சோனியாவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்-பழ.நெடுமாறன் அறிவிப்பு

05-05-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இலங்கையுடன் கள்ளத்தனமான உறவு வைத்துக் கொண்டு தமிழ் ஈழத்து மக்களைக் கொன்று குவிப்பதற்கு முழு முதற் காரணமாகத் திகழும் அன்னை சோனியா தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை சென்னை வருகிறார்.

ஏற்கெனவே சோனியாவோ, மன்மோகன்சிங்கோ தமிழகத்திற்குள் கால் வைத்தால் எப்பாடுபட்டாவது எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம் என்று தமிழ்த் திரைப்பட தமிழீழ ஆதரவு இயக்கம் அறிவித்துள்ளது.

சொன்னது போலவே தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் ஐயா தலைமையில் பாரதிராஜாவும் இணைந்து நாளை சென்னை வரவிருக்கும் சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப் போவதாக நெடுமாறன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,

"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.

தற்போதும் இலங்கை ராணுவம் கடல் வழியே போரை நடத்துகிறது. போர் நிறுத்தத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கவில்லை. எனவே சோனியா சென்னைக்கு நாளை வரும்போது அவர் வரும் வழியில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராக வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்படும். கறுப்புச் சின்னங்கள் அணிவோம். இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கலை பொருட்டாக மதிப்பார்கள்.

இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."

இவ்வாறு பேசியுள்ளார்.

இன்று சேலத்திலும், நாளை திண்டுக்கல்லிலும் பிரச்சாரம் செய்யவிருக்கும் பாரதிராஜாவின் குழுவினர் இதற்காகவே இன்று இரவு சென்னை கிளம்பி வருகிறார்களாம்.

நடத்தட்டும்.. நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..

போராட்டம் வெல்லட்டும்..!

பெரியவர்களை வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்..!

45 comments:

மணிஜி said...

நா ஒரு கறுப்பு சட்டை வங்கி ரொம்ப நாளா போடாம வச்சிருக்கேன்..நாளைக்கு அதை போட்டு கிட்டு வரவா?

ஜோ/Joe said...

//நடத்தட்டும்.. நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..//

True!

Raju said...

ரைட்டு..!

வால்பையன் said...

//ஈழத்து மக்களைக் கொன்று குவிப்பதற்கு முழு முதற் காரணமாகத் திகழும் ”அன்னை” சோனியா தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை சென்னை வருகிறார்.//

இந்த இடத்தில் அன்னை தேவையா?

யாருக்கு அன்னை ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் தானே! நாம் ஏன் அன்னை போட்டு அழைக்கவேண்டும்!

சோனியான்னு சொல்லுங்களேன்!

வால்பையன் said...

செருப்பா, முட்டையான்னு தெரியலையே!

துளசி கோபால் said...

சோனியாவின் மாமியாருக்கு ஒரு முறை கருப்புக் கொடி காமிச்சப்ப நானும் எங்கள் அலுவலகத்தின் சார்பில் போயிருக்கேன்.

நாங்க கொடியை ஆட்ட... அந்தம்மா சிரிச்சுக்கிட்டேக் கையை ஆட்டிட்டுப்போயிட்டாங்க.

seeprabagaran said...

இத்தாலி சோனியாவே திரும்பிப்போ!
நீ ஒருத்தி தாலியறுத்ததற்காக தமிழச்சிகள் அனைவரும் தாலியறுக்க வேண்டுமா?

காங்கிரசுக்கும் சோனியாவுக்கும் கறுப்புக்கொடி காட்ட அனைவரும் தயாராவோம்

Unknown said...

போராட்டம் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை எப்படி நடத்துகிறது என்பது ஒரு புறம் இருக்க இந்திய அரசே (தமிழகத்தைச் சேர்ந்த) தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக தானே நடத்துகிறது. உதாரணத்திற்கு ஒன்று. சிங்கள ராணுவம் தமிழக மீனவர் மேல் நடத்திய தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கை. அல்லது எந்த ஒரு உருபடியான நடவடிக்கை எடுக்காதது.

பதி said...

//இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கலை பொருட்டாக மதிப்பார்கள்.

இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."//

உண்மை....

போராட்டக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்..

//நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..//

இதனை அழுத்தமான எழுத்துக்களில் (bold letters) பதிந்திருக்களாம். !!!!! அப்பொழுதாவது மனநிலை பாதிக்கப்பட்ட சிலருக்கு உறைக்கின்றதா என கவனித்திருக்கலாம்...

ஒன்று கவனித்தீர்களா, இப்பொழுது உடன்பிறப்புக்கள் உங்களுக்கு - ஓட்டாக குத்தித் தள்ளுகின்றனர் போல !!!! :)))

ராஜ நடராஜன் said...

போராட்டங்கள் திசை மாற்றப் பிரியர்களின் கபட எண்ணங்களைத் தாண்டி அதன் குறிக்கோளை சென்றடையட்டும்.

Ginger said...

இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,

"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.

இந்த முட்டாள் நெடுமாறனுக்கு, புலிகலின் ராணுவ தோல்விதான் பெரிசாக இருக்கு. இன அழிவு 5 மாதங்களுக்கு முன்னாடியே ஏற்பட்டுவிட்டது. இந்த போராட்டமெல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் முயற்சியாகும். நெடுமாறன் போன்ற முட்டாள்கல் எப்பொழுதாவது புலிகளிடம் அப்பாவி மக்களை பிணையாக வைத்து ஆடாதீர்கள் என்று சொல்ல தைரியமோ, அறிவோ இருக்கா?? இல்லையே. நெடுமாறன் போன்ர புலி ஆதரவாளர்கள் தான் இன துரோகிகள். புலி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் வரை அழிவை தடுக்க முடியாது.

ஜிஞ்ஜர்

நையாண்டி நைனா said...

