03-10-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
முதன்முதலில் வலைப்பதிவர்களுக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சியை ஏற்பாடு செய்து, நம்மை பெருமைப்படுத்திய இயக்குநர் கரு.பழனியப்பன், வலைப்பதிவர்களை மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறார்..!
தனது முதல் படமான 'பார்த்திபன் கனவு' படத்திற்குப் பின்பு இரண்டாவது படமாக 'சதுரங்கம்' என்னும் திரைப்படத்தை 2005-ம் ஆண்டு இயக்கியிருந்தார் பழனியப்பன்.
இதில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன், சரண்யா, மனோபாலா, மகாதேவன், இளவரசு போன்றோர் நடித்திருந்தனர். திவாகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு அரசியல்வியாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளும், இதனால் வெகுண்டெழும் அந்தப் பத்திரிகையாளனின் சூரசம்ஹாரமும்தான் இந்தப் படத்தின் கதை என்று, ஒரு கழுகார் கூறுகிறார்..!
இந்தத் திரைப்படம் சில வணிகக் காரணங்களினால் இதுவரையிலும் வெளிவராமல் இருந்தது. இப்போது கடைசியாக, 6 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையன்று இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
வலைப்பதிவர்களுக்காக இத்திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, வரும் அக்டோபர் 6-ம் தேதி மாலை 6.15 மணிக்கு சென்னை சாலிக்கிராமம், பிரசாத் பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னைவாழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இத்திரைப்படத்தை காண வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறார் படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன்.
'மந்திரப்புன்னகை' திரைப்பட சிறப்புக் காட்சியின்போதே இயக்குநர் பழனியப்பன் சொல்லியிருந்த “வாக்குறுதி” இப்போதும் அமலில் இருப்பதால், படம் நமக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவோம். மாற்றுக் கருத்து இருந்தால் அதனையே விருப்பு, வெறுப்பில்லாமல் முன் வைப்போம்..!
வாருங்கள்..!
|
|
Tweet |

