கலைஞர் கருணாநிதியின் குடும்பம்-'புருஷோத்தம' நாடகம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


"புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது.

'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." என்று கலைஞரின் பி.ஏ. சண்முகநாதனே தயாநிதிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அதே போல் அன்று மாலை சென்னை வந்தவுடனேயே தயாநிதி கலைஞரைச் சந்திக்க முயன்றுள்ளார். "இப்போது வர வேண்டாம்.. நிலைமை சரியில்லை.. நீங்கள் வீட்டில் இருங்கள். பிறகு பார்க்கலாம்.." என்று சொல்லியிருக்கிறார்கள்.

பின்பு மறுநாள் கோபாலபுரம் சென்றால் அடித்தாலும் அடித்துவிடுவார்கள் என்பதால் காத்திருந்து மதியம் லன்ச்சுக்கு கலைஞர் சிஐடி வீட்டுக்கு வந்த பின்பு அங்கு சென்றுள்ளார் தயாநிதி. கலாநிதி வராமல் தயாநிதி மட்டுமே வந்திருக்கிறார் என்பதையறிந்தவுடனேயே மிக கோபமாகிவிட்டாராம் கலைஞர். "நான் பார்க்க முடியாதுன்னு சொல்.." என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

பிரதமர் வீட்டில்கூட பின் வாசல் வழியாக உள்ளே நுழையும் பாக்கியம் பெற்ற தயாநிதிக்கு.. இதே வீட்டில்கூட மீன் குழம்பை செய்துவைத்துவிட்டுத் தனக்காக அனைவரும் காத்திருந்ததையும் நினைவுபடுத்திப் பார்த்த தயாநிதிக்கு.. இன்றைய அனுபவம் மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்திருக்கக் கூடும். கூடுதலாக ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் மாடியைவிட்டு இறங்கி வரவேயில்லை என்கிறார்கள்.

"இனிமே என்னைப் பார்க்க வர்றதுன்னா எதுக்கு, என்ன விஷயமான்னு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வந்து பார்க்கச் சொல்லு.. இப்ப பார்க்க முடியாது. போகச் சொல்லுங்க.." என்று கலைஞர் உறுதியுடன் சொல்ல இதை அப்படியே வெளியில் காத்திருந்த தயாநிதியிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தாத்தாவைப் பார்த்தே தீருவது என்ற வைராக்கியத்தில் வெகுநேரம் பொறுமையாக அமர்ந்திருந்தாராம் தயாநிதி.

அறிவாலயம் செல்வதற்காகக் கிளம்பி வெளியே வந்த கலைஞர் தயாநிதியைப் பார்த்தவுடன், "என்னடா..? யாருன்னு நினைச்சு யார்கிட்ட விளையாடுறீங்க.. அழகிரி யார் தெரியுமில்ல. என் மகன்.. என் மகன்டா.." என்று பேசிக் கொண்டே சென்றுவிட்டாராம். நாகரிகம் தெரிந்த பேரன் அப்படியே நிற்க.. தாத்தா போயோ போய்விட்டார்.

பின்பு அன்றிரவு மீண்டும் கலைஞருடன் போனில் பேச முயன்றுள்ளார் தயாநிதி. ஆனால் இரண்டு முறை லைனில் வர மறுத்த முதல்வர், மூன்றாவது முறை தன் பி.ஏ.சண்முகநாதன் மூலமாகவே, "என்ன விஷயம் என்று கேளுங்கள்.." என்று கூறினாராம். அவரிடம், "நான் ராஜினாமா செய்யட்டுமா?" என்று கேட்க வேண்டும் என்று தயாநிதி கேட்டுள்ளார். இந்த விஷயத்தை முதல்வர் காதில் போட்டுள்ளார் சண்முகநாதன். ஆனால் முதல்வரோ, "அதை ஏன் என்னிடம் கேட்க வேண்டும்? அவரையே முடிவெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.." என்று கறாராகச் சொல்லியிருக்கிறார்.

பொன்விழா நிகழ்ச்சியைக் காண்பதற்காக சென்னை வந்த ரவுடி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சரான தன் தம்பி ஸ்டாலினைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து கலைஞரை சந்தித்தாராம்.
"அவனைத்(தயாநிதி மாறனை) திடீர்ன்னு எம்.பியாக்குனீங்க.. அப்படியே மினிஸ்டராக்கிட்டீங்க.. அப்பல்லாம் ஏன் அந்தச் சின்னப் பயலுக்கு மந்திரி பதவி கொடுக்கிறீங்கன்னு நாங்க ஒண்ணும் கேட்கலியே.. ஆனால் நான், ஸ்டாலின், கனிமொழி மூணு பேரும் நெருக்கமாகுறதைப் பார்த்திட்டு எங்களைப் பிடிக்காம, இப்படி சர்வே போட்டு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அதுவும் உங்க பொன்விழாவின்போது இந்த சர்வேயை ஏன் போடணும்..?
பொன்விழா நடத்தக்கூடாதுன்னு ஜெயலலிதாதான் சொல்லிட்டு வர்றார். அவர் பிரச்சாரத்திற்குத் தீனி போடுவதைப் போல் இந்த நேரம் பார்த்து ஏன் சர்வேயை போட வேண்டும்? இப்ப உங்களுக்கு பிள்ளைகளாகிய நாங்க வேணுமா? அவனுக வேணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.." என்று மூத்த மகன் என்கிற தோரணையில் மிரட்டியே இருக்கிறார் ரவுடி அழகிரி.

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முதல்வரின் மகள் செல்வி, முதல்வரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) ஆகியோரால்தான் முடியும் என்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் தன் அம்மா தயாளு அம்மாவின் சிகிச்சைக்காக அவரை லண்டன் அழைத்துச் சென்று திரும்பி பத்திரமாக அழைத்து வந்த செல்வி, இந்தச் சம்பவத்தால் படு அப்ஸெட்டாகிவிட்டாராம்.

அவருக்கோ அழகிரிக்கு அப்பா ஓவராக சப்போர்ட் செய்வதாக பீலிங். இதை அப்பாவிடமே சொல்ல.. தந்தை என்றைக்கும் இல்லாத திருநாளாக "எனக்குக் கட்சிதான் பெரியது.." என்று கடிந்து கொண்டாராம். கோபமான செல்வி அப்பாவின் பொன்விழா நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டாராம். அநேகமாக செல்வி, தன் தந்தை கலைஞரின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது தி.மு.க. வரலாற்றிலேயும், அவரது சொந்த வாழ்க்கையிலும் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

அதே நேரம் செல்வியின் வீட்டில் வசித்து வரும் கலைஞரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) மட்டுமே கலைஞரிடம் உரிமையாக சமாதானத்திற்குச் சென்றுள்ளார். "ஏதோ சின்னப் பயலுக.. செஞ்சுட்டானுக.. எம்புள்ளைக்கே நீதான் அப்பா மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்ச.. இப்ப அந்தப் புள்ளைகளுக்கு அப்பாவும் இல்ல. நீதான எல்லாம் செய்யணும்.. அவங்களைக் கை விட்ராதப்பா.." என்று உருக்கமாக வேண்டிக் கொண்டாராம்..

இவ்விவகார வெடிப்பின் பின்னணியில் இருப்பது மாறன் குடும்பத்தினரின் வளர்ச்சிதானாம்.

முரசொலி மாறனின் தம்பியும், கலைஞரின் மூத்த மகள் செல்வியின் கணவருமான முரசொலி செல்வம், தற்போது பெங்களூரில் தங்கியிருந்து சன் நெட்வொர்க்கின் உதயா டிவி நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். தற்போதைய நிலையில் சன் டிவியில் முரசொலி செல்வத்தின் குடும்பத்திற்கு மட்டுமே பங்கு உண்டு. அதுவும் கோடிக்கணக்கில்..

