ஸ்பெக்ட்ரம் ஊழல் - சர்வதேசத் தொடர்புகள் - பாகம்-5

06-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ஆண்டிமுத்து ராசாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம்..!


இந்த நிறுவனச் செயல்பாடுகளால் பாகிஸ்தான், சீனா, மற்றும் மாபியா தலைவன் தாவூத் இப்ராஹிம் போன்றோரிடம் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு பல முனைகளில் இருந்தும் அச்சுறுத்துல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி இழப்பு என்பது மட்டுமே தற்போதைய கேள்வியல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை ஆகியவைதான் முக்கியமான கேள்வி. இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இவையனைத்தும் ஆரம்பம் முதலே தெரியும். இது குறித்த பல்வேறு காலக்கட்டங்களில் எதிர்ப்புகளைத் தெரிவித்தபோதும், ஆ.ராசாவின் கீழ் இருந்த தொலைத்தொடர்புத் துறை அனைத்துக்கும் ஒப்புதல் அளித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர மெனளத்தைக் கடைப்பிடித்து வந்தது ஏன்..? யாருடைய உத்தரவின்பேரில் இந்த அமைதி? தொலைத் தொடர்புத் துறை அலைக்கற்றை என்பது மதிப்புமிக்க அரிதான வளம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கடந்த நான்கு பகுதிகளில் நாம் எழுதியிருக்கும் செய்திகளின் சாரம்சமும் இதுதான்..

இந்த அடிப்படையில் அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு மையம் என்ற அமைப்பு சார்பில் புதிதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 1-ம் தேதியன்று டெல்லியில் நடந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

“அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களிடம் இருந்து அந்த உரிமங்களைப் பறிக்காதவரை, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கின்றன. அவை இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை..” என்று வழக்கறிஞர் பிரசாந்த்பூஷணும், சுப்பிரமணியன் சுவாமியும் வாதிட்டிருக்கிறார்கள்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இந்நிறுவனங்கள் பற்றி கூடுதலான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி மார்ச் 1-ம் தேதி அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயர்களையும் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காகத் திரட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்தப் பக்கங்களில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வரும் டெல்லி பிரமுகர் ஒருவர் நம்மிடம் இது குறித்து விரிவாகப் பேசினார். “2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களின் மிக முக்கியமானது ஸ்வான். ரிலையன்ஸ் மற்றும் டைகர் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டதே இந்த ஸ்வான். இந்த நிறுவனத்தை அவர்கள் ஆரம்பித்துவிட்டு அதன் பிறகு பல்வா குரூப்புக்கு விற்பனை செய்துவிட்டார்கள். அவர்கள் டி.பி.ரியாலிட்டி என்று தங்களுக்கு புதிய பெயரைச் சூட்டிக் கொண்டார்கள்.

இந்த நிறுவனம் தன்னுடைய 45 சதவிகிதப் பங்குகளை துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எட்டிஸாலட் என்ற நிறுவனத்துக்கு விற்றது. 5.27 சதவிகிதப் பங்குகளை தமிழகத்தைச் சேர்ந்த ஜெனெக்ஸ் எக்ஸிம் என்ற நிறுவனத்துக்கு விற்றார்கள். இப்போது எட்டிஸாலட் என்ற நிறுவனம், டி.பி.டெலிகாம் என்ற பெயரில் இயங்குகிறது. வில்லங்கமே இந்த எட்டிஸாலட் அல்லது டி.பி.டெலிகாம் என்ற நிறுவனத்தில் இருந்துதான் தொடங்குகிறது..” என்ற பீடிகையுடன் அவர் ஆரம்பித்தார்.

“பாகிஸ்தான் நாட்டின் டெலிகம்யூனிகேஷன் துறையை பி.டி.சி.எல். என்பார்கள். இதன் மிக முக்கியமான பொறுப்பில் 10 பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேர் எட்டிஸாலட் நிறுவனத்திலும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதாவது 2-ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற எட்டிஸாலட் நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றே..” என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள்.

