உலகப் பதிவர்களே உதவி செய்யுங்கள் - உபகாரம் பெறுங்கள்..!

31-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கு பேராசையெல்லாம் இல்லை.. உங்களுக்கே தெரியும்.. அடுத்தவர் பணத்தின் மீது ஆர்வமோ, கண் ஜாடையோ இல்லவே இல்லை.. இதுவும் உங்களுக்கே தெரியும்..

என் உழைப்பின் மூலமாக என் அப்பன் முருகன் கொடுக்கும் துளியூண்டு பணமே எனக்கு தற்போதைக்கு போதுமானது. எதிர்காலத்தில் கூடுதலாக தேவையெனில், முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!

ஆனாலும் வீடு தேடி வரும் லட்சுமியை நாமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஒருவேளை இதுவே முருகன் அனுப்பியதாக இருந்தால்..? சந்தேகம் வருகிறது தோழர்களே..!

ஆகவே நான் என்ன சொல்கிறேன் என்றால்..

கீழ்க்கண்ட கடுதாசி எனக்கு இ-மெயில் மூலமாக வந்திருக்கிறது. நானும் இந்தக் கடுதாசிக்குப் பதில் போடலாமா வேண்டாமா என்று விருகம்பாக்கம் கெளமாரியம்மன் கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் மரத்தடி ஜோஸியரிடம் அறிவுரை கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று காத்திருக்கிறேன்..!

இந்த இடைவெளியில் எனக்கு திடீர் என்று ஒரு யோசனை.. இன்று, நேற்று, நேற்று முன்தினம் வலையுலகத்தில் நடைபெற்ற, நடைபெற்று வரும் சச்சரவுகளையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நான் ஒருவன் மட்டுமே இந்த மூன்று வருடங்களாக வலையுலகத்தில் வீணாக ஒருத்தரைக்கூட தோழனாக வைத்திருக்க முடியாமல் வெட்டியாக பொழைப்பை ஓட்டி வரும் அபாயத்தை உணர்ந்திருக்கிறேன்.

இந்த ரேஞ்சிலேயே என் பொழைப்பு ஓடினால் நான் செத்துப் போனால்கூட இன்றைய நிலைமையில் 5 மாலைகளுக்கு மேல் எனக்கு விழாது என்பது போல் எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு..!

ஸோ, இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனக்கு முருகப் பெருமான் கொடுத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை நமது சக தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த கடுதாசியில் இருக்கின்ற விவரங்கள் உண்மைதானா..? அல்லது ராமநாராயணன் படத்தில் சாமி ஆடுவார்களே.. அது மாதிரியான டூப்பா.. எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை..! தோன்றவில்லை. கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு..!

ஆகவே, லண்டன் மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நமது சக வலையுலகத் தோழர்கள் கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் இந்த நிறுவனத்தின் முகவரியும், தொலைபேசி எண்ணும் சரிதானா? உண்மைதானா? கூகிள் கம்பெனியின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது அனுமதியுடன்தானா என்பதையெல்லாம் விசாரித்து தக்கத் தகவலைத் தெரிவித்தால் இந்த பரிசுத் தொகையை அவர்கள் அனைவருக்கும் சம அளவில் பங்கிட்டுக் கொடுத்து அவர்களையெல்லாம் எனது தோழனாக வரித்துக் கொண்டு, நான் செத்துப் போனால் எனக்கு மாலை போட அவர்களை அனுமதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்பதை அந்த மருதமலை முருகன் மீது சத்தியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதுதான் எனக்கு வந்த மெயில்..!


THE Google UK GIVEAWAY TEAM.
Belgrave House, 76 Buckingham Palace Road London SW1W 9TQ.
Ph: +447024053930, +447024028674, +44702409 2805,
Fax: +44 8704951196 . Office Open 7 Days, 8am-8pm.
ATTN: GOOGLER,

The receipt of your correspondence have been duly acknowledged, please pardon me for this late response. I'm pleased to inform you that your email address have been checked and it falls among our lucky winning email addresses for this year draw. 

On behalf of all team, I'm happy to inform you that you emerged a winner under Category(A), which is part of our anniversary promotional draws. The draws were held to mark  her 11th year of existence(Anniversary) here in UK . 

No purchase of t i c k e t s were required for this draw, all Participants (email addresses) for this draws were randomly selected from a worldwide range of web searchers who uses the Google search engine(Googler) and other Google ancillary services and this is how your email was picked. Participants were selected through a computer ballot system drawn from 2,500,000 email addresses of individuals and companies from Africa, America, Asia, Australia, Europe, Middle East, and Oceania as part of our International Promotions Program. 

Therefore, Your  winning payout is £850,000 GBP(Eight hundred and fifty thousand Great  British Pound Sterling) as you already know ,your email address was randomly selected along with others from over 100, 000 email addresses on the internet and each email address was attached to a ticket number.

PRIZE PAYMENT MODALITIES (INFORMATION) :
 
1 - Personal prize Pickup:
 
All winners are required to come down in person to personally pickup their prize at any of our disbursement locations (cash pickup centers) here in LONDON.

Requirements for personal prize pickup are :

(a) A printed copy of your WINNING NOTIFICATION(the first mail you received from us)

(b) An International Passport or Drivers license

(c) A tax clearance certificate of your country.

