இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்

14-07-2009

என்
இனிய வலைத்தமிழ் மக்களே..
!

பிரபாகரனின்
மகனா..? அடுத்த கதை ஆரம்பம்..!


உண்மை
உறங்கும்போது பொய் ஊர்வலம் வந்த கதையாக நந்திக்கடல் பகுதியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் நாம் தத்தளிக்க.. வாய்ப்புக் கிடைத்தவர்களெல்லாம் ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பிரபாகரன்
மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி, மகள் துவாரகா மரணம் என்று வரிசையாக வந்த செய்திகளுக்குப் பின் இப்போது கடைசியாக பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனும் சிங்கள இனவாத அரசப் படையினரால் கொல்லபட்டுவிட்டதாக நேற்று முன்தினம் முதல் செய்தி உலா வருகிறது.



வழக்கம்போல இதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாதவர்களைப் போல் ஈழத்து ஆதரவாளர்கள் வாய் மூடி மெளனியாகிவிட்டார்கள்.

புகைப்படத்தில்
இருப்பது அவரா.. அல்லது அவரைப் போன்ற வேறொருவரா என்றெல்லாம் சர்ச்சை கிளம்பும் அதே நேரத்தில், சிங்கள அரசும், ராணுவமும் மிகத் தந்திரமாக ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருவது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


மொத்தமாக
செய்திகள் வெளியானால் எழும் அனுதாபத்தை மூழ்கடிக்கவே கொஞ்சம், கொஞ்சமாக செய்திகளை வெளியிட்டு கொண்டே வருகிறது. முதலில் பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இன்னும் வசதியாகப் போய்விட்டது இலங்கை அரசுக்கு.


இப்போது
தவணை முறையில் செய்திகளைத் தரத் துவங்கிவிட்டது. இன்னமும் பாக்கியிருப்பது பிரபாகரனின் மனைவிதான். அவரைப் பற்றிய எந்த பயங்கரச் செய்தி எப்போது வருமோ தெரியாது..?


கவுரவம்
என்கிற ஒற்றைச் சொல்லில் நாமே நமது சொந்தங்களை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புலித் தலைமையின் தீவிர ஆதரவாளர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ தெரியவில்லை..?


துரைமுருகனின் பதவி பறிப்பு..!

கலைஞரும்
, மஞ்சள் சால்வையும்போல் பிரிக்க முடியாமல் இருந்த தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகனின் பொறுப்புகளைப் பறித்த நடவடிக்கை ஆளும்கட்சிக்குள் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கடந்த
சில நாட்களாகவே பல மூத்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக் குவிப்பு பிரச்சினைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது மாநில உளவுத்துறை.

தற்போதைய
அமைச்சரவையில் இருப்பவர்களில் 4 அல்லது 5 பேருக்கு மட்டுமே சொந்தமாக கல்லூரிகள் இல்லை. மற்ற அனைவரும் ஆளுக்கொன்றாக பொறியியல், கலை என்று பல்வேறு கல்லூரிகளை ஆரம்பித்துவிட்டார்கள். வாங்கியும் விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் முதல்வரின் கவனத்திற்குப் போயிருக்கிறது.


ஒரு
பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பது என்றால் இப்போதைக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாயாவது வேண்டும். மிக, மிக சமீபத்தில் அப்படியொரு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதும் தெரியாமல், கட்டியதும் தெரியாமல் ஒரே மூச்சில் கல்லூரியை நிறுவிவிட்டாராம் துரைமுருகன்.
இல்லை.. இல்லை.. முன்பே வேறொருவர் கட்டியதுதான்.. இவர் இப்போது விலைக்கு வாங்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

எது
உண்மை, எது பொய் என்று வழக்கம்போல தெரியவில்லை என்றாலும் அந்தக் கல்லூரிக்கும் துரைமுருகனுக்கும் தொடர்பு உண்டு என்பது மட்டும் உண்மையாகிவிட்டது.


இந்தக்
கோபமா..? பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வட மாவட்டங்களில் பல்வேறு கான்ட்ராக்ட்டுகளைத் தள்ளிவிட்டதினால் ஏற்பட்ட கோபமா தெரியவில்லை என்கிறார்கள் அறிவாலயத்து தம்பிகள்.

ஞாயிற்றுக்கிழமையும்
அதுவுமாக எப்போதும் சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போடும் கவர்னருக்கு ஒரு சின்ன வேலையைக் கொடுத்து கையொப்பம் வாங்கி நிமிடத்தில் கலைஞர் டிவியில் மட்டும் பிளாஷ் நியூஸாக கொடுத்து செய்தியை வெளியிட்டுவிட்டார்கள்.

துரைமுருகனைத் தவிர வேறு யாராலும் அந்தப் பொதுப்பணித்துறையை திறம்பட நடத்திவிட முடியாது என்று கலைஞர் கருதியதால்தான் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் அவரையே அத்துறை அமைச்சராக நியமித்திருந்தார்.

தமிழ்நாட்டில்
இருக்கும் குளம், ஆறு, குட்டை, நீர்ப்பாசன அணைகள் என்று அத்தனையும் அமைச்சருக்கு அத்துப்படி.. துரைமுருகனிடம் மட்டும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு அச்சமாக இருந்தது.


அப்படியிருந்தும்
.. இப்படியிருந்தும்... லஷ்மியின் கடைக்கண் பார்வை நழுவியதால் மனிதருக்கு ஒரு பார்வை அவுட்டாகிவிட்டது.

ஆனாலும்
கலைஞரின் குணம் அறிந்தவர்கள் “சீக்கிரமா திருப்பிக் கொடுத்திருவார்.. இல்லாட்டி அமைச்சரவையில் மாற்றம் வரும்.. இரண்டில் ஒன்று உறுதி” என்கிறார்கள். பார்க்கலாம்..


விஜயசாந்தியின் கோபம்..!

ஆந்திராவின் லேடி சூப்பர் ஸ்டாரிணி விஜயசாந்தி சமீபத்தில் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதியில் மலையேறி ஏழுமலைவாசனை நலம் விசாரித்தார்.

அப்போது
திரண்டு வந்த பத்திரிகையாளர்கள் அரசியல் தொடர்பான கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு வழக்கம்போல “இன்று உங்களுக்கு எத்தனாவது பொறந்த நாளுங்கோ மேடம்..?” என்று கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட..

அம்மணி
காரசாரமாக வாயில் வந்தததையெல்லாம் சொல்லி நிருபர்களுக்கு சுண்ணாம்பு தடவியிருக்கிறார்.


“உங்களுக்குக் கொஞ்சமாவது டீஸென்ஸி இருக்கா..? பத்திரிகைன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு..? நான் இப்போ எவ்ளோ பொறுப்பானவ.. மதிப்புமிக்கவன்னு உங்களுக்குத் தெரியுமா..? எனக்கு எத்தனாவது பொறந்த நாளா இருந்தா உங்களுக்கென்ன..? இதெல்லாம் தேவையில்லாதது.. வந்தாரு.. சாமி கும்பிட்டாரு.. போயிட்டாருன்னு மட்டும் போடுங்க..” என்று சாமியாடிவிட்டுப் போயிருக்கிறார்.


“நாம அப்படியென்ன கேக்கக் கூடாத கேள்வியையா கேட்டுப்புட்டோம். எதுக்கு இந்தம்மா இப்ப இம்புட்டு தூரம் காய்ச்சிட்டுப் போகுதுன்னு. எல்லார்கிட்டேயும் வழக்கமா கேக்குறதுதானே..?”ன்னு பத்திரிகைகாரங்களுக்கு குழப்பமோ குழப்பமாம். எனக்குக் குழப்பம்தான்..

டீஸண்ஸியை
பத்தி தன்னோட 45-வது வயசுல அம்மணி நினைச்சுப் பார்க்கிறதை நினைச்சா அல்லாருக்கும் நம்மளை மாதிரியே வயசான பின்னாடிதான் ‘அது' வரும்னு நினைக்கத் தோணுது..