அப்துல் ரஹ்மான் அப்துல்லா அப்துர் ஹிப்ராஜிம் அலி நுரானி(Chairman And Chief Executive Officer)
 

அப்துல்லாஹ் அஹமது சலி அஹமது அலி சாவ்லே(Chief Humon Resources Officer)
 
 

ஃபாஹில் முகமது எர்ஹமா அலி அன்சாரி( Executive Vice President-Engineering)
 
 

 அப்துல்லாஹ் அகமத் ஓமர் தார்யம்(General Manager, Northern Emirates)

 

அகமத் அலி ஜார்வான் (General Manager, Real Estate)

ஆகிய ஐவர்தான் எட்டிஸாலட் நிறுவனத்தின் பொறுப்பிலும், பாகிஸ்தான் நாட்டின் அரசுத் துறையான டெலிகம்யூனிகேஷனிலும் இருக்கிறார்கள்.

இதனை ஒப்புக் கொண்டு பி.டி.சி.எல். தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் http://www.ptcl.com.pk/bod.php?pd_id=42 இவர்களது பெயர்களையும் இணைத்தே வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்குத் தொலைத்தொடர்பு உரிமங்கள் தரப்பட்டுள்ளன என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி தருவதாக இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு ஃபாரின் இன்பர்மேஷன், பிரமோஷன் போர்டு என்று சொல்லப்படும் எஃஐ.பி.பி. எதிர்ப்புத் தெரிவித்ததா அல்லது ஆதரவு தெரிவித்ததா என்ற கேள்விகள் முக்கியமானது.

ஏனென்றால், இந்த அமைப்புக்குள் பிரதமர், நிதியமைச்சர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு முக்கிய மனிதர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் எப்படி இதனை அனுமதித்தார்கள்? யார் அவர்கள் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற ரகசியங்கள் இப்போது சுப்ரீம் கோர்ட் மூலமாக வெளியில் வரத்தான் போகிறது..” என்று பீதியைக் கிளப்புகிறார் அவர்.

ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கிய பால்வா குரூப் பற்றி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கிறோம். இதன் சேர்மன் வினோத் கே.கோயங்கோ.

 

நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருப்பவர் சாஹித் யூ.பால்வா. இவர் மீது இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு கருப்பு கடிதத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.


இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக தாவூத் இப்ராஹிமை இணைத்துப் பேசிய கதையும் உண்டு. இந்த ஸ்வான் நிறுவனமும் எட்டிஸாலட்டும் இணைந்துதான் எட்டிஸாலட்-டி.பி.டெலிகாம் http://www.etisalat.ae என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பெயர் மாற்றமும் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதிதான் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் முகமது உசேன் ஓம்ரான், அஹ்மத் பின் அலி, கலிபா அல் போராஹ், நசீன் பின் ஓபுத் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இதன் உறுப்பினராக இருக்கிறார்.

அந்தத் தமிழகப் பிரமுகரின் ஆதி அந்தங்கள் அனைத்தையும் இப்போதுதான் நாங்கள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தத் தொழிலதிபரின் முக்கியமான வர்த்தகத் தொடர்புகள் தமிழகத்தில் காலூன்றி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய ஆட்சி மேலிடத்துக்கு மிக, மிக நெருக்கமான நபராகவும் இருக்கிறார். அதை வைத்துத்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்த நிறுவனம் வாங்கியிருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதுதான் பணப் பரிவர்த்தனைகளின் அளவு வெளிச்சத்துக்கு வரும்..” என்ற சஸ்பென்ஸுடன் முடித்தார் அந்த டெல்லி பிரமுகர்.

- டெல்லி ஜூத்

நன்றி : ஜூனியர் விகடன்(09-02-2011)

மேற்கண்ட கட்டுரையின் இறுதிப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் சொல்லாத அந்தத் தமிழகப் பிரமுகரின் பெயர் "சையத் சலாவுதீன்." இவரைப் பற்றிய முழு தகவல்களும் அடங்கிய இன்னுமொரு கட்டுரை இது :

சலாவுதீனுக்கு வயது 68. துபாயில் வசிக்கும் இவரின் பூர்வீகம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஊரான கீழக்கரை. இவர் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.


“துபாயைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இ.டி.ஏ. அஸ்கான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்தான் இந்த சலாவுதீன். இந்தியா, துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் உலக அளவில் சுமார் 20 நாடுகளில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் குழுமம் அது.

ரியல் எஸ்டேட், பல அடுக்குக் குடியிருப்புகள் கட்டுதல், கப்பல் போக்குவரத்து, ஏர்கண்டிஷன் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், பூமிக்கு கீழே மெட்ரோ ரயில் பாதை அமைப்பதில் மின் இயந்திரவியல் பயன்பாடு எனப் பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கும் நிறுவனங்கள் அந்தக் குழுமத்தில் உள்ளன. இப்படி 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சலாவுதீனின் கண் அசைவில் செயல்படுகின்றன.

25 ஆயிரம் கோடி அளவில் பணப் புழக்கம் உள்ளதாகச் சொல்லப்படும் நிறுவனங்கள் அவை. 60 ஆயிரம் தொழிலாளர்கள் இவற்றில் பணிபுரிகிறார்கள்!” என்று தமிழக தொழில் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

”சலாவுதீன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவர். இந்திய அளவில் காங்கிரஸ், மாநில அளவில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டுபவர். பிரபல தொழிலதிபரான பி.எஸ்.அப்துர் ரஹ்மான் இவரை, துபாய்க்கு அழைத்துப் போனார். அங்கே தனது பிசினஸ் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். கிடைத்த வாய்ப்புகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிவேகமாக வளர்ந்து, அந்த கம்பெனிகளின் உச்ச பதவிவரை வளர்ந்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து ஏழை-எளிய வீட்டு இளைஞர்களைத் துபாய்க்கு அழைத்து வேலை கொடுத்து ஊக்குவிக்கவும் செய்தார். இ.டி.ஏ. என்ற ஆங்கில வார்த்தையை ‘எங்கும் தமிழ் ஆட்கள்’ என்று விரிவாக்கம் செய்கிற அளவுக்கு தமிழர்களை பல மட்டத்துக்குக் கொண்டுபோனது இந்த நிறுவனம். இவரது கப்பல் கம்பெனிக்கும் தமிழக அரசியல் தலைவர்களின் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகக்கூட பேச்சுகள் உண்டு.

2000-ம் வாக்கில் இந்தியாவில் தனது பிசினஸை பிரம்மாண்டமாக விரிவாக்கினார் சலாவுதீன். தகவல் தொழில் நுட்பத் துறை கிடுகிடுவென வளர்ச்சி அடைந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, டெல்லி, சென்னை, பெங்களூரு நகரங்களில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் துறையில் முழு வீச்சில் கால் பதித்தார். துபாய்க்கும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில முக்கிய அரசியல் வி.ஐ.பி-களுக்கும் ஒரு பாலமாகவே இவரது நிறுவனங்கள் உதவுவதால், இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் தங்கு தடையில்லாமல் உள்ளது!” என்று சொல்லி முடித்தனர்.

“பிரபல தொழிலதிபரான சலாவுதீனுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என்று ஐயப்படுகிறீர்கள்..?” என்று டெல்லியில் உள்ள வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

“ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு டெண்டர் விடப்படுவதற்கு முன்பு, இங்கே குறைவான விலைக்கு வாங்கி, வெளிநாட்டு கம்பெனிக்குக் கூடுதல் விலைக்கு விற்க சிலர் திட்டம் போட்டனர். அந்த வகையில், 6000 கோடி அளவில் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குச் சிக்கியுள்ளன. இதில் தொடர்புடையவர்களைக் கண்காணித்த போது அவர்கள் வசமிருந்து கிடைத்த சில தகவல்கள், சலாவுதீனின் நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்க எங்களைத் தூண்டின.

