தி.மு.க. ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்..?

12-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்..

தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போயாக வேண்டும். அடித்துத் துரத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..!

அதற்கான காரணங்களாக எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


1. ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. செய்த துரோகம்

டெசோ மாநாடு நடத்தினோம். அகில இந்திய அளவில் ஈழத் தமிழர் பிரச்சினையை கொண்டு சென்றோம் என்ற தி.மு.க. கட்சியினரின் கூச்சலெல்லாம் கடந்த காலத்தோடு முடிவுற்றுப் போனது..

இறுதி யுத்தம் என்று ராஜபக்சேவால் அறிவிக்கப்பட்டு இந்திய கைக்கூலி அரசின் ஆயுத உதவியால் லட்சணக்கணக்கான தமிழ் மக்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் ஒரு நாள் இரவு நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் ஊர் விட்டு ஊராக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழர்களுக்கெல்லாம் தலைவன் நானே என்று தன்னைத்தானே பீத்திக் கொண்ட இந்த உத்தமர், என்ன செய்தார்..?

ஆயுதம் கொடுப்பது இந்தியா. உலகச் சமுதாயம் இதில் தலையிடாமல் இலங்கையைக் காப்பது இந்தியா. ஐ.நா. சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவிடாமல் தடுப்பது இந்தியா என்று அத்தனை படுகொலைகளுக்கும் முழு முதற்காரணமான அன்றைய மத்திய அரசுக்கு முட்டுக் கொடுத்து தனது கட்சி எம்.பி.க்களின் ஆதரவினால் ஆட்சி நடத்த உதவிய இந்தக் கருணாநிதி கயவனில்லையா..?

புலிகள் தொடர்பான கருத்து வேறுபாட்டை பற்றிப் பிரச்சாரம் செய்ய இதுவா நேரம்..? அங்கே முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு பால்கூட இல்லாமல் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தபோது இந்த அருந்தவத் தமிழ்த் தலைவரின் புத்திரர்களும், வாரிசுகளும் நீரா ராடியாவுடன் “எனக்குத்தான் மந்திரி பதவி.. இல்லை.. இல்லை.. எனக்குத்தான் மந்திரி பதவி..” என்று பதவி ஆசை உரையாடலில் திளைத்திருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள்தானா..?

தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எத்தனை மந்திரி பதவி வேண்டும். எந்தெந்த இலாகாக்கள் வேண்டும் என்பதற்காக இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியில் போய் பிச்சையெடுக்கத் தெரிந்த இந்தத் தரித்திரத் தலைவருக்கு ஈழத் தமிழன் கொல்லப்படுகிறான் என்றவுடன் டெல்லியுடன் பேச முடியவில்லை.. அவர்களுக்கு நெருக்கடி கொடு்க்க முடியவில்லை. தான் கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் தனது சீமந்தபுத்திரனுக்கு அமைச்சர் பதவி தராமல் போனால் நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். வெளியேறுவோம் என்று மட்டும் சொல்லத் தெரிகிறது.

ஆக.. இவருக்கு தன் குடும்பம், சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் மட்டுமே முக்கியம். அவர்களுக்காகத்தான் ஆட்சி, அதிகாரத்தைப் பெற விரும்புகிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! போதுமே.. இவரை வைத்துக் கொண்டு இனிமேல் நம்மால் கக்கூஸ்கூட கழுவ முடியாது. வீட்டுக்கே அனுப்பி ரெஸ்ட் எடுக்க வைப்போம்..! இந்த ஒரு காரணத்துக்காவே இந்த ஆட்சி தொலைய வேண்டியதுதான்..!

2. ரவுடித்தனம் செய்த அமைச்சர்கள்..!

சமூகத்தில் ரவுடித்தனம் செய்பவர்களைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகமே ரவுடித்தனம் செய்தால் என்னவென்று சொல்வது..?

தான் கொள்ளையடிக்க நினைத்த சொத்தை தராத ஒரே காரணத்துக்காக அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளரை பொய் வழக்கில் சிக்க வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி வைத்து... இரவோடு  இரவாக  புல்டோசரை வைத்து அந்த இடத்தையே தரைமட்டமாக்கிய ஒரு மாபெரும் ரவுடியே இந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமை..!

அது மட்டுமா..? தன்னை எதிர்த்து பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்ததற்காகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவும் அந்த நிலத்தின் உரிமையாளரின் மகனை நட்ட நடு இரவில் தனது வீட்டுக்கு எதிரே பகிரங்கமாக கட்டி வைத்து சவுக்கால் அடித்திருக்கும் கொடுமையைச் செய்திருப்பதும் அதே அமைச்சர்தான்..!

என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? ராஜாவின் அமைச்சர் பதவியைப் பறித்தார்கள். கண் துடைப்புக்காக சிறையில் அடைத்தார்கள். மிக, மிக விரைவாக இந்த வழக்கை நடத்தி முடித்தார்கள். சாட்சி சொல்ல ஒருவர்கூட இல்லாத நிலையில் அந்த வழக்கு தள்ளுபடியானது. அந்தத் தாக்கப்பட்ட தமிழரின் உடலில் இன்னமும் இருக்கும் வரி, வரியான கோடுகள்தான் இந்த உத்தமச்சோழனின் பரம்பரையின் லட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது..

இதைக் கேள்விப்படும்போது நம் மனசு கொதிக்கிறது..! யாரோ ஒரு பதிவர் வார்த்தைகளால் திட்டிவிட்டாரே என்றபோதே ஆள், அம்பு, படையணி திரட்டி ஒரு வாரத்திற்கு அவர் மீது சொல்லம்பு தொடுக்கும் வலையுகப் பதிவர்கள் கொஞ்சம் இதைப் பற்றி ஒரு நிமிடமாவது யோசித்துப் பாருங்கள்..!

இதுபோல் நம்மில் யாருக்காவது.. நமது உடன்பிறந்தாருக்கு நேர்ந்திருந்தால் நமக்கு எந்த அளவுக்கு ரத்தம் கொதித்திருக்கும்.? ஆனாலும் இந்த ஆட்சியை ஆதரிக்க நம்மில் சிலருக்கு எப்படி  மனம் வருகிறது என்றே தெரியவில்லை..! இதோடு விட்டார்களா இந்தக் கயவர்கள்..?

இதே ரவுடி அமைச்சருக்கு மீண்டும் தேர்தலில் நிற்க சீட் கொடுத்து நிற்க வைத்து “இவரையும் ஜெயிக்க வையுங்கள்” வெட்கமில்லாமல் நம்மிடமே வந்து கேட்கிறார்கள். இப்படி கேட்கும் அளவுக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால் மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு இவர்கள் எடை போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது..!

இவருக்குப் போட்டியாக சேலம் மாவட்டத்து குறுநில மன்னரான வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஒருவரின் குடும்பச் சொத்தை அபகரிக்க வேண்டி அந்தக் குடும்பம் மொத்தத்தையும் ஆள் வைத்து கொலை செய்திருக்கிறார். அந்தக் குற்றத்தை இவர்தான் செய்திருக்கிறார் இன்று இன்றைய ஆட்சியின் காவல்துறையே கைது செய்கிறது. அந்தக் கைது செய்யப்பட்டவனையே அமைச்சராக இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்குச் சென்று பார்க்கிறார்..! போதுமே.. இந்த வழக்கு என்னாகும் என்று இப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

இவர்கள் நம் மீது காட்டும் இந்த மரியாதைக்கு நாம் பதில் மரியாதையை செய்ய வேண்டாமா..? தயவு செய்து இவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்..!

3. ஸ்பெக்ட்ரம் மகா ஊழல்

இனிமேல் இதுபோன்ற ஊழலை உலகத்திலேயே யாருமே செய்ய முடியாது என்று உலக அரசியல்வியாதிகளே சொல்கின்ற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்திருக்கும் இவர்களை எந்த விளக்கமாற்றை வைத்து அடிப்பது..!

