இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-06-07-2011

06-07-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த கூகிள் பஸ் வந்தாலும் வந்துச்சு.. நமது வலையுலகப் பதிவர்களில் பாதி பேரின் பதிவுகளை குறைத்துவிட்டது. உடனுக்குடன் பதில்கள்.. கிறுக்கல்கள்.. சிணுங்கல்கள்.. சண்டைகள்.. கெஞ்சல்கள்.. சச்சரவுகள்.. என்று சுவாரசியமாகச் செல்வதால் அதிக நேரத்தை உறிஞ்சியெடுத்து பதிவு எழுதவே பதிவர்களுக்கு இப்போது சோம்பேறித்தனமாகிவிட்டது..!

"இட்லி-வடை பதிவுகள் ஏன் எழுதவில்லை..?" என்று ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து அன்புடன் மிரட்டிய டாக்டர் பிரகாஷுக்கும், ருவாண்டாவில் இருந்து அலைபேசியில் ஆடிய தோழருக்கும், சாட்டிங்கில் வந்து எழுதும்படி அன்புக் கட்டளையிட்ட அண்ணன் சீமாச்சுவுக்கும் நன்றி..!

ஏதாவது பெரிய, அரிய விஷயங்கள் கிடைத்தால் மட்டும்தான் இட்லி-வடை பதிவு போடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்.. அதில் எழுதலாம் என்று வைத்திருந்த செய்திகளையெல்லாம் உடனுக்குடன் செய்தியை முந்தித் தருவது என்ற 'தினத்தந்தி' ஆசையில் கூகிளாண்டவரின் பஸ்ஸில் வெளியிட்டு, என் 'வெறி'யைத் தீர்த்துக் கொண்டதால்(நமது மணிஜி, பஸ்ஸில் வெளுத்துக் கட்டுவதால் “வெறி” என்று சொல்ல வேண்டியிருக்கிறது) இட்லி-வடைக்கு கடும் பஞ்சமாகிவிட்டது..!

இப்படியேவிட்டால் 'இட்லி-வடை' என்கிற வார்த்தையே வலையுலகத்தினருக்கு மறந்துவிடும் அபாயம் இருப்பதை அறிந்து இந்த மாதத்தில் இருந்து அதனைச் செப்பனிட்டு, சீராக்கி, உருவாக்கி அளிக்கலாம் என்று புதிய கொள்கை முடிவொன்றை எடுத்திருக்கிறேன்..!

இனி 'இட்லி-வடை'யின் ஸ்டைலை மாற்றி அந்த வாரத்திய அரசியல் செய்திகள், சினிமா செய்திகள் பற்றிய எனது விமர்சனமாக மாற்றித் தருவதாக முடிவெடுத்துள்ளேன்..! வாராவாரம் புதன்கிழமையன்று இந்தக் கொடுமையை நீங்களெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது உங்களது தலையெழுத்து..! வேறு வழியில்லை.. அனுபவிங்க..!

சக்ஸேனா கைது..!

அம்மாவின் அதிரடியில் முதல் ஆளாகச் சிக்கியிருப்பது ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

நித்தி-ரஞ்சிதா விஷயத்தை 2 நாட்களாக விடாமல் ஒளிபரப்ப தெரிந்த சன் டிவிக்கு, இந்தக் கைது மேட்டரை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மனமில்லை.. "இந்தக் கைது விவகாரத்தை சட்டப்படி அணுகப் போகிறோம்"னு பிரஸ்ஸுக்கு நியூஸ் மட்டும் கொடுத்திருக்காங்க..! சக்ஸேனா கைது என்றவுடனேயே சன் டிவியின் பங்குகளின் விலையும் கொஞ்சூண்டு குறைஞ்சிருக்காம்.. நேற்று மட்டும் 11 ரூபாய் குறைந்ததாகச் சொல்கிறார்கள்..!

சக்ஸேனா கைது என்றதும் யார் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ.. நிச்சயமாக விஜய்  சந்தோஷப்பட்டிருப்பார்..! 'வேட்டைக்காரன்' படத்தின் பிரமோஷனுக்காக தன்னை பாடாய்ப்படுத்திய சன் பிக்சர்ஸை, விஜய்யால் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

குடும்பத்திற்காக படம் பார்க்க வேண்டும் என்று சொல்லி, 'வேட்டைக்காரன்' படப் பெட்டியைக் கேட்டு ஒரு மெளனப் போராட்டமே நடத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். ம்ஹூம்.. அசைந்து கொடுக்கவில்லை சக்ஸேனா. கடைசியாக சன் டிவி அலுவலகத்துக்கே போய் பஞ்சாயத்து பேசித்தான் பெட்டியையும், பெர்மிஷனையும் வாங்கி வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அத்தோடு தலை முழுக வேண்டிய லிஸ்ட்டில் சன் பிகசர்ஸையும் சேர்த்திருந்தார் விஜய்..!

சன் பிக்சர்ஸின் சி.இ.ஓ. என்ற பதவியை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ரேஞ்ச்சுக்கு பயன்படுத்தியவர் என்றுதான் திரையுலகத்தில் சக்ஸேனாவைக் குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது அவர் கைதாகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகூட அதே தயாரிப்பாளரால் சென்ற வருடமே தயாரிப்பாளர் சங்கத்திலும், விநியோகஸ்தர் சங்கத்திலும், திரைப்பட வர்த்தக சபையிலும் புகாராக அளிக்கப்பட்டதுதான்.

யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற தயக்கத்தில், “நீங்களே சமாதானமா பேசித் தீர்த்துக்குங்களேன்” என்றுதான் சொல்லி டபாய்த்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில்..! சங்கப் பதிவேட்டில் பதியக்கூட வேண்டாம் என்றார்களாம் நிர்வாகிகள்.

இந்த அளவுக்கு ஆளும் கட்சியின் பேரன்கள் மீதே பயம் கொண்டு ஆட்சி நடந்திருக்கிறது என்றால் ம்ஹும்.. இவர் நிச்சயம் தண்டனை பெற வேண்டியவர்தான். இன்னும் செக்கர்ஸ் ஹோட்டல் கேஸ் ஒன்றும் பாக்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து ஜாமீன் கேட்கும் சூழல் வரும்போது அந்த வழக்கும் பாயும் என்று நினைக்கிறேன்..! சரத்குமார் ரெட்டிக்கு ஒரு நீதி.. அவரது இனிய நண்பர் சக்ஸேனாவுக்கு இன்னொரு நீதியாகிவிடக் கூடாது..!

சூப்பர் ஸ்டார்களுக்குள் ஒற்றுமை..!

இது இமெயிலில் வந்த செய்தி. கன்னட சூப்பர் ஸ்டார்கள் ராஜ்குமாருக்கும், விஷ்ணுவர்த்தனுக்கும் இருந்த ஒற்றுமைகளாக சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!




Kannada cinema has lost both its eyes in the space of 44 months: Dr Raj Kumar in April 2006 and Dr Vishnuvardhan in December 2009.

1. Raj Kumar was born on the 24th: 2+4 =6; Vishnuvardhan was born on the 18th: 1+8 =9, both 6 and 9 are multiples of 3.

2. Raj Kumar died on the 12th: 1+2 =3;  Vishnuvardhan died on the 30th: 3+0 =3, again multiples of 3.

3. Raj Kumar died in ‘06; Vishnuvardhan in ’09; both years are multiples of 3.

4. Raj Kumar died two days before new year’s day as per the Souramana calendar;  Vishnuvardhan died two days before new year’s day in the Gregorian calendar.

