எல்லாரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-2

02-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபாட்டீலின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் இரண்டாம் பாகம் இது..

முதல் பாகம்

"பிரதிபா பாட்டீல் முகத்திரையை விலக்கினால்..."

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில் சமூக நீதியை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களைச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

"கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப்சிங் பாட்டில் மற்றும் பிற உறவினர்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தவேண்டும்..." என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்த குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத் துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில் அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்குப் பங்கு ஏதுமில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. "பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான்.." என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன்-18-ல் அது குறிப்பிட்டது.

"பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க உண்மைதான்..." என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத் துறை, ரிசர்வ் வங்கி, மத்திய மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கே அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல் வங்கியின் தொலைபேசியை சொந்தப் பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டு பங்கு பரிவர்த்தனை தொடர்பான வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார் இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி.பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தச் சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு.

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிரது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினார்கள்.

"பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்து கொண்டு ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது.." என்று ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

"நீங்கள்தான் இந்தக் கூட்டுறவு வங்கியின் நிறுவனத் தலைவர். ஆனால் சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்துவிட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும், முறைகேட்டையும் வெளியே தெரிய விடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும், எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதைக் குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள்.

உண்மை வெளி வர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரை விடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு..." என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய பெண்கள் யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்...
"காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான் நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயம் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்.." என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்திற்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூகச் சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன..?


மூன்றாம் பாகம்

35 comments:

உண்மைத்தமிழன் said...

பொட்'டீ' கடை ஸார்..

நீங்கதான் 'அந்த' லின்க்கை அனுப்புன அனானியா..? டூ லேட் ஸார்.. எப்பவோ படத்தைப் பார்த்தாச்சு.. 35 நிமிஷம் ஓடும்.

ஆனாலும் இந்தப் பதிவுக்கும் அந்த போட்டோவுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லியே ஸார்..

Anonymous said...

"டூ லேட் ஸார்.. எப்பவோ படத்தைப் பார்த்தாச்சு.. 35 நிமிஷம் ஓடும்."

லிங்க் கொடுக்கமுடியுமா?

உண்மைத்தமிழன் said...

ஸாரி.. எம்பேரு கெட்டுப் போயிரும்..

ஆனால் ஒரு விதிவிலக்கு உண்டு.. 'போலி உண்மைத்தமிழன் யார்?' என்று கண்டறிந்து சொன்னால் வீடியோவிற்கான லின்க் தரப்படும்..

Anonymous said...

எங்கள் தலை பாலபாரதியை அமாவாசை என்று குறிப்பிட்டு கலாய்த்து வைத்து இருக்கும் உண்மைத்தமிழனைக் கண்டிக்கிறோம்

Anonymous said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸாரி.. எம்பேரு கெட்டுப் போயிரும்
//
ஹிஹிஹிஹி

Anonymous said...

- - - - -
-- - - - - --
-- -- -- --

Anonymous said...

உண்மைத்தமிழன் உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவரு

Anonymous said...

ஒரு பயகூட பதிவை படிக்கலே போலிருக்கே

Anonymous said...

ஆமாம் படிக்காதவன்.. ஸ்ட்ரெயிட்டா பின்னூட்டம் தான்

Anonymous said...

உங்களை காக்கா கொத்தும்

Anonymous said...

ஆள் 1: தலை சுத்துது,.. மயக்கமா வருது.. என்ன பிரச்சினையா இருக்கும்
ஆள்2: நீ உண்மைத்தமிழன் சார் பதிவைப் படிச்சு இருப்ப

Anonymous said...

குழந்தை : நேர்மைன என்னம்மா!!!
அம்மா: அது நம்ம உண்மைத்தமிழன் பதிவு தாண்டா கண்ணா

Anonymous said...

அண்ணே !!! இங்கே கும்மி அடிக்கலமா!!

Anonymous said...

இங்கே கும்மி அடிக்கும் அனானிகளுக்கு ஒரு வேண்டுகோள், நம்ம உண்மைத்தமிழன் மிகவும் நல்லவர். அவரைக் காயப்படுத்தாமல் கும்மி பின்னூட்டங்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறோம்

இயக்குனர் விக்கினமன்
தலைவர் - உண்மைத்தமிழன் ரசிகர் மன்றம்

Anonymous said...

