இ-மெயில் மூலமாக ஒரு அமைதிப் போராட்டம்..!

09-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தச் செய்தி இ-மெயில் கடிதம் மூலமாக எனக்கு வந்தது.. நானும் என் நண்பர்கள் பலருக்கும் அனுப்பியுள்ளேன்.

அப்படியே இங்கேயும் இதனை பதிவு செய்கிறேன்.

படித்துப் பாருங்கள்.


"U CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY

BY FOLLOWING FEW SIMPLE STEPS.

Please spare a couple of minutes here... for the sake of India ... our country.

I got this article from one of my friends, but it's true, we can see this in day to day life,

Small example,

Before 5 months 1 US $ = IND Rs 39

After 5 months. Now it is 1 $ = IND Rs 50

Do you think US Economy is booming?

No, but Indian Economy is Going Down.

Our Economy is in u'r hands

INDIAN economy is in a crisis.

Our country like many other ASIAN countries is undergoing a severe economic crunch.

Many INDIAN industries are closing down.

The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.

More than 30000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages... etc which are grown, produced and consumed here.

A cold drink that costs only 70 / 80 paisa to produce is sold for NINE rupees, and a major chunk of profits from these are sent abroad.

This is a serious drain on INDIAN economy.

We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use

INDIAN products only for next two years.

With the rise in petrol prices, if we do not do this, the rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.

What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.

2. ENROLL as many people as possible for this cause.

Each individual should become a leader for this awareness.

This is the only way to save our country from severe economic crisis.

You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.


LIST OF PRODUCTS

COLD DRINKS:

USE: -

LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JALJEERA,
ENERJEE, and MASALA MILK...

INSTEAD OF: -

COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:

USE -

CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA,
MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF -

LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE: -

USE -

NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK


INSTEAD OF -

COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.



TOOTH BRUSH: -

USE

PRUDENT, AJANTA , PROMISE


INSTEAD OF

COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B



SHAVING CREAM:

USE - GODREJ, EMANI

INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE:-

USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER:

USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER:

USE - INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:

USE - LAKME, NIRMA, VELVET

INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS:

USE - BSNL, AIRTEL

INSTEAD OF - HUTCH


Every INDIAN product you buy makes a big difference.

It saves INDIA . Let us take a firm decision today.

BUY INDIAN TO BE INDIAN we are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL.

WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM.

WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY.

THE CURRENT TREND IS VERY THREATENING.

MULTINATIONALS CALL IT GLOBALISATION OF INDIAN ECONOMY.

FOR INDIANS LIKE YOU AND ME IT IS RECOLONISATION OF INDIA ...

THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.

WHO WOULD LIKE TO LET A" GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY.

PLEASE REMEMBER : POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE .

RUSSIA , S.KOREA , MEXICO ...........THE LIST IS VERY LONG!!

LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY.

LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.

FINALLY: IT'S OBVIOUS THAT U CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE,

SO GIVE UP ATLEAST ONE ITEM TO FOR THE SAKE OF OUR COUNTRY.

Instead please forward this mail to all your friends to create awareness.

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN "

JAI HIND

32 comments:

பீர் | Peer said...

மீண்டும் ஒரு சுதேசி இயக்கம் தேவைப்படுகிறது.

Sridhar V said...

இது ஒரு தவறான சிந்தனை.

கோகோ கோலா / பெப்சி போன்ற நிறுவனங்களுக்கும் ரிலையண்ஸ் / டாடா போன்ற நிறுவனங்களுக்கும் வர்த்தக ரீதியாக என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே இலாப நோக்கோடு நுகர்வு கலாச்சாரத்தை பரவலாக்கி மக்களிடமிருந்து பணத்தை உறிஞ்சுவதுதான் நோக்கமே.

இந்தியப் பொருளாதாரம் மென்மேலும் வளர வேண்டுமென்றால், சும்மா பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதுகை காட்டுவது மட்டும் போதாது. அவர்களின் பெரும் முதலீட்டை சரியானபடி இந்தியாவின் அடிப்படை கட்டுமானத்திற்கு பங்களிக்க செய்ய வேண்டும். வெறும் நுகர்வு சந்தையாக ஆகிவிடாமல் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் சாதகமான விஷயம் அதீத மனித வளம். நாம் அதை பெரிதும் அடுத்த நாட்டினருக்கு அடகு வைத்து வாழ்ந்து கொண்டிருக்கோம். அதனால்தான் ஒபாமா தும்மினால் கூட சில இந்திய நிறுவனங்களுக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது.

சீனா ஒரு சிறந்த முன்னுதாரணம். தங்களுடைய மனித வளத்தை எப்படி திறம்பட உபயோகபடுத்துகிறது என்பது நாம் படிக்கவேண்டிய பாடம்.

சரவணகுமரன் said...

