சட்டப்படி குற்றம் - கிளைமாக்ஸில் சொதப்பிய எஸ்.ஏ.சி.

26-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று, வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் வந்த படம் இது. ஆளும்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள்கூட ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படமும் இதுதான். தொல்.திருமாவளவன் இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு கொடுக்கும் அளவுக்கு இருந்தது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு..!

நேர்மையான போலீஸ் அதிகாரியான சுபாஷ்சந்திரபோஸை தனது வீட்டிற்கு அழைத்து அவமானப்படுத்துகிறார் தொகுதி எம்.பி. தனது செருப்பை எடுத்து வரும்படி சொன்ன எம்.பி. மீது கோபம் கொண்ட போஸ், அதே செருப்பால் எம்.பி.யை நாலு சாத்து சாத்திவிடுகிறார்.. கோபம் கொண்ட எம்.பி., போஸின் குடும்பத்தையே வேரறுத்துவிட.. போஸ் போலீஸ் வேலையில் இருந்து ஒதுங்குகிறார்..

நேருக்கு நேராக எம்.பி.யுடன் மோதி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்த போஸ், இதேபோல் அரசியல்வியாதிகளால், அதிகார அமைப்புகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும், இளைஞிகளையும் திரட்டி அவர்கள் மூலமாக ஊழல்வியாதிகளையும், அரசியல்வியாதிகளையும் ஒழித்துக் கட்ட முடிவெடுக்கிறார். இதனை எப்படிச் செய்து முடிக்கிறார் என்பதுதான் படமே..!

தான் எடுத்த பிளாக்பஸ்டர் மூவியான சட்டம் ஒரு இருட்டறையின் மறுவடிவம்தான் இந்த சட்டப்படி குற்றம் என்று தொடர்ந்து பல மாதங்களாகச் சொல்லி வந்தார் எஸ்.ஏ.சி. தனது மகனான இளைய தளபதி விஜய்க்கு ஆளும் கட்சியின் ஆசி பெற்ற வாரிசுகள் கொடுத்த தொல்லையைக் கண்டு மனம் குமுறிய பின்புதான் திடீரென்று சட்டம் ஒரு இருட்டறைக்கு உயிர் கொடுத்து சட்டப்படி குற்றத்தைத் துவக்கினார்.

உள்ளபடியே இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மிக அவசியமான திரைப்படம்தான் இது.. தற்போதைய அரசியல் சூழலை அக்குவேறு ஆணிவேறாக அர்த்தப்படுத்தியிருந்தாலும், இது அத்தனைக்கும் யார் காரணம் என்று குறிப்பிடும்போது மட்டும் சொதப்பிவிட்டார் எஸ்.ஏ.சி. என்ன காரணமோ? பயமா? அல்லது மரியாதையா என்று தெரியவில்லை..!

நித்தியானந்தா-ரஞ்சிதா மேட்டரும் ஒரு கிளைக் கதையாக வருகிறது..! சென்ற தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கதையும் வருகிறது..! ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலை உரித்துத் தொங்கவிட்டிருக்கிறார். "ராசா.. ராசா.. ராசா.." என்று ராசாவின் பெயர் இடைவேளைக்குப் பின்பு பல முறை திரையரங்கில் ஒலிக்கிறது..!

ஆ.ராசாவுக்கு எஸ்.ஏ.சி. வழங்கியிருக்கும் தண்டனை ஆயுட்காலம் முழுவதும் சிறைதான்.. சிறைக்குள்ளேயே செத்தால்கூட பொணத்தை வெளியே கொண்டு வரக் கூடாது. அதையும் சிறைக்குள்ளேயே புதைத்துவிடுங்கள் என்கிறார்..!


உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என்று 40 பேரை காட்டுக்குள் கடத்தி வர வைக்கிறார் போஸாக நடித்திருக்கும் சத்யராஜ்.. கடத்தப்பட்டு வருபவர்களிடம் தங்களின் சோகக் கதையைக் கூறி, நாடு இன்றைக்கு இருக்கும் நிலைமையை எடுத்துச் சொல்லி தாங்கள் நடத்தவிருக்கும் புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்களிடத்தில் உதவி கேட்கிறார்..

