையம்:- வி.சி.ஆறுக்குட்டி (சர்க்கார்சாமக்குளம் ஒன்றிய செயலாளர்)

81. கோயம்புத்தூர் (வடக்கு):- தா.மலரவன் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்)

82. தொண்டாமுத்தூர்:- எஸ்.பி.வேலுமணி, (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)

83. கோயம்புத்தூர் (தெற்கு):- சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி, (கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)

84. சிங்காநல்லூர்:- ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க செயலாளர்)

85. கிணத்துக்கடவு:- செ.தாமோதரன் (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர்)

86. பொள்ளாச்சி:- எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, (கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர்)

87. உடுமலைப்பேட்டை:- பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர்)

88. மடத்துக்குளம்:- சி.சண்முகவேலு, (திருப்பூர் மாவட்ட செயலாளர்)

திண்டுக்கல்-கரூர் மாவட்டங்கள்

89. பழனி:- கே.எஸ்.என்.வேணுகோபாலு, (திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்)

90. ஒட்டன்சத்திரம்:- பி.பாலசுப்பிரமணி (தொகுதி செயலாளர்)

91. நத்தம்:- இரா.விசுவநாதன், (திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர்)

92. வேடசந்தூர்:- ச.பழனிச்சாமி, (தொகுதி செயலாளர்)

93. அரவக்குறிச்சி:- வி.செந்தில்நாதன், (கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்)

94. கரூர்:- வி.செந்தில்பாலாஜி, (கரூர் மாவட்ட செயலாளர்)

95. கிருஷ்ணராயபுரம் (தனி):- எஸ்.காமராஜ், (கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

திருச்சி-பெரம்பலூர்

96. குளித்தலை:- பாப்பாசுந்தரம் (கரூர் மாவட்ட அவைத் தலைவர்)

97. மணப்பாறை:- ஆர்.சந்திரசேகர் (மருங்காபுரி ஒன்றிய செயலாளர்)

98. திருச்சி (மேற்கு):- என்.மரியம்பிச்சை, (திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

99. திருச்சி கிழக்கு:- ஆர்.மனோகரன், (திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்)

100. மணச்சநல்லூர்:- பூனாட்சி (திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்)

101. முசிறி:- என்.ஆர்.சிவபதி, (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர்)

102. துறையூர் (தனி):- இந்திராகாந்தி, (திருச்சி புறநகர் மாவட்ட இணை செயலாளர்)

103. பெரம்பலூர் (தனி):- இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், (பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்)

104. அரியலூர்:- துரை.மணிவேல் (பெரம்பலூர் மாவட்ட இணை செயலாளர்)

105. ஜெயங்கொண்டம்:- பா.இளவழகன், (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)

106. நெய்வேலி:- எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், (தொகுதி செயலாளர்)

கடலூர்-நாகை மாவட்டங்கள்

107. கடலூர்:- எம்.சி.சம்பத், (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

108. குறிஞ்சிப்பாடி:- சொரத்தூர் இரா.ராஜேந்திரன், (எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்)

109. புவனகிரி:- செல்வி ராமஜெயம் (கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

110. காட்டுமன்னார்கோயில் (தனி):- என்.முருகுமாறன், (கடலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர்)

111. சீர்காழி (தனி):- ம.சக்தி, (நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

112. பூம்புகார்:- எஸ்.பவுன்ராஜ் (செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர்)

113. நாகப்பட்டினம்:- கே.ஏ.ஜெயபால், (நாகப்பட்டினம் மாவட்ட பொருளாளர்)

114. வேதாரண்யம்:- என்.வி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)

115. மன்னார்குடி:- சிவா.ராஜமாணிக்கம், (மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்)

116. திருவாரூர்:- குடவாசல் எம்.ராசேந்திரன் (திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

117. நன்னிலம்:- ஆர்.காமராஜ், (திருவாரூர் மாவட்ட செயலாளர்)

118. திருவிடைமருதூர்(தனி):- டி.பாண்டியராஜன் (திருநறைïர் ஊராட்சி செயலாளர்)

தஞ்சை மாவட்டம்

119. கும்பகோணம்:- இராம.ராமநாதன், (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

120. பாபநாசம்:- இரா.துரைக்கண்ணு, (பாபநாசம் ஒன்றிய செயலாளர்)

121. திருவையாறு:- எம்.ரெத்தினசாமி (பூதலூர் ஒன்றிய செயலாளர்)

122. தஞ்சாவூர்:- எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

123. ஒரத்தநாடு:- ஆர்.வைத்திலிங்கம், (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர்)

124. கந்தர்வகோட்டை (தனி):- ந.சுப்ரமணியன், (குளத்தூர் ஊராட்சி செயலாளர்)

125. விராலிமலை:- டாக்டர் சி.விஜயபாஸ்கர், (மருத்துவ அணி துணைச் செயலாளர்)

126. திருமயம்:- பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர்)

127. ஆலங்குடி:- கு.ப.கிருஷ்ணன்

சிவகங்கை-மதுரை மாவட்டங்கள்

128. அறந்தாங்கி:- மு.ராஜநாயகம் (சிறுமருதூர் கிளை செயலாளர்)

129. காரைக்குடி:- சோழன் சித.பழனிச்சாமி (சிவகங்கை மாவட்ட செயலாளர்)

130. திருப்பத்தூர்:- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

131. மானாமதுரை (தனி):- ம.குணசேகரன், (மானாமதுரை ஒன்றிய செயலாளர்)

132. மேலூர்:- ஆர்.சாமி (பொதுக்குழு உறுப்பினர்)

133. மதுரை கிழக்கு:- கே.தமிழரசன் (மதுரை புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

134. சோழவந்தான் (தனி):- எம்.வி.கருப்பையா, (அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர்)

135. மதுரை வடக்கு:- ஏ.கே.போஸ், (மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