(d) An Affidavit of age Declaration

(e) A Printed copy of your Verification form (you may be asked to fill it as done before)

(f)police report attesting your patriotism and crime free citizen of your Country (Note: You are only required to present the above documents only when you are coming down to UK.)
 
In receipt of these requirements your cash prize will be made available to you after 24hrs. Please.

This option is basically for lucky winners who can easily visit us in person with the above stated pickup requirements.

Your claim deadline is exactly 3weeks from the receipt of this email. Inability to meet up with this stipulated date either due to none availability of some claims documents above,  none availability of travel documents etc. 

May result to loss of winnings as funds will be re-used for other upcoming draws.This option is recommended by the Google lotto management to clear doubts and unnecessary thinking.

This is because we have had series of complaints from individuals that people are using our company name for various forms of indecent acts. So the lotto management would prefer beneficiary winners to come and verify things for themselves about their winning.

2- Online Swift Telegraphic Bank Transfer:
 
Your £ 850,000 GBP(Eight hundred and fifty thousand Pounds) which you have won will be transfer to your bank account via swift bank transfer. 

Condition: The international transfer commission fee being charged by our transferring bank in remitting your fund to your local Bank account must be your responsibility since no tickets were sold.

Also note, Your prize will be insured on a bond policy that will debar us of deducting or withdrawing any amount from it  before getting to you. Note that this option is basically design for winners who are not resident of UK and winners who can not visit our payment office in London. 

I shall refer you to our affiliated BANK for details about the remittance procedure and cost of transfer information if you opt to use this mode of payment.

Find below the lottery payment release order form, please fill it correctly and send back to me asap. Note For you to be able to fillout the form below, just click on reply from your mail box then double click(click twice) on the space box by this way you will be able to write in space box. 

Alternatively, you can just writeout the required information out and send to me via this email in plain text if you are unable to fillout the form as directed.
 
GOOGLE LOTTERY PAYMENT RELEASE ORDER FORM   
 
Prefix (Mr.,Mrs., Ms.,Dr.):        
 
First name :        
 
Middle name :        
 
Last name :
        
Date of Birth (yyy-mm-dd) :
        
Sex/Occupation :
        
Address :            
 
City/State/province        
 
Country of Resident /Nationality:        
 
Telephone number(s):            Mobile number(s):                  Fax number(s):                        
 
Email Address 1&2:          
 
Amount won / Date of notification        
 
Ticket number         
 
Payment modalities(tick on any of the mode of payment that you find most convenient)      Personal prize Pickup (here in UK).   Swift Bank Transfer.   
 
I expect you to fill and return the Giveaway payment release order form above within 24hrs upon receipt of this message so that appropriate arrangement can be put in place.
 
Regards,
MR. GRAHAMS BENFIELD.
 
உலகப் பதிவர்களே, மிக விரைவில் உங்களது பதில்களையும், கண்டுபிடிப்புகளையும் எனக்குத் தெரிவித்தால் நலமாக இருக்கும்..!

நன்றி..!

80 comments:

குசும்பன் said...

நல்லவேளை எங்க அப்பன் கண்ண திறந்துட்டான், என்று வாயை திறந்துக்கிட்டு ஓடாம இருந்தீங்க!

ஆமா, இந்த மெயிலே இப்பதான் வருதா? வெளங்கிடும்!

குசும்பன் said...

//ஆனாலும் வீடு தேடி வரும் லட்சுமியை நாமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்கிறார்கள்.//

லட்சுமி மட்டும் இல்ல, அசின், திரிஷா, தமன்னா இப்படி யாரு வீடு தேடி வந்தாலும் வேண்டாம் என்று சொல்லக்கூடாது:)))

குசும்பன் said...

அண்ணே இந்த மெயில் நிஜம் தான், இதில் சொல்லியிருக்கும் தகவல் எல்லாம் உண்மைதான், அந்த அப்ளிகேசனை பில் செஞ்சு, அதோடு அந்த செக்கை பிராசஸ் செய்ய ஒரு 50,000 பணத்தையும் எனக்கு அனுப்புங்க. அந்த கான் டெக்ட் டீடெயில்ஸ் மட்டும் தான் தப்பா இருக்கு, மாத்தி என் அட்ரஸுக்கு அனுப்பிடுங்க!

குசும்பன் said...

அண்ணே அந்த பணத்தில் இருக்கும் தாத்தா பாட்டி எல்லாம் மண்டைய போட்டு பல காலம் ஆவுது அதுக்கு பதிலா, தீபிகா படுகோன் போட்டு அடிச்சி கொடுக்க சொல்லிடுவோமா? இல்ல அதுலேயும் முருகன் போட்டோதான் வேண்டுமா உனக்கு?

குசும்பன் said...

//எனக்கு பேராசையெல்லாம் இல்லை.. உங்களுக்கே தெரியும்.. அடுத்தவர் பணத்தின் மீது ஆர்வமோ, கண் ஜாடையோ இல்லவே இல்லை.. இதுவும் உங்களுக்கே தெரியும்..//

இப்படி ஒரு நல்ல மனுசனை பேட்டி எடுக்காம உட்டுட்டீங்களேப்பா, எங்கே அந்த 14 கேள்விகள், கேளுங்கள்!