ஆனால் கலைஞரின் மற்ற வகை சொந்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கலைஞரின் முதல் மனைவி பத்மாவதியின் மூலமாகப் பிறந்த மூத்த பிள்ளை மு.க.முத்து தறுதலையாகிப் போனது ஊர் அறிந்த ரகசியம். மு.க.முத்துவிற்கு இரண்டு பிள்ளைகள். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி டாக்டராக இருக்கிறார். மாதச் சம்பளத்தில் ஜி.ஜி.மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருடைய சகோதரிக்கும் திருமணமாகி அவரும் தனியாக இருக்கிறார். இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் ஆக வேண்டியவைகள் அனைத்தையும் கருணாநிதி தானேதான் செய்து வந்தார்.

இப்படி ரத்தச் சொந்தத்தில் பிறந்தவர்கள் மாதச் சம்பளத்தில் உழைப்பவர்களாக இருக்க... ஒருவகையில் பேரனானவர்கள் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பதுதான் குடும்பத்திற்குள் வினையை உருவாக்கியிருக்கிறது.

மு.க.முத்துவின் மகன் குடும்பத்துடன் ஸ்டாலினுக்கும் இன்றுவரையில் தொடர்பில்லை. மு.க.முத்து மகன் அறிவுநிதியின் திருமணம் தஞ்சாவூரில் நடந்தபோது அதற்கு வராதவர்கள் ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி ஆகியோர்தான் என்கிறார்கள்.

ஆனால் அழகிரியும் மு.க.முத்துவும் நெருங்கிய நண்பர்கள். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தபோது மூன்று முறை வந்து பார்த்தார் மு.க.முத்து.

இந்த மதுரை தினகரன் மேட்டர் வெடித்த பிறகு தயாநிதி மாறனை கட்சியும், கருணாநிதியும் புறக்கணித்த பிறகு முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளார் அறிவுநிதி.
சட்டசபையில் கலைஞரின் பொன்விழாக் கூட்டத்திற்கு தன் மனைவி, பிள்ளைகளுடன் வந்திருந்த அறிவுநிதி சட்டசபை மாடத்தில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மாடத்தில் ரவுடி அழகிரி தன் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார்.

ஆக.. "இனிமேல் தூரத்துச் சொந்தங்களுக்கு அதிகாரமில்லை.. அதிகாரம் முழுவதும் எங்களுக்குத்தான்.." என்று ரத்த வழிச் சொந்தங்கள் முடிவு கட்டிவிட்டார்கள். இந்தக் கூட்டணியில்தான் இவர்கள் கனிமொழியை இணைத்துக் கொண்டார்கள். இதுவே இப்போது குழப்பத்திற்கு ஒரு காரணமாகிவிட்டது.

மூத்த மகள் செல்விக்கு கனிமொழியை முன்னிலைப்படுத்துவது பிடிக்காமல் போய்விட்டது. காரணம் பழங்கால, அரதப் பழசான கதையான 'சின்ன வீட்டு'க்குப் பிறந்தவர் என்பதால்தான். கலைஞரின் மூன்றாவது திருமணத்தை அகில உலகமும் ஏற்றுக் கொண்டாலும், இன்னமும் கலைஞரின் இரண்டாவது மனைவி தயாளு அம்மையார் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாத்தி அம்மையாருடன், இதுவரை தயாளு அம்மையார் ஒரு வார்த்தைகூட பேசிக் கொண்டதில்லை.

ஆலிவர் ரோடு வீட்டில் நடந்த கனிமொழி-அரவிந்தன் திருமணத்தின்போதுகூட தயாளு அம்மையார் அந்த வீட்டுக்கு வரவில்லை. அப்போது பெண்ணின் தோழியாக இருந்தவர் அக்கா செல்விதான். அதன்பின் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த ரிசப்ஷனுக்கு மட்டுமே வந்து தலையைக் காட்டினார் தயாளு அம்மையார்.
இப்படி ஆலிவர் ரோடு வீட்டுப் பக்கம் காரில்கூட வரமாட்டேன் என்ற விரதத்தில் இருந்த தயாளு அம்மாவை, அங்கே போக வைத்த பெருமையும், இரண்டுபட்டுக் கிடந்த குடும்பத்தை அப்போதே ஒன்று சேர்த்த பெருமையும் ஜெயலலிதா அம்மையாருக்கு உண்டு.

அவருடைய போன ஆட்சியில் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்களே. அப்போது கலைஞரை 'காவலர்கள்' என்ற பெயரில் வந்த 'வேட்டை நாய்கள்' தூக்கிச் சென்ற பிறகு கீழே இறங்கி வெளியே வந்த முரசொலி மாறன் தன் காரிலேயே ராஜாத்தி அம்மையாரை ஏற்றிக் கொண்டு கிளம்ப.. அப்போது அங்கே தன் மகள் செல்வியோடு வந்து சேர்ந்தார் தயாளு அம்மையார்.
முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தால் அவருடைய காரில் சென்றால்தான் எங்கும் உள்ளே நுழையலாம் என்ற எண்ணத்தில் முரசொலி மாறனின் காரிலேயே செல்வியும், தயாளு அம்மையாரும் ஏறிக் கொள்ள அன்றைக்குத்தான் அவ்வளவு பக்கத்தில் பத்திரிகையாளர்களே அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.

இவர்களை ஏற்றிக் கொண்டு வந்த காரால்தான் முரசொலி மாறன் அரசினர் தோட்டத்தில் இருந்த சிபிசிஐடி அலுவலக கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

அப்போது கலைஞர் சிறையில் இருக்க.. ஆலிவர் ரோடு வீட்டிலேயே ஆதி காலத்திலிருந்தே அடைக்கலமாயிருந்த கலைஞரின் மாமியார்(ராஜாத்தி அம்மாவின் தாயார்) திடீரென்று மரணமடைந்தார். அப்போது மட்டும்தான் தயாளு அம்மாள் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போதும் ராஜாத்தியிடம் பேசாமல் கனிமொழியிடம் மட்டுமே பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் தயாளு அம்மையார்.
அப்போதே தி.மு.க.வினர் ஜெயலலிதாவை நைஸாக இந்த ஒரு விஷயத்துக்காகவே பாராட்டத்தான் செய்தார்கள். "கலைஞர் 35 வருடமாக முயற்சித்ததை, ஜெயலலிதா ஒரே நிமிடத்தில் செய்துவிட்டார்.." என்றார்கள்.

கலைஞரின் மகள் செல்வி என்றே பிரபலமான செல்விக்கு தனக்குப் போட்டியாக இன்னொரு மகள் வெளிச்சத்திற்கு வருவது அரவே பிடிக்கவில்லை. இதற்காகவே தனது கணவரின் அண்ணன் மகன்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறனுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பிடிக்காமல் போய் சகோதரியுடன் சமீபகாலமாக ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டுள்ளார்களாம்.

கலைஞரின் மற்றொரு சகோதரியின் மகன்களான அமிர்தம், சொர்ணம் இருவரின் குடும்பத்தினருக்கும் பங்காளிகளான மாறன் குடும்பத்தினரின் அனுக்கிரகமும், பண ஆசியும் கிடைக்காததால் அவர்களும் ஸ்டாலின் பின்னால் அணிவகுத்துள்ளனர்.

பூம்புகார் புரொடெக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்படும் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அமிர்தம், சமீப காலமாக வேலை வாய்ப்பின்றி சும்மாதான் இருந்து வருகிறார். முரசொலி மாறன் இருந்தவரையிலும் அவருடைய பாதுகாப்பில்தான் தனது குடும்பத்துத் திருமணங்களை நடத்தி முடித்துக் கொண்டார்.