136. மதுரை மேற்கு:- செல்லூர் கே.ராஜு, (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)

137. திருமங்கலம்:- ம.முத்துராமலிங்கம் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)

தேனி-விருதுநகர் மாவட்டங்கள்

138. ஆண்டிபட்டி:- தங்க தமிழ்செல்வன், (தேனி மாவட்ட செயலாளர்)

139. போடிநாயக்கனூர்:- ஓ.பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர்)

140. ராஜபாளையம்:- கே.கோபால்சாமி, (விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)

141. சாத்தூர்:- ஆர்.பி.உதயகுமார், (மாணவர் அணி செயலாளர்)

142. சிவகாசி:- கே.டி.ராஜேந்திர பாலாஜி (விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)

143. அருப்புக்கோட்டை:- வைகைச்செல்வன், (இலக்கிய அணி செயலாளர்)

144. பரமக்குடி (தனி):- டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ், (ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர்)

145. முதுகுளத்தூர்:- மு.முருகன் (முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர்)

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்கள்

146. விளாத்திகுளம்:- ஜி.வி.மார்க்கண்டேயன், (தொகுதி செயலாளர்)

147. தூத்துக்குடி:- ஏ.பால், (தூத்துக்குடி மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)

148. திருச்செந்தூர்:- பி.ஆர்.மனோகரன், (இளைஞர் பாசறை துணை செயலாளர்)

149. ஸ்ரீவைகுண்டம்:- எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்)

150. கோவில்பட்டி:- கடம்பூர் செ.ராஜ× (தூத்துக்குடி மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)

151. சங்கரன்கோவில் (தனி):- சொ.கருப்பசாமி (அமைப்புச் செயலாளர்)

152. வாசுதேவநல்லூர் (தனி):- டாக்டர் எஸ்.துரையப்பா, (திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

153. கடையநல்லூர்:- பி.செந்தூர்பாண்டியன் (திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர்)

154. ஆலங்குளம்:- பி.ஜி.ராஜேந்திரன், (திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

155. திருநெல்வேலி:- நயினார் நாகேந்திரன், (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

156. அம்பாசமுத்திரம்:- இசக்கி சுப்பையா, (திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்)

குமரி மாவட்டம்

157. கன்னியாகுமரி:- கே.டி.பச்சைமால் (கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்)

158. நாகர்கோவில்:- நாஞ்சில் ஏ.முருகேசன் (கன்னியாகுமரி மாவட்ட ஜெ பேரவை செயலாளர்)

159. குளச்சல்:- பி.லாரன்ஸ் (கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணை செயலாளர்)

160. கிள்ளியூர்:- ஆர்.ஜார்ஜ், (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்)

அ.தி.மு.க. புதிய வேட்பாளர் பட்டியலில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. இதனால் கொளத்தூர் தொகுதியில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து சைதை சா.துரைசாமி போட்டியிடுகிறார்.

கடந்த 16-ந் தேதி வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் இருந்த  பல தொகுதிகள் புதிய பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. பல புதிய தொகுதிகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளன. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அ.தி.மு.க.வினர் வாய்ப்பை இழந்துள்ளனர். அதேசமயம் சிலருக்கு புதிதாக வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கும்மிடிப்பூண்டி கோபால்நாயுடு, விருகம்பாக்கம் கமலக்கண்ணன், ஆலந்தூர் வெங்கட்ராமன், செங்கல்பட்டு ராமச்சந்திரன், அரூர் முருகன், செஞ்சி தமிழ்மொழி ராஜதத்தன், விக்கிரவாண்டி சிந்தாமணி ஆர்.வேலு, ஈரோடு கிழக்கு மனோகரன், சூலூர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, திருப்பூர் தெற்கு விசாலாட்சி, திண்டுக்கல் ராமுத்தேவர், கீழ்வேலூர் அசோகன், திருத்துறைப்பூண்டி கே.கோபால், புதுக்கோட்டை கருப்பையா, சிவகங்கை முருகானந்தம், மதுரை மேற்கு சாலை முத்து, உசிலம்பட்டி நீதிபதி, பெரியகுளம் இளமுருகன், கம்பம் சந்தனகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் கே.சீனிவாசன், விருதுநகர் ரவி, ஒட்டப்பிடாரம் என்.சின்னத்துரை, தென்காசி அண்ணாமலை, நாங்குநேரி முருகன், ராதாபுரம் சசிகலா புஷ்பா ஆகியோர் வாய்ப்பை இழந்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சைதை சா.துரைசாமி போட்டியிடுகிறார். பழைய பட்டியலில் இந்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்காக விட்டுவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகரில் தி.மு.க. வேட்பாளர் சேகர்பாபுவை எதிர்த்து மதுசூதனன் போட்டியிடுவதாக இருந்தது. இப்போது கூட்டணி கட்சிக்காக ஒதுக்கப்பட்ட பெரம்பூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் ஆர்.கே.நகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுசூதனன் தேர்தல் வாய்ப்பை இழந்துள்ளார்.

