பதிவர்கள் ஜாக்கிரதை..! மீண்டும் வந்துவிட்டார்கள் போலிகள்..!

24-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாகப் போலிகளையும், போலியின் அல்லக்கைகளையும் கொஞ்சம் அடக்கி, ஒடுக்கி அனுப்பிவிட்டு வலையுலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனாலும் யாருக்கும் அடங்கமாட்டோம் என்பதைப் போல சில குள்ள நரிகள் அவ்வப்போது தங்களது வேலைகளைக் காட்டிக் கொண்டுதான் உள்ளன.

முதல் குறியாக ஒரு சிலரைக் குறி வைத்து அவர்களது தளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தம்பி பொடியன் சஞ்சய் மற்றும் எம்.எம்.அப்துல்லாவின் தளங்கள் பறி போயிருக்கின்றன. அடுத்து பரிசல்காரனின் பெயரில் பலவிடங்களில் பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன.

அடுத்து எனது பல பதிவுகளில் கீழ்க்கண்ட பின்னூட்டங்கள் சேலம் சிவகிரி என்கிற பெயரில் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் போடப்பட்டன.

“டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசு பெரிசா நீள நீளமா எழுதுற. ஏண்டா உணக்கு வேற வேலயே இல்லயாடா? நைட்டெல்லாம் உக்காந்து எழுதுவியாடா? அட மாணங்கெட்டவனே? ஏன்டா என் பதிவ நீக்குற. தைரியமிருந்தா பதில் சொல்லுடா.இப்படி ஓடி ஒளிய்யாத.
//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.//
நீ உயிரோட இருந்து இப்படி மொக்க பதிவுகளப் போட்டு எங்கள கொல்லுறதுக்கு பதில் நீ தூக்குல தொங்கலாம். அதையும் போட்டா எடுத்து உன் பதிவில போடு தேய்ந்து போன ரம்பமே!”

இப்படி ஆஸ்கார் விருதுக்குச் சமமான பாராட்டுரைகளோடு வந்த பின்னூட்டங்கள், எனது சமீபத்திய அனைத்துப் பதிவுகளிலும் இடப்பட்டன. அலுவலகத்தில் பின்னூட்டங்களை நீக்கும்படியான வசதி இல்லாத சூழலால், வீட்டிற்கு வந்துதான் அந்தப் பின்னூட்டங்களை நீக்கினேன்.

அதன் பிறகும் தொடர்ச்சியாக இதே பின்னூட்டம் எனது பதிவுகளில் வந்த வண்ணம் இருந்தது. நானும் மீண்டும், மீண்டும் நீக்கினேன்.

இவை அனைத்தும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க .. இப்போது அதை விடுத்து போனிலேயே ஆள் மாறாட்டம் செய்து மிரட்டல் விட்டிருக்கிறார்கள்., விடுகிறார்கள்.

திங்கட்கிழமை 23-03-2009 அன்று நள்ளிரவு 12.03 மணிக்கு +21356864482 என்ற எண்ணில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. போனில் பேசியவர் எடுத்த எடுப்பிலேயே “மொக்கைத் தமிழன் இருக்காரா..?” என்றார். “நீங்கள் யார்..?” என்றேன்.. “நான் பொய்த்தமிழன் பேசுறேன்..” என்றார். யாரோ வலைப்பதிவர்தான்.. நம்மிடம் விளையாடுகிறார் என்கிற நினைப்பில் நானும் நல்லவிதமாகப் பேசினேன்.

ஆனால் அந்த நபர் ஆரம்பத்தில் இருந்தே குத்தல், கேலி, குதர்க்கமாக பேசிக் கொண்டேயிருந்தார். தான் ஒரு வ.வா.சங்க உறுப்பினர் என்றும்.. எங்கே என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்றெல்லாம் பேசினார். எனக்கும் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. நிஜமாகவே நமது தம்பிமார்களில் யாரோதான் விளையாடுகிறார்களோ என்று நினைத்து இதமாகவே பேசினேன்..

பேச்சு தொடர்ந்ததே தவிர, என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையை உண்மையான நட்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால் சோர்வடைந்து நான் போனை வைக்கப் போவதாகச் சொன்னவுடன், “டேய்.. ஏண்டா மொக்கையைப் போட்டு உயிரை எடுக்குற..? ராத்திரில தூங்க மாட்டியாடா..? குட்நைட் சொல்லதடா.. குட்மார்னிங் சொல்லுடா.. டேய் குட்மார்னிங் சொல்லுடா..” என்று பேச்சு வாடா, போடா என்று ஏகவசனத்தில் குடிகாரன் பேச்சைப் போல் திரும்பி திரும்பிச் சொல்ல.. நான் உடனேயே போனை வைத்துவிட்டேன்.

திரும்பவும் அன்று இரவு 9.53 மணிக்கு +6628183917 என்ற எண்ணில் என்னை அழைத்த நபர் மீண்டும் அதே போல் பேச்சை ஆரம்பித்தார்.. மறுபடியும் “மொக்கைத் தமிழா.. மொக்கைத் தமிழா.. டேய் பொய்த் தமிழன் பேசுறேண்டா..” என்றெல்லாம் பேச்சு வர நானே போனை கட் செய்துவிட்டேன்..

நேற்று மதியம் எனது ஜேட்கூடி பதிவிலும் “சேலம் சிவகிரி” என்ற பெயரில் என்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த அதே விமர்சனம் ஒன்று போடப்பட்டுள்ளது. அதனை சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் நீக்கினேன்..

கூடவே திருலோகு என்ற புதிய பதிவரிடம் எனது பெயரில் யாரோ ஒருவர் பேசியிருக்கிறார். சத்தியமாக அது நான் இல்லை.. அவர் இந்தப் பதிவில் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_5220.html அது பற்றி எழுதியுள்ளார்.

அது நான் இல்லை என்பதை தெரிந்து கொண்டதாக இன்னொரு பதிவையும் http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_24.html திரு. லோகு அவர்கள் போட்டுள்ளார். என்னால் இவருக்கும் ஒரு தேவையில்லாத வேலை..! கஷ்டம்.

பதிவுலகத்திற்குள் இனிமேல் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் இது போன்ற கலாட்டாக்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஓடிப் போன கயவர்கள் வேறு, வேறு ரூபத்தில் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

அதற்கு உதாரணம், உதை வாங்கி மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓடிச் சென்ற "அனானி முன்னேற்றக் கழகம்" இப்போது திடுதிப்பென்று வந்து கடை விரித்துள்ளது. அந்தப் பதிவில் புதிய பதிவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன். போகாமல் இருப்பதே உத்தமம்.

இந்த பொய்த்தமிழன் யார், எவர் என்று தெரியாதபட்சத்தில் உங்களுக்கும் என் பெயரிலோ, அல்லது வேறு சில பதிவர்கள் பெயரிலோ தொலைபேசி அழைப்புகளோ, பின்னூட்டங்களோ இனிமேல் தாராளமாக வர வாய்ப்பிருக்கிறது.

ஆபாசமான அல்லது இதுவரையில் அந்தப் பெயருடைய பதிவர் பயன்படுத்திராத கிண்டல் வார்த்தைகள் அல்லது கெட்ட வார்த்தைகள் அந்தப் பின்னூட்டத்தில் இருந்தால், உடனேயே அந்தப் பதிவருடன் தொடர்பு கொண்டு அந்தப் பின்னூட்டம் நிஜமாக அவர் போட்டதுதானா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.. வேறு வழியில்லை..

ஓத வேண்டியது என் கடமை.. ஓதிவிட்டேன்.. பதிவர்கள் ஜாக்கிரதையாக அணுகவும்.. இருக்கவும்..

இதுவரையில் அடங்கியிருந்த பொறம்போக்குகளுக்கு முகமூடியுடன் பயன்படுத்துவதற்கு எங்காவது ஓரிடத்தில் கணினி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அதுதான் ஆரம்பித்துவிட்டார்கள் அனர்த்தத்தை..

எத்தனையோ எதிர்ப்புகளையும், திருட்டுத்தனங்களையும், மொள்ளமாரித்தனங்களையும், முடிச்சவிக்கித்தனங்களையும், சோமாறித்தனங்களையும் வலையுலகில் நாம் பார்த்தாகிவிட்டது.. புதிய ஸ்டைலில் வந்திருக்கும் இந்த டுபூரித்தனத்தையும் சமாளிப்போம்..!

நன்றி..!

78 comments:

Vaanathin Keezhe... said...

அடக் கொடுமையே...
இருக்கிற இம்சைகள் போதாதென்று இவர்கள் வேறா...

இந்த அனாமதேயங்களுக்காக வருத்தப்படாமல் தங்கள் பணியைத் தொடருங்கள்.

உண்மைத் தமிழர்களுக்கு எப்போதும் தோல்வி கிடையாது.

வெளிவட்டத்தில் இது எனது முதல் கருத்துரை. அது உங்களுக்கு ஆறுதலாக அமைந்தால் சந்தோஷம்!
-vinojasan

ILA (a) இளா said...

இதெல்லாம் ஒரு மேட்டராங்க? வரலாறு தெரியாத பசங்க போல. Cyber Crime வேலைய சுலபமாக்கிருவாங்க.

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் அன்பரே..

எனக்கும் இதைப் போல் மோசமான கமெண்ட் வந்தது. அதனால் அனானி ஆப்சனை சுத்தமாக எடுத்துவிட்டேன்.