மேலும் விசாரணையில், ‘மும்பையில் நரிமன் பாயின்ட்’ ஏரியாவில் மிகப் பெரிய கட்டடத்தின் மாடியில் ஒரு நிறுவனத்தை திடீரென ஆரம்பித்துள்ளனர். இதே நிறுவனத்தை ஏனோ திடீரென்று ஸ்வான் டெலிகாம் என்று பெயர் மாற்றம் செய்து, அதன் பெயரில் சுமார் 1500 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை டெண்டரில் எடுத்தனர். இந்த கம்பெனிக்கு வங்கி கேரன்டி கொடுத்தது, துபாயில் இயங்கும் கப்பல் போக்குவரத்து கம்பெனி ஒன்று என்று தகவல் கிடைத்தது.

மிகக் குறுகிய காலத்தில், ஸ்வான் கம்பெனி பெற்ற அலைவரிசை ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை எடிஸலாட் என்கிற துபாய் நாட்டு டெலிகாம் கம்பெனிக்கு விற்றுள்ளனர். இதில்தான் 4500 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பார்த்துள்ளனர்.

‘மும்பையில் இயங்கிய கம்பெனியின் பங்குதாரர்கள் யார்? அவர்களுக்கும் சலாவுதீன் தொடர்பான சிலருக்கும் ஏதாவது பழக்க வழக்கம் உண்டா? துபாயில் உள்ள கப்பல் கம்பெனி யாருடையது?’ இப்படியான பல கேள்விகளுக்குப் பதில் தேடி வருகிறோம். இந்த கம்பெனி இருந்த அதே கட்டடத்தில் தமிழகப் பிரமுகர்கள் சிலர் அங்கம் வகிக்கும் இரண்டு கம்பெனிகள் உள்ளன. அதைப் பற்றியும் விசாரித்து வருகிறோம்!” என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயர் அதிகாரி.

தொழிலதிபர் சலாவுதீனின் பின்னணி பற்றி தமிழகத் தொழிலதிபர்கள் சிலரிடம் கேட்டபோது, 2007-ம் ஆண்டுத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இடம் பெற்று உள்ள புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.

தொடர்ந்து, ”இது, தொழிலதிபர் சலாவுதீனின் கம்பெனியும் டிட்கோவும் கூட்டாக சேர்ந்து 3,750 கோடி மதிப்பீட்டில் டவுன்ஷிப் ஒன்றை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியுடன் கையொப்பம் இட்டபோது எடுத்த படம்!

இதுபோலவே, தமிழக அரசு கொண்டு வந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம், சென்னை அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டடம்., இரண்டின் பின்னணியிலும் சலாவுதீன் தொடர்பானவர்களின் பங்கு உண்டு.  மெட்ரோ ரயில் திட்டத்தில் பூமிக்குக் கீழே பாதை அமைக்கப்படும்போது, முக்கியப் பணிகளுக்கான கான்ட்ராக்ட்டும் சலாவூதினின் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது..” என்கிறார்கள்.

இதற்கிடையே, ‘தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் மற்றும் பல்துறை வி.ஐ.பி-க்கள் யார் யார் சமீப காலத்தில் அடிக்கடி துபாய் சென்று வந்தார்கள்? அங்கே யாரையெல்லாம் சந்தித்தார்கள்?’ என்கிற உள் விஷயங்களை எல்லாம் மொட்டை பெட்டிஷன்களாகத் தட்டிவிடத் தொடங்கி உள்ளார்களாம் சிலர்.

அன்று ஜெ. சொன்னது!

கடந்த ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, ”ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, இ.டி.எ. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இ.டி.எ. குழுமம்தான், 700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு. ஸ்வான் நிறுவனத்தின் 5.27 சதவிகிதப் பங்குகளை இந்த ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனம்தான் வாங்கியுள்ளது.

1970-களிலிருந்து, கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது இ.டி.எ.குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு.க.முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட, ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற திரைப்படத்தை, வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்! பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

- இந்தக் கட்டுரையும் ஒரு மாதத்திற்கு முன்பு இதே ஜூனியர் விகடனில்தான் வெளியாகியிருந்தது.. அப்போது சலாவுதீனின் பெயரை வெளியிட்டு, அவரது ஜாதகத்தையே இப்படி பிட்டு, பிட்டு வைத்திருக்கும் ஜூனியர் விகடன், இந்த வாரம் பெயர் குறிப்பிடாமல் சொல்வதன் அர்த்தம் என்ன என்றுதான் எனக்குத் தெரியவில்லை..?!