மைலாப்பூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த ஆர்.ஜானகி மாற்றப்பட்டு வக்கீல் ஆர்.ராஜலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த ஜெனிபர் சந்திரன் மாற்றப்பட்டு ஏ.பால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தொகுதி தே.மு.தி.க.வுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி சங்ககிரி தொகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் - சைதை சா.துரைசாமி, அரக்கோணம் - ரவி, ஆற்காடு - சீனிவாசன், வாணியம்பாடி - கோவி.சம்பத்குமார், திருப்பத்தூர் - ரமேஷ், பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன், திருவண்ணாமலை - ராமச்சந்திரன், கீழ்பென்னாத்தூர் -அரங்கநாதன், போளூர் - ஜெயசுதா லட்சுமிகாந்தன், செய்யார் -முக்கூர் சுப்பிரமணியன், வந்தவாசி -  குணசீலன், வானூர் -ஜானகிராமன், ஆத்தூர் மாதேஸ்வரன், நாமக்கல் பாஸ்கர், மணச்சநல்லூர் - பூனாட்சி, துறையூர் - இந்திராகாந்தி, அரியலூர் -மணிவேல், ஜெயங்கொண்டம் - இளவழகன், நெய்வேலி -சிவசுப்பிரமணியன், புவனகிரி - செல்வி ராமஜெயம் (தற்போதைய எம்.எல்.ஏ.), காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன், வேதாரண்யம் - காமராஜ், திருவிடைமருதூர் - பாண்டியராஜன், திருவையாறு -ரெத்தினசாமி, அறந்தாங்கி - ராஜநாயகம், மதுரை கிழக்கு -தமிழரசன், கிள்ளியூர் - ஜார்ஜ் ஆகியோர் புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே 84 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

நேரடியாக மோதும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் வருமாறு:

எண் - தொகுதி - தி.மு.க. வேட்பாளரின் பெயர்  - அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் - இந்த வரிசைப்படி படித்துக் கொள்ளுங்கள் :

1 ஆயிரம் விளக்கு - அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி

2. சைதாப்பேட்டை - மகேஷ்குமார் - செந்தமிழன்

3. ஆர்.கே.நகர் - பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்

4 கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி

5 வில்லிவாக்கம் - க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்

6 பொன்னேரி(தனி) - மணிமேகலை - பொன்.ராஜா

7 திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா

8 அம்பத்தூர் - ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்

9 மாதவரம் - டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி

10 திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி - கே.குப்பன்

11 பல்லாவரம் - தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்

12 தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா - சின்னையா

13 உத்திரமேரூர் - பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்

14 காட்பாடி - துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்

15 ராணிப்பேட்டை - ஆர்.காந்தி - முகம்மத்ஜான்

16 திருப்பத்தூர் - எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்

17 திருவண்ணாமலை - ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்

18 கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்

19 வந்தவாசி(தனி) - கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்

20 வானூர்(தனி) - புஷ்பராஜ் - ஜானகிராமன்

21 விழுப்புரம் - க.பொன்முடி - சி.வி.சண்முகம்

22 சங்கராபுரம் - உதயசூரியன் - மோகன்

23 கடலூர் - புகழேந்தி - எம்.சி.சம்பத்

24 குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன் செல்வம்

25 திருவிடைமருதூர்(தனி) - கோவி.செழியன் - பாண்டியராஜன்

26 கும்பகோணம் - க.அன்பழகன் - ராம.ராமநாதன்

27 திருவையாறு - கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி

28 தஞ்சாவூர் - எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி

29 ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்

30 மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்

31 திருவாரூர் - மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்

32 நன்னிலம் - இளங்கோவன் - ஆர்.காமராஜ்

33 ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா

34 திருச்சி மேற்கு - கே.என்.நேரு - மரியம்பிச்சை

35 திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்

36 மணச்சநல்லூர் - என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி

37 துறையூர்(தனி) - பரிமளா தேவி - இந்திராகாந்தி

38 பெரம்பலூர்(தனி) - எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்

39 அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்

40 கிருஷ்ணராயபுரம்(தனி) - பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்

41 குளித்தலை - மாணிக்கம் - பாப்பாசுந்தரம்

42 கந்தர்வக்கோட்டை(தனி) - கவிதைப்பித்தன் - சுப்ரமணியன்

43 விராலிமலை - எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்

44 ஏற்காடு(தனி) - தமிழ்செல்வன் - பெருமாள்

45 சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி

46 சேலம் தெற்கு - எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்

47 வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்

48 சேலம் மேற்கு - இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்

49 ராசிபுரம்(தனி) - வி.பி.துரைசாமி - ப.தனபால்

50 குமாரபாளையம் - வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி

51 பாப்பிரெட்டிபட்டி- முல்லைவேந்தன் - பழனியப்பன்

52 மேட்டுப்பாளையம் - அருண்குமார் - சின்னராஜ்

53 கவுண்டம்பாளையம் - சுப்ரமணியன் - ஆறுக்குட்டி

54 கோவை வடக்கு - வீரகோபால் - மலரவன்

55 கோவை தெற்கு - பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை

56 கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்

57 தாராபுரம்(தனி) - ஜெயந்தி - பொன்னுசாமி

58 திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்

59 மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன் - சி.சண்முகவேலு

60 அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்

61 மேலூர் - ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி

62 மதுரை கிழக்கு - மூர்த்தி - தமிழரசன்

63 திருமங்கலம் - மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்

64 மதுரை மேற்கு - தளபதி - செல்லூர் ராஜு

65 பழனி - செந்தில்குமார் - வேணுகோபாலு

66 ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி - பாலசுப்பிரமணி

67 நத்தம் - விஜயன் - இரா.விஸ்வநாதன்

68 ஆண்டிபட்டி - எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்

69 போடிநாயக்கனூர் - லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்

70 முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி - மு.முருகன்

71 திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்

72 மானாமதுரை(தனி) - தமிழரசி - குணசேகரன்

73 ராஜபாளையம் - தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி

74 சாத்தூர் - கடற்கரை ராஜ் - உதயகுமார்

75 சிவகாசி - வனராஜா - உதயகுமார்

76 அருப்புக்கோட்டை - சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்

77 சங்கரன்கோவில்(தனி) - உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி

78 ஆலங்குளம் - பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்

79 திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்

80 அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா

81 தூத்துக்குடி - கீதா ஜீவன் - ஏ.பால்

82 திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்

83 கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்

84 நாகர்கோவில் - மகேஷ்  - நாஞ்சில் முருகேசன்

தற்போதைக்கு இறுதியான 160 வேட்பாளர்களின் பட்டியல் இதுதான் என்று சொல்லப்பட்டாலும் எனக்கு நம்பிக்கையில்லை. வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையிலும்கூட ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளரை மாற்ற வாய்ப்புண்டு என்பதால் இப்போதைக்கு இதுதான் இறுதியானது என்று நினைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சொல்ல முடியும்..!

