அவன் வருவானா..? - சிறுகதை போட்டியில் நானும்..!

30-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த தோழர், நல்லதொரு நண்பர், பிடரியில் அடிக்கும் பின்னவீனத்துவ எழுத்தாளர், பல குருக்களே பொறாமைப்படும் அளவுக்கு பண்பான, அடக்கமான சீடர், அருமையிலும் அருமையான கதை, வசனகர்த்தா, வலையுலகின் தற்போதைய ரத்த பூமியின் தளபதிகளில் ஒருவரான பைத்தியக்காரன் ஆளுக்கு 1500 ரூபாய் என்று 20 பேருக்கு தருவதாக சொன்ன சிறுகதைப் போட்டி ஆரம்பத்தில் எனக்கும் மகிழ்ச்சியையும், உவப்பையும் தந்தது.

ஆனால் கூடவே நெருஞ்சி முள்ளாக அவர் வைத்த ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைக் கேட்டு எனக்கு உவ்வே வந்துவிட்டது. ஆகவே கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வந்த எனக்கு இன்றைக்குத்தான் தற்செயலாக ஞானமுனியின் பதிவைப் படித்தபோது அந்த ஆயிரம் வார்த்தைகள் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட விஷயம் தெரிந்தது.

நண்பர் பைத்தியக்காரனிடம் அது பற்றி தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு நானும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

இதோ அந்தச் சிறுகதை..!

அவன் வருவானா..?

கணேசன் வீட்டிலிருந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சில அடிகள் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்தார். வாசற்படியில் மகள் செல்வி சீனுவிடம் ஏதோ சொல்லியனுப்பினாள். சீனுவும், கணேசனின் அருகில் வர இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.

வீட்டில் கிளம்பியபோதே செல்வி சொன்னதெல்லாம் கணேசனின் நினைவுக்கு வந்தது. "இன்னைக்கு எப்படியும் அண்ணன் வந்திரும்பா.. நீங்க வேணா பாருங்க.. கண்டிப்பா அண்ணன் உங்களுக்கு முன்னாடி கோயில்ல நின்னுக்கிட்டிருக்கும்.."

"வரட்டும் பார்ப்போம்.. வந்துதானே ஆகணும்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டே நடந்தார் கணேசன்.

ரமணி வருவானா.. என்ற கேள்வி நான்கைந்து நாட்களாக அவரைத் தூங்கவிடாமல் செய்தது. போன வாரமே மகள் செல்வியும், அவரும் தனித்தனியாக ரமணியின் வீட்டுக்குச் சென்று "திங்கள்கிழமை கண்டிப்பா கோவிலுக்குப் போகணும்.. கொஞ்ச நேரந்தான்.. உடனே வந்திரலாம்.. அப்படியே நம்ம வீட்ல சாமி கும்பிட்டுட்டு அங்கேயே சாப்பிடணும்.." என்று ஒரு முறைக்கு, மூன்று முறை சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார்கள். எந்த பதிலையும் ரமணியிடமிருந்து வாங்க முடியவில்லை.

சீனுவின் கையைப் பிடித்துக் கொண்ட கணேசன் தன் தள்ளாமையை உணர்ந்து கொண்டு "இனிமேல் இவன்தான் நமக்கு எல்லாம்.." என்று எண்ணிக் கொண்டார். "ச்சே.. ரமணி குழந்தையாக இருந்தபோது கவனித்ததைப் போல இவனைக் கவனிக்கவில்லையே" என்று பச்சாபதமும் அவருக்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் காரணம் லஷ்மிதானே என்ற நினைவும் அவருக்கு வராமல் இல்லை.

---------------------------------

மூத்த மகன் ரமணியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக முதலில் சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அவனும் ஆரம்பத்தில் நன்றாகப் படித்தவன் போகப் போக படிப்பில் ஆர்வம் குறைந்து போனான். அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. அவன் அம்மா லஷ்மியும்கூடத்தான்..

காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக கணேசன் காலையில் 5.30 மணிக்கு ரமணியை எழுப்பி படிக்கச் சொல்வார். எழுந்திரிக்கும்போதே அலுத்துக் கொள்வான்.. லஷ்மியிடம் போய் ஒட்டிக் கொள்வான். "அஞ்சரைதான ஆகுது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. விடுங்க.." என்பாள் லஷ்மி.

அப்படியும் விடாமல் எழுப்புவார் கணேசன். "போய் முகத்த கழுவிட்டு வா.. லஷ்மி தம்பிக்கு காபி போடு.." என்று சொல்லிவிட்டு அவனின் புத்தகப் பையைத் தூக்கிப் படிப்பதற்கு ஏதுவாக முன்கூடத்தில் கொண்டு போய் வைப்பார். அவரும் வேலைக்குப் போவதாக இருந்தால் முன்கூட்டியே ரெடியாகி முன்னால் போய் உட்கார்வார்.. ஆனாலும் ரமணி வேண்டாவெறுப்பாக வந்து புத்தகத்தைத் தொடுவான்.

அவர் காலை ஷிப்டுக்குப் போய்விட்டால் அவர் தலை தெருக்கோடியில் மறைந்தவுடன் புத்தகங்களை தூரப்போட்டுவிட்டு திரும்பி வந்து படுத்துவிடுவான். லஷ்மிக்கு தன் மகன் படிக்காவிட்டாலும் பரவாயில்லை.. நன்றாக சாப்பிட்டாலே போதும்.. என்ற உணர்வே அதிகம் இருந்தது.

ரமணியை ஆறாவது வகுப்புக்கு கிறிஸ்துவ பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளிக்கும், வீட்டுக்கும் சுமாராக மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பல மாணவர்கள் அவரின் வீட்டுக்கருகில் இருந்தார்கள். "அவர்களுடன் சேர்ந்து ரமணியும் போய் வரட்டும்.." என்று நினைத்துத்தான் அங்கே சேர்த்துவிட்டார். வந்தது வினை.

அன்று கணேசனுக்கு காலை ஷிப்ட். "புத்தகப் பையைத் தூக்க முடியவில்லை.." என்று அழ ஆரம்பித்தான் ரமணி. இந்த மாதிரி நேரத்தில்தான் அவன் லஷ்மியிடம் அதிகம் கொஞ்சுவான். ரமணியின் நோக்கம் பலித்தது. அன்றிலிருந்து லஷ்மியே அவனுடன் ஸ்கூல் வரைக்கும் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு போக ஆரம்பித்தாள்.

