ஒரு நேர்மையான வி.ஏ.ஓ.வை இழந்துவிட்டனர் தமிழக மக்கள்..!

22-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தாய்த் தமிழகத்திற்கு ஒரு நன்றிக் கடனை செலுத்த ஆர்வமாக இருந்தேன். துடிப்புடன் இருந்தேன். ஆசையோடு காத்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது.

கிராம நிர்வாக அலுவலர் என்கிற வி.ஏ.ஓ. தேர்வுக்காக விண்ணப்பத்தினை அனுப்பிவிட்டு சமீபத்தில் புற்றீசல்போல் உடனுக்குடன் வெளியான அனைத்து சிறப்புப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் உருட்டிப் புரட்டிப் படித்து வைத்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது.


சென்ற வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் “Blind / Deaf  நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்று சொல்லியிருந்தார்கள். முதலில் படித்தபோது புரியவில்லை.(எதுதான் நமக்கு உடனே புரிஞ்சிருக்கு?)

கண் பார்வையற்றோருக்கு வேண்டுமானால் இது பொருந்தக் கூடியது என்று சொல்லலாம். ஆனால் காது காளாதோருக்கு ஏன் வேலை தரக் கூடாது..? தப்பாச்சே..? வரும் ஞாயிற்றுக்கிழமை(20-02-2011) தேர்வு நடக்கவிருக்கிறது.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடையுத்தரவு வாங்கிவிடலாம் என்றுகூட முதலில் யோசித்து, நண்பர், வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனிடம் பேசினேன்.

“முதல்ல விதிமுறைகளை நல்லா படிச்சுப் பாருங்க.. அதுல எதுவும் போடலைன்னா எடுத்திட்டு வாங்க.. பேசுவோம்..” என்றார்.. அவரது அறிவுரையின்படி தேடிப் பிடித்துப் புரட்டியதில் தேர்வாணைய விளக்கக் குறிப்பில் எதுவுமில்லை. குழப்பம் கூடியது.

தேர்வாணைய அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டபோது “விண்ணப்பத்திற்கான குறிப்பாணையில் அது வெளியாகியுள்ளது. வாங்கிப் பாருங்கள்...” என்றார்கள். “அது எங்கே கொடுத்தீர்கள்..?” என்று நான் திருப்பிக் கேட்க.. “அதைத்தான் தெருத் தெருவா வித்தாங்களே.. பாக்கலையா..?” என்று திருப்பிக் கேட்டார்கள். நானும் விடவில்லை. “நீங்க போஸ்ட் ஆபீஸ்ல கொடுத்தீங்களே.. அதுல நான் பார்த்தவரைக்கும் இது இல்லையே..?” என்றேன். “போஸ்ட் ஆபீஸ்ல கொடுத்தது, தேர்வாணையம் நடத்தும் எல்லா தேர்வுகளுக்கும் பொதுவான அறிவுரை விளக்கம்.. இந்த வி.ஏ.ஓ. தேர்வுக்கு மட்டும் தனியா விதிமுறைகளைக் கொடுத்திருந்தோம். அதுல போட்டிருந்தோம்.” என்றனர். “அது எனக்குத் தெரியாதே..? உங்களுடைய விளம்பரத்துலேயும் இது பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே?” என்றேன். “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது ஸார்.. நாங்க பிரிண்ட் பண்ணிக் கொடுத்தாச்சு.  அவ்ளோதான்” என்று பொறுப்பாகச் சொல்லி போனை வைத்துவிட்டார்கள்.


மறுபடியும் போன் அடித்துக் கேட்டால், அந்த செக்ஷன், இந்த செக்ஷன் என்றார்களே ஒழிய யாரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. கடைசியாக கோபத்துடன், “கோர்ட்டில் வழக்குத் தொடரப்  போகிறேன். அதற்காகத்தான் கேட்கிறேன்..” என்று கத்தியவுடன் மிகவும் பதட்டமாக ஒருவர், “அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடுங்க ஸார்.. கண்டிப்பா சொல்றேன் ஸார்..” என்றார்.

மீண்டும் மிகச் சரியாக ஐந்தாவது நிமிடத்தில் அழைத்தவுடன், “சரவணன் ஸார்.. உங்களுடைய உடல் ஊனத்தின் குறைபாடு என்ன அளவு ஸார்..?” என்று குழைந்து கேட்டது குரல்.. இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்காததால், “நிச்சயமாகத் தெரியலை. ஆனால் டாக்டரின் சர்டிபிகேட்டையும்கூட சேர்த்து வைச்சுத்தான் அனுப்பியிருக்கேன்..” என்றேன். “அது வந்து ஸார்.. காது கேக்காதவங்கன்னா அது 50 சதவிகிதத்துக்குள்ள இருந்தால்தான் அவங்களுக்கு அனுமதின்னு ரூல்ஸ் ஸார். இது அந்த விளக்கவுரைல இருக்கு. நீங்க அதை வாங்கிப் படிச்சுப் பாருங்க. உங்களோட சர்டிபிகேட்டை எடுத்துப் பாருங்க. 50-க்குள்ள இருந்தா போன் செய்யுங்க. பேசித் தீர்த்துக்குவோம். 50-க்கு மேல இருந்தால் நாங்க எதுவும் செய்ய முடியாது ஸார். நீங்க கோர்ட்டுக்கு போறதுன்னாலும் போகலாம்.. இவ்ளோ நேரம் பொறுமையா கேட்டதுக்கு நன்றி ஸார்..” என்று சொல்லி ஏர்டெல் கஸ்டமர் கேர் அடிமைகள் மாதிரி பேசி போனை டொக்கென வைத்தார்கள்.

இதென்ன புது கதை என்று எனது மருத்துவச் சான்றிதழைத் தேடிப் பிடித்துப் பார்த்தால்.. நிசம்தான்.. அதில் "எனக்கு 56 சதவிகிதம் செவித்திறன் குறைபாடு.." என்று குறிப்பிட்டிருந்தார்கள். அடங்கொய்யால.. இந்த மருத்துவர்களும் சேர்ந்தே எனக்கு எதிரா சதி பண்ணியிருக்காங்களே..?

50-க்குள்ள இருந்தாலும் ஒழுங்காக தேர்வெழுதி வெற்றி பெற்று பொறுப்பாக வேலைக்கு போய் உக்காந்திருப்பனே..! 1 பைசா கூட லஞ்சம் வாங்காத, 99 சதவிகிதம் உண்மையான மக்கள் தொண்டனாக.. ஒரு நல்ல அரசு ஊழியனாக உழைத்திருப்பேனே..! எல்லாத்தையும் கெடுத்திருச்சே இந்தக் காது..! போனதுதான் போனது.. கொஞ்சமா போயிருக்கக் கூடாதா..?

அதென்ன 50 சதவிகிதக் கணக்கு? எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. இப்போது நான் காது கேட்கும் கருவியைப் பயன்படுத்துகிறேன். நேருக்கு நேராக நின்று பேசினால் ஓரளவுக்குக் கேட்கும். முடியாதபட்சத்தில் உதட்டசைவை வைத்து கண்டுபிடித்துவிடுவேன். அப்படியும் இல்லையெனில் அவர்களே எனது மிஷினைப் பார்த்துவிட்டு சத்தமாகப் பேசிவிடுவார்கள். பிரச்சினையில்லை. பின்பு எதற்கு இந்தச் சதவிகிதக் கணக்கு..?

ரொம்பப் பிரச்சினை என்றால் இரண்டு காதுகளிலுமே மிஷின் வைத்துக் கொண்டு சமாளித்துவிடலாம். இதையெல்லாம் யாரேனும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கக் கூடாதா..?

இந்த மருத்துவச் சான்றிதழைக்கூட சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் செய்தேன். அவர்கள்தான் சான்றிதழைக் கொடுத்தார்கள். கொடுக்கும்போது, “பணி புரிய முழுத் தகுதியுடையவர்” என்பதற்கான வாசகங்கள் எழுதப்பட்டு ஒரு தனிச் சான்றிதழ் கேட்டிருப்பதையும் அவர்களிடத்தில் சொன்னேன்.

பரிந்துரை செய்த பெண் மருத்துவரோ, “அப்படியொரு சான்றிதழை நேர்முகத் தேர்வின்போதுதான் தருவோம். இப்போது தர மாட்டோம்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். ஆனால் இந்த வி.ஏ.ஓ. பதவித் தேர்வுக்கு நேர்முகத் தேர்வே கிடையாது என்பது ஒரு தனிக் கதை. இதையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். “இல்லை ஸார். அப்படி நாங்க கொடுக்க முடியாது. அதுக்கு எங்க டிபார்ட்மெண்ட்ல ரூல்ஸ் இல்லை..” என்று மறுத்துவிட்டார். கடைசியில் எனது காதுகளின் செவித்திறன் குறைபாடு எத்தனை சதவிகிதம் என்பதை மட்டுமே குறித்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறையும், கல்வித் துறையும், வேலை வாய்ப்புத் துறையும் ஒரே அரசுகளின் கீழ் இருப்பதுதான். ஆனால் அவர்களுக்குள்ளேயே இத்தனை குழப்பங்கள். இதற்கு பலிகடா என்னை மாதிரியானவர்கள்தான்..! ஒவ்வொரு இலாகாக்களின் விதி்முறைகளும் இப்படி ஏறுக்குமாறாக இருந்தால் எப்படி..?

வேலை வாய்ப்புக்காக இப்படியொரு சான்றிதழை பெற்று வர வேண்டும் என்று ஒரு துறை கூறினால், அத்துறையினர் முன்னரே சான்றிதழ் வழங்கும் துறையினரிடம் இது பற்றிப் பேசி முடித்திருக்க வேண்டாமா..? மக்கள் நல்வாழ்வுத் துறையில் அப்படியொரு சான்றிதழ் தரக் கூடாது என்று விதிமுறை இருக்கும்போது அதனை தெரிந்து கொள்ளாமல் அது போன்ற சான்றிதழை வாங்கி வாருங்கள் என்று இன்னொரு துறை கேட்கின்ற கொடுமையை எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்வது..?

காது கேட்காதுதான். ஆனால் கை, கால், பேச்சு எல்லாம் நன்றாக உள்ளது. ஆகவே இவரால் இந்தப் பணியினைத் திறம்பட செய்ய முடியும் என்று மருத்துவர்கள் உறுதிமொழியளித்தால் அவருக்கு வேலை தரலாம் என்று விதிமுறைகளை அமைத்திருந்தால் நிச்சயம் நான் தப்பித்திருப்பேன். இதுதான் முறையும்கூட..! 

காது கேளாதோர் அனைவருமே முழு உடல் ஊனமுற்றவர் இல்லை. இப்போது நானே வீட்டில் இருக்கும்போது மெஷினை பயன்படுத்துவதில்லை. பைக்கில் செல்கின்றபோதுகூட மெஷினை மாட்டுவதில்லை. அலுவலகத்தில், கூட்டத்தில், யாருடனாவது பேசும்போதுதான் அதனைப் பயன்படுத்துவேன்.. அப்போதுதான் அது அவசியமும்கூட..!

இந்தப் பணி மக்கள் நலனில் தொடர்புடையது என்பதால் இது முக்கியத் தேவைதான் என்பதையும் நான் அறிவேன். ஆனால் கை, கால், பேச்சு நன்றாக இருந்து மெஷினின் உதவியாலேயே தெளிவாகக் கேட்கவும் முடியும் என்றால் அனுமதிக்கலாமே..? ம்.. என்னத்த சொல்றது..?

எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று வந்த கடிதத்தில்கூட “Blind / Deaf  நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்றுதான் மொட்டையாக போட்டிருக்கிறார்கள். "உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் விதிமுறைக்கு அதிகமாக உள்ளது. இதனால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.." என்றாவது மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டாமா..?

இதற்காக கோர்ட்டு, கேஸ் என்றெல்லாம் போய் நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது தற்போதைய எனது அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை நிலையில் முடியாத காரியம் என்பதை உணர்ந்து  அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.

அந்தக் கோவணாண்டி முருகன் ஏன் இப்படி என்னை விதம்விதமா சோதிக்கிறான்னு தெரியலை..! இந்த வயசுக்கு மேல இனிமேல் நான் எந்த அரசு வேலைக்குப் போறது..? கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு.. வயசான காலத்துல ஏதாவது பென்ஷனாவது கிடைக்கும்.. யார் தயவும் இல்லாம, கால் வயிறுன்னாலும் நாமளே கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். மண்ணையள்ளிப் போட்டுட்டான் அந்த பழனி பரதேசிப் பய..!

இதோ... நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வி.ஏ.ஓ. தேர்வும் நடந்து முடிந்துவிட்டது. 3,484 இடங்களுக்கு மொத்தம் 9 லட்சம் தமிழர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் 104 இடங்களில் தேர்வு மையங்களை அமைத்திருக்கிறார்கள்.

ஏதோ பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு படிப்பதுபோல்  முழு அக்கறையோடு படித்து தயாராக இருந்தனே..? அனைத்தும் வீண்.. இதில் வயித்தெரிச்சலான இன்னொரு விஷயம். தேர்வில் கேள்வி கேட்டிருக்காங்க பாருங்க..

கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?

சாய்ஸ் : நீதிமன்றம், நகர மன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம்..

அடப்பாவிகளா..? இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா..? இந்தக் காலத்துல 5 கிளாஸ் படிக்கிற பையனே  சொல்லிருவான்யா. கேட்ட கேள்விகளெல்லாம் இந்த லட்சணத்துலதான் இருந்துச்சாம். என்னைய எழுத விட்டிருந்தா அட்லீஸ்ட் முதல் பத்து பேருக்குள்ளயாச்சும் வந்து சீட்டை பிடிச்சிருப்பனே..?  கெடுத்துட்டானே.. கெடுத்துட்டானே அந்த முருகன்..!

அடுத்த வருடத்தில் தமிழகத்தில் எங்காவது லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது என்று எழுதியிருந்தால், என்னை நினைத்துப் பார்த்து தமிழக அரசை கண்டியுங்கள்..! ஒருவேளை கைதான அந்த வி.ஏ.ஓ.வுக்குப் பதிலாக நான் இருந்திருந்தால் நிச்சயம் இந்தச் சம்பவமே நடந்திருக்காதே என்று நினைத்துக் கொள்ளுங்கள்..!

எப்படியோ.. தமிழக அரசு தலை சிறந்த ஊழியன் ஒருவனை இழந்துவிட்டது.. தமிழக மக்கள் சிறந்த, நேர்மையான வி.ஏ.ஓ. ஒருவரை இழந்துவிட்டார்கள்..!

அவர்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

220 comments:

மரா said...

கொஞ்சம் செலவாகும்.
பரவாயில்லையா :-)

மரா said...

ஆமாம் சஞ்சய் கன்னாலதுக்கு போனீங்களாம். ஒரு வார்த்த கூட சொல்லவேயில்லை :)

ப்ரியமுடன் வசந்த் said...

Sorry அண்ணே கஷ்டமாத்தான் இருக்கு :(

விடுண்ணே விடுண்ணே உங்களை எடுக்காததால கவர்ன்மெண்டுக்குத்தான் நஷ்டம் !

உண்மை said...

கோவணாண்டிய சொல்லி ஒரு பிரேசாணமும் இல்லை. எல்லாம் நம்ம விதின்னு நினைசுட்டு போக வேண்டியது தான். அவன் பாட்டுக்கு பழம் கிடைக்கலைனு மலை மேல போய் நின்னு கிட்டான். நாம எங்க போறது ? இருக்கிற மலைய எல்லாம் பேர்த்து எடுத்து வித்துட்டாங்க. மீதி மிச்சத்த குடும்பமே கூறு போடுது. அட என்னமோ போங்க !

butterfly Surya said...

I feel so much..

:( :(

Unknown said...

அட விடுங்க! அந்த பழநிமலையாண்டி உங்களுக்கு வேறு எதோ வேலை வெச்சிருப்பான்!

செங்கோவி said...

ஸ்பெக்ட்ரம் பத்தி எதுவும் கேட்கலியாண்ணே?

Kannan said...

நீங்கதான் பில் கேட்ஸ்-ன்னு சொல்லி பரிட்சை எழுதினாலும், அதில் மிக அதிகமான மதிப்பெண் பெற்றாலும், காசு இல்லாமல் selection கிடையாது. ஆக, வரும்முன் காப்போனாக என் தந்தை அருணாச்சலத்தின் புதல்வன் உங்களை காப்பாற்றி இருக்கிறான்.

sriram said...

சரவணன்,
உங்க நிலை கண்டு ரொம்ப வருத்தமாயிருக்கு.
காது கேட்பதில் குறையிருந்தாலும் நீங்க அதை சமாளிச்சிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, ஆனா இந்த நொள்ளைக் காரணத்தைச் சொல்லி உங்க விண்ணப்பத்தை நிராகரிச்சதில் வருத்தமே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Jackiesekar said...

அண்ணே பஸ்ல உங்களை கலாய்க்க நினைத்தேன்.. பட் பதிவை படிச்ச பிறகு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு..

தாறுமாறு said...

உ.த.,

விதிமுறைகளை முழுவதுமாகப் படிக்காதது உங்கள் தவறுதான். ஆங்கிலத்தில் fine print என்று கூறுவது பல பெரிய ஆட்களையே கவிழ்த்திருக்கிறது.
அது சரி, அரசு வேலைதான் பார்க்கணும்னு என்ன கொலை வெறி? நீங்கள் இப்போதே பதிவுகள் மூலமாக மக்கள் சேவை செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்.
VAO ஆக போயிருந்தால் ஒரு கிராமத்துக்குள் உங்கள் சேவை முடங்கியிருக்கும்.

Bruno said...

உங்கள் அரவேக்காடு அவதூறுகளுக்கு எனது விரிவான பதில் இங்குள்ளது

சின்னப் பையன் said...

எனக்கும் வருத்தமே. :-((

என்னால் எவ்வகையிலேனும் உதவ முடிந்தால் தயங்காமல் கூறுங்கள். செய்கிறேன்.

ராமுடு said...

Mr.Saravanan.. Sorry to hear about this.. Actually you should have given special priority. But in this country, we can't expect this..

நீச்சல்காரன் said...

வருத்தமான பதிவு. விவேகானந்தராக முடியாவிட்டால் இராமகிருஷ்ணராய் விவேகானந்தர்களை உருவாக்கு என்பது போல புதியதலைமுறை VAOக்கு வழிகாட்டுங்கள்.

Anonymous said...

சரவணன்,

இன்னும் என்னென்ன அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன என்று பார்த்து 56% குறைபாட்டை ஏற்றுக் கொள்ளும் வேலைக்கு விண்ணப்பித்து நுழையப் பாருங்கள். (மருத்துவர் புருனோ சொல்வதைப் பார்த்தால் ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறு அளவு வைத்திருக்கிறார்கள்).

http://tnpsc.gov.in/recruitment.htm என்ற தளத்தை கவனித்துக் கொண்டே இருங்கள் (இதுவும் புருனோவின் பதிவில் தரப்பட்டது). பொருத்தமான பதவிகளுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.

நீங்கள் அரசு வேலையில் சேர்ந்தால் மாத வருமானம் நிலையாக வருவதால், பொருளாதார கவலைக்காக ஓடிக் கொண்டிருப்பது குறையும். அரசு பணிக்கான கடமைகளை முடித்து எழுதுவதற்கு நிறைய நேரமும் கிடைக்கும்.

ஆனால், அரசு ஊழியர்களுக்கான சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

2011ல் அரசு வேலையில் அமர்ந்து விட வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

ConverZ stupidity said...

விடுங்க தமிழு... இத விட ஏதோ பெரிய லெவல்-ல உங்க வாழ்க்கை பயணிக்கபோகுதுன்னு நினைக்கிறேன்.

அப்புறம் ஒரு விஷயம்..
கடந்த சனிக்கிழமை feb 19 2011 மெட்ராஸ் வூட்லண்ட்ஸ் ஹோட்டல்-ல கருணாநிதி பேரன் குணநிதி(அமிர்தத்தின் மகன்) ஹோட்டல் வாட்ச்மன்-ஐ சுட்டதை பத்தி எதாவது தகவல் தெரியுமா?

sultangulam@blogspot.com said...

:(((
வருந்துகிறேன். வேறு ஏதோ நன்மைக்குத்தான் என நினையுங்கள்.

அந்த பணியில் நேர்மையாக இருத்தல் இயலாது. இருந்தால் உங்கப்பன் கோமணாண்டி கதைதான். பின்னால் வரப்போகும் துன்பம் முன்னாலேயே நீக்கப்பட்டு விட்டிருக்கலாமென நினைக்கிறேன்.

வரும்காலம் உமக்கு நல்லதையே தர வாழ்த்துகள்.

பிரபல பதிவர் said...

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணாம நேரடியா எழுதுன பதிவு இவ்ளோ சோகமாவா இருக்கும்......

உங்கள் குறை 56% லிருந்து 50% ஆக குறைக்க எதாவது வழியிருந்தால் பாருங்கள்.... ஆப்பரேஷன் ஏதாவது செய்யனுமா என்று செக் செய்யுங்கள்.... இல்லாட்டி குறுக்கு வழி பயன்படுத்தி சர்டிபிகேட் வாங்க பாருங்கள்... அது ரொம்ப சுலபமான வழி..... ஆனால் வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம அவன் 80% ஆக்கி விட்டுறமாதிரி உளறி வக்காதீங்க... அது ரொம்ப முக்கியம்.... கொஞ்சம் வொர்க் பண்ணீருந்தா இந்த பரீட்சை எழுதீருக்கலாம்... எனிவே முதல்ல சர்டிபிக்கேட் அல்லது உண்மையிலேயே பர்சன்டேஜ குறைக்க முடியுமான்னு பாருங்க.....

எதாவது உதவி வேணும்னா கேளுங்க... நிச்சயம் பண்ணுறோம்....

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...

கொஞ்சம் செலவாகும். பரவாயில்லையா :-)]]]

இப்படி செலவு பண்ணி போஸ்ட் வாங்கணுமா..? வேணாம் மரா..!

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...
ஆமாம் சஞ்சய் கன்னாலதுக்கு போனீங்களாம். ஒரு வார்த்தகூட சொல்லவேயில்லை :)]]]

தனியா போஸ்ட் போடலாம்னு நினைச்சிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ப்ரியமுடன் வசந்த் said...

Sorry அண்ணே கஷ்டமாத்தான் இருக்கு :( விடுண்ணே விடுண்ணே உங்களை எடுக்காததால கவர்ன்மெண்டுக்குத்தான் நஷ்டம் !]]]

அவங்களுக்கு இது புரியணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[உண்மை said...
கோவணாண்டிய சொல்லி ஒரு பிரேசாணமும் இல்லை. எல்லாம் நம்ம விதின்னு நினைசுட்டு போக வேண்டியதுதான். அவன் பாட்டுக்கு பழம் கிடைக்கலைனு மலை மேல போய் நின்னுகிட்டான். நாம எங்க போறது? இருக்கிற மலைய எல்லாம் பேர்த்து எடுத்து வித்துட்டாங்க. மீதி மிச்சத்த குடும்பமே கூறு போடுது. அட என்னமோ போங்க!]]]

