ஒரு பயணியின் கோபக்குரல்..!


17-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன்.

SETC Super Deluxe Bus. பெயர்தான் சூப்பர் டீலக்ஸ்.. உள்ளே நுழைந்தவுடன் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது வாடை. பஸ்ஸை கழுவியே பல நாட்கள் ஆகியிருக்கும்போலிருந்தது.

இருக்கைகளில் இருக்கும் அழுக்கை சுரண்டி எடுத்தாலே இரண்டு பஸ்களை நிரப்பலாம்போல் இருந்தது. இருக்கைகளுக்கு நடுவில் இருந்த கைப்பிடி ஓமக்குச்சி நரசிம்மன் ஸ்டைலில் ஒடிந்து விழுந்தாற்போல் காணப்பட்டது.

கண்ணாடி ஜன்னல்களை இழு, இழு என்று இழுத்த பின்பு, போனால் போகிறதென்று இரண்டு ஸ்டெப்கள் முன்னாடி வந்தது. அவ்வளவுதான்.. கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது. திடுக்கிட்டுப் போய் சற்று உற்றுப் பார்த்த பின்புதான் அதிலிருக்கும் தூசிகளும், அழுக்குகளும் தெரிந்தன.

வருகின்ற அனைத்துப் பிரயாணிகளுமே ஜன்னலோர இருக்கைகளே நாடுவதால் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். "யாராவது இடம் மாறி உட்காருங்கள்..” என்று கேட்டாலும் ஈகோ பிரச்சினையை ஏற்படுத்தி, "அவரை இங்க வரச் சொல்லு.. முடியாது அவனை இங்க வரச் சொல்லு" என்று மாறி, மாறிச் சொல்லி.. உட்கார்ந்த இரண்டு நிமிடங்களிலேயே டென்ஷனை ஏற்படுத்திவிட்டார்கள்.

திருச்சிக்கு பேருந்து கட்டணம் 125 ரூபாய்.. "சில்லரையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார் நடத்துனர். என்னிடம் 500 ரூபாய் நோட்டு ஒன்றுதான் இருந்தது. நீட்டினேன்.. அதைக் கையில்கூட வாங்காமல் தனது பணப்பையைத் திறந்து காட்டினார். இது என்ன பதில்..? நானும் சட்டென்று உஷ்ணமாகி, "இந்த பைக்கு 500 ரூபா தர முடியாது..” என்றேன்.. கோபத்துடன் அடுத்த ஆளிடம் சென்றார். இப்படி ஆரம்பித்த எங்களது நட்பு மறுநாள் காலை திருச்சி சென்று சேரும்வரையில் பலவித பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டது.

--------------------------------

கொஞ்ச நேரம் கழித்து அத்தனை பேருக்கும் கட்டணச் சீட்டு அளித்த பின்பு என்னிடம் வந்து பணத்தை வாங்கினார். மீதிப் பணமாக 370 ரூபாய் கொடுத்தார். “5 ரூபாய் குறைகிறதே..” என்றேன்.. “என்னிடம் இல்லை..” என்றார். “அஞ்சு ரூபா காயின் தர்றேன்.. பத்து ரூபாயா தாங்க..” என்றேன்.. “வேற யாருக்காவது பத்து ரூபாய் கொடுக்கணும்னா நான் எங்க போறது..?” என்றார். “அப்போ அந்த 5 ரூபாயை நான் எங்க போய் வாங்குறது?” என்றேன் கோபத்தோடு. “அப்புறமா தர்றேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார். பின்புதான் தெரிந்தது பல பயணிகளிடமும் இதேபோல் 5 ரூபாய் கடன் வைத்திருக்கிறார் என்று.. ஆனாலும் விடவில்லை. திருச்சியில் இறங்கும்போது பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு "கொடுத்தால்தான் இறங்குவேன்" என்று மிரட்டி வாங்கியேவிட்டேன்..

நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். அருகில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் எழுந்து முன் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வண்டி கிளம்புகின்றபோது ஒரு இளம் பெண் பேருந்தில் ஏறினார். அவரை வழியனுப்பிவிட அவருடைய தந்தையார் வந்திருந்தார். அனைத்து இருக்கைகளிலும் ஜன்னலோரத்தில் ஆண்கள் அமர்ந்திருக்க.. இந்தப் பெண் ஒரு பெண்ணின் அருகில் போய் அமர்ந்தார்.

உட்கார்ந்த வேகத்தில் எழுந்து வந்து தனது தந்தையின் காதோரத்தில் கிசுகிசுத்தார். அவர் நடத்துனரின் காதில் கிசுகிசுத்தார். நடத்துநர் என்னிடத்தில் வந்து, "நீங்க அந்த சீட்டுக்குப் போங்க..” என்று சொல்லி ஒரு இருக்கையைக் காண்பித்தார். "ஏன்?” என்றேன்.. “இல்ல.. அந்தப் பொண்ணு தனியா வருது..” என்று இழுத்தார் நடத்துனர். “அதான் அங்க ஒரு லேடி உக்காந்திருக்காங்களே.. பக்கத்துல உக்காரலாமே..?” என்றேன். அதற்குள் அந்தப் பெண்ணின் தந்தை வந்து, “இல்ல.. அது ரொம்ப பின்னாடி இருக்கு..” என்றார். “அதுக்கு நான் என்ன பண்றது?” என்றேன் பட்டென்று. நடத்துநர் என்னைப் பார்த்தார். நான் அவர்கள் இருவரையும் பார்த்து புருவத்தை உயர்த்த..

அந்த இளம் பெண் வேறு வழியில்லாமல் கிடைத்த இடத்தில் போய் உட்கார்ந்தார். நடத்துனர் இப்போதும் என்னை முறைத்துக் கொண்டே சென்றார். கீழே இறங்கியவுடன் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு 50 ரூபாயை நடத்துனரின் கையில் திணித்துவிட்டு பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் என்னைப் பார்த்து ஒரு 'லுக்' விட்டுவிட்டுச் சென்றார்.

இப்படியெல்லாமா சம்பாதிக்கணும்..?

---------------------------

பேருந்து கோயம்பேட்டில் இருந்து வெளியில் வருவதற்கே 20 நிமிடங்கள் ஆனது.. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக கோயம்பேட்டில் இருந்து வடபழனி வந்து அசோக்பில்லர் வந்து கிண்டி வழியாக எனது ஒரு காலத்திய டியூஷன் சென்டரான ஜோதி தியேட்டரை தரிசனம் செய்தபடியே சென்றபோது பாலத்தின் இறக்கத்திலேயே வண்டி நின்றுவிட்டது. திடீரென்று என்ஜின் சுவிட்ச் ஆப்.

நடத்துனரும், ஓட்டுனரும் மாறி, மாறி சுவிட்ச்சை ஆன் செய்து பார்த்தார்கள். முடியவில்லை. ஒரு நிமிடத்தில் பின்னால் வரிசையாக வந்து நின்ற வாகனங்களில் இருந்து வகை, வகையாக ஹாரன்களின் சப்தம் காதைக் கிழித்தது. நடத்துனர் பயணிகளிடம் இறங்கி வந்து பேருந்தைத் தள்ளும்படி சொன்னார். 'விதியே' என்று நினைத்து கீழேயிறங்கி 'ஐலேசா' பாடியபடியே பேருந்தை தள்ளினோம். மூன்று முறை விட்டு, விட்டுத் தள்ளியும் ஸ்டார்ட் ஆகாமல் என் அப்பன் முருகனை அழைத்து "ஆரம்பத்துலேயே ஏண்டா கடுப்பேத்துற?” என்று நான் மனதுக்குள் திட்டியபிறகே பேருந்து ஸ்டார்ட் ஆனது..

"இதுக்கு எதுனாச்சும் நமக்கு டிஸ்கவுண்ட் குடுப்பாங்களா..? இல்லாட்டி டிக்கெட்டுல காசைக் குறைப்பானுங்களா..?” என்று வழக்கம்போல கொழுப்பெடுத்து போய் நான் சொன்ன டயலாக்கைக் கேட்டு நடத்துனர் கோபப்பட்டுவிட்டதை அவர் கதவைச் சாத்தியதில் இருந்து அறிந்து கொண்டேன்.

மறுபடியும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் வண்டி மக்கர். மறுபடியும் கீழே இறங்கி நான்கு முறை தள்ளிய பின்புதான் வண்டி ஸ்டார்ட் ஆனது. அப்போதே நான் அங்கிருந்த நேரக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இது பற்றி புகார் செய்தேன். "திருச்சிவரைக்கும் போகணும் ஸார்.. வழில எங்கயாவது நின்னா இப்படி இறங்கி, இறங்கித் தள்ள முடியாது ஸார்..” என்றேன்.. “என்னால ஒண்ணும் பண்ண முடியாது. போறதுன்னா போங்க.. வேண்டாம்னா இறங்கிக்குங்க..” என்றார் பொறுப்பாக..

நானும் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன்.. இந்த நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகளில் என்ஜின் கோளாறு, பிரச்சினை என்று வழியில் நின்று போகக்கூடியவைகளில் 99 சதவிகிதம் அரசு பேருந்துகள்தான். தனியார் பேருந்துகள் இது மாதிரி பிரச்சினைகளால் நின்று போய் நான் பார்த்ததே கிடையாது. விபத்து ஏற்பட்டுத்தான் பார்த்திருக்கிறேன். ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?

-------------------------------

வழியில் விக்கிரவாண்டி என்கிற இடத்தில் சாப்பிடுவதற்காக வண்டியை ஓரங்கட்டினார்கள். அங்கே ‘கிளாஸிக்’ என்ற பெயரில் ஒரேயொரு ஹோட்டல். வண்டி நின்றவுடனேயே பேருந்தின் இருபுறமும் ஆட்கள் நின்று கொண்டு "பாத்ரூம் அங்க இருக்கு.. இங்க இருக்கு..” என்று மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்தார்கள். இவர்களிடம் தப்பி ஓரமாக ஒதுங்க நினைத்தவர்களை, "டேய்..” "ஓய்..” "யார்யா அவன்..?” என்றெல்லாம் மிக மரியாதையாகப் பேசி அழைத்து பாத்ரூம் பக்கம் திருப்பிவிட்டார்கள்.

பாத்ரூம் எனது பள்ளிக் காலத்தில் நான் அனுபவித்ததைவிட மிகக் கொடுமையாக இருந்தது. இதற்கு 2 ரூபாய் கட்டணமாம். சுவற்றில் 1 ரூபாய் என்றுதான் இருக்கிறது. அதனை மிக லாவகமாக சுரண்டியெடுத்திருக்கிறார்கள். சுரண்டலைத் தாண்டியும் எழுத்து தெரிகிறது என்பது வேறு விஷயம்.

"ஒரு ரூபாய்னுதானே போட்டிருக்கு" என்றேன்.. பதிலே சொல்லாமல் நாணயங்களை எண்ணத் துவங்கினார் அந்தக் காசாளர். "வந்தியோ.. அவுத்து விட்டியா..? போனியான்னு இருடா மவனே..” என்பது அதன் அர்த்தமாக எனக்குப் புரிந்தது. அமைதியாகத் திரும்பிவிட்டேன்..

பெரும்பாலும் இந்த உணவு விடுதி ஒப்பந்ததாரர்கள் ஏதாவதொரு கட்சிக்காரராகத்தான் இருப்பார்கள். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இது போன்ற 10-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் உள்ளன. எந்த உணவு விடுதியில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்பதை அந்தந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட அலுவலகத்தில்தான் தீர்மானித்து ஓட்டுநர்களிடம் சொல்கிறார்கள். அந்தக் கோட்ட அலுவலகத்தின் தலைமையாளரை எந்த உணவு விடுதிக்காரர்கள் அதிகமாகக் 'கவனிக்கிறார்களோ.'. அவர்களது உணவு விடுதியில் பேருந்துகள் நிறுத்தப்படும்.

அதிலும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதால் 10 உணவு விடுதிகளிடமும் 'வாங்க' வேண்டியதை வாங்கிக் கொண்டு, ஒரு விடுதிக்கு இத்தனை பேருந்துகள் என்று சம அளவில் ஒதுக்கீடு செய்து பிழைத்து வருகிறார்களாம் நமது அதிகாரிகள்.. ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இரவுச் சாப்பாடு இலவசம் என்பதோடு ஒரு டிரிப்பிற்கு 200 ரூபாய் இனாமும் கிடைக்கிறதாம்.

ஆனால் இங்கே சாப்பாட்டின் விலை ரொம்ப, ரொம்ப அநியாயம்.. நமது சரவண பவன் அளவிற்கு விலை வைத்துள்ளார்கள் பாவிகள்.. ஒரு தோசை 16 ரூபாய்.. சைவத்திற்கும், அசைவத்திற்கும் தனித்தனி உணவு விடுதிகளாக மாற்றிவிட்டார்கள். அசைவத்தில் முன்பெல்லாம் புரோட்டா 8 ரூபாய் என்று சொன்னார்கள். இப்போது புரோட்டாவிற்கு கறி சால்னாதான் வாங்க வேண்டுமாம். அதற்குத் தனியாக 4 ரூபாயாம். ஆக ஒரு புரோட்டாவிற்கு 12 ரூபாய். தோசையும் கிடைக்கும். ஆனால் அதற்கும் சால்னா தனி.. 4 ரூபாய்.. ஆக மொத்தம் இதுவும் ஒருவகையில் கொள்ளைதான்.

அந்த அத்துவானக்காட்டில் ஒரேயொரு உணவு விடுதியிருக்குமிடத்தில் பேருந்தை நிறுத்தினால் மக்கள் என்ன செய்வார்கள்..? அந்த ஓரிடத்தில் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.. பசியோடு பயணிக்க முடியுமா என்ன..? இதற்குப் பதிலாக திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தினால் மக்கள் விரும்பிய கடைகளில் சாப்பிடலாமே..? ஏன் அதனைச் செய்ய மறுக்கிறார்கள் ஓட்டுநர்களும், போக்குவரத்துக் கழகங்களும்..? என்ன காரணம்? அதேதான் முன்பே சொன்ன சம்திங்.. சம்திங்.. சம்திங்..