தலே.. கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.

I am back.

யாத்ரீகன் said...

>>> நாங்க கொடியை ஆட்ட... அந்தம்மா சிரிச்சுக்கிட்டேக் கையை ஆட்டிட்டுப்போயிட்டாங்க <<<

Paarambariya Yedhirpu Muraigal Kaalathirkaerpa maaravenaama ?! idhai yedhirpaa nenaikaama varaverpa nenachitu ess agita..

அது சரி(18185106603874041862) said...

//
இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."
//

சோனியாவுக்கு கறுப்புக் கொடி நல்ல விஷயமே...ஆனால், அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு, அவர்கள் எதுவும் செய்யாவிட்டால் (விட்டால் என்ன, அப்படித் தான் ஆகும்!), மக்கள் என்ன செய்வார்கள்??

பாடம் கற்பிப்பார்கள் என்பதெல்லாம் சரி தான், ஆனால் எப்படி, எப்பொழுது?? இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா??

உண்மைத்தமிழன் said...

///தண்டோரா said...

நா ஒரு கறுப்பு சட்டை வங்கி ரொம்ப நாளா போடாம வச்சிருக்கேன்.. நாளைக்கு அதை போட்டு கிட்டு வரவா?///

உடனே கிளம்புங்க.. வெற்றியுடன் திரும்பி வாருங்கள்..

வாழ்த்துகிறேன் தண்டோரா ஸார்..

உண்மைத்தமிழன் said...

///ஜோ/Joe said...

//நடத்தட்டும்.. நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..//

True!///

நன்றி ஜோ..

உண்மைத்தமிழன் said...

///டக்ளஸ்....... said...

ரைட்டு..!///

பெஸ்ட்டு..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...

//ஈழத்து மக்களைக் கொன்று குவிப்பதற்கு முழு முதற் காரணமாகத் திகழும் ”அன்னை” சோனியா தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை சென்னை வருகிறார்.//

இந்த இடத்தில் அன்னை தேவையா?

யாருக்கு அன்னை ராகுலுக்கும், பிரியங்காவுக்கும்தானே! நாம் ஏன் அன்னை போட்டு அழைக்கவேண்டும்!

சோனியான்னு சொல்லுங்களேன்!///

ஓகே வாலு..

இனிமே சொல்லிட்டாப் போச்சு..!

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...

செருப்பா, முட்டையான்னு தெரியலையே!///

அதுவெல்லாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிடையாது..

இது நாகரிகமான ஆர்ப்பாட்டம்.. வெறும் கருப்புக் கொடியைக் காட்டுவது மட்டும்தான்..!

உண்மைத்தமிழன் said...

///துளசி கோபால் said...

சோனியாவின் மாமியாருக்கு ஒரு முறை கருப்புக் கொடி காமிச்சப்ப நானும் எங்கள் அலுவலகத்தின் சார்பில் போயிருக்கேன்.

நாங்க கொடியை ஆட்ட... அந்தம்மா சிரிச்சுக்கிட்டே கையை ஆட்டிட்டுப்போயிட்டாங்க.///

மை காட்.. டீச்சரம்மா போர்க்குணம் உங்களுக்குள்ளேயே இருக்கு.. ஆனா அது தூங்கிக்கிட்டிருக்கு.. தட்டி எழுப்பி விடுங்க..

நியூஸிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது.. கல் வீசி கண்ணாடியை உடைத்த துளசிகோபால் என்கிற தமிழ்ப் பெண்மணி கைது அப்படீன்னு நியூஸை நாளைக்கு நான் பேப்பர்ல படிக்கோணும்..

ப்ளீஸ் டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

///seeprabagaran said...
இத்தாலி சோனியாவே திரும்பிப் போ! நீ ஒருத்தி தாலியறுத்ததற்காக தமிழச்சிகள் அனைவரும் தாலியறுக்க வேண்டுமா? காங்கிரசுக்கும் சோனியாவுக்கும் கறுப்புக் கொடி காட்ட அனைவரும் தயாராவோம்.///

நன்றி பிரபாகரன்.. முடியாதவர்கள் எழுதியாவது நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்..

உண்மைத்தமிழன் said...

///ananth said...

போராட்டம் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை எப்படி நடத்துகிறது என்பது ஒரு புறம் இருக்க இந்திய அரசே (தமிழகத்தைச் சேர்ந்த) தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக தானே நடத்துகிறது. உதாரணத்திற்கு ஒன்று. சிங்கள ராணுவம் தமிழக மீனவர் மேல் நடத்திய தாக்குதலுக்கு இந்திய அரசு எடுத்த நடவடிக்கை. அல்லது எந்த ஒரு உருபடியான நடவடிக்கை எடுக்காதது.///

மறுக்க முடியாத உண்மை..

இதுவே வேறு நாடாக இருந்திருந்தால் இந்நேரம் இலங்கையின் கடற்படையை ஒழித்துக் கட்டியிருப்பார்கள்..

உண்மைத்தமிழன் said...

///பதி said...

//இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கலை பொருட்டாக மதிப்பார்கள்.

இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."//

உண்மை.... போராட்டக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்..

//நம்மால் முடிந்த ஒரு எதிர்ப்பையாவது நாம் காட்டி நாம் மனிதர்கள்தான் என்பதை அந்த விலங்கினத்தினருக்கு உணர்த்துவோம்..//

இதனை அழுத்தமான எழுத்துக்களில் (bold letters) பதிந்திருக்களாம். !!!!! அப்பொழுதாவது மனநிலை பாதிக்கப்பட்ட சிலருக்கு உறைக்கின்றதா என கவனித்திருக்கலாம்...

ஒன்று கவனித்தீர்களா, இப்பொழுது உடன்பிறப்புக்கள் உங்களுக்கு - ஓட்டாக குத்தித் தள்ளுகின்றனர் போல !!!! :)))///

பார்த்தேன்.. பார்த்தேன்.. ஏதோ அவங்களால முடிஞ்சது.. செஞ்சுட்டுப் போறாங்க..!