எம்.எம்.அப்துல்லா said...

//நல்லவேளை எங்க அப்பன் கண்ண திறந்துட்டான், என்று வாயை திறந்துக்கிட்டு ஓடாம இருந்தீங்க!


//

குசும்பா இவரு வாயைத் தொறந்துட்டாலே அவங்க அப்பன் முருகன் கண்ணை இறுக்கி மூடிக்கிட்டான்னு அர்த்தம் :))

குசும்பன் said...

//முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!//

அல்லோ போலீஸ் ஸ்டேசன், ஆமாங்க இங்க ஒருத்தர் முருகனோட டீடெயிலா பேசி வாங்கிக்க முடியும் என்கிறார், ஜெயில் இருக்கும் முருகனுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கு போல, இவரும் தீவிரவாதின்னு நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

நல்லவேளை எங்க அப்பன் கண்ண திறந்துட்டான், என்று வாயை திறந்துக்கிட்டு ஓடாம இருந்தீங்க!

ஆமா, இந்த மெயிலே இப்பதான் வருதா? வெளங்கிடும்!]]]

அப்ப இது நிசமாலுமே பொய்தானா..? முருகா.. ஏமாத்திட்டியேடா..!

குசும்பன் said...

அண்ணே இங்க வித்தியாசமா - ஓட்டு குத்தி குத்தி விளையாடுவோமா?:)))

முதல் - ஓட்டு என்னுது!

ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் - ஓட்டு குத்தேன்!

எம்.எம்.அப்துல்லா said...

//அந்த அப்ளிகேசனை பில் செஞ்சு, அதோடு அந்த செக்கை பிராசஸ் செய்ய ஒரு 50,000 பணத்தையும் எனக்கு அனுப்புங்க.

//

இவன் ரொம்ப காஸ்ட்லி. எனக்கு 5000 குடுங்க போது.

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//ஆனாலும் வீடு தேடி வரும் லட்சுமியை நாமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்கிறார்கள்.//

லட்சுமி மட்டும் இல்ல, அசின், திரிஷா, தமன்னா இப்படி யாரு வீடு தேடி வந்தாலும் வேண்டாம் என்று சொல்லக்கூடாது:)))]]]

நோ தம்பி..

நமீதா வந்தா மட்டும்தான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

அண்ணே இந்த மெயில் நிஜம்தான், இதில் சொல்லியிருக்கும் தகவல் எல்லாம் உண்மைதான். அந்த அப்ளிகேசனை பில் செஞ்சு, அதோடு அந்த செக்கை பிராசஸ் செய்ய ஒரு 50,000 பணத்தையும் எனக்கு அனுப்புங்க. அந்த கான்டெக்ட் டீடெயில்ஸ் மட்டும்தான் தப்பா இருக்கு, மாத்தி என் அட்ரஸுக்கு அனுப்பிடுங்க!]]]

இங்கதான் எனக்கு டவுட் வருது..! 50000 ஆயிரம் தரேன்.. ஆனா வாங்கினதுக்கு அத்தாட்சி தருவியா..?

எம்.எம்.அப்துல்லா said...

//கீழ்க்கண்ட கடுதாசி எனக்கு இ-மெயில் மூலமாக வந்திருக்கிறது. //

தண்ணி போட்டமாதிரியே பேசக்கூடாது. கடுதாசி வந்துச்சா?? இல்லை இமெயில் வந்துச்சா???

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...
அண்ணே அந்த படத்தில் இருக்கும் தாத்தா பாட்டி எல்லாம் மண்டைய போட்டு பல காலம் ஆவுது அதுக்கு பதிலா, தீபிகா படுகோன் போட்டு அடிச்சி கொடுக்க சொல்லிடுவோமா? இல்ல அதுலேயும் முருகன் போட்டோதான் வேண்டுமா உனக்கு?]]]

முருகன்தான் வேணும்.. அப்பத்தான் செலவழிக்காம வீட்ல வைச்சிருந்து சாமி கும்பிட முடியும்..!

எம்.எம்.அப்துல்லா said...

//நமீதா வந்தா மட்டும்தான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..!

//

ஐ யாம் வெரி சாரி அண்ணாச்சி. நான் அனுப்பி வைக்க மாட்டேன் ஹி..ஹி..ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

//அப்பத்தான் செலவழிக்காம வீட்ல வைச்சிருந்து சாமி கும்பிட முடியும்..!
//


வெளங்கிரும்.

குசும்பன் said...

//நான் ஒருவன் மட்டுமே இந்த மூன்று வருடங்களாக வலையுலகத்தில் வீணாக ஒருத்தரைக்கூட தோழனாக வைத்திருக்க முடியாமல் வெட்டியாக பொழைப்பை ஓட்டி வரும் அபாயத்தை உணர்ந்திருக்கிறேன். //

ச்சே ச்சே இப்படி எல்லாம் பீல் செய்யாத அண்ணே, நீ மட்டும் ஒரு பதிவு திட்டி எழுதி பாரு, எப்படி ரூம் எடுத்து உன்னை கும்முறோம் என்று தெரியும்... உன்மேல அம்புட்டு பாசம். பாசகார பயபுள்ள எல்லாம் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கோம், உன்னை கும்ம சரியா வந்துடுவோம்!

எம்.எம்.அப்துல்லா said...

