நிழல் அமைச்சர்கள்? பின்னி எடுக்கும் பி.ஏ-க்கள்!

24-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் ஏதோ ஒரு பிரிவில் ஒரு வேலை ஆக வேண்டுமென்று வருபவர்கள் அனைவரும் பார்க்க விரும்புவது அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களை அல்ல. அவர்களது பி.ஏ.க்களைத்தான். ஒரு அமைச்சரின் பி.ஏ.வின் நட்பு உங்களுக்குக் கிடைத்திருந்தால் தலைமைச் செயலக வளாகத்தில் நிச்சயம் நீங்கள் ஹீரோதான்..!

அவரன்றி ஒரு அணுவும் அசையாது என்பதைப் போல பி.ஏ.க்கள் சொல்லாமல் பல அமைச்சர்கள் கிஞ்சித்தும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பி.ஏ.க்கள் வைத்துதான் சட்டம் என்ற நிலைமைக்குப் போனதற்குக் காரணம் மிகச் சரியான முறையில் கமிஷனை வாங்கி நியாயமாக தங்களிடம் மறைமுகமாக ஒப்படைப்பார்கள். டீலிங்கை கச்சிதமாக பேசி முடிப்பார்கள். எந்தத் தவறு செய்தாலும் அமைச்சர்களுக்குப் பதிலாக தாங்களே முன் வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள்... என்று இந்த பி.ஏ.க்களின் தியாக உள்ளத்தால்தான் பல அமைச்சர்களின் வண்டியும் ஓடிக் கொண்டிருக்கிறது.

அது போன்று இந்த தி.மு.க. ஆட்சியில் பவர்புல்லான பி.ஏ.க்கள் பற்றிய ஒரு சர்வேயை இந்த வார ஜூனியர்விகடன் அம்பலப்படுத்தியுள்ளது. அது பற்றிய கட்டுரை இதோ..!


தமிழக அமைச்சர்களில் சிலர் அதிகார பந்தா காட்டுவார்கள், சிலர்  மௌன சாமியாக இருந்து பலே காரியங்கள் செய்வார்கள். இன்னும் சிலரின் அத்துமீறல்கள், அடாவடிகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும். ஆனால், எல்லா நேரத்திலும் இவர்களை எல்லாம் தாண்டி, இவர்களின் நிழலாக ராஜ தர்பார் நடத்தும் பேர்வழிகள் உண்டு. இந்த நிழல்கள், உண்மையில் அதிகாரம் படைத்த அமைச்சர்கள்போல வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் பொதுவான பெயர் - உதவியாளர்கள்! 

அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் சீனியர், ஜூனியர், ஸ்பெஷல் பி.ஏ-க்கள் நியமிக்கப்படுவார்கள். தவிர, பொலிடிக்கல் பி.ஏ-வும் உண்டு. இப்படிப் பல அந்தஸ்​துகளில் எத்தனை பி.ஏ-க்கள் இருந்தாலும், ஒவ்வோர் அமைச்சருக்கும் ஒருவர்தான் பவர்புல்! இவர்களின் கொட்டம்தான் கோட்டையில் எதிரொலிக்கும். எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுதான் நிலை. இருந்தும், இப்போது எல்லை மீறி... சிவப்பு விளக்கு காரில் அமைச்​சர்களைப் போலவே பயணப்படுகிறார்கள் இவர்கள்!

நிழல் அமைச்சர்களின் வண்டவாளங்கள் பற்றி விசாரிக்கப் போனால், தலைமைச் செயலகமே நாறு​கிறது. இவர்களின் ரிஷிமூலம், நதிமூலம் தேடிப் போனோம்.

வேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிறப்பு உதவியாளர் சண்முகம், சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனின் சிறப்பு உதவியாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சிறப்பு உதவியாளர் சண்முகம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் சிறப்பு உதவியாளர் சந்திரசேகரன், உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் சிறப்பு உதவியாளர் சுப்ரமணியன், கதர்த் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் மாதன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் முதுநிலை உதவியாளர் கிருஷ்ணா, வணிக வரித் துறை அமைச்சர் உபயதுல்லாவின் முதுநிலை உதவியாளர் சுருளிவேலு, வருவாய்த் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் முனியாண்டி... இவர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பின்பும் பதவி நீட்டிப்பில் ஒட்டிக்கொண்டு அமைச்சர் அலுவலகங்களில் வலம் வருகிறார்கள்.

கோபால்

சர்வ வல்லமை படைத்த பி.ஏ-க்களில் இவருக்கே முதலிடம் என்கிறார்கள். இவர் அழகிரிக்கு நெருக்க​மானவர். ஆகவே, எல்லா அமைச்சர்களுமே இவரைப் பார்த்து நடுங்குகிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சிறப்பு உதவியாளர்.
 
அமைச்சரின் தந்தை தங்கப்பாண்டியன் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரிடம் ஜூனியர் பி.ஏ-வாக இருந்தார் கோபால். 'இந்தக் கோப்பில் கையெழுத்துப் போடுங்க...’ என்று சொல்லும் அளவுக்கு கோபால் இருக்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள் அவருடைய செல்வாக்கின் வீரியம்!

கட்சிக்காரர்கள் யாராவது அமைச்சரைப் பார்க்க வந்தால் 'கோபாலைப் பார்த்துவிடுங்கள்’ என்​பார். அமைச்சரே சில சமயம் தனக்கு நெருக்கமானவர் ஒருவருக்கு சிபாரிசு செய்திருந்தாலோ, வேறு காரியங்​களை செய்ய நினைத்தாலோ... உடனே, கோபால் கட்டையைப் போடுவார். அந்த ஸ்டைலே தனி. ''இல்லைங்க... இது முடியாது. 'அ’னா சொல்லிட்டார்!'' என்று கோபால் சொன்னால் அடுத்த நிமிடம் தங்கம் தென்னரசு ஆஃப் ஆகிவிடுவார். 'உண்மை​யில் அழகிரி சொல்லியி​ருக்க மாட்டார். அவர் பெயரைப் பயன்படுத்தியே அமைச்சரை ஆட்டிப் படைக்கிறார் கோபால்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோபாலை அவ்வளவு சீக்கிரத்தில் யாருமே நெருங்கிவிட முடியாது. காரணம், இவருக்கும் ஒரு நந்தி உண்டு. பட்டப்   பெயர்​தான். அவர், அமைச்சரின் டபேதார் கோபி. அலுவலக உதவியாளர் பதவியில் இருக்கும் இவர்தான் கோபாலுக்கு எல்லாமும். கோபியைப் பார்த்தால்தான் கோபாலைப் பார்க்க முடியும்.

தமிழகத்தில் எந்தப் பள்ளியில் ஆசிரியர் இடம் காலியானாலும், உடனடியாக கோபால் பார்வைக்கு வந்துவிடும். இவர் யாருக்கு போஸ்டிங் போடச் சொல்கிறாரோ அவருக்குதான் லாட்டரி அடிக்கும். இவர் அனுமதி இல்லாமல், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரோ, மற்ற அதிகாரிகளோ எந்த மாறுதல் உத்தரவிலும் கையெழுத்துப் போட்டது கிடையாது. விடுமுறை நாட்களிலும் இவரது அலுவலகம் பிஸியாக இருக்கும். மாறுதல் உத்தரவுகள் டைப் ஆகிக் கொண்டேயிருக்கும்!

இளங்கோவன்

மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பி.ஏ.    இளங்​கோவன். ''அடுத்த தி.மு.க. ஆட்சியில் ஐயாதான் மின்சாரத் துறை அமைச்சர்...'' என்று  உடன்​பிறப்புகள் வர்ணிக்கிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மின்சார வாரியத்தில் நிர்வாக மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்த இளங்கோவன், 1996-ல் ஆற்காடு வீராசாமி அமைச்சரானபோது அவரது பி.ஏ-வாகப் இடம் மாற்றப்பட்டார். எப்படி வந்தது இந்த செல்வாக்கு? இவர், தயாளு அம்மாளின் உறவினர்! இது ஒன்று போதாதா..?