இது போல் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ். விநியோகித்த ஒரு நோட்டிஸை படித்துள்ளேன்..

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே கொஞ்சம் பழைய மெயில்னாலும் தேவையான ஒன்று

Athisha said...

\\ இது போல் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ். விநியோகித்த ஒரு நோட்டிஸை படித்துள்ளேன்.. \\

ஆமா எஸ்.கே

நான் கூட படிச்சிருக்கேன்.. பெப்சிக்கு பதிலா காளிமார்க் சோடா குடிக்க சொல்லிதானே..

நீங்க கோவையா பாஸ்

Unknown said...

இந்திய நிறுவன்ம் என்றால் 100% இந்தியர்களுக்கு சொந்தமானது என்று இல்லை.விப்ரோவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
அதனால் விப்ரோ லாபம் ஈட்டினால் அதில் அவர்களுக்கும் பங்குண்டு.
ஹிந்துஸ்தான் லீவரில் முதலீடு செய்துள்ள இந்திய நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் அறிவீர்களா?. கோத்ரெஜ் என்ன இந்தியர்களுக்கு என்று மலிவு விலையிலா விற்கிறது.

பொருளாதார அறிவில்லாத முட்டாள்கள்தான் இப்படி எதையாவது சுதேசி என்ற பெயரில் உளறிக்கொண்டேயிருப்பார்கள். அதை பொருட்படுத்துவது மடத்தனம்.

இராகவன் நைஜிரியா said...

உங்கள் இடுகையில் வந்த அனைத்தும் சரிதான்.

நமது நாட்டின் நிறுவன தயாரிப்புகளை உபயோகப் படித்தினால், பணம் நம் நாட்டிலேயே இருக்கும், தொழில் வளமும் பெருகும்.

Boston Bala said...

எதுக்குங்க தினசரி குளிக்கணும்? யானை என்ன பல்லாத் தேய்க்குது? தண்ணியும் மிச்சமாக்கலாமே!

Unknown said...

கப்பலோட்டிய தமிழன் என்று பெருமை பெற்ற வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டியக் கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆங்கிலேயருக்குப் போட்டியாக "சுதேசி" என்ற கப்பல் கம்பெனியை ஆரம்பித்து, தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே இரண்டு கப்பல்களை ஒடவிட்டார்.

அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, வெள்ளைக்கர்ரன் கப்பல் கட்டணத்தை 16 அணாவாகக் (ரூ. 1) குறைத்தான். வ.உ.சி.யும் போட்டியாக கப்பல் கட்டணத்தை
எட்டணாவாகக் (ரூ. 0.5) குறைத்தார். அதற்குப் போட்டியாக வெள்ளைக்காரன் அதிரடியாக கப்பல் பயணத்தை இலவசமாக்கினான், அதொடு கையில் ஒரு குடையும் இலவசமாகக் கொடுத்தான்.

வ.உ.சி. யின் கப்பல்கள் காலியாக ஓடின, நிறுவனமும் நட்டமானது, கப்பல் கம்பெனியை மூடினார். அதன்பிறகு, வெள்ளைக்காரன் வைத்ததுதானேச் சட்டம். கப்பல் கட்டணத்தையும் கூட்டினர். வ.உ.சி.யையும் ஆயுள் கைதியாகச் சிறையில் தள்ளிச் செக்கிழுக்க வைத்தனர். தமிழர்களும் அவரை "செக்கிழுத்தச் செம்மல்" என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்.

நமது மக்கள் அவ்வளவு உண்ர்வாளர்கள் ஆச்சே?

உண்மைத்தமிழன் said...

///Chill-Peer said...
மீண்டும் ஒரு சுதேசி இயக்கம் தேவைப்படுகிறது.///

நிச்சயம் தேவை.. இது போன்று முழு மனதுடன் தேச ஒற்றுமை என்கிற ரீதியில் போராடினால் வெற்றி கிடைக்கும்..

இங்கேதான் அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்களின் ஆக்டோபஸ் கைகள் அதலபாதாளம் வரையிலும் பாய்கிறதே..

என்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

///Sridhar Narayanan said...

இது ஒரு தவறான சிந்தனை. கோகோ கோலா / பெப்சி போன்ற நிறுவனங்களுக்கும் ரிலையண்ஸ் / டாடா போன்ற நிறுவனங்களுக்கும் வர்த்தக ரீதியாக என்ன வேறுபாடு இருக்கிறது? எல்லாமே இலாப நோக்கோடு நுகர்வு கலாச்சாரத்தை பரவலாக்கி மக்களிடமிருந்து பணத்தை உறிஞ்சுவதுதான் நோக்கமே.//

உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன்..

ஆனால் உள்நாட்டு உற்பத்தி என்னும் பட்சத்தில் விற்பனை விலை கொஞ்சம் குறைவாகத்தானே இருக்கும். ஆனால் 90 பைசாவில் தயாரித்து 9 ரூபாய்க்கு விற்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது.