-------------------------------

நான் சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து காத்து வாங்கிக் கொண்டிருக்கும்போது ஒருவர் அவசரமாக நடத்துனரிடம் வந்து, "கிளம்பறதுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” என்றார். “கால் மணி நேரமாகும் ஸார்..” என்றார் நடத்துனர். “அதுக்குள்ள ஒரு தோசை சாப்பிட்டு வந்திரவா?..” என்றார். நடத்துனரும் தலை அசைத்து ஆமோதிக்க.. தனது மனைவியை பேருந்தில் இருந்து இறக்கி ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

அந்த நபரின் மனைவி பேருந்தில் இருந்து இறங்கி, ஹோட்டலின் உள்ளே சென்று அமர்ந்தது முதல் தோசையை வாங்கி பிட்டு சாப்பிடும்வரையில் வாயில் ஜொள்ளுவடிய 'சைட்' அடித்த அந்த நடத்துனர், ஓட்டுனர் அருகில் வந்து "போலாமா..?” என்றதும் ஒரு வார்த்தைகூட மறுக்காமல் தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறினார்.

ஓட்டுனர் வண்டியில் ஏறி கதவைச் சாத்தி என்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் வண்டியில் அமர்ந்திருந்த சாப்பிடப் போன தம்பதிகளின் பெரிய பெண் பதறிவிட்டாள். "அப்பா”, "அம்மா" என்று பதற்றத்துடன் சீட்டில் இருந்து எழுந்து முன் வாசலுக்கு வர.. அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ஓட்டுநர் வண்டியை பின்னால் எடுக்க.. அந்தப் பெண் பதற.. இந்தக் கூத்தைப் பார்த்தபடியே நானும் இன்னொரு நண்பரும் வண்டியில் ஏறாமல் நடந்து வந்தோம். வண்டி திரும்புகிற இடத்தில் நான் கதவைத் திறந்து ஓட்டுனரிடம் "கொஞ்சம் இருங்க.. ஒருத்தங்க சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க.." என்றேன்.

ஓட்டுனருக்கு சட்டென்று கோபம் வந்தது.. “எவனுக்காகவும் நான் நிக்க முடியாதுங்க..” என்றார். அதற்குள்ளாக அந்தப் பெண் வண்டியிலிருந்து குதித்து இறங்கியோடினாள். நானும், நண்பரும் பொறுமையாக "உங்க கண்டக்டர்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க..” என்றதும் ஓட்டுநர் அமைதியானார். நடத்துனரோ அதைக் காதில் வாங்காதவரைப் போல் அமைதியாக இருந்தார்.

இப்போது ஹோட்டலில் இருந்து அந்தத் தம்பதிகள் அரக்கப் பரக்க ஓடி வந்தார்கள்.. அந்தப் பெண் கையைக் கழுவக்கூட இல்லை. அவசரமாக பேருந்தில் ஏற.. அவர்களுடைய சின்ன வயது மகன் உள்ளே அழுது கொண்டிருந்தான். அந்தக் கணவர் வண்டியில் ஏறிய உடனேயே கோபமாக நடத்துனரிடம் "ஏங்க உங்ககிட்ட சொல்லிட்டுத்தான போனேன்.. நீங்கதான கால்மணி நேரமாகும்னு சொன்னீங்க?” என்று கேட்க நடத்துனர் அமைதியாக, “சரி.. சரி.. உள்ள போங்க..” என்றார்.

அந்த மனிதருக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.. ஆனாலும் என்ன செய்றது..? அதற்குள்ளாக நானும், நண்பரும் வண்டியில் ஏறி அவரது முதுகில் தட்டிக் கொடுத்து கோபத்தைக் குறைத்து அமர வைத்தோம். இப்படியெல்லாம்கூட சில மனிதர்கள்..!

-----------------------------

எங்களுக்குக் கிடைத்த ஓட்டுனர் அற்புதமான ஓட்டுனர். ஓட்டுதல் பற்றி இவரிடம் வந்துதான் அனைவரும் பயிற்சியெடுக்க வேண்டும்.. இவருடைய ஓட்டுனர் திறமை இரவு நேரத்தில் தெரியவில்லை.. ஆனால் விடிகின்றபோது கண் முழித்து ஒரு வேளை திருச்சியைத் தாண்டிவிட்டதோ என்று பதற்றத்தோடு அருகில் இருந்தவரிடம் கேட்டபோது, அவர் சலிப்போடு "இன்னும் பெரம்பலூரையே தாண்டலை ஸார்..” என்றார்.

அரைகுறைத் தூக்கத்தில் அக்கம்பக்கம் நோட்டம்விட்டபோது அனைவரும் ஏகக் கடுப்போடு இருந்தது அவர்களது முகத்திலேயே தெரிந்தது. ஒரு மத்திய வயதுக்காரர் பொறுமையிழந்துபோய் “ஏங்க.. மதியத்துக்குள்ளயாவது திருச்சி போய் சேர்ந்திருவீங்களா..?” என்று கத்தினார்.

வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சி செல்ல ஆகும் நேரம் 7 மணி நேரம்தான். வழியில் எங்காவது சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினால் அந்த 20 நிமிடத்தைக் கூட்டிக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுநர்களோ வண்டியை மிக மெதுவாகச் செலுத்தி கிட்டத்தட்ட 9 அல்லது 10 மணி நேரம் கழித்துத்தான் திருச்சி வந்தடைகிறார்கள். எங்களது டிரைவர் 3 இடங்களில் வண்டியை நிறுத்தியிருந்தாராம். நான்தான் தூங்கிவிட்டேன். “அவன் பாட்டுக்கு நிறுத்திட்டு உள்ள போயிட்டான் ஸார்.. நாங்க சத்தம்போட்ட பின்னாடிதான் எந்திரிச்சு வந்தான்..” என்றார் என் பக்கத்து இருக்கை நண்பர்.

திருச்சிவரை மட்டும் செல்லக்கூடிய பேருந்துகள் காலையானதும் பெரம்பலூருக்குள் கால் வைத்து சில நிமிடங்கள் நின்ற பின்புதான் மறுபடியும் கிளம்புகின்றன. இங்கேயும் ஒரு முக்கால்மணி நேரம் வீணாகிறது. கேட்டால் "மேலிடத்து உத்தரவு" என்கிறார்கள். திருச்சியைத் தாண்டி செல்கின்ற பேருந்துகள் மட்டும்தான் பெரம்பலூருக்குள் வராமல் நேர் பாதையிலேயே சென்றுவிடுகின்றன.

"அந்தா”, "இந்தா" என்று போக்குக் காட்டிய ஓட்டுனர், வழியில் சென்ற, வந்து கொண்டிருந்த சைக்கிள்கள், மாட்டு வண்டிகளுக்குக்கூட மரியாதையாக ஒதுங்கி வழிவிட்டது மிகக் கொடுமை. இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்.. அவர் ஒவ்வொரு முறையும் வழிவிடும்போது பின் வரிசையிலிருந்து பலத்த கைதட்டல் ஒலித்தது. அந்தக் கோபத்தில்தான் ஓட்டுனரும் வேண்டுமென்றே மிக, மிக மெதுவாக வந்து சேர்ந்தாற்போலும்..

சென்னையில் இரவு 8.30 மணிக்கு நகர ஆரம்பித்த பேருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தபோது காலை மணி 9.10.. கிட்டத்தட்ட 13 மணி நேரம்.. எங்கேயாவது இந்தக் கொடுமை நடக்குமா..? இது போன்ற நேரத் திருடிகளால்தான் நீண்ட தூரப் பேருந்து பயணம் என்பதே பலருக்கும் பிடிக்காமற்போகிறது..

-------------------------------------------------------

ரயில்களைப் போல வரும், புறப்படும் நேரங்கள் கட்டாயமாக இல்லாததாலும், எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும் விபத்துக்களாலும்தான் பேருந்துகள் தாமதமாவதாக பலரும் சொன்னாலும், ஓட்டுனர்கள் மனம் வைத்தால் எப்படியும் மிகக் குறைந்த நேரத்தில் வந்து சேரலாம் என்பதை நான் மறுபடியும் திருச்சியில் இருந்து சென்னை வரும்போது அறிந்து கொண்டேன்.

மதியம் 3.45 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதே மாதிரியான SETC Super Deluxe பஸ்ஸில் ஏறி இரவு 10.35 மணிக்கு அசோக்பில்லரில் வந்து இறங்கினேன். கிட்டத்தட்ட 7 மணி நேரம்தான். இது எப்படி சாத்தியமானது..? இந்த நேரத்தில் சாலைகளில் போக்குவரத்து அதிகமில்லை என்றாலும் இரண்டு இடங்களில் விபத்துக்களால் சில நிமிட நேரங்கள் பேருந்து ஊர்ந்துதான் நகரத் தொடங்கியது.. அப்படியிருந்தும் இந்த ஓட்டுனர் எப்படி இவ்வளவு சீக்கிரமாக கொண்டு வந்து சேர்த்தார் என்று தெரியவில்லை..

போகும்போது அல்லல்பட்டு போய்ச் சேர்ந்ததால் வரும்போது அந்தத் துக்கம் நிகழக்கூடாது என்று எனது அப்பன் முருகனை வேண்டிக் கொண்டே வந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்க அவனது திருவிளையாடலால் அவன் தேடிக் கொடுத்த ஒரு புத்தகத்தை படித்தபடியே வந்து சேர்ந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகமும் அவ்வளவு சூடு. என்ன புத்தகம் என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

(தொடரும்)

134 comments:

அத்திரி said...

இதேப் போல் நானும் என்னுடைய ஊருக்கு செல்லும் போது அனுபவித்திருக்கிறேன் சென்னை வந்த புதிதில்..... இப்போதெல்லாம் திடீர் பயணம் என்றால் திருச்சி போகனும்னாலே அரசுப்பேருந்து விழுப்புரம் தான் பெஸ்ட்.... 7 மணி நேரத்தில் திருச்சிக்கு சென்றுவிடலாம்

மணிகண்டன் said...

எங்கேயும் மோதாம கொண்டுபோய் சேத்தார் தான ! என்ன கொழுப்பு உங்களுக்கு ?
அவர பாராட்டி பதிவு போடாம, இப்படி எழுதி இருக்கீங்க !

உண்மையிலயே உங்களுக்கு மோசமான லக் தான் ! திருச்சிக்கு 13 மணிநேரம் எடுக்கற பேருந்து எல்லாம் லட்சத்துல ஒண்ணு தான் !

நாமக்கல் சிபி said...

சூப்பர் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் எல்லாம் வேஸ்டு!

விழுப்புறம் அரசுப்பேருந்து பரவாயில்லை! கட்டணமும் குறைவு!

நாமக்கல் சிபி said...

ஆனாலும் நிறுத்தும் உணவகம், ஸ்பீடு.. எல்லாம் நோ கமெண்ட்ஸ்!

நமக்கென்ன! நடு இராத்திரில போயி வீட்டுல இருக்குறவங்களை எழுப்பிடுவமோ என்கிற பயம் இல்லை!

சென்னைல நைட் 9 மணிக்கு பஸ் ஏறினா காலைல 7 மணிக்கெல்லாம் சேலம் போயிடலாம்! தூக்கத்துக்கு நம்மை கேக்கவா வேணும்!

:)

ரவி said...

அண்ணே...நல்ல வேளை நீங்க டெல்லி போவல...

சரவணகுமரன் said...

//நானும் சட்டென்று உஷ்ணமாகி, "இந்த பைக்கு 500 ரூபா தர முடியாது..” என்றேன்.. //

:-))

சரவணகுமரன் said...

//தனியார் பேருந்துகள் இது மாதிரி பிரச்சினைகளால் நின்று போய் நான் பார்த்ததே கிடையாது. விபத்து ஏற்பட்டுத்தான் பார்த்திருக்கிறேன். //

ஓ! வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகுறது பிரச்சினையே இல்லையோ?

சரவணகுமரன் said...

//(தொடரும்)//

தொடருமா??? :-)

நாமக்கல் சிபி said...

//அண்ணே...நல்ல வேளை நீங்க டெல்லி போவல...//

:))

ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!

நாமக்கல் சிபி said...

//(தொடரும்)//

அடக்கடவுளே! ஆமாம்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நாமக்கல் சிபி said...

நான் பத்துப் போட்டுட்டேன்!

Anonymous said...

எல்லாரும் பார்த்துக்குங்க!எல்லாரும் பார்த்துக்குங்க!

நானும் கோவிச்சிக்கிட்டேன்!நானும் கோவிச்சிக்கிட்டேன்!நானும் கோவிச்சிக்கிட்டேன்!

Nilofer Anbarasu said...

//ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!//

அப்ப இது மட்டும் என்ன சின்ன பதிவா :)

UT, நீங்க உங்க டெம்ப்லேட் widthஐ கொஞ்சம் அதிகபடுத்தினால், படிப்பதற்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.

Anonymous said...

//UT, நீங்க உங்க டெம்ப்லேட் widthஐ கொஞ்சம் அதிகபடுத்தினால், படிப்பதற்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.//

இவருக்கு நீங்க 70 எம் எம் லே வித் செட் பண்ணி கொடுத்தாக் கூட இவ்ளோ பெரிசாத்தான் பதிவு எழுதுவார்!

Sathik Ali said...

நல்ல பதிவு.சில ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவிலிருந்து திருச்சி செல்ல பஸ் ஏறினேன்.இரவு ஆனதால் கண்டக்டர் டிக்கட் காசுக்கு மேல் 50 ரூபாய் எக்ஸ்ட்ரா பிடுங்கி விட்டான்.எங்கே போய் முட்ட.அது போல் சென்னையிலிருந்து ஒரு இரவு நேரப் பயணத்தில் கண்டக்டர் பஸ்ஸில் லைட்டை அணைத்து விட்டு ஒரு இளம் பெண்னின் பக்கத்தில் போய் உட்கார்ந்து சில்மிசம் பண்ணத் தொடங்கினான்.கொஞ்ச நேரம் நெளிந்த அந்த இள வயது பெண் பட்டென எழுந்து இரவு முழுதும் நின்று கொண்டே பயணித்தாள்.ஆனாலும் கிராதகன் எழுந்து அங்குமிங்கும் உலாத்தி உரசி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.

Sathik Ali said...

நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.தொடருங்கள்.நேற்று திருநெல்வேலி பஸ்ஸில் என் மகனுடன் பயணித்தேன். பஸ்ஸின் ஜன்னல் பக்க கண்ணாடி உடைந்திரிந்திருக்கிறது.ப்ரேக் போட்டதில் கண்ணாடி என் மகனின் கையை கிழித்து இரத்தம் கொட்ட தொடங்கியது.கண்டக்டரை கூப்பிட்டு பஸ்ஸில் உள்ள முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ப்ளாஸ்டர் கேட்டேன்.முதலுதவி பெட்டி என்று பெரிதாக ஒன்று வைத்திருக்கிறார்கள். திறந்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை.திருட்டுப் பயல்கள்.திருநெல் வேலி வரும் வரை கையால் இரத்தத்தை பொத்தி பிடித்த படி வந்தேன்.என்ன செய்ய?