இதே போல் சொர்ணம்.. இவரும் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக இருந்து தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர். இவரும் தற்போது தனது பிள்ளைகளின் சிறிய small businessல் தான் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

முரசொலி மாறன் இருந்தவரையிலும் இந்த பங்காளிகளுக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டார். அவர் போன பின்பு தலையெடுத்திருக்கும் கலாநிதி மாறன் இக்கால இளைஞர்களுக்கே உரித்தான கோபத்தில், "அவங்கவுங்க உழைச்சு சம்பாதிக்க வேண்டியதுதான.. எதுக்கு எங்ககிட்ட வரணும்?" என்று பிச்சைக்காரர்களை விரட்டுவதைப் போல் விரட்டியதுதான் ஒட்டு மொத்தக் குடும்பமும் மாறன் குடும்பத்திற்கு சூன்யம் வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது கலைஞரின் கோபம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.. அதன் பின்பு பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று 'மாறன்களுக்கு' சித்தப்பா முரசொலி செல்வம் அட்வைஸ் செய்துள்ளாராம்.
ஆனாலும் தான் நேரில் போய் பேசினால் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்திருக்கும் கலாநிதி மாறன், அமெரிக்காவில் டாக்டராகப் பணியாற்றும் தன் சகோதரியின் வீட்டில் இருக்கும் அம்மா மல்லிகா மாறனை அழைத்து வர அமெரிக்கா சென்றுள்ளார்.

மல்லிகா மாறன் சென்னை வந்தவுடன் முழுமையான சமாதானப் படலம் மீண்டும் துவங்கும் என்கிறார்கள். ஏனெனில் தயாளு அம்மாவுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே மிக நெருங்கியவர் மல்லிகா மாறன்தான். அவர் சொன்னால் கலைஞர் குடும்பத்துப் பெண்கள் கேட்பார்கள். பெண்கள் மூலமாக அணுகினால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று கோபாலபுரத்திற்குள் உலா வரும் போஸ்ட்மேன்கள் வரை அனைவரும் சொல்கிறார்கள்.


இப்போதைக்கு கலைஞரின் கோபம் ஆறினாலும் குடும்பத்து ஆண்கள் 'சொத்து' என்பதில் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் தி.மு.க. என்ற கட்சியும், கலைஞரின் ஆட்சியும் இல்லாமல் போயிருந்தால் மற்றத் தொலைக்காட்சிகளை 'ஒழித்துக்' கட்டிய சுமங்கலி கேபிள் விஷனை, சன் டிவியால் நடத்தியிருக்கவே முடியாது. ஆக நம்மை வைத்து காசு சம்பாதித்தவர்கள் இப்போது வளர்ந்தவுடன் கட்சிக்காரனைப் போல் நம்மையே எட்டி உதைக்கிறார்கள் என்ற கேள்விக்கு மாறன்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதில்தான் இந்த நாடகத்திற்கு விடை கிடைக்கும்.

இப்படி சென்னை வெயிலைவிடவும் கோபாலபுரம் சூட்டில் வெந்து கொண்டிருக்க...

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருவாரூரில் தன் நான்காவது 'ஆசை நாயகி'யுடன் ஒரு குடிசை வீட்டில் பட்டப் பகலிலேயே 'சரக்கு' அடித்துக் கொண்டு டூயட் பாடி வருகிறார் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து.

ஆண்டவன் அத்தனை பேருக்கும் அளந்துதான் கொடுத்திருக்கிறான்..

64 comments:

Anonymous said...

அய்யா உண்மை தமிழன் , உங்க கட்டுரைய நீங்களே திரும்ப படிங்க , எங்கயாவது திமுக ஜனநாயக அரசியல் கட்சி என்ற அடையாளம் தெரிகிறதா ?

ஏதோ முகலாய சக்கரவர்த்திகளின் குடும்ப அல்லது சின்ன வீட்டு சண்டை கதை போலவே தெரிகிறது ,

அப்புறம் நீங்கள் வேறு உங்களை சில பல பூத் ஏஜண்டுகளுக்கு அடையாளப்படுத்திக்கொண்டுள்ளீர்கள் , ஆட்டோ அபாயத்தை நினைத்தால் எனக்கே பயமாக உள்ளது ,ஜாக்கிறதை

Badri Seshadri said...

வாவ்! இத்தனை 'உள்' மேட்டர்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே? நடப்பதைக் கண்டு நான் நிறையவே குழம்பியுள்ளேன். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவ்வளவு தூரம் இழுத்துவிடவேண்டிய பிரச்னையாக இது எனக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத பல உள்விஷயங்கள் இருப்பதால்தான் பிரச்னை இவ்வளவு தூரம் வந்துள்ளது!

Tulsi said...

என்னங்க மூணாவது நாலாவதுன்னு படிக்கவே தலை சுத்துது.(-:

ஐய்யோ.......... தமிழ்நாட்டின் தலை எழுத்தே(-:

Anonymous said...

ம்ம்ம்ம்...
/*இத்தனை 'உள்' மேட்டர்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே? */

:-))

Anonymous said...

Dear Dr Unmai Tamilan. You have been awarded Doctorate for this great research article about the Family of MK.
By Registrar
DR JJ University

உண்மைத்தமிழன் said...

//கரு.மூர்த்தி said...
அய்யா உண்மை தமிழன் , உங்க கட்டுரைய நீங்களே திரும்ப படிங்க , எங்கயாவது திமுக ஜனநாயக அரசியல் கட்சி என்ற அடையாளம் தெரிகிறதா ?

ஏதோ முகலாய சக்கரவர்த்திகளின் குடும்ப அல்லது சின்ன வீட்டு சண்டை கதை போலவே தெரிகிறது ,

அப்புறம் நீங்கள் வேறு உங்களை சில பல பூத் ஏஜண்டுகளுக்கு அடையாளப்படுத்திக்கொண்டுள்ளீர்கள் , ஆட்டோ அபாயத்தை நினைத்தால் எனக்கே பயமாக உள்ளது ,ஜாக்கிறதை//

கரு.மூர்த்தி ஐயா உங்களுடைய எச்சரிக்கைக்கும், பாசத்திற்கும் மிக்க நன்றி..

நாங்க பார்க்காத ஆட்டோவா, பெட்ரோல் குண்டா? எது வந்தாலும் வரச் சொல்லுங்க..

இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்குறதுக்கு 'மேல' போய்ச் சேர்றதுகூட ஒரு வகைல நல்லதுதான்.. என்ன சொல்றீங்க?

Anonymous said...

வாவ்!!! அருமையான விவரம் தேர்ந்த ஒரு நல்ல பதிவு. ஒரு துப்பறியும் நிருபர் போல எழுதியிருக்கிறீர்கள்.

இந்த பதிவில் அடிப்படையில் தொய்க்கும் ஒரு ஆதங்கம் எனக்கு புரிகிறது. திமுக முற்றிலும் முகவின் சொத்தாகிப்போனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். தயாநிதி திமுக்க்கு ஒரு நல்ல பலமாக விளங்கினார். அவரை அசட்டுகோபத்தில் அழித்துவிட்டதால் திமுகவுக்கு கொஞ்சம் நஷ்டமே.

உண்மைத்தமிழன் said...

//வாவ்! இத்தனை 'உள்' மேட்டர்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே? நடப்பதைக் கண்டு நான் நிறையவே குழம்பியுள்ளேன். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவ்வளவு தூரம் இழுத்துவிடவேண்டிய பிரச்னையாக இது எனக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத பல உள்விஷயங்கள் இருப்பதால்தான் பிரச்னை இவ்வளவு தூரம் வந்துள்ளது!//

தங்களது முதல் வருகைக்கு நன்றி பத்ரி ஸார்..

