ரஹ்மானின் ஆஸ்கார்! முதல் காரணம் இளையராஜாதான்..!


26-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

'புதுப்புது அர்த்தங்களில்' இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க.. அதேபோல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க 'கவிதாலயா' முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, 'நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு.. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க...' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட 'கவிதாலயா', இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான்.. சட்டென்று எழுந்த கோபம்.. படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது.. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை.. 'தளபதி' திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான்.. அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது.. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது.. நிற்க.. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான்.. நிமிட நேரம் கோபம்தான்.. தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்..

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்..! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்..! இறைவனின் விருப்பமும் இதுவே..!

இப்போது மணிரத்தினத்திற்கும் இதே எண்ண அலைகள்தான்.. தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்..


இந்த நேரத்தில்தான் கே.பி. தனது 'கவிதாலயா' நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும்போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ்மேனன், 'இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க' என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்தினத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ்மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போ்ட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, 'கவிதாலாயா' நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..!

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப்-ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் 'கவிதாலயாவின்' தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க.. சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று..!

'தளபதி'வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம்.. இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்தினமும் உணர்ந்தார்கள்.


'ரோஜா' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை 'சோழா ஹோட்டலில்' நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், "இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான்கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது..." என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர்.. மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர்.. இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது ரஹ்மானின் திறமைதான்..

ராஜீவ்மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்..

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல்போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்..

இந்த 'ரோஜா' வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்..

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை.. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல்.. கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது..

வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா..? 'சின்னச் சின்ன ஆசை' உருவாகியிருக்குமா..? அது இயக்குநரின் கற்பனையாச்சே..! யோசித்தால் நடந்தும் இருக்கலாம்., அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவி.எம். நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, "யாரை இயக்குநராகப் போடலாம்?" என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ்மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவி.எம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.


ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய..!!!

'சிந்துபைரவி' படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்..?

'தளபதி' படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்..?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே..? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே..? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்..!

ஆனால், 'எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்' என்பார்கள். 'எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்' என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை..

இந்தியாவுக்கே சிறப்பு..

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்..

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!

எல்லாம் இறைவன் செயலே..!

206 comments:

கானா பிரபா said...

ஆளாளுக்கு இளையராஜாவை போட்டு தாக்குறீங்களே, ரஹ்மான் மட்டும் ரோஜாவிலோ, ரங்கீலாவிலோ, தாலிலோ ஹிட் ஆகாம இருந்தா இப்படி சொல்வீங்களா?
திருமுருககிருபானந்த வாரியார் கணக்கா கோபமே எல்லாத்துக்கும் காரணம், ஆசையே எல்லத்துக்கும் கொடுதி என்றெல்லாம் சொல்லக்கூடாது. உங்க கருத்தை பார்த்தா பாலசந்தரோ, மணி ரத்னமோ கோபமே படாத நல்லவங்க அப்படித்தானே?
பாலசந்தர் அறிமுகப்படுத்தின வி.குமாரை பின்னாளில் ஏன் அவர் பயன்படுத்தல? எம்.எஸ்.வியில் இருந்து ஏன் ராஜாவுக்கு தாவினார்?

ரோஜா அங்கீகரிக்கப்படாத இசையாக இருந்தால், பாலசந்த்ரோ, மணியோ இன்னொரு ராஜாவையோ ரஹ்மானையோ தேடியிருப்பாங்க.இவங்க கூப்பிடும் போது ராஜா வரணும், அவருக்கு எந்த வேற படங்களும் இருந்தாலும் அப்படியா சொல்றீங்க‌


எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் எல்லோருமே ட்ரெண்ட் செட்டர்கள், அவரவர் திறமை அவர்களிடம். இளையராஜா இசைமமைத்த படங்களின் பாடல்களை போட்டு பாருங்க எவ்வளவோ நல்ல பாடல்களை அவற்றை சொதப்பலாக எடுத்திருப்பாங்க இயக்குனர்கள். 80 களில் ராஜாங்கமாக பத்து வருஷம் முன்னோக்கிய இசையை ராஜாவால் கொடுக்க முடிஞ்சது. ஆனா சொதப்பல் இயக்குனர்கள் தான் அவருக்கு வாச்சாங்க. ஹிந்தியில் கூட அவருக்கு அதே நிலை. ஆனாலும் 10 ஆண்டுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கொடிகட்டி பறந்த ராஜாவுக்கு முன்னும் பின்னும் இனி யாருமே வரமுடியாது.

இன்றைய நவீன இசையை, மேற்கத்தேயம் விரும்பும் இசையை ரஹ்மானால் கொடுக்கும் திறமை இருக்கு. அவ்வளவு தான்.


சாரி தல,ராகதேவனை பற்றி யாராச்சும் காமெண்ட் அடிச்சா பத்திக்கிட்டு வருது எனக்கு அதனால தான் ராஜவிசுவாசப் பின்னூட்டம்

ராவணன் said...

//எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!

எல்லாம் இறைவன் செயலே..!//

இந்திராவை கொலை செய்ததும்,ராஜீவைப் போட்டுத் தாக்கியதும் இறைவன் செயலே என்று
கூறுகிறீர்களா?அப்ப இறைவன் மீதுதான் வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

இலங்கையில் தமிழினத்தை அழிப்பதும் இறைவனின் செயலே,அதை நாம் ஆதரிக்கவேண்டும் எனக் கூறுகிறீர்களா?

இப்படிக்கு
ராவணன்.

Anonymous said...

Ravana,

LOL, Gandhi(not related to Mohandas Gandhi) family nation's is India. That too is God's action. That India needs an Italian to run the country is also God's action.

- Raman

P.S. Gana Prabha,
A.R.R is the toast of the season. Nothing more than that for controversies or praises. Let everyone glory in it a bit:-) We can only talk about what can sell.

ராவணன் said...

ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்தாலும் கிடைத்தது,மற்றவர்கள் எல்லாம் திறமையற்றவர்களாகப் போய்விட்டார்கள்.

பாலசந்தர்,மணிரத்னம் போன்று பிறப்பின் பின்புலம் இல்லாத இளையராஜா என்றால் உங்களைப் போன்றவர்களுக்குக் கூட இலப்பம்.

ரகுமான் ஆடுகின்றாரோ என்னவோ,உங்களைப் போன்றோரின் ஆட்டம் தாங்கமுடியவில்லை.

இப்படிக்கு
ராவணன்.

Anonymous said...

Very good post.You are true. If you see the history, Ilayayaraja only fights with everbody like mani,balachandar,vairamuthu..AR rahman does not fight with anybody, Both are having talents, but humbleness make AR rahman as victor.

ராவணன் said...

//எல்லாம் இறைவன் செயலே..!//

ரகுமான் கூறியது அவரது இறைவன்,உங்களது இறைவனை இல்லை.அவர் உங்களது இறைவனை ஏற்றுக்கொள்வதில்லை.

இப்படிக்கு
ராவணன்.

Anonymous said...

Neega pottu thaangunga. Aduthavan Ayiram sooluvaan...

Neenga solradaru dasavatharam theory maathiri irukku...

good one...

- Saran

Anonymous said...

A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen.

When compared to Ilayaraja, Rahman is still a child, in music. Oscar is given not for his performance, its because of the movie directed by a westener. He wouldn't have got the oscar, if he has done the same "Jai Ho" song in any of the Indian movies.

உண்மைத்தமிழன் said...

//கானா பிரபா said...
ஆளாளுக்கு இளையராஜாவை போட்டு தாக்குறீங்களே, ரஹ்மான் மட்டும் ரோஜாவிலோ, ரங்கீலாவிலோ, தாலிலோ ஹிட் ஆகாம இருந்தா இப்படி சொல்வீங்களா?//

கானா தம்பீ.. ஏன் இந்தக் கோபம்..? இந்தப் பதிவில் இளையராஜாவை எங்கே தாக்கியிருக்கிறேன்..?

மணிரத்னம் இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு வேறு இசையமைப்பாளரை நாட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன்.. அதிலும் இளையராஜாவின் கோபத்தைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறனே தவிர, அது தவறு என்றோ, சரி என்றோ நான் எப்படிச் சொல்ல முடியும்..? அது மனித இயல்புதானே..

//திரு முருக கிருபானந்தவாரியார் கணக்கா கோபமே எல்லாத்துக்கும் காரணம், ஆசையே எல்லத்துக்கும் கொடுதி என்றெல்லாம் சொல்லக்கூடாது.//

வேறென்ன சொல்றது? கோபப்பட்டு பேசினதாலதான் பிரிவே வந்தது..

//உங்க கருத்தை பார்த்தா பாலசந்தரோ, மணிரத்னமோ கோபமேபடாத நல்லவங்க அப்படித்தானே?//

ஐயா கானா.. நான் அதுக்குள்ள இறங்கவே இல்லை. பொதுவான சூழலை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன்..

//சாரி தல,ராகதேவனை பற்றி யாராச்சும் காமெண்ட் அடிச்சா பத்திக்கிட்டு வருது.. எனக்கு அதனால தான் ராஜவிசுவாசப் பின்னூட்டம்.//

ஸாரி தம்பீ..

ராஜா எனக்கும் ராஜாதான்.. அதில் சந்தேகமில்லை..

நான் கமெண்ட் அடிக்கல.. அன்னிக்கு என்ன நடந்ததுன்னு நாலு பேர் சொன்னதை கேட்டுத்தான் வெளி்ப்படுத்தலாமேன்னு இதுல எழுதியிருக்கேன்.. இதுல இருக்கிறது எதுவுமே இளையராஜாவின் மதிப்பை கொஞ்சமும் குறைக்காது.. அதிகப்படுத்தத்தான் செய்யும்..!

SurveySan said...

I am an ardent Raja fan. No doubts yet!

but, padhivulagam vandha piragum, pala nigazhvugalukkup piragum, Raja enra padaippaaliyidam irukkum EGO thelivap puriyudhu.
aana, EGO irukkungaradhukkaaga avar isayai rasikkaamal irukka mudiyaadhu.

andha EGO vaal, avar izhandhadhu adhigam. adhanaal, naam izhandhadhu, adhaivida romba adhigam.

////ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, 'கவிதாலாயா' நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..! ////

idha padichadhum, chileernu irundhudhu.
hats off AR :)

SurveySan said...

Gana prabha, en commentai choice'la vidunga. padikkaaadheenga ;)

உண்மைத்தமிழன் said...

///ராவணன் said...
//எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!
எல்லாம் இறைவன் செயலே..!//

இந்திராவை கொலை செய்ததும், ராஜீவைப் போட்டுத் தாக்கியதும் இறைவன் செயலே என்று
கூறுகிறீர்களா? அப்ப இறைவன் மீதுதான் வழக்குப் பதிவு செய்யவேண்டும். இலங்கையில் தமிழினத்தை அழிப்பதும் இறைவனின் செயலே, அதை நாம் ஆதரிக்க வேண்டும் எனக் கூறுகிறீர்களா?
இப்படிக்கு
ராவணன்.///

இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது.. அது நடக்கிறது..

இது மேலும், மேலும் பிரச்சினைக்கு யார் காரணம் என்று சொல்லி, அலசி, ஆராய்ந்து மண்டை காய்வதைத் தடுத்து ஆக வேண்டியதை பார்ப்பதற்காக சொல்கின்ற ஆறுதல் வார்த்தைகள்..

இதனுடைய விளைவுகளை உடனேயே எதிர்பார்க்காதீர்கள்..

92-ல் ஆரம்பித்து 2009-வரையிலான 19 ஆண்டு காலம் கழித்துதான் ஆஸ்கார் கிடைத்துள்ளது.. இதுவே மிக நீண்ட காலம்..

அவ்வளவு காலம் பொறுத்துதான் ஆக வேண்டும்.. என்ன கிடைக்கப் போகிறது என்று..!

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Ravana, LOL, Gandhi(not related to Mohandas Gandhi) family nation's is India. That too is God's action. That India needs an Italian to run the country is also God's action.
- Raman
P.S. Gana Prabha,
A.R.R is the toast of the season. Nothing more than that for controversies or praises. Let everyone glory in it a bit:-) We can only talk about what can sell.//

அனானியாரே..

உதவிக்கு மிக்க நன்றி.

உண்மைத்தமிழன் said...

//ராவணன் said...
ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்தாலும் கிடைத்தது, மற்றவர்கள் எல்லாம் திறமையற்றவர்களாகப் போய்விட்டார்கள்.//

அப்படீன்னு யாருமே சொல்லலை.. சொல்லவும் மாட்டார்கள்..

//பாலசந்தர், மணிரத்னம் போன்று பிறப்பின் பின்புலம் இல்லாத இளையராஜா என்றால் உங்களைப் போன்றவர்களுக்குக் கூட இலப்பம்.//

முட்டாள்தனமான கருத்து..

//ரகுமான் ஆடுகின்றாரோ என்னவோ, உங்களைப் போன்றோரின் ஆட்டம் தாங்க முடியவில்லை.
இப்படிக்கு
ராவணன்.//

நாங்கள் ஒரு போதும் ஆடவில்லை. நிதானமாகத்தான் சொல்கிறோம்..

? said...

நான் சென்னையில் இருந்த போது ஒரு மியூசியன் என் ருமில் தங்கி இருந்தான். நிறைய சினிமா இசைகலைஞர்களுடன் (ரகுமான்,ஹாரிஸ் ஜெயராஜ்)பழகும் ஆள்.ஆனா எப்போது பார்த்தாலும் ராசாவை சாடுவதே வேலையாக இருப்பான். இளையராசா என்றால் போதும் எதாவது குற்றம் சொல்ல ஆரம்பித்துவிடுவான். ஒருநாள் நானும் கானாபிரபாவைப் போல் கொதித்து விட்டேன். அதற்கு சொன்னான்... "உனக்கு இசை பத்தி ஒன்னும் தெரியாது, ஆனா எனக்கு இசைதான் வாழ்வு.ராசாவோட இசையை கேட்டுதான் சென்னைகே ஓடி வந்தேன். ஆனா இங்கு வந்தபின் அவருகிட்ட வேலை செய்யும் ஆடகளுடன் பழகிய பின்புதான் அவரின் சுயரூபமே தெரிந்தது. அவரு கீழே கருவி வாசிக்கும் ஆட்களுக்கு குறைந்த கூலி தருது, அவர்களையும் மற்றவரையும் அவமானப்படுத்துவது" குறித்தெல்லாம் நிறம்ப சொன்னான். அதை கேட்ட பின்புதான் மனம்மாறி விட்டதாக சொன்னான். ராசாவின் இசை வெளியுலகில் ரகுமான் மாதிரி எடுபடாததின் காரணம் அவர் ஜெர்மன் கம்போசர் Johann Sebastian Bach யை தழுவி பழய ஸ்டைலில் இசை அமைத்ததுதான் என்பான்.

உண்மைத்தமிழன் said...

//Raja said...
Very good post.You are true. If you see the history, Ilayayaraja only fights with everbody like mani, balachandar, vairamuthu. AR rahman does not fight with anybody, Both are having talents, but humbleness make AR rahman as victor.//

அதுவே காரணமில்லை ராஜா..

ராஜாவை அருகில் இருந்து வழிநடத்த யாருமில்லை என்பதுதான் உண்மை.

இது போன்ற நேரங்களில் எல்லாம் பெரும்பாலும் தாங்களே பேசக் கூடாது.. துணைவர்களை வைத்துத்தான் பேசவேண்டும்.. வார்த்தைகள் தடித்துப் போனால் பிரச்சினைகள் எழும். பின்பு தாங்க முடியாது..

இதுதான் இந்த விஷயத்திலும் நடந்தது..

உண்மைத்தமிழன் said...

///ராவணன் said...
//எல்லாம் இறைவன் செயலே..!//
ரகுமான் கூறியது அவரது இறைவன், உங்களது இறைவனை இல்லை. அவர் உங்களது இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை.
இப்படிக்கு
ராவணன்.///

அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் இறைவனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அவர் இறைவனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமோ இல்லை..

நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் மிஸ்டர் ராவணன்..

Anonymous said...

//இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை..//

உங்களையும் அறியாமல் ரகுமான் இளையராஜா கவிதாலயா மணிரத்தினம் என அனைவரையும் அவமானப்படுத்துவதாகவே உங்கள் பதிவை உணர்கின்றேன்.

முதலில் உலக சமூகங்களின் அனைத்து இசையையும் தரப்படுத்துவதோ அல்லது அதில் சிறப்பை இனம் காண்பது என்பது அபத்தமானது. ஒவ்வொருவனுக்கும் அவனது வாழ்வியலை பேசும் இசை உயிரானது. அது ஆஸ்கார் வழங்கும் அமெரிக்க சமூகத்தின் அங்கிகாரத்துக்கு அப்பாற்பட்டது.

இதே விசயம் தமிழகத்துக்குள்ளும் சிதறிக்கிடந்தது. கிராமிய இசையும் நாட்டுப்புற பாடல்களும் கர்நாடக சங்கீதமும் சமயப் பாடல்களும் என்னும் பல்வேறு வடிவங்களாக சிதறிக்கிடந்தது. இவ்வாறான சிதறிக்கிடந்த இசைவடிவங்கள் தங்களுக்குள் கூட ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டதில்லை. நாட்டுப்புற பாடல்களை கர்நாடக சங்கீத பற்றுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை.

இளையராஜாவின் வரவு என்பது சிதறிக்கிடந்த தமிழரின் இசைகள் கலந்து ஒருவரின் இசையை என்னுமொருவர் ரசிக்க சுவைக்க மதிக்க என ஒரு அத்திவாரமிட்டது. ஒரு புது வடிவம் எழுந்தது. இணைவு ஏற்பட்டது. இதற்கு இளையராஜா மட்டும் நூறுவீத காரணம் என்றில்லை இந்த விசயத்தில் கால ஓட்டத்தில் நிறைய கலைஞர்கள் பங்களித்திருக்கின்றனர் ஆனால் இளையராஜாவை தனித்து குறிப்பிடும் அளவுக்கு அவரின் பங்கு அளப்பெரியது.

இசை தனக்கென ஒரு பாதை அமைத்து பயணிக்கும் பேதே ரகுமானின் வரவு நிகழ்கின்றது. ரகுமான் அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றார் இந்தியாவின் ஏனைய பாகங்களினுடம் மேற்கத்திய இசையுடனும் தொடர்பை ஏற்படுத்துகின்றார். இசை மேலும் விரிவடைகின்றது. இன்று அதன் விழைவு ஒரு விருதை பெற்றுத்தந்திருக்கின்றது.

நாளை என்னும் பலர் உருவாகுவார்கள். அவர்களின் பின்னணியில் இளையராஜா ரகுமான் இருவரும் இருக்கலாம். அவர்கள் என்னும் பல விருதுகளை வாங்கலாம்.

எல்லாம் இறைவன் செயல் என்பதை விட பல மனிதர்களின் உழைப்பு. அதில் இளையராஜாவின் உழைப்பு அதிகம்.

ஆஸ்காரை வைத்து இந்தியாவுக்கு சிறப்பு, ஆசியாவுக்கு சிறப்பு, தமிழ் திரையுலகுக்கு மகுடம் என்பது வருந்தத்தக்க கருத்துக்கள். இந்த விருதின் மீது உள்ள மோகம் அர்த்தமற்ற புரிதல் காரணமாக எம்மை நாமே அவமானப்படுத்துவதாகவே உணர்கின்றேன்.

பூக்குட்டி என்பவர் விருதை பெறும் போது உணர்ச்சிவசப்பட்டதும் இந்த விருதை இந்தியாவுக்கு அர்பணிக்கின்றேன் என்றதும் இந்த விருதின் மீதான இந்தியக் கனவை காட்டியது.

இந்தியாவில் இசைச் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது. அதற்கு இந்திய மக்களின் அங்கிகராம் தாரளமாக இருக்கின்றது. ஏனைய நாட்டினரின் இசையை உணரும் தன்மை இந்தியருக்கு உள்ளது. எனவே முடிந்தால் அமரிக்க மற்றும் ஏனைய சமூகங்களின் இசை அதிகமானவர்களை ரசிக்கச் செய்தால் இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Neega pottu thaangunga. Aduthavan Ayiram sooluvaan... Neenga solradaru dasavatharam theory maathiri irukku... good one...
- Saran//

நன்றி சரண்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen. When compared to Ilayaraja, Rahman is still a child, in music. Oscar is given not for his performance, its because of the movie directed by a westener. He wouldn't have got the oscar, if he has done the same "Jai Ho" song in any of the Indian movies.//

உண்மைதான்..

ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் இசையமைத்ததற்காக ரஹ்மானுக்குக் கிடைத்துள்ள விருது இது என்பதனை நம்மூர் மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை..

Anonymous said...

//R rahman does not fight with anybody,//

He had a fight (cold war) with Vairamuthu and subsequently dumped him

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
I am an ardent Raja fan. No doubts yet! but, padhivulagam vandha piragum, pala nigazhvugalukkup piragum, Raja enra padaippaaliyidam irukkum EGO thelivap puriyudhu.
aana, EGO irukkungaradhukkaaga avar isayai rasikkaamal irukka mudiyaadhu. andha EGOvaal, avar izhandhadhu adhigam. adhanaal, naam izhandhadhu, adhaivida romba adhigam.//

இந்த இழப்பை நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் சர்வேஸன் ஸார்..

//ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, 'கவிதாலாயா' நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..!//
idha padichadhum, chileernu irundhudhu. hats off AR :)///

எனக்கும் அப்படித்தான் இருந்தது.. அப்போ ரஹ்மான் சொந்தமா ஒரு ஆட்டோ வைச்சிருந்தாராம்.. அதுலதான் போக்குவரத்தாம்..

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
Gana prabha, en commentai choice'la vidunga. padikkaaadheenga;)//

இதெல்லாம் ஓர வஞ்சனை..

அப்ப நாங்க மட்டும் வாங்கிக் கட்டிக்கணுமாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

//நந்தவனத்தான் said...
நான் சென்னையில் இருந்தபோது ஒரு மியூசியன் என் ருமில் தங்கி இருந்தான். நிறைய சினிமா இசை கலைஞர்களுடன் (ரகுமான்,ஹாரிஸ் ஜெயராஜ்)பழகும் ஆள். ஆனா எப்போது பார்த்தாலும் ராசாவை சாடுவதே வேலையாக இருப்பான். இளையராசா என்றால் போதும் எதாவது குற்றம் சொல்ல ஆரம்பித்து விடுவான். ஒருநாள் நானும் கானாபிரபாவைப் போல் கொதித்து விட்டேன். அதற்கு சொன்னான்... "உனக்கு இசை பத்தி ஒன்னும் தெரியாது, ஆனா எனக்கு இசைதான் வாழ்வு. ராசாவோட இசையை கேட்டுதான் சென்னைகே ஓடி வந்தேன். ஆனா இங்கு வந்தபின் அவருகிட்ட வேலை செய்யும் ஆடகளுடன் பழகிய பின்புதான் அவரின் சுயரூபமே தெரிந்தது. அவரு கீழே கருவி வாசிக்கும் ஆட்களுக்கு குறைந்த கூலி தருது, அவர்களையும் மற்றவரையும் அவமானப்படுத்துவது" குறித்தெல்லாம் நிறம்ப சொன்னான். அதை கேட்ட பின்புதான் மனம் மாறி விட்டதாக சொன்னான். ராசாவின் இசை வெளியுலகில் ரகுமான் மாதிரி எடுபடாததின் காரணம் அவர் ஜெர்மன் கம்போசர் Johann Sebastian Bachயை தழுவி பழய ஸ்டைலில் இசை அமைத்ததுதான் என்பான்.//

பகிர்தலுக்கு நன்றி நந்தவனத்தான் ஸார்..

ராஜா பற்றிய பல நெகட்டிவ்வான விஷயங்கள் வெளியில் உலாவிக் கொண்டுதான் உள்ளன.

இவையெல்லாம் எந்தக் காலத்திலும், எந்த ரூபத்திலும் அவருடைய இசை சாதனையை மறக்கடிக்க முடியாது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
/இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை/
உங்களையும் அறியாமல் ரகுமான் இளையராஜா கவிதாலயா மணிரத்தினம் என அனைவரையும் அவமானப்படுத்துவதாகவே உங்கள் பதிவை உணர்கின்றேன்.//

நிச்சயமாக இல்லை.. நடந்த நிகழ்வுகளை, என் காதில் கேட்ட சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.. அவ்வளவுதான்..

//முதலில் உலக சமூகங்களின் அனைத்து இசையையும் தரப்படுத்துவதோ அல்லது அதில் சிறப்பை இனம் காண்பது என்பது அபத்தமானது. ஒவ்வொருவனுக்கும் அவனது வாழ்வியலை பேசும் இசை உயிரானது. அது ஆஸ்கார் வழங்கும் அமெரிக்க சமூகத்தின் அங்கிகாரத்துக்கு அப்பாற்பட்டது.
இதே விசயம் தமிழகத்துக்குள்ளும் சிதறிக் கிடந்தது. கிராமிய இசையும் நாட்டுப்புற பாடல்களும் கர்நாடக சங்கீதமும் சமயப் பாடல்களும் என்னும் பல்வேறு வடிவங்களாக சிதறிக் கிடந்தது. இவ்வாறான சிதறிக் கிடந்த இசை வடிவங்கள் தங்களுக்குள்கூட ஒன்றை ஒன்று ஏற்றுக் கொண்டதில்லை. நாட்டுப்புற பாடல்களை கர்நாடக சங்கீத பற்றுள்ளவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.
இளையராஜாவின் வரவு என்பது சிதறிக் கிடந்த தமிழரின் இசைகள் கலந்து ஒருவரின் இசையை என்னுமொருவர் ரசிக்க சுவைக்க மதிக்க என ஒரு அத்திவாரமிட்டது. ஒரு புது வடிவம் எழுந்தது. இணைவு ஏற்பட்டது. இதற்கு இளையராஜா மட்டும் நூறுவீத காரணம் என்றில்லை இந்த விசயத்தில் கால ஓட்டத்தில் நிறைய கலைஞர்கள் பங்களித்திருக்கின்றனர் ஆனால் இளையராஜாவை தனித்து குறிப்பிடும் அளவுக்கு அவரின் பங்கு அளப்பெரியது. இசை தனக்கென ஒரு பாதை அமைத்து பயணிக்கும்பேதே ரகுமானின் வரவு நிகழ்கின்றது. ரகுமான் அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றார் இந்தியாவின் ஏனைய பாகங்களினுடம் மேற்கத்திய இசையுடனும் தொடர்பை ஏற்படுத்துகின்றார். இசை மேலும் விரிவடைகின்றது. இன்று அதன் விழைவு ஒரு விருதை பெற்றுத் தந்திருக்கின்றது.
நாளை என்னும் பலர் உருவாகுவார்கள். அவர்களின் பின்னணியில் இளையராஜா ரகுமான் இருவரும் இருக்கலாம். அவர்கள் என்னும் பல விருதுகளை வாங்கலாம். எல்லாம் இறைவன் செயல் என்பதைவிட பல மனிதர்களின் உழைப்பு. அதில் இளையராஜாவின் உழைப்பு அதிகம்.
ஆஸ்காரை வைத்து இந்தியாவுக்கு சிறப்பு, ஆசியாவுக்கு சிறப்பு, தமிழ் திரையுலகுக்கு மகுடம் என்பது வருந்தத்தக்க கருத்துக்கள். இந்த விருதின் மீது உள்ள மோகம் அர்த்தமற்ற புரிதல் காரணமாக எம்மை நாமே அவமானப்படுத்துவதாகவே உணர்கின்றேன்.
பூக்குட்டி என்பவர் விருதை பெறும் போது உணர்ச்சிவசப்பட்டதும் இந்த விருதை இந்தியாவுக்கு அர்பணிக்கின்றேன் என்றதும் இந்த விருதின் மீதான இந்தியக் கனவை காட்டியது. இந்தியாவில் இசைச் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது. அதற்கு இந்திய மக்களின் அங்கிகராம் தாரளமாக இருக்கின்றது. ஏனைய நாட்டினரின் இசையை உணரும் தன்மை இந்தியருக்கு உள்ளது. எனவே முடிந்தால் அமரிக்க மற்றும் ஏனைய சமூகங்களின் இசை அதிகமானவர்களை ரசிக்கச் செய்தால் இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.//

அன்பு அனானியாரே..

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..

எந்தச் சூழலில் மணிரத்னம் வேறொரு இசையமைப்பாளரை நாடினார் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். அதைத்தான் நான் வெளிப்படுத்தியுள்ளேன்..

இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பீட்டு பதிவு அல்ல.. அப்படி ஒப்பிடவும் முடியாது என்று எனக்குத் தெரியும்.. அது பற்றி வேறொரு பதிவில் எழுதலாம்..

ஆஸ்கார் பரிசு அமெரிக்க குறிப்பாக ஆங்கிலத் திரைப்படங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றாலும், அது மாதிரியான திரைப்படங்களில் வேலை செய்ய நம்மவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பதும், அதன் மூலம் அவர்களுடைய உச்சபட்ச விருதை நம்மவர் பெற்றது என்பதும் கலாச்சாரம் தாண்டிய விஷயம்தானே.. அதனால்தான் இந்தப் பெருமையும், கொண்டாட்டமும்..

sarul said...

I strongly support your view. it is absolutely right.
Ilayarajah is ego driven person ,he never accepts rahman's talent , he still feels that rahman is a young keyboard player in his group .Ilayaraja knows that he has no more talent to stay in the field ,his market value shows all that ,and he is not ready to encourage youngsters ,he should learn this habit from the senior Mr.M.S.Visvanathan .

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//R rahman does not fight with anybody,//
He had a fight (cold war) with Vairamuthu and subsequently dumped him.///

இதுவெல்லாம் மிகச் சிறிய கருத்து வேறுபாடுதான் அனானி..

நீக்கி விடவோ, மறந்துவிடவோ கூடிய செயல்தான்..

உண்மைத்தமிழன் said...

//KS said...
I strongly support your view. it is absolutely right.
Ilayarajah is ego driven person, he never accepts rahman's talent, he still feels that rahman is a young keyboard player in his group. Ilayaraja knows that he has no more talent to stay in the field, his market value shows all that, and he is not ready to encourage youngsters, he should learn this habit from the senior Mr.M.S.Visvanathan.//

ராஜா, எம்.எஸ்.வி. இருவரும் கொடுத்தது நமது பாரம்பரியமான இசையை..

நம் கலாச்சாரம்தான் இப்போதெல்லாம் அடியோடு மாறிவிட்டதே.. அயல் விஷயங்களில் முற்றிலுமாக நாம் நம் மனதைத் தொலைத்துவிட்டோம். அதனால்தான் இங்கே கவர்ச்சி இல்லை என்றவுடன் எங்கே கூட்டம் இருக்கிறதோ அந்த இடம் பரபரப்பாகிவிட்டது..

அயல் கலாச்சாரத்திலும் வித்தகராக இருக்கிறார் ரஹ்மான்.. அதுதான் அவருடைய உயர்வுக்குக் காரணம்..

Arun Kumar said...

அண்ணா நல்ல பதிவு.
எந்த ஒரு இசை பிரபலமாக முழு காரணம் சிறுவர்களும் குழந்தைகளும் தான்.பாடல் வரிகளின் அர்த்தங்கள் புரியாமல் இசையை மட்டும் கேட்டு குதூகலிக்கும் போது தான் அந்த இசை பிரபலம் ஆகிறது.

ராஜாவின் சாதனைகள் என்றுமே மறுக்க முடியாது. ஆனால் ராஜா 90 - 93ம் இடையில் வந்த பல பாடல்கள் மொக்கையாகவே கொடுத்தார்.

பல பாடல்கள் ராஜாவின் சொந்த துதி பாடல்களாகவே இருந்தன.

அந்த நேரத்தில் அவரின் இசை பலருக்கு அலுத்து போய் விட்டது.

ரஹ்மானின் இசை கேட்டதுமே ஒரு புது விதமான இசை ..மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மயக்களை மயக்கி விட்டது.

ரோஜா புதியமுகம் ஜெண்டில்மேன் காதலன் பாடல்களை சிறுவனாக இருந்த போது எத்தனை முறை கேட்டு இருப்பேனோ தெரியாது.

ஏதாவது கலைவிழா என்றால் அங்கு சிக்குபுககு ரயிலே பாடலுக்கு நடனம் இல்லாமல் நடத்த முடியாது.
ஒரு இனிமையான இசை மாற்றத்தை கொண்டு வந்தார்.

ராஜாவின் பாடல்களில் வழமையாக 3 அல்லது 4 பாடகர்களை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது..

அதே கேட்ட குரல்கள் தான்

ஆனால் ரஹ்மான் பல புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல புதிய குரல்களை அறிமுகபடித்தினார்.

ரஹ்மான் இசை மாற்றம் புதுமை என்ற கோட்டில் செல்கிறது. இது ரஜ்மான்னின் வெற்றிககான அடிப்படைகள்.


ராஜாவின் இசை தாலாட்டுகிறது என்றால் ரஹ்மானின் இசை கொண்டாடபடுகிறது. இரண்டுமே வேண்டும் தான்..

கானா பிரபா said...

பின்னூட்டத்தில் சொல்லாத இன்னொரு விஷயம்

உங்க விவாதப்படி பார்த்தா

ராஜா தான் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்க காரணம்.ஏன்னா பகல் நிலவு,இதயக்கோயில் கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி போன்ற மொக்கைப் படங்களுடன் ‍ நாயகன், கீதாஞ்சலி என்ற தெலுங்கு படமும் சேர்த்து இயக்கியிருந்த மணி ரத்னத்துக்கு வாழ்வு கொடுத்தவர் ராஜா.

அக்னி சாட்சி போன்ற படங்களோடு காணாமல் போயிருந்த பாலசந்தரை சிந்து பைரவி முதற்கொண்டு புதுபுது அர்த்தங்கள் வரை கவிதாலயாவுக்கு பணம் கொட்ட காரபம் ராஜா இசை.

ஆக மேற்சொன்ன இருவரும் வராம இருந்திருந்தா ரஹ்மான் எங்கே

பி.கு. இது நீங்க சொன்ன விவாதப் படி பார்த்ததால் வந்த வினை தல‌

Arun Kumar said...

மேலும் ரஹ்மான வருடத்திற்க்கு அதிகமாக 8 படங்களுக்கு மேல் செய்வதில்லை.. ( அதிகபட்சமாக 3 தமிழ்படங்கள் வருடத்திற்க்கு)

ஆனால் ராஜாவை போல ஒரே வருடத்திற்க்கு பல படங்கள் செய்ய அவரால் முடியுமா செய்தால் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம் தான்.

ராவணன் said...

//அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் இறைவனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அவர் இறைவனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமோ இல்லை..

நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் மிஸ்டர் ராவணன்..//


நீங்கள் சொன்னாலும்,
சொல்லாவிட்டாலும் எனது வேலையை நான் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்.

"எல்லாம் இறைவன் செயல்" எந்த இறைவன் என்று கேட்டால் கோபம் மூக்கின் நுனிக்கே வருகின்றதோ?

அதுதான் மூடிக்கிட்டு போ என்று கூறிய பின்னும் ஏன் வந்தாய் எனக் கேட்டால்,

"எல்லாம் என் இறைவன் செயல்"

இப்படிக்கு
ராவணன்.

Anonymous said...

ராஜா இதுவரை இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு . ரகுமான் இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு . 1980 டு 1995 வரை ஒரு வருடத்திற்கு சராசரியாக 45 படங்கள் வெளி வந்து இருக்கிறது . இதுவரை ரகுமான் 19 வருடங்களில் நூறு படங்களுக்கும் குறைவாகத்தான் இசை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் . இளையராஜாவின் திறமை படத்திற்கு படம் எவ்வளவு வித்தியாசமான இசை முயற்சிகளை கொடுத்து இருக்கிறார் . அவருடைய இசை நம்முடைய மண்ணுக்கே உரிய தன்மை வுடையது . இத்தகைய இசை அவருக்கு வராது. அவருடையது மேற்கத்திய முறையில் ஆனது . ஆஸ்கர் விருது எப்படி கொடுக்கிறார்கள் என்று கமல் ஏற்கெனவே பலமுறை குறிபிட்டுள்ளார்

நான் நக்கீரன்,வெப்துனியாவில் படித்ததை இங்கு உங்கள் பார்வைக்கு



இந்தியாவைப் பற்றி இந்தியாவில் தயாரான படம் என்றாலும் ஸ்லம்டாக் மில்லியனர் இங்கிலாந்து படம் என்பதை நினைவில் கொள்க. அதனாலேயே இந்தப் படம் ஒன்பது பி‌ரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டது. இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பி‌ரிவில் மட்டுமே இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயா‌ரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயா‌ரிப்பாகவோ, அமெ‌ரிக்க தயா‌ரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.

இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை ஆஸ்கர் விருதை வைத்து எடைபோட வேண்டிய அவசியம் இல்லை. உலகில் நூற்றுக்கணக்கான நாடுகள் படங்களை தயா‌ரிக்கின்றன. அதில் இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம். இதன் பொருள் ஆஸ்கர் விருது துச்சமானது என்பதல்ல. அதுவே இறுதியானது அல்ல என்பதுதான்.



மச்சானப் பார்த்தீங்களா என “ஒத்தை அடி”யின் பின்னணியில் இளையராஜா தந்த கிராமிய இசையாகட்டும், என் இனிய பொன்நிலாவே என்று மேற்கத்திய பாணியை கலந்து வழங்கிய பாடலாகட்டும், ரசிகர்களின் இதயத்தில் நிரந்தர சிம்மாசனமிட்டிருக்கின்றன. இத்தகைய ஜாம்பவான்களின் வரிசையில் தனது முதல் தமிழ் படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஏ.ஆர்.ரகுமான்.

இந்திய திரை இசை மரபின் நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டு அதனை உலகத் தரத்திற்கு உயர்த்தியதே ரகுமானின் இன்றைய சாதனைகளுக்கு அடித்தளமாகும். புதிய புதிய தொழில்நுட்பங்களும் விரிவான வியாபாரத்தளமும் மரபார்ந்த இசையை சிதைத்துவிடும் என்றே பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தார்கள். இளம் கன்று பயமறியாது என்பதுபோல புதிய பாய்ச்சலுடன் தனது முதல் படத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்பத்தையும் வியாபாரத்தளத்தையும் சரியாகக் கையாண்டு வெற்றிச் சிகரங்களில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ரகுமான்.


அவருடைய திரை இசைப்பயணம் நெடுகிலும் பெரும் முதலாளித்துவ-பன்னாட்டு -உலகமயத்தன்மைகள் தவிர்க்க முடியாதவனவாகிவிட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் டேனி பேர்ல் எடுத்த ஆங்கிலப் படம் என்பதால்தான் ஸ்லம்டாக் மில்லியனர், 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 8 விருதுகளைப் பெற்றுள்ளது. இல்லையென்றால், இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாகியிருக்காது.

ஆஸ்கரின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. குறிப்பிட்ட படத்திற்காக அவருக்கு விருது வழங்க ஆஸ்கர் குழுவினர் தயாராக இல்லை. டேனி பாயல் வெள்ளைத்தோல்காரர் என்பதால் அவரைச் சார்ந்து பணியாற்றியதன் வாயிலாக இந்தியர்களின் ஆஸ்கர் கனவு நிறைவேறியுள்ளது. ஒலி சேர்ப்பிற்காக ரசூல் பூக்குட்டியும், ரகுமான் இசையில் ஜெய் ஹோ பாடலை எழுதிய இந்திப் பாடலாசிரியர் குல்சாரும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளனர். உலகத்தரமிக்க கலைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களை அங்கீகரிக்க வெள்ளைத் தோல்காரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையுமே இந்த விருதுகள் நிரூபிக்கின்றன.


உலகத் திரை இசையின் உச்சத்தை தொட்டுவிட்டார் ரகுமான். கிளைகள் எங்கெங்கோ பரவினாலும் வேர் என்பது சொந்த மண்ணில்தான். மேற்கத்திய பாணியிலான இந்திய இசைக்காகத்தான் ரகுமான் இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தமிழிசையில் ரகுமான் இதுவரை ஆழமாகச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த மண்ணின் இசை மரபுடனான ஓர் இசைத்தொகுப்பு அவரிடமிருந்து வெளிப்படவில்லை. பாரம்பரியமிக்க தமிழின் இசை மரபை நவீனப்படுத்தும் பணிக்குத் திரும்புவதற்கு ரகுமானுக்கு இனி நேரமும் வாய்ப்பும் இருக்குமா?

எழில் மாறன்- பெங்களூர்

Anonymous said...

sir,

i want to type in tamil, can u pls tell me how?

புருனோ Bruno said...

//மேலும் ரஹ்மான வருடத்திற்க்கு அதிகமாக 8 படங்களுக்கு மேல் செய்வதில்லை.. ( அதிகபட்சமாக 3 தமிழ்படங்கள் வருடத்திற்க்கு)

ஆனால் ராஜாவை போல ஒரே வருடத்திற்க்கு பல படங்கள் செய்ய அவரால் முடியுமா செய்தால் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம் தான்.//

அப்படி செய்ய ராஜா தாக்கு பிடிக்கவில்லை. அது போல் ரஹ்மானும் தாக்கு பிடிக்க மாட்டார் !!

சரவணகுமரன் said...

வித்தியாசமான பார்வை... அருமை...

புருனோ Bruno said...

//ராஜா இதுவரை இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு . ரகுமான் இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு.
1980 டு 1995 வரை ஒரு வருடத்திற்கு சராசரியாக 45 படங்கள் வெளி வந்து இருக்கிறது . இதுவரை ரகுமான் 19 வருடங்களில் நூறு படங்களுக்கும் குறைவாகத்தான் இசை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

எண்ணிக்கைக்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்றே நினைக்கிறேன்.



// இளையராஜாவின் திறமை படத்திற்கு படம் எவ்வளவு வித்தியாசமான இசை முயற்சிகளை கொடுத்து இருக்கிறார் . அவருடைய இசை நம்முடைய மண்ணுக்கே உரிய தன்மை வுடையது . இத்தகைய இசை அவருக்கு வராது. அவருடையது மேற்கத்திய முறையில் ஆனது . ஆஸ்கர் விருது எப்படி கொடுக்கிறார்கள் என்று கமல் ஏற்கெனவே பலமுறை குறிபிட்டுள்ளார்//

அப்படிப்பட்ட ஆஸ்கருக்கு ஏன் அவர் தேவர்மகனையும் நாயகனையும் அனுப்பினாராம்

---

அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடு பசங்கள் இருக்கும் நாட்டில் நமது கலைஞரை மேற்குலகம் பாராட்டுவது எவ்வளவு பெரிய விஷயம்

புருனோ Bruno said...

//இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பி‌ரிவில் மட்டுமே இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.//

இந்த படத்தில் பணியாற்ற தகுந்த திறமை படைத்தவர் ரஹ்மான என்றும் அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் அல்ல என்ப்தையும் அந்த இயக்குனர் தெளிவாக உணர்ந்துள்ளார் !!!

புருனோ Bruno said...

//இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயா‌ரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயா‌ரிப்பாகவோ, அமெ‌ரிக்க தயா‌ரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.//
உண்மை !!

புருனோ Bruno said...

//இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். //

உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு வெளிநாட்டினர் வாய்ப்பு வழங்குகிறார்கள்

வாய்ப்பு பெறும் அளவு திறமை இல்லாதவர்களின் அல்லக்கைகள் வயிறு எரிந்து உளறுகிறார்கள்

புருனோ Bruno said...

//இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம்.//

உண்மைதான்

ஆனால் அந்த வட்டத்திற்குள் வரக்கூடாத முடியாதவர்களையும் அந்த வட்டத்தில் முதலிடம் பெறுபவர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்

புருனோ Bruno said...

ஆண்ட்டு வெப்பர் என்பவர் தனது நாடகத்திற்கு இசையமைக்க தகுந்தவர் என்று நம்பியது ரஹ்மானைத்தான். வேறு மோசடி பேர்வழிகளை அல்ல என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.

இந்தியாவிற்கு வெளியில் தயாரிக்கப்படும் படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது இது முதல் முறை அல்ல

அவரது திறமை மதிக்கப்படுகிறது !!

புருனோ Bruno said...

//உலகத்தரமிக்க கலைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களை அங்கீகரிக்க வெள்ளைத் தோல்காரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையுமே இந்த விருதுகள் நிரூபிக்கின்றன. //

உண்மைதான்.

அந்த வெள்ளைத்தோல்காரர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் திறமை இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்

புருனோ Bruno said...

ஒரு-கற்பனை-கதை படித்து பாருங்கள்

வால்பையன் said...

//எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!

எல்லாம் இறைவன் செயலே..!//


சுனாமி
எரிமலை
பூகம்பம்

இஸ்ரேல் & பாலஸ்தீனம்
இலங்கை & ஈழமக்கள்
தீவிரவாதம் & அப்பாவி மக்கள்

இறைவனுக்கு விருது வாங்கி தருவதை விட வேறு நிறைய முக்கிய வேலைகள் இருக்கும் போலயே!

அத்திரி said...

எழில் மாறன் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்

குடுகுடுப்பை said...

புருனோ Bruno said...

//இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். //

உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு வெளிநாட்டினர் வாய்ப்பு வழங்குகிறார்கள்

வாய்ப்பு பெறும் அளவு திறமை இல்லாதவர்களின் அல்லக்கைகள் வயிறு எரிந்து உளறுகிறார்கள்
//

சிலர் சாப்ட்வேர்காரங்க சம்பளத்த பாத்து வயிறு எரிவது போல்.

குடுகுடுப்பை said...

இளையராஜா,ரகுமான் இருவரும் திறமைசாலிகளே. அவர்கள் இசையை ரசிப்போம். விருது கிடைத்தால் பெருமைப்படுவோம். அவர்களுக்குள் போட்டியோ,பொறாமையோ அது அவர்களுக்குள், அது நமக்கு எதுக்கு.

அத்திரி said...

இளையராஜா-- ரஹ்மான் ஒப்பிட முடியாது...... இன்றைக்கு சிலாகிக்கப்படும் ராஜாவின் பாடல்கள் போல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து ரஹ்மானின் பாடல்கள் சிலாகிக்கப்படும்... அந்த நேரத்தில் எம் எஸ் வி -- இளையராஜா -- ரஹ்மான் வரிசையில் வேறொருவர் இணைந்திருப்பார்....... இதுதான் உண்மை

அத்திரி said...

50 அடிச்சிட்டேன் அண்ணே

Anonymous said...

From what i have heard and read about, the entry(the circumstance) into tamil cinema industry by A.R. Rahman,what you have written is correct.But some of the responses are way off the mark.Are these people have so much hatred about westerners in general and in some cases against the people of north indian origin,and someone who sees Allah as a messiah, serious about what they are saying? Hatred does not get you anywhere,try and mend your ways.

Karka Kasadara said...

//எல்லாம் இறைவன் செயலே..!//

ரகுமான் கூறியது அவரது இறைவன்,உங்களது இறைவனை இல்லை.அவர் உங்களது இறைவனை ஏற்றுக்கொள்வதில்லை.

இப்படிக்கு
ராவணன்//

நண்பரே உம்மை உம் இறைவனும் எம்மை எம் இறைவனும் படைக்க வில்லை. நம் அனைவரையும் ஒரு இறைவன் தான் படைத்தது இருக்கிறார். அவனை ஒவ்வொரு வரும் ஒரு கோணத்தில் பார்கின்றனர். குருடர்கள் யானையை பார்த்ததுபோல். ஆனால் அந்த இறைவன் இந்த மனித கற்பனையில் உதிக்கும் அசிங்ககளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

//A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen.
//

ஒருவன் ஒரு இனத்தவனாக பிறக்கிறான், ஒரு மொழிக்குரியவனாக பிறக்கிறான். இவை இரண்டும் அவன் விரும்பாமலே அவனுக்கு அவனுடைய பெற்றோர்களின் மூலம் கிடைக்கும் அடையாளம். அதை அவன் மாற்ற முடியாது. இந்த அடையளாத்தல் அவனுக்கு எந்த ஒரு புகழ்ச்சியும், அவமானமும் இல்லை.

ஆனால் ஒருவன் ஒரு மதத்தவனாக பிறப்பதில்லை. ஒரு மதத்தை சேர்ந்தவனாக அவன் பெற்றோரால் திணிக்க படுகின்றன். (பூணுல், ஞானஸ்னானம், ஓரிறை நம்பிக்கை). ஒருவன் ஒரு மதத் தவனாக பிறக்கின்றான் என்றால் கிறிஸ்துவம் பெத்லகாமையும், இஸ்லாம் மதினாவையும், புத்தமதம் போத்கயா வையும், இந்து மதம் கைபர் போலன் கணவாய்களையும் தாண்டி இருக்காது.

மதம் என்பது ஒருவன் தன் சுய சிந்தனையில் தனக்கும் தன்னை படைத்தவனுக்கும் இடையில் உள்ள பிணைப்பின் பாலம். அதை கொச்சை படுத்த வேண்டாம்.

Anonymous said...

///நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் மிஸ்டர் ராவணன்..////

பதிவை விடவும் நான் இரசித்த வரிகள் இவை தான் ஊனா தானா.

இந்த ராவணன்கள் கட்ட நினைக்கும் நவீன இராமாயணங்கள் எடுபடாது என்று சொல்லிவிடுவதைப் போலிருந்தது.

கானா பிரபா, புரூனோ போன்றவர்களுக்கு:

உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்துவிடக்கூடாது என்பதைத்தான் ரகுமான் தன் ஏற்புரையில் சொன்னார் (நான் அன்பையே தேர்ந்தெடுத்துக்கொண்டேன்).

//A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam.//

அட, அநானி, அப்ப இஸ்லாமியர்கள் எல்லாம் மத நம்பிக்கையில்லாதவங்களா?
யப்பா, பஜ்ரங்தளத்தைத் தாண்டின மதவெறியா இருக்கே இது!

(ஊனா தானா, பதிவின் இழை மேற்கண்ட வரிகளால் மாறியிருந்தால் வருந்துகிறேன், நீங்களும் இனி அனுமதிக்காதீர்கள்)

புருனோ Bruno said...

//இளையராஜா-- ரஹ்மான் ஒப்பிட முடியாது...... இன்றைக்கு சிலாகிக்கப்படும் ராஜாவின் பாடல்கள் போல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து ரஹ்மானின் பாடல்கள் சிலாகிக்கப்படும்... அந்த நேரத்தில் எம் எஸ் வி -- இளையராஜா -- ரஹ்மான் வரிசையில் வேறொருவர் இணைந்திருப்பார்....... இதுதான் உண்மை//

வழிமொழிகிறேன்

புருனோ Bruno said...

//உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்துவிடக்கூடாது என்பதைத்தான் ரகுமான் தன் ஏற்புரையில் சொன்னார் (நான் அன்பையே தேர்ந்தெடுத்துக்கொண்டேன்).//

நான் யாரையும் வெறுக்கவில்லையே

Anonymous said...

//ஊரை ஏமாற்றும் பிராடு பசங்கள் //

டொக்டர் புரூனோ,

மேற்கண்ட உங்கள் வார்த்தைகள் அன்பில் விளைந்ததாகத் தான் கருதுகிறீங்களா? நன்றி.

ISR Selvakumar said...

ஒரு சிலரைத் தவிர 'தனி மனித துதி' காரணமாக, பலரும் உணர்ச்சிவசப் பட்டு எழுதியிருக்கிறார்கள்.

நான் ஏற்கனவே எழுதிய ஒரு பதிவை இந்த பதிவுக்கு பின்னூட்டமாக சிபாரிசு செய்கிறேன்.

http://selvaspeaking.blogspot.com/2009/01/80.html

Unknown said...

சிம்பொனி வேறு ஆஸ்கர் வேறு...
ஒரு இளையராஜா, ஒரு ரஹ்மான், ஒரு பாலசந்தர், ஒரு மணிரத்னம், ஒரு வைரமுத்து, ஒரு கவிதாலயா , ஒரு ஜி. வி, ஒரு வாலி, ஒரு வருடத்தில் ஒரு ஆஸ்கர் ஒரு துறைக்கு ஒரு தடவை ஒரு இடத்தில அளிக்கப்படுவது...
எல்லா ரசிகர்களின் ரசனையும் ஒன்றுபடும் என்று சொல்லிவிட முடியாது.
ஒன்றே சொல்வார் ! ஒன்றே செய்வார் ! உள்ளத்தில் எழுந்த அமைதி, நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும், இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நீதி ! உண்மை என்பது அன்பாகும் ! பெரும் பணிவு என்பது பண்பாகும் !
இது ஏ.ஆர். ரஹ்மானின் இயல்பு - பணிவு !
ஜெய்ய் ஹோ !

கானா பிரபா said...

//புகழேந்தி said...


கானா பிரபா, புரூனோ போன்றவர்களுக்கு:

உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்துவிடக்கூடாது //

புகழேந்தி

என் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு தடவை வாசிக்கவும். நான் சொன்ன கருத்து யாரையும் யாருக்கும் ஒப்பிடக் கூடாது. அவரவர் திறமை அவரவர்க்கு.

இன்றைக்கு ரஹ்மானுக்கு கிடைத்த பரிசையும் பாராட்டையும் வைத்து ராஜாவின் தலையில் மிளகாய் அரைக்காதீங்கன்னு தான் சொன்னேன். அதுக்கு தான் நான் காட்டிய எடுகோள்கள்.

Anonymous said...

நான் ரெண்டு மூணு முறை இந்த இடுகை படித்தேன்.. ராஜா சார் பத்தி ஒன்னுமே தப்ப போடல.. அவரு திறமையை பத்தி எதுவும் சொல்லல..
தளபதி, சிந்துபைரவி போன்ற படங்களில் உள்ள இசை போல் இப்போ எதிலும் இல்லைன்னு அவர பெருமையாதான் சொல்லிருக்காரு..
ராஜா சார் கோவம் படுவார்.. அது தப்பு இல்ல.. கலைனர்களின் குணம்.. இப்படி தான் சொல்லறாரு..

என்ன ரஹ்மான் வாய்ப்பு கிடைக்கணும்னு இருக்கு, அதான் கிடைச்சுதுன்னு சொல்லறாரு.. அதாவது விதி.. எனக்கு இப்படி தான் புரியுது..

இதுக்கு ஏன் பா தமிழனை இப்படி காச்சறீங்க??

வேத்தியன் said...

சிறந்த பதிவு...
இது வரை இந்த விசயம் தெரியாததொன்று.

Anonymous said...

புரூனோ??















Q & A Dear John
John Scott's Column
As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD 'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,



Previous Questions












--------------------------------------------------------------------------------
Last Updated: 12/12/2006 15:08:18
© Copyright 1997-2006 Randy Levy

Anonymous said...

புரூனோ??















Q & A Dear John
John Scott's Column
As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD 'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,



Previous Questions












--------------------------------------------------------------------------------
Last Updated: 12/12/2006 15:08:18
© Copyright 1997-2006 Randy Levy

Anonymous said...

புரூனோ? \ உன் உளறளை நிருத்து.

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
அண்ணா நல்ல பதிவு. எந்த ஒரு இசை பிரபலமாக முழு காரணம் சிறுவர்களும் குழந்தைகளும்தான். பாடல் வரிகளின் அர்த்தங்கள் புரியாமல் இசையை மட்டும் கேட்டு குதூகலிக்கும் போதுதான் அந்த இசை பிரபலம் ஆகிறது.//

உண்மைதான்.. ராஜாவின் பாடல்களில் முக்கால்வாசி சிறுவர்கள் குழந்தைகள் என்றில்லை பெரியவர்களையும் சேர்த்தே சந்தோஷப்படுத்தியது..

//ராஜாவின் சாதனைகள் என்றுமே மறுக்க முடியாது. ஆனால் ராஜா 90 - 93ம் இடையில் வந்த பல பாடல்கள் மொக்கையாகவே கொடுத்தார். பல பாடல்கள் ராஜாவின் சொந்த துதி பாடல்களாகவே இருந்தன. அந்த நேரத்தில் அவரின் இசை பலருக்கு அலுத்து போய் விட்டது.//

இந்த அலுப்பு என்பது கலாச்சார இடைவெளி ஏற்பட்டதனால் வந்தது.. எனக்கு வரவில்லை. ரஹ்மான் மீது ஈர்ப்பு வந்தது உண்மை. ஆனால் காதல் வரவில்லை..

//ரஹ்மானின் இசை கேட்டதுமே ஒரு புது விதமான இசை. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மயக்களை மயக்கி விட்டது.
ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேன், காதலன், பாடல்களை சிறுவனாக இருந்த போது எத்தனை முறை கேட்டு இருப்பேனோ தெரியாது.
ஏதாவது கலைவிழா என்றால் அங்கு சிக்குபுககு ரயிலே பாடலுக்கு நடனம் இல்லாமல் நடத்த முடியாது. ஒரு இனிமையான இசை மாற்றத்தை கொண்டு வந்தார்.//

இது சிறு வயதில் அனைவருக்கும் ஏற்படும் கொண்டாட்டமான விஷயம்தான்.. தவிர்க்க முடியாதது தம்பீ..

//ராஜாவின் பாடல்களில் வழமையாக 3 அல்லது 4 பாடகர்களை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது.. அதே கேட்ட குரல்கள்தான்.//

அது அந்தப் பாடலின் கம்பீரம் கருதி.. இதுதான் சரி.. ஆனால் இப்போது.. கர்மமாக உள்ளது..

//ஆனால் ரஹ்மான் பல புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல புதிய குரல்களை அறிமுகபடித்தினார். ரஹ்மான் இசை மாற்றம் புதுமை என்ற கோட்டில் செல்கிறது. இது ரஜ்மான்னின் வெற்றிககான அடிப்படைகள்.//

புதியவர்களை அறிமுகப்படுத்துவது நல்லதுதான்.. அதற்காக பழையவர்களை ஓரேயடியாக ஒதுக்கவும் கூடாது.. மொழியைக் குதறவும் கூடாது..

//ராஜாவின் இசை தாலாட்டுகிறது என்றால் ரஹ்மானின் இசை கொண்டாடபடுகிறது. இரண்டுமே வேண்டும்தான்..//

கொண்டாட்டமும், தாலாட்டும் மனித வாழ்க்கையில் எத்தனை நாட்களுக்குத் தேவை என்பதை யோசித்துப் பார்.. உனக்கே புரியும்..!

உண்மைத்தமிழன் said...

//கானா பிரபா said...
பின்னூட்டத்தில் சொல்லாத இன்னொரு விஷயம்.

உங்க விவாதப்படி பார்த்தா ராஜாதான் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்க காரணம்.

//ஏன்னா பகல் நிலவு, இதயக்கோயில் கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி போன்ற மொக்கைப் படங்களுடன் ‍ நாயகன், கீதாஞ்சலி என்ற தெலுங்கு படமும் சேர்த்து இயக்கியிருந்த மணிரத்னத்துக்கு வாழ்வு கொடுத்தவர் ராஜா.//

இதைவிட காமெடியான கருத்து வேறெதுவும் இருக்காது தம்பி.. பகல் நிலவும், இதயக்கோயிலும், பல்லவி அனுபல்லவியும் மொக்கைப் படங்கள் என்று சொன்னால்.. ஸாரி மன்னிக்கவும்.. நான் மேற்கொண்டு உன்னுடன் பேசவே முடியாது..

இந்தப் படங்கள் பற்றி எனது புரிதல் வேறு..

//அக்னி சாட்சி போன்ற படங்களோடு காணாமல் போயிருந்த பாலசந்தரை சிந்து பைரவி முதற்கொண்டு புதுபுது அர்த்தங்கள் வரை கவிதாலயாவுக்கு பணம் கொட்ட காரபம் ராஜா இசை.//

ஐயோ கானா தம்பீ.. அக்னி சாட்சிக்குப் பின்பு பொய்க்கால் குதிரை, அச்சமில்லை அச்சமில்லை, கல்யாண அகதிகள் என்று 3 படங்கள் செய்தார். இதில் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம் மிக, மிக பேசப்பட்ட திரைப்படம்..

இதன் பின்புதான் சிந்துபைரவி.. சிந்துபைரவிக்கு இளையராஜாவை அவர் அணுகியவிதமும், ஏன் ராஜாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் ஒரு தனிக்கதை. இதில் நமது ராஜாவுக்கு எள்ளளவும் மரியாதைக் குறைபாடு அல்ல..

சிந்துபைரவி கதையை ராஜாவிடம் கொண்டு வரவில்லையென்றால் அது போன்ற விலை மதிக்க முடியாத பாடல்கள் ராஜாவிடம் இருந்து வெளிப்பட்டிருக்குமா..? யோசித்துப் பார்..

ராஜா கே.பி.யை வாழ வைத்தாரா..? அல்லது கே.பி. ராஜாவிடம் இருந்து இசையைக் கறந்தாரா என்று நாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. அது ஒரு கூட்டு முயற்சி..

நாம் ரசிகர்கள்.. நமக்குத் தேவை.. நல்ல இசையும், பாடல்களும்தான்..

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
மேலும் ரஹ்மான வருடத்திற்க்கு அதிகமாக 8 படங்களுக்கு மேல் செய்வதில்லை.. (அதிகபட்சமாக 3 தமிழ் படங்கள் வருடத்திற்க்கு)
ஆனால் ராஜாவை போல ஒரே வருடத்திற்க்கு பல படங்கள் செய்ய அவரால் முடியுமா செய்தால் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம்தான்.//

செய்ய வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம்..

வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்..

செய்த வேலைகள் அனைத்தும் அற்புதமாக இருந்தால் பாராட்டத்தானே செய்வீர்கள்.. பிறகென்ன..?

ராஜா அற்புதமாகத்தான் செய்திருந்தார்..

உண்மைத்தமிழன் said...

///ராவணன் said...
//அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் இறைவனை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அவர் இறைவனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமோ இல்லை.. நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் மிஸ்டர் ராவணன்..//
நீங்கள் சொன்னாலும்,
சொல்லாவிட்டாலும் எனது வேலையை நான் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன்.
"எல்லாம் இறைவன் செயல்" எந்த இறைவன் என்று கேட்டால் கோபம் மூக்கின் நுனிக்கே வருகின்றதோ?
அதுதான் மூடிக்கிட்டு போ என்று கூறிய பின்னும் ஏன் வந்தாய் எனக் கேட்டால், "எல்லாம் என் இறைவன் செயல்" இப்படிக்கு ராவணன்.//

அன்பு ராவணா..

இதுதான் என் பதிவில் நீர் இடும் கடைசிப் பின்னூட்டமாக இருக்கட்டும்..

எங்கிருந்தாலும் வாழ்க..

உண்மைத்தமிழன் said...

//தமிழிசையில் ரகுமான் இதுவரை ஆழமாகச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த மண்ணின் இசை மரபுடனான ஓர் இசைத்தொகுப்பு அவரிடமிருந்து வெளிப்படவில்லை. பாரம்பரியமிக்க தமிழின் இசை மரபை நவீனப்படுத்தும் பணிக்குத் திரும்புவதற்கு ரகுமானுக்கு இனி நேரமும் வாய்ப்பும் இருக்குமா?//

இதுவொரு சிறப்பான கணிப்பு எழில்மாறன்..

பொருத்தமான கட்டுரையைத் தேர்வு செய்து இங்கு பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்.

உண்மைத்தமிழன் said...

//raja said...
sir, i want to type in tamil, can u pls tell me how?//

ராஜா ஸார்.. கூகிளாண்டவரிடம் NHM Softwares என்று கேளுங்கள். இருக்குமிடத்தைக் காட்டும். அதில் NHM Writer-ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

பின்பு அதில் தமிழ்99 என்ற கீபோர்டுக்கான எழுத்து மாடல் பிரதியை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை உங்களது டேபிளின் முன் வைத்துக் கொண்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்து தினமும் ஒரு பக்கத்திற்கு தட்டச்சு செய்து பழகுங்கள்..