ஒரு நீதிபதி ஒத்துக் கொள்ள.. அவருடைய தலைமையிலேயே அரசியல்வியாதிகளுக்கு எதிராக தனது போராட்டத்தைத் துவக்குகிறார் சத்யராஜ். இதற்கு இன்னுமொரு போலீஸ் அதிகாரியும் ஒத்துழைப்பு கொடுக்க முதலில் அரசியல்வியாதிகளின் அல்லக்கைகள் மானாவாரியாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

பின்பு.. மக்கள் சொத்துக்களை சுருட்டி வைத்திருக்கும் அரசியல்வியாதிகளின் மேல் போலீஸ், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கிறார். அரசியல்வியாதிகள் அனைவரும் அடுத்த இரண்டு நாட்கள் இடைவெளியில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் அனைவரும் கூண்டோடு சமாதிதான் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

மந்திரி பிரதானிகளும், எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவரிடம் போய் இது பற்றி முறையிட.. அவர் தன் சோகத்தைப் புலம்புவதுதான் படத்தின் ஹைலைட்.. “நான் இதுவரைக்கும் எவ்வளவோ நல்ல பேர் சம்பாதிச்சு வைச்சிருந்தேன். அத்தனையும் குழி தோண்டி புதைச்சுட்டீங்க. உங்களையெல்லாம் எவ்ளோ நம்பியிருந்தேன். கடைசில என் குடும்பத்துல இருக்குறவங்களே எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்க..” என்று முழு பிளேட்டையும் மாற்றிப் போட்டுப் பேச.. அதுவரையிலும் படத்தின் மீதிருந்த மரியாதை இந்த இடத்தில் பட்டென்று உடைந்துபோனது.

வெறும் குரலை மட்டுமே காட்டும் அந்தக் காட்சியில் அந்தத் தலைவர் யார் என்பது தெளிவாகத் தெரிந்து தியேட்டரில் கை தட்டல்கள் ஒலித்தன என்றாலும், எஸ்.ஏ.சி.யின் இந்தச் சறுக்கல் யாருமே நினைத்துப் பார்க்காதது...!

இதுதான் இப்படியென்றால் படம் முழுக்கவே ஒருவித முழுமையற்ற இயக்கம்தான் தென்படுகிறது. ஏனென்று தெரியவில்லை. உண்மையாகவே எஸ்.ஏ.சி.தான் இயக்கம் செய்தாரா? அல்லது வேறு யாராவது செய்தார்களா என்றும் சந்தேகம் வருகிறது..!

முதல் காட்சியிலேயே நமக்கு டவுசர் கிழிந்துவிட்டது.. தூக்குத் தண்டனை கைதியை தூக்கு மேடைக்கு அழைத்துப் போகிறார்கள். நல்ல காலை நேரம். சர்வசாதாரணமாக ஜெயிலர் ஒரு காவலரை அழைத்து சூர்யாவை கூட்டிட்டு வா என்கிறார். ஏதோ கல்யாண மண்டபத்துக்கு அழைத்து வருவதைப் போல சூர்யா என்னும் விக்ராந்தை தூக்கு மேடைக்கு அழைத்து வருகிறார்கள். முகத்தில் கருப்புத் துணி மூடி கழுத்தில் கயிற்றை மாட்டிவிட்டு ஜெயிலர் வீலை இழுக்கச் சொல்லும்போது சுவரை உடைத்துக் கொண்டு ஜீப்பில் உள்ளே வருகிறார்கள் போராளிகள்..!

இந்தக் காமெடியை கடைசியாக நான் பார்த்தது 'ராஜாதிராஜா' படத்தில்தான் என்று நினைக்கிறேன். எம்புட்டு நாளாச்சு.. கொன்னுட்டாரு எஸ்.ஏ.சி...! இதுதான் இப்படியென்றால்.. விக்ராந்த் தானே கயிற்றைக் கழட்டிவிட்டு, கருப்புத் துணியைக் கழட்டி வீசிவிட்டு வந்தவர்களுடன் ஓடுகிறாராம்..!

கிட்டத்தட்ட 30 வருட திரையுலக அனுபவம் வாய்ந்தவர் எஸ்.ஏ.சி. ஏன் இப்படி..? அத்தோடு போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியதில் பலவித குழப்பங்கள்.. சுரேஷை முதலில் போலீஸ் கமிஷனர் என்று சொல்கிறார்கள். பின்பு அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்கிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரிகூட உருப்படியாக பேசவில்லை. அத்தனையும் சொதப்பல் வசனங்கள்..!

பேரன்களின் அசுர வளர்ச்சி.. திரைப்படத் துறையில் அவர்களின் ஆதிக்கம்.. பொது இடங்களில் அவர்களின் அத்துமீறல்.. தினகரன் பத்திரிகை எரிக்கப்பட்ட சம்பவம்.. தயாநிதி அழகிரி ஒரு நடு இரவில் பார்க் ஓட்டலின் பாரில் முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நட்ராஜுடன் மோதியது என்று பலவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..