//இந்தியப் பொருளாதாரம் மென்மேலும் வளர வேண்டுமென்றால், சும்மா பன்னாட்டு நிறுவனங்களுக்கு முதுகை காட்டுவது மட்டும் போதாது. அவர்களின் பெரும் முதலீட்டை சரியானபடி இந்தியாவின் அடிப்படை கட்டுமானத்திற்கு பங்களிக்க செய்ய வேண்டும். வெறும் நுகர்வு சந்தையாக ஆகிவிடாமல் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவின் சாதகமான விஷயம் அதீத மனித வளம். நாம் அதை பெரிதும் அடுத்த நாட்டினருக்கு அடகு வைத்து வாழ்ந்து கொண்டிருக்கோம். அதனால்தான் ஒபாமா தும்மினால்கூட சில இந்திய நிறுவனங்களுக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது.//

ஸார்.. நம்மிடையே மனித வளம் இருக்கிறது.. மனித மேலாண்மை வளம்தான் குறைவாக இருக்கிறது.. இல்லாவிடில் அமெரிக்க முதலாளிகளுக்கு ஏன் இந்திய அடிமைகள் தேவைப்படுகிறார்கள்.

மாற வேண்டியது நமது குணநலனும், மனநலனும்..

//சீனா ஒரு சிறந்த முன்னுதாரணம். தங்களுடைய மனித வளத்தை எப்படி திறம்பட உபயோகபடுத்துகிறது என்பது நாம் படிக்கவேண்டிய பாடம்.///

சீனாவின் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு முழு முதற் காரணம் அந்த நாட்டில் நிலவும் ஒரு கட்சி ஆட்சி முறை. அரசியல் நிலவரம்.. அது போல் இந்தியாவில் வாய்க்குமானால் நிச்சயம் நாமும் முன்னேற்றலாம்.

இல்லாவிடில் என்றும் அடிமைகள்தான்..!

உண்மைத்தமிழன் said...

///சரவணகுமரன் said...

இது போல் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ். விநியோகித்த ஒரு நோட்டிஸை படித்துள்ளேன்..///

நானும் படித்திருக்கிறேன். திண்டுக்கல்லில் தெருத்தெருவாக வந்து நோட்டீஸ் கொடுத்தார்கள்..

உண்மைத்தமிழன் said...

///நான் ஆதவன் said...

அண்ணே கொஞ்சம் பழைய மெயில்னாலும் தேவையான ஒன்று///

நன்றி ஆதவன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///அதிஷா said...

\\ இது போல் சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ். விநியோகித்த ஒரு நோட்டிஸை படித்துள்ளேன்.. \\

ஆமா எஸ்.கே

நான் கூட படிச்சிருக்கேன்.. பெப்சிக்கு பதிலா காளிமார்க் சோடா குடிக்க சொல்லிதானே..

நீங்க கோவையா பாஸ்.///

ஆமா அதிஷா தம்பி..

மதுரைல இருக்கும்போது மாப்பிள்ளை விநாயகர் சோடாவைக் குடியுங்கள் என்றார்கள்..

நீங்க மதுரையா பாஸ்..!

உண்மைத்தமிழன் said...

///i criticize periyar said...

இந்திய நிறுவன்ம் என்றால் 100% இந்தியர்களுக்கு சொந்தமானது என்று இல்லை. விப்ரோவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
அதனால் விப்ரோ லாபம் ஈட்டினால் அதில் அவர்களுக்கும் பங்குண்டு.
ஹிந்துஸ்தான் லீவரில் முதலீடு செய்துள்ள இந்திய நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் அறிவீர்களா?. கோத்ரெஜ் என்ன இந்தியர்களுக்கு என்று மலிவு விலையிலா விற்கிறது.
பொருளாதார அறிவில்லாத முட்டாள்கள்தான் இப்படி எதையாவது சுதேசி என்ற பெயரில் உளறிக்கொண்டேயிருப்பார்கள். அதை பொருட்படுத்துவது மடத்தனம்.///

அண்ணே.. திண்டுக்கல் பூட்டு ஏன் காணாமல் போனது தெரியுமா..?

5 ரூபாய்க்கு விற்ற பூட்டைத்தான் ஏதோவொரு குஜராத்தில் முதலீடு செய்திருக்கும் வெளிநாட்டு கம்பெனி இப்போது 55 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறான்..

முதலில் அவன் வரும்போது புதுபுது டிஸைன்களாக உருவாக்கித் தள்ளினான். புதிய டிஸைன்களை பார்த்து சொக்கிப் போய் பின்னாடியே போன நமது பாமர மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கினால்தான் கவுரவம் என்ற போலியில் சிக்கிக் கொண்டார்கள்.

இப்போது திண்டுக்கல்லில் 4 அல்லது 5 பூட்டு கம்பெனிகள்தான் உள்ளன..