அப்படியே மலையோட போயிட்டா நமக்கும் நல்லதுதான். ஆனா எங்க வாழ்க்கையையும் கூறு போடுறாங்களே சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

I feel so much.. :( :(]]]

மிக்க நன்றி சூர்யாஜி..!

Jayakumar Chandrasekaran said...

I am also a sevittu mechine case.But I have retired from govt.service. Think everything is for your good and welfare. Don't lose your heart.Do not stop striving for a better job.

உண்மைத்தமிழன் said...

[[[அருணையடி said...
அட விடுங்க! அந்த பழநி மலையாண்டி உங்களுக்கு வேறு எதோ வேலை வெச்சிருப்பான்!]]]

அப்படீன்னு நினைச்சு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் சிபியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
ஸ்பெக்ட்ரம் பத்தி எதுவும் கேட்கலியாண்ணே?]]]

கேட்கலியாமே..? முட்டாள்கள். அதைக் கேட்டிருந்தா இன்னும் எவ்வளவு ஈஸியா இருந்திருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...
நீங்கதான் பில் கேட்ஸ்-ன்னு சொல்லி பரிட்சை எழுதினாலும், அதில் மிக அதிகமான மதிப்பெண் பெற்றாலும், காசு இல்லாமல் selection கிடையாது. ஆக, வரும்முன் காப்போனாக என் தந்தை அருணாச்சலத்தின் புதல்வன் உங்களை காப்பாற்றி இருக்கிறான்.]]]

இல்லை கண்ணன். இது போன்ற தேர்வாணைய தேர்வுகளில் காசு இப்போதெல்லாம் அதிகமாகச் செல்லாது.. கணிணியில் பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால் குறைவான ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

சரவணன், உங்க நிலை கண்டு ரொம்ப வருத்தமாயிருக்கு. காது கேட்பதில் குறையிருந்தாலும் நீங்க அதை சமாளிச்சிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, ஆனா இந்த நொள்ளைக் காரணத்தைச் சொல்லி உங்க விண்ணப்பத்தை நிராகரிச்சதில் வருத்தமே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

அன்புக்கு நன்றி ஸ்ரீராம். இந்தப் பணியைச் செய்வதற்கு கை, கால் நன்றாக இருந்தாலே போதுமானது என்பது எனது கருத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே பஸ்ல உங்களை கலாய்க்க நினைத்தேன். பட் பதிவை படிச்ச பிறகு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.]]]

நோ பீலிங்.. கலாய்த்தல் ஒரு பக்கம் ஓடட்டும்.. இந்தப் பக்கம் இதுவும் ஓடட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[thARumARu said...
உ.த., விதிமுறைகளை முழுவதுமாகப் படிக்காதது உங்கள் தவறுதான். ஆங்கிலத்தில் fine print என்று கூறுவது பல பெரிய ஆட்களையே கவிழ்த்திருக்கிறது. அது சரி, அரசு வேலைதான் பார்க்கணும்னு என்ன கொலை வெறி? நீங்கள் இப்போதே பதிவுகள் மூலமாக மக்கள் சேவை செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள். VAO ஆக போயிருந்தால் ஒரு கிராமத்துக்குள் உங்கள் சேவை முடங்கியிருக்கும்.]]]

விதிமுறைகள் முழுமையாக அதில் இல்லை என்பதுதான் உண்மை. வி.ஏ.ஓ. தேர்வுக்கென்றே தனி விதிமுறைகள் உள்ளன என்பதே வெளியில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

உங்கள் அரவேக்காடு அவதூறுகளுக்கு எனது விரிவான பதில் இங்குள்ளது.]]]

உங்களது அவசரத்தனமான, அரைவேக்காடு பதிவிற்குப் பதிலை கொடுத்திருக்கிறேன் டாக்டர்..!

உண்மைத்தமிழன் said...

டாக்டருக்கான பதில்-1

நன்றி டாக்டர்..!

உங்களை மாதிரி இவ்வளவு விரிவா, விளக்கம் கொடுத்து எழுதுற ஒரு ஆளு தேர்வாணையத்துல இல்லை என்று நினைக்கிறேன்.

இப்படி பத்தி, பத்தியாகப் பிரித்து கேள்வி பதில் போல் முன்பே தெளிவாக எளிய தமிழில் சொல்லியிருந்தால் நிச்சயம் என்னைப் போன்ற சிறார்களுக்குப் புரிந்திருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

டாக்டர் புருனோவிற்கான பதில்-2

தெரியாத ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் அவர் அரைவேக்காடா..? சரி.. பரவாயில்லை. நான் அப்படியே இருந்து கொள்கிறேன்.

நானாவது பரவாயில்லை. இணையத்தில் எழுதியவுடன் உங்களிடம் இருந்து பதில் கிடைத்தது. ஏற்றுக் கொள்கிறேன்.

இணையம் பற்றியே தெரியாத கிராமத்தான்கள் யாரிடம் போய்க் கேட்பார்கள்..!?

உண்மைத்தமிழன் said...

டாக்டர் புருனோவிற்கான பதில்-3

50 சதவிகிதம் என்கிற அளவையே நான் குறை கூறியிருக்கிறேன். இது அநீதி.. மருத்துவர்கள் இதனை பரிசீலித்து என்னைப் போன்று வேலை செய்ய முடிந்தவர்களுக்காக அரசிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். இதனைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே..? அரசு விதிமுறையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக நீங்கள் என்னிடம் சொல்வதுபோல் உள்ளது உங்களது அரசு சார்பான இந்தக் கட்டுரை!

உண்மைத்தமிழன் said...

டாக்டர் புருனோவிற்கான பதில்-4

உங்களுடைய கேள்வி 12-ல் இருக்கின்ற பதிலே இன்னமும் குழப்பமாக இருக்கிறது..!

உடல் ஊனமுற்றவர்களில் எந்த வகை ஊனமுற்றவர்கள் இநதப் பதவிக்கு தகுதியுடையவர்கள் என்பது அதில் தெளிவாக இல்லை.

கண் பார்வையற்றவர்கள், காது கேளாமல் கூடவே வாய் பேச முடியாதவர்கள் இந்தப் பதவி்க்குத் தகுதியானவர்கள் அல்ல என்கிற வார்த்தை இதில் எங்கே இருக்கிறது..?

கை, கால் ஊனமானவர்களில் 40-50 சதவிகிதம் உள்ளவர்கள் தகுதியானவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மற்ற வகை ஊனமானவர்கள் முழுக்க, முழுக்க தகுதியில்லாதவர்களா..? இதனை வெளிப்படையாக சொல்ல வேண்டாமா..?

நான் சொல்வது இது போன்று ஊனமுற்றவர்களை ஒதுக்காமல் அவர்களுக்கும் இந்தப் பணியினை ஒதுக்க வேண்டும் என்றுதான்..!

நீங்கள் அரசின் விதிமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள்.

நல்லாயிருங்க. நீங்களும் உங்களது அரசுகளும், அதன் விதிமுறைகளும்..!

உண்மைத்தமிழன் said...

டாக்டர் புருனோவிற்கான பதில்-5

உங்களுடைய 15-வது கேள்வி-பதிலில் குறிப்பிட்டுள்ளது போல், விதிமுறைகளில் ஏதேனும் குறிப்புகள் எங்கேயாவது உள்ளதா..? அப்படியிருந்தால் அதனை குறிப்பிடுங்களேன் டாக்டர். தேடிப் பார்த்தேன் எனக்குத் தெரியவில்லை.

தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவரையும் உங்களைப் போலவே அறிவாளிகளாக நினைத்துக் கொண்டால் எப்படி..?

அப்படியிருந்தால் என்னையும் சேர்த்து நாங்கள் அத்தனை பேரும் உங்களைப் போலவே டாக்டர்களாக ஆகியிருப்போமே..? எங்களுக்கு எதற்கு வி.ஏ.ஓ. போஸ்ட்டு..?

உண்மைத்தமிழன் said...

[[[ச்சின்னப் பையன் said...
எனக்கும் வருத்தமே. :-(( என்னால் எவ்வகையிலேனும் உதவ முடிந்தால் தயங்காமல் கூறுங்கள். செய்கிறேன்.]]]

தங்களுடைய நல்ல மனதுக்கு நன்றிகள் ஸார்..!

தேவைப்படின் நிச்சயம் கேட்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமுடு said...
Mr.Saravanan.. Sorry to hear about this.. Actually you should have given special priority. But in this country, we can't expect this..]]]

என்னைக் கேட்டால், அனைத்து உடல் ஊனமுற்றவர்களுக்கும் முதலில் வேலை வாய்ப்பை வழங்கிவிட்டு அதன் பின்புதான் மற்றவர்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்று சொல்வேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நீச்சல்காரன் said...
வருத்தமான பதிவு. விவேகானந்தராக முடியாவிட்டால் இராமகிருஷ்ணராய் விவேகானந்தர்களை உருவாக்கு என்பது போல புதிய தலைமுறை VAOக்கு வழிகாட்டுங்கள்.]]]

என்ன வழி காட்டுறது..? மொதல்ல அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதற்கே யாராவது வழி காட்டணும் போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Sivakumar said...

சரவணன், இன்னும் என்னென்ன அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன என்று பார்த்து 56% குறைபாட்டை ஏற்றுக் கொள்ளும் வேலைக்கு விண்ணப்பித்து நுழையப் பாருங்கள்.

(மருத்துவர் புருனோ சொல்வதைப் பார்த்தால் ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறு அளவு வைத்திருக்கிறார்கள்).

http://tnpsc.gov.in/recruitment.htm என்ற தளத்தை கவனித்துக் கொண்டே இருங்கள் (இதுவும் புருனோவின் பதிவில் தரப்பட்டது). பொருத்தமான பதவிகளுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்.

நீங்கள் அரசு வேலையில் சேர்ந்தால் மாத வருமானம் நிலையாக வருவதால், பொருளாதார கவலைக்காக ஓடிக் கொண்டிருப்பது குறையும். அரசு பணிக்கான கடமைகளை முடித்து எழுதுவதற்கு நிறைய நேரமும் கிடைக்கும்.
ஆனால், அரசு ஊழியர்களுக்கான சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். 2011ல் அரசு வேலையில் அமர்ந்து விட வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்]]]

நன்றி மா.சி.

தேர்வாணையப் பணிகளில் வேலை வாய்ப்புக்காக உடல் ஊனமுற்றவர்களுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், விதிமுறைகளேயே நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். அது தவறு என்கிறேன். இதுதான் எனது வாதம்..!

மேலும் அரசின் விதிமுறைகள் பொருத்தமான வகையில் மக்கள் முன் வைக்கப்படவில்லை. வெப்ஸைட்டில் மட்டும் வைத்துவிட்டால் போதுமா..? பிரிண்ட் காப்பியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டாமா..? இது யார் குற்றம்?

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

விடுங்க தமிழு... இத விட ஏதோ பெரிய லெவல்-ல உங்க வாழ்க்கை பயணிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.

அப்புறம் ஒரு விஷயம். கடந்த சனிக்கிழமை feb 19 2011 மெட்ராஸ் வூட்லண்ட்ஸ் ஹோட்டல்-ல கருணாநிதி பேரன் குணநிதி(அமிர்தத்தின் மகன்) ஹோட்டல் வாட்ச்மன்-ஐ சுட்டதை பத்தி எதாவது தகவல் தெரியுமா?]]]

கேள்விப்பட்டேன்..! அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.. தேர்தல் முடிஞ்சு ஆட்சி மாறினால் தானாகவே வெளியே வரும். அதுவரையில் பொறுத்திருப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சுல்தான் said...

:((( வருந்துகிறேன். வேறு ஏதோ நன்மைக்குத்தான் என நினையுங்கள்.
அந்த பணியில் நேர்மையாக இருத்தல் இயலாது. இருந்தால் உங்கப்பன் கோமணாண்டி கதைதான். பின்னால் வரப் போகும் துன்பம் முன்னாலேயே நீக்கப்பட்டு விட்டிருக்கலாமென நினைக்கிறேன்.
வரும் காலம் உமக்கு நல்லதையே தர வாழ்த்துகள்.]]]

நன்றி சுல்தான் ஸார்..! நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருந்துவிடலாம் ஸார்..!

இன்னமும் அரசுப் பணிகளில் நேர்மையான சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணாம நேரடியா எழுதுன பதிவு இவ்ளோ சோகமாவா இருக்கும்.]]]

அடப்பாவி மனுஷா.. என்னைத் தொடர்ந்து படிக்கிறதே இல்லையா..? இப்படி அண்டப் புழுகு புழுகுற..?

[[[உங்கள் குறை 56% லிருந்து 50% ஆக குறைக்க எதாவது வழியிருந்தால் பாருங்கள்.... ஆப்பரேஷன் ஏதாவது செய்யனுமா என்று செக் செய்யுங்கள்.]]]

இதற்கான வாய்ப்பே இல்லை. குறைபாடு கூடத்தான் செய்யும்.. இது இயல்பானது..!

[[[இல்லாட்டி குறுக்கு வழி பயன்படுத்தி சர்டிபிகேட் வாங்க பாருங்கள். அது ரொம்ப சுலபமான வழி. ஆனால் வாய வச்சிகிட்டு சும்மா இருக்காம அவன் 80% ஆக்கி விட்டுற மாதிரி உளறி வக்காதீங்க. அது ரொம்ப முக்கியம். கொஞ்சம் வொர்க் பண்ணீருந்தா இந்த பரீட்சை எழுதீருக்கலாம். எனிவே முதல்ல சர்டிபிக்கேட் அல்லது உண்மையிலேயே பர்சன்டேஜ குறைக்க முடியுமான்னு பாருங்க.
எதாவது உதவி வேணும்னா கேளுங்க. நிச்சயம் பண்ணுறோம்.]]]

இதுவும் முடியாது.. வேறு வழியில்லை. வருவதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[jk22384 said...
I am also a sevittu mechine case. But I have retired from govt. service. Think everything is for your good and welfare. Don't lose your heart. Do not stop striving for a better job.]]]

நன்றிகள் ஸார்..! நம்பிக்கைதானே வாழ்க்கை.. அதன்படிதான் தைரியமாக இருக்கிறேன்..!

Nat Sriram said...

நான் ப்ருனோவின் எதிர்வினை பதிவில் போட்ட கமெண்ட்:

உ.த அண்ணன் பதிவு அரைவேக்கடா, அல்லது இது அரைவேக்காடா என்று எனக்கு சந்தேகம்.
மாற்று திறநாளி என்ற terminology பற்றிய டவுட் எல்லாம் இங்கு வந்தது? அதற்கான ஹிஸ்டரி, ஜாகரபி எல்லாம் இங்கு எதற்கு?
புல்லெட் போட்டு 10 பாயிண்ட் போட்டு விட்டால் உங்கள் வாதம் சரி ஆகிவிடுமா? உ.த தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று உணர்ந்தே தானே இருக்கிறார்? அதில் அவருக்கு குழப்பம் இல்லையே..
அதென்னய்யா, செவித்திறன் குறைவு 40 - 50 குள்ளார இருந்தா தான் எடுப்போம்னு ஒரு ரூல்? அபத்தமா இல்ல? 39 இருந்தா ஓவர் qualified ? 52 இருந்தா disqualified -ஆ?
நீங்க ரெபரன்ஸ்க்கு போட்ட அந்த இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சுப்பாருங்க..கன்ப்யுசிங்ஆ இல்ல?

இந்த ரூலை summarize செய்ய முயற்சிக்கிறேன்..
அதாவது "காது கேட்காட்டி மாற்று திறநாளி கேடகரில வின்னப்பிங்க. உங்களுக்கு நல்லாவே காது கேட்டா வேலை இல்ல. கொஞ்சம் கம்மியா கேட்டாலும் வேலை இல்ல. கேட்டும் கேட்காமையும் 40 - 50 குள்ளார இருக்கணும். அதுக்கு ஒரு செர்டிபிகேட் குடுங்க. ஆங், இப்போ தேர்வுக்கு குடுக்கிற செர்டிபிகேட் பத்தாது. அப்புறம் வேலைக்கு சேரறதுக்கு இன்னொரு செர்டிபிகேட் வேற குடுக்கோணும்" என்கிற அபத்த சிகப்புநாடா ரூல்சுக்கு வக்காலத்து வேற வாங்கறீங்க டாக்டர்..

ஒரு மனுசனை அவர் ப்ளாகுல கூட பொலம்ப விட மாட்டேன்கறீங்க..அரசுக்கு சொம்ப தூக்கிட்டு வந்துர்றீங்க..

நோட்: இந்த கம்மண்டை வைத்திருப்பதும், அல்லது ஜாக்கி போல் நைசாக பப்ளிஷ் செய்யாமல் விடுவதும் உங்கள் இஷ்டம்.

Nat Sriram said...

உங்கள் ஆசை கைகூடாததற்க்கு என் வருத்தங்கள். மத்தபடி நடப்பவை யாவும் நல்லதுக்கே என்றே நினைப்போம்..

Sankar Gurusamy said...

Dear Saravanan, Even the People with Eye Powers with more than -4 are not allowed into the Govt Posts. I have suffered because of that....

I donot Understand why govt is having such redundant rules such as these. These can be corrected by wearing some Hearing Aid or Specs.

Govt should rethink about these rules in future.

http://anubhudhi.blogspot.com/

தமிழ் உதயன் said...

விட்டுதள்ளுங்கண்ணே... அப்பன் முருகனை மட்டும் பரதேசி அப்படி இப்படின்னு திட்டாதிங்க

காவ்யா said...

முதலில் அரசு வேலைக்கான தகுதி பணிவாகும். அது உங்களிடம் இல்லை. உங்களால் அப்பணியைச் செய்யவியலாது எனத் தெரிந்தே விண்ணப்பம்.

அரசியல்வாதிகள்தான் அரசு. அரசுக்கு வேலை என்பது மக்களுக்கு அன்று. அரசியல்வாதிகளுக்கே.

குறிப்பாக, வி.ஏ.ஓ. ஆளும் அரசிய்ல்வாதிகளின் அஜெண்டாக்களை செயல்படுத்த்வே இப்பதவி. கலெகடர், தாசில்தான், வி.எ.ஓ இவர்களெல்லாம் அதற்குத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்பதவிக்கு வந்தபின் தெரிவதை விட, வருமுன்பே தெரிவது நலம்.

வந்த பின் அரசியல்வாதிகளைத் திட்ட விரும்பினால், பணிவிலகிவிடுவது நல்லது ஜெயமோகன் செய்தது போல.

காவ்யா said...

வி.ஏ.ஓ ஆகி ஒழுக்கமாக இருப்பேன் என்பதெல்லாம் பயங்கர கபட நாடகம். அல்லது வெகுளித்தனம்.

அச்சமில்லை...அச்சமில்லை படத்தைப்பார்க்கவும்.

ஐ.ஏ.எஸ் தேர்வு நேர்முகத்தில் ‘நீ எதற்கு சேரவிழைகிறாய்?’ ‘மக்களுக்குச் சேவை செய்ய!’ என்பான். 2 வருடப்பணிக்குள் 10 கோடிச்சொத்து சேர்ப்பான்.

காவ்யா said...

பதிவில் சுயபச்சாபிதம் தெரிகிறது. செவித்திறன்ற்றோர் அல்லது குறைந்தோர் கோடானு கோடி உலகில். அவர்களுள் சாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவுண்டு. அவர்களெல்லாம் ஒப்பாரி வைக்கவில்லை. இரக்கத்தைத் தேடவில்லை.

செவித்திறம் படைத்தோரெல்லாம் சாதித்தவருமல்ல.

சாதனை, விரும்பியவண்ணம் வாழ்ந்த தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க செவித்திறன் கண்டிப்பாக வேண்டும் என்பது பரிதாபமான எண்ணம்.

மாற்றிக்கொள்ளுங்கள்.

காவ்யா said...

அரசுப்பணியில் பல்வேறு பணிக்கு பல்வேறுவிதமான திறன் அவசியமாகிறது. சில பணிகளில் சில திறன்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இருப்பினும் அரசு மாற்றுத்திறனாளிகளை கூடியமட்டும் சமத்திறன் உடையோராகத்தான் பார்க்கிறது.

வி.ஏ.ஓ தேர்வுக்கு செவித்திறனில் ஒரு குறிப்பிட்டளவு தேவை என்பது மிகச்சரியே.

அப்பதவி ஒரு அறையில் அமர்ந்து செய்வதல்ல. பலருடனும் உரையாடல் அவசியம். பல மேலதிகாரிகள், அரசியலார், மேனாட்டவர் வருகை தரும்போது அவர் வந்து செல்லும் வரை அன்னார்களிடமிருந்து வழிகாட்டல், மற்றும் பல தகவல் பரிமாற்றம் அவசியம்.

இது கலெக்டர் பதவிக்கும் வேண்டும். எனவே அங்கும் செவித்திறனில் ஒரு குறிப்பிட்ட அளவு வைக்கப்பட்டிருக்கிறது.

அப்பதவி செய்துதான் மக்கட்சேவை செய்ய வேண்டும் எனவில்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆய்தம்.

அருணா ராய் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அப்பதவியில் இருந்து விலகி இராஜஸ்தான் கிராமங்களில் பெண்கள் முன்னேற்ற்த்துக்கு என்.ஜி.ஓ வைத்துப் பாடுபடுகிறார்.
ஐ.ஏ.எஸ் எனக்குத் தடைக்கல். எனவே விலகினேன் என்றார். இவர் சேவையைப்பாராட்டி மேக்ஸெசே அவாருட் வழங்கப்பட்டது.

ராஜரத்தினம் said...

//உங்கள் அரவேக்காடு அவதூறுகளுக்கு எனது விரிவான பதில் இங்குள்ளது//

த‌மிழ்நாட்டின் த‌லைமை மாஃபியா கும்ப‌லின் அனைத்து ஊழ‌ல்க‌ளுக்கும் இந்த‌ அரைவேக்காடு ப‌தில் வைத்திருக்கிறாதா?

Thangaraj said...

எனக்கும் காது கேளாத குறை உள்ளது எனக்கு 75% குறை உள்ளதாக சான்றிதல் அளித்து உள்ளனர் அதனால் தேர்வுக்கு வின்னப்பிக்கவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[Nataraj said...

நான் ப்ருனோவின் எதிர்வினை பதிவில் போட்ட கமெண்ட்:

உ.த அண்ணன் பதிவு அரைவேக்கடா, அல்லது இது அரைவேக்காடா என்று எனக்கு சந்தேகம்.

மாற்று திறநாளி என்ற terminology பற்றிய டவுட் எல்லாம் இங்கு வந்தது? அதற்கான ஹிஸ்டரி, ஜாகரபி எல்லாம் இங்கு எதற்கு?
புல்லெட் போட்டு 10 பாயிண்ட் போட்டுவிட்டால் உங்கள் வாதம் சரி ஆகிவிடுமா?