அவன் மாங்காயோ. நெல்லிக்காயோ கடித்துக் கொண்டு கையை வீசிக் கொண்டு லஷ்மியின் பின்னாலேயே செல்வான். விஷயம் தெரிந்த கணேசனுக்கு அவளின் அரைவேக்காட்டுத்தனமான பாசத்தை நினைத்து பரிதாபம்தான்பட முடிந்தது. அவரால் நிறுத்த முடியவில்லை. காலை, மதியம், மாலை என்று மூன்று முறையும் அவன் ஒருவனுக்காகவே ஒன்பது கிலோ மீட்டருக்கும் மேலாக நடக்க ஆரம்பித்தாள் லஷ்மி.

"இப்டி அவனை ஸ்கூல்வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வர்றியே.. நாளைக்கு அவன் முதுகு வளையறதுக்கே சோம்பேறித்தனப்படுவான்.. அவன் பொருள அவன தூக்க வைச்சுப் பழக்குறதுதாம்மா நாளைக்கு அவனுக்கு நல்லது.."

"அவன் சின்னப் பையன்ங்க.. அவன் ஒண்ணும் காலேஜ்ல படிக்கிறவன் இல்ல.."

"சின்னப் பையன்தான். இல்லேங்கல.. இப்பயிருந்தே பழக்கினாத்தான் அவனுக்கு பின்னாடி எதுவும் ஈஸியா இருக்கும்.. படிப்பும் வர மாட்டேங்குது.. காலைல நான் போன பின்னாடி படிக்கிறானா இல்லையான்னு எனக்குத் தெரிய மாட்டேங்குது.. டியூஷன் படிக்கிறான்.. அப்படியும் நாப்பதுலேர்ந்து ஐம்பதுக்குள்ள ரேங்க் எடுக்குறான்.. இப்படிப் படிச்சா இவன் பின்னாடி என்னாகப் போறான்.. எனக்குப் பயமா இருக்கும்மா.."

"நீங்க மட்டும் என்ன படிச்சிருக்கீங்க.. வெறும் எட்டாங்கிளாஸ்தானே..?"

சுரீரென்றது கணேசனுக்கு.

ஒரு ஓரமாக தள்ளி நின்றிருந்த ரமணி களூக்கென்று சிரித்தபடி அப்பாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, அம்மாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

லஷ்மி ரமணியின் தலையைக் கலைத்து பேன் பார்ப்பது போல் பிரித்துப் பார்த்தபடியே "அவன் படிக்கலைன்னா பரவாயில்ல.. எங்க அண்ணங்க கடைல போயி தொழில கத்துக்கட்டும்.. பிஸினஸ் பண்ணியாவது அவன் பொழைச்சுக்குவான்.. நீங்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.. ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் இப்படி பத்து வருஷமா இந்த ஓட்டு வீட்டுல இருந்து ஒப்பேத்துறீங்க.." என்றாள்.

படிப்புதான் இப்படியென்றால், அவன் குணமும் அல்லவா யாருக்கும் அடங்காதவனாக மாறிவிட்டது..

---------------------------------

ழசை நினைத்தபடி மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கணேசன். வெயில் சற்றும் சளைக்காமல் தன் சுயரூபத்தைக் காட்ட இன்னமும் இரண்டு மணி நேரமாவது ஆகும்.. சின்னப் பையனை ஏன் காக்க வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக "ஏதாச்சும் ஜுஸ் சாப்பிடுறியாப்பா..? என்றார். "உம்.." என்றான் சந்தோஷமாக சீனு.

கோவில் அமைதியாக இருந்தது. மணியைப் பார்த்தார் பத்து என்று காட்டியது. அவர் கண்கள் ரமணியைத் தேடியது. "சீனு அண்ணன் எங்கயாவது இருக்கானா பார்..?" என்றார். சீனு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "இல்லப்பா.." என்றாலும் அண்ணன் வருவான் என்ற நம்பிக்கையில் "உள்ள இருந்தாலும் இருக்கும்.." என்றான்.

கோவிலின் நீண்ட பிரகாரத்திற்கு வந்தவுடன் சீனு ஆர்வமாகத் தேடுகிறான் ரமணியை.. அவன் இன்னமும் வரவில்லை என்பதை தன் உதட்டைப் பிதுக்கி கணேசனிடம் காட்டுகிறான் சீனு.

மீண்டும் நினைவுகளில் மூழ்கினார் கணேசன்.

---------------------------------

மணி 12வது வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்துதான் தேர்வு பெற்றான். ஆனாலும் கல்லூரியில் சேர்த்தார்கள்.

இருந்தும் என்ன செய்ய..?

உலகில் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா..?

"எதுக்கு நான் பி.ஏ. படிச்சேன். உங்க அண்ணன் கடைல உக்காந்து வெங்காயத்தை எடை போடறதுக்கா..? வேற வேலைய பாரும்மா.." என்ற ரமணியின் வார்த்தைகளில் லஷ்மி முதல்முறையாய் அதிர்ந்து போனாள்.

"என்னடா.. இப்படி பேசறே..? அப்பா இதுக்கு மேல உனக்கு என்ன செய்யமுடியும்? நீ சம்பாதிச்சு இனிமே வீட்டுக்கு கொடுக்கணும்.. அப்பா பாவம்ல..

"பாவம்ன்னா நான் என்ன செய்ய முடியும்..?"

"மாமா கடைல போயி தொழில் கத்துக்கிட்டாலும் மாமாவே உனக்கு கடை வைச்சு தருவார்.. உனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. தம்பி, தங்கச்சியையும் நல்லா பாத்துக்கலாம்.. செல்விக்கு கல்யாணம் வேற பண்ணனும்.. நல்லா யோசனை பண்ணு கண்ணு.."

