ம.க.இ.கழகத்தினரின் அராஜக கம்யூனிஸம்..!

16-04-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலிலேயே ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். லீனா மணிமேகலையின் அந்த இரண்டு கவிதைகளிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. அவர் சொல்ல வந்த கருத்தும், சொல்லிய விதமும் முற்றிலும் தவறு என்பது எனது கருத்து.

தமிழில் எத்தனையோ நல்ல, நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. சொற்றொடர்களும், அலங்காரச் சொற்களும் கவிஞர்களுக்காக காத்திருக்கும்போது தங்களது உடல் அவயங்களை முன் வைத்து, அவற்றை வெளிப்படுத்தி எழுதிதான் ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்தவேண்டும் என்கிற அவசியமில்லை. லீனா இந்த விஷயத்தில் சற்று யோசித்திருக்கலாம். இது மாதிரியான நிறைய 'லாம்'களை நம்மால் போட முடியும்!

ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.

அதே சமயம், லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்துக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியில், அருமையிலும் அருமையான நமது சக தோழர்களான மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் நடத்திய அராஜகப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும்.

இந்த ம.க.இ.க.-வினரை பற்றி நான் முதன் முதலில் அடையாளம் கண்டது மதுரையில்தான். என் அப்பன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்திற்கு சென்று அவனைத் தரிசித்துவிட்டு திரும்பும்போது அன்றைய நாளில் அந்த வட்டாரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த 'ம.க.இ.கழகத்தினரின் கலை விழா' என்ற போஸ்டரில்தான் இவர்களது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதுவும் எனது அப்பனால்.. ரொம்ப சந்தோஷம்.. அந்தக் கலைவிழாவில் அவர்கள் நடத்திய கூத்தும், தப்பாட்டமும், அப்போதே என்னைக் கவர்ந்துதான் இருந்தது.

அதே கூத்தையும், தப்பாட்டத்தையும் வேறு வடிவில் பல வருடங்களுக்குப் பிறகு அருமைத் தம்பி முத்துக்குமாரின் இறுதி ஊர்வல தினத்தன்றுதான் பார்த்தேன். அந்த ஊர்வலத்தில் இந்த அமைப்பினர் காட்டிய எதிர்ப்புகள், எழுப்பிய கோஷங்களை எனது அந்தப் பதிவில் நான் பதிவு செய்திருக்கிறேன். சுடுகாடுவரையிலும் ஒருவர் மாற்றி ஒருவர் தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கத்திக் கொண்டே வந்ததை நான் இன்றைக்கும் ஆச்சரியத்துடன்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த அளவுக்கான பொது நலன்களில் அவர்கள் எடுக்கின்ற அக்கறை எப்படி, எந்த வடிவத்தில் அவர்களை ஆட்கொள்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்த அமைப்பினர்தான் தமிழ் வலையுலகில் தற்போது ஆளே இல்லாத கிரவுண்ட்டில் கோல் போடும் வினவு டீம் என்பதே என் மரமண்டைக்கு மிகச் சமீபத்தில்தான் தெரிந்தது..

இவர்களுடைய ஒரு பக்கத்தை முத்துக்குமாரின் மரணத்தின்போது பார்த்து பிரமித்துப் போயிருந்த எனக்கு இவர்களது இன்னொரு பக்கத்தை எழும்பூர் இக்சா அரங்கில் அன்றைக்குப் பார்த்தபோது வெறுப்பாகிவிட்டது.

ஒருவர் சொல்கிற கருத்தில் உங்களுக்கு ஆட்சேபணையிருந்தால் எதிர்ப்பைக் காட்ட வேண்டியதுதான்.. தப்பில்லை.. அது எழுத்தாக இருந்தால் எழுத்திலேயே எதிர்ப்பைக் காட்டுவதுதான் மிகச் சிறந்த பதிலடி.

கூட்ட அழைப்பில் தெளிவாகச் சொல்லித்தான் அழைத்திருக்கிறார்கள். "லீனா மணிமேகலையின் கவிதைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கூட்டப்பட்டிருக்கும் ஒன்றுகூடல்" என்று அனைவருக்கும் புரிந்தாற்போலத்தான் இருந்தது.

லீனாவின் கவிதையை கடந்த மாதமே கொத்து புரோட்டா போட்டு சலிக்கின்றவரையில் சாப்பிட வைத்திருக்கும் ம.க.இ.கழகத்தினரும், வினவும் போதாததற்கு அதற்குப் பிறகும் இரண்டு முறை அதே போன்று பதிவெழுதி தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். இதுவரையிலும் சரி..

இதேபோல் லீனாவின் கூட்டத்திற்கு மறுநாள் அதே இக்சா அரங்கத்தில் நமது தோழர்கள் எதிர்ப்பாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி அதிலே தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் மிக, மிக சந்தோஷமாக இருந்திருக்கும்.

அதைவிட்டுவிட்டு எதிர்ப்புக் கூட்டத்திலேயே நேருக்கு நேராக பதில் சொல்கிறோம் என்று அழைக்காமலேயே வந்திருந்து கூட்டத்தை நடத்தவிடாமல் கூச்சலையும், குழப்பத்தையும் உண்டு செய்து கடைசியாக அவர்கள் சாதித்ததுதான் என்ன..? பூஜ்யம்.

ஆனால், தோழர்களின் அட்டாக் முறையை கவனத்துடன் பாருங்கள்..

வரும்போதே பக்காவான திட்டத்தோடுதான் வந்தார்கள் தோழர்கள். அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மூலைக்கு ஒருவராக போய் அமர்ந்தார்கள். யாரும், யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. வெளி ஆட்களுக்கு யாரோ சிலர் தனித்தனியாக வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தெரியும்..!

யார் முதலில் எழுந்து பேசுவது.. அதன் பிறகு அவருக்கு யார் துணை செய்வது..? எப்படி பேச வேண்டும்..? எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று அனைத்தையும் திட்டமிட்டு வந்திருந்தது பின்னால்தான் தெரிந்தது. கோஷங்களைகூட முன்கூட்டியே தயார் செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள் தோழர்கள்.. அடடா.. என்ன ஒரு பிளானிங்..?(முருகன்களா கோச்சுக்காதீங்க..!)

முன் வரிசையில் இரண்டு பேர்.. நடுவரிசையில் பெண்கள் அமைப்பினர் ஒரு ஆறு பேர்.. நடு வரிசையில் ஒருவர். அவருக்குப் பின் ஒருவர்.. அரங்கத்தின் மூலையில் இரண்டு பேர்.. கடைசி வரிசையில் எனக்குப் பின்பு இரண்டு பேர்.. எங்களுக்கு முன் வரிசையில் இரண்டு பேர்.. இது அனைத்துமே ஒரு பக்கத்தில்தான்.. அதாவது அரங்கத்தின் இடது பக்கம் முழுவதும் தோழர்களின் ராஜ்ஜியம்தான்.. வலது பக்கம் முழுவதும் ஆதரவாளர்கள் ராஜ்ஜியம்!

எழுந்து பேசும்போதும் அதே டெக்னிக்தான். முதலில் ஒரே ஒருவர் பேசத் துவங்கினார். பின்பு அடுத்த முறை இன்னும் இரண்டு பேர் எழுந்தார்கள். அதற்கடுத்த முறை இன்னும் 3 பேர் எழுந்தார்கள். பேச்சு முற்றி ஆதரவாளர்களின் எண்ணிக்கைகூட கூட நம்ம தோழர்களின் கூட்டமும் வேகவேகமாக எழுந்தது..

அடுத்து ஆதரவுக் கூட்டத்தில் இரண்டு பெண்கள் தங்களது கருத்தை வாதாடத் துவங்க.. அதுவரையில் பொறுமையுடன் காத்திருந்த ம.க.இ.க. தோழியர்கள் அவர்களுடன் பதிலுக்கு பதில் வாதாடத் துவங்க.. எண்ணிக்கை இரண்டு மட்டத்திலும் சம அளவாக இருப்பது கடைசியில்தான் தெரிந்தது..

என்ன ஒரு பக்காவான ஸ்கிரிப்ட்டு..? கொன்னுட்டாங்க போங்க..! மணிரத்னம் அடுத்த படத்துக்கு திரைக்கதையில் ஏதாவது உதவி தேவையெனில் நமது தோழர்களைத் தாராளமாக அணுகலாம்.

முதலில் வரவேற்புரை நிகழ்த்திவிட்டு பேராசிரியர் ராஜன்குறையை பேச அழைத்தார் அ.மார்க்ஸ். அனர்த்தத்தை உடனேயே ஆரம்பித்தார்கள் தோழர்கள். “பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்..” என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.

இந்த இடத்தில் அ.மார்க்ஸை பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும். இவர்களது அரிச்சுவடியை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்ததால் இவர்களது முகத்தைப் பார்த்தவுடனேயே மருவாதைக்கு காவல்துறைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டார்போலும். இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் வந்திருந்தார்கள். வாசல் அருகேயே நின்று கொண்டு அனைத்தையும் கவனித்தபடியேதான் இருந்தார்கள்.

மார்க்ஸ் முதலில் ஜனநாயக ரீதியாக தன்மையாகத்தான் பேசினார். "நாங்க எல்லாரும் பேசி முடிச்சுக்குறோம். கடைசியா நீங்க கேக்க வேண்டியதையெல்லாம் கேளுங்க.. பேச வேண்டியதையெல்லாம் பேசலாம்.. வாய்ப்பு தர்றோம்.." என்றார். இந்த கோல்டன் சான்ஸை தோழர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, "உடனேயே பேச வேண்டும்.. இப்போதே பேசணும்.. எங்க சந்தேகத்துக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் பேச வேண்டும்" என்று அடம் பிடித்ததே இவர்கள் வந்த நோக்கம் என்னவென்பதை பறை சாற்றிவிட்டது.

நல்லதொரு வாய்ப்பை அவர்களாகவே கெடுத்துக் கொண்டார்கள். கடைசியாகப் பொறுமையுடன் காத்திருந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். பேசவே கூடாது என்று மார்க்ஸும், கூட்டத்தினரும் சொல்லவே இல்லை. "கடைசியா பேசுங்க ஸார்.. இப்ப குறுக்கிடாதீங்க.. நிறைய பேர் இருக்காங்க.. 9 மணிக்குள்ள கூட்டத்தை முடிக்கணும்னு ரூல்ஸ் இருக்கு" என்றெல்லாம் சொன்னார்கள். யார் கேட்டா..?

அரைகுறை மனதோடு அமர்ந்தார்கள் தோழர்கள். ராஜன் குறை பேச்சைத் துவக்கினார். எடுத்த எடுப்பிலேயே தெள்ளத் தெளிவாகச் சொன்னார், "இந்தக் கூட்டம் லீனாவின் கவிதைக்கான ஆதரவுக் கூட்டம் அல்ல.. லீனாவின் கவிதையில் இங்கு பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனால் அவரது கவிதையில் உடன்பட்டுத்தான் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். லீனா எழுதுவதை தடை செய்யுமளவுக்குச் சென்றிருக்கும் ஒரு நடவடிக்கையைக் கண்டித்துதான் இந்தக் கூட்டம்...” என்று தோழர்களைக் கணக்கில்வைத்துதான் ராஜன் கூறினார்.

அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை.. யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்குக் கூச்சலும், குழப்பமுமாக ஆள் மாற்றி ஆள் முறை வைத்துப் பேசினார்கள் தோழர்கள். திடீரென்று அவர்களே சட்டென்று அமர்ந்தார்கள்.

பின்பு மார்க்ஸ் அவர்களை கூல் செய்யும்விதமாக பேசிவிட்டு அடுத்தவரை பேச அழைக்க மறுபடியும் எழுந்தார்கள் தோழர்கள். இது 'விளையாட்டு'தான் என்பது எல்லோருக்குமே புரிந்தது. ஆனாலும் மார்க்ஸ் வயதில் பெரியவர்.. அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள். இவர்களும் பதிலுக்குப் பேச்சுக் குறைவில் இறங்க.. கொஞ்சம் கொஞ்சமாக அரங்கத்தில் சரோஜாதேவி புத்தக வார்த்தைகளெல்லாம் சரளமாக புழங்க ஆரம்பித்தன. பாவம் தமிழன்னை.. அவளுக்கு நேர்ந்த கொடுமை..! நேற்று மட்டும் தோழர்கள் பேசியதைக் கேட்டிருந்தால் கூவத்தில் விழுந்தே செத்திருப்பாள்.

அதுவரையில் என் வரிசையில் அமைதியாக பார்வையாளரைப் போல் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு தோழர் சட்டென்று ஏதோ ஆவேசம் வந்தவரைப் போல் லீனாவின் கவிதைக்கு கோனார் உரை நிகழ்த்தத் துவங்கினார். 'செந்தமிழ்' இவரது நாவில் தாண்டவமாடியது.

இவருடன் ஒரு பார்வையாளர் மல்லுக் கட்டத் துவங்க.. திடீரென்று எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு தோழர் எழுந்து தனது தோழருக்கு ஆதரவாகப் பேச திக்கென்றானது எங்களது பகுதியில் இருந்தவர்களுக்கு.. "ஆஹா.. தோழர்கள் நமக்கே பிலிம் காட்டுறாங்கப்பா.." என்று இடத்தைக் காலி செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக லீனாவின் ஆதரவாளர்களை பெரும்பாடுபட்டு அடக்கிய மார்க்ஸ், தோழர்களில் ஒருவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் நேரம் 2 நிமிடம் மட்டும்தான் என்று சொல்லித்தான் கொடுத்தார்.

பேசியவரோ, கைகளில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு "இதில் ஏழு கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எங்களுக்கு பதில் வேண்டும்" என்றவர், இந்தக் கூட்டத்துக்கு வந்ததற்கான ஒரு காரணத்தை முன் வைத்தார்.

லீனா தனது வலைத்தளத்தில் இந்தக் கூட்ட அழைப்பை பதிவு செய்யும்போது அதற்கான பிளாக்கர் லேபிளில் 'வினவு, ம.க.இ.க.' என்று எழுதிவிட்டாராம். எனவே இது தங்களுக்கான எதிர்ப்பு என்பது தெரிந்ததாலேயே இங்கே நேரில் வந்ததாகச் சொன்னார்.

இது எல்லாருமே வழக்கமாகச் செய்வதுதான். நானும் இந்தப் பதிவிற்கான லேபிளில் அதேபோல்தான் செய்வேன். இது படிப்பவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் எளிதாக இருப்பதற்காகத்தானே.. அவர்களைப் பற்றி எழுதியிருப்பதால் நேரில் போய் சண்டையிடுவதா..? இது சரின்னு பார்த்தா வலையுலகத்துல ஒருத்தராவது அடுத்த போஸ்ட் போட முடியுமா..? ம்.. என்னமோ போங்க..!

பேசிய இந்தத் தோழராவது சரியாகப் பேசியிருக்கலாம். இந்து மக்கள் கட்சியை எதிர்த்தும், குஜராத்தில் முஸ்லீம் பெண்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பேசியவர் சட்டென்று டிராக் மாற்றி லீனாவிடம் ஒரு கேள்வி கேட்பதாகச் சொல்லி ஒரு 'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர.. ஆதரவுக் கூட்டமும் அவர்களை நெருக்க.. அமர்ந்திருந்த ஒட்டு மொத்தத் தோழர்களின் கூட்டமும் மேடைக்கு ஓடியது..

அப்புறம் நடந்ததெல்லாம் தூர்தர்ஷன்ல வர்ற டிவி சீரியல் மாதிரிதான். கேமிராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திட்டு கேமிராமேன் தூங்கப் போயிருவாரு.. வசனம் பேச வேண்டியவங்களெல்லாம் கேமிரா முன்னாடி வந்து பேசிட்டுப் போயிருவாங்க.. 'டாக்கிங் போர்ஷன் முடிஞ்சிருச்சு'ன்னு கேமிராமேன்கிட்ட வந்து சொன்ன பின்னாடி கேமிராமேன் எந்திரிச்சு வந்து கேமிராவை ஆஃப் பண்ணிட்டு ஸ்டேண்டை ரிமூவ் பண்ணிட்டு அப்புறமா குளோஸப் ஷாட் எடுக்கத் தொடங்குவாரு..

இதே மாதிரிதான்..! அதுவரைக்கும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் "கூட்டத்தை முடிங்க.. பெர்மிஷன் சஸ்பெண்டட்.. ஆல் ஆப் கெட் அவுட்.." என்றபடியே உள்ளே வந்து வரிசை, வரிசையாக இருப்பவர்கள் எழுப்பிவிட்டவர், தைரியமாக கூட்டத்துக்குள் புகுந்து இரு தரப்பினருக்கும் நடுவில் நின்று கொண்டார்.

இப்போதுதான் மார்க்ஸ் போதும்டா சாமி என்று நினைத்தாரோ என்னவோ, "எல்லாரும் வெளில போங்க.. நாங்க உங்களைக் கூப்பிடலை.. வெளில போலாம்.." என்றார் தைரியமாக. இதை கூட்ட ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால்..?

ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..

'வெளியே போ' என்றவுடன் சட்டென்று வெளியில் போக எத்தனிக்கும் அளவுக்கு அவை நாகரீகத்துடன் தயாராக இருந்த தோழர்கள், எதற்காக கூட்டத்துக்கு வர வேண்டும்..? காரணம் புரிந்ததா..?

ச்சும்மா.. தங்களுடைய எதிர்ப்பை காட்டுகின்றவிதமாக..! "நாங்களும் இருக்கோம்.. பார்த்துக்குங்க.." என்று பலரையும் பயமுறுத்த.. "நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம்.. எந்தக் கூட்டத்தையும் நிறுத்துவோம்.. தெரிஞ்சுக்குங்க" என்ற தங்களது நெஞ்சுர அராஜகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்னவென்று நினைப்பது?

இந்தக் கூற்றுக்கு மற்றுமொரு உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது இனிய நண்பன் கவிஞர் சங்கராமசுப்பிரமணியனுக்கு இந்தத் தோழர்களால் நேர்ந்திருக்கும் கதி.

அப்போது நானும் அவருடன் அதே 'மின்பிம்பங்கள்' அலுவலகத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இப்படியொரு சம்பவம் நடந்ததை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். வேறென்ன செய்வது..? தளவாய்சுந்தரம் அந்தச் சந்தர்ப்பத்தில் குமுதம் பத்திரிகையில் நிருபர்.. அப்போது எங்களுடன் பணியாற்றி வந்த இன்னுமொரு தோழரான ம.செந்தமிழன் இது போன்ற குழுக்களுடன் நன்கு அறிமுகமானவர். அப்படியிருந்தும் சங்கருக்கு உதவிகள் செய்ய முடியாமல் போனது குறித்து எங்கள் அனைவருக்கும் வருத்தமே..

சங்கரின் கதை குறிப்பிடுவது என்னவென்றால் இந்த மாதிரியான தோழர்கள், தாங்கள் நிஜ வாழ்வில் அமெரிக்க அண்ணனை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

காவல்துறையினர் இவர்களது நிகழ்ச்சிகளுக்கு தடை போட்டாலோ, அல்லது கைது செய்தாலோ, அல்லது தடியடி நடத்தி கலைத்தாலோ 'அதிகாரத் துஷ்பிரயோகம்..' 'அடாவடித்தனம்..' 'ஆட்சிக் கொழுப்பு' என்றெல்லாம் வர்ணிக்கும் இவர்கள், எந்த அதிகாரத்தின் கீழ் சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரை மிரட்டினார்கள்..? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது..? பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் ஆட்சியாளர்களை, அரசு அமைப்புகளைத் திட்டுகிறார்கள்..? கண்டிக்கிறார்கள்.

சங்கர் மற்றும் லீனாவின் கவிதைகள் பிடிக்கவில்லையா? எதிர்ப் பதிவு போடுங்கள்.. அது உங்களைத் தாக்கியதா..? காவல்துறையில் புகார் கொடுங்கள். அங்கு நியாயமி்ல்லையா..? நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள்.. வாதாடுங்கள்.. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அது தவறு என்றால் நிச்சயம் தண்டனை கிடைக்குமே.. அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? கம்யூனிஸத்தில் இதைத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களா..?

இதோ இப்போது பால் சக்காரியாவை கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் தாக்கியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் சொந்த வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.. கொல்கத்தாவில் தஸ்லிமாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்.. இதுதான் மார்க்சிய வழியா..? மார்க்ஸும், ஏங்கெல்ஸும் சொன்ன வழியா..?

லீனா தொடர்பாக குட்டிப் பிரசுரத்தில் சி.பி.ஐ.யும், சி.பி.ஐ.எம்.மையும் கேள்வி கேட்டிருக்கிறார்களே இந்தத் தோழர்கள்..! சங்கரராமசுப்பிரமணியன் என்றால் மட்டும்தான் அவரது வீட்டிற்குச் சென்று மிரட்டுவார்களா..? ஏன் இதே கேள்வியோடு மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் அவரை மிரட்டுங்களேன்..? பிரகாஷ் காரத்தை முற்றுகையிட்டு கேள்வி கேளுங்களேன்.. இருபத்தி நாலு மணி நேரமும் திறந்தே இருக்கும் பாலன் இல்லத்தில் போய் சி.மகேந்திரனிடம் இதே போல், "வாங்க தோழர்.. ஒரு பஞ்சாயத்து இருக்கு.. 'புதிய கலாச்சாரம்' ஆபீஸ்ல போய் பேசிக்குவோம்.." என்று கூப்பிட்டுப் பாருங்களேன்.. முடியுமா இவர்களால்..?

முடியாது.. ஏனெனில் 'பாலன் இல்ல'த்திலும், 'வி.பி.சிந்தன் கட்டிட'த்திலும் கால் வைத்தால் எதிரணியில் லட்சம் பேர் திரள்வார்கள். தாங்க முடியாது. டிரவுசர் கிழிந்துவிடும். அதனால் தைரியமில்லை. ஆனால் சங்கரராமசுப்ரமணியனை பிடிக்கலாம். தாக்கலாம். இழுத்துச் செல்லாம்.. கேள்வி கேட்கலாம்.. ஏனெனில், ஏனென்று கேட்க சங்கரின் பக்கத்து வீட்டுக்காரன்கூட வர மாட்டான்..

இப்படி தன்னுடைய ஆளுமையை, தனது எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற இவர்களுக்கும், மணிப்பூரில் மனோரமா என்கிற ஆதிவாசிப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற இந்திய துணை ராணுவப் படையினருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம்..? (ஸாரி தோழர்களே.. விமர்சனம் கடுமையானதுதான்.. ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்..) ஒரு வித்தியாசமும் இல்லை.

துணை நிலை ராணுவம் செய்தது தங்களது பலத்தை மக்களுக்குக் காட்ட.. மனரீதியாக அவர்களை ராணுவத்தின் அடிமையாக இருக்க வைக்க..! நம்ம தோழர்கள் செய்ததும் அதே மனநிலையோடு தங்களது பலத்தை தங்களைவிட சக்தி குறைந்தவர்களிடம் காட்டுவதற்காகத்தான்..! இதை வேறெப்படி ஒப்பிடுவது..?

ஏழு கேள்விகள் கேட்டு அவர்கள் தயார் செய்திருந்த பட்டியலை இவர்கள் முதலில் எடுத்துக் கொண்டுபோய் உரிமையோடு சட்டையைப் பிடித்துக் கேட்டிருக்க வேண்டிய இடம் "தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்"தான். போயிருக்கலாமே.. "ஏனப்பா நீங்களும் மார்க்சியவாதிகள்தானே.. மார்க்ஸ், ஏங்கல்ஸை படித்தவர்கள்தானே.. புரட்டியவர்கள்தானே.. நீங்கள் எப்படி லீனாவுக்கு ஆதரவு கொடுக்கலாம்" என்று கேட்டிருக்கலாமே..? உங்களுடைய இனிய தோழர் காம்ரேட் ச.தமிழ்ச்செல்வன் பதில் சொல்லக் காத்துக் கொண்டிருப்பாரே..! ஏன் போகவில்லை..?

ஆனால் இங்கே இளிச்சவாயர்கள் லீனாவும், அ.மார்க்ஸும்தான்.. ஏனெனில் இவர்களுக்குப் பின்னால் எந்தவொரு அமைப்பும் இல்லை.. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை.. அம்பு, சேனைகள் இல்லை.. இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கெஞ்ச வைக்கலாம்.. கதற வைக்கலாம்.. அழுக வைக்கலாம் என்கிற சர்வாதிகார மனநிலைதான்..

எந்தக் காலத்திலும் கம்யூனிஸ இயக்கத் தோழர்களுக்கு வரக்கூடாத மனநிலை இந்த சர்வாதிகார மனநிலைதான்.. ஆனால் இந்த இயக்கத்தினருக்கு வந்திருக்கிறது என்றால் இவர்கள் கம்யூனிஸத்தை தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்.

நாடு இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனுக்குடன் ஓடி வரக்கூடியவர்கள் கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தியாவில் தற்போதைக்கு கண்கூடாகப் பார்க்கின்ற உண்மை. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு அமைப்பு இப்படிப்பட்ட ஒரு அராஜக மன உணர்வோடு தன்னை வளர்த்துக் கொண்டே வருவது அந்த அமைப்பினருக்கு மட்டுமல்ல.. நமக்கும் நல்லதல்ல.. நாட்டுக்கும் நல்லதல்ல..