வேறு வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

அது சரி(18185106603874041862) said...

நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?? ஏங்க ஃபோன் நம்பரையெல்லாம் வெப்சைட்ல போட்றீங்க?? உலகத்துல பல சைக்கோங்க இருக்கு....அதனால உங்க ஃபோன் நம்பரை ரொம்ப தெரிஞ்சவங்க தவிர மத்தவங்களுக்கு குடுக்காதீங்க...குறிப்பா வெப்சைட்ல எல்லாம் போடாதீங்க..

பாலா said...

இம்புட்டு பிரச்சனை இருக்கா...? :(

ரவி said...

அனானி முன்னேற்றக்கழக கடையை நானும் பார்த்தேன்...

என்னுடைய ஒரு பதிவில் உட்டாலக்கடிதமிழன் என்ற பெயரில் ஒரு நாலு கமெண்டு வந்தது.

அனானி முன்னேன்ற்றக்கழகத்தில் உங்கள் நன்பன் சரவணன் ஐடியும் இணைந்துள்ளது.

அவரிடம் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும்...

அமீரகத்தில் ஒரு சொறிநாய் இன்னும் உயிருடன் உள்ளது.

ஒன்று அதன் வேலையாக இருக்கும்.

அல்லது மீண்டும் பெரியவர் ஆட்டத்துக்கு கிளம்பிவிட்டிருந்திருக்கலாம்...

ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும் இல்லையா ? அதான் கைகள் பரபரக்கின்றன...


ஆனால் புதியவர்கள் யாருக்கும் எந்த மோட்டிவும் இல்லை என்பது தான் உண்மை. இது போன்ற வித்தைகளும் அறிந்தவர் நமது அண்ணாச்சி மட்டும்தானே ?

மறுபடி ஆப்பை கூர் தீட்டவேண்டியது தான் என்று நினைக்கிறேன்...

பழைய சம்பவங்கள், சைபர் கிரைமின் திறமை போன்றவற்றை எழுதினால் ஒரு வேளை மீண்டும் பழைய சம்பவங்கள் நியாபகத்துக்கு வரலாம்...

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமா ?

சதீஸ்..... said...

இங்கயும் இந்த கூத்தா

இது போல விசயங்கள் ஆர்குட்டில் தான் ரொம்ப பிரபளமா நடக்குதுன்னு நினைச்சேன்.

ஆர்குட்டில் இது போன்ற சைகோக்கள் அதிகம் திரிகின்றனர்.

எனக்கு தெரிஞ்சி ஆர்குட் ல நட்பு வட்டத்தை அதிகம் பெருக்கலாம். பொண்ணுங்க கிட்ட கடல போடலாம் ந்னு தான் பல பேர் உபயோகப்படுத்துராங்க. அதில் அறிதா ஒரு குழுமம் இருக்கு அவங்க பகுத்த்றிவு கொள்கைகளுடன் செயல்படுராங்க. சமீபத்துல ஒரு கிராமத்திற்கு கூட எல்லாம் சேர்ந்து ஒரு தொகையை பள்ளிகூடம் கட்ட நிதியா கொடுத்திருக்காங்க.அந்த அரங்க உறுப்பினர் என்ற முறையில் என்னோட கருத்து அந்த குழுமத்தின் நிர்வாகிகள் மிகச்சிறப்பா செயல்படக்கூடியவர்கள். எதாச்சும் ஒன்னு பண்ணிட்டே இருக்காங்க.

அதுல என்ண்டான்னா அந்த வசூல் செய்த தொகையில் ஊழல் நடந்திருக்கு அப்படின்னு ஒருத்தன் எல்லாருக்கும் யார் யாருக்கோ ஸ்கிராப் அனுப்புறான். ஒரு பொண்ணு பேர்ல. ஆனா அவன் போன் நெம்பரே வேற விவரமோ கொடுக்க மறுக்கிறான்.

நான் பல ஆர்குட் குழுக்களை பார்த்திருக்கேன். ஆனா அவங்க மாதிரி யாரும் ஆக்டிவ் வா இல்ல.
அதையும் கெடுக்க இது மாதிரி சைக்கோக்கல் சுத்துதுங்க.


ஆர்குட் பிடிக்காம தான் பிளாக்கர் ல ஏதாச்சும் எழுதலாமேன்னு வந்தேன்.இங்க வந்தா அத விட சைக்கோக்கள் எல்லாம் இருக்கு போல

ஷண்முகப்ரியன் said...

அது சரி சொன்னது சரி.ஃபோன் நம்பரையெல்லாம் கொடுக்காதீர்கள் சரவணன்.கொடுத்தாயிற்று.தெரியாத நம்பர் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.அதிகநேரம் உரையாடாதீர்கள்.முகம் தெரியாத எதிரிகள்தான் மோசமானவர்கள்.

Anonymous said...

Dear Trutamilan i am regular visitor of your blog
why you put your HP no first remove then u complaint
police watch your incoming calls.
Ramachandran
singapore

கிரி said...

என்னமோ போங்க! ஒண்ணும் சொல்றதுக்கில்ல (நல்லதுக்கில்ல) :-(

உண்மைத்தமிழன் said...

//Vaanathin Keezhe... said...

அடக் கொடுமையே... இருக்கிற இம்சைகள் போதாதென்று இவர்கள் வேறா... இந்த அனாமதேயங்களுக்காக வருத்தப்படாமல் தங்கள் பணியைத் தொடருங்கள். உண்மைத்தமிழர்களுக்கு எப்போதும் தோல்வி கிடையாது.
வெளிவட்டத்தில் இது எனது முதல் கருத்துரை. அது உங்களுக்கு ஆறுதலாக அமைந்தால் சந்தோஷம்!
-vinojasan//

நிச்சயமாக ஸார்..

தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும், ஆதரவும்தான் மனம் விரக்தியடையாமல் தொடர்ந்து பதிவுலகில் இருக்க வைக்கிறது.

தங்களுடைய ஆறுதலுக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

//ILA said...
இதெல்லாம் ஒரு மேட்டராங்க? வரலாறு தெரியாத பசங்க போல. Cyber Crime வேலைய சுலபமாக்கிருவாங்க.//

இளா.. உங்களுக்குத் தெரியாததல்ல.. ஆனாலும் அங்கே செல்வதற்கு முன் இப்படியொரு திருட்டுத்தனம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக்கலாமே என்பதற்காகத்தான் இது.

இது இப்படியே தொடர்ந்தால் சைபர்கிரைம் செல்வதைத் தவிர வேறு வழியில்லைதான்..!

உண்மைத்தமிழன் said...

//இராகவன் நைஜிரியா said...

வணக்கம் அன்பரே..

எனக்கும் இதைப் போல் மோசமான கமெண்ட் வந்தது. அதனால் அனானி ஆப்சனை சுத்தமாக எடுத்துவிட்டேன்.

வேறு வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.//

நானும் முன்பு அனானி ஆப்ஷனை எடுத்துதான் வைத்திருந்தேன். இவர்களுக்கெல்லாம் பயந்து போய்விடக் கூடாது என்றுதான் மீண்டும் அனுமதித்துள்ளேன்..

தங்களுடைய தளத்தில் ஐ.பி. நம்பரை கண்டறியும் சாப்ட்வேர் இணைக்கப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து வெளியிட்டுவிடுங்கள்..

அடங்கி விடுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

//அது சரி said...

நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?? ஏங்க ஃபோன் நம்பரையெல்லாம் வெப்சைட்ல போட்றீங்க?? உலகத்துல பல சைக்கோங்க இருக்கு....அதனால உங்க ஃபோன் நம்பரை ரொம்ப தெரிஞ்சவங்க தவிர மத்தவங்களுக்கு குடுக்காதீங்க...குறிப்பா வெப்சைட்ல எல்லாம் போடாதீங்க..//

அது சரி அண்ணே..

நட்பு வட்டம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் போன் நம்பரை போட்டுள்ளேன். இதனால் எத்தனையோ முறை, எத்தனையோ பதிவர்களுக்கு சில உதவிகளும், எனக்கு பல உதவிகளும் கிடைத்துள்ளன.

எத்தனை நல்லதுகளில் சில கெட்டதுகளும் இருக்கும் என்பார்களே. அது போலத்தான் இது..

உண்மைத்தமிழன் said...

//ஹாலிவுட் பாலா said...
இம்புட்டு பிரச்சனை இருக்கா...? :(//

இதைவிட அதிகமாவே இருக்கு.. சமயம் வரும்போது மொத்தமா சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

///செந்தழல் ரவி said...