எங்களுக்கு விப்ரோவை பற்றியோ ஹிந்துஸ்தான் லீவரைப் பற்றியோ கவலையில்லை. உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும். அதுதான் எங்களுக்குத் தேவை..

உண்மைத்தமிழன் said...

///இராகவன் நைஜிரியா said...
உங்கள் இடுகையில் வந்த அனைத்தும் சரிதான். நமது நாட்டின் நிறுவன தயாரிப்புகளை உபயோகப்படித்தினால், பணம் நம் நாட்டிலேயே இருக்கும், தொழில் வளமும் பெருகும்.///

உண்மை இராகவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

///Boston Bala said...
எதுக்குங்க தினசரி குளிக்கணும்? யானை என்ன பல்லாத் தேய்க்குது? தண்ணியும் மிச்சமாக்கலாமே!///

பாபாஜி..

இப்படி தலையும் புரியாம, வாலும் புரியாம எப்படி பாபா பின்னூட்டம் போட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

///சூடு பட்ட பூனை said...

கப்பலோட்டிய தமிழன் என்று பெருமை பெற்ற வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டியக் கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆங்கிலேயருக்குப் போட்டியாக "சுதேசி" என்ற கப்பல் கம்பெனியை ஆரம்பித்து, தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே இரண்டு கப்பல்களை ஒடவிட்டார்.
அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, வெள்ளைக்கர்ரன் கப்பல் கட்டணத்தை 16 அணாவாகக் (ரூ. 1) குறைத்தான். வ.உ.சி.யும் போட்டியாக கப்பல் கட்டணத்தை
எட்டணாவாகக் (ரூ. 0.5) குறைத்தார். அதற்குப் போட்டியாக வெள்ளைக்காரன் அதிரடியாக கப்பல் பயணத்தை இலவசமாக்கினான், அதொடு கையில் ஒரு குடையும் இலவசமாகக் கொடுத்தான்.

வ.உ.சி. யின் கப்பல்கள் காலியாக ஓடின, நிறுவனமும் நட்டமானது, கப்பல் கம்பெனியை மூடினார். அதன்பிறகு, வெள்ளைக்காரன் வைத்ததுதானேச் சட்டம். கப்பல் கட்டணத்தையும் கூட்டினர். வ.உ.சி.யையும் ஆயுள் கைதியாகச் சிறையில் தள்ளிச் செக்கிழுக்க வைத்தனர். தமிழர்களும் அவரை "செக்கிழுத்தச் செம்மல்" என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்.
நமது மக்கள் அவ்வளவு உண்ர்வாளர்கள் ஆச்சே?///

நச்சுன்னு இருக்குங்கண்ணா உங்க பின்னூட்டம்..

நன்றி. நன்றி.. நன்றி...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது ஒரு மொட்டையான சிந்தனை..

இப்படி மாற்றுப் பொருள்களைப் பரிந்துரைப்பதற்குப் பதிலாக நாம் தயாரிக்கும் எந்தப் பொருளையும் உலகின் பிரபலத் தயாரிப்புகளுடன் ஒப்படும் தரத்துடனும் அந்தத் தயாரிப்புகளின் விலையை விட சிறிது விலை குறைவாகவும் சந்தைப் படுத்த வேண்டும்.

ஜப்பான் முன்னேறிய கதையும் இப்போது சீனாவின் தயாரிப்புகள் அமெரிக்க மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்ட விதமும் இப்படித்தான்.

மேட் இன் இந்தியா என்றாலே ஒரு உலகத்தரம் இருக்கும் என்ற நம்பிக்கை உலக அளவில் வர வேண்டும்.

அப்படி ஒரு திறனை வளர்த்துக் கொள்ளும் போது நீங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.பணம் இந்தியாவுக்கு கொட்டிக் கொண்டே இருக்கும் !

சாதாரண ஒரு பென்சில் சீவும்,ஸ்டீல் தகடாலான,மடக்கும் வடிவத்தில் இருக்கும் சிறிய கத்தி ஒன்று ஜப்பான் தயாரிப்பாக வரும்;நான் படிக்கும் காலத்திலேயே அதன் விலை ரூ.3.50.அப்போது பிளைடு 30 பைசாவோ என்னவோ..

ஆனாலும் அந்த ஒரு சிறிய கத்தி ஒரு வருடத்திற்கும் மேலும் நன்றாக உழைக்கும்,பதம் போகாது...

உலகில் எல்லா நாடுகளும் நல்ல தரமான பொருள்களுக்கு சிறிது விலை கூடுதலானாலும் கொடுக்கக் காத்திருக்கின்றன..நம்மால் தயாரிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

ஏன் இதுவரை கோக் போன்ற அதைவிட சுவையான ஒரு பானம் உலக அளவில் கொண்டு வர முடியவில்லை என்று யோசித்தீர்களா?

