அபிஅப்பாவுக்காக ஒரு பதிவு..!

17-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனதருமை உடன் பிறவாச் சகோதரரும்,

அமீரக
வாழ் பதிவர்களின் காட்பாதரும்,

மொக்கை
மெயில் மன்னர்களின் குலகுருவும்,

நட்புக்கு
இலக்கணமாகத் திகழும் பாசமிக்க அண்ணனும்,

கோபாலபுரத்தின்
கொள்கை விளக்கக் குன்றாகவும் திகழும் அண்ணன் அபிஅப்பா..

நட்டுவும்
, அபியும் தன் பக்கத்தில் இல்லாத சோகத்தில் சரியாகச் சாப்பிட முடியாமல், பேச முடியாமல், தூங்க முடியாமல், அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாமல் தவியாய் தவித்து சவலை நோய்க்கு ஆளாகி இன்று வீட்டில் படுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கே சவலை நோய் வந்துவிட்டது.


இன்று அவர்தம் புதல்வரும் நமது பதிவுலகின் செல்லக்குட்டி சிங்கமுமான நட்டுவுக்கு பிறந்த நாள்.

இந்த
பிறந்த நாளில் தானும் கலந்து கொண்டு குட்டிச் சிங்கத்தை வாழ்த்த நினைத்தவருக்கு அமீரகத்தின் சோம்பேறி அலுவலர்கள் ஆப்படித்துவிட்டார்கள்.


நமது அருமை அண்ணனின் பாஸ்போர்ட்டை இன்னமும் வீடு தேடி கொண்டு வந்த தரவில்லையாம்.

ஆகவே
அண்ணன் படு பயங்கர கோபத்துடன் இன்று ஒரு நாள் மட்டும் உட்கார்ந்து கொண்டோ அல்லது நடந்து கொண்டோ தான் கணினியைப் பயன்படுத்தப் போவதில்லை என்று வீர சபதமெடுத்து , படுத்துக் கொண்டுதான் பதிவைப் படிப்பேன்.. பின்னூட்டம் போடுவேன் என்று ஒரு போராட்டத்தை தனது இல்லத்தில் இருந்தபடியே நடத்தி வருவதாக அமீரகத்தில் இருந்து வரும் யு.என்.., பி.டி.. செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த அன்புச் சிங்கத்தை, அமீரப் புயலை சாந்தப்படுத்த வேண்டி எனது கைக்கெடுத்தும் தூரத்தில் இருந்த ஒரு இடத்தில் செல்போனில் சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.

அவர் அனுப்பிய ஆறுதல் புகைப்படங்களும், செய்திகளும் கீழே..

அபிப்பா.. போதும்.. இப்படி நீங்க மல்லாக்கப்படுத்து டைப் பண்றதை பார்த்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. எந்திரிங்க..



என்னது..? எந்திரிச்சா உக்கார முடியாதா..? வாந்தி வருதா.. உவ்வே.. அதை நான் பார்க்க மாட்டேன்.. போங்க..



சீக்கிரமா போய் முகத்தைக் கழுவிட்டு இன்னிக்காவது குளிச்சிட்டு வாங்க.. உங்க முகத்தைப் பார்க்க நான் எம்புட்டு தூரத்துல இருந்து வந்திருக்கேன்..



எங்க.. எங்க.. இப்ப என் கண்ணைப் பார்த்து பேசுங்க.. இன்னுமா உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது.. போயிருச்சுல்ல.. நல்ல புள்ளையாட்டம் அழுகாம எந்திரிச்சு உக்காந்து பதிவு போடுங்க..


உஷ்.. அப்பாடா..

அண்ணன்மார்களை கூல் பண்றதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு..!

கொடுமைடா சாமி..!

40 comments:

வெண்பூ said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

எல்லாரும் இன்னிக்கு வீட்டுலயே இருக்கவும்.. சென்னையில புயல் அடிக்கப்போகுது.. உண்மைத்தமிழன் அண்ணாச்சி பதிவு 200 வார்த்தையில முடிஞ்சிடுச்சி... :))))

நட்புடன் ஜமால் said...

நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

நட்டுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


தீபா வெங்கட்டின் அன்பு வாழ்த்துக்களினை நட்டுவிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் தகவல்கள் பெற விரும்புகிறேன்! (ஊர்ல அடிச்சு நொறுக்கி அனுப்பும்போது காப்பாத்த நம்ம நட்புக்களை அனுப்பி வைக்கட்டுமா? :)))))

ஆயில்யன் said...

//சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.///


அபி அப்பா தவறான பாதையில் செல்ல ஊக்கம் அளித்து அவரின் தூக்கம் கெடுக்கும் நல்லவரு நீங்கதானா....?!

ரைட்டு!

கட்டம் கட்டியாச்சு! :))))

விஜய் ஆனந்த் said...

நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

ALIF AHAMED said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..



தீபா தானா அது.. ?

:)

Venkatesh said...

நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

☼ வெயிலான் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்டூ.....

அன்புடன் அருணா said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் நட்டு ... அப்பாவ போல இல்லாம நீயும் அம்மா மாதிரி இன்டலிஜென்டா இருக்கனும்.

தீப்பெட்டி said...

நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Iyappan Krishnan said...

வாழ்த்துக்கள் மூன்று :

1 - உ.த. அண்ணாச்சி ரொம்பச் சின்னதா பதிவெழுத முயற்சி செஞ்சதுக்கு
2 - அபி பதிவெழுத வரதுக்கு
3 - நட்டு பிறந்த நாளுக்கு

அண்ணாச்சி. என் பேரை பதிவு செஞ்சுட்டேன் நீங்க சொன்ன (மிரட்டுன ) மாதிரியே..

☀நான் ஆதவன்☀ said...

நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

இராகவன் நைஜிரியா said...

அன்பு நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

// ஆயில்யன் said...

//சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.///


அபி அப்பா தவறான பாதையில் செல்ல ஊக்கம் அளித்து அவரின் தூக்கம் கெடுக்கும் நல்லவரு நீங்கதானா....?!

ரைட்டு!

கட்டம் கட்டியாச்சு! :))))//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...
தம்பியை தவறான பாதையில் அழைத்துச் செல்பவர்களில் நீங்கள் தான் முன்னிலை வகிக்கின்றீர்களா?

நையாண்டி நைனா said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
* * * * * * * * * * * * * * * * *
அப்புறமா ஒன்னு....
K.R.விஜயா படத்தை போடாமே தீபா வெங்கட்டின் படத்தை போட்டிங்களே அந்த மட்டுக்கும் சந்தோசம்.

அகநாழிகை said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

வேறென்னத்தச் சொல்ல.
நீரு பண்ணியிருக்கற காரியம் அப்படியில்ல இருக்கு.

Unknown said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பதிவு நீளமாக இருந்தாலும் நக்கலடிக்கிறார்கள். சிறியதாக இருந்தாலும் அதே நக்கல்தான். அண்ணன் உ.த. என்னதான் செய்வார். பாவம்.

வால்பையன் said...

அபிஅப்பா ரெடியாகிட்டாரா!

அந்த போட்டோவ பார்த்தவுடனே துள்ளி குதிச்சி எந்திரிச்சிருப்பாரே!

நட்டுவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும்!

உண்மைத்தமிழன் said...

[[[வெண்பூ said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
எல்லாரும் இன்னிக்கு வீட்டுலயே இருக்கவும்.. சென்னையில புயல் அடிக்கப்போகுது.. உண்மைத்தமிழன் அண்ணாச்சி பதிவு 200 வார்த்தையில முடிஞ்சிடுச்சி... :))))]]]

நக்கல் பண்ணாம இருக்கவே முடியாதே..!

வாழ்த்தையே 40 பக்கத்துக்கு எழுதினா நானே செத்துருவேன்..

உண்மைத்தமிழன் said...