பணம் எங்கே அதிகம் உள்ளதோ அங்கே பாச உணர்ச்சிகளுக்கு இடம் இருக்காது. இதைத்தான் மாறன் குடும்பம் கடைப்பிடித்து வந்துள்ளது..

இன்றைக்கும் தயாநிதி மாறனையாவது அவர்களது குடும்பத்தில் நம்மாளு என்று ஒத்துக் கொள்வார்கள். ஆனால் கலாநிதி மாறனை அப்படி ஒத்துக் கொள்வது அவர்களால் முடியாத செயலாகிவிட்டது. காரணம் முழுக்க முழுக்க கலாநிதி மாறன்தான்.. அவருடைய தனிப்பட்டக் குணங்கள்தான்.. அவர் ஒரு சிறந்த தொழிலதிபர். ஆனால் சிறந்த குடும்ப நண்பர் இல்லை என்கிறார்கள்.

என்ன செய்வது? எனக்கும் கலைஞர் என்ற வயதான ஒருவர் மீது அனுதாபம் இருக்கத்தான் செய்கிறது. இந்த வயதிலும் இவ்ளோ தூரம் அனைவரையும் கொண்டு வந்து வைத்த பிறகும் அவரை நிம்மதியாக இருக்க விட மறுக்கிறார்களே என்று..

நாமக்கல் சிபி said...

டாக்டர் உண்மைத் தமிழன் வாழ்க! வாழ்க!

Anonymous said...

We Propose Dr உண்மைத் தமிழன் for next President of India.

All of you kindly please give your support to DR உண்மைத் தமிழன்.

Dr உண்மைத் தமிழன் Fan Club

உண்மைத்தமிழன் said...

//Tulsi said...
என்னங்க மூணாவது நாலாவதுன்னு படிக்கவே தலை சுத்துது.(-:

ஐய்யோ.......... தமிழ்நாட்டின் தலை எழுத்தே(-://

என்னங்க டீச்சர் மேடம்.. இதுதானே திராவிட இயக்கத்தினரின் தலையாய மந்திரம்.. இஇப்பத்தான் கேள்விப்படுற மாதிரி சொல்றீங்களே..? இது நியாயமா?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ம்ம்ம்ம்...
/*இத்தனை 'உள்' மேட்டர்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே? */

:-))//

நன்றி அனானி..

இவை அனைத்துமே பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்போது பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 'முதல்வர்' செல்லமாக இருப்பதால்தான் இந்தளவுக்கு 'நோண்ட'வில்லை.

அருண்மொழி said...

மாறன்கள் எம்.ஜி.ஆர் ஆவார்களா (அ) வை.கோ ஆவார்களா?

அருண்மொழி said...

ஆக மொத்தம் - தமிழ் உலகம் மதுரையில் நடந்ததை மறந்துவிடும்.

Anonymous said...

:))

Anonymous said...

உ.த வை இன்னுமா நம் பன்றிகள் அதிமுகவி கொண்டு சேர்க்கவில்லை ?

இல்லை , யாராவது இப்படி உண்மைகளை எழுதினால் உடனே அவரை அதிமுக அடிவருடி என்பார்களே ....

உண்மைத்தமிழன் said...

//Registrar JJ University said...
Dear Dr Unmai Tamilan. You have been awarded Doctorate for this great research article about the Family of MK.
By Registrar
DR JJ University//

ம்.. எனக்கு நானே என் கையாலயே சூன்யம் வைச்சுக்குறேன்னு நினைக்கிறேன்..

'சூன்யம்' ஒர்க்அவுட்டாச்சுன்னா அப்ப வந்து உங்ககிட்ட நேர்ல வந்து தேங்க்ஸ் சொல்றேன்.. இப்ப வந்ததுக்கு மட்டும் நன்றி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
வாவ்!!! அருமையான விவரம் தேர்ந்த ஒரு நல்ல பதிவு. ஒரு துப்பறியும் நிருபர் போல எழுதியிருக்கிறீர்கள்.

இந்த பதிவில் அடிப்படையில் தொய்க்கும் ஒரு ஆதங்கம் எனக்கு புரிகிறது. திமுக முற்றிலும் முகவின் சொத்தாகிப்போனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். தயாநிதி திமுக்க்கு ஒரு நல்ல பலமாக விளங்கினார். அவரை அசட்டுகோபத்தில் அழித்துவிட்டதால் திமுகவுக்கு கொஞ்சம் நஷ்டமே.//

தி.மு.க. என்பதற்கு அர்த்தமே திருக்குவளை மு.கருணாநிதி என்பதுதான். இது எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறிய பிறகு இந்தச் சொத்து மேட்டர் ரிஜிஸ்தர் செய்யப்பட்டுவிட்டது.

பதிவு செய்யப்பட்டச் சொத்தில் யார், யாருக்கு எவ்வளவு பங்கு என்பதில்தான் இப்போது குழப்படி, அடிதடி, வெட்டுக்குத்து, அப்பாவிகளின் சாவுகள்..

மு.க.வை அவ்வளவு எளிதாகக் கணக்குப் போடாதீர்கள். இதுவும்கூட அவருடைய நாடகத்தில் ஒரு அங்கம்தான். அவர் உணர்ச்சிகளால் சூழப்பட்ட ஒரு மனிதர்.. மிக விரைவில் பேரனுக்கு ஞானஸ்நானம் செய்து மீண்டும் அருகில் வைத்துக் கொள்வார். சன் டிவி என்னும் மீடியாவை பயன்படுத்தவில்லையெனில் வருங்காலத்தில் தி.மு.க.வுக்குத்தான் மிகப் பெரிய நஷ்டம் உண்டாகும்.

இது தெரிந்துதான் அவ்வளவு தைரியமாக மு.க.அழகிரி ஏவி விட்ட ரவுடிகள் என்று ஒரு நாள் முழுக்க சன் டிவி அலறியது.

உண்மைத்தமிழன் said...

//அருண்மொழி said...
மாறன்கள் எம்.ஜி.ஆர் ஆவார்களா (அ) வை.கோ ஆவார்களா?

அருண்மொழி said...
ஆக மொத்தம் - தமிழ் உலகம் மதுரையில் நடந்ததை மறந்துவிடும்.//

பாசமான, அடக்கமான பேரன்களாக ஆவார்கள். இதுதான் நடக்கும். எம்.ஜி.ஆராக மாறுவதற்கு தயாநிதிக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கலாநிதிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதில்தான் வெறி. பதவி வெறி அல்ல.. ஸோ.. அரசியலுக்கு நோ சான்ஸ்..

நிச்சயம் தமிழ் வலைத்தளத்தில் மட்டுமே இனி இந்த மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கும். வேறு உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை..

அருண்மொழி said...

உண்மை தமிழரே,

கருணாநிதி போடவேண்டாம் என்று சொல்லியும் அந்த surveyயை போட்ட விஷயம் - உண்மையா?

Tulsi said...

//என்னங்க டீச்சர் மேடம்.. இதுதானே திராவிட இயக்கத்தினரின்
தலையாய மந்திரம்.. இஇப்பத்தான் கேள்விப்படுற மாதிரி
சொல்றீங்களே..? இது நியாயமா?//

குடும்ப மரத்தின் சரித்திரம் இவ்வளவு விசாலமா இருக்குன்னு உண்மைக்குமே
தெரியாதுங்க. ரொம்பக் கொஞ்சமா இந்தியாவில் முந்தி
இருந்தப்பத் தெரிஞ்சுக்கிட்டதுதான். அப்ப( 33 வருசம் முந்தி) சரித்திரம்
விருப்பப் பாடமா இல்லை(-:

ஒரு சர்வே இந்தப் பாடு படுத்திருச்சா? இதைப் பாருங்க.