5. Raj Kumar and Vishnuvardhan both died on Wednesday.

6. Muthuraju: 9 letters; Sampath Kumar: 12 letters, again both multiples of 3.

7. Raj Kumar was born on the 24th and died on the 12th, a difference of 12 days; Vishnuvardhan was born on the 18th and died on the 30th, again a difference of 12 days.

8. Raj Kumar died in Ramaiah hospital: Rajkumar and Ramaiah, both starting with R; Vishnuvardhan died in Vikram Hospital: Vishnuvardhan and Vikram, both starting with V.

9. Raj Kumar’s birth and death was in the same month, April; Vishnuvardhan’s birth and death was in the same city, Mysore.

10. Raj Kumar’s film career started in ’54: 5+4 = 9; Vishnuvardhan’s film career started in ’72: 7+2 = 9.

11. Raj Kumar received honorary doctorate from Mysore University in 1976, 22 years after his first film; Vishnuvardhan received honorary doctorate from Bangalore University in 2005, 33 years after his first film.

12. Raj Kumar’s 100th film was released in 1968; Vishnuvardhan’s 100th film was released in 1986.

13. Raj Kumar and Vishnuvardhan both took 14 years to reach the 100 film mark.

14. Both Raj Kumar and Vishnuvardhan died after a massive heart attack. Raj Kumar died on the 12th day; Vishnuvardhan died in the 12th month.

15. Raj Kumar was cremated in Kanteerava Studio, north Bangalore; Vishnuvardhan was cremated in Abhiman Studio, south Bangalore.
 
ராணுவம் வழங்கிய நீதி..!

பழம் பறிக்க வந்த சிறுவர்களை விரட்ட கடைசியில் துப்பாக்கிதான் கிடைத்ததா அந்த லெப்டினன்ட் கர்னலுக்கு..?




எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அப்பட்டமான படுகொலை இது.. சிறுவன் குடியிருப்புக்குள் நுழைந்து அதிகப்பட்சமாக என்ன செய்ய முடியும்..? மிலிட்டிக்காரர்கள் எதிர்பார்க்கும் நியாயத்தையும், ஒழுங்கையும் வெளி ஆட்களிடம் எதிர்பார்க்கலாமா..?


பையனை விரட்டியிருக்கலாம். திட்டி அனுப்பியிருக்கலாம்.. இதையெல்லாம் விட்டுவிட்டு குருவி சுடுவதைப் போல பொசுக்கென்று சுட்டுவிட்டு இன்றுவரையில் அந்த நபரை போலீஸின் கையில் ஒப்படைக்காமல் இருப்பதை பார்த்தால் இந்த நாட்டில் ராணுவத்திற்கும் ஏதோ பெரிய மரியாதையும், சக்தியும் இருப்பதுபோல் தோன்றுகிறது..!


இ.பி.கோ. செக்ஷனில்கூட லோக்கலில் குடியிருக்கும் ராணுவத்தினர் அடங்க மாட்டார்கள் என்றால் ம்ஹூம்.. சத்தியமாக இந்தியாவில் ஜனநாயகம் ஓஹோவென்றுதான் இருக்கிறது..!


இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திச் சென்ற இந்திய ராணுவ வாகனங்களை மதுக்கரை அருகே தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிடர் கழகத்தினரையும், பொதுமக்களையும் வெறி கொண்டு தாக்கிய ராணுவத்தினரைக்கூட இன்னமும் தமிழகத்து போலீஸ் கைது செய்யவில்லை..! அடையாளம் தெரியாத யூனிபார்ம் அணிந்த நபர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதாகச் செய்தி..!


ஒருவேளை யாராவது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயரதிகாரிகளின் பிள்ளைகளை இதுபோல் சுட்டுத் தள்ளியிருந்தால், இன்றைக்கு போலத்தான் அமைதியாக விசாரித்துக் கொண்டே இருப்பார்களோ..?


 
சத்தியமா இந்தியப் பொண்ணுங்கதாங்கோ..!

இந்த டான்ஸை முதல் முறை பார்த்தபோது பயந்து போனேன்.. "என்னங்கடா இது இந்தியப் பொண்ணுங்கதானா இவுங்கோ..?" என்று..! ஏதோ திருமண நிகழ்ச்சியாம்.. பிரான்ஸ் அல்லது கனடாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! "இதுவெல்லாம் அங்க சகஜம்.." என்கிறார் வீடியோவை வெளியிட்டிருந்தவர்..! தமிழ்நாட்டிலும் இந்தக் கொண்டாட்டங்கள் உண்டுதான்.. என்ன வெளில வராது. அவ்வளவுதான்..!



அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெறாத பாடல் காட்சி..!


இந்தப் பாடல் காட்சியையும் சமீபத்தில்தான் பேஸ்புக் வட்டாரத்தில் பார்க்க நேர்ந்தது..!




'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட பாடல் காட்சி என்று வெளியிட்டிருந்தார்கள்.


“அண்ணாத்த ஆளுதான் ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..” பாடலின் சிச்சுவேஷனில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட அதே இடத்திலேயே இந்தப் பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது..! இந்தப் பாடலில் நடிகை காந்திமதியும் இருக்கிறார். ஆனால் வெளியான படத்தில் இல்லை. ஒருவேளை காந்திமதியையும் நீக்கிவிட்டு, ஜனகராஜுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்து கதையை மாற்றி அந்தப் பாடலை ஜெகஜோதியாக எடுத்திருக்கிறார் போலிருக்கிறது..!

கமலின் இன்னுமொரு வெற்றிப் படத்திலும் இதே போன்ற ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு பின்பு உடன் நடித்த ஒரு மூத்த நடிகையின் எதிர்ப்பால்(உடன் நடித்த நடிகையுடன் நம்ம அண்ணன் அப்படி உருக்கி, உருட்டியிருந்தாராம்..) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அது என்ன படமென்று பதிவர்களுக்குத் தெரியுமா..? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்..!




பாவம் சாருநிவேதிதா..!

 

மத்தளத்துக்கு 2 பக்கமும் இடி என்பதைப் போல இணைய உலகில் அனைத்துத் தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றிருக்கும் சாரு, கூடவே இலவச இணைப்பாக “பாரதிக்குப் பிறகு நீதான்யா..” என்று தன்னால் புகழப்பட்டவராலேயே மறைமுகமாக “கெட் அவுட்” என்று சொல்லப்பட்டு வெளியில் தள்ளப்பட்டுள்ளார்..! ஒருவகையில் இது எல்லாவற்றுக்கும் சாருவேதான் காரணம்..! அவருடைய இயல்பான குணமே பல நண்பர்களை அவரிடமிருந்து தள்ளிவைத்துவிட்டது..!



காமம் என்பது கொண்டாடக் கூடியது என்றாலும், அதனை செய்வதற்கும்  இடம், முறைகள் இருக்கின்றன..! ராஜேந்திரகுமாரும், புஷ்பா தங்கத்துரையும்கூட தனிப்பட்ட முறைகளிலும், பேச்சுக்களிலும் தங்களது எழுத்தை துளியும் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டவர்கள். ஆனால் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சாரு இன்றைக்கு செய்திருக்கும் செயலினால் அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.

சாருவின் குணம் ஏற்கெனவே உலகமறிந்தது..! சாட்டிங்கில் பேசியிருக்கும், அவரது பேச்சுக்களில் குறைந்தது 60 சதவிகிதப் பேச்சு அவரது இணையத்தளத்திலேயே இருக்கிறது..! அதனால் இதுவொன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இப்படியெல்லாம் சாரு பேசவில்லை என்றால்தான், எனக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்கும்..!