அந்த ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும், இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் ஓட்டுக் கேட்க வருகிறார்கள்..?

நாம் எப்படி இவர்களை அனுமதிப்பது..? நம் அனுமதி பெற்றே இந்தக் கொள்ளையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்னும்போது அடுத்த முறை தேர்வு செய்யும்போது நாம் கவனமாக இருக்க வேண்டாமா? ஆகவே தோழர்களே.. தயவு செய்து இந்தக் கூட்டணியை ஒதுக்கித் தள்ளுங்கள்..!

4. ஆட்சி நிர்வாகம் செய்த லட்சணம்..!

நடக்கவே முடியாத முதலமைச்சரை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு உதாரணத்தையும் கருணாநிதிதான் செய்து காட்டியிருக்கிறார்.

அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார்.. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தினால் வெளங்குமா..?

முதல் அமைச்சரின் குடும்பச் சண்டை பகிரங்கமாக வெடித்தது. இதனால் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பிரிந்தன. அந்தக் கொலைகாரர்களை அப்பட்டமாக வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடையச் செய்யும் அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து முடித்து தனது மகனை காப்பாற்றிக் கொண்ட இந்த ராஜராஜசோழனை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா..? அந்த வழக்கில் இறந்து போன அப்பாவிகளுக்கு என்னதான் பதில்..?

முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..!
பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்..! அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.

இதாவது பரவாயில்லை. இதற்காக அவர் சொன்ன விளக்கங்கள்தான் மகா கொடுமை. முதலில் "எனக்குத் தெரியாது.." என்றார். பின்பு "அந்த அம்மையாரை திருப்பி அனுப்பிய பின்புதான் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.." என்றார். மீண்டும் வேறொரு அறிக்கையில் "அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால்தான் காவல்துறையினர் அனுப்பப்பட்டார்கள். ஆனால் இதுவும் எனக்குத் தெரியாது. நான் தூங்கிவிட்டேன்.." என்று அண்டப்புளுகு புளுகினார்.

இவர் எதுக்காக முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்..!? வீட்டில் ஓய்வெடுத்து தூங்கலாமே..? யார் வேண்டாம் என்று மறுத்தது..?

தன் கண்ணெதிரே தமிழகத்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் நான் பேசினேன் என்று தைரியமாக இவருடைய வாய் சொல்கிறது என்றால் எவ்வளவு தைரியம் இவருக்கு..? அதைப் பார்த்தவர்களும், செய்தியைக் கேட்பவர்களும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றுதானே இவர் நினைத்திருக்கிறார்..!? இந்த மனிதரை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டாமா..!?

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை கை கட்டி வேடிக்கை பார்த்தது இவருடைய காவல்துறைதான். ஆள் மாற்றி ஆள் கை காட்டி இப்போது கோர்ட்டின் நடவடிக்கையில்தான் உண்மைகளே வெளி வருகிறது. இவருடைய ஆட்சியின் லட்சணம் இதிலிருந்தும் தெரிகிறது..! கேட்டால் இந்தியாவிலேயே இவர்தான் ஆட்சி நடத்துவதில் சிறந்தவராம்..! தூக்குப் போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது..!

உயர்நீதிமன்றத்தி்ல் வழக்கறிஞர்கள், காவல்துறையினருக்கு இடையில் மோதல்.. மீண்டும் ஒரு அமளி.. நிலைமையைக் கட்டுக்குள் அடக்க வேண்டிய வழி வகைகளை ஆராய வேண்டிய இவரோ சாவகாசமாக வீட்டில் அமர்ந்து லைவ் ரிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்..!

இவருடைய வீட்டில் ஒரே ஒரு நாள் காவல்துறை புகுந்ததற்காக எத்தனை, எத்தனை ஒப்பாரிகளையும், கூச்சல்களையும் கிளப்பினார் இவர்..? அப்போது மற்றவர்களை இவர் என்னவென்று நினைக்கிறார்..? இவர் முதல்வராக இருக்க வேண்டுமென்று இங்கே யார் அழுதது..?

இங்கே நான் கேள்விப்பட்ட, படித்த இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தோழர்களே..!

உலகத்தின் 214-வது பணக்காரர் சிவ்நாடார். மொத்தச் சொத்துக்கள் 4 பில்லியன்.. HCL நிறுவனத்தின் தலைவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தினத்தந்தியின் நிறுவனர் அமரர் ஆதித்தனாரின் உடன் பிறந்த அக்காளி்ன் மகன். நடிகர் சரத்குமாரின் சொந்த அத்தை மகன். பிரபல தமிழ்ப் பெண் எழுத்தாளர் ரமணி சந்திரனின் உடன்பிறந்த தம்பி..!

இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இவர் மூலமாக சிவ்நாடாருக்கு ஒரு மகன் உண்டு. ஏதோ ஒரு காரணத்தினால் இந்த மனைவியை விலக்கிவிட பெரும் முயற்சி செய்தார் சிவ்நாடார். முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டார் அவரது மனைவி.

மனைவியுடன் சமரசமாக போக முயற்சி செய்தார். முடியாமல் போக இப்போதைய ஆட்சியாளர்களை அணுகினார். கொடுக்க வேண்டியதை கொடுத்திருக்கிறார். உத்தரவுகள் பறந்தன. அந்த 2-வது மனைவி மீது அதிரடியாக ஒரு வழக்கு பாய்ந்தது. என்ன வழக்கு தெரியுமா..? பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக..! இது எப்படியிருக்கு..? 4 பில்லியன் சொத்துள்ள ஒருவரின் மனைவி கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தாராம்.. அப்படியே அவரைக் கொத்தாகத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தார்கள். இது போன்ற கொடுமைகளை பிரிட்டிஷ்காரர்கள்கூட செய்திருக்க மாட்டார்கள்..!

அந்த மனைவி வெளியில் வர வேண்டுமெனில் பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்ல வேண்டும் என்றார்கள். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள.. பணம் கை மாறியது.. வழக்கும் கைவிடப்பட்டது. திருமண ஒப்பந்தம் முறிந்து போன சந்தோஷத்தில் சிவ்நாடார் விமானமேறினார். அவரது முன்னாள் மனைவிக்குக் கொடுக்கப்பட்டதில் பாதியை ஆட்சியில் இருந்தவர்களும், ஏற்பாடு செய்த உளவுத்துறையின் மூத்த அதிகாரியொருவரும் பங்கு போட்டுக் கொள்ள.. கணவர் கொடுத்தப் பணத்தில் பாதிதான் மனைவிக்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது.

எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை, பத்திரிகையாளர்களுடன் பேச விடாமல் செய்ததில் அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு பெரும் பங்குண்டு. இந்த ஆட்சி போன பின்பு இந்த விவகாரம் வெளிவரும் என்று நினைக்கிறேன்..!

ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் பொய் சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த முதலமைச்சரும், அமைச்சரவை சகாக்களும் இது போன்ற எத்தனை, எத்தனை குற்றங்களைச் செய்கிறார்கள்.. செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்..!  இவர்களை ச்சும்மா விட்டு வைக்கலாமா..? வாய்ப்பு நாளை மறுநாள் வந்திருக்கிறது.. விட்டுவிடாதீர்கள் தோழர்களே..!

இது மட்டுமல்ல.. விலைவாசி உயர்வு, மின் வெட்டு என்ற இரண்டு பூதங்களையும் வளர்த்துவிட்டதில் இவர்களுக்கும் பங்குண்டு..!

யார் ஆட்சி செய்தாலும் விலைவாசி உயரத்தான் செய்யும் என்பார்கள் சிலர்..! ஆனால் பெட்ரோல், டீசலின் விலையை தன்னிச்சையாக அந்த நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியது இந்தத் தர்மதுரையின் கட்சியின் முழு ஆதரவைப் பெற்றிருக்கும் மத்திய ஆட்சிதான்.

