மாலா ஜெயராம் - விரைவில் விடைபெற்ற ஒரு வாசகி..!


30-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றினை பார்த்த மாத்திரத்தில் அது நீங்கள் சந்தித்த ஒருவரையோ அல்லது அவரது பிம்பத்தையோ பிரதிபலித்தால் அவர் நிச்சயம் உங்களுக்கு ஸ்பெஷல்தான்..

அந்த ஸ்பெஷல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் மனிதர்களுக்கிடையில் இது வேறு, வேறாகத்தான் நிச்சயம் இருக்கும்.. அப்படித்தான் எனக்கும் யாரோ, யாரையாவது பார்த்து மெல்லிய புன்னகையை வீசினால்கூட கடந்த இரண்டு நாட்களாக மாலா ஜெயராம் என்ற இந்த பேஸ்புக் தளத்தின் தோழியையே ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.



இவருக்கு மரணமா என்று கேள்விப்பட்ட அனைத்து நண்பர்களையும் ஒரு சேரத் தாக்கியது அந்தக் கேள்வி.. நட்பு வட்டத்தில் சுலபத்தில் மறக்க முடியாத அளவுக்கு இருந்தது அவரது ஈர்ப்பு.. இதற்கு முழு முதற் காரணம் அவரது இயல்பான சிரிப்பு.. எப்போதும் சிரித்த முகம்.. இது ஒன்றே மலர் வளையங்களோடு முதல் முறையாக மாலாவை பார்க்க வந்திருந்த நண்பர்களை திகைக்க வைத்துவிட்டது.

பேஸ்புக் இணையத் தளத்தில் நான் உள்ளே நுழைந்ததில் இருந்தே மாலா ஜெயராம் என்கிற பெயரை பலருடைய முகப்புப் பக்கத்தில் பார்த்திருக்கிறேன். பார்த்தவுடன் ஈர்த்தமைக்குக் காரணம், புகைப்படத்தில் தென்பட்ட அவரது அளவான புன்னகை..

எந்தப் பக்கம் திரும்பினாலும் நட்பு வட்டத்தில் அவரது பெயர் இருக்கவே ஏதோ ஒரு நாளில் நானும் அவருடைய பேஸ்புக் தளத்தில் நண்பராக இணைந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து மாலாவும், அவரது தோழிகளான சுஜாதா தாராகேசன், லலிதா அபிமன்யூ மூவரும் இணைந்து  சென்னைகாகா(chennaigaga.com)  என்ற பெயரில் ஒரு கண்காட்சி நடத்துவதாக பேஸ்புக்கில் படித்தேன்..

இது பற்றி அன்றைக்குத் தற்செயலாக பேஸ்புக்கில் ஆன்லைனில் இருந்தவரிடம் நான் கேட்டபோது “நீங்களும் வாங்களேன்” என்று அழைப்பு விடுத்தார். என்னால் முதல் நாள் செல்ல முடியவில்லை. கனிமொழி இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மறுநாள்தான் நான் சென்றிருந்தேன்.

பேச்சைத் துவக்கியதில் இருந்தே சிரிப்புதான். பேஸ்புக் லின்க் மூலமாக எனது வலைத்தளத்தைப் படித்திருக்கிறார் போலும். “நீங்கதான் அந்த சரவணனா..?” ஒரு சிரிப்பு.. “போட்டாவுல ஒரு மாதிரி இருக்கீங்க. நேர்ல ஒரு மாதிரியாயிருக்கீங்க..?” - ஒரு சிரிப்பு.. “எப்படி ஆபீஸ் வேலையும் பார்த்திட்டு இவ்வளவையும் பொறுமையா டைப் பண்றீங்க..?” - ஒரு சிரிப்பு.. “நிறைய டைப் செஞ்சிருக்கீங்களே..? டைப் பண்ண ஆள் வைச்சிருக்கீங்களா..?” - ஒரு சிரிப்பு.. இப்படி பேச்சுக்கு பேச்சு சிரித்தபடியே இருக்க.. என்னுடைய குறை காதுக்கு அது பெரிய குறையாகவே போனது..

“மேடம்.. நீங்க மொத்தமா சிரிச்சு முடிங்க.. அப்புறமா நாம பேசலாம்..” என்றேன். “ஐயோ.. இல்ல.. இல்ல. நான் எப்பவுமே இப்படித்தான் பேசுவேன்..” என்றார் மீண்டும் அதே புன்னகையோடு.

கொஞ்சம் தமிழும், நிறைய ஆங்கிலமும் சரளமாக வந்து விழுந்து கொண்டிருந்த அவரது பேச்சைவிட அவரது ரசனையான புன்னகையே பிரதானமாக இருக்க.. கிடைத்த 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் வலையுலக வரலாற்றையும், திரட்டிகள் பற்றியும், நமது பதிவர்கள் பற்றியும் சொன்னேன். அத்தனைக்கும் அவருடைய ஆமோதிப்பு அவரது புன்னகைதான்.

அன்றைக்கு நிறைய கூட்டம் இருந்ததால் தொடர்ந்து பேச முடியாமல் போய் “திரும்பவும் சந்திப்போம் மேடம்” என்று சொல்லி வந்துவிட்டேன்.

சில நாட்கள் கழித்து “hi liked your tamil blog”  என்று சின்னதாக ஒரு மெஸேஜை அனுப்பியிருந்தார். இது எனக்கே அதிர்ச்சிதான்.. நம்ம பிளாக்கையெல்லாம் காஸ்மாபாலிட்டன் வட்டாரத்தில் இருக்கும் இவர் எங்கே படிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் அவரது இந்த மெஸேஜ் என்னைத் திகைக்க வைத்தது..

பதிலுக்கு நானும் நன்றி தெரிவித்துவிட்டு நமது வலையுலகத் திரட்டிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு “இங்கு சென்றால் எனது வலைத்தளங்களைப் போலவே இன்னும் நிறைய தளங்கள் இருக்கின்றன. நிறைய படிக்கலாம்” என்று குறிப்பிட்டு மெஸேஜ் செய்தேன். இதற்கும் நன்றி தெரிவித்து உடனுக்குடன் பதில் வந்தது..

அதன் பின்பு தினம்தோறும் இரவு நேரத்தில் பேஸ்புக்கில் ஆன்லைனில் வருவார். அவர் அழைக்காவிட்டாலும் நம்ம குசும்பு, நம்மளை விட்டுப் போகுமா..?

நான் ஏதாவது புதிய பதிவு எழுதினாலும் அதனுடைய லின்க்கை அவருக்கு அனுப்புவேன். “படிக்கிறேன்” என்று சிம்பிளாக பதில் வரும்.. அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ “படித்தேன்” என்று மட்டும் சொல்லி மறக்காமல் சிரிப்பானை போட்டிருப்பார்..

நானும் விடாமல் வேறு ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து பதிவுகளின் லின்க்கை அனுப்பிக் கொண்டேயிருந்தேன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் ஆன்லைனில் வந்த உடனேயே “பார்த்துட்டேன்” என்று என்னை முந்திக் கொண்டு ஒரு பின்னூட்டத்தை போட்டு என்னைச் சிரிக்க வைத்து விட்டார்.

அன்றைக்கு இன்னும் கொஞ்ச நேரம் சாட்டிங்கில் பேசினோம். அவருக்கு ஆர்ட், மற்றும் சுற்றுலா, டிஸைனிங், ஹாலிவுட் சினிமாக்கள் மட்டுமே ஆர்வம் போலும்.. “இது பற்றிய பிளாக்குகள் இருந்தால் கொடுங்கள். படிக்கிறேன்” என்றார்.

எனக்குச் சுற்றுலா என்றவுடன் துளசி டீச்சரைத் தவிர வேறு யாரையும் நினைவுக்கு வரவில்லை. ஆகவே துளசி டீச்சரின் தளத்தின் முகவரியைக் கொடுத்தேன்.. ஹாலிவுட் சினிமாக்களுக்கு நமது பட்டர்பிளை சூர்யா, ஹாலிவுட் பாலாவின் லின்க்கை கொடுத்தேன். “படிக்கிறேன்” என்றார்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்து “உங்க பிளாக்கை படிச்சு முடிக்க முடியலை.. ரொம்ப நீளம்..” என்று ஆங்கிலத்தில் ஒரு மெஸேஜ் அடித்துவிட்டு மறக்காமல் சிரிப்பானை போட்டிருந்தார்.. வழக்கம்போல், “அதுதாங்க என் ஸ்டைல்..” என்றேன்.. இதுக்கும் ஒரு சிரிப்பானை போட்டுவிட்டுப் போனார்.

இன்னும் சில நாட்கள் கழித்து.. “கொடுத்த லின்க்கையெல்லாம் படிச்சீங்களா?” என்று ஒரு மெஸேஜை தட்டிவிட்டேன். “நேரம் இல்லை.. நான் பெரும்பாலும் மொபைல்லயே நெட் யூஸ் பண்றதால முழுசையும் படிக்க முடியறதில்லை” என்று குறைபட்டுக் கொண்டார்..

அப்படியும் நான் விடாமல் “கொஞ்சம் அரசியல் தளங்களையும் பாருங்க..” என்று சொல்லி வினவு, மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், வால்பையன், டோண்டு இவர்களின் முகவரியைக் கொடுத்தேன். “ஐயோ பாலிடிக்ஸா..? ஐ கேட் பாலிடிக்ஸ்.. எனக்குச் சுத்தமா தெரியாது..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு மறக்காமல் சிரிப்பானை போட்டிருந்தார்.

அவ்வப்போது பேஸ்புக்கில் சந்திக்கின்ற நேரங்களில் அவருடைய மெஸேஜ்கள் சிரிப்பான்கள் இல்லாமல் வந்ததில்லை.. ஒரு நாளின்போது, “நீங்க ரொம்பக் கஷ்டப்படாதீங்க. நான் பேஸ்புக்ல நீங்க கொடுக்குற லின்க் மூலமா உங்க பிளாக்கை தொடர்ந்து வாசிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்று ஆங்கிலத்தில் சொல்லியிருந்தார். சரி.. நமக்கு இப்படியும் ஒரு வாசகர் கிடைத்திருக்கிறாரே என்று நினைத்து அல்ப சந்தோஷத்தில் திளைத்து மூழ்கியிருந்தேன்.

நேற்று காலை சக பதிவர் தேனம்மை லட்சுமணன் பேஸ்புக்கில் போட்டிருந்த ஒரு செய்தியின் மூலம்தான் அந்த புன்னகை தாரகையின் மரணச் செய்தி கிடைத்தது.. நம்ப முடியாத அதிர்ச்சி.. அவருக்கா இது..? ஏன்.. எதற்கு என்று ஒரு மணி நேரமாக திகைப்பில் மூழ்கிப் போனேன்..

அவர் ‘தினத்தந்தி' பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தனின் மூத்த மகள் என்கிற செய்திகூட நேற்று கலைஞர் செய்திகள் சேனலில் ஓடிக் கொண்டிருந்த ஸ்கிரால் நியூஸை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.. இது இன்னுமொரு அதிர்ச்சி..

அவருடைய பேஸ்புக் தளத்திலும், அவருடைய நட்பு வட்டாரத்திலும் அவருடைய பேக்கிரவுண்டு  பற்றி ஒரு சின்ன க்ளூகூட இல்லாததுதான் மிகப் பெரிய விஷயம். அவருக்கு வயது 47 என்பதுகூட பத்திரிகைகளில் பார்த்து நம்ப முடியாததுதான்.

எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம்தான். ஆனால் வந்த பின்புதான் தாங்க முடியவில்லை. இரண்டு நாட்கள் ஒரு வேலையும் செய்ய விடாமல் தடுக்கிறது ஏன்.. ஏன்.. ஏன்..? என்ற கேள்வி.

டச்சஸ் கிளப் என்கிற பெயரில் இயங்கும் பெண்களுக்கான டூர்ஸ் கிளப்பில் மிக முக்கிய உறுப்பினரான மாலா ஜெயராம் கிட்டத்தட்ட  அனைத்து டூர்களுக்கும் சென்று வந்திருக்கிறார். சமீபத்தில் தென்ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, என்று போய்விட்டு வந்து ரஷ்யாவுக்கு 24-ம் தேதியன்றுதான் கிளம்பியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 2 அன்று திரும்புவதாகத் திட்டம்..

ரஷ்யாவில் உலக அதிசயமாக இந்தாண்டு வெயில் கொளுத்தியெடுப்பதாக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. மாஸ்கோவில் தங்கியிருந்த மாலாவுக்கு அந்த வெயில் சட்டென ஒத்துக் கொள்ளாத நிலையில் உடல் நிலை கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடும் வெப்பம் அவரது நுரையீரலையும் பாதித்ததினால், நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவமனையில் இறந்திருக்கிறார்.

Off to Russia  என்ற ஒரேயொரு வாக்கியத்தை மட்டுமே பேஸ்புக்கில் தன்னுடைய முகப்புத்தகத்தில் கடைசியாக பதிவு செய்திருக்கும் மாலா, இப்போது ரஷ்யாவையும் தாண்டி பயணித்துவிட்டார்..

ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவரது புன்னகையின் மீதும், அவரது அன்பான பேச்சின் மீதும்.. நம்மையெல்லாம் ஒரு மனிதராக நினைத்து கூப்பிடுவதே பெரிய விஷயம் என்று நினைக்கின்றபோது நாலு வார்த்தைகள் பேசியதும், எனது வலைத்தளத்திற்கு தான் ஒரு ரெகுலர் வாசகர் என்று சொன்னதும் என்னைப் பெருமைப்படுத்திய விஷயம்..

அது  இத்தனை  சீக்கிரமாகவா உடைய வேண்டும்..?

மரணத்திற்கு மட்டுமே ஜாதி, இன, மொழி, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை.. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தருவதில் காலமோ அல்லது முருகனோ தவறுவதேயில்லை.. ஆனாலும் நாம் அனைவருமே அதனால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறோம்..

கோமகன் வீடாக இருந்தாலென்ன? குடிசை வீடாக இருந்தால் என்ன? தாயின் மரணத்திற்கு மகள் சிந்தும் கண்ணீரும், மகனின் துயரத்திற்காக தந்தை சிந்தும் கண்ணீரும் ஒன்று போலத்தான்.. வித்தியாசமே இல்லை.. இன்று மதியம் 2 மணிக்கு மாலா ஜெயராமின் வீட்டிலும் நான் இதைத்தான் பார்த்தேன்.

அண்ணா சாலையின் தேவர் சிலை இருந்த பகுதியில் இருந்து அவருடைய வீடு வரையிலும் இருந்த போஸ்டர்களில் மாலா தென்பட்டார். அதே புன்னகையோடு..

கொண்டாட்டங்களுக்கு மட்டுமே வர்க்கப் பேதங்கள் உண்டு.. ஆனால் துக்கங்களுக்கு அது இல்லை.. பெற்றோர் தாங்கள் இருக்க பிள்ளைகள் மரணிப்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள். மாலாவின் தாயார், தன் தலையில் அடித்துக் கொண்டே அவரது உடலைச் சுற்றி வந்தபோது ஒரு கணம் சட்டென என் கண்கள் கலங்கிப் போய்விட்டன. மாலாவின் டீன் ஏஜ் மகளும், மாலாவின் உடலை தூக்கிச் சென்ற பின்பும் தனது அப்பாவை சுடுகாட்டுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டு நின்றதை எப்படித்தான் வெளிப்படுத்துவது..?