இளங்கோவனின் கண் அசைவு இல்லாமல், மின்சார வாரியத்தில் ஒரு கோப்புகூட நகராது. இவரின் பரிமாற்​றங்கள் எல்லாம் வங்கிக் கணக்கில்தான் அரங்கேறும்!

மின்சார வாரியத்தின் சேர்மனாக சி.பி.சிங் வந்தவுடன், ராதா இன்ஜினீயரிங் நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்து, மின்சார வாரியத்தின் ஊழியர்கள் மூலம் பணிகளை மேற்கொண்டதால், வாரியத்துக்கு மாதம்  3 கோடி லாபம் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் ராதா இன்ஜி​னீயரிங் நிறுவனத்துக்கு டெண்டர் போனது​தான் கொடுமை. இதற்குப் பின்னால் இருந்தது இளங்​கோவனின் கையாம்.

மீட்டர், கேபிள், ஒயர், டிரான்ஸ்ஃபார்மர் என்று மின்சார வாரியத்தில் எந்தக் கொள்முதல் நடந்தாலும், அமைச்சர் முடிவு எடுக்கிறாரோ இல்லையோ... இளங்​கோவன்தான் அதிகாரம் படைத்தவர். மின் உற்பத்திக்காக தமிழகத்தில் இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். இதுபற்றி தொழிற்சங்கங்கள் சொல்லும் கதைகள் பலே ரகம். மேட்டூரில் இவருக்கு வேண்டப்பட்ட ஒருவர் பினாமியாக இருக்கிறார். கான்ட்ராக்டரான அவர் மூலம்தான் நிறைய விஷயங்கள் நடக்கின்றனவாம். தலைமைப் பொறியாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகப் புகுந்து சோதனை செய்தனர். உடனே, இளங்கோவன் தலையிட... ஒதுங்கிக் கொண்டதாம் போலீஸ்.

'இவர் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார்; புதிய படங்களையும் தயாரித்து வருகிறார்’ என்றும் கோட்டையில் சொல்கிறார்கள். சினிமாவிலும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம்... ஆற்காட்டாருக்கு நெருக்கமாக இருந்ததாலோ என்னவோ, பத்மநாபன் என்ற ஒரு பி.ஏ-வை முதல்வர் அலுவலகத்தில் சொல்லி அங்கு இருந்து அப்புறப்படுத்தினாராம். சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஒரு முக்கியமான ஹோட்டலையும் இளங்கோவன் பினாமி பெயரில் வாங்கி இருப்பதாகவும் கோட்டை வட்டாரம்     கிசுகிசுக்​கிறது.

தற்போது நடக்கவுள்ள நன்னி​லம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரும் இவரே. தொகுதிக்கு ஸீட் கேட்டு இவர் செய்த அலப்பறைகள் பயங்கரம். நன்னிலம் தொகுதியில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று 40-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டினார்கள். எல்லாமே இவருடைய கைங்கர்யம்​தான்! நேர்காணலின்போது மட்டுமே பல லட்சங்​களை வாரி இறைத்துத் தனது பரிவாரங்களைப் பறை சாற்றி வேட்பாளராகவும் ஆகிவிட்டார்.  அடுத்தது தி.மு.க. ஆட்சிதான் என்றால் இவர்தான் மின்துறை அமைச்சர் என்று இப்போதே அறிவாலயத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

சண்முகம்

இவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சிறப்பு உதவியாளர். கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகனான டாக்டர் ஜோதிமணியின் தங்கை கணவர்தான் இந்த சண்முகம். 1996-2001 தி.மு.க. ஆட்சியில் அப்போதைய அமைச்சர் பொன்முடியின் சீனியர் பி.ஏ-வாக இருந்தவர். (அமைச்சரின் நிழலாக டி.எம்.எஸ்., டி.எம்.இ., குடும்ப நலத் துறை விவகாரங்களைக் கவனிப்பவர் உதவியாளர் சீனிவாசன்.)