ஏனெனில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இன்னொரு பக்கம் மக்களுக்கான, மக்களுக்கு நெருக்கமான பல விஷயங்களில் அழைப்பு இல்லாமலேயே தானாகவே முன் வந்து பலவிதப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருந்தபோது அத்தடையை நீக்கவும், தேவாரத்தை மனமுருக பாடுவதற்காக பெருந்தவத்தோடு காத்திருந்த பெரியவர் ஓதுவார் ஆறுமுகசாமிக்காக சிதம்பரம் நகர மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் எத்துணை பாடுபட்டார்கள் என்பதனை சமீபத்தில் நான் அங்கே சென்றிருந்தபோது அறிந்து கொண்டேன்.

நீதிமன்ற உத்தரவுப்படி ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது மெயின் ரோட்டில் இருந்து அவரைத் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு போய் அந்த உலகாளும் நடராஜனின் திருச்சிற்றம்பல மேடையில் இறக்கி வைத்தவர்கள், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள்தான் என்பதை அன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தபோதும், பத்திரிகைகளில் படித்தபோதும் எத்தனை சந்தோஷப்பட்டோம்..?

சாமியே இல்லை என்றவர்களைக்கூட சாமியைப் புகழ்ந்து பாட கால் வலிக்க கோவிலின் உள்ளே ஓட வைத்ததுகூட சிவனின் திருவிளையாடல்தான்(எப்பூடி..? சைக்கிள் கேப்புல டிரெயின் ஓட்டுறேன் பாருங்க..!) என்று அப்போது நான் நினைத்துக் கொண்டேன். சந்தோஷம்.. பெருத்த சந்தோஷம்..!

இது போன்ற மக்களுக்கான போராட்டங்களின் வாயிலாகவும், போராட்ட வழிமுறைகளினால் மக்களை இன்னமும் நெருங்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்த கழகத் தோழர்கள் இப்படி தேவையற்ற முறையில், நேர்மையில்லாத வகையில் நடந்து கொள்வது மக்களிடமிருந்து அவர்களை விலக்கத்தான் செய்யும். நாளை அவர்களைப் பற்றி சொல்லும்போதே, "ஆமாப்பா.. அவங்க வந்தாலே அப்படித்தான்.. ஏதாவது கலகம் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.." என்பது போன்ற பாராட்டுரைகள்தான் கிடைக்கும்.. தேவைதானா இது..?

லீனாவின் இந்தக் கவிதை ஆபாசம்.. அந்த ஆபாசத்திற்கு எங்களது ஆசான்கள்தான் கிடைத்தார்களா என்று முழங்குகிறீர்களே..! இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே ஆத்திகர்களான நாங்கள் நெஞ்சார வணங்கும் எங்களது தெய்வங்களை பழித்துப் பேசுகிறீர்களே.. எழுதுகிறீர்களே.. பத்தகம் அச்சடித்து வெளியிடுகிறீர்களே..(ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) நாங்கள் என்றைக்காவது ஏதாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே..! கண்டு கொள்ளாமல் நாங்கள் பாட்டுக்கு எங்கள் வழியில் போய்க் கொண்டுதானே இருக்கிறோம்..!

ஏனெனில் இந்து மக்கள் கட்சியும், ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தளமும், பி.ஜே.பியும், இன்னும் பிற அமைப்புகளும் கூக்குரல் போடுவதாலேயே இந்த இந்தியத் திருநாட்டில் ஆத்திகம் வளரவில்லை.. நாத்திகமும் செழிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதனும் சுயமான அறிவு, சுயமான நடத்தை, சுயமான செல்வாக்கு, சுயமான சிந்தனை வருகின்றவரையில் குடும்பத்துக்காக ஆத்திகத்தைச் சுமக்கிறான். ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அதன் பின்பு அவன் படுகின்ற வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே அவனை ஆத்திகனாக நிலைக்க வைக்கிறதே ஒழிய.. யாரும் அவனை கோவிலுக்குள் இழுத்துச் சென்று நிப்பாட்டுவதில்லை.

இன்னும் எத்தனை பெரியார்களும், திராவிடர் கழகங்களும், நாத்திகக் கழகங்களும் வந்தாலும் ஆத்திக உணர்வு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவத்தான் செய்யும். அதனை யாராலும் தடுக்க முடியாது..

அதேபோலத்தான் மார்க்ஸும், ஏங்கெல்ஸும், லெனினும் உங்களுடைய இன்ன பிற தலைவர்களும்.. அவர்களைப் பற்றி என்ன எழுதினாலும் அவர்களுடைய மதிப்பையும், மரியாதையையும் உங்களிடமிருந்தும் யாரும் அபகரிக்க முடியாது..

இப்போது எதற்கு இந்த வீணான போராட்டம்..? மேலேயும், கீழேயுமான குதிப்பு..? ஒரு கவிதை வந்தது. நீங்கள் எதிர்ப் பதிவு போட்டு எதிர்ப்பைக் காட்டிவிட்டீர்கள். முடிந்தது பிரச்சினை.. அடுத்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாம்.

நீங்கள் ஒரு கட்டுக்குள் இருந்து கொண்டு அமைப்பை நடத்துகிறீர்கள். இது போன்ற ஆவேசத்தையும், எதிர்ப்புணர்வையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.. போர்க்குணத்தை போராட்டத்தில் மட்டும் காட்டலாம்.. அரசு அமைப்புகளிடம் காட்டலாம்.. ராணுவத்திடம் காட்டலாம்.. காவல்துறையினரிடம் காட்டலாம்.. காட்டியிருக்கிறது கம்யூனிஸம்... உலகில் முதலில் தோன்றிய கம்யூனிஸம் இப்படித்தானே மலர்ந்தது.. ஆனால் தனி மனிதர்களிடம் தன் வீரத்தைக் காட்டவில்லையே..! அப்படிக் காட்டினால் அதற்குப் பெயர் கம்யூனிஸமும் இல்லையே..!

யோசியுங்கள் தோழர்களே..!


உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!


கடைசியா ஒரு விஷயம் தோழர்களே..! இதற்காக எனது வீட்டு அட்ரஸ் கேட்டு தயவு செய்து அலைய வேண்டாம்.. வீட்டுக்கு ஆட்டோவோ, டெம்போ வேனோ, மினி லாரியோ அனுப்ப வேண்டாம் தோழர்களே.. யாராவது ஒரு தோழரை சைக்கிளில் அனுப்பினாலே போதும்.. பெரியவர் உ.ரா.வரதராஜன் மாதிரி கேரியர்ல உக்காந்து எங்க வரச் சொல்றீங்களோ அங்க நானே வந்து ஆஜராகியிருவேன்..!

என்னடா இந்தச் சுள்ளான் நம்மகிட்டயே இப்படி பயமில்லாம பேசுறானே அப்படீன்னு நினைக்குறீங்களா தோழர்களே..?

ஹி.. ஹி.. எனக்குத்தான் என் அப்பன் முருகன் இருக்கானே..! அப்புறமெதுக்கு பயம்..? அவன் ஒருத்தனே போதும்..!

முருகா சரணம்.. முருகனடி சரணம்..!

வேல் வேல் வெற்றிவேல்..!

கந்தனுக்கு அரோகரா..!

முருகனுக்கு அரோகரா..!

168 comments:

ரவி said...

!!

கல்வெட்டு said...

கவிதையோ புண்ணாக்கோ லீனா எழுதுவது அவர் விருப்பம்.

ஆண்டாள் பாடல்களில் இல்லாததா?

அல்லது சவுந்தர்யலகரியில் இல்லாததா?

சட்டம் போட்டு தடுக்க வேண்டும் என்றால் ஆண்டாளில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

முற்போக்கு பிற்போக்கு என்று தமிழப்பதிவுலகில் ப்ளீம் காட்டும் வினவா இப்படி?

தனி மனிதனாகவோ அல்லது சிறு குழுவாகவோ இயங்கினால் ஆபத்துதான். பழங்கால பண்னையார்கள் போல ஆள் அம்புடன் இருக்க வேண்டும்.

உண்மைத் தமிழன் சொன்னதை வழிமொழிகிறேன்.


//ஏனெனில் 'பாலன் இல்ல'த்திலும், 'வி.பி.சிந்தன் கட்டிட'த்திலும் கால் வைத்தால் எதிரணியில் லட்சம் பேர் திரள்வார்கள். தாங்க முடியாது. டிரவுசர் கிழிந்துவிடும். அதனால் தைரியமில்லை. ஆனால் சங்கரராமசுப்ரமணியனை பிடிக்கலாம். தாக்கலாம். இழுத்துச் செல்லாம்.. கேள்வி கேட்கலாம்.. ஏனெனில், ஏனென்று கேட்க சங்கரின் பக்கத்து வீட்டுக்காரன்கூட வர மாட்டான்..//

//இப்படி தன்னுடைய ஆளுமையை, தனது எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற இவர்களுக்கும், மணிப்பூரில் மனோரமா என்கிற ஆதிவாசிப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற இந்திய துணை ராணுவப் படையினருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம்..? (ஸாரி தோழர்களே.. விமர்சனம் கடுமையானதுதான்.. ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்..) ஒரு வித்தியாசமும் இல்லை.//

//ஆனால் இங்கே இளிச்சவாயர்கள் லீனாவும், அ.மார்க்ஸும்தான்.. ஏனெனில் இவர்களுக்குப் பின்னால் எந்தவொரு அமைப்பும் இல்லை.. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை.. அம்பு, சேனைகள் இல்லை.. இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கெஞ்ச வைக்கலாம்.. கதற வைக்கலாம்.. அழுக வைக்கலாம் என்கிற சர்வாதிகார மனநிலைதான்..//



***

ஏழர said...

ஆண்டாள் பாடல்களில் இல்லாததா???

கல்வெட்டு ஆண்டாள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் பற்றி எப்போ எழுதினார்?

விசயமே புரியமா எழுதாதீங்க...

ஏழர said...

உண்மைதமிழன், நீங்க லீனா புருசன் ஜெரால்டுக்கு நெருங்கிய பிரண்டாமே.. செல்லவேயில்ல???

ஏழர said...

@@முற்போக்கு பிற்போக்கு என்று தமிழப்பதிவுலகில் ப்ளீம் காட்டும் வினவா இப்படி? @@

எப்படி????????

Unknown said...

இதே ம.க.இ.க முன்பொரு காலத்தில் மதுரையில் ஆபாசத்திரைப்படம் போடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று எங்களை அழைத்துச் சென்று அங்கே போனதும் வெறி கொண்டு தியேட்டரின் ப்ரொஜெக்டரை உடைத்து, ஸ்க்ரீனைக் கிழித்து, பிலிமை எரித்து என்று போர்க்கோலம் பூண்ட போது இவர்களை வெறுத்தவன் தான்..

இவர்களின் எதிர்ப்பு நியாயமானதாக இருந்தாலும் அதைப் பதிவு செய்யும் முறை எப்போதுமே அராஜகமாகத்தான் இருக்கும்.

Unknown said...

நான் போட்ட கமெண்டை எங்கே பதிவுப் பக்கத்தில் காணோம்?

கல்வெட்டு said...

ஏழர,
//ஆண்டாள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் பற்றி எப்போ எழுதினார்?
//

சோ? வினவு குழுவிற்கு ..( ஒரு குறியீடாக மட்டுமே. யார் அதில் இருக்கிறார்கள் என்று தெரியாது. உண்மைத் தமிழன் பதிவினையொட்டி , 'வினவு' என்ற‌ பெயரில் பதிவு எழுதுபவர்களுக்கும் இந்த அரஜாகத்திற்கும் தொடர்பு உண்டு என்ற நோக்கில் ...குறியீடாக மட்டுமே. அப்படி இல்லாத பட்சத்தில் மன்னிக்க ) பிரச்சனை "மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" பற்றி லீனா சொன்னது சரியா?


"மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" யார் இவர்கள் ?? அவர்களின் ஆதர்சன கீரோக்களா? இவர்களை விமர்சனம் செய்தால் பிரச்சனை செய்வார்களா?
கடவுள் என்ற கான்செப்டே பதிவுலகில் டவுசர் கிழிக்கப்படுகிறது?

கம்யூனசிம் என்ன கீரோசிய வழிபாடா? வெட்கமாக இல்லை அவர்களுக்கு?

யாரக இருந்தாலும் ... கீரோசிய வழிபாட்டைவிடுங்கள். அது போல எந்த இசமாக இருந்தாலும் குப்பையில் போட்டுவிட்டு மண்ணின் மக்களுக்குத் தேவையான புதிய மண்சார்ந்த இசத்தை உருவாக்குங்கள்.

மதங்கள் பரவுவதுபோல இசங்கள் புரியாமல் கீரொசியமாக பரவுவதும் மதத்தைவிட தீங்கானது.

கல்வெட்டு said...

// ஏழர said...

உண்மைதமிழன், நீங்க லீனா புருசன் ஜெரால்டுக்கு நெருங்கிய பிரண்டாமே.. செல்லவேயில்ல??? //

:‍-((

ஏழர உங்களுக்குபோய் பதில் சொன்னேனே. :-((((

உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன்.

தோற்றுவிட்டேன் நான்.

நீங்கள் வல்லவர் நல்லவர் உங்கள் கொள்கை நல்லது

.

ஏழர said...

"மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" யார் இவர்கள் ?? அவர்களின் ஆதர்சன கீரோக்களா? இவர்களை விமர்சனம் செய்தால் பிரச்சனை செய்வார்களா????

ஓ கல்வெட்டு 'லெனின் பிராய்டை புணர வேண்டும்' என்பது எந்த வகையான விமரிசனம் ஐயா???

யோனியின் மயிர் உபரி என்பது எந்த வகையான விமரிசனம் ஐயா???

முதலில் சர்ச்சைக்குறிய கவிதைகளை(?) வாசித்துவிட்டு வரவும்..

நான் உ.த.விடம் ஜெரால்டின் நண்பனா என்று கேட்டதன் பொருள் அவருக்கு நன்றாக புரியும்..அது உங்்கள் அக்கரைகான ஒன்றல்ல

தமிழ்மணி said...

அன்புள்ள உண்மைத்தமிழன்,

நேர்மையான பதிவுக்காக நன்றி.

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே இப்படித்தான். தான் சொல்வதுதான் சரி என்ற விடலைத்தனம் வாழ்நாளின் இறுதிவரை போகாத வெம்பல்கள் இவர்கள். இவர்களது தத்துவமும் ஒரு வெம்பல் தத்துவம்.

நான் ஒரு தனி மனிதனாகத்தான் இவர்களை எதிர்த்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த தத்துவத்தை எதிர்த்து எழுதிகொண்டிருக்கிறேன். என் பதிவில் விவாதித்து தோற்றவர்கள் இவர்கள். கம்யூனிஸ சமூகம் எப்படி இருக்கும் என்ற ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் பதிலைக்காணவில்லை.

இன்றைக்கு உண்மையாக மக்களை நேசித்த காந்தி போன்றோரை கேவலப்படுத்தி இவர்கள் மட்டுமே ஏழைகளுக்காக இரங்குகிறார்கள் போன்ற வேஷம் போடுகிறார்கள். அதுவும் சீனா கொடுக்கும் கூலிக்காசுக்கு மாரடிப்பவர்கள்.

இவர்கள் செய்ததாக நீங்கள் பாராட்டிய எதையும் நான் பாராட்டவில்லை. இந்த கூட்டத்தில் நீங்கள் பார்த்தது போல இவர்களது ஒவ்வொரு காரியத்திலும் அதன் பின்னாலும் ஒரு திட்டம் இருக்கும். அந்த திட்டம் ஒரு நாசகார திட்டமே.

நட்புடன்

ஜோதிஜி said...

என்ன முருகா கூட்டம் கம்மியாயிருக்கு?

அகநாழிகை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அந்த நிகழ்ச்சியில் ம.க.இ.க. அராஜகத்தையும், அவர்கள் பேசிய ஆபாச வார்த்தை மற்றும் கூட்டம் நடத்த விடாமல், ஆரம்பிக்கும் முன்பாகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விதம் அவர்கள் மேல் எனக்கு 25 வருடங்களாக இருந்த கருத்தை உடைத்துவிட்டது. ஒரு கருத்தை அராஜகம் செய்தும், ஆபாச வார்த்தைகளுடன் கோஷமிட்டும் தகர்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ம.க.இ.க. தோழர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 25 வருடங்களாக இவர்கள் எதையுமே சாதிக்காமல் வெற்று கோஷங்களும், ஆபாசங்களுமாக குடித்துவிட்டு கோஷம் போட்டதினால்தானே என்னவோ அதிகாரத்திற்கு எதிராக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களை நம்பி, வெற்றுப்பரபரப்புக்கு ஓடும் கூட்டம் மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. அப்படியொரு வசை வார்த்தைகளையும், ஆபாச நிகழ்வையும் வேறெந்த கூட்டத்திலும் நான் கண்டதில்லை. ‘தன்வினை தன்னைச் சுடும்‘ என்பார்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ம.க.இ.க. விஷயத்தில்.
0
அருமையான பகிர்வுக்கு நன்றி.

சி.வேல் said...

சுறா எப்ப சகா ரிலிஸ் ?

"உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!"

உடைச்சாச்சு

ஏழர said...

@@@எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற@@@

இது போன்ற சென்டிமென்ட் சீனெல்லாம் லீனாவின் கவிதைக்கு புருவத்தை உயர்த்தும் மாபெரும் பெண்ணிய போராளி பாராதிராஜாவின் அடுத்த படத்துக்கு எழுதிக்கொ்டுக்கவும்.. ஏனெனில் உண்மை இதற்கு நேர் எதிரானது.

பெரியார் திடலில் ஈழப் பிரச்சனைக்காக வீரமணி நடத்திய கூட்டத்தின் நடுவில், வீரமணி - கலைஞர் கூட்டு துரோகத்தை அம்பலப்படுத்தி இது போலத்தான் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தி.க.வினரால் கடுமையாக தாக்கப்ட்ட தோழர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்..

போலி கம்யூனிஸ்டுகள் நடத்திவரும் பல கூட்டங்களில் அவர்களை அம்பலப்படுத்தி பேசிய, நோட்டீஸ் விநியோகித்த ம.க.இ.கவினர் மீது தாக்குதல் நடத்தப்ப்பட்டிருக்கிறது

சிறங்கம் பெரியார் சிலை உடைத்த போது இராமன் படத்தை கொளுத்திய போது

அதே சீறங்கத்தில் கருவரை நுழைவு போராட்டம் நடந்த போதும் பார்ப்பனரின் கூலிப்படை ரவுடிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததை தெரிந்தும நிராயுதபாணியாக உள்ளே நுழைந்து மண்டை உடைபட்டனர்

தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது அதை எதிர்த்து ஆதிக்க சாதியினரின் ஊர்களிலேயே கூட்டம் நடத்தியது

தீட்சிதனின் கோட்டயான தில்லையில் தமிழை ஏற்றிய போது

இப்போது பார்ப்பனியத்தின் அதிகார பீடமாகிய சுப்ரீம் கோர்டில் தில்லைக்காவும் அனைத்து சாதி்யும் அர்ச்சகராகவும் என வ்ழக்குகளை நடத்துவது

ஜெயலலிதாவின் ஆட்சியிலேயே தெருத்தெருவாக அதிமுக பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி கூட்டம் போட்டது

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகமே சோகத்தில் ஆழ்ந்து காங்கிரஸ் குண்டர்கள் வெறியாட்டம் போட்ட போது தன்தனியாக பேருந்திலும் ரயில்களிலும் ராஜீவை கொண்றது சரி யென அம்பலப்படுதிதயது

ஜேப்பியார் முதல் உள்ளூர் சாராய ரவுடி கந்துவட்டி கும்பல்களை எதிரஃத்து இந்த நிமிடம் கூட தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில்
இப்படி ஒரு வலிய சக்தியிடம் எளிய தோழர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

இதில் டவுசர் கிழிவது மட்டுமல்ல உண்மைத்தமிழா பல தோழர்கள் உயிரும் இழந்திருக்கின்றனர்..

தோழர்களின் அரசியல் இதுதான் போராட்டமுறை இதுதான், நடுத்தர வர்க்க டீசன்ட் ஜென்டில்மேன்களுக்கு இது உவப்பாக இருக்காது ஆனால் என்னைப்பொருத்தவரை குடியும், கூட்டுக்கலவியும், ஊத்திக்கொடுத்து மூக்குடைக்கும் இந்த இலக்கியவாத கழிசடைக்ளின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வாழ்க்கையை விட இது பல்லாயிரம் மடங்கு உயர்ந்தே!

ஏழர said...

வாசு அவர்களே லீனாவின் கவிதையில் உள்ள வார்த்தையைத்தானே தோழர்கள் உச்சரித்தனர், உங்களுக்கு அது ஆபாசமாக தெரிந்தால் அந்த பாவம் லீனாவையே சேரும்..

மற்றபடி உங்க இலக்கியவாத கழிசடைக்கூட்டத்தின் யோக்கியதையை இன்னும் பல கூட்டங்களில் இது போல அம்பலப்படுத்தும் நேரத்தை தோழர்களுக்கு அளிக்க அந்த முருக்கப்பெருமானை வேண்டுகிறேன்.

ஏழர said...

கம்யூனிசத்தையும் கம்யூனிச தலைவர்களையும் கொச்சைப்படுத்தி எந்த நாயும் எழுதலாம், கேட்க நாதியில்லை என்ற "MYTH"ஐ தோழர்களின் இந்த முயற்சி உடைத்திருக்கிறது.. இனி இந்த இலக்கியவாத அட்டைக்கத்தி வீரர்கள் இது போன்று உளருவதற்கு முன்னர் நிச்சயம் இரண்டு முறை யோசிப்பார்கள்.... அதுதான் சிறப்பு

மனிதநேயன் said...

கூட்டத்தில் கலந்துகொண்ட மகஇக தோழர்களுக்கு வாழ்த்துக்கள். நகரீகமற்ற எழுத்துக்களும் அதற்கு வக்காலத்து வாங்கும் போலிகளுடனும் போராடும் போது அத்துமீறுவதாக கூச்சல்கள் ஒலிக்கத்தான் செய்யும் அதைப்பொருட்படுத்தலாகாது. தொடர்ந்து போலிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்.

Mugundan | முகுந்தன் said...

//ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.//


உண்மைத்தமிழன்.....இப்பவே கண்ண கட்டுதே!

எழுத்துச் சுதந்திரத்தை எந்த அரசியல் சட்டமும் தடை செய்யமுடியாது...அதுவும் நாட்டுக்கு எதிரான எழுத்து அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே....புத்தகத்தை தடை செய்ய‌
முடியும்.....???

Unknown said...

தோழர்களின் போராட்டமுறை இப்படிதான் இருக்கும், ஈழபிரசினைகள் இவர்கள் காட்டிய அக்கறையும், சிதம்பரம் கோவில் பிரச்சினைகள் இவர்களின் தொடர்ந்த முன்னெடுப்புகளும் பாராட்டுதலுக்குரியது, ஜனநாயகம் செத்துப்போன இந்த நாட்டில் வெற்று அறிக்கைகள் பலன் தராது.
ஆனால் லீனாவின் கவிதை முடிந்துபோன ஒன்று, இதைபோன்ற சாதாரண விசயங்களிலும் அவர்கள் தலையிடுவது ஒரு வகையில் பின்னடைவே.....

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள்,அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்!

Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும் கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

ஒரு தவறைக்கண்டிப்பது என்பது இன்னொரு தவறை ஆதரிப்பதாகிவிடக் கூடாது, நியாயப் படுத்தவும் கூடாது! நான் தான் முதலிலேயே லீனாவோடு உடன்படவில்லை என்று சொல்லியிருக்கிறேனே என்று ஒரு வரி எழுதியதாலேயே, மற்ற வரிகளை நியாயப் படுத்தி விட முடியாது.

லீனா,கருத்துச் சுதந்திரம் என்ற சாக்கில் ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் நடத்திய முயற்சியில் ஜெயித்திருக்கிறார்!இதை ஆதரிக்கப் போனவர்கள் கோமாளிகளாக ஆகியிருக்கிறார்கள்! முற்போக்கு என்ற பெயரில் நடக்கும் அபத்தமான கூத்து இது!

அப்புறம்,எதற்காக இவ்வளவு பில்டப், சோடா கேட்டுக் குடிக்கும் அளவுக்கு மூச்சு வாங்க பேசி உணர்ச்சி வசப் படுவதும்?

Unknown said...

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ம.க.இ.க தோழர்களின் அணுகுமுறை சரியானதாகவே தோன்றுகிறது. அவர்கள் கம்யூனிஸ்டுகள்; அவர்களின்
ஆசான்களை அவமதிப்பதை பற்றி விளக்கம் வேண்டுவது சரியான ஜனநாயக முறை தானே? அவர்கள் என்ன இந்துத்துவ கட்சிகள் போல உள்ளே
புகுந்து அடிதடி வன்முறையிலா ஈடுபட்டார்கள்? இல்லையே.. கேள்விகள் எழுப்பினார்கள். அது சரியானது தானே? லேணா தான் எழுதிய
கவிதையின் அரசியல் நியாயமானது என்றால் அதை விளக்கி இருக்கலாமே? அவருக்கு அதில் என்ன மனத்தடை?