"நல்லா யோசனை பண்ணித்தான் சொல்றேன்.. அங்க போக எனக்குப் பிடிக்கல.. நீ எதுக்கு அங்க போகச் சொல்றேன்னு எனக்குத் தெரியும்.. எப்படியாவது மாமா வீட்ல என்னை வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கிடலாம்ன்னு ஐடியா பண்ணயிருக்குற.. அது நடக்காது தாயே.. உங்க அண்ணன்கிட்ட போன வாரம் நானே முடியாதுன்னு நேர்ல சொல்லிட்டேன்.. சந்தேகம்ன்னா போயி கேட்டுக்கம்மா.."

ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தாள் லஷ்மி.

"ஏண்டா இப்படி பண்ணிட்டே..? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுடா..

"நல்ல பொண்ணுதான்.. நானும் இல்லைன்னு சொல்லலையே.. ஆனா எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன செய்யச் சொல்றே..? என்னால முடியாது தாயே.. ஆள விடு.."

"இப்ப என்னதான் பண்ணச் சொல்றே..?" லஷ்மியின் குரலில் அவசரமும், ஏமாற்றமும் தொனித்தது.

"அப்பா மில்லுல யாராவது வேலையை விட்டுட்டு அந்த இடத்துக்கு அவங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது சேர்த்துவிடலாம்ன்னு ஒரு திட்டம் இருக்குல்ல.. அதுல உங்க வீட்டுக்காரரை வேலையை விட்டுட்டு என்னை அந்த வேலைக்குச் சேர்த்துவிடச் சொல்லு.. இப்பவே மில்லுல சம்பளம் நாலாயிரம் தர்றான் தெரியுமா..?

மொத்தமாக அதிர்ந்தார்கள் கணேசனும், லஷ்மியும்.

"என்னடா சொல்றே..? எதுக்கு அப்பாவ வேலைய விடச் சொல்றே..? உனக்கு வேற வேலை கிடைக்காதா என்ன..? வேற வேலைக்குப் போடா.. ஒரு சம்பளத்த வைச்சிக்கிட்டு எப்படிடா பொழைக்கிறது..?" லஷ்மியின் கேள்வியில் முதல் முறையாக மகனின் மேல் கோபக்கனல் வீசியது.

"அதெல்லாம் முடியாது.. நான் இப்ப வேற வேலை தேடினாலும் எனக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கொடுக்க மாட்டாங்க.. நானும் என் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்திர வேண்டியதுதான். இப்ப என்ன..? நான் சம்பாதிச்சு என்ன செய்யப் போறேன்..? உங்களுக்குத்தானே செய்யப் போறேன்.. சம்பளம் முழுசையும் உன்கிட்டேயே கொடுத்தர்றேன்.. நீ எவ்வளவு கொடுக்குறியோ.. அதை வாங்கிக்கிறேன்.. செல்வி கல்யாணத்த நான் பாத்துக்கறேன்.. என்ன சொல்றே.? நல்லா யோசிச்சு சொல்லு.." ஒருமையில் அம்மாவிடம் அவனது கேள்வி பதிந்தது.

லஷ்மி அமைதியாக கணேசனைப் பார்த்தாள். "அது முடியாது. அவன வேற வேலை பார்க்கச் சொல்.." என்றார் கணேசன். தன்னுடைய கனவுகள் ஒவ்வொன்றாக சிதைவதைப் பார்த்த லஷ்மி குழம்பிப் போனாள். மகனா, கணவன..? அவளுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் பார்வையாளர்களாக காட்சியளித்தார்கள் சீனுவும், செல்வியும்.

அடுத்த வாரமே ரமணி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினான். கணேசன் பதட்டப்படாமல் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் லஷ்மி பதறினாள்.. அவளின் கண்ணீர் குடும்பத்தின் மொத்தத்தையும் பட்டினியும் போட்டு வதைக்க அரை மனதுடன் ரமணியைத் தேட ஆரம்பித்தார் கணேசன். ரமணியின் நண்பர்கள் வட்டாரத்தில் மெதுவாக விசாரித்து இரண்டு நாட்கள் கழித்து வண்டியூரில் அவனின் நண்பர்கள் வீட்டில் அவனைப் பிடித்தார்.

"நீங்க உங்க வேலையை விட்டுட்டு எனக்கு வாங்கிக் கொடுத்தாத்தான் நான் அந்த வீட்டுக்கு வருவேன். இல்லேன்னா நான் இங்கேயே இருக்கேன்.." தீர்மானமாகப் பதில் சொன்னான் ரமணி. கணேசன் சுவற்றில் அடித்த பந்தாக லஷ்மியிடம் வந்தார். "நான் என்ன செய்ய..? இப்பொழுது நீயே சொல். நான் ஒரு தப்பும் பண்ணல.. அவன நீதான் வளர்த்த.. இப்படி என்னை வெறுக்கிற அளவுக்கு நான் அவனுக்கு என்ன செய்தேன்..? சொல்லு.." கண் கலங்கியது அவருக்கு.

இப்பொழுதும் தாய் பாசமே வென்றது. "அவன் சொன்ன மாதிரியே செஞ்சிருங்க.. இனிமே நாம என்ன செய்யமுடியும்..?" என்றாள் லஷ்மி.

வேண்டா வெறுப்பாக சக தொழிலாளர்களின் வேண்டுகோளையும் மீறி வேலையை மகனுக்கு விட்டுக் கொடுத்தார் கணேசன். லஷ்மிக்கு எப்படியாவது செல்வியின் திருமணத்தை நடத்துவதற்கு ரமணி உதவுவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருந்தது. அப்படியொரு நம்பிக்கை கணேசனின் மனதில் துளிகூட இல்லை. எப்படியும் தான் மட்டுமே கஷ்டப்படப் போவதாக அவர் உள் மனது சொன்னது.. அதுவரையிலாவது கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்தார்.

ரமணியும் சில மாதங்கள் ஒழுங்காக மாதச் சம்பளத்தை லஷ்மியிடம் கொடுக்க ஆரம்பித்தவன் பிறகு தனக்கென்று எடுத்துக் கொண்டு படியளக்க ஆரம்பித்தான்.

இடையில் செல்வியை லஷ்மியின் தூரத்துச் சொந்தத்திலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். வந்தவர்கள் ரமணியின் வேலையையும், சம்பளத்தையும் பார்த்துவிட்டு "எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கு. நீங்க உங்க பொண்ணுக்கு உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க. ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிருவோம்.." என்றனர்.