இன்னொரு பக்கம் தனது புத்தகம் விற்கவேயில்லை என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்த சாருவுக்கு அவல் போட்டுவிட்டது கிழக்கு பதிப்பகத்தின் ஒரு வரிச் செய்தி. “தங்களுடைய விற்பனை இணையத்தளம் மூலம், அதிகமாக விற்பனையான புத்தகம் சாருவின் 'தேகம்'தான்..” என்று என்றைக்கு கிழக்கு அறிவித்ததோ, அன்றைக்கே இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்தேன்.
 

'உயிர்மை' இல்லையேல் சாரு இல்லைதான்.. ஆனால் சாரு இல்லாமல் போயிருந்தாலும் 'உயிர்மை' இருந்திருக்கும். அதற்கு சுஜாதா இருக்கிறார்.. மாலை அணிவித்தவரே கழுத்தை நெரிக்கவும் செய்கிறார் என்றபோது ஹமீதுவால் என்ன செய்ய முடியும்..? தன்னைக் காப்பாற்றிக் கொண்ட பின்புதானே நியாயம் கேட்க முடியும்.. அதுதான் சாருவின் கைகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்..!

4 பக்க நோட்டீஸுக்காக பத்திரிகா தர்மத்தை மீறி, பத்திரிகை வெளிவரும் முன்பேயே அதில் எழுதப்பட்ட கட்டுரையை இணையத்தில் போட்டுவிட்ட சாருவின் செயல் நியாயமில்லைதான். ஆனால் இமயமலை ரேஞ்ச்சுக்கு உயர்த்திப் பேசிக் கொண்டிருப்பவனுக்கு, எலிக்குஞ்சுக்கு கொடுக்கும் மரியாதைகூட இல்லாமல் நோட்டீஸ் விட்டு எச்சரிப்பது அந்த எழுத்தாளனின் தன்மானத்தை உரசிப் பார்த்துவிட்டது போல..!

சாரு எங்கேயும் நீண்ட நாட்கள் நீடித்து நிலைத்திருந்ததில்லை. யாருடனும் நெடிய நட்பையும் வைத்துக் கொண்டிருந்ததில்லை. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் அமோகமாக முதலிடத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'துக்ளக்'கில் அருள் பாலித்து வரும் சாருவுக்கும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் பஞ்சாயத்து பெரிசு 'சோ'வுக்கும் எப்போது சண்டை மூளும் என்று எதிர்பார்த்து நாமும் காத்திருப்போமாக..!

இனி சாரு, தைரியமாக 'கிழக்கு' நோக்கி வீறு நடை போட்டுச் செல்லலாம்..! அங்கு போன பின்பாவது, வங்கிக் கணக்கு எண் கொடுத்து பணம் கேட்கும் நிலைமை அந்த அறிவழகனுக்கு வராமல் இருக்கட்டும்..!

விடைபெற்றார் நயன்ஸ்..!

பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு நடிகை நயன்தாரா, சினிமாவுலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறார்..!




தெலுங்கின் மூத்த  இயக்குநர் திரு.பாப்பு இயக்கிய “ஸ்ரீராம ராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு அன்றைய நாளின் முடிவில் கண்ணீருடன் விடைபெற்றிருக்கிறார் நயன்தாரா..!


“கல்யாணமானா என்ன? பிள்ளை பெத்துட்டும், கொஞ்ச நாள் கழிச்சும் எத்தனை பேர் நடிக்க வரலை.. நீயும் திரும்பி வரலாம்..” என்று ஆறுதல் கூறியவர்களிடம், நடிக்கக் கூடாது என்ற தனது காதலரின் உத்தரவைச் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்..!


ம்.. பொல்லாத சனி உச்சியில் இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்? எப்படியோ ஒரு நல்ல நடிகையை தமிழ்த் திரையுலகம் தற்போதைக்கு இழந்துவிட்டது..!


இப்படித்தான் நடிகை ரேவதி, சுரேஷ் மேனனை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது பத்திரிகையாளர்களிடம் உறுதியுடன் சொன்னார் “இனிமேல் நோ ஷீட்டிங்” என்று..! 

'புன்னகை மன்னன்' ஷூட்டிங்கின் இறுதி நாளில் கமலும், இயக்குநர் சிகரமும் ஆளுக்கொரு பொக்கே கொடுக்க அவர்களுக்கே கல்யாண பத்திரிகை கொடுக்காமல், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்து கொண்டார்..! என்ன ஆச்சு..? திரும்பவும் “அரங்கேற்ற வேளை”யில் ரீ என்ட்ரி..! இதேபோல நயனும் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்போம்..!




ரஜினியின் பேரன்கள்..!


இது எத்தனை நாளைக்கு என்றுதான் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!


பிள்ளைகளை மீடியாக்களின் பார்வையில் படாமலேயே  வளர்க்கப் போவதாகச் சொல்லியிருந்த தனுஷ்-ஐஸ்வர்யாவின் சபதம், பிள்ளைகளின் பெரியப்பன் கல்யாணத்தில் புஸ்வானமாகிவிட்டது..!




சவுந்தர்யாவின் திருமணத்தில்கூட பிள்ளைகளை வெளிக்காட்டாமல் வேலைக்காரப் பெண்களிடம் கொடுத்து அரங்கத்தின் ஓரத்தில் அமர்த்தியிருந்தார்கள்.

'அது போன்ற குடும்ப வரலாற்று நிகழ்வுகளில் அந்தக் குழந்தைகள் இடம் பெறாதது பிற்காலத்தில் அவர்களுக்கு வருத்தமாக இருக்காதா?' என்றெல்லாம் பலவித கேள்விகளை  எழுப்பிய தனுஷின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால்தான், இந்தக் கல்யாணத்தில் மீடியாக்களின் முன் காட்டினார்களாம் பெற்றோர்கள்..! அதிலும் பெரியவன் யாத்ரா, இத்தூணூண்டு வேஷ்டியுடன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் காட்சி சூப்பர்ப்..!





இதிலும் ஒரு சர்ச்சை. "புகைப்படக்காரர்கள் வர வேண்டாம்.. நாங்களே புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தனுப்புகிறோம்" என்ற தனுஷின் தந்தை, சொன்னதுபோலவே செய்தார். அதில் குழந்தைகளின் படங்களும் இடம் பெற்றிருந்தன. அதன் பின்பு திடீரென்று என்ன நினைத்தாரோ தனுஷ், அனைத்து பத்திரிகைகளுக்கும் போன் செய்து "பிள்ளைகள் போட்டோவை மட்டும் போட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாராம். அதற்குள்ளாகவே நக்கீரனிலும், பிற இணையத் தளங்களிலும் அதனை வெளியிட்டுவிட்டார்கள்.



மறுநாள் 'தினத்தந்தி'யை தவிர மற்றப் பத்திரிகைகளில் இந்தப் புகைப்படம் வரவில்லை. இதற்காக 'தினத்தந்தி' நிருபரை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளுத்துக் கட்டிவிட்டாராம் தனுஷ்.. இதற்காக ஒரு தனி பஞ்சாயத்து, தற்போது நிருபர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது..!


பதவி படுத்தும் பாடு..!

அதிகாரமிக்க பதவிகள் கைக்குக் கிடைத்துவிட்டால் மனிதர்கள் உடனுக்குடன் மாறிவிடுவார்கள் போலும்..! பலவித உதாரணங்கள் வாரத்துக்கு ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்..!