இதற்கு முன்பு இந்த தோழர்கள் நடத்திய போராட்டங்களிலும் இதே போன்ற விடாப்பிடியான உறுதியைத் தான் காட்டி வந்திருக்கிறார்கள்.
பொதுவாக மா.லெ கட்சியினர் சமரசமற்றவர்கள். நீங்கள் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்? நீயும் பேசு நானும் பேசுவேன் எனும் லாவனி
கச்சேரியையா? அந்த மாதிரியான வழவழா கொழகொழா வழிமுறையை ஒரு மா.லெ கட்சியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உங்கள் தவறு. அவர்கள்
கட் & ரைட்டாக கறாராகத் தான் இருப்பார்கள். அப்படித் தான் இதுவரை இருந்துள்ளனர்.

Unknown said...

பாரம்பரியமான திராவிட குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெரியாரியவாதியாக ம.க.இ.க தோழர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்..!!

இது போன்ற குப்பைகள் அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடைக்குள் துணிந்து இறங்கி சுத்தம் செய்ய முணைந்துள்ள உங்களுக்கு எனது
மனப்பூர்வமான ஆதரவு என்றென்றைக்கும் உண்டு தோழர்களே.

குமரன் said...

//அவர்கள் மேல் எனக்கு 25 வருடங்களாக இருந்த கருத்தை உடைத்துவிட்டது.//
//25 வருடங்களாக இவர்கள் எதையுமே சாதிக்காமல் வெற்று கோஷங்களும், ஆபாசங்களுமாக குடித்துவிட்டு கோஷம் போட்டதினால்தானே என்னவோ அதிகாரத்திற்கு எதிராக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை//

அகநாழிகை, என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரே குழப்பமா இருக்கு! சொல்ற கருத்தை தெளிவா சொல்லும்!

சரவணகுமார் said...

///ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.///

உண்மைத் தமிழன்

லீனா மணிமேகலையின் கவிதை மற்றும் ப்ளாகைத் தடை செய்யும் படி போலிஸ் கமிஷனரிடம் மனு மட்டுமே கொடுக்கப் பட்டதா அல்லது வேறு ஏதேனும் வன்முறை அல்லது அராஜகம் பிரயோகிக்கப் பட்டதா?(தஸ்லிமா நஸ் ரீனின் கூட்டத்தில் நடந்தது போல?) இல்லை என்றால் "நீங்கள் சொல்லும் ஜனநாயக முறையில் " இது எனக்குப் பிடிக்கவில்லை அதைத் தடை செய்யுங்கள் என்று காவல் த்உறையிடம் மனு கொடுப்பதை எதிர்த்து கண்டனக் கூட்டம் என்றால் எதால் சிரிப்பது என்று தெரியவில்லை.அதுவும் காவல் துறை ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா அல்லது நடவடிக்கை எடுக்கவாவது பரிசீலனை செய்ததா என்பதும் இது வரை தெரியவில்லை.

கண்டனக் கூட்டத்தின் அழைப்பில் கூட மனு கொடுத்ததன்றி வேரெதுவும் நடந்து விட்டதாய் குறிப்பிடப் படவில்லை!!!!

அப்படியானால் இந்தக் கண்டனக் கூட்டமே ஒரு அராஜகமான, சீப் பப்ளிசிடி தேடிக்கொள்ளும் விஷயம் என்றுதான் தோன்றுகிறது.

கவிதையிலென்ன எழுதியிருந்தது?,கவிதைச் சுதந்திரம்,கலைச் சுதந்திரம்,வார்த்தைச் சுதந்திரம்,பெண்சுதந்திரம்,தெருப்புழுதி எல்லாம் பற்றி அப்புறம் யோசிக்கலாம்.

முதலில் மேற்சொன்ன சந்தேகத்திற்கு நீங்களோ அல்லது யாராவதோ பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் மிகவும் "ஜனநாயக முறையில்" நடந்த கூட்டத்தில் யாரோ சில பேர் புகுந்து கலாட்டா செய்ததாக அனைவரும் நினைத்து விடப் போகிறார்கள்

K.R.அதியமான் said...

///அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? ///

உண்மை தமிழன் அண்ணே,

கம்யூனிசம் நடைமுறையில் அராஜகத்திற்க்கும், சர்வாதிகாரத்திற்க்கும். ஃபாசிசத்திற்க்கும் தான் இட்டுச்செல்லும் என்று பலரும் பல காலமாக சொல்லிவருகிறோம். இன்னும் நீங்க அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. கம்யூனிச தியரி எல்லாம் கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும். நடைமுறையில் மிக கொடூரமான மனித உரிமை மீறல்களை புரியாமல் கமயூனிசத்தை அமலாக்க முடியாது.

பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

ஒரு வகையில் இது ஒரு மதவாதம் தான். மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம். எதிரி என்று ஒரு குழுவை அல்லது இனத்தை அல்லது ‘வர்கத்தை’ சித்தரித்து, அவர்களை ஒழித்தால் பொன்னுலகம் அமைக்கலாம் என்ற வெறியை பரப்புவது. oversimplified 'us Vs them syndrome'.

K.R.அதியமான் said...

///அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? ///

உண்மை தமிழன் அண்ணே,

கம்யூனிசம் நடைமுறையில் அராஜகத்திற்க்கும், சர்வாதிகாரத்திற்க்கும். ஃபாசிசத்திற்க்கும் தான் இட்டுச்செல்லும் என்று பலரும் பல காலமாக சொல்லிவருகிறோம். இன்னும் நீங்க அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. கம்யூனிச தியரி எல்லாம் கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும். நடைமுறையில் மிக கொடூரமான மனித உரிமை மீறல்களை புரியாமல் கமயூனிசத்தை அமலாக்க முடியாது.

பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

ஒரு வகையில் இது ஒரு மதவாதம் தான். மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம். எதிரி என்று ஒரு குழுவை அல்லது இனத்தை அல்லது ‘வர்கத்தை’ சித்தரித்து, அவர்களை ஒழித்தால் பொன்னுலகம் அமைக்கலாம் என்ற வெறியை பரப்புவது. oversimplified 'us Vs them syndrome'.

சரவணகுமார் said...

போன பின்னூட்டத்தில் சொல்ல விட்டுப் போனது...

எது எப்படியோ உங்கள் மனதில் பட்டதை தைரியமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டத் தக்கது.

ஆனால் ஆட்டோ அனுப்புவியா?ஆள் அனுப்புவியா? என்றது போன்ற சீண்டல்களும் அநாவசியம்

? said...

ஆள் இல்லாத கிரவுண்டுன்னு மார்க்சியத்த கையில எடுத்த்து யாருப்பு...

மாமு .... அழைப்பிதல் தமிழில்தான் அச்சிடப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக என்று வேறு சொல்லிருக்க அப்பு... ஆனா பாரு அந்த மொத்த அழைப்பிதழுமே இணைய தளத்தில் அம்மையார் மேல விமர்சனம் வச்சாங்காட்டியும் தாக்குதல் அப்படிங்கு. அப்படின்னா எவன் விமர்சனம் வச்சாலும் புகார் பண்ணுவேன்னு சொன்னதும் இதுவும் அந்த அம்மையாரோட ஜனநாயக விரோத கருத்து இல்லையா.. அப்போ இவளுக்கு ஆதரவா வரும்போதோ உத அண்ணே நீங்க ஜனநாயகத்த மூட்ட கட்டி வச்சிட்டுதான் வாரீங்க•. அப்புறம் வந்துட்டு நான் மட்டும் பேசுவேன் மத்தவன் பேசக் கூடாது கடசில நன்றியுரை சொன்னப்புறம் பேச விடுவேன் அதுக்கு பதில் எல்லாம் கிடைக்காது அப்படின்னா கேக்குறவன் கேண ... இருக்கணும் இல்ல•. சட்டசப சனநாயகம் மாரில்லா இருக்கு

அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விட மாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்

கவிதைக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அது ஜனநாயக முறைதான•.. பிரதி வந்தவுடன படைப்பாளி செத்துட்டான்னு பேச மாட்டீங்கள்ளா... அப்புறம் செத்த சவத்துக்கா கூட்டம் நடத்த முடியும். கேள்விக்கு பதில் சொல்ல்லாம்லா... அத உட்டுட்டு சிபிஎம் ஆபீசு போவியா தமுஎச ஆபீசு போவியா அடிச்சிருவாங்க அப்படிங்கறீங்க•.. இத்த்தான் ம•க•இ.க தோழர்கள் அந்த அம்மாட்டயும் கேட்டாங்க•.. எப்படி இந்து மக்கள் கட்சியை புண்படுத்துற மாதிரி பாரத மாதா பத்தியும் சங்பரிவார் பத்தியிமு இப்படி எழுதுவியான்னு... இதுக்கு பதில் சொல்லாம இணையத்தில அவதூறு பண்றாங்கன்னு தினமணிக்கு போட்டுக் குடுக்குற வேலய செஞ்சா அந்த அம்மா..

அப்புறம் அது என்னங்க அங்க போயி செய்வியா இங்க போயி செய்வியா அப்படின்னு கேக்கிறது. தெருவில ஒரு சண்ட நடக்குது. ஒருத்தன் நம்மள் பாத்து சாதி சொல்லி திட்டுறான் ... அதுக்கு சொன்னவனத்தான அடிக்கணும். அத விட்டுட்டு இதுக்கு காரணம் மனு, மனுவோட பிரதிநிதி சங்கராச்சாரி.. அதுக்காக எப்போ பாத்தாலும் அவனப் போயே அடிக்கணும் அப்படின்னா நம்மாள முடியுற காரியமா அது.

ஏழர said...

@@அதைவிட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..?@@

அதியமான் ஒரு பச்சை பொய்க்காக சுண்டல் விக்க வந்துட்டீங்களே..

K.R.அதியமான் said...

ஓவியர் எம்.எஃப்.ஹுசைன், சரஸ்வதியை நிர்வாண கோலத்தில் வரைந்து ‘அவமதித்துவிட்டார்’ என்று இந்து அமைப்புகளும், சிவ சேனாவும், ஹுசைனுக்கு எதிராக ‘போராட்டங்கள்’ மற்றும் தனி மனித தாக்குதல் நடத்தியதற்க்கு சமம், இந்த ம.க.இ.க செயல்கள்.

ஹூசைன் வரைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையுன் இல்லை. அது அவரின் உரிமை. லெனின், மார்க்ஸ் பற்றி இப்படி ஒரு கவிதை எழுதியதால், ஒன்றும் குடி முழுகிவிடாது. ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இப்படி கவிதை எழுதினால், அங்கு உள்ள தீவிர கம்யூனிஸ்டுகள் யாரும் இப்படி பொங்கி எழ மாட்டார்கள். இது ஒரு பெரிய விசியமே இல்லை.

சரி, ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனை தானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும் தானே ? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா ?

K.R.அதியமான் said...

ஓவியர் எம்.எஃப்.ஹுசைன், சரஸ்வதியை நிர்வாண கோலத்தில் வரைந்து ‘அவமதித்துவிட்டார்’ என்று இந்து அமைப்புகளும், சிவ சேனாவும், ஹுசைனுக்கு எதிராக ‘போராட்டங்கள்’ மற்றும் தனி மனித தாக்குதல் நடத்தியதற்க்கு சமம், இந்த ம.க.இ.க செயல்கள்.

ஹூசைன் வரைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையுன் இல்லை. அது அவரின் உரிமை. லெனின், மார்க்ஸ் பற்றி இப்படி ஒரு கவிதை எழுதியதால், ஒன்றும் குடி முழுகிவிடாது. ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இப்படி கவிதை எழுதினால், அங்கு உள்ள தீவிர கம்யூனிஸ்டுகள் யாரும் இப்படி பொங்கி எழ மாட்டார்கள். இது ஒரு பெரிய விசியமே இல்லை.

சரி, ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனை தானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும் தானே ? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா ?

ஏழர said...

ஆப்பாயில் அதியமான்.. கேள்வி கேட்ட தோழர்களை பொங்கி எழுந்து அடிக்கவந்தவர் லீனா.. பாசிசம் எங்கே இருக்கிறது என்று கொஞ்சம் அறிவு நேர்மையோடு எழுதவும்..

K.R.அதியமான் said...

ஏழரை,

சங்கர ராம சுப்பரமணியனை வீடு புகுந்து மிரட்டவில்லை என்கிறீர்களா ? எது பச்சை பொய் ?
நீங்கள் செய்தால் அது ’
அறபோர்’ ; அதே காரியத்தை வேறு யாராவது செய்தால் அது ஏகாதிபத்தியம், அடக்குமுறை, ஃபாசிசம். இதுதானே உங்கள் இரட்டை வேடம் ?

சென்ற மாதம் திண்டுக்கல்லை சேர்ந்த கவிஞர் ஒருவர் வினவு உடன் தொலைபேசியில் லீனா விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தற்காக, அவரின் மாமனார் வீட்டிற்க்கு கும்பலாக சென்று ’விளக்கம்’ கேட்டதாக கேள்விப்பட்டேன். சொன்னவரும் ஒரு கவிஞர் மற்றும் தீவர மார்கசியர் தான். திண்டுக்கள் ம.க.இ.க ‘தோழர்களிடம்’ கேட்டு பார்க்கவும்.

இந்திய ‘ஜனனாயகத்தை’ மிக இளக்காரமாக பேசும் உங்களை போன்றவர்கள், சவுதி அரேபியா, மைன்மார் போன்ற நாடுகளில் பிறந்திருந்தால், கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று புரியும். அந்நாடுகளில் உங்களை போன்ற குழுக்களை கூண்டோடு தூக்கி உள்ளே போட்டு மித்தித்திருபார்கள்.

K.R.அதியமான் said...

///கேள்வி கேட்ட தோழர்களை பொங்கி எழுந்து அடிக்கவந்தவர் லீனா.. //

ஆம். கேள்விப்பட்டேன். முதலில் என்ன கேள்வி கேட்டீர்கள் என்று விளாவாரியாக விளக்கவும். அதே கேள்வியை, வார்த்தைகளை, மாறாமல். தெளிவாக இங்கே பதியவும். அப்பறம் இதற்க்கு பதில் சொல்கிறேன்.

? said...

உத இது திருவிளையாடல் வசனம் மாதிரி நினைச்சிக்கிட்டு படிச்சிராதீங்க•.

...புலவரே... நெசமாலுமே இது நீங்கதான எழுதுனதா.. இல்லாங்காட்டி இக்சா ல வச்சே யாரும் எழுதிக் கொடுத்த்த‍ வாங்கியாந்து அப்படியே போட்டுட்டீங்களா...

அப்புறம்

கேள்வி கேட்டா கலாச்சார போலீசு... கேள்வி கேக்க விடக் கூடாதுங்கிறதுக்காக சட்டம் ஒழுங்கு போலீச கூப்பிடலாம் அப்படிங்கிறதுதான் உங்க தமிழ் மொழில சனநாயகமா...

அப்புறம் ஒ.பன்னீர்செல்வம் அதாங்க அ.மார்க்சு கூட்டத்துல சில அறிமுகமான ம•க•இ.க தோழர்கள பாத்தோ அல்லாங்காட்டி பேச்சாளர்கள விட கூடுதலா கூட்டம் வந்த்தாலோ டென்சனாகி அழைப்பிதலில் போட்ட இரண்டு எதிரிகளில் ஒருவரான இணையதளங்களை கண்டிப்பதை விட்டு விட்டார். ஒரு வேள இந்து மக்கள் கட்சில பத்து பேரு வந்திருந்தா இந்தக் கூட்டம் அக்காவோட பூப்புனித நீராட்டு விழாவா மாறி மாமன்மார்களை மஞ்ச தடவ கூப்பிட்டிருப்பாங்களோ..

ஏழர said...

ஆயிரம் கேள்விப்படலாம் அதியமான், இலக்கியவாதிகள் சொல்லும்ப பொய்கள் ஊர் அறிந்தவை ... நீங்கள் சொன்ன ஒன்றையாவது உங்களால் நிரூபிக்க முடியுமா? சும்மா உளராதீர்கள்.. ஹிட்லருக்கு கீழேயே கம்யூனிஸ்டுகள் இருந்திருக்கிறார்கள் உங்கள் பூச்சாண்டி தான் தமாசாக உள்ளது...

? said...

உத அண்ணே

லிணா நிறைய கேமரா ஆளுங்கள கூப்பிட்டிட்டுதான் வந்திருந்தாங்க•. எல்லா தோழர்களையும், கேள்வி கேட்டவர்களையும் மூஞ்சிக்கு பக்கத்துல வந்துதான் போட்டா பிடிச்சீங்கள். அதுக்கு யாரும் குறை சொல்ல்ல‍. எல்லா பேச்சுந்தான் பதிவாயிருக்கு. அக்கா வேற டைரக்டரு. வரப் போற படத்துக்கு யாரு கத வசனம்னு தெரியல•. எனக்கு ரெண்டு மூணு ஜனநாயக வாதிகள பத்தி தெரியணும். சபயில கேட்ட கேள்விக்கு வெளிய வந்து ஆப் கேமரால பதில் சொல்றேன்னு சொல்லி வெளிய போன ராஜன்குறை சபைக்கு தந்த ஜனநாயகம், அமா பேசும்போது பின்னாடி வந்து மூஞ்சிய காட்டாம கத்துன ரோசா வசந்த், கேள்வியெல்லாம் அபத்தமாக இருப்பதாக கேள்வி கேட்டவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பேசத் தெரிந்த சுகுணா திவாகர்... இதுதாங்க•

ஏழர said...

கவிதையை எழுதியவனிடம் விளக்கம் கேட்கக்கூடாது என்பது ஜனநாயகமா அதியமான்.. பெருச்சாளி வெளியே வந்தது

ஏழர said...

ஆப்பாயில் என்பது அரைகுறை.. நீர் அரைகுறையான தகவல்களுடன் வந்து பேசுவதால் ஆப்பாயில் என்றேன்... பதிலுக்கு என்னை புல்பாயில் என்று தாராளமாக அழைக்கலாம். தோழர் அதியமான் அவர்களே

ஏழர said...

@@அவரின் மாமனார் வீட்டிற்க்கு கும்பலாக சென்று ’விளக்கம்’ கேட்டதாக கேள்விப்பட்டேன்.@@

மூன்றாம் தரமான பொய்.

ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி...
இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/

K.R.அதியமான் said...

///கவிதையை எழுதியவனிடம் விளக்கம் கேட்கக்கூடாது என்பது ஜனநாயகமா அதியமான்.. ///

விளக்கம் கேட்டும் முறை மற்றும் இடம் பற்றிதான் பிரச்சனை. ஒருவரின் வீட்டிற்க்கு அத்துமீறி கும்பலாக புகுந்து, ஆள்பலத்தை கொண்டு மிரட்டுவது தான் ‘விளக்கம்’ கேட்கும் முறையா ?

சரி, உங்களை விட அதிக ஆள்பலம், அடியாள் பலம் கொண்ட கும்பல் அல்லது அரசு பயங்கரவாதிகள், உங்கள் அலுவலகத்தில் புகுந்து இப்படி ‘விளக்கம் கேட்டால்’ எப்படி இருக்கும் ?


///''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி...
///

இல்லை. சரியா வார்த்தைகளை சொல்லவில்லை. இங்கு எழுத முடியாத கீழ்தரமான சொல்லாடல்களை கொண்டு, படு கேவலமான முறையில், வன்மத்துடன் கேட்க்கப்பட்ட கேள்வி அது.

எம்.எஃப்.ஹுசைனை தாக்க முனைந்த கும்பல்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்யாசம் தோழர்களே ?

குமரன் said...

//அவரின் மாமனார் வீட்டிற்க்கு கும்பலாக சென்று ’விளக்கம்’ கேட்டதாக கேள்விப்பட்டேன்//

பல எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் ஒரு மனப்பிராந்தி வந்துவிட்டது!

மோசமான, ஆபாசமான கவிதையை எழுதிவிட்டு தூங்கப் போனால்..."சிவப்பு சட்டையுடன் தோழர்கள் காலையில் வீட்டில் வந்து நிற்பது போல" கனவில் வந்து பயமுறுத்துவார்கள் போல! கனவில் வந்ததை தான்.. நேரில் வந்ததாக உளறிக்கொட்டுகிறார்கள்.

K.R.அதியமான் said...

ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனை தானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும் தானே ? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா ?

ஏழர said...

கூட்டத்தில் நடந்தது என்ன வினவின் பதிவு

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

http://www.vinavu.com/2010/04/17/pala-rising

ஏழர said...

@@ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனை தானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும் தானே ? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா ?@@

இல்லை என்று நான் சொன்னால் நீங்க நம்பவா போறீங்க...

ஏழர said...

@@இங்கு எழுத முடியாத கீழ்தரமான சொல்லாடல்களை கொண்டு, படு கேவலமான முறையில், வன்மத்துடன் கேட்க்கப்பட்ட கேள்வி அது.@@

எது கீழ்த்தரமான சொல்லாடல் அய்யா அதியமான் சார் காரு..
்லெனின் பிராய்டை புணரவேண்டும் என்று லீனா எழுதியை சொல்றீங்களா??? புரியலையே.

K.R.அதியமான் said...

//எது கீழ்த்தரமான சொல்லாடல் அய்யா அதியமான் சார் காரு..
்லெனின் பிராய்டை புணரவேண்டும் என்று லீனா எழுதியை சொல்றீங்களா??? புரியலையே.
//

அதற்க்கு தான் ’பதில்’ கவிதை வினவு தளத்தில் எழுதிவிட்டீங்களே. (அந்த பதில் கவிதையை இந்த ஆண்டு தமிழ்மண கவிதை போட்டிக்கு அனுப்பவும் என்று அங்கேயே சொல்லியிருந்தேன். கண்டிப்பாக சிலாகிக்கப்பட்டு முதல் பரிசு கிடைக்கும். அட்வான்ஸ் வாழ்த்துகள் !)

நேரில் ஒருவருடன் எப்படி பேசுவது, என்ன பேசுவது என்ற விவஸ்தையே இல்லாத மாக்கள். நீங்க வேணுமுனா உங்க ‘வீர்ததை’ மெச்சிக்கிலாம். ஆனால் எல்லோறும் அப்படி நினைக்கல. மற்றவர்கள் எல்லோரும் போலிகள், மடையர்கள், அயோக்கியர்கள் என்று கருதும் ’பகுத்தறிவுவாதிகள்’ தானே நீங்க.

முதல்ல அந்த நிகழ்வில் லீணாவிடன் கேட்க்கப்ட்ட ’தர்க்கபூர்வமான’ கேள்வியை சரியாக எழுதுங்கள். வினவு தள பதிவிலும் மழுப்பலாகவே எழுதப்பட்டுள்ளது. Quote the exact words first.

சரி, இந்து கடவுள்களை இழிவு செய்து ஓவியம் வரைந்தார் என்று எம்.எஃப்.ஹுசைன் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர் இந்துத்வவாதிகள். அவர்கள் தெய்வம் அவர்களுக்கு புனிதமானது. அதே போல் உங்கள் ’தெய்வங்கள்’ உங்களுக்கு புனிதமானது. யாராவது களங்கம் கற்பிக்க முயன்றால் பொங்கி எழுந்து போராடுவீர்கள்.
இந்து மக்கள் கட்சிக்க்கும் உங்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.

ஏழர said...

@@சரி, இந்து கடவுள்களை இழிவு செய்து ஓவியம் வரைந்தார் என்று எம்.எஃப்.ஹுசைன் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர் இந்துத்வவாதிகள். அவர்கள் தெய்வம் அவர்களுக்கு புனிதமானது. அதே போல் உங்கள் ’தெய்வங்கள்’ உங்களுக்கு புனிதமானது. யாராவது களங்கம் கற்பிக்க முயன்றால் பொங்கி எழுந்து போராடுவீர்கள்.
இந்து மக்கள் கட்சிக்க்கும் உங்களுக்கும் பெரிய வித்யாசம் இல்லை.@@


ம.க.இ.கவினர் எதுக்கெல்லாம் பொங்கி எழுறாங்க என்பது எல்லோருக்கும் தெரியும்... நீங்க டென்சன் ஆவாம இருப்பது நல்லது..

நீங்க இத்தினி வருசமா கம்யூனிச தலைவர்களை விமர்சனமா எழுதலையா உங்களுக்கு எதிரா யார் பொங்குனாங்க , இல்ல வீட்டுக்கு வந்து கதவதட்டினாங்க

ஒரு விசயத்த uni-dimensional ஆ பாக்கறத விடுங்க அதியமான்..

K.R.அதியமான் said...

///நீங்க இத்தினி வருசமா கம்யூனிச தலைவர்களை விமர்சனமா எழுதலையா உங்களுக்கு எதிரா யார் பொங்குனாங்க , இல்ல வீட்டுக்கு வந்து கதவதட்டினாங்க///

ஸ்டாலின், மாவோ பற்றி விமர்சிக்க கூடாத என்ன ? அவர்கள் பல கோடி மக்களை கொன்ற கொலைகாரர்கள் என்று சொல்லக்கூடாதா ? உண்மைகளை பேசினால், அது உமக்கு ’அவதூறாக’ தெரிகிறதா ?

சமீபத்தில், ஸ்வீடனில் வசிக்கும் நண்பர் வினையூக்கி, போலந் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார் : http://vinaiooki.blogspot.com/2010/04/blog-post_10.html

போலந்தில், இன்று ஸ்டாலின் என்று எந்த மடையனும் பேர் / புனைபெயர் வைத்துக்கொண்டு திரிவதில்லை. ஸ்டாலினால் கடும் அடக்குமுறைகளை அனுபவித்த மக்கள் அவர்கள். அங்கு, ஸ்டாலினை, ஹிட்டலுக்கு இணையாகவே அம்மக்கள் கருதுகின்றனர். ரஸ்ஸியாவிலும் பலரும் அப்படிதான். அவர்கள் எல்லோரும் மடையர்கள் அல்லது ‘அவதூறு’ செய்பவர்கள் அல்லது போலிகள் என்று சொல்வீர்களா ?

