அலட்டல் பேட்டியால் மிஷ்கின் அவஸ்தை..!

11-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த மேட்டர் எப்படியென் கண்ணுக்குப் படாமல் போனது என்று தெரியவில்லை. ஜஸ்ட் மிஸ்ஸிங்..

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய சலசலப்பு, இயக்குநரான மிஷ்கின் சென்ற வார ஆனந்த விகடன் இதழில் உதவி இயக்குநர்களைப் பற்றிக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் அவர்களை மனவருத்தமடைய செய்துவிட்டது.


அந்தப் பேட்டியில் மிஷ்கின் சொல்லியிருப்பது இதுதான்..

“தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதறவங்க குறைஞ்சுட்டாங்களே..?” என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருக்கிறார் மிஷ்கின் :

“அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன்.

அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்காம படைப்பாளி ஆக முடியாது. சினிமா எடுக்கணும்னு சென்னைக்கு வர்ற சராசரி 21 வயது இந்திய இளைஞனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? வீட்டுக்கு பக்கத்தில் யாராச்சும் ஓடிப் போயிருப்பாங்க. அப்பா அம்மாவை போட்டு அடிச்சிருப்பாரு. இரண்டு கொலை தற்கொலை பார்த்திருப்பாங்க. ஒரு காதல் பண்ணியிருப்பான். ஆயிரம் தடவை சுய இன்பம் அனுபவிச்சிருப்பான். இதை தாண்டி என்ன வாழ்க்கை அனுபவம் இருக்கும்..? ஒரு சினிமா கோடிப் பேர் அண்ணாந்து பார்க்கும் விஷயம். நீங்க எல்லோரையும் பாதிக்கணும். அப்போ எவ்வளவு அனுபவம் வேணும். அதற்குப் புத்தகம் படிக்கணும். கத்துகிற ஆர்வம் இல்லாததால்தான் டிவிடி  பார்த்து சினிமா எடுக்க வேண்டியிருக்கு. சினிமான்னு இல்லை. தன்னைப் புதுப்பிக்காத கற்றுக் கொள்ளாத எந்தத் துறையும் விளங்காது.”

இதை படித்துவிட்டுதான் பெரும் கோபத்தில் கொந்தளித்துவிட்டார்கள் உதவி இயக்குநர்கள்.

இரண்டு, மூன்று நாட்களாக தங்களுக்குள்ளேயே கூடிப் பேசிக் கொண்டிருந்த உதவி இயக்குநர்கள் 70 பேர் கொண்ட குழுவாக உருமாறி நேற்று மாலை வடபழனி, குமரன் காலனியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு மிஷ்கின் தங்களை அவமரியாதை செய்து பேட்டியளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனுவைக் கொடுத்து அங்கேயே அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுவிட்டார்கள்.

இந்தப் பேட்டியை முன்பே படித்திருந்த இயக்குநர் சங்கத்தின் முக்கியஸ்தர்களெல்லாம் ஏற்கெனவே மிஷ்கின் மீது காண்டுவில்தான் இருந்தார்கள். சமீபத்தில் நடந்த இயக்குநர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவுக்குக்கூட மிஷ்கின் தனது சார்பாக ஒரு சின்ன பங்களிப்பைக்கூட வழங்க முன் வராத கோபமும் அவர்களுக்கு இருந்தது.

நேற்றைய போராட்டத்திற்கு முன்பாகவே இயக்குநர்களின் கோபத்தையும், மற்றும் உதவி இயக்குநர்களின் ஆவேசத்தையும் கேள்விப்பட்ட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி மிஷ்கினிடம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தாராம்.

சங்க செயற்குழுவில் இது பற்றி பேசப்படும் கட்டாயம் இருப்பதாகச் சொன்னதால். வேறு வழியில்லாமல் மிஷ்கின் ஒரு மன்னிப்பு கடிதத்தை இயக்குநர்கள் சங்கத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள் மறுபடியும் மிஷ்கின் சொல்லியிருப்பதை பிரதிபலிப்பதைப் போல் இருந்ததால் இதனை ஏற்க மறுத்த, உதவி இயக்குநர்கள் “மிஷ்கின் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளக்கமளிக்க வேண்டும்” என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார்கள். “மிஷ்கின் மூணாறில் இருக்கிறார். வந்தவுடன் பேசுவோம்” என்றெல்லாம் ஒரு வழியாகச் சொல்லி தற்போதைக்கு இந்தப் பிரச்சினைக்கு ஒரு புள்ளிஸ்டாப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் மிஷ்கினை சங்கத்திற்கு இழுத்து மன்னிப்பு கேட்க வைக்காமல் விடப் போவதில்லை என்று உதவி இயக்குநர்களில் ஒரு சாரார் முனைப்புடனேயே உள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் இனிய நண்பர் பாலமுரளிவர்மன் தனது பேஸ்புக் பக்கத்தில் மிக அருமையாக மிஷ்கினுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அது உங்களுக்காக இங்கே :

மிஷ்கின் எனப்படும் மனநோயாளிக்கு...- பாலமுரளிவர்மன்.

“இந்த உலகின் மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது எதுவென்றால், முட்டாள்கள் அதீத தன்னம்பிக்கையோடும் அறிவாளிகள் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்.”-ஷேக்ஸ்பியர்.

இதே சிக்கல் திரையுலகிலும் நீடிக்கிறது. தமிழ்த் திரையுலகில் ஒருவன் வெற்றியாளனாக உருவாகும் முன் சந்திக்கின்ற எண்ணற்ற போராட்டங்களுக்குள் முதன்மையானது, புத்திசாலிகளுக்கும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.

உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன? இந்த சமூகத்தில் எதை மாற்றியமைத்துவிட்டார்? மாபெரும் படைப்பாளியான ரித்விக் கடாக் ஒரு முறை சொன்னார். “மக்கள்தாம் எப்போதுமே மகத்தானவர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள்தாம் தங்களை தாங்களே மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நான் எதையும் மாற்றியமைப்பதில்லை.”
 
இதுதான் தன்னுடைய கலையையும், மக்களையும் மதித்து நேசிக்கும் உயரிய கலைஞனின் பண்பு. மகத்துவமிக்க படைப்புகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றன. வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு எதை உன்னதமாக படைத்துவிட முடியும். இத்தகைய உயர்வான குணங்களை மனநோயாளியான உன்னிடம் எதிர்பார்க்கக் கூடாது என்பது எமக்குப் புரிகிறது. ஆனால் திரைப்பட இயக்குனர் என்பவன் இந்திய நாட்டின் பிரதமர் அல்ல என்கிற எதார்த்தத்தை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

உன்னைப் போன்றவர்களும் உண்டுக் கொழுப்பதற்காக தன் உயிர் உருக்கி, உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை விவசாயியைவிட நீ ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதை தினமும் கொழுத்த வாயை திறப்பதற்கு முன் நீ எண்ணிப் பார்க்க வேண்டும்.

அத்தகைய உயர்வான விவசாய குடும்பங்களிலிருந்தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் உருவாகி தங்களது வாழ்க்கையை படைப்பாக்க வேண்டுமென்கிற லட்சிய வேட்கையுடன் உதவி இயக்குனர்களாக வந்திருக்கிற எளிய குடும்பத்து இளைஞர்களை நீ இழிவான குடிபிறப்பிலிருந்து வந்தவன் என்பதற்காக உனக்கு சமமாக கருதி இளக்காரமாக பேசுவதை எங்களால் அனுமதிக்க முடியாது.

நீ நிமாய்கோஷ் போலவோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், அவள் அப்படித்தான் ருத்ரய்யா மாதிரியோ தமிழ்த் திரைப்படத்திற்கான புதிய பரிணாமத்தை கொடுத்தவனா? அல்லது பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் பாலா போல திரைப்படத்தின் போக்கை திசை திருப்பிவிட்டவனா? புடோவ்கின், ஐசன்ஸ்டீன் போல திரைப்படத்திற்கென கோட்பாடுகளை உருவாக்கி தந்தவனா? உனக்கேன் இவ்வளவு நீளமான நாக்கு?

பெண் சுகத்துக்காகவும், பெட்டி நிறைய பணம் சம்பாதிக்கவும் உன்னைப் போன்றவர்கள் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் போன்றவர்கள் சமூக மாற்றத்திற்கான களமாக திரைப்படத்தை கையில் எடுத்திருக்கிறோம். எனக்கு சினிமா ஒரு ஆயுதம். நான் திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் ஆயுதம் தூக்கியிருப்பேன். அடக்கி ஒடுக்கப்படும் எம்மக்களுக்கான கருவியாக சினிமாவை கருதும் என் போன்ற இளைஞர்களும் இருபத்தியொரு வயதுள்ள எல்லா சராசரி இந்திய இளைஞர்களும் நீ சொன்ன இலக்கணத்திற்கு பொருந்த மாட்டார்கள்.

என்னை உனக்கு தெரியுமா? எங்களோடு கைகோர்த்து களமாடுகிற தம்பிகளை நீ அறிவாயா? உன்னைப் போல சுயநலமாக ஒரு நாளும் நாங்கள் இருந்ததில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக எந்த நிலையிலும் தெருவில் இறங்கி போராடுகிறோம். நீ என்றைக்காவது முன் வந்திருக்கிறாயா? உன் தலைக்கொழுப்பு உன்னை தரையில் இறங்க அனுமதித்திருக்கிறதா?

இயக்குனர் சங்கத்தின் 40-வது ஆண்டுவிழா நடந்தபோதே இறுமாப்புடன் விலகி இருந்தவன்தானே நீ! உன்னைப் பற்றிய உனது மதிப்பீடுதான் எவ்வளவு மடத்தனமானது? இரண்டு லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறாயே அந்த புத்தகங்கள் உனக்கு கற்றுக் கொடுத்தது என்ன?