2 ஆண்டுகளுக்கு முன்பாக அதிரடியாக இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது பாரதிராஜா-செல்வமணி கூட்டணியிடம் நிறையவே எதிர்பார்த்தார்கள் உதவி இயக்குநர்கள். சங்க அலுவலகத்தை ஹைடெக்காக மாற்றி, கூடுதல் அலுவலர்களை நியமித்து, இதுவரையில் அடையாள அட்டை பெறாதவர்களை போனில் வருந்தி, வருந்தி அழைத்து அடையாள அட்டைகளை அவர்களது பாக்கெட்டில் திணித்தது என்றெல்லாம் ஆரம்பத்தில் ஜரூர் காட்டத்தான் செய்தார்கள்..!

பின்பு போகப் போக தலைவர் பாரதிராஜாவின் இயல்பான குணத்தினால் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார்கள் சங்கத்தில்..! சுயேச்சையாக போட்டியிட்டு, ஜெயித்து பொருளாளரான ஆர்.சுந்தர்ராஜன் சங்க நிர்வாகிகளுக்கு கன்வேயன்ஸ் கொடுத்து மாளவில்லை என்ற கோபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். 


அடுத்து வந்த D.-40 இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா கணக்கு, வழக்குகளில் இன்றுவரையில் தகராறு என்கிறார்கள் சில இயக்குநர்கள். D-40 நிகழ்ச்சிக்காக சன் டிவி, இயக்குநர்கள் சங்கத்திற்கு கொடுத்த  2 கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தில் 1 கோடி ரூபாயை செலவு கணக்காகக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் 60 லட்சத்திற்கு கணக்கு ரெடி. மீதிக்கு..? அதுதான் சிக்கல் என்கிறார்கள்..! முறையான கணக்குகளை சமர்ப்பித்தால் மட்டுமே பதவியேற்பேன் என்று தற்போது பொருளாளராக தேர்வாகியிருக்கும் இயக்குநர் ஜனநாதன் உறுதியுடன் சொல்லிவிட, சங்கத்தில் கடந்த 10 நாட்களாக ஒரே கசமுசா.. இந்தக் கலாட்டாவினால் கடந்த 22-ம் தேதி பதவியேற்றிருக்க வேண்டிய நிர்வாகிகள் வரும் 11-ம் தேதி பதவியேற்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்..!

இதேபோல் சின்னத்திரையிலும் கமுக்கமான முறையில் ஒரு சின்ன கசமுசா.. கலைஞரின் செல்லப் பிள்ளை போல் இருந்த சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது. 


பையனூர் அருகே வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் கொடுத்திருந்த பணத்தில் 47 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டாராம். எங்களைக் கேட்காமல் பணத்தைக் கொடுத்தது ஏன் என்று கேட்டு விடுதலையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற நிர்வாகிகள். 

கேள்விகள் அவருக்கு மிக, மிக நெருக்கமான நிர்வாகிகளிடமிருந்தே வந்துவிட்டதால் அவசரம், அவசரமாக செயல்பட்டு 17 லட்சம் ரூபாயை மீட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் விடுதலை. மீதி 30 லட்சம். ஸ்வாகாவாம்.. "ஏதோ வேலை செய்திருக்கிறார்கள். அதற்கான செலவு.." என்று கணக்கு சொல்கிறாராம் விடுதலை. என்னதான் வேலை செய்தார்கள் என்றால், கட்டுமான இடத்தில் மண்ணடித்தார்களாம்.. அதற்காக 30 லட்சம் செலவு என்பது டூ மச்சாக இல்லை..!

வரும் 10-ம் தேதி சின்னத்திரை இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம். அன்றைக்கு அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அனைத்துத் தரப்பினரும்.. அதே நாளில் சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் தேர்தல். விடுதலையிடம் சொல்லிவிட்டுத்தான் அந்தத் தேதியை தேர்தல் நாள் என்று தெரிவித்தார்கள் எழுத்தாளர்கள் சங்கத்தினர். ஆனாலும் விடுதலை வேண்டுமென்றே அதே 10-ம் தேதி இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் என்றும் அறிவித்துவிட.. இரண்டு பக்கமும் கோபக்கனல் வீசுகிறது..!

இதேபோல் தொழிலாளர்கள் யூனியனிலும் கோல்மால். உறுப்பினர்களுக்காக வாங்கி வைத்திருந்த நிலத்தில் கொஞ்சத்தை ஒரு கல்லூரியினர் கேட்டார்கள் என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள். இன்னும் கொஞ்சம் நிலங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்..! பாவம் அப்பிராணி தொழிலாளர்கள்.. வட்டிக்கு வாங்கியும், மனைவி தாலியை அடகு வைத்தும் கட்டிய பணத்தில் இப்படி ஆள், ஆளுக்கு கை வைத்து இனிமா கொடுத்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்..?

அரசியல்வியாதிகளைப் போல இந்தச் சங்க நிர்வாகிகளும் தனிக்காட்டு ராஜாபோல் காசு சம்பாதிக்கத் துவங்கியிருக்கும் இந்தச் சூழல், ஏற்கெனவே புதைகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நல்லதல்ல..! ஏற்கெனவே பொறுப்பில் இருப்பவர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு 2 முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று அனைத்து சங்கங்களிலும் இப்போதுதான் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக மொத்தத்தையும் சுருட்டிவிடுவார்களே..!

படித்ததில் பிடித்தது..!

கேள்வி : ‘உங்களை விமர்சனம் செய்யும்போது இந்துத்வாவுடன் தொடர்புப்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்?’’
 
எழுத்தாளர் ஜெயமோகனின் பதில் :

‘‘இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த எழுத்தாளர்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வரவில்லை என்பதுதான்.  ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என்று தமிழ் பண்பாட்டுக்கு பங்களித்த எல்லா எழுத்தாளர்கள் மீது இந்துத்வா, அடிப்படைவாதம், பார்ப்பனீயம் என்கிற அடிப்படையில் அவர்கள் மீது விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.


இங்கு தமிழ்நாட்டில் இரண்டு வகையான அரசியல் கெடுபிடிகள் இருக்கின்றன. ஒன்று திராவிட இயக்கம் சார்ந்தது. மற்றொன்று மார்க்ஸிஸ்ட் சார்ந்தது. இதில் விவரமான மார்க்ஸிஸ்ட் உண்டு. அதாவது மார்ஸியம் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

பெரும்பாலானவர்கள் இந்த கொள்கைகளை மேலோட்டமாக தெரிந்து கொண்டு மேலோட்டமாக பேசிக் கொள்கிறார்கள். நமது பல்லாயிர வருட பாரம்பரியமோ, தத்துவ சிந்தனையோ அதனுடைய கலையோ இந்து சம்பந்தமாக இருக்கிறது. அதைப் பற்றி ஒருவர் பேசினாலோ அவர் இந்துத்வா சார்ந்தவர் என்று கூறி விடுகின்றனர்.  இப்படி எல்லாம் சொல்பவர்கள் படிக்காதவர்கள். இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்து தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக் கொண்டவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள்.  நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இது மாதிரி கருத்துகளை சொல்லக் கூடியவர்கள் உண்மையில் சொல்லப் போனால் எதையும் படித்திருக்க மாட்டார்கள். நேரில் அவர்களிடம் போய், “நீ என்ன படித்திருக்கிறாய்..? எந்த புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய்...?” என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. “எல்லோரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள்” என்பார்கள். அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.’’

நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-01-15 இதழ்

பார்த்ததில் பிடித்தது..!




80 comments:

Viki's View said...