ஒரு மாதத்திலேயே தங்களுக்கு தட்டச்சு கைவண்ணமாகிவிடும்.

வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//மேலும் ரஹ்மான வருடத்திற்க்கு அதிகமாக 8 படங்களுக்கு மேல் செய்வதில்லை.. ( அதிகபட்சமாக 3 தமிழ்படங்கள் வருடத்திற்க்கு)
ஆனால் ராஜாவை போல ஒரே வருடத்திற்க்கு பல படங்கள் செய்ய அவரால் முடியுமா செய்தால் தாக்கு பிடிப்பாரா என்பது சந்தேகம் தான்.//
அப்படி செய்ய ராஜா தாக்கு பிடிக்கவில்லை. அது போல் ரஹ்மானும் தாக்கு பிடிக்க மாட்டார்!!///

பதினைந்து வருடங்கள் கொடி கட்டிப் பறந்தார் ராஜா.. மறக்க வேண்டாம்..

உண்மைத்தமிழன் said...

//சரவணகுமரன் said...
வித்தியாசமான பார்வை... அருமை...//

நன்றி சரவணகுமரன்..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//ராஜா இதுவரை இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு . ரகுமான் இசை அமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு. 1980 டு 1995 வரை ஒரு வருடத்திற்கு சராசரியாக 45 படங்கள் வெளி வந்து இருக்கிறது . இதுவரை ரகுமான் 19 வருடங்களில் நூறு படங்களுக்கும் குறைவாகத்தான் இசை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

எண்ணிக்கைக்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்றே நினைக்கிறேன்.//

உண்மைதான்.. இன்றைக்கும் ஆடியோ சிடிக்களிலும், டிவிடிக்களிலும் அதிகம் விற்பனையாவது ராஜாவின் பொற்காலப் பாடல்கள்தான்..

//ஆஸ்கர் விருது எப்படி கொடுக்கிறார்கள் என்று கமல் ஏற்கெனவே பலமுறை குறிபிட்டுள்ளார்//

அப்படிப்பட்ட ஆஸ்கருக்கு ஏன் அவர் தேவர் மகனையும். நாயகனையும் அனுப்பினாராம்?///

கமல் ஆஸ்கார் விருதை தரம் குறைத்து பேசவில்லை.. அதுவே உச்சபட்ச தரம் என்று சொல்லாதீர்கள் என்றார்.. அது ஆங்கில மொழியில் ஒரு விருதுதானே.. அவர் அனுப்பியது சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பதக்கத்தை பெறுவதற்காக.. இதில் என்ன தவறு இருக்கு..?

//அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடு பசங்கள் இருக்கும் நாட்டில் நமது கலைஞரை மேற்குலகம் பாராட்டுவது எவ்வளவு பெரிய விஷயம்.//

யார் சிம்பொனி அமைக்கவில்லை..? யார் பிராடு பசங்கள்..?

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//இல்லையெனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற ஒரேயொரு பி‌ரிவில் மட்டுமே இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கும். ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் விருது பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.//

இந்த படத்தில் பணியாற்ற தகுந்த திறமை படைத்தவர் ரஹ்மான என்றும் அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் அல்ல என்ப்தையும் அந்த இயக்குனர் தெளிவாக உணர்ந்துள்ளார்!!!///

யார் சிம்பொனி அமைக்கவில்லை..? ஏன் இந்த காழ்ப்புணர்வு..? உங்களிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//இதையே வேறு கோணத்தில் சொல்வதென்றால், ரோஜாவும், பம்பாயும், ரங்கீலாவும், ரங் தே பசந்தியும் இந்திய தயா‌ரிப்பாக இல்லாமல் இங்கிலாந்து தயா‌ரிப்பாகவோ, அமெ‌ரிக்க தயா‌ரிப்பாகவோ இருந்திருந்தால் இந்நேரம் ரஹ்மானின் கணக்கில் நான்கைந்து ஆஸ்கர் விருதுகள் வரவாகியிருக்கும்.//

உண்மை!!///

யாராலும் மறுக்க முடியாத வாதம்..

ஆக மொத்தம் ஆங்கில மொழிக்காக கிடைக்கின்ற விருது இது..

இதில் கலந்து கொள்ளும் பாக்கியம் ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது..

கிடைத்த வாய்ப்பை ரஹ்மான் தவறவிடவில்லை..

அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதன்படி செய்து அவர்களை திருப்திபடுத்தியுள்ளார்.

அந்தத் திருப்திக்குத்தான் இந்த பரிசு..

முடிந்தது கதை..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர். //
உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு வெளிநாட்டினர் வாய்ப்பு வழங்குகிறார்கள்

வாய்ப்பு பெறும் அளவு திறமை இல்லாதவர்களின் அல்லக்கைகள் வயிறு எரிந்து உளறுகிறார்கள்.///

யார் வயிறு எரிவது..? நிச்சயம் நானல்ல..

இசை என்பது ஒரு பெரிய கடல்.. அதன் அனைத்து அம்சங்களையும் ஒருவனே தெரிந்து வைத்திருப்பான் என்பதும், அதில் அவன் மட்டுமே வித்தகனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதும் முற்றிலும் தவறான கணிப்பு..

வாய்ப்பு வந்தது. பயன்படுத்திக் கொண்டார். ஜெயித்துவிட்டார்.

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//இரண்டேயிரண்டு நாடுகளில் தயாராகும் படங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை கலையுலகின் உச்சமான விருதாக கொண்டாடுவது கலையையும், கலைஞர்களையும் சிறு வட்டத்திற்குள் சுருக்குவதற்கு சமம்.//

உண்மைதான்.

ஆனால் அந்த வட்டத்திற்குள் வரக்கூட முடியாதவர்களையும், அந்த வட்டத்தில் முதலிடம் பெறுபவர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.//

அந்த வட்டம் நமக்குத் தேவையில்லை என்பவர்கள்தான் நமது நாட்டில் அதிகம் பேர்.

நமது வட்டம் அதனைவிட மேன்மையானது.. பெருமைமிக்கது.. இதில் முதன்மையானவர்களே வரும் காலத்திலும் நம்மோடு இருப்பார்கள்..

உண்மைத்தமிழன் said...

//புருனோ Bruno said...
ஆண்ட்டு வெப்பர் என்பவர் தனது நாடகத்திற்கு இசையமைக்க தகுந்தவர் என்று நம்பியது ரஹ்மானைத்தான். வேறு மோசடி பேர்வழிகளை அல்ல என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.//

அவருக்கு ரஹ்மான் இசை கேட்கும் வாய்ப்பும், அவரிடம் தன் இசையை கொண்டு போய் சேர்க்கும் வித்தையும் ரஹ்மானுக்குத் தெரிந்திருக்கிறது. செய்திருக்கிறார். மற்றவர்கள் அது தேவையில்லை என்று நினைத்திருப்பார்கள்..

//இந்தியாவிற்கு வெளியில் தயாரிக்கப்படும் படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது இது முதல் முறை அல்ல. அவரது திறமை மதிக்கப்படுகிறது!!//

இந்தியாவிற்கு வெளியேயான கலாச்சாரத்தோடு ஒத்துப் போக அவருக்குப் பிடிக்கிறது. பணியாற்றுகிறார்.. செய்யட்டுமே.. அதனால் என்ன..?

இதனால் அந்தக் கலாச்சாரத்தோடு ஒன்றாதவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று அர்த்தமா..?

உண்மைத்தமிழன் said...

//புருனோ Bruno said...
ஒரு-கற்பனை-கதை படித்து பாருங்கள்.//

மட்டமான கற்பனையும், அதீத காழ்ப்புணர்ச்சியும் கலந்த கலவை..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு.. நம்புங்கள்..!
எல்லாம் இறைவன் செயலே..!//
சுனாமி
எரிமலை
பூகம்பம்
இஸ்ரேல் & பாலஸ்தீனம்
இலங்கை & ஈழமக்கள்
தீவிரவாதம் & அப்பாவி மக்கள்
இறைவனுக்கு விருது வாங்கி தருவதை விட வேறு நிறைய முக்கிய வேலைகள் இருக்கும் போலயே!///

வாலு.. வந்துட்டீங்களா..? எங்கடா இன்னும் வரலையேன்னு நினைச்சேன்..

இறைப்பணியை பரப்புவதைத் தவிர நமக்கு வேறு ஒரு முக்கியப் பணியும் இல்லை வாலு..

இதுவே முருகன் செயல்..

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
எழில் மாறன் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.//

நன்றி அத்திரி ஸார்..

உண்மைத்தமிழன் said...

///குடுகுடுப்பை said...
//புருனோ Bruno said...
இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக் காட்டும் உண்மை என்னவெனில், ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் நம்மிடையே உள்ளனர்.//
உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு வெளிநாட்டினர் வாய்ப்பு வழங்குகிறார்கள். வாய்ப்பு பெறும் அளவு திறமை இல்லாதவர்களின் அல்லக்கைகள் வயிறு எரிந்து உளறுகிறார்கள்//
சிலர் சாப்ட்வேர்காரங்க சம்பளத்த பாத்து வயிறு எரிவது போல்.///

என்ன குடுகுடுப்பை..

தமிழ் தெரியுமா? தெரியாதா..?

ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டம் படிச்சு பின்னூட்டம் போடக் கூடாது..

மொதல்ல இருந்து கடைசிவரைக்கும் படிக்கணும்..

உண்மைத்தமிழன் said...

//குடுகுடுப்பை said...
இளையராஜா, ரகுமான் இருவரும் திறமைசாலிகளே. அவர்கள் இசையை ரசிப்போம். விருது கிடைத்தால் பெருமைப்படுவோம். அவர்களுக்குள் போட்டியோ, பொறாமையோ அது அவர்களுக்குள், அது நமக்கு எதுக்கு.//

ஓ.. இப்பத்தான் அரசியல் புரிஞ்சதாக்கும்.. இதுக்குத்தான் சொல்றது.. ஆற, அமர யோசிச்சுட்டு அப்புறமா பின்னூட்டம் போடுங்கன்னு..

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
இளையராஜா-- ரஹ்மான் ஒப்பிட முடியாது...... இன்றைக்கு சிலாகிக்கப்படும் ராஜாவின் பாடல்கள் போல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து ரஹ்மானின் பாடல்கள் சிலாகிக்கப்படும்... அந்த நேரத்தில் எம் எஸ் வி -- இளையராஜா -- ரஹ்மான் வரிசையில் வேறொருவர் இணைந்திருப்பார்....... இதுதான் உண்மை.//

இது உலக நடைமுறை..

இன்றைய கலாச்சாரம் நாளை மறக்கடிக்கப்படும்.. நாளையது மறுநாளில் போக்கடிக்கப்படும்..

ரஹ்மானுக்கு வேறொரு ரஹ்மான் நிச்சயம் வருவார்..

ஆனால் நிலைத்து நிற்கப் போவது..

எந்த இசை என்று தெரியுமா..?

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
50 அடிச்சிட்டேன் அண்ணே.//

ஐயோ என் செய்வன் என் அருமை தம்பியின் பேருதவிக்கு..!

நன்றி மறக்க மாட்டேன்.. உற்ற நேரத்தில் கை கொடுப்பேன் சகோதரா..!

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
From what i have heard and read about, the entry(the circumstance) into tamil cinema industry by A.R. Rahman, what you have written is correct. But some of the responses are way off the mark. Are these people have so much hatred about westerners in general and in some cases against the people of north indian origin, and someone who sees Allah as a messiah, serious about what they are saying? Hatred does not get you anywhere,try and mend your ways.//

மன்னிக்கணும்..

இந்த அளவுக்கெல்லாம் நமக்கு ஆங்கில அறிவு இல்லீங்கோ..

உண்மைத்தமிழன் said...

///chellam said...
/எல்லாம் இறைவன் செயலே!/
ரகுமான் கூறியது அவரது இறைவன், உங்களது இறைவனை இல்லை. அவர் உங்களது இறைவனை ஏற்றுக்கொள்வதில்லை.
இப்படிக்கு
ராவணன்//
நண்பரே உம்மை உம் இறைவனும் எம்மை எம் இறைவனும் படைக்க வில்லை. நம் அனைவரையும் ஒரு இறைவன்தான் படைத்தது இருக்கிறார். அவனை ஒவ்வொரு வரும் ஒரு கோணத்தில் பார்கின்றனர். குருடர்கள் யானையை பார்த்ததுபோல். ஆனால் அந்த இறைவன் இந்த மனித கற்பனையில் உதிக்கும் அசிங்ககளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.//

அதெல்லாம் இவர்களுக்குப் புரியாது ஸார்.. புரிஞ்சாலும் வெளில காட்டிக்க மாட்டாங்க.. நமக்குத்தான் நேரம் வீணாகும்.. ஒதுங்கிப் போவோம்..

///A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen.//
ஒருவன் ஒரு இனத்தவனாக பிறக்கிறான், ஒரு மொழிக்குரியவனாக பிறக்கிறான். இவை இரண்டும் அவன் விரும்பாமலே அவனுக்கு அவனுடைய பெற்றோர்களின் மூலம் கிடைக்கும் அடையாளம். அதை அவன் மாற்ற முடியாது. இந்த அடையளாத்தல் அவனுக்கு எந்த ஒரு புகழ்ச்சியும், அவமானமும் இல்லை.
ஆனால் ஒருவன் ஒரு மதத்தவனாக பிறப்பதில்லை. ஒரு மதத்தை சேர்ந்தவனாக அவன் பெற்றோரால் திணிக்கபடுகின்றன். (பூணுல், ஞானஸ்னானம், ஓரிறை நம்பிக்கை). ஒருவன் ஒரு மதத்தவனாக பிறக்கின்றான் என்றால் கிறிஸ்துவம் பெத்லகாமையும், இஸ்லாம் மதினாவையும், புத்தமதம் போத்கயாவையும், இந்து மதம் கைபர் போலன் கணவாய்களையும் தாண்டி இருக்காது.//

இல்லை செல்லம்..

உங்களது வாதம் தவறு.. பிறக்கும்போது மதமும் சேர்ந்துதான் வருகிறது..

//மதம் என்பது ஒருவன் தன் சுய சிந்தனையில் தனக்கும் தன்னை படைத்தவனுக்கும் இடையில் உள்ள பிணைப்பின் பாலம். அதை கொச்சைபடுத்த வேண்டாம்.//

இதை ஏற்றுக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///புகழேந்தி said...
//நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம் மிஸ்டர் ராவணன்..//
பதிவை விடவும் நான் இரசித்த வரிகள் இவைதான் ஊனா தானா.
இந்த ராவணன்கள் கட்ட நினைக்கும் நவீன இராமாயணங்கள் எடுபடாது என்று சொல்லிவிடுவதைப் போலிருந்தது.///

நன்றி புகழேந்தி.. அதனால்தான் பட்டென்று பதில் சொல்லியிருக்கிறேன்..

//கானா பிரபா, புரூனோ போன்றவர்களுக்கு:
உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்துவிடக்கூடாது என்பதைத்தான் ரகுமான் தன் ஏற்புரையில் சொன்னார் (நான் அன்பையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்).//

ரெண்டு பேருக்குமே என்னாச்சுன்னு தெரியலை.. ஏறுக்கு மாறாவே பேசிக்கிட்டிருக்காங்க..

//A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam.//
அட, அநானி, அப்ப இஸ்லாமியர்கள் எல்லாம் மத நம்பிக்கையில்லாதவங்களா? யப்பா, பஜ்ரங்தளத்தைத் தாண்டின மதவெறியா இருக்கே இது!//

ஹா.. ஹா.. சிரிப்புதான் வருது.. இப்படியும் சிலர் இருக்காங்க பாருங்க..

//(ஊனா தானா, பதிவின் இழை மேற்கண்ட வரிகளால் மாறியிருந்தால் வருந்துகிறேன், நீங்களும் இனி அனுமதிக்காதீர்கள்)//

ஒண்ணும் பிரச்சினையில்லை.. சரியாத்தான் சொல்லிருக்கீங்க..

நன்றிகள் கோடி..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//இளையராஜா-- ரஹ்மான் ஒப்பிட முடியாது...... இன்றைக்கு சிலாகிக்கப்படும் ராஜாவின் பாடல்கள் போல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து ரஹ்மானின் பாடல்கள் சிலாகிக்கப்படும்... அந்த நேரத்தில் எம் எஸ் வி -- இளையராஜா -- ரஹ்மான் வரிசையில் வேறொருவர் இணைந்திருப்பார்....... இதுதான் உண்மை//

வழிமொழிகிறேன்.///

இதென்ன சேம் சைடு கோலா..?

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...

//உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்துவிடக்கூடாது என்பதைத்தான் ரகுமான் தன் ஏற்புரையில் சொன்னார் (நான் அன்பையே தேர்ந்தெடுத்துக்கொண்டேன்).//

நான் யாரையும் வெறுக்கவில்லையே.///

கதை விட வேண்டாம்.. வெறுப்பின் உச்சக்கட்டம்தான் நீங்கள் எழுதியிருக்கும் முட்டாள்தனமான அந்த ஓவியக் கதை..

உண்மைத்தமிழன் said...

///புகழேந்தி said...
//ஊரை ஏமாற்றும் பிராடு பசங்கள்//
டொக்டர் புரூனோ, மேற்கண்ட உங்கள் வார்த்தைகள் அன்பில் விளைந்ததாகத்தான் கருதுகிறீங்களா? நன்றி.///

சூப்பர் ஷாட் புகழேந்தி.!

Anonymous said...

இளையராஜாவின் சிம்பொனி பற்றிய என் தக‌வல் புருனோவின் மரமன்டைக்கு ஏற வில்லயா???

உண்மைத்தமிழன் said...

//r.selvakkumar said...
ஒரு சிலரைத் தவிர 'தனி மனித துதி' காரணமாக, பலரும் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கிறார்கள்.//

படிச்சுட்டு கொதிச்சுப் போயும் இருக்காங்க.. என்னை மாதிரி..!

உண்மைத்தமிழன் said...

///ஆகாயமனிதன்.. said...
சிம்பொனி வேறு ஆஸ்கர் வேறு...
ஒரு இளையராஜா, ஒரு ரஹ்மான், ஒரு பாலசந்தர், ஒரு மணிரத்னம், ஒரு வைரமுத்து, ஒரு கவிதாலயா , ஒரு ஜி. வி, ஒரு வாலி, ஒரு வருடத்தில் ஒரு ஆஸ்கர் ஒரு துறைக்கு ஒரு தடவை ஒரு இடத்தில அளிக்கப்படுவது...
எல்லா ரசிகர்களின் ரசனையும் ஒன்றுபடும் என்று சொல்லிவிட முடியாது. ஒன்றே சொல்வார் ! ஒன்றே செய்வார் ! உள்ளத்தில் எழுந்த அமைதி, நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும், இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நீதி ! உண்மை என்பது அன்பாகும் ! பெரும் பணிவு என்பது பண்பாகும் ! இது ஏ.ஆர். ரஹ்மானின் இயல்பு - பணிவு !
ஜெய்ய் ஹோ !///

எனக்குப் புரிந்தது..

புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே ஆகாயமனிதன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///கானா பிரபா said...
//புகழேந்தி said...
கானா பிரபா, புரூனோ போன்றவர்களுக்கு:
உங்களுக்குப் பிடித்தமான ஒன்றுக்காக பிறிதொன்றை வெறுத்து விடக்கூடாது//

புகழேந்தி என் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு தடவை வாசிக்கவும். நான் சொன்ன கருத்து யாரையும் யாருக்கும் ஒப்பிடக் கூடாது. அவரவர் திறமை அவரவர்க்கு.
இன்றைக்கு ரஹ்மானுக்கு கிடைத்த பரிசையும் பாராட்டையும் வைத்து ராஜாவின் தலையில் மிளகாய் அரைக்காதீங்கன்னுதான் சொன்னேன். அதுக்குதான் நான் காட்டிய எடுகோள்கள்.///

தம்பீ கானா..

சத்தியமா நான் மிளகாய் அரைக்கவில்லை..

உனக்கு ராஜா எப்படியோ அப்படித்தான் எனக்கும்..

இதை மட்டுமாவது புரிந்து கொள்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

நான் ரெண்டு மூணு முறை இந்த இடுகை படித்தேன்.. ராஜா சார் பத்தி ஒன்னுமே தப்ப போடல.. அவரு திறமையை பத்தி எதுவும் சொல்லல..

தளபதி, சிந்துபைரவி போன்ற படங்களில் உள்ள இசை போல் இப்போ எதிலும் இல்லைன்னு அவர பெருமையாதான் சொல்லிருக்காரு..
ராஜா சார் கோவம் படுவார்.. அது தப்பு இல்ல.. கலைனர்களின் குணம்.. இப்படி தான் சொல்லறாரு..

என்ன ரஹ்மான் வாய்ப்பு கிடைக்கணும்னு இருக்கு, அதான் கிடைச்சுதுன்னு சொல்லறாரு.. அதாவது விதி.. எனக்கு இப்படி தான் புரியுது..

இதுக்கு ஏன் பா தமிழனை இப்படி காச்சறீங்க??///

சுட்டபழம்.. காப்பாத்திட்ட தெய்வமே..

ரொம்ப, ரொம்ப நன்றி..

நீயாவது புரிஞ்சுக்கிட்டியே..

இதைவிட எப்படிய்யா எளிமையான தமிழ்ல எழுதி புரிய வைக்கிறது..?

