வர்ணம் - திரைப்படம் - வலைப்பதிவர்களுக்காக சிறப்புக் காட்சி..!

08-10-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 6-ம் தேதியன்று நடந்த 'சதுரங்கம்' திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்து திரைப்படத்தினை கண்டுகளித்து தங்களது கருத்துக்களை விமர்சனங்களாக பதிவு செய்திருக்கும் அன்பு வலைப்பதிவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..!

வலைப்பதிவர்களுக்கு தொடர்ச்சியான இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. வரும் 10-ம் தேதி, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம். ஸ்டூடியோவிற்குள் இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சமீபத்தில் வெளி வந்திருக்கும் 'வர்ணம்' என்னும் திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, நமது வலைப்பதிவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இப்படத்தில் மோனிகா, கிரி, அஷ்வதா, சமந்த், கெளதம் போன்றோர் நடித்துள்ளனர்.  இசை ஐசக் தாமஸ். தயாரிப்பு : அஜயேந்திரன், ராஜேந்திரன், இயக்கம் எஸ்.எம்.ராஜூ.

உண்மையாக இந்த நிகழ்ச்சி முதலில், நாளை ஞாயிற்றுக்கிழமை(09-10-2011)யன்றுதான் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் இண்டிபிளாக்கர்.காம் நடத்தும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவிருப்பதால், நமது தமிழ் வலைப்பதிவர்கள் படம் பார்க்க வருவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிந்த்தால், ஒரு நாள் தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டது. பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்..!

திங்கள்கிழமை-அலுவலக நாள், என்ற சிரமத்தைப் பார்க்காமல் பதிவர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரைப்படத்தை காண வருமாறு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்..!

தொடர்புக்கு : 9840998725

நன்றி..!

6 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே அன்னிக்காவது சாப்பாடு வாங்கி தருவீகளா?

Sivakumar said...

சதுரங்கம் விமர்சனம் போடலையா சார்?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே அன்னிக்காவது சாப்பாடு வாங்கி தருவீகளா?]]]

முயற்சி பண்றேன் ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

சதுரங்கம் விமர்சனம் போடலையா சார்?]]]

போட்டாச்சு. நீங்க படிக்கலையா ஸார்..?

aotspr said...

நல்ல விமர்சனம்....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

N.H. Narasimma Prasad said...

நான் சென்னையில் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த சிறப்புக் காட்சியில் கலந்திருப்பேன். எனினும் அழைப்புக்கு நன்றி அண்ணே.