[[[நட்புடன் ஜமால் said...

நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்]]]

ஜமாலு..

நட்டுன்னவுடனேதான் நம்ம வீட்டுக்குள்ள வர்றீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆயில்யன் said...

நட்டுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தீபா வெங்கட்டின் அன்பு வாழ்த்துக்களினை நட்டுவிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் தகவல்கள் பெற விரும்புகிறேன்! (ஊர்ல அடிச்சு நொறுக்கி அனுப்பும்போது காப்பாத்த நம்ம நட்புக்களை அனுப்பி வைக்கட்டுமா? :)))))]]]

ஆயில்யா.. எப்படி சாமி கண்டுபிடிச்ச..?

யாரும் கண்டுபிடிக்கக் கூடாதுன்னுதான் கம்ப்ரஸ் பண்ணி பதிவேத்துனேன்..

அதுலயுமா..? கில்லாடிகப்பா நீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆயில்யன் said...

//சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.///

அபி அப்பா தவறான பாதையில் செல்ல ஊக்கம் அளித்து அவரின் தூக்கம் கெடுக்கும் நல்லவரு நீங்கதானா....?! ரைட்டு!
கட்டம் கட்டியாச்சு! :))))]]]

ஏதோ என்னால முடிஞ்ச உதவி.. இதுகூட செய்யலைன்னா அப்புறம் நான் என்ன தம்பி..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய் ஆனந்த் said...

நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!]]]

ஓகே.. தேங்கயூ ஆனந்த்..

உண்மைத்தமிழன் said...

[[[மின்னுது மின்னல் said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
தீபாதானா அது.. ?:)]]]

எனக்கும் சந்தேகமா இருக்கு மின்னலு.. எதுக்கும் ஒரு தடவை நேர்ல போய் பார்த்திட்டு வந்து சொல்றேன்..

உண்மைத்தமிழன் said...

வெயிலான் ஸார்..

அன்புடன் அருணா..

தீப்பெட்டி..

திரட்டி.காம்..

நான் ஆதவன்..

தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நட்டுவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
வாழ்த்துக்கள் நட்டு ... அப்பாவ போல இல்லாம நீயும் அம்மா மாதிரி இன்டலிஜென்டா இருக்கனும்.]]]

இதுக்குப் பேர்தான்யா கமெண்ட்டு..! சும்மா நச்சுன்னு இருக்கு கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Jeeves said...

வாழ்த்துக்கள் மூன்று :

1 - உ.த. அண்ணாச்சி ரொம்பச் சின்னதா பதிவெழுத முயற்சி செஞ்சதுக்கு
2 - அபி பதிவெழுத வரதுக்கு
3 - நட்டு பிறந்த நாளுக்கு

அண்ணாச்சி. என் பேரை பதிவு செஞ்சுட்டேன் நீங்க சொன்ன (மிரட்டுன ) மாதிரியே..]]]

சந்தோஷம்.. லிஸ்ட்ல இருந்து உங்க பேரைத் தூக்கிட்டேன் ஜீவ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

அன்பு நட்டுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

// ஆயில்யன் said...

//சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.///


அபி அப்பா தவறான பாதையில் செல்ல ஊக்கம் அளித்து அவரின் தூக்கம் கெடுக்கும் நல்லவரு நீங்கதானா....?!

ரைட்டு!

கட்டம் கட்டியாச்சு! :))))//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...
தம்பியை தவறான பாதையில் அழைத்துச் செல்பவர்களில் நீங்கள்தான் முன்னிலை வகிக்கின்றீர்களா?]]]

ஐயையோ.. அவர்தாண்ணே என்னைப் பிடிச்சு இழுக்குறாரு.. நான் போய் செய்வனா..? நானே முருகா.. முருகான்னுட்டு ஒரு ஓரமா உக்காந்திருக்கேன்.. என்னைப் போயி இழுக்குறீங்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
* * * * * * * * * * * * * * * * *
அப்புறமா ஒன்னு....
K.R.விஜயா படத்தை போடாமே தீபா வெங்கட்டின் படத்தை போட்டிங்களே அந்த மட்டுக்கும் சந்தோசம்.]]]