இன்றைய ஸ்பெஷல்

பங்காளி... said...

நேர்மையான பதிவு...

கலைஞரின் அறிவுறுத்தலையும் மீறி கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டதே எல்லாவற்றிற்கும் ஆரம்ப காரணமாயிருக்குமென நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//அருண்மொழி said...
உண்மை தமிழரே,

கருணாநிதி போடவேண்டாம் என்று சொல்லியும் அந்த surveyயை போட்ட விஷயம் - உண்மையா?//

உண்மைதான் அருண்மொழி. காரணம் கலைஞருக்கு நிச்சயம் இது புதுவித பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பது அவருடைய 83 வயது அனுபவம் சொன்னது.. கலாநிதிக்கோ தாத்தா இதுவதை தன்னிடம் சிபாரிசு செய்த 101க்கு அடுத்து 102வது சிபாரிசு இது என்று அலட்சியப்படுத்திவிட்டார். தாத்தாவும், பேரனும் மு.க.அழகிரி என்னும் ரவுடியை சற்றுக் குறைவாக மதிப்பிட்டதால் வந்த விளைவு இது..

Anonymous said...

superb post..!! hats off!

நாமக்கல் சிபி said...

Indiyavin varungala janadhibadhi Dr.Unmai thamizan Vaazgha! Vaazgha!

-Dr. Unmaithamizhan Agila Indiya Rasigar Peravai,
Coimbatore Kilai.

Anonymous said...

ஊ தமிழன் அவர்களே எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்ற ஒழுக்கத்தில் சிறந்த அரசியல்வாதிகளை புறக்கணித்ததால் இந்த கயவனிடம் மாட்டிக்கொண்டுள்ளோம்.

உண்மைத்தமிழன் said...

///Tulsi said...
//என்னங்க டீச்சர் மேடம்.. இதுதானே திராவிட இயக்கத்தினரின்
தலையாய மந்திரம்.. இஇப்பத்தான் கேள்விப்படுற மாதிரி
சொல்றீங்களே..? இது நியாயமா?//

குடும்ப மரத்தின் சரித்திரம் இவ்வளவு விசாலமா இருக்குன்னு உண்மைக்குமே
தெரியாதுங்க. ரொம்பக் கொஞ்சமா இந்தியாவில் முந்தி
இருந்தப்பத் தெரிஞ்சுக்கிட்டதுதான். அப்ப( 33 வருசம் முந்தி) சரித்திரம்
விருப்பப் பாடமா இல்லை(-:

ஒரு சர்வே இந்தப் பாடு படுத்திருச்சா? இதைப் பாருங்க.//

மேடம்.. எனக்கு சரித்திரப் பாடத்தில்தான் மிகவும் ஆர்வம். அதனால்தான் இந்தத் தரித்திரத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம்..

நீங்கள் கொடுத்த இடுகைக்குள் சென்று பார்த்தேன். படித்தேன்.

இங்கே இந்த சர்வே எடுத்ததற்கு காரணம், மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது தினசரி பேப்பரை அதிகமாக விற்க வைத்து அதிக லாபம் வைத்து காசு சம்பாதிக்கலாம் என்பதுதான்.

இது மாதிரி சர்வேக்கள் மக்களிடையே அதிலும் தமிழ் மக்களிடையே எந்த விழிப்புணர்வையும் தோற்றுவிக்காது. மாறாக அரசியல்வாதிகளுக்குத்தான் இது தங்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் கணக்கைத் தீர்த்துக் கொள்ள உதவும். அப்படித்தான் இதுவும் கலைஞர் குடும்பத்தினருக்கு உதவியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மு.க.அழகிரிக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ, அதே அளவு பங்கு தினகரன் நிர்வாகத்தினருக்கும் உண்டு.

தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்.

அவ்வப்போது திடீர், திடீரென்று வேலைகள் சனியாக வந்து நிற்கின்றன. அதுதான்..

ஆனாலும் இப்படி 33 வருஷம் கழிச்சும் தமிழை மறக்காம இருக்கீங்க பாருங்க.. கை தட்டிப் பாராட்டுகிறேன்.. வாழ்க டீச்சர்..

உண்மைத்தமிழன் said...

//பங்காளி... said...
நேர்மையான பதிவு...

கலைஞரின் அறிவுறுத்தலையும் மீறி கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டதே எல்லாவற்றிற்கும் ஆரம்ப காரணமாயிருக்குமென நினைக்கிறேன்.//

உண்மைதான் பங்காளி ஸார்.. 'பங்காளிகள்' சண்டை எங்கே போய் முடிந்துவிட்டது பாருங்கள்..?

உண்மைத்தமிழன் said...

//sundaram ayyangar said...
ஊ தமிழன் அவர்களே எம்ஜிஆர்,ஜெயலலிதா போன்ற ஒழுக்கத்தில் சிறந்த அரசியல்வாதிகளை புறக்கணித்ததால் இந்த கயவனிடம் மாட்டிக்கொண்டுள்ளோம்.//

அன்பு சுந்தரம் ஐயங்கார் அவர்களே.. எழுதுவதே இரண்டே இரண்டு வரிகள்தான். அதிலும் சுருக்கமா? ஏன் இஇம்புட்டு சோம்பேறித்தனம்? 'உண்மைத் தமிழனுக்கு' 'உ'-வுக்குப் பதிலாக 'ஊ' என்று எழுதுகிறீர்கள். இதையாவது பார்க்கக் கூடாதா? அல்லது உங்களது சொந்தப் பெயரை மாற்றி 'சுந்தரம் ஐயங்கார்' என்று முகமூடி வைத்துக் கொண்டதைப் போல் எனது பெயரையும் 'ஊமைத்தமிழன்'னு மாத்திட்டீங்களா? எப்படிக் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?

சரி.. இஇதென்ன கேள்வி? ஒழுக்கத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் எங்கே இருக்கிறது தொடர்பு..?

மன ஒழுக்கம், உடல் ஒழுக்கம், அக ஒழுக்கம், தொழில் ஒழுக்கம், அரசியல் ஒழுக்கம் என்பதில் எதுலேயுமே பாஸ் மார்க் வாங்காதவர்கள்தான் நமது அரசியல்வாதிகள்.. பிறகென்ன இப்படியரு கேள்வி?

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..

Anonymous said...

இம்புட்டும் சொல்லிப்புட்டு கடைசியில கடவுள் அது இதுன்னு... என்னா ராசா, பகுத்தறிவுக்கு காசு தான கடவுள் !!

போவட்டும், கலாநிதி, தயாநிதிக்கு சுமார் எம்புட்டு சொத்து இருக்கும் ??

16000 கோடின்னு சொல்லுதாங்களே...மெய்யாலுமா ?

என்னவோ போ

தமிழன் அன்னாடம் தண்ணிக்கு மண்ணெண்ணைக்கு தவிக்கிறான்....

இந்த பகுத்ததறிவு ஜீவிங்க கோடி கோடியா அடிச்சு பங்கு போட அடிச்சுக்குதுங்க...

என்னாவோ போ....

மாலன் said...

பத்ரி சொல்லி இந்தப் பதிவைப் படித்தேன்.பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் இதில் உணமைகள் இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

இதைக் குறித்து சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். புதன் கிழமை வெளி வரும் புதன் காலையில் என் பதிவில் அந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். அதைப் படித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்

அன்புடன்
மாலன்

Boston Bala said...

நன்றி :)

Anonymous said...

உண்மையோ பொய்யோ

ஆதாரமில்லாத பதிவு

Anonymous said...