என்ன காரணம்???????

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

உண்மைத்தமிழன் said...

///அறிவன்#11802717200764379909 said...

இது ஒரு மொட்டையான சிந்தனை..
இப்படி மாற்றுப் பொருள்களைப் பரிந்துரைப்பதற்குப் பதிலாக நாம் தயாரிக்கும் எந்தப் பொருளையும் உலகின் பிரபலத் தயாரிப்புகளுடன் ஒப்படும் தரத்துடனும் அந்தத் தயாரிப்புகளின் விலையை விட சிறிது விலை குறைவாகவும் சந்தைப்படுத்த வேண்டும்.///

செய்யலாம்.. ஆனால் அவ்வளவு பொருட் செலவு செய்யக்கூடிய விவசாயிகள், தொழில் முனைவர்கள் இங்கே எங்கே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடன் கிடைக்குமா..?

//ஜப்பான் முன்னேறிய கதையும் இப்போது சீனாவின் தயாரிப்புகள் அமெரிக்க மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்ட விதமும் இப்படித்தான்.//

அடுத்த நாடுகள் முன்னேறியதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய கலாச்சாரம் அப்படி.. ஜப்பானில் இருக்கும் அதீத தேசப் பற்று நமக்கு இருக்கிறதா..? உழைக்கின்ற ஆர்வம் நமக்கு இருக்கிறதா..? எதைப் பற்றியும் சிந்திக்காமல் புதிது, புதிதாக கண்டுபிடிக்கும் திறமையும், அதனை ஊக்குவிக்கும் அரசுகளும் இங்கே அமைகின்றனவா..? சொல்லுங்கள்..

//மேட் இன் இந்தியா என்றாலே ஒரு உலகத் தரம் இருக்கும் என்ற நம்பிக்கை உலக அளவில் வர வேண்டும். அப்படி ஒரு திறனை வளர்த்துக் கொள்ளும் போது நீங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.பணம் இந்தியாவுக்கு கொட்டிக் கொண்டே இருக்கும் !//

திறனை வளர்த்துக் கொள்ள இளைஞர்கள் தயார்.. ஆனால் அரசுகள் தயாரில்லையே.. எங்கள் காசிலேயே எங்களுக்கே பிச்சை போட்டு அவர்கள் அரசாளத்தானே நினைக்கிறார்கள்..

//சாதாரண ஒரு பென்சில் சீவும், ஸ்டீல் தகடாலான, மடக்கும் வடிவத்தில் இருக்கும் சிறிய கத்தி ஒன்று ஜப்பான் தயாரிப்பாக வரும்; நான் படிக்கும் காலத்திலேயே அதன் விலை ரூ.3.50.அப்போது பிளைடு 30 பைசாவோ என்னவோ.. ஆனாலும் அந்த ஒரு சிறிய கத்தி ஒரு வருடத்திற்கும் மேலும் நன்றாக உழைக்கும், பதம் போகாது.//

இப்போதும் சென்னையில் தயாராகும் மரக்கட்டில்களை எந்தவிதத்திலும் உங்களால் குறை சொல்ல முடியாது. கம்பம், தேனி பகுதிகளில் உருவாகும் கட்டில்களுக்கு அவ்வளவு மவுசு உண்டு. ஆனால் ஆதரிப்பவர்கள் யார்..? எங்கே இருக்கிறார்கள்.. அவைகளை புறக்கணித்துவிட்டு ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்து நமது தொழிலை அடியோடு அழித்துவி்ட்டார்கள்..

அதோடு கூடவே நம்முடைய சோம்பேறித்தனமும் ஒரு காரணம். செய்கின்ற கைவினைஞர்களை வரவழைத்து செய்ய வைத்து வாங்குவதற்கு சோம்பேறித்தனப்பட்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே வாங்கிக் கொள்கிறார்கள். விலை அதிகம் என்றாலும்கூட.. இதனால் யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..?

//உலகில் எல்லா நாடுகளும் நல்ல தரமான பொருள்களுக்கு சிறிது விலை கூடுதலானாலும் கொடுக்கக் காத்திருக்கின்றன.. நம்மால் தயாரிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.//

மொத்தமாகத் தயாரிக்க தொழிலாளர்களும், கைவினைஞர்களும், கலைஞர்களும் தயார்.. ஆதரிப்பார்தான் இல்லை..

//ஏன் இதுவரை கோக் போன்ற அதைவிட சுவையான ஒரு பானம் உலக அளவில் கொண்டு வர முடியவில்லை என்று யோசித்தீர்களா?
என்ன காரணம்???????///

கோக் என்ன சுவையான பானமா..? அதைவிட இனிமையானது நம்முடைய பதநீரும், இளநீரும்.. அதை ஏன் மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.

கோக் பிரபலமானதற்கு காரணம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்தானே ஒழிய.. வேறில்லை..

