29-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பதெல்லாம் நம்மூர் பாஷை என்றுதான் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். இப்போது அயல் தேசத்திலும் ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது. புரிகிறது.

கார்லா பிராட்முல்லர் என்கிற இந்தப் பெண்மணிக்கு தனது அன்புக் கணவருக்கு பிறந்த நாள் பரிசாக எதையாவது வித்தியாசமாக தர வேண்டும் என்று ஒரு ஆசையாம். எங்கயாவது ரூம் போட்டு யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு திரில்லிங்கான யோசனை அவருக்குத் தோணியிருக்கிறது.
கணவரின் இந்த பிறந்தநாளில் இருந்து அடுத்த பிறந்த நாள்வரையிலுமான ஒரு வருட காலம் முழுவதும் தனது கணவருடன் தினம்தோறும் தவறாமல் உறவு வைத்துக் கொள்வது என்ற விபரீதமான, வித்தியாசமான, கிளுகிளுப்பான முடிவை எடுத்துள்ளார்.
கணவரும் இதற்கு ஒத்துக் கொள்ள.. வருடம் முழுவதும் அந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள் தம்பதிகள். எப்படிங்க..? முடியுற விஷயமா இது..?
இதெல்லாம் பத்தாதுன்னு அந்த கிளுகிளுப்பான ஓராண்டு முடிவில் கிடைத்த அனுபவங்களையெல்லாம் தொகுத்து தற்போது புத்தகமாகவும் கார்லா வெளியிட்டிருக்கிறார்.

அதனை வாசிக்க ஆவலோடு இருக்கிறேன். இது போன்ற நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் படித்தால் கிக் ஏறாது. ஆகவே அதை யாராவது தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் தமிழக ரங்கமணிகள் சங்கத்து சிங்கங்கள், ஆளுக்கு பத்து புத்தகத்தையாவது வாங்கி என்னை மாதிரியான நண்பர்களுக்கு விநியோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்..
என்னமோ போங்க.. கொடுத்து வைச்ச புருஷன்பா.. அனுபவிச்சிருக்கான்... நமக்கெதுக்கு பொறாமை..?
வாழ்க பிராட்முல்லர்..! வளர்க கார்லாவின் பதிபக்தி..!!!