உங்கள் அருமையான பதிவுகளுக்கு மகிழ்ச்சி அடைபவனும் நான்தான்

ஆதாரமில்லாத பதிவுகளுக்கு வருத்தப்படுபவனும் அடியேன்தான்

Anonymous said...

//
We Propose Dr உண்மைத் தமிழன் for next President of India.

//

உங்கள் சேவை தமிழ்நாட்டிற்குத் தேவை அதுனால

வருங்கால தமிழக முதல்வர்

உன்மைத் தமிழன் வாழ்க வாழ்க

வருங்கால தமிழக முதல்வர்

உன்மைத் தமிழன் வாழ்க வாழ்க

Anonymous said...

//

என்ன செய்வது? எனக்கும் கலைஞர் என்ற வயதான ஒருவர் மீது அனுதாபம் இருக்கத்தான் செய்கிறது. இந்த வயதிலும் இவ்ளோ தூரம் அனைவரையும் கொண்டு வந்து வைத்த பிறகும் அவரை நிம்மதியாக இருக்க விட மறுக்கிறார்களே என்று..

//

அட சூப்பர் காமெடி அடிக்கிறிங்க

Anonymous said...

எனக்கு ஓரு உண்மை தெரிஞ்சாகனும்

இவ்வளவு மாட்டர் உங்களுக்கு எப்படித் தெரியும்

Anonymous said...

Excellent Research உண்மைத் தமிழன்...
But no other way Tamil nadu has to lie in his hands only for this tenure...and for sure people will forget this when sivaji gets released...
No value for 3 persons life...It is this much agitating for us...I'm just thinking about the minds of those 3 families...what will console them???

Anonymous said...

திரு உண்மை தமிழன்,

உங்கள் கட்டுரை ஒரு நல்ல பதிவு.

கலைஞர் கருணாநிதி CM
Tamil Nadu

வால்டர் said...

விஎஸ்கே பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

பிராமின் தாத்தா,

இத்தனை நாள் தயாநிதி மாறனை இகழ்ந்தீர்கள். அவர் கொண்டு வந்த ஒரு ரூபாய் தொலைபேசித் திட்டத்தையும் காறி உமிழ்ந்தீர்கள்.

இன்றைக்கு திமுகவின் உட்கட்சிக்குள் சண்டை என்றதும் கருணாநிதிக்கு எதிரி என்றதும் தயாநிதியை புகழ்கிறீர்கள்.

பாப்பானை நடிப்பில் மிஞ்ச இந்த உலகத்தில் ஆட்களே இல்லை!

Santhosh said...

உண்மை தமிழரே இம்முட்டு விஷயம் தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கீங்க. நான் என்ன நினைக்கிறேன் அப்படின்னு இங்க போயி பாருங்க. இம்முட்டு பெயரையும் படிக்கும் பொழுது எனக்கு தமிழ்நாட்டின் voters list படிச்ச ஒரு பீலிங்க வருது. எப்பா ஒரு மனுசனுக்கு எம்முட்டு பொண்டாட்டிங்க எம்முட்டு புள்ளைங்க பேரப்புள்ளைங்க முடியலைடா சாமி.

உண்மைத்தமிழன் said...

//maalan said...
பத்ரி சொல்லி இந்தப் பதிவைப் படித்தேன்.பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் இதில் உணமைகள் இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

இதைக் குறித்து சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். புதன் கிழமை வெளி வரும் புதன் காலையில் என் பதிவில் அந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். அதைப் படித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்

அன்புடன்
மாலன்//

மிக்க நன்றி மாலன் ஸார்.. என்னைவிட, வலைப்பதிவர்களைவிட உங்களுக்குத்தான் அவர்களைப் பற்றி நன்கு தெரியும். நான் ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில் இட்டிருப்பது போல.. சில பத்திரிகையாளர்களிடம் பேசியது, அவர்களிடம் அறிவாலயத்து அம்பிகள் புலம்பியது எல்லாவற்றையும் சேர்த்துத்தான் எழுதியிருக்கிறேன்.

நிர்வாகக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியது அவராகவே பேசியது என்றா நினைக்கிறீர்கள்? பல வருட காலமாக பத்திரிகை ஆசிரியராக இருந்து வருகிறீர்கள். உங்களுக்குத் தெரியாதது அல்ல.. இவர்களின் நேரடித் தாக்குதலைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்படி குடும்பம் மொத்தமும் நடிப்பதற்காக நாடகம் போடுகிறார்கள். பாருங்கள். அதைத்தான் தாங்க முடியவில்லை.

மேலும் நான் இன்னும் சில விஷயங்களை எழுதவில்லை. அது ஸ்டாலின், கலாநிதி, உதயநிதி, தயாநிதிகள் மோதல் பற்றி.. இதில் சில நான் எதிர்பார்த்த உறுதியானத் தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால்தான் எழுதவில்லை. மற்றபடி நீங்கள் நினைத்தால் என்னைவிட நிறையவே எழுதலாம்.

உங்களுடைய கட்டுரையை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தாமதமாகப் பின்னூட்டம் போடுவதற்கு மன்னிக்கவும். நிறைய வேலைகள் அதனால்தான்.

பதிவிற்குள் வந்து சென்றதற்கு மிக்க நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Boston Bala said...
நன்றி :)//

நன்றி பாலா ஸார்..

பல இடுகைகளில் நீங்கள் snap judge இணைப்பையும் தந்திருக்கிறீர்கள்.

அதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மையோ பொய்யோ

ஆதாரமில்லாத பதிவ//

ஐயா அனானி.. உண்மையோ.. பொய்யோ.. என்று நீங்களே சொல்லிவிட்டு ஆதாரமில்லாதது என்று எப்படி முடிவு கட்டினீர்கள்?

உண்மைத்தமிழன் said...

//உங்கள் தமிழன் said...
உங்கள் அருமையான பதிவுகளுக்கு மகிழ்ச்சி அடைபவனும் நான்தான்

ஆதாரமில்லாத பதிவுகளுக்கு வருத்தப்படுபவனும் அடியேன்தான்//

உங்கள் தமிழன் ஸார்.. இப்போது நம் வலைத்தளத்தில் எழுதும் அரசியல் கட்டுரைகள் அனைத்துமே அவரவர்கள் கேள்விப்படவைகள், அவர்களது காதுகளுக்குச் சொல்லப்பட்டவைகளாகத்தான் இருக்கும். நேரிலேயே போய் பார்த்தது மாதிரி இருக்க வேண்டும் என்றால் அப்போது அவர் வலைத்தளத்தில் இருக்க முடியாது. நேரமிருக்காது.. ஸோ.. புரிந்து கொள்ளுங்கள்.. இதுவும் ஒருவகை பத்திரிகையியல்தான்.. வேறு ஒன்றுமில்லை.

ஓரிஜினல் தமிழன் said...
//
We Propose Dr உண்மைத் தமிழன் for next President of India.//

உங்கள் சேவை தமிழ்நாட்டிற்குத் தேவை அதுனால

வருங்கால தமிழக முதல்வர்

உன்மைத் தமிழன் வாழ்க வாழ்க

வருங்கால தமிழக முதல்வர்

உன்மைத் தமிழன் வாழ்க வாழ்க//

மொத்தமா குழி தோண்டி புதைச்சிரலாம்னு முடிவே பண்ணிட்டீக.. செய்யுங்க.. செய்யுங்க.. அப்பவாச்சும் வலைத்தமிழர் ஒருத்தர் முதல்வராயிட்டாருன்னு சந்தோஷமா பதிவைப் போடுங்க.. அப்பவும் ஜாதி, மதம் பார்த்து அழிஞ்சு போகாதீங்க ஒரிஜினல் தமிழன் அவர்களே..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

என்ன செய்வது? எனக்கும் கலைஞர் என்ற வயதான ஒருவர் மீது அனுதாபம் இருக்கத்தான் செய்கிறது. இந்த வயதிலும் இவ்ளோ தூரம் அனைவரையும் கொண்டு வந்து வைத்த பிறகும் அவரை நிம்மதியாக இருக்க விட மறுக்கிறார்களே என்று..//

அட சூப்பர் காமெடி அடிக்கிறிங்க//

இதில் என்ன காமெடி இருக்கிறது?