ஏதோ
ஒரு தெலுங்கு படம்.. பாலகிருஷ்ணா ஹீரோ. அம்மணிதான் ஹீரோயின்.. படத்துல பாலகிருஷ்ணாவோட வீர, தீரத்தை சோதிக்கிற மாதிரி விஜயசாந்தி இருக்குற இடத்துல எல்லாம் பாலகிருஷ்ணா திடீர், திடீர்ன்னு வந்து சண்டை போட்டு தன்னோட பராக்கிரமத்தைக் காட்டிட்டுப் போவாரு..


ஒவ்வொரு
தடவையும் ‘பைட்' முடிஞ்சுபோகும்போது பாலகிருஷ்ணாகிட்ட விஜயசாந்தி, “எப்படி பாபூ அவ்ளோ கரெக்ட்டா வந்துட்டீங்க..”ன்னு கேப்பாங்க.. “எனக்கு எல்லாமே தெரியும்..” என்று புகழ் பெற்ற இரட்டை அர்த்தத்தில் சொல்லும் பாலகிருஷ்ணா உதாரணத்துக்கு, “உன் ஜாக்கெட்டுக்குள்ள இருக்குறது இன்னிக்கு கருப்பு கலரு.. கரெக்ட்டா..?” என்பார். அம்மணியும் வாய் பொளந்து அதிர்ச்சியைக் காட்டி தனது ஜாக்கெட்டுக்குள் இருக்கும் உள்ளாடையின் பட்டையை வெளியே எடுத்துக் காட்டி “ஐயோ.. ஆமாம்.. எப்படி பாபூ..?” என்று வெட்கத்தில் நெளியறப்ப நமக்கே வெக்கம் சூடும்.


இப்படியேதான்
படம் முழுக்க எல்லா கலரு பட்டையையும் வெளில எடுத்துக் காட்டிட்டு கிளைமாக்ஸுக்கு முந்தின சண்டைல மட்டும் உள்பாவாடையையும் கரெக்ட்டா சொல்வாரு அவங்க பாபூ.. அம்மணி படார்ன்னு பாவாடையைத் தூக்கிக் காட்டுவாரு பாருங்க.. நாங்க கத்துன கத்துல திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரே அதிர்ந்து போச்சு போங்க. ரீவைண்ட் பண்ணிப் பார்க்குறேன்.. ம்.. எல்லாம் ஒரு காலம்தான்..


வெளிச்சத்துக்கு
வந்த மீனாவின் அப்பா..!


எப்படியோ
ஒரு வழியா எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த மீனாவின் கல்யாணம் கொஞ்சம் திருஷ்டிப் பொட்டோட முடிஞ்சிருச்சு.

என்னதான்
தாம்பூலத்தை மென்னுக்கிட்டு “வாழ்க”, “வளர்க”ன்னு சொல்லி பத்திரிக்கைரங்க நடையைக் கட்டினாலும் உள்ளார ரொம்பவே வருத்தம்,
இனிமே யாரை வைச்சு இவ்ளோ கிசுகிசு எழுத முடியும்னு..?

மீனான்னா சொக்கத் தங்கம்.. மனசுக்குள்ள எதையும் வைச்சுக்காது.. எம்புட்டு அடிச்சாலும் தாங்குற வின்னர் வடிவேலு மாதிரி.. எந்தப் பத்திரிகை என்ன மாதிரி என்ன எழுதியிருந்தாலும், அதையெல்லாம் மனசுல வைச்சுக்காம அடுத்த தடவை பாக்கும்போது “என்னங்கண்ணே..”ன்னு கூப்பிட்டு வைச்சு பேசுற வெள்ளந்தியான பொண்ணு..
கரையேறுனதுல யாருக்கு என்ன வருத்தம்..? இனிமே வேற யாரையாவது இது மாதிரி கும்ம முடியுமா..? பதிலுக்கு கும்மிற மாட்டாங்க..

இப்படித்தான்
மலையாளத்தின் முன்னாள் கனவுக் கன்னி ஒருத்தங்களை “வீட்ல சண்டை.. டைவர்ஸ் பண்ணப் போறாங்க”ன்னு மவுண்ட் ரோடு பத்திரிகை எழுதி வைக்க.. அன்னிக்கே அந்த நிருபரையும், ஆசிரியரையும் போன்ல புடிச்சு, மண்டகப்படியோ மண்டகப்படி அடிச்சதுல அதுக்கப்புறம் இன்னிவரைக்கும் அந்தம்மாவைப் பத்தி ஒத்த பிட்டு நியூஸ்கூட அந்தப் பத்திரிகைல வர்றது கிடையாது..


தமிழகத்து தற்போதைய நளினமான அம்மா நடிகையைப் பத்தி இதே மாதிரி ஒரு தடவை அதே பத்திரிகை எழுதிக் குமிச்சு அந்த பத்திரிகையோட வேறொரு ரிப்போர்ட்டர் அம்மணியின் தொடை நெருக்கில் வாங்கிய அடியை சமீபத்தில் அந்தணன் அண்ணன் பதிவுல படிச்சிருப்பீங்க..

இப்படித்தான்
பல பேரும் பல இடத்துல ரிப்போர்ட்டர்களை அங்கங்க சுளுக்கெடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா ஒண்ணுமே செய்யாத பொண்ணு மீனாதானாம்..

எத்தனை
கிசுகிசு.. எத்தனை வதந்திகள்.. பரவாயில்லை.. தாங்கிருச்சே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்.. இனிமேலாச்சும் நல்லாயிருக்கட்டும்..


பத்திரிகைக்காரங்களுக்கு
இதுல ஒரு சின்ன சந்தோஷம்.. அது மீனா அப்பாவோட புல்ஸ்கேப் தரிசனம் எல்லாருக்கும் இந்தக் கல்யாணத்துனால தெரிஞ்சதுதான்..

முதல்முதல்லா
நடிக்க வந்தப்ப ஒரு வாட்டி குமுதத்துக்கு அவங்கப்பா பேட்டி கொடுத்தார். அவ்ளோதான்.. அதுக்கப்புறம் எல்லாமே அவங்கம்மாதான். மனுஷன் நேத்தைக்கு போஸ் கொடுத்திருக்கிறாராரம் போட்டோவுக்கு.




கொசுறு நியூஸ்.. திமுகவின் சக்தி வாய்ந்த வீரமான அமைச்சரின் இரண்டாவது மனைவியும், மீனாவின் அம்மாவும் உடன்பிறந்தவர்கள் என்பதும் பத்திரிகையுலகச் செய்தி.


சிங்கத்தின்
பிடியில் பெண்
..!

அன்புப்
பிடி.. பாசப் பிடியெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம்.. ஆனா இந்தப் பிடி இதில் எந்த வகையானதுன்னு தெரியல்ல.. ஆனா இதுக்கெல்லாம் ஒரு தகரியம் வேணுமாக்கும்..


பெண்மையே நீ வாழ்க..

கொடுத்து
வைத்த கேமிராமேன் ரவீந்தர்
..!

சில
பழைய திரைப்படங்களைக் காண்கின்றபோது இவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? எங்கே இருப்பார்கள் என்கிற ஒரு ஆர்வம் நமக்குள் எட்டிப் பார்ப்பதுண்டு..

அப்படி
நம்மை அசைத்துப் பார்க்கின்ற கேரக்டர்கள் பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்களாகவும், சிறுவர், சிறுமியராக நடித்தவர்களாகவும் இருக்கலாம்.


எனக்குக்
கூட ‘பாசமலரில்' சிவாஜியின் மகனாக நடித்த குழந்தையும், சாவித்திரியின் மகளாக நடித்த குழந்தையும் இப்போது எங்கே இருக்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்..? என்னவாக இருப்பார்கள் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.


இந்தப்
பட்டியலில் குழந்தை நட்சத்திரமாக இருந்த ஒருவர் தற்போது தான் நடித்த திரைப்படத்தை தானே பார்த்து, பார்த்து சொக்கிப் போகிறார் என்றார் அவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி..?