உ.த தன்னை ஏன் தேர்வு எழுதவிடவில்லை என்று உணர்ந்தேதானே இருக்கிறார்? அதில் அவருக்கு குழப்பம் இல்லையே..

அதென்னய்யா, செவித்திறன் குறைவு 40 - 50 குள்ளார இருந்தாதான் எடுப்போம்னு ஒரு ரூல்? அபத்தமா இல்ல? 39 இருந்தா ஓவர் qualified ? 52 இருந்தா disqualified -ஆ?
நீங்க ரெபரன்ஸ்க்கு போட்ட அந்த இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சுப் பாருங்க. கன்ப்யுசிங்ஆ இல்ல? இந்த ரூலை summarize செய்ய முயற்சிக்கிறேன்.

அதாவது "காது கேட்காட்டி மாற்று திறநாளி கேடகரில வின்னப்பிங்க. உங்களுக்கு நல்லாவே காது கேட்டா வேலை இல்ல. கொஞ்சம் கம்மியா கேட்டாலும் வேலை இல்ல. கேட்டும் கேட்காமையும் 40 - 50 குள்ளார இருக்கணும். அதுக்கு ஒரு செர்டிபிகேட் குடுங்க. ஆங், இப்போ தேர்வுக்கு குடுக்கிற செர்டிபிகேட் பத்தாது. அப்புறம் வேலைக்கு சேரறதுக்கு இன்னொரு செர்டிபிகேட் வேற குடுக்கோணும்" என்கிற அபத்த சிகப்புநாடா ரூல்சுக்கு வக்காலத்து வேற வாங்கறீங்க டாக்டர்..

ஒரு மனுசனை அவர் ப்ளாகுலகூட பொலம்ப விட மாட்டேன்கறீங்க. அரசுக்கு சொம்ப தூக்கிட்டு வந்துர்றீங்க.

நோட்: இந்த கம்மண்டை வைத்திருப்பதும், அல்லது ஜாக்கி போல் நைசாக பப்ளிஷ் செய்யாமல் விடுவதும் உங்கள் இஷ்டம்.]]]

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நட்ராஜ்..!

சதவிகிதக் கணக்கு ரொம்பவே குழப்பமாக உள்ளது. ஏன் இப்படி வைத்து உயிரை எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Nataraj said...
உங்கள் ஆசை கை கூடாததற்கு என் வருத்தங்கள். மத்தபடி நடப்பவை யாவும் நல்லதுக்கே என்றே நினைப்போம்.]]]

அப்படின்னு நினைச்சுத்தான் மனசை சமாதானப்படுத்திக்கி்டடேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...

Dear Saravanan, Even the People with Eye Powers with more than -4 are not allowed into the Govt Posts. I have suffered because of that....

I do not Understand why govt is having such redundant rules such as these. These can be corrected by wearing some Hearing Aid or Specs. Govt should rethink about these rules in future.
http://anubhudhi.blogspot.com/]]]

இவர்களுடைய எல்லா விதிமுறைகளும் காலத்திற்கேற்றாற்போல் மாற்றப்பட வேண்டியது. ஆனால் இதனை இவர்கள் உணராமல் வழக்கமாக அதையே பின்பற்றிக் கொண்டு தாங்கள் சம்பாதிப்பதை மட்டுமே நினைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...
விட்டு தள்ளுங்கண்ணே. அப்பன் முருகனை மட்டும் பரதேசி அப்படி இப்படின்னு திட்டாதிங்க.]]]

அவனைத் தவிர வேறு யாரை இப்படி உரிமையோடு திட்ட முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[ranarana said...

முதலில் அரசு வேலைக்கான தகுதி பணிவாகும். அது உங்களிடம் இல்லை. உங்களால் அப்பணியைச் செய்யவியலாது எனத் தெரிந்தே விண்ணப்பம்.

அரசியல்வாதிகள்தான் அரசு. அரசுக்கு வேலை என்பது மக்களுக்கு அன்று. அரசியல்வாதிகளுக்கே.

குறிப்பாக, வி.ஏ.ஓ. ஆளும் அரசிய்ல்வாதிகளின் அஜெண்டாக்களை செயல்படுத்த்வே இப்பதவி. கலெகடர், தாசில்தான், வி.எ.ஓ இவர்களெல்லாம் அதற்குத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்பதவிக்கு வந்த பின் தெரிவதைவிட, வருமுன்பே தெரிவது நலம்.

வந்த பின் அரசியல்வாதிகளைத் திட்ட விரும்பினால், பணி விலகி விடுவது நல்லது. ஜெயமோகன் செய்தது போல.]]]

வேலையில் மட்டுமே பணிவைக் காட்ட முடியும்.. அநீதி கண்டு எதிர்க்கும்போது எதிர்க்கத்தான் வேண்டும்..!

அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லையே..?

pichaikaaran said...

இப்போது நான் """செவிட்டு மிஷின் """ வைத்திருக்கிறேன்."

i dont like that word. it is rude and it may hurt some people..

I know your intention is not hurt any one. but it is wrong word

உண்மைத்தமிழன் said...

[[[ranarana said...

வி.ஏ.ஓ ஆகி ஒழுக்கமாக இருப்பேன் என்பதெல்லாம் பயங்கர கபட நாடகம். அல்லது வெகுளித்தனம். அச்சமில்லை. அச்சமில்லை படத்தைப் பார்க்கவும்.]]]

ஏண்ணே.. இப்படி எடுத்த எடுப்பிலேயே சந்தேகப்படுற..? ஒருத்தனுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கண்ணே..!

[[[ஐ.ஏ.எஸ் தேர்வு நேர்முகத்தில் ‘நீ எதற்கு சேர விழைகிறாய்?’ ‘மக்களுக்குச் சேவை செய்ய!’ என்பான். 2 வருடப் பணிக்குள் 10 கோடி சொத்து சேர்ப்பான்.]]]

எல்லாரும் இப்படி இல்லண்ணே.. சிலர் மட்டும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ranarana said...

பதிவில் சுயபச்சாபிதம் தெரிகிறது. செவித் திறனற்றோர் அல்லது குறைந்தோர் கோடானு கோடி உலகில். அவர்களுள் சாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவுண்டு. அவர்களெல்லாம் ஒப்பாரி வைக்கவில்லை. இரக்கத்தைத் தேடவில்லை.]]]

என் நிலைமையை வெளிப்படையாகச் சொன்னால் அதற்கு சுய பச்சாபதமா..? அட போங்கண்ணே.. சொல்லாமல் விட்டால் எனக்குத்தான் நஷ்டம்..!

[[[செவித்திறம் படைத்தோரெல்லாம் சாதித்தவருமல்ல. சாதனை, விரும்பியவண்ணம் வாழ்ந்த தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க செவித்திறன் கண்டிப்பாக வேண்டும் என்பது பரிதாபமான எண்ணம். மாற்றிக் கொள்ளுங்கள்.]]]

மாற்றிக் கொள்கிறேன். அதே சமயம் எங்களைப் போன்றோரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ranarana said...

அரசுப் பணியில் பல்வேறு பணிக்கு பல்வேறுவிதமான திறன் அவசியமாகிறது. சில பணிகளில் சில திறன்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இருப்பினும் அரசு மாற்றுத் திறனாளிகளை கூடிய மட்டும் சமத்திறன் உடையோராகத்தான் பார்க்கிறது.]]]

இல்லை என்பதைத்தான் இந்த விதிமுறைகள் காட்டுகின்றன..!

வி.ஏ.ஓ தேர்வுக்கு செவித் திறனில் ஒரு குறிப்பிட்டளவு தேவை என்பது மிகச் சரியே. அப்பதவி ஒரு அறையில் அமர்ந்து செய்வதல்ல. பலருடனும் உரையாடல் அவசியம். பல மேலதிகாரிகள், அரசியலார், மேனாட்டவர் வருகை தரும்போது அவர் வந்து செல்லும் வரை அன்னார்களிடமிருந்து வழிகாட்டல், மற்றும் பல தகவல் பரிமாற்றம் அவசியம்.]]]

இதற்கு மிஷின் இருந்தாலே போதுமானது என்பது எனது எண்ணம்!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//உங்கள் அரவேக்காடு அவதூறுகளுக்கு எனது விரிவான பதில் இங்குள்ளது//

த‌மிழ்நாட்டின் த‌லைமை மாஃபியா கும்ப‌லின் அனைத்து ஊழ‌ல்க‌ளுக்கும் இந்த‌ அரைவேக்காடு ப‌தில் வைத்திருக்கிறாதா?]]]

கேட்டுச் சொல்கிறேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thangaraj said...
எனக்கும் காது கேளாத குறை உள்ளது எனக்கு 75% குறை உள்ளதாக சான்றிதல் அளித்து உள்ளனர் அதனால் தேர்வுக்கு வின்னப்பிக்கவில்லை.]]]

ஐயோ.. வருந்துகிறேன்..!

reno85 said...

விடுங்க பாஸ்...
அது சரி தேர்வாணையத்துல ஆள் வச்சிருக்கீங்களா என்ன ?..
இல்ல இவ்ளோ தைரியமா
"ஒரு நேர்மையான வி.ஏ.ஓ.வை இழந்துவிட்டனர் தமிழக மக்கள்..!"
சொல்லி இருக்கீங்க..
எனக்கு தெரிஞ்சு 5 lakh to 7 lakh
ஒரு போஸ்டிங்.
அதெல்லாம் விடுங்க ...

முத்தமிழ் அறிஞர் யார் ?
1 . )கி.ஆ.பெ. விசுவநாதம்
2 . )கருணாநிதி
3 . ) x
4 . ) y

R.Gopi said...

//கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?//

இது ஈஸி தான்... கரெக்டா எல்லாரும் சொல்லிடுவாங்க...

இன்னொரு கேள்வி பாருங்க...

கேள்வி : “தல” போட்டிருக்கும் துண்டு என்ன நிறம்...

சாய்ஸ் : மஞ்சள், ஆரஞ்சு, காவி, பச்சை

Nat Sriram said...

@ranarana ஜெயபால் ரெட்டி அமைச்சராக உள்ள நாட்டில், காபினெட் மீட்டிங்கில் கூட தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத தேவகவுடா, ரெண்டு எட்டு நடக்க 20 நிமிஷம் ஆகும் ஷங்கர் தயாள் ஷர்மா அரசாண்ட நாட்டில், கோமாவில் கூட 1 வருடம் அமைச்சராக மாறன் இருந்த நாட்டில் உண்மைத்தமிழன் VAO ஆக இருந்தால் குடிமுழுகிவிடாது.

R.Gopi said...

//கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?//

***********

1,74,000 கோடிக்கு எவ்ளோ சைபர்னு ஈஸியா கேக்கறத விட்டுட்டு!!!

ரிஷி said...

சரவணன்!
தெளிவில்லாத விதிமுறைகளாலும், முறை சாராத அறிவிப்புகளாலும் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் ஏற்படுகிறது.

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!
//3,484 இடங்களுக்கு மொத்தம் 9 லட்சம் தமிழர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள்.//

சராசரியாக ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்குப் போட்டியாக 258 பேர் தேர்வெழுதுகின்றனர். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்குமா?? பணிப்பாதுகாப்பு+பென்ஷன் தவிர்த்து வேறொன்றும் அங்கே இல்லை. அதற்கு இவ்வளவு கும்பல் கும்பலாக எழுதுவது ஆச்சரியம்தான்!!

ரிஷி said...

இந்தக் கேள்வி VAO தேர்வில் இடம்பெற்றதா என யாராவது பார்த்துச் சொல்லவும்!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
1. கருணாநிதி
2. ஸ்டாலினின் தந்தை
3. தயாநிதியின் தாத்தா
4. ராஜாத்தியின் கணவர்

காவ்யா said...

அதற்கு இவ்வளவு கும்பல் கும்பலாக எழுதுவது ஆச்சரியம்தான்!!
//

ஆச்சரியமில்லை தோழர்.

அங்குதான் நுட்பமே இருக்கிறது.

மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்காக சேரவில்லை. அதற்குத்தான் சேர்ந்தேன் என்று எவனாவது சொன்னால், நீங்கள் இரு செவிமடல்களையும் பொத்திக்கொள்ளுங்கள். பூ செருகிறான்.

இதேபோலவே, நான் ஒரு ஒழுக்கமான் கிராம அதிகாரியாக இருப்பேன் என்று விடும் உதார்.

சக்தி கல்வி மையம் said...

பதிவைவிட பின்னூட்டம் அருமையண்ணே....

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

//எப்படியோ.. தமிழக அரசு தலை சிறந்த ஊழியன் ஒருவனை இழந்துவிட்டது.. தமிழக மக்கள் சிறந்த, நேர்மையான வி.ஏ.ஓ. ஒருவரை இழந்துவிட்டார்கள்..!//


பாஸ் , உங்க நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சு இருக்கு :)

geethappriyan said...

அண்ணே,
வருத்தமாயிருக்கு.பழனிமுருகன் இதை விட நல்ல வாய்ப்பை வழங்கப்போகிறான் போல,அதனால தான் இதை கொடுக்கலை,தவிர இதுக்கு ஒவ்வொரு போஸ்டுக்கும் இத்தனை பணம் லஞ்சம்னு இருக்கே?அதை விசாரிச்சீங்களா?இது உண்மையிலேயே பரீட்சை எழுதினால் கிடைக்கும் பதவியா?ஏன் என்றால் இப்போது கான்ஸ்டபிள் வேலைக்கே 3 லட்சமாகிவிட்டது, எஸ் ஐ வேலைக்கு 7 முதல் 8 லட்சம் என்கின்றனர்.அவ்வளவு என் ரயில்வே கலாசி வேலைக்கு ஆள் எடுத்தால் கூட குறைந்தது 2 லட்சம் என்கின்றனர். மக்கள் மனதில் அது ஒரு அசூயையாகவே தெரியவில்லை, அதை ஒரு வியாபார மூலதனமாகவே பார்க்க பழகிவிட்டனர். இந்த விஏஓ போஸ்டிங்கை மட்டும் என்ன நேர்மையாக பரீட்சை எழுதி மதிப்பெண் வாங்கினால் கொடுத்துவிடுவரா? யோசியுங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இப்போது நான் """செவிட்டு மிஷின் """ வைத்திருக்கிறேன்."

i dont like that word. it is rude and it may hurt some people.. I know your intention is not hurt any one. but it is wrong word.]]]

நன்றி பார்வை. மாற்றிவிட்டேன்..!

geethappriyan said...

மேலும் உங்க மருத்துவ சான்றிதழில் 48 என இருந்தால் கூட உங்களிடம் பேசிய அதிகாரிகள் உச்ச பட்ச திறன் 35 என்றிருப்பார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[reno85 said...
விடுங்க பாஸ். அது சரி தேர்வாணையத்துல ஆள் வச்சிருக்கீங்களா என்ன ?..
இல்ல இவ்ளோ தைரியமா
"ஒரு நேர்மையான வி.ஏ.ஓ.வை இழந்துவிட்டனர் தமிழக மக்கள்..!" சொல்லி இருக்கீங்க. எனக்கு தெரிஞ்சு 5 lakh to 7 lakh ஒரு போஸ்டிங். அதெல்லாம் விடுங்க ...

முத்தமிழ் அறிஞர் யார் ?
1 . )கி.ஆ.பெ. விசுவநாதம்
2 . )கருணாநிதி
3 . ) x
4 . ) y]]]

எனக்குத் தெரிந்து இந்தத் தேர்வில் அந்த முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. நேர்முகத் தேர்வு இருந்தால் மட்டுமே ஊழல் நடக்கலாம் என்று எண்ணுகிறேன்..!

பை தி பை.. நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போன்றே ஒரு கேள்வி நிஜமாகவே கேட்கப்பட்டுள்ளது..!

முத்தமிழ்க்காவலர் என்று அழைக்கப்படுவர் யார் என்ற கேள்வி..?

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?//

இது ஈஸிதான்... கரெக்டா எல்லாரும் சொல்லிடுவாங்க...

இன்னொரு கேள்வி பாருங்க...

கேள்வி : “தல” போட்டிருக்கும் துண்டு என்ன நிறம்...

சாய்ஸ் : மஞ்சள், ஆரஞ்சு, காவி, பச்சை]]]

ஹா.. ஹா.. இதுவும் நல்லாத்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Nataraj said...

@ranarana

ஜெயபால் ரெட்டி அமைச்சராக உள்ள நாட்டில், காபினெட் மீட்டிங்கில்கூட தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாத தேவகவுடா, ரெண்டு எட்டு நடக்க 20 நிமிஷம் ஆகும் ஷங்கர் தயாள் ஷர்மா அரசாண்ட நாட்டில், கோமாவில் கூட 1 வருடம் அமைச்சராக மாறன் இருந்த நாட்டில் உண்மைத்தமிழன் VAO ஆக இருந்தால் குடிமுழுகிவிடாது.]]]

ஆஹா.. சூப்பர் பன்ச்.. பரிந்துணர்வுக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?//

***********

1,74,000 கோடிக்கு எவ்ளோ சைபர்னு ஈஸியா கேக்கறத விட்டுட்டு!!!]]]

அம்மா ஆட்சி வந்தவுடனேயே எக்ஸாம் ஏதாவது நடந்தா இந்த மாதிரி கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!
சராசரியாக ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்குப் போட்டியாக 258 பேர் தேர்வெழுதுகின்றனர். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்குமா?? பணிப் பாதுகாப்பு+பென்ஷன் தவிர்த்து வேறொன்றும் அங்கே இல்லை. அதற்கு இவ்வளவு கும்பல் கும்பலாக எழுதுவது ஆச்சரியம்தான்!!]]]

இப்போதைக்கு பணிப் பாதுகாப்பு, பென்ஷன் விஷயமே மிகப் பெரியது.. அதனால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
இந்தக் கேள்வி VAO தேர்வில் இடம் பெற்றதா என யாராவது பார்த்துச் சொல்லவும்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
1. கருணாநிதி
2. ஸ்டாலினின் தந்தை
3. தயாநிதியின் தாத்தா
4. ராஜாத்தியின் கணவர்]]]

இல்லை. ஆனாலும் கேள்வி ருசிகரம் ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[ranarana said...

அதற்கு இவ்வளவு கும்பல் கும்பலாக எழுதுவது ஆச்சரியம்தான்!! //

ஆச்சரியமில்லை தோழர்.
அங்குதான் நுட்பமே இருக்கிறது.
மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்காக சேரவில்லை. அதற்குத்தான் சேர்ந்தேன் என்று எவனாவது சொன்னால், நீங்கள் இரு செவிமடல்களையும் பொத்திக்கொள்ளுங்கள். பூ செருகிறான். இதேபோலவே, நான் ஒரு ஒழுக்கமான் கிராம அதிகாரியாக இருப்பேன் என்று விடும் உதார்.]]]

தன் நிழலைக் கூட நம்பாதவர்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வேடந்தாங்கல் - கருன் said...
பதிவைவிட பின்னூட்டம் அருமையண்ணே.]]]

என்ஜாய் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

//எப்படியோ.. தமிழக அரசு தலை சிறந்த ஊழியன் ஒருவனை இழந்துவிட்டது.. தமிழக மக்கள் சிறந்த, நேர்மையான வி.ஏ.ஓ. ஒருவரை இழந்துவிட்டார்கள்..!//

பாஸ், உங்க நேர்மை எனக்கு ரெம்ப பிடிச்சு இருக்கு :)]]]

இவ்ளோ நீளத்துக்கு பேர் வைக்க முடியுமா..? ஆச்சரியமா இருக்கு. நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அண்ணே, வருத்தமாயிருக்கு. பழனி முருகன் இதை விட நல்ல வாய்ப்பை வழங்கப்போகிறான் போல, அதனாலதான் இதை கொடுக்கலை, தவிர இதுக்கு ஒவ்வொரு போஸ்டுக்கும் இத்தனை பணம் லஞ்சம்னு இருக்கே? அதை விசாரிச்சீங்களா? இது உண்மையிலேயே பரீட்சை எழுதினால் கிடைக்கும் பதவியா? ஏன் என்றால் இப்போது கான்ஸ்டபிள் வேலைக்கே 3 லட்சமாகிவிட்டது, எஸ் ஐ வேலைக்கு 7 முதல் 8 லட்சம் என்கின்றனர்.அவ்வளவு என் ரயில்வே கலாசி வேலைக்கு ஆள் எடுத்தால்கூட குறைந்தது 2 லட்சம் என்கின்றனர். மக்கள் மனதில் அது ஒரு அசூயையாகவே தெரியவில்லை, அதை ஒரு வியாபார மூலதனமாகவே பார்க்க பழகிவிட்டனர். இந்த விஏஓ போஸ்டிங்கை மட்டும் என்ன நேர்மையாக பரீட்சை எழுதி மதிப்பெண் வாங்கினால் கொடுத்து விடுவரா? யோசியுங்கள்.]]]

நிச்சயமாக காசு இதில் விளையாடாது என்பது தெரிந்துதான் முனைப்போடு இருந்தேன். இதுவும் முருகனுக்குப் பிடிக்கவில்லை போலும்..!

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மேலும் உங்க மருத்துவ சான்றிதழில் 48 என இருந்தால்கூட உங்களிடம் பேசிய அதிகாரிகள் உச்சபட்ச திறன் 35 என்றிருப்பார்கள்.]]]

இல்லை.. அதன் ஒரு காப்பி என்னிடம் இருக்கிறதே.. அதனால்தான் சொல்கிறேன்..!

Bruno said...

//உங்களது அவசரத்தனமான, அரைவேக்காடு பதிவிற்குப் பதிலை கொடுத்திருக்கிறேன் டாக்டர்..!//

உங்கள் இடுகையின் என்னென்ன தவறுகள் என்று தெளிவாக கூறினேன்

ஆனால் என் இடுகையில் எந்த தவற்றையும் சுட்டிக்காட்டமல் அதை அரைவேக்காடு என்று கூறுவது நகைப்பை தருகிறது

Bruno said...

//இப்படி பத்தி, பத்தியாகப் பிரித்து கேள்வி பதில் போல் முன்பே தெளிவாக எளிய தமிழில் சொல்லியிருந்தால் நிச்சயம் என்னைப் போன்ற சிறார்களுக்குப் புரிந்திருக்கும்..! //

அறிவிப்பிலேயே தெளிவாக உள்ளது சார்

நீங்கள் தான் தேவையில்லாமல் குழப்பியுள்ளீர்கள்

//தெரியாத ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் அவர் அரைவேக்காடா..? சரி.. பரவாயில்லை. நான் அப்படியே இருந்து கொள்கிறேன். //

தெரியவில்லை என்று சொன்னால் சரி

ஆனால் தேவையில்லாமல் தேர்வு செய்த பின்னர் தர வேண்டிய சான்றிதழ் குறித்து எல்லாம் குழப்பியது நீங்க தான் சாமி

//இணையம் பற்றியே தெரியாத கிராமத்தான்கள் யாரிடம் போய்க் கேட்பார்கள்..!?
//

நிறுத்தி நிதானமாக விதிமுறைகளை ஒரு முறை படித்தால் போதும்

தெரிந்து கொள்ளலாம்

Bruno said...