ஞானும் இவ்விட வரே

Anonymous said...

லாலாக்கு டோலு டப்பிம்மா... உண்மைத்தமிழன் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க

Anonymous said...

பாலாவை ஏன் கலாய்த்தீர்கள் என்ற கேள்விக்கும், அனானிகளுக்கு இதுவரை பதில் சொல்லாத உ.த வைக் கண்டிக்கிறோம்

Anonymous said...

யாரவது என்னை இங்க கூப்பிட்டிங்களா!!!

Anonymous said...

வடபழனிக்குபோக வழி தெரியுமா!!!

Anonymous said...

இது ஒரு 20/20 பின்னூட்டம்

Anonymous said...

இது ஒண்டே பின்னூட்டம்

Anonymous said...

இப்போத்தான் டெஸ்ட் பின்னூட்டம்

Anonymous said...

ஆள் 1: அறிவுன்ன என்ன அண்ணே!!
ஆள்2 : துக்ளக் படிச்ச கிடைக்கிறதுடா

Anonymous said...

சரி உ.த அனானிகளை மதித்து பதில் சொல்லாததால் வெளியேறுகிறோம்

உண்மைத்தமிழன் said...

அனானி தெய்வங்களே.. இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் பாஸ் பண்ணா நான் எப்படி பதில் போடுறது? பதில் போடுறது இருக்கட்டும்..? என்ன பதில் போடுறது? ஒருத்தராச்சும் மேட்டரை படிச்சிட்டு எழுதிருந்தீங்கன்னா எதுனாச்சும் பதில் சொல்லுவேன்.. பின்னூட்டத்தைப் படிச்சிட்டு இப்படி ரன் அடிச்சீங்கன்னா நான் என்னத்தை எழுதுறது? இதுல கோபம் வேற வருது..? ம்.. எம்புட்டு கஷ்டப்பட்டு கை வலிக்க டைப் செஞ்சிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.. இப்படி நாட்டைப் பத்தி எந்தக் கவலையும்படாமல் ஜல்லியடிக்கும் அனானிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

Anonymous said...

நீங்க எங்களை வன்மையா கண்டிச்சதை நாங்க ரசிச்சு சிரித்தோம்!

அமுக கிளை,
நாகர்கோவில்

உண்மைத்தமிழன் said...

//நட்புத்தளங்கள் said...
எங்கள் தலை பாலபாரதியை அமாவாசை என்று குறிப்பிட்டு கலாய்த்து வைத்து இருக்கும் உண்மைத்தமிழனைக் கண்டிக்கிறோம்//

இதை எப்படிய்யா கண்டுபிடிச்சீங்க? மேட்டரை படிக்கலே.. ஆனா கண்ணு அங்கங்க போகுது.. கண்ணை நோண்டனும்.. சரி.. சரி.. யார்கிட்டேயும் சொல்லிராதீங்க.. கமுக்கமா இருந்துக்குங்க.. நேர்ல பார்க்கும்போது குச்சி மிட்டாய் வாங்கித் தரேன்..

//கெட்டவன் said...
உண்மைத்தமிழன் உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவரு//

அப்படியா..? சந்தோஷம்.. இதை நீங்களே சொல்லிக்கக்கூடாது.. அக்கம் பக்கம் நாலு பதிவுக்குள்ள போயாச்சும் சொல்லணும்..

//படிக்காதவன் said...
ஒரு பயகூட பதிவை படிக்கலே போலிருக்கே//

நீ மொதல்ல படிச்சியாப்பூ.. அடுத்தாள சொல்ல வந்துட்ட..?

//படித்தவன் said...
ஆமாம் படிக்காதவன்.. ஸ்ட்ரெயிட்டா பின்னூட்டம்தான்..//

பார்த்தியா.. வந்துட்டான் பாரு.. இவரெல்லாம் பாராளுமன்றத்துல இருக்க வேண்டிய ஆளு.. அங்கனதான் படிக்காமயே எதைப் பத்தியும் பேசலாம்..

//டயலாக்கு டயலாக்கு said...
ஆள் 1: தலை சுத்துது,.. மயக்கமா வருது.. என்ன பிரச்சினையா இருக்கும்
ஆள்2: நீ உண்மைத்தமிழன் சார் பதிவைப் படிச்சு இருப்ப//

ஆஹா.. என்ன உள்குத்து.. சார்ன்னு ஒரு வார்த்தைய போட்டுட்டா விட்ருவனா நானு.. படிச்சுத் தொலைங்கய்யா..