திரைப்பட
ஒளிப்பதிவாளர் ரவீந்திரனுக்கு அப்படியொரு பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதிலும் சாதாரண வாய்ப்பல்ல.. தவழும் குழந்தையாக இருந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் ‘பாவமன்னிப்பு' படத்தில் கைக்குழந்தையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். எவ்வளவு பெரிய கொடுப்பினை..? அவருடைய பெற்றோர்களைத்தான் நிச்சயம் பாராட்ட வேண்டும்..



மனிதருக்கு இதனாலேயே சினிமா மீது பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரையில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கேமிராமேனாக பணியாற்றியிருக்கிறார் ரவீந்திரன். அதில் குறிப்பிடத்தக்கது சின்னத்தம்பி.

வாசுவுடன்
இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக கொடைக்கானல் திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்தார். தற்போது ஒரு திரைப்படத்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


இவருடைய மனைவி நித்யாவும் நடிகைதான். அவரும் குழந்தைப் பருவத்திலேயே பெரிய திரையில் அறிமுகமாகி இன்றுவரையில் பெரிய திரை, சின்னத்திரை என்று இரண்டிலுமே கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க தம்பதிகள்..

தட்ஸ்தமிழ்.காமின் லொள்ளு..!

தமிழ்த்
திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் இந்த இணையத்தளத்தின் மீது கோபமான கோபத்தில் இருக்கிறார்கள்.

இதில்
சினிமா நடிகர், நடிகையர் மீது எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்கள் அளவு கடந்த விரசமாகவும், ஆபாசத்தின் உச்சமாகவும் இருப்பது கண்டு திரையுலக வில்லன்களைப் போல் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பொள்ளாச்சி
மகாலிங்கம் குரூப்பிற்கு சொந்தமானது இத்தளம் என்பதால் யாரிடம் புகார் செய்வது என்பதுகூட தெரியாத அளவுக்கு இத்தளத்தின் நடவடிக்கைகள் கமுக்கமாக உள்ளது.

இத்தளத்தின்
ஹெட் ஆபீஸ் பெங்களூரில் இருப்பதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. அங்கே போன் செய்து சொல்லிச் சொல்லி அழுத்துப் போன பிரபலங்கள் அத்தளத்திற்கு சென்னையில் இருக்கும் சினிமா ரிப்போர்ட்டர் யார் என்பதை கண்டுபிடிக்க முயன்று வருகிறார்களாம்.. இன்றுவரை முடியவில்லை என்கிறார்கள்.

இங்கே இருக்கின்ற செய்தியாளர்களில் யாரோ ஒருவர்தான் அதுக்கும் செய்திகளை மறைமுகமாக அளித்து வருவதுபோல் தெரிகிறது. என்றைக்காவது ஒரு நாள் இந்தக் கோபம் புயலாக வெடிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.

ஞாநியின்
கேணி..!


எழுத்துலக
ஞாநியின் வீட்டில் நடந்த இரண்டாவது கேணி நிகழ்ச்சிக்கு சற்றுத் தாமதமாகப் போய்ச் சேர்ந்தேன்.

அப்பன்
முருகன் வழக்கம்போல கடைசி நிமிடத்தில் நடத்திய ஒரு திருவிளையாடலால், எழுத்தாளர் பிரபஞ்சனின் முழு பரிமாணத்தையும் கேட்க முடியாமல் போய்விட்டது.


நான்
போன ஐந்து நிமிடத்தில் நான் வந்தது தெரிந்தோ அல்லது என்னைப் பார்த்துவிட்டு பயந்தாரோ தெரியவில்லை.. பிரபஞ்சன் ஸார் தன் பேச்சை சட்டென்று முடித்துக் கொண்டார்.

நான்
போனதற்கு வேறொரு காரணமும் இருந்தது.
வலையுலகின் ரவுடியான கோவையின் மைந்தன் ஓசை செல்லாவும் அங்கு வந்திருந்ததுதான்.. ஆள் கொஞ்சம் இளைத்துப் போயிருக்கிறார். தொந்தியையும் குறைத்துவிட்டார். எப்படின்னுதான் தெரியலே..

இப்போது
பிளாக்கை சுத்தமாக மூடிவிட்டு பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். பேஸ்புக்கில் கலக்குவதற்கு என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலை.


“இனிமே சென்னை பக்கமே தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனார் செல்லா. ஞாயித்துக்கிழமை அதுவுமா கொஞ்சமா இருந்த நம்மூர் டிராபிக்கை பார்த்தே இம்புட்டு வெறி மனுஷனுக்கு. கோயம்புத்தூர்ல மட்டும் நாலு சைக்கிள், ரெண்டு ஆட்டோ, ஒரு கார் ஓடுது போலிருக்கு..

என்ன
இருந்தாலும் எங்கூர் மாதிரி வருமான்னு நூறு தடவை சொன்னாரு.. சைதாப்பேட்டைல சைக்கிள்காரன் பஸ் மேல மோதி பஸ் டிரைவர்கிட்ட “இன்னா மாமு.. வூட்டாண்டை சொல்லிக்கின்னு வந்துட்டியா?”ன்னு கேப்பானே.. அது மாதிரி தூய தமிழ்ல கோயம்புத்தூர்ல எவனாவது இப்படி தகரியத்துடன் நெஞ்ச நிமிர்த்தி பேச முடியுமா..?

அன்றைக்கு முதல் முறையாக பதிவர் வல்லியம்மாவை தரிசித்தேன். பதிவைப் போலவே மென்மையாகப் பேசினார்.

நம்ம
நியூஸிலாந்து டீச்சரம்மா இவரையும் பிடித்து இழுத்து வந்துவிட்டாராம். டீச்சர் வழக்கம்போல தனது கேமிராவில் பிரபஞ்சனையும் படம் பிடித்து தனது புகைப்பட சாதனையில் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்.

டீச்சர் இப்படி தான் எடுத்த புகைப்படங்களையெல்லாம் ஆழ்வார்பேட்டை கல்ச்சுரல் அகாடமியில் மிக விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகச் செய்தி.. சுமாரா எட்டாயிரம் போட்டோவாவது இருக்கும்.. அது சமயம் மெட்ராஸ்ல இருக்குறவங்க எல்லாரும் ஓடிருங்கப்பா.. இருந்து மாட்டுனீங்கன்னா உங்க கண்றாவி முகத்தை நீங்களே பார்க்க வேண்டி வரும்..

ஞாநி
ஒரு மாதத்தில் நிறைய நெய் ஊற்றிச் சாப்பிட்டிருப்பார் போலிருக்கு.. ஆள் பழையபடி ஊதிவிட்டார். இலக்கியச் சேவையாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். நல்லாயிருக்கட்டும்..

ஓசை
செல்லா பாமரனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி காலில் அடிபட்டுவிட்டதை ஞாநியிடம் சொன்னபோது, “அப்போ பாமரன், பமரனாகிவிட்டாரா..?” என்றார் ஞாநி. புரியாமல் முழித்த எங்களிடம், “ப'-வுக்கு அடுத்து ஒரு ‘கால்' போயிருச்சு. அப்போ அது ‘பமரன்'தானே..” என்றார் ஞாநி. என்னா நக்கலு..?


ஏம்ப்பா
இதை யாராவது பாமரன்கிட்ட ஓதி விடுங்கப்பா.. ஏதாவது ஒண்ணு ஆகட்டும்.. இந்த வாரம் இந்தச் சண்டைன்னு வேடிக்கை பார்க்கலாம். சும்மாவே இருந்தா போரடிக்குதுல்ல.. ஏதோ நம்மளால முடிஞ்ச பத்த வைப்பு..


பாஸ்கர்
சக்தி ஸார் ஒரு ஆரூடம் சொன்னார்.. “கோலங்கள் செப்டம்பரில் முடியலாம்..” என்று.. “எந்த வருஷத்து செப்டம்பர்ல..?” என்றேன்.. பதில் சொல்லாமல் சிரித்தார். இதிலிருந்து தெரிவது என்னவெனில்..?