//50 சதவிகிதம் என்கிற அளவையே நான் குறை கூறியிருக்கிறேன். இது அநீதி.. மருத்துவர்கள் இதனை பரிசீலித்து என்னைப் போன்று வேலை செய்ய முடிந்தவர்களுக்காக அரசிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

இதனைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே..?//

சரவணன்

குறைபாடு அளவு என்பது சில இடங்களை தகுதி குறைவு, சில இடங்களில் சலுகை

நீங்கள் உங்கள் கருத்தை மேலும் விளக்கமாக கூறவும்

//அரசு விதிமுறையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக நீங்கள் என்னிடம் சொல்வதுபோல் உள்ளது உங்களது அரசு சார்பான இந்தக் கட்டுரை..! //

இல்லை

விதிகளை மாற்ற சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு

முதலில் எந்த விதியை மாற்ற வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள்

-

மற்றப்படி

இங்கு அனைத்து அரசு அதிகாரிகளும் விதிகளின் படியே தான் நடந்துள்ளனார்

எனவே நீங்கள் எழுதிய அபாண்டங்களுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை

Bruno said...

//உங்களுடைய கேள்வி 12-ல் இருக்கின்ற பதிலே இன்னமும் குழப்பமாக இருக்கிறது..!//

என்ன குழப்பம்

//உடல் ஊனமுற்றவர்களில் எந்த வகை ஊனமுற்றவர்கள் இநதப் பதவிக்கு தகுதியுடையவர்கள் என்பது அதில் தெளிவாக இல்லை.//

பதில் 15 படிக்கவும்

/கண் பார்வையற்றவர்கள், காது கேளாமல் கூடவே வாய் பேச முடியாதவர்கள் இந்தப் பதவி்க்குத் தகுதியானவர்கள் அல்ல என்கிற வார்த்தை இதில் எங்கே இருக்கிறது..?
//

பதில் 19 பார்க்கவும்

உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும். ( Standard –III or Better)
4.உ
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின் அளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும்

//கை, கால் ஊனமானவர்களில் 40-50 சதவிகிதம் உள்ளவர்கள் தகுதியானவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
//

இல்லை

கை, கால் ஊனமானவர்களில் 40-50 சதவிகிதம் உள்ளவர்கள் இடப்பங்கீட்டிற்கு தகுதியானவ்ர்க்ள்

50 முதல் 100 சதம் திறன் உடையவர்க்ள் தகுதி உடையவர்களே (பொது பிரிவில்)

ஏற்னகவே விளக்கியுள்ளேன்

Bruno said...

//கை, கால் ஊனமானவர்களில் 40-50 சதவிகிதம் உள்ளவர்கள் தகுதியானவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
//

இல்லை

கை, கால் ஊனமானவர்களில் 40-50 சதவிகிதம் உள்ளவர்கள் இடப்பங்கீட்டிற்கு தகுதியானவ்ர்க்ள்

50 முதல் 100 சதம் திறன் உடையவர்க்ள் தகுதி உடையவர்களே (பொது பிரிவில்)

ஏற்னகவே விளக்கியுள்ளேன்

--

/மற்ற வகை ஊனமானவர்கள் முழுக்க, முழுக்க தகுதியில்லாதவர்களா..? இதனை வெளிப்படையாக சொல்ல வேண்டாமா..?//

வெளிப்படையாக அறிவிப்பில் 4.ஈ ல் உள்ளது

பதில் 19 பார்க்கவும்

--

// நான் சொல்வது இது போன்று ஊனமுற்றவர்களை ஒதுக்காமல் அவர்களுக்கும் இந்தப் பணியினை ஒதுக்க வேண்டும் என்றுதான்..!//

ஐயா அறிவிலும் நேர்மையிலும் சிறந்தவரே

அனைத்து வேலைகளையும் அனைவருக்கும் ஒதுக்க முடியாது என்பது கூட புரியவில்லையா

பார்வை குறைபாடு உள்ளவர் ஒருவர் உங்கள் குழந்தையின் பள்ளி வாகனத்தின் ஓட்டுனராக நியமித்தால் ஏற்றுக்கொள்வீரா

// நீங்கள் அரசின் விதிமுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள்.//

தவறு என்றால் திருத்த வேண்டும்

ஆனால் நீங்கள் ஒழுங்காக படிக்காமல் அரசின் சரியான விதிமுறையை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது

//நல்லாயிருங்க. நீங்களும் உங்களது அரசுகளும், அதன் விதிமுறைகளும்..!//

ஆசிர்வாதத்திற்கு நன்றி அண்ணா

Bruno said...

/ உங்களுடைய 15-வது கேள்வி-பதிலில் குறிப்பிட்டுள்ளது போல், விதிமுறைகளில் ஏதேனும் குறிப்புகள் எங்கேயாவது உள்ளதா..? //
The 3% reservation of vacancies will be filled with Differently Abled (Orthopaedic) persons of 40% to 50% disability, who have no difficulty in writing and have only minimal difficulty in mobility.

தெளிவாகத்தானே உள்ளது

//அப்படியிருந்தால் அதனை குறிப்பிடுங்களேன் டாக்டர். தேடிப் பார்த்தேன் எனக்குத் தெரியவில்லை.//

மறுபடியும் வாசித்து பாருங்கள்

//தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவரையும் உங்களைப் போலவே அறிவாளிகளாக நினைத்துக் கொண்டால் எப்படி..?//

ஐயா பெரியவரே

இந்த அறிவிப்பில் உள்ளது கை கால் ஊனம் மற்றும் தான்

நீங்கள் ஏன் உங்கள் காது கேட்கும் திறன் சான்றிதழை அனுப்பினீர்கள் என்று கூறுங்கள்

//அப்படியிருந்தால் என்னையும் சேர்த்து நாங்கள் அத்தனை பேரும் உங்களைப் போலவே டாக்டர்களாக ஆகியிருப்போமே..? எங்களுக்கு எதற்கு வி.ஏ.ஓ. போஸ்ட்டு..?//

ஐயா பெரியவரே

இந்த அறிவிப்பில் உள்ளது கை கால் ஊனம் மற்றும் தான்

நீங்கள் ஏன் உங்கள் காது கேட்கும் திறன் சான்றிதழை அனுப்பினீர்கள் என்று கூறுங்கள்

Bruno said...

//
தேர்வாணையப் பணிகளில் வேலை வாய்ப்புக்காக உடல் ஊனமுற்றவர்களுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், விதிமுறைகளேயே நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். அது தவறு என்கிறேன். இதுதான் எனது வாதம்..!

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhXNRh4o
//



பார்வை குறைபாடு உள்ள ஒருவர் உங்கள் குழந்தையின் பள்ளி வாகன ஓட்டுனராக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீரா

Bruno said...

// மேலும் அரசின் விதிமுறைகள் பொருத்தமான வகையில் மக்கள் முன் வைக்கப்படவில்லை. வெப்ஸைட்டில் மட்டும் வைத்துவிட்டால் போதுமா..? பிரிண்ட் காப்பியில் தெளிவாகக் குறிப்பிட வேண்டாமா..? இது யார் குற்றம்?/

தவறான குற்றச்சாட்டு

அறிவிப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது

அதை ஒழுங்காக வாசிக்காதது உங்கள் குற்றம்

Bruno said...

//இதற்கான வாய்ப்பே இல்லை. குறைபாடு கூடத்தான் செய்யும்.. இது இயல்பானது..!

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhXm6esH
//

வழி உள்ளது

disability - impairment - handicap மூன்றும் வெவ்வேறு பதங்கள்

நீங்களாக எதையும் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் முடிவிற்கு வரவேண்டாம்

Bruno said...

//உ.த அண்ணன் பதிவு அரைவேக்கடா, அல்லது இது அரைவேக்காடா என்று எனக்கு சந்தேகம்.//

நான் தெளிவாக ஆதரங்களுடன் விளக்கியுள்ளேன்

உ.த இடுகை தன் அரை வேக்காடு

//மாற்று திறநாளி என்ற terminology பற்றிய டவுட் எல்லாம் இங்கு வந்தது?//

காரணம் ஊனமுற்றோர் என்ற சொல் தான் பரவலாக உள்ளது

மாற்றுத்திறனாளி என்பது சமீப காலங்களில் பயன்படுத்தப்படுவது

அதனால் தான் விளக்கினேன்

// அதற்கான ஹிஸ்டரி, ஜாகரபி எல்லாம் இங்கு எதற்கு?//

சந்தேகங்களை தெளிவுபடுத்த

//புல்லெட் போட்டு 10 பாயிண்ட் போட்டு விட்டால் உங்கள் வாதம் சரி ஆகிவிடுமா?//

என் வாதம் சரி என்பதற்கு ஆதாரங்களை அடுக்கியுள்ளேன்

எது தவறு என்று கூறி நீங்கள் உங்கள் தரப்பு விபரங்களை தந்தால், திருந்தி கொள்ள, திருத்திக்கொள்ள தயார்

Bruno said...

// உ.த தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று உணர்ந்தே தானே இருக்கிறார்?//

இந்த வேலைக்கு 50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை
அதை அவர் உணர்ந்திருந்தால் இந்த பதிவே தேவையில்லை

// அதில் அவருக்கு குழப்பம் இல்லையே..//
தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேவைப்படும் சான்றிதழை இப்பொழுதே கேட்டது குழப்பம் இல்லையா


//அதென்னய்யா, செவித்திறன் குறைவு 40 - 50 குள்ளார இருந்தா தான் எடுப்போம்னு ஒரு ரூல்?//
முற்றிலும் தவறு
கை கால் முடம் 40 - 50 என்று தான் உள்ளது
செவித்திறன் என்று இல்லை
திரும்ப படியுங்கள்

// அபத்தமா இல்ல? 39 இருந்தா ஓவர் qualified ? 52 இருந்தா disqualified -ஆ?//
தவறான் புரிதலின் காரணமாக எழுதப்பட்ட அபத்த வரிகள்

செவித்திறன் குறைபாடு வேறு
பார்வைத்திறன் குறைபாடு வேறு
கை, கால் இயக்கத்தில் குறைபாடு என்பது வேறு

இது கூடவா உங்களுக்கு புரியவில்லை

மீண்டும் முதலிலிருந்து வாசிக்கவும்

//நீங்க ரெபரன்ஸ்க்கு போட்ட அந்த இங்கிலீஷ் டெக்ஸ்ட் படிச்சுப்பாருங்க..கன்ப்யுசிங்ஆ இல்ல?//
இல்லை
தெளிவாகவே உள்ளது

//இந்த ரூலை summarize செய்ய முயற்சிக்கிறேன்..
அதாவது "காது கேட்காட்டி மாற்று திறநாளி கேடகரில வின்னப்பிங்க. //
இல்லை
அப்படி அங்கு எதுவுமே இல்லை
மீண்டும் படித்து பாருங்கள்
கை, கால் இயக்கத்தில் குறைபாடு என்று மட்டுமே உள்ளது

//உங்களுக்கு நல்லாவே காது கேட்டா வேலை இல்ல.//
அப்படி எங்கும் கூறப்படவில்லை
மீண்டும் நிதானமாக வாசிக்கவும்

// கொஞ்சம் கம்மியா கேட்டாலும் வேலை இல்ல. கேட்டும் கேட்காமையும் 40 - 50 குள்ளார இருக்கணும். அதுக்கு ஒரு செர்டிபிகேட் குடுங்க.//
அப்படி எங்கும் கூறப்படவில்லை
மீண்டும் நிதானமாக வாசிக்கவும்


// ஆங், இப்போ தேர்வுக்கு குடுக்கிற செர்டிபிகேட் பத்தாது.//
கை கால் குறைபாடு என்றால் மட்டும் தான் இது பொருந்தும்

// அப்புறம் வேலைக்கு சேரறதுக்கு இன்னொரு செர்டிபிகேட் வேற குடுக்கோணும்" என்கிற அபத்த சிகப்புநாடா ரூல்சுக்கு வக்காலத்து வேற வாங்கறீங்க டாக்டர்..//

இது அபத்தம் இல்லை என்று 20ஆம் பதிலில் தெளிவாக விளக்கியுள்ளேன்
படித்து பார்க்கவும்

//ஒரு மனுசனை அவர் ப்ளாகுல கூட பொலம்ப விட மாட்டேன்கறீங்க..//
புலம்ப அவருக்கு முழு உரிமை உள்ளது
ஆனால் அரசு மேல் அபாண்டங்களை சுமத்த உரிமை இல்லை

//அரசுக்கு சொம்ப தூக்கிட்டு வந்துர்றீங்க..//
நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்

//நோட்: இந்த கம்மண்டை வைத்திருப்பதும், அல்லது ஜாக்கி போல் நைசாக பப்ளிஷ் செய்யாமல் விடுவதும் உங்கள் இஷ்டம்.//
என் தரப்பில் நியாயம் இருப்பதால் கேள்விகளுக்கு தெளிவான பதிலை அளிக்க முடியும் என்பதால் எனக்கு கவலையில்லை

Bruno said...

//Dear Saravanan, Even the People with Eye Powers with more than -4 are not allowed into the Govt Posts. I have suffered because of that....

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhYIYoWx
//

எந்த அரசு விதிமுறை என்று விளக்க முடியுமா

கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்பது தகுதி குறைவு அல்ல

Power என்பது வேறு
vision என்பது வேறு

நீங்கள் மேலதிக விபரங்களை தாருங்கள்

Bruno said...

//I donot Understand why govt is having such redundant rules such as these. These can be corrected by wearing some Hearing Aid or Specs.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhYXN7QE
//

ஒவ்வொரு வேலைக்கும் தகுதி மாறுபடும்

உதாரணமாக

கண்பார்வை குறைபாடு உள்ள ஒருவர் ஓட்டுனர் வேலைக்கு தகுதியில்லை

ஆனால் தொலைபேசி இயக்குனர் (telephone operator) வேலைக்கு தகுதியாக இருக்கலாம்

இது உதாரணம் மட்டுமே

ஒரு கேள்வி :

பார்வை குறைபாடு உள்ள ஒருவர் தொலைபேசி இயக்குனராக இருந்தால் பிரச்சனையில்லை

ஆனால்

பார்வை குறைபாடு உள்ள ஒருவர் உங்கள் குழந்தையின் பள்ளி வாகன ஓட்டுனராக நியமிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீரா

Bruno said...

//அரசுப்பணியில் பல்வேறு பணிக்கு பல்வேறுவிதமான திறன் அவசியமாகிறது. சில பணிகளில் சில திறன்கள் கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இருப்பினும் அரசு மாற்றுத்திறனாளிகளை கூடியமட்டும் சமத்திறன் உடையோராகத்தான் பார்க்கிறது.

வி.ஏ.ஓ தேர்வுக்கு செவித்திறனில் ஒரு குறிப்பிட்டளவு தேவை என்பது மிகச்சரியே.

அப்பதவி ஒரு அறையில் அமர்ந்து செய்வதல்ல. பலருடனும் உரையாடல் அவசியம். பல மேலதிகாரிகள், அரசியலார், மேனாட்டவர் வருகை தரும்போது அவர் வந்து செல்லும் வரை அன்னார்களிடமிருந்து வழிகாட்டல், மற்றும் பல தகவல் பரிமாற்றம் அவசியம்.

இது கலெக்டர் பதவிக்கும் வேண்டும். எனவே அங்கும் செவித்திறனில் ஒரு குறிப்பிட்ட அளவு வைக்கப்பட்டிருக்கிறது.

அப்பதவி செய்துதான் மக்கட்சேவை செய்ய வேண்டும் எனவில்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆய்தம்.

அருணா ராய் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அப்பதவியில் இருந்து விலகி இராஜஸ்தான் கிராமங்களில் பெண்கள் முன்னேற்ற்த்துக்கு என்.ஜி.ஓ வைத்துப் பாடுபடுகிறார்.
ஐ.ஏ.எஸ் எனக்குத் தடைக்கல். எனவே விலகினேன் என்றார். இவர் சேவையைப்பாராட்டி மேக்ஸெசே அவாருட் வழங்கப்பட்டது.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhZGvH5K
//

நன்றி சார் !!

Bruno said...

//இவர்களுடைய எல்லா விதிமுறைகளும் காலத்திற்கேற்றாற்போல் மாற்றப்பட வேண்டியது. //

இது உண்மை சார்

அதனால் தான் மாற்றுத்திறன் படைத்தோருக்கு 3 சதம் இடப்பங்கீடு அளித்துள்ளனர்

ஆனால்

நீங்கள் இங்கு கேட்பது விதிமுறை மாற்றம் அல்ல

நீங்கள் அறிவிப்பை ஒழுங்காக படிக்காமல் சரியாக வேலை செய்தவர்களை எல்லாம் குறை சொல்வது

Bruno said...

//இல்லை என்பதைத்தான் இந்த விதிமுறைகள் காட்டுகின்றன..!//

கடுமையாக மறுக்கிறேன்

இந்த அறிவிப்பிலேயே 3 சதம் இடப்பங்கீடு வழங்கப்பட்டுள்ளது

அதாவது கிட்டத்தட்ட 100 இடங்கள் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து பொய்யை மட்டும் கூறாதீர்கள்

Bruno said...

//இதற்கு மிஷின் இருந்தாலே போதுமானது என்பது எனது எண்ணம்!//

ஐயா பெரியவரே

இதைத்தான்

disability
impairment
handicap

என்று மூன்றும் வெவ்வேறு என்று சொன்னேனே

--

கவனிக்கவில்லையா

--

நீங்கள் செய்த தவறு - அவர்கள் கேட்காமல் உங்கள் காது திறன் சான்றிதழை அனுப்பியது

இன்னுமா உங்களுக்கு இது புரியவில்லை

Bruno said...

//சரவணன்!
தெளிவில்லாத விதிமுறைகளாலும், முறை சாராத அறிவிப்புகளாலும் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் ஏற்படுகிறது.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhazXETK
//

மறுக்கிறேன் ரிஷி சார்

விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன
அறிவிப்பிலும் தெளிவாகவே உள்ளது

சரவணன் அதை முறையாக படிக்கவில்லை

இது முழுக்க முழுக்க அவர் தவறு

--

அறிவிப்பில் கேட்கப்படாத காது திறன் சான்றிதழை அவர் ஏன் அனுப்பினார்

Bruno said...

//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மேலும் உங்க மருத்துவ சான்றிதழில் 48 என இருந்தால் கூட உங்களிடம் பேசிய அதிகாரிகள் உச்ச பட்ச திறன் 35 என்றிருப்பார்கள்.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EhbSv2SM
//

தவறான புரிதல் சார்

விதிமுறைகள் அனைத்தும் தெளிவாக உள்ளது

அப்படி எல்லாம் சொல்ல முடியாது

ஒரு முறை எனது இடுகையை படித்து பாருங்கள்

--

கை கால் திறன் குறைவு குறித்து மட்டுமே அறிவிப்பு உள்ள தேர்வில், உண்மைத்தமிழர் காது திறன் குறைவு சான்றிதழை அனுப்பியது முழுக்க அவர் தவறு

இதில் அவர் தேர்வாணையத்தை குறை கூறுவது வடிகட்டிய அயோக்கியத்தனம்

உண்மைத்தமிழன் said...

மருத்துவர் புருனோ

உங்களுடைய அறிவாளித்தனமான பின்னூட்டங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்..

நீங்கள் எனக்கு நல்ல நண்பராக இருந்திருந்தால் நான் எந்த மாதிரியான வருத்தத்தில் இதனைச் சொல்லியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்..!

ஆனால், நீங்களோ அடிமைகளாக வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவாளராக பேசுபவராக இருக்கிறீர்கள்.

உங்களுக்கு எனது வருத்தமும், கவலையும் நிச்சயம் புரியாது. இத்தோடு இதனை நிறுத்திக் கொள்ளுங்கள்..!

போதும் உங்களது வியாக்கியானம்..!

Bruno said...

//மருத்துவர் புருனோ

உங்களுடைய அறிவாளித்தனமான பின்னூட்டங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்..//

ஐயா பெரியவரே

இந்த விஷயத்தில் தவறு செய்தது நீங்கள் மட்டுமே

கை கால் திறன் குறைவு குறித்து மட்டுமே அறிவிப்பு உள்ள தேர்வில், காது திறன் குறைவு சான்றிதழை அனுப்பியது முழுக்க உங்களின் தவறு

இதில் தேர்வாணையத்தின் தவறு எதுவுமே இல்லை

விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன
அறிவிப்பிலும் தெளிவாகவே தந்துள்ளனர்

அதே போல் மருத்துவமனையில் தேவைப்படும் சான்றிதழை தரவில்லை என்று பொய் கூறியது அயோக்கியத்தனம்


அப்படி இருக்க நான் அதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுவதை உங்களால் தாங்க முடியவில்லையா

என் வாதம் சரி என்பதற்கு ஆதாரங்களை அடுக்கியுள்ளேன்

எது தவறு என்று கூறி நீங்கள் உங்கள் தரப்பு விபரங்களை தந்தால், திருந்தி கொள்ள, திருத்திக்கொள்ள தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன்


//நீங்கள் எனக்கு நல்ல நண்பராக இருந்திருந்தால் நான் எந்த மாதிரியான வருத்தத்தில் இதனைச் சொல்லியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்..!//

நீங்கள் விண்ணப்பிக்கும் போதே இது குறித்த விதிமுறைகள் குறித்து என்னிடம் கேட்டிருந்தால் விளக்கியிருந்திருப்பேன்

அப்படி இல்லாமல்

தெளிவாக உள்ள அந்த அறிவிப்பை நீங்களாக தவறுதலாக புரிந்து கொண்டு

கை கால் திறன் குறைவு குறித்து மட்டுமே அறிவிப்பு உள்ள ஒரு தேர்விற்கு காது திறன் குறைவு சான்றிதழை அனுப்பியுள்ளீர்கள்

இப்பொழுதாவது தவற்றை உணர்ந்து கொண்டிருக்கலாம்

ஆனால் அப்படி செய்யாமல் - விதி முறை தவறு / அறிவிப்பு தெளிவாக இல்லை / மருத்துவமனையில் தேவைப்படும் சான்றிதழை தரவில்லை - போன்ற பொய்களை கூறும் நோக்கம் என்ன


//ஆனால், நீங்களோ அடிமைகளாக வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவாளராக பேசுபவராக இருக்கிறீர்கள்.//

நான் உண்மையின் பக்கம் இருந்து பேசுகிறேன்

காரணம்

உங்களது இந்த இடுகையை படித்து கொண்டு பலரும் எமாந்து போய் வருங்காலங்கள் விண்ணப்பிக்காமல் இருந்து விடக்கூடாது என்ற காரணம் தான்

//உங்களுக்கு எனது வருத்தமும், கவலையும் நிச்சயம் புரியாது. இத்தோடு இதனை நிறுத்திக் கொள்ளுங்கள்..!//

முழுக்க முழுக்க சான்றிதழை மாற்றி அனுப்பிய உங்கள் தவற்றை மறைக்க நீங்கள் பொய்களாக சொல்லி அடுத்தவர் மீது குற்றம் சொல்வதை நிறுத்துங்கள்

//போதும் உங்களது வியாக்கியானம்..! //
வழிமொழிகிறேன்

Prabhu said...

