பூச்சி மருந்து தெளிப்பதிலும் கருணாநிதியின் ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை..!

 29-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சர்க்காரியா கமிஷனின் விசாரணையில் வெளியான கருணாநிதியின் ஊழல்களில் அடுத்தது இந்த பூச்சி மருந்து ஊழல்..! தாத்தா தனது ஊழலை பைசா கணக்கில் ஆரம்பித்துதான் இப்போது லட்சம் கோடியில் வந்து நின்றிருக்கிறார்..! என்னவொரு கடின உழைப்பு..! இதற்காகவே தாத்தாவை தனியாக வாழ்த்த வேண்டும்..! இனி படியுங்கள்..!

முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை - பகுதி 17

கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!

1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..

இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.


மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.

மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?

அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..

எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..

அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.

சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.

“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!

நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.

ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.

ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.

“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.

இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.

இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை  அமைச்சர் பதவியில் இருந்து  நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.

அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.

கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.

சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..

சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001

30 comments:

PARAYAN said...

VADAI....

கானகம் said...

//நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001// தேதி சரிதானா?

Sundar said...

இதைப்பற்றி எழுதலாமே?

மன்னிகவும்: கொஞ்சம் பெரிய copy & paste!

------------------------------
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-


தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று –

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?

இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.


அரசு மாறியவுடன் இப்படியான விளம்பர யுக்திகள் ஜெயா டீவிக்கும், கேப்டன் டீவிக்கும் போகும்.. அதையும் இதே சந்தானம் சொல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

நம் மக்களின் இந்தத்தேர்தல் மடமை
என்றும் அவர்க்கது பொதுவுடமை! என்றுதான் தீருமோ இந்தத் தீமை! அன்றுதான் களைவோம் நம் மனச் சுமை!

------------------

a said...

//
அரசு மாறியவுடன் இப்படியான விளம்பர யுக்திகள் ஜெயா டீவிக்கும், கேப்டன் டீவிக்கும் போகும்.. அதையும் இதே சந்தானம் சொல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
//

என்னக்கொடுமை...

R.Gopi said...

”தல” அன்னிக்கு ஒரு செயல், இன்னிக்கு ஒரு செயல்னே இல்ல... எப்போவும் ஊழல், ஊழல், ஊழல் தான்.

ஆனாலும் அடுத்தவன ஆட்டைய போட்டு காசு எடுக்கலேன்னா, அவருக்கு இன்னிக்கு வரைக்கும் தூக்கம் வராதாமே!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

VADAI....]]]

இப்படி எழுதுற நேரம், பதிவு பற்றிய உங்களது கருத்தைப் பதிவு செய்யலாமே..? ஏன் இந்த வேலை..?

உண்மைத்தமிழன் said...

[[[கானகம் said...

//நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001// தேதி சரிதானா?]]]

ஸாரி.. மாத்திர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

சுந்தர்..

இங்கே, இப்போது யாருக்குமே தார்மீக அறம் என்ற ஒன்றே இல்லை.. கிடைத்தவரைக்கும் அள்ளு என்றுதான் நினைக்கிறார்கள். கேட்டால் இதுவும் ஒரு வியாபாரம்தானே என்பார்கள்.

இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் இல்லை. அரசியல்வியாதிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//அரசு மாறியவுடன் இப்படியான விளம்பர யுக்திகள் ஜெயா டீவிக்கும், கேப்டன் டீவிக்கும் போகும்.. அதையும் இதே சந்தானம் சொல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!//

என்ன கொடுமை...]]]

நிச்சயமாக இதுவும் நடக்கும்..! இது நடக்கவில்லையெனில்தான் ஆச்சரியம்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

”தல” அன்னிக்கு ஒரு செயல், இன்னிக்கு ஒரு செயல்னே இல்ல... எப்போவும் ஊழல், ஊழல், ஊழல்தான்.]]]

இதுதான் கருணாநிதி..!

[[[ஆனாலும் அடுத்தவன ஆட்டைய போட்டு காசு எடுக்கலேன்னா, அவருக்கு இன்னிக்குவரைக்கும் தூக்கம் வராதாமே!]]]

இது கூடவே பொறந்தது..! மாத்த முடியாது..!

மு.சரவணக்குமார் said...

சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!

:))

cute photos said...

பெயருக்கேத்த மாதரி எழுதுற ஒரே வலை பதிவாளர் நீங்கள் ஒருவர் தான் அண்ணா..உங்களின் பனி தொடர வாழ்த்துகிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!:))]]]

அது பத்தி முழு தகவலுடன் யாராவது எழுதிக் கொடுங்கள். போடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[cute photos said...
பெயருக்கேத்த மாதரி எழுதுற ஒரே வலை பதிவாளர் நீங்கள் ஒருவர் தான் அண்ணா. உங்களின் பனி தொடர வாழ்த்துகிறேன்.]]]

பரவாயில்லை.. என்னைய வாழ்த்துறதுக்கும் ஒரு ஆள் இருக்கு இங்க.. நன்றி முருகா..!

நன்றி உங்களுக்கும்..!

Shanmugam Rajamanickam said...

//சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!//


நானுந்தான்...........

ராஜ நடராஜன் said...

செத்துப்போன கேஸையெல்லாம் இத்தனை வருசம் கழிச்சு தோண்டுறீங்க...

ஸ்பெக்ட்ரம் கேஸாவது இல்ல...காசாவது கிடைக்குமா?