//எதிர்காலத்தில் கூடுதலாக தேவையெனில், முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!
//


எவ்வளவு வட்டின்னு சொன்னா அப்பப்ப நானும் அவர்கிட்ட வாங்கிக்குவேன் :))

ராம்ஜி_யாஹூ said...

Right away u can lodge a police complaint with cyber crime cell. Recently Chennai police have been arresting these kind of fraudulent people.

This will help others not to loose their hard earned money.

குசும்பன் said...

//நோ தம்பி..

நமீதா வந்தா மட்டும்தான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..!//

வெஜிட்டேரியன் திங்கும் ஆளுக்கு, நாட்டு கோழி 65 வந்தா என்ன? பிராய்லர் 65 வந்தா என்ன? சும்மா விரல் சூப்பிட்டு கம்முன்னு கிட அண்ணே!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...
//எனக்கு பேராசையெல்லாம் இல்லை.. உங்களுக்கே தெரியும்.. அடுத்தவர் பணத்தின் மீது ஆர்வமோ, கண் ஜாடையோ இல்லவே இல்லை.. இதுவும் உங்களுக்கே தெரியும்..//

இப்படி ஒரு நல்ல மனுசனை பேட்டி எடுக்காம உட்டுட்டீங்களேப்பா, எங்கே அந்த 14 கேள்விகள், கேளுங்கள்!]]]

வாங்கப்பா.. வாங்க.. அடுத்த வாரம் நமக்கு பொழுது போக வேணாமா..?

எம்.எம்.அப்துல்லா said...

//வாங்கப்பா கேள்விகளோட.. //


இருவது வருஷமா நான் ஒரு கேள்விக்கு விடை தெரியாம இருக்கேன். நீங்கதான் சொல்லணும்

“காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யாருன்ணே வச்சிருந்தா??”

Ahamed irshad said...

இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ வந்தாச்சி.. புதுசா ஏதும் இருந்தா சொல்லுங்க...

குசும்பன் said...

//இங்கதான் எனக்கு டவுட் வருது..! 50000 ஆயிரம் தரேன்.. ஆனா வாங்கினதுக்கு அத்தாட்சி தருவியா..?
//

உ.த உங்களை போய் பெரியமனுசன் என்று நினைச்சேன் பாரு!

என்னோட அத்தாச்சியை போய் கேட்கிறீர்:((

எம்.எம்.அப்துல்லா said...

நீயி குசும்பனுக்கு மட்டும்தான் பதில் சொல்ற. எனக்கு சொல்ல மாட்டேங்குற. போ... உன் பேச்சு கா.

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//நல்லவேளை எங்க அப்பன் கண்ண திறந்துட்டான், என்று வாயை திறந்துக்கிட்டு ஓடாம இருந்தீங்க!//

குசும்பா இவரு வாயைத் தொறந்துட்டாலே அவங்க அப்பன் முருகன் கண்ணை இறுக்கி மூடிக்கிட்டான்னு அர்த்தம்:))]]]

ஐயோ. ஐயோ.. ஐயையையோ..

இதை கேட்பாரே இல்லையா..?

என் கேரக்டரையே அசாசிஷேன் பண்றானே..!

குசும்பன் said...

//இவன் ரொம்ப காஸ்ட்லி. எனக்கு 5000 குடுங்க போது//

அண்ணே ஆபாசமா பேசுவது மட்டும் இல்லாம உன் ரேட்டை வேற சொல்ற, கருமம் கருமம்!!!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!//

அல்லோ போலீஸ் ஸ்டேசன், ஆமாங்க இங்க ஒருத்தர் முருகனோட டீடெயிலா பேசி வாங்கிக்க முடியும் என்கிறார், ஜெயில் இருக்கும் முருகனுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கு போல, இவரும் தீவிரவாதின்னு நினைக்கிறேன்.]]]

ஆமாப்பா.. முருகன் திருப்பதிக்கு மொட்டை போட போகும்போது டிக்கெட் வாங்கிக் கொடுத்ததே நான்தான்.. ஆனா காசு கொடுத்தது இந்தக் குசும்பன்தான்..

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

அண்ணே இங்க வித்தியாசமா - ஓட்டு குத்தி குத்தி விளையாடுவோமா?:)))

முதல் - ஓட்டு என்னுது!

ப்ளீஸ் ப்ளீஸ் நீயும் - ஓட்டு குத்தேன்!]]]

அடப்பாவி.. மொத ஓட்டு நானே எனக்குப் போட்டுக்கிட்டேன்.. நீ அடுத்ததை குத்து..!

kanagu said...

indha mail enaku vandhadhu illa.. aana coments ah paatha varusha kanakkula suthikittu irukkum pola irukke... :( :(

/*இதுக்குப் பேரு பின்னூட்டமா..?

யாராவது திட்டுங்களேம்ப்பா..!*/

avlo kevalama irundudha.. :( mannikanum anna :(

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//அந்த அப்ளிகேசனை பில் செஞ்சு, அதோடு அந்த செக்கை பிராசஸ் செய்ய ஒரு 50,000 பணத்தையும் எனக்கு அனுப்புங்க.//

இவன் ரொம்ப காஸ்ட்லி. எனக்கு 5000 குடுங்க போதும்.]]]