கஷ்டம்ப்பா..

உண்மைத்தமிழன் said...

//வேத்தியன் said...
சிறந்த பதிவு...இதுவரை இந்த விசயம் தெரியாததொன்று.//

நன்றி வேத்தியன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

சீகேர் ஸார்..

தங்களுடைய பேருதவிக்கு மிக்க நன்றி..

இளையராஜா பற்றி அப்போது எழுந்த பல்வேறு விமர்சனங்கள் அவரைக் காயப்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்..

அதற்காகத்தான் அந்த சிம்பொனி இசை வெளியிடப்படாமலேயே உள்ளது என்றால் அது வருத்தத்திற்குரியதுதான்..

விரைவில் இசைஞானி தனது கோபத்தை விட்டொழித்து இசை ரசிகர்களுக்காக அதை வெளிக்கொணர வேண்டும் என்று விரும்புகிறேன்..

தகவலுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//segar said...
புரூனோ? \ உன் உளறளை நிருத்து.//

ஸார் எப்பவும் இப்படி பேசக்கூடியவர் அல்ல..

இந்த விஷயத்தில் ஏன் இவ்ளோ ஆத்திரம், கோபம் என்று எனக்குத் தெரியவில்லை..

வருத்தத்திற்குரிய செயல்தான் நமது மருத்துவருடையது.. பெரிதும் வருந்துகிறேன்..

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா.. கண்ணுகளா.. தங்கங்களா.. செல்லங்களா..?

கிட்டத்தட்ட 40 பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே..

அப்படியே தமிழ்மணம் கருவிப் பட்டைல ஒரு குத்தையும் சேர்த்து குத்திருந்தீங்கன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்..?

என் பதிலையும் சேர்த்து 100 வந்திருச்சு.. ஆனா பிளஸ்ல 1-ம் மைனஸ்ல 3-ன்னு கேவலமா இருக்கு..

இனிமேலாச்சும் வீட்டுக்குள்ள வந்தாக்க உங்களுக்கு எது பிடிக்குதோ அதைக் குத்திட்டுப் போங்கப்பா..

ஏதோ சொல்லணும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்..

அனைவருக்கும் நன்றிகள்..

Anonymous said...

//i want to type in tamil, can u pls tell me how?
try this link.. this will be very easy to use.. but you cant really learn tamil typing

http://www.google.com/transliterate/indic/Tamil

//இனிமேலாச்சும் வீட்டுக்குள்ள வந்தாக்க உங்களுக்கு எது பிடிக்குதோ அதைக் குத்திட்டுப் போங்கப்பா..


போடாச்சு போடாச்சு!!

Anonymous said...

என் பையனுக்கு 4 வயது. அவனுக்கு Raja-vin குரு ரமண மாலை ரொம்ப பிடிக்கும். அதை கேட்டால் அப்படியெ அமைதியாக ரசிப்பான். It is his favorite album. Don't just say youngers do not like Raja's music.

Anonymous said...

இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.

சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.

பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
//i want to type in tamil, can u pls tell me how? try this link.. this will be very easy to use.. but you cant really learn tamil typing
http://www.google.com/transliterate/indic/Tamil

//இனிமேலாச்சும் வீட்டுக்குள்ள வந்தாக்க உங்களுக்கு எது பிடிக்குதோ அதைக் குத்திட்டுப் போங்கப்பா..
போடாச்சு போடாச்சு!!///

மிக்க நன்றி புவனேஷ்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
என் பையனுக்கு 4 வயது. அவனுக்கு Raja-vin குரு ரமண மாலை ரொம்ப பிடிக்கும். அதை கேட்டால் அப்படியெ அமைதியாக ரசிப்பான். It is his favorite album. Don't just say youngers do not like Raja's music.//

ராஜாவின் இசை பிடிக்காதது அல்ல. அப்படிச் சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம்..

பின்னூட்டத்திற்கு நன்றி அனானி.. இப்போதே ஆன்மிகத்திற்குள் பையனை வளர்க்கிறீர்கள்.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//segar said...
"இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை" என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், "இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.
சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார்" என்று புகழாரம் சூட்டினார். இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், "ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும்" என்றார். பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.//

நல்லது சீகார்.. நானும் தொலைக்காட்சிகளில் பார்த்தேன்..

தமிழக இசையுலகில் இளையராஜா ஒரு சகாப்தம். அதனை அடியொற்றித்தான் இனிமேல் மற்றவர்கள் வர முடியும்.. இது ரஹ்மானுக்கும் பொருந்தும்..

Anonymous said...

Ilayaraja and Rahman cannot be compared at all. Their music is totally different and so does their character. Ilayaraja limited his music to tamil alone. He tried his bit in Hindi and other regional languages. He never tried to cross boundaries. The success he tasted with these films was not astounding. But the way Rahman made his mark in Tamil or Hindi was phenomenal. Be it Roja or Rangeela, the target audience were wooed to the core and there was no stopping for the genius. He has literally shut down the business of the Ilayaraja factory from 1992. Ilayaraja managed to compose a Kaadhalukku mariyadhai or Pidha Magan to stay in the race.

There was a period when Tamilians were listening to Hindi music. It was Ilayaraja who made the Tamilians get back to Tamil songs. But it was Rahman who made even the north indians listen to tamil songs.

Can anyone point out one single contribution from Ilayaraja towards the mankind? I bet you cant. But I can list out a lot from ARR. That makes him a complete artist.

Even in an interview today, Rahman has stated that he rated Ilayaraja's music more than his two Oscars. Thats Rahman for you!!!

Jai Ho!!! Jai Hind!!!

Jackiesekar said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க..நண்பா

புருனோ Bruno said...

////ஊரை ஏமாற்றும் பிராடு பசங்கள் //

டொக்டர் புரூனோ,

மேற்கண்ட உங்கள் வார்த்தைகள் அன்பில் விளைந்ததாகத் தான் கருதுகிறீங்களா? நன்றி.
//

பிராடு பசங்களை பிராடு என்றும் மோசடி செய்பவர்களை மோசடி பேர்வழி என்றும் கூப்பிடுவதற்கும் அன்பிற்கும் என்ன சம்மந்தம்

உங்கள காசுடன் மாயமாக மறைந்த போலி நிதி நிறுவன முதலாளிகளின் மீது அன்பு செலுத்தி அவர்களின் மோசடியை மறைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா

புருனோ Bruno said...

//segar said...
புரூனோ? \ உன் உளறளை நிருத்து.//

சேகர்.

எது உளறல்.

முடிந்தால் அந்த சிம்பொனியை வெளியிடலாமே

அது சரி

oratorioவை சிம்பொனி என்று ஏமாற்றி காசு பார்த்தது யார்

அது நேர்மையான செயலா

--

அவர் ஒரடோரியாவை சிம்பொனி என்று திட்டமிட்டு பொய் சொன்னாரா

அல்லது

ஒரடோரியா எது சிம்பொனி எதுவென்று தெரியாதா

விளக்க முடியுமா

--

புருனோ Bruno said...

//பதினைந்து வருடங்கள் கொடி கட்டிப் பறந்தார் ராஜா.. மறக்க வேண்டாம்..//

1992 - 2009 = 17 வருடம்
Still Not Out !!!

புருனோ Bruno said...

//உண்மைதான்.. இன்றைக்கும் ஆடியோ சிடிக்களிலும், டிவிடிக்களிலும் அதிகம் விற்பனையாவது ராஜாவின் பொற்காலப் பாடல்கள்தான்..//

அது மட்டுமல்ல

எம்.எஸ்.வியின் பாடல்களும், ரஹ்மானின் பாடல்களும் சேர்ந்து தான் விற்கிறது

--

Artists by reputed sales

1 billion records or more
Artist Country Period Genre Source
The Beatles United Kingdom 1960–1970 Pop / Rock [1][2][3]
Elvis Presley U.S. 1953–1977 Rock / Pop [4][5][6]
[edit]500 million to 999 million records
Artist Country Period Genre Source
Bing Crosby U.S. 1926–1977 Jazz [7][8]
Michael Jackson U.S. 1967–present Pop / R&B [9][10][11]
[edit]200 million to 499 million records
Artist Country Period Genre Source
AC/DC Australia 1973–present Hard rock [12]
A. R. Rahman India 1992–present Film Score / World [13]
ABBA Sweden 1972–1982 Pop / Disco [14][15][16]
Alla Pugacheva Russia 1965–present Pop [17]
Bee Gees United Kingdom 1958–2003 Pop / Disco [18]
Bob Marley Jamaica 1962–1981 Reggae [19]
Celine Dion Canada 1981–present Pop [20]
Cliff Richard United Kingdom 1958–present Pop [21]
The Drifters U.S. 1953–present R&B [22]
Elton John United Kingdom 1964–present Pop / Rock [23]
Herbert von Karajan Austria 1938–1989 Classical [24]
Julio Iglesias Spain 1968–present Latin [25]
Led Zeppelin United Kingdom 1968–1980 Hard rock / Blues rock [26]
Madonna U.S. 1982–present Pop / Dance [27][28]
Mariah Carey U.S. 1990–present Pop / R&B [29][30]
Nana Mouskouri Greece - France 1958–2008 Pop folk [31]
Pink Floyd United Kingdom 1964–1994 Psychedelic rock [32][33]
The Rolling Stones United Kingdom 1962–present Rock / Blues rock [34]
Tino Rossi France 1929–1982 Swing [35]
Wei Wei China 1986–present Pop [36]

புருனோ Bruno said...

//கமல் ஆஸ்கார் விருதை தரம் குறைத்து பேசவில்லை.. அதுவே உச்சபட்ச தரம் என்று சொல்லாதீர்கள் என்றார்.. அது ஆங்கில மொழியில் ஒரு விருதுதானே.. அவர் அனுப்பியது சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பதக்கத்தை பெறுவதற்காக.. இதில் என்ன தவறு இருக்கு..? //

சரி

உச்சபட்ச தரம் என்னவென்று அவர் கூறினாரா

புருனோ Bruno said...

//யார் சிம்பொனி அமைக்கவில்லை..? யார் பிராடு பசங்கள்..?//

சிம்பொனி அமைக்காமல் அதை வெளியிடாமல், ஏன் இசைக்குறிப்புகளை கூட வெளியிடாமல் அமைத்தாக ஊரை ஏமாற்றுபவர்கள் தான் பிராடு பசங்கள் :) :)

சிம்பொனி இசையை அல்லது இசைக்குறிப்பை வெளியிடுபவர்கள் நிஜ கலைஞர்கள்

புருனோ Bruno said...

//யார் சிம்பொனி அமைக்கவில்லை..? ஏன் இந்த காழ்ப்புணர்வு..? உங்களிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை..//

இது காழ்ப்புணர்வு அல்ல

ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தவுடன் வரும் எரிச்சல்

புருனோ Bruno said...

//யாராலும் மறுக்க முடியாத வாதம்..
ஆக மொத்தம் ஆங்கில மொழிக்காக கிடைக்கின்ற விருது இது..
இதில் கலந்து கொள்ளும் பாக்கியம் ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது..
கிடைத்த வாய்ப்பை ரஹ்மான் தவறவிடவில்லை..
அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதன்படி செய்து அவர்களை திருப்திபடுத்தியுள்ளார்.
அந்தத் திருப்திக்குத்தான் இந்த பரிசு..

முடிந்தது கதை.//

ஆங்கிலேயர்கள் அழைக்கும் அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது என்பதையும் எவ்வவோ இசையமைப்பாளர்கள் இருக்கும் போது பணியாற்ற இவரை அழைத்தார்கள் என்பதையும் மீண்டும் பதிகிறேன்

புருனோ Bruno said...

//யார் வயிறு எரிவது..? நிச்சயம் நானல்ல..//

உங்களை கூறவில்லை

புருனோ Bruno said...

//அந்த வட்டம் நமக்குத் தேவையில்லை என்பவர்கள்தான் நமது நாட்டில் அதிகம் பேர்.

நமது வட்டம் அதனைவிட மேன்மையானது.. பெருமைமிக்கது.. //
இதற்கு பெயர் என்னவென்றால் “சீச்சி இந்த பழம் புளிக்கும் !!!


//இதில் முதன்மையானவர்களே வரும் காலத்திலும் நம்மோடு இருப்பார்கள்..//
இதில் முதன்மையானவராக அவர்கள் கருதுபவரைத்தான் அடுத்த கட்டத்திற்கு அழைக்கிறார்கள்

புருனோ Bruno said...

//அவருக்கு ரஹ்மான் இசை கேட்கும் வாய்ப்பும், அவரிடம் தன் இசையை கொண்டு போய் சேர்க்கும் வித்தையும் ரஹ்மானுக்குத் தெரிந்திருக்கிறது. செய்திருக்கிறார். மற்றவர்கள் அது தேவையில்லை என்று நினைத்திருப்பார்கள்..//

சீச்சி இந்த பழம் புளிக்கும் !!!

//ஆனால் நிலைத்து நிற்கப் போவது..

எந்த இசை என்று தெரியுமா..?//
இதற்கு காலம் பதில் சொல்லும்

புருனோ Bruno said...

//ரெண்டு பேருக்குமே என்னாச்சுன்னு தெரியலை.. ஏறுக்கு மாறாவே பேசிக்கிட்டிருக்காங்க.. //

??

//இதென்ன சேம் சைடு கோலா..?//

???

//கதை விட வேண்டாம்.. வெறுப்பின் உச்சக்கட்டம்தான் நீங்கள் எழுதியிருக்கும் முட்டாள்தனமான அந்த ஓவியக் கதை..//
அது ஏன் முட்டாள்தனம் என்று கூற முடியுமா

ஒரு மோசடியை வெளிக்கொண்டுவருவது வெறுப்பா, அல்லது சமூக அக்கறையா

புருனோ Bruno said...

//இளையராஜாவின் சிம்பொனி பற்றிய என் தக‌வல் புருனோவின் மரமன்டைக்கு //

ஏற வில்லை

அந்த இசையை கேட்டும் வரை அல்லது அந்த இசைக்குறிப்பை பார்ர்கும் வரை என் மரமண்டைக்கு ஏறாது

போதுமா

புருனோ Bruno said...

//ஸார் எப்பவும் இப்படி பேசக்கூடியவர் அல்ல..

இந்த விஷயத்தில் ஏன் இவ்ளோ ஆத்திரம், கோபம் என்று எனக்குத் தெரியவில்லை..//

ஏமாற்றப்பட்ட ஒரு ரசிகனின் கோபம் சார்

நான் பெரிதும் மதிக்கும் ஒரு இசைக்கலைஞன் இது போல் 6 கோடி தமிழர்களை ”மிளகாய் அரைத்திருக்கிறார்” என்ற கோபம் தான்

புருனோ Bruno said...

//ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
//

ரோஜா, திருடா திருடா, புதிய முகம், என்று ரஹ்மான் கலக்கிக்கொண்டிருந்த போது ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறினார்

“கிரிக்கெட் ஆட்டத்தின் போது யாராவது கவர்ச்சி நடிகை வந்தால் எல்லாரும் அவரைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அது சிறிது நேரம் தான். மீண்டும் ஆட்டம் தொடரும்”

அப்படி கூறியவருக்கு எவ்வளவு பெரிய மனசு ;)

G.Ragavan said...

இளையராஜாவின் திறமையைக் குறைத்து நினைக்கக்கூட முடியாது. ஆத்திரம் அறிவுக்குக் கெடுதிதான். ஆனால் அதை எல்லா பொழுதுகளிலும் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகந்தான்.

ரகுமானின் வரவிற்கு வேண்டுமானால் இளையராஜாவின் ஆத்திரம் உதவியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதற்குப் பிறகு ரகுமானின் உழைப்புதான்.

ரகுமானைப் பயன்படுத்தும் முன் மரகதமணியைப் பயன்படுத்தினாரே பாலாச்சந்தர். பாடல்கள் சிறப்பாகவே இருந்தனவே. ஆக... நல்ல பாடல் என்பதையும் மீறி மாற்றம் கொண்டு வருதல் என்ற காரணமே ரகுமானின் வெற்றிக்குக் காரணம். உழைப்பு. பொறுமை. நல்ல தொடர்புகள்.

இளையராஜா ஆஸ்கார் விருது பெறவில்லை என்பதற்கு...அவருடைய இசை சரியான முறையில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே காரணம்.

கானா பிரபா said...

//ராஜா கே.பி.யை வாழ வைத்தாரா..? அல்லது கே.பி. ராஜாவிடம் இருந்து இசையைக் கறந்தாரா என்று நாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. அது ஒரு கூட்டு முயற்சி.. //


இதை தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்றேன் அண்ணாச்சி, முன்கோவம், பொறாமை, எரிச்சல் வராத மனிதப் பிறவிகளே கிடையாது. ராஜாவுக்கு மாற்றீடு தேடி பால்சந்தரும், மணியும் போயிருக்கலாம், அதுக்கு அப்புறம் ரஹ்மான் வளர்ந்ததெல்லாம் அவரின் தனித்திறமை, நல்ல இயக்குனர், கவிஞர் கூட்டு. ராஜாவுக்கு பின்னாளில் இந்தமாதிரி கூட்டோ அல்லது அவரின் திறமையை எடுத்துச் செல்ல முறையான ஆட்களோ இல்லாதது பெரும் குறை. எனவே உங்க தலைப்பில் இருப்பது பொருள் குற்றமே.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Even in an interview today, Rahman has stated that he rated Ilayaraja's music more than his two Oscars. Thats Rahman for you!!!
Jai Ho!!! Jai Hind!!!//

அப்பாடா.. ஒத்துக்கிட்டாரே.. இதுவே போதும்..

பிரச்சினை முடிஞ்சது.. கூச்சல், கூப்பாட்டையெல்லாம் நிறுத்துங்கப்பா..

உண்மைத்தமிழன் said...

புருனோ ஸார்..

பதிலுக்குப் பதில், வரிக்கு வரி உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை..

நீங்கள் ரஹ்மான் ஆதரவாளர் என்பது நன்கு புரிகிறது.

இளையராஜா இப்போது உங்களது மானசீக எதிரி என்பதும் நன்கு புரிகிறது. இந்த நேரத்தில் எப்படி சொன்னாலும் உங்களுக்கு இளையராஜா முட்டாள் போலத்தான் தெரியும்.. சுருக்கமாக ஒன்றே ஒன்று..

இளையராஜா படைத்த தமிழ் இசை சாதனையில் இதுவரையில் கால்வாசியைக்கூட ரஹ்மான் தொடவில்லை என்பதுதான் உண்மை.

அவர் மேற்கத்திய உலகத்துக்குள் குடிபுகுந்துவிட்டார். அது பிடித்தவர்களுக்கு இப்போது அவர் ஹீரோ..

என் வீட்டில் ரஹ்மானின் இசை கேஸட்டுகள் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.. அதில் ரோஜா, திருடா திருடா, புதிய முகம், பம்பாய், ஜென்டில்மேன், இந்தியன், காதலன், என்று சில படங்களின் பாடல்கள் இருக்கும்.. ஒன்றே ஒன்றுதான்..

ஆனால் ராஜாவின் இசைதான் கிட்டத்தட்ட 600 பாடல்கள் இருக்கின்றன.

தமிழ் இசை ரசிகர்களின் வீடுகளுக்கு படையெடுத்து பாருங்கள். அதுதான் இருக்கும்..

எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் மேற்கத்திய இசையை ரசிக்க முடியவில்லை. ரசிப்பவர்கள் ரசித்துக் கொள்ளுங்கள்.. நாங்கள் தடுக்கவில்லை..

ஆனால் இப்போது மேற்கத்தியத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களை சிறிய வயதில் தாலாட்டியது நானாக நானில்லை தாயே என்ற பாடல்தான் என்பதையும் அவர்கள் மறக்கக் கூடாது.. ஏற்றிவிட்ட ஏணியை குப்புறத் தள்ளுவது மனிதர்களுக்கு மிகவும் எளிதான விஷயம்.. மறந்தும் போவார்கள்.. ஆனால் காலம் மறக்காது..

இன்றைக்கும் இரவு நேரங்களில் அனைத்து எப்.எம். வானொலிகளிலும் ஒலிப்பது டி.எம்.எஸ். சுசிலா, மற்றும் இளையராஜாவின் ராக கானங்கள்தான்..

ரஹ்மானின் இசை அல்ல.. எது வாழ்க்கைக்கு தேவையாக இருக்கிறதோ, எது மனிதனுக்கு கடைசிக் காலம்வரையிலம் உடன் வருமோ அதுவே நிரந்தரம்.. சாஸ்வதம்..

போதும் நிறுத்திக் கொள்வோம் நம் சண்டையை..

இன்னொரு பதிவு போடுவேன் யாருடைய இசை தமிழில் சிறந்தது என்று அப்போது பேசுவோம்..

வருகைக்கும், பொறுமையான பின்னூட்டங்களுக்கும் நன்றி டாக்டர்..

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க.. நண்பா.//

நன்றி ஜாக்கி நண்பா.. ஏன் இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்ல..

சின்சியர் ஒர்க்கராயிட்டீங்களா..!

உண்மைத்தமிழன் said...

//G.Ragavan said...
இளையராஜாவின் திறமையைக் குறைத்து நினைக்கக்கூட முடியாது. ஆத்திரம் அறிவுக்குக் கெடுதிதான். ஆனால் அதை எல்லா பொழுதுகளிலும் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகந்தான்.
ரகுமானின் வரவிற்கு வேண்டுமானால் இளையராஜாவின் ஆத்திரம் உதவியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதற்குப் பிறகு ரகுமானின் உழைப்புதான்.//

ராகவன் ஸார்.. சத்தியமாக நான் இதைத்தான் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

ரஹ்மான் உருவானதற்கான சூழலை உருவாக்கியவர் இளையராஜாதான் என்று..!