உண்மைத்தமிழன் said...

///ராஜ நடராஜன் said...
போராட்டங்கள் திசை மாற்றப் பிரியர்களின் கபட எண்ணங்களைத் தாண்டி அதன் குறிக்கோளை சென்றடையட்டும்.///

நிச்சயம் சென்றடையும் தோழரே..!

உண்மைத்தமிழன் said...

///Ginger said...

இது குறித்து அவர் நேற்று நெல்லையில் கூறியது,

"இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் ஏழாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளன. இன்னும் ராணுவத் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து இன்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகள் நடக்கின்றன.//

இந்த முட்டாள் நெடுமாறனுக்கு, புலிகலின் ராணுவ தோல்விதான் பெரிசாக இருக்கு. இன அழிவு 5 மாதங்களுக்கு முன்னாடியே ஏற்பட்டுவிட்டது. இந்த போராட்டமெல்லாம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் முயற்சியாகும். நெடுமாறன் போன்ற முட்டாள்கல் எப்பொழுதாவது புலிகளிடம் அப்பாவி மக்களை பிணையாக வைத்து ஆடாதீர்கள் என்று சொல்ல தைரியமோ, அறிவோ இருக்கா?? இல்லையே. நெடுமாறன் போன்ர புலி ஆதரவாளர்கள்தான் இன துரோகிகள். புலி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும்வரை அழிவை தடுக்க முடியாது.
ஜிஞ்ஜர்///

ஜிஞ்ஜர்..

வெயிலுக்கு இதமா ஜிஞ்ஜர் சோடா வாங்கிக் குடிங்க..

ஏப்பம் வரும்.. விட்டீங்கன்னா.. வயித்தெரிச்சல் சரியாயிரும்..

புலியை இங்கே யாரும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அது அடுத்த விஷயம்தான்.

முதல் விஷயமே அங்கேயிருக்கும் அப்பாவி தமிழ் மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான்..

அந்த இரண்டாவது விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள்கூட முதல் விஷயத்தில் ஒருமித்தக் கருத்தோடு இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் நான் உட்பட..!

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...

தலே.. கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.

I am back.///

ஓகே நைனாஜி.. வேலையை எல்லாம் முடிச்சிட்டு ஆற, அமர வாங்க..

நாங்க எங்கேயும் ஓடிர மாட்டோம்.

நீங்க எப்போ வந்து கும்முனாலும் வாங்கிக்கிறதுக்கும், தாங்கிக்கிறதுக்கும் நாங்க தயாராவே இருக்கோம்..!

உண்மைத்தமிழன் said...

///யாத்ரீகன் said...

>>> நாங்க கொடியை ஆட்ட... அந்தம்மா சிரிச்சுக்கிட்டேக் கையை ஆட்டிட்டுப்போயிட்டாங்க <<<

Paarambariya Yedhirpu Muraigal Kaalathirkaerpa maaravenaama ?! idhai yedhirpaa nenaikaama varaverpa nenachitu ess agita..///

அப்படீன்னுதான் நானும் நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///அது சரி said...

//இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றில் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுப்பர். அ.இ.அ.தி.மு.க.-மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டால், அதற்கும் தமிழகத்து மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.."//

சோனியாவுக்கு கறுப்புக் கொடி நல்ல விஷயமே... ஆனால், அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு, அவர்கள் எதுவும் செய்யாவிட்டால் (விட்டால் என்ன, அப்படித்தான் ஆகும்!), மக்கள் என்ன செய்வார்கள்?? பாடம் கற்பிப்பார்கள் என்பதெல்லாம் சரிதான், ஆனால் எப்படி, எப்பொழுது?? இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா??///

மாற்றங்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டுதான் தீர வேண்டும் அது சரிண்ணே..

எல்லாவற்றிலும் நம்பிக்கையில்லை எனில், எதன் மீதுதான், எவர் மீதுதான் நம்பிக்கை வைப்பது?

vanathy said...

சோனியாவுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் தமிழகத்தில் தடை செய்யப் பட்டு உள்ளதாக ஒரு செய்தி கடைசியாக வந்துள்ளது.
அது உண்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தமது எதிர்ப்பை, வன்முறை இல்லாமல் பல வடிவங்களில் காட்ட உரிமை உள்ளது.
அது போலீஸ் மூலம் அடக்கப் படுகிறது.
போகிற போக்கைப் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் வாக்குப் போட்டால், அப்படிப் போட்டவர்களை கைது செய்து சிறையில் போடுவோம் என்று சொல்வார்கள் போல உள்ளது. இது மட்டுமல்ல சமீப கால சம்பவங்களைப் பார்த்தால் பல விஷயங்களில் இந்தியா அடக்குமுறை கொண்ட சர்வாதிகார நாடு மாதிரி உருமாறிக் கொண்டு வருகிறது போல் உள்ளது.
புத்தி ஜீவிகளும், படித்த இளைஞர்களும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரம்,கருத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம் ,ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பைக் காட்டும் சுதந்திரம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, சாதாரண பொதுமக்களுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கக் கூடும்.
-வானதி

Ginger said...

உத’முதல் விஷயமே அங்கேயிருக்கும் அப்பாவி தமிழ் மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான்..’