ஒரே மாதத்தில் 2 முறைகள் ஏற்றப்பட்டு நிமிடத்துக்கு நிமிடம் காய்கறிகளின் விலையை உச்சத்தைத் தொட காரணகர்த்தாகவாக இருந்து தொலைந்திருக்கும் இந்தக் கயவர்களைத் தண்டிக்க வேண்டாமா..?

இந்த ஐந்தாண்டு காலத்தில் அத்தனை அமைச்சர்களும் சொல்லி வைத்தாற்போல் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அதேபோல் மாநிலத்தின் அத்தியாவசியத் தேவையான மின் சப்ளையை பல மடங்கு உயர்த்தாமல்.. அதற்கான வழிமுறைகளைக் கண்டறியக்கூட மனமில்லாமல் இருந்திருக்கும் இந்த திறமையில்லாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்..?

தங்களுடைய சொத்து மதிப்புகளை மட்டும் உயர்த்தத் தெரிந்த இவர்களுக்கு மாநிலத்திற்கு மிகத் தேவையான மின் உற்பத்தியை பெருக்கத் தெரிய வேண்டாமா..? எல்லாவற்றிலும் கமிஷன் அடித்தே பழகித் தொலைத்திருக்கும் இவர்களால் கமிஷனைத் தாண்டி எதையும் செய்ய முடியாமையே இதற்குக் காரணம் என்று கோட்டை வட்டாரத்தில் தெளிவாகவே பேசுகிறார்கள். இந்தத் திருடர்கள் நமக்குத் தேவைதானா..?

கடைசியாக மீனவர்கள் பிரச்சினை..! மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூப்பாடு போடும் மத்திய அரசும், தமிழக அரசும், எல்லை தாண்டிப் போய்விடும் நம் தமிழகத்து அப்பாவி மீனவர்களை பங்களாதேஷும், பரமவைரி பாகிஸ்தானும் துப்பாக்கியால் சுடாமல் பத்திரமாகத் திருப்பியனுப்புவதை அறிவார்களா..?

சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..? ஒன்றா இரண்டா..? இதுவரையில் 550-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்பார் உண்டா..?

இந்தியாவில் இருந்து அத்தனையையும் இறக்குமதி செய்து கொண்டு, நாம் போடும் பிச்சைக் காசில் உட்கார்ந்து சாப்பிடும் அந்த நாட்டு கொழுப்பெடுத்த ராணுவத்திற்கு தமிழன் என்றாலே இளக்காரமாகப் போகிறதே..? இதற்கென்ன காரணம்..? கேள்வியே கேட்காத, கேட்க விரும்பாத, மத்திய அரசும், தமிழக அரசும்தானே..!

மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பு என்றால், அந்த அரசுக்கு நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்..? உங்களது கட்சிக்காரர்கள் ஏன் வெட்கமில்லாமல் மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?

இதே தமிழன் ஓட்டுப் போட்டு உன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதால்தானே உங்களது மனைவி, துணைவியுடன் மக்கள் பணத்திலேயே விமானத்தில் ஊர், ஊராகச் சுற்றுகிறீர்கள்..? உங்க அப்பன் வீட்டுக் காசுலயா போறீங்க..? துரோகிகளா..!

அன்பு பதிவர்களே..! வாசகர்களே..! பொதுமக்களே..! இவர்கள் இருந்தென்ன? போயென்ன..? நாட்டு மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இந்தக் கோழைகளை ஆட்சிக் கட்டிலில் ஒரு நிமிடம்கூட இனியும் உட்கார வைக்கக் கூடாது..! வீட்டுக்கு அனுப்பி வைப்போம். வாருங்கள்..!

சரி.. தி.மு.க. வேண்டாம். அப்படியானால் இந்தக் கூட்டணி..? கூட்டணி வேறு இவர்கள் வேறா..? இந்தக் கூட்டணியே வேண்டாம். இவர்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்காக அவர்களுக்கான தண்டனையை அவர்களும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

அதிலும் இந்தக் கூட்டணியின் பிரதான அங்கமாக இருக்கும் காங்கிரஸை ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவிடாமல் செய்தால்தான், முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த நமது தமிழர்களின் ஆன்மா சாந்தியாகும்..!

இந்தப் பக்கமும் பேசுவோம்.. அந்தப் பக்கமும் பேசுவோம் என்ற நினைப்பில், “ஏய் இந்திய அரசே..” என்று ஏதோ அமெரிக்க ஒபாமாதான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்போல் கூச்சலிடும் திருமாளவன், அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இத்தாலியம்மாவுடன் ஒரே மேடையில் காட்சி தந்து அந்தம்மாவுக்கும் சல்யூட் அடித்து தன்னை கொடுந்தமிழனாகக் காட்சி தருகிறார். இவரையும் சேர்வார் சேர்க்கை சரியில்லை என்கிற காரணத்திற்காகத் தண்டிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கூட்டணி வேண்டாம் என்றால் வேறு எவருக்கு..?

எதிரில் நிற்பது ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி. இவர்கள் இல்லாமல் இந்திய ஜனநாயகக் கட்சி, மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் சுயேச்சைகள் என்று பல பிரிவினரும் நிற்கிறார்கள்..!

என்னுடைய முதல் சாய்ஸ்.. இரண்டு கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக இன்றளவும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கூட்டணி தர்மத்தைக்கூட பொருட்படு்த்தாமல் பேசக் கூடிய தலைவர்கள் கம்யூனிஸ இயக்கத் தலைவர்கள்தான்.

ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!

இறுதியில் குழப்பங்கள் வரலாம். வரட்டும்.. தி.மு.க. கூட்டணியை முதலிலேயே முற்றாக வெளியேற்றிவிட்டதால் அடுத்து இருப்பவர்களில் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள் தங்களுக்குத் தாங்களே விலங்கு போட்டுக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டுமே என்கிற பய உணர்வோடு ஆட்சி நடத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன்..!

என் இனிய தோழர்களே..! இந்த முறையும் தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள்..!

தி.மு.க. கூட்டணியை முற்றாகப் புறக்கணித்து இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து ஒளி பாய்ச்சுங்கள்..!

பொறுமையாகப் படித்தமைக்கு எனது அன்பான நன்றிகள்..!

குறிப்பு : கொஞ்சம் கஷ்டத்தோடு கஷ்டமாக இந்தப் பதிவுக்கு ப்ளஸ் ஓட்டளித்தீர்களேயானால், இன்னும் பல நூறு பேர்கள் இந்தப் பதிவைப் படிக்க வாய்ப்பு கிடைக்கும்..!

நன்றி..!

90 comments:

நேசமித்ரன் said...

சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..?

//

வலி எல்லாம் மீறி இந்த வரியில் இருக்கும் குசும்பை ரசித்தேன் அண்ணே :)

Unknown said...

அதுக்குள்ள ஒரு திராவிடக் குஞ்சு மைனஸ் குத்திட்டு போயிருக்கு...

இந்தப்பதிவை படித்த பிறகும் உங்களுக்கு சொரனை வரவில்லை எனில் கவுண்டமணி அண்ணன் கிட்ட சொல்லித்தான் திட்ட சொல்லனும்...

மு.சரவணக்குமார் said...

1.இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி..நீங்கள் ஓர் அரசியல்வாதியாக, கட்சியின் தலைவராக இருந்தால் மூன்றாவது தடவையும் அப்படியான ஒரு தவறை செய்வீர்களா?(நன்றாக கவனிகக்வும் உங்களை அரசியல்வாதி என்று சொல்லிவிட்டேன்.)

மு.சரவணக்குமார் said...

நான் எந்த திரட்டியிலும் இனையாதவன் என்பதால் எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமை இல்லை.

:)

அகில் பூங்குன்றன் said...