//ரகுமானைப் பயன்படுத்தும் முன் மரகதமணியைப் பயன்படுத்தினாரே பாலாச்சந்தர். பாடல்கள் சிறப்பாகவே இருந்தனவே. ஆக... நல்ல பாடல் என்பதையும் மீறி மாற்றம் கொண்டு வருதல் என்ற காரணமே ரகுமானின் வெற்றிக்குக் காரணம். உழைப்பு. பொறுமை. நல்ல தொடர்புகள்.//

நிச்சயம் உண்மை.. நான் மறுக்கவேயில்லை.. ரஹ்மானின் இந்த உயர்வுக்குக் காரணம் அவருடைய உழைப்புதான்..

//இளையராஜா ஆஸ்கார் விருது பெறவில்லை என்பதற்கு அவருடைய இசை சரியான முறையில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே காரணம்.//

முற்றிலும் ஆமோதிக்கிறேன்..

அந்தத் தகுதி அவருக்கு இல்லை என்பதுபோல் பலரும் பேசுவதுதான் வருத்தம் தருகிறது..

வருகைக்கு நன்றி ராகவன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///கானா பிரபா said...
//ராஜா கே.பி.யை வாழ வைத்தாரா..? அல்லது கே.பி. ராஜாவிடம் இருந்து இசையைக் கறந்தாரா என்று நாம் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. அது ஒரு கூட்டு முயற்சி.. //

இதைதான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்றேன் அண்ணாச்சி, முன்கோவம், பொறாமை, எரிச்சல் வராத மனிதப் பிறவிகளே கிடையாது. ராஜாவுக்கு மாற்றீடு தேடி பால்சந்தரும், மணியும் போயிருக்கலாம், அதுக்கு அப்புறம் ரஹ்மான் வளர்ந்ததெல்லாம் அவரின் தனித்திறமை, நல்ல இயக்குனர், கவிஞர் கூட்டு. ராஜாவுக்கு பின்னாளில் இந்த மாதிரி கூட்டோ அல்லது அவரின் திறமையை எடுத்துச் செல்ல முறையான ஆட்களோ இல்லாதது பெரும் குறை. எனவே உங்க தலைப்பில் இருப்பது பொருள் குற்றமே.///

நான் இதைத்தான் சொன்னேன்.. சொல்லி வருகிறேன்..

தலைப்பின் பொருளாக வருவது, ரஹ்மான் உருவாக காரணமான சூழலை உருவாக்கியது இளையராஜாதான் என்பதே..

அது நிச்சயம் மறுக்க முடியாத உண்மை கானா தம்பி..

தலைப்பில் எந்த பொருள் குற்றமும் இல்லை.. அதே போல் இதனால் நம்ம இளையராஜாவுக்கும் எந்த கெட்ட பெயரும் இல்லை..

K.R.அதியமான் said...

//எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் எல்லோருமே ட்ரெண்ட் செட்டர்கள், அவரவர் திறமை அவர்களிடம். ////

மிகவும் சரியான வார்த்தைகள்.

Test of time என்று சொல்வார்கள். 25ஆண்டுகளுக்கு முன் இசையமைக்கப்பட்ட பல பாடல்கள் இன்றும் உயிரோடு உள்ளன. ரஹ்மானின் பாடல்களில் எத்தனை இன்னும் 30 வருடம் கழித்து உயிரோடு இருக்கும் ? அதுதான் ஒரு மகத்தான கலைஞனுக்கு சரியான அடையாளம்.

2000 வருடம் முன்பு இயற்றப்பட்ட திருக்குறள் இன்றும் பரவலாக படிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட 'காவியங்கள்' பலவும் இன்று மறக்கப்பட்டன.

Time will prove the best of all.

K.R.அதியமான் said...

Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.

K.R.அதியமான் said...

sorry for the last comment. misplaced here.

வால்பையன் said...

//Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது. //


ஹா ஹா ஹா

ஒன்னுமில்ல சும்மா லூஸூ மாதிரி சிரிச்சு பார்த்தேன், நல்லா தான் இருக்குது.

நீங்க எந்த மெக்கானிக் செட்ல ”டைட்” பண்ணிக்கிறீங்க. அட்ரஸ் கொடுத்தா நானும் பண்ணிகிவேன்ல

malar said...

கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் .

அதில் பிறந்தது தான் ar rahuman என்ற இசை புயல் .

கர்வம் ,தலை கனம் ,கோபம் இவைகள் மனிதனை கீழை தள்ளுமை தவிர உயர்த்தாது .

இதல்லாம் இல்லாத மனிதர் ரொம்ப குறைவே.நீங்க ஊஸியை மட்டும் வைதுவிடீகள்

மீதியை பின்னூட்டம் எழுதுபவர்கள் பார்த் துகொள்ளட்டும் என்று .

பிள்ளைகளுக்கு பரிச்சை காரணமாக பினூட்டம் எழுத பிந்திவிட்டது .

திரட்டியில் இணைவது எப்படி?

Anonymous said...

தமிழ்மனம் விருதுகள் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்!! மேலும் மேலும் விருது வாங்குங்க அண்ணே!!

Anonymous said...

Can you please tell me, how the directors(KB, Mani, etc), who wanted IR to be at their beck and call, wait for years for this ARR?. Now dont tell me it is because of his "Talent". ARR is a talented "SOUND MAKER" not a composer(my opinion).
Can you deny this fact? All the people who broke away from IR wanted him to be at their feet, literally?. Tell me why they dont compel ARR? Why he is allowed years to compose a couple of songs?
Can ARR match the speed at which IR worked? If IR had taken such timing for his films, He would still be at his peak, would you accept?

Anonymous said...

புரூனோ?? திருவாகச சிம்பொனி cd வாங்கினாள் அதில் ஒரு vcd இருக்கும் ;அதில் எல்லா தக‌வளும் உண்டு பாரு புரியும்.ஒரடோரியா எது சிம்பொனி எதுவென்று .

மடல்காரன்_MadalKaran said...

//ஆஸ்காரை வைத்து இந்தியாவுக்கு சிறப்பு, ஆசியாவுக்கு சிறப்பு, தமிழ் திரையுலகுக்கு மகுடம் என்பது வருந்தத்தக்க கருத்துக்கள். இந்த விருதின் மீது உள்ள மோகம் அர்த்தமற்ற புரிதல் காரணமாக எம்மை நாமே அவமானப்படுத்துவதாகவே உணர்கின்றேன்.


இந்தியாவில் இசைச் செல்வம் கொட்டிக்கிடக்கின்றது. அதற்கு இந்திய மக்களின் அங்கிகராம் தாரளமாக இருக்கின்றது. ஏனைய நாட்டினரின் இசையை உணரும் தன்மை இந்தியருக்கு உள்ளது. எனவே முடிந்தால் அமரிக்க மற்றும் ஏனைய சமூகங்களின் இசை அதிகமானவர்களை ரசிக்கச் செய்தால் இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.//

நெத்தியடி.. உண்மையும் கூட..

இசைக்கு மொழி இல்லை உண்மைத் தமிழன். எனக்கு கூட ஆங்கில வரிகள் கொண்ட பாடல் புரியாது ஆனால் சில மெட்டுகள் இனிமையாக இருக்கும். கேட்டுப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. பெயர் சொல்லும் அளவுக்கு எனக்கு ஆங்கில பாடல் ஞானம் இல்லை.. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்கள் ஆங்கில பாடலை கேளுங்கள்

Anonymous said...

Do you think Rahman's music is 100% original? No one's music is.

http://www.youtube.com/watch?v=zfFxWrc5lPc

This song/soundtrack from SDM resembles 'Choli ke peeche kya hai'. God blessed him and thats why this music went till Oscar. Simply because it got Oscar do not say it is the best music ever.

மணிகண்டன் said...

உண்மை தமிழன் சார்,

உங்க தலைப்ப பாத்து ரொம்பவே சிரிச்சேன் ! இந்த மாதிரி தலைப்பு வச்சு என்ன தான் உள்ளார எழுதி இருந்தாலும் எனக்கு விடாம சிரிப்பு தான் வருது.

இளையராஜா மணிரத்னம் கிட்ட கோவப்படறதுக்கு ஜஸ்ட் முன்னாடி அவர் மேல யாரோ காபி கொட்டிட்டாங்களாம். அதுனால தான் அவர் கோவம் மணிரத்னம் மேல திரும்பிச்சாம். அந்த காபி கொட்டினவங்க பேரு சசிரேகா. அவங்க ஒரு துணை நடிகையாம். அதுனால ரஹ்மான் ஆஸ்கார்க்கு காரணம் துணைநடிகை சசிரேகான்னு ஒரு பதிவு எழுதாலாம்ன்னு நினைச்சி பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ஸ்டாப் பண்ணிட்டு உங்க கிட்ட பின்னூட்டமா போடறேன். இதே மாதிரி உங்களுக்கும் தோணி இருந்தா நல்லா இருந்து இருக்கும். ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் அரிது தான். அத தான் நீங்க சுட்டிக்காட்டி இருக்கீங்க.
ஆனாலும் இந்த சமயத்துல இப்படி ஒரு தலைப்பு போட்டு எழுதறது ??

Anonymous said...

Boss...Try to do some groundwork before posting. Rahman himself has said that the song "Ringa Ringa" was inspired from Choli ke peeche.. It was done to capture the mood of nineties and nothing more. It was done with Subhash Ghai's consent. What more do you need?

If you are still not satisfied, kindly reply. I'l give you links for songs which the great Ilayaraja copied.

Anonymous said...

Arivazhagan sir, Singam 1,2 kuttythaan podum... Vera oru jandhuthaan neraiya kuttinga podum...

Anonymous said...

Font problem with this page. Pls specify the font to be used for this blog. I miss to taste the nice article. Pls help me.
Thanks,

Anonymous said...

Rahman has stated that he rated Ilayaraja's music more than his two Oscars. Thats Rahman for you!!!
Jai Ho!!! Jai Hind!!!//

அப்பாடா.. ஒத்துக்கிட்டாரே.. இதுவே போதும்..

பிரச்சினை முடிஞ்சது.. கூச்சல், கூப்பாட்டையெல்லாம் நிறுத்துங்கப்பா..

Rahman & Raja did not make it an issue but we, the fans spillout our likes & dislikes in a political manner.

You see What Rahman said about Ilayaraja?!. What a greatness words from the heart of love.
Apart from his talent, this humbleness takes him to heights.

I expect all our "Greats" whether it be Raja or Vairamuthu, the same.

I second Br. Selvakumar's blog views. Good Post

It is a good reply for this post.

பழூர் கார்த்தி said...

ஏங்க உண்மைத் தமிழன், உங்களைப் பத்தி நாமக்கல் சிபி சொன்னது உண்மைதாங்க, ஒரு இடுகையை இம்புட்டு நீளமாவா போடறது??? ஏய்யா, ஒரு தொடர்கதை நாவல் படிச்ச மாதிரியில்ல இருக்கு....

<<>>

பதிவு நல்லா இருந்தது.. ஆனாலும் ரகுமான் அந்த சந்தர்ப்பத்தில் இல்லாவிட்டால் வெறொரு சந்தர்ப்பத்தில் வெளிவந்திருப்பார்..

<<>>

இருவருடைய இசையுமே கொண்டாடப் பட வேண்டிய ஒன்றே
!!

உண்மைத்தமிழன் said...

///K.R.அதியமான் said...
//எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் எல்லோருமே ட்ரெண்ட் செட்டர்கள், அவரவர் திறமை அவர்களிடம்.//
மிகவும் சரியான வார்த்தைகள்.
Test of time என்று சொல்வார்கள். 25ஆண்டுகளுக்கு முன் இசையமைக்கப்பட்ட பல பாடல்கள் இன்றும் உயிரோடு உள்ளன. ரஹ்மானின் பாடல்களில் எத்தனை இன்னும் 30 வருடம் கழித்து உயிரோடு இருக்கும்? அதுதான் ஒரு மகத்தான கலைஞனுக்கு சரியான அடையாளம்.//

இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு வழிமொழிகிறேன்..

//2000 வருடம் முன்பு இயற்றப்பட்ட திருக்குறள் இன்றும் பரவலாக படிக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட 'காவியங்கள்' பலவும் இன்று மறக்கப்பட்டன.
Time will prove the best of all.//

உண்மைதான்.. நீடித்து நிலைக்கின்றவைகள் பெயர் சொல்லும்.. சரித்திரத்தில் இடம் பெறும். அவைகள்தான் மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.//

என்ன வேண்ணாலும் பதிவு தொடர்பா எழுதுங்க.. ஆனா பதிவர்களின் அறிவு சம்பந்தமா எழுதாதீங்க..

எடுத்த எடுப்பிலேயே லூசுத்தனமான்னு எழுதினா எப்படி?

வன்மையாகக் கண்டிக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
sorry for the last comment. misplaced here.//

இட்ஸ் ஓகே..

ஒரு நினைப்புல இருக்கணுமாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது. //

ஹா ஹா ஹா ஒன்னுமில்ல சும்மா லூஸூ மாதிரி சிரிச்சு பார்த்தேன், நல்லாதான் இருக்குது. நீங்க எந்த மெக்கானிக் செட்ல ”டைட்” பண்ணிக்கிறீங்க. அட்ரஸ் கொடுத்தா நானும் பண்ணிகிவேன்ல.//

அந்தப் பதிலை அனுமதித்ததால் இதையும் அனுமதிக்க வேண்டியுள்ளது.

நல்ல பதில்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதில் பிறந்ததுதான் ar rahuman என்ற இசை புயல்.//

உண்மை. அந்தக் கலகத்தைத் துவக்கி வைத்தது இளையராஜா என்கிற உண்மையைத்தான் இங்கே சொல்லியிருக்கிறேன் மலர்..

//கர்வம், தலை கனம், கோபம் இவைகள் மனிதனை கீழை தள்ளுமை தவிர உயர்த்தாது .
இதல்லாம் இல்லாத மனிதர் ரொம்ப குறைவே. நீங்க ஊஸியை மட்டும் வைதுவிடீகள். மீதியை பின்னூட்டம் எழுதுபவர்கள் பார்த்து கொள்ளட்டும் என்று.//

அது இந்த அளவுக்கு தனி மனித வெறுப்பாக செல்லும் என்று நான் நினைக்கவில்லை.. வருத்தப்படுகிறேன்..

//பிள்ளைகளுக்கு பரிச்சை காரணமாக பினூட்டம் எழுத பிந்திவிட்டது.//

ஒண்ணும் தப்பில்லை.. எது முக்கியமோ அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். இணையம் எங்கேயும் போகாது.. எப்போது வேண்டுமானாலும் வரலாம்..

//திரட்டியில் இணைவது எப்படி?//

ஒவ்வொரு திரட்டியிலும் இதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

எனது பதிவில் வலதுபுறத்தில் கீழே பார்த்துக் கொண்டே வந்தால் பல திரட்டிகளின் முகவரிகள் இருக்கும். அது ஒவ்வொன்றையும் கிளிக் செய்து அதனைப் படித்து அதன்படி செய்யவும்..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
தமிழ்மனம் விருதுகள் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்!! மேலும் மேலும் விருது வாங்குங்க அண்ணே!!//

மிக்க நன்றி புவனேஷ்..

உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன.

உண்மைத்தமிழன் said...

//Arivazhagan said...
Can you please tell me, how the directors(KB, Mani, etc), who wanted IR to be at their beck and call, wait for years for this ARR?. Now dont tell me it is because of his "Talent". ARR is a talented "SOUND MAKER" not a composer(my opinion).//

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அறிவழகன்..?

//Can you deny this fact? All the people who broke away from IR wanted him to be at their feet, literally?. Tell me why they dont compel ARR? Why he is allowed years to compose a couple of songs?
Can ARR match the speed at which IR worked? If IR had taken such timing for his films, He would still be at his peak, would you accept?//

இப்படி கேள்வியா கேட்டு்ட்டிருந்தா எப்படி பதில் சொல்றது..?

ரஹ்மான் லேட் பண்றாருன்னா அது அவரோட ஸ்டைல்..

இளையராஜா 35 நிமிஷத்துல முடிக்கிறாருன்னு அது அவரோட ஸ்டைலு..

அவுட்புட் எப்படியிருக்குன்னு பாருங்க.. போதும்.. ரெண்டு பேருக்குமே போதுமான இளைஞர் பட்டாளம் இருக்கிறது.. அதுதான் அவர்களின் பலம்..

உண்மைத்தமிழன் said...

//segar said...
புரூனோ?? திருவாகச சிம்பொனி cd வாங்கினாள் அதில் ஒரு vcd இருக்கும்; அதில் எல்லா தக‌வளும் உண்டு பாரு புரியும். ஒரடோரியா எது சிம்பொனி எதுவென்று.//

தகவலுக்கு நன்றி சீகர்..

நானும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இது பற்றியத் தகவல்களைத் தேடி வருகிறேன்..

உண்மைத்தமிழன் said...

///மடல்காரன்_MadalKaran said...
//ஆஸ்காரை வைத்து இந்தியாவுக்கு சிறப்பு, ஆசியாவுக்கு சிறப்பு, தமிழ் திரையுலகுக்கு மகுடம் என்பது வருந்தத்தக்க கருத்துக்கள். இந்த விருதின் மீது உள்ள மோகம் அர்த்தமற்ற புரிதல் காரணமாக எம்மை நாமே அவமானப்படுத்துவதாகவே உணர்கின்றேன். இந்தியாவில் இசைச் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது. அதற்கு இந்திய மக்களின் அங்கிகராம் தாரளமாக இருக்கின்றது. ஏனைய நாட்டினரின் இசையை உணரும் தன்மை இந்தியருக்கு உள்ளது. எனவே முடிந்தால் அமரிக்க மற்றும் ஏனைய சமூகங்களின் இசை அதிகமானவர்களை ரசிக்கச் செய்தால் இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.//

நெத்தியடி.. உண்மையும் கூட..
இசைக்கு மொழி இல்லை உண்மைத்தமிழன். எனக்கு கூட ஆங்கில வரிகள் கொண்ட பாடல் புரியாது. ஆனால் சில மெட்டுகள் இனிமையாக இருக்கும். கேட்டுப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. பெயர் சொல்லும் அளவுக்கு எனக்கு ஆங்கில பாடல் ஞானம் இல்லை.. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது நீங்கள் ஆங்கில பாடலை கேளுங்கள்.///

நிச்சயம் கேட்கிறேன்..

ஒரே ஒரு முறை தென்னாப்பிரிக்கா திரைப்படம் ஒன்றில் பாடல் காட்சி ஒன்று வந்தது. அதில் ஒலித்த ஆங்கிலப் பாடல் கூடவே எழுந்து ஆட வேண்டும் போல் தோன்றியது.. இப்போது நினைவுக்கு வருகிறது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Do you think Rahman's music is 100% original? No one's music is.
http://www.youtube.com/watch?v=zfFxWrc5lPc
This song/soundtrack from SDM resembles 'Choli ke peeche kya hai'. God blessed him and thats why this music went till Oscar. Simply because it got Oscar do not say it is the best music ever.//

அனைவரின் மீதும்தான் குற்றச்சாட்டு உள்ளது..

அதனுடைய பாதிப்பு இருக்கலாம். முழுக்க, முழுக்க காப்பியாக இருக்காது என்றே நம்புகிறேன்..

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
உண்மை தமிழன் சார், உங்க தலைப்ப பாத்து ரொம்பவே சிரிச்சேன்! இந்த மாதிரி தலைப்பு வச்சு என்னதான் உள்ளார எழுதி இருந்தாலும் எனக்கு விடாம சிரிப்புதான் வருது.//

எனக்கும் சிரிப்பு வருது..

//இளையராஜா மணிரத்னம்கிட்ட கோவப்படறதுக்கு ஜஸ்ட் முன்னாடி அவர் மேல யாரோ காபி கொட்டிட்டாங்களாம். அதுனாலதான் அவர் கோவம் மணிரத்னம் மேல திரும்பிச்சாம். அந்த காபி கொட்டினவங்க பேரு சசிரேகா. அவங்க ஒரு துணை நடிகையாம். அதுனால ரஹ்மான் ஆஸ்கார்க்கு காரணம் துணை நடிகை சசிரேகான்னு ஒரு பதிவு எழுதாலாம்ன்னு நினைச்சி பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ஸ்டாப் பண்ணிட்டு உங்ககிட்ட பின்னூட்டமா போடறேன். இதே மாதிரி உங்களுக்கும் தோணி இருந்தா நல்லா இருந்து இருக்கும். ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் அரிதுதான். அததான் நீங்க சுட்டிக் காட்டி இருக்கீங்க. ஆனாலும் இந்த சமயத்துல இப்படி ஒரு தலைப்பு போட்டு எழுதறது??//

அது, அதை, அந்தந்த நேரத்திலேயே சொல்லிவிட வேண்டும். அதுதான் பொருத்தமானது..

நேரங்கெட்ட நேரத்துல எதையுமே செய்யவும் கூடாது.. பேசவும் கூடாது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Boss... Try to do some groundwork before posting. Rahman himself has said that the song "Ringa Ringa" was inspired from Choli ke peeche.. It was done to capture the mood of nineties and nothing more. It was done with Subhash Ghai's consent. What more do you need? If you are still not satisfied, kindly reply. I'l give you links for songs which the great Ilayaraja copied.//

போச்சுடா ஆரம்பிச்சுட்டீங்களா.. விட்ருங்கப்பா கண்ணுகளா..