உ.த., அப்பாவி மக்களை காக்க வேண்டும் என்றால் புலிகள் கைதியாக வைத்துக் கொண்டிருக்கும் மக்களை போக விட வேண்டும்; அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்.
ஈழவர் ந.சுசீந்திரனின் நேர்காணலை படிக்க

http://www.satiyakadatasi.com/2009/05/01/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/

”இப்படி சொல்வது மக்களை மாயைக்குள் நிறுத்திவைக்க இவர்கள் திட்டமிட்டு செய்கிற பிரச்சாரம் தான். வெறும் 1500 கேடர்களை மட்டுமே-அதுவும் எப்படா தப்பி வெளியேற முடியும் என்ற மனநிலையில் இருக்கிற இளைஞர்களை - வைத்துக்கொண்டு வெளியே பரந்திருக்கிற புலிகள் மீதான அனுதாபத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அதன் பலாபலன்களை அனு பவிக்கவும் திட்டமிட்டே இப்படியான மாயைக்குள் வைத் துள்ளனர்.இலங்கைப்பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாதாரண மனிதனுக்கு, அங்கே எவ்வளவு மக்கள் அடைபட்டிருக்கிறார்கள், எவ்வளவு புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் பரப்பளவு எவ்வளவு, மக்கள் ஆதரவு எப்படியிருக்கு என்ற விசயங்கள் மிகத்துல் லியமாகத் தெரியும்....
நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.............
இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது ‘இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்’ என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். ‘உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்’ என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?

புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது...........
இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.................”


உண்மைத்தமிழரே, இந்த தமிழர்களை புலிகளிடமிடமிருந்து விடுவிப்பதற்க்கு, உங்கள் திட்டம் என்ன? சொல்லுங்கள்


ஜிஞ்ஜர்

Raveendran Chinnasamy said...

//புலிகளுக்குத்தான் ஆதரவு அதிகம் என்பதனை நான் என்றுமே மறுக்கவில்லை. அதே சமயம் புலிகளுக்கு எதிர்ப்பாளர்கள் என்று ஒரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றுதான் சொல்லி வருகிறேன்.. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மக்கள் நிச்சயம் புலிகளின் பேச்சுக்கு அடங்கித்தான் போவார்கள். கண்ணுக்குத் தெரிய சாவு தொலைவில் நிற்கும்போது இருக்குமிடத்தில் கிடைப்பதை உண்டு, வாழ்க்கையை ஓட்டத்தான் அனைவரும் நினைப்பார்கள். அதில் ஒன்றும் தவறில்லையே.. புலிகள் சிங்கள ராணுவத்தை மட்டுமே எதிரிகளாகக் கருதியிருந்தால் அது ஈழப் போராட்டம் குழப்பமே இல்லாமல் போக வழி வகுத்திருக்கும். அதை விட்டுவிட்டு தனது ராணுவத்தைத் தவிர வேறு எந்த ராணுவத்தாலும் ஈழ விடுதலை கிடைத்துவிடக் கூடாது என்ற அதிகார வெறியில் பிரபாகரன் செய்த சகோதர யுத்தத்தினால்தான் புலிகள், இன்றைக்கு அதே ஈழ மக்களில் ஒரு சிலரின் எதிரிகளாக மாறிவிட்டனர். புலி செய்யும் கொலையும், சிங்கள ராணுவம் செய்யும் கொலையும் இரண்டும் ஒன்றுதான்.. இரு தரப்பிலும் சிந்துவது மனித ரத்தம்தான்.. அவர்கள் இறங்கி வராத நிலையில் நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று புலிகள் துப்பாக்கியைக் கீழே போட முடியாதபடி காலச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார்கள். அதிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் அவர்களேதான் அதனைச் செய்ய வேண்டும். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப அவர்களே முதல் படி எடுத்து வைத்தால் என்ன என்பதுதான் எனது கேள்வி.. - உண்மைத் தமிழன்
//

//இந்திய அமைதிக் காப்புப் படையால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி கேட்கிறீர்கள்.

இதே புலிகளால் வகை, தொகையில்லாமல் கொன்றழிக்கப்பட்டார்களே சக போராளி இயக்கத்தின் தோழர்கள்.. அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

கிட்டுவின் மீது வெடிகுண்டு வீசியதற்காக புலிகளின் சிறைகளில் இருந்த மற்ற இயக்கப் போராளிகள் 57 பேரை தாக்கியே கொலை செய்திருக்கிறார்களே புலிகள்.. ஏன் இது மட்டும் இன அழிப்பு இல்லையா..
--உண்மைத் தமிழன்
//

//தொல்.திருமாவளவன்,வை.கோபாலசாமி,

டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன்போன்றோர் நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில், வன்னியில் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கும் சுலோக அட்டைகளை காணக்கூடியதாக இருந்தது. இவ்வளவு மலினமான பொய்ப்பிரச்சாரங்கள் மூலம்தான் தமிழக மக்களை தமது பக்கம் திருப்பமுடியும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள் போலும்!

அளவுக்கதிமாக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தமிழக புலி ஆதரவாளர்களின் பிரச்சாரத்திலும் எவ்வித உண்மையுமில்லை. இதுவரை நடந்த விமானப்படையின் தாக்குதல்களின்போது மிகக்குறைவான அளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மையே.

அதற்கு காரணம் புலிகள் தமது பாதுகாப்புக்காக, வன்னி மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முகாம் அமைத்துப் பதுங்கியிருப்பதாகும். புலிகளின் முகாம்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படும்போது சில வேளைகளில் பொதுமக்களும் அதில் அகப்பட்டு விடுகிறார்கள். (புலிகளின் முகாம்கள் பற்றிய தகவல்களையும் புலிகளின் அதிருப்தியாளாகளும் வன்னிப் பொதுமக்களுமே இராணுவத்துக்கு வழங்குகின்றனர்) அதற்காகத்தான் யுத்தம் ஆரம்பித்தவுடனேயே, வன்னி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஆனால் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறிச் செல்லமுடியாதபடி புலிகள் இங்கு தடைவிதித்ததுடன், மக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருக்கிறாhகள். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்ல அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும் பிரித்தானிய அரசாங்கமும் வேண்டிக்கொண்டபோதும், புலிகள் செவிமடுக்கவில்லை --உண்மைத் தமிழன் ---

You also belong to group to make use of Srilankan Tamil issue for publicity . Please let Srilankan talk to countries ( UK /USA/Norway) other than tamil people in India or Indian govt .