படிப்பு மனிதனை பண்படுத்ததானே செய்யும். தன் அகங்காரத்தை ஒடுக்கி உனக்குள் உன்னை தேடச் செய்யவில்லையெனில் நீ ஏதோ தவறான புத்தகங்களை படிக்கிறாய் என்பது புரிகிறது. அதிகம் படிக்க படிக்க மனம் விழிப்பு கொள்ளும். வாய் தானாக மூடிக் கொள்ளும் ஆனால் நீ ஒவ்வொரு முறையும் திருவாய் திறப்பதில் ஒன்று புரிகிறது. வாங்கிய புத்தகங்களை நீ படிப்பதே இல்லை. மேசை மீது பரப்பி வைத்துக் கொண்டு வருகிறவர்களிடம் எல்லாம் நடைபாதை வியாபாரி போல விரித்துக் காட்டுவதிலேயே நிறைவு பெற்று விடுகிறாய்.

இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத் தவிர வேறென்ன செய்து விட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கை தேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்?

உனக்கு நினைவிருக்கிறதா? நாங்கள் ஐந்துபேர் உன்னை ஒரு நாள் சந்தித்தோம். இயக்குனர் திரு.சேரன் குறித்து எவ்வளவு கேவலமான தொனியோடு நீ பேசினாய் ? “சேரனுக்கே ஒண்ணும் தெரியலங்க . யுத்தம் செய் ஷூட்டிங்ல மொத அஞ்சுநாள் ரொம்ப தடுமாறி போயிட்டாரு, எதுவுமே அவருக்கு புரியல, எம் பேட்டனையே அவரால புரிஞ்சுக்க முடியல. என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரேனு நெனச்சேன், அப்பறந்தான் கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு செட்டானாரு”

சொன்னியா இல்லியா...? நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த் திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப்பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப் பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம்.

இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப் போவதை சொன்ன நீ, “அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க” என்றாய். “எத வெச்சு சொல்றீங்க?” நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு “எனக்கு தெரியும்” என்றாய்.

இங்கிருக்கிறவர்களுக்கே வாழ்க்கை அனுபவம் இல்லை எனும்போது, இவர்களே மனிதர்களை படிக்காதவர்களாக உன் பார்வைக்கு படும்போது, அமெரிக்காவில் இருப்பவனுக்கு மட்டும் என்ன அனுபவ அறிவு  இருந்துவிட முடியும் ?

யாராவது ஒரு உதவி இயக்குனர் தனியாகச் சிக்கிவிட்டால், மேதாவித்தனத்தை காட்டுவதுதான் ஒரு இயக்குனருக்கு பெருமையா?
“தம் அடிப்பியா? சரக்கடிப்பியா? இதெல்லாங்கூட செய்யாம நீ என்னடா அஸிஸ்டென்ட் டைரக்டர்? எதுக்கு சினிமாவுக்கு வந்த?” என்று கலங்கடித்திருக்கிறாயே..? உன்னளவில் வாழ்க்கை அனுபவம் என்பது குடிப்பதும் புகைப்பதும்தானா?

நீ முதலில் ஒன்றை புரிந்து கொள். பாட்டும் இசையும், கூத்தும் கலையும் எம் தமிழர் மரபில் உயிரோடு கலந்தவை. எங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஆதார காரணிகளாக இருப்பதும் கலைகள்தான். உதவி இயக்குனர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் அவனது வாழ்க்கை அனுபவச் செறிவோடுதான் நிறைவடைகிறது. எல்லோரிடமும் ஓராயிரம் கதைகள் நிறைந்து கிடக்கின்றன. சொல்லவும், எழுதவும், திரைப்படமாக உருமாற்றுவதற்குமான வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

நீ என்னோடு புறப்பட்டு வர முடியுமானால் சொல். தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர்களுக்கும் செல்வோம். எங்கள் மனிதர்களை பார். எம்மக்களின் வாஞ்சை மிகுந்த நேசத்தை உணர். இவர்களை பற்றியா இந்த வெள்ளந்தியான மனிதர்களின் குடும்பப் பின்னணி பற்றியா கொச்சைப்படுத்தினோமென்று குறுகிப் போவாய்- நீ மனிதனுக்குப் பிறந்திருந்தால்!.

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை.

இங்கே பிழைக்க வருபவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. மாறாக எங்களை எதிரியாக கருதுகிற எவனுக்கும் இங்கு இடம் தர முடியாது. இனியும் உன் தடித்த நாக்கும் எங்களுக்கு எதிராக நீளுமானால் நீ தமிழ்நாட்டிலிருந்து இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள்.

முந்தைய தலைமுறை போல இன்றைய இளம் தலைமுறை பெருந்தன்மை என்ற பெயரில் உறங்கிக் கிடக்காது என்பதை சூடு சொரணை உள்ள தமிழனாகவும், உருப்படியான உதவி இயக்குனராகவும் உனக்கு சொல்லிக் கொள்கிறேன். அரையிருட்டு அறைக்குள்ளும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளும் உனக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.

கண்களை விரி ! காதுகள் திற ! வாயை மூடு !
 
நன்றி பாலமுரளிவர்மன்..!

'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களுக்குப் பின்புகூட கொஞ்சம் தன்மையுடன் பேசி வந்த மிஷ்கின், 'நந்தலாலா' படத்திற்குப் பின்புதான் இப்படி தடாலடியாகப் பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.

புத்தகம் படி என்பது நல்ல அட்வைஸ்தான். ஆனால் முழுக்க, முழுக்க புத்தகமே திரையுலகத்திற்கு வழிகாட்டியாக இருந்துவிடாது. அவரவர்க்குள்ளும் ஒரு மேக்கிங் திறமை இருந்தாக வேண்டும்..! மிஷ்கினுக்கு அதுவும் இருக்கிறது.. படிப்புத் திறனும் இருக்கிறது.. தன்னைப் போலவே அத்தனை பேரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்ல விஷயந்தான் என்றாலும் அதனை தன்மையாகச் சொல்ல வேண்டும்.

வடிவேலு என்னும் மனிதன் எத்தனையோ தமிழர்களையும், தமிழ் தெரிந்த மக்களையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்தபடியேதான் உள்ளார். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை வைத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்..? இல்லையே.. இங்கே அவருக்கு கிடைத்திருப்பது நடிப்பு அனுபவமும், கதை சொல்லியின் திறமையும்தான். அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி வருகிறார்.

இப்போது இருக்கின்ற உதவி இயக்குநர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல இருக்கும் அவரது பேட்டி நகைச்சுவையானது. தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு என்ன தேவையோ அது 80 சதவிகித உதவி இயக்குநர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. மிச்சமிருக்கும் 20 சதவிகித இயக்குநர்களுக்கு தமிழையும் தாண்டி அனைத்து மொழிகளிலும் மக்களை ரசிக்க வைக்கும் திறமையும் இருக்கிறது. இதில் மிஷ்கினும் ஒருவர்.

கதையாடலுக்காக புத்தகங்கள் மிக அவசியம். ஆனால் திரைக்கதையாடலுக்கு புத்தகங்கள் தேவையில்லை. வெற்றி பெற்ற, புகழ் பெற்ற, காவியப் படங்களின் திரைக்கதைகள்தான் அதற்குத் தேவை. ஒரு வெற்றி பெற்ற படத்தின் கதை என்பது இரண்டு வரிதான். ஆனால் அதனை விரிவாக்கம் செய்து கொண்டு செல்லும் சினிமா மொழியான திரைக்கதையை எந்தப் புத்தகத்திலும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது.

சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலையில் 21 வயதிலேயே  நுழைந்துவிட வேண்டும். கிளாப் அடிப்பவனாக, கன்ட்டினியூட்டி எழுதுபவனாக.. பிராப்பர்ட்டீஸ் பார்ப்பவராக, சீன்களை பிரிக்கும் திறன் படைத்தவராக, ஷூட்டிங் ஷெட்யூஸ் போடுபவராக, பிராம்ட் இயக்குநராக, இணை இயக்குநராக.. இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக அவன் அடியெடுத்து வைப்பதற்கு வயதும், அனுபவம் ஒருசேர கிடைத்தால் நிச்சயம் அவன் சிறப்பான இயக்குநராக வர முடியும்.

இதனால்தான் இந்த வயதிலேயே மிக அதிகம் பேர் இணைந்துவிடுகிறார்கள். ஒரு டிகிரியை முடித்துவிட்டு வருபவர்களும், பிளஸ்டூவை மட்டும் முடித்துவிட்டு நேராக வருபவர்களும் உண்டு. அத்தனை பேருமா இயக்குநர்களாக முடியும்..? அவர்களுக்கே தெரியும்.. அது முடியாது என்று..! அவர்களிடத்தில் அந்தத் திறமை இல்லையெனில் மேற்கொண்டு ஒரு ஸ்டெப்பும் வைக்க முடியாது. இதுவும் அவர்களுக்கே தெரியும்.

மூத்த உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், போன்ற மிகப் பெரிய அனுபவசாலிகளை வைத்துத்தான் பெரிய இயக்குநர்களே இப்போது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் 24 அல்லது 25 வயதில் சினிமாவுலகத்திற்குள் வந்தவர்கள்தான்..! புத்தக அறிவோடு, அவர்களுடைய பீல்டு அனுபவமும்தான் அவர்களுக்கு இப்போது சோறு போடுகிறது.

21 வயதில் வராதே என்றால் வேறு எந்த வயதில் உதவி இயக்குநராகப் பணிக்கு வருவது? 30 வயதில் பீல்டுக்குள் வரும் ஒரு உதவி இயக்குநர், 25 வயது இணை இயக்குநருக்குக் கீழ் வேலை செய்வாரா..? முதலில் யார் புதிய உதவி இயக்குநராக பணியில் சேர்ந்தாலும் அவனது முதல் வேலை நட்சத்திரங்கள் அணியும் உடைகளை காட்சிக்கு, காட்சி குறித்து வைத்துக் கொள்ளும் கன்ட்டினியூட்டி பார்ப்பதுதான்.