அவரவர்க்கு அவரவர்க்கு பிடித்தமான இசை பெஸ்ட்டாத்தான் தெரியும்.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.. மோதல் வேண்டாம்..

benza said...

ராவணன் ஓர் அறிவில் இசையில் சிறந்தவர் - - - அவருக்கு எப்படி இறைவன் ஒன்று என்பது
தெரியாது குறுகிய வட்டத்தில் நின்று தடுமாறுகிறார் - - - சமயம் மாறுவது தனிமனித விருப்பம் - - - அறிவு தெளிந்தது மாறினான் - - - நம்பிக்கை இருந்தது மாறவில்லை - - - அவ்வளவே - - - பதிவின் நோக்கத்துக்கும் பலரது கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை - - - பிற பாஷை தெரியாதவன் தெரிந்தவனை பார்த்து பொறாண்மை கொள்ளவது போல உள்ளது - - - பிறருடன் பழகி பிறரது கருத்துகளை உரசி பார்த்தவனது பார்வை இந்த கிணத்து தவளைகளுக்கு விளங்காது உனா தான அண்ணா !
உங்களது Blog க்கு பெருமை தான் !
[[[ raja said...
sir,i want to type in tamil, can u pls tell me how?
வியாழன், பிப்ரவரி 26, 2009 காலை 10:29:௦௦ ]]]
இவருக்கு Google Indic என்று வழியை காட்டி விடுங்களேன் ப்ளீஸ்.
முன்பு நானும் இப்படி அங்கலாய்தது ஞாபகம்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Arivazhagan sir, Singam 1, 2 kuttythaan podum... Vera oru jandhuthaan neraiya kuttinga podum//

போச்சுடா.. இப்படியெல்லாம் ஒரு உதாரணம் தேவையா..? உங்களுக்குத்தான அசிங்கம். யோசிங்கப்பா..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Font problem with this page. Pls specify the font to be used for this blog. I miss to taste the nice article. Pls help me.
Thanks//

இது யூனிகோடில்தான் டைப் செய்யப்படுகிறது.. நிச்சயம் தெரியும்..

இல்லாவிடில் உங்களது கணினியின் அமைப்பில்தான் ஏதாவது பிரச்சினையாக இருக்கும்.

எதற்கும் NHM Writer, and NHM Converter இது இரண்டையும் இன்ஸ்ட்டால் செய்துவிட்டு சிஸ்டத்தை மீண்டும் பூட் செய்து பாருங்கள்..

பிரச்சினை தீர்ந்தாலும் தீரலாம்..

உண்மைத்தமிழன் said...

//Anbu said...
Rahman has stated that he rated Ilayaraja's music more than his two Oscars. Thats Rahman for you!!!
Jai Ho!!! Jai Hind!!!//
அப்பாடா.. ஒத்துக்கிட்டாரே.. இதுவே போதும்.. பிரச்சினை முடிஞ்சது.. கூச்சல், கூப்பாட்டையெல்லாம் நிறுத்துங்கப்பா..//

இதைத்தான் நானும் அப்பவே சொன்னேன்..

//Rahman & Raja did not make it an issue but we, the fans spillout our likes & dislikes in a political manner. You see What Rahman said about Ilayaraja?!. What a greatness words from the heart of love. Apart from his talent, this humbleness takes him to heights. I expect all our "Greats" whether it be Raja or Vairamuthu, the same. I second Br. Selvakumar's blog views. Good Post
It is a good reply for this post.//

ரஹ்மானின் அடக்கமான வார்த்தைகள் அவருக்கு என்றென்றைக்கும் பெருமை சேர்க்கப் போகிறது..

உண்மைத்தமிழன் said...

//பழூர் கார்த்தி said...
ஏங்க உண்மைத் தமிழன், உங்களைப் பத்தி நாமக்கல் சிபி சொன்னது உண்மைதாங்க, ஒரு இடுகையை இம்புட்டு நீளமாவா போடறது??? ஏய்யா, ஒரு தொடர்கதை நாவல் படிச்ச மாதிரியில்ல இருக்கு....//

அந்த எபெக்ட்டுக்காகத்தான எழுதறது..!

//பதிவு நல்லா இருந்தது.. ஆனாலும் ரகுமான் அந்த சந்தர்ப்பத்தில் இல்லாவிட்டால் வெறொரு சந்தர்ப்பத்தில் வெளிவந்திருப்பார்..//

வெளிவந்திருப்பார்.. ரோஜா மாதிரியான கதை அப்போது அவருக்கு சிக்கியிருக்குமா என்றுதான் யோசிக்கிறேன்..

//இருவருடைய இசையுமே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே.//

மறுக்க முடியாத உண்மை கார்த்தி..

இதுதான் முதல் வருகைன்னு நினைக்கிறேன்..

மிக்க நன்றி..

வாழ்க வளமுடன்..

K.R.அதியமான் said...

இதையும் படித்து சிரிங்க மக்கா :

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html

Thursday February 26, 2009

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்


சேதுபதி அருணாசலம்

K.R.அதியமான் said...

Unmai Tamilan Ayya,

வால்பையன் எம் நண்பர் தாம். நேரில் பழகியுள்ளோம்.
அவரை உரிமையோடு லூஸுப்பையன் என்றும் அழைக்கிறேன்.
ப‌ல‌ நேர‌ங்க‌ளில் அப்ப‌டி ஒரு பிர‌மையை ஏற்ப‌டுத்தும்
திற‌மை அவ‌ரிட‌ம் உண்டு.

அது இருக்கட்டும், இந்த‌ அதியமான் ஜி எங்க‌ பிடிச்சீங்க‌ ?
வெறும் அதிய‌மானே போதுமே. என்ன‌ இருந்தாலும் நான்
உங்க‌ள‌விட‌ சின்ன‌வ‌ன்தானே !!

Anonymous said...

It is clear that you are not concerned about the end product of any individual. We have to judge the end

product only and not the person's behaviour and his personal likings.

For eg. Super star is so humble and good human being, but we have to rate him based on his product. His

latest kuselan was failure. If you are judging based on his personality, then kuselan have to be sucess.

Don't talk about the product that was not yet released. Talk about the products that were released. If we

compare the released products of both IR and ARR, then IR is far far better than ARR(You have to compare both

songs and background score).

DR Bruno,
Tell me one product from ARR, which is better than IR.

Big directors are moving out of IR, because of misunderstanding and IR may be costlier than ARR. Why

Balachandar, Manirathnam are not using the Big stars of Tamil cinema? Do you know what mani rathnam pays

Rahman, Madhavan etc. There are lot of facts...So don't compare with just one issue.

Talk about what you see...And IR haven't marketed him that he has done symphony. His songs are there in

millions of heart. thats enough.

---Ashok

வெண்பூ said...

அருமையா சொல்லியிருக்கீங்க உண்மைத்தமிழன்.. ரஹ்மானின் இசையை விட‌ இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும்.. ஆனால் எனக்கு இளையராஜாவை விட ரஹ்மானையே அதிகம் பிடிக்கிறது.. புரியும் என்று நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
ராவணன் ஓர் அறிவில் இசையில் சிறந்தவர் - - - அவருக்கு எப்படி இறைவன் ஒன்று என்பது தெரியாது குறுகிய வட்டத்தில் நின்று தடுமாறுகிறார் - - - சமயம் மாறுவது தனி மனித விருப்பம் - - - அறிவு தெளிந்தது மாறினான் - - - நம்பிக்கை இருந்தது மாறவில்லை - - - அவ்வளவே - - - பதிவின் நோக்கத்துக்கும் பலரது கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை - - - பிற பாஷை தெரியாதவன், தெரிந்தவனை பார்த்து பொறாமை கொள்ளவது போல உள்ளது - - - பிறருடன் பழகி பிறரது கருத்துகளை உரசி பார்த்தவனது பார்வை இந்த கிணத்து தவளைகளுக்கு விளங்காது உனா தான அண்ணா!//

நன்றி பென்ஸ் ஸார்..

ஆனா மத்தவங்களை மாதிரி நீங்களும் ஆரம்பிச்சிங்கீன்னா எப்படி? உங்களுக்குப் போய் நான் அண்ணனா.. ஏற்கெனவே எனக்கு வயசான மாதிரி பீலிங்.. இதுல இது வேறய்யா..

[[[ raja said...
sir,i want to type in tamil, can u pls tell me how?
வியாழன், பிப்ரவரி 26, 2009 காலை 10:29:௦௦ ]]]
இவருக்கு Google Indic என்று வழியை காட்டி விடுங்களேன் ப்ளீஸ்.
முன்பு நானும் இப்படி அங்கலாய்தது ஞாபகம்.//

நன்றி பெனஸ் ஸார்..

நான் அவருக்கு NHM Softwares-ஐ கை காட்டியுள்ளேன்.. அதுவும் சிறந்ததுதான்..

உங்களுடைய ஆர்வத்திற்கு எனது சல்யூட்..

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
இதையும் படித்து சிரிங்க மக்கா :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html
Thursday February 26, 2009
சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்
சேதுபதி அருணாசலம்//

படித்தேன்..

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது.. சிரிக்க, சிரிக்க சிரிப்பு வருது..

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
Unmai Tamilan Ayya,
வால்பையன் எம் நண்பர்தாம். நேரில் பழகியுள்ளோம். அவரை உரிமையோடு லூஸுப்பையன் என்றும் அழைக்கிறேன். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் அப்ப‌டி ஒரு பிர‌மையை ஏற்ப‌டுத்தும் திற‌மை அவ‌ரிட‌ம் உண்டு.//

நல்லது.. கொஞ்சல் தேவைதான்.. அது இவ்வளவு வெட்டவெளிச்சமாகத் தேவையா என்றுதான் கேட்கிறேன்..

//அது இருக்கட்டும், இந்த‌ அதியமான்ஜி எங்க‌ பிடிச்சீங்க‌ ?
வெறும் அதிய‌மானே போதுமே. என்ன‌ இருந்தாலும் நான்
உங்க‌ள‌விட‌ சின்ன‌வ‌ன்தானே!!//

இப்படி எத்தனை பேருங்க கிளம்பியிருக்கீங்க..

நான் எல்லாருக்கும் தம்பிதான்.. எனக்கு வயசாகலை.. வயசாகலை.. சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
It is clear that you are not concerned about the end product of any individual. We have to judge the end product only and not the person's behaviour and his personal likings.
For eg. Super star is so humble and good human being, but we have to rate him based on his product. His latest kuselan was failure. If you are judging based on his personality, then kuselan have to be sucess. Don't talk about the product that was not yet released. Talk about the products that were released.//

நானும் ஒத்துக் கொள்கிறேன்..

//If we compare the released products of both IR and ARR, then IR is far far better than ARR(You have to compare both. songs and background score).//

எனது கருத்தும் இதுவே.. ரஹ்மானைவிட சாதனையாளர் இளையராஜாதான் என்பது உறுதி.

//DR Bruno,
Tell me one product from ARR, which is better than IR. Big directors are moving out of IR, because of misunderstanding and IR may be costlier than ARR. Why
Balachandar, Manirathnam are not using the Big stars of Tamil cinema? Do you know what manirathnam pays Rahman, Madhavan etc. There are lot of facts...So don't compare with just one issue.
Talk about what you see...And IR haven't marketed him that he has done symphony. His songs are there in millions of heart. thats enough.
---Ashok//

நன்றி அசோக்.

அவ்வளவு பெரிய சாதனையாளரின் தனிப்பட்ட குணத்தினால்தான் மிகச் சிறந்த இயக்குநர்கள் அவரைவிட்டுப் பிரிந்தார்கள். அதுதான் உண்மை. அதற்காக அவருடைய திறமையை இங்கு யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. மதிப்பிடவும் கூடாது..

உண்மைத்தமிழன் said...

//வெண்பூ said...
அருமையா சொல்லியிருக்கீங்க உண்மைத்தமிழன்.. ரஹ்மானின் இசையை விட‌ இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும்.. ஆனால் எனக்கு இளையராஜாவைவிட ரஹ்மானையே அதிகம் பிடிக்கிறது.. புரியும் என்று நினைக்கிறேன்..//

நன்கு புரிந்தது அண்ணன் வெண்பூ அவர்களே..

எனக்கும் உங்களது வயதில் இளையராஜாதான் பிடிக்கும். எம்.எஸ்.வி.யைப் பிடிக்காது.. ஆனால் இப்போது..

காலம் நம்மை பக்குவப்படுத்திய பின்பு எது நிரந்தரம், எது கொண்டாட்டம் என்பது புரிந்த பிறகு மனம் சமநிலைமைக்கு வரும்போது யதார்த்தம் தெரியும். அப்போது உங்கள் மனதில் இருப்பவரே நிரந்தரமானவர்..

அதுவரையில் காத்திருக்கிறேன்..

Anonymous said...

I dont know why!

For us to win (oscar!), we need god's blessings & talent, whereas they(oscar owners) need their talent alone.

I congradulate AR. I admire IR. every coin has 2 sides & so IR & AR.

just enjoy.

This title must've been selected for attracting readers. Its misleading.

Though its interesting in flow & content, looks bit biased towards unbeatable IR.

benza said...

[[[ Anonymous sun said...
I dont know why!
just enjoy.
This title must've been selected for attracting readers. Its misleading.
Though its interesting in flow & content, looks bit biased towards unbeatable IR.
Friday, March 13, 2009 12:46:00 AM ]]]

I am not so sure that the title is misleading ... true it attracts readers ... the very purpose of ''Journalism".
It made me and very many others to read it.
We need not congratulate or decry the writer as it falls within the ambit of ''Sound Journalism''.

If one had read without bias, in the first place, would have noticed the author saying ''NOT bitterly opposed to Ilayarajah but the ''Incident'' that provoked a young composer engaged in commercial advertising to be noticed''.

If all went well with Ilayarajah's relationship with Film Directors ''Time'' would have postponed AR Rahman to be noticed at that early stage of his career.

Noticed he would be but at a later stage of natural development.

Yes Sir, the flow and content is great but not at all biased towards or against Ilayarajah who is great by himself.

The author admits and accepts the greatness of Ilayarajah but focuses on the ''INCIDENTS'' that provoked Directors to look around for an alternative to Ilayarajah's inimitable talent.

That's about all Sir.

உண்மைத்தமிழன் said...

//sun said...
I dont know why! For us to win (oscar!), we need god's blessings & talent, whereas they(oscar owners) need their talent alone. I congradulate AR. I admire IR. every coin has 2 sides & so IR & AR.
just enjoy. This title must've been selected for attracting readers. Its misleading. Though its interesting in flow & content, looks bit biased towards unbeatable IR.//

இல்லை அனானி..

நான் நடந்ததைத்தான் சொன்னேன்..

எந்த ஒரு விஷயத்திற்கும் இன்னொரு பக்கம் ஒன்று உண்டு.. எந்தவொரு செயலுக்கு ஒரு உந்துசக்தி உண்டு. அது எந்தப் பக்கமிருந்து, யாரால் செலுத்தப்பட்டது என்பது சமயங்களில் வெற்றி பெற்றவருக்கும் தெரியாது. தூண்டிவிட்டவருக்கும் தெரியாது.. அனைத்து வெற்றிகளுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் விஷயம் இது..
அதனால்தான் எழுதினேன்..

தெரிந்தோ, தெரியாமலோ ரஹ்மானின் இசை திறமை வெளிப்பட இளையராஜாவும் ஒரு காரணமாகிவிட்டார் என்று..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[Anonymous sun said...
I dont know why! just enjoy.
This title must've been selected for attracting readers. Its misleading.
Though its interesting in flow & content, looks bit biased towards unbeatable IR. Friday, March 13, 2009 12:46:00 AM ]]]

I am not so sure that the title is misleading ... true it attracts readers ... the very purpose of ''Journalism". It made me and very many others to read it. We need not congratulate or decry the writer as it falls within the ambit of ''Sound Journalism''. If one had read without bias, in the first place, would have noticed the author saying ''NOT bitterly opposed to Ilayarajah but the ''Incident'' that provoked a young composer engaged in commercial advertising to be noticed''. If all went well with Ilayarajah's relationship with Film Directors ''Time'' would have postponed AR Rahman to be noticed at that early stage of his career. Noticed he would be but at a later stage of natural development. Yes Sir, the flow and content is great but not at all biased towards or against Ilayarajah who is great by himself. The author admits and accepts the greatness of Ilayarajah but focuses on the ''INCIDENTS'' that provoked Directors to look around for an alternative to Ilayarajah's inimitable talent. That's about all Sir.//

பென்ஸ் ஸார்

மிக்க நன்றி.. மிக்க நன்றி.

எங்க கொஞ்ச நாளா காணோம்..? எந்தப் பதிவு போட்டாலும் இப்பல்லாம் மொதல்ல உங்களைத்தான் தேடுறேன்.. அந்தளவுக்கு என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க..

இங்கே எழுதியுள்ள கருத்துக் கோர்வைக்கு எனது நன்றிகள் ஸார்..

நான் இளையராஜாவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டு எழுதவில்லை.. நடந்த சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்..

கிட்டத்தட்ட 175 பின்னூட்டங்களுக்குப் பின்னும் இது புரியாமல் இருப்பதை நான் என்னவென்று சொல்வது..?!

benza said...

[[[ நான் இளையராஜாவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டு எழுதவில்லை... நடந்த சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்...
கிட்டத்தட்ட 175 பின்னூட்டங்களுக்குப் பின்னும் இது புரியாமல் இருப்பதை நான் என்னவென்று சொல்வது...?! ]]]

எதிலும் ஒரு நன்மை இருக்கு என்றார்கள் பெரியோர் --- இதில என்னன்னா --- மறுப்பும் விளக்கமும் எழுதுறோமில --- அந்த இன்பம் தான் --- சில பிள்ளைங்க டகின்னு பிடிப்பாங்க --- சிலதுக்கு அடிகிமேல அடியடிச்சி திரும்ப
திரும்ப சொல்லணுங்க --- அப்பிடியும் ஏறாடிகி விட்டுறோனுங்க !
இந்த ellipsis போடும் போது மூணு குத்தா போட்டா அழகா இருக்குமே சார் !

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...

[[[ நான் இளையராஜாவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டு எழுதவில்லை... நடந்த சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்...
கிட்டத்தட்ட 175 பின்னூட்டங்களுக்குப் பின்னும் இது புரியாமல் இருப்பதை நான் என்னவென்று சொல்வது...?! ]]]

எதிலும் ஒரு நன்மை இருக்கு என்றார்கள் பெரியோர் --- இதில என்னன்னா --- மறுப்பும் விளக்கமும் எழுதுறோமில --- அந்த இன்பம் தான் --- சில பிள்ளைங்க டகின்னு பிடிப்பாங்க --- சிலதுக்கு அடிகிமேல அடியடிச்சி திரும்ப
திரும்ப சொல்லணுங்க --- அப்பிடியும் ஏறாடிகி விட்டுறோனுங்க !//

நன்றி பென்ஸ் ஸார்..

சிலவைகள் அவதானிக்கு சில முறைகள் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படி சில நாட்களாகும் என்று நான் நினைக்கவேயில்லை..

//இந்த ellipsis போடும் போது மூணு குத்தா போட்டா அழகா இருக்குமே சார்!//

போடலாம்தான் ஸார்.. ஆனா பாருங்க.. இந்தத் தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் மாறும்போது கீகளையும் சேர்த்து மாத்த வேண்டியிருக்கு.. அது ஒரு தேவையில்லாத கூடுதல் சுமையா இருக்கிறதால எது சுலபமா வருதோ.. அதைப் போடுறாங்க.. அவ்வளவுதான்..

அப்புறம்.. இந்த ஸார்.. மோர்.. இதெல்லாம் வேண்டாமே.. நான் உங்களைவிட ரொம்ப ரொம்பச் சின்னப் பையன்..!

benza said...

இதில ரெண்டு விஷயம் கவனிக்கணும் --- நான் தமிழில்
டைப் செய்ய Google Indic பாவிக்கிறேன் --- ஆங்கிலத்தில்
தமிழ் சொல்லை டைப் செய்தால் அது தானாக தமிழ்
எழுத்துகளில் transliterate பண்ணுதே !
ctrl + G கொடுத்தால் ஆங்கிலம் / தமிழ் மாறுது !!
சில வேளைகளில் குறிப்பான தமிழ் எழுத்து எடுப்பது
கொஞ்சம் நுட்பம் தேவை தான் !!!
நீங்கள் எப்படி தமிழ் ட்ய்பிங் செய்கின்றீர்கள் ?

மற்ற பாயிண்ட் என்னன்னா --- மரியாதைக்கு வயது
முக்கியம்தான் --- ஆனால் நான் எப்போதும் ''அறிவை''
முன்னெடுத்து கணிப்பவன் --- அதனால் தான் இந்த
சார் பார் (bar) எல்லாம் --- ஒரு கிரிக்கெட் மேட்ச்
பார்க்கிறோம் --- திறமான ஷாட் ஒன்னு --- அடித்தது
இளைஜன் என்றாலும் ''Well played Sir'' என்போமே ?!

அறிவில் நீங்கள் எனக்கு மூத்தவன் தான் சார் !!!

benza said...

[[[ A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen.]]]