போன மாசம் phoneல பேசும் போது ஒரு 1/4 மணி நேரம் பேசிருப்பேன். சத்தியமா கொஞ்சம் கூட தெரியலை உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்குனு.

கஷ்டமா இருக்குன்னே.

விடுண்ணே, நடக்கிறதெல்லாம், நடந்தெல்லம், நல்லதுக்குதான்னு எடுத்துப்போம்.

டெல்லி பிரபு.

குடுகுடுப்பை said...

கை கால் திறன் குறைவு குறித்து மட்டுமே அறிவிப்பு உள்ள தேர்வில், உண்மைத்தமிழர் காது திறன் குறைவு சான்றிதழை அனுப்பியது முழுக்க அவர் தவறு

//
தேவையில்லாத ஒரு சான்றிதழை அனுப்பியதால், காது கேளாதோரை போட்டியில் இருந்து நீக்கலாமா?

Ganpat said...

Dear Saravanan,

For your honesty,boldness and compassion you deserve a much higher post than VAO

And YOU SHALL GET IT

GOD BLESS

குடுகுடுப்பை said...

திறன் குறைவு சான்றிதழை அனுப்பியது முழுக்க அவர் தவறு

இதில் அவர் தேர்வாணையத்தை குறை கூறுவது வடிகட்டிய அயோக்கியத்தனம்

//
சான்றிதழ் அனுப்பாவிட்டால், காது கேளாதோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், தவறாக தேவையில்லாத ஒன்றை அனுப்பித்தால் நிராகரிப்பார்கள். இதில் தேர்வானையத்தின் மேல் தவறே இல்லையா? என்ன லாஜிக் இது.

Bruno said...

//தேவையில்லாத ஒரு சான்றிதழை அனுப்பியதால், காது கேளாதோரை போட்டியில் இருந்து நீக்கலாமா? //

அந்த தேர்வு விதிமுறைகளின் படி காது கேட்கும் திறன் இல்லை என்றால் கண்டிப்பாக நீக்கி விடுவார்கள்

இதில் என்ன சந்தேகம் ??

குடுகுடுப்பை said...

காது திறன் குறைந்தோர் பற்றி எதுவும் குறிப்பிடாத ஒரு தேர்வில், அந்த சர்டிபிகேட்டை உண்மைத்தமிழன் போன்ற பிழைக்கத்தெரியாதவர்கள் அனுப்பினால், அதனை காரணமாக வைத்து நிராகரிக்கும் தேர்வானையம் செய்தது எப்படி சரி விளக்கம் கூறுங்கள் டாக்டர் புருனோ சார்.

குடுகுடுப்பை said...

அந்த தேர்வு விதிமுறைகளின் படி காது கேட்கும் திறன் இல்லை என்றால் கண்டிப்பாக நீக்கி விடுவார்கள்//
அப்போது சான்றிதழை அனுப்பியது எப்படி தவறு. எனக்கு சரியாக புரியவில்லை.

Bruno said...

//சான்றிதழ் அனுப்பாவிட்டால், காது கேளாதோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், தவறாக தேவையில்லாத ஒன்றை அனுப்பித்தால் நிராகரிப்பார்கள். இதில் தேர்வானையத்தின் மேல் தவறே இல்லையா? என்ன லாஜிக் இது. //

இல்லை

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முழு பரிசோதனை நட்க்கும்

அதில் with hearing aid / without hearing aid என்று பல விஷயங்கள் உள்ளன

இவருக்கு 56 சதம் குறைபாடு என்பதால் with hearing aid impairment 50 சதத்திற்கு குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது

ஆனால் அந்த பரிசோதனைக்கு செல்லும் வாய்ப்பை இவரே வலுக்கட்டாயமாக கெடுத்துக்கொண்டார்

Bruno said...

//காது திறன் குறைந்தோர் பற்றி எதுவும் குறிப்பிடாத ஒரு தேர்வில்,//

இந்த கருத்தில் தவறு உள்ளது
என் இடுகையை வாசித்தீர்களா

--

இந்த வேலைக்கு குறிப்பிட்ட காது கேட்கும் திறன் தேவை, குறிப்பிட்ட பார்வைத்திறன் தேவை (தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும்.), குறிப்பிட்ட அளவு கை கால் திறன் தேவை (40 சதம்)

ஆனால்

காது திறன் குறைவாக உள்ளவர்களுக்கு உள்ள இடப்பங்கீடு இங்கு கிடையாது

கண் பார்வை குறைவாக
உள்ளவர்களுக்கு உள்ள இடப்பங்கீடு இங்கு கிடையாது

கை கால் திறன் குறைவாக
உள்ளவர்களுக்கு உள்ள இடப்பங்கீடு இங்கு உள்ளது. அதாவது 50 சதம் குறைபாடு உள்ளவர்களுக்கு இடப்பங்கீடு உண்டு


// அந்த சர்டிபிகேட்டை உண்மைத்தமிழன் போன்ற பிழைக்கத்தெரியாதவர்கள் அனுப்பினால், அதனை காரணமாக வைத்து நிராகரிக்கும் தேர்வானையம் செய்தது எப்படி சரி விளக்கம் கூறுங்கள் டாக்டர் புருனோ சார். //

எனவே உண்மைத்தமிழன் தானாகவே எனக்கு நீங்கள் கேட்ட தகுதி இல்லை என்று கூறினால் அவர்கள் நிராகரிக்காமல் என்ன செய்வார்களாம்

குடுகுடுப்பை said...

ஆனால் அந்த பரிசோதனைக்கு செல்லும் வாய்ப்பை இவரே வலுக்கட்டாயமாக கெடுத்துக்கொண்டார்
//
அப்படி ஒரு விதி இருப்பின், எழுதவிட்டு பின்னரே இவரை பரிசோதித்திருக்கவேண்டும்.தேவையில்ல்லாத ஒரு சான்றிதழை வைத்து எழுதவிடாதது தவறில்லையா?

Bruno said...

முழு உடல் பரிசோதனை என்பது

பார்வைத்திறன்
காது கேட்கும் திறன்
கை கால் திறன் மட்டுமல்ல

--

இதய நோய்கள்

ஆஸ்துமா

குடலிறக்கம்

மூலம்

போன்ற பல விஷயங்கள் உள்ளன

--

Bruno said...

//அப்படி ஒரு விதி இருப்பின், எழுதவிட்டு பின்னரே இவரை பரிசோதித்திருக்கவேண்டும்.தேவையில்ல்லாத ஒரு சான்றிதழை வைத்து எழுதவிடாதது தவறில்லையா? //

இவரே ”நான் தகுதி இல்லை” என்று அனுப்பிய பின்னர் அவர்களால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது

Bruno said...

குடுகுடுப்பை

ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்

ஊனம் என்பது வேலைக்கு தகுதி குறைவு என்பதால் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு வேறு வேலையில் இடப்பங்கீடு அளிக்கப்படுகிறது

உதாரணமாக

கண் பார்வை குறைபாடு உள்ள ஒருவர் ஓட்டுனராக வேலைக்கு சேர முடியாது

ஆனால்

தொலைபேசி இயக்குபவராக இருக்கலாம்

-- இது ஒரு உதாரணம் மட்டும் தான்

உண்மைத்தமிழன் said...

குடுகுடுப்பை ஸார்..

விட்ருங்க.. அண்ணன் மாதிரியான அறிவின் சிகரங்களிடம் பேசி பயனில்லை. அவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உடன்பிறப்பாகவும் மாறி பேசிக் கொண்டிருக்கிறார். திருத்த முடியாது..!

நமக்குத்தான் நேரம் வேஸ்ட்டு..!

Bruno said...

இதில் ஊனம் / திறன் குறித்த சான்றிதழ்கள் இருவகைப்படும்

--

ஒன்று ஊனம் உள்ளது என்று கூறும் சான்றிதழ்கள் disability certificates

இவற்றின் நோக்கம் - அந்த ஊனத்தினால் அந்த நபர் சில வேலைகளில் சேர முடியாமல் இருப்பதால், அவரது சமூக மற்றும் பொருளாதார நிலை பாதிப்படைவதால், அவருக்கு உதவும் நோக்கில் - தொடர்வண்டியில் கட்டண சலுகை, பேரூந்து தொடர் பயண சீட்டு, கடன், சுய தொழில் உதவி, இடப்பங்கீடு - போன்றவைகளுக்காக அளிக்கப்படும் சான்றிதழ்

இங்கு ”ஊனம்” பிரதானமாக பார்க்கப்படும்.

--

இரண்டாவது உடற்தகுதி சான்றிதழ்கள் - fitness certificates

பணியில் சேருபவர் இந்த பணி செய்ய தகுதி உடையவரா என்று பார்க்கும் சான்றிதழ்கள்

இதில் ஊனம் பிரதானம் அல்ல - தகுதி பிரதானம்

--

இரண்டும் வேறு நோக்கங்களுக்காக அளிக்கப்படுபவை

--

இங்கு உண்மைத்தமிழன் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டார் என்பதே நிஜம்

Bruno said...

//குடுகுடுப்பை ஸார்..
விட்ருங்க.. அண்ணன் மாதிரியான அறிவின் சிகரங்களிடம் பேசி பயனில்லை.//

பேசுவதால் தானே யார் தவறு செய்தது என்று தெரிய வந்துள்ளது

// அவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உடன்பிறப்பாகவும் மாறி பேசிக் கொண்டிருக்கிறார். திருத்த முடியாது..!

நமக்குத்தான் நேரம் வேஸ்ட்டு..! //

நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்
அதை தவறான சான்றிதழை அனுப்பி விட்டு அடுத்தவர் மேல் பழி போடும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்

ராஜ நடராஜன் said...

மிக மிக தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!

உங்களை யார் தகுதியில்லைன்னு சொன்னது?நீங்களா சொன்னால் தவிர அல்லது உங்க ஊதுகுழல் எட்டிப்பார்க்காத வரைக்கும் முகத்துக்கு நேரா பேசினா யாருக்குமே தெரியாதே.

கேஸ் போடறதுன்னா சொல்லுங்க!நேரடி சாட்சிக்கு நான் வாரேன்.

ராஜ நடராஜன் said...

இந்த சோகத்தை விடுங்க!உண்மைத்தமிழன் பதிவுலக ஞாநியே பதிவு போட்டேன் போன மாசம்.அதையாவது படிச்சீங்களா இல்லையா?

Bruno said...

உடற் தகுதி விபரங்கள் : சுட்டி 1
மேலும் சில விபரங்கள் : சுட்டி 2

Rafeek said...

புலம்பல் புருனோ..
உ.த..வின் ஆதங்கதிற்கு அனுதாப பட்டு விட்டு விளக்கி இருந்தாலாவது உங்க பதிவின் நியாத்தை உணர்ந்திருப்போம்.ஆனால் ஒரு மனிதன் சற்றே.. தன் ஆதங்கதினால் சறுக்கியதற்கு.. உங்களின் “அரசு மீது ஆதாரம் எதுவும் இல்லாமல் அவதூறு கூறுவதை தொடர்ந்து செய்து வரும் பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள்," என்ற் வரிகளே போதும்..அவரின் மேல் எத்துனை கோபம் உங்களுக்கு என்று.ஒரு காது கேளாதவனின் .. நேர்மையாக பணி செய்ய விருப்ப பட்டு உழைத்து வேலை கிடைக்காதவனின் வலியை உணர முடியாத..ரூல்ஸ் ராமணூஜம்..தான் நீர். உங்க விளக்கததை ஒரு கல்வெட்டில் செதுக்கி.. தஞ்சாவூர் கோவில் படிக்கட்டுல வைச்சுட்டு பக்கதுலயே உட்காருங்க சாமி.

Bruno said...

//உ.த..வின் ஆதங்கதிற்கு அனுதாப பட்டு விட்டு விளக்கி இருந்தாலாவது உங்க பதிவின் நியாத்தை உணர்ந்திருப்போம்.//

அவரும் தன் உடல் குறையால் வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் கூறியிருந்தால் நானும் அனுதாப பட்டிருப்பேன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருப்பேன்

ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பல நாட்கள் கழித்து எழுதிய இந்த இடுகை முழுவதும் தேவையே இல்லாத கற்பனை அவதூறுகள்

1. அறிவிப்பு சரியில்லை
2. விதிமுறை தெளிவில்லை
3. மருத்துவமனையில் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள்
4. மக்கள் நல்வாழ்வுத் துறையும், கல்வித் துறையும், வேலை வாய்ப்புத் துறையும் ஒரே அரசுகளின் கீழ் இருப்பதுதான். ஆனால் அவர்களுக்குள்ளேயே இத்தனை குழப்பங்கள்.

ஏன் இவ்வளவு அவதூறுகள் என்ற என் கேள்விக்கு கள்ள மௌனத்தை தவிர வேறு பதில் இல்லையே

உண்மை என்ன

1. அறிவிப்பில் முழு விபரமும் உள்ளது

2. விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன

3. திறன் குறைவு சான்றிதழ் மருத்துவமனையில் வழங்கப்பட்டுவிட்டது. உடற்தகுதி சான்றிதழ் வேலைக்கு சேரும் போது தான் தேவை

4. துறைகளுக்குள் இடையில் எந்த குழப்பமும் இல்லை

Bruno said...

//ஆனால் ஒரு மனிதன் சற்றே.. //

”சற்றே” என்பதில் கடுமையாக முரண்படுகிறேன்

அவரது இந்த இடுகை சற்றே வகை அல்ல. ”வெகுவாக” வகை

//தன் ஆதங்கதினால் சறுக்கியதற்கு.. உங்களின் “அரசு மீது ஆதாரம் எதுவும் இல்லாமல் அவதூறு கூறுவதை தொடர்ந்து செய்து வரும் பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள்," என்ற் வரிகளே போதும்..அவரின் மேல் எத்துனை கோபம் உங்களுக்கு என்று.//

அரசு மேல் இவர் அவதூறு எழுதுவது இது முதல் முறை அல்ல

இவரது பிற அபாண்டங்களை கண்டு கொள்ளாத நான் இந்த முறை வரிந்து கட்ட வேண்டிய காரணம் என்ன வென்றால் “காது கேட்பதில் சிறு குறை இருந்தால் கூட அரசு வேலை கிடைக்காத வண்ணம் விதிமுறைகள் தெளிவற்று உள்ளன” என்று பொய் செய்தியை இந்த இடுகை பரப்புகிறது

இதை கண்டு ஒரு நபர் ஏமாந்து போய்
அடுத்து வேறு ஏதாவது வேலைக்கு விண்ணப்பிக்கமல் விட்டு விட்டால் கூட அது அநியாயம் என்பதால் தான் நான் பதில் கூறினேன்

வாசிப்பவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் நான் கூறியதற்கு எல்லாம் ஆதாரம் தந்துள்ளேன்


மேலும் இது தொடர்பான சுட்டிகளையும் அளித்துள்ளேன். உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வாசித்துக்கொள்ளலாம்.

ஆனால் அவரால் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரமாவது தர முடிகிறதா

சரி

இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்

இவ்வளவு பொறுமையாக விளக்கிய பின்னரும் அவர் என்ன செய்தார் என்பதே நீங்களே பார்த்துக்கொள்ளலாம்

//ஒரு காது கேளாதவனின் .. நேர்மையாக பணி செய்ய விருப்ப பட்டு உழைத்து வேலை கிடைக்காதவனின் வலியை உணர முடியாத..//

அவருக்கு காதுதிறன் குறைபாடு என்ற ஒரே காரணத்திற்காக அவரது அவதூறுகளையும் அபாண்டங்களை பொருத்து கொள்ள வேண்டும் என்பதில்லை

அதுவும்

தவறு அவருடையது

ஆனால் அடுத்தவர்கள் மேல் கற்பனை குற்றச்சாட்டை சுமத்துவதை மறுக்க கூடாது என்று நீங்கள் கூறுவதற்கு காரணம் என்ன

//ரூல்ஸ் ராமணூஜம்..தான் நீர். உங்க விளக்கததை ஒரு கல்வெட்டில் செதுக்கி.. தஞ்சாவூர் கோவில் படிக்கட்டுல வைச்சுட்டு பக்கதுலயே உட்காருங்க சாமி.//

எனக்கு உண்மையை சொல்வதில் தயக்கமே கிடையாது

Unknown said...

i accept புருனோ view. Problem is yours. If u not ready to follow govt procedure for applying , how we will expect you be honour. We can qns rules , but when it is in force u need to follow then qns.

Rafeek said...

”இதை கண்டு ஒரு நபர் ஏமாந்து போய்
அடுத்து வேறு ஏதாவது வேலைக்கு விண்ணப்பிக்கமல் விட்டு விட்டால் கூட அது அநியாயம் என்பதால் தான் நான் பதில் கூறினேன்”

"எனக்கு உண்மையை சொல்வதில் தயக்கமே கிடையாது"
அட..அடா.. நிஜமாகவே நீங்க டாக்டர் தானா?

ஒரு போதும் சரவணன் தவறான தகவலை அளித்து யார் வாழ்வையும் கெடுக்க மாட்டார். து அவரின் எண்ணமும் இல்லை..அவரின் பதிவிலேயே விதிகள் எத்துனை முக்கியம் என்பதை வலியுறுத்தாமலும் இல்லை. படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமலும் இல்லை..பிரச்சனை தங்களின் பல நாள் வஞ்சகமான கோபமே. சொல்லபோனால் பேப்பரில் மட்டுமே பலனலித்து .. செல்லரித்து கொண்டிருக்கும் ஒரு அரசின் கோபம்.எளிதில் புரிந்து கொள்ளமுடியாத.. பல விதிகளை.. மாற்ற மனமின்றி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பாதுகாக்க வெண்டும் என்ற அடங்கா அரச கோபம்.

Bruno said...

//அட..அடா.. நிஜமாகவே நீங்க டாக்டர் தானா?//

ஆமாம்
மருத்துவர் தான்

Bruno said...

//ஒரு போதும் சரவணன் தவறான தகவலை அளித்து யார் வாழ்வையும் கெடுக்க மாட்டார். து அவரின் எண்ணமும் இல்லை..//

தவறான கருத்து

சரவணன் அளித்த தவறான தகவல்கள் என்னென்ன மற்றும், அது குறித்த சரியான தகவல்கள் என்ன என்று எனது Wednesday, February 23, 2011 12:47:00 AM மறுமொழியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்

அதை வாசித்து விட்டு சந்தேகம் இருந்தால் கேட்கவும்

குறும்பன் said...

http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf - தமிழ்

http://tnpsc.gov.in/Notifications/248_not_eng_vao2k10.pdf - English

காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள். அப்புறம் என்ன் 40% 50%, 60% (நான் படித்துவரைக்கும் என் புரிதல் அப்படிதான் அறிவிப்புல எங்கயாவது காது கேளாதோர் பற்றி இருக்கா சொல்லுங்க? )



கிராம அலுவலர் பதவிக்கான 3% ஒதுக்கிடு பெறும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் என்போர் 40% முதல் 50% வரை உள்ள கை, கால் இயக்கத்தில் குறை உள்ளவர்கள் மட்டுமே.
வரிசை எண் 3-3.

3.(iii) The 3% reservation for Differently Abled (Orthopaedic) persons shall be applicable for this recruitment as per G.O.(D).No.5, Revenue (Ser.7-1) Department, dated 08.01.2007. The 3% reservation of vacancies will be filled with Differently Abled (Orthopaedic) persons of 40% to 50% disability, who have no difficulty in writing and have only minimal difficulty in mobility.



வரிசை எண் 4-.ஈ- என்பது உடற்தகுதிச்சான்றிதழ் அதில் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் III அல்லது அதற்கு மேற்பட்ட தரம் ஆகும். (எங்க காதுகாளாதவர்? it is not in english pdf)
வரிசை எண் 4-.உ. மாற்றுத்திறனாளி பணியை செய்ய தடையாக இருக்காது என மருத்துவ சான்றிதழ் சமர்பிக்கவேண்டும். (எப்போ??? தேர்வுக்கு முன்னாடியா அல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பா ?? தகவல் இல்லை)
English PDF has it அப்போ தமிழில் அறிவிப்பு படிச்சவன்??

Bruno said...

//. படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமலும் இல்லை.//

இல்லை

இதை மறுக்கிறேன்

இங்குள்ள பல மறுமொழிகளும், மறுமொழி எழுதியவர்கள் பிரச்சனையை தவறுதலா புரிந்து கொண்டனர் என்பதை நிருபிக்கின்றன. உதாரணமாக செவ்வாய், பிப்ரவரி 22, 2011 காலை 10:50:00 நட்ராஜ் எழுதிய மறுமொழியை பாருங்கள்

இன்னமும் திருப்தி இல்லை என்றால் செவ்வாய், பிப்ரவரி 22, 2011 மதியம் 2:17:00
ரிஷி எழுதியதை பாருங்கள்

அல்லது செவ்வாய், பிப்ரவரி 22, 2011 இரவு 8:28:00 கீதப்பிரியன் எழுதியதை பாருங்கள்

எனவே “படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமலும் இல்லை” என்ற உங்கள் வாதம் தவறு

Bruno said...

//பிரச்சனை தங்களின் பல நாள் வஞ்சகமான கோபமே. //

இல்லை

பிரச்சனை உண்மைத்தமிழனின் உண்மைக்கு எந்த சம்மந்தமும் இல்லாத அவதூறு பிரச்சாரமே

//சொல்லபோனால் பேப்பரில் மட்டுமே பலனலித்து ..//

தவறான கருத்து
இந்த விதிகள் அனைத்தும் நடைமுறையில் சிறப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கின்றன

// செல்லரித்து கொண்டிருக்கும் ஒரு அரசின் கோபம்.//

தவறான கருத்து
தன் தவற்றை மூடி மறைத்து விட்டு தவறு செய்யாதவர்கள் மேல் பழியை போடும் ஒரு கபட நாடகத்தின் மீதான கோபம்

//எளிதில் புரிந்து கொள்ளமுடியாத..//

தவறு
எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விதிகள் தான்
வாசித்து பார்த்தாலே போதும்


// பல விதிகளை.. மாற்ற மனமின்றி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பாதுகாக்க வெண்டும் என்ற அடங்கா அரச கோபம்.//

இதில் பெரும்பாண்மையான விதிகள் சமீப காலங்களில் வந்தவையே

ஏன் ஊனமுற்றோர் என்ற பெயர் கூட மாற்றுத்திறனாளி என்று மாற்றப்படவில்லையா

மாற்றுத்திறனாளிகளுக்கு இடப்பங்கீடு வழங்கப்படவில்லையா

உங்கள் கருத்து முற்றிலும் தவறு

Bruno said...

//காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள். அப்புறம் என்ன் 40% 50%, 60% (நான் படித்துவரைக்கும் என் புரிதல் அப்படிதான் அறிவிப்புல எங்கயாவது காது கேளாதோர் பற்றி இருக்கா சொல்லுங்க? )//

இது குறித்து நான் எனது இடுகையில் தெளிவாக விளக்கியுள்ளேன்

வாசித்து பாருங்கள்

காது கேளாதோர் பற்றி இல்லை
காரணம் Tuesday, February 22, 2011 11:18:00 PM மறுமொழியில் உள்ளது

Bruno said...