இருக்கிற
இலக்கியவாதிகளின் தளங்களைப் படித்து மண்டை காய்ந்து போயிருக்கும் இலக்கிய ரசிகர்களே, இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஆகஸ்ட் 15-லிருந்து இன்னுமொரு மாபெரும் இலக்கியவாதியும் தனித்தளத்தில் இணையத்தில் வலம் வர இருக்கிறாராம். உறுதியுடன் சொன்னார் பிரபஞ்சன். வாங்க.. வாங்க.. வாங்க..


எத்தனையோ
தாங்கிட்டோம்.. இதைத் தாங்க மாட்டோமா..?


இரண்டுக்கும் எத்தனை வித்தியாசங்கள்..!

ஏம்ப்பா கண்ணுகளா நம்ம ஒபாமாவும், சர்கோஸியும் என்னதான் அப்படி உத்து பார்க்குறாங்கன்னு தெரியலையேப்பா.. ஆனா நம்ம இனத்தோட பெருமை இதுல நல்லா தெரியுது பார்த்தீங்களா..

அப்படியே கீழ ஒரு போட்டோ இருக்கு பாருங்க.. அதையும் பாருங்க.. ரெண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குங்களா..


ஒரு ஹாலிவுட் கிசுகிசு..!


ஹாலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளான பிராட்பிட்-ஏஞ்சலினா ஜூலியின் மண வாழ்க்கையில் கொஞ்சம் டர்ரு ஆயிருக்கிறதாம்.

இந்த டர்ருக்கு காரணம் ஒரு வேலைக்காரப் பெண்ணாம்.. அந்தப் பெண்ணுடன் நம்மாளு கொஞ்சம் அப்படி.. கொஞ்சம் இப்படின்னு இருந்ததை ஏஞ்சலினாக்கா பார்த்துட்டாங்க போலிருக்கு.. வூட்டுக்காரனுக்கு லெப்ட் அண்ட் ரைட்ல ரெண்டு குடுத்துட்டாங்களாம்..

பாவம் நம்மாளு.. வூட்டுக்கு வீடு அடி வாங்கினாக்கூட ஒரு பய வெளில சொல்ல மாட்டானே.. அதான் இவரும் சொல்லலை..
ஆனா அக்காவுக்கு கோபம் இன்னும் தணியலையாம்..

அவ்ளோ
பெரிய வீட்ல.. அவ்ளோ பெரிய பெட்ல ஒண்ணா சேராம.. நீ உன் வழியைப் பாரு.. நான் என் வழியைப் பாருக்குறேன்னுட்டு ஒத்த ரூம் இருக்குற கெஸ்ட் ஹவுஸ்லதான் அக்கா படுக்கையாம்..


இப்ப
நம்மாளு நாளை மக்கா நாளுக்கு என்ன செய்வாரு.. வேறொரு வேலைக்காரி தேடிர மாட்டாரா..? இப்படியெல்லாம் காய விட்டா மனுஷன் என்ன செய்வான்..? தப்பு மேல தப்பு பண்றாங்கப்பா..!



ஒரு
உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..
!

http://vijisekar.wordpress.com - இந்தப்
பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?

நிசமாவே
இது பெண்பால்தானா..? அல்லது பெண்பாலின் பெயரில் ஆண்பாலா..?

எங்கயோ போகுதுய்யா தமிழ் மொழி..

வாழ்க
வளர்க..!

90 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

இன்றைய டிபன் கொஞ்சம் ஹெவியாய் போச்சு

Unknown said...

இன்றைய டிபன் சூப்பர். தலைப்பு தான் பசிய கிள்ளுது (காலையிலேர்ந்து இப்போ மணி 4:40, ரெண்டு காப்பியோடு உயிர் வாழ்ந்தா பசிக்காம என்ன செய்யும்).

உங்கள் ராட் மாதவ் said...

//ஒரு உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..!

http://vijisekar.wordpress.com - இந்தப் பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?

நிசமாவே இது பெண்பால்தானா..? அல்லது பெண்பாலின் பெயரில் ஆண்பாலா..?

எங்கயோ போகுதுய்யா தமிழ் மொழி..

வாழ்க வளர்க..!//


இந்த மாதிரி கேள்வி, சந்தேகம் கேட்டு, எங்கள மாதிரி ஏகப்பட்ட சின்ன பசங்க பொழப்பு என்ன ஆகப்போதோ? முருகனுக்கே வெளிச்சம், கடவுளே காப்பாத்து.

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி இருக்குங்க? :-))

குசும்பன் said...

//ஒரு உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..!
//

பதிவை படிச்சோமா ”அனுபவிச்சமான்னு” இருக்கனும் அதைவிட்டு இந்த மாதிரி கேள்வி எல்லாம் எதுக்கு உங்களுக்கு?

ஆமா உங்களுக்கு அங்கன என்ன வேலை? எங்களை மாதிரி சின்னஞ்சிறுசுகளுக்காக அவுங்க எழுதினா உங்களுக்கு எல்லாம் பொருக்காதே! ஆமாம் அப்ப அந்த அனானி நீங்கதானா?

மங்களூர் சிவா said...

அண்ணே பழைய பார்ம்ல பதிவு போட்டிருக்கீங்க !
:))

பதிவு லோட் ஆகாம கம்ப்யூட்டர் உக்காந்துடிச்சி :((

கடைசிக்கேள்விக்கு சாருவாள் எனக்கு பதில் தெரியலிங்கோ!
:)))

அபி அப்பா said...

தம்பி உன் பதிவை படிக்கவும் முடியலை ஆனா எழுத்து நடை படிக்காவமும் இருக்க முடியலை! ரெடி ஜூட்!!!

மணிஜி said...

அண்ணே..ஒரு சின்ன விண்ணப்பம்..பதிவு ரொம்ப சிறிசா இருக்கு.கொஞ்சம் பெரிசா எழுத முயற்சி பண்ணுங்க..உங்களால முடியும்..அப்புறம் விஜயசாந்தி மேட்டர் ஒண்ணு..எழுத முடியாது.நேரா பாக்கும்போது சொல்றேன்...(அந்தம்மா விஜயலலிதா வீட்டுல...)

Beski said...

சுவை அருமை.

வால்பையன் said...

பிரபாகரன் மகனோ அல்லது யாரோ, அதை தனியா போட்டிருக்கலாம், இத்தனை அஜால் குஜால் மேட்டர் சொல்ல வந்துட்டு முதலா அதை சொன்னா மனசு கேட்குமா!?
என்னமோ போங்க!

Jackiesekar said...

மொத்தமாக செய்திகள் வெளியானால் எழும் அனுதாபத்தை மூழ்கடிக்கவே கொஞ்சம், கொஞ்சமாக செய்திகளை வெளியிட்டு கொண்டே வருகிறது. முதலில் பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இன்னும் வசதியாகப் போய்விட்டது இலங்கை அரசுக்கு.--//

ரொம்ப அற்புதமா சொன்னிங்க...

அத்திரி said...

இன்னுமா பிரபாகரன் மேட்டர் ஓடுது..........ம்ம்ம்ம்ம்ம்ஹும்........வாழ்க இந்திய இலங்கை அரசுகள்>

தீப்பெட்டி said...

//பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம்//

சத்தியமான உண்மை..

:(

தீப்பெட்டி said...

//கவுரவம் என்கிற ஒற்றைச் சொல்லில் நாமே நமது சொந்தங்களை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புலித் தலைமையின் தீவிர ஆதரவாளர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ//

நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை..

மாவீரனுக்கு மரியாதை செலுத்தவும் மட்டுறுத்தப் பட்டுள்ளோம்.. நமது கரங்களாலே..

பிறகு ஏன் தமிழனுக்கு செல்லுமிடத்திலெல்லாம் செருப்படி விழாது..

ஜெட்லி... said...

வயிறு புல் ஆச்சு...
:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க இது நான் ஸ்டாப் கொண்டாட்டமா?

உண்மைத்தமிழன் said...

///T.V.Radhakrishnan said...
இன்றைய டிபன் கொஞ்சம் ஹெவியாய் போச்சு.///

என்னுடைய இட்லி-வடையின் முதல் வாசகர் நீங்கதான் ஸார்..!