இதன் பின்புதான் படிப்படியாக அடுத்த வேலைக்குப் போக முடியும்.. எடுத்த எடுப்பிலேயே யாரும் இணை இயக்குநராக இங்கே சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். தற்போது அதுதான் நடந்து வருகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்து வரும் இயக்குநர்கள்தான் இப்படி அவதாரமெடுத்து வருகிறார்கள். ஆனால் இவர்களிடம் சினிமா மேக்கிங் பற்றிய அனுபவம் உண்டு. 

மிஷ்கினே சொல்லியிருப்பதுபோல் அமெரிக்காவில் வேலை பார்த்தவன் இங்கே வந்து நிமிடத்தில் இயக்குநராகிவிட முடியும் என்றால், வாய்ப்பு கிடைத்தால் இங்கேயிருப்பவனும் அதேபோல் ஆகலாம். பண பலமும், ஆள் பலமும், விளம்பரத் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இங்கே இயக்குநராகலாம்.! ஆனால் இங்கேயிருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது. அமெரிக்காவில் இருந்து வருபவனுக்கு எல்லாமே தெரியும் என்று மிஷ்கின் சொல்வது மேல்தட்டு வர்க்க பூர்ஷ்வாத்தனம்!

இந்த வயதில் இணைந்து கொண்டு மேலும், மேலும் படங்களில் வேலை செய்யும்போது உலக அறிவோடு நிச்சயம் சினிமா அனுபவமும் சேர்ந்தே அவனுக்குக் கிடைக்கத்தான் போகிறது. எதுவுமே இல்லாமல் எவனும் இங்கே அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைக்க முடியாது.

இனிமேற்கொண்டும் தமிழ்ச் சினிமாவில் கதையில் புதுமையையும், திரைக்கதையும் புத்தம் புதுசையும் ஒரேசேர கொடுப்பவனே ஜெயிக்க முடியும். உதாரணம் 'மைனா' படம். நான்கு படங்களை இயக்கிய பிரபுசாலமனுக்கு ஐந்தாவது படமே மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. எத்தனை ஆண்டு கால உழைப்பு..!? இதை முதல் முறையிலேயே அனுபவித்தவர்களும் உண்டு. பாலாவைப் போல, சசியைப் போல.. பாண்டிராஜை போல.. சசிகுமாரை போல.. ஆனால் இவர்களெல்லாம் திரையுலக அனுபவத்தில் தோய்த்தெடுத்தவர்கள்.

“1000 தடவை சுய இன்பம் அனுபவிச்சு இருப்பான்” என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் எனக்கு இது ஆச்சரியமில்லை. ஆனால் உதவி இயக்குநர்களிடத்தில் இந்த ஒரு வார்த்தைக்கு தீக்குளித்ததைப் போன்ற வெறுப்பு.. முற்றிலுமாகத் தவிர்த்திருக்க வேண்டிய வார்த்தைகள் இது..!

மிஷ்கினின் இந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது...!

80 comments:

pichaikaaran said...

me . The first

pichaikaaran said...

பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன்

காலப் பறவை said...

அவசியமான பதிவு..... நன்றி உ. த.

rghavan66 said...

உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன

Read more: http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_11.html#ixzz14yFOZzM7

கிரி said...

//சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.//

:-)) இதைத்தான் சொல்லலாம் என்று இருந்தேன் கடைசியில் நீங்களே கூறி விட்டீர்கள்.

எஸ்.கே said...

சொற்கள் அள்ள முடியாதவை! அதை புரிந்துகொள்ள விட்டால் பிரச்சினைதான்!

Prabu M said...

அட்வைஸ் பண்ணுறதுக்கெல்லாம் யாருக்கும் அருகதை இல்லை...

ராஜ நடராஜன் said...

துணை,இணை,இயக்குநர் விவாதங்களை தாண்டி புத்தகங்கள் திரைக்கதைகளாக மாறாமல் இருப்பதும் தமிழ் திரை உலகிற்கு குறையல்லவா?

பாலமுரளிவர்மனின் தார்மீக ரௌத்திரம் எழுத்தில் தெரிகிறது.

Rajaraman said...

\\“1000 தடவை சுய இன்பம் அனுபவிச்சு இருப்பான்” என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் எனக்கு இது ஆச்சரியமில்லை. //

இதாங்க சூப்பர் பன்ச்.. சரியா சொன்னீங்க..

Ramesh said...

நல்ல பதிவு.. நந்தலாலா படம் இன்னும் வெளியாகவில்லையே.. என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.. இப்போது.. பார்க்கும் ஆவலே போய்விட்டது...

திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருந்தால்.. மற்ற அனைவரையும் மட்டமாக நினைக்கும் குணம் இருந்தால்.. நந்தலாலா பாட முடியாது.. நொந்தலாலாதான் பாடிக்கொண்டிருக்க வேண்டும்..

karthi said...

அண்ணன் சாருவின் பொன் மொழிகள்

‘‘மிஷ்கின் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறீர்களே?’’

‘‘ ஏற்கனவே சொன்னபடி நிர்வாண ராஜாவைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்காமல் ஆஹா ராஜா, உங்கள் ஆடையைப் போல் வருமா என்று ஜால்ரா தட்டினால் தான் சினிமாவுக்குள் நுழைய முடியும். துரதிர்ஷ்டவசமாக, என் ஆசான் பாரதி எனக்கு அதைக் கற்றுத் தரவில்லை. நான் சிங்கம்; ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து என்னால் வாலாட்ட முடியாது. ஆனாலும் எனக்கு பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம் போன்றவர்களின் சினிமா பிடிக்கும். பாலு மகேந்திரா என் நண்பரும் கூட. இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர் மிஷ்கின். என்னையே வியப்படையச் செய்யும் அளவுக்கு உலக இலக்கியமும் உலக சினிமாவும் தெரிந்தவன் அவன். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமா அவனைக் கொண்டாடும். இன்னொரு விசேஷம், புத்திசாலியாக இருந்தால் நல்ல படம் எடுக்க முடியாது என்பது தமிழ் சினிமாவின் சாபம். ஆனால் மிஷ்கின் அதையும் மாற்றிக் காட்டியவன். அஞ்சாதே அதற்கு ஒரு எடுத்துக் காட்டு. யுத்தம் செய் அதை விட ஜனரஞ்சகமாக இருக்கும். அதில் ஒரு பாடல் காட்சியில் 30 நொடிகளே நடித்திருக்கிறேன். ஏன் என்றால், அந்தப் பாடல் தொலைக்காட்சி சேனல்களில் ஒரு லட்சம் தடவை போடப்படும். அப்படி ஒரு அமர்க்களமான பாடல் அது. மிஷ்கினிடம் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வில்லன் ரோல் கேட்டிருக்கிறேன். அதற்காக மொட்டை எல்லாம் அடித்துக் கொண்டேன். ஆனால் மிஷ்கினோ “உங்களுக்கு நடிப்பே வராது” என்று சொல்லி விட்டான். “ஓகே. ராமராஜனை விட நன்றாக நடிப்பேன்” என்று சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறேன், பார்ப்போம். மிஷ்கினிடம் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் என்னவென்றால், படித்தவர்களிடம் வித்யாகர்வம் இருக்கும். என்னிடம் அது நிறையவே உண்டு. ஆனால் மிஷ்கினிடம் அது அறவே கிடையாது. நாலு பேர் சேர்ந்து விவாதம் செய்தால் கூட ஏதோ தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பான். அந்த அடக்கம் இதுவரை நான் பார்த்திராதது. மிஷ்கினிடம் நான் போற்றும் மற்றொரு பண்பு, எல்லா மனிதர்களையும் தனக்கு இணையாக நடத்துவது. அவனிடம் துணை இயக்குனராகப் பணியாற்ற முன் ஜென்மத்தில் தவம் இருந்திருக்க வேண்டும். ஏதோ தன்னுடைய உடன் பிறந்த சகோதரர்களைப் போல் நடத்துவான். அவர்களும் அவனுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அந்த டீமே பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும். அவன் ஏதாவது தவறு செய்தால் உடனே சுட்டிக் காண்பிப்பார்கள் உதவி இயக்குனர்கள். அவனோடு சண்டை போடுவார்கள். இதையெல்லாம் வேறு இயக்குனர்களிடம் கனவு கூடக் காண முடியாது. ஒரு படிக்காத விக்ரம் பாரதியார் பாடலைப் பாடினால் (ராவணன்) ”அது தவறு; அந்த கேரக்டருக்குப் பொருந்தாது” என்று மணி ரத்னத்திடம் சுட்டிக் காட்டுவதற்கு அவரிடம் ஒரு உதவி இயக்குனர் கூட இல்லை என்பது பரிதாபத்துக்கு உரியது. கமல்ஹாசனின் நிலைமை வேண்டாம்; அது உலகத்துக்கே தெரியும். அவர் சினிமா உலக ஜெயலலிதா. மணி ரத்னம் போன்றவர்கள் இனிமேல் உதவி இயக்குனரே இல்லாமல் வேலை செய்யலாம் என்று தோன்றுகிறது. உதவி இயக்குனர் என்பவர் நம்முடைய எடுபிடி அல்ல. நம்முடைய மூளையாகச் செயல்பட வேண்டியவர். ஒருநாள் ஒரு துணை இயக்குனர் மிஷ்கினிடம் “நல்ல படம் எடுக்க என்ன செய்ய வேண்டும்?” என்றார். உடனே மிஷ்கின் ஒரு கணம் கூட யோசிக்காமல் “நீ நல்லவனாக இருக்க வேண்டும்” என்று சொன்னான். ஒரு ஜென் துறவியின் வாக்கியம் போல் இருந்தது அது. மிஷ்கின் நல்லவன். சக மனிதனையும் தன்னைப் போலவே நேசிப்பவன். 45 ஆண்டுகளாகப் படிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள என்னையே மிரள வைக்கும் அளவுக்குப் படித்தவன். என் வாழ்நாளில் அவனைப் போல் படித்த ஒரு ஆளை நான் பார்த்ததில்லை. நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்து இருப்பேன்.

வெடிகுண்டு வெங்கட் said...