உண்மைத்தமிழன் said...

//vanathy said...
சோனியாவுக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் தமிழகத்தில் தடை செய்யப் பட்டு உள்ளதாக ஒரு செய்தி கடைசியாக வந்துள்ளது. அது உண்மையா? ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தமது எதிர்ப்பை, வன்முறை இல்லாமல் பல வடிவங்களில் காட்ட உரிமை உள்ளது.
அது போலீஸ் மூலம் அடக்கப்படுகிறது.
போகிற போக்கைப் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் வாக்குப் போட்டால், அப்படிப் போட்டவர்களை கைது செய்து சிறையில் போடுவோம் என்று சொல்வார்கள் போல உள்ளது. இது மட்டுமல்ல சமீப கால சம்பவங்களைப் பார்த்தால் பல விஷயங்களில் இந்தியா அடக்குமுறை கொண்ட சர்வாதிகார நாடு மாதிரி உருமாறிக் கொண்டு வருகிறது போல் உள்ளது.
புத்தி ஜீவிகளும், படித்த இளைஞர்களும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரம்,கருத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம், ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பைக் காட்டும் சுதந்திரம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, சாதாரண பொதுமக்களுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கக் கூடும்.
-வானதி//

உண்மைதான் வானதி..

இவர்களே கருத்துச் சுதந்திரம் தங்களது ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கிறது என்று பீற்றிக் கொள்வார்கள்.

மறுபுறம் அவர்களுக்கெதிராக ஒரு வார்த்தையை வெளியிட்டால்போதும் உள்ளே தூக்கிப் போடு என்பார்கள்.

திரையுலக நடிகர்களையும் மிஞ்சிய அயோக்கிய நடிகர்கள் இன்றைய அரசியல்வியாதிகள்தான்..

உண்மைத்தமிழன் said...

ஜிஞ்ஜர் ஸார்..

புலிகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர்களுக்காகவே ஈழத்துப் பிரச்சினையை தமிழகத்தில் பரப்புகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு..

புலிகளையும் உள்ளடக்கிய ஈழத்து மக்களின் நலன் கருதிதான் நாங்கள் போர் நிறுத்தம் செய்யச் சொல்கிறோம்.

கூடவே அடுத்து புலிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து ஈழ நாட்டுப் பிரிவினைக்காக பேச வேண்டும் என்று விரும்புகிறோம்.

இலங்கை இதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் எமது நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போ என்றுதான் சொல்கிறோம்.

புலிகளுக்கு மகுடம் சூட்டத்தான் தனி ஈழத்தை நாங்கள் கேட்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு..

மக்களுக்காகத்தான் ஈழமே தவிர புலிகளுக்காக அல்ல..!

உண்மைத்தமிழன் said...

ரவீந்திரன் ஸார்..

புலிகள் விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட காரணங்களும், பிடித்தல்களும், பிடிக்காமைகளும் பலவும் உண்டு.

இதனை நான் வெளிப்படையாகவே பல முறைகள் வைத்திருக்கிறேன்.

இப்போது நம்முடைய பொதுவான எதிரி நம் கண் முன்னேயே நமது வாழ்க்கையை சிதறடிக்கும்போது நமக்குள் இருக்கிற பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு ஒருமித்தக் குரலில் எதிரியை ஒழிக்க குரல் கொடுப்பதுதான் நியாயம் என்று தற்போதைய இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பிறகு நான் எண்ணினேன்.. அதைத்தான் தற்போதைய பதிவுகளிலும் நான் சுட்டிக் காட்டி வருகிறேன்.

புலிகளுக்கு ஆதரவாக அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்பதைப் போலவோ பிரபாகரனுக்காகத்தான் நான் ஈழத்து மக்களை ஆதரிக்கிறேன் என்பதும் உண்மையல்ல..

சில நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடியே மக்கள் முன் வைக்கவும் விரும்புகிறேன். அதில் தலைவர்கள் பேசிய வார்த்தைகளை நான் எடிட் செய்ய விரும்பவில்லை. அப்படி எடிட் செய்யாத வார்த்தைகள் புலிகளில் நானும் ஒருவன் என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கலாம்.

ஆனாலும் பரவாயில்லை.. தங்களைப் போன்ற எனது ஜாதகம் அறிந்தவர்கள் இருக்கின்றவரையில் எனக்குக் கவலையில்லை.

வருகைக்கு நன்றி ஸார்..

Ginger said...

”கூடவே அடுத்து புலிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து ஈழ நாட்டுப் பிரிவினைக்காக பேச வேண்டும் என்று விரும்புகிறோம்.

இலங்கை இதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் எமது நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போ என்றுதான் சொல்கிறோம்.”

உத, நீங்க இன்னும் 1981ல் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன 28 வருடமாக தூங்கின Rip Van Winkle போல் பேசுகிறீர்கள். இது உருப்படுகிறதுக்கு வழி இல்லை. You are totally out of touch with reality .


ஜிஞ்ஜர்

உண்மைத்தமிழன் said...

///Ginger said...

”கூடவே அடுத்து புலிகளும், இலங்கை அரசும் உட்கார்ந்து ஈழ நாட்டுப் பிரிவினைக்காக பேச வேண்டும் என்று விரும்புகிறோம்.

இலங்கை இதற்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் எமது நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போ என்றுதான் சொல்கிறோம்.”

உத, நீங்க இன்னும் 1981ல் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்ன 28 வருடமாக தூங்கின Rip Van Winkle போல் பேசுகிறீர்கள். இது உருப்படுகிறதுக்கு வழி இல்லை. You are totally out of touch with reality .