இவ்ளோதானா..? ரொம்ப சீப்பா இருக்கே.. நேர்ல வந்து வாங்கிக்கிறியா கண்ணு..?

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//கீழ்க்கண்ட கடுதாசி எனக்கு இ-மெயில் மூலமாக வந்திருக்கிறது. //

தண்ணி போட்ட மாதிரியே பேசக் கூடாது. கடுதாசி வந்துச்சா?? இல்லை இமெயில் வந்துச்சா???]]]

ஆஹா.. நானே மாட்டிக்கிட்டனா..? இமெயில்தாம்பா வந்துச்சு..

எம்.எம்.அப்துல்லா said...

//இதை கேட்பாரே இல்லையா..?

என் கேரக்டரையே அசாசிஷேன் பண்றானே..!

//


நான் ஏற்கனவே அனுபவப்பட்டேன்.ஆம்பளை கேரக்டரை அசாசினேஷன் பண்ணா யாரும் கண்டுக்க மாட்டாங்க ஹி..ஹி..ஹி..

குசும்பன் said...

//என் கேரக்டரையே அசாசிஷேன் பண்றானே..!//

அண்ணே இங்க வா இங்க, சும்மா ரெண்டு மூனு பதிவில் கேரக்டர் அசாசிஷேன் செய்யுறாங்க என்று படிச்ச பிட்டை இங்கேயும் போடுறீயா? முதலில் கேரக்டர் என்றால் என்ன, அசாசிஷேன் என்றால் என்ன? எனக்கு எல்லாம் பக்கத்து ஊட்டு பிகர் வெச்சிருந்த அல்சேஷன் தான் தெரியும்!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//நமீதா வந்தா மட்டும்தான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..!//

ஐ யாம் வெரி சாரி அண்ணாச்சி. நான் அனுப்பி வைக்க மாட்டேன் ஹி..ஹி..ஹி..]]]

வயசுல மூத்தவன்பா நானு.. இதிலெல்லாம் போட்டி போடக் கூடாது.. அண்ணன் சொன்னா விட்ரணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//அப்பத்தான் செலவழிக்காம வீட்ல வைச்சிருந்து சாமி கும்பிட முடியும்..!//

வெளங்கிரும்.]]]

அதுக்குள்ள உனக்கு வெளங்கிருச்சா..? ஆச்சரியம்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//நான் ஒருவன் மட்டுமே இந்த மூன்று வருடங்களாக வலையுலகத்தில் வீணாக ஒருத்தரைக்கூட தோழனாக வைத்திருக்க முடியாமல் வெட்டியாக பொழைப்பை ஓட்டி வரும் அபாயத்தை உணர்ந்திருக்கிறேன். //

ச்சே ச்சே இப்படி எல்லாம் பீல் செய்யாத அண்ணே, நீ மட்டும் ஒரு பதிவு திட்டி எழுதி பாரு, எப்படி ரூம் எடுத்து உன்னை கும்முறோம் என்று தெரியும்... உன்மேல அம்புட்டு பாசம். பாசகார பயபுள்ள எல்லாம் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கோம், உன்னை கும்ம சரியா வந்துடுவோம்!]]]

யாரைத் திட்டுறது..? ஒரு ஐடியா குடேன்..!

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த ரேஞ்சிலேயே என் பொழைப்பு ஓடினால் நான் செத்துப் போனால்கூட இன்றைய நிலைமையில் 5 மாலைகளுக்கு மேல் எனக்கு விழாது என்பது போல் எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு..!

//

அது என்ன பின்னூட்டமா?? நிறைய விழுக?? எல்லாருக்கும் அவ்ளோதான் விழுகும் :))))

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//எதிர்காலத்தில் கூடுதலாக தேவையெனில், முருகனிடம் டீடெயிலாக உட்கார்ந்து பேசி வாங்கிக் கொள்ளவும் என்னால் முடியும்..!//

எவ்வளவு வட்டின்னு சொன்னா அப்பப்ப நானும் அவர்கிட்ட வாங்கிக்குவேன் :))]]]

ச்சே.. ச்சே.. முருகன் நம்மகிட்ட வட்டியெல்லாம் கேட்கவே மாட்டேன். அவனாவே எடுத்துக்குவான்..!

குசும்பன் said...

//அடப்பாவி.. மொத ஓட்டு நானே எனக்குப் போட்டுக்கிட்டேன்.. நீ அடுத்ததை குத்து..!//

அண்ணே இப்ப பாருங்க ரெண்டு ஓட்டில் ஒரு வோட்டு - ஓட்டு, அது என்னோடதுதான்... ஜாலியா இருக்கு - ஓட்டு குத்தும் பொழுது, எங்க நீங்களும் ஒரு தபா உங்க பதிவில் - குத்தி பாருங்களேன் ஜாலியா இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
Right away u can lodge a police complaint with cyber crime cell. Recently Chennai police have been arresting these kind of fraudulent people. This will help others not to loose their hard earned money.]]]

இவங்க லண்டல் பார்ட்டியால்ல இருக்காங்க.. அதான் யோசிக்கிறேன்..!

குசும்பன் said...