நீண்ட நாட்கள் கழித்து வந்தமைக்கு நன்றிகள் அறிவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ்நெஞ்சம் said...
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009///

அருமை.. அத்தனையையும் ஒரே படத்தில் காட்டிவிட்டார்கள்..

இதுவெல்லாம் விலை போகாத பாசம்.. அன்பு.

Unknown said...

உங்களின் இந்த பணி தொடர என் வாழ்துக்கள்.
அபுல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

be indian...buy indian

சக்திவேல் said...

அட போங்கப்பா, இந்திய பொருளாதாரம் உயர்ந்து, ரூபாய் மதிப்பு உயர்ந்து, அளவுக்கு மீறிய அந்நிய செலவானி கையிருப்பு இருந்தால் என்ன ஆகும். குரங்கு கையில் வந்த சிரங்குபோலத்தான்.
ரூபாயை எடுத்து இஷ்ட்டம் போல ஸ்ரீலங்காவுக்கு கொடுத்து அப்பாவி மக்களை கொல்லும். இன்னும் பொருளாதாரம் உயர்ந்தால் என்னவாகும்? தேன் குடித்த நரிகதைதான். இன்று வன்னியில் நடாத்தப்படுவது மதுரையிலும் நடாத்தப்படும். பொருளாதாரம் நாசமாகபோய், சீனாவும் பாகிஸ்தானும், இந்தியாவில் ஒரு வன்னி ஆபரேஷன் நடத்தினாலும் புத்தி வரும்ன்னு நினைக்கிறீங்களா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நான் சொல்ல வந்த விதயத்தை சரியாக உணர்ந்து கொள்ள வில்லை,நீங்கள்..

ஏன் பிசினஸ் விதயங்களுக்கு அரசை எதிர்பார்க்க வேண்டும்?

இன்னும் விளக்கமாகச் சொன்னால் யார்ட்லி தயாரிப்பாக ஒரு சந்தன சோப்பு வருகிறது.விலை ஒரு சோப் சுமார் $2.25.அதாவது சுமார் 68 ரூபாய் இந்திய மதிப்பில்.

இந்தியாவில் இருக்கும் ஏராளமான சந்தன மரங்கள்,சந்தன எண்ணெய் தயாரிப்புகளைக் கொண்டு அதை விடத் தரமான அதைவிட சற்றே குறைந்த விலையில் நல்ல ஒரு தயாரிப்பைத் தயாரிக்க ஏன் நமது தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை?அதற்கு ஏன் அரசை எதிர்பார்க்க வேண்டும்??

சிறுகத்தி உதாரணம் அதற்காகவே சொன்னேன்.
ஒவ்வொரு தயாரிப்பிலும் நாம் இந்திய அளவில் மட்டுமல்ல,உலக அளவில் போட்டி போடப்பழக வேண்டும்.



உலகின் அனைத்து சந்தன சோப்புகளை-எனக்குத் தெரிந்தவரை-பயன்படுத்திய நான்,யார்ட்லியைப் போன்ற ஒரு சோப்பை இதுவரை பார்க்கவில்லை..

அந்த தரத்தில் அல்லது அதைவிட நல்ல தரத்தில் சிறிது விலை குறைவாகத் தயாரித்தால் அதை நான் வாங்கத் தயாராகவே இருப்பேன்.

சுதேசி இயக்க காலம் வேறு.அப்போது ஆங்கிலேயர் நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு கொண்டிருந்தார்கள்.அவர்களை எதிர்க்க,அவர்களின் பண வசதியை ஒடிக்க சுதேசி இயக்கம் வளர்க்கப்பட்டது.அது நியாயம்.

இன்று சுதந்திர நாட்டில் தரமான ஒரு பொருளுக்கு விலை அளிக்க மக்கள் தயாராக இருக்கும் போது அதுதான் விலை போகும்..

அதைவிட்டு செங்கல் போன்ற சோப்பைத் தயாரித்து விட்டு,இது இந்திய தயாரிப்பு,இதையே வாங்கு என்றால் வேலைக்கு ஆகாது...

||கோக் பிரபலமானதற்கு காரணம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்தானே ஒழிய.. வேறில்லை..||

கலாச்சாரம் எல்லாம் ஒன்றுமில்லை.சாஃப்ட் டிரிங்க என்று கேட்டகரியில் அதை விட சுவையான பானம் வரவில்லை.

ஸ்ப்ரைட் சிறிது நன்றாக இருந்தது,அதையும் கோக் பிராண்டு வாங்கிவிட்டது(என்று நினைக்கிறேன்)

இளநீருக்கும்,கோக்குக்கும் ஒப்புமை இல்லை.கோக்குக்கும் இளநீருக்கும் மத்தியில் நானும் இளநீரையே விரும்புவேன்..ஆனால் சாஃப்ட் டிரிங் வகையில் அதுதான் லீடர்,என்னதான் நாம் மறுத்தாலும்.

||நீண்ட நாட்கள் கழித்து வந்தமைக்கு நன்றிகள் அறிவன் ஸார்..!||

பதிவுகளுக்கான வருகை இருவழிச் சாலைதானே..உங்களை என் பதிவில் ஒருமுறை கூடப் பார்த்தாக நினைவில்லை எனக்கு.!