////ஒரு விசயத்த uni-dimensional ஆ பாக்கறத விடுங்க அதியமான்..///

ஆமா. நீங்க தான் multi dimensionஆக் பாக்கிறவர் பாருங்க. இந்த டைலாக்கெல்லாம் இங்கு வேண்டாமே. வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

ஏழர said...

அதியமான் ஏன் இவ்வளவு பதட்டம், நான் எங்கே அவதூறு என்றோ விமர்சனம் செய்யக்கூடாது என்றோ சொன்னேன், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல நான் ஒன்று எழுத நீங்்கள் வேறொன்றை கற்பிதம் சொய்து கொண்டு பதிலளிக்கின்றீர்கள்...


மீண்டும் சொல்கிறேன்...

நீங்க இத்தினி வருசமா கம்யூனிச தலைவர்களை விமர்சனமா எழுதலையா உங்களுக்கு எதிரா யார் பொங்குனாங்க , இல்ல வீட்டுக்கு வந்து கதவதட்டினாங்க

ஒரு விசயத்த uni-dimensional ஆ பாக்கறத விடுங்க அதியமான்..

VISA said...

எல்லா போராட்டங்களும் அரசியல் என்ற கட்டத்துக்குள் அடைபட்டு போகிற போது அதன் சுய நலம் முகம் காட்டி சிரிப்பதை தவிர்க்க முடியாது. அரசியல் என்பதை ஜனநாயகத்தில் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அரசியல் சாராத தனிமனிதன் தான் கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் போவான். மற்றவர்கள் தங்கள் வீட்டில் நாய் செத்து போனால் கூட அரசியல் நடத்தலாம். எனவே இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டு இது போன்ற போராட்டங்களை ஆச்சரியத்தோடு வியந்து எழுதுவதா?

நாமக்கல் சிபி said...

//உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!
//

!!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
!!]]]

இவ்ளோ பெரிய பதிவு போட்டிருக்கேன்..! அதுக்கு இவ்ளோ பெரிய விமர்சனமா..?

நல்லாயிருப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[கல்வெட்டு said...

கவிதையோ புண்ணாக்கோ லீனா எழுதுவது அவர் விருப்பம். ஆண்டாள் பாடல்களில் இல்லாததா?
அல்லது சவுந்தர்யலகரியில் இல்லாததா? சட்டம் போட்டு தடுக்க வேண்டும் என்றால் ஆண்டாளில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

முற்போக்கு பிற்போக்கு என்று தமிழப் பதிவுலகில் ப்ளீம் காட்டும் வினவா இப்படி? தனி மனிதனாகவோ அல்லது சிறு குழுவாகவோ இயங்கினால் ஆபத்துதான். பழங்கால பண்னையார்கள் போல ஆள் அம்புடன் இருக்க வேண்டும்.
உண்மைத் தமிழன் சொன்னதை வழி மொழிகிறேன்.

//ஏனெனில் 'பாலன் இல்ல'த்திலும், 'வி.பி.சிந்தன் கட்டிட'த்திலும் கால் வைத்தால் எதிரணியில் லட்சம் பேர் திரள்வார்கள். தாங்க முடியாது. டிரவுசர் கிழிந்துவிடும். அதனால் தைரியமில்லை. ஆனால் சங்கரராமசுப்ரமணியனை பிடிக்கலாம். தாக்கலாம். இழுத்துச் செல்லாம்.. கேள்வி கேட்கலாம்.. ஏனெனில், ஏனென்று கேட்க சங்கரின் பக்கத்து வீட்டுக்காரன்கூட வர மாட்டான்..//

//இப்படி தன்னுடைய ஆளுமையை, தனது எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற இவர்களுக்கும், மணிப்பூரில் மனோரமா என்கிற ஆதிவாசிப் பெண்ணைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற இந்திய துணை ராணுவப் படையினருக்கும் மனதளவில் என்ன வித்தியாசம்..? (ஸாரி தோழர்களே.. விமர்சனம் கடுமையானதுதான்.. ஆனால் உண்மை சுடத்தான் செய்யும்..) ஒரு வித்தியாசமும் இல்லை.//

//ஆனால் இங்கே இளிச்சவாயர்கள் லீனாவும், அ.மார்க்ஸும்தான்.. ஏனெனில் இவர்களுக்குப் பின்னால் எந்தவொரு அமைப்பும் இல்லை.. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை.. அம்பு, சேனைகள் இல்லை.. இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கெஞ்ச வைக்கலாம்.. கதற வைக்கலாம்.. அழுக வைக்கலாம் என்கிற சர்வாதிகார மனநிலைதான்..//

***]]]

கல்வெட்டு ஸார்..!

அப்படியும், மறுபடியும் அதே சர்வாதிகாரத்துடன்தான் எழுதுகிறார்கள்.. பேசுகிறார்கள்..!

ம்ஹும்.. நம்ம தலையெழுத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
ஆண்டாள் பாடல்களில் இல்லாததா??? கல்வெட்டு ஆண்டாள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் பற்றி எப்போ எழுதினார்? விசயமே புரியமா எழுதாதீங்க...]]]

அவர் விஷயத்தோடதான் எழுதியிருக்காரு.. நீங்க புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லுங்க..!

ஆண்டாள் பாடல்களில் இல்லாத விரசமா.. லீனாவின் கவிதையில் இருக்கிறது என்று கேட்கிறார்..!

[[[ஏழர said...
உண்மைதமிழன், நீங்க லீனா புருசன் ஜெரால்டுக்கு நெருங்கிய பிரண்டாமே.. செல்லவேயில்ல???]]]

அதனால என்ன ஏழர..? அதுதான் கவிதை தவறானது என்று எனது கருத்தை முதல் பாராவிலேயே சொல்லியிருக்கேனே..?

[[[ஏழர said...
@@முற்போக்கு பிற்போக்கு என்று தமிழப்பதிவுலகில் ப்ளீம் காட்டும் வினவா இப்படி? @@
எப்படி????????]]]

கருத்து சுதந்திரத்தை ஏற்காமல் நேரடியாக அடிக்க வருகிறாரே.. அதனால்தான் இப்படி கேட்கிறார் கல்வெட்டண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[முகிலன் said...
இதே ம.க.இ.க முன்பொரு காலத்தில் மதுரையில் ஆபாசத் திரைப்படம் போடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று எங்களை அழைத்துச் சென்று அங்கே போனதும் வெறி கொண்டு தியேட்டரின் ப்ரொஜெக்டரை உடைத்து, ஸ்க்ரீனைக் கிழித்து, பிலிமை எரித்து என்று போர்க்கோலம் பூண்டபோது இவர்களை வெறுத்தவன்தான்.. இவர்களின் எதிர்ப்பு நியாயமானதாக இருந்தாலும் அதைப் பதிவு செய்யும் முறை எப்போதுமே அராஜகமாகத்தான் இருக்கும்.]]]

மது தியேட்டர்தானே..?

வன்முறையை வன்முறையால்தான் எதிர் கொள்ள வேண்டும் என்கிற வன்முறைக் கொள்கை கொண்ட கூட்டம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கல்வெட்டு said...

ஏழர,

//ஆண்டாள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் பற்றி எப்போ எழுதினார்?//

சோ? வினவு குழுவிற்கு ..( ஒரு குறியீடாக மட்டுமே. யார் அதில் இருக்கிறார்கள் என்று தெரியாது. உண்மைத் தமிழன் பதிவினையொட்டி, 'வினவு' என்ற‌ பெயரில் பதிவு எழுதுபவர்களுக்கும் இந்த அரஜாகத்திற்கும் தொடர்பு உண்டு என்ற நோக்கில். குறியீடாக மட்டுமே. அப்படி இல்லாத பட்சத்தில் மன்னிக்க ) பிரச்சனை "மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" பற்றி லீனா சொன்னது சரியா?

"மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" யார் இவர்கள் ?? அவர்களின் ஆதர்சன கீரோக்களா? இவர்களை விமர்சனம் செய்தால் பிரச்சனை செய்வார்களா?
கடவுள் என்ற கான்செப்டே பதிவுலகில் டவுசர் கிழிக்கப்படுகிறது?
கம்யூனசிம் என்ன கீரோசிய வழிபாடா? வெட்கமாக இல்லை அவர்களுக்கு? யாரக இருந்தாலும் கீரோசிய வழிபாட்டைவிடுங்கள். அது போல எந்த இசமாக இருந்தாலும் குப்பையில் போட்டுவிட்டு மண்ணின் மக்களுக்குத் தேவையான புதிய மண் சார்ந்த இசத்தை உருவாக்குங்கள்.
மதங்கள் பரவுவதுபோல இசங்கள் புரியாமல் கீரொசியமாக பரவுவதும் மதத்தைவிட தீங்கானது.]]]

போச்சுடா.. கல்வெட்டு அண்ணே.. என்னென்னமோ பேசுறீங்க.. சொல்றீங்க.. அவங்களுக்கு புரிஞ்சா சரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கல்வெட்டு said...

//ஏழர said...

உண்மைதமிழன், நீங்க லீனா புருசன் ஜெரால்டுக்கு நெருங்கிய பிரண்டாமே.. செல்லவேயில்ல??? //
:‍-((
ஏழர உங்களுக்குபோய் பதில் சொன்னேனே. :-((((
உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன். தோற்றுவிட்டேன் நான். நீங்கள் வல்லவர் நல்லவர் உங்கள் கொள்கை நல்லது]]]

என்ன ஸார் சப்புன்னு முடிச்சிட்டீங்க..!

அவர் சொல்றது உண்மைதான்.. அதுக்காக மட்டுமே நான் எழுதலைன்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

"மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின்" யார் இவர்கள் ?? அவர்களின் ஆதர்சன கீரோக்களா? இவர்களை விமர்சனம் செய்தால் பிரச்சனை செய்வார்களா????

ஓ கல்வெட்டு 'லெனின் பிராய்டை புணர வேண்டும்' என்பது எந்த வகையான விமரிசனம் ஐயா???
யோனியின் மயிர் உபரி என்பது எந்த வகையான விமரிசனம் ஐயா???
முதலில் சர்ச்சைக்குறிய கவிதைகளை(?) வாசித்துவிட்டு வரவும்..

நான் உ.த.விடம் ஜெரால்டின் நண்பனா என்று கேட்டதன் பொருள் அவருக்கு நன்றாக புரியும். அது உங்கள் அக்கரைகான ஒன்றல்ல.]]]

ச்சே.. இப்படியே போனா, யாரும் யாருக்கும் பிரெண்ட்டா இருக்க முடியாது போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்மணி said...

அன்புள்ள உண்மைத்தமிழன்,
நேர்மையான பதிவுக்காக நன்றி.
கம்யூனிஸ்டுகள் எப்போதுமே இப்படித்தான். தான் சொல்வதுதான் சரி என்ற விடலைத்தனம் வாழ்நாளின் இறுதிவரை போகாத வெம்பல்கள் இவர்கள். இவர்களது தத்துவமும் ஒரு வெம்பல் தத்துவம்.
நான் ஒரு தனி மனிதனாகத்தான் இவர்களை எதிர்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தத்துவத்தை எதிர்த்து எழுதி கொண்டிருக்கிறேன். என் பதிவில் விவாதித்து தோற்றவர்கள் இவர்கள். கம்யூனிஸ சமூகம் எப்படி இருக்கும் என்ற ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் பதிலைக் காணவில்லை.
இன்றைக்கு உண்மையாக மக்களை நேசித்த காந்தி போன்றோரை கேவலப்படுத்தி இவர்கள் மட்டுமே ஏழைகளுக்காக இரங்குகிறார்கள் போன்ற வேஷம் போடுகிறார்கள். அதுவும் சீனா கொடுக்கும் கூலிக் காசுக்கு மாரடிப்பவர்கள்.
இவர்கள் செய்ததாக நீங்கள் பாராட்டிய எதையும் நான் பாராட்டவில்லை. இந்த கூட்டத்தில் நீங்கள் பார்த்ததுபோல இவர்களது ஒவ்வொரு காரியத்திலும் அதன் பின்னாலும் ஒரு திட்டம் இருக்கும். அந்த திட்டம் ஒரு நாசகார திட்டமே.
நட்புடன்]]]

தமிழ்மணி ஸார்..

உங்கள் அளவுக்கு நான் கம்யூனிஸத்தை கரைத்துக் குடித்தவன் அல்ல..!

அந்த இஸத்தை முழுசாகத் தெரிந்தால் அது தேவையா? இல்லையா? என்று வாதாடலாம்..?

நீங்கள் சில ஆண்டுகளாக இது பற்றி பேசி வருவதும், எழுதி வருவதும் எனக்குத் தெரியும்.. முன்பு அசுரனுடன் நீங்கள் வாதிட்டதையெல்லாம் நான் ஒன்றுவிடாமல் வாசித்திருக்கிறேன்..!

எந்த இஸமும் அடுத்தத் தலைமுறை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது என்றால் அது இருந்து புண்ணியமில்லை.

நான் அவர்களது பின்புலத் திட்டங்களை அறிந்தவனல்ல.. தெரிந்தால் சொல்லுங்கள்.. தெரிந்து கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
என்ன முருகா கூட்டம் கம்மியாயிருக்கு?]]]

அதான் எனக்கும் தெரியலை ஸார்..! ஒரு மாசமாவே நம்ம சைட்டு காத்தாடுது..

யாரோ சூன்யம் வைச்சுட்டாங்க போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[அகநாழிகை said...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அந்த நிகழ்ச்சியில் ம.க.இ.க. அராஜகத்தையும், அவர்கள் பேசிய ஆபாச வார்த்தை மற்றும் கூட்டம் நடத்த விடாமல், ஆரம்பிக்கும் முன்பாகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விதம் அவர்கள் மேல் எனக்கு 25 வருடங்களாக இருந்த கருத்தை உடைத்துவிட்டது. ஒரு கருத்தை அராஜகம் செய்தும், ஆபாச வார்த்தைகளுடன் கோஷமிட்டும் தகர்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ம.க.இ.க. தோழர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 25 வருடங்களாக இவர்கள் எதையுமே சாதிக்காமல் வெற்று கோஷங்களும், ஆபாசங்களுமாக குடித்துவிட்டு கோஷம் போட்டதினால்தானே என்னவோ அதிகாரத்திற்கு எதிராக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களை நம்பி, வெற்றுப் பரபரப்புக்கு ஓடும் கூட்டம் மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. அப்படியொரு வசை வார்த்தைகளையும், ஆபாச நிகழ்வையும் வேறெந்த கூட்டத்திலும் நான் கண்டதில்லை. ‘தன்வினை தன்னைச் சுடும்‘ என்பார்கள் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது ம.க.இ.க. விஷயத்தில்.
0
அருமையான பகிர்வுக்கு நன்றி.]]]

அகநாழிகையின் அறச்சீற்றத்திற்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.வேல் said...

சுறா எப்ப சகா ரிலிஸ் ?

"உஷ்ஷ்ஷ்.. அப்பா.. யாராச்சும் கொஞ்சம் சோடா உடைங்கப்பா..! மூச்சு வாங்குது..!"

உடைச்சாச்சு]]]

மே கடைசீல வரலாம் சகா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@@எதிர்ப்புச் சக்தியை வலியவர்களிடம் காட்ட முடியாமல், எளியவர்களிடம் காட்டுகின்ற@@@

இது போன்ற சென்டிமென்ட் சீனெல்லாம் லீனாவின் கவிதைக்கு புருவத்தை உயர்த்தும் மாபெரும் பெண்ணிய போராளி பாராதிராஜாவின் அடுத்த படத்துக்கு எழுதிக் கொ்டுக்கவும்.. ஏனெனில் உண்மை இதற்கு நேர் எதிரானது.]]]

சென்டிமெண்ட் இல்லீங்கண்ணா.. என் மனசுல பட்டதை சொன்னேனுங்கண்ணா..!

[[[பெரியார் திடலில் ஈழப் பிரச்சனைக்காக வீரமணி நடத்திய கூட்டத்தின் நடுவில், வீரமணி - கலைஞர் கூட்டு துரோகத்தை அம்பலப்படுத்தி இது போலத்தான் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தி.க.வினரால் கடுமையாக தாக்கப்ட்ட தோழர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்..

போலி கம்யூனிஸ்டுகள் நடத்திவரும் பல கூட்டங்களில் அவர்களை அம்பலப்படுத்தி பேசிய, நோட்டீஸ் விநியோகித்த ம.க.இ.கவினர் மீது தாக்குதல் நடத்தப்ப்பட்டிருக்கிறது

சிறங்கம் பெரியார் சிலை உடைத்தபோது இராமன் படத்தை கொளுத்தியபோது அதே சீறங்கத்தில் கருவரை நுழைவு போராட்டம் நடந்த போதும் பார்ப்பனரின் கூலிப்படை ரவுடிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததை தெரிந்தும நிராயுதபாணியாக உள்ளே நுழைந்து மண்டை உடைபட்டனர்

தென்மாவட்ட சாதிக்கலவரங்களின்போது அதை எதிர்த்து ஆதிக்க சாதியினரின் ஊர்களிலேயே கூட்டம் நடத்தியது

தீட்சிதனின் கோட்டயான தில்லையில் தமிழை ஏற்றிய போது

இப்போது பார்ப்பனியத்தின் அதிகார பீடமாகிய சுப்ரீம் கோர்டில் தில்லைக்காவும் அனைத்து சாதி்யும் அர்ச்சகராகவும் என வ்ழக்குகளை நடத்துவது

ஜெயலலிதாவின் ஆட்சியிலேயே தெருத்தெருவாக அதிமுக பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி கூட்டம் போட்டது

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழகமே சோகத்தில் ஆழ்ந்து காங்கிரஸ் குண்டர்கள் வெறியாட்டம் போட்ட போது தன்தனியாக பேருந்திலும் ரயில்களிலும் ராஜீவை கொண்றது சரியென அம்பலப்படுதிதயது

ஜேப்பியார் முதல் உள்ளூர் சாராய ரவுடி கந்துவட்டி கும்பல்களை எதிரஃத்து இந்த நிமிடம் கூட தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில்
இப்படி ஒரு வலிய சக்தியிடம் எளிய தோழர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

இதில் டவுசர் கிழிவது மட்டுமல்ல உண்மைத்தமிழா பல தோழர்கள் உயிரும் இழந்திருக்கின்றனர்..

தோழர்களின் அரசியல் இதுதான் போராட்டமுறை இதுதான், நடுத்தர வர்க்க டீசன்ட் ஜென்டில்மேன்களுக்கு இது உவப்பாக இருக்காது ஆனால் என்னைப் பொருத்தவரை குடியும், கூட்டுக் கலவியும், ஊத்திக் கொடுத்து மூக்குடைக்கும் இந்த இலக்கியவாத கழிசடைக்ளின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வாழ்க்கையை விட இது பல்லாயிரம் மடங்கு உயர்ந்தே!]]]

அப்பாடா..!

கொள்கையே கலகம் பண்றதுதானா..?

இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்றவற்றைச் செய்து உங்களை நம்பிவரும் அப்பாவிகளை துன்பத்தில் ஆழ்த்துவீர்கள்..!?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

வாசு அவர்களே லீனாவின் கவிதையில் உள்ள வார்த்தையைத்தானே தோழர்கள் உச்சரித்தனர், உங்களுக்கு அது ஆபாசமாக தெரிந்தால் அந்த பாவம் லீனாவையே சேரும்..

மற்றபடி உங்க இலக்கியவாத கழிசடைக் கூட்டத்தின் யோக்கியதையை இன்னும் பல கூட்டங்களில் இது போல அம்பலப்படுத்தும் நேரத்தை தோழர்களுக்கு அளிக்க அந்த முருகப் பெருமானை வேண்டுகிறேன்.]]]

நான் கலந்து கொள்கின்ற விழாக்கள் எதிலும் அதுபோல் இனிமேல் நடக்கக் கூடாது என்றும் என் அப்பன் முருகனை வேண்டுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

கம்யூனிசத்தையும் கம்யூனிச தலைவர்களையும் கொச்சைப்படுத்தி எந்த நாயும் எழுதலாம், கேட்க நாதியில்லை என்ற "MYTH"ஐ தோழர்களின் இந்த முயற்சி உடைத்திருக்கிறது. இனி இந்த இலக்கியவாத அட்டைக் கத்தி வீரர்கள் இது போன்று உளருவதற்கு முன்னர் நிச்சயம் இரண்டு முறை யோசிப்பார்கள். அதுதான் சிறப்பு]]]

அதே சமயம் உங்களது இயக்கத்தின்பால் கொஞ்சம் ஈர்ப்பு கொண்டவர்களும் மார்க்ஸையும், ஏங்கல்ஸையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனிதநேயன் said...
கூட்டத்தில் கலந்துகொண்ட மகஇக தோழர்களுக்கு வாழ்த்துக்கள். நகரீகமற்ற எழுத்துக்களும் அதற்கு வக்காலத்து வாங்கும் போலிகளுடனும் போராடும்போது அத்துமீறுவதாக கூச்சல்கள் ஒலிக்கத்தான் செய்யும் அதைப் பொருட்படுத்தலாகாது. தொடர்ந்து போலிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்.]]]

மனிதநேயன் ஸார்..

நீங்க ஒருத்தர் போதும் ஏழரைக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[எண்ணத்துப்பூச்சி said...

//ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.//

உண்மைத்தமிழன் இப்பவே கண்ண கட்டுதே! எழுத்துச் சுதந்திரத்தை எந்த அரசியல் சட்டமும் தடை செய்ய முடியாது. அதுவும் நாட்டுக்கு எதிரான எழுத்து அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே புத்தகத்தை தடை செய்ய‌
முடியும்???]]]

இது போதாதா..? அப்ப நான் சொன்னது கரெக்ட்தானே..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

தோழர்களின் போராட்ட முறை இப்படிதான் இருக்கும். ஈழ பிரசினைகள் இவர்கள் காட்டிய அக்கறையும், சிதம்பரம் கோவில் பிரச்சினைகள் இவர்களின் தொடர்ந்த முன்னெடுப்புகளும் பாராட்டுதலுக்குரியது, ஜனநாயகம் செத்துப் போன இந்த நாட்டில் வெற்று அறிக்கைகள் பலன் தராது.
ஆனால் லீனாவின் கவிதை முடிந்துபோன ஒன்று, இதை போன்ற சாதாரண விசயங்களிலும் அவர்கள் தலையிடுவது ஒரு வகையில் பின்னடைவே.]]]

நானும் இதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்..!

ஏழரைக்கு புரிய மாட்டேங்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...

இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள், அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்!

Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும்கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!]]]

எப்படி ஸார்..? லீனா எழுத்தில்தான் தனது கருத்தைப் பதித்தார். வினவு அண்ட் கோ..?

[[[கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
ஒரு தவறைக் கண்டிப்பது என்பது இன்னொரு தவறை ஆதரிப்பதாகிவிடக் கூடாது, நியாயப்படுத்தவும் கூடாது! நான்தான் முதலிலேயே லீனாவோடு உடன்படவில்லை என்று சொல்லியிருக்கிறேனே என்று ஒரு வரி எழுதியதாலேயே, மற்ற வரிகளை நியாயப்படுத்திவிட முடியாது.]]]

அடுத்தவரை நீங்கள் எப்படி தாக்கிப் பேசினாலும் சரி அது பேச்சாகத்தான் இருக்கும்..!

ஆனால் லேசாக கை நீட்டிவிட்டீர்களேயானால் அது தாக்குதல்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Elengo naman said...

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ம.க.இ.க தோழர்களின் அணுகுமுறை சரியானதாகவே தோன்றுகிறது. அவர்கள் கம்யூனிஸ்டுகள்; அவர்களின்
ஆசான்களை அவமதிப்பதை பற்றி விளக்கம் வேண்டுவது சரியான ஜனநாயக முறைதானே? அவர்கள் என்ன இந்துத்துவ கட்சிகள் போல உள்ளே புகுந்து அடிதடி வன்முறையிலா ஈடுபட்டார்கள்? இல்லையே. கேள்விகள் எழுப்பினார்கள். அது சரியானதுதானே? லேணா தான் எழுதிய கவிதையின் அரசியல் நியாயமானது என்றால் அதை விளக்கி இருக்கலாமே? அவருக்கு அதில் என்ன மனத்தடை?
இதற்கு முன்பு இந்த தோழர்கள் நடத்திய போராட்டங்களிலும் இதே போன்ற விடாப்பிடியான உறுதியைத்தான் காட்டி வந்திருக்கிறார்கள்.
பொதுவாக மா.லெ கட்சியினர் சமரசமற்றவர்கள். நீங்கள் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்? நீயும் பேசு நானும் பேசுவேன் எனும் லாவனி
கச்சேரியையா? அந்த மாதிரியான வழவழா கொழகொழா வழிமுறையை ஒரு மா.லெ கட்சியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உங்கள் தவறு. அவர்கள்
கட் & ரைட்டாக கறாராகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் இதுவரை இருந்துள்ளனர்.]]]

போச்சுடா.. நீங்கதான் அவங்களுக்கு பி.ஆர்.ஓ.வா..?