அண்ணே 41 கமெண்ட் வந்துட்டு, பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கியாச்சு, இதில் பெரும் உதவி, நம்ம கும்மி அடிக்கும் பொழுது ஊடால உதவிக்கு வந்த உத!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//நோ தம்பி.. நமீதா வந்தா மட்டும்தான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..!//

வெஜிட்டேரியன் திங்கும் ஆளுக்கு, நாட்டு கோழி 65 வந்தா என்ன? பிராய்லர் 65 வந்தா என்ன? சும்மா விரல் சூப்பிட்டு கம்முன்னு கிட அண்ணே!]]]

டேய்.. வாழ்க்கைல ஒரு தடவைதாண்டா தம்பி.. இதைக்கூட அண்ணனுக்கு விட்டுக் கொடுக்கலைன்னா எப்படிடா ராசா..?

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு எல்லாம் பக்கத்து ஊட்டு பிகர் வெச்சிருந்த அல்சேஷன் தான் தெரியும்

//

ரொம்ப மொடையில இருக்கா???

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//வாங்கப்பா கேள்விகளோட.. //

இருவது வருஷமா நான் ஒரு கேள்விக்கு விடை தெரியாம இருக்கேன். நீங்கதான் சொல்லணும்

“காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை யாருன்ணே வச்சிருந்தா??”]]]

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி கேளு தம்பி..

வழியே காட்டுவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[அஹமது இர்ஷாத் said...
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ வந்தாச்சி.. புதுசா ஏதும் இருந்தா சொல்லுங்க...]]]

வந்தது சரி.. நீங்க ஏதும் வாங்கலையே..?

ஏன்னா அது எனக்குத்தான்னு முருகன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//இங்கதான் எனக்கு டவுட் வருது..! 50000 ஆயிரம் தரேன்.. ஆனா வாங்கினதுக்கு அத்தாட்சி தருவியா..?//

உ.த உங்களை போய் பெரிய மனுசன் என்று நினைச்சேன் பாரு! என்னோட அத்தாச்சியை போய் கேட்கிறீர்:((]]]

அடப்பாவி..

ஒரு எழுத்தை மாத்திப் போட்டு என் கேரக்டரை கவுக்குறியேடா..?

உனக்கு மூளை எந்த இடத்துல இருக்குன்னு எனக்கு டவுட்டா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
நீயி குசும்பனுக்கு மட்டும்தான் பதில் சொல்ற. எனக்கு சொல்ல மாட்டேங்குற. போ... உன் பேச்சு கா.]]]

ஏன் கண்ணு இதுக்கெல்லாம் கோச்சுக்குற..?

வரிசையாத்தான சொல்ல முடியும்.. இதுக்கெல்லாம் போய் கா விடுறியே..?

திருப்பி எப்ப பழம் விடுவ..?

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//இவன் ரொம்ப காஸ்ட்லி. எனக்கு 5000 குடுங்க போது//

அண்ணே ஆபாசமா பேசுவது மட்டும் இல்லாம உன் ரேட்டை வேற சொல்ற, கருமம் கருமம்!!!]]]

அடேய் கர்மம் புடிச்சவனே.. அது என் ரேட்டு இல்லை. உன் மாப்ளையோட ரேட்டு.. அவன்தான் சொல்றான்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

indha mail enaku vandhadhu illa.. aana coments ah paatha varusha kanakkula suthikittu irukkum pola irukke... :( :(

/*இதுக்குப் பேரு பின்னூட்டமா..? யாராவது திட்டுங்களேம்ப்பா..!*/

avlo kevalama irundudha.. :( mannikanum anna:(]]]

ச்சும்மா.. ஜாலிக்குத்தான் தம்பி.. லூஸ்ல விடு..!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே,


ஸ்நேகா படத்துக்கு வசனம் எழுதப்போறீங்களாமே...அப்படியா??

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//இதை கேட்பாரே இல்லையா..?
என் கேரக்டரையே அசாசிஷேன் பண்றானே..!//

நான் ஏற்கனவே அனுபவப்பட்டேன். ஆம்பளை கேரக்டரை அசாசினேஷன் பண்ணா யாரும் கண்டுக்க மாட்டாங்க ஹி..ஹி..ஹி..]]]

இன்னாடா இது ஆம்பளைங்களுக்கு வந்த சோதனை..!

நமக்கா பரிதாபப்பட இங்க யாருமே இல்லையா..?

குசும்பன் said...

//இதுக்கெல்லாம் போய் கா விடுறியே..?

திருப்பி எப்ப பழம் விடுவ..?
//

அண்ணே ஆடு திருப்பி பழம் விட சொல்லுது, விடுறதுதான் விடுற கொஞ்சம் பலாபழமா விடுன்னே!!!:)))))

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் அண்ணாச்சி 50 வது கமெண்ட்டை நீயே போட்டுக்கிட்ட??? அதெல்லாம் என்னைய மாதிரி வாசகர்களுக்கு விட்டுறனும், புரியிதா??

எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே ஆடு திருப்பி பழம் விட சொல்லுது, விடுறதுதான் விடுற கொஞ்சம் பலாபழமா விடுன்னே!!!:)))))

//


ஹா...ஹா.,..ஹா....