வாரந்தவறாம வந்தர்றீங்க..! அதுனால இது உங்களுக்கு ஹெவி டோஸா போயிருச்சுன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

///T.V.Radhakrishnan said...
இன்றைய டிபன் கொஞ்சம் ஹெவியாய் போச்சு.///

என்னுடைய இட்லி-வடையின் முதல் வாசகர் நீங்கதான் ஸார்..!

வாரந்தவறாம வந்தர்றீங்க..! அதுனால இது உங்களுக்கு ஹெவி டோஸா போயிருச்சுன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

///T.V.Radhakrishnan said...
இன்றைய டிபன் கொஞ்சம் ஹெவியாய் போச்சு.///

என்னுடைய இட்லி-வடையின் முதல் வாசகர் நீங்கதான் ஸார்..!

வாரந்தவறாம வந்தர்றீங்க..! அதுனால இது உங்களுக்கு ஹெவி டோஸா போயிருச்சுன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

///ராஜா | KVR said...
இன்றைய டிபன் சூப்பர். தலைப்புதான் பசிய கிள்ளுது (காலையிலேர்ந்து இப்போ மணி 4:40, ரெண்டு காப்பியோடு உயிர் வாழ்ந்தா பசிக்காம என்ன செய்யும்).///

சீக்கிரமா போய் சாப்பிடுங்க ராஜா.!

அல்சர் வந்திரும்..

வேளாவேளைக்கு கரீக்ட்டா சாப்பிட முடியலைன்னா அப்புறம் எதுக்கு உழைக்கணும்ன்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[RAD MADHAV said...

//ஒரு உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..!

http://vijisekar.wordpress.com - இந்தப் பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?

நிசமாவே இது பெண்பால்தானா..? அல்லது பெண்பாலின் பெயரில் ஆண்பாலா..?

எங்கயோ போகுதுய்யா தமிழ் மொழி..

வாழ்க வளர்க..!//

இந்த மாதிரி கேள்வி, சந்தேகம் கேட்டு, எங்கள மாதிரி ஏகப்பட்ட சின்ன பசங்க பொழப்பு என்ன ஆகப் போதோ? முருகனுக்கே வெளிச்சம், கடவுளே காப்பாத்து. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி இருக்குங்க? :-))]]]

அப்படியா தெரியுது உங்களுக்கு?!!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//ஒரு உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..!//

பதிவை படிச்சோமா ”அனுபவிச்சமான்னு” இருக்கனும் அதைவிட்டு இந்த மாதிரி கேள்வி எல்லாம் எதுக்கு உங்களுக்கு?
ஆமா உங்களுக்கு அங்கன என்ன வேலை? எங்களை மாதிரி சின்னஞ்சிறுசுகளுக்காக அவுங்க எழுதினா உங்களுக்கு எல்லாம் பொருக்காதே! ஆமாம் அப்ப அந்த அனானி நீங்கதானா?]]]

ஐயையோ.. அடப்பாவி.. எனக்கே ஆப்பு வைச்சிருவ போலிருக்கு..!

எனக்கும் ஒரு தம்பிதான் லின்க் கொடுத்து போய் பாருங்கன்னாருப்பா..!

அதான் கேக்குறேன்.. எழுதறது நீயா இருந்தாலும் சரி தம்பி.. அண்ணன் சொன்னா கேக்கணும்.. கடையை மூடிரு ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...

அண்ணே பழைய பார்ம்ல பதிவு போட்டிருக்கீங்க !:))

பதிவு லோட் ஆகாம கம்ப்யூட்டர் உக்காந்துடிச்சி :((

கடைசிக் கேள்விக்கு சாருவாள் எனக்கு பதில் தெரியலிங்கோ!:)))]]]

சிவா தம்பீ..

என்னமோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது.. ஆனா என்னன்னுதான் எனக்குப் புரியலே..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
தம்பி உன் பதிவை படிக்கவும் முடியலை ஆனா எழுத்து நடை படிக்காவமும் இருக்க முடியலை! ரெடி ஜூட்!!!]]]

படிக்க முடியலையா..?

கேவலம்.. அவமானம்.. தூக்குப் போட்டுத் தொங்கணும்போல இருக்கு..

உங்களுக்கு இல்ல.. எனக்கு..

என் எழுத்த படிக்க முடியலைன்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான்..

அண்ணே நீங்களுமாண்ணே..!

Beski said...

//சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி இருக்குங்க? :-))]]]

அப்படியா தெரியுது உங்களுக்கு?!! //

அப்படித்தான்.

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா said...
அண்ணே.. ஒரு சின்ன விண்ணப்பம்.. பதிவு ரொம்ப சிறிசா இருக்கு. கொஞ்சம் பெரிசா எழுத முயற்சி பண்ணுங்க..உங்களால முடியும்..]]]

ஏண்ணே உங்களுக்கு இப்படியொரு ஆசை..? இதுவே அதிகம்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.. நீங்க வேற..!

[[[அப்புறம் விஜயசாந்தி மேட்டர் ஒண்ணு.. எழுத முடியாது. நேரா பாக்கும்போது சொல்றேன்...(அந்தம்மா விஜயலலிதா வீட்டுல...)]]]

பாதி மேட்டர் எனக்கும் தெரியும்.. மீதியை நேர்ல கேட்டுத் தெரிஞ்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...
சுவை அருமை.]]]

ரொம்ப சந்தோஷம் எவனோ ஒருவன்..!

அப்ப அடுத்த வாட்டியும் வரணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
பிரபாகரன் மகனோ அல்லது யாரோ, அதை தனியா போட்டிருக்கலாம், இத்தனை அஜால் குஜால் மேட்டர் சொல்ல வந்துட்டு முதலா அதை சொன்னா மனசு கேட்குமா!? என்னமோ போங்க!]]]

தனியா போடணும்னுதான் நினைச்சேன்.

கடைசி நிமிஷத்துல இந்த தர்மசங்கடம் மறைஞ்சு போய் அவசரத்துல இழுத்துட்டேன்..

ஸாரி.. மன்னிச்சிருங்க வாலு..!

Beski said...

//அப்ப அடுத்த வாட்டியும் வரணும்..!//

வந்துட்டுதாண்ணே இருக்கேன், இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கேன்.

உண்மைத்தமிழன் said...

[[[jackiesekar said...

மொத்தமாக செய்திகள் வெளியானால் எழும் அனுதாபத்தை மூழ்கடிக்கவே கொஞ்சம், கொஞ்சமாக செய்திகளை வெளியிட்டு கொண்டே வருகிறது. முதலில் பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இன்னும் வசதியாகப் போய்விட்டது இலங்கை அரசுக்கு.--//

ரொம்ப அற்புதமா சொன்னிங்க...]]]

நன்றி ஜாக்கி.. உண்மையும் இதுதான்..

அன்றைக்கு கொஞ்சமாவது பொங்கியிருந்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு லேசாகாவாவது உறைத்திருக்கும்..

இனிமே என்ன செய்ய முடியும்..? திவசமாவது வைப்பார்களா என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...
இன்னுமா பிரபாகரன் மேட்டர் ஓடுது.......... ம்ம்ம்ம்ம்ம்ஹும் ........ வாழ்க இந்திய இலங்கை அரசுகள்>]]]

ஓடலை கண்ணா.. நாமதான் ஓட்ட வைக்கிறோம்..

வேற வழி.. இல்லைன்னா ஈழம்னு ஒண்ணு இருக்கிறதையே இங்க இருக்கறவங்க மறந்திருவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//பிரபாகரனின் மரணத்தின்போதே வெளிவந்திருக்க வேண்டிய கருத்தொற்றுமை சிதைந்ததற்கு நாமளே ஒரு காரணமாக இருந்துவிட்டோம்//

சத்தியமான உண்மை..:(]]]

இன்னும் பாதிப் பேருக்கு இது புரிய மாட்டேங்குது தீப்பெட்டி..!

எத்தனை நாளைக்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பது..?