ஒரு விஷயத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு, அதன் நதிமூலம்-ரிஷிமூலம் தெரியாமல் பேசுபவர்களை கண்டால் கோபம் வரவேண்டுமென்றால், இங்கு கமென்ட் இட்டும், பதிவிட்டும் உள்ளவர்களை கண்டே எனக்கு வருகிறது.

ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அதன் காண்டெக்ஸ்டில் ஒரே ஒரு கமெண்ட்டை எடுத்துக்கொண்டு பேசுவது, "இந்தியப்பிரதமர் விபச்சார விடுதியை பற்றி விசாரித்தார்" என்று அயல்நாட்டு மீடியாக்கள் ஏர்போர்ட்டில் வைத்து எழுதிய கதையை போன்றது. அதே விஷயம் தான் இங்கும் நடந்துள்ளது.

மிஷ்கின் எந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது இதை சொன்னார் என்று ஆராயாமல் யாரோ ஒரு இணை இயக்குனர் (பாலமுரளியா?) இவ்வளவு நீளமாக கூறியிருப்பது தங்கள் சமுதாயத்தை (சினிமா இயக்குனர்கள்) பற்றி உயர்வாக பேசும் ஒருவரை புரிந்துகொள்ளாமல் அவரை பற்றி மட்டம் தட்டும் இந்த செயலால் தங்களது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒருமுறை மிஷ்கினிடம் ஒரு சிறுவன் (இருவது வயது நிரம்பியவனை சிறுவன் என்றுதான் நான் கருதுகிறேன் - சராசரி அறிவு முதிர்ச்சியில்) வந்து இணை இயக்குனராக வேண்டுமென்று ஆசைப்பட்டதையும், அதற்க்கு அவர் கூறிய பதிலையும் கண்டவன் நான். (ஏறக்குறைய இதே பதில்தான்) ஆனால் அவரிடம் இருப்பது ஆணவமல்ல, ஒரு விதமான பரிதாப உணர்ச்சியே. ஒன்றுமே தெரியாமல் இந்த துறைக்கு வந்து இணை இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு, டி, காபி வாங்கி வந்து வருடங்களை கழித்துக்கொண்டு பல ஆண்டுகளில் சில விஷயங்களை கற்பதை விட, சில ஆண்டுகள் முழு முயற்சியாக பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருவதே சாலச் சிறந்தது என்பதே அவரின் எண்ணம். அதைக்கூட புரிந்து கொள்ள இயலவில்லை என்றால், இவர்கள் எல்லாம் என்ன மாதிரி படம் எடுக்கப்போகிறார்கள் என்பதை காண நான் ஆவலோடு இருக்கிறேன்.

மாயவரத்தான் said...

மேலே கமெண்ட் அடித்திருக்கும் வெடிகுண்டு வெங்கட் என்ற நபரின் நாகரிகம் அவருடைய லேட்டஸ்ட் பதிவைப் பார்த்தாலே விளங்கும்.

அதில் இந்த ஆள் கிண்டலடித்திருக்கும், டி. ராஜேந்தரின் திறமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலே இந்த வெடிகுண்டெல்லாம் எங்கேயோ போயிருக்கும்.

அதை விட்டு விட்டு ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நமத்துப் போன பட்டாசு இங்கே இன்னொரு நமத்துப் போனதிற்கு ஜிங்ஜாக் தட்டியிருப்பதில் ஆச்சரியமேயில்லை.

மாயவரத்தான் said...

மேலே பதிவிலேயே தெளிவாக கூறப்பட்டிருக்கும் இணை இயக்குநரின் பெயரையே ஒழுங்காகப் படிக்காமல் ’பாலமுரளியா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் நமத்துப் போன பட்டாசு ஊருக்கு உபதேசம் செய்வது நகைப்புக்குரியது!

வெடிகுண்டு வெங்கட் said...

இந்த கன்றாவியில், மளையாள துவேஷம், படதிருட்டு, நல்ல தாய் தகப்பன், கோள் மூட்டுவது போன்ற வேலைகள் வேறு.

ஐய்யா பாலமுரளி கொஞ்சம் உங்கள் முகத்தை காட்டுமையா. ஒன்றே ஒன்றை சொல்லிகொள்கிறேன்: Great minds discuss about Ideas.

Average minds discuss about events.

Petty / Cheap minds discuss about people.


அவ்வளவுதான்.

//வடிவேலு என்னும் மனிதன் எத்தனையோ தமிழர்களையும், தமிழ் தெரிந்த மக்களையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்தபடியேதான் உள்ளார். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை வைத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்..? இல்லையே.. இங்கே அவருக்கு கிடைத்திருப்பது நடிப்பு அனுபவமும், கதை சொல்லியின் திறமையும்தான். அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி வருகிறார்// படிப்புக்கும் நடிப்புக்கும் என்னய்யா சம்பந்தம்? படிப்புக்கும் இயக்குவதற்கும் தான் சம்பந்தப்படுத்த முடியும். இதுகூட தெரியவில்லை என்றால் ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம்.

//இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத் தவிர வேறென்ன செய்து விட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கை தேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்// படங்கள் திருடப்பட்டவை என்பதை முடிந்தால் நிரூபியுங்களேன் பார்க்கலாம்? இதைத்தான் கும்பல்ல கோவிந்தா போடுவது என்பது.

//நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த் திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப்பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப் பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம// நல்ல படைப்பை கொடுத்தவர் நடிக்க தடுமாறுவதில் என்ன தப்பு? சேரனுக்கு நடிக்க வராது என்பது அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுவதை வைத்தே நம்மால் கூறமுடியும். அப்படியிருக்க, அவருக்கு நடிக்க வராது என்று கூறுவது எப்படி தவறாகும்? இந்த ஊர்ல உண்மையை சொன்ன தப்புதான். ஜால்ரா அடித்தால் தான் வாழமுடியும் என்பதை இவர்களே நிரூபிக்கிறார்கள்.

//இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப் போவதை சொன்ன நீ, “அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க” என்றாய். “எத வெச்சு சொல்றீங்க?” நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு “எனக்கு தெரியும்” என்றாய்// அதுக்கு பேரு ஜட்ஜ்மென்ட். ஒரு நல்ல இயக்குனருக்கு அது தேவை. பார்த்த மாத்திரத்தில் இவன்கிட்ட சரக்கு இருக்கு, இல்லை என்பதை சில பல உரையாடல்களில் முடிவு செய்துவிடுவார்கள். அதுகூட தெரியவில்லை, உதவி இயக்குனருக்கு?

//தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை// இதான் இங்க இருக்கிற பிரச்சினை.

ஐயா பாலமுரளி, முடிந்தால், முடிந்தால் உங்கள் வாழ்க்கையில் உருப்படியாக ஒரே ஒரு படம் எடுங்கள், அதற்க்கு பிறகு ஏதாவது பேசலாம்.

வெடிகுண்டு வெங்கட் said...

நண்பர் மாயவரத்தான் அவர்களே,

நாம் இங்கே பேசிக்கொண்டு இருப்பது மிஷ்கின் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை. அதற்குள் நான் இட்ட பதிவையும், என்னையும் பற்றி பேச என்ன தேவை வந்தது? இருந்தாலும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்: Great minds discuss about Ideas.

Average minds discuss about events.

Petty / Cheap minds discuss about people.

மாயவரத்தான் said...

//Petty / Cheap minds discuss about people.//

டி. ராஜேந்தர் குறித்து தான் எழுதிய பதிவிற்கு தானே கமெண்ட் கொடுத்திருக்கும் வெடிகுண்டுவிற்கு பாராட்டுகள்.


மற்றபடி, மிஸ்கின் குறித்த பதிவில் எதற்காக சேரன் குறித்து தேவையற்ற கமெண்ட்? ஊருக்கு தான் உபதேசமா?

மாயவரத்தான் said...

//ஜால்ரா அடித்தால் தான் வாழமுடியும் என்பதை இவர்களே நிரூபிக்கிறார்கள்.
//

பெரிய ஆளுய்யா இந்த வெடிகுண்டு. தன்னைப் பற்றி தானே அடிக்கடி பேசிக்கிறாரு!

மாயவரத்தான் said...

உ.த.

கமெண்ட் தனியாக பாப்-அப் வருவதற்கு பதில் போஸ்ட்டிற்கு கீழே வருவது மாதிரி செட்டிங்க்ஸ் மாற்றவும்.

Unknown said...

மிஷ்கின் சொன்னதை பாசிடிவாக சொல்லியிருக்க வேண்டும்..இரண்டு படம் வந்திருக்கிறது மூன்றாவது தூங்குகிறது அதற்குள் தன்னை அதிமேதாவியாக காட்டிகொள்வது முட்டாள்தனம்.. எந்த உதவி இயக்குணனும் சினிமாவைத் தெரியாமல் இதற்குள் வருவதில்லை.. இருக்கிற தொழிலிலேயே நிறைய அவமானங்களை, பட்டினிகளை, பார்க்கும் இடம் இது..

எட்வின் said...

நல்லாத்தானே இருந்தாரு மிஷ்கினு... இந்த அளவுக்கு போயிருக்க வேண்டாம். ம்ம்ம்

வெடிகுண்டு வெங்கட் said...

மாயவரத்தான்,

உங்களை பற்றிய உயர்ந்த மதிப்பீடு உண்டு எனக்கு. உங்களின் பதிவுகளை எல்லாம் பார்த்ததுதான் பதிவுலகிர்க்கே வந்தவன் நான், ஆகையால் இந்த கமென்ட்டுகளிற்கு எல்லாம் பதிலளிக்கவிரும்பவில்லை. மற்றபடி, சரியான கணிப்பில் ஒருமுறை பாருங்கள்: மிஷ்கின் கூறியது உங்களுக்கு சரியாகப்படும்.

எனக்கும் மிஷ்கிநிர்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அவரின் நண்பனோ, அல்லது உதவியாளனோ கூட இல்லை. உங்களிற்கு எப்படி சேரனோ அதைப்போல த்தான் எனக்கு மிஷ்கின். ஒரு உண்மையான கலைஞன் போலித்தனமான முகமூடிகள் இல்லாமல் உண்மையை பேசுவது தவறு என்பது மிஷ்கினின் இந்த சம்பவத்திற்கு பிறகு நான் புரிந்துகொண்டேன்.