:))))))

உண்மைத்தமிழன் said...

///abulbazar said...

உங்களின் இந்த பணி தொடர என் வாழ்துக்கள்.
அபுல்.///

நன்றி அபுல்..!

உண்மைத்தமிழன் said...

///T.V.Radhakrishnan said...
be indian... buy indian///

இதை நாம் கடுமையாகப் பின்பற்றினால் நமக்கு்ம் நல்லது.. நாட்டுக்கும் நல்லது ஸார்..

உண்மைத்தமிழன் said...

///சக்திவேல் said...

அட போங்கப்பா, இந்திய பொருளாதாரம் உயர்ந்து, ரூபாய் மதிப்பு உயர்ந்து, அளவுக்கு மீறிய அந்நிய செலவானி கையிருப்பு இருந்தால் என்ன ஆகும். குரங்கு கையில் வந்த சிரங்கு போலத்தான்.
ரூபாயை எடுத்து இஷ்ட்டம் போல ஸ்ரீலங்காவுக்கு கொடுத்து அப்பாவி மக்களை கொல்லும். இன்னும் பொருளாதாரம் உயர்ந்தால் என்னவாகும்? தேன் குடித்த நரிகதைதான். இன்று வன்னியில் நடாத்தப்படுவது மதுரையிலும் நடாத்தப்படும். பொருளாதாரம் நாசமாகபோய், சீனாவும் பாகிஸ்தானும், இந்தியாவில் ஒரு வன்னி ஆபரேஷன் நடத்தினாலும் புத்தி வரும்ன்னு நினைக்கிறீங்களா?///

ஐயோ சக்திவேலண்ணே.. விட்ருங்கண்ணேன்..

உண்மைத்தமிழன் said...

//அறிவன்#11802717200764379909 said...
நான் சொல்ல வந்த விதயத்தை சரியாக உணர்ந்து கொள்ள வில்லை, நீங்கள்..

ஏன் பிசினஸ் விதயங்களுக்கு அரசை எதிர்பார்க்க வேண்டும்? இன்னும் விளக்கமாகச் சொன்னால் யார்ட்லி தயாரிப்பாக ஒரு சந்தன சோப்பு வருகிறது. விலை ஒரு சோப் சுமார் $2.25. அதாவது சுமார் 68 ரூபாய் இந்திய மதிப்பில். இந்தியாவில் இருக்கும் ஏராளமான சந்தன மரங்கள், சந்தன எண்ணெய் தயாரிப்புகளைக் கொண்டு அதை விடத் தரமான அதைவிட சற்றே குறைந்த விலையில் நல்ல ஒரு தயாரிப்பைத் தயாரிக்க ஏன் நமது தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை? அதற்கு ஏன் அரசை எதிர்பார்க்க வேண்டும்??//

அண்ணே.. உங்க பதிலை வைச்சே என் பதிலைத் தருகிறேன்..

நம் நாட்டுத் தொழில் முனைவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும்.. கரும்பிலிருந்து சக்கரை தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் அந்தக் கரும்பிற்கு சரியான விலையைக் கொடுப்பதே இல்லை. துவக்கமே இந்த லட்சணத்தில் இருக்கிறது. இந்த கரும்பிலிருந்து ஜூஸை பிழிந்தெடுத்து கண்ணாடி ஜார்களில் அடைத்து ஜோராக விற்கலாம்.. இதற்கு முதலீடு செய்யும் அளவுக்கு சக்தி இல்லாதவர்கள்தான் ரோட்டோரமாக ஜூஸ் பிழிந்து கொடு்த்து பொழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அரசிடம் கேட்காமல் வேறு யாரிடம் கடன் கேட்க முடியும்.. அதோடு ஒரு தொழிலை நடத்த வேண்டும் எனில் அதற்கான தொழில் நுட்ப அறிவைவிடவும் தொழிலாக நடத்தத் தெரியவும் வேண்டாம். அது உள்ளவர்கள் அதிகம் இல்லை.

இதுவும் ஒரு பிரச்சினை..

//ஒவ்வொரு தயாரிப்பிலும் நாம் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் போட்டி போடப் பழக வேண்டும்.//

நீங்களே பாருங்கள்.. பெப்ஸிக்கும், கோக்கும் எந்த அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று. அவர்கள் அளவுக்கு விளம்பரம் செய்ய முடியாமல்தான் மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி நசிந்து போனது..

பெப்ஸியிடம் இருந்தது இதற்கான பணம்.. நம்மூர் கம்பெனியிடம் இல்லாததும் அதே பணம்தான்..