47 comments:

JOBASKAR said...

jayalaitha should talk responsibilty

she is going to lose the election

i think you support AIADMK

BASKAR

தியாகு said...

தொகுதி பட்டியல் வெளியீடே இப்படி என்றால் இவர்களை நம்பி எப்படி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய அனுப்புவது?

நீர்ப்புலி said...

கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலேன்ரிங்க. நடத்துங்க.

ராஜ நடராஜன் said...

அத்தனை எதிர்ப்பு அலைகளையும் ஒரே சுனாமில ஊதித்தள்ளிருச்சே ஜெ!

தோற்றால் கொடநாடா அல்லது களியா?

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு கட்சித்தலைவியின் கையில் கட்சி இல்லை என்ற கேவலத்தை எங்கே போய் சொல்வது? ஒரு வேளை இந்த கட்சி ஜெயித்தால் யார் முதல்வர் ஜெயாவா? மன்னார்குடி வகையறாவா?
எனக்கு தெரிந்து ஜெயாதான் முந்தைய பட்டியலையும் வெளியிட்டிருப்பார். கூட்டணியில் பிரச்சினை என்றதும் சசிகலா பக்கம் பிளேட்டை திருப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். டான்சி பிரச்சினையில் தான் போட்ட கையெழுத்தையே தன்னுடையது இல்லை என்று சொன்னவர்தான் இந்த அறிக்கை தலைவி.அட போங்க சார்....இந்த அழுகுணி ஆட்டமெல்லாம் ஜெயா நன்றாக ஆடுவார், ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் நடிகையல்லவா....

ராஜேஷ், திருச்சி said...

//முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.//

இப்படி ஒரு கதை ஜெ மீது தப்பு இல்லைன்னு காட்ட சில குறிப்பிட்ட பத்திரிகைகள் எழுதிய கதை வசனம் .. அச்சு பிசகாம திரு தமிழன் இங்கே போட்டிருக்காரு., மேலே உள்ள வரிகளை மட்டும் சேர்த்து.. சார் , பத்திரிகை ல இந்த கதைய படிச்சு ரெண்டு நாள் ஆகுது..

இந்த கதை உண்மை என்றால் ஜெவிற்கு தலைமை பொறுபேற்க தகுதியே இல்லை என்பது நிஜமாகிறது.. ! அப்புறம் இந்த அம்மாக்கு ஏன் ஓட்டு போடவேணும் என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது


இன்னும் பாருங்க.. எவ்ளோ முட்டல் மோதல் இருக்கபோதுனு.. ஒரு மேடைல கூட கூட்டணி கட்சியோடு அவர் ஒன்றாகி இருப்பார்னு உறுதியா சொல்ல முடியாது..

ராஜேஷ், திருச்சி said...

ஓட்டம் பிடித்த கருணாநிதி நு ஒரு பதிவு போறீங்களே.. அப்போ எல்லோரும் அம்மா ஆண்டிப்பட்டி விட்டுட்டு சிரிரங்கதுக்கு ஊடிசெனு கேட்டப்போ.. சமாளிசீங்கலே.. , அ தி மு க பத்தி பதிவு போடறப்போ எழுதலாம்னு இருக்கேனு .. ஆனா அப்படி எதுவும் இல்லையே உங்க அ தி மு க பட்டியல் பதிவுல தேடி தேடி பார்த்தாலும் கெடைகளையே.. மொதல் பேரு அம்மா பேரு போட்டே சந்தோஷபட்டுகிட்டீங்க.. அவ்ளோதான். அம்மா ஏன் சிறிரங்கம் போனங்கன்னு போடலையே.. அப்போ உ தா போடறதெல்லாம் வெறும் வெட்டி சீனா?

ராஜரத்தினம் said...

இதெல்லாம் திமுக மீடியாக்கள் வேலை என்பது என் எண்ணம். அது என்னய்யா? 87 வயது கிழவன் 6வது 7அவது முறைனு சொல்ல ஆள் இருக்கிற இந்த நாட்டில் 63 வயது முதியவர் அடுத்த தேர்தலை சந்திக்க மாட்டார் என்ற உங்கள் கணிப்பு எந்த வகை என்று எனக்கு புரியவில்லை. அவர் இதை விட grave காலத்தில் இருந்துதான் வெளியே வந்துள்ளார். இப்பவும் வெளியே வருவார்.அப்பவும் இதே ஜெயலலிதாதான், இதே சசிகலாதான். எங்களுக்கு கருணாநிதியை அழிக்க கூடிய ஒரே ஆள் ஜெயலலிதான். வேறு எந்த ஆம்பிளையும் அந்த காட்டு குடும்பத்தை எதிர்க்க முடியாது. இந்த ஒரு பொம்பளையை தவிர.

raja said...

மீண்டும் அந்த கொள்ளைக்கூட்டம் ஆளவே... இந்த ஆணவக்கூட்டம் வழி வகுத்துவிட்டது.

VJR said...

//எனது கணிப்பின்படி தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி தேர்தலை ஜெயலலிதா தற்போது சந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.//

எதை வைத்து சரவணன் இப்படி சொல்றீங்க?

என் கணிப்பின்படி, 2011 பிறகு திமுக,அதிமுக மட்டுமே இருக்கும். ஆனால் ஜெயாவுக்குப் பிறகு சசிகூட்டத்தை யாரும் நம்பத் தயாரில்லை.அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவது யாருங்றதுதான் பெரியக் கேள்வி.

மு.சரவணக்குமார் said...

//இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!//

கேப்பையில நெய் வழியுதுன்னு சொல்றீங்க....