அதைப்போலவே, மிஷ்கின் கூறியதை நேரிடையாக எதிர்கொள்ளாமல், சங்கம், கூட்டம் என்று கூட்டி, தனிமனித தாக்குதலிலும், மன வக்கிரங்களின் வடிகாலாகவும் இருக்கும் அந்த பதிலை பாருங்கள். அதைப்போலவே எனக்கு வந்த பதிலையும் பாருங்கள். நாமிருவரும் விவாதிப்பது கிஷ்கின் சம்பந்தப்பட்டதை பற்றிதானே தவிர, என்னுடைய பதிவுகளையோ அல்லது, என்னுடைய நாகரீகத்தைப்பற்றியோ அல்ல. அதையும் நீங்கள் கொணர்ந்தால் நல்லதே. வேறென்னே சொல்ல இயலும்?

//இணை இயக்குநரின் பெயரையே ஒழுங்காகப் படிக்காமல் ’பாலமுரளியா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் நமத்துப் போன பட்டாசு ஊருக்கு உபதேசம் செய்வது நகைப்புக்குரியது// இந்த மாதிரி கேட்பது அந்த நபருக்கு தேவையில்லாத முக்கியத்துவத்தை தராமல் இருக்கவேயின்றி, சரியாக படிக்காமல் அல்ல. என்னது பாலமுரளியா? என்றுதான் கேட்டிருக்கவேண்டும் (Not giving undue respect to unwanted enemieS - Art of War).

இதுதான் நமது மீடியாக்களிடம் இருக்கும் தவறு. ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது அவர் என்ன கண்ணோட்டத்தில் கூறுகிறார் என்பதை (புரிந்து கொள்ளாமலோ / வேண்டுமென்றே விட்டுவிட்டோ) அவர்கள் என்னமாதிரியான விவாதங்களும், எண்ணங்களும் மக்களிடம் வரவேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த தொனியில் விஷயத்தை அரைகுறையாக கூறுவதை தவிர்த்தால் இதுபோன்ற பிரச்சினைகள் குறையும்.

நான்கூட திரு பாலமுரளி அவர்களை பற்றி கூறியிருக்ககூடாதுதான் (முடிந்தால் ஒரு படம் எடுங்கள் என்று - சினிமா துறையில் துணை இயக்குனர்கள் என்ன துயரம் படுகிறார்கள் என்பதை கண்கூடாக கண்டவன் நான்). இருந்தாலும் சூழ்நிலை அப்படி பின்னூட்டமிட வைத்தது.

மாயவரத்தான் said...

வெடிகுண்டு,

நன்றி. எனது பதிவு மூலமாகவும் பதிவுலகிற்கு வந்ததற்கு!

மேட்டருக்கு வருவோம்.

மிஷ்கின் குறித்து நீங்கள் ஓவர் உணர்ச்சிவயப்படலில் இருக்கிறீர்கள்.

பாலமுரளிக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கும் மிஷ்கினின் பேட்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இப்போது பிரச்னையை மீடியா பக்கம் திசை திருப்ப முயலுகிறீர்கள்.

மிஷ்கின் தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியிருந்தால் அவர்கள் நேரடியாக எதிர்கொண்டிருப்பார்கள். ஒட்டுமொத்தமாக தாக்குதல் நிகழ்த்தியதால் தான் சங்கம், கூட்டம் எல்லாம்.

‘சுய இன்பம்’ என்றெல்லாம் பேட்டி அளித்திருப்பது சரி என்று நினைக்கிறீர்களா?

இப்படிப்பட்டவரிடம் உதவியாளர்களாக இருப்பவர்கள் என்னவெல்லாம் பாடு படவேண்டி வரும்?!

மீண்டும் சொல்கிறேன். எனக்கு உங்களை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால் அடுத்தவரை தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்று அதுவும் திரைத் துறையில் இருப்பவரை சொல்லும் நீங்கள் உங்கள் பதிவில் பட்டவர்த்தனமாக டி. ராஜேந்தரை கடும் கிண்டல் அடித்து அதுவும் அவரது உருவத்தை கிண்டல் அடித்திருப்பது முரண் நகை என்பதை தான் சுட்டிக் காட்டினேன்.

அவரவர்க்கு அவரவர் அரசியல்! வேறென்ன சொல்ல?!

ஜோதிஜி said...

வெடிகுண்டு வெங்கட் எடுத்து வைத்திருப்பது அழுத்தமான வாதம். எழுத்தாளர் பாலகுமாரனுக்கு எதிராக இந்த சேரனும் ஒரு நாளில் வெகுண்டு தானே எழுந்தார். மிஷ்கின் சொன்னதற்கும் அன்று பாலகுமாரன் சொன்னதற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. மொத்தத்தில் கனவுகளை மட்டுமே நம்பிக்கொண்டு தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்பது தான் மிஷ்கின் சொல்லியுள்ள ஆதாரமான அறிவுரை. இது போன்ற விசயங்கள் மீடியாக்களுக்கு கொண்டாட்டம் தான்.

ILA (a) இளா said...

மாயம்ஸ், வெடிகுண்டு, ரெண்டு பேரும் கொஞ்சம் வழிய விடுங்க.


12 வயசுல ஒரு பையன் இயக்குனரானானே அவன் நிறைய படிச்சிருப்பானா? படிச்சாதான் அனுபவம் வரும்னா எல்லாப் பதிவர்களுமே இயக்கப்போயிரலாம், ஒரு பதிவு, பின்னூட்டம் விடாம படிக்கிறாங்களே, அவுங்கள விடவா மத்தவங்க உசத்தி?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
பொறுமையா படிச்சுட்டு கருத்து சொல்றேன்.]]]

ஆமாம்.. பெரிய வெட்டி முறிக்கிற வேலை இருக்கு பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
அவசியமான பதிவு..... நன்றி உ. த.]]]

நன்றிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Aaryan66 said...
உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன?]]]

மிஷ்கின் வந்து பதில் சொல்லுவார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிரி said...

//சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.//

:-)) இதைத்தான் சொல்லலாம் என்று இருந்தேன் கடைசியில் நீங்களே கூறி விட்டீர்கள்.]]]

கிரியாரே.. எத்தனை பேரை பார்த்திருப்போம். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
சொற்கள் அள்ள முடியாதவை! அதை புரிந்துகொள்ள விட்டால் பிரச்சினைதான்!]]]

உண்மைதான் ஸார்.. அதனை அனைவரும் புரிந்து கொண்டால் நலம்தான்..! மிஷ்கினின் சமீபத்திய அனைத்துப் பேச்சுக்களுமே இப்படி ஏதோ ஒருவிதத்தில் வரம்பு மீறியதாகவே இருந்து வருகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...
அட்வைஸ் பண்ணுறதுக்கெல்லாம் யாருக்கும் அருகதை இல்லை.]]]

அப்படியெல்லாம் இல்லை பிரபு.. அனுபவப்பட்டவங்க சொல்லலாம். அதிலும் நேர்மையும், நாகரிகமும் வேணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
துணை, இணை, இயக்குநர் விவாதங்களை தாண்டி புத்தகங்கள் திரைக்கதைகளாக மாறாமல் இருப்பதும் தமிழ் திரை உலகிற்கு குறையல்லவா?
பாலமுரளிவர்மனின் தார்மீக ரௌத்திரம் எழுத்தில் தெரிகிறது.]]]

புத்தகங்கள் அப்படி ஒரு போதும் ஆகிவிட முடியாது ஸார்.. புத்தக வாசிப்பனுபவம் வேறு.. திரை வடிவம் வேறு.. இது ரசனையானது.. நமது மக்களை கட்டிப் போட்டு வைப்பது கொஞ்சம் கஷ்டம். வித்தை தெரிந்தவர்களால் மட்டுமே இது முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rajaraman said...

\\“1000 தடவை சுய இன்பம் அனுபவிச்சு இருப்பான்” என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. சாருநிவேதிதாவுடன் இணைந்த பின்பு இப்படியெல்லாம் மிஷ்கின் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் எனக்கு இது ஆச்சரியமில்லை. //

இதாங்க சூப்பர் பன்ச்.. சரியா சொன்னீங்க..]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல பதிவு.. நந்தலாலா படம் இன்னும் வெளியாகவில்லையே.. என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.. இப்போது.. பார்க்கும் ஆவலே போய்விட்டது...]]]

அது வேறு.. இது வேறு.. அவசியம் படத்தைப் பாருங்கள். நன்றாக வந்திருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

கார்த்தி..

[[[என் வாழ்நாளில் அவனைப் போல் படித்த ஒரு ஆளை நான் பார்த்ததில்லை. நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்து இருப்பேன்.]]]

இது இன்னும் என்னை பயமறுத்துகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வெடிகுண்டு வெங்கட் said...

ஒரு விஷயத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அதன் நதிமூலம்-ரிஷிமூலம் தெரியாமல் பேசுபவர்களை கண்டால் கோபம் வர வேண்டுமென்றால், இங்கு கமென்ட் இட்டும், பதிவிட்டும் உள்ளவர்களை கண்டே எனக்கு வருகிறது.]]]

அட்டகாசமான பதில்.. தொடருங்கள் வெங்கட்..!

[[[ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அதன் காண்டெக்ஸ்டில் ஒரே ஒரு கமெண்ட்டை எடுத்துக் கொண்டு பேசுவது, "இந்தியப் பிரதமர் விபச்சார விடுதியை பற்றி விசாரித்தார்" என்று அயல்நாட்டு மீடியாக்கள் ஏர்போர்ட்டில் வைத்து எழுதிய கதையை போன்றது. அதே விஷயம்தான் இங்கும் நடந்துள்ளது.]]]

அடடா.. எப்படின்னு கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாமே..?