மாப்பிள்ளையும் அரசு உத்யோகம் என்பதால் கணேசன் சந்தோஷப்பட்டார். லஷ்மிக்கு பெண் எடுத்து பெண் கொடுத்தால் நம் பெண் அங்கே நிம்மதியாக இருப்பாளே.. என்ற சந்தோஷத்தில் ரமணியிடம் சொன்னாள்..

"நீங்க சொன்னா நான் கல்யாணம் பண்ணிறுவேனா..? அவங்க பெண் எடுக்கறாங்கன்னா எடுக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு அந்த வீட்ல கல்யாணம் பண்ணணும்..? எனக்கென்ன தலையெழுத்தா..? அந்தப் பட்டிக்காட்டுல போயி எவன் கல்யாணம் பண்ணுவான்..?" என்றான் அலட்சியமும், இளக்காரமும் கலந்த குரலில்.

ரமணி மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்போது "டேய்.. செல்வி வாழ்க்கையே உன் கைலதாண்டா இருக்கு.." என்றாள் லஷ்மி.

அன்று சாயந்திரம் கணேசன் மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பினார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் வீட்டு வாசலில் நிற்பதையும், வீட்டை நோக்கிய அவர்கள் பார்வையையும் கண்டு பயந்து போய் வேகமாகய் நடை போட்டார்.

செருப்பை ஓரமாய் எறிந்துவிட்டு ஹாலில் நுழைந்தவர் கண்ணில்பட்டது ஒரு புதுப்பெண். விரிக்கப்பட்டிருந்த பாயில் கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து சுதாரிக்க முடியாமல் தடுமாறினார் கணேசன்.

அருகில் வந்த செல்வி அவருடைய தோளில் தன் கையை வைத்து அவரைத் திருப்பி பின்பக்கமாக இழுக்க அந்தப் புது பெண்ணை பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்தார் கணேசன்.

"அப்பா இவங்க அண்ணனோட மில்லுல கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இருக்காங்களாம்.. இன்னைக்கு காலைலதான் மீனாட்சியம்மன் கோவில்ல கல்யாணத்த முடிச்சிட்டு வந்திருக்கு அண்ணன்.." செல்வி சொன்ன வார்த்தைகளைக்கூட முழுமையாகக் கேட்க முடியாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த கணேசனின் முகம், அடுத்த கணம் லஷ்மியைத் தேடியது.

கணேசன் ஹாலில் மெதுவாக நடந்து போக உள் அறையிலிருந்து தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிவிட்டு சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு சட்டையின் கழுத்துப் பகுதியைத் தன் கையிலிருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான் ரமணி.

கணேசனைப் பார்த்தவுடன் எதுவும் பேச விரும்பாதவனைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் புது மனைவியின் அருகில் சென்றவன் சிநேகமாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

சமையல்கட்டில் ஓசைப்படாமல் நுழைந்த கணேசன் தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் பாலை ஆற்றிக் கொண்டிருந்த லஷ்மியைப் பார்த்தார். மெதுவாக நடந்து அவள் அருகில் சென்று மிகச் சன்னமான குரலில் "லஷ்மி" என்றழைக்க திடுக்கிட்டுத் திரும்பிய லஷ்மியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளைத் தொட்டு ஆறுதல்படுத்த முயல டம்ளரை சமையல் டேபிளின் மேல் வைத்துவிட்டு தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழ முயன்ற லஷ்மியைப் பார்த்து பயந்து போன கணேசன். "வேணாம்.. வேணாம்.." என்று சைகையால் தடுத்துவிட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தவர் வெளியில் நின்றிருந்தவர்களையும் நிமிர்ந்து பார்க்காமல் வெளியே தெருவில் நடக்கத் தொடங்கினார்.

இரவு பதினொரு மணிக்கு மெதுவாக வந்து கதவைத் தட்ட கதவு திறந்தே கிடந்தது. உள்ளே ஹாலில் ஒரு மூலையில் வெறும் தரையில் தன் கையையே தலையணையாகக் கொண்டு படுத்திருந்த லஷ்மி அவரைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்தவள். கலைந்திருந்த தன் தலைமுடியை இறுக முடிந்து கொண்டை போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

கை, கால்களைக் கழுவிக் கொண்டு பக்கெட்டை நின்ற இடத்திலிருந்தே எறிந்துவிட்டு திரும்பும் அப்பாவைப் பார்த்த செல்வி, படக்கென்று மறுபுறம் முகத்¨த் திருப்பிக் கொண்டு தூங்குவதைப் போல ஆனாள்.

சுவரோரம் இருந்த பீரோவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்தார் கணேசன். லஷ்மி உள்ளிருந்து சாப்பாட்டு அயிட்டங்களை ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்ல அவள் வரும்போதும், போகும்போது அவர் அவளைப் பார்ப்பதும், அவள் அவரைப் பார்க்காமல் தவிர்ப்பதும் அவருக்குத் தெரிய வர இது என்ன வகை தண்டனை என்பதைப் போல் வீட்டின் முற்றத்தையே பார்த்தார் கணேசன்.

தட்டில் சிறிது சாதத்தைக் கொட்டிவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு அருகில் அமர்ந்து தன் முழங்காலை குறுக்கி அதன் மேல் தன் கைகளை வைத்து முழங்காலில் தன் முகத்தைப் பதித்து வேறு பக்கம் பார்வையிருக்க சன்னமான குரலில் பேச ஆரம்பித்தாள் லஷ்மி.

"அவன் தெற்கு வாசல்ல வீடு பிடிச்சிருக்கானாம்.. வாடகை எண்ணூறு ரூபாயாம்.. சும்மா நம்மகிட்ட சொல்லிட்டுப் போக வந்தானாம்.. இனிமே நமக்கு ஆயிரம் ரூபாய்தான் தருவானாம்.. பத்தலைன்னா நீங்களே ஏதாவது பண்ணிக்குங்கன்னான்.. பாலைக் குடிச்சிட்டுப் போயிட்டான்.." - மெதுவாக அழுகை அவளுக்குள் பீரிட்டது.

கணேசன் மெதுவாக சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டபடியிருக்க அடுத்து என்ன பேசுவது என்பதைப் போல் அவள் சற்று நிறுத்த அத்தோடு போதும் என்பதாக கணேசன் கை கழுவிக் கொண்டு எழுகிறார்.