ராதாரவி நீதிபதி கேரக்டரில்.. அவர் வாசிக்கின்ற தீர்ப்பு வாசகங்கள் மிக காமெடி.. அதைவிடக் காமெடி அசுர வேகத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது..! நிச்சயமாக தற்போதைய சூழலில் அது போன்று நடத்தவே முடியாது. ஆனாலும் இயக்குநரின் ஆசை போலும்..!


செந்தமிழன் சீமான், ஆ.ராசாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும் வழக்கறிஞர். ராசாவை திட்டும் சாக்கில் அனைத்து அரசியல்வியாதிகளையும் ஒரு கை பார்க்கிறார்..! அண்ணனின் இந்த வக்கீல் என்ட்ரி, கடைசி நேரத்தில் திணிக்கப்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மெயின் வில்லனாக ஏ.வெங்கடேஷ்.. விக்ராந்தின் கதையில் தோல்வியடையும் நேரத்தில் “ஸ்வீட் எடுடா” என்று கொண்டாடுவது தாத்தாவை மறைமுகமாக குத்திக் காட்டுகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..!

'ஊமை விழிகள்' படத்தின் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாட்டை  ரீ்மிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. கொத்து புரோட்டா போடுவதைப் போல பல சினிமா பாடல்களை இணைத்து இன்னொரு ஜூகல்பந்தியையும் நடத்தியிருக்கிறார். மற்றபடி படத்துக்கு இவர் எந்தவிதத்திலும் உதவவில்லை..!

காட்டுக்குள் இத்தனை இளைஞர்களையும் திரட்டிக் கொண்டு போய் அமர்த்தி தனியே டிரெயினிங் கொடுப்பதை கற்பனையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றாலும் வீரப்பன் கதையைக் கொஞ்சம் தொட்டுத் தொட்டு அதனை நம்பும்படியாக ஆக்கியிருக்கிறார் இயக்குநர்..


சத்யராஜ் சேகுவேரா ஸ்டைலில் உருமாறியிருக்கிறார். நீண்ட வருடங்களாக அவர் எதிர்பார்த்திருந்த வேடம். இப்போதுதான் சிக்கியிருக்கிறது. ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறார்..! குவார்ட்டரை கொடுத்துவிட்டு புல் அடித்த போதையில் ஆடும்படி சொன்னால் எப்படி ஆடுவார்..? அப்படித்தான் இருக்கிறது அவரது நடிப்பு..! ஆனாலும் தாத்தாவை திட்டுவதுபோல் வரும் ஒரு வசனத்தை உச்சரித்திருக்கும் தைரியத்திற்கு ஒரு சபாஷ்..! ஆனாலும் வெளிப்படையாக என்றைக்கு அவர் தனது முகமூடியைக் கழட்டப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம்..!

காட்சியமைப்புகளில் இருக்கும் உருப்படியில்லாத தன்மையும், நாடகத்தனமான வசன உச்சரிப்புகளும் படத்தின் தொய்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஒருவேளை என்னைப் போன்ற அரசியல் விமர்சகர்களுக்கு வேண்டுமானால் இத்திரைப்படம் பிடித்தமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு..? நிச்சயமாக இத்திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறையோ, நான் சிகப்பு மனிதனோ இல்லை.. அவைகளில் இருந்த ஒரு விறுவிறுப்பு, இதில் இல்லாமல் போனது என்னவோ உண்மைதான்..!


நான் படம் பார்த்த மாலை நேரத்தில் சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரைவிட்டு சற்றுத் தள்ளி காரை நிறுத்திவிட்டு தியேட்டர் மேனேஜரை அழைத்து மதியம் படம் பார்க்க வந்தவர்கள் பற்றியும், ரிசல்ட் பற்றியும் காரில் இருந்தபடியே அக்கறையுடன் விசாரித்துவிட்டுப் போனார் எஸ்.ஏ.சி.. அதேபோல் இரவு காட்சி முடிந்தவுடனும் அவருடைய உதவியாளர்கள் வெளியில் வந்தவர்களிடம் படம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது..!

எப்பாடுபட்டாவது இத்திரைப்படத்தை தேர்தலுக்குள் கொண்டு வந்தாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. அந்த ஒரு விஷயத்திற்காகவும், இந்த நேரத்தில் திரையுலகில் யாருக்குமே தோன்றாத அளவுக்குத் தைரியத்துடன் ஆளும் கட்சியை நேரடியாகவே தாக்கி ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கும் எஸ்.ஏ.சி.க்கு எனது சல்யூட்..!

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்..!

44 comments:

செங்கோவி said...