//(எப்போ??? தேர்வுக்கு முன்னாடியா அல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பா ?? தகவல் இல்லை)//

தவறு
தகவல் உள்ளது


//English PDF has it அப்போ தமிழில் அறிவிப்பு படிச்சவன்?? //

தமிழிலும் தகவல் உள்ளது

ஏற்கனவே விளக்கியுள்ளேன். இருந்தாலும் நீங்கள் கேட்டதால்

அறிவிப்பில் 4.ஈ இது தான்

உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும். ( Standard –III or Better)

--

(எப்போ??? தேர்வுக்கு முன்னாடியா அல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பா ?? தகவல் இல்லை)

தெரிவு செய்யப்படும் என்றால் தேந்தெடுக்கப்பட்ட பின்னர் தானே, தேர்வுக்கு முன்னாடியே எப்படி தேர்தெடுக்க முடியும்

Bruno said...

//English PDF has it அப்போ தமிழில் அறிவிப்பு படிச்சவன்??//

மன்னிக்கவும்

தமிழிலும் தெளிவாகவே உள்ளது
உங்கள் வாதம் தவறு

--

//காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள்.//

இந்த வரி தவறு
எனது மறுமொழிகளில் விளக்கியுள்ளேன்

அனைத்து மறுமொழிகளையும் எனது இடுகையையும் வாசித்து விட்டு சந்தேகம் இருந்தால்கேட்கவும்

மேலும் விளக்கத்தயார்

குடுகுடுப்பை said...

எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று வந்த கடிதத்தில்கூட “Blind / Deaf நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்றுதான் மொட்டையாக போட்டிருக்கிறார்கள். "உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் விதிமுறைக்கு அதிகமாக உள்ளது. இதனால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.." என்றாவது மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டாமா..?

//

Bruno said...

//எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று வந்த கடிதத்தில்கூட “Blind / Deaf நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்றுதான் மொட்டையாக போட்டிருக்கிறார்கள். "உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் விதிமுறைக்கு அதிகமாக உள்ளது. இதனால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.." என்றாவது மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டாமா..?//

இப்படி மொட்டையாக குறிப்பிட்டிருக்க கூடாது. விரிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

காரணம் blind என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு spectrum (அலைக்கற்றை இல்லை - தொடர்நிலை)

PL இல்லை என்றால் தான் அது absolute blindness. அது தவிர economic blidness, social blidness என்று இது ஒரு தொடர்நிலை. எனவே blind என்ற ஒரு சொல் பொருத்தமானதல்ல

உடற் தகுதி விபரங்கள் : சுட்டி 1
மேலும் சில விபரங்கள் : சுட்டி 2

இது குறித்து மேலும் விவாதிப்பதற்கு முன்னர், தேர்வாணயத்திடம் இருந்து வந்த அந்த கடிதத்தை ஒரு முறை வாசித்து பார்ப்பது நல்லது என்பது என் கருத்து

Bruno said...

//"உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் விதிமுறைக்கு அதிகமாக உள்ளது. இதனால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.." என்றாவது மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டாமா..?
//

உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் இந்த பதவிக்கான விதிமுறைக்கு அதிகமாக

குறும்பன் said...

1. PDF கோப்பில் காதுகேளாதோர் எந்த அளவு குறைபாட்டுடன் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று இல்லை. கை, கால் குறைபாடுள்ளவர்கள் (Orthopaedically Handicapped) 40-50% மற்றும் கண் பார்வை (Standard –III or Better) எந்த அளவு தேவை என்று தான் உள்ளது.

2. PDF கோப்பில் இல்லை, அது தான் விண்ணப்பதாரருக்கு தகவல் தருவது. அதன் படி கி.நி.அ க்கு காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் என்பதற்குள் வரமாட்டார்கள்.

3. 4 ஈ. உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும். ( Standard –III or Better)

4. 4 உ. என்பதில் 'தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்' என்று இல்லாததே விண்ணப்பதாரர் மாற்றி கருத இடம் கொடுக்கிறது. விண்ணப்பத்தில் தெளிவாக 4உ விலும் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் என்று இருந்திருந்தால் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படாது.

5. ஆங்கில pdf கோப்பில் 4d, 4e தெளிவாக உள்ளது தமிழில் இல்லை.

6. விண்ணப்பத்தில் தகவல் இவ்வாறு உள்ள போது விண்ணப்பதாரர் அதை தான் எடுத்துக்கொள்வார்.

7. செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மாற்று திறனாளிகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஆனால் அது விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

8. விண்ணப்பம் என்று நான் கூறுவது pdf கோப்பை.

Bruno said...

//1. PDF கோப்பில் காதுகேளாதோர் எந்த அளவு குறைபாட்டுடன் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று இல்லை. கை, கால் குறைபாடுள்ளவர்கள் (Orthopaedically Handicapped) 40-50% மற்றும் கண் பார்வை (Standard –III or Better) எந்த அளவு தேவை என்று தான் உள்ளது.//

சரி

//2. PDF கோப்பில் இல்லை, அது தான் விண்ணப்பதாரருக்கு தகவல் தருவது. அதன் படி கி.நி.அ க்கு காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் என்பதற்குள் வரமாட்டார்கள்.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EkulrtyP//

கி.நி.அ என்றால் என்ன

Bruno said...

//3. 4 ஈ. உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும். ( Standard –III or Better)

4. 4 உ. என்பதில் 'தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்' என்று இல்லாததே விண்ணப்பதாரர் மாற்றி கருத இடம் கொடுக்கிறது. விண்ணப்பத்தில் தெளிவாக 4உ விலும் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் என்று இருந்திருந்தால் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படாது.

Read more: http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_22.html#ixzz1EkuzYAwr//

இல்லை

வாய்ப்பு இல்லை

அறிவிப்பில் தகவல்கள் சரியாகவே உள்ளன

Bruno said...

//. ஆங்கில pdf கோப்பில் 4d, 4e தெளிவாக உள்ளது தமிழில் இல்லை. //

தமிழிலும் தெளிவாகவே உள்ளது

4.உ என்பது 4.ஈ க்கு அடுத்து வருவது தானே

பிறகு என்ன சந்தேகம்

Bruno said...

//6. விண்ணப்பத்தில் தகவல் இவ்வாறு உள்ள போது விண்ணப்பதாரர் அதை தான் எடுத்துக்கொள்வார். //

அறிவிப்பில் தகவல்கள் தெளிவாகவே உள்ளன

Bruno said...

//7. செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மாற்று திறனாளிகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஆனால் அது விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. //

தெளிவாகவே உள்ளது
அளவு மட்டும் தான் இல்லை

Bruno said...

//8. விண்ணப்பம் என்று நான் கூறுவது pdf கோப்பை.
//

அதாவது அறிவிப்பை (notification)

Rafeek said...

அரசு நிர்வாகம் அனைத்தும் விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றியே நடக்கிறது.. ஒரு நாய் கூட லஞ்சம் வாங்காது.. யாரேனும் தவறு செய்து விட்டு லஞ்சம் தந்தால் ..சீ..ச்சீ என்று விரட்டிவிடுவார்கள்.. ஒரு சாமன்யன் மீண்டும் மீண்டும் ஒரு விவரம் புரியவில்லை என்று கேட்டால் கூட.. மிகவும் கனிவாக பேசி புரிய வச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்...

ஷ்..ஷ்,... தமிழ்நாட்டுல ஒரே ஒரு கோயாபல்ஸ் தான் இருக்காருன்னு நினைச்சிருந்தேன்.. புருடா..புருனோ அவரின் அண்ணன் போல...

Rafeek said...

// பல விதிகளை.. மாற்ற மனமின்றி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பாதுகாக்க வெண்டும் என்ற அடங்கா அரச கோபம்.//

இதில் பெரும்பாண்மையான விதிகள் சமீப காலங்களில் வந்தவையே

ஏன் ஊனமுற்றோர் என்ற பெயர் கூட மாற்றுத்திறனாளி என்று மாற்றப்படவில்லையா




கிழிச்சிங்க..ஊனமுற்றோர் என்ற பெயர் மாற்றுத்திறனாளி என்று மாற்றி விட்டால்? வாழ்க்கை மாறி விடுமா? நடைமுறையில் அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டாமா? பேருந்தில் இருந்து போது கழிப்பறை வரையிலும் அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குதான் தெரியும்.. ஒரு வாரிசு சான்றிதழும்..இறப்பு சான்றிதழும் கூட .. ஒரு மனிதனின் அத்துனை பொறுமையயும் சில நோட்டுகளையும் தொலைக்க வச்சுதான் தர முடியும் இந்த அரசாங்கத்தால்.. அதாவது எங்களின் வரிப்பணத்தில் ..இயங்கி கொண்டிருக்கும் அரசாங்கத்தால்.

”உங்கள் கருத்து முற்றிலும் தவறு””

இந்த அடிச்சு சொல்ற வேலையெல்லாம் ஓவர். ஒரு அரசு அதிகாரியா இல்லாம உங்க அரசு அலுவலகம் ஒன்றில்.. போய் ஒரு சர்டிபிக்கேட்டுக்கு அழைந்து பாருங்க.. அப்ப புரியும்.

Bruno said...

//அரசு நிர்வாகம் அனைத்தும் விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றியே நடக்கிறது.. ஒரு நாய் கூட லஞ்சம் வாங்காது.. யாரேனும் தவறு செய்து விட்டு லஞ்சம் தந்தால் ..சீ..ச்சீ என்று விரட்டிவிடுவார்கள்.. ஒரு சாமன்யன் மீண்டும் மீண்டும் ஒரு விவரம் புரியவில்லை என்று கேட்டால் கூட.. மிகவும் கனிவாக பேசி புரிய வச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்...

ஷ்..ஷ்,... தமிழ்நாட்டுல ஒரே ஒரு கோயாபல்ஸ் தான் இருக்காருன்னு நினைச்சிருந்தேன்.. புருடா..புருனோ அவரின் அண்ணன் போல... //

ரபிக் அவர்களே

அரசுத்துறையில் சில தவறுகள் நடக்கலாம்

ஆனால் இந்த விஷயத்தில் தவறு இல்லை

இங்கு பொய்யை கூறி திசை திருப்பியது உண்மைத்தமிழன் தான் என்று தெளிவாகவே விளக்கியுள்ளேன்

மற்றப்படி இந்த மறுமொழி மூலம் உங்களின் மனநலனும், இது போன்ற தனி நபர் தாக்குதலை வெளியிட்டது மூலம் உண்மைத்தமிழனின் குணநலனும் தெளிவாக தெரிகிறது

நன்றி

Bruno said...

//கிழிச்சிங்க..ஊனமுற்றோர் என்ற பெயர் மாற்றுத்திறனாளி என்று மாற்றி விட்டால்?//

அது ஆரம்பம்

எதிர்மறை பெயராக இல்லாமல் negative நேர்மறை பெயராக மாற்றியது ஒரு ஆரம்பமே

// வாழ்க்கை மாறி விடுமா? //

ஒரே நாளில் மாறாது
ஆனால் படிப்படியா மாற்ற வேண்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

ஆனால் ஒரு சிலர் தவறுகளால் இது குறித்த தவறான தகவல்களே பரவுகின்றன

//நடைமுறையில் அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டாமா? //

கண்டிப்பாக இருக்க வேண்டும்

//பேருந்தில் இருந்து போது கழிப்பறை வரையிலும் அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குதான் தெரியும்..//

ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற முடியாது

20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று முன்னேற்றம் உள்ளது

இது போதுமா என்று கேட்டால் --> போதாது என்பது தான் பதில்

ஆனால் முன்னேற்றமே நடக்கவில்லை என்று கூறுபவன் ஒன்று முட்டாள் அல்லது ஏமாற்றுக்காரன்


// ஒரு வாரிசு சான்றிதழும்..இறப்பு சான்றிதழும் கூட .. ஒரு மனிதனின் அத்துனை பொறுமையயும் சில நோட்டுகளையும் தொலைக்க வச்சுதான் தர முடியும் இந்த அரசாங்கத்தால்.. அதாவது எங்களின் வரிப்பணத்தில் ..இயங்கி கொண்டிருக்கும் அரசாங்கத்தால்.//

இது பொது கருத்து

சில இடங்களில் லஞ்சம் இருக்கலாம். பல இடங்களில் அதிக வேலைப்பளு காரணமாக தாமதம் ஆகலாம்

ஆனாம் பெரும்பாண்மையான இடங்களில் நடப்பது (இங்கு நடந்தது போல்)

திருவாளர் பொது ஜனம் அவர்கள் தவறு செய்து விட்டு தான் தவற்றை மறைத்து விட்டு அரசு மேல் கற்பனை குற்றச்சாட்டுக்களை அடுக்குவார். அதை பலரும் அப்படியே நம்பி விடுவார்கள்

Bruno said...

//”உங்கள் கருத்து முற்றிலும் தவறு””

இந்த அடிச்சு சொல்ற வேலையெல்லாம் ஓவர். ஒரு அரசு அதிகாரியா இல்லாம உங்க அரசு அலுவலகம் ஒன்றில்.. போய் ஒரு சர்டிபிக்கேட்டுக்கு அழைந்து பாருங்க.. அப்ப புரியும்.//

தவறு என்றால் தவறு என்று தானே சொல்ல முடியும்

தவறு என்பதை எப்படி சரி என்று சொல்ல முடியும்

Rafeek said...

”சில இடங்களில் லஞ்சம் இருக்கலாம். பல இடங்களில் அதிக வேலைப்பளு காரணமாக தாமதம் ஆகலாம்
ஆனாம் பெரும்பாண்மையான இடங்களில் நடப்பது (இங்கு நடந்தது போல்)
திருவாளர் பொது ஜனம் அவர்கள் தவறு செய்து விட்டு தான் தவற்றை மறைத்து விட்டு அரசு மேல் கற்பனை குற்றச்சாட்டுக்களை அடுக்குவார். அதை பலரும் அப்படியே நம்பி விடுவார்கள்"


.. கோவிச்சுகாதிங்க சார்..டென்சன் ல நீங்க சொன்ன மேற்கண்ட வரிகளே போதும் ..தங்களின் கோயாபல்ஸ் பட்டத்திற்கு.

Rafeek said...

தவறு என்றால் தவறு என்று தானே சொல்ல முடியும்

தவறு என்பதை எப்படி சரி என்று சொல்ல முடியும்

தவறு என்றால் கூட .. அதை சொல்லும் தங்கள் தொனி தான் இங்கு விமர்சனத்திற்குள்ளாகிறது.

“அவருக்கு காதுதிறன் குறைபாடு என்ற ஒரே காரணத்திற்காக அவரது அவதூறுகளையும் அபாண்டங்களை பொருத்து கொள்ள வேண்டும் என்பதில்லை”

Its purely personal by you only with Saravanan.

உங்க கருத்தை நீங்க அடிப்படை நாகரிகத்தோடு பதிவிட்டிருந்தால்.. எல்லோரும் கண்டிப்பாக அதை ஆமோதித்துருப்போமே.

துவேஷத்துடன் எழுதிய நீங்கள் தான் ..தவறு.!

கண்மூடித்தனமாக அரசையும் விதிகளையும் ஆதரிக்கும்..ஒருவரை விட.. அதை விமர்சனம் செய்யும் சரவணன் என்னை பொருத்தவரையில் சரி.

Bruno said...

//.. கோவிச்சுகாதிங்க சார்..டென்சன் ல நீங்க சொன்ன மேற்கண்ட வரிகளே போதும் ..தங்களின் கோயாபல்ஸ் பட்டத்திற்கு. //

இங்கு டென்ஷன் எதுவுமே இல்லையே

//தவறு என்றால் கூட .. அதை சொல்லும் தங்கள் தொனி தான் இங்கு விமர்சனத்திற்குள்ளாகிறது.//

அப்பாடா

உண்மைத்தமிழன் செய்தது தவறு என்று இப்பொழுதாவது ஏற்றுக்கொண்டீரே

நன்றி

//Its purely personal by you only with Saravanan. //

இதில் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை

Bruno said...

//உங்க கருத்தை நீங்க அடிப்படை நாகரிகத்தோடு பதிவிட்டிருந்தால்.. எல்லோரும் கண்டிப்பாக அதை ஆமோதித்துருப்போமே. //

என் கருத்தில் எங்குமே நாகரிகம் தவறவில்லை

//துவேஷத்துடன் எழுதிய நீங்கள் தான் ..தவறு//
இதில் துவேஷம் எதுவுமே இல்லை

சொல்லப்போனால் உண்மைத்தமிழன் எழுதியது தான் துவேஷம்

-

உண்மைத்தமிழன் செய்த தவறுகளை தவறு என்று சொல்வது துவேஷம் என்றால்

தேர்வாணையம் செய்யாத தவறுகளை, சரியாக செயல்பட்டவர்கள் மீது எல்லாம் மீது கற்பனை குற்றச்சாட்டுக்களை அடுக்கிய உண்மைத்தமிழன் செய்ததை என்ன சொல்வதாம்

ரிஷி said...

இங்கே வந்து குவிந்த அத்தனை பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஸ்ஸ்ஸ்...அப்பப்பா!! கண்ணைக் கட்டுதே!

நேரம் அமையாததால் டாக்டர் புருனோ அவர்கள் தொகுத்தளித்த விவரங்களின் நம்பகத்தன்மையை ஒரிஜினலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.

இருந்தாலும், ஒவ்வொரு கேள்விக்கும் அவரது பதில்களைப் பார்க்கும்போது மிக நுணுக்கிய அளவிலான ஓரிரு குறைகளைத் தவிர, எல்லாம் சரியாகவே படுகிறது.

Institution of Engineers நடத்தும் AMIE தேர்வுகளை நான் எழுதியிருக்கிறேன். அதிலும் இப்படித்தான்..நிறைய விதிமுறைகள், வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் அட்சுரசுத்தமாக இருக்குமளவிற்கு கொடுக்கப்பட்டிருக்கும். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு உற்றுநோக்கி எழுதியிருப்பார்களோ என வியக்குமளவிற்கு இருக்கும். அதுபோல புருனோவின் பதில்கள் இருந்தன.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ரிஷி said...

சரவணன்!
கல்வி என்றைக்கும் வீணாகப் போனதில்லை. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாடுபட்டுப் படித்தவை வீணாகிவிட்டனவே என எண்ண வேண்டாம். அடுத்தமுறை தேர்வு எழுதுபவர்களுக்கு நீங்களே கோச்சிங் கொடுப்பதற்குக் கூட நீங்கள் கற்றவை உதவும்!

Arun Ambie said...

2Gல் ஊழல் இல்லை என்று இன்னும் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் மாற்று அறிவாளிகள் (முட்டாள்கள் என்று சொல்லவில்லை. இதுவும் positive approachன் ஆரம்பம் தான்!!) மேதைகளாக வலம் வரும் நாட்டில் நீங்கள் விஏஓ வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது தேவையில்லை. சர்ச்சில் கூட பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் பெயிலானவராம். என்ன குறைந்து போய்விட்டார்? நம்பிக்கையுடனிருங்கள்.

குறும்பன் said...

http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf
http://tnpsc.gov.in/Notifications/248_not_eng_vao2k10.pdf

1) //கி.நி.அ என்றால் என்ன// கிராம நிர்வாக அலுவலர்

2)

// 4. 4 உ. என்பதில் 'தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்' என்று இல்லாததே விண்ணப்பதாரர் மாற்றி கருத இடம் கொடுக்கிறது. விண்ணப்பத்தில் தெளிவாக 4உ விலும் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் என்று இருந்திருந்தால் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படாது.


இல்லை

வாய்ப்பு இல்லை

அறிவிப்பில் தகவல்கள் சரியாகவே உள்ளன //

நன்றாக படித்து பாருங்கள் அதில் இல்லை. இருந்தால் வெட்டி ஒட்டுங்க (english ok) இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன்.


3) //தமிழிலும் தெளிவாகவே உள்ளது

4.உ என்பது 4.ஈ க்கு அடுத்து வருவது தானே

பிறகு என்ன சந்தேகம் //

4.ஈக்கு அப்புறம் தான் 4ஈ வரும் என்று தகவலை சொல்லாமல் விட்டது தவறு. தகவலை சொன்னா\எழுதுனா என்ன தவறு? மாற்றி புரிந்துகொள்ளமாட்டார்கள் தானே?

4) //6. விண்ணப்பத்தில் தகவல் இவ்வாறு உள்ள போது விண்ணப்பதாரர் அதை தான் எடுத்துக்கொள்வார். //

அறிவிப்பில் தகவல்கள் தெளிவாகவே உள்ளன //

இல்லை. அறிவிப்பில் தெளிவாக இல்லை.

5).//
//7. செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மாற்று திறனாளிகள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஆனால் அது விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. //

தெளிவாகவே உள்ளது
அளவு மட்டும் தான் இல்லை //

செவித்திறன் பற்றி குறிப்பிடவில்லை. அப்புறம் தான அளவு. அறிவிப்பு இருந்தா வெட்டி ஒட்டவும். (english ok)இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன்.

Bruno said...

//கிராம நிர்வாக அலுவலர்//
நன்றி சார்

//நன்றாக படித்து பாருங்கள் அதில் இல்லை. இருந்தால் வெட்டி ஒட்டுங்க (english ok) இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன். //
நீங்கள் அறிவிப்பை நன்றாக படித்து பாருங்கள். அடுத்து நான் எழுதியுள்ள இடுகையையும் மறுமொழிகளையும் நன்றாக படித்து பாருங்கள்

எந்த பத்தியில் என்பது உட்பட தெளிவாக விளக்கியுள்ளேன்

//4.ஈக்கு அப்புறம் தான் 4ஈ வரும் என்று தகவலை சொல்லாமல் விட்டது தவறு. தகவலை சொன்னா\எழுதுனா என்ன தவறு? //

சொன்னால் தவறு இல்லை
ஆனால் சொல்லாமல் விட்டது தவறு இல்லை

ஏன் ஒவ்வொரு வரியிலும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு என்று சொல்ல வேண்டுமா

//மாற்றி புரிந்துகொள்ளமாட்டார்கள் தானே? //
இந்த பதவிக்கு தேவைப்படும் அறிவு உள்ள யாருமே மாற்றி புரிந்து கொள்ள மாட்டார்கள்

//இல்லை. அறிவிப்பில் தெளிவாக இல்லை.//
தெளிவாகவே உள்ளன. நான் ஏற்கனவே இதை விளக்கியுள்ளேன்

//செவித்திறன் பற்றி குறிப்பிடவில்லை. அப்புறம் தான அளவு. அறிவிப்பு இருந்தா வெட்டி ஒட்டவும். (english ok)இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன்.//
குறும்பன் சார்

உங்களிடம் ஒரு கேள்வி “தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ளனவா இல்லையா

Bruno said...