முன்கூடத்தில் சுவரோடு சுவராக பதுங்கி படுத்திருந்த சீனுவின் பாயில் மெல்ல அமர்ந்தவரின் கை அனிச்சையாக அவனது முதுகை தடவிக் கொடுத்தது. மெல்ல அவனது பாயிலேயே படுத்தவர் லஷ்மி வருவதைப் பார்த்தவுடன் மீண்டும் எழுந்து உட்கார்ந்தார்.

மெல்ல வந்து அவரருகில் அமர்ந்த லஷ்மியின் கை விரல்களின் நடுக்கம் அவரின் தோள்பட்டையில் எதிரொலித்தது. "நான் தப்பு பண்ணிட்டேங்க.." என்று எழுந்த பலமான அவளுடைய அழுகுரல் அவருடைய மனதைப் பிசைந்தது.

லஷ்மியின் வாயைப் தன கையால் பொத்தியவர் அவளை ஆசுவாசப்படுத்தி "விடு என்ன செய்ய..? ஏதோ இப்படி நடக்கணும்ன்னு இருந்திருக்கு.. நடந்திருச்சு.. போய் தூங்கு போ.. போ.. போ.." என்று அவளை கிளப்ப லஷ்மி கண்களை முந்தானையால் துடைத்தபடி மெதுவாக நடந்து சென்று செல்வியின் அருகில் அவளை ஒட்டியும், ஒட்டாமலுமாக படுத்தாள்..

எப்பொழுது தூங்கினாரோ தெரியவில்லை கணேசனுக்கு.. காலையில் செல்வியின் "அம்மா.." என்ற கூக்குரல் அவரை எழுப்பியது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த கணேசன் உள்ளே ஓடினார். லஷ்மியின் உயிரற்ற சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மகள் செல்வி "அப்பா.. அம்மா.." என்ற வார்த்தைகளோடு எழுப்பிக் கொண்டிருந்தாள்..

தலையே சுற்றுவது போல் இருந்தது கணேசனுக்கு. இனி என்ன..? எல்லாமே முடிந்து போய் விட்டது. மில்லுக்குத் தகவல் போய் அங்கிருந்து உடன் வேலை செய்பவர்கள் மூலமாக ரமணியின் புது வீட்டிற்கு கணேசனின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று அவனை அழைத்து வந்தார்கள்.

லஷ்மியின் உடல் அடக்கம் வரைக்கும் இருந்தவன், சுடுகாட்டிலேயே தன் வீட்டுக்குப் போவதாக தன் மாமாவிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

மறுநாள் பால் தெளிப்புக்கும், கருமாதிக்கும் ஏதோ மூன்றாம் மனிதரைப் போல வந்து கலந்து கொண்டான். கணேசனும் அவனை கண்டு கொள்ளவில்லை. "அவளே போய்விட்டாள்.. இனிமேல் யாரைக் குற்றம் சொல்ல.. இனிமேல்தான் நான் எனது குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்.." என்று தன் உறவினர்களிடம் சொல்லி சொல்லி புலம்பத்தான் முடிந்தது கணேசனால்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மில்லில் தன்னுடைய இருபது வருட சர்வீஸை எடுத்துச் சொல்லி தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்தார்.

ரமணி அதற்குப் பிறகு தங்கை, தம்பியைக்கூட வந்து பார்க்கவில்லை. தாங்கள் போய் கேள்வி கேட்கிறோம் என்று கிளம்பிய உறவினர்களைக் கூட கணேசன் தடுத்துவிட்டார். "அவன் வரும்போது வரட்டும். அவன் வந்தால் ஏன் வந்தன்னு நான் கேக்க மாட்டேன்" என்று செல்வியிடம் சொல்வார்..

கணேசன் செல்வியின் கல்யாணக் கவலையில் ஆழ்ந்தார். இந்த வருடமாவது கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மில்லில் கவுரவம் பார்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்து வந்தார்.

---------------------------------

தோ ஓராண்டாயிற்று..

"வாங்கோ.. இப்படி சட்டையைக் கழட்டிட்டு உக்காருங்கோ.." என்ற குருக்களின் குரல் கணேசனை எழுப்பியது.

அப்போதும் திரும்பித் திரும்பிப் பார்த்தார் கணேசன் ரமணி தட்டுப்படுகிறானா என்று..

இல்லை. ஒரு தீர்க்கமான முடிவுரை கணேசனின் கண்களில் எழுகிறது.

குருக்களின் பார்வையில் தெரிந்த அவசரத்தையும், தனக்குப் பின்னால் இருந்த கூட்டத்தையும் பார்த்த கணேசன், "தம்பி சட்டையைக் கழட்டு.." என்று சீனுவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய சட்டையைக் கழற்றி பக்கவாட்டுத் தூணின் அருகே வைத்துவிட்டு மஞ்சள் பையை மட்டும் எடுத்துக் கொண்டு சீனுவின் கையைப் பிடித்து குருக்களின் எதிரில் அமர்ந்தார்.

"யாருக்கு..?" என்றார் குருக்கள்.

"என் மனைவிக்கு.."

அருகில் சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைக் காட்டி "அவாள் கோவில் ஆள்.. அவாள்கிட்ட தர்ப்பணக் கட்டணம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்திருங்கோ.." என்று சொல்லிவிட்டு அவருடைய அனுமதிக்குகூட காத்திருக்காமல் அந்த மஞ்சள் பையை திறந்து உள்ளிருந்தவைகளை எடுத்தார் குருக்கள்.

கணேசன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்தவிட்டு மீண்டும் குருக்களின் முன் அமரும்போதும் சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்தார். தன்னைத் தெரிந்தவர்கள்கூட யாரும் அங்கில்லை என்பது தெரிந்தது. சீனுவின் அருகில் அவனை லேசாக அணைத்ததுபோல் அமர்ந்தார்.