தமிழ் தொலை காட்சி துறையில் சகோதரர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் சூழ்சியால் வாழ்விழந்தவர்களைப் பற்றியும் எழுதுக.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema mixing. super na

Unknown said...

பகிர்வில் பல தகவல்கள் அடங்கி இருக்கு நன்றி வாத்தியாரே!

சௌந்தர் said...

ரஜினி சென்னை வந்து அவரது இல்லத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா..??? அவரை நடிகர் மோகன் பாபு நேற்று முந்தைய தினம் சந்தித்தார்... ஆனால் ரஜினியின் வருகையை அவரது குடும்பத்தினர் மறைகிறார்கள்...!!!

சீனு said...

//1. Raj Kumar was born on the 24th: 2+4 =6; Vishnuvardhan was born on the 18th: 1+8 =9, both 6 and 9 are multiples of 3.//

தோடா...விட்டா 10-ல 3 போச்சுன்னா 7-னு சொல்லுவீங்க போல...

சேலம் தேவா said...

அடிக்கடி இட்லி,தோசை...எழுதுங்கண்ணா..ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.

Unknown said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் .... மிக அருமையான் கலவை ,,,,! தொடருங்கள் அண்ணே

சசிகுமார் said...

அப்ப புதன் கிழமை மறக்காம அண்ணன் தளத்துக்கு வந்துடனும் கலவை ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே

பித்தன் said...

மீண்டும் இட்லி வடைக்கு வாழ்த்துக்கள் நான் ரொம்ப விரும்பி படிக்கும் ஒரு பகுதி உங்கள் வலைமனையில்

Unknown said...

அருமை..அட்டகாசம். பந்தியில திருப்தியாக சாப்பிட்டு எழுந்த உணர்வு..நன்றிகள் பலகோடி..

வடகரை வேலன் said...

யாருங்க அன்பழகன்?

அப்துல்லா கோவிச்சுக்கப் போறாரு :)))))))))

தமிழ் இனிது said...

நல்ல தகவல்கள் , ஆனால் உங்கள் கூகிளாண்டவரிடம் மரகதம் சந்திரசேகர் போட்டாவை
மட்டும் கொடுக்க முடியாது. நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் போட்டோ எந்த வலை தளத்திலும் இருக்காது.எல்லாம் உளவுத்துறை வேலை.
மற்றும் இந்த வார ஜூனியர் விகடனில் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடனின்
சகோதரர்கள் பாசம் வெளிபடுகிறது. மேலும் விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது இந்த வார ஜூனியர் விகடன் .
1 . ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பற்றிய செய்தியில் ஜூனியர் விகடன் செய்தி போலவே இல்லை.
2 . "எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்" இதுவே ஜூனியர் விகடனின் அட்டை பட வசனம்
இது வீரபாண்டியர் சொன்னதாக எழுதப்படிருக்கிறது . ஆனால் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும்
எச்சரிக்கையாகவே இதை எடுத்து கொள்ளவேண்டும் .இங்கே விகடனின் பங்குகளை அவர்கள் வாங்கியிருபதாக வந்த
செய்திகளை கொஞ்சம் நினைவுபடுதிக்கொளுங்கள். யார் யாருக்கு சொன்னது என்பது தி.மு.க வின் தொண்டர்களுக்கு
புரியும்.
3 . கழுகார் செய்தியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி பற்றிய செய்திகளை நன்கு கவனித்தால் இருவருக்கும் மூட்டிவிட
ஆசை கொண்டவர்களின் தந்திரம் விளங்கும் .
ஆக மொத்தம் ஸ்டாலின் மற்றும் அழகிரியை சண்டை போட வைத்து கழகத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கப்படுகிறது.

முரளிகண்ணன் said...

செமை டேஸ்டுண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

நித்தி-ரஞ்சிதா விஷயத்தை 2 நாட்களாக விடாமல் ஒளிபரப்ப தெரிந்த சன் டிவிக்கு, இந்தக் கைது மேட்டரை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மனமில்லை.//

யோவ் மெதுவா சொல்லுய்யா "கேடி" பயலுக வந்துர கிந்துற போராயிங்க....

MANO நாஞ்சில் மனோ said...

சாட்டையடி, செருப்படி, பண்படி, செம்படி, களம்படி, பலம்படி, செலம்படி கலந்து அசத்தி[[திட்டி ஹி ஹி]] கலக்கி இருக்கீங்க மக்கா...!!!!

Swami said...

அண்ணே,
இந்த மாதிரி ஆன்டி டான்ஸ் எல்லாம் போட்டு எங்கள மாதிரி சின்ன புள்ளைங்களை பயமுறுத்தாதீங்க.

Anonymous said...

அன் லிமிடட் மீல்ஸ் சைசுக்கு பதிவு போட்டுட்டு டிபன் பேரை தலைப்பா வச்சிருக்கீங்க சார்! ஆனால் ருசியில் குறைவில்லை.

முத்தரசு said...

சாரு போட்டாவை தூக்கி விடுங்களேன்

இந்த மூஞ்சியை பார்க்க சகிக்கலை உமது ப்ளாக்கில்

SIV said...
This comment has been removed by the author.
SIV said...

சுவர் ஏறி ஊருடுவ முயற்சிக்கும் தீவிரவாதியாகவே இருந்தாலும் அவனைப் பிடித்து விசாரித்து பின்னனி தகவல்கள் வாங்க முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம். அதை விடுத்து சுட்டுக் கொல்வது எந்த விதத்தில் சரி?.

சிறுவனை கொன்ற விஷயத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை

சக்தி கல்வி மையம் said...

நீங்க சீனியர் ன்னு நிருபிச்சிடீங்க..

உண்மைத்தமிழன் said...

[[[barathi said...

தமிழ்த் தொலைக்காட்சி துறையில் சகோதரர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் சூழ்சியால் வாழ்விழந்தவர்களைப் பற்றியும் எழுதுக.]]]

நிறைய தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கு ஸார்.. நிச்சயமா எழுதணும்னு நினைச்சிருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க.. எழுதிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema mixing. superna.]]]

மிக்க நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கியுலகம் said...

பகிர்வில் பல தகவல்கள் அடங்கி இருக்கு. நன்றி வாத்தியாரே!]]]

வருகைக்கு நன்றிங்க பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[சௌந்தர் said...

ரஜினி சென்னை வந்து அவரது இல்லத்தில் இருப்பது உங்களுக்கு தெரியுமா..??? அவரை நடிகர் மோகன்பாபு நேற்று முந்தைய தினம் சந்தித்தார்... ஆனால் ரஜினியின் வருகையை அவரது குடும்பத்தினர் மறைகிறார்கள்...!!!]]]

அப்படியா..? ஆச்சரியமா இருக்கே..? எங்களுக்குக்கூட இப்படி நியூஸ் கிடைக்க மாட்டேங்குது.. விசாரிக்கிறேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

//1. Raj Kumar was born on the 24th: 2+4 =6; Vishnuvardhan was born on the 18th: 1+8 =9, both 6 and 9 are multiples of 3.//

தோடா... விட்டா 10-ல 3 போச்சுன்னா 7-னு சொல்லுவீங்க போல...]]]

ஹி.. ஹி.. ஏதோ அவுக ரேஞ்ச்சுக்கு யோசிச்சிருக்காங்கன்னு நினைச்சுக்குங்க. அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேலம் தேவா said...

அடிக்கடி இட்லி, தோசை எழுதுங்கண்ணா. ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.]]]

வருகைக்கு மிக்க நன்றி தேவா..!