31 comments:

அகில் பூங்குன்றன் said...

Nirya vivarangalai arumaiyaga thiratti ullirkal.

Anonymous said...

Great Effort !!!!!!!! thamizhan ..i totally admire your blog ..,keep it up ..,ARACHEETRAM THODARATUM

khaleel said...

dear unmai tamilan,

spectrum vishayathil periya alavil ulal nadandathu enbathil sandhegam illai. aanaal idhil pakistan sathi irukirathu enbathu sirapai varavalaipathagum. etisalat idhu nadaparthaku munnare indiavil invest seithu vittathu. etisalat is 100% owned by uae govt. it exists solely for making more money to the govt and not for spying other countries data. it is successfully operating in four other countries apart from india and including pakistan.

ps: indha niruvanathil thaan naan pani purikiren. indha katturayai yaaravathu en niruvanathil paarthaal siripaargal.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.உண்மைத்தமிழன்,
தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையென்றால், அதில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் என் வன்மையான கண்டனங்கள். அவர்களுக்கு தக்க தண்டனைகள் கிடைக்க விழைகிறேன்.

ஆனால்,சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்களை விடவும் மூவாயிரம் அப்பாவி மக்களின் உயிர் பன்மடங்கு விலைமதிப்புள்ளது அல்லவா?

நீரா ராடியா டேப் ஆதாரத்தை விட, உயிரைப்பணயம் வைத்து சேகரித்த தெஹல்காவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ ஆதாரங்களும், இதன் உண்மை கண்டறியவேண்டி உச்சநீதிமன்றமே நியமித்து குஜராத் அனுப்பிய 'சிறப்பு புலனாய்வுக்குழு'(SIT) சமர்ப்பித்த அறிக்கையும் ரொம்பவும் பலமான ஆதாரங்கள் அல்லவா?

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211coverstory.asp

இதைப்பற்றி பதிவுலகின் முன்னணி பதிவராகிய தாங்கள் ஒரு பதிவு போட்டால் மிக்க மிகிழ்ச்சி அடைவேன்.

ரிஷி said...

ஹும்ம்ம்!!! என்னத்தச் சொல்ல..!


அப்புறம்... இரண்டு நாட்களுக்கு முன்னர் தினகரனில் வெளியான செய்தி : அறுபத்தி ஒன்பதாயிராத்து சொச்சம் ரூபாய் தனிநபர் மாத வருமானம் என்பது தமிழ்நாட்டின் தற்போதைய நிலையாம்!!!

இன்றைய செய்தி : வருடத்திற்கு ரூ.3.44 லட்சம் முதல் 17 லட்சம் வரை சம்பாதிப்போர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாம்!!

அப்படினா 12000 மாதச்சம்பளம் வாங்கும் நானெல்லாம் ஏழைதானே!! என்னை விடவும் குறைவாக சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை நிச்சயம் கோடிகளில்தான் இருக்கும்! அப்பேர்ப்பட்ட பரம ஏழைகளும் வெங்காயம் கிலோ ரூ.100 கொடுத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. கோடிகளில் திளைப்பவர்களும் வெங்காயத்தை 100 ரூ கொடுத்துத்தான் சாப்பிடுகிறார்கள்!!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
Nirya vivarangalai arumaiyaga thiratti ullirkal.]]]

எல்லாம் ஜூனியர்விகடனையே சேரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தில்லு முல்லு said...
Great Effort! thamizhan. i totally admire your blog. keep it up. ARACHEETRAM THODARATUM]]]

நன்றி தில்லுமுல்லு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[khaleel said...

dear unmai tamilan,

spectrum vishayathil periya alavil ulal nadandathu enbathil sandhegam illai. aanaal idhil pakistan sathi irukirathu enbathu sirapai varavalaipathagum. etisalat idhu nadaparthaku munnare indiavil invest seithu vittathu. etisalat is 100% owned by uae govt. it exists solely for making more money to the govt and not for spying other countries data. it is successfully operating in four other countries apart from india.]]]