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இந்த வயதில் எனக்கு இருக்கிறது என்றாலும், சில சமயங்களில் அதனை உடைத்துப் போட்டு வேடிக்கை பார்க்கிறான் முருகன்.

மரணங்கள் இயல்புதானே என்று நமக்கு நாமே என்னதான் சமாதானம் செய்து கொண்டாலும், எப்படியாவது எதையாவது சொல்லி வெளிப்படுத்தினால்தான் இப்போது எனது மனம் சாந்தியாகும் என்ற நிலை..

நான் இன்னும் பல வருடங்கள் இந்த வலைத்தளத்தில் எழுதலாம்.. புதிய, புதிய புனைப் பெயர்கள் கிடைக்கலாம்.. இன்னும் பல நட்பு வட்டங்கள்  உருவாகலாம்.. பாலோயர்ஸ் கிடைக்கலாம்.. வாசிப்பவர்கள் பழக்கமாகலாம்.. ஹிட்ஸ்கள் கிடைக்கலாம்..           

ஆனால் அந்தப் புன்னகை..?



இணைப்பு : http://www.dailythanthi.com/article.asp?NewsID=584031&disdate=7/31/2010

கட்டா மீத்தா - ஹிந்தி திரைப்படம் - விமர்சனம்


29-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1988-ம் வருடத்தில் ஒரு நாள் 'சித்ரம்' என்ற மலையாளப் படத்தை மதுரை மினிப்பிரியா தியேட்டரில் பார்த்துவிட்டு, தியேட்டரில் இருந்து வெளியே வருவதற்குள்ளேயே  மோகன்லாலின் தீவிர ரசிகனாக மாறிப் போனேன்.  

அதுவரையிலும் அந்த மோகன்லாலை திண்டுக்கல் என்.வி.ஜி.பி. தியேட்டரிலும், கணேஷ் தியேட்டரிலும் காலை காட்சியாக ஓட்டப்படும் மலையாள பிட்டு படங்களில் பார்த்ததோடு சரி..

அந்த அற்புதமான மகா கலைஞனின் உண்மையான நடிப்பை இதன் பின்பு அடையாளம் கண்டு, அதன் பின்னான லால் சேட்டனின் நல்ல மலையாளப் படங்களின் தமிழக வருகையின்போது தவறாமல் பார்த்துவிடுவது எனது வழக்கம்.

அப்படித்தான் ஒரு நாள் மதிய வேளையில் மதுரை மினிப்பிரியா தியேட்டரில் நான் பார்த்து வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்துத் தொலைத்த படம் 'Vellanakalude Nadu'. வெளங்காலுடு நாடு.. உச்சரிப்பு சரியா..? அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. 'வெளங்காத நாடு' என்றா..? யாருக்குத் தெரியும்..?

கொட்டாக்காரா சீனிவாசனின் கதையில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, லிசி நடித்திருந்திருந்தார்கள். மலையாள மண்ணின் மணத்தோடு கொஞ்சமும் நாடகத்தனம் இல்லாமல் மிக யதார்த்தமாக லஞ்ச ஊழலில் சிக்கித் தவிக்கும் நமது அரசு இயந்திரங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் பிரியதர்ஷன்.

இந்தப் படத்தைத்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஹிந்தியில் 'கட்டா மீத்தா'வாக ரீமேக் செய்திருக்கிறார் பிரியதர்ஷன்.

மோகன்லால் வேடத்தில் அக்சய் குமார். ஷோபனா இடத்தில் த்ரிஷா. 


சச்சின் டிக்காலே என்னும் வேடத்தை ஏற்றிருக்கும் அக்சய்குமார் ஒரு முனிசிபல் ரோடு காண்ட்ராக்டர். காண்ட்ராக்ட் என்றால் கோடிக்கணக்கில் அல்ல.. ஏதோ சின்னதாக சில லட்சங்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மட்டுமே பெற்று ரோடு போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

இந்த பணிக்காக முனிசிபல் அலுவலகத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்பதால் இவருக்கு வர வேண்டிய பாக்கித் தொகைகள் எல்லாம் அப்படியே முனிசிபல் ஆபீஸ் பைலில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.. 


இதனால் தொடர்ந்து வேலைகளைத் தொடர்வதற்கு கையில் பணமில்லாமல் தனது வாட்ச், செயின், வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்கள் என்று அத்தனையையும் அடகோ, விற்பனையோ செய்து தொழிலாளர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்து பொழைப்பை ஓட்டி வருகிறார் அக்சய்.

தொழிலில்தான் பிரச்சினை என்றால் வீட்டில் அதைவிட..! அவரது அக்காக்களின் கணவர்மார்கள், அண்ணன், அப்பா, அம்மா என்று யாருமே அக்சயை புரிந்து கொள்ளாதவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அக்சய் ஒரு உருப்படாதவர்.. பொழைக்கத் தெரியாதவர் என்பதுதான்..!


அக்சயின் அக்கா கணவர்களில் ஒருவர் அதே முனிசபல் ஆபீஸில் லஞ்சத்தில் திளைக்கும் தலைமைப் பொறியாளர். லோக்கல் அரசியல்வியாதிகளுடன் இணைந்து ஊர் நிலத்தையெல்லாம் தனது நிலம் என்று சொல்லி பெரிய, பெரிய நிறுவனங்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கும் பார்ட்டி. இவருக்குத் துணை இன்னொரு மாமா. அவர் அக்சயை போல சில லட்சங்கள் மதிப்புள்ள காண்ட்ராக்டுகளை ஏற்காமல் கோடிகளில் செய்பவர்.

இந்த இரண்டு மாமாக்களும், அரசியல் வியாதிகளுடன் இணைந்து கட்டிய ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் இறந்து போகிறார்கள். இந்தப் பழியில் இருந்து தப்பிக்க தங்களது வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வரும் கார் டிரைவரை(டினு ஆனந்த்) பாலத்தை குண்டு வைத்தது தகர்த்ததாக பொய் சொல்ல வைத்து போலீஸில் சரணடைய வைக்கிறார்கள். பின்பு அவரை கொலையும் செய்து விடுகிறார்கள்.


அக்சயின் கல்லூரி காலத் தோழியான த்ரிஷா முனிசிபல் கமிஷனராக அதே ஊருக்கு வருகிறாள். தனது பழைய கணக்கு வழக்குகளையெல்லாம் அவளிடம் பேசப் போகும் அக்சய்.. அவள் தன் மீது இன்னமும் கோபத்தில் இருப்பதை உணர்ந்தாலும், தான் நேர்மையானவன் என்பதை த்ரிஷாவின் மனதில் பதிய வைக்க முயல்கிறான்.

அக்சயின் பொறியாளர் மாமா, த்ரிஷாவுடன் ஸ்பாட்டுக்கு வந்து ரோட்டை தோண்டியெடுத்து வெறும் மணலை கொட்டித்தான் அக்சய் ரோடு போட்டிருப்பதாகவும், இதனால் அவனுக்கு பணத்தை செட்டில் செய்யக் கூடாது என்றும் சொல்ல அக்சய் டென்ஷனாகிறார்.


த்ரிஷாவும் அக்சயும் ஒருவர் மாற்றி ஒருவர் தவறாகவே அர்த்தம் புரிந்து கொண்டு காலை வாரிவிட்டுக் கொண்டிருக்க அக்சய் கொஞ்சம் ஓவராகவே போய்விடுகிறார். த்ரிஷாவுக்கு லஞ்சம் கொடுப்பது போல் ஒரு செட்டப் செய்து அவரை லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் மாட்டிவிட்டு சஸ்பெண்ட் செய்ய வைக்கிறான்.

த்ரிஷா அசிங்கப்பட்ட மனநிலையில் தற்கொலைக்கு முயல.. இதன் பின்பு அக்சய் மருத்துவமனைக்கு ஓடோடி போய் தன் நிலையை விளக்க.. த்ரிஷா இப்போது அதனையும், அவனையும் ஏற்றுக் கொள்கிறார்.

அக்சயின் தங்கையை மாமாக்களின் அரசியல் தோஸ்த்து ஒருவன் கல்யாணம் செய்து கொள்கிறான். அக்சய் இதனை கடுமையாக எதிர்த்தும் பலனில்லாமல் போகிறது..


இடையில் மாமாக்களும், அண்ணன்களுமாக சேர்ந்து அரசு நிலத்தை ஆட்டையைப் போடுகிறார்கள். பெரிய நிறுவனம் ஒன்றுக்கு அதனை விற்பனை செய்து லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.

மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தனது குடும்பத்தையே இழந்த  ஆஸாத் என்பவர் இவர்களை பாலோ செய்து ரகசியமாக படமெடுத்து அதனை த்ரிஷாவிடம் கொண்டு வந்து கொடுக்க அது இப்போது அக்சயின் பார்வைக்குப் போகிறது..!

சில நாட்களில் அக்சயின் தங்கை திடீரென்று தற்கொலை செய்து கொள்ள.. இதன் காரணம் அக்சயுக்கு முதலில் தெரியவில்லை. பின்புதான் தெரிகிறது..!

அந்த மேம்பால வழக்கு சம்பந்தமான பைலை அரசியல்வியாதியின் வீட்டில் இருந்து ஆஸாத் சுட்டு வந்தது அரசியல்வியாதிக்குத் தெரிய வர.. ஆஸாத்தை போட்டுத் தள்ள ஆள் அனுப்புகிறான்.

ஆஸாத் தப்பித்தாரா..? அக்சய் தங்கையின் சாவுக்குக் காரணம் என்ன..? மாமாக்களின் கதி என்ன என்பதுதான் மிச்சக் கதை..!

படம் 2 மணி 40 நிமிடங்கள் என்கிறார்கள். எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனைக்கும் எனக்கும் ஹிந்திக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட இல்லை.. குச் நஹிதான்.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது..!

தெரிந்த கதைதானே என்பதாலும், நகைச்சுவை திரைப்படம் என்பதால் நடிப்பே போதுமே என்றெண்ணிதான் படத்திற்குப் போயிருந்தேன். என்னை ஏமாற்றவில்லை பிரியதர்ஷன்..!


முதல் பாதி முழுவதிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், மலையாளத்தில் இருந்த பல காட்சிகளை பாலிவுட்டின் தன்மைக்காக நீக்கியிருக்கிறார்.

அக்சய்யுக்கு நகைச்சுவை கை வந்த கலை என்பதை இதற்கு முந்தைய பல திரைப்படங்களில் காண்பித்துவிட்டார். ஓவர் ஆக்ட்டிங் இல்லாத நடிப்பு..! குடையை பின் சட்டையில் மாட்டிக் கொண்டு கழுத்தை இறுக்கிப் பிடித்த சட்டையுடனும், கண்ணில் சன் கிளாஸூமாக அறிமுகமாகும் காட்சியில் இருந்து இறுதிச் சண்டைக் காட்சிக்கு முன்பு வரையில் அவரிடம் பாலிவுட் ஹீரோவின் சாயல் இல்லை என்றே சொல்லலாம்..!


அரசியல்வியாதிக்கும், தனது தங்கைக்கும் திருமணம் நடக்கப் போவதைத் தெரிந்து கொண்டு வீட்டிற்கு வந்து அப்பாவிடமும், அம்மாவிடமும் குதிக்கின்ற இடத்தில் பக்கா சென்டிமெண்ட்.. இறுதிக் காட்சியில் இன்னும் கொஞ்சம்..!

கையில் காசில்லாமல் ஆட்டோவில் பந்தாவாக வந்திறங்கி டீ வாங்க காசு கேட்பவனிடம் தனது வாட்ச்சை கழட்டி கொடுத்துவிட்டு போவது முதல்.. இது மாதிரி எத்தனை, எத்தனை நாள் நாம வேலை பார்த்திருப்போம் என்பது போல் பணத்திற்காக தனது தொழிலாளர்களை தாஜா செய்கின்ற வேலையில் ரொம்பவே உழைத்திருக்கிறார்.

நகைச்சுவை என்பதை வெறும் வசனத்தில் மட்டுமல்ல.. காட்சியமைப்பிலும் அசத்தியிருக்கிறார் பிரியதர்ஷன்.. ரோடு ரோலர் த்ரிஷாவின் வீட்டை இடித்துவிட்டு உள்ளே போகும் காட்சியில் சிரிக்காதவர்கள் நிச்சயம் மன நோயாளிகள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு காட்சி தத்ரூபம்.. டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்க... ஒரே நொடியில் ரோடு ரோலர் நடு வீட்டில் வந்து நிற்கும் காட்சியை த்ரிஷாவின் அப்பா ஓரக்கண்ணில் பார்க்கும் காட்சி மறக்க முடியாதது..!


அதே போல் அஸ்ரானி இரண்டு போன்களிலும், அக்சய் மற்றும் மற்றொரு ஆளிடமும் மாறி மாறி பேசி வியாபாரம் பேசுகின்ற காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..! ரொம்ப நாள் ஆச்சுய்யா இந்த மனுஷனை ஸ்கிரீன்ல பார்த்து..!

முனிசிபல் ஆபீஸ் காம்பவுண்ட்டில் ரோடு ரோலர் பழுது பார்க்கும்போது நடக்கும் கூத்தும் சிரிப்பை அள்ளிக் கொட்டியது..!


த்ரிஷா.. வருடாவருடம் அழகு கூடிக் கொண்டே போகிறது இந்த தேவதைக்கு.. ஆனால் இந்தப் படத்தில் இந்த தேவதையின் அம்மாவாக நடித்தவரும் ஒரு தேவதையாக இருந்தது ஆச்சரியம்தான்..! மலையாளத்தின் ஷோபனா சுமந்த மெச்சூரிட்டியான கேரக்டர் என்பதால் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றம்தான். வெறும் சேலை மட்டுமே ஒருவருக்கு அதிகாரப் பொலிவையும், தோற்றப் பொலிவையும் காட்டிவிடாதே..? முகம்னு ஒண்ணு இருக்கே.. பச்சைப் புள்ளைகிட்ட போய் பிரம்பை கொடுத்து கிளாஸ் நடத்துன்னு சொன்ன மாதிரி ஆயிப் போச்சு..!


பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறார் த்ரிஷா. அதிகமாக பிரியதர்ஷனை டென்ஷனாக்காமல் நடித்து முடித்திருக்கிறார் போலும்..!

ஜானி லீவர், அருணா இராணி, நீரஜ் வோரா, ராஜ்பால் யாதவ் என்று சில முகங்கள் பார்த்தவைகளாக இருந்தன.. மணிகண்டனின் ஒளிப்பதிவிற்கு அதிகம் வேலையில்லை.. பாடல் காட்சிகளில் மட்டுமே தெரிகிறார்.. ஆனால் கலை இயக்குநர் சாபு சிரிலுக்கு வேலை பெண்டை கழட்டியிருக்கும் என்பது போட்டிருக்கும் செட்டுகளை பார்த்தாலே தெரிகிறது..!

நகைச்சுவை என்று வந்த பின்பு எதற்கு லாஜிக் என்பதால் பாடல் காட்சிகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..! த்ரிஷாவை பார்த்தவுடனேயே டூயட்டுக்கு ஓடும் அக்சய்க்குப் பின்னால் பிளாஷ்பேக் கதை இருந்தாலும் அது ஒட்டாமல் போய்விட்டது..!

ஒரே ஒரு காட்சியில் யானையை வைத்து புல்டோஸரை இழுத்து வருகிறார்கள். இந்த ஒரு காட்சிக்காக கடைசி நிமிடத்தில் இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடா உத்தரவு போட்டது விலங்குகள் வாரியம்.. கடைசியில் கோர்ட்வரைக்கும் சென்றுதான் தடையை உடைத்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..!
 