ஜிஞ்ஜர்///

நன்றி ஜிஞ்ஜர் ஸார்.. உருப்படாமல் இருப்பதால்தான் உருப்படுவதற்கு வழி கேட்கிறேன்.. சொல்கிறேன்..

நீங்கள் கூடவே இருந்து கடைசியில் செத்துப் போவதற்கு வழி சொல்கிறீர்கள்..!

நன்றிகள் கோடி..

Ginger said...

உண்மைத்தமிழன்

ஈழத்தைப் பற்றி பேசி, ஸ்ரீலங்கா பிரிவினையை பற்றி பேசி நீங்கள் உங்கள் காரியத்தையே கெடுத்துக் கொள்வீர்கள். முதலில் இலங்கை தமிழர்களுக்கு மேலும் நப்பாசையை ஊக்குவிக்கிறீர்கள்; இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அண்டை நாட்டு பிரிவினையை பற்றி பேசுவது பொறுப்பற்றது. தரையில் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பற்றி பேசும் உரிமை இல்லை. ஈழத்தைப் பற்றி பேசினால் உங்களால் இலங்கை அரசின் உடன் பேச்சு வார்த்தைகளுக்கு சாத்தியம் இல்லவே இல்லை. இலங்கை அரசுடன் பேசாவிட்டால் வரும் நாட்களில் இன்னும் பல தமிழர் சாவர். பொறுப்பற்ற பேச்சுகளால், தமிழர்களை இன்னும் இன்னலுக்கு ஆளாக்குவீர்கள்.

Independent Eelam was a lost cause in 1989; it is even more a lost cause now. The best you can hope for is decent rehabilitation of displaced Tamils and fair treatment by Srilankan government. And stop giving false hopes to Elam Tamils by talking about breaking up of Srilanka.

BTW, I asked you about your plans for bringing out thousands of Tamils - who are literally dying by being in the warzone - from the clutches of LTTE. What is your reply? If you are sincere about helping Srilankan Tamils, start with them.

ஜிஞ்ஜர்

உண்மைத்தமிழன் said...

///Ginger said...

உண்மைத்தமிழன்

ஈழத்தைப் பற்றி பேசி, ஸ்ரீலங்கா பிரிவினையை பற்றி பேசி நீங்கள் உங்கள் காரியத்தையே கெடுத்துக் கொள்வீர்கள். முதலில் இலங்கை தமிழர்களுக்கு மேலும் நப்பாசையை ஊக்குவிக்கிறீர்கள்; இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அண்டை நாட்டு பிரிவினையை பற்றி பேசுவது பொறுப்பற்றது. தரையில் இல்லாதவர்களுக்கு உரிமைகளைப் பற்றி பேசும் உரிமை இல்லை. ஈழத்தைப் பற்றி பேசினால் உங்களால் இலங்கை அரசின் உடன் பேச்சு வார்த்தைகளுக்கு சாத்தியம் இல்லவே இல்லை. இலங்கை அரசுடன் பேசாவிட்டால் வரும் நாட்களில் இன்னும் பல தமிழர் சாவர். பொறுப்பற்ற பேச்சுகளால், தமிழர்களை இன்னும் இன்னலுக்கு ஆளாக்குவீர்கள்.

Independent Eelam was a lost cause in 1989; it is even more a lost cause now. The best you can hope for is decent rehabilitation of displaced Tamils and fair treatment by Srilankan government. And stop giving false hopes to Elam Tamils by talking about breaking up of Srilanka.

BTW, I asked you about your plans for bringing out thousands of Tamils - who are literally dying by being in the warzone - from the clutches of LTTE. What is your reply? If you are sincere about helping Srilankan Tamils, start with them.

ஜிஞ்ஜர்///

புலிகள் தங்களது பகுதியில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கிறார்களா அல்லது தடுக்கிறார்களா என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. உண்மை நிலவரங்கள் முழுமையாகத் தெரியாததால் சொல்ல முடியவில்லை. இதுதான் தற்போதைய போரில் ஏற்பட்டுள்ள குழப்பம்.

மற்றபடி தனித் தமிழ் ஈழம் ஒன்றுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு.

அங்கு மக்கள் கொன்றொழிக்கப்பட்டதால் லட்சத்தில் இருந்து ஆயிரத்திற்கு குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இனியும் அந்த தேசத்தில் சிங்களவனும், தமிழனும் சேர்ந்து வாழ முடியாது.

அப்படியொரு சூழலை சிங்களத்து அரசியல்வியாதிகள் திட்டமிட்டு செய்து முடித்துவிட்டார்கள்.

கொடுங்கள்.. இல்லாவிடில் மீண்டும் எவ்வழியிலாவது மக்கள் போராட்டம் வெடித்துக் கொண்டுதான் இருக்கும்..

Ginger said...

உண்மைத் தமிழன்

"மற்றபடி தனித் தமிழ் ஈழம் ஒன்றுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு"

அதை தீர்வு செய்ய வேண்டியவர்கள் அங்கிருக்கும் மக்களும், அரசியல்வாதிகளும். அது உங்கள் தீர்பு அல்ல.

”இனியும் அந்த தேசத்தில் சிங்களவனும், தமிழனும் சேர்ந்து வாழ முடியாது. ”

அப்படியென்றால் தெற்கு லங்காவில் வசித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களை இலங்கையிலிருந்து வெளியேரும்படி சொல்கிறீர்களா. கொழும்புவிலேயே 20 % தமிழர்கள்.

http://en.wikipedia.org/wiki/Colombo

தனி ஈழம் கிடைக்கும் வரை, அல்லது நீங்கள் வாங்கிக் கொடுக்கும் வரை, எல்லா இலங்கை தமிழரகளையும் இந்தியா வரச் சொல்கிறீர்களா?