சரி.. அப்படியானால் பாகிஸ்தான் அரசுத் துறையின் உயரதிகாரிகள், எப்படி இந்த நிறுவனத்திலும் அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?

உண்மைத்தமிழன் said...

[[[முஹம்மத் ஆஷிக் said...

சகோ.உண்மைத்தமிழன்,
தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையென்றால், அதில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் என் வன்மையான கண்டனங்கள். அவர்களுக்கு தக்க தண்டனைகள் கிடைக்க விழைகிறேன்.

ஆனால், சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்களை விடவும் மூவாயிரம் அப்பாவி மக்களின் உயிர் பன்மடங்கு விலைமதிப்புள்ளது அல்லவா?

நீரா ராடியா டேப் ஆதாரத்தைவிட, உயிரைப் பணயம் வைத்து சேகரித்த தெஹல்காவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ ஆதாரங்களும், இதன் உண்மை கண்டறிய வேண்டி உச்சநீதிமன்றமே நியமித்து குஜராத் அனுப்பிய 'சிறப்பு புலனாய்வுக் குழு'(SIT) சமர்ப்பித்த அறிக்கையும் ரொம்பவும் பலமான ஆதாரங்கள் அல்லவா?

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211coverstory.asp

இதைப் பற்றி பதிவுலகின் முன்னணி பதிவராகிய தாங்கள் ஒரு பதிவு போட்டால் மிக்க மிகிழ்ச்சி அடைவேன்.]]]

இதைப் பற்றியும் நான் நேற்றுதான் கேள்விப்பட்டேன். விரைவில் இது பற்றி பதிவிடுகிறேன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஹும்ம்ம்!!! என்னத்தச் சொல்ல..!
அப்புறம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தினகரனில் வெளியான செய்தி : அறுபத்தி ஒன்பதாயிராத்து சொச்சம் ரூபாய் தனிநபர் மாத வருமானம் என்பது தமிழ்நாட்டின் தற்போதைய நிலையாம்!!!

இன்றைய செய்தி : வருடத்திற்கு ரூ.3.44 லட்சம் முதல் 17 லட்சம் வரை சம்பாதிப்போர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாம்!!

அப்படினா 12000 மாதச் சம்பளம் வாங்கும் நானெல்லாம் ஏழைதானே!! என்னை விடவும் குறைவாக சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை நிச்சயம் கோடிகளில்தான் இருக்கும்! அப்பேர்ப்பட்ட பரம ஏழைகளும் வெங்காயம் கிலோ ரூ.100 கொடுத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. கோடிகளில் திளைப்பவர்களும் வெங்காயத்தை 100 ரூ கொடுத்துத்தான் சாப்பிடுகிறார்கள்!!]]]

ஹா.. ஹா.. ரிஷி.. அது நம் தலையெழுத்து..?

சொந்தக் காசில் வெங்காயத்தை வாங்குபவர்களாக இருந்தால் இது அவர்களுக்குத் தெரியும். வருடக்கணக்காக ஓசியிலும், அடுத்தவன் காசிலுமே கை நனைப்பவர்களுக்கு மக்களின் கஷ்டம் பற்றி எப்படித் தெரியும்..?

Arun Ambie said...

அருமையான் ஒப்பீடு. உள்குத்துக்கள் உலகளாவிய அளவில் இருக்கின்றன. Globalization என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ?

Indian Share Market said...

அன்பு அண்ணன் அவர்களக்கு,எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார் கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங ்கள், புரிந்துகொள்ளுங ்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்க ள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

முத்தரசு said...

எல்லாம் கருமம் பிடிச்ச உள் குத்து தான்

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
அருமையான ஒப்பீடு. உள்குத்துக்கள் உலகளாவிய அளவில் இருக்கின்றன. Globalization என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ?]]]

இல்லை.. அரசியல் பதவி வகிப்பதே அள்ளுவதற்காக என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

அன்பு அண்ணன் அவர்களக்கு, எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராட வேண்டும் என்று இல்லை. கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX, Facebook, orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்ய முடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.]]]