//ஹமாம் சோப்பு said...
குழந்தை : நேர்மைன என்னம்மா!!!
அம்மா: அது நம்ம உண்மைத்தமிழன் பதிவுதாண்டா கண்ணா//

சரி.. சரி.. அடக்கமா இருக்கணும். இதையெல்லாம் போய் இப்படி ஓப்பனா வெளில சொல்லலாமா?

//லா லா லா said...
இங்கே கும்மி அடிக்கும் அனானிகளுக்கு ஒரு வேண்டுகோள், நம்ம உண்மைத்தமிழன் மிகவும் நல்லவர். அவரைக் காயப்படுத்தாமல் கும்மி பின்னூட்டங்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
இயக்குனர் விக்கினமன்
தலைவர் - உண்மைத்தமிழன் ரசிகர் மன்றம்//

நன்றி.. நன்றி.. இது எங்கன போய் முடியப் போகுதோ.. அந்த முருகனுக்கே வெளிச்சம்..

//மலையாள அனானி said...
ஞானும் இவ்விட வரே//

தாராளமா.. செப்பு நைனா செப்பு..

//கவிசம்ராட் said...
லாலாக்கு டோலு டப்பிம்மா... உண்மைத்தமிழன் இதுக்கு அர்த்தம் சொல்லுங்க..//

கவிசாம்ராட் அவர்களே.. உங்களுக்கே தெரியலையே.. எனக்கெப்படி தெரியும்? அநேகமா இதை கவிஞர் வாலிகிட்டதான் கேக்கணும்.. கேட்டுச் சொல்றேன்..

//இபின்பதுதா said...
யாரவது என்னை இங்க கூப்பிட்டிங்களா!!!//

யாருப்பா நீ.. அவனா நீ..? இல்ல நீதான் அவனா..? பேரே தினுசா இருக்கே..

//தண்டவாளத்தில தலை வைத்தவன் said...
வடபழனிக்குபோக வழி தெரியுமா!!!//

தண்டவாளத்துல தலை வைச்சா மேலதான் போக முடியும். வடபழனிக்கு எப்படிப் போக முடியும்? சரி.. சரி.. டிரெயின் வர்ற தண்டவாளத்துல தலையை வை.. முன்னாடி வைச்சவங்க மாதிரி டிரெயினே வராத இடத்துல போய் தலையை வைச்சு வருஷக்கணக்கா அதையே சொல்லிச் சொல்லி கும்மியடிக்காத..

//புத்திசாலி said...
ஆள் 1: அறிவுன்ன என்ன அண்ணே!!
ஆள்2 : துக்ளக் படிச்ச கிடைக்கிறதுடா..//

கண்டிப்பா புத்திசாலி.. துக்ளக் உண்மைத்தமிழனுக்கு பால்ய காலத்துல தோஸ்த்து.. கொஞ்ச நஞ்ச பிரெண்ட்ஷிப் இல்லே.. 30 வருஷப் பழக்கமாக்கும்.. விட்ர முடியுமாங்குறேன்..

//அ.உ.அ.மு.க said...
சரி உ.த அனானிகளை மதித்து பதில் சொல்லாததால் வெளியேறுகிறோம்..//

நீயோ யோசிச்சுப் பாரு.. இத்தனை பேருக்கும் பதில் சொல்லணும்னா எம்புட்டு நேரமாகும்னு.. கோச்சுக்காத கண்ணு.. யாராவது ஒருத்தராச்சும் முழுசையும் படிச்சிட்டு எழுதுங்கப்பா..

Anonymous said...

உ.தமிழரே.. தன் சொந்தங்கள் செய்த தவறுக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார்? அவர் பணத்தைக் கையாண்டதாகவோ, அல்லது அவர் நேரடியாக ஊழல் செய்தார் என்றோ ஏதாவது குற்றச்சாட்டு உண்டா? ஏன் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அவரது வளர்ப்பு மகளின் கணவன் லஞ்சம் வாங்கினார் என்று புகார் எழுந்ததே.. அப்போது யாரும் வாஜ்பாயை பதவி விலகச் சொல்லவில்லையே.. இப்போது பிரதிபா மீது பாய்வதேன்..? ஒருவேளை பிரதிபாவே ஊழல் செய்திருந்தாலும் இப்போது குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளில் யார்தான் யோக்கியர்.. சொல்லுங்கள்..?