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//கவுரவம் என்கிற ஒற்றைச் சொல்லில் நாமே நமது சொந்தங்களை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புலித் தலைமையின் தீவிர ஆதரவாளர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ//

நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவில்லை.. மாவீரனுக்கு மரியாதை செலுத்தவும் மட்டுறுத்தப்பட்டுள்ளோம்.. நமது கரங்களாலே.. பிறகு ஏன் தமிழனுக்கு செல்லுமிடத்திலெல்லாம் செருப்படி விழாது..]]]

எதில் கெளரவம் பார்க்க வேண்டுமோ அதில்தான் பார்க்க வேண்டும்.

போரில் தோல்வியும், வெற்றியும் சகஜம். தோற்றோம். பின்பு வெல்வோம் என்று சொல்வதுகூட ராஜதந்திரம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...
வயிறு புல் ஆச்சு...:)]]]

இன்னும் ஒரு வாரத்துக்கு சாப்பாடு கேட்கக் கூடாது சொல்லிப்புட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குறை ஒன்றும் இல்லை !!! said...
என்னங்க இது நான் ஸ்டாப் கொண்டாட்டமா?]]]

ஆமாங்க.. நல்லா கொண்டாடுங்க..

யாரும் கேள்வியே கேட்க மாட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...
//சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி இருக்குங்க? :-))]]]

அப்படியா தெரியுது உங்களுக்கு?!! //

அப்படித்தான்.]]]

முருகா.. அப்படீல்லாம் நினைக்கக் கூடாது முருகா..

நாளைக்கு அந்தப் பதிவோட ஓனர் எல்லார் கண்ணுலேயும் படுதேன்னு நினைச்சு பதிவை டெலீட் செஞ்சாலும் செய்யலாமில்லையா..?

அதனாலதான் பப்ளிக்கா போட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...
//அப்ப அடுத்த வாட்டியும் வரணும்..!//

வந்துட்டுதாண்ணே இருக்கேன், இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கேன்.]]]

ஓ.. அப்படீங்களா..? சந்தோஷம் ஸார்..!

உங்களை மாதிரி நீண்ட நாள் வாசகர்கள் தொடர்ந்து வர்றதுனாலதான் ஏதோ வாரத்துக்கு ஒண்ணாச்சும் நான் எழுதிக்கிட்டிருக்கேன்..

வருகைக்கு மிக்க நன்றிகள்..!

Beski said...

//நாளைக்கு அந்தப் பதிவோட ஓனர் எல்லார் கண்ணுலேயும் படுதேன்னு நினைச்சு பதிவை டெலீட் செஞ்சாலும் செய்யலாமில்லையா..?//
அட நீங்க வேற சாமி.... எல்லார் கண்ணுலயும் படனும்னுதானே ஒபனா வச்சிருக்கு... இல்லனா குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் காட்டும் வசதிதான் இருக்கிறதே...

Beski said...

//அதனாலதான் பப்ளிக்கா போட்டேன்..! //
அதனால ஒன்னும் தப்பில்ல...
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும்ல...

உதாரணத்துக்கு பாருங்க, நல்லது உங்க வலைப்பூ... கெட்டது அது...
எப்பூடி...

Beski said...

//சந்தோஷம் ஸார்..!//
என்னது சாரா? ச்சின்னப் பையன்னே நானு. சாதாரனமா கூப்பிடுங்க.

//வாரத்துக்கு ஒண்ணாச்சும் நான் எழுதிக்கிட்டிருக்கேன்..//
உங்கள் எழுத்துக்கள் நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

சிநேகிதன் அக்பர் said...

உண்மை தமிழனுக்கே உண்மை தெரியலையா. கஷ்டந்தான்.
அப்புறம் பதிவு பட்டுன்னு முடிஞ்சி போனது ஏமாற்றமா இருக்கு அடுத்த தடவை இன்னும் நாலு மேட்டர் சேர்த்து எழுதுங்க.

நாமக்கல் சிபி said...

கடைசில வெச்ச காரசட்னி அபாரம்!

ஏண்ணே! நீங்க மட்டுமே இத்தினி நாளா ருசிச்சி இருக்கீங்க போல!

அது சரி(18185106603874041862) said...

இட்லி, தோசை, வடை பொங்கல் மட்டுமில்ல, பரோட்டா, சப்பாத்தி, ரொட்டி, பர்கர், பீட்ஸா எல்லாத்தையும் கலந்து ஒரு கட்டு கட்ன மாதிரி இருக்கு...

ஜெட்லி... said...

athu ennanga unga perukku pinnala number?....
yethuvum adaiyalamaa?

Cable சங்கர் said...

ஓசை செல்லாவின் தொலைபேசி எண்ணை கேட்டேன்.. sms அனுப்பறேன்ன் சொன்ன ஆளு.. இவ்வள்வு பெரிய பதிவு போடமுடியுது.. ஆனா அது முடியல்.. நீயெல்லாம்.. உங்கப்பன் முருகன் உன்னை பாத்துப்பான்.

நாஞ்சில் நாதம் said...

வழக்கம் போல நிறைய தகவல்

Bleachingpowder said...

//http://vijisekar.wordpress.com - இந்தப் பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?
//

எனக்கு அந்த பதிவை யாரு எழுதினது என்பதை விட, அந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை யார் போட்டாங்க தான் தெரியனும், அது கவுண்டமணி பேருலையும், சாரு பேருலையும் வரும் பின்னூட்டம் எல்லாமே கலக்கல் ரகம். உங்க டிபன் ஒரு வாரத்திற்கு தாங்கும் அவ்வளவு ஹெவி :)

Suresh Kumar said...

அருமையான தொகுப்புகள் இருந்தாலும் விஜய சாந்திகிட்ட வயசு கேட்டது தப்பு தாங்கோ

Anbu said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்..அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா..

உண்மைத்தமிழன் said...

///எவனோ ஒருவன் said...

//நாளைக்கு அந்தப் பதிவோட ஓனர் எல்லார் கண்ணுலேயும் படுதேன்னு நினைச்சு பதிவை டெலீட் செஞ்சாலும் செய்யலாமில்லையா..?//

அட நீங்க வேற சாமி.... எல்லார் கண்ணுலயும் படனும்னுதானே ஒபனா வச்சிருக்கு... இல்லனா குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் காட்டும் வசதிதான் இருக்கிறதே...///

அப்படீங்கிறே..! அப்படியும் வைச்சுத் தொலையலாமே..!

இதுக இப்படி எழுதினாத்தான் "அது" பத்தி மத்தவங்களுக்குத் தெரியப் போகுதா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

//அதனாலதான் பப்ளிக்கா போட்டேன்..! //

அதனால ஒன்னும் தப்பில்ல...
நல்லது கெட்டது எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும்ல... உதாரணத்துக்கு பாருங்க, நல்லது உங்க வலைப்பூ... கெட்டது அது...
எப்பூடி..]]]

எவனோ தம்பீ..

கரீக்ட்டுதான்..

அதைப் பார்த்துட்டு அப்படியே மூடிட்டு வந்துட்டீல்லே..

உள்ள போய் நோண்டி பார்க்கலியே..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

//சந்தோஷம் ஸார்..!//

என்னது சாரா? ச்சின்னப் பையன்னே நானு. சாதாரனமா கூப்பிடுங்க.]]]

சரிங்க தம்பீ..!

//வாரத்துக்கு ஒண்ணாச்சும் நான் எழுதிக்கிட்டிருக்கேன்..//

உங்கள் எழுத்துக்கள் நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்]]]

ஆஹா.. இது மாதிரி ரசிகர்கள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்பா..!

நன்றி தம்பீ..!

உண்மைத்தமிழன் said...

[[[அக்பர் said...
உண்மை தமிழனுக்கே உண்மை தெரியலையா. கஷ்டந்தான். அப்புறம் பதிவு பட்டுன்னு முடிஞ்சி போனது ஏமாற்றமா இருக்கு அடுத்த தடவை இன்னும் நாலு மேட்டர் சேர்த்து எழுதுங்க.]]]

ஐயோடா..!

இப்படியும் ஒரு ரசிகரா..?

அக்பர் ஸார்.. எல்லாரும் இதுவே நீளம்கிறாங்க.. நீங்க குறைவுங்குறீங்க..!?