அனானி முன்னேற்றக் கழக கடையை நானும் பார்த்தேன்...
என்னுடைய ஒரு பதிவில் உட்டாலக்கடி தமிழன் என்ற பெயரில் ஒரு நாலு கமெண்டு வந்தது.
அனானி முன்னேன்ற்றக் கழகத்தில் உங்கள் நன்பன் சரவணன் ஐடியும் இணைந்துள்ளது. அவரிடம் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும்...
அமீரகத்தில் ஒரு சொறி நாய் இன்னும் உயிருடன் உள்ளது.
ஒன்று அதன் வேலையாக இருக்கும்.
அல்லது மீண்டும் பெரியவர் ஆட்டத்துக்கு கிளம்பி விட்டிருந்திருக்கலாம்...
ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும் இல்லையா? அதான் கைகள் பரபரக்கின்றன... ஆனால் புதியவர்கள் யாருக்கும் எந்த மோட்டிவும் இல்லை என்பதுதான் உண்மை. இது போன்ற வித்தைகளும் அறிந்தவர் நமது அண்ணாச்சி மட்டும்தானே?
மறுபடி ஆப்பை கூர் தீட்டவேண்டியதுதான் என்று நினைக்கிறேன்... பழைய சம்பவங்கள், சைபர் கிரைமின் திறமை போன்றவற்றை எழுதினால் ஒரு வேளை மீண்டும் பழைய சம்பவங்கள் நியாபகத்துக்கு வரலாம்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இதப் பண்ண மாட்டோமா?///

ரவி தம்பி..

புதிது, புதிதான முகமூடிகள் நிறைய வந்திருக்கிறார்கள். யாரோ, எவரோ என்று கண்டு கொள்ளாமல் விட்டால் கடைசியில் நாம் கஷ்டப்பட்டது போலத்தான் ஆகிவிடும்.

அண்ணாச்சியை நானும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறேன்.. எனது சந்தேகமும் ஒரு பக்கம் அவர் மீது உள்ளது.

ஆனால் போன் குரல் முற்றிலும் புதியது..

அ.மு.க.வின் மீது ஒரு கண் வைக்கவும்..

அடுத்த ஆப்பை வாய்ப்பு தவறவிடாமல் நாம் வைத்துவிடலாம்..!

உண்மைத்தமிழன் said...

///Sathish said...

இங்கயும் இந்த கூத்தா? இது போல விசயங்கள் ஆர்குட்டில்தான் ரொம்ப பிரபளமா நடக்குதுன்னு நினைச்சேன்.
ர்குட்டில் இது போன்ற சைகோக்கள் அதிகம் திரிகின்றனர்.
எனக்கு தெரிஞ்சி ஆர்குட்ல நட்பு வட்டத்தை அதிகம் பெருக்கலாம். பொண்ணுங்க கிட்ட கடல போடலாம்னுதான் பல பேர் உபயோகப்படுத்துராங்க. அதில் அறிதா ஒரு குழுமம் இருக்கு அவங்க பகுத்த்றிவு கொள்கைகளுடன் செயல்படுராங்க. சமீபத்துல ஒரு கிராமத்திற்கு கூட எல்லாம் சேர்ந்து ஒரு தொகையை பள்ளிகூடம் கட்ட நிதியா கொடுத்திருக்காங்க.அந்த அரங்க உறுப்பினர் என்ற முறையில் என்னோட கருத்து அந்த குழுமத்தின் நிர்வாகிகள் மிகச் சிறப்பா செயல்படக் கூடியவர்கள். எதாச்சும் ஒன்னு பண்ணிட்டே இருக்காங்க.
அதுல என்ண்டான்னா அந்த வசூல் செய்த தொகையில் ஊழல் நடந்திருக்கு அப்படின்னு ஒருத்தன் எல்லாருக்கும் யார் யாருக்கோ ஸ்கிராப் அனுப்புறான். ஒரு பொண்ணு பேர்ல. ஆனா அவன் போன் நெம்பரே வேற விவரமோ கொடுக்க மறுக்கிறான். நான் பல ஆர்குட் குழுக்களை பார்த்திருக்கேன். ஆனா அவங்க மாதிரி யாரும் ஆக்டிவ் வா இல்ல. அதையும் கெடுக்க இது மாதிரி சைக்கோக்கல் சுத்துதுங்க. ஆர்குட் பிடிக்காமதான் பிளாக்கர்ல ஏதாச்சும் எழுதலாமேன்னு வந்தேன். இங்க வந்தா அத விட சைக்கோக்கள் எல்லாம் இருக்கு போல.///

சைக்கோக்களை அம்பலப்படுத்தி ஓரங்கட்டியிருந்தோம் சதீஷ்.

இப்ப கொஞ்சம் துளிர்விட்டுப் போய் ஆடத் துவங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இது ஒரு முன் எச்சரிக்கை பதிவுதான்..

தங்களின் வலைத்தள வருகையை வரவேற்கிறேன்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//ஷண்முகப்ரியன் said...
அது சரி சொன்னது சரி.ஃபோன் நம்பரையெல்லாம் கொடுக்காதீர்கள் சரவணன். கொடுத்தாயிற்று. தெரியாத நம்பர் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அதிக நேரம் உரையாடாதீர்கள். முகம் தெரியாத எதிரிகள்தான் மோசமானவர்கள்.//

நட்புக்கும், ஆதரவிற்கும், அறிவுரைக்கும் நன்றிகள் ஸார்..

நானும் கொஞ்சம் எச்சரிக்கையாகவேதான் இருந்து வருகிறேன்..!

அதனால்தான் 2 முறை ஆனவுடனேயே இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

Dear Trutamilan i am regular visitor of your blog
why you put your HP no first remove then u complaint
police watch your incoming calls.
Ramachandran
singapore//

ராமச்சந்திரன் ஸார். சக பதிவர்களுக்காகத்தான் போன் நம்பரை கொடுத்து வைத்திருக்கிறேன். பலரும் செய்வதுதான்..

இது போன்ற சைக்கோக்கள் அவ்வப்போது தலைதூக்கி அடித்து விரட்டியதும் ஓடி ஒளிவதுமாக இருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பயந்து இருக்க முடியுமா? சொல்லுங்கள்.. எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லத்தான் இந்தப் பதிவு.

தங்களுடைய ஆதரவிற்கும், ஆறுதலுக்கும் நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
என்னமோ போங்க! ஒண்ணும் சொல்றதுக்கில்ல (நல்லதுக்கில்ல) :-(//

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது கிரி ஸார்..

நீங்களும் சுதாரிப்பா இருந்துக்கோணும்.. இல்லைன்னா உங்களுக்கே இது நேரலாம்..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
:((//

நன்றி தமிழ்பிரியன்..!

மாயவரத்தான் said...

மேற்கண்ட நம்பர்களைப் பார்த்தால் அது ஏதோ VoIP-ஐ பயன்படுத்தி தொ(ல்)லைபேசியிருப்பது போலத் தெரிகிறது. இப்போது தான் கால் ரூபா, எட்டணாவுக்கெல்லாம் இந்தியாவிற்கு தொலை பேசலாமே. முதல் எண் அமெரிக்க சர்வரிலிருந்து, அடுத்தது தாய்லாந்திலிருந்து.

எவனோ காசும், டேஷும் கொழுப்பெடுத்தவன் தான் இதைச் செய்திருக்கிறான்.

VoIP மூலம் பேசினால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்கிறான் போல.

ஆனால், எந்த VoIP சர்வரிலிருந்து கால் வந்தது என்பதை கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அதன் பிறகு அந்த VoIP சர்வரிடம் முறைப்படி விசாரித்தால் எந்த அக்கவுண்ட்டில் இருந்து வந்தது என்பதை சொல்லிவிடுவார்கள்.

VoIP மூலம் போலி மிரட்டல் விடுத்து நிறையப் பேர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது 'அண்ணாச்சி'க்கு தெரிந்திருக்கவில்லை போல!

மாயவரத்தான் said...

http://www.schneier.com/blog/archives/2006/08/skype_call_trac.html

Unknown said...

நல்ல எச்சரிக்கைப் பதிவு.

என் ஹைக்கூ கவிதை பதிவுக்கு பரிசல்காரன் பேரில் ஒரு மட்டமான பின்னூட்டம் வந்தது உங்களுக்கு தெரிந்ததே!


பெண் பதிவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

Naresh Kumar said...

இந்தக் கொடுமை வேறயா!!!

இந்த மொக்கைசாமிகளுக்காக நீங்கள் கவலைப் படத் தேவையில்லை நண்பரே!!!

Raju said...

வருந்தத்தக்க விஷயம்ண்ணே....
ஏதாவது பண்ணுங்கண்ணே...!

Anonymous said...

anna..don't worry..You know one thing, i was starting reading your blog by reading your rajini posting.Even though i was not accepting your comments, i liked the way you are writing your further blogs..Dont worry about these guys..Keep up your good writing..We are behind you...I wanna speak with you..Don't worry..i am not like that guy..When will be the best time to call you..I am working in US..

ஆண்ட்ரு சுபாசு said...

சதீஷ் அண்ணன் சொல்லி உள்ளது போல ஆர்க்குட் குழுமங்களில் இது போன்ற போலிகள் அதிகம் ...இங்கே இதுவரை பார்த்து இல்லை ...நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கை விடுத்து உள்ளீர்கள் ..கவனமாக கையாள்வோம்..

நாமக்கல் சிபி said...

ஆப்பு அருகில் இருக்கு!
வி.ஓ.ஐ.பி தொலைவில் இருக்கு!

Suresh said...

அண்ணனே நான் எல்லாம் இப்போ தான் பதிவு போடுறேன்
அதுவும் எழுது பிழைகளோட
என்ன செய்ய எனக்கு பயமா தன் இருக்கு நீங்க சொன்னத பார்த்தா..
போர் அடிச்சா நமக்கு போன் அதுவும் வெளி ஊரு ல இருந்து போட்டு கலாய்பாங்க போல

லோகு said...

எனக்கு இந்த எங்களில் இருந்து அழைப்பு வந்தது...