அது சரி(18185106603874041862) said...

//
கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது. திடுக்கிட்டுப் போய் சற்று உற்றுப் பார்த்த பின்புதான்
//

கண்ணாடியில இருக்கிறது தாங்கண்ணா காட்டும் :0))...சில பேருக்கு இந்தியா தெரியுது...சில பேருக்கு தமிழ்நாடு தெரியுது...அதுக்கு கண்ணாடி என்ன பண்ணும்??

கிரி said...

//கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது//

ஹா ஹா ஹா

//திருச்சியில் இறங்கும்போது பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு "கொடுத்தால்தான் இறங்குவேன்" என்று மிரட்டி வாங்கியேவிட்டேன்//

வடிவேல் ஒரு படத்தில் கேட்பாரே அது மாதிரியா! :-)))))))

//பாலத்தின் இறக்கத்திலேயே வண்டி நின்றுவிட்டது. திடீரென்று என்ஜின் சுவிட்ச் ஆப். //

ஹா ஹா செம காமெடி

//என்னால ஒண்ணும் பண்ண முடியாது. போறதுன்னா போங்க.. வேண்டாம்னா இறங்கிக்குங்க..” என்றார் பொறுப்பாக.. //

இதுதாண்டா பதில் ...

உண்மை தமிழன் உங்க பதிவின் சிறப்பே திருச்சி வண்டி எடுத்த நேரத்தை விட நீளமாக இருந்தாலும் படிக்க சுவாராசியமாக இருப்பது தான் :-)))

நான் கேள்வி பட்டது, ஒரு சில பேருந்தை மெதுவாக ஒட்டி செல்ல மேலிடத்தில் இருந்து கட்டளை உண்டு என்று.

இருந்தாலும் 13 மணி நேரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமை தான்.

Anonymous said...

தம்பி சரவணா,

www.tamilnet.tv க்கு ஒரு எட்டு போய் பாக்குறது.

இப்படிக்கு
ராவணன்.

எட்வின் said...

தூசியாவது பரவாயில்லைங்க பஸ்ஸில, மூட்டைப்பூச்சி அநியாயம் தாங்க முடியல பல விரைவுப் பேருந்துகளில்.

சில்லறை,வேகம்,உணவக நிறுத்தும்,நம்பர் ஒண்ணு எல்லாம் இங்கயும் சேம் பிளட் தாங்க

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
இதே போல் நானும் என்னுடைய ஊருக்கு செல்லும் போது அனுபவித்திருக்கிறேன் சென்னை வந்த புதிதில். இப்போதெல்லாம் திடீர் பயணம் என்றால் திருச்சி போகனும்னாலே அரசுப் பேருந்து விழுப்புரம் தான் பெஸ்ட். 7 மணி நேரத்தில் திருச்சிக்கு சென்றுவிடலாம்.//

நன்றி அத்திரி..

நீங்கள் சொல்கின்ற விழுப்புரம் அரசுப் பேருந்து கோயம்பேட்டிலிருந்தா கிளம்புகிறது..

அவ்வளவு தூரம் சாய்வு இல்லாத சீட்டில் அமர்ந்து சென்றால் முதுகு வலி வந்துவிடுமே..?

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
எங்கேயும் மோதாம கொண்டுபோய் சேத்தார்தான ! என்ன கொழுப்பு உங்களுக்கு? அவர பாராட்டி பதிவு போடாம, இப்படி எழுதி இருக்கீங்க!//

மோதாம கொண்டு போய் சேர்த்தாருங்கறதுக்காக 13 மணி நேரம் வண்டியோட்டறதை எப்படி சகிச்சுக்குறது மணி..?

//உண்மையிலயே உங்களுக்கு மோசமான லக்தான் ! திருச்சிக்கு 13 மணிநேரம் எடுக்கற பேருந்து எல்லாம் லட்சத்துல ஒண்ணுதான்!//

இதுதான் என் கிரகம்..

உண்மைத்தமிழன் said...

//Namakkal Shibi said...
சூப்பர் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் எல்லாம் வேஸ்டு! விழுப்புறம் அரசுப் பேருந்து பரவாயில்லை! கட்டணமும் குறைவு!//

அரசுப் பேருந்து பரவாயில்லைதான்.. ஆனால் 7 மணி நேரமும் அந்த சாதா சீட்டில் அமர்ந்து போக முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

//Namakkal Shibi said...
ஆனாலும் நிறுத்தும் உணவகம், ஸ்பீடு.. எல்லாம் நோ கமெண்ட்ஸ்!//

இதெல்லாம் சேட்டையில்ல.. எதுக்கு நோ கமெண்ட்ஸ்..?

//நமக்கென்ன! நடு இராத்திரில போயி வீட்டுல இருக்குறவங்களை எழுப்பிடுவமோ என்கிற பயம் இல்லை! சென்னைல நைட் 9 மணிக்கு பஸ் ஏறினா காலைல 7 மணிக்கெல்லாம் சேலம் போயிடலாம்! தூக்கத்துக்கு நம்மை கேக்கவா வேணும்!:)//

கொடுத்து வைச்சவன்ப்பா நீயீ.. கண்ணை மூடினவுடனே தூங்குறவன்தான் உலகத்துலேயே பெரிய பாக்கியசாலி..

நல்லா இரு முருகா..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
அண்ணே... நல்ல வேளை நீங்க டெல்லி போவல...//

போவத்தான் போறேன் தம்பீ..

அப்பால.. ரெண்டு நாள்.. 48 மணி நேர பயணத்துக்கு.. 48 பக்கத்துக்கு பயண அனுபவம் போட்டு இம்சை பண்றேன்னா இல்லையான்னு பாரு..

உண்மைத்தமிழன் said...

///சரவணகுமரன் said...
//நானும் சட்டென்று உஷ்ணமாகி, "இந்த பைக்கு 500 ரூபா தர முடியாது..” என்றேன்.. //:-))///

கோபம்தான்.. வேறென்ன..? அந்த நொடில வாய்ல வந்தது..

நாமக்கல் சிபி said...

/அரசுப் பேருந்து பரவாயில்லைதான்.. ஆனால் 7 மணி நேரமும் அந்த சாதா சீட்டில் அமர்ந்து போக முடியுமா..?//

அப்போ அதுல போறவங்களெல்லாம்?
அந்த பஸ்ஸும் ஃபுல்லாத்தானே போகுது!

உண்மைத்தமிழன் said...

///சரவணகுமரன் said...
//தனியார் பேருந்துகள் இது மாதிரி பிரச்சினைகளால் நின்று போய் நான் பார்த்ததே கிடையாது. விபத்து ஏற்பட்டுத்தான் பார்த்திருக்கிறேன். //
ஓ! வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகுறது பிரச்சினையே இல்லையோ?///

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை குமரன்..

இது மாதிரி தள்ளுமாடல் வண்டி போல் காட்சிப் பொருளாவது அரசுப் பேருந்துகள் மட்டுமே என்பதற்காகத்தான் சொன்னேன்..

நாமக்கல் சிபி said...

//கொடுத்து வைச்சவன்ப்பா நீயீ.. கண்ணை மூடினவுடனே தூங்குறவன்தான் உலகத்துலேயே பெரிய பாக்கியசாலி.. //

கண்டக்டர் டிக்கெட் கொடுக்குறவரைதான் கட் ஆஃப் டைம்!

அதுக்கு மேல தூங்கிடுறா கைப்புள்ளை!ன்னு தூங்கிடுவேன்!

உண்மைத்தமிழன் said...

///சரவணகுமரன் said...
//(தொடரும்)//
தொடருமா??? :-)///

ஏன்யா இப்படி பயப்படுறீங்க.?

எப்படிப் போனேன்றதை சொல்லிட்டேன்..

எதுக்குப் போனேன்றதை சொல்ல வேண்டாமா..?

வெயிட் ப்ளீஸ்..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//அண்ணே...நல்ல வேளை நீங்க டெல்லி போவல...//
ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!///

இதுக்காகவே ஒரு தபா டெல்லிக்குப் போயே தீருவேன்.. அதுவும் டிரெயின்ல மட்டும்தான்..

கிண்டலா பண்றீங்க..?

நாமக்கல் சிபி said...

//இது மாதிரி தள்ளுமாடல் வண்டி போல் //

அந்த மாதிரி தள்ளும்போது

மீரா படத்துல வரும்

"ஹொய்யா! இந்த ராத்திரியில்
ஹோய்யா! நடு ரோட்டினிலே
நின்றாடும் வெள்ளி நிலவு" என்கிற பாட்டை பாடிகிட்டே தள்ளுனீங்கன்னா ஒரே குஜாலா இருக்கும்!

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//(தொடரும்)//
அடக்கடவுளே! ஆமாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

என்ன கடவுளே.. நாலே நாலு எழுத்து.. அதுக்கு ஒரு அழுவாச்சியா..?

நாமக்கல் சிபி said...

//இதுக்காகவே ஒரு தபா டெல்லிக்குப் போயே தீருவேன்.. அதுவும் டிரெயின்ல மட்டும்தான்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...!

இனி ஆண்டவனே நினைச்சாலும் எங்களைக் காப்பாத்த முடியாது!

உண்மைத்தமிழன் said...

//Namakkal Shibi said...
நான் பத்துப் போட்டுட்டேன்!//

நானும் பதிலுக்குப் பத்து போட்டுட்டேன்..

வெட்டிப்பயல் said...

இவங்களை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது... ஒரு முறை சென்னைல இருந்து கள்ளக்குறிச்சி (உளுந்தூர்பேட்டைல இருந்து 45 நிமிஷம் தான்) போறதுக்கு பத்து மணி நேரம் எடுத்தாங்க.

பஸ்ல இருந்த எல்லாரும் எங்க ட்ரைவர் ஏதாவது சைக்கிளயோ, மாட்டு வண்டியையோ முந்தினா பலமா கை தட்டிட்டு இருந்தாங்க :)

வெட்டிப்பயல் said...

//Namakkal Shibi said...
//அண்ணே...நல்ல வேளை நீங்க டெல்லி போவல...//

:))

ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!//

தள,
பதிவை படிக்கவேயில்லையா?

உண்மைத்தமிழன் said...

//உண்மைப் பயணி said...
எல்லாரும் பார்த்துக்குங்க! எல்லாரும் பார்த்துக்குங்க!
நானும் கோவிச்சிக்கிட்டேன்! நானும் கோவிச்சிக்கிட்டேன்! நானும் கோவிச்சிக்கிட்டேன்!//

எல்லாரும் கேட்டுக்குங்க..

இந்த கமெண்ட்டை மாநக்கல் சிபி தம்பி போடலை.. போடலை.. போடலை..

நாமக்கல் சிபி said...

//இந்த கமெண்ட்டை மாநக்கல் சிபி தம்பி போடலை.. போடலை.. போடலை..//

ஆமாம்! போட்டது யாரோ உண்மைப் பயணியாம்!

நாமக்கல் சிபி said...

//இதுக்காகவே ஒரு தபா டெல்லிக்குப் போயே தீருவேன்..//

ஆமாமா! அப்புறம் டெல்லில இருக்குற பயலுவலை எப்படித்தான் அடக்குறது?

Anonymous said...

//இந்த கமெண்ட்டை மாநக்கல் சிபி தம்பி போடலை.. போடலை.. போடலை..//

ஆமா! மாநக்கல் சிபிக்கு தம்பி இல்லை!

அவரு வீட்டுலே அவருதான் கடைக்குட்டியாம்!

நாமக்கல் சிபி said...

//தள,
பதிவை படிக்கவேயில்லையா?//

ஏன் இந்த கொளை விரோதப் பேச்சு?

நாமக்கல் சிபி said...

/பஸ்ல இருந்த எல்லாரும் எங்க ட்ரைவர் ஏதாவது சைக்கிளயோ, மாட்டு வண்டியையோ முந்தினா பலமா கை தட்டிட்டு இருந்தாங்க :)//

சபாஷ் சரியான போட்டின்னும் சொல்லி இருப்பாங்களே!

SurveySan said...

கம்ப்ளெயிண்ட் ஒண்ணு எழுதிப் போடுங்க.

http://darpg-grievance.nic.in/

வடுவூர் குமார் said...

பதிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பின்னூட்டங்கள் அந்த குறையை போக்கிடுச்சு.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இதெல்லாம் பார்த்துப் பார்த்து பலமுறை நொந்து போயிருக்கிறோம் எல்லோரும்.

இந்த சீர்கேடுகளின் ஊற்றுக் கண்ணைத் தேடினால் அது இரண்டு இடங்களில்தான் முடியும்,ஒன்று அரசியல் சீர்கேடு இரண்டு யூனியன் சீர்கேடு.

இரண்டையும் ஒழித்தால்தான் இந்தியா உருப்படும்.

சர்வேஸ் சொன்னதை செய்க.

Rajeswari said...

பாவம் அண்ணா நீங்கள் !கொடும கொடுமன்னு கோவிலுக்கு வந்தா அங்க ரெண்டு கொடும தாவி குதுச்சு ஆடுச்சாம். என்ன கொடுமன்னு ப்ளோக்ல வந்தே பாருங்க

குசும்பன் said...

அண்ணே பதிவை துபாயில் படிக்க ஆரம்பிச்சேன் ஷார்ஜா போய் சேரும் வரை படிச்சேன்:)))

துபாய் ஷார்ஜா டிராவலிங் டைம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை:))

குசும்பன் said...

//'விதியே' என்று நினைத்து கீழேயிறங்கி 'ஐலேசா' பாடியபடியே பேருந்தை தள்ளினோம். //

ஆம்பளைங்க எல்லா இறங்கி தள்ளுங்க என்று சொல்லி இருப்பாரே!

நீங்களும் பிகருங்களை உட்டார வெச்சு தள்ளிக்கிட்டு போய் இருப்பீங்களே!!

பஸ்ஸை சொன்னே அண்ணே!!!

குசும்பன் said...

//ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?//

ஏன் ரெண்டு வீடு ”வெச்சு இருக்கவங்க” சின்ன வீட்டை பராமரிப்பது போல் பெரிய வீட்டை பராமரிப்பது இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்க இதுக்கு அப்றம் நான் பதில் சொல்றேன்!

குசும்பன் said...