[[[மிஷ்கின் எந்த விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது இதை சொன்னார் என்று ஆராயாமல் யாரோ ஒரு இணை இயக்குனர் (பாலமுரளியா?) இவ்வளவு நீளமாக கூறியிருப்பது தங்கள் சமுதாயத்தை (சினிமா இயக்குனர்கள்) பற்றி உயர்வாக பேசும் ஒருவரை புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி மட்டம் தட்டும் இந்த செயலால் தங்களது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.]]]

மிஷ்கின் உதவி இயக்குநர்களை நன்றாகப் படி என்று சொன்னால் அது சரிதான். இப்போது இருப்பவர்களுக்குச் சுத்தமாக படிக்கின்ற ஆர்வமும், படிப்பறிவும் இல்லை என்ற ரீதியில் சொல்லியிருப்பது சரியா..?

ஒருமுறை மிஷ்கினிடம் ஒரு சிறுவன் (இருவது வயது நிரம்பியவனை சிறுவன் என்றுதான் நான் கருதுகிறேன் - சராசரி அறிவு முதிர்ச்சியில்) வந்து இணை இயக்குனராக வேண்டுமென்று ஆசைப்பட்டதையும், அதற்க்கு அவர் கூறிய பதிலையும் கண்டவன் நான். (ஏறக்குறைய இதே பதில்தான்) ஆனால் அவரிடம் இருப்பது ஆணவமல்ல, ஒரு விதமான பரிதாப உணர்ச்சியே. ஒன்றுமே தெரியாமல் இந்த துறைக்கு வந்து இணை இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு, டி, காபி வாங்கி வந்து வருடங்களை கழித்துக்கொண்டு பல ஆண்டுகளில் சில விஷயங்களை கற்பதை விட, சில ஆண்டுகள் முழு முயற்சியாக பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருவதே சாலச் சிறந்தது என்பதே அவரின் எண்ணம். அதைக்கூட புரிந்து கொள்ள இயலவில்லை என்றால், இவர்கள் எல்லாம் என்ன மாதிரி படம் எடுக்கப் போகிறார்கள் என்பதை காண நான் ஆவலோடு இருக்கிறேன்.]]]

நானும் இதே மனநிலையோடுதான் இந்த சினிமாவுலகத்திற்குள் கால் வைத்தேன். இங்கே உள்ளே வந்த பின்புதான் சினிமாவைக் கற்றுக் கொள்ள முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...

மேலே கமெண்ட் அடித்திருக்கும் வெடிகுண்டு வெங்கட் என்ற நபரின் நாகரிகம் அவருடைய லேட்டஸ்ட் பதிவைப் பார்த்தாலே விளங்கும்.

அதில் இந்த ஆள் கிண்டலடித்திருக்கும், டி. ராஜேந்தரின் திறமையில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலே இந்த வெடிகுண்டெல்லாம் எங்கேயோ போயிருக்கும். அதை விட்டு விட்டு ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நமத்துப் போன பட்டாசு இங்கே இன்னொரு நமத்துப் போனதிற்கு ஜிங்ஜாக்]]]

ஜிங்ஜாங்.. ஜிங்ஜாங்.. மாயம்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...
மேலே பதிவிலேயே தெளிவாக கூறப்பட்டிருக்கும் இணை இயக்குநரின் பெயரையே ஒழுங்காகப் படிக்காமல் ’பாலமுரளியா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் நமத்துப் போன பட்டாசு ஊருக்கு உபதேசம் செய்வது நகைப்புக்குரியது!]]]

அவசரமாகப் படித்திருப்பாரோ..?

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு.
மிஸ்கின் பேசியிருப்பது சற்று அலட்டல தான். அந்த அளவிற்கு சிறந்த இயக்குனரும் அல்ல. (நான் அவர் இயக்கிய படம் ஒன்று கூட பார்த்தது இல்லை, பார்க்க போவதும் இல்லை என்பது வேறு விசயம்).

மிஸ்கினின் பெட்டியில் (interview) இருந்தே தெரிகிறது, அவர் ஒரு அரை குடம் என்பது.
இந்த உதவி இயக்குனரும் சற்று நாகரீகமாக எழுதி இருக்கலாம் தங்களின் கண்டனத்தை .


இன்று உதவி இயக்குனர்களும் சுதந்திரமாக தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவு செய்ய வசதி அளிக்கும் இணையத்திற்கு எனது வந்தனங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[வெடிகுண்டு வெங்கட் said...

இந்த கன்றாவியில், மளையாள துவேஷம், பட திருட்டு, நல்ல தாய் தகப்பன், கோள் மூட்டுவது போன்ற வேலைகள் வேறு. ஐயா பாலமுரளி கொஞ்சம் உங்கள் முகத்தை காட்டுமையா. ஒன்றே ஒன்றை சொல்லிகொள்கிறேன்: Great minds discuss about Ideas. Average minds discuss about events. Petty / Cheap minds discuss about people.
அவ்வளவுதான்.]]]

ஓகே.. நீங்க கிரேட் மைண்ட்டோ இருக்கீங்கன்னு நான் நம்புறேன் வெங்கட்.. வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

//வடிவேலு என்னும் மனிதன் எத்தனையோ தமிழர்களையும், தமிழ் தெரிந்த மக்களையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்தபடியேதான் உள்ளார். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை வைத்துப் பார்த்தால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்..?
இல்லையே.. இங்கே அவருக்கு கிடைத்திருப்பது நடிப்பு அனுபவமும், கதை சொல்லியின் திறமையும்தான். அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி வருகிறார்//

படிப்புக்கும் நடிப்புக்கும் என்னய்யா சம்பந்தம்? படிப்புக்கும் இயக்குவதற்கும்தான் சம்பந்தப்படுத்த முடியும். இதுகூட தெரியவில்லை என்றால் ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம்.]]]

இதை நான்தான் எழுதியிருக்கிறேன். படிப்புக்கும், அவர் பேசுகின்ற பேச்சுக்குமாச்சும் தொடர்பு இருக்க முடியுமா என்பதை உங்களுடைய கிரேட் மைண்ட்டிடம் கேட்டு என்னைத் தொடர்பு கொள்ளவும்..!

ஏனெனில் வடிவேலுவின் காமெடி டிராக் என்றழைக்கப்படும் காட்சி வசனங்களை அவரேதான் எழுதுகிறார். சிந்திக்கிறார்.. வெளிப்படுத்துகிறார்.. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் வடிவேலுவைத் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொள்ளலாம்..!

pichaikaaran said...

மிஷ்கின் புத்தக லவ்வர்.. அந்த அடிப்படையில் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார்..

நீங்கள் அவருக்கு இணையான- சாரி- அவரை விட தீவிரமான புத்தக லவ்வர் என்பதை அறிவேன்..( இது பலருக்கு தெரியாது )

எனவே அவருக்கு சாதகமாகத்தான் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன் ..

ஆனால் நடுனிலையாக எழுதி இருப்பதை பார்த்ததும் உடனடியாக பாசிடிவ் ஓட்டு பதிவு செய்தேன்...

உண்மையில் பார்க்கப்போனால் அவரை நியாயப்படுத்தியும் பேச முடியும்..
ஆனால் புத்தக பிரியரான நீங்களே கண்டிக்கும்போது, எங்களை போன்ற தற்குறிகள் சும்மா இருப்பதே நல்லது...

அனுபவம் முக்கியம் என்றாலும் , பல ஆண்டுகள் அனுபவ்த்தை சில புத்தகங்கள் தரவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த டாபிக்கை இதனுடன் சேர்த்து விவாதிக்க விரும்பவில்லை..
தனியாக உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்

உண்மைத்தமிழன் said...

//இதுவரை உனக்கு இரண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றாவதில் பெரும் சிக்கல். இடைவெளிக்குப் பின் நான்காவதாக ஒரு படம். இதைத் தவிர வேறென்ன செய்து விட்டாய்? உன்னுடைய படங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது பற்றி திரையுலகில் பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. நீ ஒரு கை தேர்ந்த திருடன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பிறகு எதற்காக இவ்வளவு ஆணவம்//

படங்கள் திருடப்பட்டவை என்பதை முடிந்தால் நிரூபியுங்களேன் பார்க்கலாம்? இதைத்தான் கும்பல்ல கோவிந்தா போடுவது என்பது.]]]

அதெல்லாம் நிரூபிச்சாச்சு வெங்கட்.. ககிஜூரோ என்ற ஜப்பானிய படம்தான் நந்தலாலா. டிரேட் என்னும் ஹாலிவுட் படம்தான் அஞ்சாதே..! இப்போது வரவிருக்கும் யுத்தம்செய் படம் கூட Memories of Murder என்ற படத்தின் தாக்கத்துடன் வரவிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

//நல்ல தாய் தகப்பனுக்கு பொறந்திருந்தா உன்னால இத மறுக்க முடியாது. தமிழ்த் திரையில் அண்ணன் சேரன் ஆழமான தடம் பதித்தவர். அவருடைய எல்லா படைப்புகளுமே தமிழர் வாழ்வை உணர்வுப்பூர்வமாக எங்கள் நெஞ்சில் விதைத்தவை. அவரைப் பற்றியே ஏளனமாக பேசிய போதுதான் உன்னுடைய மனவிகாரத்தை நாங்கள் புரிந்து கொண்டோம//

நல்ல படைப்பை கொடுத்தவர் நடிக்க தடுமாறுவதில் என்ன தப்பு? சேரனுக்கு நடிக்க வராது என்பது அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுவதை வைத்தே நம்மால் கூற முடியும். அப்படியிருக்க, அவருக்கு நடிக்க வராது என்று கூறுவது எப்படி தவறாகும்? இந்த ஊர்ல உண்மையை சொன்ன தப்புதான். ஜால்ரா அடித்தால்தான் வாழ முடியும் என்பதை இவர்களே நிரூபிக்கிறார்கள்.]]]

கமல்ஹாசனும் ஆரம்பத்தில் இதைத்தான் செய்திருக்கிறார் தெரியுமா உங்களுக்கு..? எம்.ஜி.ஆரின் நிறைய படங்களிலும் இதுதான் நடக்கும். இந்த ஒரு காட்சிக்காக ஒட்டு மொத்தத்தையும் யாரும் புறக்கணிப்பதில்லை..!