+88626084076
+38586351090
+21248591811
+59163702351
+254320173349

நான் இட்ட பதிவுகளும், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு ஒரு காரணம் என்பதால் வருந்துகிறேன்..

மோனி said...

உண்மையிலேயே வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
இருப்பினும் இது போன்ற விஷயங்களை அறவே மனதில் இருந்து நீக்கி விட்டு
புதிய பதிவுகளை மேற்கொண்டு மேற்கொண்டு எழுதுங்கள் ..

மானம்கெட்ட நாய்களுக்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
பெயர் சொல்லாமல்
போனில் மிரட்டும் நாதாரிகளுக்கேல்லாம் கவலைப்படாமல்
உங்கள் பணியை நீங்கள் மேலும் சிறப்பாய்
தொடருங்கள் நண்பரே...

முக்கியமாய்
கே. ரவிஷங்கர் கூறியதை போல
பெண் பதிவர்கள்
தொலைபேசி எண்ணையோ
அலைபேசி எண்ணையோ
அளிக்காமல் இருத்தல் நலம்.

லூசுல விடுங்க பாஸ்...
காலம் எல்லாவற்றையும்
பார்த்துக்கொள்ளும்
பார்த்துக் கொல்லும்...

Anonymous said...

unmaiththamilan,
I am in a hurry,that's why I am writing in english,sorry about it.
There are so many psychologically disturbed people out in the wider world.They get a thrill and kick by doing this sort of things.Just ignore them.
However,as Ravi commented, is it wise to publish phone numbers?
If these people are phoning from foreign countries,they can make your life hell by phoning you at odd hours,eg.at mid night while you are sleeping.
In those days,these type of people used to write poison pen letters,
In this modern technological era,they have resorted to cyber crime.
-vanathy

pudugaithendral said...

கவனமாக இருக்க உதவும் இந்தப் பதிவு.

பதிவிற்கு மிக்க நன்றி.

Bhuvanesh said...

அண்ணே.. கொஞ்சம் அலேர்டா இருங்க..

benza said...

[[[ தங்களுடைய தளத்தில் ஐ.பி. நம்பரை கண்டறியும் சாப்ட்வேர் இணைக்கப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து வெளியிட்டுவிடுங்கள் ]]]

மேலே கூறியதை நான் ஆமோதிகின்றேன் ---
அந்த சிவகிரி ---
ஓஹோ இப்படி ஒன்றிற்கு தானா நான் கொச்சை தமிழில்
பதில் போட்டேன் ?
அதை எடுத்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ---
நான் பல மணி நேரம் இங்கு உலாவுவன் ---
என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள் சார்

நையாண்டி நைனா said...

கை கோர்ப்போம், மலட்டு அனானிகளை வேரறுப்போம்.

உண்மைத்தமிழன் said...

//மாயவரத்தான்.... said...

மேற்கண்ட நம்பர்களைப் பார்த்தால் அது ஏதோ VoIP-ஐ பயன்படுத்தி தொல்)லைபேசியிருப்பது போலத் தெரிகிறது. இப்போதுதான் கால் ரூபா, எட்டணாவுக்கெல்லாம் இந்தியாவிற்கு தொலை பேசலாமே. முதல் எண் அமெரிக்க சர்வரிலிருந்து, அடுத்தது தாய்லாந்திலிருந்து.

எவனோ காசும், டேஷும் கொழுப்பெடுத்தவன்தான் இதைச் செய்திருக்கிறான்.

VoIP மூலம் பேசினால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்கிறான் போல.

ஆனால், எந்த VoIP சர்வரிலிருந்து கால் வந்தது என்பதை கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அதன் பிறகு அந்த VoIP சர்வரிடம் முறைப்படி விசாரித்தால் எந்த அக்கவுண்ட்டில் இருந்து வந்தது என்பதை சொல்லிவிடுவார்கள்.

VoIP மூலம் போலி மிரட்டல் விடுத்து நிறையப் பேர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது 'அண்ணாச்சி'க்கு தெரிந்திருக்கவில்லை போல!//

மாயவரத்தான் ஸார்..

அப்ப நம்ம அண்ணாச்சிதான் இதுக்கும் காரணம்கிறீங்களா..!

நான் கேட்ட குரல் அவரைப் போல் இல்லை.. ஆனால் உடன் இன்னொருவரும் இருப்பது கேட்டது. அவர் குரல் அடிக்கடி இடைமறித்தது.

எதுக்கும் இருக்கட்டும்.. அண்ணாச்சி மேலேயும் ஒரு கண்ணு வைச்சுக்குவோம்..!

உண்மைத்தமிழன் said...

//மாயவரத்தான்.... said...
http://www.schneier.com/blog/archives/2006/08/skype_call_trac.html//

மாயவரத்தான் ஸார்..

லின்க்-ல் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. படிக்கப் பொறுமை வேண்டும். மெதுவாகப் படிக்கிறேன்..

தகவலுக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//கே.ரவிஷங்கர் said...
நல்ல எச்சரிக்கைப் பதிவு. என் ஹைக்கூ கவிதை பதிவுக்கு பரிசல்காரன் பேரில் ஒரு மட்டமான பின்னூட்டம் வந்தது உங்களுக்கு தெரிந்ததே! பெண் பதிவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.//

உண்மைதான் ரவிசங்கர்..

கண் மூடி கண் திறப்பதற்குள் என்று சொல்வதைப் போல் இப்போது நிறைய புதிய பதிவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவையிட்டேன்..

உண்மைத்தமிழன் said...

//Naresh Kumar said...
இந்தக் கொடுமை வேறயா!!! இந்த மொக்கைசாமிகளுக்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை நண்பரே!!!//

இதைவிட பெரியக் கொடுமையை எல்லாம் நாங்கள் பார்த்தாகிவிட்டது நரேஷ்..

இது கொஞ்சம்தான்..! இன்னும் இந்த வரிசையில் நிறைய எழுத வேண்டி வரும். அப்போது உங்களுக்கு புரியும்..!

உண்மைத்தமிழன் said...

//டக்ளஸ்....... said...
வருந்தத்தக்க விஷயம்ண்ணே....
ஏதாவது பண்ணுங்கண்ணே...!//

பண்ணுவோம்.. அதுக்கு முன்னோடியா ஒரு எச்சரிக்கை மாதிரி இருக்கட்டும்னுதான் இந்தப் பதிவு..

உண்மைத்தமிழன் said...

//Raja said...
anna.. don't worry..You know one thing, i was starting reading your blog by reading your rajini posting. Even though i was not accepting your comments, i liked the way you are writing your further blogs.. Dont worry about these guys.. Keep up your good writing.. We are behind you... I wanna speak with you.. Don't worry.. i am not like that guy.. When will be the best time to call you.. I am working in US..//

ஆதரவிற்கும், ஆறுதலுக்கும் மிக்க நன்றி ராஜா..

விரைவில் நாம் சந்திப்போம்..!

உண்மைத்தமிழன் said...

//ஆண்ட்ரு சுபாசு said...
சதீஷ் அண்ணன் சொல்லி உள்ளது போல ஆர்க்குட் குழுமங்களில் இது போன்ற போலிகள் அதிகம். இங்கே இதுவரை பார்த்து இல்லை. நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கை விடுத்து உள்ளீர்கள். கவனமாக கையாள்வோம்.//

நீங்கள் கொஞ்சம் லேட்டாக வந்துள்ளீர்கள் ஆண்ட்ரூ சுபாசு.

எனது லேபிள்களில் "போலிகள் ஜாக்கிரதை" என்பதை கிளிக் செய்து அனைத்தையும் படித்துப் பாருங்கள்..

ஆர்க்குட்டே பரவாயில்லை என்பீர்கள்..

வருகைக்கு நன்றிகள்..!

Bhuvanesh said...

//.. I am working in US..//

//விரைவில் நாம் சந்திப்போம்..!//

இது ரெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஐ மீன் நீங்க அங்க போக போறீங்களா ??

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
ஆப்பு அருகில் இருக்கு!
வி.ஓ.ஐ.பி தொலைவில் இருக்கு!//

எவ்வளவு தொலைவுல இருந்தாலும் என்னிக்காச்சும் ஒரு நாள் ஆப்படிக்கத்தாண்டி போறோம்..!

உண்மைத்தமிழன் said...

//Suresh said...
அண்ணனே நான் எல்லாம் இப்போதான் பதிவு போடுறேன்
அதுவும் எழுது பிழைகளோட..
என்ன செய்ய எனக்கு பயமாதன் இருக்கு நீங்க சொன்னத பார்த்தா..
போர் அடிச்சா நமக்கு போன் அதுவும் வெளி ஊருல இருந்து போட்டு கலாய்பாங்க போல.//

புதிய தம்பியா..? வருக.. வருக.. தங்கள் வரவு நல்வரவாகட்டும்..!

பயம் வேண்டாம்.. ஆனால் எச்சரிக்கை உணர்வு வேண்டும்.. ஜாக்கிரதையாக இருங்கள்..!

வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

//லோகு said...
எனக்கு இந்த எங்களில் இருந்து அழைப்பு வந்தது...

+88626084076
+38586351090
+21248591811
+59163702351
+254320173349

நான் இட்ட பதிவுகளும், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு ஒரு காரணம் என்பதால் வருந்துகிறேன்..//

நன்றி லோகு..