நல்லாயிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Elengo naman said...

பாரம்பரியமான திராவிட குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெரியாரியவாதியாக ம.க.இ.க தோழர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!!

இது போன்ற குப்பைகள் அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடைக்குள் துணிந்து இறங்கி சுத்தம் செய்ய முணைந்துள்ள உங்களுக்கு எனது மனப்பூர்வமான ஆதரவு என்றென்றைக்கும் உண்டு தோழர்களே.]]]

ரொம்பத் தப்பு பண்றீங்க இளங்கோ..? வன்முறையை எந்த விதத்திலும் நாம் ஆதரிக்கவே கூடாது.. அது பிற்காலத்தில் நம்மையே தாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[நொந்தகுமாரன் said...

//அவர்கள் மேல் எனக்கு 25 வருடங்களாக இருந்த கருத்தை உடைத்துவிட்டது.//

//25 வருடங்களாக இவர்கள் எதையுமே சாதிக்காமல் வெற்று கோஷங்களும், ஆபாசங்களுமாக குடித்துவிட்டு கோஷம் போட்டதினால்தானே என்னவோ அதிகாரத்திற்கு எதிராக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை//

அகநாழிகை, என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒரே குழப்பமா இருக்கு! சொல்ற கருத்தை தெளிவா சொல்லும்!]]]

அவர் தெளிவாத்தான் சொல்லியிருக்காரு நொந்தகுமாரன்.. மறுபடியும் படிச்சுப் பாருங்க.. புரியும்..!

மணிஜி said...

அண்ணே..தோனி..சீ...யோனி..சீ..சீ...ஞானீ..சீ..சீ....தேனீ...சீ..சீ...

தஞ்சையில் சரபோஜி கல்லூரியில் நான் படித்தபோது எங்கள் மாணவர் தலைவர் மூலமாக ம.க.இ.க எனக்கு அறிமுகம். திலகர் திடலில் நடந்த அத்தனை கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். பழைய பேருந்து நிலையத்தில் உண்டியல் ஏந்தியிருக்கிறேன்.பெசண்ட் லாட்ஜில் நடைபெற்ற சில கூட்டங்களும் இதில் அடக்கம். அப்போது இருந்த நக்சல்பாரி ஈர்ப்புதான் அதற்கு காரணம். இன்று அது நீர்த்து போயிற்று. இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில கூட்டங்கள்(நேற்று திருச்சியில் நடைபெற்றது போல்) ம.க.இ.கவினர் இன்னும் ஆரோக்கியமாய் செயல் பட்டால் நல்லது. ஆனால் ஈகோ அங்கும் தலைவிரித்து ஆடுகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[சரவணகுமார் said...

//ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.///

உண்மைத் தமிழன்
லீனா மணிமேகலையின் கவிதை மற்றும் ப்ளாகைத் தடை செய்யும்படி போலிஸ் கமிஷனரிடம் மனு மட்டுமே கொடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வன்முறை அல்லது அராஜகம் பிரயோகிக்கப்பட்டதா?

(தஸ்லிமா நஸ்ரீனின் கூட்டத்தில் நடந்தது போல?) இல்லை என்றால் "நீங்கள் சொல்லும் ஜனநாயக முறையில்" இது எனக்குப் பிடிக்கவில்லை அதைத் தடை செய்யுங்கள் என்று காவல் த் உறையிடம் மனு கொடுப்பதை எதிர்த்து கண்டனக் கூட்டம் என்றால் எதால் சிரிப்பது என்று தெரியவில்லை. அதுவும் காவல் துறை ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா அல்லது நடவடிக்கை எடுக்கவாவது பரிசீலனை செய்ததா என்பதும் இதுவரை தெரியவில்லை.
கண்டனக் கூட்டத்தின் அழைப்பில்கூட மனு கொடுத்ததன்றி வேரெதுவும் நடந்து விட்டதாய் குறிப்பிடப் படவில்லை!!!!

அப்படியானால் இந்தக் கண்டனக் கூட்டமே ஒரு அராஜகமான, சீப் பப்ளிசிடி தேடிக் கொள்ளும் விஷயம் என்றுதான் தோன்றுகிறது.
கவிதையிலென்ன எழுதியிருந்தது? கவிதைச் சுதந்திரம்,கலைச் சுதந்திரம், வார்த்தைச் சுதந்திரம், பெண் சுதந்திரம், தெருப்புழுதி எல்லாம் பற்றி அப்புறம் யோசிக்கலாம். முதலில் மேற்சொன்ன சந்தேகத்திற்கு நீங்களோ அல்லது யாராவதோ பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் மிகவும் "ஜனநாயக முறையில்" நடந்த கூட்டத்தில் யாரோ சில பேர் புகுந்து கலாட்டா செய்ததாக அனைவரும் நினைத்து விடப் போகிறார்கள்]]]

காவல்துறையிடம் அந்தப் புகார் இதுவரையிலும் அப்படியேதான் உள்ளது.

எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி அவர்கள் யோசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் அது நடக்காது..!

அதற்காக இப்படியொரு கோமாளி முயற்சி நடப்பதை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

//அதை விட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..? ///

உண்மை தமிழன் அண்ணே,
கம்யூனிசம் நடைமுறையில் அராஜகத்திற்க்கும், சர்வாதிகாரத்திற்க்கும். பாசிசத்திற்க்கும்தான் இட்டுச் செல்லும் என்று பலரும் பல காலமாக சொல்லி வருகிறோம். இன்னும் நீங்க அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. கம்யூனிச தியரி எல்லாம் கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும். நடைமுறையில் மிக கொடூரமான மனித உரிமை மீறல்களை புரியாமல் கமயூனிசத்தை அமலாக்க முடியாது.

பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

ஒரு வகையில் இது ஒரு மதவாதம்தான். மிக எளிமைபடுத்தப்பட்ட வாதம். எதிரி என்று ஒரு குழுவை அல்லது இனத்தை அல்லது ‘வர்கத்தை’ சித்தரித்து, அவர்களை ஒழித்தால் பொன்னுலகம் அமைக்கலாம் என்ற வெறியை பரப்புவது. oversimplified 'us Vs them syndrome']]]

நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[சரவணகுமார் said...

போன பின்னூட்டத்தில் சொல்ல விட்டுப் போனது... எது எப்படியோ உங்கள் மனதில் பட்டதை தைரியமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் ஆட்டோ அனுப்புவியா? ஆள் அனுப்புவியா? என்றது போன்ற சீண்டல்களும் அநாவசியம்.]]]

"தைரியமாகப் பதிவு செய்திருப்பது" அப்படீன்னு நீங்களே சொல்லியிருக்கும்போது நான் அதை எழுதினதுல தப்பே இல்லை..

ச.முத்துவேல் said...

மொதோமுறையா உங்க ப்லாக்ல இப்பத்தான் படிக்கிறேன் தலைவரே. படிச்சும் முடிச்சுட்டேன்.நீங்க நீஈஈஈளமா எழுதுவீங்கன்னு எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, நீங்களே மூச்சுவாங்கி, சோடா கேட்கற அளவுக்கு நீள்மா இது?
( எப்படி மேட்டருக்குள்ளேயே வராம,கமெண்ட் போட்டுட்டேன் பாத்தீங்களா)

நாமக்கல் சிபி said...

//
நான் கலந்து கொள்கின்ற விழாக்கள் எதிலும் அதுபோல் இனிமேல் நடக்கக் கூடாது என்றும் என் அப்பன் முருகனை வேண்டுகிறேன்..!
//

இது மாதிரி விழாக்களுக்கெல்லாம் நீரு போயித் தொலைக்காம இரும்!

வேலில போற ஓணானை பிடிச்சி வேட்டில உட்டுகிட்டு அப்பன் முருகன்கிட்டே வேண்டுறதைப் பாரு!

நாமக்கல் சிபி said...

//[[[ஜோதிஜி said...
என்ன முருகா கூட்டம் கம்மியாயிருக்கு?]]]

அதான் எனக்கும் தெரியலை ஸார்..! ஒரு மாசமாவே நம்ம சைட்டு காத்தாடுது..

யாரோ சூன்யம் வைச்சுட்டாங்க போலிருக்கு..!
//

யாரோவெல்லாம் இல்லை!
அம்பிக்கு அன்னியன் வெச்ச சூனியம்தான் இது!

ஏழர said...

@@@@@@@@@அப்போது இருந்த நக்சல்பாரி ஈர்ப்புதான் அதற்கு காரணம். இன்று அது நீர்த்து போயிற்று. இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில கூட்டங்கள்(நேற்று திருச்சியில் நடைபெற்றது போல்) ம.க.இ.கவினர் இன்னும் ஆரோக்கியமாய் செயல் பட்டால் நல்லது. ஆனால் ஈகோ அங்கும் தலைவிரித்து ஆடுகிறது.@@@@@@

ஓ தண்டோரா மணிஜி சொந்த அனுபவத்தில்தான் நக்சல்பாரிகளை உண்டியல் ஏந்தும் பிச்சைக்காரர்கள் என்று ஒருமுறை சொன்னீர்களா...??
உங்களுக்கு நக்சல்பாரி ஈர்ப்பு நீர்த்துபோயிருக்கலாம் அதற்காக உங்கள் அகம் போலவே புறத்திலும் நீர்த்த்து போயிருக்கிறதா என்ன?? தமிழகத்தில் ம.க.இ.கவின் வளர்ச்சியும் செயல்பாடும் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் உங்கள் ஈகோ அளவுக்கெல்லாம் வளரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்

ஏழர said...

@@@அப்பாடா..!

கொள்கையே கலகம் பண்றதுதானா..?

இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்றவற்றைச் செய்து உங்களை நம்பிவரும் அப்பாவிகளை துன்பத்தில் ஆழ்த்துவீர்கள்..!?@@@

உண்மைத்தமிழா.. உங்களைப்போன்ற அப்பாவிகளை துன்பத்தில் ஆழ்த்தாமல் சிதம்பரத்தில் தமிழை சிற்றம்பல மேடை ஏற்றியதும், சீரங்க கருவரைக்குள் நுழைவதும், கள்ளச்சாராய கந்துவட்டி ரவுடிகளை எதிர்ப்பதும் எப்படியென் சொல்லிக்கொடுங்க தெரிஞ்சுகிறோம்.. ஜெயிலுக்கு போகவும் அடிவாங்கவும் எங்களுக்கென்ன வேண்டுதலா???

உண்மைத்தமிழன் said...

[[[rosa said...

ஆள் இல்லாத கிரவுண்டுன்னு மார்க்சியத்த கையில எடுத்த்து யாருப்பு...]]]

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வினவு அளவுக்கு மறுவிவாதம் நடத்த திராணியுள்ளவர்கள் பலரும் இல்லாத நிலையில்(இருப்பவர்களும் ஒதுங்கியிருக்கும் சூழலில்) தனி ஆளாக வினவு கூட்டணி வலையுலகில் அடித்து ஆடுகிறது என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன்..

[[[மாமு .... அழைப்பிதல் தமிழில்தான் அச்சிடப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக என்று வேறு சொல்லிருக்க அப்பு... ஆனா பாரு அந்த மொத்த அழைப்பிதழுமே இணைய தளத்தில் அம்மையார் மேல விமர்சனம் வச்சாங்காட்டியும் தாக்குதல் அப்படிங்கு. அப்படின்னா எவன் விமர்சனம் வச்சாலும் புகார் பண்ணுவேன்னு சொன்னதும் இதுவும் அந்த அம்மையாரோட ஜனநாயக விரோத கருத்து இல்லையா.. அப்போ இவளுக்கு ஆதரவா வரும்போதோ உத அண்ணே நீங்க ஜனநாயகத்த மூட்ட கட்டி வச்சிட்டுதான் வாரீங்க•. அப்புறம் வந்துட்டு நான் மட்டும் பேசுவேன் மத்தவன் பேசக் கூடாது கடசில நன்றியுரை சொன்னப்புறம் பேச விடுவேன் அதுக்கு பதில் எல்லாம் கிடைக்காது அப்படின்னா கேக்குறவன் கேண ... இருக்கணும் இல்ல•. சட்டசப சனநாயகம் மாரில்லா இருக்கு]]]

அப்படியல்ல.. ஆதரவாளர்கள் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். அந்தக் கூட்டத்தில் எதிர்ப்பாளர்களுக்கு என்ன வேலை..? நேருக்கு நேர் மோதலுக்கு அவர்கள்தான் தயாராக இல்லையே..?

[[[அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க.வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விடமாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்]]]

அ.மார்க்ஸ் பற்றி வெளியுலகில் எந்த அளவுக்குத் தெரியுமோ அது அளவுக்குத்தான் எனக்கும் தெரியும்.. இந்த இடத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளை பற்றி நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@அதை விட்டுவிட்டு வீடு தேடிச் சென்று மிரட்டுவதும், இழுத்துச் செல்வதும் எந்த வகை கம்யூனிஸம்..?@@

அதியமான் ஒரு பச்சை பொய்க்காக சுண்டல் விக்க வந்துட்டீங்களே..]]]

அப்போ வீடு தேடிப் போகவே இல்லைங்குறீங்களா..?

சங்கர் வீட்டுக்குப் போனது யாராம்..?

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

ஹூசைன் வரைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையுன் இல்லை. அது அவரின் உரிமை. லெனின், மார்க்ஸ் பற்றி இப்படி ஒரு கவிதை எழுதியதால், ஒன்றும் குடி முழுகிவிடாது. ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இப்படி கவிதை எழுதினால், அங்கு உள்ள தீவிர கம்யூனிஸ்டுகள் யாரும் இப்படி பொங்கி எழ மாட்டார்கள். இது ஒரு பெரிய விசியமே இல்லை.]]]

இதைத்தான் நானும் சொல்கிறேன்..

[[[சரி, ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள்? உடனடி கைது மற்றும் தண்டனைதானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும்தானே? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா?]]]

அப்படியொண்ணு நடந்தால்தானே..!? ரொம்ப ஆசை அதியமான் உங்களுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
ஆப்பாயில் அதியமான்.. கேள்வி கேட்ட தோழர்களை பொங்கி எழுந்து அடிக்க வந்தவர் லீனா.. பாசிசம் எங்கே இருக்கிறது என்று கொஞ்சம் அறிவு நேர்மையோடு எழுதவும்..]]]

அப்படியொரு கேள்வி கேட்டது நீங்கள்தான்..! கோப உணர்வு என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே..

அவர்தான் உங்களை வரச் சொல்லவில்லையே..? பின்பு நேரில் வந்து இப்படியெல்லாம் கேட்டால் கோபப்பட மாட்டார்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

ஏழரை, சங்கர ராம சுப்பரமணியனை வீடு புகுந்து மிரட்டவில்லை என்கிறீர்களா ? எது பச்சை பொய் ?
நீங்கள் செய்தால் அது ’அறபோர்’ ; அதே காரியத்தை வேறு யாராவது செய்தால் அது ஏகாதிபத்தியம், அடக்குமுறை, ஃபாசிசம். இதுதானே உங்கள் இரட்டை வேடம்?]]]

குட் கொஸ்டீன் பிரதர்..!

[[[சென்ற மாதம் திண்டுக்கல்லை சேர்ந்த கவிஞர் ஒருவர் வினவு உடன் தொலைபேசியில் லீனா விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தற்காக, அவரின் மாமனார் வீட்டிற்க்கு கும்பலாக சென்று ’விளக்கம்’ கேட்டதாக கேள்விப்பட்டேன். சொன்னவரும் ஒரு கவிஞர் மற்றும் தீவர மார்கசியர் தான். திண்டுக்கள் ம.க.இ.க ‘தோழர்களிடம்’ கேட்டு பார்க்கவும்.]]]

இது வேறய்யா..!

[[[இந்திய ‘ஜனனாயகத்தை’ மிக இளக்காரமாக பேசும் உங்களை போன்றவர்கள், சவுதி அரேபியா, மைன்மார் போன்ற நாடுகளில் பிறந்திருந்தால், கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்று புரியும். அந்நாடுகளில் உங்களை போன்ற குழுக்களை கூண்டோடு தூக்கி உள்ளே போட்டு மித்தித்திருபார்கள்.]]]

நச்..!

உண்மைத்தமிழன் said...

[[[rosa said...

உத இது திருவிளையாடல் வசனம் மாதிரி நினைச்சிக்கிட்டு படிச்சிராதீங்க•.

புலவரே நெசமாலுமே இது நீங்கதான எழுதுனதா இல்லாங்காட்டி இக்சால வச்சே யாரும் எழுதிக் கொடுத்த்த‍ வாங்கியாந்து அப்படியே போட்டுட்டீங்களா...]]]

ஹி.. ஹி.. எனக்கு எழுதிக் கொடுக்குறதுக்கு ஒரு நல்ல ஆளை செட்டப் பண்ணிக் கொடுத்துட்டீங்கன்னா உங்க பேர்ல முருகன்கிட்ட வேண்டிக்கிறேன்..!

[[[கேள்வி கேட்டா கலாச்சார போலீசு? கேள்வி கேக்கவிடக் கூடாதுங்கிறதுக்காக சட்டம் ஒழுங்கு போலீச கூப்பிடலாம் அப்படிங்கிறதுதான் உங்க தமிழ் மொழில சனநாயகமா...]]]

ஜனநாயகம் இல்லை.. சட்டம்.. உங்களை யார் கேள்வி கேட்க வேண்டாம் என்று சொன்னது.. அதுதான் இணையத்தளங்களில் எழுதித் தள்ளினீர்களே.. அது உங்களது உரிமை..!

லீனாவின் கவிதை உங்களை மிக நெருக்கமாகத் தாக்கியது என்றால், சட்டப்படி தவறு என்றால் நீங்கள் போலீஸுக்குத்தான் போயிருக்க வேண்டும்.. நேரில் வந்து தகராறு செய்யக்கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[rosa said...
உத அண்ணே.. லிணா நிறைய கேமரா ஆளுங்கள கூப்பிட்டிட்டுதான் வந்திருந்தாங்க. எல்லா தோழர்களையும், கேள்வி கேட்டவர்களையும் மூஞ்சிக்கு பக்கத்துல வந்துதான் போட்டா பிடிச்சீங்கள். அதுக்கு யாரும் குறை சொல்ல்ல‍. எல்லா பேச்சுந்தான் பதிவாயிருக்கு. அக்கா வேற டைரக்டரு. வரப் போற படத்துக்கு யாரு கத வசனம்னு தெரியல•. எனக்கு ரெண்டு மூணு ஜனநாயகவாதிகள பத்தி தெரியணும். சபயில கேட்ட கேள்விக்கு வெளிய வந்து ஆப் கேமரால பதில் சொல்றேன்னு சொல்லி வெளிய போன ராஜன்குறை சபைக்கு தந்த ஜனநாயகம், அமா பேசும்போது பின்னாடி வந்து மூஞ்சிய காட்டாம கத்துன ரோசா வசந்த், கேள்வியெல்லாம் அபத்தமாக இருப்பதாக கேள்வி கேட்டவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பேசத் தெரிந்த சுகுணா திவாகர்... இதுதாங்க]]]

இதென்ன ஒரு கேள்வி..? சுத்தமா புரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

ஏழரை, முதலி்ல் மரியாதையா பேச கற்றுக் கொள். என்னை ஆஃப்பாயில் என்று அழைப்பது தனி மனித தாக்குதல். (இதெல்லாம் வினவு தளத்தில் வைத்துக்கொள். அங்கு தான் இது Standard Operating Procedure ஆச்சே).]]]

ஏழரை அண்ணே.. அதியமான் அண்ணனை டென்ஷனாக்காதீங்க.. நீங்கள் அப்படி அழைத்ததும், அழைப்பதும் முற்றிலும் தவறு..

எதிர் மனிதர்களுக்கு முதலில் மரியாதை கொடுத்துப் பழகுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
ஆப்பாயில் என்பது அரைகுறை.. நீர் அரைகுறையான தகவல்களுடன் வந்து பேசுவதால் ஆப்பாயில் என்றேன்... பதிலுக்கு என்னை புல்பாயில் என்று தாராளமாக அழைக்கலாம். தோழர் அதியமான் அவர்களே..]]]

செய்கின்ற தவறையும் நியாயப்படுத்துவது அதைவிடத் தவறு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி. இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/]]]

கோபம் வராம என்ன செய்யும்..? நீங்கள் நேரில் கேட்டதால் அவரும் நேரிலேயே தனது கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்..

எழுத்தில் செய்திருந்தால் அவரும் எழுத்தில் தனது ஆவேசத்தைக் காட்டியிருப்பார்..!

இதிலென்ன தவறு..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@ஒரு கேள்வி : அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனைதானே ? அவரின் கவிதைகள் மற்றும் பல இதர நூல்கள் உடனடி தடை செய்யப்படும்தானே ? ’தோழர்களே’, பதில் சொல்ல முடியுமா ?@@

இல்லை என்று நான் சொன்னால் நீங்க நம்பவா போறீங்க.]]]

நான் நம்ப மாட்டேன்.. ஆமாம் என்பதுதான் சரியான பதில்.. இல்லையா ஏழரை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@இங்கு எழுத முடியாத கீழ்தரமான சொல்லாடல்களை கொண்டு, படு கேவலமான முறையில், வன்மத்துடன் கேட்க்கப்பட்ட கேள்வி அது.@@

எது கீழ்த்தரமான சொல்லாடல் அய்யா அதியமான் சார் காரு..
லெனின் பிராய்டை புணரவேண்டும் என்று லீனா எழுதியை சொல்றீங்களா??? புரியலையே.]]]

கண்டிப்பாகத் தவறுதான்..!

இதற்கு மறுதலிப்பாக நீங்கள் எழுதிய கவிதையும் இதேபோல்தான் இருந்தது..!

என்ன சொல்றீங்க..? அவரைக் குற்றம் சொல்ல உங்களுக்கென்ன தகுதி இருக்கிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[VISA said...
எல்லா போராட்டங்களும் அரசியல் என்ற கட்டத்துக்குள் அடைபட்டு போகிறபோது அதன் சுயநலம் முகம் காட்டி சிரிப்பதை தவிர்க்க முடியாது. அரசியல் என்பதை ஜனநாயகத்தில் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அரசியல் சாராத தனிமனிதன்தான் கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் போவான். மற்றவர்கள் தங்கள் வீட்டில் நாய் செத்து போனால்கூட அரசியல் நடத்தலாம். எனவே இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இருந்துகொண்டு இது போன்ற போராட்டங்களை ஆச்சரியத்தோடு வியந்து எழுதுவதா?]]]

என்ன செய்யறது..? வருமுன் உரைப்பது நமக்கும் நல்லதுதானே விஸா..!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
தஞ்சையில் சரபோஜி கல்லூரியில் நான் படித்தபோது எங்கள் மாணவர் தலைவர் மூலமாக ம.க.இ.க எனக்கு அறிமுகம். திலகர் திடலில் நடந்த அத்தனை கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். பழைய பேருந்து நிலையத்தில் உண்டியல் ஏந்தியிருக்கிறேன். பெசண்ட் லாட்ஜில் நடைபெற்ற சில கூட்டங்களும் இதில் அடக்கம். அப்போது இருந்த நக்சல்பாரி ஈர்ப்புதான் அதற்கு காரணம். இன்று அது நீர்த்து போயிற்று. இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில கூட்டங்கள்(நேற்று திருச்சியில் நடைபெற்றது போல்) ம.க.இ.க.வினர் இன்னும் ஆரோக்கியமாய் செயல்பட்டால் நல்லது. ஆனால் ஈகோ அங்கும் தலை விரித்து ஆடுகிறது.]]]

அவர்களின் உள் அரசியல் எனக்குத் தெரியாது என்பதால் வருகைக்கு நன்றி மட்டுமே என்னால் சொல்ல முடியும் மணிஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[ச.முத்துவேல் said...
மொதோ முறையா உங்க ப்லாக்ல இப்பத்தான் படிக்கிறேன் தலைவரே. படிச்சும் முடிச்சுட்டேன். நீங்க நீஈஈஈளமா எழுதுவீங்கன்னு எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, நீங்களே மூச்சு வாங்கி, சோடா கேட்கற அளவுக்கு நீள்மா இது?]]]

கொஞ்சம் கம்மிதான்.. ஆனா இப்பத்தான் முதல் முறையா வர்றேன்னு சொல்றது நல்லாயில்ல கவிஞரே..! இனிமே அடிக்கடி வரணும்..!

[[[(எப்படி மேட்டருக்குள்ளேயே வராம, கமெண்ட் போட்டுட்டேன் பாத்தீங்களா)]]]

புத்திசாலி.. இங்கனக்குள்ள பொழைச்சுக்குலாம் இதே மாதிரி நடந்துக்கிட்டீங்கன்னா..!

உண்மைத்தமிழன் said...

[[[என்.ஆர்.சிபி said...

//நான் கலந்து கொள்கின்ற விழாக்கள் எதிலும் அதுபோல் இனிமேல் நடக்கக் கூடாது என்றும் என் அப்பன் முருகனை வேண்டுகிறேன்..!//

இது மாதிரி விழாக்களுக்கெல்லாம் நீரு போயித் தொலைக்காம இரும்! வேலில போற ஓணானை பிடிச்சி வேட்டில உட்டுகிட்டு அப்பன் முருகன்கிட்டே வேண்டுறதைப் பாரு!]]]

அடப்பாவி முருகா..