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//என் கேரக்டரையே அசாசிஷேன் பண்றானே..!//

அண்ணே இங்க வா இங்க, சும்மா ரெண்டு மூனு பதிவில் கேரக்டர் அசாசிஷேன் செய்யுறாங்க என்று படிச்ச பிட்டை இங்கேயும் போடுறீயா? முதலில் கேரக்டர் என்றால் என்ன, அசாசிஷேன் என்றால் என்ன? எனக்கு எல்லாம் பக்கத்து ஊட்டு பிகர் வெச்சிருந்த அல்சேஷன்தான் தெரியும்!]]]

நீ எவ்ளோ பெரிய நடிகன்டா.. இதுவே தெரியாம அல்சேஷனை மட்டும் தெரிஞ்சு வைச்சிருக்கியே..?

சரி.. சரி.. அந்த பிகர் இப்போ எங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//இந்த ரேஞ்சிலேயே என் பொழைப்பு ஓடினால் நான் செத்துப் போனால்கூட இன்றைய நிலைமையில் 5 மாலைகளுக்கு மேல் எனக்கு விழாது என்பது போல் எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு..!//

அது என்ன பின்னூட்டமா?? நிறைய விழுக?? எல்லாருக்கும் அவ்ளோதான் விழுகும் :))))]]]

பத்தாது தம்பி.. எரிக்கிறவன்கூட நம்மளை மதிக்க மாட்டான்..! கொஞ்சம் காசு கொடுத்தாவது ஆளை செட்டப் பண்ணி மாலை போட வைச்சிரு..

உனக்குக் கனவுல வெள்ளியுடை தேவதைகளை பார்த்து, பார்த்து செலக்ட் செஞ்சு அனுப்பி வைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//அடப்பாவி.. மொத ஓட்டு நானே எனக்குப் போட்டுக்கிட்டேன்.. நீ அடுத்ததை குத்து..!//

அண்ணே இப்ப பாருங்க ரெண்டு ஓட்டில் ஒரு வோட்டு - ஓட்டு, அது என்னோடதுதான்... ஜாலியா இருக்கு - ஓட்டு குத்தும் பொழுது, எங்க நீங்களும் ஒரு தபா உங்க பதிவில் - குத்தி பாருங்களேன் ஜாலியா இருக்கும்.]]]

மைனஸ் ஓட்டைக் குத்திட்டு அதையும் பெருமையா வேற வெளில சொல்றியே.. இது நியாயமா..?

உனக்கு நான் என்ன குறை வைச்சிருக்கேன்..?

குசும்பன் said...

//சரி.. சரி.. அந்த பிகர் இப்போ எங்க..?//

ஓவரா வால் ஆட்டுன எதிர் வீட்டு ஆளோடதை "நறுக்" செஞ்சு காக்காவுக்கு போட்டுவிட்டு இப்ப வேலூர் ஜெயிலில் இருக்கு, அட்ரஸ் வேண்டுமா?

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...
அண்ணே 41 கமெண்ட் வந்துட்டு, பதிவை முதல் பக்கத்தில் இருந்து தூக்கியாச்சு, இதில் பெரும் உதவி, நம்ம கும்மி அடிக்கும் பொழுது ஊடால உதவிக்கு வந்த உத!]]]

சொந்த செலவில் நானே சூனியம் வைச்சுக்கிட்டேனாக்கும்..!

குசும்பன் said...

//உனக்குக் கனவுல வெள்ளியுடை தேவதைகளை பார்த்து, பார்த்து செலக்ட் செஞ்சு அனுப்பி வைக்கிறேன்..!
// நீ செலக்ட் செய்யும் பிகர் கே.ஆர் விஜயா ரேஞ்சில் இருக்கும், அதை எல்லாம் நீயே வெச்சிக்க!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு எல்லாம் பக்கத்து ஊட்டு பிகர் வெச்சிருந்த அல்சேஷன்தான் தெரியும்//

ரொம்ப மொடையில இருக்கா???]]]

அப்படீன்னா..? இது இன்னா தமிழு..?

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே, ஸ்நேகா படத்துக்கு வசனம் எழுதப் போறீங்களாமே... அப்படியா??]]]

எனக்கு ஸ்நேகாவையே தெரியாதே தம்பி.. அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு டயலாக் மட்டும் எழுத முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//இதுக்கெல்லாம் போய் கா விடுறியே..? திருப்பி எப்ப பழம் விடுவ..?//

அண்ணே ஆடு திருப்பி பழம் விட சொல்லுது, விடுறதுதான் விடுற கொஞ்சம் பலாபழமா விடுன்னே!!!:)))))]]]

பலாப்பழம் வெளில வந்திருமா..?

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
யோவ் அண்ணாச்சி 50-வது கமெண்ட்டை நீயே போட்டுக்கிட்ட??? அதெல்லாம் என்னைய மாதிரி வாசகர்களுக்கு விட்டுறனும், புரியிதா??]]]

அவசரத்துல மறந்து தொலைச்சிட்டேன் தம்பி..

அடுத்தப் பதிவுல ஞாபகம் வைச்சிருந்து உன்னைக் கூப்பிடுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//அண்ணே ஆடு திருப்பி பழம் விட சொல்லுது, விடுறதுதான் விடுற கொஞ்சம் பலாபழமா விடுன்னே!!!:)))))//

ஹா...ஹா.,..ஹா....]]]

என்ன பி.எஸ்.வீரப்பா சிரிப்பா..?