இங்க ஓட்டுபோட்டுட்டேன் அண்ணே. ( தேர்தலில் ஓட்டு போட இயலாது ) திமுக ஏன் வர கூடாது என்று நல்லா எழுதியிருக்கீறீங்க.. ப்ல கருத்துகளில் அனவரும் உடன் படுவார்க்ள்... பார்ப்போம். என்ன ஆகிறது என்று...

அவிய்ங்க ராசா said...

அண்ணே..அப்படியே யாருக்கு ஓட்டுப் போடணும்..யாருக்கு ஓட்டுப்போட்டா, இந்தக் கொடுமையெல்லாம் நடக்காதுன்னு தெளிவா சொல்லிப்புட்டிங்கன்னா, வாக்காளர்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்..உங்க பதிலை எதிர்பார்த்து, 10 கோடி ஜனங்களும் ஓட்டுப்போடாம வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க...

ismailmohemed said...

ya. i agree that. But in the mainthing is apart from dmk ve should avoid congress first. Bcaz they are first enemy for true tamilians.

ஸ்ரீகாந்த் said...

பரீட்சைக்கு போகும் முன் ஒரு முறை பாடத்தை திருப்பி
பார்த்துவிட்டு போவது நல்லது என்பார்கள். அது போல
நீங்கள் தேர்தலுக்கு முன் முக்கியமான விஷயங்களை
திரும்பி பார்க்க வைத்துள்ளீர்கள். அந்த இறைசக்தியின்
அருளினாலும் நம்முடன் சூக்குமுமமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
சித்தர்களின் ஆசியினாலும் சிறப்பான ஆட்சியாளர்களை
நம் குடிமக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்
http://kanthakadavul.blogspot.com/

ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள நல்மனம் படைத்த தமிழ்குடி மக்களே !
எப்படி நம் வீட்டை நிர்வாகம் செய்யும் நம் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் மிக கவனமாக இருப்போமோ அதை போலவே நம் நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பது மிக முக்கியம் ......ஆகவே நாம் அளிக்க போகும் ஒவ்வொரு வாக்கும் சரியானவர்களுக்கு பொய் சேர நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இதை படிப்பவர்கள் தன்னால் இயன்ற வரையில் நண்பர்கள் , உறவினர்கள், தெரிந்தவர்கள் ,அறிந்தவர்கள், LIONS கிளப் , ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மேலும் வேறு எல்லா வகையுளும் இந்த கருத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை ஓர் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[நேசமித்ரன் said...

சுண்டைக்காய் பயலாட்டம், ஒண்ணுக்கடித்தாலே வரைந்துவிடும் அளவுக்கு சின்ன நாடாக இருக்கும் இந்த இலங்கைக்கு எத்தனை தைரியம் இருந்தால் இத்தனை தமிழர்களை கொன்று குவித்திருப்பார்கள்..?//

வலி எல்லாம் மீறி இந்த வரியில் இருக்கும் குசும்பை ரசித்தேன் அண்ணே :)]]]

ஹி.. ஹி.. ஹி.. ஏதோ ஒரு ப்ளோல வந்திருச்சு..! எனக்கே இப்பத்தான் தோணுது..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

அதுக்குள்ள ஒரு திராவிடக் குஞ்சு மைனஸ் குத்திட்டு போயிருக்கு.
இந்தப் பதிவை படித்த பிறகும் உங்களுக்கு சொரனை வரவில்லை எனில் கவுண்டமணி அண்ணன்கிட்ட சொல்லித்தான் திட்ட சொல்லனும்.]]]

குத்தட்டும் செந்தில். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டல்லவா..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

1.இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. நீங்கள் ஓர் அரசியல்வாதியாக, கட்சியின் தலைவராக இருந்தால் மூன்றாவது தடவையும் அப்படியான ஒரு தவறை செய்வீர்களா?

(நன்றாக கவனிகக்வும் உங்களை அரசியல்வாதி என்று சொல்லிவிட்டேன்.)]]]

இல்லையே.. ஒரு முறைதானே.. 1989-ல் மட்டும்தானே இந்த ஒரு காரணத்துக்காக ஆட்சி கலைக்கப்பட்டது..!

ஆனாலும் இப்போதைய சூழல் வேறு குமார்.. பொம்மை வழக்கிற்கு பிறகு ஒரு மாநிலத்தின் ஆட்சியைக் கலைப்பது என்பது மத்திய அரசுக்கு பெரிய சவாலாகத்தான் அமைந்திருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் அது முடியாது..! தாத்தாவின் பயம்.. ஆட்சியில் இருந்து நாம் விலகக் கூடாது. பதவி பறி போய்விடக் கூடாது என்பதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

நான் எந்த திரட்டியிலும் இனையாதவன் என்பதால் எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமை இல்லை.

:)]]]

பரவாயில்லை. நன்றி சரவணக்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

இங்க ஓட்டு போட்டுட்டேன் அண்ணே. (தேர்தலில் ஓட்டு போட இயலாது) திமுக ஏன் வர கூடாது என்று நல்லா எழுதியிருக்கீறீங்க. ப்ல கருத்துகளில் அனவரும் உடன் படுவார்க்ள். பார்ப்போம். என்ன ஆகிறது என்று.]]]

ஊதுற சங்கை நாம ஊதிருவோம். அப்புறம் அவங்கதான் முடிவு செய்யணும்..!

நன்றி அகில்..!

உண்மைத்தமிழன் said...

[[[அவிய்ங்க ராசா said...

அண்ணே. அப்படியே யாருக்கு ஓட்டுப் போடணும். யாருக்கு ஓட்டுப் போட்டா, இந்தக் கொடுமையெல்லாம் நடக்காதுன்னு தெளிவா சொல்லிப்புட்டிங்கன்னா, வாக்காளர்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். உங்க பதிலை எதிர்பார்த்து, 10 கோடி ஜனங்களும் ஓட்டுப் போடாம வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.]]]

யாருக்கு போடக் கூடாதுன்னு தெளிவா சொல்லிட்டேன்..!

யாருக்குப் போடலாம்ன்றதை எப்படி சூஸ் பண்றதுன்னும் தெளிவா சொல்லிட்டேன் ராசா..

இதுக்கு மேல எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[ismailmohemed said...

ya. i agree that. But in the mainthing is apart from dmk ve should avoid congress first. Bcaz they are first enemy for true tamilians.]]]

அந்த காங்கிரஸுக்கு முட்டுக் கொடுத்து தூக்கி வைத்திருப்பது தி.மு.க.தானே.. அப்போ தி.மு.க.வை முதலில் சாத்துவதுதானே சரியானது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

பரீட்சைக்கு போகும் முன் ஒரு முறை பாடத்தை திருப்பி
பார்த்துவிட்டு போவது நல்லது என்பார்கள். அது போல
நீங்கள் தேர்தலுக்கு முன் முக்கியமான விஷயங்களை
திரும்பி பார்க்க வைத்துள்ளீர்கள். அந்த இறைசக்தியின் அருளினாலும் நம்முடன் சூக்குமுமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்களின் ஆசியினாலும் சிறப்பான ஆட்சியாளர்களை
நம் குடிமக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்
http://kanthakadavul.blogspot.com/]]]

உங்களுடைய எதிர்பார்ப்பு பலிக்கட்டும் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள நல்மனம் படைத்த தமிழ்குடி மக்களே! எப்படி நம் வீட்டை நிர்வாகம் செய்யும் நம் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் மிக கவனமாக இருப்போமோ அதை போலவே நம் நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பது மிக முக்கியம். ஆகவே நாம் அளிக்க போகும் ஒவ்வொரு வாக்கும் சரியானவர்களுக்கு பொய் சேர நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இதை படிப்பவர்கள் தன்னால் இயன்ற வரையில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், LIONS கிளப், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மேலும் வேறு எல்லா வகையுளும் இந்த கருத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை ஓர் வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன்.]]]