பிளாக் தொழிலே இப்போ இதுதானே.. இதுக்கெல்லாம் போய் பயந்தா எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[என்.ஆர்.சிபி said...
//ஜோதிஜி said...
என்ன முருகா கூட்டம் கம்மியாயிருக்கு?]]

அதான் எனக்கும் தெரியலை ஸார்..! ஒரு மாசமாவே நம்ம சைட்டு காத்தாடுது.. யாரோ சூன்யம் வைச்சுட்டாங்க போலிருக்கு..!//

யாரோவெல்லாம் இல்லை! அம்பிக்கு அன்னியன் வெச்ச சூனியம்தான் இது!]]]

அப்போ நானு ஸ்பிளிட் பார்ட்டியா.? என்ன முருகா சொல்ற..?

ஆமா எங்க அந்த ஹீரோயின்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
தமிழகத்தில் ம.க.இ.கவின் வளர்ச்சியும் செயல்பாடும் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது.]]]

நான் மனப்பூர்வமாக இதனை ஒத்துக் கொள்கிறேன்..!

வளர்ச்சி ஓகே.. ஆனால் செயல்பாடுகள்தான் இது மாதிரியான குற்றங்களாக இருக்கிறது.. முற்றிலும் மாற்றிக் கொண்டால் நலமாக இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@@அப்பாடா..! கொள்கையே கலகம் பண்றதுதானா..? இன்னும் எத்தனை நாளைக்கு இது போன்றவற்றைச் செய்து உங்களை நம்பிவரும் அப்பாவிகளை துன்பத்தில் ஆழ்த்துவீர்கள்..!?@@@

உண்மைத்தமிழா.. உங்களைப் போன்ற அப்பாவிகளை துன்பத்தில் ஆழ்த்தாமல் சிதம்பரத்தில் தமிழை சிற்றம்பல மேடை ஏற்றியதும், சீரங்க கருவரைக்குள் நுழைவதும், கள்ளச்சாராய கந்துவட்டி ரவுடிகளை எதிர்ப்பதும் எப்படியென் சொல்லிக் கொடுங்க தெரிஞ்சுகிறோம்.. ஜெயிலுக்கு போகவும் அடிவாங்கவும் எங்களுக்கென்ன வேண்டுதலா???]]]

சிதம்பரம் விவகாரத்தில் கோர்ட்டுக்கு சென்றதுபோல் இதற்கும் நீதிமன்றத்திற்கே நீங்கள் போயிருக்கலாம்..!

இனிமேல் வரக் கூடிய அனைத்திற்கும்..!

உண்மைத்தமிழன் said...

ஏழரை கடைசியா ஒரு கேள்வி..

இது நீங்களா வைச்சுக்கிட்ட பேரா..? அல்லாட்டி யாராவது உங்களோட சேட்டையையெல்லாம் பார்த்துட்டு வைச்ச நிக் நேமா..?

பொருத்தமா இருக்கு..!

மணிஜி said...

இந்த பதில் ஏழரை அண்ணன் / தம்பிக்கு..
உண்டியல் ஏந்துவதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. காசை சுரண்டும் அரசியல் கட்சிகளை விட, உண்டியல் காசை மக்கள் பிரச்சனைகளுக்காக பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே.. நீர்த்து போனது என்பது அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடிய பின்தான் என்பது என் கருத்து.இன்றும் தேர்தல் பாதை திருடர் பாதை என்பது இருக்கிறதா நண்பரே..அதற்கான பிரச்சாரங்களை இப்போது கேட்கமுடிவதில்லை.எனக்கு அதில் உடன்பாடு உண்டு.கொஞ்சம் மாறியிருந்தால் முந்திரி காட்டில் தீவிரவாதியிருக்கலாம்.ஜஸ்ட் மிஸ்..

மணிஜி said...

ஏழரை சார்..ஈகோவும் இல்லை..புண்ணாக்கும் இல்லை.. போராளிகள் திசை மாறினால் என்னவாக ஆவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். தென் ஆற்காட்டில் அதுதான் நடந்தது.கொள்கைக்காக சிலரே இருக்கிறார்கள். அதற்கும் சாத்தியங்கள் குறைந்து கொண்டே இருக்கிறது. இருக்கிறவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
இந்த பதில் ஏழரை அண்ணன் / தம்பிக்கு..

உண்டியல் ஏந்துவதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. காசை சுரண்டும் அரசியல் கட்சிகளைவிட, உண்டியல் காசை மக்கள் பிரச்சனைகளுக்காக பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே.. நீர்த்து போனது என்பது அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடிய பின்தான் என்பது என் கருத்து.இன்றும் தேர்தல் பாதை திருடர் பாதை என்பது இருக்கிறதா நண்பரே.. அதற்கான பிரச்சாரங்களை இப்போது கேட்க முடிவதில்லை. எனக்கு அதில் உடன்பாடு உண்டு. கொஞ்சம் மாறியிருந்தால் முந்திரி காட்டில் தீவிரவாதியிருக்கலாம். ஜஸ்ட் மிஸ்..]]]

இந்த பதில் தண்டோரா அண்ணனுக்கு..!

தேர்தல் பாதைதான் ஜனநாயக ரீதியான பாதை..!

திருடர்கள்தான் 99 சதவிகிதம் இருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருந்தாலும், மீதி ஒரு சதவிகிதத்தை மாற்ற நினைப்பவர்கள் இருக்கலாமே..?

எதற்காக முந்திரித் தோப்பு தீவிரவாதியாக உருமாற்றம்..?

இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தியே..!

சரவணகுமார் said...

///காவல்துறையிடம் அந்தப் புகார் இதுவரையிலும் அப்படியேதான் உள்ளது.

எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி அவர்கள் யோசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் அது நடக்காது..!

அதற்காக இப்படியொரு கோமாளி முயற்சி நடப்பதை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்ன..?///

என்னைய்யா சொல்ல வர்ரீங்க.. எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை..அது என்னைப் புண் படுத்துகிறது அப்படீன்குறதுனால எழுதுனதை தடை செய்யணும்னு நான் நெனைக்கிறேன்.நான் நெனைக்கிறது சரியா தப்பான்னு ஒரு ஜனநாயக நாட்ல யார் முடிவு பண்ணுவாங்க?சட்டமும் கோர்ட்டும் தானே ? அதுனால அங்க போய் மனு குடுக்குறேன்..உங்க கருத்துரிமை சுதந்திரப் படி இது " கோமாளித்தனம்". நல்லா எழுதுரீங்கையா முன்முடிவுகளோட..அப்புறம் என்ன கருத்துரிமை மசுரு?? உனக்கு புடிச்சவள்/ன் எது பண்ணினாலும் கட்டுடைப்பு,கலாச்சாரம் அதுவே புடிக்காதவன் எதிர்ப்புக் குரல் கொடுத்துட்ட " கோமாளித்தனமா" ?

//ஆனால் ஆட்டோ அனுப்புவியா? ஆள் அனுப்புவியா? என்றது போன்ற சீண்டல்களும் அநாவசியம்.]]]

"தைரியமாகப் பதிவு செய்திருப்பது" அப்படீன்னு நீங்களே சொல்லியிருக்கும்போது நான் அதை எழுதினதுல தப்பே இல்லை..///

எங்கள் ஊரில் சொல்லுவார்கள் "முட்டாளிடமும் மூர்க்கனிடமும் நியாயம் பேசாதே " என்று.

Don't bother to reply. I will not read or comment in this post any more.

pichaikaaran said...

"கொஞ்சம் கொஞ்சமாக அரங்கத்தில் சரோஜாதேவி புத்தக வார்த்தைகளெல்லாம் சரளமாக புழங்க ஆரம்பித்தன'

நல்லதொரு இலக்கிய கூட்டத்தை மிஸ் செஞ்சுட்டேன் போல இருக்கே... வடை போச்சே ..

பதிவுக்கு நன்றி.... கூட்டத்திற்கு சென்று வந்த "திருப்தி" கிடைத்தது

" சித் || sid " said...

pl watch this video

http://www.youtube.com/user/ndtvhindu#p/u/7/bNtD1isu2XU

வஜ்ரா said...

கம்யூனிசமே அராஜகம் தான்...அதில் அவிங்க வெரைட்டி, இவிங்க வெரைட்டி எல்லாம் இல்லை.

tamil said...

இதில் இரு தரப்பிலும் நியாயம் இல்லை.இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்தது.அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காத போது இல்லாத ஆபத்து ஒன்றை இருப்பதாக காட்டி கூட்டம் போட்டது தேவையற்ற வேலை.அதில் ம்.க.இ.கவினர் புகுந்தது கலாட்டா செய்ததும் தேவையற்ற ஒன்று.இரு தரப்பும் அறியாதது ஒன்று உண்டு- அதன் பெயர் நாகரிகம். இரண்டு தரப்பையும் புறக்கணித்து அவர்கள் அடித்துக் கொண்டாலும், கடித்துக் கொண்டாலும் என்னவும் ஆகட்டும் என்று விட்டுவிட வேண்டும்.அதுதான் இந்த நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிக்கும் வழி.

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
ஏழரை சார். ஈகோவும் இல்லை. புண்ணாக்கும் இல்லை. போராளிகள் திசை மாறினால் என்னவாக ஆவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். தென் ஆற்காட்டில் அதுதான் நடந்தது. கொள்கைக்காக சிலரே இருக்கிறார்கள். அதற்கும் சாத்தியங்கள் குறைந்து கொண்டே இருக்கிறது. இருக்கிறவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..]]]

எத்தனையோ இளைஞர்கள் நகஸ்ல்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டு தேவராம் அண்ட் கோஷ்டியினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கதையைப் படித்திருக்கிறேன்..!

எல்லாம் என்னவாயிற்று..?

உண்மைத்தமிழன் said...

[[[சரவணகுமார் said...

//காவல்துறையிடம் அந்தப் புகார் இதுவரையிலும் அப்படியேதான் உள்ளது. எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி அவர்கள் யோசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயம் அது நடக்காது..! அதற்காக இப்படியொரு கோமாளி முயற்சி நடப்பதை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்ன..?//

என்னைய்யா சொல்ல வர்ரீங்க.. எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை. அது என்னைப் புண்படுத்துகிறது அப்படீன்குறதுனால எழுதுனதை தடை செய்யணும்னு நான் நெனைக்கிறேன். நான் நெனைக்கிறது சரியா தப்பான்னு ஒரு ஜனநாயக நாட்ல யார் முடிவு பண்ணுவாங்க? சட்டமும், கோர்ட்டும்தானே ? அதுனால அங்க போய் மனு குடுக்குறேன். உங்க கருத்துரிமை சுதந்திரப்படி இது "கோமாளித்தனம்". நல்லா எழுதுரீங்கையா முன் முடிவுகளோட. அப்புறம் என்ன கருத்துரிமை மசுரு?? உனக்கு புடிச்சவள்/ன் எது பண்ணினாலும் கட்டுடைப்பு,கலாச்சாரம் அதுவே புடிக்காதவன் எதிர்ப்புக் குரல் கொடுத்துட்ட " கோமாளித்தனமா"?]]]

ஏன் இந்த ஆவேசம்.. சரவணக்குமாரா..!

ஒரு நிமிடம்..

நீங்கள் என் மீது காவல்துறையில் புகார் கொடுக்குறீர்கள். அந்தப் புகார் தவறு என்று நான் எனக்குத் தெரிந்தவர்களிடம், என்னைப் போலவே அதே துறையில் இருப்பவர்களிடம் கூட்டம் போட்டுச் சொல்லி இது தவறா என்று நியாயம் கேட்கிறேன்..

இப்படி கூட்டம் நடத்துவதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லையே..?

நீங்களும் இதேபோல் கூட்டம் போடலாமே..? யார் வேண்டாம் என்பது..?

[[[//ஆனால் ஆட்டோ அனுப்புவியா? ஆள் அனுப்புவியா? என்றது போன்ற சீண்டல்களும் அநாவசியம்.]]]

"தைரியமாகப் பதிவு செய்திருப்பது" அப்படீன்னு நீங்களே சொல்லியிருக்கும்போது நான் அதை எழுதினதுல தப்பே இல்லை..///

எங்கள் ஊரில் சொல்லுவார்கள் "முட்டாளிடமும் மூர்க்கனிடமும் நியாயம் பேசாதே " என்று.
Don't bother to reply. I will not read or comment in this post any more.]]]

Thanks very much..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"கொஞ்சம் கொஞ்சமாக அரங்கத்தில் சரோஜாதேவி புத்தக வார்த்தைகளெல்லாம் சரளமாக புழங்க ஆரம்பித்தன'

நல்லதொரு இலக்கிய கூட்டத்தை மிஸ் செஞ்சுட்டேன் போல இருக்கே. வடை போச்சே.

பதிவுக்கு நன்றி. கூட்டத்திற்கு சென்று வந்த "திருப்தி" கிடைத்தது]]]

வடைக்கான காசு எப்போ கிடைக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[sidpages said...

pl watch this video

http://www.youtube.com/user/ndtvhindu#p/u/7/bNtD1isu2XU]]]

தகவலுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[வஜ்ரா said...
கம்யூனிசமே அராஜகம்தான். அதில் அவிங்க வெரைட்டி, இவிங்க வெரைட்டி எல்லாம் இல்லை.]]]

நான் அப்படி நினைக்கவில்லை.

அதனை செயல்படுத்திய முறையில்தான் அதற்கு நிறைய தோல்விகள் கிடைத்து வருகின்றன என்பது என்னுடைய புரிதல்..!

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...
இதில் இரு தரப்பிலும் நியாயம் இல்லை. இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்தது. அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காதபோது இல்லாத ஆபத்து ஒன்றை இருப்பதாக காட்டி கூட்டம் போட்டது தேவையற்ற வேலை.அதில் ம்.க.இ.கவினர் புகுந்தது கலாட்டா செய்ததும் தேவையற்ற ஒன்று. இரு தரப்பும் அறியாதது ஒன்று உண்டு - அதன் பெயர் நாகரிகம். இரண்டு தரப்பையும் புறக்கணித்து அவர்கள் அடித்துக் கொண்டாலும், கடித்துக் கொண்டாலும் என்னவும் ஆகட்டும் என்று விட்டுவிட வேண்டும். அதுதான் இந்த நோய்க் கிருமிகளிடமிருந்து தப்பிக்கும் வழி.]]]

-))))))))))))))))))))

Osai Chella said...
This comment has been removed by a blog administrator.
pichaikaaran said...

பாஸ்.. நான் தெரியாமத்தான் கேட்கிறேன்...

பு.. சு... என்றெல்லாம் ஒரு பெண் எழுதினால் கவிதை... பொது உடமை வாதிகள் பேசினால் , ஆபாசமா... ? அவர்களும் எதிர் கவிதை படிகிறார்கள் என எடுத்து கொள்ளலாமே ..

திராவிட தலைவர்களை இழுத்து விட்டு கவிதை படைத்தது இருந்தால் , தனமான , இனமான திராவிட தோழர்கள் விட்டு விடுவார்களா.. ? பொது உடமை தோழர்களை மட்டும் ஏன் சாடுகிறீர்கள்,,,, அவர்கள் ஜாதகம் அப்படி...

என்ன இருந்தாலும், இலக்கிய விவாதத்தை வரிக்கு வரி கொடுத்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும்..

அதெல்லாம் சரி.. அந்த பெண் கவிஞர் நல்லவரா கெட்டவரா ?

உண்மைத்தமிழன் said...

செல்லா

ரொம்ப நாளாகி கமெண்ட் போட வரும்போதும் இப்படித்தான் போடுறதா..? முருகா..

மவனே உன்னால என் முதுகுல டின் கட்டப் போறாங்க..!

நல்லாயில்லை.. கமெண்ட்டைத் தூக்கிட்டேன்.. ஸாரி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

பாஸ்.. நான் தெரியாமத்தான் கேட்கிறேன்...

பு.. சு... என்றெல்லாம் ஒரு பெண் எழுதினால் கவிதை. பொது உடமைவாதிகள் பேசினால் ஆபாசமா? அவர்களும் எதிர் கவிதை படிகிறார்கள் என எடுத்து கொள்ளலாமே ..

திராவிட தலைவர்களை இழுத்து விட்டு கவிதை படைத்தது இருந்தால், தனமான, இனமான திராவிட தோழர்கள் விட்டு விடுவார்களா..? பொது உடமை தோழர்களை மட்டும் ஏன் சாடுகிறீர்கள், அவர்கள் ஜாதகம் அப்படி.

என்ன இருந்தாலும், இலக்கிய விவாதத்தை வரிக்கு வரி கொடுத்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும்.

அதெல்லாம் சரி.. அந்த பெண் கவிஞர் நல்லவரா கெட்டவரா?]]]

பார்வையாளன் ஸார்..

அந்தக் கவிதை எனக்கும் பிடிக்கவில்லை.

உடல் அவயங்களை முன் வைத்து பொதுவெளியில் கவிதை வடிப்பது முற்றிலும் தவறு என்பது எனது அபிப்ராயம்..!

மற்றபடி எந்தத் தலைவர்களை அந்த இடத்தில் உருவகப்படுத்தினாலும் அது தவறுதான்..!

அவர் நல்லவரா கெட்டவரா என்பதை எந்த அளவுகோலை வைத்துச் சொல்வது..?

ஏழர said...

அவர் நல்லவரா கெட்டவரா என்பதை எந்த அளவுகோலை வைத்துச் சொல்வது..?@@@

கூலி கேட்ட அசிஸ்டென்டு டைரக்டரா அடிச்சாங்க பாருங்க... அந்த கோலு வச்சு அளங்க உ.த.

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை எந்த அளவுகோலை வைத்துச் சொல்வது..?]]]

கூலி கேட்ட அசிஸ்டென்டு டைரக்டரா அடிச்சாங்க பாருங்க... அந்த கோலு வச்சு அளங்க உ.த.]]]

எப்பவும் ஆன்லைன்ல இருக்கீகளா சாமி..?

அந்தச் சம்பவம் கண்டிக்கத்தக்கதுதான்.. அவரும் அதனை ஒத்துக் கொண்டு அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போயிருக்கிறார்.

அது மட்டும் ஏதாவது ஒரு சினிமா படப்பிடிப்பாக இருந்திருந்தால் ஷோபா சக்தியின் நிலைமை வேறு மாதிரியாகியிருக்கும்.. மயிரிழையில் தப்பிவிட்டார்..! இதுவும் அவருக்கு ஒரு நல்லதொரு அனுபவத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன்..!

ஆனால் நல்லவர், கெட்டவர்ன்னு மொத்தமா ஒருத்தர் மேல பிராண்ட் நேமை புகுத்தறதுக்கு என்ன அளவுகோல்..?

ஏழர said...

ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால்.. தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறீங்க பாருங்க...அடடா... அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால் தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறீங்க பாருங்க. அடடா. அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!]]]

ஏழர அண்ணே..!

இதுக்கு மேல அந்த விஷயத்துல என்ன எழுதுறது..? நீங்களே சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!

K.R.அதியமான் said...

லீனாவின் கவிதைகள், லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் : இவர்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக ம.க.இ.க மற்றும் பல வகையான பொது உடைமைவாதிகள்,
நேரு முதல் மன்மோகன்சிங் வரை பலரையும் ’மாமா’ பயல்கள், கூட்டி கொடுக்கிறவர்கள் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவர்கள் என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மாற்றாக யாராவது எழுதினால் அது இழிவி செய்வதாக சொல்வது இரட்டை வேடம். அயோக்கியத்தனம்.

சங்கர ராம சுப்ர்ரமண்யனின் வீட்டிற்க்குள் அத்துமீறி நுழைந்த செயலே அராஜகம். காலித்தனம். ‘விளக்கம்’ கேட்டு மிரட்டுதல் அதைவிட காலித்தனம்.
இவர்கள் தலைமையில் செம்புரட்சி வந்தால், பெரிய அராஜகம் செய்து, நசுக்குவார்கள் என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகிறது.

? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

pichaikaaran said...

" லீனாவின் கவிதைகள், லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் : இவர்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்கிறார்கள்."

அதே கவிதையை, திராவிட தலைவர்களின் பெயரை இழுத்தோ அல்லது ஜாதி தலைவர்களின் பெயரை இழுத்தோ எழுதினால், சும்மா விட்டு விடுவார்களா.. பொது உடமை வாதிகள் என்றால் இலக்காரமாக பொய் விட்டதா என்பதுதான் கேள்வி...

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. நான் ஒரு நிறுவனத்துக்கு வியாபார விஷயமாக சென்றேன்... shoe இல்லை என்றால் அனுமதிக்க மாட்டோம் என சொல்லி விட்டர்கள்... நான் ஆணுரிமை என்றெல்லாம் பேசாமல், ஒரு shoe கடனாக பெற்று உள்ளே சென்றேன்... ஒரு இடத்தின் சட்ட திட்டங்களை மதிப்பதுதான் நாகரிகம்..

துப்பட்ட அணிய சொல்லி அவமான படுத்தி விட்டர்கள்...லோயல்லா கல்லூரி பெண் உரிமையை மதிக்க வில்லை என்று சொல்வது சரியா..
இதெல்லாம் பெண் உரிமை என்பதையே கிண்டல் செய்வது போல் இல்லையா ?

pichaikaaran said...

" நல்லாயில்லை.. கமெண்ட்டைத் தூக்கிட்டேன்.. ஸாரி.."

அந்த கவிதை யை விட , இது நல்லாத்தான் இருந்துச்சு...

பெண் என்றால் பேயும் இரங்கும் என நிரூபித்து விட்டிர்கள்..

அதெல்லாம் சரி.... அங்கு நடந்த இலக்கிய விவாதத்தை முழுதும் கொடுத்தால், நாங்களும் இலக்கிய அறிவை வளர்த்து கொள்ள உதவும்.. ஹி ஹி

K.R.அதியமான் said...

///அதே கவிதையை, திராவிட தலைவர்களின் பெயரை இழுத்தோ அல்லது ஜாதி தலைவர்களின் பெயரை இழுத்தோ எழுதினால், சும்மா விட்டு விடுவார்களா.. பொது உடமை வாதிகள் என்றால் இலக்காரமாக பொய் விட்டதா என்பதுதான் கேள்வி...

///

இந்துத்வவாதிகள் எம்.எஃப்.ஹுசைன் மீது இதே போன்ற ‘கேள்வி’யைதான் எழுப்புகின்றனர். யாரை பற்றி கவிதை எழுதினாலும், அதை எதிர்கொள்ளும் விதம் பற்றிதான் விவாதம். அய்ரோப்பிய நாடுகளில் இதை விட ‘அருமையான’ கவிதைகள் மற்றும் ஆக்கங்கள் உள்ளன. யாரும் பெருசா அலட்டிக்கொள்வதில்லை.

எதை மறுக்க,விமர்சிக்க கண்டிக்க கூடாது என்று யாருன் சொல்ல வில்லை. முறைகளை பற்றிதான் விவாதம். ஃபாசிச முறையா அல்லது ஜனனாயக முறையா என்று.

சங்கர ராம சுப்பிரமணியன் வீட்டிற்க்குள் அராஜகமாக நுழைந்தது பற்றி, நேரு முதல் மன்மோகன் சிங் வரை பலரையும் மாமா பயல்கள் என்று தூற்றுவதை பற்றி பேசாமல், சாமர்த்தியமாக ஒரு பக்கத்தை மட்டும் பேசுகிறீர்களே ?

pichaikaaran said...

"எதை மறுக்க,விமர்சிக்க கண்டிக்க கூடாது என்று யாருன் சொல்ல வில்லை. முறைகளை பற்றிதான் விவாதம். ஃபாசிச முறையா அல்லது ஜனனாயக முறையா என்று. "

ஏதோ தோழர்கள் மட்டும் தான் அராஜகமாக நடந்து கொண்டது போலவும், மற்றவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பு காட்டுவட்தகவும் , ஒரு காட்சியை உருவாக பார்கிறீர்கள்...
பாஸ், நீங்க தமிழ் நாட்ல தான் இருக்கீங்களா?

சேஷன் திராவிட தலைவரை தவறாக எழுதியதும், அவர் கார் மேல் கல் எறிந்தார்களே..

புரட்சி தலைவி ஆட்சி காலத்தில் வழகரிஞர் விஜயன் , மணிரத்னம் தாக்க பட்டர்களே....

ஒரு நாவல் எழுத விடாமல் , சுஜாதா தடுகபட்டரே...

ஹே ராம் எடுக்க, ஹிந்துத்வா சக்திகள் தடை போட்டனவே...

சண்டியர் படம் எடுக்க விடாமல் ரகளை செய்தார்களே...( பின் விருமாண்டி ஆனது )

ஒரு இலங்கை இயக்குனர் தாக்க பட்டரே...

இடை எல்லாம் மறந்து விட்டு, கம்யூனிஸ்ட் என்றாலே அராஜகம் என முத்திரை குத்துவது நியாயம் அல்ல... அவர்கள் இடத்தில், திராவிட கட்சியனரோ, ஜாதி குழுக்களோ இருந்திருந்தால், நிலை இதை விட மோசமாக இருந்து இருக்கும்....

அவர்களே பாவம்,, வெயில் மழை என்று அலைந்து திரிந்து, ஏதோ செய்து கொண்டு இருக்கிறர்கள்...அவர்களை நோய் கிருமிகள் என சொல்வது தவறு....