“அப்படியொரு சூழலை சிங்களத்து அரசியல்வியாதிகள் திட்டமிட்டு செய்து முடித்துவிட்டார்கள்”

அது கரெக்ட். அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தமிழ் ஈழப் புலிகள். சிங்கள அரசியல்வாதிகள் தூக்குக் கயிரை தமிழர்களிடம் எரிந்தார்கள். அதை புலிகள் கையில் பிடித்து, தமிழர்கள் கழுத்தில் போட்டு இருக்கினார்கள்.

தனி ஈழம் கெட்டுப் போன பால். அதை ஒன்றும் செய்ய முடியாது. அதை தூக்கி எரிந்து விட்டு வேறு எதனாவது செய்யுங்கள்.

ஜிஞ்ஜர்

Ginger said...

"புலிகள் தங்களது பகுதியில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கிறார்களா அல்லது தடுக்கிறார்களா என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. உண்மை நிலவரங்கள் முழுமையாகத் தெரியாததால் சொல்ல முடியவில்லை. இதுதான் தற்போதைய போரில் ஏற்பட்டுள்ள குழப்பம்"

புலிகளின் (தமிழ்) மனித கேடய யுக்திகளின் அட்டூழியம் இப்பொது ஒரு படி ஏறியுள்ளது. 2 கி.மீ. பகுதியில் அடைக்கப் பட்டதால், 30000 மக்களை அவர்கள் தப்பிக்க முடியமல் அப்பிரதேசத்தின் நடுவில் வைக்கப் பட்டுள்ளரக்ள். கடந்த நாள் அரச்ய் ராணுவம் தாக்கியதில் 378 மக்கள் மடிந்தனர், 1122 ம்க்கள் காயமுற்றனர். இது குறைந்த பட்சம், உண்மையில் மனித சேதம் அதற்கு மேலேயே.

கடைசி பிணைத் தமிழர் மடியும் வரை, உ.த. “குழப்பத்தில்” இருப்பார்
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm

http://dbsjeyaraj.com/dbsj/archives/496#comment-3171
ஜிஞ்ஜர்

உண்மைத்தமிழன் said...

///Ginger said...

உண்மைத் தமிழன் "மற்றபடி தனித் தமிழ் ஈழம் ஒன்றுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு"

அதை தீர்வு செய்ய வேண்டியவர்கள் அங்கிருக்கும் மக்களும், அரசியல்வாதிகளும். அது உங்கள் தீர்பு அல்ல.

”இனியும் அந்த தேசத்தில் சிங்களவனும், தமிழனும் சேர்ந்து வாழ முடியாது. ”

அப்படியென்றால் தெற்கு லங்காவில் வசித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களை இலங்கையிலிருந்து வெளியேரும்படி சொல்கிறீர்களா. கொழும்புவிலேயே 20 % தமிழர்கள்.
http://en.wikipedia.org/wiki/Colombo//

தனி தமிழ் ஈழம் அமையுமெனில் கொழும்பு தமிழர்கள் வன்னி வரவும் தயங்க மாட்டார்கள்..

//தனி ஈழம் கிடைக்கும் வரை, அல்லது நீங்கள் வாங்கிக் கொடுக்கும்வரை, எல்லா இலங்கை தமிழரகளையும் இந்தியா வரச் சொல்கிறீர்களா?//

ஏன் இந்தியா வர வேண்டும்.. மரியாதையாக நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டு சிங்களன் செல்லலாமே..

//“அப்படியொரு சூழலை சிங்களத்து அரசியல்வியாதிகள் திட்டமிட்டு செய்து முடித்துவிட்டார்கள்”
அது கரெக்ட். அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தமிழ் ஈழப் புலிகள். சிங்கள அரசியல்வாதிகள் தூக்குக் கயிரை தமிழர்களிடம் எரிந்தார்கள். அதை புலிகள் கையில் பிடித்து, தமிழர்கள் கழுத்தில் போட்டு இருக்கினார்கள்.
தனி ஈழம் கெட்டுப் போன பால். அதை ஒன்றும் செய்ய முடியாது. அதை தூக்கி எரிந்து விட்டு வேறு எதனாவது செய்யுங்கள்.
ஜிஞ்ஜர்///

வேறு ஒரு வழியும் இல்லாததினால்தான் கட்டக் கடைசியாக தனித் தமிழ் ஈழத்திற்கு வந்து நின்றுள்ளோம்.

இதுதான் கடைசி நிலை.. செய் அல்லது செத்து மடி என்கிற நிலைமையில்தான் ஈழத்து மக்கள் இருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளவே முடியாது என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

///Ginger said...
"புலிகள் தங்களது பகுதியில் உள்ள மக்களை சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும். அனுமதிக்கிறார்களா அல்லது தடுக்கிறார்களா என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. உண்மை நிலவரங்கள் முழுமையாகத் தெரியாததால் சொல்ல முடியவில்லை. இதுதான் தற்போதைய போரில் ஏற்பட்டுள்ள குழப்பம்"
புலிகளின் (தமிழ்) மனித கேடய யுக்திகளின் அட்டூழியம் இப்பொது ஒரு படி ஏறியுள்ளது. 2 கி.மீ. பகுதியில் அடைக்கப் பட்டதால், 30000 மக்களை அவர்கள் தப்பிக்க முடியமல் அப்பிரதேசத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளரக்ள். கடந்த நாள் அரச்ய் ராணுவம் தாக்கியதில் 378 மக்கள் மடிந்தனர், 1122 ம்க்கள் காயமுற்றனர். இது குறைந்தபட்சம், உண்மையில் மனித சேதம் அதற்கு மேலேயே.//

ஏன் அந்தக் கொடிய சிங்கள அரசினால் குண்டு வீசாமலேயே இருக்க முடியாதா..?

சொந்த மக்கள் மீதே எப்படி, என்ன நினைப்பில் இப்படி குண்டு வீசுகிறார்கள்.. கொலைகாரர்கள்..