பணம் காய்க்கும் மரமாக விளங்கும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், எய்ட்ஸ் ஆகிய துறைகள் மீதுதான் இவருக்குக் கண் அதிகம். சென்னை ராயப்பேட்டையில் இவருக்குத் தனியாக அலுவலகமும் உண்டு. இவரது மனைவியின் தங்கையான உமாதான், அந்த அலுவலகத்தின் மேலாளர். காலையில் இருந்து இரவுவரையிலும் அந்த அலுவலகம் களைகட்டும். அதோடு, கல்லாவும்தான். காலையில் ஒப்பந்தக்காரர்களின் கூட்டம் நெரித்தால், மாலையில் மாறுதல் கேட்டு வரும் ஊழியர்கள் ஊர்வலம் நடக்கும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழத்தின் துணை மேலாளர் ஆனந்தன், முன்னாள் அமைச்சர் பிச்சாண்​டியிடம் சீனியர்     பி.ஏ-வாக இருந்த முருகன்... ஆகிய இருவரும்தான் சண்முகத்துக்கு எல்லாமே.

சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட லேப் டெக்னிஷியன் நியமனம் நடை​பெற்றது. இதில் வேண்டப்பட்டவர்களுக்கு எல்லாம் பதவிகள் நியமித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில், ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை ஆய்வு செய்யும் செமி ஆட்டோ அனலைசர் டெண்டர் சில நாட்களுக்கு முன்பு வெளி​யிட்டார்கள். இந்தக் கொள்முதல் குளறுபடியால், சர்ச்​சைகள் உருவாகின.

472 செமி ஆட்டோ அனலைசர் கொள்முதல் செய்யும் டெண்டரில், ரோபினிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், டிரான்சியா பயோ மெடிக்கல் லிமிடெட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பங்கேற்றன. டெக்னிக்கல் விஷயத்தில் சில நிறுவனங்கள் தேர்வு பெற்ற பிறகும், அவர்களுக்கு ஆர்டர் கிடைக்கவில்லை. திடீரென்று அவசரமாக ஒரு விதியைச் சேர்த்தார்கள். 'கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 அனலைசர் சப்ளை செய்திருக்க வேண்டும்’ என்று புதிய விதிமுறையைப் புகுத்தினார்களாம். அதற்குக் காரணம் ரோபினிக் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழக அரசுக்கு சில மாதங்களுக்கு முன்பு, 30 அனலைசர்களை சப்ளை செய்திருந்தது. இந்த நிறுவனம் சண்முகத்துக்கு வேண்டப்பட்டதாம்.

இப்படி திடீரென்று புகுத்தப்பட்ட விதிமுறையால் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்ற டிரான்சியா பயோ மெடிக்கல் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், டெண்டரில் தேர்ச்சி பெறாமல் போனதற்குக் காரணமே இவர்தானாம். இந்த விவகாரம் முதல்வர் வரையில் புகாராகப் போனது.

ஜீவானந்தம்

அமைச்சர் பொன்முடியின் சிறப்பு உதவியாளர். ஏற்கெனவே இருந்த ரவி கார்த்திக் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அமைச்சரின் தற்போதைய நிழல் இவர்தான். சுரங்கத் துறை உதவி இயக்குநர் முதல் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்வரை அனைத்துத் துறை அதிகாரிகளும் இவரின் பாக்கெட்டில் அடக்கம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தலையாரிப் பணிக்கு ஆட்கள் எடுத்தார்கள். ஏழை ஒருவர் அந்தப் பணிக்கு சேர முயற்சிகள் எடுத்தார். அவருக்கு சென்னை கலெக்டர் சிபாரிசு செய்தார். உடனே, 'கோபித்துக் கொள்ளாதீர்கள், அமைச்சரின் உதவியாளர் ஜீவானந்தம் பரிந்துரை செய்தால் மட்டுமே போட முடியும்’ என்று சொல்ல... போன் துண்டிக்​கப்பட்டது.