இதே திமுக முகாமில் நடந்திருந்தால் இன்னேரம் பின்னி பெடலெடுத்திருப்பீர்கள், அம்மா கட்சியின் வேட்பாளர்கள் எல்லாரும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில்தான் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார்களாமே, அது உண்மையா?

Barari said...

உண்மையிலேயே மண்னார்குடி குடும்பம் இடி தாங்கிகள் தான்.ஜெயா செய்யும் தவறான முடிவுகளின் பின் விளைவு பாராட்டப்பட்டால் அது ஜெயாவின் ராஜதந்திரம் என்றும் அல்லது விமர்சீக்கப்பட்டால் இது மண்னார்குடி குடும்ப சூழ்ச்சி என்று அவர்கள் தலையில் போடவேண்டியது.தமிழர்கள் காதில் பூ வைத்து கொண்டிருப்பதாக எண்ணியிருக்கிறார்கள்

தாறுமாறு said...

ரிப்போர்ட்டர்லே வம்பானந்தா என்னமோ இது உளவுத்துறையோட டகால்டி வேலைன்னு சொல்றாரு? எது உண்மை?

மனிதன் said...

சசிதான் பட்டியலை வெளியிட்டு சதி செய்தார், ஜெ அப்பாவி எனும் திரைக்கதையை விகடன்,தினமல., தினமணி மற்றும் நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதன் காரணம்? இவங்க ராஜகுரு 'சோ' விற்கு எந்த பங்கும் இல்லையா நல்லது நடந்தால் 'ஜெ' , சோ வின் ராஜ தந்திரம் பிரச்சினை ஏற்பட்டால் சசி குடும்பமா? என்னங்க ஒங்க நியாயம்? எதுக்கு எடுத்தாலும் சசி குடும்பமா ? அப்படியே சசி தலையீடு இருந்தாலும் கட்சியே அம்மா கட்டுப்பாட்டுல இல்லனா தமிழ்நாடு ஆட்சி இவங்க கைக்கு போனா தமிழ்நாடு கதி அதோ கதி தான் !!!

VJR said...

திமுக மீடியாக்கள் எங்க சார் இதுல இருக்கு? இதே செய்தி தினமலரிலும், ஜூவியிலும் வந்தாச்சு. ஆனா நம்புறதுக்குதான் ஆளில்லை. எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

pichaikaaran said...

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக , ஜெ யை ஆதரிக்க முன்வந்தனர் தமிழ் உணர்வு கொண்ட நடுநிலையாளர்கள் . கிடைக்கவே முடியாத , ஒரு புதையல் போல கிடைத்த அந்த ஆதரவை இழந்து நிற்கிறார் ஜெ .

மு.சரவணக்குமார் said...

இனியும் நீங்கள் நடுநிலையாளர் என்கிற சாயத்தை பூசிக் கொண்டிருப்பது அபத்தமாக இருக்கும்.சாயம் வெளுப்பதற்கு முன்னரே நீங்களாகவே அதிலிருந்து வெளியே வந்து விடலாமே!

அம்மாவின் ஆதரவாளர் என்பது ஒன்றும் மறைத்துக் கொள்ளுமளவுக்கு அத்தனை அசிங்கமான ஒரு விஷயமில்லை...அது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமே! :)

pichaikaaran said...

பா ம க, கம்யூனிஸ்ட் , தி மு க , ம தி முக , காங்கிரஸ் என எந்த கட்சியை பார்த்தாலும், தப்போ சரியோ, ஏற்கிறோமோ இல்லையோ, அவர்களுக்கு என ஒரு கொள்கை இருக்கும் ,,, ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கும்..

ஆனால் , அந்த மாதிரி எந்த நிலைபாடும் இல்லாமல், தனிப்பட்ட கோப தாபங்களுக்காக நடத்தப்ப்டும் கட்சியாக் தோற்றம் அளிக்கிறது அதிமுக... இந்த நிலை மாறுமா?

ரிஷி said...

சரவணன்!
திமிர் பிடித்த ஜெயாவிற்கு வரிஞ்சு கட்டினது போதும். இது நமக்கு வேணாம். நம்மளோட புது புராஜக்ட்ல ஐக்கியமாகுங்க. 10 நாள்ல 30 புக்கு வேலையை முடிக்க வேண்டியிருக்கு. நம்மளோட பொழப்புதான் நமக்கு முக்கியம். உங்களத்தாண்ணே மலைபோல நம்பியிருக்கோம். வாங்கண்ணே!

ஜோதிஜி said...

திரைப்படத்திற்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி வலையுலகத்திற்கு நீங்கள். இன்னும் 15 வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கு இது போன்ற பல தகவல்களை ஆச்சரியத்தை அளிக்கக்கூடும்.

அதிமுக குறித்து நீங்க எழுதிக் கொண்டு வருவதற்கு தேர்தல் முடிந்ததும் விஜயகாந்த மூலம் பதில் கிடைக்கும். பார்த்துக் கொண்டேயிருங்க.

கூட்டணி ஒப்பந்தம் கையொப்பம் இட்டது கூட இருவரும் வெவ்வேறு இடத்தில் இருந்து கொண்டு. சரிதானே? என்னுடைய தலைப்பு நிச்சயம் உயிர்பெறும் காலம் வெகு அருகில் (விஜயகாந்த அதிர்ஷ்டக்காரர்)


நடராஜன் என்ன களியா? எந்த ஊரில் இருக்கீங்க. திகார்ல ராஜா களியா தின்று கொண்டு இருக்கிறார்?

ஜோதிஜி said...

சொல்ல மறந்துட்டேன்

மைனஸ் ஓட்டு போட்டு பழகுறவுங்க எல்லோருமே உங்க இடுகைக்குத்தான் வருவாகளோ?

உண்மைத்தமிழன் said...

[[[JOBASKAR said...

jayalaitha should talk responsibilty.

she is going to lose the election.

i think you support AIADMK.

BASKAR]]]

அப்படீன்னு தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[தியாகு said...
தொகுதி பட்டியல் வெளியீடே இப்படி என்றால் இவர்களை நம்பி எப்படி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அனுப்புவது?]]]

கம்யூனிஸ்ட்டுகளை மட்டும் ஜெயிக்க வைங்க. போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[நீர்ப்புலி said...

கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலேன்ரிங்க. நடத்துங்க.]]]

நான் சொல்லலை. அவங்க சொல்றாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அத்தனை எதிர்ப்பு அலைகளையும் ஒரே சுனாமில ஊதித் தள்ளிருச்சே ஜெ!
தோற்றால் கொடநாடா அல்லது களியா?]]]

முட்டாள்தனம்.. மூடத்தனம்..! காலத்திற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளவில்லையெனில் எவராக இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரஹீம் கஸாலி said...

ஒரு கட்சித் தலைவியின் கையில் கட்சி இல்லை என்ற கேவலத்தை எங்கே போய் சொல்வது? ஒரு வேளை இந்த கட்சி ஜெயித்தால் யார் முதல்வர் ஜெயாவா? மன்னார்குடி வகையறாவா? எனக்கு தெரிந்து ஜெயாதான் முந்தைய பட்டியலையும் வெளியிட்டிருப்பார். கூட்டணியில் பிரச்சினை என்றதும் சசிகலா பக்கம் பிளேட்டை திருப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். டான்சி பிரச்சினையில் தான் போட்ட கையெழுத்தையே தன்னுடையது இல்லை என்று சொன்னவர்தான் இந்த அறிக்கை தலைவி. அட போங்க சார். இந்த அழுகுணி ஆட்டமெல்லாம் ஜெயா நன்றாக ஆடுவார், ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் நடிகையல்லவா?]]]

சரி.. சரி.. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜேஷ், திருச்சி said...

//முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.//

இப்படி ஒரு கதை ஜெ மீது தப்பு இல்லைன்னு காட்ட சில குறிப்பிட்ட பத்திரிகைகள் எழுதிய கதை வசனம். அச்சு பிசகாம திரு தமிழன் இங்கே போட்டிருக்காரு. மேலே உள்ள வரிகளை மட்டும் சேர்த்து. சார் , பத்திரிகைல இந்த கதைய படிச்சு ரெண்டு நாள் ஆகுது.]]]

ம்ஹும்.. இதுதான் உண்மை.. நம்புவதும், நம்பாததும் உங்களது விருப்பம்..!

[[[இந்த கதை உண்மை என்றால் ஜெவிற்கு தலைமை பொறுபேற்க தகுதியே இல்லை என்பது நிஜமாகிறது! அப்புறம் இந்த அம்மாக்கு ஏன் ஓட்டு போடவேணும் என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது.]]]

இது நியாயமான கேள்விதான். கருணாநிதிக்கு மாற்றாக இந்தம்மா நிற்கும்போது தேர்வு செய்யத்தான் வேண்டியிருக்கிறது..! வேறு வழியில்லாமல்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜேஷ், திருச்சி said...

ஓட்டம் பிடித்த கருணாநிதி நு ஒரு பதிவு போறீங்களே.. அப்போ எல்லோரும் அம்மா ஆண்டிப்பட்டி விட்டுட்டு சிரிரங்கதுக்கு ஊடிசெனு கேட்டப்போ.. சமாளிசீங்கலே.. , அ.தி.மு.க. பத்தி பதிவு போடறப்போ எழுதலாம்னு இருக்கேனு. ஆனா அப்படி எதுவும் இல்லையே உங்க அ தி மு க பட்டியல் பதிவுல தேடி தேடி பார்த்தாலும் கெடைகளையே.. மொதல் பேரு அம்மா பேரு போட்டே சந்தோஷபட்டுகிட்டீங்க. அவ்ளோதான். அம்மா ஏன் சிறிரங்கம் போனங்கன்னு போடலையே.. அப்போ உ தா போடறதெல்லாம் வெறும் வெட்டி சீனா?]]]

ஆண்டிப்பட்டில நின்னு ஜெயிக்க முடியுமான்னு இந்த முறை அம்மாவுக்கே சந்தேகம் வந்திருச்சு. அதுனால இப்பவும் அதிமுக ஸ்டிராங்கா இருக்குற சிறீரங்கத்துக்கு ஓடிட்டாங்க.. அவ்ளோதான்..! எல்லாம் தேர்தல் ஓட்டுக்களுக்காகத்தான்..! பயம்.. பயம்.. பயம்.. ஒருவேளை இவங்க தோத்து, கட்சி ஜெயிச்சுட்டா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு வயிறு எரிஞ்சே சாகணும்ல்ல. அதனைத் தவிர்ப்பதற்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...
மீண்டும் அந்த கொள்ளைக் கூட்டம் ஆளவே... இந்த ஆணவக் கூட்டம் வழி வகுத்துவிட்டது.]]]

என்ன செய்யறது? தமிழ்நாட்டில் தலையெழுத்து இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

இதெல்லாம் திமுக மீடியாக்கள் வேலை என்பது என் எண்ணம். அது என்னய்யா? 87 வயது கிழவன் 6வது 7அவது முறைனு சொல்ல ஆள் இருக்கிற இந்த நாட்டில் 63 வயது முதியவர் அடுத்த தேர்தலை சந்திக்க மாட்டார் என்ற உங்கள் கணிப்பு எந்த வகை என்று எனக்கு புரியவில்லை. அவர் இதை விட grave காலத்தில் இருந்துதான் வெளியே வந்துள்ளார். இப்பவும் வெளியே வருவார். அப்பவும் இதே ஜெயலலிதாதான், இதே சசிகலாதான். எங்களுக்கு கருணாநிதியை அழிக்க கூடிய ஒரே ஆள் ஜெயலலிதான். வேறு எந்த ஆம்பிளையும் அந்த காட்டு குடும்பத்தை எதிர்க்க முடியாது. இந்த ஒரு பொம்பளையை தவிர.]]]

பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் ஸார். அதனை மனதில் வைத்துதான் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...

//எனது கணிப்பின்படி தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி தேர்தலை ஜெயலலிதா தற்போது சந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.//

எதை வைத்து சரவணன் இப்படி சொல்றீங்க?]]]

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வரவிருக்கிறது. அதனை நினைத்துதான் சொல்கிறேன்..!

[[[என் கணிப்பின்படி, 2011 பிறகு திமுக, அதிமுக மட்டுமே இருக்கும். ஆனால் ஜெயாவுக்குப் பிறகு சசி கூட்டத்தை யாரும் நம்பத் தயாரில்லை.அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவது யாருங்றதுதான் பெரிய கேள்வி.]]]

வைகோவுக்கும், விஜயகாந்துக்கும் இடையில் பெரும் போட்டியே நடக்கப் போகிறது..! பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

//இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!//

கேப்பையில நெய் வழியுதுன்னு சொல்றீங்க. இதே திமுக முகாமில் நடந்திருந்தால் இன்னேரம் பின்னி பெடலெடுத்திருப்பீர்கள்.]]]

ரெண்டு கழுதைகளும் எனக்கு ஒண்ணு போலத்தான்..!

[[[அம்மா கட்சியின் வேட்பாளர்கள் எல்லாரும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில்தான் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார்களாமே, அது உண்மையா?]]]

பக்திமான் தலைமையில் உள்ள கட்சி வேறெப்படியிருக்கும்..? சொல்லியிருக்கலாம்.. இதில் ஆச்சரியமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Barari said...

உண்மையிலேயே மண்னார்குடி குடும்பம் இடி தாங்கிகள்தான். ஜெயா செய்யும் தவறான முடிவுகளின் பின் விளைவு பாராட்டப்பட்டால் அது ஜெயாவின் ராஜதந்திரம் என்றும் அல்லது விமர்சீக்கப்பட்டால் இது மண்னார்குடி குடும்ப சூழ்ச்சி என்று அவர்கள் தலையில் போடவேண்டியது. தமிழர்கள் காதில் பூ வைத்து கொண்டிருப்பதாக எண்ணியிருக்கிறார்கள்.]]]

கருணாநிதி தோளில் ஏறி நமது காதில் பூவை முழம், முழமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[thARumARu said...

ரிப்போர்ட்டர்லே வம்பானந்தா என்னமோ இது உளவுத்துறையோட டகால்டி வேலைன்னு சொல்றாரு? எது உண்மை?]]]

விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியதில் உளவுத்துறைக்கு பெரும் பங்குண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[மனிதன் said...

சசிதான் பட்டியலை வெளியிட்டு சதி செய்தார், ஜெ அப்பாவி எனும் திரைக்கதையை விகடன், தினமல., தினமணி மற்றும் நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதன் காரணம்? இவங்க ராஜகுரு 'சோ'விற்கு எந்த பங்கும் இல்லையா நல்லது நடந்தால் 'ஜெ', சோவின் ராஜ தந்திரம். பிரச்சினை ஏற்பட்டால் சசி குடும்பமா? என்னங்க ஒங்க நியாயம்? எதுக்கு எடுத்தாலும் சசி குடும்பமா ? அப்படியே சசி தலையீடு இருந்தாலும் கட்சியே அம்மா கட்டுப்பாட்டுல இல்லனா தமிழ்நாடு ஆட்சி இவங்க கைக்கு போனா தமிழ்நாடு கதி அதோ கதிதான் !!!]]]

ஓகே.. உங்களது விருப்பத்தைக் குலைக்க நான் விரும்பவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...

திமுக மீடியாக்கள் எங்க சார் இதுல இருக்கு? இதே செய்தி தினமலரிலும், ஜூவியிலும் வந்தாச்சு. ஆனா நம்புறதுக்குதான் ஆளில்லை. எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.]]]

பரவாயில்லை.. இப்போதும் சிரியுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக, ஜெ-யை ஆதரிக்க முன் வந்தனர் தமிழ் உணர்வு கொண்ட நடுநிலையாளர்கள். கிடைக்கவே முடியாத, ஒரு புதையல் போல கிடைத்த அந்த ஆதரவை இழந்து நிற்கிறார் ஜெ .]]]

முட்டாள்தனம்தான். வேறென்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

இனியும் நீங்கள் நடுநிலையாளர் என்கிற சாயத்தை பூசிக் கொண்டிருப்பது அபத்தமாக இருக்கும். சாயம் வெளுப்பதற்கு முன்னரே நீங்களாகவே அதிலிருந்து வெளியே வந்து விடலாமே!]]]

நான் எப்போதும் வெளிப்படையாகவே பேசி வருகிறேன். உங்களுக்கு அப்படித் தோணுகிறது என்றால் அதற்கு நானென்ன செய்ய முடியும்..!?

[[[அம்மாவின் ஆதரவாளர் என்பது ஒன்றும் மறைத்துக் கொள்ளுமளவுக்கு அத்தனை அசிங்கமான ஒரு விஷயமில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமே! :)]]]

அப்படியொரு நிலையுடன் தள்ளாடும் நபர்களிடம் போய்ச் சொல்லுங்கள்..! புண்ணியமாய்ப் போகும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

பா.ம.க., கம்யூனிஸ்ட், தி.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் என எந்த கட்சியை பார்த்தாலும், தப்போ சரியோ, ஏற்கிறோமோ இல்லையோ, அவர்களுக்கு என ஒரு கொள்கை இருக்கும். ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கும். ஆனால், அந்த மாதிரி எந்த நிலைபாடும் இல்லாமல், தனிப்பட்ட கோப தாபங்களுக்காக நடத்தப்ப்டும் கட்சியா தோற்றம் அளிக்கிறது அதிமுக. இந்த நிலை மாறுமா?]]]