எஸ்.ஏ.சி-க்கு ஃபிட்னஸ் போய் ரொம்ப நாளாச்சுண்ணே..பழைய எஸ்.ஏ.சி இப்போ இல்லை!..நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

ஸ்ரீராம். said...

க்ளைமேக்சுக்கு பத்து நிமிஷம் முன்னாடி வரை பார்க்கலாம்னு சொல்றீங்க...!

R.Gopi said...

தலைவா...

அப்டினா, எதிர்பார்த்தபடியே படம் பட்டைய கிளப்புதுன்னு சொல்லுங்க!!

Sukumar said...

இதான் சே குவேரா கெட்டப்பா... இதுக்கே செம டென்சன் ஆகுது எனக்கு.. இதுல படத்தை வேற பார்த்துட்டு ஒரு வாட்டி பார்க்கலாம்னு முடிச்சிருக்கீங்க..

Unknown said...

//என்றைக்கு அவர் தனது முகமூடியைக் கழட்டப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம்..!//

நல்ல விமர்சனம் அப்போ படம் பாத்திடலாம்!

உண்மைத்தமிழன் said...

[[செங்கோவி said...
எஸ்.ஏ.சி-க்கு ஃபிட்னஸ் போய் ரொம்ப நாளாச்சுண்ணே. பழைய எஸ்.ஏ.சி இப்போ இல்லை! நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.]]]

இவருடைய நெஞ்சிருக்கும்வரை படத்தில்கூட இயக்கம் ஓரளவு நன்றாகத்தான் இருந்தது.. இதில் சுத்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
க்ளைமேக்சுக்கு பத்து நிமிஷம் முன்னாடி வரை பார்க்கலாம்னு சொல்றீங்க.!]]]

பார்க்கலாம்..! அதுக்கப்புறமும் படம் 20 நிமிடம் இருக்கிறது..!

Suthershan said...

அரசியல்வியாதி ---

நிச்சயம் எழுத்து பிழை இல்லை என்று நினைக்கிறன்

இன்று என் வலையில்
"உன் பார்வையில் ஓராயிரம்"
http://suthershan.blogspot.com/2011/03/1.html

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா. அப்டினா, எதிர்பார்த்தபடியே படம் பட்டைய கிளப்புதுன்னு சொல்லுங்க!!]]]

எதிர்ப்பாளர்களுக்கு ஆறுதல் சொல்லக் கூடிய ஒரு படம். ஆதரவாளர்களுக்கு கடுப்பைக் கிளப்பக் கூடிய படம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sukumar Swaminathan said...
இதான் சே குவேரா கெட்டப்பா... இதுக்கே செம டென்சன் ஆகுது எனக்கு.. இதுல படத்தை வேற பார்த்துட்டு ஒரு வாட்டி பார்க்கலாம்னு முடிச்சிருக்கீங்க.]]]

பரவாயில்லை தம்பி.. ஒரு தடவை பார்த்துட்டு வந்து சொல்லு..!

உண்மைத்தமிழன் said...

[[[யோவ் said...

//என்றைக்கு அவர் தனது முகமூடியைக் கழட்டப் போகிறார் என்று தெரியவில்லை. பார்ப்போம்..!//

நல்ல விமர்சனம் அப்போ படம் பாத்திடலாம்!]]]

அவசியம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Suthershan said...

அரசியல்வியாதி ---

நிச்சயம் எழுத்து பிழை இல்லை என்று நினைக்கிறன்]]]

எழுத்துப் பிழை இல்லை.. அவர்களை இப்படி அழைப்பது எனது வழக்கம்..!

Mathuran said...

விமர்சனம் நன்றாகவும் நடுநிலமையாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்

vasan said...

கொஞ்ச‌ கால‌மா, கிள‌வுடு நைன், ச‌ன் பிக்ச‌ர்ஸ், ரெட் ஜெயின்ட் ப‌ட‌ங்க‌ள் எல்லாம் வ‌ரலையே? ம‌க்க‌ள் ம‌றதி அந்த‌ சினிமா "ஆக்கிர‌மிப்புக‌ளை" ம‌றக்க‌ட்டும் என்றா? அல்ல‌து நடிக‌ர், டைர‌க்ட‌ர் கிடைக்க‌லையா?

உண்மைத்தமிழன் said...

[[[Mathuran said...

விமர்சனம் நன்றாகவும் நடுநிலமையாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.]]]