இந்த வசனத்தை எழுதியவர் அவசரத்தில் எழுதிவிட்டார்
போல் தோன்றுகின்றது --- இங்கு சாமான்யமாக படித்தோரும் பண்புள்லோரும் பங்குபற்றுகின்றனர் ---
சமயம் மாறுவதும் சமயத்தை ஏற்காது மறுதலிப்பதும் தனிபட்ட சிந்தனை சுதந்திரம் --- இதை மறுப்பவன் சமுதாயத்தில் அங்கம் வகிக்க அருகதை அற்றவன் ---
பிறக்கும் போது நான் கதோலிகன் --- இன்று நான் அறிவு கடவுள் பிள்ளையார் பக்தன் --- அப்போ
சமயம் மாறியதால் நான் முட்டாளா ?
அவருக்கு சொல்லுங்கள் ''இருட்டை பாராதே - கண்ணை திறந்து வெளிச்சத்தை பார் ''!

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
இதில ரெண்டு விஷயம் கவனிக்கணும் --- நான் தமிழில் டைப் செய்ய Google Indic பாவிக்கிறேன் --- ஆங்கிலத்தில்
தமிழ் சொல்லை டைப் செய்தால் அது தானாக தமிழ் எழுத்துகளில் transliterate பண்ணுதே! ctrl + G கொடுத்தால் ஆங்கிலம் / தமிழ் மாறுது !! சில வேளைகளில் குறிப்பான தமிழ் எழுத்து எடுப்பது
கொஞ்சம் நுட்பம் தேவைதான் !!!
நீங்கள் எப்படி தமிழ் ட்ய்பிங் செய்கின்றீர்கள்?//

பென்ஸ் ஸார்..

தாமதத்திற்கு மன்னிக்கணும்..

நான் பயன்படுத்துவது inscript method. இதுவும் தமிழ் டைப்பிங்கில் ஒரு வகைதான். தமிழில் மொத்தம் 5 வகை டைப்பிங் வழிகள் உள்ளன. Anjal, Mylai, Typewriter, Phonetic, inscript.. என்று வகைகள் உள்ளன.

//மற்ற பாயிண்ட் என்னன்னா --- மரியாதைக்கு வயது முக்கியம்தான் --- ஆனால் நான் எப்போதும் ''அறிவை'' முன்னெடுத்து கணிப்பவன் --- அதனால்தான் இந்த
சார், பார்(bar) எல்லாம் --- ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம் --- திறமான ஷாட் ஒன்னு --- அடித்தது
இளைஜன் என்றாலும் ''Well played Sir'' என்போமே?! அறிவில் நீங்கள் எனக்கு மூத்தவன்தான் சார்!!!//

ஐயோ.. இப்படியெல்லாம் பேசி தன்னடகத்தின் தளபதியாகலாம்னு நினைக்காதீங்க ஸார்..

ஹோட்டலுக்கு சாப்பிடப் போறீங்க.. சுவையான காபி வருது.. அந்த மாதிரி காபி உங்களுக்கு போடத் தெரியாது.. அதுனால சர்வரை அப்ப அங்கேயே ஸார் போட்டு பேசுறீங்க.. ஓகே..

அதுக்கப்புறம் அவர் உங்களுக்கு நண்பராயிடறார்.. இப்ப என்ன பண்ணுவீங்க.. இன்னும் ஸார்ன்னு சொல்லி சர்வர் ரேஞ்சுலேயே அவரை வைச்சுக்குவீங்களா.. இல்லாட்டி பேர் சொல்லியோ.. பட்டப் பேர் சொல்லிக் கூப்பிட்டோ நெருக்கத்தை வளர்த்துக்குவீங்களா..? என்ன செய்வீங்க பென்ஸ் ஸார்..? யோசிங்க..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...

[[[ A.R.Rahman, if he's really a believer in god, he shouldn't have converted to Islam. One who converts from his religion to another for his personal benefits, cannot be a gentlemen.]]]

இந்த வசனத்தை எழுதியவர் அவசரத்தில் எழுதிவிட்டார் போல் தோன்றுகின்றது --- இங்கு சாமான்யமாக படித்தோரும் பண்புள்லோரும் பங்கு பற்றுகின்றனர்
சமயம் மாறுவதும் சமயத்தை ஏற்காது மறுதலிப்பதும் தனிபட்ட சிந்தனை சுதந்திரம் --- இதை மறுப்பவன் சமுதாயத்தில் அங்கம் வகிக்க அருகதை அற்றவன்- பிறக்கும் போது நான் கதோலிகன்- இன்று நான் அறிவு கடவுள் பிள்ளையார் பக்தன்- அப்போ
சமயம் மாறியதால் நான் முட்டாளா? அவருக்கு சொல்லுங்கள் ''இருட்டை பாராதே - கண்ணை திறந்து வெளிச்சத்தை பார்''!//

இதெல்லாம் அனுபவத்தாலதான் உணரனும் ஸார்.. வெறும் வார்த்தையால அவருக்குப் புரிய வைக்கிறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்.. விடுங்க.. டேக் இட் ஈஸி..!!!

ஆமா நீங்க எப்படி திருச்சபை சாமியிலிருந்து தெருக்கோடி சாமிக்கு டிரான்ஸ்பர் ஆனீங்க.. அனுபவமா..? இல்லாட்டி பட்டறிவா..?

benza said...

[[[ ஹோட்டலுக்கு சாப்பிடப் போறீங்க.. சுவையான காபி வருது.. அந்த மாதிரி காபி உங்களுக்கு போடத் தெரியாது.. அதுனால சர்வரை அப்ப அங்கேயே ஸார் போட்டு பேசுறீங்க.. ஓகே.
இப்ப என்ன பண்ணுவீங்க.. இன்னும் ஸார்ன்னு சொல்லி சர்வர் ரேஞ்சுலேயே அவரை வைச்சுக்குவீங்களா ... என்ன செய்வீங்க பென்ஸ் ஸார்..? யோசிங்க. ]]]

அண்ணாச்சி காபி போட்டது சர்வர் இல்லேன்னு எனக்கு தெரியும் --- அதெப்படி உங்களுக்கு தெரியாம ?

ஓஹோ நீங்க அப்பிடியே ஒரு படி மேலே தான் என்பதை
ஒத்துகொள்ளாத வரை --- அதுகும்
தன்னடக்கம் தான் அய்யா !

நான் மெட்ராஸ் மண்ணில் கால் வைக்கவில்லை --- திருச்சி நகரில் சில மாதங்கள் சிலருடன் அன்பாக பழக சான்ஸ் கிடைத்தது --- காபி கேட்கல கிடைகல ---

நன்றி உண்மை தமிழன் விட்ருங்க ... சில நேரம் மன பூரிப்பில் ''சார்'' என்றால் ...

benza said...

[[[ எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் மேற்கத்திய இசையை ரசிக்க முடியவில்லை ]]]

அதெப்பிடி புரியலையே --- ஆங்கிலம் மேற்கத்திய இசையில் ஒரு சிறு பங்கு தானே அய்யா.

தமிழில் கர்நாடக சங்கீதம் போன்று மேற்கத்திய க்ளாசிகல் மியூசிக் இருக்கு --- அதற்கு எமது காது பழக படாததால் ரசிக்க முடியவில்லை ---

ஹிந்தி பாஷை தெரியாது போனாலும் பொப் பிடிக்கும் என்றால் --- அது மாதிரி மெட்டில் சைனீஸ் பாஷை பாட்டையும் ரசிக்கலாம் தானே அண்ணா !

benza said...

[[[ //இளையராஜா ஆஸ்கார் விருது பெறவில்லை என்பதற்கு அவருடைய இசை சரியான முறையில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே காரணம்.//

முற்றிலும் ஆமோதிக்கிறேன்.. ]]]

இதில் ஒரு பாயிண்ட் ஒன்று மிஸ் ஆவுதே ---

ஆங்கில படத்தில் ஆங்கில மெட்டை அமைத்ததால் ---
ஆங்கில சமுதாயத்தில் இயங்கும் Oscar Award ஒன்று கிடைத்துள்ளது ---

ஆங்கில மெட்டை அமைக்காத நபருக்கு ஆங்கில அவார்ட் கிடைக்க மாட்டாது --- அதனால் அந்த நபர் சிறுமை படவே மாட்டார் --- அவரது லைன் வேறு அதில் அவர் சிறப்பாக
உச்சியில் உள்ளார் ---

ARR க்கு நடாத்திய விழா மேடையில் சகலரும் ஒன்றாக இருந்து வாழ்த்தினார்கள் --- அரசியல் மாதிரி விளப்பம் இல்லாது குழப்பம் அடைகின்றீர்கள் வீணாக --- எனது தாழ்மையான அபிப்ராயம்.

benza said...

[[[ அன்பு ராவணா..
இதுதான் என் பதிவில் நீர் இடும் கடைசிப் பின்னூட்டமாக இருக்கட்டும்..
எங்கிருந்தாலும் வாழ்க ]]]

எதிர் வாதம் திறம் எண்ணங்களை உருவாக்கும் நன்மை கிடைக்கும் --- குரோத மனப்பான்மையால்
சதாகாலமும் தின்மையே !
அய்யா துட்டரை கண்டால் தூர விலகு என்றதை மறந்து இப்போ உணர்ந்து கொண்டீர்கள் --- சந்தோசம் !

benza said...

[[[ Anonymous Anonymous said...
இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.

Thursday, February 26, 2009 8:16:00 AM ]]]

அருமையான கருத்துகள் --- இத்தகைய இடுகைகள் சொற்பமாக உள்ளனவே !

benza said...

[[[ ஆமா நீங்க எப்படி திருச்சபை சாமியிலிருந்து தெருக்கோடி சாமிக்கு டிரான்ஸ்பர் ஆனீங்க.. அனுபவமா..? இல்லாட்டி பட்டறிவா..?

Sunday, March 15, 2009 7:55:00 AM ]]]

பட்டறிவு --- திருச்சபை சாமி ஆசாமி என கண்டறிந்தேன் ---
மனிதனால் ஆகபட்ட சகலதும் குறை உள்ளது எனும் உண்மையை அன்று மறந்தேன் --- தத்தளித்த மனம் எனது நான்காம் பரம்பரை சமயத்தினால் ஈர்க்கபட்டது ---
எதோ உந்து சக்தியால் பிள்ளையார் வசம் சரணம் !

benza said...

[[[ நான் பயன்படுத்துவது inscript method. இதுவும் தமிழ் டைப்பிங்கில் ஒரு வகைதான்.]]]

நன்றி உனா தானா --- முதன் முதல் இன்று தான் தமிழில் டைப் செய்வது பற்றி ஒருவர் சுருக்கமாக தெளிவாக தந்ததை கண்டேன் ---
இருவருட தேடலின் பின்னர் --- மிகுதியை Google சாரிடம் பார்போம் !

S.Arockia Romulus said...

இளையராஜா


இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன்
இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது
உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன்
உன் இசையல்லவா?


அம்மாஎன்னும் வார்த்தைக்கு அன்பு எனும்


பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!


வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி


இசையால் தாலாட்டுபவன் நீ!


விருதுகளில் நீ புறக்கணிக்கப் பட்டாய் என்கிறார்கள்!-இல்லை


எல்லோருக்குமான விருது உனக்குமென்றால்


ஏற்குமா? அதை இசை?


மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?


அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!


உனக்கு மட்டும் தானே!!


உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா'-ஆம்


என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'



ஒரு தேசிய விருது கூட வாங்கவில்லை MSV .அசினுக்கும் ,நயனுக்கும்.....பத்ம விருதுகள்( தொழிலுக்கா.....?)
இளையராஜாவை ஒப்பிட்டு பேச ரஹ்மான் இன்னும் வளர வேண்டும்

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...

[[[ஹோட்டலுக்கு சாப்பிடப் போறீங்க.. சுவையான காபி வருது.. அந்த மாதிரி காபி உங்களுக்கு போடத் தெரியாது.. அதுனால சர்வரை அப்ப அங்கேயே ஸார் போட்டு பேசுறீங்க.. ஓகே.
இப்ப என்ன பண்ணுவீங்க.. இன்னும் ஸார்ன்னு சொல்லி சர்வர் ரேஞ்சுலேயே அவரை வைச்சுக்குவீங்களா ... என்ன செய்வீங்க பென்ஸ் ஸார்..? யோசிங்க.]]]

அண்ணாச்சி காபி போட்டது சர்வர் இல்லேன்னு எனக்கு தெரியும் --- அதெப்படி உங்களுக்கு தெரியாம?
ஓஹோ நீங்க அப்பிடியே ஒரு படி மேலேதான் என்பதை
ஒத்துகொள்ளாத வரை --- அதுகும்
தன்னடக்கம்தான் அய்யா!///

சரி.. சரி.. நான் ஒரு வார்த்தையை எழுதாம போயிட்டேன். அது என் தப்புதான். அதுக்காக அதையே பிடிச்சு தொங்கிட்டிருக்கணுமா..? விடுங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் மேற்கத்திய இசையை ரசிக்க முடியவில்லை]]]

அதெப்பிடி புரியலையே --- ஆங்கிலம் மேற்கத்திய இசையில் ஒரு சிறு பங்குதானே அய்யா.

தமிழில் கர்நாடக சங்கீதம் போன்று மேற்கத்திய க்ளாசிகல் மியூசிக் இருக்கு --- அதற்கு எமது காது பழகபடாததால் ரசிக்க முடியவில்லை ---

ஹிந்தி பாஷை தெரியாது போனாலும் பொப் பிடிக்கும் என்றால் --- அது மாதிரி மெட்டில் சைனீஸ் பாஷை பாட்டையும் ரசிக்கலாம்தானே அண்ணா !///

மியூஸிக்கை மட்டும் சொன்னீர்களென்றால் காதை கிழியும் சப்தம் உள்ள எதையும் நான் விரும்ப மாட்டேன்..

மென்மையான சாக்ஸ்போன் இசை மற்றும் பியானோ இசையை விரும்பிக் கேட்பேன்.. அவ்வளவுதான்..

அதென்ன கடைசீல ஸார்லேர்ந்து இப்போ அண்ணாவுக்கு தாவிட்டீங்க..! அடங்க மாட்டீங்களா நீங்க..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[//இளையராஜா ஆஸ்கார் விருது பெறவில்லை என்பதற்கு அவருடைய இசை சரியான முறையில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே காரணம்.// முற்றிலும் ஆமோதிக்கிறேன்.. ]]]

இதில் ஒரு பாயிண்ட் ஒன்று மிஸ் ஆவுதே ---
ஆங்கில படத்தில் ஆங்கில மெட்டை அமைத்ததால் --- ஆங்கில சமுதாயத்தில் இயங்கும் Oscar Award ஒன்று கிடைத்துள்ளது ---
ஆங்கில மெட்டை அமைக்காத நபருக்கு ஆங்கில அவார்ட் கிடைக்க மாட்டாது --- அதனால் அந்த நபர் சிறுமைபடவே மாட்டார் --- அவரது லைன் வேறு அதில் அவர் சிறப்பாக
உச்சியில் உள்ளார் ---
ARR க்கு நடாத்திய விழா மேடையில் சகலரும் ஒன்றாக இருந்து வாழ்த்தினார்கள் --- அரசியல் மாதிரி விளப்பம் இல்லாது குழப்பம் அடைகின்றீர்கள் வீணாக --- எனது தாழ்மையான அபிப்ராயம்.///

பென்ஸ் ஸார்..

தாங்கள் சொல்வது சரிதான்..

நீங்கள் சொல்வதைத்தான் நானும் முதலிலிருந்தே சொல்லி வருகிறேன்..

ஆங்கிலப் படத்தில் இசையமைக்க வாய்ப்புக் கிட்டியதால் ரஹ்மானுக்கு அந்த ஆங்கிலப் படத்திற்கே உரித்தான ஆஸ்கர் விருது கிடைத்துவிட்டது..

இசைஞானிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவரும் முயற்சி செய்யலாம்.. விருது கிடைப்பதும், கிடைக்காததும் மேலே உள்ளவனின் கையில் இருக்கிறது..

அவ்வளவுதான் விஷயம்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[ அன்பு ராவணா..
இதுதான் என் பதிவில் நீர் இடும் கடைசிப் பின்னூட்டமாக இருக்கட்டும்..
எங்கிருந்தாலும் வாழ்க ]]]

எதிர் வாதம் திறம் எண்ணங்களை உருவாக்கும் நன்மை கிடைக்கும் --- குரோத மனப்பான்மையால்
சதாகாலமும் தின்மையே !
அய்யா துட்டரை கண்டால் தூர விலகு என்றதை மறந்து இப்போ உணர்ந்து கொண்டீர்கள் --- சந்தோசம் !///

இதுதான் என் பாலிஸி ஸார்..

ஒரு முறை, இரண்டு முறை பார்ப்பேன். பின்பும் ஆள் திருந்தவில்லையெனில் உன் சகவாசமே வேண்டாமய்யா.. ஆளை விடும் என்று ஒதுங்கிவிடுவேன்.. அவ்வளவுதான்..

நமக்கே ஆயிரம் வேலையிருக்கு.. இதுல வேலை வெட்டியில்லாததுக அத்தனைக்கும் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[Anonymous Anonymous said...
இந்தியா சார்பாக ஒரு விருதை வளங்குவது பற்றி யோசியுங்கள். ஆஸ்கார் போல் இந்தியாவும் உலகளவில் ஒரு கீஸ்கார் வழங்குவது பற்றி யோசியுங்கள்.
அருமையான கருத்துகள் --- இத்தகைய இடுகைகள் சொற்பமாக உள்ளனவே !///

நல்ல ஐடியாதானே.. யார் கொடுப்பான்னு பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[ஆமா நீங்க எப்படி திருச்சபை சாமியிலிருந்து தெருக்கோடி சாமிக்கு டிரான்ஸ்பர் ஆனீங்க.. அனுபவமா..? இல்லாட்டி பட்டறிவா..?

பட்டறிவு --- திருச்சபை சாமி ஆசாமி என கண்டறிந்தேன் ---
மனிதனால் ஆகபட்ட சகலதும் குறை உள்ளது எனும் உண்மையை அன்று மறந்தேன் --- தத்தளித்த மனம் எனது நான்காம் பரம்பரை சமயத்தினால் ஈர்க்கபட்டது ---
எதோ உந்து சக்தியால் பிள்ளையார் வசம் சரணம்!///

ஆச்சரியம்.. மகா ஆச்சரியம்..!

நாத்திகமாவார்கள் பார்த்திருக்கிறேன்..

எங்களது வலையுலகத்தில்கூட மதுரையில் தருமி ஐயா என்ற ஒருவர், பிறப்பால் கிறித்துவர், ஆனால் இப்போது முழு நாத்திகர்..

நீங்கள் கிறித்துவராக இருந்து இந்துவாக மாறியிருக்கிறீர்கள்.. உலகம்தான் எத்தனை மாறுதலானது..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...

[[[நான் பயன்படுத்துவது inscript method. இதுவும் தமிழ் டைப்பிங்கில் ஒரு வகைதான்.]]]

நன்றி உனா தானா --- முதன் முதல் இன்றுதான் தமிழில் டைப் செய்வது பற்றி ஒருவர் சுருக்கமாக தெளிவாக தந்ததை கண்டேன் ---
இரு வருட தேடலின் பின்னர் --- மிகுதியை Google சாரிடம் பார்போம்!///

தேடுங்கள்.. நிச்சயம் கிடைக்கும்..! தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கொடுக்கப்படும்..!

உண்மைத்தமிழன் said...

///S.Arockia Romulus said...

இளையராஜா
இசையின் இமயம் நீ!
ஏழு சுரங்களை கொண்டு ஈரேழு உலகையும் ஆள்பவன் நீ!
இந்திப் பாடல்கள் தமிழகத்தை ஆண்டபோது-உன் இசையெனும் தென்றல் புரட்சியால்
தமிழகத்தில் தமிழுக்கு அரியாசனம் தந்தவன் நீ!
ஒவ்வொரு காதலர் மனதையும் தாலாட்டுவது உன் இசையல்லவா?
காதல் தோல்வியில் தோள் கொடுக்கும் தோழன் உன் இசையல்லவா?
அம்மா என்னும் வார்த்தைக்கு அன்பு எனும் பொருளை மக்கள் மனதில் ஊன்றியவன் நீ!
வயது பேதமின்றி எல்லொரையும் குழந்தையாக்கி இசையால் தாலாட்டுபவன் நீ!
விருதுகளில் நீ புறக்கணிக்கப்பட்டாய் என்கிறார்கள்!- இல்லை
எல்லோருக்குமான விருது உனக்குமென்றால் ஏற்குமா? அதை இசை?
மக்கள் மனதை விடவா நீ பெரிய விருதை வாங்கிவிடுவாய்?
அது அன்றும், இன்றும், என்றும், உனக்குத்தானே!
உனக்கு மட்டும்தானே!!
உனக்கு தேவையில்லை 'பாரத ரத்னா' - ஆம்
என்றும் இசையின் எம் 'பாரதத்திற்கு' நீதான் 'ரத்தினம்'
இளையராஜாவை ஒப்பிட்டு பேச ரஹ்மான் இன்னும் வளர வேண்டும்.///

ஆரோக்கியம் ஸார்..

கடைசி 3 வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை..

உங்களுடைய இளையராஜா பக்தி என்னை பரவசப்படுத்துகிறது..!

வாழ்க உமது குரு பக்தி..!

கீழை ராஸா said...

இந்த தகவல்களெல்லாம் எப்படி சேமிக்கிறீர்கள்..? சூப்பருங்க..

கீழை ராஸா said...

ME THE 200....