உண்மைத்தமிழன் said...

//இங்கே இருக்கிற உதவி இயக்குனர்களுக்கு வாழ்க்கை அனுபவம் இல்லை என்கிறாய்! அமெரிக்காவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞன் தன் வேலையை விட்டுவிட்டு உன்னிடம் உதவி இயக்குனராக வரப் போவதை சொன்ன நீ, “அவன் பேசுறத கேக்குறப்பவே தெரியுது. நிச்சயமா நான் சொல்றேன் அவன் டைரக்டராயிடுவாங்க” என்றாய். “எத வெச்சு சொல்றீங்க?” நான் கேட்டதும் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு “எனக்கு தெரியும்” என்றாய்//

அதுக்கு பேரு ஜட்ஜ்மென்ட். ஒரு நல்ல இயக்குனருக்கு அது தேவை. பார்த்த மாத்திரத்தில் இவன்கிட்ட சரக்கு இருக்கு, இல்லை என்பதை சில பல உரையாடல்களில் முடிவு செய்துவிடுவார்கள். அதுகூட தெரியவில்லை, உதவி இயக்குனருக்கு..?]]]

அவர் சொன்னதில் உள்ளர்த்தம் உங்களுக்குத் தெரியவில்லையா..? அப்படியானால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எவருக்கும் வாழ்க்கை அனுபவம் கிடைத்திருக்காதா என்கிறார். நியாயம்தானே வெங்கட்..?

//தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மீது நீ ஏன் வார்த்தைகளை அமிலமாக அள்ளி வீசுகிறாய்? உன்னுடைய உள்மனதில் இருப்பது என்ன? நீ யார்? எவ்விடத்திலிருந்து புறப்பட்டவன்? உன்னுடைய வேர் எங்கிருக்கிறது? எல்லாம் எங்களுக்கு தெரியும். உன்னுடைய திரைப்படங்களில் நீ ஏன் பெரும்பாலும் மலையாளிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறாய் என்கிற உண்மையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை//

இதான் இங்க இருக்கிற பிரச்சினை.
ஐயா பாலமுரளி, முடிந்தால், முடிந்தால் உங்கள் வாழ்க்கையில் உருப்படியாக ஒரே ஒரு படம் எடுங்கள், அதற்க்கு பிறகு ஏதாவது பேசலாம்.]]]

சரி.. அவங்க எடுத்துக் காட்டட்டும். அப்புறமா நாம சண்டையைத் தொடரலாம் வெங்கட்..!

உண்மைத்தமிழன் said...

[[[வெடிகுண்டு வெங்கட் said...

நண்பர் மாயவரத்தான் அவர்களே,
நாம் இங்கே பேசிக்கொண்டு இருப்பது மிஷ்கின் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை. அதற்குள் நான் இட்ட பதிவையும், என்னையும் பற்றி பேச என்ன தேவை வந்தது? இருந்தாலும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்:

Great minds discuss about Ideas.

Average minds discuss about events.

Petty / Cheap minds discuss about people.]]]

தனது சக சங்க உறுப்பினரிடம் நியாயம் கேட்டு கேள்வி எழுப்பியிருக்கும் பாலமுரளியை இப்படி கேள்வி கேட்டுவிட்டு உங்களுடைய அந்தப் பதிவில் டி.இராஜேந்தரை பன்றி என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே..? இதென்ன நடிப்பு..?

உங்களுக்கு ஒரு நியாயம்..? அடுத்தவருக்கு ஒரு நியாயமா..?

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...

//Petty / Cheap minds discuss about people.//

டி.ராஜேந்தர் குறித்து தான் எழுதிய பதிவிற்கு தானே கமெண்ட் கொடுத்திருக்கும் வெடிகுண்டுவிற்கு பாராட்டுகள்.

மற்றபடி, மிஸ்கின் குறித்த பதிவில் எதற்காக சேரன் குறித்து தேவையற்ற கமெண்ட்? ஊருக்குதான் உபதேசமா?]]]

கரீக்ட்டு.. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய இனிமேல் வெங்கட்டிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்...

உண்மைத்தமிழன் said...

மாயவரத்தான்.... said...
//ஜால்ரா அடித்தால்தான் வாழ முடியும் என்பதை இவர்களே நிரூபிக்கிறார்கள்.//

பெரிய ஆளுய்யா இந்த வெடிகுண்டு. தன்னைப் பற்றி தானே அடிக்கடி பேசிக்கிறாரு!]]]

அதனாலதான் பெரிய ஆளா இருக்காரு..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...
உ.த. கமெண்ட் தனியாக பாப்-அப் வருவதற்கு பதில் போஸ்ட்டிற்கு கீழே வருவது மாதிரி செட்டிங்க்ஸ் மாற்றவும்.]]]

அதை எப்படிண்ணே செய்யறது? கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன். ப்ளீஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
மிஷ்கின் சொன்னதை பாசிடிவாக சொல்லியிருக்க வேண்டும். இரண்டு படம் வந்திருக்கிறது மூன்றாவது தூங்குகிறது அதற்குள் தன்னை அதிமேதாவியாக காட்டிகொள்வது முட்டாள்தனம். எந்த உதவி இயக்குணனும் சினிமாவைத் தெரியாமல் இதற்குள் வருவதில்லை. இருக்கிற தொழிலிலேயே நிறைய அவமானங்களை, பட்டினிகளை, பார்க்கும் இடம் இது..]]]

நானும் இதைத்தான் சொல்கிறேன். புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும் என்று சொல். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். 100 படம் செஞ்ச இயக்குநரைப் போல எதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பு..?

உண்மைத்தமிழன் said...

[[[எட்வின் said...
நல்லாத்தானே இருந்தாரு மிஷ்கினு... இந்த அளவுக்கு போயிருக்க வேண்டாம். ம்ம்ம்]]]

எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

வெடிகுண்டு ஸார்..

மிஷ்கின் பிரமாதமான இயக்குநர். ஆனால் டி.இராஜேந்தர் பிரமாதமான இயக்குநர் இல்லையா..? அவர் எவ்வளவு பெரிய கவிஞர் தெரியுமா? எடிட்டர் தெரியுமா? இசையமைப்பாளர் தெரியுமா? பாடலாசிரியர் தெரியுமா..? நடிப்பு அவரிடத்தில் என்ன இருக்கோ அதுதான் வரும். அதைத்தான் அனைவருமே செய்து வருகிறார்கள். அதற்காக பன்றி என்று அழைக்குமளவுக்கு உங்களது புத்தியிருக்கிறது என்றால் தயவு செய்து நீங்களெல்லாம் வேறு யாருக்கும் அட்வைஸ் செய்ய கிளம்பி விடாதீர்கள். அது மகா கேவலம்..!

உண்மைத்தமிழன் said...

மாயம்ஸ் அண்ணே..

வெடிகுண்டு அண்ணே.. முரண்பாடுகளை மூட்டைக் கட்டி தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார். தூங்கட்டும். வாங்க நாம நம்ம வேலையை பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

வெடிகுண்டு வெங்கட் எடுத்து வைத்திருப்பது அழுத்தமான வாதம். எழுத்தாளர் பாலகுமாரனுக்கு எதிராக இந்த சேரனும் ஒரு நாளில் வெகுண்டு தானே எழுந்தார். மிஷ்கின் சொன்னதற்கும் அன்று பாலகுமாரன் சொன்னதற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. மொத்தத்தில் கனவுகளை மட்டுமே நம்பிக் கொண்டு தங்களின் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்பதுதான் மிஷ்கின் சொல்லியுள்ள ஆதாரமான அறிவுரை. இது போன்ற விசயங்கள் மீடியாக்களுக்கு கொண்டாட்டம்தான்.]]]

ஸார்.. தயவு செய்து வெடிகுண்டு வெங்கட்டின் தளத்திற்குப் போய் பார்த்துவிட்டு வந்து பின்பு பேசுங்கள்..!

யாருக்கு அறிவுரை சொல்லும் தகுதி இருக்கிறதென்று தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...

மாயம்ஸ், வெடிகுண்டு, ரெண்டு பேரும் கொஞ்சம் வழிய விடுங்க.
12 வயசுல ஒரு பையன் இயக்குனரானானே அவன் நிறைய படிச்சிருப்பானா? படிச்சாதான் அனுபவம் வரும்னா எல்லாப் பதிவர்களுமே இயக்கப் போயிரலாம், ஒரு பதிவு, பின்னூட்டம் விடாம படிக்கிறாங்களே, அவுங்கள விடவா மத்தவங்க உசத்தி?]]]

ஆஹா.. நச்சு பதிலு.. நமக்குத் தோணாமப் போயிருச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[ers said...
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்]]]

தகவலுக்கு மிக்க நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு. மிஸ்கின் பேசியிருப்பது சற்று அலட்டலதான். அந்த அளவிற்கு சிறந்த இயக்குனரும் அல்ல. (நான் அவர் இயக்கிய படம் ஒன்றுகூட பார்த்தது இல்லை, பார்க்க போவதும் இல்லை என்பது வேறு விசயம்).]]

ஏன் ஸார்.. அவசியம் பார்க்க வேண்டிய படங்கள்தான் அவை. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே இரண்டுமே பெஸ்ட்டோ பெஸ்ட்டு..!

[[[மிஸ்கினின் பெட்டியில் (interview) இருந்தே தெரிகிறது, அவர் ஒரு அரை குடம் என்பது.
இந்த உதவி இயக்குனரும் சற்று நாகரீகமாக எழுதி இருக்கலாம் தங்களின் கண்டனத்தை.]]]

பதிலுக்கேற்ற பதில் என்று நான் நினைக்கிறேன்..!

[[[இன்று உதவி இயக்குனர்களும் சுதந்திரமாக தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவு செய்ய வசதி அளிக்கும் இணையத்திற்கு எனது வந்தனங்கள்.]]]