மிக்க நன்றி நண்பரே..! பரப்புரை நமக்கு மிகவும் முக்கியம்தான்..! தி.மு.க. கூட்டணி தோற்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களாகவே நான் சொல்லி வருகிறேன்.. இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு சங்கு ஊதினால்தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி பிறக்கும்..!

குரங்குபெடல் said...

அருமையான பதிவு . . . நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vidunka anne dmk vukku - vote pottiruppaanuka

ரிஷி said...

///ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!///

எதை விவரித்துக்கூற வேண்டுமோ அதை சுருக்கி ஒரு பத்தியில் அடைத்துவிட்டீர்கள். மற்றவை, வழக்கம்போல அதிரடிதான்!!

ரிஷி said...

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
என் கண்ணோட்டத்தில் பின்வருவபை:

1. தொகுதியின் பிரச்சினைகளை சரிசெய்யப்போவது யார்? குறைந்தபட்ச அளவிலேனும் நல்லது செய்பவர் யார்? குறைந்தபட்ச அளவிலேனும் பண்பாளராக இருக்கிறாரா?

இந்தக்கேள்விகளுக்கு "ஆம்" எனில் அவருக்கு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போட்டுவிடலாம் (அது யாராயினும் சரி! திமுகவோ அதிமுகவோ அல்லது வேறு எதுவோ! வேட்பாளர் சரியானவராக இருந்தால் போதும்)

2. வேட்பாளரைப் பற்றி கணிக்கத் தெரியவில்லை என்றால் கட்சி பார்த்து ஓட்டுப் போடவேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகிறோம். அந்த வகையில் பின்வரும் தரவரிசைப்படி வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட்கள், தேமுதிக, அதிமுக, வி.சி., பிற கட்சிகள், பாமக, திமுக, காங்கிரஸ்.

ரிஷி said...

ஈழப் பிரச்சினையைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளுமே தங்கள் பிரச்சாரத்தில் வாய் திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
ஈழத்தை தமிழக மக்கள் ஒரு பொருட்டாக கருதி வாக்களிப்பார்களா எனவும் தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கருணாநிதி சும்மா இருந்தார் என்று கூறுகிறோம். ஜெயாவும் கூடத்தான் சும்மா இருந்தார். ராமதாஸும் சும்மாதான் இருந்தார். இல.கணேசனும் சும்மாதான் இருந்தார். விஜயகாந்தும் சும்மாதான் இருந்தார். சீமான் மட்டுமே முழங்கிக்கொண்டிருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!

ரிஷி said...

இருக்கின்ற கொள்ளையர்களில் எவன் சின்னத் திருடன் என்பதைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அளவிற்கு நம் நிலைமை ஆகியிருப்பது வருந்தத்தக்க விஷயம். இந்நிலையில் மக்கள் புரட்சி வெடிக்கவேண்டுமெனில் அவர்கள் உள்ளுணர்வு நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். சிஸ்டமே மாறவேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

கழிவுநீர் வாய்க்காலில் குப்பையைக் கொட்டாதீர்கள். அது அடைத்துக் கொள்ளும். பதிலாக வீடு தேடி வரும் துப்புறவு பணியாளர்களிடம் குப்பையைக் கொடுங்கள் என ஊரேல்லாம் அறிவித்தும் மடத்தனமாக
மீண்டும் மீண்டும் வாய்க்காலிலேயே கொட்டும் மக்களுக்கு அவர்களைப் போன்ற கேனக்கிறுக்கன்களே தலைவர்களாக பரிணமிப்பர்.

ஆனந்தன் said...

அண்ணே காய்கறி விலை உயர்ந்து விட்டது என்று மட்டும் சொல்கிறீர்களே விவசைகளும் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு போதிய விலை இல்லாமல் அவஸ்தை படுகிறார்களே அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க

ரிஷி said...

மைனாரிட்டி அரசாக திமுக ஆட்சி செலுத்திய இந்த 5 ஆண்டு காலத்தில் இவ்வளவு கொள்ளை அடிக்க முடிகிறதென்றால், அதனை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காமல் விட்டுக்கொண்டிருக்கின்றன என்றால் எல்லாருக்கும் கொள்ளையில் பங்கு போகாமல் இல்லை. யாருக்கு பங்கு அதிகமா போச்சு, குறைவா போச்சு என்ற புலம்பலில்தான் எதிர்கட்சிகள் உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.

Ganpat said...

அன்புள்ள சரவணன்(உண்மை தமிழன்) மற்றும் ஏனைய நண்பர்கள் கவனத்திற்கு:
காவிரி மைந்தன் வலைத்தளத்தில் என் கருத்துக்களையும் பதிவிட்டிருக்கிறேன்.
தயை கூர்ந்து படிக்கவும்
நன்றி;வணக்கம்
http://vimarisanam.wordpress.com/2011/04/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/#comments

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்..
உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது..!!! மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஒட்டு போட்டு நல்லதொரு ஆட்சி வராதா?? என ஏங்குகிறேன்!!! வரும் என்ற நம்பிக்கையுடன் !!

Ganpat said...

சரவணன் சார்,

நீங்கள் இட்டிருப்பது பதிவல்ல

"ச த் தி ய ம்"

தமிழர்களுக்கு

உயிரை விட மேலானது

நேர்மை,மானம்,உண்மை

என்பதை நிரூபிக்க

13/4/11

ஒரு நன்னாள்

வாய்ப்பைத்தவற விடாதீர்கள்

முதியவருக்கு ஒய்வு கொடுங்கள்

பென்ஷன் கொடுங்கள்

ஆனால் மீண்டும் முதலமைச்சர் என்ற

டென்ஷன் கொடுக்காதீர்கள்

நன்றி

Jey said...

காங்ரஸ்+DMK இந்த வாட்டி அசிங்கமா தோக்கனும் அதுதான் டமிழ்நாட்டுக்கு நல்லது. ADMK சரியில்லைனா அடுத்தவாட்டி வீட்டுக்கு அனுப்பிக்கலாம்..

மு.சரவணக்குமார் said...

ராஜீவ் கொலையான போது திமுக பரிதாபமாய் தோற்றதைத்தான் இரண்டாவது முறையாக குறிப்பிட்டிருந்தேன்.

Prakash said...

From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

by வெற்றிவேல் - Part 1

மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..

இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..


என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..


என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.


பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்

இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..

அடுத்து ஊழல்..

ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.


தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?

Prakash said...

From http://avetrivel.blogspot.com/2011/04/blog-post_12.html

by வெற்றிவேல் - Part 2

இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..

இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்

நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?

சுருக்கமாக ஒன்று

ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..

நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.

இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்

jothi said...

அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

Prakash said...

யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?

ராஜேஷ், திருச்சி said...

//அந்த 2-வது மனைவி மீது அதிரடியாக ஒரு வழக்கு பாய்ந்தது. என்ன வழக்கு தெரியுமா..? பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக..! இது எப்படியிருக்கு..? 4 பில்லியன் சொத்துள்ள ஒருவரின் மனைவி கத்தியைக் காட்டி வழிப்பறி //

ஓ!!. நம்ம அம்மா காலத்துல செரினா , வளர்ப்பு மகன் மேலெல்லாம் போடப்பட்ட கஞ்சா வழக்கு போல..


//முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த நமது தமிழர்களின் ஆன்மா சாந்தியாகும்..!
அப்பப்ப உங்க திடீர் ஈழ பாசம் புல்லரிக்குது .. போர் என்றால் மக்கள் சாவார்கள் என்று சொன்ன அம்மா வாழ்க

//கூட்டணி தர்மத்தைக்கூட பொருட்படு்த்தாமல் பேசக் கூடிய தலைவர்கள் கம்யூனிஸ இயக்கத் தலைவர்கள்தான்//
உச்ச கட்ட காமெடி .. ஒரு வேலை காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்து , அதிமுகவோடு போய் இருந்தால் , இவர்கள் திடிரென அறிவாலய பாசம் காட்டி இருப்பார்கள்.. spectrum எல்லாம் அப்போ மறந்து போய் இருக்கும்..