இனி அந்த சைக்கோ வராது என்று நினைக்கிறேன்..

வந்தால் வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுப்போம்..!

உண்மைத்தமிழன் said...

//மோனி said...
உண்மையிலேயே வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
இருப்பினும் இது போன்ற விஷயங்களை அறவே மனதில் இருந்து நீக்கி விட்டு புதிய பதிவுகளை மேற்கொண்டு மேற்கொண்டு எழுதுங்கள்.. மானம் கெட்ட நாய்களுக்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
பெயர் சொல்லாமல்
போனில் மிரட்டும் நாதாரிகளுக்கேல்லாம் கவலைப்படாமல்
உங்கள் பணியை நீங்கள் மேலும் சிறப்பாய் தொடருங்கள் நண்பரே...
முக்கியமாய் கே. ரவிஷங்கர் கூறியதை போல பெண் பதிவர்கள்
தொலைபேசி எண்ணையோ
அலைபேசி எண்ணையோ
அளிக்காமல் இருத்தல் நலம்.
லூசுல விடுங்க பாஸ்...
காலம் எல்லாவற்றையும்
பார்த்துக்கொள்ளும்
பார்த்துக் கொல்லும்...//

ஆஹா மோனி ஸார்..

ஆபத்து என்றவுடன் ஓடோடி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது..

நன்றி.. நன்றி.. நன்றி..

எனது எழுத்துப் பயணம் நிச்சயம் நிற்காது. தங்களைப் போன்ற அன்பர்களின் தயவு இருக்கும்போது எனக்கென்ன கவலை..?

உண்மைத்தமிழன் said...

//vanathy said...
unmaiththamilan, I am in a hurry, that's why I am writing in english, sorry about it. There are so many psychologically disturbed people out in the wider world. They get a thrill and kick by doing this sort of things. Just ignore them. However, as Ravi commented, is it wise to publish phone numbers? If these people are phoning from foreign countries, they can make your life hell by phoning you at odd hours, eg.at mid night while you are sleeping.
In those days, these type of people used to write poison pen letters, In this modern technological era,they have resorted to cyber crime.
-vanathy//

வானதி மேடம்..

சைபர் கிரைம் போலீஸிற்கு நான் ஏற்கெனவே சில சைக்கோக்கள் பற்றி புகார் கொடுத்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது..

அங்கு செல்ல வேண்டும் என்பது கடைசிபட்சமாக வைத்துக் கொள்ளலாம் என்பதால்தான் இதனை ஒரு எச்சரிக்கை பதிவாகப் போட்டுள்ளேன்.

பிரச்சினை தொடர்ந்தால் அங்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை..!

தங்களது அனுசரனைக்கும், அன்பிற்கும் எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

//புதுகைத் தென்றல் said...
கவனமாக இருக்க உதவும் இந்தப் பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி.//

அனைவருக்குமான எச்சரிக்கைதான் இது.. வருகைக்கு நன்றி புதுகைத்தென்றல்..

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
அண்ணே.. கொஞ்சம் அலேர்டா இருங்க..//

அதான் பதிவு போட்டிருக்கேன் புவனேஷ்..!

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
[[[ தங்களுடைய தளத்தில் ஐ.பி. நம்பரை கண்டறியும் சாப்ட்வேர் இணைக்கப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து வெளியிட்டுவிடுங்கள் ]]]

மேலே கூறியதை நான் ஆமோதிகின்றேன் ---
அந்த சிவகிரி ---
ஓஹோ இப்படி ஒன்றிற்குதானா நான் கொச்சை தமிழில்
பதில் போட்டேன் ?
அதை எடுத்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ---
நான் பல மணி நேரம் இங்கு உலாவுவன் ---
என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள் சார்//

ஒன்றும் செய்ய வேண்டாம் பென்ஸ் ஸார்..

வழக்கம்போல வாருங்கள்.. உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்..

இந்த மாதிரியான சைக்கோக்கள் தாங்களாகவே வந்து மாட்டுவார்கள். அப்போது பார்த்துக் கொள்வோம்..!

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
கை கோர்ப்போம், மலட்டு அனானிகளை வேரறுப்போம்.//

நைனா ஸார்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.. தெரியும்தானே.. அதுக்குத்தான் இந்தப் பதிவு..!

நையாண்டி நைனா said...

சூடா பதில் கொடுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

நையாண்டி நைனா said...

இங்கே வேலைய முடிச்சிட்டு நம்ம கடை பக்கம் கொஞ்சம் ஒதுங்குங்க...

Sanjai Gandhi said...

//சோர்வடைந்து நான் போனை வைக்கப் போவதாகச் சொன்னவுடன்//

அண்ணே.. உங்களையே ஒருத்தன் சோர்வடைய வச்சிட்டானா? எமகாதகப் பயலா இருப்பான் போல. மொதல்ல இந்த அனானி ஆப்சனை எடுங்கண்ணே.

//OpenID
Name/URL
Anonymous//
இந்த கன்றாவிகளுக்கு எல்லாம் சங்கு ஊதுங்க. பிரச்சனையே இதால தான். எல்லோரும் இந்த வசதிகளுக்கு பால் ஊத்தினாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.

அத்திரி said...

நமக்கெல்லாம் இந்த கம்பியூட்டர் அறிவு ரொம்ப கம்மி..... இருந்தாலும் பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்..ஆங்....

என் கட பக்கம் ஆளையே காணோம்......

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...
சூடா பதில் கொடுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.///

பின்ன.. எம்புட்டு பேரு ஆபீஸ் வேலையையெல்லாம் விட்டுப்போட்டு நமக்கு கமெண்ட்டு போடறாங்க.. அவங்களுக்கு ஒரு மரியாதை செய்ய வேணாம்..

அதான் தனித்தனியா பதிலு..! இன்னா கரீக்ட்டுத்தான நைனா..!

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
இங்கே வேலைய முடிச்சிட்டு நம்ம கடை பக்கம் கொஞ்சம் ஒதுங்குங்க...//

வர்றேன்.. வர்றேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க நைனா..

உண்மைத்தமிழன் said...

///Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//சோர்வடைந்து நான் போனை வைக்கப் போவதாகச் சொன்னவுடன்//

அண்ணே.. உங்களையே ஒருத்தன் சோர்வடைய வச்சிட்டானா? எமகாதகப் பயலா இருப்பான் போல. மொதல்ல இந்த அனானி ஆப்சனை எடுங்கண்ணே.
//OpenID
Name/URL
Anonymous//
இந்த கன்றாவிகளுக்கு எல்லாம் சங்கு ஊதுங்க. பிரச்சனையே இதாலதான். எல்லோரும் இந்த வசதிகளுக்கு பால் ஊத்தினாலே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.///

ஒரு ஏழு மாசமா எடுத்துதான் வைச்சிருந்தேன். இப்பத்தான் மறுபடியும் இணைச்சேன்.. மீண்டும் பிரச்சினை..

இதுக்கெல்லாம் பயப்படலாமா காந்தி..? வருமுன் உரைத்தால் அனைவருக்கும் நல்லது என்று நினைத்தேன்.. சொல்லிவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...

நமக்கெல்லாம் இந்த கம்பியூட்டர் அறிவு ரொம்ப கம்மி.....//

அது இல்லாமய்யே இந்தப் போடு போடுறீங்களே.. இருந்திருந்தா..?

//இருந்தாலும் பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்..ஆங்....//

ம்.. இது நல்ல புள்ளைக்கு அடையாளம்..

//என் கட பக்கம் ஆளையே காணோம்......//

தூங்குறதுக்கே நேரமில்ல தம்பி.. கோச்சுக்காத ராசா..!

Sanjai Gandhi said...

//இதுக்கெல்லாம் பயப்படலாமா காந்தி..? வருமுன் உரைத்தால் அனைவருக்கும் நல்லது என்று நினைத்தேன்.. சொல்லிவிட்டேன்..! //

அண்ணே.. இதனால கமெண்ட் போடறவங்களை நீங்க இழக்க வேண்டி வரும். இப்போ உங்களைத் திட்றவங்க எப்போ வேணாலும் பின்னூட்டம் போடறவங்களையும் திட்டலாம். எதுக்கு தேவை இல்லாம. உங்களுக்கும் ஒரு கவுரவம் இருக்கு. இந்த அனானி ஆப்ஷனால உங்களுக்கு என்ன பலன் சொல்லுங்க?

வால்பையன் said...

எச்சரிக்கைக்கு நன்றி!

ஜெய் நித்யானந்தம் said...

காப்பி பேஸ்ட் செய்வதற்கே இவ்வளவு கடினமாக இருக்கிறதே.இதை எப்படி டைப் செய்கிறீர்கள். அதை டுவிட்டரில் கூறவும் பதிவாக போட்டு மீண்டும் என்னை சோர்வடையவைத்து விடாதீர்கள் பிளீஸ்

ஜெய் நித்யானந்தம் said...

முகப்புஇடுகைகள்இன்று
சென்ற நாட்கள்
இடுகைகளில் தேடபதிவுகள்முழுப்பட்டியல்
பட்டியலில் சேர்க்க
சேர்க்கை நிலவரம்"ம" திரட்டிகுறிச்சொற்கள்தமிழ்நிழல்செய்திகள் இன்று இரணைப் பாசிசம் விருட்சமாய் வெட்டிச் சாய்க்கும் ஆயுதம் வெளிச்சமாய்- சித்திரம் பாரதி - தமிழரங்கம் தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்புதுப்பிக்கப்பட்ட நேரம் : March 25, 2009, 11:15 am

அறிவிப்புகள்தமிழ்மணம் சினிமா புதிய அறிவிப்பு
சினிமா தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறது. இந்தியாவிலே தமிழகம் தான் தொடர்ச்சியாகத் ...