மிக்க நன்றி மதுரன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[vasan said...
கொஞ்ச‌ கால‌மா, கிள‌வுடு நைன், ச‌ன் பிக்ச‌ர்ஸ், ரெட் ஜெயின்ட் ப‌ட‌ங்க‌ள் எல்லாம் வ‌ரலையே? ம‌க்க‌ள் ம‌றதி அந்த‌ சினிமா "ஆக்கிர‌மிப்புக‌ளை" ம‌றக்க‌ட்டும் என்றா? அல்ல‌து நடிக‌ர், டைர‌க்ட‌ர் கிடைக்க‌லையா?]]]

தாத்தாதான் அடக்கி வைச்சிருக்காரு.. தேர்தல் முடியறவரைக்கும் வெளில வராதீங்கன்னு சொல்லியிருக்காராம்..! எல்லாம் பாயுறதுக்குத்தான்..!

ஒரு வாசகன் said...

தாத்தாவை எஸ்.ஏ.சி விமர்சிப்பது இருக்கட்டும். நீங்களும் அதிகமாக விமர்சிக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் வலையுலகில் யாருக்குமே தோன்றாத அளவுக்குத் தைரியத்துடன் ஆளும் கட்சியை நேரடியாகவே தாக்கி ஒரு ஒபடிவை தயாரித்து வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழனுக்கு எனது சல்யூட்..! :-)

a said...

அண்ணே : வணக்கம்...

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...
தாத்தாவை எஸ்.ஏ.சி விமர்சிப்பது இருக்கட்டும். நீங்களும் அதிகமாக விமர்சிக்கின்றீர்கள். இந்த நேரத்தில் வலையுலகில் யாருக்குமே தோன்றாத அளவுக்குத் தைரியத்துடன் ஆளும் கட்சியை நேரடியாகவே தாக்கி ஒரு ஒபடிவை தயாரித்து வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழனுக்கு எனது சல்யூட்..! :-)]]]

இந்த அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லீங்கோ..

என்னைவிட மிக அதிகமாக விமர்சித்தவர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்..! தேடிப் பாருங்கள்.. நிச்சயம் கிடைப்பார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணே : வணக்கம்...]]]

தம்பி வணக்கம்.. என்ன ரொம்ப நாளா காணலை.. என்ன விசேஷம்..?

pichaikaaran said...

சூப்பர் விமர்சனம் ணே . சினிமா உங்கள் ரத்தத்தில் ஊறி போயிருக்கிறது . எக்காரணம் கொண்டும் சினிமா துறையை விட்டுவிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் . அரசியல் விமர்சகராக உங்களை பார்ப்பதை விட சினிமா விமர்சகராக பார்ப்பதையே விரும்புகிறேன் . உங்களுக்கு எது பிடித்து இருக்கிறது

Arun Ambie said...

படம் பார்க்கலாமா - வேண்டாமா? நல்லாருக்கா - நல்லால்லயா? தெளிவாச் சொல்லுவீங்கன்னு பாத்தா... போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டு கடசில எஸ் ஏ சிக்கு சல்யூட் அடிச்சுட்டு ஒரு வாட்டி பாக்கலாம், கிளைமேக்சுக்கு 10 சிமிசம் முனாடி வரை பாக்கலாம்னு சொன்னா எப்புடி?

pichaikaaran said...

குவார்ட்டரை கொடுத்துவிட்டு புல் அடித்த போதையில் ஆடும்படி சொன்னால் எப்படி ஆடுவார்..? அப்படித்தான் இருக்கிறது அவரது நடிப்பு.. "


இது போன்ற வரிகள் உங்களால் மட்டுமே முடியும்... சினிமாவைப்பற்றி எழுதினால் உங்களுக்கு தனி உற்சாகம் வந்து விடுகிறது.. ஆனால் முன்பு போல சினிமா பற்றி அதிகம் எழுவதில்லை..

வீணாப்போன படம் , பிட்டு படம் , ஓடாத படம் என எதையும் விட்டு வைக்காமல் விமர்சனம் எழுதிய உ த அண்ணனை மீண்டும் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் பலரிடமும் உள்ளது

ஒரு வாசகன் said...

கேட்கணும் என நினைத்து மறந்துவிட்டேன், விஜய் கெளரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றார்களே, நடிக்கின்றாரா?

ELANGOVAN said...

SACs family is the worst family in the movie industry. next satyaraj is the fraud no1 guy. someone shd take movie about their family.
once in loolu sabha they made a show of vijay movie, and this guy threatened them. now he is talking abt karunanidhi family.
vijay after knowing all the ealam people kolai by congress. he went and met Rahul. he and his dad praised Rahul like anything. now we tamils forget all their criminal minds and support them blindly.
even seeman, did he ever question why did vijay meet Rahul?

ELANGOVAN said...

