15-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் விருப்ப உரிமைப் பிரிவான 49-ஓ என்னும் பிரிவின் கீழ் வாக்களித்தவர்கள் 24,859..!
இதில் விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் ஒரு ஓட்டுகூட 49-ஓ-வில் விழுகவில்லை. அதிகபட்சமாக சிங்காநல்லூர் தொகுதியில்தான் 646 வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை எழும்பூர் தொகுதியில் 202 வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த பரிதி இளம்வழுதியின் தோல்விக்கு மட்டுமே, 49-ஓ ஆதரவாளர்கள் கை கொட்டி சிரிக்கலாம்.. சந்தோஷப்படலாம். இந்தத் தொகுதியில் கிடைத்துள்ள 49-ஓ வாக்குகளின் எண்ணிக்கை 274.
ஆனால் இந்த 49-ஓ இயக்கம் மக்களிடையே தொடர்ந்து வெற்றியடையுமா என்பது சந்தேகமே..! ஏனெனில் இந்தத் தேர்தலில் மக்கள் பொங்கியெழுந்து எதிர்க்கட்சிக்கு வாக்களித்திருக்கும் விதத்தைப் பார்த்தால், யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைவிட தவறு செய்பவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில்தான் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது..!
இதுவும் நல்லதுதானே..! இந்த வகையில் நான் பொதுமக்களையே ஆதரிக்கிறேன்..!
இனி.. இந்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான 49-ஓ வாக்குகள் பற்றிய முழு விபரத்தை பார்ப்போம்.. அனைத்துத் தகவல்களும் இமேஜ் ஃபைலாக இங்கே பதியப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளவர்கள் இமேஜின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படித்துப் பார்க்கவும்..!
நன்றி..!
|
Tweet |