அந்தம்மா வாசல் மிதிக்க மாட்டோம் நு தேமுதிக வாசல் ல பெட்டி கொடுத்த தா பா .. ஐயோ சிர்ரிப்ப வருது இப்போ
//பய உணர்வோடு ஆட்சி நடத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன்..!//
யாரு , அம்மாவா? ஐயோ ஐயோ . அம்மாக்கு பய உணர்ச்சியா .. நீங்க வேற.. காமெடி பண்ணாதீங்க.. அதான் ௧௦ வருஷம் பார்த்தோமே.. அதுவும் இப்போ கட்சி சசிகலா கைல தான் இருக்காமே

கபிலன் said...

இந்த மாதிரி ஆசாமிகள் வாய் கிழிய பேச தான் லாயக்கு... ஓட்டு போடுறது கிடையாது...அதனால அவங்க சொல்றது எல்லாம் முக்கியமே கிடையாது என்று சொல்லுகிறது அரசியல் வட்டாரம்.

இந்த தடவையாவது நம்ம அதை கொஞ்சம் மாத்தணும்.

thiagu1973 said...

இந்த கட்டுரையை நான் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்

அக்கப்போரு said...

எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வந்துரக் குடாது. அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட

அண்ணே இதுக்கு ப்ளஸ் ஒட்டு போட்டா அது ஆரிய மாயையானே # டவுட்டு

அக்கப்போரு said...

எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வந்துரக் குடாது. அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட

அண்ணே இதுக்கு ப்ளஸ் ஒட்டு போட்டா அது ஆரிய மாயையானே # டவுட்டு

அக்கப்போரு said...

உங்களோட விடாமுயற்சிக்கு உங்களுக்கு விசயம் சிலை வைக்கனும்ணே

Unknown said...

The people who supported DMK in the comments, do not have guts and clear conscience to say, DMK is clean. They bring JJ for comparison. By bringing JJ for comparison, they themselves are accepting, DMK is as unclean as ADMK. Also the Permabur Bridge they claim for DMK was started only by DMK long back. They did not complete it. To claim that as an achievement is indicates the thinking of the person who commented, to fill up the empty achievements page!!

VJR said...

நல்ல நகைச்சுவை. சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

வாழ்க அம்மா.
வாழ்க ஈழம்.
வாழ்க வைகோ.
வாழ்க சீமான்.

உண்மைத்தமிழன் said...

[[[udhavi iyakkam said...

அருமையான பதிவு. நன்றி]]]

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vidunka anne dmk vukku - vote pottiruppaanuka..]]]

போடக் கூடாது தம்பி..! தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///ஆகவே இந்த கம்யூனிஸ இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் இவர்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் போடுகின்ற ஓட்டு நிச்சயம் வீண் போகாது..!

மீதம் இருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்..! அதுவே போதும்..!///

எதை விவரித்துக் கூற வேண்டுமோ அதை சுருக்கி ஒரு பத்தியில் அடைத்துவிட்டீர்கள். மற்றவை, வழக்கம்போல அதிரடிதான்!!]]]

போது ரிஷி. நைட்டு லேட்டாயிருச்சு. காலைல ஆபீஸுக்கு வேற போகணுமேன்னு முடிச்சிட்டேன். இன்னும் நிறைய எழுதியிருக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
என் கண்ணோட்டத்தில் பின்வருவபை:

1. தொகுதியின் பிரச்சினைகளை சரி செய்யப் போவது யார்? குறைந்தபட்ச அளவிலேனும் நல்லது செய்பவர் யார்? குறைந்தபட்ச அளவிலேனும் பண்பாளராக இருக்கிறாரா?

இந்தக் கேள்விகளுக்கு "ஆம்" எனில் அவருக்கு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போட்டுவிடலாம் (அது யாராயினும் சரி! திமுகவோ அதிமுகவோ அல்லது வேறு எதுவோ! வேட்பாளர் சரியானவராக இருந்தால் போதும்)]]]

இந்த நேரத்தில், இந்தத் தேர்தலில் நான் இதனை சிறிதளவு மறுக்கிறேன். தி.மு.க. வேட்பாளர் ஜெயிக்கக் கூடாது.. அக்கட்சியை தோற்கடிப்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கே நல்லது..!

[[[2. வேட்பாளரைப் பற்றி கணிக்கத் தெரியவில்லை என்றால் கட்சி பார்த்து ஓட்டுப் போடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். அந்த வகையில் பின்வரும் தர வரிசைப்படி வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட்கள், தேமுதிக, அதிமுக, வி.சி., பிற கட்சிகள், பாமக, திமுக, காங்கிரஸ்.]]]

ஓகே.. இதில் அதிமுக கூட்டணியோடு நிறுத்திக் கொள்ளலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஈழப் பிரச்சினையைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளுமே தங்கள் பிரச்சாரத்தில் வாய் திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
ஈழத்தை தமிழக மக்கள் ஒரு பொருட்டாக கருதி வாக்களிப்பார்களா எனவும் தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கருணாநிதி சும்மா இருந்தார் என்று கூறுகிறோம். ஜெயாவும் கூடத்தான் சும்மா இருந்தார். ராமதாஸும் சும்மாதான் இருந்தார். இல.கணேசனும் சும்மாதான் இருந்தார். விஜயகாந்தும் சும்மாதான் இருந்தார். சீமான் மட்டுமே முழங்கிக் கொண்டிருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!]]]

நானும் கவனிக்காமல் இல்லை..! அதனால்தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதாவைக் குறிப்பிடவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இருக்கின்ற கொள்ளையர்களில் எவன் சின்னத் திருடன் என்பதைப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அளவிற்கு நம் நிலைமை ஆகியிருப்பது வருந்தத்தக்க விஷயம். இந்நிலையில் மக்கள் புரட்சி வெடிக்கவேண்டுமெனில் அவர்கள் உள்ளுணர்வு நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். சிஸ்டமே மாறவேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.]]]

நாம்தான் சுய லாபத்துடன் இருக்கிறோமே..? என்றைக்கு நமது மக்கள் திருந்துவது..?

[[[கழிவுநீர் வாய்க்காலில் குப்பையைக் கொட்டாதீர்கள். அது அடைத்துக் கொள்ளும். பதிலாக வீடு தேடி வரும் துப்புறவு பணியாளர்களிடம் குப்பையைக் கொடுங்கள் என ஊரேல்லாம் அறிவித்தும் மடத்தனமாக
மீண்டும் மீண்டும் வாய்க்காலிலேயே கொட்டும் மக்களுக்கு அவர்களைப் போன்ற கேனக்கிறுக்கன்களே தலைவர்களாக பரிணமிப்பர்.]]]

ஹா.. ஹா.. சரியான சாபம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆனந்தன் said...

அண்ணே காய்கறி விலை உயர்ந்து விட்டது என்று மட்டும் சொல்கிறீர்களே விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு போதிய விலை இல்லாமல் அவஸ்தைபடுகிறார்களே அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.]]]

இது பற்றி அக்குவேறு, ஆணிவேறாகப் பேசுமளவுக்கு எனக்கு அறிவில்லை ஆனந்த்..!

நீங்கள் சொல்லுங்கள். நான் தெரிந்து கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

மைனாரிட்டி அரசாக திமுக ஆட்சி செலுத்திய இந்த 5 ஆண்டு காலத்தில் இவ்வளவு கொள்ளை அடிக்க முடிகிறதென்றால், அதனை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காமல் விட்டுக்கொண்டிருக்கின்றன என்றால் எல்லாருக்கும் கொள்ளையில் பங்கு போகாமல் இல்லை. யாருக்கு பங்கு அதிகமா போச்சு, குறைவா போச்சு என்ற புலம்பலில்தான் எதிர்கட்சிகள் உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.]]]