துளசி கோபால் said...

ம்ம்ம்ம். படிச்சாச்சு(-:

வடுவூர் குமார் said...

இவ்வளவு விஷயம் இருக்கே? இதெல்லாம் தெரியாமலா நம் மாக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்காங்க? அல்லது தெரிஞ்சும் நம்மளை விட கம்மியாகத்தான் செய்திருக்கார் என்று சந்தோஷப்பட்டு ஒத்துக்கொண்டார்களா?
அடுத்தது யார் ஷெகாவத்தா?
வந்த பின்னூட்டத்திலேயே "ஹமாம்" தான் சூப்பர்.சிரிப்பை அடக்கமுடியவில்லை.
கோபித்துகொள்ளாதீர்கள்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உ.தமிழரே.. தன் சொந்தங்கள் செய்த தவறுக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார்? அவர் பணத்தைக் கையாண்டதாகவோ, அல்லது அவர் நேரடியாக ஊழல் செய்தார் என்றோ ஏதாவது குற்றச்சாட்டு உண்டா? ஏன் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அவரது வளர்ப்பு மகளின் கணவன் லஞ்சம் வாங்கினார் என்று புகார் எழுந்ததே.. அப்போது யாரும் வாஜ்பாயை பதவி விலகச் சொல்லவில்லையே.. இப்போது பிரதிபா மீது பாய்வதேன்..? ஒருவேளை பிரதிபாவே ஊழல் செய்திருந்தாலும் இப்போது குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளில் யார்தான் யோக்கியர்.. சொல்லுங்கள்..?//

நிச்சயம் பொறுப்பாவார். தன் அரசியல் செல்வாக்கைக் கொண்டு தவறு செய்த தனது கிரிமினல் சொந்தங்களை இதுவரையிலும் காப்பாற்றி வந்துள்ளார். துவும் ஒரு வகையில் கிரிமினல் குற்றமே.. வாஜ்பாய் மீது எழுந்த குற்றச்சாட்டில் யாரும் கோர்ட்டுக்குப் போகவும் இல்லை. கோர்ட்டில் அது குறித்து வழக்கும் இல்லை. எல்லாமே அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கள் மாதிரிதான் தெளித்தன. ஆனால் இவரைப் பொறுத்தமட்டில் மும்பை உயர்நீதிமன்றம் வரையிலும் கண்டனங்கள் உள்ளன.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
ம்ம்ம்ம். படிச்சாச்சு(-://

அதென்ன ஒரு வரில முடிச்சாச்சு.. இன்னும் இருக்கு ரெண்டு பாகம்.. மறக்காம வந்திருங்க..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
இவ்வளவு விஷயம் இருக்கே? இதெல்லாம் தெரியாமலா நம் மாக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்காங்க? அல்லது தெரிஞ்சும் நம்மளை விட கம்மியாகத்தான் செய்திருக்கார் என்று சந்தோஷப்பட்டு ஒத்துக்கொண்டார்களா?
அடுத்தது யார் ஷெகாவத்தா?//

முன்பு தெரியாது. இப்போது தெரிந்தும், விட முடியவில்லை. சமாளிக்கிறார்கள். அவ்வளவுதான்.. ஷெகாவத் இந்து மத தீவிரவாதி என்ற ஒரு புகாரைத் தவிர வேறு எந்தப் புகாரும் இல்லை.

//வந்த பின்னூட்டத்திலேயே "ஹமாம்" தான் சூப்பர்.சிரிப்பை அடக்கமுடியவில்லை. கோபித்து கொள்ளாதீர்கள்.//

அதான் சிரிப்போ சிரிப்புன்னு சிரிச்சாச்சு. அப்புறமென்ன கோபிக்கிறது? சிரிச்சிட்டுப் போங்க.. நான் என்ன சொல்றது?

Anonymous said...

//.. ஷெகாவத் இந்து மத தீவிரவாதி//
ஆமாம் மதத் திவிரவாதி என்பது மிக மிக சாதரணக் குற்றச்சாட்டுதான்
ஹிஹிஹிஹி

abeer ahmed said...

See who owns harbin110.com or any other website:
http://whois.domaintasks.com/harbin110.com