உண்மைத்தமிழன் said...

[[[பேரரசன் said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார். மிக அருமையான் கலவை! தொடருங்கள் அண்ணே.]]]

நன்றி பேரரசன் அவர்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

அப்ப புதன்கிழமை மறக்காம அண்ணன் தளத்துக்கு வந்துடனும் கலவை ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே..]]]

ஆமாமாம்.. மறந்திடாதீங்க..! அவசியம் தொடர்ந்து வந்து எனக்கு ஆதரவு தரணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

மீண்டும் இட்லி வடைக்கு வாழ்த்துக்கள் நான் ரொம்ப விரும்பி படிக்கும் ஒரு பகுதி உங்கள் வலைமனையில்..]]]

நன்றி பித்தன்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[யோஹன்னா யாழினி said...

அருமை. அட்டகாசம். பந்தியில திருப்தியாக சாப்பிட்டு எழுந்த உணர்வு. நன்றிகள் பல கோடி..]]]

தங்களின் வருகைக்கு கோடி நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வடகரை வேலன் said...

யாருங்க அன்பழகன்?

யாரா..? அந்த ஐ.சி.ஐ.சி.ஐ. அக்கவுண்ட் அந்தப் பேர்லதான இருக்கு..!

[[[அப்துல்லா கோவிச்சுக்கப் போறாரு :)))))))))]]]

ச்சே.. ச்சே.. இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா அவர் நண்பரா இருக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் இனிது said...

நல்ல தகவல்கள், ஆனால் உங்கள் கூகிளாண்டவரிடம் மரகதம் சந்திரசேகர் போட்டாவை மட்டும் கொடுக்க முடியாது. நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் போட்டோ எந்த வலை தளத்திலும் இருக்காது. எல்லாம் உளவுத்துறை வேலை.]]]

அவருடைய புகைப்படத்தை யாரும் இணையத்தில் அப்லோட் செய்திருக்க மாட்டார்கள். அதுதான் விஷயமாக இருந்திருக்கும். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

செமை டேஸ்டுண்ணே..]]]

ஓகே.. நன்றி முரளி..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

நித்தி-ரஞ்சிதா விஷயத்தை 2 நாட்களாக விடாமல் ஒளிபரப்ப தெரிந்த சன் டிவிக்கு, இந்தக் கைது மேட்டரை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மனமில்லை.//

யோவ் மெதுவா சொல்லுய்யா "கேடி" பயலுக வந்துர கிந்துற போராயிங்க.]]]

வந்தா என்ன.. பார்த்துக்கிட்டுவோம் ஒரு கை..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

சாட்டையடி, செருப்படி, பண்படி, செம்படி, களம்படி, பலம்படி, செலம்படி கலந்து அசத்தி[[திட்டி ஹி ஹி]] கலக்கி இருக்கீங்க மக்கா...]]]

ஆஹா.. நல்ல பின்னூட்டம்.. மிகவும் ரசித்தேன் மனோ..! மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Swami said...

அண்ணே, இந்த மாதிரி ஆன்டி டான்ஸ் எல்லாம் போட்டு எங்கள மாதிரி சின்ன புள்ளைங்களை பயமுறுத்தாதீங்க.]]]

நானே பயந்து போயிருக்கேன்..! நீ வேற தம்பி..

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

அன் லிமிடட் மீல்ஸ் சைசுக்கு பதிவு போட்டுட்டு டிபன் பேரை தலைப்பா வச்சிருக்கீங்க சார்! ஆனால் ருசியில் குறைவில்லை.]]]

சிவா.. ருசியில் குறைவு இருக்கக் கூடாது. அதுதான் நமக்குத் தேவை..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

சாரு போட்டாவை தூக்கி விடுங்களேன். இந்த மூஞ்சியை பார்க்க சகிக்கலை உமது ப்ளாக்கில்..]]]

விடுண்ணே.. இருந்திட்டுப் போவுது. போட்டோவோட இருந்தால்தான் மேட்டரும் நல்லாயிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[SIV said...

சுவர் ஏறி ஊருடுவ முயற்சிக்கும் தீவிரவாதியாகவே இருந்தாலும் அவனைப் பிடித்து விசாரித்து பின்னனி தகவல்கள் வாங்க முயற்சிப்பதுதானே புத்திசாலித்தனம். அதை விடுத்து சுட்டுக் கொல்வது எந்த விதத்தில் சரி?. சிறுவனை கொன்ற விஷயத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.]]]

எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத கொலை என்றுதான் சொல்லியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்க சீனியர்ன்னு நிருபிச்சிடீங்க.]]]

நன்றியோ நன்றி கருன்..!

அகில் பூங்குன்றன் said...

wow... anne super idlli dosai vadai pongal...

Sundar said...

சக்ஸேனா கைது ஜெயா டிவிக்கு மட்டுமே பயன்படும். அவர்கள் பேசி கையெழுத்துபோடாத படங்கள் எல்லாம் இவர்கள் கையெழுத்துபோடுவார்கள்...

நமது ராணுவ(மு)ம் கறைபட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி நண்பரே. நாட்டுக்காக உயிர்விடும் நம் தோழர்கள் அப்பாவிகள். அவர்கள் ஆன்மா இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது...

குத்தாட்டம் போடும் முகங்கள், இலங்கைதமிழர் போல் தெரிகிறது. (தவறு என்றால் மன்னிக்கவும்). நம் ஆட்கள்கூட சளைத்தவர்கள் இல்லை...

சாரு??? வேண்டாம், இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சேன். வாந்தி வந்திரப்போகுது...

ஜெயமோகன்??? இதுவரைக்கும் இவர் இவர்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு நேரிடையாக பதில் சொன்னதாக தெரியவில்லை. நிறைய படிப்பவர்கள் மட்டும்தான் புத்திசாலிகளா (அல்லது நல்ல சிந்தனை உள்ளவர்களா?). இவருக்கு எழுதுவது மட்டுமே தொழில் (என்று தெரிகிறது!). இவருக்கு வாசிக்க (அல்லது படிக்க) நிறைய நேரம் இருக்கும். மற்றவர்கள் படித்தவர்களிடம் பேசி (அல்லது இவரது வார்த்தையி, “அரட்டை” அடித்து) தெரிந்துகொள்கிறார்கள். அதில் என்ன தப்பு? புத்திசாலித்தன்மாக பதில் சொல்லி (அல்லது, அப்படி சொல்லிவிட்டதாக நினைத்து) தப்பித்துக்கொள்கிறார். இதுவே கருணாநிதி “எனக்கு சமமாக அரசியல் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் என்னை விமர்சிக்கட்டும்” என்று சொன்னால், வாஜ்பாய் மட்டுமே அவரை பற்றி சொல்லமுடியும்! விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தால் என்ன, அதை எதிர்கொள்ளும் தைரியம்/பக்குவம் வேண்டும்...

Prakash said...

Saxsena Arrest might be one more step for the below :

ஜெயா டிவி - முதல் இடத்துக்கு கொண்டுவருவது எப்படி,

1 . ரபி பெர்னாடுக்கு MP பதவி கொடுத்து டெல்லி மற்றும் மேல்மட்ட வேலைகளை கவனிப்பது
2 . அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அதிமுக பிரமுகர் உடுமலை ராதாகிருஷ்ணன்னை நியமித்து உள்ளூர் வேலைகளை கவனிப்பது
3. போட்டி சேனல் உயர் அதிகாரிகளை கைது செய்து மிரட்டுவது - Saxsena கைது போன்று

Thomas Ruban said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்,செமை டேஸ்டுங்ண்ணே

ராஜரத்தினம் said...