அண்ணே ஒரே ஒரு டவுட் இப்பதான் தமிழக விரைப்பேருந்தில் போறீங்களா?

நாங்க எல்லாம் சென்னையில் இருந்து கும்பகோணம் வரை பஸ்ஸுக்குள்ள குடைப்பிடிச்சிக்கிட்டு விடிய விடிய தூங்காம எல்லாம் போய் தீபாவளி கொண்டாடியிருக்கோம்! நீங்க எம்மாத்திரம்!

Unknown said...

idhu pola nanum anubavithen Arasu perundhu viluppuramnu sonneengale adhuvum thappu enna ketta train best busla poganumna veli oor pora (Via Trichy) Idhula eruna seekirama pogalam 4.5 hours only travel idhu eppadi sattiyam

நையாண்டி நைனா said...

வேகமா போகலே... வேகமா போகலேன்னு கூவுறீங்களே .... அதுலே பிரக்குன்னு ஒன்னு இல்லைன்னு அந்த ட்ரைவருக்கு தானே தெரியும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இதே போன்ற அனுபவம் எனக்கு நிறைய தடவை ஏற்பட்டிருக்கிறது.

நித்யன் said...

தலைவரே...

இதே போல பயணங்கள் உங்களுக்கு அமைய அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன். மிக மிக சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. பயணக்கட்டுரையில் போய் வந்த இடங்களைப் பற்றித்தான் எழுதுவார்கள். இப்படி நீங்கள் போனதே ஒரு கட்டுரை எழுதுமளவு ஆகிவிட்டது.

தட்கலில் புக் பண்ணி ட்ரெயின்ல போகவேண்டியதுதானே..

அன்பு நித்யன்

நித்யன் said...

தலைவரே...

இதே போல பயணங்கள் உங்களுக்கு அமைய அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன். மிக மிக சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. பயணக்கட்டுரையில் போய் வந்த இடங்களைப் பற்றித்தான் எழுதுவார்கள். இப்படி நீங்கள் போனதே ஒரு கட்டுரை எழுதுமளவு ஆகிவிட்டது.

தட்கலில் புக் பண்ணி ட்ரெயின்ல போகவேண்டியதுதானே..

அன்பு நித்யன்

நித்யன் said...

தலைவரே...

இதே போல பயணங்கள் உங்களுக்கு அமைய அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன். மிக மிக சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. பயணக்கட்டுரையில் போய் வந்த இடங்களைப் பற்றித்தான் எழுதுவார்கள். இப்படி நீங்கள் போனதே ஒரு கட்டுரை எழுதுமளவு ஆகிவிட்டது.

தட்கலில் புக் பண்ணி ட்ரெயின்ல போகவேண்டியதுதானே..

அன்பு நித்யன்

malar said...

உங்கள் post ல் tamilsaran என்று இருக்கிறது.பதிவை கிளிக் செத்தபிறகுதான் உண்மைத் தமிழன் என்று நிங்க தான் பதிவு எழுதி இருக்கிறேர்கள் என்று தெரிகிறது .எனக்கு உங்களை உண்மைத் தமிழன் என்றுதான் அறிமுகம் .போச்டுலேயே இன்னார்தான் எழுதியது என்று எப்படி கண்டுபிடிப்பது?

DHANS said...

அரசு விரைவு பேருந்துகளில் உள்ள டீசல் பம்புகளை மாற்றி வைத்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போகாமல் வைத்துள்ளனர், ஒவ்வொரு ஓட்டுனரும் லிட்டருக்கு 5.5 கிலோமீட்டர் கிடைக்கும்படி வண்டியை இயக்க நிற்பந்தப்படுதப்பட்டுள்ளனர். ஆசிலடரில் கல்லை வைத்து அழுத்தினாலும் வண்டி வேகமாய் போகாது.

ஓட்டுனருக்கு உணவகத்தில் 200 ரூபாய் குடுப்பது என்பது தவறான தகவல், எனக்கு தெரிந்த வரையில் அப்படி இல்லை, உணவு இலவசம், சிகரட் என்றால் இரண்டு இலவசம்.

பணிமனையில் பரமரிப்புக்கென்று இருந்த பணியாட்கள் மிக குறைவு, கடந்த சில மாதங்களாக எலக்ட்ரிகல் வேலை செய்ய ஒருவரும் இல்லை.

தனியார் பேருந்து இயக்குனர்கள் மாதா மாதம் சில பல லட்சங்களை கொடுப்பதால் இப்படி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனக்கு தெரிந்து பத்து வருடம் முன்னர் தினமும் இரவில் அயிந்து அரசு பேருந்துகள் சென்னை சென்றன, எங்கள் ஊரில் தனி பணிமனை கூட இருந்தது அனால் இப்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயங்குகிறது, பணிமனை மூடி பல வருடங்கள் ஆகின்றது. தனியார் பேருந்துகள் அப்போது ஒன்று இருந்தது இப்போது ஏழு இருக்கிறது.

இவை எல்லாம் உண்மை, எனது தந்தை அரசு விரைவு பேருந்தில் பணிபுரிந்து கடந்த வாரம் தான் இத்தகைய பரமரிப்பிலா வண்டிகளை ஓட்ட முடியயாது என்று விருப்ப ஓய்வு பெற்றார்.

malar said...

அந்நியன் தான் தீர்வு

Anonymous said...

இது மக்களின் தவறு.

நல்லவனுக்கு ஓட்டு போட்டா நல்லது நடக்கும்.

ராஜா சரி இல்லைனா நாடே சரி இருக்காது.

மணிஜி said...

அன்ணே... அந்த ஒட்டல் பொன்முடீயோடது.

உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம ஊரில் அரிசி ஒரு ரூபாதான்..ஒன்னுக்கிருக்க ரெண்டு ரூபா..

அது மட்டுமில்லே.. வெள்ளம் வந்து ஒருத்தனும் சாகலே ..நிவாரனம் வாங்க போய்தான் அப்பிட்டு ஆனான்...

மணிஜி said...

அன்ணே... அந்த ஒட்டல் பொன்முடீயோடது.

உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம ஊரில் அரிசி ஒரு ரூபாதான்..ஒன்னுக்கிருக்க ரெண்டு ரூபா..

அது மட்டுமில்லே.. வெள்ளம் வந்து ஒருத்தனும் சாகலே ..நிவாரனம் வாங்க போய்தான் அப்பிட்டு ஆனான்...

உண்மைத்தமிழன் said...

///Nilofer Anbarasu said...
/ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!/
அப்ப இது மட்டும் என்ன சின்ன பதிவா:)//

சின்னப் பதிவுதான் நிலோபர்.. 7 பக்கம்தான்..

//UT, நீங்க உங்க டெம்ப்லேட் widthஐ கொஞ்சம் அதிகபடுத்தினால், படிப்பதற்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.//

அதனை எப்படி அதிகப்படுத்துவது..? கோபித்துக் கொள்ளாமல் கொஞ்சம் சொல்லித் தர முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

///பாலுமகேந்திரா said...
//UT, நீங்க உங்க டெம்ப்லேட் widthஐ கொஞ்சம் அதிகபடுத்தினால், படிப்பதற்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.//
இவருக்கு நீங்க 70 எம் எம் லே வித் செட் பண்ணி கொடுத்தாக்கூட இவ்ளோ பெரிசாத்தான் பதிவு எழுதுவார்!///

இதைச் சொல்றதுக்கு எதுக்கு பாலுமகேந்திரா வேணும்..?

உண்மைத்தமிழன் said...

//சாதிக் அலி said...
நல்ல பதிவு.சில ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவிலிருந்து திருச்சி செல்ல பஸ் ஏறினேன்.இரவு ஆனதால் கண்டக்டர் டிக்கட் காசுக்கு மேல் 50 ரூபாய் எக்ஸ்ட்ரா பிடுங்கி விட்டான்.எங்கே போய் முட்ட.அது போல் சென்னையிலிருந்து ஒரு இரவு நேரப் பயணத்தில் கண்டக்டர் பஸ்ஸில் லைட்டை அணைத்து விட்டு ஒரு இளம் பெண்னின் பக்கத்தில் போய் உட்கார்ந்து சில்மிசம் பண்ணத் தொடங்கினான்.கொஞ்ச நேரம் நெளிந்த அந்த இள வயது பெண் பட்டென எழுந்து இரவு முழுதும் நின்று கொண்டே பயணித்தாள்.ஆனாலும் கிராதகன் எழுந்து அங்குமிங்கும் உலாத்தி உரசி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.//

எல்லாவித பணிகளிலும் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனிதர்கள்தான் எத்தனை, எத்தனை விதம்..?

சாதிக் ஸார்.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

//சாதிக் அலி said...
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.தொடருங்கள்.நேற்று திருநெல்வேலி பஸ்ஸில் என் மகனுடன் பயணித்தேன். பஸ்ஸின் ஜன்னல் பக்க கண்ணாடி உடைந்திரிந்திருக்கிறது.ப்ரேக் போட்டதில் கண்ணாடி என் மகனின் கையை கிழித்து இரத்தம் கொட்ட தொடங்கியது.கண்டக்டரை கூப்பிட்டு பஸ்ஸில் உள்ள முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ப்ளாஸ்டர் கேட்டேன்.முதலுதவி பெட்டி என்று பெரிதாக ஒன்று வைத்திருக்கிறார்கள். திறந்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை.திருட்டுப் பயல்கள்.திருநெல் வேலி வரும் வரை கையால் இரத்தத்தை பொத்தி பிடித்தபடி வந்தேன்.என்ன செய்ய?//

அரசுகளின் அக்கறையின்மையும், ஊழியர்களின் நேர்மையின்மையும்தான் காரணம்..

இதையெல்லாம் யார் கேட்பது..?

உண்மைத்தமிழன் said...

///அது சரி said...
//கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது. திடுக்கிட்டுப் போய் சற்று உற்றுப் பார்த்த பின்புதான்//
கண்ணாடியில இருக்கிறதுதாங்கண்ணா காட்டும்:0)) சில பேருக்கு இந்தியா தெரியுது... சில பேருக்கு தமிழ்நாடு தெரியுது... அதுக்கு கண்ணாடி என்ன பண்ணும்??///

என்னைப் பார்த்தா இந்தியா மாதிரியா தெரியுது..?

ஏதோ இலங்கை மாதிரின்னு சொல்லுங்க.. ஒத்துக்கலாம்..

உண்மைத்தமிழன் said...

///கிரி said...
//கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது//
ஹா ஹா ஹா///

இதுல என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு..?

//திருச்சியில் இறங்கும்போது பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு "கொடுத்தால்தான் இறங்குவேன்" என்று மிரட்டி வாங்கியேவிட்டேன்/
வடிவேல் ஒரு படத்தில் கேட்பாரே அது மாதிரியா! :-)))))))//

அதே மாதிரிதான்..

//பாலத்தின் இறக்கத்திலேயே வண்டி நின்றுவிட்டது. திடீரென்று என்ஜின் சுவிட்ச் ஆப்./
ஹா ஹா செம காமெடி//

ஒருத்தன் கஷ்டம் இன்னொருத்தருக்கு சந்தோஷம்.. ம்.. என்ன கொடுமை சரவணன் இது..?

//என்னால ஒண்ணும் பண்ண முடியாது. போறதுன்னா போங்க.. வேண்டாம்னா இறங்கிக்குங்க..” என்றார் பொறுப்பாக.. /
இதுதாண்டா பதில்...//

இதுக்குப் பேர்தான் பாசம்..

//உண்மை தமிழன் உங்க பதிவின் சிறப்பே திருச்சி வண்டி எடுத்த நேரத்தை விட நீளமாக இருந்தாலும் படிக்க சுவாராசியமாக இருப்பதுதான்:-)))//

அப்பாடா கிரியார் உண்மையை பேசிட்டார் இப்போ..

//நான் கேள்விபட்டது, ஒரு சில பேருந்தை மெதுவாக ஒட்டி செல்ல மேலிடத்தில் இருந்து கட்டளை உண்டு என்று.//

அதுக்கு நான்தான் கிடைச்சேனா..?

//இருந்தாலும் 13 மணி நேரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமைதான்.//

கொடுமைதான..? அடுத்த தபா நீங்க ஊருக்கு வரும்போது இதையும் அனுபவிக்கக் கடவ..

உண்மைத்தமிழன் said...

//ராவணன் said...
தம்பி சரவணா, www.tamilnet.tv க்கு ஒரு எட்டு போய் பாக்குறது.
இப்படிக்கு
ராவணன்.//

பார்த்தேன்..

அதென்ன சிங்கள ஊதுகுழல் தளமா..? பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது..

முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால் சரிவர அவதானிக்க முடியவில்லை.

நீங்களே தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//எட்வின் said...
தூசியாவது பரவாயில்லைங்க பஸ்ஸில, மூட்டைப்பூச்சி அநியாயம் தாங்க முடியல பல விரைவுப் பேருந்துகளில்.
சில்லறை,வேகம்,உணவக நிறுத்தும், நம்பர் ஒண்ணு எல்லாம் இங்கயும் சேம் பிளட்தாங்க.//

நன்றி எட்வின் ஸார்..

மூட்டைப்பூச்சியை அப்படியே நமது வீட்டுக்குக் கடத்தி வந்து பால் கொடுத்து வளர்த்து அது அடுத்த வீடுவரையில் பரவி..

உஷ்ஷ்ஷ்ஷ்.. கொடுமை தொடர்கிறது..

உண்மைத்தமிழன் said...

//Namakkal Shibi said...
/அரசுப் பேருந்து பரவாயில்லைதான்.. ஆனால் 7 மணி நேரமும் அந்த சாதா சீட்டில் அமர்ந்து போக முடியுமா..?//
அப்போ அதுல போறவங்களெல்லாம்?
அந்த பஸ்ஸும் ஃபுல்லாத்தானே போகுது!//

விழுப்புரம்வரைதான போகுது.. அது 4 மணி நேரம்தானே.. அதுக்கு மேலேயுமா போறாங்க..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//கொடுத்து வைச்சவன்ப்பா நீயீ.. கண்ணை மூடினவுடனே தூங்குறவன்தான் உலகத்துலேயே பெரிய பாக்கியசாலி.. //
கண்டக்டர் டிக்கெட் கொடுக்குறவரைதான் கட் ஆஃப் டைம்! அதுக்கு மேல தூங்கிடுறா கைப்புள்ளை!ன்னு தூங்கிடுவேன்!///

ம்.. எனக்குப் பொறாமையா இருக்கு ராசா..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இது மாதிரி தள்ளுமாடல் வண்டி போல் //
அந்த மாதிரி தள்ளும்போது மீரா படத்துல வரும்
"ஹொய்யா! இந்த ராத்திரியில்
ஹோய்யா! நடு ரோட்டினிலே
நின்றாடும் வெள்ளி நிலவு" என்கிற பாட்டை பாடிகிட்டே தள்ளுனீங்கன்னா ஒரே குஜாலா இருக்கும்!///

என்ன செய்யறது?