குறும்பன் சார்

அறிவிப்பில் 4.ஈ இது தான்
உடற்தகுதிச் சான்றிதழ்: இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும். இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும். ( Standard –III or Better)


அறிவிப்பில் 4.உ இது தான்
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின் அளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும்

--
நீங்கள் தெளிவாக இல்லை என்று கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது.
--

இரண்டு பத்திகளிலுமே இப்பதவிக்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கான என்றும் தெளிவாகவே உள்ளது

விண்ணப்பிக்கும் போது என்று இல்லவே இல்லை.
நீங்கள் தெளிவாக இல்லை என்று கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது

N said...

Hello UT,
Though the country has lost good VAO, these positions have been created in KK's rule only. Give them their due credit by voting for DMK.

JJ will never create new positions.

Ganpat said...

நான் ப்ருனோவின் எதிர்வினை பதிவில் போட்ட கமெண்ட்:


doctor ji,

நீங்கள் மூளை மிகப்பெரியதாகவும்
இதயம் மிக சிறியதாகவும் உள்ள ஒரு அற்புத மருத்துவர் எனக்கருதுகிறேன் .

"அன்புள்ள சரவணன்,
உங்கள் பதிவு என்னை வருத்தமுற செய்தது உங்கள் அடுத்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
அதே சமயம் உங்கள் பதிவில் நீங்கள் ஆதங்கத்தில் சொல்லியிருக்கும் சில விஷயங்களை ஓர் doctor என்ற முறையில் தெளிவுபடுத்துதல் அவசியம் எனக்கருதி இந்தப்பதிவை எழுதுகிறேன்.இது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்"
என்று முன்னுரையிட்டு உங்கள் பதிவை இட்டிருந்தால் இந்த சர்ச்சை வந்திராது ஐயா!
அடுத்தவர் கஷ்டங்களையும் சற்று உணருங்கள்
நன்றியுடன்,

குறும்பன் said...

//4.ஈக்கு அப்புறம் தான் 4ஈ வரும் என்று தகவலை சொல்லாமல் விட்டது தவறு. தகவலை சொன்னா\எழுதுனா என்ன தவறு? //

சொன்னால் தவறு இல்லை
ஆனால் சொல்லாமல் விட்டது தவறு இல்லை

ஏன் ஒவ்வொரு வரியிலும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு என்று சொல்ல வேண்டுமா

:-)) சொன்னா என்ன தவறு?. இந்த விண்ணப்பத்தில்/அறிவிப்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவி என்பது ..... என்று இனி குறிப்பிடப்படும் என விண்ணப்பத்தின்/அறிவிப்பின் முதல் வரியில் கொட்டை(bold) எழுத்தில் எழுதலாமே. அறிவிப்பு எல்லாரும் புரிஞ்சுக்கத்தான

//மாற்றி புரிந்துகொள்ளமாட்டார்கள் தானே? //
இந்த பதவிக்கு தேவைப்படும் அறிவு உள்ள யாருமே மாற்றி புரிந்து கொள்ள மாட்டார்கள்

கிநிஅ பதவிக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி எனக்கு உண்டு. கிநிஅ பதவிக்கு சேரும் அறிவும் எனக்கு உண்டு என நினைக்கிறேன். நான் மாற்றி தான் புரிந்து கொண்டேன். என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ

//இல்லை. அறிவிப்பில் தெளிவாக இல்லை.//
தெளிவாகவே உள்ளன. நான் ஏற்கனவே இதை விளக்கியுள்ளேன்

உங்களுக்கு தெளிவா இருக்கு. விண்ணப்பத்தில் சில எனக்கு தெளிவா இல்லை. விண்ணப்பத்தை படிச்சதும் புரியரமாதிரி இருக்கனும் நாலு பேரை கேட்டு புரிஞ்சிக்கற மாதிரி இருக்கக்கூடாது.

//செவித்திறன் பற்றி குறிப்பிடவில்லை. அப்புறம் தான அளவு. அறிவிப்பு இருந்தா வெட்டி ஒட்டவும். (english ok)இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன்.//
குறும்பன் சார்

உங்களிடம் ஒரு கேள்வி “தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ளனவா இல்லையா

கண் செக்கப்பா :-)) இருக்கு. அறிவிப்புல செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்கும் காணோம். தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் அது இருக்குன்னா நான் இது வரை கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிட்டேன். ஏன்னா என் கேள்வி எல்லாம் http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf கோப்பில் உள்ளதை வைத்துதான். அறிவிப்புல இருந்தா வெட்டி ஒட்டுங்க (if i cut and paste from tamil pdf i see only junk letters so u can cut and paste from english , so we can use less typing)

//அறிவிப்பில் 4.உ இது தான்
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின் அளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும்
--
நீங்கள் தெளிவாக இல்லை என்று கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது.//
தெளிவாக சுட்டியமைக்கு நன்றி. வெட்டி ஒட்டுனாதான் நமக்கு அதிலிருக்கிறதே தெரியுது :-((

ரிஷி said...

குறும்பன் Vs புருனோ!

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!!" :-))

ரிஷி said...

//Arun Ambie said...

2Gல் ஊழல் இல்லை என்று இன்னும் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் மாற்று அறிவாளிகள் (முட்டாள்கள் என்று சொல்லவில்லை. இதுவும் positive approachன் ஆரம்பம் தான்!!) //

ஹா..ஹா..! வித்தியாசமான சிந்தனை!

Bruno said...

//:-)) சொன்னா என்ன தவறு?.//

சொன்னால் தவறு இல்லை
ஆனால் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது

// இந்த விண்ணப்பத்தில்/அறிவிப்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவி என்பது ..... என்று இனி குறிப்பிடப்படும் என விண்ணப்பத்தின்/அறிவிப்பின் முதல் வரியில் கொட்டை(bold) எழுத்தில் எழுதலாமே. //

தேவை இல்லை
அந்த அறிவிப்பு என்பதே அந்த ஒரு பதவிக்குத்தான்

எனவே ஒவ்வொரு வரியிலும் அப்படி எழுதவேண்டும் என்பது அவசியம் இல்லை

//அறிவிப்பு எல்லாரும் புரிஞ்சுக்கத்தான //
ஆம்
இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளும் படி தெளிவாகவே உள்ளது

Bruno said...

//கிநிஅ பதவிக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி எனக்கு உண்டு.//
ஏற்றுக்கொள்கிறென்

// கிநிஅ பதவிக்கு சேரும் அறிவும் எனக்கு உண்டு என நினைக்கிறேன். நான் மாற்றி தான் புரிந்து கொண்டேன்.//

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் இந்த தெளிவான விபரத்தை கூட மாற்றி புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த பதவிக்கு நீங்கள் தகுதியானவர் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. நிற்க இது என் கருத்து தான். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம்

// என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ //

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் அப்படி மாற்றி புரிந்து கொள்பவர்கள் எல்லோரும் இந்த பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் என்பது என் கருத்து. நிற்க இது என் கருத்து தான். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம்

Bruno said...

//உங்களுக்கு தெளிவா இருக்கு.//

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் இந்த வேலைக்கு தேவைப்படும் மூளைத்திறன் உள்ள அனைவருக்குமே இது தெளிவான அறிவிப்பு தான்

// விண்ணப்பத்தில் சில எனக்கு தெளிவா இல்லை.//
மீண்டும் படிக்கவும்
என்னென விஷய்ங்கள் என்று பட்டியலிடவும்

ஏற்கனவே நீங்கள் தமிழில் 4உவில் இல்லை என்று பொய் சொன்னது போல் மீண்டும்கூற வேண்டாம்

// விண்ணப்பத்தை படிச்சதும் புரியரமாதிரி இருக்கனும் நாலு பேரை கேட்டு புரிஞ்சிக்கற மாதிரி இருக்கக்கூடாது. //

இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளும் படிதான் உள்ளது

Bruno said...

//அறிவிப்புல செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்கும் காணோம்.//

அது தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் என்பதில் பல வகை உள்ளது

இது குறித்து விரிவாக விளக்கியுள்ளேன்

இரு சுட்டிகளை தந்துள்ளேன்

படித்து பார்க்கவும்

//ஏன்னா என் கேள்வி எல்லாம் http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf கோப்பில் உள்ளதை வைத்துதான். அறிவிப்புல இருந்தா வெட்டி ஒட்டுங்க//

வெட்டி ஒட்டி நீங்கள் கூறியது பொய் என்று நிருபித்து விட்டேன்

Bruno said...

ganpat சார்

என்னுடன் முரண்பட்ட உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

//அடுத்தவர் கஷ்டங்களையும் சற்று உணருங்கள்//

இதில் உங்களுடன் உடன்படுகிறேன்

அடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள என்னை வலியுருத்தும் நீங்கள், ஒழுங்காக பணி செய்தும், உண்மைத்தமிழன் போன்றவர்கள் தாங்கள் செய்த தப்பை மறைக்க கொஞ்சம் கூட தயங்காமல் சுமத்தும் பொய் குற்றச்சாட்டுக்களால் அவப்பெயர் வாங்கும் அரசு ஊழியர்களின் கஷ்டங்களையும் சற்று உணருங்கள்

குறும்பன் said...

// -)) சொன்னா என்ன தவறு?.//

சொன்னால் தவறு இல்லை
ஆனால் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது
தெளிவாக சொல்ல வேண்டியது அரசின் கடமை
// இந்த விண்ணப்பத்தில்/அறிவிப்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவி என்பது ..... என்று இனி குறிப்பிடப்படும் என விண்ணப்பத்தின்/அறிவிப்பின் முதல் வரியில் கொட்டை(bold) எழுத்தில் எழுதலாமே. //

தேவை இல்லை
அந்த அறிவிப்பு என்பதே அந்த ஒரு பதவிக்குத்தான்

எனவே ஒவ்வொரு வரியிலும் அப்படி எழுதவேண்டும் என்பது அவசியம் இல்லை
ஒவ்வொரு வரியிலும் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் எழுதினால் குற்றமில்லை.

//அறிவிப்பு எல்லாரும் புரிஞ்சுக்கத்தான //
ஆம்
இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளும் படி தெளிவாகவே உள்ளது //

உங்களுக்கு உள்ளதுன்னு சொல்லுங்க, எல்லாரும் புரிந்து கொள்ளும் படி உள்ளது என்பது தவறு.

////கிநிஅ பதவிக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி எனக்கு உண்டு.//
ஏற்றுக்கொள்கிறென்
மிக்க மகிழ்ச்சி

// கிநிஅ பதவிக்கு சேரும் அறிவும் எனக்கு உண்டு என நினைக்கிறேன். நான் மாற்றி தான் புரிந்து கொண்டேன்.//

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் இந்த தெளிவான விபரத்தை கூட மாற்றி புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த பதவிக்கு நீங்கள் தகுதியானவர் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. நிற்க இது என் கருத்து தான். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம்//
கிநிஅ பதவிக்கு சேரும் அறிவு எனக்கு இல்லை என்பது தங்கள் கருத்தானால் அதற்கு நான் ஒன்னும் செய்யமுடியாது.
// என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ //

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் அப்படி மாற்றி புரிந்து கொள்பவர்கள் எல்லோரும் இந்த பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் என்பது என் கருத்து. நிற்க இது என் கருத்து தான். உங்கள் கருத்து வேறாக இருக்கலாம் //

உங்கள் கருத்துப்படி பல பேர் கிநிஅ பதவிக்கு தகுதியில்லை, அதுவே எல்லோர் கருத்தும் அன்று.

//உங்களுக்கு தெளிவா இருக்கு.//

“தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ள நிலையில் இந்த வேலைக்கு தேவைப்படும் மூளைத்திறன் உள்ள அனைவருக்குமே இது தெளிவான அறிவிப்பு தான்

இந்த வேலைக்கு தேவைப்படும் அறிவுத்திறன் இவ்வளவு இருக்கனும் என்று ஏதாவது விதி உள்ளதா? அப்படி இருந்தா பல பேரை விண்ணப்பத்தை சரி பார்க்கும் போதே வடிகட்டலாமே. எதுக்கு வெட்டியா தேர்வு?

// விண்ணப்பத்தில் சில எனக்கு தெளிவா இல்லை.//
மீண்டும் படிக்கவும்
என்னென விஷய்ங்கள் என்று பட்டியலிடவும்

ஏற்கனவே நீங்கள் தமிழில் 4உவில் இல்லை என்று பொய் சொன்னது போல் மீண்டும்கூற வேண்டாம்

எனக்கு தெரியவில்லை என்பதால் நான் கூறியது பொய் ஆகாது. தெரியலைன்னா தெரியலைன்னு தான் சொல்லமுடியும்

// விண்ணப்பத்தை படிச்சதும் புரியரமாதிரி இருக்கனும் நாலு பேரை கேட்டு புரிஞ்சிக்கற மாதிரி இருக்கக்கூடாது. //

இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளும் படிதான் உள்ளது //
எல்லோருக்கும் இல்லை.


/அறிவிப்புல செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்கும் காணோம்.//

அது தேவையில்லை. மாற்றுத்திறனாளிகள் என்பதில் பல வகை உள்ளது

இது குறித்து விரிவாக விளக்கியுள்ளேன்

இரு சுட்டிகளை தந்துள்ளேன்

படித்து பார்க்கவும்
மாற்றுத்திறனாளிகள் என்பதில் பல வகை உள்ளது என்பது எனக்கும் தெரியும். என் கேள்வியே இந்த அறிவிப்பில் செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்காவது உள்ளதா என்பது தான்.

//ஏன்னா என் கேள்வி எல்லாம் http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf கோப்பில் உள்ளதை வைத்துதான். அறிவிப்புல இருந்தா வெட்டி ஒட்டுங்க//

வெட்டி ஒட்டி நீங்கள் கூறியது பொய் என்று நிருபித்து விட்டேன்
நான் கேட்டது செவித்திறன் குறைந்தவர்கள் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று அறிவிப்பு கோப்பில் இருந்தால் வெட்டி ஒட்டுங்க என்றுதான். அதை வெட்டு ஒட்டினீர்கள் என்றால் என் ஐயம் தீர்ந்துவிடும். அதை நீங்கள் இன்னும் வெட்டி ஒட்டவில்லை.

கை, கால் குறைபாடுள்ளவர்கள் (Orthopaedically Handicapped) 40-50% மற்றும் கண் பார்வை (Standard –III or Better) எந்த அளவு தேவை என்று தான் உள்ளது என முன்பே இங்கு கூறி உள்ளேன். செவித்திறன் பற்றி இவ்வறிவிப்பில் ஏதும் இல்லை.

Bruno said...

//தெளிவாக சொல்ல வேண்டியது அரசின் கடமை //

ஆம்
அரசு தெளிவாகவே கூறியுள்ளது


//ஒவ்வொரு வரியிலும் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் எழுதினால் குற்றமில்லை.//

ஒவ்வொரு வரியிலும் எழுதவேண்டியது அவசியமில்லை என்பதால் எழுதவில்லை. இதில் அரசின் தவறு எதுவும் இல்லை

//உங்களுக்கு உள்ளதுன்னு சொல்லுங்க//
எனக்கு புரிந்து கொள்ளும் படி உள்ளது
அனைவருக்கும் புரிந்து கொள்ளு

//எல்லாரும் புரிந்து கொள்ளும் படி உள்ளது என்பது தவறு.//
ஆம்
இந்த பதவிக்கு தகுதியில்லாதவர்களால் (அதாவது எழுதப்படிக்கத்தெரியாதவர்கள், இந்த பதவிக்கு தேவையான குறைந்த பட்ச மூளைத்திறன் இல்லாதவர்கள்) ஆகியோருக்கு புரியாது. இதை நான் ஏற்கனவே கூறிவிட்டேனே

Bruno said...

//ஏற்கனவே நீங்கள் தமிழில் 4உவில் இல்லை என்று பொய் சொன்னது போல் மீண்டும்கூற வேண்டாம்

எனக்கு தெரியவில்லை என்பதால் நான் கூறியது பொய் ஆகாது. தெரியலைன்னா தெரியலைன்னு தான் சொல்லமுடியும்//

எனக்கு தெரியாது என்று கூறுவது சரி

ஆனால் அறிவிப்பில் உள்ளதை அறிவிப்பில் இல்லை என்று கூறுவது பொய்

அறிவிப்பில் இருந்ததை இல்லை என்று நீங்கள் கூறியது பொய் தான்

//எல்லோருக்கும் இல்லை. //
ஆம்
இந்த பதவிக்கு தகுதியில்லாதவர்களால் (அதாவது எழுதப்படிக்கத்தெரியாதவர்கள், இந்த பதவிக்கு தேவையான குறைந்த பட்ச மூளைத்திறன் இல்லாதவர்கள்) ஆகியோருக்கு புரிந்து கொள்ளும்படி இல்லை. இதை நான் ஏற்கனவே கூறிவிட்டேனே. இன்னமும் என்ன சந்தேகம்

Bruno said...

//மாற்றுத்திறனாளிகள் என்பதில் பல வகை உள்ளது என்பது எனக்கும் தெரியும்.//
சரி

//என் கேள்வியே இந்த அறிவிப்பில் செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்காவது உள்ளதா என்பது தான்.//
அது ஏன் தேவை என்று கூறினால் நான் பதிலளிக்க உதவியாக இருக்கும்

ரிஷி said...

குறும்பன் சார், புருனோ சார் இருவருக்குமிடையே "Let us agree to Disagree" எனும் கோட்பாடு வைக்கப்படுகிறது. போதுமய்யா..போதும்..!! :-)

Bruno said...

நீங்கள் 2/23/2011 2:27 AM எழுதிய மறுமொழியை நினைவுபடுத்துகிறேன்

காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள்.

//என் கேள்வியே இந்த அறிவிப்பில் செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்காவது உள்ளதா என்பது தான். //

//நான் கேட்டது செவித்திறன் குறைந்தவர்கள் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று அறிவிப்பு கோப்பில் இருந்தால் வெட்டி ஒட்டுங்க என்றுதான்//

நீங்களே 2/23/2011 2:27 AM காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் என்று கூறிவிட்டீர்கள்

பிறகு ஏன் இப்பொழுது அந்த அறிவிப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள்

என்ன குழப்பம்
ஏன் இந்த நிலையற்ற தன்மை




ஏன் இந்த அறிவிப்பு தேவை என்று நீங்கள் கூறினால் நான் அது குறித்து பதிலளிக்க முடியும்

நீங்களே 2/23/2011 2:27 AM காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் என்று கூறிவிட்டீர்களே

பிறகு ஏன் அது உள்ளதா என்று கேட்கிறீர்கள்

Bruno said...

//குறும்பன் சார், புருனோ சார் இருவருக்குமிடையே "Let us agree to Disagree" எனும் கோட்பாடு வைக்கப்படுகிறது. போதுமய்யா..போதும்..!! :-) //

ரிஷி சார்

இதில் நான் கூறுவது உண்மை தகவல்
குறும்பன் கூறுவது பொய்

அவர் தான் உண்மையே ஏற்றுக்கொள்ள முடியும்

என்னால் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது !!

Bruno said...

ரிஷி சார்

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.


உதாரணம் :
சரியான தகவல் – பெட்ரோல் விலை 63 ரூபாய்
தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்

கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

இதில் கருத்து (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம். பேச வேண்டும். அந்த பொய்களை எதிர்க்க வேண்டும்

அப்ப நம்பிக்கை -

உதாரணம்

நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்

நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது

குறும்பன் said...

//தெளிவாக சொல்ல வேண்டியது அரசின் கடமை //

ஆம்
அரசு தெளிவாகவே கூறியுள்ளது

இல்லை, அரசு தெளிவாக கூறவில்லை

//ஒவ்வொரு வரியிலும் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் எழுதினால் குற்றமில்லை.//

ஒவ்வொரு வரியிலும் எழுதவேண்டியது அவசியமில்லை என்பதால் எழுதவில்லை. இதில் அரசின் தவறு எதுவும் இல்லை

//உங்களுக்கு உள்ளதுன்னு சொல்லுங்க//
எனக்கு புரிந்து கொள்ளும் படி உள்ளது
அனைவருக்கும் புரிந்து கொள்ளு

//எல்லாரும் புரிந்து கொள்ளும் படி உள்ளது என்பது தவறு.//
ஆம்
இந்த பதவிக்கு தகுதியில்லாதவர்களால் (அதாவது எழுதப்படிக்கத்தெரியாதவர்கள், இந்த பதவிக்கு தேவையான குறைந்த பட்ச மூளைத்திறன் இல்லாதவர்கள்) ஆகியோருக்கு புரியாது. இதை நான் ஏற்கனவே கூறிவிட்டேனே

அனைவருக்கும் என்று நீங்கள் சொல்லுவது பொய். நிறைய பேருக்கு அதாவது எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள், இந்த பதவிக்கு தேவையானதைவிட அதிகபட்ச மூளைத்திறன் உள்ளவர்கள் சிலருக்கு இந்த அறிவிப்பு புரியவில்லை

//ஏற்கனவே நீங்கள் தமிழில் 4உவில் இல்லை என்று பொய் சொன்னது போல் மீண்டும்கூற வேண்டாம்

எனக்கு தெரியவில்லை என்பதால் நான் கூறியது பொய் ஆகாது. தெரியலைன்னா தெரியலைன்னு தான் சொல்லமுடியும்//

எனக்கு தெரியாது என்று கூறுவது சரி

ஆனால் அறிவிப்பில் உள்ளதை அறிவிப்பில் இல்லை என்று கூறுவது பொய்

அறிவிப்பில் இருந்ததை இல்லை என்று நீங்கள் கூறியது பொய் தான்
அறிவிப்பில் இருப்பது தெரியாததால்(கண்ணுக்கு புலப்படாததால்) தெரியவில்லை என்று கூறுவது பொய்யாகாது. நீங்கள் வெட்டி ஒட்டியபிறகும் அதில் இல்லை என்று கூறினால் வேண்டுமானால் அது பொய்யாகும். எனவே நான் சொன்னது பொய் அல்ல. நீங்கள் அடுத்தவரை பொய்யர் என்று சொல்வதில் ஆனந்தப்பட்டால் அது நல்லதல்ல.

//எல்லோருக்கும் இல்லை. //
ஆம்
இந்த பதவிக்கு தகுதியில்லாதவர்களால் (அதாவது எழுதப்படிக்கத்தெரியாதவர்கள், இந்த பதவிக்கு தேவையான குறைந்த பட்ச மூளைத்திறன் இல்லாதவர்கள்) ஆகியோருக்கு புரிந்து கொள்ளும்படி இல்லை. இதை நான் ஏற்கனவே கூறிவிட்டேனே. இன்னமும் என்ன சந்தேகம்

நிறைய பேருக்கு அதாவது எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள், இந்த பதவிக்கு தேவையானதைவிட அதிகபட்ச மூளைத்திறன் உள்ளவர்கள் சிலருக்கு இந்த அறிவிப்பு புரியவில்லை.

காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள்.