ஜெயலலிதா தன் குணத்தை மாற்றிக் கொள்ளாதவரையிலும் இது நடக்காது..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...

சரவணன்! திமிர் பிடித்த ஜெயாவிற்கு வரிஞ்சு கட்டினது போதும். இது நமக்கு வேணாம்.]]]

ரிஷி நீங்களுமா..? நான் ஆத்தாவின் விசுவாசி இல்லை. நான் விசுவாசி இல்லை. விசுவாசி இல்லை.. சொல்லிவிட்டேன்..!

[[[நம்மளோட புது புராஜக்ட்ல ஐக்கியமாகுங்க. 10 நாள்ல 30 புக்கு வேலையை முடிக்க வேண்டியிருக்கு. நம்மளோட பொழப்புதான் நமக்கு முக்கியம். உங்களத்தாண்ணே மலைபோல நம்பியிருக்கோம். வாங்கண்ணே!]]]

வர்றோம்.. வர்றோம்.. டெய்லி ஏதோவொரு வேலை வந்து குறுக்க நிக்குது. எதையுமே தட்ட முடியலை.. அதுதான் பிரச்சினை.. முடிச்சிரலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

திரைப்படத்திற்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி வலையுலகத்திற்கு நீங்கள். இன்னும் 15 வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கு இது போன்ற பல தகவல்களை ஆச்சரியத்தை அளிக்கக்கூடும்.
அதிமுக குறித்து நீங்க எழுதிக் கொண்டு வருவதற்கு தேர்தல் முடிந்ததும் விஜயகாந்த மூலம் பதில் கிடைக்கும். பார்த்துக் கொண்டேயிருங்க.]]]

தேர்தல் முடிஞ்சு நம்மளை எவன் கவனிக்கப் போறான்.. அவனுகளை அவனுகளே கவனிச்சுக்குவாங்க.. நம்மதான் வாயப் பொளந்துக்கிட்டு நிக்கணும்..!

[[[கூட்டணி ஒப்பந்தம் கையொப்பம் இட்டது கூட இருவரும் வெவ்வேறு இடத்தில் இருந்து கொண்டு. சரிதானே? என்னுடைய தலைப்பு நிச்சயம் உயிர்பெறும் காலம் வெகு அருகில் (விஜயகாந்த அதிர்ஷ்டக்காரர்)]]]

ஜெயலலிதாவின் கூடாரம் மண்ணால் கட்டப்பட்டது. ஒரு மழைக்குக்கூட தாங்காது..

[[[நடராஜன் என்ன களியா? எந்த ஊரில் இருக்கீங்க. திகார்ல ராஜா களியா தின்று கொண்டு இருக்கிறார்?]]]

அதுதானே.. ராஜா, ராஜ வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு.. ஆத்தாவும் அது மாதிரிதான்.. சரி விடுங்க..

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
சொல்ல மறந்துட்டேன். மைனஸ் ஓட்டு போட்டு பழகுறவுங்க எல்லோருமே உங்க இடுகைக்குத்தான் வருவாகளோ?]]]

ஹா.. ஹா.. இருக்கலாம்.. என்னமோ... நான் ஒருத்தன்தான் ரெண்டு கட்சியையும் ஒரே சமயத்துல எதிர்க்கிறேன்னு நினைக்கிறேன். ஜெயலலிதாவை எதிர்க்கும்போதும், தி.மு.க.வை ஆதரிக்கும்போதும் மிகத் தீவிரமாக எதிர் ஓட்டுக்கள் விழுகின்றன.. என்னதான நடக்குது இங்க..?

Just a Postman said...

will u please engarage me....


http://postmanpostmartem.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

[[[Just a Postman said...

will u please engarage me....

http://postmanpostmartem.blogspot.com/]]]

வாழ்க வளமுடன்..!

ராஜரத்தினம் said...

//வைகோவுக்கும், விஜயகாந்துக்கும் இடையில் பெரும் போட்டியே நடக்கப் போகிறது..! பார்ப்போம்..!//

கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாத பதில். 87 வயது கிழவன் தவழ்ந்து வாழும் கட்சியின் எதிர்காலத்தை பற்றீ சொன்னால் கூட logic படி ஒ.கே ஆனால் 63 வயது மூதாட்டியின் எதிர்காலத்தை பற்றி விமர்சனம் இப்போ தேவையில்லாத ஒன்று. விஜயகாந்த 56, வைகோ 64 இவர்களுக்கு இதே விமர்சனம் பொருந்துமே என்ற பொது அறிவு கொஞ்சம் கூட இல்லாத பதில்.

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//வைகோவுக்கும், விஜயகாந்துக்கும் இடையில் பெரும் போட்டியே நடக்கப் போகிறது..! பார்ப்போம்..!//

கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாத பதில். 87 வயது கிழவன் தவழ்ந்து வாழும் கட்சியின் எதிர்காலத்தை பற்றீ சொன்னால்கூட logicபடி ஒ.கே ஆனால் 63 வயது மூதாட்டியின் எதிர்காலத்தை பற்றி விமர்சனம் இப்போ தேவையில்லாத ஒன்று. விஜயகாந்த 56, வைகோ 64 இவர்களுக்கு இதே விமர்சனம் பொருந்துமே என்ற பொது அறிவு கொஞ்சம்கூட இல்லாத பதில்.]]]

நன்றி ராஜரத்தினம்..! உங்களது வாதத்தை நீங்களே நம்பலாம். எனக்கொன்றும் இல்லை..! இப்போது ஜெயா இல்லையெனில் தி.மு.க.வை எதிர்க்க அடுத்தது யார் என்று பார்த்தால் அவர்கள் இருவரும்தான் என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். உங்களுக்கு யாரோ..?

Michael Roshith Viani said...

போய் ஊம்பு