சமிபத்தில், ஒரு பயணம்... .கொளுத்தும் வெயிலில் ஓர் இளம் பெண் , பேருந்தில் பொது உடமை பிரசாரம் செய்தார்... அவர் கருத்தை ஏற்கிறோமோ , இல்லையோ, அவரை அங்கு இருக்கும் யாரும் தவறாக பார்க்க முடியவில்லை..அவரை வேண்டுமானால், புதுமை பெண் என ஏற்கலாம்..

அனால், இந்த பெண் கவிஞர், தேவை இல்லாத பேச்சு பேசி, பெண் விடுதலை என்பதையே, கேலி கூத்து ஆக்குகிறார்..... அவர் நோக்கம் சரிதான்... அவர் வழி முறை தவறு...

கம்யுனிசம் இறந்து விட்டது என்று பபரில் படித்து விட்டு, இப்படி தன வீரத்தை , கவிதை திறனை காட்டி விட்டார்....

K.R.அதியமான் said...

///ஏதோ தோழர்கள் மட்டும் தான் அராஜகமாக நடந்து கொண்டது போலவும், மற்றவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பு காட்டுவட்தகவும் , ஒரு காட்சியை உருவாக பார்கிறீர்கள்...
பாஸ், நீங்க தமிழ் நாட்ல தான் இருக்கீங்களா?///

என்ன ஒரு லாஜிக். மற்றவர்கள் அராஜகமாக நடப்பதால், இவர்களும் நடக்கலாமா என்ன ? காலித்தனத்தை யார் செய்தாலும் அது தவறுதான்.
அதை இப்படி நியாயப்படுத்தினால், எதிர்காலத்தில், செம்புரட்சிக்கு பின், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெளிவாகிறது. அதைதான் கடந்த கால வரலாறு காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞரை கூபாவில் சிறையில் அடைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. சப்பை காரணங்கள் சொல்லி. பெரும் சர்ச்சை அன்று.

சரி, நான் எழுப்பிய விசியங்களுக்கு நேரடியான பதிலை சொல்லாமல், இப்படி...

நான் தமிழ்நாட்டில் தான் இருக்கேன். நீங்கதான் கற்பனை உலகில் மிதக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

pichaikaaran said...

" மது தியேட்டர்தானே..?

வன்முறையை வன்முறையால்தான் எதிர் கொள்ள வேண்டும் என்கிற வன்முறைக் கொள்கை கொண்ட கூட்டம்..!"

பாஸ்.. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா....

அவர்கள் தங்கள் சொந்த பிரச்னைகாகவா வன்முறை செய்தார்கள்...

நாம் எல்லாம், ஆபாச பட விவகாரம் தெரிந்த வுடன், இவிங்க எப்பவுமே இப்படித்தான்... கடவுள்தான் அலது கவருமேண்டுதான் இவின்க்களை திருத்தணும் என்று நகர்ந்து விடுவோம்... நடைமுறையில், இதுதான் விவேகம்... அனால் எல்லோரும் இப்படி விவேகம் அடைந்து விட்டால், யார்தான் இதை எல்லாம் மாற்றுவது...

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...
லீனாவின் கவிதைகள், லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் : இவர்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக ம.க.இ.க மற்றும் பல வகையான பொது உடைமைவாதிகள்,
நேரு முதல் மன்மோகன்சிங் வரை பலரையும் ’மாமா’ பயல்கள், கூட்டி கொடுக்கிறவர்கள் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இவர்கள் என்ன வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மாற்றாக யாராவது எழுதினால் அது இழிவி செய்வதாக சொல்வது இரட்டை வேடம். அயோக்கியத்தனம்.]]]

உண்மைங்கண்ணா..!

[[[சங்கர ராம சுப்ர்ரமண்யனின் வீட்டிற்க்குள் அத்துமீறி நுழைந்த செயலே அராஜகம். காலித்தனம். ‘விளக்கம்’ கேட்டு மிரட்டுதல் அதைவிட காலித்தனம்.
இவர்கள் தலைமையில் செம்புரட்சி வந்தால், பெரிய அராஜகம் செய்து, நசுக்குவார்கள் என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகிறது.]]]

ஸ்டாலின் ஆட்சிக் காலக் கொடுமைகள்தான் நடைபெறும்..!

உண்மைத்தமிழன் said...

[[[? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.]]]

ஏன்..? எதுக்கு..? இப்ப யார் கேட்டா இதை..?

இது மாதிரி ஒவ்வொருத்தர் எழுதற எல்லாத்தையும் பூதக்கண்ணாடி வைச்சு மேய்ஞ்சுக்கிட்டிருந்தா பொழப்பு ஓடிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"லீனாவின் கவிதைகள், லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் : இவர்களை இழிவுபடுத்துகிறது என்று சொல்கிறார்கள்."

அதே கவிதையை, திராவிட தலைவர்களின் பெயரை இழுத்தோ அல்லது ஜாதி தலைவர்களின் பெயரை இழுத்தோ எழுதினால், சும்மா விட்டு விடுவார்களா. பொதுஉடமைவாதிகள் என்றால் இலக்காரமாக பொய் விட்டதா என்பதுதான் கேள்வி.]]]

நான் இந்தக் கவிதையே தப்புங்குறேன்.. அப்புறம் ஆளை மாத்திப் போட்டா என்னன்னு கேக்குறீங்க..?

[[[அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. நான் ஒரு நிறுவனத்துக்கு வியாபார விஷயமாக சென்றேன்... shoe இல்லை என்றால் அனுமதிக்க மாட்டோம் என சொல்லி விட்டர்கள். நான் ஆணுரிமை என்றெல்லாம் பேசாமல், ஒரு shoe கடனாக பெற்று உள்ளே சென்றேன். ஒரு இடத்தின் சட்ட திட்டங்களை மதிப்பதுதான் நாகரிகம். துப்பட்ட அணிய சொல்லி அவமானபடுத்திவிட்டர்கள். லோயல்லா கல்லூரி பெண் உரிமையை மதிக்கவில்லை என்று சொல்வது சரியா. இதெல்லாம் பெண் உரிமை என்பதையே கிண்டல் செய்வது போல் இல்லையா?]]]

எதிர்ப்பதும், ஏற்பதும் அவருடைய உரிமை..! நாம் சொல்ல என்ன இருக்கிறது..?

நானாக இருந்திருந்தால் சத்தம் காட்டாமல் திரும்பி வந்திருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"நல்லாயில்லை.. கமெண்ட்டைத் தூக்கிட்டேன்.. ஸாரி.."

அந்த கவிதையை விட, இது நல்லாத்தான் இருந்துச்சு. பெண் என்றால் பேயும் இரங்கும் என நிரூபித்து விட்டிர்கள்..]]]

அந்தக் கவிதையே எழுதப்பட்டிருக்கக் கூடாது என்று வாதிட்டு வரும் வேளையில் இந்தப் பின்னூட்டத்தை எப்படி என்னால் ஏற்க முடியும்..?

[[[அதெல்லாம் சரி. அங்கு நடந்த இலக்கிய விவாதத்தை முழுதும் கொடுத்தால், நாங்களும் இலக்கிய அறிவை வளர்த்து கொள்ள உதவும்.. ஹி ஹி]]]

போதும்.. போதும்.. இதை எழுதியே மாளலை..

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

//அதே கவிதையை, திராவிட தலைவர்களின் பெயரை இழுத்தோ அல்லது ஜாதி தலைவர்களின் பெயரை இழுத்தோ எழுதினால், சும்மா விட்டு விடுவார்களா. பொது உடமை வாதிகள் என்றால் இலக்காரமாக பொய் விட்டதா என்பதுதான் கேள்வி.//

இந்துத்வவாதிகள் எம்.எஃப்.ஹுசைன் மீது இதே போன்ற ‘கேள்வி’யைதான் எழுப்புகின்றனர். யாரை பற்றி கவிதை எழுதினாலும், அதை எதிர்கொள்ளும் விதம் பற்றிதான் விவாதம். அய்ரோப்பிய நாடுகளில் இதை விட ‘அருமையான’ கவிதைகள் மற்றும் ஆக்கங்கள் உள்ளன. யாரும் பெருசா அலட்டிக் கொள்வதில்லை.

எதை மறுக்க,விமர்சிக்க கண்டிக்க கூடாது என்று யாருன் சொல்லவில்லை. முறைகளை பற்றிதான் விவாதம். ஃபாசிச முறையா அல்லது ஜனனாயக முறையா என்று.

சங்கரராமசுப்பிரமணியன் வீட்டிற்க்குள் அராஜகமாக நுழைந்தது பற்றி, நேரு முதல் மன்மோகன் சிங் வரை பலரையும் மாமா பயல்கள் என்று தூற்றுவதை பற்றி பேசாமல், சாமர்த்தியமாக ஒரு பக்கத்தை மட்டும் பேசுகிறீர்களே?]]]

குட் கொஸ்டீன் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"எதை மறுக்க,விமர்சிக்க கண்டிக்க கூடாது என்று யாருன் சொல்ல வில்லை. முறைகளை பற்றிதான் விவாதம். ஃபாசிச முறையா அல்லது ஜனனாயக முறையா என்று. "

ஏதோ தோழர்கள் மட்டும்தான் அராஜகமாக நடந்து கொண்டது போலவும், மற்றவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பு காட்டுவட்தகவும் ஒரு காட்சியை உருவாக பார்கிறீர்கள்...

பாஸ், நீங்க தமிழ் நாட்ல தான் இருக்கீங்களா?

சேஷன் திராவிட தலைவரை தவறாக எழுதியதும், அவர் கார் மேல் கல் எறிந்தார்களே..

புரட்சி தலைவி ஆட்சி காலத்தில் வழகரிஞர் விஜயன் , மணிரத்னம் தாக்க பட்டர்களே....

ஒரு நாவல் எழுத விடாமல் , சுஜாதா தடுகபட்டரே...

ஹே ராம் எடுக்க, ஹிந்துத்வா சக்திகள் தடை போட்டனவே...

சண்டியர் படம் எடுக்க விடாமல் ரகளை செய்தார்களே...( பின் விருமாண்டி ஆனது )

ஒரு இலங்கை இயக்குனர் தாக்கபட்டரே...

இடை எல்லாம் மறந்து விட்டு, கம்யூனிஸ்ட் என்றாலே அராஜகம் என முத்திரை குத்துவது நியாயம் அல்ல...

அவர்கள் இடத்தில், திராவிட கட்சியனரோ, ஜாதி குழுக்களோ இருந்திருந்தால், நிலை இதை விட மோசமாக இருந்து இருக்கும்.]]]

அவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை என்கிறீர்களா..? சின்ன பேட்டை தாதாக்கள் போல்..!

[[[அவர்களே பாவம்,, வெயில் மழை என்று அலைந்து திரிந்து, ஏதோ செய்து கொண்டு இருக்கிறர்கள். அவர்களை நோய் கிருமிகள் என சொல்வது தவறு.]]]

நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்.. அப்படியொரு சேவையை செய்து வரும் வேளையில் இந்த கேள்வி கேட்கும் முறை எதற்கு..? தேவையே இல்லையே..?

கவிதைக்கான எதிர்ப்பை அவர்களும் நோட்டீஸ் அடித்தே கொடுத்திருக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

//ஏதோ தோழர்கள் மட்டும் தான் அராஜகமாக நடந்து கொண்டது போலவும், மற்றவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பு காட்டுவட்தகவும் , ஒரு காட்சியை உருவாக பார்கிறீர்கள். பாஸ், நீங்க தமிழ் நாட்லதான் இருக்கீங்களா?///

என்ன ஒரு லாஜிக். மற்றவர்கள் அராஜகமாக நடப்பதால், இவர்களும் நடக்கலாமா என்ன? காலித்தனத்தை யார் செய்தாலும் அது தவறுதான்.
அதை இப்படி நியாயப்படுத்தினால், எதிர்காலத்தில், செம்புரட்சிக்கு பின், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெளிவாகிறது. அதைதான் கடந்த கால வரலாறு காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞரை கூபாவில் சிறையில் அடைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. சப்பை காரணங்கள் சொல்லி. பெரும் சர்ச்சை அன்று.

சரி, நான் எழுப்பிய விசியங்களுக்கு நேரடியான பதிலை சொல்லாமல், இப்படி...

நான் தமிழ்நாட்டில்தான் இருக்கேன். நீங்கதான் கற்பனை உலகில் மிதக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.]]]

ம்ஹும்.. அதியமான் அண்ணே நமக்கு வாய்ப்பே தர மாட்டேங்குறாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"மது தியேட்டர்தானே..?

வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற வன்முறைக் கொள்கை கொண்ட கூட்டம்..!"

பாஸ்.. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா....

அவர்கள் தங்கள் சொந்த பிரச்னைகாகவா வன்முறை செய்தார்கள்...

நாம் எல்லாம், ஆபாச பட விவகாரம் தெரிந்தவுடன், இவிங்க எப்பவுமே இப்படித்தான். கடவுள்தான் அலது கவருமேண்டுதான் இவின்க்களை திருத்தணும் என்று நகர்ந்து விடுவோம். நடைமுறையில், இதுதான் விவேகம். அனால் எல்லோரும் இப்படி விவேகம் அடைந்து விட்டால், யார்தான் இதை எல்லாம் மாற்றுவது.]]]

ஒரு பக்கம் இப்படி நீங்கள் நினைக்கலாம்..

இன்னொரு பக்கம் சங்கர்ராமசுப்பிரமணியன் நிலைமைல நீங்க இருந்து பாருங்க..

வன்முறையின் கொடூரம் உங்களுக்குப் புரியும்..!

pichaikaaran said...

இன்னொரு பக்கம் சங்கர்ராமசுப்பிரமணியன் நிலைமைல நீங்க இருந்து பாருங்க..

வன்முறையின் கொடூரம் உங்களுக்குப் புரியும்..!"

அப்படீனா இதை மட்டும் கண்டனம செய்யுங்க... ஒட்டு மொத்தமா, தோழர்களை அராஜகவாதிகள் என முத்திரை குத்தாதீர்கள்...

ஒரு திரை அரங்கில் ஆபாச படம் திரை இடுவார்கள்,,என் போன்றோர் அதை ஆசையுடன் பார்த்து ரசிப்பது வழக்கம்,.,,,, ஆனால், அது அந்த பகுதியில் பேருந்து பயணம் செய்யும் பெண்களுக்கும், அந்த சாலை வழி செல்லும் பெண்களுக்கும் பெரிய மன அழுததை ஏற்படுத்தியது..... இந்த விவாகரத்தில் இவர்கள் செய்த ரகளை சரியானதுதான்... ஒரு பெண் நிலைமையில் இருந்து பாருங்க.. உங்கள்ளுக்கும புரியும்.... ( அந்த கால கட்டத்தில், என்ன படம் போட்ட இவிங்களுக்கு என்ன.. பிடிக்கலேன்னா பார்க்கம இருக்க வேண்டியதுதானே,,ஏன் ரகளை செயராய்ங்க, என எரிச்சல் பட்டவந்தான் நான் ) ...

ஆக, இவர்களை அராஜக வாதிகள் என முத்திரை குத்துவது தவறு...

" கவிதை " விவகாரத்தில், கொஞ்சம் ஓவராத்தான் போய் விட்டார்களோ, என தோன்றினாலும், தமிழ் நாட்டு கட்சிகள் , அமைப்புகள் எல்லோரும் நடந்து கொள்ளும் விதத்தை ஒப்பிட்டால், இவர்கள் செய்தது ரொம்ப சாதாரணம்...

" அடுத்த வருடமே இந்தியாவில் ம.க.இ.க வினரின் தலைமையில் செம்புரட்சி உருவானால், லீனா மணிமேகலையை என்ன செய்வார்கள் ? உடனடி கைது மற்றும் தண்டனை தானே ? "

இப்போது கருத்து சுதந்திரம் இருப்பது போலவும், செம்ப்ரட்சி வந்தால், எல்லாம் போய் விடும் என கற்பனை உலகில் வாழ்பவர்கள் தான் நினைப்பார்கள்... ஓவியம் தீட்டிய ஒருவர் நாடு கடத்தப்பட்ட வரலாற்றுக்கு சொந்த காரர்கள நாம்... இப்போது கம்யுனிஸ்ட் ஆட்சியா நடக்கிறது ?

கூட்டி கழித்து பார்த்தால்,சிதனதம் என்பதை எல்லாம் விட, நடைமுறை எதார்த்தை கணக்கில் கொண்டால், தோழர்கள், கேள்வி கேட்டதையும், வில்லகம் கேட்டதையும், எதிர் கவிதை பாடியதையும், பார்த்து -ஜாதி தலைவர்கள், திராவிட இனமான உறுப்பனர்கள் எல்லாம், தோழர்கள் ரொம்ப நல்லவர்கள் என்றுதான் நினைகிறாக்கள் என்று கூறி, இந்த அளவில் இந்த விவாதத்தை முடிக்குமாறு கேட்டு கொள்கிறேன்...

ஏழர said...

@@@நேரு முதல் மன்மோகன்சிங் வரை பலரையும் ’மாமா’ பயல்கள், கூட்டி கொடுக்கிறவர்கள் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள@@@

அதியமான் , உ.த. நேரு முதல் மன்மோகன் வரை ஏன் மாமாப்பயல்கள் என்பதற்கு தோழர்கள் நிறைய நிறைய ஆதாரங்களை அள்ளி அள்ளித்தருவார்கள் ... லெனின் பிராய்டை புணர்ந்தற்றுக்கோ பீடத்தை மார்க்ஸ் எங்கல்ஸுக்க கொடுத்த்தற்கோ, உபரி மதிப்ப்பு யோனி மயிர் ஆணதற்கோ லீனா ஆதாரம் தரமுடியுமா....? எங்களுக்கு ஒரு நியாயம் லீனாவுக்கு ஒரு நீயாயமா.. நல்லா இருக்கு உங்க நாயகம்.

ஏழர said...

அது என் சங்கர ராம சுப்பிரமணியன் வீட்டுல அத்து மீஈஈஈஈறி நொழந்தா என்னமோ கதவ ஒடச்சிகிட்டு போனமாதிரி எல்லாரும் கூசாம பொய் சொல்றீங்க...??? அவரு இருக்கறது பிளாட்டு நீங்க சொல்ற மாதிரி ஒரு தகறாரு நடந்தா நாலு பேருக்கு
தெரிஞ்சு சண்டைக்கு விந்திருக்கமாட்டாங்கா??

வீட்டுக்கு போய் பெல் அடிச்சு வெளியே வந்தவரிடம் அய்யா உங்க கவிதையில் ஒரு டவுட்டு பேசலாமான்னுதான் கேட்டோம். இதுல என்னயையா அத்துமீறல் இருக்கு.. சத்தியமா புரீல அதியமான்

pichaikaaran said...

"கவிதைக்கான எதிர்ப்பை அவர்களும் நோட்டீஸ் அடித்தே கொடுத்திருக்கலாமே.."

பாதிக்கப்பட்டவர்கள் இல்லக்கிய வாதிகளாக மட்டும் இருந்து இருந்தால் அப்படி செய்யலாம்... அல்லது தமது சிஷ்ய கோடிகளை விட்டு , எதிர்கவ்தை யை பதிவிட்டு , படித்ததில் பிடித்தது என இணைப்பு கொடுத்து இருக்கலாம்.. ஆனால் அவர்கள் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கணக்கில் கொண்டால், நீங்கள் சொல்வது அபத்தமான ஆலோசனை என உங்களுக்கே புரியும்...

ஆனாலும், வழக்கமாக சமுக விரோதிகளுடன் மோதும் தோழர்கள் , இம்முறை ஒரு கவின்ஞருடன் மோதி உள்ளனர்... அந்த கவிஞ்ஞர் சமுக விரோதி அல்லர்...தோழர்களின் எதிரியும் அல்லர்...
முன்பு ஒரு முறை , தன்னை தவிர அனைவரும் மொக்கை பதிவர்கள் என ஒரு அன்லக்கி பதிவர் பேசினாரே ..அது போல , பேச தெரியாமல் பேசி விட்டார் கவிஞ்ஞர்... அந்த பதிவருக்கும் சரி, இந்த கவின்ஞருகும் ம் சரி... புண் படுத்துவது நோக்கமாக இருந்து இருக்க முடியாது....
ஏதோ பேச நினைத்து ஏதோ பேசுவது என்பது நம் அனைவரும் அவ்வபோது செய்வதுதான்..

தோழர்களின் உணர்வு காயபட்டுலத்தை புரிந்து கொள்ள முடிகிறது... மற்ற அமைப்பை விட நியாமகத்தான் எதிர்ப்பை காட்டி உள்ளனர் ..

ஆனாலும், யானை வேட்டைக்கு போனவன் சக வேடனுடன் சண்டை இட்டு நேரத்தை வீணடிப்பதை போல, இந்த விவகாரத்தில், மிகை எதிர் விளைவு ஆற்றி விட்டனர் என்பதே உண்மை...
அவர்கள் எதிரி இந்த பெண் கவிஞ்ஞர் இலாவே இல்லை...
இதனால் என்ன ஆகிறது என்றால், உண்மை தமிழன் போன்றவர்கள், தோழர்கள்-திரை அரங்கு பிரச்னை வரும்போது, இவிங்க எப்பவுமே இப்படித்தான் அடிச்சுகுவாய்ங்க, .என்று சமுக விரோதிகளையும் தோழர்களையும் ஒரே இடத்தில் வைத்து பேசுகிறார்கள்... இரு தரப்பும் நோய் கிருமிகள் என நினைக்கிறாகள் ள் என்றால் , அதற்கு காரணம் தோழர்களின் அணுகுமுறைதான்..
அவர்கள் நோக்கம் சரி.. அவர்கள் எதிர்ப்பும் சரிதான்... ஆனாலும் தங்கள் நிலையை தெளிவாக வெளிபடுத்த தவிரி விட்டர்கள் என்றே நடு நிலையாளர்கள் நினைக்கிறார்கள்...

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
இன்னொரு பக்கம் சங்கர் ராமசுப்பிரமணியன் நிலைமைல நீங்க இருந்து பாருங்க. வன்முறையின் கொடூரம் உங்களுக்குப் புரியும்..!"

அப்படீனா இதை மட்டும் கண்டனம செய்யுங்க... ஒட்டு மொத்தமா, தோழர்களை அராஜகவாதிகள் என முத்திரை குத்தாதீர்கள்...]]]

ஓகே.. சங்கர் மேட்டர்லேயும், லீனா மேட்டர்லேயும் தோழர்கள் நடந்து கொண்டவிதம் கண்டனத்துக்குரியது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@@நேரு முதல் மன்மோகன்சிங் வரை பலரையும் ’மாமா’ பயல்கள், கூட்டி கொடுக்கிறவர்கள் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள@@@

அதியமான், உ.த. நேரு முதல் மன்மோகன்வரை ஏன் மாமாப் பயல்கள் என்பதற்கு தோழர்கள் நிறைய நிறைய ஆதாரங்களை அள்ளி அள்ளித் தருவார்கள் ... லெனின் பிராய்டை புணர்ந்தற்றுக்கோ பீடத்தை மார்க்ஸ் எங்கல்ஸுக்க கொடுத்த்தற்கோ, உபரி மதிப்ப்பு யோனி மயிர் ஆணதற்கோ லீனா ஆதாரம் தர முடியுமா....? எங்களுக்கு ஒரு நியாயம் லீனாவுக்கு ஒரு நீயாயமா.. நல்லா இருக்கு உங்க நாயகம்.]]]

மாமா பயல்கள் என்று நீங்கள் விமர்சிப்பதற்கும், லீனாவின் கவிதை சொல்கின்ற விமர்னசமும் ஒன்றுதான்..!

உங்களுக்கு ஒரு நியாயம்.. லீனாவுக்கு ஒரு நியாயமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அது என் சங்கர ராம சுப்பிரமணியன் வீட்டுல அத்து மீஈஈஈஈறி நொழந்தா என்னமோ கதவ ஒடச்சிகிட்டு போன மாதிரி எல்லாரும் கூசாம பொய் சொல்றீங்க...??? அவரு இருக்கறது பிளாட்டு நீங்க சொல்ற மாதிரி ஒரு தகறாரு நடந்தா நாலு பேருக்கு
தெரிஞ்சு சண்டைக்கு விந்திருக்க மாட்டாங்கா?? வீட்டுக்கு போய் பெல் அடிச்சு வெளியே வந்தவரிடம் அய்யா உங்க கவிதையில் ஒரு டவுட்டு பேசலாமான்னுதான் கேட்டோம். இதுல என்னயையா அத்துமீறல் இருக்கு. சத்தியமா புரீல அதியமான்]]]

இதே மாதிரி ஏன் இப்ப ச.தமிழ்ச்செல்வன், ஜி.ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்கலை..

சங்கர்ராமன்தான் பலமில்லாதவர் என்பதனால்தானா..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"கவிதைக்கான எதிர்ப்பை அவர்களும் நோட்டீஸ் அடித்தே கொடுத்திருக்கலாமே.."

பாதிக்கப்பட்டவர்கள் இலக்கியவாதிகளாக மட்டும் இருந்து இருந்தால் அப்படி செய்யலாம்... அல்லது தமது சிஷ்ய கோடிகளை விட்டு, எதிர்கவ்தையை பதிவிட்டு , படித்ததில் பிடித்தது என இணைப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை கணக்கில் கொண்டால், நீங்கள் சொல்வது அபத்தமான ஆலோசனை என உங்களுக்கே புரியும்.]]]