நையாண்டி பேரைக் காப்பாத்தணுமாக்கும்..

அபிப்பா நேர்ல பார்த்தாருன்னு உமக்கு சங்குதான்..

உண்மைத்தமிழன் said...

[[["அகநாழிகை" said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

வேறென்னத்தச் சொல்ல.
நீரு பண்ணியிருக்கற காரியம் அப்படியில்ல இருக்கு.]]]

ஹி..ஹி..ஹி..

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பதிவு நீளமாக இருந்தாலும் நக்கலடிக்கிறார்கள். சிறியதாக இருந்தாலும் அதே நக்கல்தான். அண்ணன் உ.த. என்னதான் செய்வார். பாவம்.]]]

ஆமா ஆனந்து நீங்களே நியாயம் கேளுங்க..

எப்படி எழுதினாலும் வந்து கும்முறாங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

அபிஅப்பா ரெடியாகிட்டாரா!

அந்த போட்டோவ பார்த்தவுடனே துள்ளி குதிச்சி எந்திரிச்சிருப்பாரே!

நட்டுவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும்!]]]

அப்படின்னுதான் நான் நினைக்கிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// ஐயையோ.. அவர்தாண்ணே என்னைப் பிடிச்சு இழுக்குறாரு.. நான் போய் செய்வனா..? நானே முருகா.. முருகான்னுட்டு ஒரு ஓரமா உக்காந்திருக்கேன்.. என்னைப் போயி இழுக்குறீங்களே..! //

முருகா... முருகான்னு இருக்கிங்களா... இல்ல முருகாவுக்கு காரணம் வேறயா?

எதுவா இருந்தாலும் அடுத்தவாரம் இந்தியா வரேன்... அப்ப நேரில் பேசிக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

// ஐயையோ.. அவர்தாண்ணே என்னைப் பிடிச்சு இழுக்குறாரு.. நான் போய் செய்வனா..? நானே முருகா.. முருகான்னுட்டு ஒரு ஓரமா உக்காந்திருக்கேன்.. என்னைப் போயி இழுக்குறீங்களே..! //

முருகா... முருகான்னு இருக்கிங்களா... இல்ல முருகாவுக்கு காரணம் வேறயா? எதுவா இருந்தாலும் அடுத்த வாரம் இந்தியா வரேன்... அப்ப நேரில் பேசிக்கிறேன்///

வாங்க.. வாங்க இராகவன்..

வரும்போது நைஜீரியால எது ஈஸியா கிடைக்குமோ அதை வாங்கிட்டு வாங்க..

நைஜீரியால இருந்து வந்ததுன்னு சொல்லிக்க வேண்டாமா..? அதுக்குத்தான்..

இந்தியால கால் வைச்சவுடனேயே எனக்கு போன் பண்ணிச் சொல்லிருங்க.. இதுதான் ரொம்ப முக்கியம்..!

நேசமித்ரன் said...

பாசக்கார தம்பியா இருக்கியளே...!
நட்டுவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க உ.த.

உண்மைத்தமிழன் said...

///நேசமித்ரன் said...
பாசக்கார தம்பியா இருக்கியளே...!
நட்டுவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க உ.த.///

பாசக்கார அண்ணன்கி்ட்ட பாசக்கார தம்பியாத்தாங்க நடந்துக்கிடணும்..!

தங்களுடைய முதல் வருகைக்கு நன்றிகள் நேசமித்ரன்..

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

Unknown said...

அண்ணன் உ.த. அவர்களை பல நாட்களாக காணவில்லை. ஏதாவது mega serial அல்லது mega budget திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைத்து அதில் busyயாகி விட்டாரா.

butterfly Surya said...

நட்டுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

abeer ahmed said...

See who owns downloadnew.org or any other website:
http://whois.domaintasks.com/downloadnew.org