உனக்கு கொழுப்பு கூத்தாடுதுடா கண்ணா.. கூத்தாடுது.. ஆடு.. ஆடு..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இதுக்காகவே ஒரு தபா டெல்லிக்குப் போயே தீருவேன்.. அதுவும் டிரெயின்ல மட்டும்தான்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...! இனி ஆண்டவனே நினைச்சாலும் எங்களைக் காப்பாத்த முடியாது!///

இப்படித்தான் நல்ல பிள்ளையா உண்மையை ஒத்துக்கணும்..

உண்மைத்தமிழன் said...

//வெட்டிப்பயல் said...
இவங்களை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது... ஒரு முறை சென்னைல இருந்து கள்ளக்குறிச்சி (உளுந்தூர்பேட்டைல இருந்து 45 நிமிஷம்தான்) போறதுக்கு பத்து மணி நேரம் எடுத்தாங்க.
பஸ்ல இருந்த எல்லாரும் எங்க ட்ரைவர் ஏதாவது சைக்கிளயோ, மாட்டு வண்டியையோ முந்தினா பலமா கை தட்டிட்டு இருந்தாங்க:)//

அப்பவும் அதே கதைதானா..? வெட்டிப்பயல் ஸார்.. தோழமைக்கும், அனுதாபத்திற்கும் நன்றி..

உண்மைத்தமிழன் said...

///வெட்டிப்பயல் said...
//Namakkal Shibi said...
//அண்ணே...நல்ல வேளை நீங்க டெல்லி போவல...//:))
ஆமா! இல்லாட்டி (வழக்கம்போல) பெரிய பதிவாயிருக்கும்!//
தள, பதிவை படிக்கவேயில்லையா?///

நல்லா கேளு தம்பீ..

நானே கொஞ்சந்தான் எழுதியிருக்கேன்..

இவுகளுக்கு கண்ணு இருக்கா இல்லையான்னு எனக்கு டவுட் வருது..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இந்த கமெண்ட்டை மாநக்கல் சிபி தம்பி போடலை.. போடலை.. போடலை..//
ஆமாம்! போட்டது யாரோ உண்மைப் பயணியாம்!///

அந்த உண்மைப் பயணியின் உண்மைப் பெயர் நாமக்கல் சிபியாம்..

கரீக்ட்டா கண்ணு..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இதுக்காகவே ஒரு தபா டெல்லிக்குப் போயே தீருவேன்..//
ஆமாமா! அப்புறம் டெல்லில இருக்குற பயலுவலை எப்படித்தான் அடக்குறது?///

ஓகேடா ராசா..

நான் பதிவெழுதியே அவர்களை அடக்கிர்றேன்.. துணைக்கு இது மாதிரியே வந்து ஒத்தாசை பண்ணிரு... ஒரு கை பாத்திருவோம்..

உண்மைத்தமிழன் said...

///உண்மை விளம்பி said...
//இந்த கமெண்ட்டை மாநக்கல் சிபி தம்பி போடலை.. போடலை.. போடலை..//
ஆமா! மாநக்கல் சிபிக்கு தம்பி இல்லை!
அவரு வீட்டுலே அவருதான் கடைக்குட்டியாம்!///

அதான பார்த்தேன்.. இவ்ளோ வாலா இருக்கேன்னு.. கடைசியா..?

எப்பவுமே கடைசிதான் உருப்படாததுன்னு சொல்வாங்க..

ஹி.. ஹி.. நானும் கடைசிதான்..

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//தள, பதிவை படிக்கவேயில்லையா?//
ஏன் இந்த கொளை விரோதப் பேச்சு?///

வெட்டி ஏதோ பாசத்துல கேக்குது ராசா..

அதென்ன இதுல மட்டும் ஒரு இலக்கணப் பிழை..

ஏதாவது உள்குத்தா..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
/பஸ்ல இருந்த எல்லாரும் எங்க ட்ரைவர் ஏதாவது சைக்கிளயோ, மாட்டு வண்டியையோ முந்தினா பலமா கை தட்டிட்டு இருந்தாங்க :)//
சபாஷ் சரியான போட்டின்னும் சொல்லி இருப்பாங்களே!///

அதுக்குப் பதிலாதான் கை தட்டினாங்க கண்ணா..

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
கம்ப்ளெயிண்ட் ஒண்ணு எழுதிப் போடுங்க. http://darpg-grievance.nic.in///

வேஸ்ட்டு ஸார்..

ஆதாரம் கேப்பாங்க.. எங்கிட்டுப் போறது அதுக்கு..?

ஆமாம்.. என்ன திடீர் வருகை..? திக் விஜயம்..? ஆச்சரியமா இருக்கு..

அதோட பின்தொடர்தலிலும் சேர்ந்துள்ளீர்கள்..

எனக்கு சத்தியமா நீங்க யாருன்னே தெரியாது ஸார்.. நான் கண்டுபிடிக்கவும் இல்ல..

இட்லிவடை மாதிரி சர்வேசனும் முகமூடியாவே இருக்கட்டும்.. அப்பத்தான் ஆர்வமா இருக்கும்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
பதிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பின்னூட்டங்கள் அந்த குறையை போக்கிடுச்சு.//

எல்லாப் புகழும் முருகனுக்கே..

உண்மைத்தமிழன் said...

//Rajeswari said...
பாவம் அண்ணா நீங்கள்! கொடும கொடுமன்னு கோவிலுக்கு வந்தா அங்க ரெண்டு கொடும தாவி குதுச்சு ஆடுச்சாம். என்ன கொடுமன்னு ப்ளோக்ல வந்தே பாருங்க.//

தங்கையே..

வருகிறேன்.. சற்று பொறுத்திரு..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//குசும்பன் said...
அண்ணே பதிவை துபாயில் படிக்க ஆரம்பிச்சேன் ஷார்ஜா போய் சேரும்வரை படிச்சேன்:))) துபாய் ஷார்ஜா டிராவலிங் டைம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை:))//

ஐயோடா..

அந்த முருகன் போய் இன்னொரு முருகனா..?

எப்படி சமாளிக்கிறது..?

முதல் பின்னூட்டத்துலேயே குத்திட்டானே..

இதைப் படிச்சு முடிக்க 3 மணி நேரமா..? தம்பீ.. இடைல தூங்கிருப்பன்னு நினைக்கிறேன்.. நல்லா யோசிச்சுப் பாரு கண்ணு..

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...
//'விதியே' என்று நினைத்து கீழேயிறங்கி 'ஐலேசா' பாடியபடியே பேருந்தை தள்ளினோம். //
ஆம்பளைங்க எல்லா இறங்கி தள்ளுங்க என்று சொல்லி இருப்பாரே!
நீங்களும் பிகருங்களை உட்டார வெச்சு தள்ளிக்கிட்டு போய் இருப்பீங்களே!!///

அடப்பாவி..

இது அந்த முருகனுக்கே அடுக்காதுடா..

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...
//ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?//
ஏன் ரெண்டு வீடு ”வெச்சு இருக்கவங்க” சின்ன வீட்டை பராமரிப்பது போல் பெரிய வீட்டை பராமரிப்பது இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்க இதுக்கு அப்றம் நான் பதில் சொல்றேன்!///

ஓ.. அதுதான் காரணமா..?

அரசியல் மேட்டர்லே இப்படி ஒரு கமெண்ட்டு போட மாட்டேங்குறியே கண்ணு..

எல்லாம் செக்யூரிட்டிக்கு.. புத்திசாலி பையன்தான் போ..

உண்மைத்தமிழன் said...

//குசும்பன் said...
அண்ணே ஒரே ஒரு டவுட் இப்பதான் தமிழக விரைப்பேருந்தில் போறீங்களா?//

இல்லப்பா.. எத்தனை வருஷமா போறேன்..? இன்னிக்குப் போடணும்னு தோணுச்சு.. போட்டுட்டேன்..

//நாங்க எல்லாம் சென்னையில் இருந்து கும்பகோணம்வரை பஸ்ஸுக்குள்ள குடை பிடிச்சிக்கிட்டு விடிய விடிய தூங்காம எல்லாம் போய் தீபாவளி கொண்டாடியிருக்கோம்! நீங்க எம்மாத்திரம்!//

நானும்தான்..

நானும் ஒரு தீபாவளிக்கு இப்படி பஸ் ஏறி.. தீபாவளி அன்னிக்கு மதியானம் ஊர்ப் போய்ச் சேர்ந்த கதையெல்லாம் இருக்கு..

பின்னால நம்ம சோகத்தைப் பேசுவோம்..

உண்மைத்தமிழன் said...

//rajesh said...
idhu pola nanum anubavithen Arasu perundhu viluppuramnu sonneengale adhuvum thappu enna ketta train best busla poganumna veli oor pora (Via Trichy) Idhula eruna seekirama pogalam 4.5 hours only travel idhu eppadi sattiyam.//

சேருமிடம் வேறு ஊர் என்றால் அதுக்கு நேர ஒதுக்கீடு செய்திருப்பார்கள். இங்கே லேட்டானால் அங்கே மாட்டிக் கொள்வார்கள் என்பதனால் சீக்கிரமாக திருச்சியைக் கடந்துவிடுவார்கள்.

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
வேகமா போகலே... வேகமா போகலேன்னு கூவுறீங்களே .... அதுலே பிரக்குன்னு ஒன்னு இல்லைன்னு அந்த ட்ரைவருக்குதானே தெரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இதே போன்ற அனுபவம் எனக்கு நிறைய தடவை ஏற்பட்டிருக்கிறது.//

அப்பாடா..

நொந்து போனவர்கள் லிஸ்ட் நீள்கிறது..

இதுவரைக்கும் சந்தோஷம்..

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
தலைவரே... இதே போல பயணங்கள் உங்களுக்கு அமைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன். மிக மிக சுவாரஸ்யமான பயணக் கட்டுரை. பயணக் கட்டுரையில் போய் வந்த இடங்களைப் பற்றித்தான் எழுதுவார்கள். இப்படி நீங்கள் போனதே ஒரு கட்டுரை எழுதுமளவு ஆகிவிட்டது.//

நன்றி.. அப்ப இனிமேல் ஊரைப் பத்தி எழுதாம.. எப்படி போனம்ன்றதை பத்தி மட்டும் எழுதவா..?

//தட்கலில் புக் பண்ணி ட்ரெயின்ல போக வேண்டியதுதானே..?//

எனக்கு டிரெயினில் செல்வதே பிடிக்க மாட்டேங்குது தம்பீ..

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

//malar said...
உங்கள் post-ல் tamilsaran என்று இருக்கிறது. பதிவை கிளிக் செத்த பிறகுதான் உண்மைத் தமிழன் என்று நிங்கதான் பதிவு எழுதி இருக்கிறேர்கள் என்று தெரிகிறது. எனக்கு உங்களை உண்மைத் தமிழன் என்றுதான் அறிமுகம். போச்டுலேயே இன்னார்தான் எழுதியது என்று எப்படி கண்டுபிடிப்பது?//

அது முடியாத காரியம் மலர்..

தமிழ்சரண் என்பது எனது இமெயிலில் நான் கொடுத்திருக்கும் பெயர்.. அப்படித்தான் வரும்..

இனிமேல் தமிழ்சரண் என்றால் உண்மைத்தமிழன் என்று நினைத்துக் கொள்ளுங்களேன்..))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//DHANS said...
அரசு விரைவு பேருந்துகளில் உள்ள டீசல் பம்புகளை மாற்றி வைத்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போகாமல் வைத்துள்ளனர், ஒவ்வொரு ஓட்டுனரும் லிட்டருக்கு 5.5 கிலோமீட்டர் கிடைக்கும்படி வண்டியை இயக்க நிற்பந்தப்படுதப்பட்டுள்ளனர். ஆசிலடரில் கல்லை வைத்து அழுத்தினாலும் வண்டி வேகமாய் போகாது.//

இது வேறய்யா..? அப்ப ரோடு எவ்ளோ கிளியரா இருந்தாலும் வேகமெடுக்காதா..?

சரி.. பரவாயில்லை.. இதுவும் நல்லதுக்குத்தான்.. ஆனா அப்படி ஓட்டினாலும் 7 மணி நேரம்தான வரணும்.. அதுக்கே வரலைன்னா எப்படி ஸார்..?

//ஓட்டுனருக்கு உணவகத்தில் 200 ரூபாய் குடுப்பது என்பது தவறான தகவல், எனக்கு தெரிந்த வரையில் அப்படி இல்லை, உணவு இலவசம், சிகரட் என்றால் இரண்டு இலவசம்.//

என்னிடம் ஒரு நடத்துனர் முன்பே சொன்னார்.. அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.. சில இடங்களில் மட்டும் கொடுப்பதாக கேள்விப்பட்டேன்..

//பணிமனையில் பரமரிப்புக்கென்று இருந்த பணியாட்கள் மிக குறைவு, கடந்த சில மாதங்களாக எலக்ட்ரிகல் வேலை செய்ய ஒருவரும் இல்லை.//

உண்மைதான்.. இதைப் பற்றித் தனியாகத்தான் எழுத வேண்டும்..

//தனியார் பேருந்து இயக்குனர்கள் மாதா மாதம் சில பல லட்சங்களை கொடுப்பதால் இப்படி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.//

இருக்கலாம்.. பணம்தானே எல்லா இடத்திலும் விளையாடுகிறது..

//எனக்கு தெரிந்து பத்து வருடம் முன்னர் தினமும் இரவில் அயிந்து அரசு பேருந்துகள் சென்னை சென்றன, எங்கள் ஊரில் தனி பணிமனைகூட இருந்தது அனால் இப்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயங்குகிறது, பணிமனை மூடி பல வருடங்கள் ஆகின்றது. தனியார் பேருந்துகள் அப்போது ஒன்று இருந்தது இப்போது ஏழு இருக்கிறது.//

தனியார்களுக்காக அரசுப் பேருந்துகளைக் குறைத்துதான் ஓட்டுகிறார்கள்.. எல்லாம் பணம் படுத்தும் பாடு..