காங்கிரஸ் கட்சிக்குள் இந்தப் பங்குத் தொகையில்தான் மாபெரும் சிக்கல்..! கருணாநிதியை குளிர்வித்தவர்கள் அவரால் குளிர் காய்ந்துவிட்டார்கள். மற்றவர்கள்தான் கடுப்பி்ல உள்ளார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

அன்புள்ள சரவணன்(உண்மை தமிழன்) மற்றும் ஏனைய நண்பர்கள் கவனத்திற்கு:

காவிரி மைந்தன் வலைத்தளத்தில் என் கருத்துக்களையும் பதிவிட்டிருக்கிறேன்.
தயை கூர்ந்து படிக்கவும்
நன்றி;வணக்கம்]]]

படிக்கிறேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்..
உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது..!!! மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஒட்டு போட்டு நல்லதொரு ஆட்சி வராதா?? என ஏங்குகிறேன்!!! வரும் என்ற நம்பிக்கையுடன் !!]]]

இதே எண்ணத்துடன் வாக்களியுங்கள். உங்களது வீட்டில் உள்ளவர்களையும் வாக்களிக்க வையுங்கள். அதுவே போதும்..!

உண்மைத்தமிழன் said...

கண்பத் ஸார்..

தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி..

தாத்தாவை வீட்டில் ரெஸ்ட் எடுக்க வைக்கத்தான் நானும் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jey said...

காங்ரஸ்+DMK இந்த வாட்டி அசிங்கமா தோக்கனும். அதுதான் டமிழ்நாட்டுக்கு நல்லது. ADMK சரியில்லைனா அடுத்தவாட்டி வீட்டுக்கு அனுப்பிக்கலாம்.]]]

கரீக்ட்டு.. இதைத்தான் நானும் விரும்புறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

ராஜீவ் கொலையானபோது திமுக பரிதாபமாய் தோற்றதைத்தான் இரண்டாவது முறையாக குறிப்பிட்டிருந்தேன்.]]]

ஓ.. எனக்குத்தான் சரியாகப் புரியவில்லையா..?

உண்மைத்தமிழன் said...

[[[தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?]]]

இதற்காக இவர்கள் அரசு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை..!

வெற்றிவேல் ஸாருக்கு.. கொள்ளையடிப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை போலும்.. அவருக்கு கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் என்று நினைக்கிறார். அந்தப் பிச்சையே எங்களுக்குத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்..! இந்தக் கயவர்கள் இனி இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான்.. கோட்டையில் அல்ல..

உண்மைத்தமிழன் said...

[[[ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்

ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒருபுறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..]]]

பிரகாஷ் ஸார்..

இரண்டு ஊழல்களுமே வேண்டாம் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[jothi said...

அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை.]]]

மிக்க நன்றி ஜோதி ஸார்..!

மீதியாக நீங்கள் எழுதியிருப்பதற்கு நான் பதில் சொன்னால் இத்தனை நாட்கள் வலைப்பதிவில் நான் எழுதியிருப்பதெல்லாம் வீணாகப் போனதாகத்தான் அர்த்தம்..!

அரசியல் என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் பதிவுகள் அனைத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி. வணக்கம்..!

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் பிரகாஷ்..

எல்லாம் சரிதான்..!

ஈரோடு மாவட்டச் செயலாளர் ராஜாவால் தாக்கப்பட்ட அந்த இளைஞரின் நிலையில் நீங்கள் இருந்து பாருங்கள்..!

இந்த ஆட்சியாளர்களின் அயோக்கியத்தனமும் தெரியும்..!

பை தி பை.. நீங்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் யாராவது அம்மா தொண்டரிடம் அனுப்பி வையுங்கள். அவர் உங்களுக்கு பதில் அனுப்பி வைப்பார்..!

உண்மைத்தமிழன் said...

ராஜேஷ்...

பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடுவது எப்போது நிறுத்தப் போகிறீர்கள்..!

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறேன். அதனை மட்டும் படித்துவிட்டு பொட்டியை மூடிட்டுப் போங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[கபிலன் said...

இந்த மாதிரி ஆசாமிகள் வாய் கிழிய பேசத்தான் லாயக்கு. ஓட்டு போடுறது கிடையாது. அதனால அவங்க சொல்றது எல்லாம் முக்கியமே கிடையாது என்று சொல்லுகிறது அரசியல் வட்டாரம். இந்த தடவையாவது நம்ம அதை கொஞ்சம் மாத்தணும்.]]]

நாம கொடுக்குற குடுல்ல.. அடுத்து வர்றவங்களுக்கு பயம் வரணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தியாகு said...
இந்த கட்டுரையை நான் ஆமோதிக்கிறேன். ஆமோதிக்கிறேன். ஆமோதிக்கிறேன்.]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...

எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வந்துரக் குடாது. அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட..]]

ஐ சல்யூட் டூ யூ ராஜா..!

[[[அண்ணே இதுக்கு ப்ளஸ் ஒட்டு போட்டா அது ஆரிய மாயையானே # டவுட்டு.]]]

நோ.. அப்படிச் சொல்றவன் ஒண்ணாம் நபர் முட்டாள்.. நோ பீலிங் ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...

உங்களோட விடாமுயற்சிக்கு உங்களுக்கு விசயம் சிலை வைக்கனும்ணே.]]]

ச்சே.. அதெல்லாம் எதுக்கு..? தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடாமல் இருந்தாலே போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[orkut said...

The people who supported DMK in the comments, do not have guts and clear conscience to say, DMK is clean. They bring JJ for comparison. By bringing JJ for comparison, they themselves are accepting, DMK is as unclean as ADMK. Also the Permabur Bridge they claim for DMK was started only by DMK long back. They did not complete it. To claim that as an achievement is indicates the thinking of the person who commented, to fill up the empty achievements page!!]]]

இரண்டு பேருமே இப்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கொள்ளைக்காரர்கள்தான்..!

இதனை ஜெயலலிதா ஒத்துக் கொள்ளும் அளவுக்கு தி.மு.க.வினர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..!

விடுங்க.. விடுங்க.. போய்த் தொலையட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...

நல்ல நகைச்சுவை. சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

வாழ்க அம்மா.
வாழ்க ஈழம்.
வாழ்க வைகோ.
வாழ்க சீமான்.]]]

மே 13-வரையிலும் இது போலவே சிரித்தபடியே இருங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html]]]

ம்.. படிக்கிறேன் அருள்..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மக்கள் யோசிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.

அக்கப்போரு said...

ஐ சல்யூட் டூ யூ ராஜா..!

அண்ணே இதுக்கு எதுக்குண்ணே சல்யூட்டேல்லாம்.பஸ் டிக்கட் போக வர 1500 . ஆனாலும் பரவால்ல. செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நான் போடுற ஓட்டு இருக்கட்டும்.

thulirgal said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

Ashok said...

Tamil FM's Online..
http://tamillovesms.blogspot.com/

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஏற்கனவே நான் மறந்தும் கூட மக்கள் விரோத கழகத்துக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று தான் இருந்தேன். அதற்கு காரணம் நமது விகடன். அவங்களோட யோக்கியதை(அவனுங்க தான்) வாரந்தோறும் புட்டு, புட்டு வைச்சாங்க. இப்ப அவங்க(விகடன்) பண்ண சமூக சேவையை(!?) நீங்களும் செஞ்சுட்டதால சத்தியமா நாட்டையே கொள்ளையடிக்க நினைக்கிற அந்தக் குடும்பத்துக்கு எங்க குடும்பத்துல இருந்து ஒரு ஓட்டுக் கூட விழாது! இப்ப உங்களுக்கு திருப்தியா சார்?

AK said...

IPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/

அ. வேல்முருகன் said...