வெறும் 30 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் இப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே 18 கோடி லாபத்தைச் சம்பாதித்துவிட்டது என்கின்றன மும்பை பத்திரிகைகள்..!

முதல் மூன்று நாட்களில் மட்டுமே 30 கோடி ரூபாயை உலகம் முழுவதும் அள்ளிவிட்டதாம் இப்படம். இது உண்மையெனில் இனி வருவதெல்லாம் கொழுத்த லாபம்தான்..!

உலகளாவிய மார்க்கெட் உள்ள ஒரு நடிகர் நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படம் வெறும் 30 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நமது, கனம் மாட்சிமை தாங்கிய, தமிழ்த் திரைப்பட உலகின் சுளுவான், சுள்ளான், குஞ்சு நடிகர்களெல்லாம் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது.. தமிழ்ச் சினிமாவுலகத்திற்கும் நல்லது என்று நினைக்கிறேன்.

இந்த உண்மையான வெற்றிக்கு மூல காரணம் கொட்டாக்காரா சீனிவாசன்தான்.. மனிதர் எத்தனை எத்தனை வெற்றிப் படங்களுக்கான கதைகளை தாரை வார்த்திருக்கிறார்..? ஈகோ பார்க்காமல் இவரிடம் கதை வாங்கி இயக்கிய இயக்குநர்கள்தான் மலையாளப் படவுலகில் அதிகம்..!

மலையாளத் திரையுலகின் ஆரோக்கியத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்..! நாம..!? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி நான்கையும் நாமளே போட்டுக்கிட்டால்தான் நம்ம படம்.. இப்படித்தான் நமது தமிழ் இயக்குநர்களின் மனநிலை இருக்கிறது..!

ம்.. என்னவோ போங்க..! இந்த மாதிரி படத்தையெல்லாம் தமிழ்ல ரீமேக் செஞ்சிருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்..!?

கட்டா மீத்தா - அவசியம் பார்த்து சிரிக்க வேண்டிய திரைப்படம்..!

பொள்ளாச்சி மாப்ளே - திரை விமர்சனம்

26-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்படியொரு படம் வந்ததே தமிழகத்துக்கு ஜனங்களுக்குத் தெரியவில்லை. அந்த லட்சணத்தில்தான் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்..

பத்தாண்டுகளுக்கு முன்பாக படத்தினை துவக்கிவிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகக் கடைசி ஷெட்யூலில் படத்தினை முடித்துவிட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக யாருக்குமே தெரியாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் மங்கை அரிராஜனுக்கு சினிமாவுலகிலும், சின்னத்திரை உலகிலும் அவ்வளவு நல்ல பெயர். பல வில்லங்கங்களுக்குச் சொந்தக்காரரான இவர் வாங்கிய கடனுக்கெல்லாம் வட்டி மேல் வட்டி போட்டு அதனை இந்தப் படத்தின் நெகட்டிவ் மீது வைத்துவிட்டு ஹாயாக தூங்கப் போய்விட்டார்.

ஏதோ போட்ட காசாவது வரணுமே என்பதாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் அடுத்த தடவை கால் ஊன்றி நிக்கணுமே என்பதாலும் இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் அவருக்கு..

தமிழ்ச் சினிமா உலகத்துக்கு வெள்ளையிலும், கருப்பிலுமாக பணத்தை அள்ளி வீசும் பைனான்ஸியர்கள் அத்தனை பேருக்கும் நன்றி கார்டு போட்டதில் இருந்தே இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினை எப்பேர்ப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது..

இப்போது கதைக்கு வருவோம்.. பில்டிங் ஸ்டிராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு என்பார்கள் சில படங்களில்.. இங்கே தலைகீழ்.. பேஸ்மெண்ட் ஸ்டிராங்.. பில்டிங் வீக்கு.. நல்ல, அருமையான கதைக்கருவை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தி சிதைத்திருக்கிறார்கள்.

படத்தின் அறிமுக இயக்குநரான லட்சுமணன் பிரபல இயக்குநர் அகத்தியனின் சீடர். அதற்கு முன்பே பல திரைப்படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். அவ்வளவு இருந்தும் ஏன் திரைக்கதையில் சொதப்பினார் என்று தெரியவில்லை..


பொள்ளாச்சி சந்தையில் வாய்ச்சவுடால் அடித்தே பொழைப்பை ஓட்டும் கேர் ஆஃப் பிளாட்பார்ம்கள் சத்யராஜூம், கவுண்டமணியும்.. அழுகிப் போன வாழைப்பழத்தையும், வீணாகிப் போன தக்காளியையும் பேசியே ஏமாந்தவர்கள் தலையில் கட்டிவிட்டு கிடைக்கும் கமிஷனில் ஜாலிலோ ஜிம்கானோ பாடுபவர்கள்..

ஊத்துக்கோட்டை ஜமீன்தார் வினுசக்கரவர்த்திக்கு மனைவி செண்பகவள்ளி மீது பிரியம். ஆனால் செண்பகவள்ளி அவரிடம் பிரியாவிடை பெற்று மேலுலகம் சென்று வெகுநாளாகிவிட்டது. மனுஷனுக்குத் தனக்குக் கொள்ளி போட வாரிசு இல்லையே என்று இப்போதும் கவலை. தினம்தோறும் எந்தத் திசையில் போனால் இவருக்கு நல்லது என்று சோழி உருட்டி ஜோஸியம் சொல்லி காசை சுரண்டும் திருட்டு ஜோஸியக்காரர் டி.பி.கஜேந்திரன். வினுசக்கரவத்தியின் மச்சான் அலெக்ஸ் சொத்தில் தனக்குப் பங்கு தரும்படி அனத்திக் கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்தில் இவருக்கு ஒரு வாரிசைக் கொண்டு வந்து அவனை வைத்தே மொத்த ஜமீனையும் கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா போடுகிறார் போலி ஜோஸியர் டி.பி.கஜேந்திரன். தோதான ஆட்களைத் தேடும்போது சத்யராஜூம், கவுண்டமணியும் சிக்க.. அவர்களை சோழி உருட்டியே ஜமீனுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார் ஜோஸியர். முன்பேயே ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப்பை அவர்களிடம் போட்டுக் கொள்கிறார். எது கிடைத்தாலும் அதில் 90 சதவிகிதம் ஜோஸியருக்கு. மிச்சம்தான் ஜமீன் வாரிசுகளுக்கு.. ஓகே என்கிறார் சத்யராஜ்..

இடையில் சத்யராஜூக்கும் பொள்ளாச்சி சந்தையில் பிளேடு பக்கிரியாக வலம் வரும் ஹீரோயின் சூஸனுக்கும் இடையில் முட்டல், மோதல்.. இது வளர்ந்து காதலாகி பரிணமித்து நிற்கும்போது ஜமீனுக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்து விடுகிறார் சத்யராஜ்.

வாரிசாகத் தத்தெடுத்த சத்யராஜூக்கு ஒரு கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு அதன் பின்பு தான் மண்டையைப் போடப் போவதாக வினு சக்கரவர்த்தி சொல்ல.. கல்யாணத்துக்கு எவளோ ஒருத்தியைத் தேடுவதற்கு நமக்குத் தோதான ஆளைப் பிடிக்கலாமே என்று சொல்லி சூஸனை அழைத்து வருகிறார்கள்.

வந்த சூஸனோ சத்யராஜ் அண்ட் கோ-வை ஓரம்கட்டிவிட்டு மொத்தத்தையும் தானே லவட்டிக் கொள்ளலாம் என்று பிளான் போடுகிறாள். இதைப் பார்த்த ஜோஸியர் இது சரிப்பட்டு வராது.. பெரிசை தீர்த்திரலாம் என்று பிளான் போட்டு மும்பை தாதா மணிவண்ணனை அழைத்து வருகிறார்கள்.

மணிவண்ணனோ கொலை செய்ய முயல்கிறேன் என்று மொக்கை காமெடி செய்து நாட்களைக் கடத்த.. இடையில் அலெக்ஸ், மாமா வினு சக்கரவர்த்தியை கோர்ட்டுக்கு இழுக்க.. இடையில் சத்யராஜூக்கும், சூஸனுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறார்கள்.


இதற்கிடையில் கல்யாண நாளுக்கு முன்பாகவே மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடலாம் என்று சத்யராஜூம், கவுண்டமணியும் ஒரு பக்கம் பிளான் போட.. இவர்களை வினு சக்கரவர்த்தியிடம் மாட்டிவிட்டு தான் தப்பிக்கலாம் என்று ஜோஸியர் நினைக்க.. தான் மட்டும் தனியே முடிந்ததை லவட்டிக் கொண்டு போகலாம் என்று சூஸன் முயல.. வினு சக்கரவர்த்தியையும், சத்யராஜையும் போட்டுத் தள்ளிவிட்டு ஜமீனை அடையலாம் என்று அலெக்ஸ் பிளான் செய்ய..

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

கலாட்டாவாக இருக்க வேண்டிய திரைக்கதை சிற்சில இடங்களில் 20 வருடத்திற்கு முந்தைய காட்சிகளை கொண்டிருப்பதால் ரசிக்க முடியாமல் போய்விட்டது..

சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேஷன் லொள்ளும், ஜொள்ளுமாக தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நேரத்தில் இந்தப் படம் வந்திருந்தால் கொஞ்சமாவது படத்திற்கும், தயாரிப்பாளருக்கும் பலன் கிடைத்திருக்கும்.. டூ லேட்..


ஆனாலும் அதே நக்கல், நையாண்டி, லொள்ளு, ஜொள்ளு இருவரிடத்திலும் அசரவில்லை.. ஷாரூக்கான் ஸ்டைலில் கவுண்டமணியையும், சல்மான்கான் பாடி பில்டப்பில் சத்யராஜையும் ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்து பேசி வாரி விடுவது செம காமெடி..

படத்தில் சின்னச் சின்னத் துணுக்குத் தோரணங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார் கவுண்டர்.. பூம்பூம் மாட்டுக்காரனிடம் மாட்டை அபேஸ் செய்து கெத்தாக மாட்டுச் சந்தையில் விலைக்கு விற்கும் சூஸனிடமே அதனை ஆட்டையை போட்டுவிட்டு வரும் சாமர்த்தியத்தில் சிரிக்க வைக்கிறார்கள் இருவரும். 


டாஸ்மாக் பாரில் சரக்கடித்துவிட்டு புலம்புகின்ற காட்சியில் “பெரிய சைஸா இருந்தாலும் பீர்ல போதை கம்மி.. ஆனா சின்ன சைஸா இருந்தாலும் குவார்ட்டர்ல கிக் அதிகம்பா..” என்று சத்யராஜ் பீலாவிட.. “இதுதாம்பா எனக்கு உன்கிட்ட ரொம்பப் புடிச்சது.. தத்துவம் சொல்றேன்னு சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர்ன்னு பீலா உடாம.. நம்ம ரேஞ்சுக்கு குவார்ட்டரு, புல்லு, ஆம்லெட், ஆஃபாயிலுன்னு உதாரணம் சொல்ற பாரு..” என்று கவுண்டரு எடுத்துவிடும் கவுண்ட்டர் அட்டாக்கில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனாலும் காமெடி என்கிற பெயரில் டி.பி.கஜேந்திரின் குள்ள உருவத்தை இமிடேட் செய்து பல இடங்களில் கவுண்டரு அடித்திருக்கும் விட்டுக்கு எனது கண்டனங்கள்.. ஆனாலும் தியேட்டரில் சிரித்துதான் தொலைத்தேன்.. கவுண்டரு வாயைத் தொறந்தா நமக்கு சிரிப்பு தானா வருது.. நாம என்ன செய்யறது..?

நான் பார்த்து இந்த படத்துல மட்டும்தானப்பா ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் டூயட்டே இல்லை. ஆனா குத்துப் பாட்டு ஒண்ணு இல்ல.. நாலு இருக்கு.. டூயட் எடுத்திருந்தாங்களாம்.. ஆனா கடைசில கத்திரி போடும்போது அதுல போய் கைய வைச்சிருக்காங்கப்பா.. கடைசிவரைக்கும் சூஸனோட லேசுபாசான கவர்ச்சியை பார்க்க முடியலைன்ற வருத்தம் இருக்கத்தான் செய்யுது..

ஒளிப்பதிவு அப்படீன்னு ஒண்ணு சொல்வாங்களே.. அது.. அப்புறம் இசைன்னு ஒண்ணு சொல்வாங்களே.. அது.. இது மாதிரி எந்த விஷயமும் இந்த படத்துக்கு அவ்ளோ முக்கியமா தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க. இசை தேவாதான். ஆனால் தெரியவில்லை. நடன இயக்குநர்கள் மட்டும் நல்லா வொர்க் செஞ்சிருக்காங்கப்பா..

அபிநய, லக்ஷா, ரிஷா, கும்தாஜ் என்று கோடம்பாக்கத்து குத்தாட்ட நாயகிகளை கொத்து புரோட்டா போடுற மாதிரி சத்யராஜ் இடுப்பு ஒடிய ஆடியிருக்காரு.. இதுவே போதும் படத்தை தியேட்டரைவிட்டு ஓட வைக்கிறதுக்கு.. என்னதான் நகைச்சுவை திரைப்படம் என்றாலும் ஒரு குத்துப்பாட்டு ஓகே.. நாலுன்னா எப்படி? 


ஹீரோயின் சூஸன் வாட்டசாட்டமான முகம்.. நல்லத்தான் நடிச்சிருக்காக.. ஆனா ஏன் அதுக்கப்புறம் பீல்டு அவுட்டானகன்னு தெரியலை.. இவுங்க கேரக்டரை அனலைஸ் செய்யாம அப்படியே வசனத்துலேயே விட்டுப் பிடிச்சதுனால இவுக நல்லவங்களா? கெட்டவங்களான்னே தெரியாம போயிருச்சு..

மணிவண்ணன் கோமாளி கேரக்டர்.. சொதப்பல்.. என்னதான் நகைச்சுவை என்றாலும் இப்படியா கேரக்டரைசேஷன் செய்வது.. கொடுமை.. கொலை செய்வது எப்படி? கொலை செய்துவிட்டு தப்பிப்பது எப்படி என்று ரெண்டு புத்தகத்தைப் படிச்சிட்டு கொலை செய்றாராம்.. இவருக்கு ஐம்பதாயிரம் ரூபா கொடுத்ததை டி.பி.கஜேந்திரன் அம்பது தடவையாச்சும் சொல்லிச் சொல்லிப் புலம்புறாரு..

“புக்கை படிச்சிட்டு சமையல் செஞ்சாலே வெளங்காது.. இதுல கொலை வேறய்யா..?” என்று மணிவண்ணனை கலாய்க்கும் கவுண்டரின் அட்டாக்கும், சூஸனின் அம்மன் போஸில் பயந்துபோய் மணிவண்ணன் மயக்கமடையும் காட்சி மட்டுமே சிரிப்பைத் தந்தது. 


எங்க ஊரு பாட்டுக்காரனுக்கு அப்புறமா வினுசக்கரவர்த்திக்கு ஏகப்பட்ட குளோஸப் காட்சிகள் இதில்தான்.. மனுஷன் படம் முழுவதும் சோகமா வர்றாரு.. ஆனால் நமக்குத்தான் சோகத்தை ஏத்த மாட்டேங்குது..