முழுதாகப் படித்தீர்கள் அல்லவா?

கலைஞர் என்ற வயதான ஒருவர் மீது அனுதாபம் இருக்கத்தான் செய்கிறது என்பதில் என்ன தவறு?

ஒரு வயதான மனிதர் நம்முடைய வீட்டில் இருந்தால் அவரைத் தாத்தா என்போம்.

அவர் நிம்மதியாக இல்லை என்றால் சாதாரண சக மனிதன் என்ற முறையில் உங்களுக்கு ஒரு ஆதங்கம் இருக்காதா?

அதைத்தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதில் என்ன காமெடி?

உண்மைத்தமிழன் said...

//Vivek said...
Excellent Research உண்மைத் தமிழன்...
But no other way Tamil nadu has to lie in his hands only for this tenure...and for sure people will forget this when sivaji gets released...
No value for 3 persons life...It is this much agitating for us...I'm just thinking about the minds of those 3 families...what will console them???//

நன்றி விவேக் ஸார்..

இப்பொழுது ஒருவரை நீக்குவதும், அவரை ஒருவர் திட்டுவதும் இறந்து போன சம்பவத்தை மக்கள் மத்தியில் இருந்து பத்திரிகைகள் மூலமாகத் திசை திருப்பும் முயற்சிதான்..

இதில் திராவிட இயக்கத் தலைவர்கள் மிகவும் திறமைசாலிகள்.

அதைத்தான் கனகச்சிதமாக இப்போது செய்து கொண்டிருக்கிறார் கலைஞர்.

மூன்று மாதங்களில் உங்களுக்கே இது புரியும்..

உண்மைத்தமிழன் said...

வால்டர் வெற்றிவேல் said...
//விஎஸ்கே பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

பிராமின் தாத்தா,

இத்தனை நாள் தயாநிதி மாறனை இகழ்ந்தீர்கள். அவர் கொண்டு வந்த ஒரு ரூபாய் தொலைபேசித் திட்டத்தையும் காறி உமிழ்ந்தீர்கள்.

இன்றைக்கு திமுகவின் உட்கட்சிக்குள் சண்டை என்றதும் கருணாநிதிக்கு எதிரி என்றதும் தயாநிதியை புகழ்கிறீர்கள்.

பாப்பானை நடிப்பில் மிஞ்ச இந்த உலகத்தில் ஆட்களே இல்லை!//

பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத பின்னூட்டம் வால்டர் ஸார்..

ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் இல்லாத குடும்பமே இல்லை.

இங்கு குடும்பப் பிரச்சினையால் அப்பாவிகள் மூன்று பேரின் உயிரும்போய், அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாய் நிற்கிறது. இதுதான் பிரச்சினை..

இதற்காக யாரையுமே குற்றம் சாட்டக்கூடாது என்றால் எப்படி? நாம் இருப்பது நாட்டில்தானே.. காட்டில் இல்லையே..?

Anonymous said...

Dear True Tamilan

I got your post translated by one of the ADMK MP's. I will soon take appropriate action and will dissolve the assembly and make you the Governer for Tamil Nadu.

Dr Manmohan Singh
Prime Minister

உண்மைத்தமிழன் said...

//சந்தோஷ் aka Santhosh said...
உண்மை தமிழரே இம்முட்டு விஷயம் தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கீங்க. நான் என்ன நினைக்கிறேன் அப்படின்னு இங்க போயி பாருங்க. இம்முட்டு பெயரையும் படிக்கும் பொழுது எனக்கு தமிழ்நாட்டின் voters list படிச்ச ஒரு பீலிங்க வருது. எப்பா ஒரு மனுசனுக்கு எம்முட்டு பொண்டாட்டிங்க எம்முட்டு புள்ளைங்க பேரப்புள்ளைங்க முடியலைடா சாமி.//

சந்தோஷ் ஸார்.. கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி இறந்த பின்பே இரண்டாவதாக தயாளு அம்மாவை கலைஞர் திருமணம் செய்தார். ஆகவே இது சட்டப்பூர்வமானதுதான்.

1969ம் ஆண்டுதான் ராஜாத்தி அம்மாவைத் திருமணம் செய்தார் கலைஞர். இது 'ஆண்மகன்' என்ற தோரணையில் நடத்தப்பட்ட ஒரு சம்பவம்.

அப்போதெல்லாம் குழந்தைகள் நிறைய பெறுவது என்பது சகஜம். அதனால்தான் நிறைய பேர்..

இது சாம்பிள்தான்.. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பாருங்கள். இதைவிட அதிகமான குடும்பங்களையெல்லாம் நீங்கள் காணலாம்..

தங்களது வருகைக்கு நன்றி சந்தோஷ்..

உண்மைத்தமிழன் said...

//Dr Manmohan Singh said...
Dear True Tamilan

I got your post translated by one of the ADMK MP's. I will soon take appropriate action and will dissolve the assembly and make you the Governer for Tamil Nadu.

Dr Manmohan Singh
Prime Minister//

ஐயா பிரதமர் அவர்களே..

இந்த விஷயத்தை நீங்க கேள்விப்பட்ட மாதிரி தெரிஞ்சாலே நாளைக்கு நீங்க பிரதமரா இருப்பீங்களான்றதே கேள்விக்குறியாயிரும்..

ஸோ.. இது மாதிரி எதுனா தத்துப்பித்துன்னு உளறி உங்க லைபை நீங்களே கெடுத்துக்காதீங்க..

அதையெல்லாம் நிஜ பிரதமர் அம்மாவும், ஐயாவும் பார்த்துக்குவாக..

நீங்க நீட்டுற பைல்ல கையெழுத்துப் போடுங்க.. நீட்டுற மைக்ல கொடுக்கிறதை அப்படியே படிச்சி ஒப்பிச்சிட்டுட்டு சமத்துப் பிள்ளையா இருங்க.

அதான் உங்களுக்கு நல்லது..

தென்றல் said...

அம்மாடியோவ்....தி.மு.க-காரங்களுக்கே இவ்வளவு விசயம் தெரியுமா-னு தெரியலை...

'நல்ல அலசலான' பதிவு, உண்மைத் தமிழன் !

இந்த குடும்பப் பிரச்சினை, தயாநிதி விலகல் ... அப்புறம் நம்ம "சிவாஜி" வேற இந்த மாச கடைசில வர்றார்... இந்த அமர்களத்துல... உயிர் இழந்த அப்பாவிகள் மூன்று பேரையும் அவர்களுடைய குடும்பத்தை பற்றிய செய்திகளை எளிதில் மறந்து விடுவோம். இதில எப்ப தீர்ப்பு வந்து, அந்த ரவுடிகளுக்கு தூக்கு தண்டனை வந்து..... என்னமோ .... இதலாம் நம்மளோட சாபக்கேடா... விதியா??

பி.கு: உண்மை சொல்லுங்க, நீங்களும் ஜீ.வி.யின் 'கழுகார்' டீம்ல இருக்கீங்கள?! :)

வெ. ஜெயகணபதி said...

Super karpanai...