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...
கடைசில வெச்ச காரசட்னி அபாரம்!
ஏண்ணே! நீங்க மட்டுமே இத்தினி நாளா ருசிச்சி இருக்கீங்க போல!]]]

உனக்கு இதுவரைக்கும் தெரியாதா..? எனக்கு ஆச்சரியமா இருக்குபா..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...
இட்லி, தோசை, வடை பொங்கல் மட்டுமில்ல, பரோட்டா, சப்பாத்தி, ரொட்டி, பர்கர், பீட்ஸா எல்லாத்தையும் கலந்து ஒரு கட்டு கட்ன மாதிரி இருக்கு...]]]

அப்ப பில்லைக் கூட்டிச் சொல்லட்டுமா..? எப்ப தருவீங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...
athu ennanga unga perukku pinnala number?.... yethuvum adaiyalamaa?]]]

அது ஒரு பெரிய சோகக் கதை ஜெட்லி..

என்னோட பதிவுல இதுவரை எழுதியவைகள் லிஸ்ட்ல போலி, போலிகள் ஜாக்கிரதைன்னு தலைப்புல இருக்குற மேட்டரையெல்லாம் படிச்சுப் பாருங்க.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
ஓசை செல்லாவின் தொலைபேசி எண்ணை கேட்டேன்.. sms அனுப்பறேன்ன் சொன்ன ஆளு.. இவ்வள்வு பெரிய பதிவு போடமுடியுது.. ஆனா அது முடியல்.. நீயெல்லாம்.. உங்கப்பன் முருகன் உன்னை பாத்துப்பான்.]]]

ஐயையோ.. ஆமாம்.. கேபிளு.. கேட்டீல்ல..

ஸாரி மறந்திட்டேன்.. அங்கன சஞ்சய்கிட்ட கேளேன்.. உடனே கொடுத்திருவான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் நாதம் said...
வழக்கம் போல நிறைய தகவல்]]]

நன்றி நாஞ்சில் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Bleachingpowder said...

//http://vijisekar.wordpress.com - இந்தப் பதிவை எழுதறது சத்தியமா யாருங்க சாமி..?//

எனக்கு அந்த பதிவை யாரு எழுதினது என்பதை விட, அந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை யார் போட்டாங்கதான் தெரியனும், அது கவுண்டமணி பேருலையும், சாரு பேருலையும் வரும் பின்னூட்டம் எல்லாமே கலக்கல் ரகம். உங்க டிபன் ஒரு வாரத்திற்கு தாங்கும் அவ்வளவு ஹெவி :)]]]

எனக்கும்தான் பிளீச்சிங்..

சாருவுக்கும், அந்தத் தளத்திற்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா..?

அவரைச் சம்பந்தப்படுத்தியே பல பி்ன்னூட்டங்கள் இருக்கே..!

கண்டு பிடிக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Kumar said...
அருமையான தொகுப்புகள் இருந்தாலும் விஜயசாந்திகிட்ட வயசு கேட்டது தப்புதாங்கோ]]]

நடிகையா இருக்கும்போது எத்தனை தரம் சிரிச்சுக்கிட்டே இதுக்குப் பதில் சொல்லியிருப்பாரு..

இப்ப என்ன கோவம்ன்னுதான் பத்திரிகைக்கார அண்ணன்களுக்கு கோபம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anbu said...
இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்..அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா..]]]

நன்றி அன்புத் தம்பியே..!

Unknown said...

ஆண்களிடம் வருமானதையும் பெண்களிடம் வயதையும் கேட்ககூடாது என்று எதற்கோ சொல்லியிருக்கிறார்கள். நடிகையின் வயதைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரியும் போது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

நிற்க, ஒரு வாரத்திற்கு பிறகு பதிவிட்டிருக்கிறீகள். இந்த இடைவேளையில் தங்களுடைய பழைய பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். அனைத்தும் நன்று. நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன்.

butterfly Surya said...

Lunch.. super..

VIKNESHWARAN ADAKKALAM said...

நீங்க எழுதுறதுல இதை தான் கொஞ்சம் ஈசியா சீக்கிரம் படிச்சிட்டு போகலாம்... இன்னிக்கு அதுலயும் மண் அள்ளி போட்டுட்டிங்க....

பித்தன் said...

ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் விஜயசாந்தி வயச தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க...!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உண்மையை புட்டு ப்ட்டு வைத்த

உண்மைத் தமிழன் தலைவர் வாழ்க வாழ்க ....

manasu said...

//அடுத்த தடவை இன்னும் நாலு மேட்டர் சேர்த்து எழுதுங்க.//


இன்னும் நாலு மேட்டரா..பார்த்துப்பா இன்னும் நாலு மீட்டர் சேர்த்து எழுதிரப்போறாரு!!!!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

ஆண்களிடம் வருமானதையும் பெண்களிடம் வயதையும் கேட்ககூடாது என்று எதற்கோ சொல்லியிருக்கிறார்கள். நடிகையின் வயதைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரியும் போது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

நிற்க, ஒரு வாரத்திற்கு பிறகு பதிவிட்டிருக்கிறீகள். இந்த இடைவேளையில் தங்களுடைய பழைய பதிவுகளைப் படித்துப் பார்த்தேன். அனைத்தும் நன்று. நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன்.]]]

நன்றி ஆனந்த்.. மெதுவாக வாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வண்ணத்துபூச்சியார் said...
Lunch.. super..]]]

நன்றி பூச்சியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[VIKNESHWARAN said...
நீங்க எழுதுறதுல இதைதான் கொஞ்சம் ஈசியா சீக்கிரம் படிச்சிட்டு போகலாம்... இன்னிக்கு அதுலயும் மண் அள்ளி போட்டுட்டிங்க....]]]

போச்சுடா.. விக்கி இதுவும் நீளமா..?!!

பின்னே எப்படித்தாங்க எழுதறது..? ஒண்ணும் புரியலே..

உண்மைத்தமிழன் said...

[[[Niyaz said...
ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் விஜயசாந்தி வயச தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க...!!]]]

அதான நியூஸு..? பத்திரிகைன்னா என்னன்னு நினைச்சீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
உண்மையை புட்டு ப்ட்டு வைத்த உண்மைத் தமிழன் தலைவர் வாழ்க வாழ்க ....]]]

நன்றி ஸ்டார்ஜன்.. என்ன இது பேரே வித்தியாசமா இருக்கு..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[manasu said...

//அடுத்த தடவை இன்னும் நாலு மேட்டர் சேர்த்து எழுதுங்க.//

இன்னும் நாலு மேட்டரா..பார்த்துப்பா இன்னும் நாலு மீட்டர் சேர்த்து எழுதிரப் போறாரு!!!!]]]

அதான.. இன்னும் நாலுன்னா கண்டிப்பா நாலு மீட்டர் கூடித்தான் போகும்..!

மனசு எச்சரிக்கைக்கு மிக்க நன்றிங்கோ..!

Anonymous said...

விஜய சாந்தியைப் பற்றிய செய்திகள் அருமை சகா..

Beski said...

//அதைப் பார்த்துட்டு அப்படியே மூடிட்டு வந்துட்டீல்லே..
உள்ள போய் நோண்டி பார்க்கலியே..!//
இப்படியெல்லாம் கேட்டா எப்படி? உள்ள போய் நோண்டிப் பாத்ததுனாலதான சொல்றேன்.
---
அடுத்தவர்களின் அந்தரங்க விசயங்கள் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆவல் இருக்காது? நான் மட்டும் என்ன விதி விலக்கா? ஆனால் தொடர்ந்து பார்க்கவேண்டுமென்று தோன்றவில்லை. அங்கு உள்ளவை நிஜம்போலத் தெரியவில்லை எனக்கு. ஏதோ கதை படிப்பதுபோல் உள்ளது. அந்தப் புத்தகம் படிக்கும் வயதை எல்லாம் தாண்டி வந்தாச்சே...!

geethappriyan said...