//இவை எல்லாம் உண்மை, எனது தந்தை அரசு விரைவு பேருந்தில் பணிபுரிந்து கடந்த வாரம்தான் இத்தகைய பரமரிப்பிலா வண்டிகளை ஓட்ட முடியயாது என்று விருப்ப ஓய்வு பெற்றார்.//

அப்படியா..? நல்லது..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//malar said...
அந்நியன்தான் தீர்வு.//

மலரு நான் சுபாவத்தில் அம்பி..

என்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இது மக்களின் தவறு. நல்லவனுக்கு ஓட்டு போட்டா நல்லது நடக்கும்.
ராஜா சரி இல்லைனா நாடே சரி இருக்காது.//

அது சரி அனானி..

மொதல்ல நல்லவர்கள் தேர்தல்ல நிக்கணுமே..? அதற்கென்ன வழி..?

உண்மைத்தமிழன் said...

//தண்டோரா said...
அன்ணே... அந்த ஒட்டல் பொன்முடீயோடது.//

அப்படியா..? அப்ப ஒண்ணும் செய்ய முடியாதுதான்..

//உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம ஊரில் அரிசி ஒரு ரூபாதான்.. ஒன்னுக்கிருக்க ரெண்டு ரூபா..//

நல்ல காமெடியா இருக்கு தண்டோரா..

//அது மட்டுமில்லே.. வெள்ளம் வந்து ஒருத்தனும் சாகலே.. நிவாரனம் வாங்க போய்தான் அப்பிட்டு ஆனான்...//

அது அம்மா ஆட்சிலதான..? இப்பவா..?

Arun Kumar said...

எனக்கும் இதே போல போன மாதம் ஆனது. ஆனா ரூட் தான் வேற

திருச்சி பெங்களூர்.

இரவு 8 மணிக்கு திருச்சியில் கிளம்பி காலை 9 மணிக்கு பெங்களூர் பொய் சேர்ந்தேன்.

அரசு விரைவு(??) பேருந்துகளில் அதிக வேகம் 55ஐ தாண்டாமல் இருக்க கட்டுபாடு செய்து இருப்பதாக சொன்னார்கள்.



அண்ணே உங்க return journeyயில் சீக்கிரம் வந்தற்க்கு காரணம் சென்னை வந்த பின்னர் உடனே அடுத்த டிரிப் உடனே திருச்சிக்கு அடிப்பாங்க.. அதனால் டிரிப் மிஸ் ஆக கூடாதுன்னு தான் ஒழுங்கான வேகத்துல வந்து இருப்பாங்க..

Anonymous said...

Even after all this, you had the courage to travel again in SETC!! Hats off to you. We once travelled from Salem to Chennai in a SETC "Super Deluxe". In fact, I waited for nearly two hours, letting atleast 3 normal busses go, because I have a problem of leg space. What can I say, the bus was in a terrible condition, all the seats were "occupied" by hundreds of BED BUGS. with these bugs we had to tolerate most of the other things you have mentioned. Two passengers(Iyeppan devotees) suffered most as they had allergic reaction to the bug bites. We would never forget that trip.

Cable சங்கர் said...

எங்க போனாலும் முருகன் உங்களை ரொம்பத்தான் சோதிக்கிறான் அண்ணே..

Anonymous said...

enakum ithe pol oru anubavam irukirathu... oru thadavai thrichy la irunthu chennai vanthutu irunthen.. apa enga thatha chennaila iranthu vitar ena seithi ketu kadaisee bus blody parveen travels..1am ku erunen. avar sonna mathiri travel hrs 6 to 7hrs than trichy to chennai.. ana enaku nadantha kodumai 12hrs night 1am ku erna nan 1pm ku than erangunen.. paradesi pasanga thrichykum pondycherykum enna sambantham.. antha vazhiyathan vanthuthu... ana busla all sekum bothu parunga.. kalla vizhatha kura.. antha vandi 10pm night ku start pani all seka arambichi irukan pola iruku.. en neram nan than antha vandila kadaisiya erna alu. ennada erna udane vandiya eduthutangalenu romba santhoshama ipod eduthu kathula matna padiye ..pakathula oru ponu iruntha athan kekavenum romba nal padikama iruntha oru sidney sheldon buk eduthu kaila vachen.. enga 10page kooda thandala light off panitanga.. avalayum paka mudila.. buk padikavum mudila.. apadiye patu keta padi enga thathava nanachikitu... chennai kalambinen... rathiri..oru 5am irukum.. nan sari thookam ithanaikum saraku kooda podala... munadipatha kli(cleaner) etho pump adichitu irukaru.. apuram pathu vandi off agi irunthuthu.. avaru pump pana pump pana driver etho start pani try pani start achi.. ara kilometer vandi pochi.. thirupi Kli vandi ota driver pump panaru..mothathula.. kadaloor kita etho oru gramathanda vandi nine pochi ella light off panitan... ore gum iruthu.. enaka pakathula laddu mari ponu.. enna soldrathu ponga.. thathava mothama maranthe poiten... oruthar oruthara driver kita poi kusalam visarika aramichanga... kadaisiya angaye vandi 15min ninuchi.. enakum konjam kadi aga aramichithu.. keezhi irangi poi mathavanga kita keten enna boss prachananu .. oruthar sonnar.. vandila .. disel diselnu onu irukumpa athu theenthu pocham.. ithu enna two wheelera thalitu porathuku illana kavuthu potu.. bunk varaikum otitu porathuku... apuram antha kli root bus onu 6maniku pudichi near by kadaloor poi 5ltr disel vangi vanthan.. apuram atha vandila ooothinan... nan sonnen..oth... nee oothura disel un tanklaye otikumnu avanala onum solla mudila..vera vazhi... vandiya eduthan.. pondy ponan apuram than therinchathu.. antha padupavi etho parcel service vera nadathuranu.. ega pata parcel pondyla delivery panitu.. apuram disel full panikitu anga irunthu kalambunan.. nanum konjam santhosha paten... pakathula figure.. root vera ECR ..beach road.. avakooda beachla than poi ukara mudila.. atleast beach roadlayavathu onna travel pandromenu nanachi..konjam vera enna pandrathu... inum kalyanam agala so oru china sabalam... padikiravanga nadikatheenga.. enna thitatheenga.. neengala irunthalum ithethan yosichi irupeenga...
2hr pondy la irunthu vandi odite iruku.. patha apathan marakanam vanthuthu.. adapavi 30min la varavendiya idam 2hrsa.. manda kaya aramichichi.. ponavathu mannavathu.. ennaku kadupu thalaiku era aramichichi vai kullaye monaga aramichen... as he said. matu vandiyellam overtak pandra alavuku ponam thookura vandi mari padu slowa ponan.. anegama ithuku munadi anth driver amarar oorthi oti irupanu nanikiren... anth disel materla onu vituten.. nan poi driver kita keten.. enda ivlo long vareengale konja disel potu than varathunu.. athuku avar soldrar vazhkama vandi 4 to 5km milage tharum so nanga podra disel pondy varaikum varum.. anga disel cheap so anga meethi fillup panipom nu... ana intha vati vandi trafic la matikichi..so disel neraya kudichiduchinu sonnan .. enna oru echathanam. sari vandi ECR la poite irunthathu.. oruthar oruthara enthirika aramichanga.. ipa mani 11am. oruthan ketan enda evlo neranthana intha vandiya otuva... nan enna velaiku poratha illa un kooda ukanthu kudumbam nadathurathanu.. driver mugathula oru surukam kooda illa..kathe kekatha mari vandi otitu poite iruntharu... one by one ellarum avanga turn mudichitanga.. nan kadaisiya mahaps thandumbothu enthirichi ponen.. infact nan padu kadupula than ponen.. ana driver mugam patha udane kool agiten.. nan keten.. en boss ipadi slowa poreenga ethvathu venduthala illa intha roadla otrathuku bayamanu... ungaluku kovame varalaya.. oruthar vidama ellarum ungaluku ipadi rivit adikirangalenu.. atharku avar oru punsiripodu.. sir ithu neenga inaikuthan pakureenga... enaku ithu pazhgi pochinu sonnar... ennaku enna soldrathune therila.. enga veetla thatha pinatha potu ellarum azhuthutu irukanga... nan than veetla mootha peran so all are waiting for me call mela call vanthute iruku.. enaku thatha savu perutha sogama agipochi... atharku mukiya karanam thatha illa namba speed F1 driver than karanam. etho oru vazhiya atha pona pathu oru chinna smile vitutu... thiruvanmiyurlaye irangi.. auto pudichi aminchikaraila mala onu vangitu veetuku ponen anga almost ellarum azhuthu onchi poitanga pola iruku.. nanum poi 2min thathava pathutu.. next procedure seiya aramichitom.. ana inaiku varaikum.. enga thatha savu ennala marakave mudila.. atharku antha Driver ku romba nandri..

ipadiku Driverku kadamai patirukum
Payani..
Arun

உண்மைத்தமிழன் said...

//Arun Kumar said...
எனக்கும் இதே போல போன மாதம் ஆனது. ஆனா ரூட்தான் வேற. திருச்சி பெங்களூர். இரவு 8 மணிக்கு திருச்சியில் கிளம்பி காலை 9 மணிக்கு பெங்களூர் பொய் சேர்ந்தேன்.
அரசு விரைவு(??) பேருந்துகளில் அதிக வேகம் 55ஐ தாண்டாமல் இருக்க கட்டுபாடு செய்து இருப்பதாக சொன்னார்கள்.//

அப்படியே போனாலும் 7 மணி நேரம்தான் ஆகணும் தம்பி..

//அண்ணே உங்க return journeyயில் சீக்கிரம் வந்தற்க்கு காரணம் சென்னை வந்த பின்னர் உடனே அடுத்த டிரிப் உடனே திருச்சிக்கு அடிப்பாங்க.. அதனால் டிரிப் மிஸ் ஆக கூடாதுன்னுதான் ஒழுங்கான வேகத்துல வந்து இருப்பாங்க..//

இப்படியும் ஒரு விஷயம் இருக்கோ.. நான் யோசிக்கவே இல்லையே..

நன்றி அருண்..

உண்மைத்தமிழன் said...

//Arivazhagan said...
Even after all this, you had the courage to travel again in SETC!! Hats off to you.//

வேற வழி.. கிடைக்குற பஸ்ல ஏறித்தான ஆகணும்..

//We once travelled from Salem to Chennai in a SETC "Super Deluxe". In fact, I waited for nearly two hours, letting atleast 3 normal busses go, because I have a problem of leg space. What can I say, the bus was in a terrible condition, all the seats were "occupied" by hundreds of BED BUGS. with these bugs we had to tolerate most of the other things you have mentioned. Two passengers(Iyeppan devotees) suffered most as they had allergic reaction to the bug bites. We would never forget that trip.//

அரசுப் பேருந்துகள் என்றாலே பராமரிப்பு இல்லை என்றாகிவிட்டது. அரசு நிர்வாகம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

மூட்டைப் பூச்சிகளை பரப்புவதே இந்த அரசுப் பேருந்துகள்தான்.. அதற்கு ஒரு மருந்தை அடிக்கக் கூடாதா..? அதோடு கூடவே காலை கீழே வைக்கவே முடியவில்லை. கொசுத் தொல்லையும் ஜாஸ்தியா இருக்கு..

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
எங்க போனாலும் முருகன் உங்களை ரொம்பத்தான் சோதிக்கிறான் அண்ணே..//

எல்லாம் அவன் செயல்தான் கேபிளு..

உண்மைத்தமிழன் said...

//arun said...
enakum ithe pol oru anubavam irukirathu...

oru thadavai thrichyla irunthu chennai vanthutu irunthen.. apa enga thatha chennaila iranthu vitar ena seithi ketu kadaisee bus blody parveen travels..1am ku erunen. avar sonna mathiri travel hrs 6 to 7hrs than trichy to chennai.. ana enaku nadantha kodumai 12hrs night 1am ku erna nan 1pm ku than erangunen.. paradesi pasanga thrichykum pondycherykum enna sambantham.. antha vazhiyathan vanthuthu... ana busla all sekum bothu parunga.. kalla vizhatha kura.. antha vandi 10pm night ku start pani all seka arambichi irukan pola iruku.. en neram nan than antha vandila kadaisiya erna alu. ennada erna udane vandiya eduthutangalenu romba santhoshama ipod eduthu kathula matna padiye.. pakathula oru ponu iruntha athan kekavenum romba nal padikama iruntha oru sidney sheldon buk eduthu kaila vachen.. enga 10page kooda thandala light off panitanga.. avalayum paka mudila.. buk padikavum mudila.. apadiye patu keta padi enga thathava nanachikitu... chennai kalambinen... rathiri.. oru 5am irukum.. nan sari thookam ithanaikum saraku kooda podala... munadipatha kli(cleaner) etho pump adichitu irukaru.. apuram pathu vandi off agi irunthuthu.. avaru pump pana pump pana driver etho start pani try pani start achi.. ara kilometer vandi pochi.. thirupi Kli vandi ota driver pump panaru.. mothathula.. kadaloor kita etho oru gramathanda vandi nine pochi ella light off panitan... ore gum iruthu.. enaka pakathula laddu mari ponu.. enna soldrathu ponga.. thathava mothama maranthe poiten... oruthar oruthara driver kita poi kusalam visarika aramichanga... kadaisiya angaye vandi 15 min ninuchi.. enakum konjam kadi aga aramichithu.. keezhi irangi poi mathavanga kita keten enna boss prachananu.. oruthar sonnar.. vandila.. disel diselnu onu irukumpa athu theenthu pocham.. ithu enna two wheelera thalitu porathuku illana kavuthu potu.. bunk varaikum otitu porathuku... apuram antha kli root bus onu 6 maniku pudichi near by kadaloor poi 5ltr disel vangi vanthan.. apuram atha vandila ooothinan... nan sonnen.. oth... nee oothura disel un tanklaye otikumnu avanala onum solla mudila.. vera vazhi... vandiya eduthan.. pondy ponan apuram than therinchathu.. antha padupavi etho parcel service vera nadathuranu.. ega pata parcel pondyla delivery panitu.. apuram disel full panikitu anga irunthu kalambunan.. nanum konjam santhosha paten... pakathula figure.. root vera ECR.. beach road.. avakooda beachla than poi ukara mudila.. atleast beach roadlayavathu onna travel pandromenu nanachi.. konjam vera enna pandrathu... inum kalyanam agala so oru china sabalam... padikiravanga nadikatheenga.. enna thitatheenga.. neengala irunthalum ithethan yosichi irupeenga...
2 hr pondy la irunthu vandi odite iruku.. patha apathan marakanam vanthuthu.. adapavi 30 minla varavendiya idam 2 hrsa.. manda kaya aramichichi.. ponavathu mannavathu.. ennaku kadupu thalaiku era aramichichi vai kullaye monaga aramichen... as he said. matu vandiyellam overtak pandra alavuku ponam thookura vandi mari padu slowa ponan.. anegama ithuku munadi anth driver amarar oorthi oti irupanu nanikiren... anth disel materla onu vituten.. nan poi driver kita keten.. enda ivlo long vareengale konja disel potu than varathunu.. athuku avar soldrar vazhkama vandi 4 to 5km milage tharum so nanga podra disel pondy varaikum varum.. anga disel cheap so anga meethi fillup panipom nu... ana intha vati vandi trafic la matikichi..so disel neraya kudichiduchinu sonnan.. enna oru echathanam. sari vandi ECR la poite irunthathu.. oruthar oruthara enthirika aramichanga.. ipa mani 11am. oruthan ketan enda evlo neranthana intha vandiya otuva... nan enna velaiku poratha illa un kooda ukanthu kudumbam nadathurathanu.. driver mugathula oru surukam kooda illa.. kathe kekatha mari vandi otitu poite iruntharu... one by one ellarum avanga turn mudichitanga.. nan kadaisiya mahaps thandumbothu enthirichi ponen.. infact nan padu kadupula than ponen.. ana driver mugam patha udane kool agiten.. nan keten.. en boss ipadi slowa poreenga ethvathu venduthala illa intha roadla otrathuku bayamanu... ungaluku kovame varalaya.. oruthar vidama ellarum ungaluku ipadi rivit adikirangalenu.. atharku avar oru punsiripodu.. sir ithu neenga inaikuthan pakureenga... enaku ithu pazhgi pochinu sonnar... ennaku enna soldrathune therila.. enga veetla thatha pinatha potu ellarum azhuthutu irukanga... nan than veetla mootha peran so all are waiting for me call mela call vanthute iruku.. enaku thatha savu perutha sogama agipochi... atharku mukiya karanam thatha illa namba speed F1 driver than karanam. etho oru vazhiya atha pona pathu oru chinna smile vitutu... thiruvanmiyurlaye irangi.. auto pudichi aminchikaraila mala onu vangitu veetuku ponen anga almost ellarum azhuthu onchi poitanga pola iruku.. nanum poi 2 min thathava pathutu.. next procedure seiya aramichitom.. ana inaiku varaikum.. enga thatha savu ennala marakave mudila.. atharku antha Driver ku romba nandri..
ipadiku Driverku kadamai patirukum
Payani..
Arun//