Cinema vil kathai elutha sellungal Punaivu thamizhane. Mannikavum, vaai ulari unmai ( Punaivu thamizhan endra unmai ) unmayai ( Ungal peyaril ulla Unmaiyai ) maraithu vittathu ...

உண்மைத்தமிழன் said...

//Jeyaganapathi said...
Super karpanai...

Cinema vil kathai elutha sellungal Punaivu thamizhane. Mannikavum, vaai ulari unmai ( Punaivu thamizhan endra unmai ) unmayai ( Ungal peyaril ulla Unmaiyai ) maraithu vittathu...

சூப்பர் கற்பனை..

சினிமாவில் கதை எழுதச் செல்லுங்கள் புனைவுத் தமிழனே. மன்னிக்கவும் வாய் உளறி உண்மை(புனைவுத் தமிழன் என்ற உண்மை) உண்மையை (உங்கள் பெயரில் உள்ள உண்மையை) மறைத்து விட்டது.//

அன்புள்ள ஜெயகணபதி அவர்களே..

இதை இப்படியே தமிழிலேயே எழுதியனுப்பியிருக்கலாமே..? எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் எழுதி நீங்களும் சிரமப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தி, படிப்பவர்களையும் துன்புறுத்தி... இதெல்லாம் தேவையா?

நான் சினிமாவில் கதை எழுதப் போகும்போது கண்டிப்பாக தங்களிடம் சொல்லிவிட்டேச் செல்கிறேன். முதலில் உங்களது முகவரியையும், முகத்தையும் காட்டுங்கள்..

Anonymous said...

http://msathia.blogspot.com/2007/05/blog-post_14.html

இதுல உள்ள கமென்டஸ் படிச்சீங்களா?

எங்கயோ போய்கிட்டுருக்கிங்க போல

வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
http://msathia.blogspot.com/2007/05/blog-post_14.html

இதுல உள்ள கமென்டஸ் படிச்சீங்களா?

எங்கயோ போய்கிட்டுருக்கிங்க போல

வாழ்த்துக்கள்.//

அடப்பாவிகளா.. இப்படியுமா ஒரு மனுஷனை கொலை பண்ணுவீக..?

கிட்டத்தட்ட என் கதைய முடிச்சுப்புட்டாக போலிருக்கே..

பாசத்துக்கும் ஒரு அளவு வேணும் கண்ணுகளா.. இதெல்லாம் மனசுக்குள்ள வைச்சுக்குங்க.. இப்படியெல்லாம் வெளில காட்டி எனக்கு மஞ்சத் தண்ணி தெளிக்குற மாதிரி ஆக்கிராதீங்கப்பா.. ஆளை விடுங்க..

எனக்கும் 'அவுகளுக்கும்'எந்தச் சம்பந்தம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

Anonymous said...

//
எனக்கும் 'அவுகளுக்கும்'எந்தச் சம்பந்தம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..
//

ஆமா தல நாம இன்னும் திருச்சிக் கிளைக்கு அனுமதி குடுகல

உண்மைத் தமிழன் தலைமை ரசிகர் மன்றம்
சென்னை

வெ. ஜெயகணபதி said...

Thamilil elutha aasai thaan punaivu thamizhare, eppadi endru thaan theriya villai.

Naan chennai yil thaan irukiren. Ungal irupidamum chennai thaano. Athuvum Gopaalapuram CM veetuku pakkathu veedo. ( :) )

வெ. ஜெயகணபதி said...

Ayya punaivu thamizhare, Neenga periya thuppariyum arignar na, Poyi boyas thootathu ragasiyatha mopam pidichu elutha vendiyathu thaane. En anga thupparinju elutha onnum illaya, illa payama???

Anga nadakura visayam ellaam onnum ungala maathiri aalugaluku theriyaathu. Enna athuku kaaranam, Bramin aatharavu, Karunaanithi ethirpu.

உண்மைத்தமிழன் said...

//Jeyaganapathi said...
Thamilil elutha aasai thaan punaivu thamizhare, eppadi endru thaan theriya villai.

http://www.jaffnalibrary.com- இந்தத் தளத்திற்குள் சென்று பாருங்கள். நிறைய டைப்பிங் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எ.கலப்பை என்கிற software-ஐ install செய்து அதன் மூலம் டைப்பிங் செய்யலாம். கற்றுக் கொள்வதற்கு மிக எளிமையானது இது.

Naan chennai yil thaan irukiren. Ungal irupidamum chennai thaano. Athuvum Gopaalapuram CM veetuku pakkathu veedo. ( :) )

ரொம்பப் பக்கம்தான் ஸார்.. )))))))))

//Anga nadakura visayam ellaam onnum ungala maathiri aalugaluku theriyaathu. Enna athuku kaaranam, Bramin aatharavu, Karunaanithi ethirpu.//

முதலில் எழுதுகின்ற விஷயத்தை படித்துப் பார்த்து புரிந்து கொண்டு பேசுங்கள்..

இது ஜாதி, மத விஷயம் அல்ல. மக்களின் வாழ்வுரிமை பிரச்சினை..

ஒரு குடும்பத்துப் பிரச்சினைக்காக அப்பாவிகளை பலி கொடுக்கலாமா என்பதைப் பற்றியது.

இதில் எங்கே ஜாதி வந்தது?

வெ. ஜெயகணபதி said...

நான் வன்முறையை ஆதரிப்பவன் இல்லை. அழகிரியின் செயலை ஆதரிக்கவும் இல்லை.

ஆனால், கருணா நிதி ஆட்சியில் நடக்கும் விசயங்களை மட்டும் பார்த்து அலசி ஆரா ய்ச்சி செய்யும், அவரை மட்டும் திட்ட வாய்திறக்கும், அவருடைய ஆட்சியில் நடக்கும் நல்லவைகளை பாராட்ட மறுக்கும் அல்லது விரும்பாத உங்களை போன்றவர்களின் சிந்தனைகள், அவருடைய குடும்பத்தில் நடக்கும் விசயங்களைப்பற்றி மட்டும் எழுதும் உங்களை போன்றவர்க்ளுக்கு, ஏன் மற்றவர்களைப்பற்றி எழுத மனம் வருவதில்லை???


ஏன் போயசு தோட்டத்தில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜெ.ஜெ வுக்கும் எதுவும் பிரச்சனையே இல்லயா?

வளர்ப்பு மகனின் கல்யாணத்திற்கு 100 கோடி செலவு செய்து விட்டு அவனயே கஞ்சா கேசில் உள்ளே போட்டு, பின்னர் அவனை வெளியே விட்டு, இப்போது மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி கொஞ்சிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியவில்லய?

செரினா யார்? அதயும் உண்மை தமிழன் கொஞ்சம் அலசலாமே?

ஏன் இந்த பாரபட்சம்? பிறகு ஏன் நடு நிலை வாதி என்று சொல்லிக்கொள்ள வேண்டும்? உண்மை தமிழன் கருணா நிதி விசயத்தில் மட்டும் தான் உண்மை தமிழனா?

Anonymous said...

உங்களது இந்த பதிவு பி.டி.எப் கோப்பாக அனைத்து உலகமெங்கும் அலுவலகங்களிலும் தமிழ்பேசும் மக்களிடம் அலைகிறது...

செந்தழல் ரவி

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உங்களது இந்த பதிவு பி.டி.எப் கோப்பாக அனைத்து உலகமெங்கும் அலுவலகங்களிலும் தமிழ்பேசும் மக்களிடம் அலைகிறது...

செந்தழல் ரவி//

தங்களது வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி ரவி..

இராசகுமார் said...

Enga Unmai Tamilare,
Enna than kopam enralum,Eppadiyaa vaarthaikku vaarthai Alagiri i rowdi rowdi enru solvathu?

Ungal vasipidam Madurai illa ye?