//கடைசி பிணைத் தமிழர் மடியும்வரை, உ.த. “குழப்பத்தில்” இருப்பார்
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm
http://dbsjeyaraj.com/dbsj/archives/496#comment-3171
ஜிஞ்ஜர்///

என் குழப்பம் தீரும்.. உங்களது குழப்பம்தான் தீரவே தீராது..

டிபிஎஸ் ஜெயராஜ் தீவிர புலி எதிர்ப்பாளர். நடுநிலையாக எழுதக்கூடியவர் அல்ல.. அதனால் அவர் எழுதுவதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது..

நீங்கள் வேண்டுமானால் பைபிளைப் போல் நினைத்துப் படியுங்கள்.. யார் வேண்டாம் என்றது..!

Ginger said...

"சொந்த மக்கள் மீதே எப்படி, என்ன நினைப்பில் இப்படி குண்டு வீசுகிறார்கள்.. கொலைகாரர்கள்"

உத, தனி ஈழம் தான் உங்கள் தீர்ப்பு என சொல்லிவிட்டு, அதே மூச்சில் தமிழர்கள் பொறுப்பு இலங்கை அரசு , தமிழர்கள் இலங்கை அரசின் சொந்த மக்கள் என ஜகா வாங்குகிறீர்களே. இதைப் போன்ற மனப் பான்மையால் தமிழ்நாட்டால் இலங்கை தமிழ்ர்களுக்கு இம்மிகூட உதவமுடியாது. அதனால்தான் 30 வருடங்களாக தமிழ்நாட்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“டிபிஎஸ் ஜெயராஜ் தீவிர புலி எதிர்ப்பாளர்.” ஜெயராக் தீவிர புலி எதிர்ப்பாளராக இருக்கலாம் ( எப்படியும் அப்படி இருந்தார் என்பது தவறு) ஆனால் அவர் புலிகளைப் போல லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை தன் உயிரைக் காக்க பிணை கைதிகளாக வைக்க வில்லை. அவர் எழுதுகிறார் அவ்வளவுதான். நீங்கள் புலிகளின் மாய வலையில் விழுந்து, புலிகளை கண்டிக்க மறுக்குறீர்கள் , அவர் அந்த மாய வலையிலிருந்து எழுந்து விட்டார் - அதுதான் வித்தியாசம். தமிழர்கள் புலிகளின் பாசிச போக்கை, தமிழர் அழிவு போக்குகளை கண்டித்து அவர்களை ஒதுக்கி விட்டால் ஒழிய, ஒன்றும் செய்யமுடியாது. தமிழர்கள் முட்டாள்கள் ஆவது சுலபம் , ஆனால் உலகம் முட்டாள் அல்ல. நீங்கள் புலிகளை கண்டித்து ஒதுக்காத வரை, உலகத்தில் யாரும் உங்களை சீரியசாக எடுத்துக் கொள்ள போவதில்லை


ஜிஞ்ஜர்

உண்மைத்தமிழன் said...

///Ginger said...

"சொந்த மக்கள் மீதே எப்படி, என்ன நினைப்பில் இப்படி குண்டு வீசுகிறார்கள்.. கொலைகாரர்கள்"

உத, தனி ஈழம் தான் உங்கள் தீர்ப்பு என சொல்லிவிட்டு, அதே மூச்சில் தமிழர்கள் பொறுப்பு இலங்கை அரசு , தமிழர்கள் இலங்கை அரசின் சொந்த மக்கள் என ஜகா வாங்குகிறீர்களே. இதைப் போன்ற மனப்பான்மையால் தமிழ்நாட்டால் இலங்கை தமிழ்ர்களுக்கு இம்மிகூட உதவமுடியாது. அதனால்தான் 30 வருடங்களாக தமிழ்நாட்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“டிபிஎஸ் ஜெயராஜ் தீவிர புலி எதிர்ப்பாளர்.” ஜெயராக் தீவிர புலி எதிர்ப்பாளராக இருக்கலாம் ( எப்படியும் அப்படி இருந்தார் என்பது தவறு) ஆனால் அவர் புலிகளைப் போல லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை தன் உயிரைக் காக்க பிணை கைதிகளாக வைக்க வில்லை. அவர் எழுதுகிறார் அவ்வளவுதான். நீங்கள் புலிகளின் மாய வலையில் விழுந்து, புலிகளை கண்டிக்க மறுக்குறீர்கள் , அவர் அந்த மாய வலையிலிருந்து எழுந்து விட்டார் - அதுதான் வித்தியாசம். தமிழர்கள் புலிகளின் பாசிச போக்கை, தமிழர் அழிவு போக்குகளை கண்டித்து அவர்களை ஒதுக்கி விட்டால் ஒழிய, ஒன்றும் செய்யமுடியாது. தமிழர்கள் முட்டாள்கள் ஆவது சுலபம் , ஆனால் உலகம் முட்டாள் அல்ல. நீங்கள் புலிகளை கண்டித்து ஒதுக்காத வரை, உலகத்தில் யாரும் உங்களை சீரியசாக எடுத்துக் கொள்ள போவதில்லை
ஜிஞ்ஜர்///

ஜிஞ்ஜர்..

உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை..

நாங்கள் புலிகளைக் கண்டிக்கத்தான் செய்தோம்.. செய்கிறோம்..

ஆனால் இன்றைக்கு சுடுகாட்டில் அவர்கள் இருக்கும்போதும் அதையே செய்ய எங்களது மனம் இடம் கொடுக்கவில்லை. பெற்ற வயிறு அல்லாவா.? அப்படித்தான் இருக்கும்..

நீங்கள்தான் பெறாத வயிறாச்சே.. விட்டுட்டு அடுத்த வேலையைப் போய் பாருங்க..!

abeer ahmed said...

See who owns derkeiler.com or any other website:
http://whois.domaintasks.com/derkeiler.com