இந்தப் படத்தின் கதைக்கருவை வைத்து மலையாளத்தில் ஜெயராம் நடித்த ஒரு திரைப்படம் ராஜசேனன் இயக்கத்தில் வெளி வந்திருந்தது. அசத்தல் படம்.. சூர்யா டிவியில் தொடர்ச்சியாக பல முறை ஒளிபரப்பிவிட்டார்கள். சம்யுக்தவர்மா ஜோடியாக நடித்திருந்தார். நல்ல திரைக்கதை.. விறுவிறுப்பாக இருக்கும். தமிழில் ஜமீன் குடும்பம்.. மலையாளத்தில் தம்புரான் குடும்பம்.. அவ்வளவுதான்.. இனி இதனை தெலுங்கிலும், கன்னடத்திலும் வைத்து ஏதாவது செய்யலாம்.. நிச்சயம் ஜெயிக்க முடியும்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணன் கவுண்டமணியை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது இந்தப் படத்தைப் பற்றி ரொம்பவே சிலாகித்துச் சொன்னார். “பொள்ளாச்சி மாப்ளைல நல்லா பண்ணியிருக்கேன் தம்பி.. என்னமோ தெரியலைப்பா.. என் காமெடிக்காகவே படம் இப்படி மாட்டிருச்சு போலிருக்கு” என்று சொல்லி சிரிக்க வைத்திருந்தார். அது இப்போதும் நினைவில் இருந்ததால்தான் படத்தைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்..

தியேட்டர்லயும், டிவிலேயும் பார்க்குற வாய்ப்பு கிடைச்சா பாருங்க..

தியேட்டர் டிப்ஸ் :

தி.நகர். கிருஷ்ணவேணி தியேட்டரில் காலை காட்சியாக ஓடுகிறது.. பாடாவதி தியேட்டர். ஆனால் டிக்கெட் விலை நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்றதுதான் 20, 30. தியேட்டரின் அனைத்து ஓரங்களிலும் காதலர்கள் ராஜ்ஜியம்.. படம் விட்டதும் எழுந்து பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை.. அப்புறம் எதுக்குய்யா தியேட்டருக்கு வந்து என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாங்க..?

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

பதிவுலகத் தோழர் சவுக்கு கைது..! எனது கண்டனங்கள்..!

22-07-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று மாலைதான் அந்தக் கொடுமையான செய்தியைக் கேள்விப்பட்டேன்..

நானும் ஒரு எழுத்தாளன்.. நானும் ஒரு பத்திரிகையாளன்.. நானும் ஒரு படைப்பாளி என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்கும் உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவனின் ஆட்சியின் இன்னொரு லட்சணம் இன்றைக்கு அரங்கேறியிருக்கிறது.


http://savukku.net என்கிற தளத்தை நான் துவக்க நாளில் இருந்தே படித்து வருகிறேன். அதில் வருகின்ற, வந்திருக்கின்ற கட்டுரைகளையெல்லாம் வாசித்தபோது நிச்சயம் மிகப் பெரும் சோர்ஸ்ஸை வைத்துத்தான் இதனை எழுதுகிறார்கள். துறை சம்பந்தப்பட்ட நபர்கள், உண்மையான செய்தியைத்தான் நமக்கு விவரமாக அளிக்கிறார்கள் என்பது புரிந்தது..!

மிகப் பிரபலமான பத்திரிகைகளே எழுதத் தயங்கும் விஷயங்களையெல்லாம் மிகச் சாதாரணமாக எழுதித் தள்ளியதைக் கண்டு இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்..!

மிகச் சமீபத்தில் நக்கீரன் இதழின் இணையாசிரியர் காமராஜை சம்பந்தப்படுத்தி சவுக்கு எழுதியிருந்த கட்டுரையும், அதனைத் தொடர்ந்து தான் எந்த நேரத்திலும் இதற்காகக் கைது செய்யப்படலாம் என்று எழுதியிருந்த கட்டுரையும் நக்கீரனில் இப்போது கோபாலண்ணே எழுதி வரும் வீரப்பன் வேட்டை கதைக்கு நிகரானதாக இருந்தது..

அப்போதும் நான் நினைக்கவில்லை. இப்படி கைது அளவுக்குச் செல்வார்கள் என்று..!

இப்போது இந்தக் கைதுக்குப் பின்புதான் மறுபடியும் சவுக்கிற்குள் நுழைந்து பார்த்தால் வெளி வந்திருக்கும் கட்டுரை நிச்சயம் போலீஸ் கிளப்பையே ஆட்டம் காண வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..!

சக்தி வாய்ந்த போலீஸ் புள்ளிகளான சங்கர் ஜிவால், ஜாபர் சேட் இவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இந்த மூவரைப் பற்றியுமான அந்தக் கட்டுரை மிக ஆச்சரியமும், அதிர்ச்சியமானதாகும்..!

நெருக்கடி நிலை காலத்தில்கூட பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அவர்களது கட்சித் தொண்டர்களைவிடவும் அதிகம் கை கொடுத்தவர்கள் இந்திய பத்திரிகையாளர்கள்தான். அதிலும் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் எந்த அளவுக்கு இந்திராவையும், நெருக்கடி நிலை கொடுமைகளையும் எதிர்த்து அஞ்சாமல் போராடின என்பது வரலாறு..

இப்போது அதுவெல்லாம் வெற்று பேப்பர்களாகிவிட்டது. பணம், புகழ், அந்தஸ்து இவற்றுக்காக பத்திரிகையாளர்களும், போலீஸும், அரசியல்வாதிகளும் மும்முனைக் கூட்டணி அமைத்து எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சவுக்கின் அந்தக் கட்டுரையே சான்று..!

சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வசதி வாரிய வீடுகளை தனது சொந்தக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிக்கி பொதுப்பணித்துறையை இழந்தார் துரைமுருகன். அப்போதே வீட்டு வசதி வாரிய வீடுகளையும், நிலங்களையும் யார், யாருக்கெல்லாம் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் தோண்டித் துருவிக் கொண்டிருந்தன.

அவர்களுடைய பத்திரிகையில் வேலை செய்பவர்கள், சேனலில் வேலை செய்பவர்கள், சேனலில் நியூஸ் வாசிப்பவர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கலைஞருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர்கள் என்று பலரும் சமூக சேவகர்கள் என்கிற போர்வையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை சகாய விலையில், கூடுதல் தவணையில் அள்ளிக் கொண்டதாக இதே நக்கீரன்தான் எழுதியிருந்தது.

இப்போது இதன் இணை ஆசிரியரே இப்படியொரு கோல்மால் வேலையில் சிக்கியிருக்கிறார் என்பது அதிர்ச்சியானதுதான். ஆனால் இது அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்பதால் நீங்களும், நானும் கேள்வி கேட்காமல் பத்திரிகா தர்மத்தின் சார்பில் வாயை மூடிக் கொள்ள வேண்டுமா..!?

ஒரு கோடி ரூபாய் பணம் என்பது போலீஸ் அதிகாரிகளுக்குக்கூட பரவாயில்லை. ஏதோ ஒரு வகையில் வந்திருக்கும் என்று எண்ணலாம்.. ஆனால் ஒரு பத்திரிகையின் இணை ஆசிரியரே கோடீஸ்வரர் என்றால் எப்படி..?

இதோடு சவுக்கு தளத்துடன் தொடர்புடைய  http://padaipu.blogspot.com/ என்ற தளத்தில் இருக்கின்ற கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கின்றபோது இது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.. அது இந்த சங்கராக இருக்குமென்று நான் நினைக்கவில்லை..!

சங்கர்,  தமிழகக் காவல்துறையில் மிகச் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று இன்னமும் எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. கட்டற்ற சுதந்திரமான இணையவெளியில் தனக்கென ஒரு வலைத்தளத்தை நிர்மாணித்துக் கொண்டு மக்கள் நலப் பணியின் முதலிடமான காவல்துறையைப் பற்றிய தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

இது தவறெனில் காவல்துறை அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல முடியாது..! வழக்குத் தொடரலாம்.. கைது செய்யலாம்.. ஆனால் கைதுக்கான காரணத்தை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும்..!

அவதூறு வழக்கு எனில் எவ்வாறு அவதூறு நேர்ந்தது? அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையா? பொய்யா..? என்பதையெல்லாம் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நடந்திருப்பது என்ன..? நேற்று காலையில் சங்கரின் வீடு இருக்கின்ற ஏரியாவான மதுரவாயலில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சொல்லி இதற்காக ஜாமீனின் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பத்திரிகையாளர்களிடம்கூட காட்டாமல் அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது காவல்துறை.

இந்த போலியான குற்றச்சாட்டும், அவசரமான கைதுமே காவல்துறையின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது..!

சங்கர் எழுதியதில் தவறு இருக்குமெனில் காவல்துறை சம்பந்தப்பட்ட மூவரிடம் இருந்தும் புகார்களை பெற்று அவதூறு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு அப்பாவிகளை அவ்வப்போது கைது செய்து கணக்குக் காண்பிப்பதைப் போல சங்கர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினருக்கு சங்கரின் குற்றச்சாட்டை ஏற்பதில் என்ன தயக்கம்..? அந்த இடங்களை அவர்கள் நிஜமாகவே வாங்கியிருந்தால் வாங்கியதற்கான ஆதாரங்களையும், வாங்குவதற்காக தாங்கள் கொடுத்த பணம் வந்த வழியையும் காட்டினாலே போதுமே.. சங்கர் மீது அவதூறு வழக்கு உறுதியாகுமே..?

ஏன் செய்யவில்லை காவல்துறை..? இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கிலும், இனி அவர்களைப் பற்றி சங்கர் எழுதவே கூடாது என்கிற பயமுறுத்தலாகவும்தான் எனக்குத் தெரிகிறது..!

எழுத்துரிமை, பேச்சுரிமை இந்த இரண்டையும் வைத்துத்தான் பத்திரிகையுலகமே இருக்கிறது..! இந்த இரண்டுக்குமே வாய்ப்பூட்டு போடும்வகையில் காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கும்விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உடனேயே சந்திக்க முடிகிறது.. பேச முடிகிறது.. உடனுக்குடன் சலுகைகளை பெற முடிகிறது என்கிற ஒரே காரணத்துக்காக  பலம் வாய்ந்த பத்திரிகைகளும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர்களும்  இன்றைய ஆட்சிக்கு கூஜா தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். இதுவே அவர்களுக்கு என்று வந்திருந்தால் உடனேயே ஐயையோ என்றிருப்பார்கள்.

இந்தச் செய்தி இன்றைய நம் தினமதி என்கிற ஒரேயொரு செய்தித்தாளில் ம்டடுமே வெளி வந்திருக்கிறது என்பது மகா கொடுமை..

இதே நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விலை உயர்ந்த கிராணைட் கற்கள் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டு வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தினபூமி செய்தித்தாளில் செய்தி வெளியிட்டதற்காக கடந்த 20-ந் தேதி அன்று நள்ளிரவில் மதுரை போலீஸார் அந்த நாளிதழின் ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது எப்படி இருக்கு..? உண்மையைச் சொனனால் கைதாம்..! ஏன் இது போல மற்ற ஆசிரியர்களையும் கைது செய்து மொத்தமாக உள்ளே தள்ளிவிட்டு ஜாம், ஜாம்மென்று இருக்க வேண்டியதுதானே.. அதென்ன? இதில்கூட ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, செல்வாக்கை பார்த்து கைது செய்வது..?

வாரந்தோறும்தான் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், தமிழக அரசியலில் குற்றச்சாட்டுகளும் ஊழல் பிரச்சனைகளும் எழுப்பட்டு வருகிறது. போய் பிடிக்க வேண்டியதுதானே..? சென்னை என்று வந்தால் பிரச்சினை.. ஆங்கில சேனல்கள் இதனை அகில இந்திய அளவுக்கு கொண்டு போய் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிடுவார்கள் என்பதால் மதுரையில் மட்டும் கைது செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது..!

இந்தப் பத்திரிகையுலகமும் இப்போது இரண்டுபட்டுக் கிடக்கிறது. சினிமாவுலகம் மாதிரியே கொடுக்கின்ற சலுகைகளுக்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்று சில பத்திரிகை சங்கங்கள் மவுனம் சாதிப்பது அரசின் இந்தச் செயலைவிட மிகக் கொடூரமானது..!

ஆக மொத்தத்தில்.. அரசியல் என்கிற ஐந்தெழுத்து வார்த்தையை அத்தனை நிர்வாகிகளும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..! 

மிகச் சமீபத்தில் சீமானை கைது செய்தபோது நடந்த களேபரத்தில்  பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். ஆனால் இந்தச் செய்தியை தமிழின் முதன்மையான சேனலான சன் டிவியும், கலைஞர் டிவியும் ஒளிபரப்பவே இல்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சன் டிவியின் நிருபரை கைது செய்த போது முதல்வரையே மறிக்கின்ற அளவுக்கு பத்திரிகையாளர்களை உசுப்பிவிட்டவர்கள் இவர்கள்தானே..! அடுத்த நாள் சன் டிவி ஊழியர்கள் தாக்கப்பட்டபோது என்னமாய் மேலேயும், கீழேயுமாய் குதித்தார்கள் இந்தப் பத்திரிகை பகலவன்கள்.. இப்போது..? எங்கே இருக்கிறது பத்திரிகை தர்மம்..? பத்திரிகா சுதந்திரம்..? இவர்கள் நிச்சயம் பத்திரிகையாளர்கள் அல்ல.. கார்ப்பரேட் முதலாளிகள்..!

இவர்களின் கையில் பத்திரிகையுலகமும், தொலைக்காட்சி ஊடகங்களும் போய்ச் சேர்ந்தது காலத்தின் கொடுமை.. இது இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை ஜனநாயகம் என்ற பெயரில் காட்டப் போகிறதே தெரியவில்லை..!

“பதிவுலகில் யாரோ ஒருவர்.. எதுக்கோ ஒண்ணுக்கு.. எதுக்கு அந்தாளுக்கு..? கொழுப்புதான..?” என்றெல்லாம் அரசியல் ரீதியாகக் கருதாமல் தயவு செய்து அனைத்துப் பதிவர்களும்  இதனை தங்களுக்கு வருங்காலத்தில் நேரப் போகும் அபாய எச்சரிக்கையாக உணர்ந்து ஒருமித்தக் குரலில் தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்..!

இணைப்பு பதிவுகள் : http://www.vinavu.com/2010/07/22/umashankar-savukku/



http://pongutamilar.blogspot.com/2010/07/blog-post.html


http://vennirairavugal.blogspot.com/2010/07/blog-post_23.html


http://tvpravi.blogspot.com/2010/07/blog-post_23.html

http://kuzhali.blogspot.com/2010/07/blog-post_23.html 

http://www.savukku.net/2010/07/blog-post_26.html#comment-form

அந்தரங்கம் - திரை விமர்சனம்


22-07-2010 
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“டேய் மவனே..! இன்னாடா ரொம்ப ரவுசு பண்றே.. முருகன் பேரைச் சொல்லி ஊரையே ஏமாத்துறியா..? நெத்தில பட்டையைப் போட்டுட்டு பலான, பலானா படமா பாத்திக்கின்னு..! பார்க்குறதோட நிறுத்திக்காம ஏதோ ஆஸ்கார் அவார்டு வாங்கின ரேஞ்சுக்கு அந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதிக்கினியா..! மவனே பேஜாராயிருவ..” - இப்படியெல்லாம் நீங்க என்னைத் திட்டுறது என் குறை காதுக்கே, நல்லா கேக்குது மக்கள்ஸ்..!