செய்திகள்தமிழ் செய்திகள்

தெய்வமகன்


ரூ.12 லட்சம் தானே விலை : அதிநவீன பைக்குகள் 51 ...

பாரதி


இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!

இந்நேரம்


விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார் கலைஞர் - ராமதாஸ் குற்றச்சாட்டு

♠புதுவை சிவா♠


போர்டு ' ஐகான் ' விலை ஏப்ரலில் இருந்து உயருகிறது

பாரதி


அனைத்து செய்திகளும்

தமிழ்மணத்தில் இணைக்கஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க
ப்ளாகருக்கான பதிவுப்பட்டை
வேர்ட்பிரஸ்.காம் பதிவுகள்
வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கான பதிவுப்பட்டை
பிற தளங்கள்
தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை
தமிழில் எழுதுங்கள்தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்
என் கோடு, உன் கோடு, யுனிகோடு தனி கோடு
தமிழ் மென்பொருட்கள்புதுவை - தமிழ் எழுதி
பொங்குதமிழ் - எழுத்துரு மாற்றி
ஈ-கலப்பை

சூடான இடுகைகள் இன்று இந்த வாரம்
வயதாகி வந்த காமம்

மாதவராஜ்


நானோ கார் : மலிவின் பயங்கரம் !

வினவு


பெ’ண்’களூர்

Cable Sankar


ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் (FYI ...

நான் ஆதவன்


நடிகனைத் திட்டினால் ரசிகனுக்கு ஏன் கோபம் வருகிறது?

SUREஷ்


நாகரிக கோமாளி சாரு

Bleachingpowder


3 விதவைகள் சோனியா முகத்தில் தூக்கி எறிந்த விருதுகளுக்கப்புறமும்…!

Manivannan


ஜூனியரில் வந்த என் பதிவும் + கார்ட்டூனும் + டரியள் ...

குசும்பன்


சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா? கண்டிப்பா இதை படிங்க

கிரி


THE COMPANY- இதுல உங்களின் பங்கும் இருக்கிறது!

♗யெஸ்.பாலபாரதி ♗


சில விபத்துக்களும் எதிர்பாராத விளைவுகளும்

வடகரை வேலன்
தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள்!

மாதவராஜ்


இதுக்கும் சிரிக்கலைனா நீங்க சிடுமூஞ்சி தான் :-))

கிரி


இந்தக் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?

மாதவராஜ்


யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்


கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

நல்லதந்தி


புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

வினவு


புலிகள் தயாரித்துள்ளா மோட்டரை கண்டு அதிர்ச்சி அடைந்த ராணுவம்-‍போட்டோ இணைக்கப்பட்டுள்ளது

தெய்வமகன்


'அருந்ததீ'பட அனுபவம்

ஷண்முகப்ரியன்


விஜய்காந்த் செய்வது சரியா....

T.V.Radhakrishnan


தீயான திரைப்படம் அருந்ததி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644)

கடந்த 2 நாட்களில் வாசகர்கள் பரிந்துரைத்தவை
வாசகர் பரிந்துரைசென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்! - 26/30

வினவு


மாணவனின் உயிரும் கல்லூரி முதல்வரின் நடத்தையும் - இரு சம்பவங்கள் - 24/24

புருனோ Bruno


இந்தக் கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா? - 23/29

மாதவராஜ்


அவளைப் பற்றி! - 15/19

ஷீ-நிசி


நானோ கார் : மலிவின் பயங்கரம் ! - 14/16

வினவு


முதல்தாரம், ரெண்டாந்தாரம் ஆன கதை! - 13/13

பழமைபேசி


மரம் ஒரு அதிசயம்! - 11/11

thevanmayam


விஜய்க்கு சில வில்லங்க யோசனைகள் - 10/12

டாஸ்மாக் கபாலி


நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்? - 9/9

ஜீவன்


பெ’ண்’களூர் - 8/8

Cable Sankar

இடுகைகளைப் புதுப்பிக்க
தமிழ்மணம் மகுடம்

கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்! - 26/30

வினவு

மாதவராஜ்சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்
வயதாகி வந்த காமம்
எல்லாம் சட்டப்படிதான்!
சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர். ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ பட்டதாரி. பாண்டியன் கிராம வங்கியில் கிளர்க். சாத்தூர் வாசம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மூத்த மகள் காதம்பரி என் வாழ்க்கைத்துணை. இரு சிறுகதை தொகுப்புகளும், நான்கு கட்டுரை நூல்களும் இதுவரை வெளிவந்துள்ளன.
இந்த வார நட்சத்திரம் - ஒரு அறிமுகம் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள் - தொகுப்பு பணி | மொழி | கட்டுரைகள் | ஆய்வுகள் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஏப்ரல் திங்களில் இப்பணியை நிறைவு செய்ய இருக்கிறார். இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை ...0 மறுமொழிகள்
லஞ்சலீலா தரங்கிணி மு.குருமூர்த்தி | என் பார்வை காலையில் காபிகுடிக்கும் நேரத்திலேயே வாசல் கேட்டில் நண்பரின் தலை தெரிந்தது. தலை வழுக்கையின் பரப்பளவு முன்பைவிட அதிகமாக இருந்தது. புயலில் ...0 மறுமொழிகள்
யு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி? tamilnenjam | Uncategorized புதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை ...0 மறுமொழிகள்
கணினியின் தேவையற்ற காலி ஃபோல்டர்களை அழிப்பதற்கு குட்டு வைக்காத ஞாநி - விடுதலை.இராசேந்திரன் அதி அசுரன் ‘ராஜீவ் காந்தி கொலை செய்யப் படவில்லை; அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை’ என்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ...0 மறுமொழிகள்
காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் ... Maximum India | அரசியல் இது தேர்வுகளின் காலம். பள்ளிகள்/ கல்லூரிகள் இறுதி தேர்வு நடத்தி மாணவர்களின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி குறித்து முடிவெடுக்கும் நேரம். மத்தியில் ...1 மறுமொழிகள்
அனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க வேலன். | வேலன் | VELAN | அனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க அனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க ...1 மறுமொழிகள்
அப்பாஸ் அவர்களின் கவிதை. ச.முத்துவேல் | பிடித்த கவிதைகள் | கவிதை துப்பாக்கி ...2 மறுமொழிகள்
பூஜாவின் கணவர் மீது கொலை முயற்சி தர்ஷன் | கொலைமுயற்சி | பூஜா | அரசியல் இலங்கையின் இளம் அரசியல்வாதியும் பிரபல வழக்குரைஞரும் வரும் மாகாண சபை தேர்தல் ஐ .தே.கவின் ...2 மறுமொழிகள்
Advt. TALLY.ERP 9- DEMO ILA | Advt 0 மறுமொழிகள்
பரந்த மனம் வேண்டும் !!! RAMYA | சிந்திக்க நான் கேள்விப் பட்ட ஒரு சிறு கதை!! ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக ...20 மறுமொழிகள்
இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா? அறிவே தெய்வம் | வலது | உள்குத்து | இடது இன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது. இனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி ...2 மறுமொழிகள்
கதம்பம் நாகை சிவா | கிரிக்கெட் | ICC | Genocide இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் ...13 மறுமொழிகள்
"Armsdog Millionaire": ஆயுத வியாபாரிகளின் விளம்பரப் படம் கலையரசன் | விளம்பரப் படம் | ஆயுத வியாபாரிகள் பாலஸ்தீனிய மக்கள் மீது பரிசோதித்த ஏவுகணைகளை, இந்திய சந்தையில் விற்பதற்காக, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான Rafael Advanced Defense Systems ...0 மறுமொழிகள்
தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை சில மகா மொக்கைகள்.... coolzkarthi | கார்த்தி | மொக்க இதை படியுங்கள்,நீங்களும் மண்டை காயுங்கள்... -------- What happens to Arctic ocean when an ant fells into it? ...5 மறுமொழிகள்
குளத்துப்பறவைகள் வே.நடனசபாபதி | கதம்பம் பணி மூப்பு எனபது பணியில் உள்ள அனைவருக்கும் வருவதே. ஆனால் சிலர் பணி மூப்பு காலம் நெருங்கும்போது ஒருவித சோகத்தோடு இருப்பார்கள். எனது Boss சொல்லுவார் 'நாம் ...0 மறுமொழிகள்
கொடுக்கப்பட்ட இயல் எண்ணுக்கு எத்தனை காரணிகள் உள்ளன? பாஸ்கர் | கணிதம் கொடுக்கப்பட்ட ஒரு இயல் எண்ணுக்கு எத்தனை காரணிகள் உள்ளன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?முந்தய பதிவில் பார்த்தது போல், எந்த ஒரு இயல் எண்ணையும் பகா எண்களின் பெருக்குத் ...2 மறுமொழிகள்
சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல் மாதவராஜ் | சிந்தனைகள் | அனுபவம் | சமூகம் 2006 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் ஜான் ஆபிரஹாம் நினைவு ஆவணப்பட, குறும்பட தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் ...4 மறுமொழிகள்
வயதாகி வந்த காமம் நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள் பிரேம்ஜி | தொழில்நுட்பம் | அறிவியல் | நிகழ்வுகள் ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல ...0 மறுமொழிகள்