உண்மைத்தமிழன் & all ealam supporters, pls tell me :
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லா வற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் சீமான் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக சீமான் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது , ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடிய வில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
சூப்பர் விமர்சனம்ணே. சினிமா உங்கள் ரத்தத்தில் ஊறி போயிருக்கிறது. எக்காரணம் கொண்டும் சினிமா துறையை விட்டுவிட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். அரசியல் விமர்சகராக உங்களை பார்ப்பதைவிட சினிமா விமர்சகராக பார்ப்பதையே விரும்புகிறேன். உங்களுக்கு எது பிடித்து இருக்கிறது]]]

இரண்டுமே பிடித்திருக்கிறது..! எதையும் நானாக விட முடியாது பார்வை..! சினிமா தொழில்..! அரசியல் எனது நோக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
படம் பார்க்கலாமா - வேண்டாமா? நல்லாருக்கா - நல்லால்லயா? தெளிவாச் சொல்லுவீங்கன்னு பாத்தா... போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டு கடசில எஸ்.ஏ.சி.க்கு சல்யூட் அடிச்சுட்டு ஒரு வாட்டி பாக்கலாம், கிளைமேக்சுக்கு 10 சிமிசம் முனாடி வரை பாக்கலாம்னு சொன்னா எப்புடி?]]]

இப்போ நடுரோட்டுல லஞ்சம் வாங்குற ஒரு கான்ஸ்டபிளை பிச்சைக்காரன் ஒருத்தன் தனக்குத் தெரிஞ்ச அளவுக்கு திட்டினான்னா அந்த உணர்ச்சிப் பொங்கலை பாராட்டுவீர்களா..? மாட்டீர்களா..? அதைத்தான் இங்கே செய்திருக்கிறேன்.. இயக்கம் படு சொதப்பல். ஆனால் செய்ய வேண்டும் என்று நினைத்த அவரது தைரியத்துக்கு எனது பாராட்டுகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
குவார்ட்டரை கொடுத்துவிட்டு புல் அடித்த போதையில் ஆடும்படி சொன்னால் எப்படி ஆடுவார்..? அப்படித்தான் இருக்கிறது அவரது நடிப்பு.. "


இது போன்ற வரிகள் உங்களால் மட்டுமே முடியும். சினிமாவைப் பற்றி எழுதினால் உங்களுக்கு தனி உற்சாகம் வந்து விடுகிறது. ஆனால் முன்பு போல சினிமா பற்றி அதிகம் எழுவதில்லை.

வீணாப் போன படம், பிட்டு படம், ஓடாத படம் என எதையும் விட்டு வைக்காமல் விமர்சனம் எழுதிய உ.த. அண்ணனை மீண்டும் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் பலரிடமும் உள்ளது.]]]

இப்போதைக்கு எதையுமே நான் அதிகமாக எழுதுவதில்லை பார்வை. நேரமில்லாததுதான் காரணம்.. மிக விரைவில் எழுதத் தொடங்குவேன்..! மீனவர் பிரச்சினைகள் பற்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

கேட்கணும் என நினைத்து மறந்துவிட்டேன், விஜய் கெளரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றார்களே, நடிக்கின்றாரா?]]]

இல்லை. நடிக்கவில்லை. ஆனால் அவருடைய ரசிகர் மன்ற போர்டு அவ்வப்போது வந்து செல்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...
SACs family is the worst family in the movie industry. next satyaraj is the fraud no1 guy. someone shd take movie about their family.
once in loolu sabha they made a show of vijay movie, and this guy threatened them. now he is talking abt karunanidhi family. vijay after knowing all the ealam people kolai by congress. he went and met Rahul. he and his dad praised Rahul like anything. now we tamils forget all their criminal minds and support them blindly. even seeman, did he ever question why did vijay meet Rahul?]]]

சரியான கேள்விதான்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளில் ஆர்வம்..

எஸ்.ஏ.சி. இப்போது இதை எடுத்ததற்கான காரணம்கூட அவரையும், அவர் மகனான விஜய்யையும் பேரன்கள் குறி வைத்த பின்புதான்..! இதனை நான் விமர்சனத்திலேயே சொல்லியிருக்கிறேன்..!

என்ன செய்ய? இப்போதைக்கு இந்தக் குடும்பத்தை எதிர்க்க.. எப்படியெல்லாம், எந்த ரூபத்திலெல்லாம் ஆதரவு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்துவதுதான் நமது புத்திசாலித்தனம். அதைத்தான் நானும் செய்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...
உண்மைத்தமிழன் & all ealam supporters, pls tell me :
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் சீமான் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக சீமான் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.]]]