ஆனால், நான் ஏன் இந்தப் படத்தைப் பார்த்தேன் என்பதற்கான காரணத்தைக் கடைசியில் கொடுத்திருக்கிறேன். படிச்சு தெரிஞ்சுக்குங்க மக்களே..!




கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக 'அவள்' என்றொரு பலான படம் தமிழ்நாட்டில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. முதலீட்டைவிட பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்து அதன் தயாரிப்பாளர் ஜே.வி.ருக்மாங்கதனின் பெயரை என்னைப் போன்ற அப்போதைய சின்னஞ்சிறுசுகளின் மனதில் பச்செக்கென்று பதிய வைத்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த 'அமுதா' என்ற நடிகையே அந்தப் படத்தை இன்றுவரையில் பார்த்திருக்காதபோது, இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்றுவரையில் பல்லாயிரக்கணக்கான ஷோக்கள் கண்டிருக்கிறது.

'லியோ பிலிம்ஸ்' என்கிற பெயரும் 'ருக்மாங்கதன்' என்கிற பெயரும் இந்தப் படத்துக்குப் பின்புதான் கோடம்பாக்கத்தில் பெரும் பிரபலமானது. ஆனால் அதற்கு முன்பேயே மலையாளத்தின் பலான, பலான படங்களை புரசைவாக்கம் 'மோட்சம்' தியேட்டர் ஓனர் பெர்னாண்டோவுடன் இணைந்து விநியோகம் செய்து கொளுத்த லாபம் சம்பாதித்தவர் இந்த ருக்மாங்கதன்..!

பலான படத் தொழிலில் நீண்ட பல வருட கால அனுபவம் கொண்ட இந்த மனிதர் அந்த மாதிரி படங்களுக்கு இப்போது வாய்ப்பில்லை என்பதால் கொஞ்ச நாள் அமைதியாகவே இருந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இவரை உசுப்பிவிட்டது வேலு பிரபாகரனின் 'காதல் கதை' படம்.

அந்தப் படம் சம்பாதித்து கொடுத்த பணத்தைக் கணக்கு போட்டுப் பார்த்த வேகத்தில் துவக்கியதுதான் இந்த 'அந்தரங்கம்' திரைப்படம்.

விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும்..!

விபச்சாரத்தை ஒரு தொழிலாக அனுமதிக்க வேண்டும்..!

மும்பை, கொல்கத்தா போல தமிழ்நாட்டிலும் விபச்சார விடுதிகள் அமைக்க அரசு முன் வர வேண்டும்..!

தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..!

இப்படி நான்கு அம்சத் திட்டத்தை முன் மொழிந்திருக்கிறது இத்திரைப்படம்..!

பொதுவாக இம்மாதிரியான திரைப்படங்களில் திரைக்கதை வேகமாக இருந்து தொலையும்.. ஏனெனில் ஒரு ரீலுக்கு அடுத்த ரீலில் கண்டிப்பாக பெட்ரூம் சீன் வைத்தாக வேண்டும் என்பதால் காட்சியின் பில்டப்பிலேயே வாயில் ஜொள்ளு வடிய காத்திருக்க வைப்பதுதான் இது மாதிரியான படங்களின் வடிவமைப்பு..! இந்தப் படத்திலும் அதையேதான் செய்திருக்கிறார்கள்.

பரிமளா என்கிற பெண் ரிப்போர்ட்டர் 'அந்தரங்கம்' என்றொரு புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றுகிறாள். அதில் ஒரு விபச்சாரப் பெண்கள் பற்றிய உண்மைத் தொடர் கதையையும் எழுதி வருகிறாள். சென்னையில் தான் தங்குவதற்கு வீடு தேடுகிறாள் பரிமளா. தனி ஆள் என்பதால் கிடைக்கவில்லை. இவளைப் போலவே வீடு தேடி பேச்சுலர் என்பதால் வீடு கிடைக்காமல் அலையும் மதன் என்னும் இளைஞனை சந்திக்கிறாள். அவனுடைய ஐடியாவின்படி தாங்கள் இருவரும் தம்பதிகள் என்று பொய் சொல்லி ஒரு வீட்டில் குடியேறுகிறார்கள்.

மதன் ஆண் விபச்சாரியாக இருக்கிறான். தன்னை நாடி வரும் பெண்டிர்களைத் திருப்திபடுத்திவிட்டு தானும் நாலு காசு சம்பாதித்துவிட்டு குற்றவுணர்ச்சி எதுவுமில்லாமல் காசுக்கு காசுமாச்சு.. சுகத்துக்கு சுகமும் ஆச்சு என்று ஹாயாக இருக்கிறான்.

பரிமளா 'அந்தரங்கம்' பத்திரிகையில் தான் எழுதும் தொடர் கதையை. மதனிடம் அவ்வப்போது கொடுத்து படிக்கச் சொல்ல.. அவனும் அதனை படிக்கும்போது அது பரிமளாவின் சொந்தக் கதையாகவே திரையில் விரிகிறது.

பரிமளா தனது காதலனை நம்பி ஏமாந்தவள். காதலன் அவளை விபச்சார விடுதியில் தள்ளி விடுகிறான். அங்கே ஆடு, மாடுகளைப் போல அவளையும் ஒருவன் ஏலத்தில் எடுத்து அழைத்துச் சென்று நிர்வாணப் படம் எடுத்து பணம் சம்பாதிக்கிறான்.. அங்கிருந்து மீண்டு வந்தவள் அந்த வீடியோ படத்தை மீட்பதற்காக அதே விபச்சார விடுதிக்கு வருகிறாள்.

இப்போது விடுதி ஓனர் அவளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்குள் தள்ளுகிறாள். தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்று சொல்லித் தப்பிக்கும் பரிமளாவை வழக்கம்போல கடைசியில் வரும் போலீஸார் காப்பாற்றுகிறார்கள்.

விஷயம் கோர்ட்டுக்கு வர.. கோர்ட்டில் நாட்டில் இருக்கும் விபச்சாரப் பெண்கள், இவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களான ஆண்கள் என இருவர் சார்பாகவும் வாதாடுகிறாள் பரிமளா.

ஆண்கள் உடல் சுகம் கிடைக்காததால் பெண்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஏற்பாடு செய்வதுதான் அரசுகளின் வேலை. அதனால் விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியைக் கொடுத்து, தொழில் நடத்த அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறாள். நீதிபதியும் 'ஆஹா.. ஓஹோ' என்று பாராட்டி அவளது கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்துவிட்டு இவளை அனுப்பி வைக்கிறார்.

பெண்கள் செய்யும் விபச்சாரத்தை சரி என்று சொல்லும் பரிமளா ஆண் விபச்சாரத்தை எதிர்க்கிறாள். கடைசியில் மதனே அப்படி ஆள்தான் என்று தெரியவந்து அவனது சோகக் கதையையும் கொஞ்சம் கலர், கலர் சீன்களோடு தெரிந்து கொண்டு வருத்தப்படுகிறாள்..!

மதன் தனது தரப்புக் கருத்தை வைக்க.. இதுவும் ஏத்துக்குற மாதிரிதானே இருக்கு என்ற பரிமளாவின் புரிதலுடன் மதன் தான் தவறு செய்வதாக ஒத்துக் கொண்டு இனிமேல் அத்தொழிலில் இறங்க மாட்டேன் என்று சொல்லி அவளுடன் இறங்கிவிடுகிறான். முடிந்தது.. சுபம்..!

இது மாதிரியான படங்களில் இயக்கம் பற்றியெல்லாம் மூச்சுகூட விடக்கூடாது. அதேதான் இங்கேயும்.. ஹீரோயின் மும்பை இறக்குமதி என்பது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.. நடிப்பு சுத்தமாக இல்லை. அதைவிட இயக்கம் அரோகரா..! ஏதோ ஒண்ணு.. கேமிரா ஒரு பக்கம் இருக்கு.. அவங்க மூஞ்சி ஒரு பக்கம் இருக்கு..! எங்கயோ பார்த்து எங்கிட்டோ பேசுறாங்க.. பிட்டு படத்துல இதையெல்லாம் கண்டுக்கக் கூடாதில்ல..!

அதிசயமாக பாடல்களின் இசையமைப்பு நன்றாக இருந்து தொலைந்தது. என்னடாவென்று விசாரித்தால் ஒரு ஹிந்தி ஆல்பத்தில் இருந்து அப்படியே சுட்டதாம்..! எவன் கேக்கப் போறான்..?

'மேட்டருக்கு வாடா கபோதி'ன்னு நீங்க கத்துறது என் காதுக்கு கேக்குது..! ஏதோ அங்கே, இங்கேன்னு கொஞ்சம் 'டபுள் எக்ஸ்' சீன்ஸ் எடுத்திருக்காங்க.. 'டிரிபுள் எக்ஸ்' எடுத்திருக்கலாம்.. எடுத்திருந்தா ஆந்திரா பார்டர்ல இருக்குற நகரில ஓடுற தியேட்டர்ல இணைச்சு ஓட்டினா கல்லா கட்டும்..! ஆனா எடுக்கலைன்னு நினைக்கிறேன்..!

எடுத்த சீன்களையெல்லாம் டூயல் சீனாவும், இம்ப்போஸ் சீன்ஸ்களாகவும் காட்டிவிட்டதால் தியேட்டரில் சவுண்ட்டுக்கு மேல சவுண்டு..! “டேய் ஆபரேட்டரு” என்றுகூட எதிர்ப்புக் குரல்கள். அவர் என்ன செய்வாரு பாவம்..? இருந்தாத்தான ஓட்டுவாரு..!?

நாலு குத்து பாட்டு.. ஆடுற அம்மணிகளையெல்லாம் எங்கிட்டிருந்தோ திரட்டிட்டு வந்திருக்குற மாதிரி தெரியுது.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம ஆடியிருக்காங்க.. இதுல இந்த சென்சார் போர்டு எதுக்காக V/U சர்டிபிகேட் கொடுத்தாங்கன்னு தெரியலை..! இதெல்லாம் குடும்பத்தோட, குடும்பக் கண்காணிப்புல பார்க்க வேண்டிய படமா..? இந்த லட்சணத்துல சென்சார்ல படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..! கொடுமைடா முருகா..!

இதுல மதனின் கதையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெண்டிர்கள்தான் கவனிக்கப்பட வேண்டியவர்கள். கோடம்பாக்கத்தில் இத்தனை நாட்களாக இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை..! 

விபச்சார விடுதி ஓனராக வரும் பெண்மணி கடந்த சில வருடங்களாகவே துண்டு, துக்கடா கேரக்டரில் நடித்து வந்தவர். இப்போது கவுதமியின் நடிப்பில் கலைஞர் டிவியில் வரும் தொடரில் மெயின் வில்லியாக நடித்து வருகிறார். உருப்படியா நடிச்சிருந்தது இந்தம்மா மட்டுந்தான்..! வாழ்க வளர்க..!

இது மாதிரியான முற்போக்கு கருத்துக்களை பகிரங்கமா வைக்கணும்னா இது மாதிரியான படத்துலதான் வைக்க முடியும். ஆனா இதை அதிகமா தெரிஞ்சுக்க வேண்டிய பெண்கள் ஒருவர்கூட வர முடியாத சூழலில் இப்படி படம் எடுத்து யாருக்கு என்ன ஆகப் போகுது..?

கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் செலவில் டிஜிட்டலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சென்னையிலேயே சொந்தமாகத்தான் ரிலீஸ் செய்திருக்கிறார் ருக்மாங்கதன். நான் பார்த்த உட்லண்ட்ஸில் ரிசல்ட் எப்படி என்று விசாரித்தேன்.. உதட்டைப் பிதுக்கினார்கள் தியேட்டர் ஊழியர்கள். ஒரு ஷோவுக்கு 60 பேருக்கு மேல வரலியாம்..! பாவம் தயாரிப்பு..! இதுவரையில் சம்பாதித்ததெல்லாம் இது ஒன்றிலேயே கரைந்து போயிருக்கும்..!

விபச்சார விடுதிகளை அரசே திறக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்..! ஆனா அப்புறம் அங்க காத்தாடுதுன்னு சொல்லி அவங்க ப்ரீ டிஸ்கவுண்ட்டெல்லாம் போட்டு விளம்பரப்படுத்தி அடுத்து வர்ற ஜெனரேஷனும் அங்க போக, வர ஆரம்பிச்சா அதுனால யாருக்கு என்ன லாபம்..? மும்பையும், கொல்கத்தாவும் கெட்டது பத்தாதுன்னு தமிழ்நாடு வேறய்யா..? ரொம்பத்தான்யா யோசிக்கிறாங்க..!?

"எல்லாஞ் சரி.. நீ எதுக்குடா இந்தப் படத்துக்குப் போன பரதேசி..?" அப்படீன்னு கேக்குறீங்களா..?

இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது. ஆனால் படத்தின் கதையும், தயாரிப்பாளர், இயக்குநர் ருக்மாங்கதனின் ஜாதகமும் தெரிந்த காரணத்தால் ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்..

அதான்.. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு போனேன்.. ஹி.. ஹி.. ஹி..!

பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!

பெரியவங்க சொன்னா முருகன் சொன்ன மாதிரி.. கேக்கோணும்..!

கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..!


20-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடக்குமா? நடக்காதா? என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தேறிவிட்டது.

சட்டப்படி சுற்றமும், நட்பும் சூழ ஆடம்பரமான சூழலில் செய்து ஜொலிப்பான மண்டபத்தில் மணமக்களாக அமர முடியாத துர்பாக்கியத்துடன் ஒரு வீட்டுக்குள் மாலையை மாற்றிக் கொண்டு தம்பதிகளாகிவிட்டார்கள் பிரபுதேவாவும், நயன்தாராவும்.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி சேர்ந்து வாழுறாங்கன்னு நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்குறது..! பேசாம கட்டிக்குங்க.. வர்றது வரட்டும்..” என்று தனது தாய் வீட்டார் சொன்னதையே பிரபுதேவா ஏற்றுக் கொள்ள.. திருமணம் நடந்தேறியுள்ளது.

ஆனால் சட்டப்படி இதனை வெளியில் சொல்ல முடியாததால் "யாகம் ஒன்று நடத்தினோம். அதில் அவர்களும் கலந்து கொண்டார்கள்" என்பது போல், தங்களது செல்வாக்கை வைத்து பத்திரிகைகளில் செய்திகளை வரவழைத்துக் கொண்டார்கள் பிரபுதேவா குடும்பத்தினர்.

தான் உயிருக்குயிராய் காதலித்து, மணந்து, தனக்காக மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்த தன்னையே நம்பி வந்த ஒரு பெண், இதே ஊரில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு வீட்டில் குடியிருக்கும்போது, பிரபுதேவாவுக்கு இப்படிச் செய்ய எப்படி மனம் வந்தது என்கிறார்கள் திரையுலகத்தினர்.

தயாரிப்பாளர் தாணுவின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ திரைப்படத்தில் நடித்த சூட்டோடு, தன்னுடன் படங்களில் ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்த ஷம்ஷத் என்னும் முஸ்லீம் பெண்ணை தாணுவின் அலுவலகத்தில் வைத்துத்தான் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. அத்திருமணத்தை நடத்தி வைத்து, பிரஸ்மீட் வைத்து பத்திரிகையாளர்களிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி வைத்ததும் தயாரிப்பாளர் தாணுதான்.