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!:))]]]

அது பத்தி முழு தகவலுடன் யாராவது எழுதிக் கொடுங்கள். போடுகிறேன்..! ///

அண்ணே! யாராவது எழுதிக் கொடுத்தாதான் உங்க பதிவுல போடுவீங்கங்கிறது மாதிரி இருக்கு உங்க பதில்!

தி.மு.கவின் எதிரிகள் எழுதித் தருவதையே நீங்கள் போடுகிறீர்களோ என்ற சந்தேகத்தையும் மக்களிடையே எழுப்பி விடும்!

ரிஷி said...

///ராஜ நடராஜன் said...

செத்துப்போன கேஸையெல்லாம் இத்தனை வருசம் கழிச்சு தோண்டுறீங்க...

ஸ்பெக்ட்ரம் கேஸாவது இல்ல...காசாவது கிடைக்குமா?///

பூச்சி மருந்து ஊழலும் செத்து சுண்ணாம்பான ஊழல்தானே? அது 1971. சுடுகாட்டு ஊழல் 1994.

அதைத் தோண்டியெடுக்கும்போது இதையும் தோண்டியெடுப்பதற்கென்ன? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

ரிஷி said...

1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இதுவரை நடந்த எந்த ஊழல்களிலும் திமுகவின் பெருந்தலைகளோ, அதிமுகவின் பெருந்தலைகளோ சிக்கி சிறை தண்டனை அனுபவித்ததில்லை என்பது தெரிகிறது. அப்படியெனில் இரு கழகங்களுமே தவறு செய்யவில்லை என்பது புலனாகிறதா??

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.சண்முகம் said...

//சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!//

நானுந்தான்...........]]]

முழுத் தகவல்களும் கிடைக்க வேண்டுமே..? கிடைத்தால் நிச்சயம் போடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
செத்துப் போன கேஸையெல்லாம் இத்தனை வருசம் கழிச்சு தோண்டுறீங்க. ஸ்பெக்ட்ரம் கேஸாவது இல்ல காசாவது கிடைக்குமா?]]]

தெரியாதவங்க எத்தனையோ பேர் இருப்பாங்களே.. அவங்களுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
சுடுகாட்டு கூரையிலும் ஊழல் செய்த ஜெ! என்று ஒரு பதிவு போட்டால் மட்டுமே நீங்கள் நடுநிலையானவர் என்பதை ஒப்புக் கொள்வோம்!:))]]]

அது பத்தி முழு தகவலுடன் யாராவது எழுதிக் கொடுங்கள். போடுகிறேன்..! ///

அண்ணே! யாராவது எழுதிக் கொடுத்தாதான் உங்க பதிவுல போடுவீங்கங்கிறது மாதிரி இருக்கு உங்க பதில்!

தி.மு.கவின் எதிரிகள் எழுதித் தருவதையே நீங்கள் போடுகிறீர்களோ என்ற சந்தேகத்தையும் மக்களிடையே எழுப்பி விடும்!]]]

அது பற்றிய முழுத் தகவல் என்னிடத்தில் இல்லை..! அதனால்தான் எழுத முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///ராஜ நடராஜன் said...

செத்துப்போன கேஸையெல்லாம் இத்தனை வருசம் கழிச்சு தோண்டுறீங்க...

ஸ்பெக்ட்ரம் கேஸாவது இல்ல...காசாவது கிடைக்குமா?///

பூச்சி மருந்து ஊழலும் செத்து சுண்ணாம்பான ஊழல்தானே? அது 1971. சுடுகாட்டு ஊழல் 1994.
அதைத் தோண்டியெடுக்கும்போது இதையும் தோண்டியெடுப்பதற்கென்ன? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.]]]

நியாயமான ஒன்றுதான். ஒத்துக் கொள்ளலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இதுவரை நடந்த எந்த ஊழல்களிலும் திமுகவின் பெருந்தலைகளோ, அதிமுகவின் பெருந்தலைகளோ சிக்கி சிறை தண்டனை அனுபவித்ததில்லை என்பது தெரிகிறது. அப்படியெனில் இரு கழகங்களுமே தவறு செய்யவில்லை என்பது புலனாகிறதா??]]]

இல்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்யக் கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம்..!

ரிஷி said...

விகடன் தானே திமுகவுக்கு எதிர்ப்பு?
குமுதம் திமுகவுக்கு ஆதரவுதானே?
அவர்களிடமிருந்து இப்படி ஒரு கட்டுரையா!!

ரிஷி said...

//இல்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்யக் கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம்..!//

அப்படியென்றால் இனி நாம் இதைப்பற்றிப் பேசி பயனில்லை என்றுதான் அர்த்தம்!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

விகடன்தானே திமுகவுக்கு எதிர்ப்பு?
குமுதம் திமுகவுக்கு ஆதரவுதானே?
அவர்களிடமிருந்து இப்படி ஒரு கட்டுரையா!!]]]

இது குமுதம் ரிப்போர்ட்டர்.. இதுவும் குமுதமும் இப்போது வேறு வேறு மேனேஜ்மெண்ட்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//இல்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்யக் கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம்..!//

அப்படியென்றால் இனி நாம் இதைப் பற்றிப் பேசி பயனில்லை என்றுதான் அர்த்தம்!]]]

இல்லை. நிச்சயமாக பயன் இருக்கும். தேர்தல் நேரமான இப்போது இதைப் பற்றிப் பேசினால் தி.மு.க.வைப் பற்றி புதிய வாக்காளர்கள் தெரிந்து கொள்வார்களே..?

abeer ahmed said...

See who owns www1-pennsylvania-2nd-mortgage.co.cc or any other website:
http://whois.domaintasks.com/www1-pennsylvania-2nd-mortgage.co.cc

abeer ahmed said...

See who owns codigofonte.net or any other website.