வேறு வழியில்லை. இப்போது ஒருவர் ஆதரவு கொடுக்க முன் வரும்போது அதனைப் பற்றிக் கொள்ளத்தான் வேண்டும். சீமானின் நிலைமை இதுதான். அவருக்கு ஒரு பிளாட்பார்ம் தேவை.. அதிலும் காங்கிரீட். அது விஜய்தான். சீமானை நம்பியிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு அவர் பணியும், பணமும் கொடுத்தாக வேண்டும். கூடவே தனது கொள்கைகளை பரப்பவும் வேண்டும். விஜய்யை சீமான் பயன்படுத்த நினைக்கிறார். விஜய்யும் அப்படியே..! நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் சினிமா தொழிலில் நீடிக்க முடியாது..!

ELANGOVAN said...

சீமான் சினிமாவில் விஜயை வைத்து என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பார்க்க வேணாம். அதுக்காக ஒரு துரோகிய (rahula சந்திச்சி congressla சேர முயற்சி பண்ண இவன் தான் முதல் துரோகி) பார்த்து நல்லவங்க அரசியலுக்கு வரணும், இதெல்லாம் தேவய! அப்ப வுனக்கும் (சீமானுக்கும்) கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம். இன்றய்க்கு நாம் எல்லோரும் வசதியா ஜெயா செய்ட துரோகத்தை மறந்டிடுறோம். தமிழ்நாட்டில் ltte சப்போர்ட்ஐ ஒலித்து கட்டிய முதல் துரோகி அவள் தான். ltte சப்போர்ட்க்காக கருணாநிதி ஆட்சி கலைக்க பட்டது, அதன் பிறகு நடந்த தேர்தலில் நம் தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்?
அவளவு ஏன் இப்ப கூட congressuku நான் சப்போர்ட் பண்கிறேன் என்று சொன்னாலே jaya (during spectrum issue).
இன்றைக்கு congressai தோற்கடிக்க நாம் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க துடிக்கிறோம். அவள் மீண்டும் வந்தால் தான் தெரியும் சீமானுக்கு! எத்தனை தடவை பட்டாலும் நாம் திருந்த போவதில்லை!
atleast congress (sonia) has personnel enemity against ltte. but why did this jaya want to suppress LTTE support from tamilnadu? her friends cho and subram swamy are worst than congress. she is the main culprit behind all this problems.

ராஜ நடராஜன் said...

//அரசியல்வியாதி ---

நிச்சயம் எழுத்து பிழை இல்லை என்று நினைக்கிறன்//

அண்ணன் எப்ப இந்த சொல்லை சரியா உச்சரிச்சிருக்காரு:)

seethag said...

உ .த. சார்,

இந்த திரைப்படத்தை நான் பார்க்கமாட்டேன்.ஆனால் எஸ்.ஏ. துணிச்சலை பாராட்டலாம். என்ன, ஸ்,ஏ மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட அத்தனை பேரும் சுயனலவாதிகள் தான்.
சீமான் மட்டும் ஏமாந்தவர்.

நம்மை மாதிரி சுயனல மக்கள் இருக்கிறவர்ஐ யாரையும் ஒண்ணும் செய்யமுடியாது. ஏன் இத்தனை நாளானாலும், நாம் யாருமே, தமிழ்ப்பரிட்ட திரைப்படத்திற்க்கு வரி விலக்கு என்னும் திட்டத்திற்க்கு எதிராஒண்ணுமே செய்யல?

அதுவும், தத்தாவின் கோஷ்ட்டிகள் தான் அதுல ரொம்பவே பயனடைஞ்சவங்க இல்லையா?அவுங்க தானே எக்கச்சக்கமான படம் எடுத்தவங்க?

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...

சீமான் சினிமாவில் விஜயை வைத்து என்ன வேணும்னாலும் பண்ணட்டும். நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பார்க்க வேணாம். அதுக்காக ஒரு துரோகிய (rahula சந்திச்சி congressla சேர முயற்சி பண்ண இவன் தான் முதல் துரோகி) பார்த்து நல்லவங்க அரசியலுக்கு வரணும், இதெல்லாம் தேவய! அப்ப வுனக்கும் (சீமானுக்கும்) கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம். இன்றய்க்கு நாம் எல்லோரும் வசதியா ஜெயா செய்ட துரோகத்தை மறந்டிடுறோம். தமிழ்நாட்டில் ltte சப்போர்ட்ஐ ஒலித்து கட்டிய முதல் துரோகி அவள்தான். ltte சப்போர்ட்க்காக கருணாநிதி ஆட்சி கலைக்கபட்டது, அதன் பிறகு நடந்த தேர்தலில் நம் தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்?
அவளவு ஏன் இப்ப கூட congressuku நான் சப்போர்ட் பண்கிறேன் என்று சொன்னாலே jaya (during spectrum issue). இன்றைக்கு congressai தோற்கடிக்க நாம் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க துடிக்கிறோம். அவள் மீண்டும் வந்தால்தான் தெரியும் சீமானுக்கு! எத்தனை தடவைபட்டாலும் நாம் திருந்த போவதில்லை!]]]