சண்முகம்

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கூடுதல் சிறப்பு உதவி​யாளர். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே பணி​யாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் வேலை கிடைத்தது.

முருகேச பூபதி சிறப்பு உதவியாளராக இருந்த வரையில் இவர் வைட்டமின் விவகாரங்களில் தலையிடவில்லை. முருகேசபூபதி கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு, முழு அதிகாரம் படைத்த அமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார்.

வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் நியமனம், மாறுதல், மாவட்டங்களில் வேளாண்மை இயக்குநர் மாற்றம் இப்படி வேளாண்மைத் துறையின் அனைத்து மாறுதல்களுக்கும் இவர்தான் தளபதி.

சண்முகம் மற்றும் உமாபதி

அமைச்சர் துரைமுருகனின் நிழல்கள். சண்முகம், பொதுப்பணித் துறை​யில் இருந்து ஓய்வு பெற்றவர். துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆனவுடன் சண்முகத்துக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

வன்னியர் இனம் என்றால் தனி மரியாதை. அவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை இவர்தான் முடிவு எடுப்பார். பொதுப்பணித் துறை பறிபோனதும் டம்மியாக இருந்தார். வீட்டு வசதி வாரியத்தின் வக்கீலாக இருந்த வழக்கறிஞர் வீரசேகரன் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து, முதல்வர் கருணாநிதியே எச்சரித்தார். அதன் பிறகு மீண்டும் வீரசேகரன் வீட்டு வசதி வாரிய வக்கீலாகப் பணிபுரிவது, சண்முகத்தின் கடைக்கண் பார்வை கிடைத்ததால்தான்.

உமாபதி சிறைத் துறையில் பரோல், டெண்டர் விவகாரங்களில் டி.ஐ.ஜி. துரைசாமியுடன் கூட்டணி அமைத்து வலம் வருகிறார். அமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர் வீட்டு செலவுகளை இவர் கவனிப்​பார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளராக இருந்த முருகேசபூபதி, கோவை வேளாண்மைப் பல்கலைக்​கழகத்தின் துணை வேந்தராக ஆனார். ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோவன் நன்னிலம் தொகுதியில் வென்று, ஒருவேளை அமைச்சராகக்கூட ஆகலாம்.

எப்படிப்பட்ட மலை முழுங்கி மகாதேவன்கள் பி.ஏ-க்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்!

நன்றி - ஜூனியர்விகடன் - மார்ச் 27, 2011

12 comments:

R.Gopi said...

தலைவா....

இதெல்லாம் படிக்க படிக்க எனக்கு மட்டுமில்ல, தமிழ்நாட்டுல பல கோடி பேருக்கு கண் கட்டுது...

ராஜேஷ், திருச்சி said...

உ தா வுக்கு சொந்தமா எழுத தெரியாத? ஒன்லி துக்களக் , ஜூ வி கட் அண்ட் பேஸ்ட் மட்டுமா ,. உங்க அம்மா அறிக்கை மாதிரி?

இல்ல இதையும் உங்களுக்கு செக்கரடேரிஎட் ல இருந்து ராத்திரி ல யாராச்சும் சொன்னங்கள , ஹீ ஹீ ஹீ

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தலைவா.... இதெல்லாம் படிக்க படிக்க எனக்கு மட்டுமில்ல, தமிழ்நாட்டுல பல கோடி பேருக்கு கண் கட்டுது.]]]

நாம இந்தத் தேர்தல்ல இதுக்கும் சேர்த்து பதில் கொடுக்கணுமாக்கும்..

உண்மைத்தமிழன் said...

[[[ராஜேஷ், திருச்சி said...
உ தா வுக்கு சொந்தமா எழுத தெரியாத? ஒன்லி துக்களக், ஜூ வி கட் அண்ட் பேஸ்ட் மட்டுமா. உங்க அம்மா அறிக்கை மாதிரி? இல்ல இதையும் உங்களுக்கு செக்கரடேரிஎட் ல இருந்து ராத்திரி ல யாராச்சும் சொன்னங்கள.. ஹீ ஹீ ஹீ.]]]