அருண்

உங்களுடைய அனுபவம் கொஞ்சம் நகைச்சுவையையும், அனுதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

என்றாலும், தாத்தா செத்த சோகத்தில் இருக்கும்போதும் பக்கத்தில் இருக்கும் பெண் மீது லுக் வி்ட்ட உங்களை உங்களது தாத்தாவின் ஆவி மன்னிக்காது..

ஆனாலும் இதனை உண்மையாக வெளிப்படையாக சொன்னதற்காக நீங்கள் மன்னிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்

வால்பையன் said...

உங்கள் பயணக்குறிப்புகள் படு தமாஷா இருக்கே!

வால்பையன் said...

//ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?//

நல்ல கேள்வி!
அரசாங்க ஊழியர்கள் சம்பளத்துக்கு வேலை செய்தது மலையேறிவிட்டது.

அரசு பேருந்துகளை சுத்தம் செய்ய தனியாக நாம் எதாவது கவனித்தால் தான் உண்டு

வால்பையன் said...

//பெரும்பாலும் இந்த உணவு விடுதி ஒப்பந்ததாரர்கள் ஏதாவதொரு கட்சிக்காரராகத்தான் இருப்பார்கள். //

உணவுவிடுதி மட்டுமல்ல,
கழிப்பறை
சைக்கிள் ஸ்டேண்டு
என்று நிறைய விசயங்கள் இப்படி தான்

லேகா பக்க்ஷே said...

நீங்கள் ஆணாக இருந்ததால் தப்பித்தீர்கள். இல்லாவிடில் சீட்டுக்கு அடியில் பின் பக்கமாக ஒரு பாதம் வந்து தொந்தரவு செய்திருக்கும். அந்த வகையில் உங்கள் பயணம் இனிதாகவே உள்ளது என்று சந்தோஷப்படுங்கள்.

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
உங்கள் பயணக் குறிப்புகள் படு தமாஷா இருக்கே!//

ம்.. ஒருத்தன் கஷ்டம்.. இன்னொருத்தருக்கு சந்தோஷம்..

வாலு.. நல்லாயிருப்பூ..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?//
நல்ல கேள்வி! அரசாங்க ஊழியர்கள் சம்பளத்துக்கு வேலை செய்தது மலையேறிவிட்டது. அரசு பேருந்துகளை சுத்தம் செய்ய தனியாக நாம் எதாவது கவனித்தால்தான் உண்டு.//

என்ன கொடுமை.. பிறகெதற்கு சம்பளம் வாங்குகிறார்களாம்..

கேக்குறதுக்கு ஆளே இல்லாம போச்சு வாலு..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//பெரும்பாலும் இந்த உணவு விடுதி ஒப்பந்ததாரர்கள் ஏதாவதொரு கட்சிக்காரராகத்தான் இருப்பார்கள். //
உணவு விடுதி மட்டுமல்ல, கழிப்பறை
சைக்கிள் ஸ்டேண்டு என்று நிறைய விசயங்கள் இப்படிதான்.///

ஆமா வாலு..

எல்லா ஊர்லேயும் இந்த மாதிரி கார்ப்பரேஷன்ல காண்ட்ராக்ட் எடுக்கிற ஆளுக எல்லாருமே கட்சிக்காரனுகதான்.. சீட்டும் தர மாட்டாங்க.. கொள்ளை லாபம்..

இவனுக கட்சி நடத்தறதுக்கு நாம மறைமுகமாக லஞ்சம் கொடுக்குற மாதிரியிருக்கு..

உண்மைத்தமிழன் said...

//லேகா பக்க்ஷே said...
நீங்கள் ஆணாக இருந்ததால் தப்பித்தீர்கள். இல்லாவிடில் சீட்டுக்கு அடியில் பின் பக்கமாக ஒரு பாதம் வந்து தொந்தரவு செய்திருக்கும். அந்த வகையில் உங்கள் பயணம் இனிதாகவே உள்ளது என்று சந்தோஷப்படுங்கள்.//

மை காட்.. லேகாஜி.. ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு..

இது மாதிரியும் நடப்பதை பார்த்திருக்கிறோம்.. தெரிஞ்சு வைச்சிருக்கோம்..

ஊர், ஊருக்கு இப்படியும் சில பேரு இருந்து எங்க மானத்தை வாங்குறானுங்க..

என்ன செய்யறது? என்ன சொல்றதுன்னு தெரியல..

பட்.. ஒண்ணு சொல்றேன்.. எனக்கு அடுத்தப் பிறவில மனுஷப் பிறவியே வேணாம்..

ஒரு நல்ல நாய்.. இல்லாட்டி பன்னி, கழுதை, குதிரை.. இது மாதிரி பொறந்து வஞ்சகமில்லாம போடறதுக்கு உழைச்சுட்டு முருகன் கூப்பிடும்போது போய்ச் சேர்ந்திரணும்..

மனுஷப் பொழைப்பே வேணாம் சாமி..

Anonymous said...

நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!!!

நான் சேலம் செல்லும் போது இது போல் பல முறை ஆகியிருக்கு...

இரவு நேரங்களில் 8 மணி நேரத்தில் செல்லும் பேருந்துகள், பகலில் போனால்
மட்டும் குறைந்தது 10மணி நேரம் எடுத்துக்கொள்ளும் காரணம் இன்று வரை
எனக்கு புரியவில்லை!!!

இவ்வளவு பெரிய பேருந்து நிறுவனம் என்று சொல்கிறார்கள், தொழில்நுட்பத்தில்
முன்னேறிய மாநிலம் என்பார்கள், ஆனால் இன்னும் தொலைதூர பயணங்களுக்கு முன்
பதிவு வசதி கிடையாது என்பதே கொடுமை...

நீங்கள் சொன்ன பேருந்தின் லட்சணம் பற்றி கேட்டா, கிராமங்களில் ஓடும்
டவுண் பஸ்ல போனவனுக்கு இதுவே அதிகம் என்று கூட பதில் வரும். மாநில அரசோ,
அல்லது அமைச்சரோ, தமிழ்நாட்டில்தான் நிறைய தொலைதூர பேருந்துகள்
இயங்குகின்றன என்று பழம்பெருமை பேசலாம்....

உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்கள், கொஞ்சம் கடமையிலும் கவனம்
செலுத்தினால் சந்தோஷமாக இருக்கும்...

அப்புறம் அந்த புத்தகத்தைப் பத்தி சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கிறோம்...

SurveySan said...

//இட்லிவடை மாதிரி சர்வேசனும் முகமூடியாவே இருக்கட்டும்.. அப்பத்தான் ஆர்வமா இருக்கும்..//

ஆர்வம் இருக்குமோ இல்லியோ, நான் பாட்னு ஏதாவது ஜாலியா தோணுனதெல்லாம் பெனாத்திக்கிட்டூ ஒலா வரலாம் ;)

SurveySan said...

புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே செய்யாததால் தான் இன்னிக்கு இங்க வந்து நீக்குது.

manjoorraja said...

பொதுவாக அரசு பேருந்துகளில் இது போன்ற சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை (ஒரு சிலவற்றை தவிர)

K.R.அதியமான் said...

போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல்
மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற
முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால்
இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய
மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன.
சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும்
நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க
முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு
permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார்
பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி
வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால்
பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.


இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல்
அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து
விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது.
BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது.
அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.


ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான
தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி
ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும்
புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

also pls see :

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-...

K.R.அதியமான் said...

http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html

To

The Editor,
The Hindu
Chennai

Dear Sir,

This is with reference to the news report about lack of sufficent MTC buses in
Chennai suburbs.

MTC suffers from the typical govt monopoly PSUs. Corruption, mis-management
and above all the crucial lack of flexibilty and adaptability that is the norm in any
private enterprise. Hence the acute shortage of bus services to meet the ever
increasing demand. Only soloution is to allow private sector to compete with
MTC in all routes (as in rest of Tamil Nadu). The new routes can be auctioned
in a transparent manner. The dramatic change / improvement in telecom services
since liberalisation began is a very comparable situation.

MRTP stations offer an excellent and a crucial hubs for bus stands, mini bus
stands and vans. But MTC is unable to service them effectively. Without this
proper connectivity between MRTP railways and bus transport sytem, the
thousands of crores poured into MRTP will be under utlised and the public
loose out.

Thanking You

Yours Sincerely
K.R.Athiyaman

my old mail to chennai Traffic Commisoner :


From : K.R.Athiyaman,
Perungudi, Chennai - 96

Respected Sir,

The following is my article published in
Adyar times some time ago, regarding
traffic problems.

Lack of sufficient public transport forces us, middle
class people to use two wheelers. And in the suburbs,
maxicab vans ply illegally (an open secret), and
provide a much needed fill-up to the demand. And
the public are greatly dependent on such vans, which
provide a valuble and cheap service. Ans they have to
regularly bribe the traffice constables and RTO
officials to run their much needed services.

The MTC bus service is inefficent and not enough.
The whole MTC system is corrupt, and nearly bankrupt
through mis-mangemsnt, top heavy bureacracy, etc. It
can never be revived or revitalised.

We request you to use your good offices with the CM to
implement the announced privatisation of the bus (mini bus)
transport system. We would be grateful to you if this
can be done. and it will go a long way in easing the
traffic conjestion. And legalising the maxicab
operators is much needed.

Thanks & Regards
K.R.Athiyaman

my article :

Traffic Problems and Solutions

Phenomenal rise in private vehicles has resulted in
traffic congestion.Due to an acute shortage of buses
(especially during peak hours),commuters tend to buy
two wheelers or cars as soon as they can afford to own
one. Until 1980 it was normal for most middle class
people to travel by buses.

Nationalisation of buses in 60s resulted in creation
of goverment monopoly and corruption in this sector.
Mis-management, pilferage and lack of transparency and
accountability of government bus transport
corporations resulted in huge losses and acute
shortage in bus services to meet the growing demand.

The argument against privatisation that the private
operators will not service remote and loss making
routes has yet to be proved. Government MTC services
in loss making areas are curtailed. For example
many routes in Nanganallur, Chennai has been
withdrawn citing lack of patronage.

The existing private bus routes are now sold in black
market for crores of rupees. Yet private buses are
better maintained and profitable. There is a vested
interest lobby of existing private bus owners (permit
holders),bureaucrats,politicians and trade unions of
govt corporations who oppose deregulation and
privatization of bus transports. Even mini-buses are
not allowed to expand service areas. Share autos are
opposed by regular auto drivers union.

If, instead of nationalization of buses, free
competition and low taxes were encouraged since
independence, then there would have been an excellent
and efficient public transport system. The culture of
owning private vehicles for commuting would not have
grown this much. A single bus can carry upto 60
commuters while lack of bus forces these 60 commuters
to own and travel by two-wheelers, there
by shrinking road space and increasing pollution.

Private bus stands and parking lots (bus stops along
main roads and highways) can be permitted and
encouraged. Two wheeler taxis can be allowed in
suburbs and remote areas.

Decentralisation and delicensing of transport sector
will result in better services and reduce traffic
congestion.

---------------------------------------------

உண்மைத்தமிழன் said...

//நரேஷ் said...
நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பீங்க போல!!!//

அப்புறம்..?

//நான் சேலம் செல்லும் போது இது போல் பல முறை ஆகியிருக்கு...
இரவு நேரங்களில் 8 மணி நேரத்தில் செல்லும் பேருந்துகள், பகலில் போனால் மட்டும் குறைந்தது 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் காரணம் இன்று வரை எனக்கு புரியவில்லை!!!//

இப்போது புரிந்திருக்குமே..?

//இவ்வளவு பெரிய பேருந்து நிறுவனம் என்று சொல்கிறார்கள், தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாநிலம் என்பார்கள், ஆனால் இன்னும் தொலைதூர பயணங்களுக்கு முன் பதிவு வசதி கிடையாது என்பதே கொடுமை...//

அப்படியா..? தொலைதூர பயணம் என்றால் எவ்வளவு தூரத்தை சொல்கிறீர்கள் நரேஷ்..?