சரி.. இப்ப உங்களது கோரிக்கையென்ன? கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் என்பதா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//அரசியல்வியாதி ---

நிச்சயம் எழுத்து பிழை இல்லை என்று நினைக்கிறன்//

அண்ணன் எப்ப இந்த சொல்லை சரியா உச்சரிச்சிருக்காரு:)]]]

ஹி.. ஹி.. ஹி.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே இப்படித்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[thiru said...

உ.த. சார், இந்த திரைப்படத்தை நான் பார்க்க மாட்டேன்.ஆனால் எஸ்.ஏ. துணிச்சலை பாராட்டலாம். என்ன, ஸ்,ஏ மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட அத்தனை பேரும் சுயனலவாதிகள்தான். சீமான் மட்டும் ஏமாந்தவர். நம்மை மாதிரி சுயனல மக்கள் இருக்கிறவர்ஐ யாரையும் ஒண்ணும் செய்ய முடியாது. ஏன் இத்தனை நாளானாலும், நாம் யாருமே, தமிழ்ப் பரிட்ட திரைப்படத்திற்க்கு வரி விலக்கு என்னும் திட்டத்திற்க்கு எதிரா ஒண்ணுமே செய்யல? அதுவும், தத்தாவின் கோஷ்ட்டிகள்தான் அதுல ரொம்பவே பயனடைஞ்சவங்க இல்லையா? அவுங்கதானே எக்கச்சக்கமான படம் எடுத்தவங்க?]]]

உண்மைதான். சீமானும் எந்தப் பக்கம் இருந்து உதவிகள் கிடைத்தாலும் அதனைத் தனது கொள்கைக்குப் பயன்படுத்தலாம் என்று நினைத்து செயல்படுகிறார். அவரளவில் அது சரியானதுதான்..!

ELANGOVAN said...

சரி.. இப்ப உங்களது கோரிக்கையென்ன? கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் என்பதா..?///


எனக்கு கோரிக்கை எல்லாம் ஒன்றும் இல்லை! நம் மக்கள் கருணாநிதிக்கு மாற்றை ஜெயாவை சப்போர்ட் சைகிறர்களே!
நாம் மீண்டும் மீண்டும் மிக பெரிய தவறை செய்கிறோம். ஆனால் எனக்கு மீண்டும் ஜெயா தன வரணும், ஏன் என்றல் நம் மக்கள் மீண்டும் பட்டாள் தான் தெரிவார்கள்!
Thanks for your replies.

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...
சரி.. இப்ப உங்களது கோரிக்கையென்ன? கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் என்பதா..?///

எனக்கு கோரிக்கை எல்லாம் ஒன்றும் இல்லை! நம் மக்கள் கருணாநிதிக்கு மாற்றை ஜெயாவை சப்போர்ட் சைகிறர்களே! நாம் மீண்டும் மீண்டும் மிக பெரிய தவறை செய்கிறோம். ஆனால் எனக்கு மீண்டும் ஜெயா தன வரணும், ஏன் என்றல் நம் மக்கள் மீண்டும் பட்டாள்தான் தெரிவார்கள்!
Thanks for your replies.]]]

கருணாநிதி, ஜெயாவுக்கு மாற்றாக இங்கே யார் நிற்கிறார்கள்? இருக்கிறார்கள்? சொல்லுங்கள். அவர்களுக்கு ஓட்டளிக்கச் சொல்லலாம்..!

aalunga said...

நண்பரே..
இதற்கு நீங்கள் "குள்ளநரிக் கூட்டம்" பார்த்து இருக்கலாம்!

உண்மைத்தமிழன் said...

[[[AALUNGA said...
நண்பரே.. இதற்கு நீங்கள் "குள்ள நரிக் கூட்டம்" பார்த்து இருக்கலாம்!]]]

இல்லை. இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். இது அரசியல் கலப்பானது.. ஆகவே தவிர்க்க முடியாத திரைப்படம்..!

abeer ahmed said...

See who owns mortgagefit.com or any other website:
http://whois.domaintasks.com/mortgagefit.com

abeer ahmed said...

See who owns hawaii.edu or any other website.