எம்.எம்.அப்துல்லா said...

//அப்படீன்னா..? இது இன்னா தமிழு..? //

அவசரத்துக்கு யாரையாவது ஆளை வச்சிருந்துக்கலாமே!! ஏன் நாயை வச்சிருந்துச்சுன்னு ஒரு டவுட்டுல கேட்டேன் :)))

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//சரி.. சரி.. அந்த பிகர் இப்போ எங்க..?//

ஓவரா வால் ஆட்டுன எதிர் வீட்டு ஆளோடதை "நறுக்" செஞ்சு காக்காவுக்கு போட்டுவிட்டு இப்ப வேலூர் ஜெயிலில் இருக்கு, அட்ரஸ் வேண்டுமா?]]]

ஐயையோ.. ச்சும்மா.. ஒரு பேச்சுக்குக் கேட்டேன் ராசா..! அவுகளை தெரிஞ்சு நான் என்ன செய்யப் போறேன்..!???

இருக்கிறத காப்பாத்திக்க வேணாம்..?!!!!

எம்.எம்.அப்துல்லா said...

//பலாப்பழம் வெளில வந்திருமா //


வர்றது இருக்கட்டும். போறது எவ்ளோ கஷ்டமுனு தெரியுமா???

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//உனக்குக் கனவுல வெள்ளியுடை தேவதைகளை பார்த்து, பார்த்து செலக்ட் செஞ்சு அனுப்பி வைக்கிறேன்..!//

நீ செலக்ட் செய்யும் பிகர் கே.ஆர் விஜயா ரேஞ்சில் இருக்கும், அதை எல்லாம் நீயே வெச்சிக்க!]]]

கனவுல வர்றவுக அவரை மாதிரி இருந்தாத்தான் ராசா நல்லாயிருக்கும். மத்ததையெல்லாம் பார்த்தா காட்டேரி மாதிரியிருக்கும்.. பரவாயில்லையா..?

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
//அப்படீன்னா..? இது இன்னா தமிழு..? //

அவசரத்துக்கு யாரையாவது ஆளை வச்சிருந்துக்கலாமே!! ஏன் நாயை வச்சிருந்துச்சுன்னு ஒரு டவுட்டுல கேட்டேன் :)))]]]

நாய்தானே இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும்..!? அதனாலய்யா இருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//பலாப்பழம் வெளில வந்திருமா //

வர்றது இருக்கட்டும். போறது எவ்ளோ கஷ்டமுனு தெரியுமா???]]]

நீ இன்னா மாத்தி மாத்திப் பேசுற.. பலாப்பழத்தை வெளில தள்ளுறதுதான் கஷ்டம்..!

மின்னுது மின்னல் said...

வயசான காலத்தில் நமிதா கேக்குதா??

பாலா said...

அண்ணே.. பெரியாளான பின்னாடி எங்களயெல்லாம் மறந்துட மாட்டீங்களே?

Prathap Kumar S. said...

அண்ணே சுமாரா எத்தனை வருடமா இணையத்தளம் பயன்படுத்தறீங்க? இந்த மெயில் இவ்ளோ சீக்கிரம் எப்படி வந்துசசு உங்களுக்கு :)))

geethappriyan said...

அண்ணே இதுக்கு ஒரு பதிவா?
ஸ்பாம்ல போடுங்க,இது எனக்கும் இன்று வந்தது,இதுக்கு பேரு தான் ஸ்பானிஷ் ப்ரிசனர் என்னும் ட்ரிக்,ஏமாறவேண்டாம்,போன் செய்ய வேண்டாம்.

பனித்துளி சங்கர் said...

நண்பரே எனக்கு இங்கு தமிழே நமிதா மாதிரி நடனம் ஆட்டுது .
நீங்க ஒரே ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கீங்க . நானும் முடிந்தவரை முயற்சி பண்ணிப்பார்க்கிறேன்

கலகலப்ரியா said...

//இந்த ரேஞ்சிலேயே என் பொழைப்பு ஓடினால் நான் செத்துப் போனால்கூட இன்றைய நிலைமையில் 5 மாலைகளுக்கு மேல் எனக்கு விழாது என்பது போல் எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு..!//

சரி சரி.. அந்த வீணாப்போன மெயில எல்லாம் கடாசுங்க... கடன் பட்டாவது உங்களுக்கு ஒரு மலர்வளையம் ஏற்பாடு செய்து விடுகிறேன்.. அந்த ஐந்து மாலை போடுபவர்களில் யாராவது ஒருவருக்கு எனக்குத் தகவல் மட்டும் அனுப்பச் சொல்லுங்க போதும்...

திருப்தியா சாமி...

பிரபல பதிவர் said...

அண்ணே மெயிலில் வந்த அதிர்ஷ்ட தேவதையை வேண்டாம் என்று சொல்லிடாதீங்க‌
முப்பது நாள்... முப்பது கோடி.... செலவு... ரேஸ்... சினிமா... அரசியல்... அடி
பின்னலாம்....


உங்களுக்கு எண்பது எதிரிகள்
ஓரே ஒரு நண்பன் சொல்றேன்....
என் பெயர் அருணாச்சலம்

abeer ahmed said...

See who owns subscene.com or any other website:
http://whois.domaintasks.com/subscene.com