ஒரு அபத்தமும் இல்லை.. சட்டத்தை இவர்களே கையில் எடுத்துக் கொள்ள உரிமையில்லை என்பதைத்தான் சொல்கிறேன்..!

ஏழர said...

@@இதே மாதிரி ஏன் இப்ப ச.தமிழ்ச்செல்வன், ஜி.ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்கலை..

சங்கர்ராமன்தான் பலமில்லாதவர் என்பதனால்தானா..?@@

உ.த. விவாதத்திற்காக சகிக்க முடியா வாதங்களை வைக்கவேண்டாம்...
அன்னிக்கு கவிதையை எழுதிய சங்கரனுடைய வீட்டுக்கு போனோம், ஆனா லீனா எழுதிய கவிதைக்கு தமிழ்செல்வன் வீட்டுக்கு எதுக்கு போகனுமின்னு நீங்கதான் சொல்லனும்... நாங்க போனதென்னமோ தமிழ்செல்வன் உட்பட வருவதாய் இருந்த அந்த கூட்டத்திற்குத்தான்.. மத்தபடி இந்த பலம் பலமில்ல அப்படீங்கற உங்க வார்த்தைக்கு அர்த்தமேயில்லை, நக்சலைட்டுகளை பற்றி கொஞ்சம் பொது அறிவு வேண்டும் உங்களுக்கு

ஏழர said...

@@மாமா பயல்கள் என்று நீங்கள் விமர்சிப்பதற்கும், லீனாவின் கவிதை சொல்கின்ற விமர்னசமும் ஒன்றுதான்..!

உங்களுக்கு ஒரு நியாயம்.. லீனாவுக்கு ஒரு நியாயமா..?@@@

இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டிக்கொடுத்த மன்மோகனை மாமா என்று சொல்லாம்ல் வேறு எப்படி சொல்வது.. ஆதாரத்தோடுதான் எழுதுகிறேம் உ.த.

pichaikaaran said...

"சங்கர் மேட்டர்லேயும், லீனா மேட்டர்லேயும் தோழர்கள் நடந்து கொண்டவிதம் கண்டனத்துக்குரியது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்".

சரி.. அது உங்கள் கருத்து... ஆனால், நடுநிலையாளர்களும், விஷயம் தெரிந்தவர்களும், இதை கண்டனத்துக்குரிய ஒன்றாக நினைக்க வில்லை....
வில்லன்களை விட்டு விட்டு , விளையாடு பிள்ளைகளுடன் மோதிய , வீண் வேலை
என்றுதான் நினைக்கிறாகள்...

நீங்களும் உணர்ச்சி வசபட்டு, தோழர்களை, வன்முறையாளர்கள், அராஜக வாதிகள்,பலம் இல்லை என்பதால் மோதுகிறார்கள் என்றும், நோய் கிருமிகள் என்றும், கூறியது தவறு என்பது உங்களுக்கே தெரியும்... சும்மா வாதத்திற்காக அப்படி சொல்லிவிட்டிர்கள்...

மற்றபடடி, விஷயமே புரியாமல், கீற்று பத்திரிகை மேல் எரிந்து விழுந்த சில அனலக்கி பதிவர்கள் போல் அல்லாமல், நேரடி ரிபோர்டிங் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
@@இதே மாதிரி ஏன் இப்ப ச.தமிழ்ச்செல்வன், ஜி.ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்கலை..
சங்கர்ராமன்தான் பலமில்லாதவர் என்பதனால்தானா..?@@

உ.த. விவாதத்திற்காக சகிக்க முடியா வாதங்களை வைக்க வேண்டாம். அன்னிக்கு கவிதையை எழுதிய சங்கரனுடைய வீட்டுக்கு போனோம், ஆனா லீனா எழுதிய கவிதைக்கு தமிழ்செல்வன் வீட்டுக்கு எதுக்கு போகனுமின்னு நீங்கதான் சொல்லனும். நாங்க போனதென்னமோ தமிழ்செல்வன் உட்பட வருவதாய் இருந்த அந்த கூட்டத்திற்குத்தான். மத்தபடி இந்த பலம் பலமில்ல அப்படீங்கற உங்க வார்த்தைக்கு அர்த்தமேயில்லை, நக்சலைட்டுகளை பற்றி கொஞ்சம் பொது அறிவு வேண்டும் உங்களுக்கு.]]]

ஆமாமா.. எங்களுக்கு கண்டிப்பா பொது அறிவு தேவைதான்..

இருந்தாத்தான் உங்களை மாதிரி ஆட்களை தனியா அடையாளம் கண்டுகொள்ள முடியும்..! இல்லாட்டி முடியாது பாருங்க..!?

என்னமோ செய்யுங்க..! மக்களோடு இணைந்து செயல்படும் அமைப்புகள் மட்டுமே மக்களால் வணங்கப்படும்.. நினைக்கப்படும்..

காவல்துறையைக் கண்டால் எப்படி பயம் வருமோ அதுபோல் உங்களையும் கண்டு பொதுமக்கள் ஒதுங்கிப் போகுமளவுக்கு உங்களது நடத்தையை வைத்துக் கொண்டு..

நாங்க மட்டும்தான் தெருவுல இறங்கி போராடுறோம்.. வேற யாரும் வரலை என்று பெருமையாகப் பேசிக் கொண்டேயிருப்பதில் அர்த்தமே இல்லை..!

இதோ.. இப்போது.. சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் ஆபீஸில் தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறதே பொதுஜனம்.. அவர்களுக்கு எங்கிருந்து வந்ததாம் அந்த எதிர்ப்புக் குணம்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@மாமா பயல்கள் என்று நீங்கள் விமர்சிப்பதற்கும், லீனாவின் கவிதை சொல்கின்ற விமர்னசமும் ஒன்றுதான்..! உங்களுக்கு ஒரு நியாயம்.. லீனாவுக்கு ஒரு நியாயமா..?@@@

இந்திய நாட்டை அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுத்த மன்மோகனை மாமா என்று சொல்லாம்ல் வேறு எப்படி சொல்வது. ஆதாரத்தோடுதான் எழுதுகிறேம் உ.த.]]]

அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளுக்கு நீங்கள் வைக்கின்ற பெயர் அதுவென்றால்.. எந்த அரசியல்வாதியும் இங்கே தப்பிக்க முடியாது..!

அதற்காக உங்களுடைய விமர்சனமும் இப்படித்தான் இருக்குமென்றால் லீனாவின் கவிதையும் இப்படித்தான் இருக்கும்..!

நாட்டில் நீங்கள் மட்டுமா எதிர்க் கருத்துடையவர்கள் இருக்கிறீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"சங்கர் மேட்டர்லேயும், லீனா மேட்டர்லேயும் தோழர்கள் நடந்து கொண்டவிதம் கண்டனத்துக்குரியது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்".

சரி.. அது உங்கள் கருத்து... ஆனால், நடுநிலையாளர்களும், விஷயம் தெரிந்தவர்களும், இதை கண்டனத்துக்குரிய ஒன்றாக நினைக்க வில்லை. வில்லன்களை விட்டுவிட்டு , விளையாடு பிள்ளைகளுடன் மோதிய, வீண் வேலை என்றுதான் நினைக்கிறாகள்...
நீங்களும் உணர்ச்சிவசபட்டு, தோழர்களை, வன்முறையாளர்கள், அராஜகவாதிகள், பலம் இல்லை என்பதால் மோதுகிறார்கள் என்றும், நோய் கிருமிகள் என்றும், கூறியது தவறு என்பது உங்களுக்கே தெரியும். சும்மா வாதத்திற்காக அப்படி சொல்லிவிட்டிர்கள்.]]]

போச்சுடா.. மறுபடியும் முருகை மரமா..? இந்த விளையாட்டுக்கு நான் வரலை சாமி.. ஆளை விடுங்க..!

? said...

ஒகே சார் அடுத்த பதிவர் சந்திப்பில் பார்ப்போம். லீனாவின் கவிதை அப்படித்தான் இருக்கும் என்றால் நீங்கள் எழுத விரும்பியதும் அதுதான் என்பது போல தெரிகிறது. எனவே நேரடியாக பேசுவதுதான் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[? said...
ஒகே சார் அடுத்த பதிவர் சந்திப்பில் பார்ப்போம். லீனாவின் கவிதை அப்படித்தான் இருக்கும் என்றால் நீங்கள் எழுத விரும்பியதும் அதுதான் என்பது போல தெரிகிறது. எனவே நேரடியாக பேசுவதுதான் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.]]]

வாங்க சந்திப்போம்..!

ஏழர said...

சங்கர ராம சுப்பிரமணி விட்டில் நடந்த்து என்ன?

வினவு அய்யனாருக்கு எழுதிய பின்னூட்டம்.

மேதகு அய்யனார் அவர்களே சங்கரராமசுப்பிரமணியன் விசயத்தில் என்ன நடந்தது என்று என்ன முடி (மயிறு) உங்களுக்குத் தெரியும்? அது என்ன யோனி அல்லது கம்யூனிச 'மதம்' குறித்த 'வெறியர்களின்' பிரச்சினையா? ஏதோ அரைகுறையாக கேட்டுவிட்டு தீர்ப்பை மட்டும் கம்பீரமாக எழுதுவீர்களோ? இதுதான் நீங்கள் இதுவரை இலக்கியத் தவத்தில் பெற்ற நல்ல பிள்ளை வேடமா?

முதலில் அது ஆபாசக்கவிதை என்பதற்காகவோ, இல்லை கம்யூனிசத்தை திட்டி எழுதியது என்பதெல்லாம் உண்மை இல்லை. எங்கள் கோபமும் அது இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து குண்டுமாரி பொழிந்து இலட்சக்கணக்கான மக்களை அழித்து வந்த காலமது. எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.

அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்த்து. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.

ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்கதூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.

இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இது கூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்? கவிஞரின் முகத்தில் ஆசிட் ஊற்றவேண்டும் என்று சொல்கிறாரா அய்யனார்? அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல.

எதை வேண்டுமானாலும் எழுதலாம் அய்யனார். நீங்கள் இருக்கும் பகுதிக்குப் பக்கத்தில்தான் ஈராக் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அடைந்த துன்பத்தை உணர்வதற்கு உங்களைப் போல புத்தகம்போட்ட ஒரு கவிஞனால் முடியாது. ஏன்னா உங்களுக்கெல்லாம் இலக்கியம் ஒரு ஃபேஷன். ஆனா கவிதை எல்லாம் எழுதிப் பெயரெடுக்காத எங்கள் தோழர்களுக்கு ஈராக்கும் இன்னும் ஒடுக்கப்படும் எல்லா நாடுகளும் இரத்தமும் சதையுமான வாழ்க்கை. இதுதான் அந்தமூன்று சொறிநாய்களின் கவிதை மீது கோபம் கொண்டதற்கு காரணம். அதை வைத்து நீங்கள் எங்களை காறி உமிழ்வதற்கும் அதுவே காரணம்.

நல்லது. பிரச்சினை என்று வெளியே வந்தால்தான் எல்லா முகங்களின் இலட்சணம் எல்லாம் எப்படி என்று தெரிகிறது.

http://www.ayyanaarv.com/2010/04/blog-post_23.html

ஏழர said...

அதற்காக உங்களுடைய விமர்சனமும் இப்படித்தான் இருக்குமென்றால் லீனாவின் கவிதையும் இப்படித்தான் இருக்கும்..!@@@@


எங்கள் விமர்சனத்திற்கு நாங்கள் விளக்கம் சொல்ல தயார்... லீனாவின் கவிதை இப்படித்தான் இருக்கும் இப்ப இன்னாங்குறேன்னு.. லீனாவுக்கு பி.ஆர்.ஓ வாக செயல்படும் நீங்கள் லீனாவின் கவிதைக்கு விளக்கம் சொல்ல தயாரா???

ஏழர said...

@@@@@என்னமோ செய்யுங்க..! மக்களோடு இணைந்து செயல்படும் அமைப்புகள் மட்டுமே மக்களால் வணங்கப்படும்.. நினைக்கப்படும்..

காவல்துறையைக் கண்டால் எப்படி பயம் வருமோ அதுபோல் உங்களையும் கண்டு பொதுமக்கள் ஒதுங்கிப் போகுமளவுக்கு உங்களது நடத்தையை வைத்துக் கொண்டு..

நாங்க மட்டும்தான் தெருவுல இறங்கி போராடுறோம்.. வேற யாரும் வரலை என்று பெருமையாகப் பேசிக் கொண்டேயிருப்பதில் அர்த்தமே இல்லை..!@@@@@

பிதற்றலின் உச்சக்கட்டம் என்று இதை எடுத்துக்கொள்ளலாம்..

யார் சார் உங்க பொதுமக்கள்??? நடுத்தற வர்க்க டீசன்ட் ஜென்டில்மேன்களா?? அவங்கதான் காவல்துறையை கண்டு பீதியடைவதும், ஊர்வலம் மறியலைக்கூட டிராபிக் இ்டையூறாக பார்க்கும் அற்பற்கள் .. வாழ்வில் அனைத்து சலுகைகளையும் வாய்ப்புகளையும் பெற்ற மிகச்சிறுபான்மையினார இவர்கள்தான் தம்மைதாமே 'பப்ளிக்' என கருதிக்கொள்பவர்கள்' ஆனால் இவர்களையெல்லாம் பொதுமக்கள் பட்டியலில் சேர்த்தால் அப்போ நாட்டின் மீதமிறுக்கிற 80% பேரை எதுல சேர்ப்பது???

தனது வாழ்வில் தண்ணிர் முதல் கூலிவரை அனைத்தையும் போராடித்தான் பெற முடிகின்ற நிலையில் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட இந்த பெரும்பான்மையினருக்கு 'ஒதுங்கிப்போவது' என்றால் என்னவென்றே தெரியாது... போலீசென்றால் பயமும் கிடையாது..

இவர்கள்தான் ''மக்கள்'' இவர்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம், இவர்களோடு இணைந்துதான் போராடுகிறோம்.. சுயநலமே வாழ்க்கையாகவுள்ள, நடுத்தர வர்க்க டீசென்ட் ஜென்டில்மேன்களை யெல்லாம் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமெல்லாம் எங்களுக்கு இல்லை, அவர்கள் அங்கிகாரமும் எங்களுக்கு தேவையும்இல்லை. அது வெட்டி வேலையும் கூட

மற்றபடி நாங்கள் மட்டும்தான் போராடுகிறோம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்கள் செயலின்மை உங்களிடம் தோற்றுவிக்கும் குற்ற உணர்ச்சியின் விளைவாக இருக்கலாம்.

ஏழர said...

@@இதே மாதிரி ஏன் இப்ப ச.தமிழ்ச்செல்வன், ஜி.ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்கலை..
சங்கர்ராமன்தான் பலமில்லாதவர் என்பதனால்தானா..?@@

உ.த. இன்னைக்கு கோர்ட்டுல எங்க தோழர்கள் கருணாநிதிக்கு முன்னால் முழக்கம் எழுப்பியதை பாத்தீங்களா???

http://www.vinavu.com/2010/04/25/hrpc-chennai/

இப்ப என்ன கேப்பீங்க பாரக்ஒபாமா வீட்டுக்கு முன்னால ஏன் மறியல் செய்யலையின்னா??

உண்மைத்தமிழன் said...

[[[மேதகு அய்யனார் அவர்களே எங்கள் தோழர்கள் ஈராக் மக்களுக்காக பெரும் பணியாற்றி வந்த நேரம்.
அப்போதுதான் அந்த கவிதையை காண நேரிட்டது. அது பாக்தாத் எரிகிறது, கல்யாணி காத்திருந்தாள், ஆண்குறிகள் தேடி வருகின்றன என்று ஈராக் மக்களின் அளப்பரிய போராட்டத்தை, தியாகத்தை வெறும் விபச்சாரியின் பிரச்சினை என்று சிறுமைப்படுத்தியிருந்த்து. இதை தண்ணியைப்போட்டு விட்டு விக்கிரமாதித்தயன் எழுதினார் என்று இப்போது சங்கர்ராமசுப்பு சொல்லியிருக்கிறார். அன்று சொல்லவில்லை.]]]

மேதகு வினவு..

நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள்.. கருத்தில் உறுதியாய் இருக்கிறீர்கள் என்பதற்காக மற்றவர்களும் அதேபோல் இருக்க வேண்டுமா என்ன..?

மற்றவர்கள் எடுத்திருக்கும் நிலைமை சரியோ, தவறோ அப்படியெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்..! இது அவர்களது தனிப்பட்ட உரிமை. இதில் நீங்கள் அத்துமீறி நுழைந்திருக்கிறீர்கள்.. நுழைகிறீர்கள்..!

[[[ஆக ஈராக் மக்களின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அமெரிக்க தூதரகத்தின் முன்னோ, இல்லை அதிகாரபீடங்களுக்கு முன்னோ சென்று கைது, சிறை, தடியடி இத்தனையும் வாங்கிக் கொண்டு போராடும் போது சரக்கடித்து விட்டு மூன்று சொறி நாய்கள் ஈராக் பிரச்சினையை கல்யாணியின் பிரச்சினையாக எழுதுகின்றன என்றால் எங்களுக்கு கோபம் வருமா, வராதா? இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம்.]]]

ஆஹா.. என்ன ஒரு ஜனநாயகம்..? நீங்கள் சொல்வதையும், நீங்கள் போதிப்பதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது..? ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்..!

மூன்று சொறி நாய்கள் என்ற வார்த்தைகள் வினவு தோழர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு..?

முதலில் நாகரிகமாக பேசவும், எழுதவும் மற்றவர்களை அழைக்கவும் கற்றுக் கொண்டுவிட்டு பின்பு அடுத்தவர்களுக்கு அறிவுரை போதிக்கவும்..!

[[[இதற்கு நியாயம் கேட்டுத்தான் வீட்டிற்குள் ஜனநாயக முறைப்படி சென்றோம். எங்களது தோழர்களது சுண்டு விரல் கூட கவிஞர் மீது படவில்லை. கதவை உடைத்து செல்லவில்லை. எஸ்யூஸ்மி என்று கேட்டுவிட்டுத்தான் சென்றோம். அந்த வட்டாரத்து மக்களிடம் இந்தக் கவிஞர் ஈராக் மக்களை கேவலப்படுத்தியிருக்கிறார் என்று நாங்கள் கருதுவது சரிதானா என்று கேட்டோம். படித்தவர்கள் சரிதான் என்றார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இதுகூட இல்லையென்றால் வேறு என்ன செய்யவேண்டும்?]]]

இதற்கு மேலேயே தெரிந்துவிட்டது உங்களுடைய ஜனநாயகம் என்னவென்று..? அந்த வார்த்தையை நீங்கள் ஏன் பயன்படுத்துகிறீர்கள் வினவு..?

[[[அத்தகைய இழிமுறைகளை செய்வதற்கு நாங்கள் ஒன்றும் பாசிச ஜெயாவின் தொண்டர்கள் அல்ல.]]]

ஆசிட் பாட்டிலாக இருக்க வேண்டுமென்றில்லையே.. இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் சொறி நாய்கள் என்கிற வார்த்தைகள்கூட பாசிச ஆசிட் வார்த்தைகள்தான். அவர்கள் பாட்டிலை வீசினார்கள். நீங்கள் வார்த்தைகளை வீசுகிறீர்கள். அவ்வளவுதான் உங்கள் இருவருக்கும் வித்தியாசம்..!

[[[ஈராக் மக்களின் சார்பில் வினவின் நன்றிகள்.]]]

இது வேறயா..? யார் உங்களுக்கு இந்த அத்தாரிட்டியைக் கொடுத்தது.. இப்படியே ஒவ்வொருத்தரும் நான்தான் ஒவ்வொருத்தருக்கும் அத்தாரிட்டி என்றால் நாடு எங்கே போகுது..? முருகா..!

(இது அய்யனார் பதிவில் வினவு எழுதிய பின்னூட்டத்திற்கு நான் எழுதியிருக்கும் பதில் பின்னூட்டம்.)

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அதற்காக உங்களுடைய விமர்சனமும் இப்படித்தான் இருக்குமென்றால் லீனாவின் கவிதையும் இப்படித்தான் இருக்கும்..!@@@@

எங்கள் விமர்சனத்திற்கு நாங்கள் விளக்கம் சொல்ல தயார்... லீனாவின் கவிதை இப்படித்தான் இருக்கும் இப்ப இன்னாங்குறேன்னு.. லீனாவுக்கு பி.ஆர்.ஓ வாக செயல்படும் நீங்கள் லீனாவின் கவிதைக்கு விளக்கம் சொல்ல தயாரா?]]]

ஏழரையைக் கொடுக்காதீங்க ஏழரை..!

அந்தக் கவிதைக்கு இருப்பது ஒரே அர்த்தம்தான்..!

அவரவர் புரிந்து கொண்டதுதான் வேறு வேறு விதம்..!

நீங்கள் இருவரும் மல்லுக் கட்டியதைப் பார்க்கின்றபோது அப்படித்தான் சொல்லவும், நினைக்கவும் தோன்றுகிறது..!

உடனேயே நான் இன்னாருக்கு பி.ஆர்.ஓ. என்று சின்னப்புள்ளை மாதிரி கையைக் காட்டக் கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
@பிதற்றலின் உச்சக்கட்டம் என்று இதை எடுத்துக் கொள்ளலாம்..
யார் சார் உங்க பொதுமக்கள்??? நடுத்தற வர்க்க டீசன்ட் ஜென்டில்மேன்களா?? அவங்கதான் காவல்துறையை கண்டு பீதியடைவதும், ஊர்வலம் மறியலைக்கூட டிராபிக் இ்டையூறாக பார்க்கும் அற்பற்கள். வாழ்வில் அனைத்து சலுகைகளையும் வாய்ப்புகளையும் பெற்ற மிகச் சிறுபான்மையினார இவர்கள்தான் தம்மை தாமே 'பப்ளிக்' என கருதிக் கொள்பவர்கள்' ஆனால் இவர்களையெல்லாம் பொதுமக்கள் பட்டியலில் சேர்த்தால் அப்போ நாட்டின் மீதமிறுக்கிற 80% பேரை எதுல சேர்ப்பது???
தனது வாழ்வில் தண்ணிர் முதல் கூலிவரை அனைத்தையும் போராடித்தான் பெற முடிகின்ற நிலையில் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட இந்த பெரும்பான்மையினருக்கு 'ஒதுங்கிப் போவது' என்றால் என்னவென்றே தெரியாது... போலீசென்றால் பயமும் கிடையாது.. இவர்கள்தான் ''மக்கள்'' இவர்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம், இவர்களோடு இணைந்துதான் போராடுகிறோம். சுயநலமே வாழ்க்கையாகவுள்ள, நடுத்தர வர்க்க டீசென்ட் ஜென்டில்மேன்களையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமெல்லாம் எங்களுக்கு இல்லை, அவர்கள் அங்கிகாரமும் எங்களுக்கு தேவையும்இல்லை. அது வெட்டி வேலையும்கூட.
மற்றபடி நாங்கள் மட்டும்தான் போராடுகிறோம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்கள் செயலின்மை உங்களிடம் தோற்றுவிக்கும் குற்ற உணர்ச்சியின் விளைவாக இருக்கலாம்.]]]

அப்பாடா.. பொங்கித் தீர்த்தாச்சா..?

போதும்.. இத்தோட நிறுத்திக்குவோம்..

நீங்க உங்களோட பொதுஜனத்துக்காக போராடுங்க..!

நான் என்னோட பொதுஜனத்துக்காக போராடுறேன்..!

கடைசியாக இடுகாட்டில் நாமும், நமது பொதுஜனங்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பழகிக் கொள்ளலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...

@@இதே மாதிரி ஏன் இப்ப ச.தமிழ்ச்செல்வன், ஜி.ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் உங்க சந்தேகத்தைத் தீர்த்துக்கலை..
சங்கர்ராமன்தான் பலமில்லாதவர் என்பதனால்தானா..?@@

உ.த. இன்னைக்கு கோர்ட்டுல எங்க தோழர்கள் கருணாநிதிக்கு முன்னால் முழக்கம் எழுப்பியதை பாத்தீங்களா???

http://www.vinavu.com/2010/04/25/hrpc-chennai/

இப்ப என்ன கேப்பீங்க பாரக் ஒபாமா வீட்டுக்கு முன்னால ஏன் மறியல் செய்யலையின்னா??]]]

பாவம் அந்த அப்பிராணி தோழர்கள்..! அவர்களுக்காக பரிதாப்படுகிறேன்..!

அவர்களை உசுப்பிவிட்டு அனுப்பி வைத்து அடி வாங்க வைத்துவிட்டு ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்து எப்படி திட்டுவது என்பது தெரியாததால்தான் பதிவு எழுதாமல் இருக்கிறேன்..!

எதிரியோடு மோதலாம்.. ஆனால் இடம், நேரம், பொருள் பார்த்துதான் மோத வேண்டும்..! மண்டை உடையும் என்று தெரிந்தே கோட்டைச்சுவரில் மோதி மண்டையை உடைத்துவிட்டு அதனை ஒரு சாதனையாக சொல்லிக் காட்டுவது ஒரு வித போதை.. அல்லது பேதமையாகத்தான் எனக்குத் தெரிகிறது..!

இதுக்கும் சண்டைக்கு வராதீங்க ஏழரை.. இது என்னோட கருத்து மட்டுமே..!

abeer ahmed said...

See who owns yandalo.com or any other website:
http://whois.domaintasks.com/yandalo.com

abeer ahmed said...

See who owns safeena.org or any other website.