"இப்படிக் கையை நீட்டுங்கோ" என்ற குருக்களுக்கு தன் கையை நீட்ட கை விரல்களைப் பிடித்த குருக்கள் அதில் தர்ப்பணக் குச்சியை மாட்டியபடியே "அம்மா பேர்.." என்று கேட்டுவிட்டு அவரைப் பார்க்க "லஷ்மி" என்றார் மெல்லிய குரலில்.. அவருடைய தோற்றத்தைப் பார்த்து ஏதோ கேட்க வேண்டும் என்பதைப் போன்ற சந்தேகத்துடன், "பையன் பெரியவனா.. சின்னவனா?" என்றார் குருக்கள். கணேசன் சிறிதும் பிசிறில்லாத குரலில் "இல்ல.. ஒரே பையன்தான்" என்று சொல்ல, சீனு நம்ப மாட்டாத அதிர்ச்சியில் அப்பாவைப் பார்க்க.. குருக்கள் மந்திரத்தைத் தொடர..

ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்தும் திருப்தியுடன், மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்.


*********************************

91 comments:

Rangs said...

உ தா அண்ணே..
நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்....
நல்ல கதை..வாழ்த்துகள்..

நையாண்டி நைனா said...

sooparanne....

(poi padichittu varen)

Unknown said...

அருமையான கதை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.

Athisha said...

அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதிருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

முரளிகண்ணன் said...

உண்மைத் தமிழன் அண்ணா

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Beski said...

அருமை... ரொம்ப நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

நல்லா சொல்லியுருக்கீங்க பாஸ்..

வெற்றி பெற வாழ்த்துகள்..

// அதிஷா said...

அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம்//

இது ஒரு பக்க கதையாக்கும்..
சிறுகதையெல்லாம் தல இப்பொ எழுதுற மூடுல இல்ல..

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க.
காட்சிகளை விவரித்த விதம் அருமை.சின்ன சின்ன விஷயங்களைக் கூட கற்பனை செய்துகொள்ள வசதியாக விவரிச்சிருக்கீங்க.கதையை முடித்த விதமும் அருமை.

வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே..!

ஜெய் நித்யானந்தம் said...

vanakkam thalai

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ஜெய் நித்யானந்தம் said...

திருப்புகழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பத்தி (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

ரவி said...

கனேஷ். நலமா ?

வால்பையன் said...

//ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்திய திருப்தியுடன் மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்//

அந்த கணேஷ் தான் இங்க மந்திரம் சொல்லிகிட்டு இருக்காரா!?

:)

geethappriyan said...

what nonsense ?
mr.ganesh behave your self.
i came here for write a message,but it disturbs me a lot,you would have a genius,but control your self,if you want to bluf do it in you site,not in others site.sin tolerable

geethappriyan said...

what nonsense ?
mr.ganesh behave your self.
i came here for write a message,but it disturbs me a lot,you would have a genius,but control your self,if you want to bluf do it in you site,not in others site.sin tolerable

உண்மைத்தமிழன் said...

///Rangs said...
உ தா அண்ணே.. நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.... நல்ல கதை.. வாழ்த்துகள்..///

ரங்க்ஸ்ஸு..

இது வாழ்த்தா..? அல்லாட்டி உள்குத்தா..?

ஒண்ணும் பிரியலே..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

sooparanne....

(poi padichittu varen)]]]

படிக்கவே இல்லை.. அதுக்குள்ள சூப்பரா..?

எப்படி கமெண்ட்டெல்லாம் ரெடிமேடா தயார் செஞ்சு வைச்சிருப்பீங்களோ..?!!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
அருமையான கதை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.]]]

நன்றி ஆனந்த் ஸார்..

உங்களுடைய தொடர்ச்சியான கவனிப்பு எனக்குள் ஒரு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[அதிஷா said...
அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதிருக்கலாம்]]]

அடப்பாவி.. இதுவே பத்து பக்கம்டா..!

இதுக்கு மேலேயும்னா பைத்தியக்காரனே ரிஜெக்ட் செஞ்சிருப்பாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...

வெற்றி பெற வாழ்த்துகள்]]]

நன்றி டி.வி.ஆர். ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

உண்மைத் தமிழன் அண்ணா

வெற்றி பெற வாழ்த்துக்கள்]]]

முரளி மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

அருமை... ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.]]]

நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

நல்லா சொல்லியுருக்கீங்க பாஸ்..

வெற்றி பெற வாழ்த்துகள்..

// அதிஷா said...

அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம்//

இது ஒரு பக்க கதையாக்கும்.. சிறுகதையெல்லாம் தல இப்பொ எழுதுற மூடுல இல்ல..]]]

அய்.. இந்த பதிலும் நல்லாத்தான் இருக்கு.. தம்பி தீப்பெட்டி..
நீ வாழ்க..!

உண்மைத்தமிழன் said...

[[[நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க.
காட்சிகளை விவரித்த விதம் அருமை. சின்ன சின்ன விஷயங்களைக் கூட கற்பனை செய்துகொள்ள வசதியாக விவரிச்சிருக்கீங்க.கதையை முடித்த விதமும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே..!]]]

ஆஹா இலக்கியன் ஸார்..!

மனம் திறந்த வாழ்த்துக்கு தன்யனானேன்..!

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganesh said...
vanakkam thalai]]]

அப்பனே,

கணேசா..

சத்தியமா நான் இதை உன்னை நினைச்சு எழுதலப்பா..

யாரோ ஒரு கணேசன்னு நினைச்சுத்தான் எழுதினேன்..

உன் பேர் வந்தவுடனேயே வந்துட்டியா..? சந்தோஷம்..

இந்த ஒண்ணோட நிறுத்தியிருந்தீங்கன்னா உனக்குப் புண்ணியமா இருந்திருக்கும்..

எதுக்குப்பா இத்தனை ரவுசு..?

நீ வேலை வெட்டி இல்லாம வீட்ல சும்மாதான் இருக்கன்றது எங்களுக்கு நல்லா தெரியுது.. ஆனா அதையெல்லாம் இப்படித்தான் வெளிப்படுத்தணுமா..?

என்னமோ பண்ணித் தொலை..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

கனேஷ். நலமா ?]]]

டேய் இது ரொம்ப அவசியமா..?

நண்பனின் எதிரி உனக்கும் எதிரிதாண்டா.. அக்கறையா விசாரிக்கிறான் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

//ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்திய திருப்தியுடன் மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்//

அந்த கணேஷ்தான் இங்க மந்திரம் சொல்லிகிட்டு இருக்காரா!?:)]]]

ஆமா வாலு..

உன்னைவிட பெரிய வாலா இருப்பார் போலிருக்கு அண்ணன் கணேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

what nonsense ?
mr.ganesh behave your self.
i came here for write a message,but it disturbs me a lot,you would have a genius,but control your self,if you want to bluf do it in you site,not in others site.sin tolerable.]]]

கார்த்திகேயன் ஸார்..

இதெல்லாம் இவங்களுக்கு சொன்னா புரியாது. புரிஞ்சாலும் அதை பத்தி கவலைப்பட மாட்டாங்க..

அவங்க அறிவு அவ்வளவுதான்னு நம்ம பாட்டுக்கு போக வேண்டியதுதான்..

வேற என்னத்த சொல்றது..?

இரா. வசந்த குமார். said...

ஹேய்... ஹேய்... இங்க பாருய்யா... உ.த.எ.வும் (அதாவது உண்மைத் தமிழன் எழுத்தாளர். பைத்தியக்காரன் - சுந்தர் - நர்சிம் உரையாடல்களை இங்கே கொண்டு வந்திடாதீங்க!) கதை எழுதியிருக்காரு..!

லேசா விசு படம் (நாடகம்?) வாடை அடிச்ச்சுது. கடைசி வரில தூக்கி நிறுத்திட்டீங்க..!

shabi said...

சம்சாரம் அது மின்சாரத்தோட சிறிய பாதிப்பு

உண்மைத்தமிழன் said...

[[[இரா. வசந்த குமார். said...
ஹேய்... ஹேய்... இங்க பாருய்யா... உ.த.எ.வும் (அதாவது உண்மைத் தமிழன் எழுத்தாளர். பைத்தியக்காரன் - சுந்தர் - நர்சிம் உரையாடல்களை இங்கே கொண்டு வந்திடாதீங்க!) கதை எழுதியிருக்காரு..! லேசா விசு படம் (நாடகம்?) வாடை அடிச்ச்சுது. கடைசி வரில தூக்கி நிறுத்திட்டீங்க..!]]]

இது மாதிரி கதைகளை அவர்களிடமே கேட்டுப் பெற்றதன் பாதிப்பு இதுதான்..!

நன்றி வசந்த் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...

சம்சாரம் அது மின்சாரத்தோட சிறிய பாதிப்பு.]]]

போச்சுடா..

சினிமா விமர்சனத்துல எழுதனது இப்ப எனக்கே ரிவீட் அடிக்குது..

Prabhu said...

அய்யோ ஆண்டவா, இங்கயும் கணேஷா?

கதைய பத்தி பேசலாம்னு வந்தா இந்த பஞ்சாயத்துல மறந்தே போச்சு!

மதுரைய இவ்வளவு தூரம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க! எப்படி?

Prabhu said...

மாடரேசன் போடுங்க தல!

Suresh said...

அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதிருக்கலாம்

:-)

/இது ஒரு பக்க கதையாக்கும்..
சிறுகதையெல்லாம் தல இப்பொ எழுதுற மூடுல இல்ல..//

????? ஒரு பக்க கதையா ??

நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

உணர்வு பூர்வமான கதை. நிறைய அம்மாக்கள் இப்படி கண்மூடித்தனமா மகன்களை ஆதரிக்கறத பாத்திருக்கேன். வாழ்த்துக்கள்.

நல்லதந்தி said...

எப்படியும் நீங்க நல்லாத்தான் எழுதியிருப்பீங்க!.
வந்து படிச்சிட்டு சொல்றேன்!.

உண்மைத்தமிழன் said...

[[[pappu said...

அய்யோ ஆண்டவா, இங்கயும் கணேஷா?

கதைய பத்தி பேசலாம்னு வந்தா இந்த பஞ்சாயத்துல மறந்தே போச்சு!

மதுரைய இவ்வளவு தூரம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க! எப்படி?]]]

பாப்பூ..

மதுரைல பத்து வருஷம் குடியிருந்தேனாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[pappu said...

மாடரேசன் போடுங்க தல!]]]

போட்டுத்தான் வைச்சிருந்தேன். அப்புறம் எதுக்கு இந்த பயம்னுதான் தூக்கிட்டேன்..

பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Suresh said...
அண்ணே ரொம்ப சின்னதா போச்சு.. இன்னும் கொஞ்சம் கூட எழுதிருக்கலாம்:-)

/இது ஒரு பக்க கதையாக்கும்..
சிறுகதையெல்லாம் தல இப்பொ எழுதுற மூடுல இல்ல..//

????? ஒரு பக்க கதையா ??

நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்.]]]

நன்றி சுரேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[சின்ன அம்மிணி said...
உணர்வு பூர்வமான கதை. நிறைய அம்மாக்கள் இப்படி கண்மூடித்தனமா மகன்களை ஆதரிக்கறத பாத்திருக்கேன். வாழ்த்துக்கள்.]]]

அதை நேர்ல பார்த்ததுதான் இதை அனுபவ ரீதியா எழுதியிருக்கேன் அம்மிணி..

தங்களுடைய நீண்ட நாள் விடுப்புக்குப் பின்னான வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[நல்லதந்தி said...
எப்படியும் நீங்க நல்லாத்தான் எழுதியிருப்பீங்க!. வந்து படிச்சிட்டு சொல்றேன்!.]]]

தந்தியாரே..

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

எலெக்ஷன் முடிஞ்சிருச்சேன்னு எஸ்கேப்பா..?

மணிஜி said...

தலைவா..நல்லாவே எழுதியிருக்கிங்க..வாழ்த்துக்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா said...
தலைவா.. நல்லாவே எழுதியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்..]]]

தண்டோரா தலைவா..!

முழுசும் படிச்சிட்டீங்க போலிருக்கே..!

அதுக்காகவும், வாழ்த்துக்காகவும் நன்றிகள்..!

Cable சங்கர் said...

நல்லாருக்கு அண்ணே.. உங்க கிட்ட ஒரு 350 எபிஸோட் ரெடியா இருக்குன்னு சொல்லுங்க..

Anonymous said...

nice n touching story...

wishes...

தீப்பெட்டி said...

//வால்பையன் said...

//ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்திய திருப்தியுடன் மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்//

அந்த கணேஷ் தான் இங்க மந்திரம் சொல்லிகிட்டு இருக்காரா!? //

:)))

பித்தன் said...

ரொம்ப நன்னா இருந்துதுண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்

நித்யன் said...

அண்ணாத்த...

கதை ஓகே.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்பு நித்யன்

நல்லதந்தி said...

சிவாஜி நடித்து, பீம்சிங், இயக்கிய படத்தைப் பார்த்த மாதிரி திருப்தியா இருக்கு!. நல்ல தரமான சிறுகதை!.பட்டைய கிளப்பி இருக்கீங்க!. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த மாதிரி செண்டிமெண்ட் கதைகளுக்கு பரிசு கொடுப்பாங்களா? அல்லது நவீன சிறுகதைகளுக்கு பரிசு கொடுப்பாங்களா?.....தெரியலையே!.

//தந்தியாரே..

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

எலெக்ஷன் முடிஞ்சிருச்சேன்னு எஸ்கேப்பா..?//

:))))))

உண்மைத்தமிழன் said...

///Cable Sankar said...
நல்லாருக்கு அண்ணே.. உங்ககிட்ட ஒரு 350 எபிஸோட் ரெடியா இருக்குன்னு சொல்லுங்க..///

350 கதையே ரெடியா இருக்கு ராசா.. தயாரிப்பாளரை மட்டும் காட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[Sachanaa said...

nice n touching story...

wishes...]]]

Thanks Sachanaa..

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//வால்பையன் said...

//ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்திய திருப்தியுடன் மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்//

அந்த கணேஷ்தான் இங்க மந்திரம் சொல்லிகிட்டு இருக்காரா!?//

:)))]]]

ம்.. அடுத்தவன் கஸ்டத்துலேயும் ஒரு சிரிப்பு வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[Niyaz said...
ரொம்ப நன்னா இருந்துதுண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.]]]

நன்றி நியாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

அண்ணாத்த...

கதை ஓகே.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்பு நித்யன்]]]

நன்றி நித்யன் தம்பி..

நீயும் கலந்து கொண்டிருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நல்லதந்தி said...
சிவாஜி நடித்து, பீம்சிங், இயக்கிய படத்தைப் பார்த்த மாதிரி திருப்தியா இருக்கு!. நல்ல தரமான சிறுகதை!.பட்டைய கிளப்பி இருக்கீங்க!. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த மாதிரி செண்டிமெண்ட் கதைகளுக்கு பரிசு கொடுப்பாங்களா? அல்லது நவீன சிறுகதைகளுக்கு பரிசு கொடுப்பாங்களா?.....தெரியலையே!.

//தந்தியாரே..

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..

எலெக்ஷன் முடிஞ்சிருச்சேன்னு எஸ்கேப்பா..?//

:))))))]]]

தந்தியாரே..!

வஞ்சகமில்லா பாராட்டுக்கு மிக்க நன்றிகள்..!

மங்களூர் சிவா said...

மிக அருமை. நெஜம்மாவே சிறுகதைதான்.

பிரச்சனை இல்லாம உங்க பதிவு லோட் ஆகிடுச்சே!
:)))

உண்மைத்தமிழன் said...

///மங்களூர் சிவா said...

மிக அருமை. நெஜம்மாவே சிறுகதைதான்.

பிரச்சனை இல்லாம உங்க பதிவு லோட் ஆகிடுச்சே!
:)))///

நன்றி சிவா..

பிரச்சினைகளை அப்போதே சரி செய்துவிட்டேன்..!

பெங்களூர் அருண் தம்பிதான் உதவினார்..!

பட்டாம்பூச்சி said...

நல்ல கதை..வாழ்த்துகள்!!!

Raju said...

அந்த ரமணின்ற நாய செருப்பக் கழட்டி அடிக்கனும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாம்பூச்சி said...
நல்ல கதை..வாழ்த்துகள்!!!]]]

நன்றி பட்டாம்பூச்சி..!

உண்மைத்தமிழன் said...

[[[டக்ளஸ்....... said...
அந்த ரமணின்ற நாய செருப்பக் கழட்டி அடிக்கனும்..!]]]

ஐயோ டக்ளஸ்..

இது கதைதான்..!

இவ்ளோ கோபம் வேண்டாம்.. விட்ருங்க..!

துளசி கோபால் said...

கதை நல்லா வந்துருக்கு.

முதலில் சிறுகதைன்னதும் எப்படி எழுதப்போறீங்களோன்னு பயமா இருந்துச்சு:-)


சொந்தப்பிள்ளையா இருந்தாலுமே யாரையும் நம்பி நாம் வாழக்கூடாது. கடைசி வரை நம் வாழ்விலே எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கணும் என்பதுதான் கதையின் நீதி..

ஆமாம் அது யாரு..... என்னதான் திருப்புகழைப் பாடப்பாட...ன்னு இருந்தாலும் இப்படியா?

உண்மைத்தமிழன் said...

///துளசி கோபால் said...
கதை நல்லா வந்துருக்கு. முதலில் சிறுகதைன்னதும் எப்படி எழுதப் போறீங்களோன்னு பயமா இருந்துச்சு:-)///

இதான் துளசியம்மா ஸ்டைல் குத்து..!

///சொந்தப் பிள்ளையா இருந்தாலுமே யாரையும் நம்பி நாம் வாழக்கூடாது. கடைசி வரை நம் வாழ்விலே எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கணும் என்பதுதான் கதையின் நீதி..///

பரவாயில்லையே.. என் கதைலகூட ஏதோ ஒண்ணு இருக்குங்குறீங்க.. நன்றி டீச்சர்..!

[[[ஆமாம் அது யாரு..... என்னதான் திருப்புகழைப் பாடப் பாடன்னு இருந்தாலும் இப்படியா?///

இருந்தான்.. ஒருத்தன் மதுரைல.. அப்பவே சீரழிஞ்சிட்டான்.. அவனவன் செய்றதுக்கு அனுபவிக்காம போக மாட்டாங்க டீச்சர்..

இது என் சொந்த வாழ்க்கை அனுபவம்..!

abeer ahmed said...

See who owns linuxquestions.org or any other website:
http://whois.domaintasks.com/linuxquestions.org