அமா அந்த ஜெயமோகன் என்னதான் சொல்றாரு? இல்லை என்னதான் சொல்ல வர்றாரு? இந்த பகுதி என்ன இந்த பதிவின் அழகிற்கு திரிஷ்டியா?

ராஜரத்தினம் said...

இந்த சாரு பற்றீ எல்லாரும் என்ன என்னமோ சொல்கிறார்கள். But I like Him. If my daughter speaks with this kind of person I will definitely advise against it. அப்படியும் பேசினா செருப்பால் அடிச்சிருப்பேன். இதில் சாருவை மட்டும் குற்றம் சொல்பவர்கள் குற்றவாளிகளே!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

wow... anne super idlli dosai vadai pongal...]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

சக்ஸேனா கைது ஜெயா டிவிக்கு மட்டுமே பயன்படும். அவர்கள் பேசி கையெழுத்து போடாத படங்கள் எல்லாம் இவர்கள் கையெழுத்து போடுவார்கள்.]]]

அதெல்லாம் முடியவே முடியாது சுந்தர். சன் டிவியின் மார்க்கெட்டிங் ரேட் வேற.. ஜெயா டிவியுடையது வேறு..! சக்சேனா கைது கேபிள் டிவி விஷயத்தில் மட்டும் அரசுக்கு உதவி செய்யும் என்றுதான் நான் நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Saxsena Arrest might be one more step for the below :

ஜெயா டிவி - முதல் இடத்துக்கு கொண்டு வருவது எப்படி]]]

இது நடக்கவே நடக்காது..! இது அவர்களது நோக்கமும் அல்ல..!

[[[1 . ரபி பெர்னாடுக்கு MP பதவி கொடுத்து டெல்லி மற்றும் மேல்மட்ட வேலைகளை கவனிப்பது.]]]

இது ரபி பெர்னார்டின் 10 வருட கட்சிப் பணிக்காக கிடைத்த பரிசு..!

[[[2. அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அதிமுக பிரமுகர் உடுமலை ராதாகிருஷ்ணன்னை நியமித்து உள்ளூர் வேலைகளை கவனிப்பது.]]]

கேபிள் தொழிலில் இருப்பவரையே வைத்துக் கொண்டால் அரசு கேபிளுக்கு உதவுமே என்பதால் நியமித்திருக்கிறார்..

[[[3. போட்டி சேனல் உயர் அதிகாரிகளை கைது செய்து மிரட்டுவது - Saxsena கைது போன்று]]]

இது சக்சேனாவின் தவறு..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார், செமை டேஸ்டுங்ண்ணே..]]]

மிக்க நன்றி தாமஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

அமா அந்த ஜெயமோகன் என்னதான் சொல்றாரு? இல்லை என்னதான் சொல்ல வர்றாரு? இந்த பகுதி என்ன இந்த பதிவின் அழகிற்கு திரிஷ்டியா?]]]

தன்னை விமர்சிக்கவும் ஒரு தகுதி வேண்டும் என்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

இந்த சாரு பற்றீ எல்லாரும் என்ன என்னமோ சொல்கிறார்கள். But I like Him. If my daughter speaks with this kind of person I will definitely advise against it. அப்படியும் பேசினா செருப்பால் அடிச்சிருப்பேன். இதில் சாருவை மட்டும் குற்றம் சொல்பவர்கள் குற்றவாளிகளே!]]]

இதற்காகவெல்லாம் சாரு செய்தது குற்றமில்லை என்றாகிவிடாது..! இப்படியே ஒருத்தருக்கொருத்தர் பாவம் பார்த்துக் கொண்டே போனால் கடைசியில் சாருகள்தான் இங்கே பெருகியிருப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும். வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க..]]]

மிக்க நன்றி ராஜா..! உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பினால்தான் இன்னமும் நான் இங்கே ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்..!

வாழ்க வளமுடன்..!

ஸ்ரீராம். said...

வழக்கமான இட்லிவடைசாம்பார்ச்சட்னியிளிருந்து ஏதோ மிஸ்ஸிங்...

a said...

அண்ணே : இட்லி வடை சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சி......

Anonymous said...

antha kamal movie ennanu solidungana ..morning la irunthu 50 times vanthu pooiteen answer parka ?/

Indian said...

நன்றாக இருக்கு.

Indian said...

//“அண்ணாத்த ஆளுதான் ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..” பாடலின் சிச்சுவேஷனில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட அதே இடத்திலேயே இந்தப் பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது..! இந்தப் பாடலில் நடிகை காந்திமதியும் இருக்கிறார். ஆனால் வெளியான படத்தில் இல்லை. ஒருவேளை காந்திமதியையும் நீக்கிவிட்டு, ஜனகராஜுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்து கதையை மாற்றி அந்தப் பாடலை ஜெகஜோதியாக எடுத்திருக்கிறார் போலிருக்கிறது..!
//

காந்திமதிக்கு பதிலா மனோரமா, சின்னி ஜெயந்து-தும் இருக்காரு போல. அவருக்கு பதிலா மயில்சாமி. R.S. சிவாஜி காவலர், ஜனகராஜ் இன்ஸ்பெக்டராகவும் கதைய மாத்திட்டாங்களோ? நடுவில் தோன்றும் பெண் முகம் (கவுண்டமணி ஜோடி) ஷர்மிலியுடையதா?

Indian said...

தனுஷின் மகனை தூக்கி வைத்திருக்கும் நாமமிட்ட பெரியவர் யாரு? அவரு பாக்கட்ல அம்மா சிரிக்கறாங்க.

Unknown said...

அந்த அபூர்வ சகோ. வீடியோ படத்தோட இன்டர்வெல்லிலேயே போட்டாங்க... பட், இப்போ இருக்க பசங்களுக்கு இது புதுசுதான்..

அமர பாரதி said...

//ஒருத்தருக்கொருத்தர் பாவம் பார்த்துக் கொண்டே போனால் கடைசியில் சாருகள்தான் இங்கே பெருகியிருப்பார்கள்//

அருமை உண்மைத்தமிழரே. மிக மிக சரியாகச் சொன்னீர்கள். சாரு செய்தது குற்றம். இதில் அபத்தமாக பாரதியையிம் கண்ணதாசனையும் இழுத்து இதை நீர்த்துப் போகச் செய்வது சாருவுக்கு மேலும் இது போன்ற செயல்களைச் செய்ய ஊக்குவிப்பதாகவே ஆகும். இதற்கு மேலும் பேச எழுதத் தோன்றுகிறது. சபை நாகரீகம் கருதி ......

பாலா said...

//அங்கு போன பின்பாவது, வங்கிக் கணக்கு எண் கொடுத்து பணம் கேட்கும் நிலைமை அந்த அன்பழகனுக்கு வராமல் இருக்கட்டும்..! //

அது என்.ஆர்.ஐ ருசி கண்ட பூனைன்னே. அப்படியெல்லாம் விட்டுடாது.

இங்க பல பேரு அதுக்கு பாலூத்துன கதையை சொல்லுறாங்க.

Sundar said...

ஐயா, என்னுடைய மற்ற கருத்துக்கு பதில் சொல்லலே? குறிப்பா, ஜெயமோகன் அவர்களைப்பற்றிய கருத்துக்கு???

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

வழக்கமான இட்லி வடை சாம்பார் சட்னியிளிருந்து ஏதோ மிஸ்ஸிங்...]]]

அப்படியா? மறுபடியும் படித்துப் பார்க்கிறேன் ராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணே : இட்லி வடை சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சி.]]]

எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. இந்த சின்ன விஷயத்துக்கா இத்தனை ரசிகர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

antha kamal movie ennanu solidungana. morning la irunthu 50 times vanthu pooiteen answer parka?]]]

நீங்க ஒருத்தர்தான் கேட்டிருக்கீங்க ரமேஷ்.. வேற யாருமே கேக்கலியே..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

நன்றாக இருக்கு.]]]

ஓகே.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

காந்திமதிக்கு பதிலா மனோரமா, சின்னி ஜெயந்து-தும் இருக்காரு போல. அவருக்கு பதிலா மயில்சாமி. R.S. சிவாஜி காவலர், ஜனகராஜ் இன்ஸ்பெக்டராகவும் கதைய மாத்திட்டாங்களோ? நடுவில் தோன்றும் பெண் முகம் (கவுண்டமணி ஜோடி) ஷர்மிலியுடையதா?]]]

இந்தியன், என்ன இருந்தாலும் உமக்குப் பொல்லாத கண்ணு..!

அது ஷர்மிலிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

தனுஷின் மகனை தூக்கி வைத்திருக்கும் நாமமிட்ட பெரியவர் யாரு? அவரு பாக்கட்ல அம்மா சிரிக்கறாங்க.]]]

தனுஷின் உறவினராக இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ezhil R said...

அந்த அபூர்வ சகோ. வீடியோ படத்தோட இன்டர்வெல்லிலேயே போட்டாங்க... பட், இப்போ இருக்க பசங்களுக்கு இது புதுசுதான்..]]]

அப்படியா..? நான் பார்த்தபோது காட்டலியே..? எனக்கே புதுசா இருந்தது தோழர்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

//ஒருத்தருக்கொருத்தர் பாவம் பார்த்துக் கொண்டே போனால் கடைசியில் சாருகள்தான் இங்கே பெருகியிருப்பார்கள்//

அருமை உண்மைத்தமிழரே. மிக மிக சரியாகச் சொன்னீர்கள். சாரு செய்தது குற்றம். இதில் அபத்தமாக பாரதியையிம் கண்ணதாசனையும் இழுத்து இதை நீர்த்துப் போகச் செய்வது சாருவுக்கு மேலும் இது போன்ற செயல்களைச் செய்ய ஊக்குவிப்பதாகவே ஆகும். இதற்கு மேலும் பேச எழுதத் தோன்றுகிறது. சபை நாகரீகம் கருதி]]]

ஒருவரை கண் மூடித்தனமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தவறு. இதனை சாருவின் வாசகர்களும், ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[புள்ளி ராஜா said...

//அங்கு போன பின்பாவது, வங்கிக் கணக்கு எண் கொடுத்து பணம் கேட்கும் நிலைமை அந்த அன்பழகனுக்கு வராமல் இருக்கட்டும்..! //

அது என்.ஆர்.ஐ ருசி கண்ட பூனைன்னே. அப்படியெல்லாம் விட்டுடாது. இங்க பல பேரு அதுக்கு பாலூத்துன கதையை சொல்லுறாங்க.]]]

இப்படியே எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும்..? எல்லாத்துக்கும் ஒரு முடிவு வந்துதானே ஆகணும்..!

Sundar said...

ஐயா, நீங்களும் என்ன ஜெயமோகன் மாதிரியே நழுவுரீங்க??? என் கருத்துக்கு என்ன பதில்??? என் கருத்து தவறாகவே இருந்தாலும், நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தால், நான் திருத்திக்கொள்ளவாவது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே???

>>>>
ஜெயமோகன்??? இதுவரைக்கும் இவர் இவர்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு நேரிடையாக பதில் சொன்னதாக தெரியவில்லை. நிறைய படிப்பவர்கள் மட்டும்தான் புத்திசாலிகளா (அல்லது நல்ல சிந்தனை உள்ளவர்களா?). இவருக்கு எழுதுவது மட்டுமே தொழில் (என்று தெரிகிறது!). இவருக்கு வாசிக்க (அல்லது படிக்க) நிறைய நேரம் இருக்கும். மற்றவர்கள் படித்தவர்களிடம் பேசி (அல்லது இவரது வார்த்தையி, “அரட்டை” அடித்து) தெரிந்துகொள்கிறார்கள். அதில் என்ன தப்பு? புத்திசாலித்தன்மாக பதில் சொல்லி (அல்லது, அப்படி சொல்லிவிட்டதாக நினைத்து) தப்பித்துக்கொள்கிறார். இதுவே கருணாநிதி “எனக்கு சமமாக அரசியல் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் என்னை விமர்சிக்கட்டும்” என்று சொன்னால், வாஜ்பாய் மட்டுமே அவரை பற்றி சொல்லமுடியும்! விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தால் என்ன, அதை எதிர்கொள்ளும் தைரியம்/பக்குவம் வேண்டும்...
<<<

ரிஷி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவுண்ணே.

ஒரு தகவல் பிழை : அன்பழகன் என்பதற்குப் பதிலாக அறிவழகன் என்றுதானே இருக்க வேண்டும்?

LOGES said...

anne... idli vadai nalla taste.. oru vikatan padicha mathiri irukku.. fully informative.. unga old posts ellam padikanum.. neraya idli vadai irukumla.. ok tell that kamal's film song please

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

ஐயா, என்னுடைய மற்ற கருத்துக்கு பதில் சொல்லலே? குறிப்பா, ஜெயமோகன் அவர்களைப் பற்றிய கருத்துக்கு???]]]

தொடர்ச்சியான கேள்விகளால் ஏதேனும் ஒன்றுக்கு பதில் சொன்னால் போதுமே என்று நினைத்திருந்தேன். விட மாட்டீர்கள் போலிருக்கிறது..!

ஜெயமோகன் மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் என்று இந்த எழுத்தாளர்கள் அனைவருமே யாரும் தங்களைக் கேள்வி கேட்கக் கூடாது. தாங்கள் எழுதுவதை படிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள்..!

ஜெயமோகன் தன்னிடம் பேச வேண்டுமெனில் அதற்கே ஒரு தகுதி வேண்டும் என்கிறார். பதிலுக்கு நாமும் சொல்லலாம். நாங்கள் படிக்கணும்னா அதுக்கும் ஒரு தகுதியிருக்கணும். இருந்தால்தான் படிப்போம் என்று..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவுண்ணே. ஒரு தகவல் பிழை : அன்பழகன் என்பதற்குப் பதிலாக அறிவழகன் என்றுதானே இருக்க வேண்டும்?]]]

ஆஹா.. வேலன் கேட்டப்பவே சுதாரிச்சிருக்கணும். தப்பாச்சே.. மன்னிக்கணும் ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[LOGES said...

anne... idli vadai nalla taste.. oru vikatan padicha mathiri irukku.. fully informative.. unga old posts ellam padikanum.. neraya idli vadai irukumla.. ok tell that kamal's film song please.]]]

லோகேஷ் வருகைக்கு நன்றி..!

கமலின் அடுத்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்துவிட்டதா..?

சீனு said...

// கமலின் இன்னுமொரு வெற்றிப் படத்திலும் இதே போன்ற ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு பின்பு உடன் நடித்த ஒரு மூத்த நடிகையின் எதிர்ப்பால்(உடன் நடித்த நடிகையுடன் நம்ம அண்ணன் அப்படி உருக்கி, உருட்டியிருந்தாராம்..) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அது என்ன படமென்று பதிவர்களுக்குத் தெரியுமா..? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்..!//

பதில்?