நயன்தாரா இப்படிச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்காத சூழலில் இது போன்று நடிகைகள் ஏன் ஏற்கெனவே திருமணமான நடிகர்களை விரும்புகிறார்கள் என்பதுகூட ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

தமிழ்ச் சினிமாவில் இதற்கு பல முன்னோடிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் சில தனிப்பட்ட காரணங்கள் இருந்திருக்கின்றன. மீள முடியாமல் திருமண ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்றாலும், அதனை வெற்றிகரமாக நடத்திக் காண்பித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது திரையுலக வரலாறு.

தமிழ்த் திரையுலகம் போலவே வடக்கத்திய ஹிந்தி திரையுலகத்தையும் இப்படி ஒரு சர்வே எடுத்தால் என்ன என்ற ஆசையால் உருவானதுதான் இந்தப் பதிவு..!

தர்மேந்திரா - ஹேமமாலினி

‘வெண்ணிற ஆடை’ தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்து, 'இது ஸ்கிரீனில் காட்ட முடியாத முகவெட்டு' என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்ட ஹேமமாலினி, பின்பு ஹிந்திக்குச் சென்று ‘முடிசூடா ராணி’யாகத் திகழ்ந்தது பாலிவுட் சரித்திரம்.

ஜெமினிகணேசன், சாவித்திரியைப் போலவே இங்கும் பிரபலமானது தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடிதான்..! 

‘Sholay’, ‘Charas’, ‘Aas Paas’, ‘Jugnu ', ‘Seeta Aur Geeta’, ‘The Burning Train’ என்று புகழ் பெற்றத் திரைப்படங்களில் இந்த ஜோடி பலரது கண்களையும் உறுத்தினாலும் ‘ஷோலே’யிலேயே ஹேமமாலினியின் லொட லொட பேச்சில் தர்மேந்திரா கவிழ்ந்துவிட்டது பிற்பாடுதான் தெரிந்தது.


பிரகாஷ்கவுரை மணந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த தர்மேந்திரா, ஹேமமாலினியின் தாயார் ஜெயா சக்கரவர்த்தியிடம் நேரில் சென்று பெண் கேட்டு ஹேமமாலினியை மணம் முடித்தார். ஆனாலும் இந்து மத முறைப்படி முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி பிரியாமல் இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பதால் முஸ்லீமாக இருவருமே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பின்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்தார். ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்..!???


இரண்டு பெண் வாரிசுகளுடன் இப்போதுவரையிலும் இணை பிரியாதவர்களாக இருக்கும் இந்த ஜோடியில் ஹேமமாலினியின் இந்தக் காதலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்..?

ஹெலன் - சலீம்கான்

“ஏன்? ஏன்? ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன்.. ஏன்..?” என்று ‘வசந்தமாளிகை’யில் நடிகர் திலகத்துக்கு வக்காலத்து வாங்கியபடியே ஆடிய ஹிந்தித் திரையுலகின் ‘கவர்ச்சிக் கன்னி’ ஹெலன் இது போன்றதொரு முடிவைத்தான் தன் சொந்த வாழ்க்கையிலும் எடுத்தார்.


இவர் காதலித்தது சினிமா கதாசிரியர் சலீம்கான் மீது. சலீம்கான் அப்போதே திருமணமானவர். சல்மாகான் என்றொரு மனைவி இருந்தார். இந்த சல்மாகான் மூலமாக தற்போதைய ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான் என்ற மூன்று மகன்களும் அல்வீரா என்ற மகளும் இவருக்கு இருந்தனர். 


ஆனால் காதல் கண்ணை மறைத்துவிட்டது. சலீம்கான், ஹெலன் மீதான காதலில் உறுதியுடன் இருந்ததால் சல்மாகான் இதற்கு ஒத்துக் கொண்டார். ஹெலனையும் மணந்து கொண்டார் சலீம்கான்.

ஷப்னா ஆஸ்மி - ஜாவேத் அக்தர்..!

இந்தி திரையுலகில் கவர்ச்சி தவிர நடிப்பை மட்டுமே காட்டுவதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு சம காலத்தில் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் ஸ்மிதா பாட்டீல். மற்றவர் ஷப்னா ஆஸ்மி.

தான் நடிக்கும் கலைச் சிற்பங்களைப் போன்ற படங்களுக்கு திரைக்கதையை வடித்துக் கொடுக்கும் சிற்பியான ஜாவேத் அக்தருடன் பல மாதங்கள் பழகிய பின்பு காதல் கொண்டார் ஷப்னா. ஜாவேத்தும் அப்போது திருமணமானவர்தான். 


ஹனி இரானி என்னும் திரைக்கதை ஆசிரியர்தான் ஜாவேத்தின் மனைவி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தன. ஆனாலும் ஷப்னாவின் காதலுக்காக தனது மனைவி ஹனியை டைவர்ஸ் செய்துவிட்டு ஷப்னாவை திருமணம் செய்து கொண்டார் ஜாவேத்.

இங்கே எந்தப் பெண்ணியமும் பேசப்படாமல், காதல் மட்டுமே பேசப்பட்டதை நினைவு கூர்க..!

ஜெயப்பிரதா - ஸ்ரீகாந்த் நகாதா

தெலுங்கு படவுலகில் கிளாமர் ஹீரோயின் என்று சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அளவுக்கு செக்கச் செவேல் என்றிருந்த ஜெயப்பிரதாவை, அன்றைக்கு இருந்த தெலுங்கு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்..!


ஆனால் இவரது துரதிருஷ்டம் வேறு மாதிரியானது. 1979-ல் கே.விஸ்வநாத்தின் ‘சர்கம்’ என்கிற ஹிந்திப் படத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட ஜெயப்பிரதா மளமளவென முன்னேறி தெலுங்குலகின் முன்னணி நட்சத்திரமானார்.

அதே வேகத்தில் 1986-ல் ஸ்ரீகாந்த் நகாதா என்னும் திரைப்படத் தயாரிப்பாளரைத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த நகாதாவுக்கு சந்திரா என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணமாகி அவர் மூலமாக 3 குழந்தைகளும் இருந்தன.

இத்திருமணத்தை ஏற்காத நகாதாவின் முதல் மனைவி சந்திரா ஜெயப்பிரதாவை பழி வாங்கிய விதம்தான், எல்லோருக்கும் பிலிம் காட்டும் இந்திய சினிமாவுலகத்துக்கே, பிலிம் காட்டிவிட்டது.

தனது கணவர் நகாதாவை மருத்துவமனைக்கு நைச்சியமாக அழைத்துப் போய் அவருக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனை செய்துவைத்துவிட்டார் சந்திரா. ஒரு மாதம் கழித்து இதனை பகிரங்கமாக வெளிப்படுத்திய சந்திரா, “இனிமேல் என் பிள்ளைகள் மட்டும்தான் ஸ்ரீகாந்த் நகாதாவின் குடும்ப வாரிசுகள்.. முடிந்தால் ஜெயப்பிரதா, என் கணவர் ஸ்ரீகாந்த் நகாதா மூலம் பிள்ளை பெற்றுக் காட்டட்டும்...” என்று பத்திரிகைகளில் சவால் விட்டதைக் கண்டு இந்தியத் திரையுலகமே ஆடிப் போய்விட்டது..!

ஜெயப்பிரதா அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.. ஆனாலும் கணவருக்காக பொறுத்துக் கொண்டவர் நாளாவட்டத்தில் கட்சி, அரசியல் ஈடுபாடு காரணமாக தனது கணவரிடமிருந்து விலகியவர் இப்போது ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்ற நிலையில் இருக்கிறார்.

“நான் வாழ்க்கையில் செய்த ஒரே முட்டாள்தனம், நகாதாவை திருமணம் செய்ததுதான்” என்று சொல்லி தனது மணவாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளியை சோகத்துடன் வைத்திருக்கிறார் ஜெயப்பிரதா.

சங்கீதா பிஜ்லானி - முகமது அஸாருதீன்

சிற்சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து சல்மான்கானை லவ்விக் கொண்டு பாலிவுட்டில் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த  சங்கீதா பிஜ்லானி சல்மான்கானுடனான தனது காதல் முறிந்து போன சோகத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கப் போய் நல்லதொரு குடும்பத்தையே பவுன்ஸராக்கிவிட்டார்.


நிர்மா பவுடர் விளம்பரத்தில் பளிச்சென்று அத்தனை அழகிய உடையில் முகத்தைக் காண்பித்த சங்கீதா, ஒரு காதலை மறக்க அடுத்தக் காதலை ஏற்பதுதான் சரியான வழி என்று நினைத்திருந்த சூழலில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அஸாருதீனை சந்தித்தார். கிளீன்போல்டு அஸாரூதின்.

தனது மனைவி, மகன் என்று அழகாக இருந்த முகமது அஸாருதீனை பார்த்த மாத்திரத்திலேயே இழுத்துப் பிடித்த சங்கீதாவுக்கு, அஸாருதினே ஷாஜகான் போல் தனக்குத் தெரிவதாகச் சொல்லிவிட.. தனது மனைவியை விவகாரத்து செய்வதைத் தவிர அஸாருதீனுக்கு வேறு வழியில்லாமல் போனது..!

அஸாரூதின் திருமணத்திற்கு முன்பு தன்னைப் பெண் பார்க்க வந்த தனது தந்தை வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகள் கழித்து அதே போன்றதொரு மாலை வேளையில் சுற்றிலும் மதப் பிரமுகர்களை வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்து 'தலாக்' 'தலாக்' 'தலாக்' என்று மூன்று முறை சொன்ன சூழலை பத்திரிகைகளில் அவருடைய மனைவி பேட்டியாகச் சொல்லியிருந்த துயரத்தைப் படித்தவர்களில் நானும் ஒருவன். இன்னமும் என்னால் அதனை மறக்க முடியவில்லை..!

பின்பு சங்கீதா பிஜ்லானியுடன் அமர்க்களமாக தனது திருமணத்தை முடித்துக் கொண்டார் அஸாருதீன். அவருடைய முன்னாள் மனைவியும் இப்போது வேறொரு திருமணம் செய்து கொண்டு துபாய் சென்றுவிட்டது வேறு கதை.

ஸ்ரீதேவி - போனி கபூர்

“இவருக்கு எப்பத்தான் கல்யாணமாம்.. ஒரு ச்சின்ன க்ளூவாவது கொடுங்கப்பா..?” என்று பத்திரிகையாளர்களை அங்கலாய்க்க வைத்தவர் ஸ்ரீதேவிதான். ‘நான் அடிமை இல்லை’ படத்தோடு தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட சொந்தப் பிரச்சினைகளே ஏற்கெனவே திருமணமாகி வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் சூழலிலும், போனி கபூர் என்னும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளருக்கு கழுத்தை நீட்டும் சூழ்நிலையைக் கொடுத்தது.


தனது அப்பாவின் மரணம்.. தொடர்ந்து அம்மாவுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு என்று துணைக்கு ஆள் இல்லாமல் அல்லல்பட்ட நேரத்தில் தான் தயாரிக்கும் ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் நடிக்கும் ஹீரோயின் என்கிற முறையில், ஸ்ரீதேவிக்கு உதவிகள் செய்ய ஓடோடி வந்தார் போனி கபூர்.

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு மூளை ஆபரேஷனில் ஏற்பட்ட குளறுபடிக்காக அமெரிக்க மருத்துவமனை நஷ்டஈடாகத் தந்த 75 கோடி ரூபாய்தான் ஸ்ரீதேவியை சட்டென திருமண முடிவெடுக்க வைத்தது.


போனிகபூரின் முதல் மனைவி இதனை கடுமையாக எதிர்த்தும், பிள்ளைகள் தடுத்தும் போனிகபூர் இதில் உறுதியாக நின்றார். தனது தம்பியும் நடிகருமான அனில்கபூரின் உதவியுடன் ஸ்ரீதேவியை ரகசியத் திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத போனிகபூரின் மாமியார் ஒரு நாள் நட்சத்திர ஹோட்டலில் போனிகபூருடன் பார்ட்டியில் இருந்த ஸ்ரீதேவியின் செவிட்டில் நாலு அறை கொடுத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய கதையும் நடந்தது. அத்தோடு போனியின் முதல் மனைவியுடனான சகவாசமும் முடிந்தது. போனி கபூருக்கு விரைவில் டைவர்ஸூம் கிடைத்தது.

நடிகர் விஜயகுமாரின் சென்னை வீட்டில் ஸ்ரீதேவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போதுதான் ஒரு வருடமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ரீதேவியின் உண்மை வாழ்க்கை வெளியே வந்தது.

இந்தக் காதலுக்குக் காரணம் கொஞ்சம் பணமும், அதிகமாகத் தேவைப்பட்ட பாதுகாப்பும்தான் என்பது ஊரறிந்த விஷயம்..!

ரவீணா தாண்டன் - அனில் தண்டான்

நடிகர் அக்ஷய்குமாருடனான தனது தெய்வீகக் காதல் ஒரு பாரில் நடந்த சின்ன கருத்து மோதலில் முடிந்து போய்விட்டதில் சோகத்துடன் இருந்த ரவீணாவுக்கு, ஆறுதல் சொல்ல வந்தவர்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அனில் தண்டான்.

போகிறபோக்கில் ரவீணாவின் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து அவரது அம்மாவுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு “இப்படியொரு மாப்பிள்ளை நமக்குக் கிடைச்சா எப்படியிருக்கும்..?” என்று டிவி சீரியல் பாணியில் தனது வருங்கால மாமியார் மனதில் ‘பச்செக்’கென்று இடம் பிடித்துவிட்டார் அனில்.


வினை அனில் தண்டானின் முதல் மனைவிக்கு நடாஷா ஷிப்பிக்குத்தான் போனது. அரசல் புரசலாக செய்தியறிந்து கோபப்பட்ட நடாஷாவுக்கு, ஆறுதல் சொல்லும் விதமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி புல்லரிக்க வைத்தார் அனில்.

ரவீணா ஷீட்டிங்கிற்கு போகின்ற ஊருக்கு முதல் நாளே அங்கே சென்று எல்லா வசதிகளும் ‘அம்மா’வுக்கு தோதாக இருக்கிறதா என்று சோதிக்கிற அளவுக்கு நல்லவராக இருந்த அனிலை, ரவீணாவாலும் மறக்க முடியவில்லை..!


அனிலுக்கு டைவர்ஸ் கிடைத்ததும், ஜெய்ப்பூர் கோட்டையில் வைத்து கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டார் ரவீணா டாண்டன்.

கரீஷ்மா கபூர் - சஞ்சய் கபூர்

ஆரவாரமாக அமிதாப்பச்சனின் குடும்ப வாரிசு அபிஷேக்பச்சனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து வைக்கப்பட்ட ராஜ்கபூர் பேத்தி கரிஷ்மா கபூரின் அந்தத் திருமணம், ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து போனது சோகமயமானதுதான்..

இடையில் ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில் தான் சந்தித்த சஞ்சய் என்பவரைக் காதலிக்கத் துவங்கிய கரீஷ்மா, அவர் திருமணமானவர் என்பது தெரிந்தும் இன்னும் அதிகமாக காதலித்துவிட்டார். 


விளைவாக சஞ்சய் தனது மனைவியையும், குழந்தையையும் பிரிந்து ஓடி வந்து கரீஷ்மாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதுக்கு காரணமெல்லாம் கேட்கக் கூடாது. தம்பதிகளுக்கு இப்போது ஆறு வயதில் சமீரா என்றொரு மகள் இருக்கிறாள். 