Switch to
short version | classic

ஈழம்
தமிழினத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்று




நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி

மறுமொழிகள் 1-40 40+ அனைத்தும்
தேர்தல் 2009 கூட்டணி காமெடி (9)

ம சோம்பேறி


பூநூலே மாட்டிக்குவான் போல!!! (6)

ம வருண்


நண்பர்களின் ஞாபகம்- நிறைவுப் பகுதி (14)

ம புதுகைத் தென்றல்


நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (13)

ம அய்யனார்


உருகியதே எனதுள்ளம் (4)

ம கலை - இராகலை


நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள் (14)

ம பிரேம்ஜி


பாகம் 2 : குடுகுடுப்பை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன ... (21)

ம குடுகுடுப்பை


மொத்தத்தில் நீ அழகு ! (14)

ம கவிதா | Kavitha


300. கடவுள் என்றொரு மாயை ... 2 (6)

ம தருமி


ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!! (39)

ம ச்சின்னப் பையன்


துணுக்ஸ் - 2009/03/25 (27)

ம வெண்பூ


கமிஷன் மண்டி சுப்பையா (17)

ம Sridhar Narayanan


வ.வெ.தொ.அ.வெ.கு 5.கண்ணாமூச்சிக்காரியும் ஆம்பள ஜெமோவும் (17)

ம அய்யனார்


கதம்பம் (13)

ம நாகை சிவா


தொலையத் தயாராகும் கனவுகள் (5)

ம செல்வநாயகி


இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா? (2)

ம அறிவே தெய்வம்


THE COMPANY- இதுல உங்களின் பங்கும் இருக்கிறது! (7)

ம ♗யெஸ்.பாலபாரதி ♗


பூஜாவின் கணவர் மீது கொலை முயற்சி (2)

ம தர்ஷன்


திமுக கூட்டணியே வெல்லும்-ஜோதிடர்கள் கணிப்பு (6)

ம ♠புதுவை சிவா♠


காசு கொடுப்ப‌தாக இருந்தால் முத‌ல்லேயே சொல்ல‌க்கூடாதா?...சார்! (27)

ம ராம்.CM


ஆத்தா எனக்கு அவார்டு கெடைச்சிடிச்சி. (22)

ம Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ


நீரின்றி அமையாது உலகு.. (21)

ம ஆதிமூலகிருஷ்ணன்


இளமை விகடனில் என் பதிவு ??!! (26)

ம Subankan


வயதாகி வந்த காமம் (24)

ம மாதவராஜ்


இந்தா பிடி $300! ஒழிந்து போ!! (28)

ம பழமைபேசி


பரந்த மனம் வேண்டும் !!! (20)

ம RAMYA


IPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு (28)

ம பரிசல்காரன்


திகில் கூட்டும் இரவுகள் (8)

ம Maximum India

அனைத்து மறுமொழிகளும் பதிவர்கள் ஜாக்கிரதை..! மீண்டும் வந்துவிட்டார்கள் போலிகள்..! (63)

உண்மைத் தமிழன்(15270788164745573644)


உண்மையான மொக்கை கவுஜ! (54)

வால்பையன்


தங்கச்சிக்கு கண்ணாலம்.. (64)

கார்க்கி


முதல்தாரம், ரெண்டாந்தாரம் ஆன கதை! (41)

பழமைபேசி


ரயிலில் மஞ்சள் அழகியுடன் (86)

நசரேயன்


இந்துவை வாங்காதீர்கள் (47)

இராம.கி


இனிதே நடந்த பதிவர் சந்திப்பும்.. சில சந்தோஷங்களும்...!!! (91)

கார்த்திகைப் பாண்டியன்


மேன்சன் ஹவுஸ்... (50)

narsim


சிசெல்ஸ் - புகைப்படங்கள் (41)

நாகை சிவா


நட்பு வாரம், ஜென் கவிதைகள் மற்றும் ரசித்துப் படித்த பதிவு... (57)

வேத்தியன்


சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ?? (81)

அ.மு.செய்யது


தம்பியின் டைரிக் குறிப்புகள் (57)

எம்.எம்.அப்துல்லா


நான் எந்திரன் … (286)

நட்புடன் ஜமால்


பழைய புத்தகம் (46)

ஆதவா


The Shawshank Redemption (1994) (42)

ஹாலிவுட் பாலா


BoЯat (2006) (42)

ஹாலிவுட் பாலா


குறுஞ்செய்தி கலாட்டா-3 (718)

Poornima Saravana kumar


பெ’ண்’களூர் (42)

Cable Sankar


ரம்யாவின் சோகம் - PART - II !! (153)

RAMYA


THE BLOGGER! (61)

thevanmayam


முரண்பாடு (260)

Rajeswari


யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.! (55)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்


இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு (453)

இராகவன் நைஜிரியா


கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு இன்னும் சில!!! (127)

RAMYA


கஜல் கவிதை (42)

குடந்தைஅன்புமணி


நாகரிக கோமாளி சாரு (48)

Bleachingpowder


மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!! (121)

ஷைலஜா


காதலர் தினத்தில் வானத்தில் பறந்தோம்.(பயணம்: பகுதி 1) (62)

துளசி கோபால்

அனைத்து மறுமொழிகளும் தேர்தல் 2009 கூட்டணி காமெடி (9)

சோம்பேறி


பூநூலே மாட்டிக்குவான் போல!!! (6)

வருண்


நண்பர்களின் ஞாபகம்- நிறைவுப் பகுதி (14)

புதுகைத் தென்றல்


நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (13)

அய்யனார்


உருகியதே எனதுள்ளம் (4)

கலை - இராகலை


நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள் (14)

பிரேம்ஜி


பாகம் 2 : குடுகுடுப்பை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன ... (21)

குடுகுடுப்பை


பதிவர்கள் ஜாக்கிரதை..! மீண்டும் வந்துவிட்டார்கள் போலிகள்..! (63)

உண்மைத் தமிழன்(15270788164745573644)


மொத்தத்தில் நீ அழகு ! (14)

கவிதா | Kavitha


300. கடவுள் என்றொரு மாயை ... 2 (6)

தருமி


ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!! (39)

ச்சின்னப் பையன்


துணுக்ஸ் - 2009/03/25 (27)

வெண்பூ


கமிஷன் மண்டி சுப்பையா (17)

Sridhar Narayanan


வ.வெ.தொ.அ.வெ.கு 5.கண்ணாமூச்சிக்காரியும் ஆம்பள ஜெமோவும் (17)

அய்யனார்


கதம்பம் (13)

நாகை சிவா


தொலையத் தயாராகும் கனவுகள் (5)

செல்வநாயகி


இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா? (2)

அறிவே தெய்வம்


THE COMPANY- இதுல உங்களின் பங்கும் இருக்கிறது! (7)

♗யெஸ்.பாலபாரதி ♗


பூஜாவின் கணவர் மீது கொலை முயற்சி (2)

தர்ஷன்


திமுக கூட்டணியே வெல்லும்-ஜோதிடர்கள் கணிப்பு (6)

♠புதுவை சிவா♠


காசு கொடுப்ப‌தாக இருந்தால் முத‌ல்லேயே சொல்ல‌க்கூடாதா?...சார்! (27)

ராம்.CM


ஆத்தா எனக்கு அவார்டு கெடைச்சிடிச்சி. (22)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ


நீரின்றி அமையாது உலகு.. (21)

ஆதிமூலகிருஷ்ணன்


இளமை விகடனில் என் பதிவு ??!! (26)

Subankan


வயதாகி வந்த காமம் (24)

மாதவராஜ்


உண்மையான மொக்கை கவுஜ! (54)

வால்பையன்


இந்தா பிடி $300! ஒழிந்து போ!! (28)

பழமைபேசி


பரந்த மனம் வேண்டும் !!! (20)

RAMYA

அனைத்து மறுமொழிகளும் பதிவர் நூல்கள்

தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 4657
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 250
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 2279
உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க

மறுமொழியாளர்கள்Bleachingpowder RAMYA Ravee (இரவீ ) அ.மு.செய்யது அப்பாவி முரு ஆ.முத்துராமலிங்கம் இராகவன் நைஜிரியா கணினி தேசம் கார்த்திகைப் பாண்டியன் குடந்தைஅன்புமணி கே.ரவிஷங்கர் துளசி கோபால் நட்புடன் ஜமால் நான் ஆதவன் புல்லட் பாண்டி மாதவராஜ் முரளிகண்ணன் ரங்கன் லோகு வால்பையன்
மேலும் மறுமொழியாளர்கள்
'ம' திரட்டி

குறிச்சொற்கள் Tamil Uncategorized frontpage அனுபவம் அமெரிக்கா அரசியல் இந்தியா இலக்கியம் இலங்கை ஈழம் கட்டுரை கட்டுரைகள் கதை கவிதை கவிதைகள் காதல் கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை தமிழீழம் தமிழ் திரைப்படம் தேர்தல் தேர்தல் 2009 தொழில்நுட்பம் நகைச்சுவை நிகழ்வுகள் நையாண்டி பதிவர் வட்டம் பார்ப்பனியம் பெரியார் பொது மொக்கை விமர்சனம் நகைச்சுவை மொக்கை | நையாண்டி