//உலகின் அனைத்து சந்தன சோப்புகளை-எனக்குத் தெரிந்தவரை-பயன்படுத்திய நான், யார்ட்லியைப் போன்ற ஒரு சோப்பை இதுவரை பார்க்கவில்லை.. அந்த தரத்தில் அல்லது அதைவிட நல்ல தரத்தில் சிறிது விலை குறைவாகத் தயாரித்தால் அதை நான் வாங்கத் தயாராகவே இருப்பேன்.//

அந்தத் தொழில் நுட்ப அறிவுடன் தொழில் வளர்ச்சி அறிவும் உள்ளவர் இருந்தால் நிச்சயம் இதை செய்ய முடியும்.. ஆள்தான் இல்லை.

//சுதேசி இயக்க காலம் வேறு. அப்போது ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களை எதிர்க்க, அவர்களின் பண வசதியை ஒடிக்க சுதேசி இயக்கம் வளர்க்கப்பட்டது.அது நியாயம்.//

ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் ஒரேயொரு வித்தியாசம்.. அன்றைக்கு ஆங்கிலேயர் ஆட்சி. இன்றைக்கு அதற்கு சற்றும் குறையாத அரசியல்வியாதிகளின் ஆட்சி..

//இன்று சுதந்திர நாட்டில் தரமான ஒரு பொருளுக்கு விலை அளிக்க மக்கள் தயாராக இருக்கும் போது அதுதான் விலை போகும்.. அதைவிட்டு செங்கல் போன்ற சோப்பைத் தயாரித்து விட்டு, இது இந்திய தயாரிப்பு, இதையே வாங்கு என்றால் வேலைக்கு ஆகாது...//

கிடைக்கின்ற பொருட்களை வைத்து, இருக்கின்ற பொருளாதாரத்தில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கிறார்கள். இதிலென்ன தவறு..? நானும் இப்போதெல்லாம் அடிக்கடி 5 ரூபாய் சோப்பைத்தான் வாங்குகிறேன்.. காலத்தின் கட்டாயம். தேவை.. என் போன்றவர்கள் நிறைய பேர் இந்தியாவில் உள்ளார்கள்.

//||கோக் பிரபலமானதற்கு காரணம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்தானே ஒழிய.. வேறில்லை..||/

கலாச்சாரம் எல்லாம் ஒன்றுமில்லை. சாஃப்ட் டிரிங்க என்று கேட்டகரியில் அதை விட சுவையான பானம் வரவில்லை.//

சாப்ட் டிரிங்க் கலாச்சாரம் நம்மிடையே இல்லையே சாமி.. இப்பத்தான வந்துச்சு.. இருக்கிறவங்கதான உலகத்துல மெஜாரிட்டி. அதுனாலதான் அங்க வளர்ந்து நல்லா செழிப்பா துட்டு சேர்த்து மத்த நாடுகளையும் கவுத்துச்சு..

///||நீண்ட நாட்கள் கழித்து வந்தமைக்கு நன்றிகள் அறிவன் ஸார்..!||

பதிவுகளுக்கான வருகை இருவழிச் சாலைதானே.. உங்களை என் பதிவில் ஒருமுறை கூடப் பார்த்தாக நினைவில்லை எனக்கு.!
:))))))///

அண்ணே.. நல்லா பாருங்க.

நிறைய பதிவுக்கு வந்திருக்கேன்.. படிச்சிருக்கேன்.. பின்னூட்டமும் போட்டிருக்கேன்..

ஆனா இப்பத்தான் இணையத்துக்குள்ள வரும்போது எது கண்ல படுதோ அதுக்கு மட்டும் பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்கேன்.. நேரமில்லண்ணே..

மன்னிச்சுக்குங்கண்ணே..

ராஜ நடராஜன் said...

பழைய இ-மெயில்தான்.அப்பவே யாருக்கோ இது பற்றி சொல்லி புலம்பின மாதிரி நினைவு.சுதேசிப் பொருட்களை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது.அதற்கான உலகத்தரத்தையும் தயாரிப்பாளர்கள் பொருளின் மார்க்கெட்டிங்கில் காட்ட வேண்டும்.சில பொருட்கள்,உதாரணத்திற்கு பருத்தி ஆடைகள் சீனாவுடன் ஒப்பிடும் போது தரத்தில் இந்திய ஆடைகள் உயர்ந்தது.ஆனால் இடைத்தரகர்,குட்டித்தரகர்,ஏனைய செலவுகள்ன்னு நுகர்வோனிடம் வந்தடையும் போது பொருளின் விலை இரட்டிப்பு.மார்க்கெட்டிங்,பேக்கிங்க் போன்ற வியாபார தந்திரங்களில் ஏனைய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

abeer ahmed said...

See who owns unawe.org or any other website:
http://whois.domaintasks.com/unawe.org