என்னுடைய தளத்தை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறீர்களா..? அப்படித்தான் தெரிகிறது எனக்கு..!

Prakash said...

Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN.

Dear Voters be careful..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.html

BalajiS said...

oke No 1

The Deputy Chief Minister of Tamilnadu Mr. M. K Stalin does not own any car.

Joke No 2

Agricuturists in India ! Why do you commit suicide? Go and consult Mr. E.v. Velu, Food Minister, Tamilnadu. He will educate you "How to make 7.8 crore in five years with 1.1 acre of agricultural land worth Rs.60,000/-!"

Anonymous said...

Thappi thavari Jayalalitha vanthaalum ithu maathiri ethanai kottai potta mahadevangal varath thaan pogiraargal!
Karpoora sundara pandiyan, hari baskar, .., IAS-nnu angeyum oru kootam kollaiyadikka ready-yaa kaathukkittu irukku!

Latest News!
Sterlite- ADMK-kku Rs 1000/- crore koduthitukkaam!
Ippave aarambichuttaanga..??

thappi thavari vanthutta...,
unga calculator meendum struck aagira maathiri kodigal thamizhagthile irunthe kollai adikkap padum!

Ini naan muthalvaraanaal thaan ithellam saripadum pola irukku! appak kooda enakku theriyaama ennavellam nadakkumo????
kadavule!

Intha Padicha athigara vargathai thiruthudaa!!! Saami!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN. Dear Voters be careful..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.html]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[BalajiS said...

oke No 1

The Deputy Chief Minister of Tamilnadu Mr. M. K Stalin does not own any car.]]]

அவர் வீட்டில் இருப்பதெல்லாம் அவர் பிள்ளைகள் பெயரில் இருக்கிறது. அதெல்லாம் வெளில வராது பாருங்க. அதுனாலதான்.. ச்சும்மா.. அனுதாபம் தேடிக்கிற விஷயம் இது..!

[[[Joke No 2

Agricuturists in India ! Why do you commit suicide? Go and consult Mr. E.v. Velu, Food Minister, Tamilnadu. He will educate you "How to make 7.8 crore in five years with 1.1 acre of agricultural land worth Rs.60,000/-!"]]]

இதுதான் உண்மையான திராவிடம்.. இப்படிக் கொள்ளையடிப்பதுதான் திராவிடர்களின் உண்மையான குணம்.. இல்லைன்னு சொன்னீங்கன்னா நீங்க திராவிடர் இல்லைன்னு சொல்லிருவாங்க. அப்புறம் இன விரோதியாயிருவீங்க..!

உண்மைத்தமிழன் said...

Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...

Thappi thavari Jayalalitha vanthaalum ithu maathiri ethanai kottai potta mahadevangal varath thaan pogiraargal!
Karpoora sundara pandiyan, hari baskar, .., IAS-nnu angeyum oru kootam kollaiyadikka ready-yaa [[[kaathukkittu irukku!

Latest News!
Sterlite- ADMK-kku Rs 1000/- crore koduthitukkaam!
Ippave aarambichuttaanga..??

thappi thavari vanthutta...,
unga calculator meendum struck aagira maathiri kodigal thamizhagthile irunthe kollai adikkap padum!

Ini naan muthalvaraanaal thaan ithellam saripadum pola irukku! appak kooda enakku theriyaama ennavellam nadakkumo????
kadavule!

Intha Padicha athigara vargathai thiruthudaa!!! Saami!]]]

இரண்டு கழகங்களுமே சுருட்டுவதில் ஒரே மாதிரியிருக்கிறார்களே.. என்ன செய்வது..?

abeer ahmed said...

See who owns rockforhunger.org or any other website:
http://whois.domaintasks.com/rockforhunger.org

abeer ahmed said...

See who owns 9oloob.com or any other website.