//என் கேள்வியே இந்த அறிவிப்பில் செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்காவது உள்ளதா என்பது தான். //

//நான் கேட்டது செவித்திறன் குறைந்தவர்கள் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று அறிவிப்பு கோப்பில் இருந்தால் வெட்டி ஒட்டுங்க என்றுதான்//

நீங்களே 2/23/2011 2:27 AM காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் என்று கூறிவிட்டீர்கள்

பிறகு ஏன் இப்பொழுது அந்த அறிவிப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள்

என்ன குழப்பம்
ஏன் இந்த நிலையற்ற தன்மை

இந்த அறிவிப்பில் காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் என்று உள்ளது என்று கூறினீர்கள். அப்படி இல்லை என்கிறேன், இருந்தால் வெட்டி ஒட்டுங்க என்கிறேன், இதில் என்ன குழப்பம் & நிலையற்ற தன்மை??

ஏன் இந்த அறிவிப்பு தேவை என்று நீங்கள் கூறினால் நான் அது குறித்து பதிலளிக்க முடியும்

நீங்களே 2/23/2011 2:27 AM காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் என்று கூறிவிட்டீர்களே

பிறகு ஏன் அது உள்ளதா என்று கேட்கிறீர்கள்

அறிவிப்பின் படி காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் என்று ஒத்துக்கொண்டதிற்கு நன்றி.

/குறும்பன் சார், புருனோ சார் இருவருக்குமிடையே "Let us agree to Disagree" எனும் கோட்பாடு வைக்கப்படுகிறது. போதுமய்யா..போதும்..!! :-) //

ரிசி, புருனோ தான் கூறியது தான் சரி, அடுத்தவங்க சொல்வதெல்லாம் பொய் என்கிறார். சரிங்க அப்படி (செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி) அறிவிப்பில் உள்ள தகவலை வெட்டி ஒட்டுங்க என்பதுதான் என் வாதம். இருந்தா வெட்டி ஒட்ட வேண்டியது தான? இல்லைன்னா இந்த அறிவிப்பில் அது இல்லை என்று சொல்லவேண்டியது தான? வேலை சுலபமா முடிஞ்சுதா? இதுக்கு நிறைய பின்னூட்டம் தேவையே இல்லையே.


உதாரணத்திற்கு --
பெட்ரோல் = ரூ 50, டீசல் = ரூ 45 என்று அறிவிப்பில் உள்ளதாக சொல்கிறார் என்று கொள்வோம். ஏன் அப்படி என்பதற்கும் நிறைய விளக்கம் கொடுக்கிறார். எனக்கு விளக்கம் தேவையில்லை, அறிவிப்பில் அவ்வாறு உள்ளது தெரியவில்லை, எனவே அப்படி உள்ளதை வெட்டி ஒட்டுங்க நான் தெரிஞ்சிக்கிறேன் என்கிறேன். அவர் டீசல்=ரூ 45 என்று உள்ளதை வெட்டி ஒட்டுகிறார், நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு தெளிவு ஏற்படுகிறது. ஆனா பெட்ரோல் ???? நான் வெட்டி ஒட்ட சொல்வது தகவல்(fact).

Bruno said...

//இல்லை, அரசு தெளிவாக கூறவில்லை //

அரசு தெளிவாகவே கூறியுள்ளது

---
குறும்பன் Monday, February 28, 2011 9:20:00 AM கூறுவது
எனக்கு புரிந்து கொள்ளும் படி உள்ளது

இவர் இதற்கு முன்னர் அதாவது Friday, February 25, 2011 2:35:00 AM கூறியது
என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ


அப்படி என்றால் இவர் கூறுவதில் ஒன்று உண்மை, மற்றொன்று பொய்

எது உண்மை, எது பொய் என்று அவர் தான் கூறவேண்டும்

---
என்ன கொடுமை சார் இது

இது மட்டுமல்ல
குறும்பன் 2/23/2011 2:27 AM கூறியது
காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள்.

கிராம அலுவலர் பதவிக்கான 3% ஒதுக்கிடு பெறும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் என்போர் 40% முதல் 50% வரை உள்ள கை, கால் இயக்கத்தில் குறை உள்ளவர்கள் மட்டுமே.


இவர் அதன் பிறகு என்ன கூறினார் என்று அவரையே படித்துக்கொள்ள வேண்டுகிறேன்

----

Bruno said...

//ரிசி, புருனோ தான் கூறியது தான் சரி, அடுத்தவங்க சொல்வதெல்லாம் பொய் என்கிறார்.//

ஐயா

ஏன் தேவையில்லாமல் அடுத்தவர்களை இழுக்குறீர்கள்

நீங்கள் சொன்ன பொய்கள் என்னவென்று தேதி நேரம் வாரியாக தந்திருக்கிறேன்

// சரிங்க அப்படி (செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி) அறிவிப்பில் உள்ள தகவலை வெட்டி ஒட்டுங்க என்பதுதான் என் வாதம். //

ஐயா

செவித்திறன் குறைவானவர்களுக்கு இந்த வேலையில் இடப்பங்கீடு கிடையாது என்று தெளிவாக கூறிவிட்டாகிவிட்டது. நீங்களும் கூட அதை கூறினீர்கள் (தேதி நேரம் வாரியாக ஆதாரம் தந்து விட்டேனே)

பிறகு ஏன் அந்த தகவல் உங்களுக்கு தேவை என்று கேட்டேன்

அதற்கு பதில் அளியுங்கள்

//இருந்தா வெட்டி ஒட்ட வேண்டியது தான? இல்லைன்னா இந்த அறிவிப்பில் அது இல்லை என்று சொல்லவேண்டியது தான?//

ஐயா குறும்பன்,

செவித்திறன் குறைவானவர்களுக்கு இந்த வேலையில் இடப்பங்கீடு கிடையாது

இது போல் பலருக்கும் கிடையாது

யாருக்கு உள்ளது என்பது மட்டும் தான் அறிவிப்பில் இருக்கும்

யாருக்கு இல்லை என்பது அறிவிப்பில் இருக்காது

இந்த வேலைக்கு சம்மந்தமில்லாத தகவல்கள் அறிவிப்பில் இருக்காது

நீங்கள் கேட்பது இந்த வேலைக்கு தொடர்பில்லாத தகவல்

அது தொடர்பில்லாத தகவல் என்று நீங்களே கூறிவிட்டு இப்பொழுது அது உள்ளதா என்று கேட்பது ஏன் ??

//வேலை சுலபமா முடிஞ்சுதா? இதுக்கு நிறைய பின்னூட்டம் தேவையே இல்லையே.//

மற்றப்படி நீங்கள் சொன்ன பொய்களை எல்லாம் நான் ஆதாரங்களுடன் மறுத்து விட்டதால்

இந்த அறிவிப்பிற்கு தொடர்பில்லாத ஒரு விபரத்தை கேட்டு, அது இல்லை என்று நான் கூறியவுடன், இதோ அறிவிப்பில் இல்லை என்று திசை திருப்பும் முயற்சி புரியாது என்றா நினைகிறீர்கள் :) :)

மீண்டும் முதலிருந்து படித்து பாருங்கள்

நீங்கள் சொன்ன பொய்கள் அனைத்தும் உங்களை பார்த்து சிரிக்கின்றன

Bruno said...

//எனக்கு விளக்கம் தேவையில்லை, அறிவிப்பில் அவ்வாறு உள்ளது தெரியவில்லை, எனவே அப்படி உள்ளதை வெட்டி ஒட்டுங்க நான் தெரிஞ்சிக்கிறேன் என்கிறேன். //

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலை வெட்டி ஒட்டியாகிவிட்டது

//பெட்ரோல் = ரூ 50, டீசல் = ரூ 45 என்று அறிவிப்பில் உள்ளதாக சொல்கிறார் என்று கொள்வோம். //

நீங்கள் கேட்பது டீசல் விலை அல்ல

அறிவிப்பில் இல்லாத சமையல் எரிவாயு விலை

அதுவும்

சமையல் எரிவாயு விலை என்னவென்று நீங்களே கூறியபின்னரும் கூட

நான் உங்களின் பொய்களை தேதி நேரம் வாரியாக தோலுரித்த எரிச்சலில் சம்மந்தமில்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்

Bruno said...

முதலில் (புதன், பிப்ரவரி 23, 2011 இரவு 11:48:00) குறும்பன் கூறியது

//4 உ. என்பதில் 'தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்' என்று இல்லாததே விண்ணப்பதாரர் மாற்றி கருத இடம் கொடுக்கிறது. விண்ணப்பத்தில் தெளிவாக 4உ விலும் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் என்று இருந்திருந்தால் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படாது//

இதைத்தான் வெட்டி ஒட்டுங்கள் என்று கூறினார்

நான் வெட்டி ஒட்டி அவர் கூறியதை பொய் என்று நிருபித்து விட்டேன்

இப்பொழுது அறிவிப்பில் இல்லாத விஷயத்தை கூறி (அதுவும் இவரே ஏற்கனவே அது அறிவிப்பில் இல்லை என்று இதே இடுகையில் கூறியிருக்கிறார்) அதை வெட்டி ஒட்டுங்கள் என்கிறார்

இவரது நோக்கம் என்னவென்றால் “நான் வெட்டி ஒட்ட சொன்ன விஷயம் அறிவிப்பில் இல்லை” என்று நிருபிக்கும் முயற்சி

என்ன கொடுமை சார் இது

Bruno said...

இந்த அறிவிப்பில்


தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும்

என்ற வரிகள் உள்ளன என்பதை குறும்பன் அவர்களுக்கு நினைவு படுத்துகிறேன்

குறும்பன் said...

//தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவரையும் உங்களைப் போலவே அறிவாளிகளாக நினைத்துக் கொண்டால் எப்படி..?//
ஐயா பெரியவரே
இந்த அறிவிப்பில் உள்ளது கை கால் ஊனம் மற்றும் தான்
நீங்கள் ஏன் உங்கள் காது கேட்கும் திறன் சான்றிதழை அனுப்பினீர்கள் என்று கூறுங்கள்

காது கேட்கும் திறன் சான்றிதழை வைத்து அனுப்பியதால் எதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கனும். தேவையான சான்றிதழ் அல்லது தகவலை இணைக்காவிட்டால் தான் விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த வேலைக்கு 50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை
அதை அவர் உணர்ந்திருந்தால் இந்த பதிவே தேவையில்லை

50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை என்பது கோப்பில் எங்கு உள்ளது என்பது தான் கேள்வி. இல்லாத ஒன்றை இருப்பதாக சொன்னது நீங்கள். இருந்தா காட்டுங்க என்று சொல்பவர்களை பொய் சொல்றாங்க என்பவர்களை என்னவென்று சொல்வது??
விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன
அறிவிப்பிலும் தெளிவாகவே உள்ளது

சரவணன் அதை முறையாக படிக்கவில்லை
சரவணன் விண்ணப்பத்தை செவித்திறன் சான்றிதழை வைத்து நிராகரித்தது குற்றம்.
அறிவிப்பில் கேட்கப்படாத காது திறன் சான்றிதழை அவர் ஏன் அனுப்பினார்

அனுப்பியதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கலாமா?? அனுப்பியது குற்றமில்லை ஆனால் அவ்வாறு அனுப்பியதால் நிராகரித்தது குற்றம்.

இந்த வேலைக்கு குறிப்பிட்ட காது கேட்கும் திறன் தேவை, குறிப்பிட்ட பார்வைத்திறன் தேவை (தரம் - III அல்லது அதற்கு மெம்பட்ட தரம் ஆகும்.), குறிப்பிட்ட அளவு கை கால் திறன் தேவை (40 சதம்) ஆனால் காது திறன் குறைவாக உள்ளவர்களுக்கு உள்ள இடப்பங்கீடு இங்கு கிடையாது

இந்த வேலைக்கு குறிப்பிட்ட காது கேட்கும் திறன் தேவை என்று நீங்கள் சொன்னதாலயே உங்களிடம் அறிவிப்புல இருந்தா வெட்டி ஒட்டுங்க என்று கேட்கிறோம். அறிவிப்பில் இல்லை என்றால் அதை நீங்கள் ஒத்துக்கொண்டிருக்கவேண்டும்.

//அப்படி ஒரு விதி இருப்பின், எழுதவிட்டு பின்னரே இவரை பரிசோதித்திருக்கவேண்டும்.தேவையில்ல்லாத ஒரு சான்றிதழை வைத்து எழுதவிடாதது தவறில்லையா? //

இவரே ”நான் தகுதி இல்லை” என்று அனுப்பிய பின்னர் அவர்களால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது

அப்படி விதியே இல்லாத போது இவர் எப்படி தகுதியில்லாதவர் ஆவார்.

குறும்பன் said...

//அறிவிப்பில் 4.உ இது தான்
மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில் உடல் ஊனத்தின் இயல்பையும் இயலாமையின் அளவையும் குறிப்பிட்டு அத்தகைய உடல் ஊனம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கான பணிகளை திறம்படச் செய்வதற்கு தடையாக இருக்காது என்று மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும்
--
நீங்கள் தெளிவாக இல்லை என்று கூறுவது உண்மைக்கு முரணாக உள்ளது.//
தெளிவாக சுட்டியமைக்கு நன்றி. வெட்டி ஒட்டுனாதான் நமக்கு அதிலிருக்கிறதே தெரியுது :-((

சுட்டியதற்கு நன்றி சொன்ன பிறகும் நான் சொல்வது பொய் பொய் என்று சொல்லுவது .. என்னத்த சொல்வது :-))

தெளிவாக சுட்டியமைக்கு நன்றி.
அரசு தெளிவாகவே கூறியுள்ளது

சில விண்ணப்பதாரர்களுக்கு இல்லை. வேலை வேண்டுவது விண்ணப்பதாரர் தான்.

இவர் இதற்கு முன்னர் அதாவது Friday, February 25, 2011 2:35:00 AM கூறியது
என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ

அப்படி என்றால் இவர் கூறுவதில் ஒன்று உண்மை, மற்றொன்று பொய்

எது உண்மை, எது பொய் என்று அவர் தான் கூறவேண்டும்

நான் கூறுவதில் எதுவும் பொய் இல்லை, சரவணனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு அவரின் செவித்திறன் தான் காரணம் என்று நீங்கள் கூறியது பொய்.

ஐயா குறும்பன்,

செவித்திறன் குறைவானவர்களுக்கு இந்த வேலையில் இடப்பங்கீடு கிடையாது

மிக்க மிக்க நன்றி இதை முதலிலேயே சொல்லியிருந்தால் நன்று. உண்மைத்தமிழன் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உங்கள் செவித்திறன் குறைபாடு காரணமில்லை, உங்கள் விண்ணப்பத்தை கையாண்ட அரசு ஊழியர் தான் காரணம்.

குறும்பன் said...

//வேலை சுலபமா முடிஞ்சுதா? இதுக்கு நிறைய பின்னூட்டம் தேவையே இல்லையே.//

மற்றப்படி நீங்கள் சொன்ன பொய்களை எல்லாம் நான் ஆதாரங்களுடன் மறுத்து விட்டதால்

இந்த அறிவிப்பிற்கு தொடர்பில்லாத ஒரு விபரத்தை கேட்டு, அது இல்லை என்று நான் கூறியவுடன், இதோ அறிவிப்பில் இல்லை என்று திசை திருப்பும் முயற்சி புரியாது என்றா நினைகிறீர்கள் :) :)

மீண்டும் முதலிருந்து படித்து பாருங்கள்

நீங்கள் சொன்ன பொய்கள் அனைத்தும் உங்களை பார்த்து சிரிக்கின்றன

உங்கள் பொய்யை நிருபிக்க என்னை பொய் சொல்றேன் என்கிறீர்கள். என் கேள்வியை எல்லாம் நல்லா படிச்சி பாருங்க நான் என்ன கேட்டேன் என்பது புரியும். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களை பார்த்து சிரிக்கின்றன

//பெட்ரோல் = ரூ 50, டீசல் = ரூ 45 என்று அறிவிப்பில் உள்ளதாக சொல்கிறார் என்று கொள்வோம். //

நீங்கள் கேட்பது டீசல் விலை அல்ல, அறிவிப்பில் இல்லாத சமையல் எரிவாயு விலை அதுவும் சமையல் எரிவாயு விலை என்னவென்று நீங்களே கூறியபின்னரும் கூட

டீசல் விலை என்ன என்பதை கூறிவிட்டீர்கள் ஆனால் பெட்ரோல் விலையை பற்றி நீங்க ஒன்னும் சொல்லவில்லை . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் பெட்ரோல் விலை காரணம் என்று நீங்கள் சொன்னதால் அது அறிவிப்பில் உள்ளதா என்று கேட்கிறேன். நீங்கள் டீசல், சமையல் எரிவாயு விலை, ... பற்றி சொல்வதெல்லாம் சரி ஆனால் இடுகைக்கே காரணம் பெட்ரோல் என்பதை மறந்து விட்டீர்கள்.

இப்பொழுது அறிவிப்பில் இல்லாத விஷயத்தை கூறி (அதுவும் இவரே ஏற்கனவே அது அறிவிப்பில் இல்லை என்று இதே இடுகையில் கூறியிருக்கிறார்) அதை வெட்டி ஒட்டுங்கள் என்கிறார்

அறிவிப்பில் இல்லை என்று தான் முதலில் இருந்து கூறுகிறேன். என் கண்ணுக்கு தெரியாம இருக்கோ என்பதால் தான் உங்களிடம் கேட்டேன் ஏன்னா நீங்க தான் அறிவிப்பில் இருக்குன்னு சொன்னிங்க.

//செவித்திறன் பற்றி குறிப்பிடவில்லை. அப்புறம் தான அளவு. அறிவிப்பு இருந்தா வெட்டி ஒட்டவும். (english ok)இருந்தா விளக்கெண்ணைய விட்டு படிச்சும் கோப்பிலிருக்கறது எனக்கு தெரியலை என்பதை ஒத்துக்கறேன்.//
குறும்பன் சார்

உங்களிடம் ஒரு கேள்வி “தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில்” என்ற வரிகள் அறிவிப்பில் உள்ளனவா இல்லையா

கண் செக்கப்பா :-)) இருக்கு. அறிவிப்புல செவித்திறன் குறைவானவர்கள் மாற்றுதிறனாளி என்று எங்கும் காணோம். தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் அது இருக்குன்னா நான் இது வரை கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிட்டேன். ஏன்னா என் கேள்வி எல்லாம் http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf கோப்பில் உள்ளதை வைத்துதான். அறிவிப்புல இருந்தா வெட்டி ஒட்டுங்க

தெளிவா நான் சொல்லியிருக்கேன் என் கேள்விகள் அனைத்தும் http://tnpsc.gov.in/Notifications/248_not_tam_vao2k10.pdf கோப்பில் உள்ளதை வைத்துதான். தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் செவித்திறன் குறித்து இருக்குன்னா நான் இது வரை கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிட்டேன் என்று. இவ்வளவோ பின்னூட்டத்துக்கு பதிலா, இந்த அறிவிப்பில் இல்லை மற்ற (தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி) படிவத்தில் தான் செவித்திறன் பற்றி இருக்குன்னு சொல்லி இருந்திங்கன்னா பரவாயில்லை, அதை சொல்லாம நீங்க சொல்லறது தான் நிசம் நான் சொல்றது பொய்ன்னு சொன்னா என்ன பண்றது??

Bruno said...

குறும்பன் அவர்களே

முதலில் நான் ஏற்கனவே என்ன எழுதியுள்ளேன் என்று படித்து விட்டு உங்க்ள் கேள்வியை கேட்கவும்

அது சரி

நீங்கள் என்ன எழுதினீர்கள் என்று கூட தெரியாமல் முன்னுக்கு பின் முரணாக பேசும் உங்களிடம் இதை எதிர்ப்பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்

--

குறும்பன் Monday, February 28, 2011 9:20:00 AM கூறுவது
எனக்கு புரிந்து கொள்ளும் படி உள்ளது

இவர் இதற்கு முன்னர் அதாவது Friday, February 25, 2011 2:35:00 AM கூறியது
என்னைப்போல எத்தனை பேர் மாற்றி புரிந்துகொண்டார்களோ

அப்படி என்றால் இவர் கூறுவதில் ஒன்று உண்மை, மற்றொன்று பொய்

எது உண்மை, எது பொய் என்று அவர் தான் கூறவேண்டும்

---
என்ன கொடுமை சார் இது

இது மட்டுமல்ல
குறும்பன் 2/23/2011 2:27 AM கூறியது
காது கேளாதோர் இப்பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள்.

கிராம அலுவலர் பதவிக்கான 3% ஒதுக்கிடு பெறும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் என்போர் 40% முதல் 50% வரை உள்ள கை, கால் இயக்கத்தில் குறை உள்ளவர்கள் மட்டுமே.

Bruno said...

//காது கேட்கும் திறன் சான்றிதழை வைத்து அனுப்பியதால் எதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கனும். //

இது குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன்


//தேவையான சான்றிதழ் அல்லது தகவலை இணைக்காவிட்டால் தான் விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.//

மேலே நான் எழுதியுள்ளதை படித்துப்பார்க்கவும்

//இந்த வேலைக்கு 50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை அதை அவர் உணர்ந்திருந்தால் இந்த பதிவே தேவையில்லை//

இந்த அறிவிப்பில் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும் என்ற வரிகள் உள்ள நிலையில் அது முழுக்க முழுக்க உண்மைத்தமிழனின் தவறு தான்

Bruno said...

//50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை என்பது கோப்பில் எங்கு உள்ளது என்பது தான் கேள்வி//

50 சதம் மேல் செவித்திறன் குறைபாடு இருந்தால் தகுதியில்லை என்பது இந்த அறிவிப்பில் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்று வழங்க வேண்டும் என்ற வரிகளில் உள்ளது என்பது பதில்

இதற்கான பதிலை நான் எவ்வளவு முறையோ அளித்தாகிவிட்டது

Bruno said...

//இல்லாத ஒன்றை இருப்பதாக சொன்னது நீங்கள். இருந்தா காட்டுங்க என்று சொல்பவர்களை பொய் சொல்றாங்க என்பவர்களை என்னவென்று சொல்வது??//

இருப்பதை இருப்பதாக சொன்னது நான்
அறிவிப்பில் இல்லை என்று சொன்னது நீங்கள்

ஒரு மறுமொழியில் புரிந்து கொண்டேன் என்றும், மற்றொரு மறுமொழியில் புரிந்து கொள்ளவில்லை என்றும் பொய் கூறியது நீங்கள்

Bruno said...

//சரவணன் விண்ணப்பத்தை செவித்திறன் சான்றிதழை வைத்து நிராகரித்தது குற்றம். //

இல்லை

அது சரியான செயல்

இது குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன்

Bruno said...

//அனுப்பியதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கலாமா??//

ஆம்
நிராகரிக்க வேண்டும்
அதுதான் சட்டப்படி சரியான செயல்

//அனுப்பியது குற்றமில்லை ஆனால் அவ்வாறு அனுப்பியதால் நிராகரித்தது குற்றம்.//

இல்லை
குற்றமில்லை. இது குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளேன்