Showing posts with label களஞ்சியம். Show all posts
Showing posts with label களஞ்சியம். Show all posts

நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்..! - ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்தின் கொதிப்பு..!

30-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு இயக்குநர் களஞ்சியம் பேச வரும்வரைக்கும்..! 'வலியுடன் ஒரு காதல்'ன்ற படத்தோட இசை வெளியீட்டு விழா.. புதுமுக ஹீரோ. அவரோட அப்பாதான் தயாரிப்பாளர். கெளரி நாயர்ன்ற கேரள பொண்ணு புதுமுகம். சஞ்சீவின்ற புதுமுக இயக்குநர்.. கிராமத்து கதையா இருக்கு.. வழக்கமான காதலாத்தான் தெரியுது. ஆனா எடுத்திருந்த ஒரு பாடல் காட்சியின் காட்சிகள், இயக்குநர் யாருன்னு விசாரிக்கணும் போல இருந்துச்சு..!


வரிசையா வாழ்த்தி பேச வந்தவங்க சொல்லி வைச்ச மாதிரியே, இந்தப் படம் சக்கை போடு போடும்ன்னு வஞ்சகமில்லாமாத்தான் வாழ்த்தினாங்க. களஞ்சியம் ஐயா பேச வந்தாரு.. 


முதல்ல சாதாரணமா எல்லாத்தையும் பேசிட்டு கடைசீல அவரோட தற்போதைய பரபரப்பு மேட்டரை தொட்டாரு.. அவர் அஞ்சலியை வைச்சு எடுத்துக்கிட்டிருந்த படம் பாதில அப்படியே நிக்கிறதையும், அஞ்சலியோட புறக்கணிப்பால படத்தைத் தொடர முடியாம தான் கஷ்டப்படுறதையும் சொல்லி.. இதுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முனைந்து ஆக்சன் எடுத்து தன்னை மாதிரி தயாரிப்பாளர்களை கஷ்டத்துல இருந்து மீட்கணும்னாரு.. இவர் சொன்னவரைக்கும் சரிதான்..! அடுத்து நடக்க வேண்டியதெல்லாம் தயாரிப்பாளர் கவுன்சில்ல பேச வேண்டிய மேட்டரு..!

இதுக்கப்புறம் ஏற்கெனவே பேசிவிட்டு போயிருந்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் திரும்பியும் வந்து மைக்கை புடிச்சாரு. 



அவருக்கும் களஞ்சியத்துக்கும் இருக்குற பிரெண்ட்ஷிப்பையெல்லாம் சொல்லிட்டு, கடைசீல “அஞ்சலி மாதிரி தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை கொடுக்கறவங்களை செருப்பால அடிக்கணும்.. அப்பத்தான் இன்னொருத்தர் இது மாதிரி செய்ய மாட்டாங்க. அஞ்சலி இங்க வந்துதான் ஆகணும். அந்தப் பொண்ணு எப்படி வராம இருக்காங்கன்னு பார்த்திருவோம்.. அப்படி வரலைன்னா இதுவரைக்கும் இந்தப் படத்துக்கு ஆன செலவை முழுசா அவங்ககிட்டேயிருந்து வாங்கிரணும்.. அப்புறம் அது எந்த மூலைல இருந்தாலும் நாங்க அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை..! இப்போ வந்திருக்கிற புது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் கேயார் தலைமையில் நல்லபடியா நடக்குது. சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்..” என்றார்..!

இதுக்கு பின்னாடி திரும்பவும் மைக்கை பிடிச்ச இன்னொரு தயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ.வுமான விஜயமுரளி, “ஜாக்குவாரின் வார்த்தைகள் ஒரு புளோல அப்படியே வந்திருச்சு”ன்னு சொல்லி பிரஸ்காரங்களை சமாதானப்படுத்தினார்.. இதெல்லாம் எங்க போய் முடியும்..?

இதே மாதிரி ஏதோவொரு நடிகைக்கும், ஏதோவொரு தயாரிப்பாளருக்கும் பிரச்சினையாகி போய், நடிகர்கள் சங்கத்தை சேர்ந்தவங்க இது மாதிரியான தயாரிப்பாளர்களை செருப்பால அடிக்கணும்னு சொன்னா.. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருக்குறவங்க சும்மா விடுவாங்களா..? இத்தனைக்கும் ஜாக்குவார் தங்கமும் நடிகர்கள் சங்கத்துல மெம்பர்தான்..!  அவரே சக நடிகையரை இப்படிச் சொன்னா வெளில இருக்கிறவன் என்னத்த நினைப்பான்..?


இப்போ அஞ்சலி மீதான அவதூறு வழக்குல அவர் ஆஜராகாததினால் அஞ்சலிக்கு பிடிவராண்டு போட்டிருக்காங்க..! இப்படி வழக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலான நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப் போறாருன்னுதான் தெரியலை..!  ஏற்கெனவே களஞ்சியம் மேல இருக்குற பயத்துலதான் அஞ்சலி தமிழ்நாட்டுப் பக்கமே வர பயப்படுறாங்கன்னு அவங்க சார்பா சொல்றாங்க..! இந்தப் படத்துல மேற்கொண்டு நடிக்க விரும்பலைன்னா அவங்களே ஒரு பிரஸ் மீட் வைச்சு சொல்லிட்டு இல்லாட்டி நடிகர் சங்கம் மூலமா சொல்லிட்டு கவுரவமா விலகிக்கிறதுதான் நல்லது..! அப்படியும் இதுவரைக்கும் எடுத்த செலவுக்கு அஞ்சலிதான் நிச்சயமா பதில் சொல்லணும்..! வேற வழியில்லை..! அஞ்சலியின் அருகில் நல்ல ஆலோசகர்கள் இல்லை என்று நினைக்கிறேன். எப்பவோ பேசி முடிச்சிருக்க வேண்டிய மேட்டரை இவ்ளோ தூரம் தேவையில்லாமல் இழுத்து.. இது இப்படி செருப்படிவரைக்கும் கொண்டு போய்விட்டிருச்சு..! 

இந்த செருப்படி பேச்சு நாளைக்கு வேறு விதமாக பெப்சி சங்கங்களுக்கு இடையிலேயே பேசப்படும் என்று நினைக்கிறேன்..! ஏன்னா சினிமால ஒரு தப்புக்காக ஒருத்தரை செருப்பால அடிச்சா.. அப்படியே தொடர்ந்து மாத்தி, மாத்தி எல்லா சங்கத்துக்காரங்களையும் அடிச்சுக்கிட்டே இருக்கலாம்.. அத்தனை தப்புகள் உள்ளுக்குள்ளேயே இருக்கு..! இதை ஆரம்பிச்சு வைச்ச ஜாக்குவார் தங்கம் வாழ்கன்னுதான் சொல்லணும்..!

அடுத்த செருப்படி யாருக்குன்னு பார்ப்போம்..!!!