நானும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

எல்லாம் கருமம் பிடிச்ச உள் குத்துதான்]]]

ஜூ.வி.யில் நடந்திருப்பது இதுதான்..!

Unknown said...

நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்பதுதான் நம் ஜனநாயகம்
lalithakrishnan

Kite said...

அண்ணே. அடுத்த இரண்டு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

http://jagannathchennai.blogspot.com/2011/02/blog-post_07.html

Anonymous said...

>>> தல கிர்ருங்குது. நான் படிச்சி படிச்சி டயர்ட் ஆன விஷயம் இந்த ஸ்பெக்ட்ரம் தான். நீக்கமற நிறைந்திருக்கிறதே..தோண்ட தோண்ட எத்தனை பூதங்கள்..!!உங்களுக்கும் ஒரு வித சலிப்பை உண்டாக்கி இருக்குமே சார்!!

எல் கே said...

அண்ணாச்சி, இந்த பங்கு வணிகத்தில் participatry note மூலம் பல மில்லியன் டாலர் கறுப்புப் பணம் புழங்குதாம் கொஞ்சம் அதைப் பத்தி எழுதுங்க

உண்மைத்தமிழன் said...

[[[lalitha said...
நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்பதுதான் நம் ஜனநாயகம்.]]]

கரீக்ட்டா சொல்றீங்க லலிதா..! இதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...
அண்ணே. அடுத்த இரண்டு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். பார்த்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
http://jagannathchennai.blogspot.com/2011/02/blog-post_07.html]]]

வருகிறேன் ஜெகனாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் ! said...

>>> தல கிர்ருங்குது. நான் படிச்சி படிச்சி டயர்ட் ஆன விஷயம் இந்த ஸ்பெக்ட்ரம்தான். நீக்கமற நிறைந்திருக்கிறதே. தோண்ட தோண்ட எத்தனை பூதங்கள்..!! உங்களுக்கும் ஒருவித சலிப்பை உண்டாக்கி இருக்குமே சார்!!]]]

என்ன செய்யறது..? இருந்தாலும் சலிக்காம அள்ளிக்கிட்டேல்ல இருக்கானுக படுபாவிப் பயலுக..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

அண்ணாச்சி, இந்த பங்கு வணிகத்தில் participatry note மூலம் பல மில்லியன் டாலர் கறுப்புப் பணம் புழங்குதாம் கொஞ்சம் அதைப் பத்தி எழுதுங்க]]]

விசாரிக்கிறேன் அண்ணாச்சி..!

Kite said...

வருகிறேன் ஜெகனாத்..!//

வருகைக்கு நன்றி அண்ணே.

Kite said...

அண்ணே இரண்டாம் பக்கம் எழுதியிருக்கேன். தேவாஸ் நிறுவனம் கொடுக்கற விளக்கம் மகா மட்டமா இருக்கு.

http://jagannathchennai.blogspot.com/2011/02/blog-post_08.html

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

வருகிறேன் ஜெகனாத்..!//

வருகைக்கு நன்றி அண்ணே.]]]

அதுக்குள்ளேயே நன்றியா..? விடுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

அண்ணே இரண்டாம் பக்கம் எழுதியிருக்கேன். தேவாஸ் நிறுவனம் கொடுக்கற விளக்கம் மகா மட்டமா இருக்கு.

http://jagannathchennai.blogspot.com/2011/02/blog-post_08.html]]]

திருடுனவன் எப்படி சமாளிப்பான்..? இப்படித்தான்..!

Busy said...

http://gulfnews.com/business/telecoms/etisalat-says-had-no-part-in-indian-telecom-scandal-1.759269

உண்மைத்தமிழன் said...

[[[Busy said...
http://gulfnews.com/business/telecoms/etisalat-says-had-no-part-in-indian-telecom-scandal-1.759269]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..! ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது..!

david horlick said...

Great post! I enjoyed reading about Tamil culture and heritage. The information provided is informative and well-written. Keep up the good work in sharing the rich history and traditions of the Tamil community. To learn more about Telecommunication visit: https://iec-telecom.com