இருக்கிற அமைப்புல எந்த குடும்பம் ஆட்சிக்கு வந்தாலும் கொள்கைய கடைபிடைக்க போறாங்களா கொள்ளை அடிக்க போறாங்களா

திருவாரூர் குடும்பம் ஆனாலும்
மன்னார்குடிகுடும்பம் ஆனாலும்
நேருவோட குடும்பம் ஆனாலும்

ஊழல் செய்ததே இல்லை அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. தமிழோ தமிழனோ தனக்கு தேவையென்றால் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான் மேற்கண்ட குடும்பங்களுக்கு

எந்த குடும்பம் வந்தாலும் நம்ம குடும்பம் நிலை மாற போறதில்லை

ஆனா உங்களை மாதிரி ஆட்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாத்தி மாத்தி ஆளை காண்பிக்கும் தொழிலை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கும் ஒரு 45 பேரை பிடித்து வைத்திருக்கிறீர்கள்

செ.சரவணக்குமார் said...

உங்கள் பதிவோடு எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால்..
//வெற்றிவேல் ஸாருக்கு.. கொள்ளையடிப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை போலும்.. அவருக்கு கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் என்று நினைக்கிறார்.//

இப்படி ஒரு பிரயோகம் தேவையா? தனிமனித துவேஷத்தைத் தவிர்த்து கருத்துக்களோடு மட்டும் மோதும் நேர்மை உங்களுக்கும் இல்லாது போய்விட்டது வருத்தமாக இருக்கிறது. ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் பேசுவது தவறு. வெற்றி சார் வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட மூத்தவர். அவரது கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அதற்காக உடனே அவர் மீது ஒரு கழகக்கண்மணி சாயம் பூசி கேவலமான வார்த்தைகளை எழுதுவீர்களா? கடுமையாக கண்டிக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Rathnavel said...

நல்ல பதிவு. மக்கள் யோசிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.]]]

மிக்க நன்றிகள் ரத்னவேல் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...

ஐ சல்யூட் டூ யூ ராஜா! அண்ணே இதுக்கு எதுக்குண்ணே சல்யூட்டேல்லாம். பஸ் டிக்கட் போக வர 1500 . ஆனாலும் பரவால்ல. செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நான் போடுற ஓட்டு இருக்கட்டும்.]]]

இந்த வார்த்தைகளுக்காக இன்னுமொரு சல்யூட் ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[thulirgal said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html]]]

எத்தனை இடத்துலதான் இதைப் போடுவீங்க பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ashok said...

Tamil FM's Online..
http://tamillovesms.blogspot.com/]]]

நன்றி அசோக்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஏற்கனவே நான் மறந்தும்கூட மக்கள் விரோத கழகத்துக்கு ஓட்டுப் போடக்கூடாது என்றுதான் இருந்தேன். அதற்கு காரணம் நமது விகடன். அவங்களோட யோக்கியதை(அவனுங்கதான்) வாரந்தோறும் புட்டு, புட்டு வைச்சாங்க. இப்ப அவங்க(விகடன்) பண்ண சமூக சேவையை(!?) நீங்களும் செஞ்சுட்டதால சத்தியமா நாட்டையே கொள்ளையடிக்க நினைக்கிற அந்தக் குடும்பத்துக்கு எங்க குடும்பத்துல இருந்து ஒரு ஓட்டுக் கூட விழாது! இப்ப உங்களுக்கு திருப்தியா சார்?]]]

ரொம்ப திருப்தி ஸார்.. மிக்க நன்றி. நாட்டுக்கு ஒரு நல்லது செய்யுறீங்க..!

உண்மைத்தமிழன் said...

மில்லினியர் ஸார்..!

தங்களுடைய தொடர்ந்த சேவைக்கு எனது பல நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வேல்முருகன் அருணாசலம் said...

இருக்கிற அமைப்புல எந்த குடும்பம் ஆட்சிக்கு வந்தாலும் கொள்கைய கடைபிடைக்க போறாங்களா கொள்ளை அடிக்க போறாங்களா

திருவாரூர் குடும்பம் ஆனாலும்
மன்னார்குடிகுடும்பம் ஆனாலும்
நேருவோட குடும்பம் ஆனாலும்

ஊழல் செய்ததே இல்லை அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. தமிழோ தமிழனோ தனக்கு தேவையென்றால் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான் மேற்கண்ட குடும்பங்களுக்கு

எந்த குடும்பம் வந்தாலும் நம்ம குடும்பம் நிலை மாற போறதில்லை
ஆனா உங்களை மாதிரி ஆட்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாத்தி மாத்தி ஆளை காண்பிக்கும் தொழிலை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கும் ஒரு 45 பேரை பிடித்து வைத்திருக்கிறீர்கள்.]]]

இப்படியே நீங்கள் நினைத்துக் கொண்டேயிருந்தால் இந்த நாட்டுக்கு விடிவே கிடையாது..!

உண்மைத்தமிழன் said...

[[[செ.சரவணக்குமார் said...

//வெற்றிவேல் ஸாருக்கு.. கொள்ளையடிப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை போலும்.. அவருக்கு கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் என்று நினைக்கிறார்.//

இப்படி ஒரு பிரயோகம் தேவையா? தனி மனித துவேஷத்தைத் தவிர்த்து கருத்துக்களோடு மட்டும் மோதும் நேர்மை உங்களுக்கும் இல்லாது போய்விட்டது வருத்தமாக இருக்கிறது. ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பேசுவது தவறு. வெற்றி சார் வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட மூத்தவர். அவரது கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அதற்காக உடனே அவர் மீது ஒரு கழகக் கண்மணி சாயம் பூசி கேவலமான வார்த்தைகளை எழுதுவீர்களா? கடுமையாக கண்டிக்கிறேன்.]]]

மன்னி்க்கணும் நண்பரே.. வெற்றிவேல் ஸார் எனக்கும் தெரிந்தவர்தான்..

நான் "பிச்சை" என்று சொன்னது "மக்களுக்கு போடும் நிதி உதவி"களைத்தான் சொன்னேன் என்பது அவருக்கே புரியும்.. அவரைக் குறி வைத்துச் சொல்லவில்லை..!

அவரைக் கழகக் கண்மணியாக நான் இதில் உருவகப்படுத்தவில்லையே..? பின்பு நீங்கள் ஏன் டென்ஷனாகுகிறீர்கள். கூல் சரவணக்குமார்..!

அ. வேல்முருகன் said...

எப்படி நினைத்தால் விடிவு பிறக்கும் என்று சொல்ல வேண்டும்.

உங்களை மாதிரி மாறி மாறி ஓட்டு போட்டு ஊழலை ஒழிக்க முடியுமா இல்லை ஈழ தமிழனின் வாழ்வை சரி செய்ய முடியுமா?

செ.சரவணக்குமார் said...

உங்கள் உருவகங்கள், உவமைகள், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் போன்றவைகளைப் புரிந்துகொள்ளாதது என் தவறுதான். மன்னியுங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[வேல்முருகன் அருணாசலம் said...

எப்படி நினைத்தால் விடிவு பிறக்கும் என்று சொல்ல வேண்டும். உங்களை மாதிரி மாறி மாறி ஓட்டு போட்டு ஊழலை ஒழிக்க முடியுமா இல்லை.. ஈழ தமிழனின் வாழ்வை சரி செய்ய முடியுமா?]]]

பெருவாரியான மக்களின் விருப்பத்திற்கெதிராக நடந்தால் ஓட்டுக்கள் கிடைத்து என்று பயமுறுத்தி நாம் விரும்பியதை அடையலாம்..! வேறென்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[செ.சரவணக்குமார் said...

உங்கள் உருவகங்கள், உவமைகள், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் போன்றவைகளைப் புரிந்து கொள்ளாதது என் தவறுதான். மன்னியுங்கள்.]]]

நீங்களும் என்னைப் புரிந்து கொள்ளாதது குறித்து எனக்கும் வருத்தம்தான்..!

vels-erode said...

Total Nonsense.................

Dhaarvi said...

Naam DMK kootaniyai thorkadika ADMK aatharithuthaan aaga vendum