ரொம்ப அருமையான பதிவுங்க அண்ணே..
சோகத்துல ஆரம்பிச்சு இப்படி சந்தோஷமா முடிக்க யாரால முடியும்?
என்னவோ கட்டண தளம் படிக்கராமாதிரி தரமா இருந்திச்சி...
நல்லா படைங்க..
அப்போ அப்போ வந்து போறேன்.

SP.VR. SUBBIAH said...

மண்டகப்படி
கும்முறது
காய்ச்சுறது
சுண்ணாம்பு தடவிட்டாங்க!
கலக்கலா - உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை சொற்கள் சிக்குகிறது ஊனாதானா?
தனியா டிக்‌ஷனரி போடலாம் போலிருக்கே!!!

SP.VR. SUBBIAH said...

/////அண்ணே..ஒரு சின்ன விண்ணப்பம்..பதிவு ரொம்ப சிறிசா இருக்கு.கொஞ்சம் பெரிசா எழுத முயற்சி பண்ணுங்க..உங்களால முடியும்..அப்புறம் விஜயசாந்தி மேட்டர் ஒண்ணு..எழுத முடியாது.நேரா பாக்கும்போது சொல்றேன்...(அந்தம்மா விஜயலலிதா வீட்டுல...)/////

இந்த மேட்டரை ஆட்டோ சங்கர் தன்னுடைய கட்டுரையில கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு!

உண்மைத்தமிழன் said...

///இங்கிலீஷ்காரன் said...
விஜயசாந்தியைப் பற்றிய செய்திகள் அருமை சகா..///

நன்றி இங்கிலீஷ்காரன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

//அதைப் பார்த்துட்டு அப்படியே மூடிட்டு வந்துட்டீல்லே.. உள்ள போய் நோண்டி பார்க்கலியே..!//

இப்படியெல்லாம் கேட்டா எப்படி? உள்ள போய் நோண்டிப் பாத்ததுனாலதான சொல்றேன்.
---
அடுத்தவர்களின் அந்தரங்க விசயங்கள் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆவல் இருக்காது? நான் மட்டும் என்ன விதி விலக்கா? ஆனால் தொடர்ந்து பார்க்கவேண்டுமென்று தோன்றவில்லை. அங்கு உள்ளவை நிஜம் போலத் தெரியவில்லை எனக்கு. ஏதோ கதை படிப்பதுபோல் உள்ளது. அந்தப் புத்தகம் படிக்கும் வயதை எல்லாம் தாண்டி வந்தாச்சே...!]]]]

சரி.. வயசுக்கு வந்தாச்சுன்னு சுத்தி வளைச்சு சொல்றீக..!

ஏத்துக்குறேன்.. ஒத்துக்குறேன்..!

ஆனால் எழுதுவது பெண் என்கிறார்களே.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

ரொம்ப அருமையான பதிவுங்க அண்ணே..
சோகத்துல ஆரம்பிச்சு இப்படி சந்தோஷமா முடிக்க யாரால முடியும்?
என்னவோ கட்டண தளம் படிக்கராமாதிரி தரமா இருந்திச்சி...
நல்லா படைங்க..
அப்போ அப்போ வந்து போறேன்.]]]

நன்றி அறிவுத்தேடல் ஸார்.!

வித்தியாசமான பேரா இருக்கே..!

குட் செலக்ஷன்..!

உண்மைத்தமிழன் said...

[[[SP.VR. SUBBIAH said...
மண்டகப்படி
கும்முறது
காய்ச்சுறது
சுண்ணாம்பு தடவிட்டாங்க!
கலக்கலா - உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை சொற்கள் சிக்குகிறது ஊனாதானா? தனியா டிக்‌ஷனரி போடலாம் போலிருக்கே!!!]]]

எல்லாம் இங்க இருக்கிறதுதான் வாத்தியாரே..!

எதுவும் வெளில இருந்து வரலை..!

உண்மைத்தமிழன் said...

[[[[SP.VR. SUBBIAH said...

/////அண்ணே..ஒரு சின்ன விண்ணப்பம்..பதிவு ரொம்ப சிறிசா இருக்கு.கொஞ்சம் பெரிசா எழுத முயற்சி பண்ணுங்க..உங்களால முடியும்..அப்புறம் விஜயசாந்தி மேட்டர் ஒண்ணு..எழுத முடியாது.நேரா பாக்கும்போது சொல்றேன்...(அந்தம்மா விஜயலலிதா வீட்டுல...)/////

இந்த மேட்டரை ஆட்டோ சங்கர் தன்னுடைய கட்டுரையில கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு!]]]]

ஆஹா.. நம்ம வாத்தியாரு, ஆட்டோ சங்கர் கதையை எல்லாம் படிச்சு வைச்சிருக்காரு..

ஆபத்தான ஆளுதான்..!

ஜோசப் பால்ராஜ் said...

இன்னைக்காச்சும் சீக்கிரம் தூங்குவோம்னு இருந்தேன். போச்சு
ஏன் 15 பதிவ ஒன்னா எழுதுறீங்க?

மீனாவோட அப்பா போட்டோ இப்பதான் பார்த்தேன். நிறையா செய்திங்க. நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் செய்திங்க போங்க. எத கமெண்ட்ல சொல்றதுன்னு கூட தெரியல.

Muniappan Pakkangal said...

Neelamaana pathivunnaalum,attahaasam.

Subbiah Veerappan said...

/////////////ஆஹா.. நம்ம வாத்தியாரு, ஆட்டோ சங்கர் கதையை எல்லாம் படிச்சு வைச்சிருக்காரு..
ஆபத்தான ஆளுதான்..!///////

நக்கீரனில் வந்த தொடர் அது.சூப்பர் நடையில் இருக்கும். யாரோ கோஸ்ட் ரைட்டர் உதவி செய்திருப்பார் போலிருக்கிறது
வாங்கிப்படியுங்கள். அதையெல்லாம் படிப்பதால் மட்டுமே ஆபத்தான ஆசாமியென்று முடிவிற்கு வருவது எந்த விதத்தில் நியாயம்?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோசப் பால்ராஜ் said...
இன்னைக்காச்சும் சீக்கிரம் தூங்குவோம்னு இருந்தேன். போச்சு
ஏன் 15 பதிவ ஒன்னா எழுதுறீங்க?

மீனாவோட அப்பா போட்டோ இப்பதான் பார்த்தேன். நிறையா செய்திங்க. நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் செய்திங்க போங்க. எத கமெண்ட்ல சொல்றதுன்னு கூட தெரியல.]]]

அதுனாலதான் இதுக்கு இம்புட்டு பெரிய டைட்டிலு..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[Muniappan Pakkangal said...
Neelamaana pathivunnaalum, attahaasam.]]]

நன்றி டாக்டர்..!

உண்மைத்தமிழன் said...

SP.VR. SUBBIAH said...

/////////////ஆஹா.. நம்ம வாத்தியாரு, ஆட்டோ சங்கர் கதையை எல்லாம் படிச்சு வைச்சிருக்காரு..
ஆபத்தான ஆளுதான்..!///////

நக்கீரனில் வந்த தொடர் அது. சூப்பர் நடையில் இருக்கும். யாரோ கோஸ்ட் ரைட்டர் உதவி செய்திருப்பார் போலிருக்கிறது
வாங்கிப் படியுங்கள். அதையெல்லாம் படிப்பதால் மட்டுமே ஆபத்தான ஆசாமியென்று முடிவிற்கு வருவது எந்த விதத்தில் நியாயம்?]]]

வாத்தியாரே.. ஆபத்தானவர்ன்னு சொன்னது அந்த அர்த்தத்துல இல்ல..

இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரியாதுன்னு நினைச்சு உங்ககிட்ட பேசி ஏமாந்திறக் கூடாதுன்ற அக்கறைல சொன்னதாக்கும்..

தப்பான அர்த்தம் வந்தமைக்கு மன்னிக்கணும் வாத்தியாரே..!

அந்தக் கதையை அப்பவே படிச்சு முடிச்சு மனப்பாடம் பண்ணியாச்சு வாத்தியாரே..!

Arun said...

நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில
Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம்
தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : www.findindia.net

abeer ahmed said...

See who owns answers.com or any other website:
http://whois.domaintasks.com/answers.com