தேர்தல் 2009 கூட்டணி காமெடி
சோம்பேறி
போட்டுக் குடு...
Sriram
குறுஞ்செய்தி கலாட்டா-3
Poornima Saravana kumar
துணுக்ஸ் - 2009/03/25
வெண்பூ
அரசியல் அரசியல் | சமூகம்

காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் போடலாம்?
Maximum India
விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார் கலைஞர் - ராமதாஸ் குற்றச்சாட்டு
♠புதுவை சிவா♠
பூஜாவின் கணவர் மீது கொலை முயற்சி
தர்ஷன்
இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?
அறிவே தெய்வம்
அனுபவம் அனுபவம் | நிகழ்வுகள்

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008
ஜீவரத்தினம் தங்கராசா
சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்
மாதவராஜ்
நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்
பிரேம்ஜி
இட்லி
மிஸஸ்.டவுட்
புனைவுகள் கவிதை | சிறுகதை

அப்பாஸ் அவர்களின் கவிதை.
ச.முத்துவேல்
பதிவர்களே “ஹைக்கூ” எழுதலாம்
கே.ரவிஷங்கர்
உன் நினைவில் . . .
ரோஜா காதலன்
மூன்று கவிதைகள் - நன்றி youthful vikatan
தங்கராசா ஜீவராஜ்
சினிமா திரைப்படம் | விமர்சனம்

கதம்பம்
நாகை சிவா
சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்
மாதவராஜ்
தமிழ்சினிமாவில் மேற்கு மாவட்டங்களின் சித்தரிப்பு
முரளிகண்ணன்
Winged Creatures (2008): சிறகுடைக்கப் பட்ட மனிதர்கள்
bmmaran
சமையல் சமையல் குறிப்பு | சமையல்

நண்டு நறு நறுக்க..
♥ தூயா ♥ Thooya ♥
நண்டு வறை
நங்கூரம்
என்னுடைய முதல் கேக்
♥ தூயா ♥ Thooya ♥
நிராகரிக்கப் பட்ட என் படைப்பு
சோம்பேறி

அனைத்து குறிச்சொற்களையும் பார்க்க...
துறை சார்ந்த பதிவுகள்மார்ச் 25, 2009

panguvaniham


மார்ச் 24, 2009

panguvaniham


மார்ச் 26, 2009

panguvaniham


மார்ச் 20, 2009

panguvaniham


தமிழில் பிஹெச்பி பழக ஒரு தளம்

செந்தழல் ரவி


அனைத்து இடுகைகளும்
தமிழ்நிழல்
மேலும் படங்களுக்கு - தமிழ்நிழல்
தமிழ்மணம் படத்திரட்டி இன்றைய பதிவர்கள் Manivannan Mayooresan Nankooram SUREஷ் Suresh T.V.Radhakrishnan dondu(#11168674346665545885) envazhi panguvaniham tamilnenjam வே.மதிமாறனà¯� அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) ஆ! இதழ்கள் இந்நேரம் இராவணன் தேசம் கணேஷ் கலை - இராகலை கார்த்திகேயன் குடுகுடுப்பை கே.பாலமுருகன் கைப்புள்ள சீரா சுகா டிசே த‌மிழ‌ன் தமிழன்-கறுப்பி... தமிழ்நெஞ்சம் தேவ் | Dev நான் ஆதவன் பரக்கத் அலி பழூர் கார்த்தி பொன்னிலா லோகு வடகரை வேலன் ♗யெஸ்.பாலபாரதி ♗ இன்றைய அனைத்து பதிவர்களும்
Terms of use | Privacy Policy | Contact us
Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of TamilManam.NET. If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, alert us by clicking on the alert icon near each post or send an email to admin@thamizmanam.com

ஜெய் நித்யானந்தம் said...

உங்களை விட நீளமாக பதிவெழுத தமிழ்மணத்தால் மட்டும்தான் முடிகிறது.

ஜெய் நித்யானந்தம் said...

111 வரை வந்து விட்டேன் , 200 வரை போக ஆசைதான் கையில் காசில்லை பிரவுசிங் சென்டர் மூடும் நேரம். நாளை சந்திப்போமா?

Anonymous said...

டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசுபெரிசா நீள நீளமா எழுதுற.ஏண்டா உணக்கு வேற வேலயே இல்லயாடா? நைட்டெல்லாம் உக்காந்து எழுதுவியாடா? ஏன்டா பதில் எழுதும் போது கூட இவ்வளவு நீளமா எழுதுற‌ அட மாணங்கெட்டவனே? ஏன்டா என் பதிவ நீக்குற.தைரியமிருந்தா பதில் சொல்லுடா.இப்படி ஓடி ஒளிய்யாத.
//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.//
நீ உயிரோட இருந்து இப்படி மொக்க பதிவுகளப் போட்டு எங்கள கொல்லுறதுக்கு பதில் நீ தூக்குல தொங்கலாம்.அதையும் போட்டா எடுத்து உன் பதிவில போடு தேய்ந்து போன ரம்பமே!

Tech Shankar said...

இது வேறயா..

benza said...

[[[ மாயவரத்தான் ஸார்..
லின்க்-ல் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. படிக்கப் பொறுமை வேண்டும். மெதுவாகப் படிக்கிறேன்..
தகவலுக்கு நன்றி ]]]

அங்கு நானும் போனேன் --- நிறைய தகவல் இருகின்றன ---
மாதமொருமுறை வெளிவரும் நியூஸ் லெற்ரர் இலவசமாக
பெறக்கூடிய வசதியும் உள்ளது --- சேர்ந்தேன் --- எனக்கு கூர் குறிப்பாக படிக்க நேரம் உள்ளது --- கோடிட்டு காட்டினால் அவற்றை படித்து சாராம்சம் தருவேனே ---
எனக்கும் அறிவு வளரும் --- நான் எதிலுமே எக்ஸ்பெர்ட் இல்லை --- முயற்சி செய்து பார்ப்போமா !
அங்கு போய் உங்களுக்கு பிரயோசனமான கட்டுரையை
தொட்டு காண்பியுங்கள் --- ஒரு ட்ரை ஒன்று போடுவோமே !!

Unknown said...

டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசுபெரிசா நீள நீளமா எழுதுற.ஏண்டா உணக்கு வேற வேலயே இல்லயாடா? நைட்டெல்லாம் உக்காந்து எழுதுவியாடா? ஏன்டா பதில் எழுதும் போது கூட இவ்வளவு நீளமா எழுதுற‌ அட மாணங்கெட்டவனே? ஏன்டா என் பதிவ நீக்குற.தைரியமிருந்தா பதில் சொல்லுடா.இப்படி ஓடி ஒளிய்யாத.
//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.//
நீ உயிரோட இருந்து இப்படி மொக்க பதிவுகளப் போட்டு எங்கள கொல்லுறதுக்கு பதில் நீ தூக்குல தொங்கலாம்.அதையும் போட்டா எடுத்து உன் பதிவில போடு தேய்ந்து போன ரம்பமே!

benza said...

[[[ Blogger Ganesh said...
ஏன் என் பின்னூட்டம் இத்தனை முறை ரிலீஸ் ஆகியிருக்கிறது. உங்கள் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதா?
Wednesday, March 25, 2009 9:10:00 PM ]]]

அதென்ன அண்ணே ''ஹேக்'' என்கிறாரு கணேஷ் அண்ணா ?

benza said...

[[[ Blogger Ra said...
டேய் எப்புடிடா இவ்ளொ பெரிசுபெரிசா நீள நீளமா எழுதுற ]]]

இந்த Ra எப்படி சார் அந்த சேலம் சிவகிரி மாதிரியே எழுதுறார் ?
ஒழுங்கான குடும்பத்து மனிசர் மாதிரி தெரியலையே ?
இவங்களுக்கு பிறந்த நிமிசமே ''ரோசம்'' நரம்பை அவுக அம்மா புடுங்கி எறிஞ்சிட்டாங்க

தமிழர் நேசன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

நன்று!!

ரவி said...

கமெண்டு போட ஒரு மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.

அதனால் எளிதாக பிடித்துவிடலாம். என்ன ஒன்று பழைய வரலாறு தெரியாத ஆள் என்று நினைக்கிறேன்.

ஆனானப்பட்ட போலியாரையே காட்டிக்கொடுத்த கூகிள் வரலாற்றை கொஞ்சம் எழுதவும்...

படித்து அடங்கட்டும்...

அப்பாவி தமிழன் said...

என்ன அண்ணா இப்டிஎல்லாமா நடக்குது , நான் பதிவு எழுத வந்து ௨ மாசம் ஆகுது , அதுக்குள்ள ஆரம்பிசிடான்களா ?...அது சரி உங்க தொலைபேசி இலக்கம் அவங்களுக்கு எப்டி கெடச்சிது , கொஞ்சம் பொறுங்க நான் சாப்ட்வேர் தரேன் அது மூலமா எங்க இருந்து பின்னூட்டம் போடறாங்கன்னு கண்டு பிடிச்சிடலாம்

abeer ahmed said...

See who owns datasheets.org.uk or any other website:
http://whois.domaintasks.com/datasheets.org.uk