//நீங்கள் சொன்ன பேருந்தின் லட்சணம் பற்றி கேட்டா, கிராமங்களில் ஓடும் டவுண் பஸ்ல போனவனுக்கு இதுவே அதிகம் என்று கூட பதில் வரும். மாநில அரசோ,
அல்லது அமைச்சரோ, தமிழ்நாட்டில்தான் நிறைய தொலைதூர பேருந்துகள்
இயங்குகின்றன என்று பழம் பெருமை பேசலாம்....//

அதாவது நம்மளை பிச்சைக்காரர்கள் ரேஞ்சில் வைத்திருக்கிறார்கள் என்கிறீர்கள்.. மறுக்க முடியாத உண்மைதான்..

//உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்கள், கொஞ்சம் கடமையிலும் கவனம்
செலுத்தினால் சந்தோஷமாக இருக்கும்...//

அதுக்கா அவங்க வேலைக்கு வர்றாங்க? ஏதோ வந்தோம்.. கட்சி வேலை பார்த்தோம்.. மாசம் பொறந்தா சம்பளத்தை வாங்கினோம்னு இல்லாம.. எதுக்கு வேலை செய்யணும்..? இதுதான் அவங்க பாலிஸி..

//அப்புறம் அந்த புத்தகத்தைப் பத்தி சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கிறோம்.//

இன்னும் நிறைய காலம் காத்திருக்கணும்போலத் தெரியுது.. ஏன்னா சூழ்நிலை இப்போது இல்லை..

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...
புகார் எழுதிப் போடூங்க. ஒண்ணுமே செய்யாததால்தான் இன்னிக்கு இங்க வந்து நீக்குது.//

யாருக்கு சர்வேசன் ஸார்..?

யாருக்கு எழுதினாலும் அது கடைசியா குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்.. இதுதான் தமிழகத்து நிர்வாகத்தின் லட்சணம்..

உண்மைத்தமிழன் said...

//மஞ்சூர் ராசா said...
பொதுவாக அரசு பேருந்துகளில் இது போன்ற சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை (ஒரு சிலவற்றை தவிர)//

உண்மைதான் மஞ்சூர் ஸார்..

சங்கடங்கள் யாரால் தோற்றுவிக்கப்படுகின்ற என்று பாருங்கள்.. இங்கே இருப்பது தனி மனித அசிங்கம்.. குறைந்தபட்ச நாகரிகமாவது வேண்டாமா..?

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்.
பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது.//

அரசுப் பேருந்துகள்தான் அதிக எண்ணிக்கையில் இல்லை.. வழித்தடங்களும் உருவாக்கப்படவில்லை.. இது நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு உதாரணம்..

//Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால்
இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல்.//

மறுக்க முடியாத உண்மை அதியமான்ஜி..

//70-களில் தேசிய
மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன.//

கேள்விப்பட்டேன். மதுரையில் சொன்ன நேரத்தில் வண்டி வந்து நிற்குமாமே..

//சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக்குறை, ஊழல் மற்றும் நெரிசல்.//

இதற்கு சோசியலிசத்தை குற்றம் சொல்ல முடியாது.. மக்கள் தொகை அதிகமானது.. மக்கள் நெருக்கம் கூடியது.. சாலை வசதிகள் சரியில்லாதது.. பிற காரணிகள் எல்லாம் சேர்ந்ததுதான்..

//பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க
முயல்கின்றனர். அவை மலிந்துவிட்டன.//

வாங்கத்தானே செய்வார்கள்.. வேறு என்ன வழி..?

//சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம்.//

இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?

//தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால்
பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.//

இப்போதே பேருந்துகளின் சுமையை ஷேர் ஆட்டோக்கள் வெகுவாகக் குறைத்திருக்கின்ற என்பது புறநகர்ப் பகுதி போக்குவரத்துக்களில் இருந்து தெரிகிறது..

//இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல்
அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது.
BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும்
புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..//

வழித்தடங்கள் வழங்குவதில் முறைகேடுகள், லஞ்சம் விளையாடுவது உண்மைதான்.. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதுதானே நடக்கிறது..

பணம்.. பணம்.. பணம்.. எங்கெங்கு காணினும் பணம்..

Nilofer Anbarasu said...

Please let me know your email id

uranjith1 said...

உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.
ஒரு நாளைக்கே நீங்க இப்படி சொல்றீங்களே , வருசத்துல முக்கால்வாசி நாள் பஸ்ல போற எங்க கச்தாதன் நாங்க யாருகிட்ட பொய் சொல்றது.
எங்க கஷ்டங்கள கேட்டுதான் என்னவோ பேருந்தும் சிலநேரங்களில் பஞ்சர் , என்ஜின் கோளாறு ஆகுதுன்னு நினைக்கிறன்.
நீங்க உங்க அனுபவத்த எழுத்து வடிவத்துல ஒரு பக்கதுக்கு எழுதிடீங்க ..நான் எழுதுனா ஒரு புத்தகமே போடுற அளவுக்கு கதைங்க இருக்கு சார்.

இருந்தாலும் கட்டுரை உண்மையான ஒரு பயணியின் குரல் தான் ..

உண்மைத்தமிழன் said...

//ranjith said...
உங்க நிலைமையும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஒரு நாளைக்கே நீங்க இப்படி சொல்றீங்களே, வருசத்துல முக்கால்வாசி நாள் பஸ்ல போற எங்க கச்தாதன் நாங்க யாருகிட்ட பொய் சொல்றது?

ரொம்பக் கஷ்டமாச்சே.. எப்படி சமாளிக்குறீங்கன்னே தெரியலை.. அதுலேயும் மூணு டவுன் பஸ் மாறி வேலைக்குப் போறவங்களும் இருக்காங்க.. அதிசயமா இருக்கு அவுங்களையெல்லாம் பார்த்தாக்கா..?

//எங்க கஷ்டங்கள கேட்டுதான் என்னவோ பேருந்தும் சில நேரங்களில் பஞ்சர், என்ஜின் கோளாறு ஆகுதுன்னு நினைக்கிறன்.
நீங்க உங்க அனுபவத்த எழுத்து வடிவத்துல ஒரு பக்கதுக்கு எழுதிடீங்க.. நான் எழுதுனா ஒரு புத்தகமே போடுற அளவுக்கு கதைங்க இருக்கு சார். இருந்தாலும் கட்டுரை உண்மையான ஒரு பயணியின் குரல்தான்..//

நன்றி ரஞ்சித்..

நான் என்னுடைய ஒரு அனுபவத்தை மட்டுமே எழுதினேன்.. நான் பட்டது ஒரு சதவிகிதம்கூட இல்லை என்பேன்.. நிறைய பேர் பலவித சிக்கல்களில் மாட்டி நடுரோட்டில் நின்று தவித்திருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களின் அக்கறையின்மையை சுட்டிக் காட்டத்தான் இந்தப் பதிவு..

நன்றி ரஞ்சித்..

K.R.அதியமான் said...

//இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?
/////

புதிய பஸ்களினால் மேலும் நெருசல் அதிகாமாகும் என்பது தவறு. தினமும் சென்னையில் எத்தனை புதிய இரு சக்கர மற்றும் கார்கள் மற்றும் இதர தனியார் வாகனங்கள் வாங்கப்பட்டு, ஓட்டப்படுக்கின்றன என்பதை ஒப்பிட்டி பாருங்கள். ஒரு பஸில் சுமார் 65 பயணிகள் செல்வதை விட்டு, அனைவரும் சொந்த வாகஙகளை பயன்படுத்தினார் நெருசல் அதிகமாகும். மிக குறையும். நீங்களும் ஒரு இரு சக்கர வாகனம் தான் உபயோகிக்கிறீர்கள். பஸ்களில் ஏற முடியாத நிலை மற்றும் அனைத்து உடங்களுக்கும், உள்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியா நிலை. அதை மாற்றத்தான் தனியார் மயம். தொலைபேசி மற்றும் தொலைகாட்சி துறைகள் 20 ஆண்டுகளுக்கு முன், அரசு மட்டும் நடத்திய காலத்தில் எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டு பாருங்கள். பஸ் போக்குவருத்திலும் அதே போல் மாற்றம் கொண்டுவரலாம் / வர் வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

///K.R.அதியமான் said...
//இருக்குற பிரச்சினையே பத்தலையா..? மெட்ராஸ்ல இப்ப இருக்குற டிராபிக்ல இன்னுமொரு 700 பஸ்ஸுன்னா டிராபிக் என்னாகுறது அதியமான்..?///
புதிய பஸ்களினால் மேலும் நெருசல் அதிகாமாகும் என்பது தவறு. தினமும் சென்னையில் எத்தனை புதிய இரு சக்கர மற்றும் கார்கள் மற்றும் இதர தனியார் வாகனங்கள் வாங்கப்பட்டு, ஓட்டப்படுக்கின்றன என்பதை ஒப்பிட்டி பாருங்கள். ஒரு பஸில் சுமார் 65 பயணிகள் செல்வதை விட்டு, அனைவரும் சொந்த வாகஙகளை பயன்படுத்தினார் நெருசல் அதிகமாகும். மிக குறையும். நீங்களும் ஒரு இரு சக்கர வாகனம்தான் உபயோகிக்கிறீர்கள். பஸ்களில் ஏற முடியாத நிலை மற்றும் அனைத்து உடங்களுக்கும், உள்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியா நிலை. அதை மாற்றத்தான் தனியார் மயம். தொலைபேசி மற்றும் தொலைகாட்சி துறைகள் 20 ஆண்டுகளுக்கு முன், அரசு மட்டும் நடத்திய காலத்தில் எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டு பாருங்கள். பஸ் போக்குவருத்திலும் அதே போல் மாற்றம் கொண்டுவரலாம் / வர் வேண்டும்.//

அதியமான்ஜி..

நீங்க எழுதினதை தயவு செய்து நீங்களே மறுபடியும் படிச்சுப் பாருங்க..

பேருந்துகளோ, இரு சக்கர வாகனங்களோ எது அதிகரித்தாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படத்தான் செய்யும்..

ஏற்கெனவே 10 கிலோ மீட்டர் தூரம் செல்லவே காலை நேரங்களில் அரை மணி நேரமாகிறது. இன்னும் நீங்கள் சொல்ற மாதிரி நிறைய பஸ்களை வாங்கி வி்ட்டா அவ்ளோதான்..

சிக்னல்ல நின்னே செத்து சுண்ணாம்பாயிருவான் சென்னைத் தமிழன்..

K.R.அதியமான் said...

அய்யா தமிழா,

ரோட் ஸ்பேஸ் (road space) என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். ஒரு பஸ் சுமார் 65 பயணிகளை ஏற்றிச்சொல்லும். ப்ஸ் இல்லாததால், அந்த 65 பயணிகளும் தனி வாகனங்களில் (பைக் போன்ற) பயணித்தால், ஒரு பஸில் இடத்தைவிட பல பல மடங்கு அதிகமாக இடத்தையும் (road space), பெட்ரோலையும் உப்யோகிக்கவேண்டும்.

பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும்.

வால்பையன் said...

//பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும். //

மக்கள் தொகை என்று ஒன்று உயருமே!
அவர்களை நாடு கடத்திவிடலாமா?

K.R.அதியமான் said...

Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
அய்யா தமிழா, ரோட் ஸ்பேஸ் (road space) என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். ஒரு பஸ் சுமார் 65 பயணிகளை ஏற்றிச்சொல்லும். ப்ஸ் இல்லாததால், அந்த 65 பயணிகளும் தனி வாகனங்களில் (பைக் போன்ற) பயணித்தால், ஒரு பஸில் இடத்தைவிட பல பல மடங்கு அதிகமாக இடத்தையும் (road space), பெட்ரோலையும் உப்யோகிக்கவேண்டும்.
பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும்.//

ஐயா அதியமான்ஜி..

ஒரு போதும் உள்ளூர் மக்கள் இனிமேல் பேருந்துகளில் அதிகம் பயணிக்கப் போவதில்லை. காரணம் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. போகக்கூடிய இடங்களும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவைகள் அனைத்திற்குமே பேருந்து வசதிகள் கிடையாது.. அதோடு போக்குவரத்து காரணமாக தினமும் தாமதமாவதை எந்த ஒரு ஊழியரும் ஏற்கப் போவதில்லை.

அதனால் அதிகமாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கைதான் கூடும். இவைகள் கூடினாலே போதும்.. போக்குவரத்து என்ன லட்சணத்தில் இருக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...
//பெரும்பான்மையானவர் பஸ் அல்லது வேன்களில் பயணம் செய்யும் போது, தனியார் வாகனங்களில் உபயோகம் குறைந்து, road space அதிகமாக கிடைக்கும். //
மக்கள் தொகை என்று ஒன்று உயருமே! அவர்களை நாடு கடத்திவிடலாமா?//

எங்கே கடத்துவீர்கள் வாலு..? ஆப்கானிஸ்தானுக்கா..? ஈராக்கிற்கா..?

உண்மைத்தமிழன் said...

//K.R.அதியமான் said...
Proportionate ஆக பயணிகள் எண்ணிக்கை உயரும்தான். அப்ப பஸ்கள் இல்லாமல இன்னும் பல லட்சம் தனியார் வாகனங்கள் அதிகரித்தால், அனுபவியுங்கள். enjoy. வால் பையன், லூஸுத்தனமாக பேசக்கூடாது.//

அனுபவிக்கத்தான் வேணும்.. வேற வழியில்லை.

K.R.அதியமான் said...

Unmai Tamilan Ayya,

வால்பையன் எம் நண்பர் தாம். நேரில் பழகியுள்ளோம்.
அவரை உரிமையோடு லூஸுப்பையன் என்றும் அழைக்கிறேன்.
ப‌ல‌ நேர‌ங்க‌ளில் அப்ப‌டி ஒரு பிர‌மையை ஏற்ப‌டுத்தும்
திற‌மை அவ‌ரிட‌ம் உண்டு.

அது இருக்கட்டும், இந்த‌ அதியமான் ஜி எங்க‌ பிடிச்சீங்க‌ ?
வெறும் அதிய‌மானே போதுமே. என்ன‌ இருந்தாலும் நான்
உங்க‌ள‌விட‌ சின்ன‌வ‌ன்தானே !!