இந்தத் தம்பதிகளுக்கு இடையிலும் பல முறை சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு அது வீதிக்கு வந்து நிற்க.. இப்போதுதான் பெரியவர்களாக பார்த்து ஏதோ ஒரு பெவிகால் போட்டு ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

ஷில்பா ஷெட்டி - ராஜ்குந்த்ரா

ராஜஸ்தானின் ராயல்ஸ் சேலஞ்ச் அணியில் ஜீரோ பங்குகள் வைத்திருந்தும் அதற்குச்  சொந்தக்காரராக இருக்கும் வித்தியாசமான முதலாளியான ஷில்பா ஷெட்டி திருமணம் செய்திருக்கும் ராஜ்குந்திரா லண்டனில் மிகப் பெரும் தொழிலதிபர்.

ஷில்பா, தன்னை உலகத்துக்கே அடையாளம் காட்டிய டிவி ரியலிட்டி ஷோவில் பங்கேற்கச் சென்றபோதுதான் ராஜ்குந்த்ராவை சந்தித்தார். பார்த்த மாத்திரத்தில் ராஜ்குந்த்ரா கவிழ்ந்துவிட.. ஷில்பாவும் அதனை ஏற்றுக் கொண்டார்.

ராஜ்குந்த்ராவுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது. விரைவில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக மனைவியை விவாகரத்து செய்யும்படி ராஜ்குந்த்ராவுக்கு ஷில்பா உத்தரவிட ராஜ்குந்த்ராவும் அதை ஏற்று முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு ஷில்பாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.


“இப்படி கல்யாணமான ஒருவரை மணக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று ஷில்பாவிடம் கேட்டபோது “எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. இதுனால என் பேமிலிக்கு ரொம்ப கெட்ட பேரு வந்திருச்சேன்னு வருத்தமாவும் இருக்கு. இருந்தாலும் ராஜ்குந்திராவை நான் டீப்பா லவ் பண்றனே..! அதை என்னால மறைக்க முடியலை.. அவரை மறக்கவும் முடியல.. நான் என்ன செய்யறது..?” என்கிறார் ஷில்பா. காதலுக்குக் கண்ணில்லையாமே..?

கரீனா கபூர் - சயீப் அலிகான்

இப்போதுவரையிலும் சேர்ந்து வாழ்கிறார்கள். “எப்போது திருமணம்..?” என்று கேட்டால் வானத்தைக் கை காட்டுகிறார்கள் இந்தத் தம்பதிகள்.

தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் ஷாகித்கபூருடன் சில ஆண்டுகளாக லவ்விக் கொண்டிருந்த கரீனா கபூர், ஒரு மதிய பொழுதில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில்  இவர்கள் நாக்கோடு நாக்கு உரசி ஏதோவொரு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததை, செல்போனில் படம் பிடித்த எவனோ ஒருவன், ‘மும்பை மிட்டே’ பத்திரிகைக்கு அதைப் போட்டுக் கொடுத்ததினால் எழுந்த பிரச்சினையில் இவர்களது காதலும் காணாமல் போய்விட்டது.

இந்த வேகத்தில்தான் சிக்கினார் சயீப் அலிகான். பட்டியாலா ராஜ வம்சத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நவாப் மன்சூர் அலிகான் பட்டோடிக்கும், ஹிந்தியின் மற்றொரு கனவுக் கன்னி ஷர்மிளா தாகூருக்கும் பிறந்தவர். 


தன்னைவிட 6 வயது மூத்த அம்ரிதா சிங்('மாவீரன்' படத்தின் ஹிந்தி மூலமான 'மர்த்' படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2004-ம் ஆண்டில் அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்தார் சயீப். 

இதன் பின்பு கொலம்பியாவைச் சேர்ந்த ரோஸா என்கிற மாடலிங் பெண்ணுடன் இரண்டாண்டு காலமாக காட்சி தந்த சயீப், 2007-ம் ஆண்டு திடிரென்று அந்த உறவு கசந்து போனதாகச் சொல்லி முறித்துக் கொண்டார்.
 

மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் இணைந்தார்கள் கரீனா கபூரும், சயீப் அலிகானும். இவ்வளவு வேகமாக இதுவரையில் எந்த சினிமா ஜோடியும் நிஜவாழ்க்கையில் ஒட்டியதில்லை. அப்படியொரு ஒட்டுதலுடன் இருந்ததினால் அம்ரிதா சிங்கை டைவர்ஸ் செய்தார் சயீப் அலிகான்.

தம்பதிகள் இருவரின் டைரிகளுமே தற்போது கால்ஷீட்டுகளால் நிரம்பி வழிவதால், “முதலில் முடிந்தவரையில் கல்லா கட்டுவோம். பின்பு பார்த்துக் கொள்வோம்.. கல்யாணமானாத்தான் சேர்ந்திருக்கணுமா என்ன?” என்று கேள்வி கேட்டுவிட்டு இப்போதே தம்பதிகளாக வாழ்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்தது காதல்தான் என்று சொல்லி மனைவிகளுக்கு ரிவீட் அடிப்பதால் இந்தக் 'காதல்' என்கிற வார்த்தையை எதிர்த்து யாரும் எதுவும் சொல்ல முடியாத காரணத்தினால் இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்..!

ஆனாலும் காதல் என்கிற உணர்வு இருக்கின்றவரையில் இதனைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாது என்றே தோன்றுகிறது..!

இதில் யார் செய்வது சரி.. யார் செய்வது தவறு என்று யாராலும் சொல்ல முடியவில்லை. இந்த பாழாய்ப் போன தனி மனித உரிமையும், கட்டற்ற சுதந்திரமும் இடையில் புகுந்து குடும்பம் என்கிற வார்த்தையை உடைப்பதால் இதில் மாட்டிக் கொள்வது மனைவிகளாகிய பெண்கள்தான்..!

பெண்ணுக்கே பெண்ணே எதிரி என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணங்கள் இருக்க முடியாது..!

- 'இவள் புதியவள்' - ஜூலை-2010

டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!

தேவலீலை - திரை விமர்சனம் - மதுர பெருசு தருமிக்கு சமர்ப்பணம்


17-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“குருவே தங்கள் சித்தப்படி நடப்பேன்..

உனக்கு மங்களம் உண்டாகட்டும்..

கற்றுக் கொடுத்த குருவையே கொன்றுவிட்டாயே.. இது நீச பாவமில்லையா..?

இளவரசி.. தங்களைக் காணாமல் அரசர் அங்கே கவலைப்படுவார்..

என் மணாளனைக் கண்டுபிடிக்காமல் நான் நாடு திரும்ப மாட்டேன்..

அந்த மூன்று பெண்களையும் அடைந்தே தீருவேன்..

எனது சக்தி எப்படிப்பட்டது என்பதை நீயே நேரில் காணப் போகிறாய்..

துஷ்டனே.. விலகிச் செல்.. என் வழியில் குறுக்கிடாதே..

குழந்தாய் நீ கேட்டது கிடைக்கும். விரும்பியது அனுகூலமாகும்.. வெற்றி நிச்சயம்..”


- இப்படியெல்லாம் தூயத் தமிழை 70 எம்.எம். திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்   பிரபாகரன் என்ற இயக்குநர். 

இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்குரிய திரைப்படம். சந்தேகமேயில்லை. இதன் கதை இதுவரையில் தமிழ்த் திரையுலகில் யாருமே சிந்திக்காத கதை.. இது மாதிரியான கதைகளையெல்லாம் சிந்தித்து எழுத வேண்டுமெனில் நீங்கள் பிரபாகரனைப் போல பகுத்தறிவுவாதியாக இருந்தால் மட்டுமே முடியும்..

ஆதி காலமாம். ஒரு குரு தனது சிஷ்யனுக்கு எதை, எதையோ சொல்லிக் கொடுத்து ஆளாக்குகிறார். பரிசாகத் தனக்கு குரு கொடுத்த வாளால் அவரையே வெட்டி வீழ்த்திவிட்டு நானே இவ்வுலகின் ராஜா என்கிறான் அந்தக் கிறுக்கன். கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் காணப்போகும் மூன்று கன்னிகளையும் அடைந்தால் அவன் உலகையே ஆளும் சக்தியை அடைவான் என்று குரு சொன்னதை உடன் இருக்கும் ஒரு அல்லக்கையும் ரிப்பீட் செய்ய கதை தொடர்கிறது. ஒவ்வொரு திசையில் இருந்து ஒரு பெண் கிடைக்க மூவரையும் அடைவதற்கு ஐயா அல்லல்படுகிறார். கடைசியில் கன்னிகளை அடைந்தாரா அல்லது கைலாசத்தை அடைந்தாரா என்பதுதான் கதை. அட்டகாசம்ல்ல..

படத்துல மொத்தமே பத்தே பத்து கேரக்டர்கள்தான். இதுல நாலு பேர் பெண்கள்.. முன்பு ஒரு காலத்தில் மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது. கதைதான் டுபாக்கூர் என்றால், எடுத்தது கூடவா..?

இது மாதிரி கதைகளை அல்வா சாப்பிடுவதுபோல் சுட்டுத் தள்ளிய மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு கோவில் கட்டலாம் போலத் தோன்றியது இந்தக் கர்மத்தை பார்த்த பின்பு..  வசந்த் டிவியில் பகல் நேர ஸ்லாட் டைமில் ஓடும் சீரியல்கூட இதனைவிட கச்சிதமாக எடுத்திருப்பார்கள். அவ்வளவு கன்றாவி..

காட்சியமைப்புகள்தான் சோதனையைக் கொடுத்தனவென்றால், எடுத்த விதம்.. ஏதோ கேமிராவைக் கையில் வைத்துக் கொண்டு ஹேண்டியாகவே சுட்டுத் தள்ளியிருந்தாலும் அதில் ஒரு ஒழுங்கு வேண்டாமா..? இதுதான் இப்படியென்றால் நடிப்பு.. அட்சரச் சுத்தம்.. ஒருத்தர்கூட டேக்ல நடிக்கலை.. ரிகர்சல்ல நடிச்ச மாதிரி நடிச்சுத் தொலைஞ்சிருக்காங்க..

பாதி வசனம் பேசி முடிக்கிறதுக்குள்ள ஷாட் மாறுது.. லிப்ஸ் தடம் மாறுது.. கேமிரா எங்கிட்டோ இருக்கு.. இவுக எங்கிட்டோ பார்த்து பேசுறாங்க.. பெண்களை காட்டுகின்றபோது மட்டும் கேமிரா அனைத்து பகுதிகளையும் வளைத்து, வளைத்துச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. அவர்களது நோக்கம் அதுதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

இடையில் நிறைய பிட்டு படங்கள் எடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எடுத்தார்களா என்று தெரியவில்லை. எடுத்திருந்தால் திருச்சியைத் தாண்டி இணைத்து ஓட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

மிஞ்சிப் போனால் இந்தப் படத்துக்காக 30 லட்சம் ரூபாய் செலவாயிருக்கும். இதில் பிரிண்ட் போடுவதற்கு மட்டுமே கூடுதல் செலவாகியிருக்கும்.. 

படத்தில் நடித்த பெண்கள் எக்குத்தப்பாக 'திறமை'யை காட்டித் தொலைத்த, சில ஸ்டில்ஸ்களை அவசரம், அவசரமாக மீடியா பக்கம் தள்ளிவிட்டது தயாரிப்பு தரப்பு. பின்பு மீண்டும் அதே அவசரமாக தொடர்பு கொண்டு "அதை மட்டும் போட்டுறாதீங்க.. மேட்டர் படம்னு நினைச்சு கூட்டம் வராம போயிரும்" என்று சொல்லி தடுத்ததாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

இவுங்க சொன்னாத்தான் பிட்டு படம்னு தெரியணுமாக்கும். போஸ்டரே தெள்ளத் தெளிவா சொல்லுதே.. நான் பார்த்தவரையிலும் இன்றைக்குத்தான் சக்தி கருமாரி தியேட்டர்ல 75 சதவிகிதம் கூட்டம்.. மதராசபட்டினத்துக்குக்கூட இந்தக் கூட்டம் இல்லப்பா..!

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லாததால் படம் முடிந்தவுடன் ஆபரேட்டரின் நான்கு தலைமுறையையே நாறடித்துவிட்டுத்தான் ஒரு கும்பல் படியிறங்கியது.. கிழிப்பதற்கு குஷன் சேர்கள் இல்லாததால் அவர்களால் முடிந்தது இதுதான்..!

இந்தக் கண்றாவிக்கு நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. யாரைக் கேட்டுடா போனன்னு கேக்குறீங்களா..? எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!

இதுக்கு மேலேயும் யாராவது இந்தப் படத்துக்குப் போயி பார்த்துப்புட்டு வந்து விமர்சனம் எழுதுனீங்க.. ஒரு மாசத்துக்கு அவங்களுக்கு மைனஸ் குத்து குத்திருவேன்.. ஜாக்கிரதை..!

டிஸ்கி-1 : மதராசப்பட்டினம் படத்துக்குத்தான் முதல்ல விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அந்தப் படம் பார்க்கும்போது பக்கத்துல வந்து உக்காந்த ஒரு குடிகாரத் தமிழ்க்குடிமகன் செஞ்ச கொடுமையால படத்துல முழுசா லயிக்க முடியாம போயி இப்போ எழுதறதுக்கே எதுவும் வர மாட்டேங்குது.. ச்சே.. எங்க போனாலும் இந்த குடிகாரனுங்க தொல்லை தாங்கலப்பா..

டிஸ்கி-2 : நேற்றைக்குத்தான் நமது மதுரைக்கார பெரியவர், இனமானப் பேராசிரியர், நண்பர் தருமி அவர்கள் தனது களவாணி படத்தின் விமர்சனத்தில் தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமையைப் பற்றி வருத்தத்துடன் ஏதேதோ சொல்லியிருக்கிறார். அன்னார் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்.. அதற்காகத்தான் அந்த சமர்ப்பணம் போர்டு..

ஸ்பெக்டரம் ஊழல் - தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள் ஆ. ராசாவும், கனிமொழியும்

14-07-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜூன் மாதத்திய காலச்சுவடு பத்திரிகையில் வெளி வந்திருந்த கட்டுரை இது..! பார்த்தேன்.. படித்தேன்.. தெளிந்தேன்.. உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.. காப்பிபேஸ்ட் செய்திருக்கிறேன்..! படித்துப் பாருங்கள்..!

ஸ்பெக்டரம் ஊழல் -  தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள் ஆ. ராசாவும், கனிமொழியும் 

ஆங்கில மூலம் - பரஞ்சய் குகா தாகுர்த்தா

- தமிழில் : தேவிபாரதி

‘நீரா ராடியா என்னும் கார்ப்பரேட் தரகருக்கும் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவுக்குமிடையே நடைபெற்ற அரசு முறையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்ததற்குப் பின்னர் ராசாவின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்  பிடித்திருக்கிறது.

நாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஒரு ஊழலை மூடி மறைத்து அதற்குப் போதிய ஆதாரங்கள் எதுவுமில்லை எனத் தந்திரமாக அவரைப் பாதுகாக்க முயல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள். இப்போது வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் தேசத்தின் கவனத்திற்குரியவை.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, விலை நிர்ணயம் (Allotment and pricing) சார்ந்த நடைமுறைகளில் ஆ. ராசா எடுத்த முடிவுகளில் பல முறைகேடானவை மட்டுமல்ல, சட்டவிரோதமானவையுங்கூட என்பது அம்பலமாகியிருக்கிறது.

உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை முந்தைய தேதி ஒன்றுக்கு மாற்றியதன் மூலம் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (Telecom Regulatory Authority of India)த்தின் விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டதோடு இத்தகைய ஒதுக்கீடுகளில் பாரபட்சமற்ற வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்னும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.


மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், அவரது துறை சகாக்கள், அமைச்சரின் முடிவால் பயனடைந்ததாகக் கூறப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது மத்தியப் புலனாய்வு அமைப்பு(சிபிஐ). முக்கியத்துவம் வாய்ந்த சிபிஐயின் ஒரு விசாரணை அதிகாரி சமீபத்தில் மாற்றப்பட்டிருப்பது ராசா மீதான விசாரணை சரியான முறையில் நடைபெறுமா என்னும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி(Comptroller and Auditor Genaral of India)யின் விரிவான அறிக்கை இன்னும் கிடைக்கப் பெற வேண்டியிருக்கிறது.

3ஜி அலைக்கற்றை என அழைக்கப்படும் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்குப் பொது ஏல முறையைப் பின் பற்றுவதன் மூலம் அரசுக்கு சுமார் 50,000* கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்னும் அரசு மதிப்பீட்டின்படி பார்த்தால்கூட 2008 ஜனவரியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்னும் விதியைக் கடைபிடித்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, குறைந்தபட்சம் அந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவு.

இத்துறையில் தனக்கு முன்பிருந்தவர்கள் பின்பற்றிய அதே நடைமுறைகளைத்தான் தானும் பின்பற்றியதாகச் சொல்வதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகளில் தான் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த ராசாவால் முடியாது.

ஸ்பெக்ட்ரம் அலை வரிசைகள் சினிமா டிக்கட்டுகளைப் போல விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த ஒதுக்கீட்டால் யார் யார் பயனடைந்தனரோ அவர்களுக்குச் சாதகமாக விளையாட்டின் விதிகள் மாற்றப்பட்டன.

அது மட்டுமல்ல, தன் அமைச்சரவைச் சகாக்கள், அவரது துறையின் உயரதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை ராசா வேண்டுமென்றே புறக்கணித்தார். பிரதமர் மன்மோகன்சிங்கின் குறிப்பான சில வழிகாட்டுதல்களையுங்கூட ராசா பொருட்படுத்தவில்லை. இவற்றினூடாக அனைத்து நடை முறைகளைப் பற்றியும் பிரதமருடன் ஆலோசிப்பதாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருந்தார் ராசா.

கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங்களும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, கனிமொழி ஆகியோருடன் அவருக்குள்ள நெருக்கமும் அவர் ஒரு தலித் என்பதால் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் 47 வயதுடைய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரின் மீது யாராலும் கைவைக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ராசா மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும் அவருக்குச் செல்வாக்கும் கவர்ச்சியும் நீடித்திருக்கும்வரை அவை போதுமானதல்ல எனத் தட்டிக் கழிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜனவரி 2008-ல் தொலைத் தொடர்புத் துறை தான் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் குழு ஒன்றுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான உரிமங்களை வழங்கியது. ஒவ்வொரு அனைத்திந்திய அளவிலான உரிமமும் 1651 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இத்தொகை 2001-இல் நிர்ணயிக்கப்பட்டது. ராசா தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமுமற்ற நிறுவனங்களிடமிருந்து உரிமம் கோருவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றார்.

அவற்றில் யுனிடெக்(Unitech) போன்ற தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தமில்லாத கட்டுமான நிறுவனங்களும் அடக்கம். சுற்றுச் சூழல் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவரது முந்தைய அவதாரத்தில் அவர்களோடு ராசா வர்த்தக ரீதியில் தொடர்புகொண்டிருந்தார்.

2007 செப்டம்பர் 25 அன்று யுனிடெக் நிறுவனம் தன் எட்டுத் துணை நிறுவனங்களின் பெயரில் 22 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த சில மணி நேரங்களுக்குள் தொலைத் தொடர்புத் துறை அவசர அவசரமாகவும் தன்னிச்சையாகவும் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி ஒன்றின் மூலம் 2007, அக்டோபர் ஒன்றுக்குப் பிறகு வரும் எந்த விண்ணப்பத்தையும் ஏற்கப்போவதில்லை என அறிவித்தது.

அதற்குப் பிறகு மூன்று வேலை நாட்களுக்குள் மேலும் 373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கெடு நாளை முன் தேதியிட்டு மாற்றியமைத்ததன் மூலம் பல நிறுவனங்களை உரிமம் கோரி விண்ணப்பிப்பதிலிருந்து தடை செய்தது தொலைத் தொடர்புத் துறை.

பெறப்பட்ட 575 விண்ணப்பங்களிலிருந்து வேண்டப்பட்ட 120 நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைப்பதற்கு இதன் மூலம் உதவியது. பிறகு நீதிமன்றம் பாரபட்சமான முறையில் கெடு தேதியை முன் தேதியிட்டு மாற்றியமைத்த தொலைத் தொடர்புத் துறையின் செயலைக் கடுமையாக விமர்சித்தது.

எஸ் டெல் (S Tel) தொடர்ந்த வழக்கில் அவ்வாறு கெடு தேதியை மாற்றியமைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது தில்லி உயர் நீதிமன்றம். ஒற்றை நீதிபதி (single judge) அளித்த தீர்ப்பைத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அங்கீகரித்தது.

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தொலைத் தொடர்புத் துறை சார்பாக முன் வைத்த வாதங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அதற்குப் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எஸ் டெல் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படவே  இல்லை.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தன்னிச்சையாக விளக்கமளித்து அவற்றைத் தனக்குச் சாதகமான சில நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்கு உதவியிருக்கிறார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர். அவற்றில் சில தம் பங்குகளைத் தனிப்பட்ட பேரங்களின் மூலம் விற்பதற்கும் அனுமதிக்கப்பட்டன.

செப்டம்பர் 2008-ல் ஸ்வான் டெலிகாம் (Swan Telecom) நிறுவனம் தன் 45 சதவிகிதப் பங்குகளை ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனமான எடிசாலட்(Etisalat)டுக்கு 900 மில்லியன் டாலருக்கு (சுமார் 4200 கோடி ரூபாய்) விற்றது. ஸ்வான் தன் உரிமத்தை வெறும் 1537 கோடி ரூபாயில் பெற்றிருந்தது. உரிமம் அளிக்கும் ஒரு துண்டுத்தாளைத் (licence) தவிர அந்த நிறுவனத்திடம் வேறு உடைமைகளும் இருந்திருக்கவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் தன் 60 சதவிகிதப் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் (Telenor) நிறுவனத்துக்கு 6200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த நிறுவனத்துக்கும் 1651 கோடி ரூபாயில் 2008 ஜனவரியில் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமம் தவிர வேறு உடைமைகள் இல்லை.

அதற்குப் பிறகு டாடா டெலி சர்வீசஸ்(Tata Tele Services) தன் 26 சதவிகிதப் பங்குகளை ஜப்பானின் என்டிடி-டொகோமோ(NTT DoCoMo) நிறுவனத்துக்கு 13200 கோடி ரூபாய்க்கு விற்றது. 

இவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ராசாவின் தலைமையிலான தொலைத் தொடர்புத் துறை குறைந்தபட்சம் ஒன்பது நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தைச் சந்தை மதிப்பைவிட ஏழு மடங்கு குறைத்து விற்றிருக்கிறது என்பதுதான்.

ராசா தன் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்காகக் காத்திருக்கவும் செய்தார். ராசாவுக்கு ஆலோசனை சொன்னவர்களில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி. எஸ். மாத்தூர், முன்னாள் நிதி, தொலைத் தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் மஞ்சு மாதவன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மஞ்சுமாதவன் உரிய காலத்துக்கு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சித்தார்த்த பரூவாவைத் தொலைத் தொடர்புத் துறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக இந்த அதிகாரிகள் இருவரும் ராசாவின் விருப்பப்படி ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் உரிமங்கள் ஒதுக்கும் முடிவைக் கடுமையாக எதிர்த்தனர்.

பரூவா உரிமங்கள் வழங்குவது தொடர்பான ராசாவின் சந்தேகத்துக்குரிய முடிவை ஆதரித்தவர். இப்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரும் அப்போதைய நிதித் துறைச் செயலாளருமான டி. சுப்பாராவின் ஆலோசனைகளையும் அமைச்சர் அலட்சியப்படுத்தினார். 

தவிர இந்த விவகாரம் பற்றி அமைச்சரவைக் குழு(Empowered Group of Ministers)விடம் ஆலோசிக்குமாறு சட்ட அமைச்சகம் கூறிய யோசனையை இது பல்வேறு துறைகளுக்கிடையே விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல எனக் காரணம் கூறி, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பொருத்தமற்றது என நிராகரித்தார் ராசா.

2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கும் நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் திறமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்தும்படியும் கட்டணத் தொகை சரியானபடி திருத்தியமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கும்படியும் வலியுறுத்தி நவம்பர் 2-ம் தேதி ராசாவுக்குப் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தின் மீது அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தன் கொள்கைகள் காரணமாகத் தொலைபேசிக் கட்டணம் குறைக்கப்பட்டு நுகர்வோர் லாபமடைந்திருப்பதாகவும் அந்தத் துறையில் ஏற்கனவே இருந்து வந்தவர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்திருப்பதாகவும் சொல்கிறார் ராசா. அவரது வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களில் பலரே இப்போது தயாராக இல்லை.

பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் ஒன்றுமே இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஒரு நிறுவனத்தின் அதிகாரத் தரகரோடு தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்னும் விவகாரம் ராசாவை துரத்தத் தொடங்கியிருப்பது ஒரு நகைமுரண்.

உரையாடல் தொடர்கிறது

மே மாதம் முதல் வாரம் ‘Headlines Today’ தொலைக்காட்சி மத்தியத் தகவல் துறை அமைச்சர் ஆ. ராசாவும் கனிமொழி கருணாநிதியும் தில்லியின் முக்கிய அதிகாரத் தரகராகக் கருதப்படும் நீரா ராடியாவும் பேசிய சில உரையாடல்களை ஒலிபரப்பியது.

முதலில் பிறரால் வாசிக்கப்பட்டு, தொலைக்காட்சியிலும் நாளிதழ்களில் பிரதியாகவும் வெளியான உரையாடல் சம்பந்தப்பட்டவர்களின் மறுப்புகளைத் தொடர்ந்து நேரடிக் குரல் பதிவாக ஒலிபரப்பப்பட்டது. இதன் பின்னர் இவற்றின் அசல் தன்மையைச் சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றதற்கும் ஆட்சி அமைத்ததற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அடுத்த நாட்களில், கருணாநிதி தில்லிக்குச் சென்று குடும்பத்தினருக்காக அமைச்சரவையில் இடம் கேட்டு மன்றாடிவிட்டு வந்த பின்னர் நடந்த உரையாடல்கள் இவை.


அதிகாரத் தரகர் ராடியா வருமான வரி ஏய்ப்பில் பல நூறு கோடிகள் அளவு ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகப்பட்ட வருமானவரித் துறை ஆகஸ்ட் 20, 2008-லிருந்து 300 நாட்களுக்கு அவருடைய பல தொலைபேசி உரையாடல்களைக் கண்காணித்துப் பதிவு செய்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நிறைவுத் தருணத்தில் கருணாநிதி இரண்டாம் முறையாகத் தில்லி சென்று கனிமொழி கருணாநிதிக்கு அமைச்சரவையில் இடம் கேட்டதாகவும், அவரது கோரிக்கையை சோனியாவும் மன்மோகன்சிங்கும் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்த தருணத்தில் இந்த ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்டவர்கள் ஒலிபரப்பை ஏற்றுக் கொண்டு, அமைச்சர் பதவியைத் தற்காலிகமாக மறந்துவிட்டு, அமைதி காப்பதைப் பார்க்கும்போது 300 நாட்கள் ஒலிப்பதிவில் இன்னும் பல சூடான விஷயங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

உரையாடல் ஒன்று: அகம் புறம்


கனிமொழி கருணாநிதியுடன் - மே 21, 2009, காலை 8:41

கனிமொழி : ஹெலோ

ராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான்  இருக்கிறார்கள்.

கனிமொழி : தொலைத்தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள் . . .

ராடியா : என்ன?

கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.  (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)


ராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.

ராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.

கனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இதுபற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.

ராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப்பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’

கனிமொழி : ஆமாம்.

ராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.

கனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)

ராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.

கனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்?

ராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப்பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பாகக் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தலைவர்கள் மட்டுமல்ல, தரகர்களும்தான் என்பது தெளிவு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியவும், என்ன நடக்க வேண்டுமோ அதைச் செயல்படுத்தவும் தரகர்களைத் திமுக பயன்படுத்துவதும் தெளிவு. இத்தரகர்களுக்கு இப்பணிக்காகக் கொடுக்கப்பட்ட தொகை என்ன? அல்லது கைமாறாகக் காட்டப்பட்ட சலுகை என்ன?


சராசரி அரசியல்வாதிகள் மத்திய அரசில் நல்ல ‘வளமான’ அமைச்சரவைகளுக்கு ஆசைப்படுவது இயல்பு. கலைகளைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே தோன்றி அதிகார ஆசையின்றி ஒரு துறவியைப் போல் வாழ்பவர்கள் அதிகாரத்தின் சூதாட்டத்தில் இறங்குவதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்: தமிழ் மக்களின் நலன். மண்பாண்டம் செய்தால் கை மண்ணாகத்தானே செய்யும்? உயரிய நோக்கங்களுக்காக எளிய சமரசங்கள் செய்வது, தவிர்க்க முடியாதவைதானே?

உரையாடல் இரண்டு: காயா? பழமா?

மே 24, 2009 காலை: 11:05

ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?

ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.

ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?

ராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.

ராசா : இல்லை, இருவருமே நுழையலாம்.

ராடியா : இருவருமா? பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.

ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே . 

ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணரமுடிகிறது . . .

ராசா : பொறுத்திருந்து பார்ப்போம். நாம் போராடிப் பார்ப்போம்.

மத்திய அரசில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் நிரப்புவது பற்றிய உறுத்தல் எல்லா மட்டங்களிலும் இருப்பது இவ்வுரையாடல்களில் வெளிப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் ஆ. ராசாவுக்கு இடம் உறுதி எனும் செய்தியை மன்மோகன்சிங் அறிவிப்பதற்குப் பல நாட்களுக்கும் முன்னர், அதை ராடியா வழி தெரிந்து கொள்வது கவனத்திற்குரியது.

தமிழகத்தின் தன்மானத் தலைவர்கள் மத்திய அரசுடன் எதற்காகப் ‘போராடு’வார்கள் என்பதும் தெளிவு பெறுகிறது. மேலும் யாருக்கு அமைச்சர் பதவி உண்டு, எந்த அமைச்சரவை யாருக்கு என்பது போன்ற தகவல்களை ஆ. ராசா ஒரு அதிகாரத் தரகருடன் விவாதிப்பது ஏன்?

மொழி பெயர்ப்பும் குறிப்பும் : கண்ணன்.

* மே 20 அன்று 3-ஜி உரிமம் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. (ஆசிரியர்)

நன்றி: The New Indian Express மே 19, 2010 இதழில் வந்த Raja’s nightmare continues என்னும் கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி : காலச்சுவடு, ஜூன்-2010