நானும்தான்.. வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

மிஷ்கின் புத்தக லவ்வர். அந்த அடிப்படையில் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார். நீங்கள் அவருக்கு இணையான - சாரி - அவரை விட தீவிரமான புத்தக லவ்வர் என்பதை அறிவேன்.(இது பலருக்கு தெரியாது)]]]

இப்படி வேறய்யா.. ஐயா சாமி.. மிஷ்கினின் லெவலே வேற.. நம்ம லெவல் இன்னும் ப்ரீ கே.ஜி.யைத் தாண்டவில்லை..!

[[[எனவே அவருக்கு சாதகமாகத்தான் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நடுனிலையாக எழுதி இருப்பதை பார்த்ததும் உடனடியாக பாசிடிவ் ஓட்டு பதிவு செய்தேன்.]]]

நன்றி..

[[[உண்மையில் பார்க்கப் போனால் அவரை நியாயப்படுத்தியும் பேச முடியும். ஆனால் புத்தக பிரியரான நீங்களே கண்டிக்கும்போது, எங்களை போன்ற தற்குறிகள் சும்மா இருப்பதே நல்லது.]]]

யாரும் இங்கே தற்குறிகள் இல்லை.. அனைவருமே சமம்தான். எனக்கிருக்கும் நேரமும், வாய்ப்பும் உங்களுக்கும் கிடைத்தால் நீங்களும் நிறைய படிக்கலாம்..!

[[[அனுபவம் முக்கியம் என்றாலும், பல ஆண்டுகள் அனுபவ்த்தை சில புத்தகங்கள் தரவும் வாய்ப்பு இருக்கிறது.]]]

இது சினிமா துறையில் அப்படியே உல்டா. அனுபவமே சிறந்தது. புத்தகங்கள் இரண்டாம் பட்சம்தான்.

நெல்லை த‌மிழன் said...

his all film are from korean and chinese film
kikujiro is nandalala

waste guy

வெட்டிப்பயல் said...

எதையும் சொல்லும் முறை இருக்கிறது. சாரு வலையில் எழுதும் பாணியில் பேட்டி கொடுத்தால் இப்படி தான் ஆப்பு அடிப்பார்கள் :)

உதவி இயக்குனர்களைவிட ப்ரொடியூசர்களையும், நடிகர்களையும் படிக்க சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன் :)

Indian said...

//அதெல்லாம் நிரூபிச்சாச்சு வெங்கட்.. ககிஜூரோ என்ற ஜப்பானிய படம்தான் நந்தலாலா. டிரேட் என்னும் ஹாலிவுட் படம்தான் அஞ்சாதே..! இப்போது வரவிருக்கும் யுத்தம்செய் படம் கூட Memories of Murder என்ற படத்தின் தாக்கத்துடன் வரவிருக்கிறது..!
//

இந்த ட்ரேட் படமுங்களா? அப்படின்னாக்க கோடம்பாக்கம் நெம்ப ஃபாஸ்ட்தானுங்க.

Unknown said...

இத்தனை விஷயங்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்த உண்மைத் தமிழனுக்கு நன்றிகள்.

Unknown said...

இத்தனை விஷயங்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்த உண்மைத் தமிழனுக்கு நன்றிகள்.

nellai ram said...

Director vikrman resign his post in this reg?

உண்மைத்தமிழன் said...

[[[நெல்லை த‌மிழன் said...
his all film are from korean and chinese film. kikujiro is nandalala
waste guy]]]

எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயந்தான் இது..! இருந்தாலும் மேக்கிங் பிரமாதமா இருந்ததாலதான் இவருடைய பெயர் அடிபடுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வெட்டிப்பயல் said...

எதையும் சொல்லும் முறை இருக்கிறது. சாரு வலையில் எழுதும் பாணியில் பேட்டி கொடுத்தால் இப்படித்தான் ஆப்பு அடிப்பார்கள் :)]]]

உண்மைதான். ஒரு அமைப்புக்குள் உறுப்பினராக இருக்கின்றபோது கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். வேறு வழியில்லை. இதனை மிஷ்கின் கொஞ்சம் தன்மையாகவே சொல்லியிருக்கலாம்..!

[[[உதவி இயக்குனர்களைவிட ப்ரொடியூசர்களையும், நடிகர்களையும் படிக்க சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன் :)]]]

சூப்பருங்கண்ணே.. உண்மையாகவே நச் கமெண்ட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//அதெல்லாம் நிரூபிச்சாச்சு வெங்கட்.. ககிஜூரோ என்ற ஜப்பானிய படம்தான் நந்தலாலா. டிரேட் என்னும் ஹாலிவுட் படம்தான் அஞ்சாதே..! இப்போது வரவிருக்கும் யுத்தம்செய் படம் கூட Memories of Murder என்ற படத்தின் தாக்கத்துடன் வரவிருக்கிறது..!//

இந்த ட்ரேட் படமுங்களா? அப்படின்னாக்க கோடம்பாக்கம் நெம்ப ஃபாஸ்ட்தானுங்க.]]]

இதுவா என்று தெரியவில்லை. பார்த்தால்தான் சொல்ல முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
இத்தனை விஷயங்கள் பரிமாறிக் கொள்ள வாய்ப்பளித்த உண்மைத் தமிழனுக்கு நன்றிகள்.]]]

நன்றி.. நன்றி. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[nellai ram said...
Director vikrman resign his post in this reg?]]]

ஆமாம்.. புதுப் படம் தனக்கு கமிட் ஆகியிருப்பதால், வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லி துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்..!

problogger said...

இந்தியாவின் எதிர்காலத் தூண் .heehe.....யார் இந்த உதயகுமார் எதற்கு இவ்வளவு கோபம்

உண்மைத்தமிழன் said...

உதயகுமார் அண்ணே..

மன்னிக்கணும்.. உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மிக, மிக காரம்.. நீங்கள் சொல்ல வந்த கருத்தை நயமாக, நாகரிகமாகச் சொல்லியிருக்கலாம்.. தமிழில் வார்த்தைகளா இல்லை..?

உண்மைத்தமிழன் said...

[[[problogger said...
இந்தியாவின் எதிர்காலத் தூண். heehe..... யார் இந்த உதயகுமார் எதற்கு இவ்வளவு கோபம்?]]]

ரொம்ப உணர்ச்சிவசப்படுபவர் போல் தெரிகிறது..! மகா ரோஷமான ஒரு இந்தியக் குடிமகன்..!

நசரேயன் said...

அண்ணாச்சி நீங்க சொன்னா சரிதான் ..

உதயகுமார் said...

//உதயகுமார் அண்ணே..

மன்னிக்கணும்.. உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மிக, மிக காரம்.. நீங்கள் சொல்ல வந்த கருத்தை நயமாக, நாகரிகமாகச் சொல்லியிருக்கலாம்.. தமிழில் வார்த்தைகளா இல்லை..?//



மன்னிக்கணும் சகோதரரே,
தமிழில் நிறய இருக்கிறது நல்ல, நாகரிக வர்த்தைகள், அது நலவர்களுக்கு. இது கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்..., அறுவை சிகிச்சை, கொஞ்சம் அழுத்தமாதான் இருக்கும். மற்றபடி நாம் நாகரிகம்தெரியாத ஆள் இல்லையே. ஒரு இந்திய குடிமகனின் அப்பட்டமான கோபம் அவ்வளவுதான். இனிமேலாவது இவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசட்டுமே. நன்றி சரவணன் அண்ணா...!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
அண்ணாச்சி நீங்க சொன்னா சரிதான்]]]

நன்றி நசரேயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[உதயகுமார் said...
மன்னிக்கணும் சகோதரரே, தமிழில் நிறய இருக்கிறது நல்ல, நாகரிக வர்த்தைகள், அது நலவர்களுக்கு. இது கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். அறுவை சிகிச்சை, கொஞ்சம் அழுத்தமாதான் இருக்கும். மற்றபடி நாம் நாகரிகம் தெரியாத ஆள் இல்லையே. ஒரு இந்திய குடிமகனின் அப்பட்டமான கோபம் அவ்வளவுதான். இனிமேலாவது இவர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசட்டுமே. நன்றி சரவணன் அண்ணா.!]]]

இப்படி செஞ்சா அப்புறம் நமக்கும், அவருக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிருமேண்ணே..!

அதுனாலதான் சொன்னேன்.. இரண்டு குற்றங்கள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக் கொள்ளக் கூடாது..

குற்றமும், குற்றமில்லாததும்தான் மோத முடியும். அப்போதுதான் தீர்ப்பை எதிர்கொள்ள முடியும்..!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வெறும் அலட்டல் பேர்வழி இந்த மிஷ்கின். மாமேதை மகேந்திரனிடம் இருக்கும் பணிவில், ஒரு துரும்பேனும் இருந்திருந்தால் இவ்வளவு கேவலப்பட்டிருக்க வேண்டாம். இருளிலும் சூரியக் கண்ணாடி அணிந்து, இசைஞானிக்கே சிபாரிசு செய்யும் மமதை வந்தப்பிறகு இதுப்போன்றவைகளை என்னவென்றுச் சொல்லுவது. என்ன பெரிய இயக்கம்? பாவம் ... இயல்பாக நடிக்கத் தெரிந்த நடிகரான, நரேனை 'ஓவர் ஆக்ட்' செய்ய வைத்து சொதப்பி இருக்கும் காட்சிகளே இதக்கு சான்று.( 'சித்திரம் பேசுதடியில்' (?!) பாவனா கையில் அடிப்பட்டவுடன் பதறுவது,... அஞ்சாதேயில், அஜ்மல் போலீசிடம் அடிவாங்கும் போது பதறுவது ... எல்லாம் ஒரே மாதிரி ஓவர்) இப்போது சேர்க்கை வேறு சரியில்லை. விளங்கினமாதிரித்தான்!

உதயகுமார் said...

very nice, brother. i agree this. thanks...!

உண்மைத்தமிழன் said...

[[[M.S.E.R.K. said...
வெறும் அலட்டல் பேர்வழி இந்த மிஷ்கின். மாமேதை மகேந்திரனிடம் இருக்கும் பணிவில், ஒரு துரும்பேனும் இருந்திருந்தால் இவ்வளவு கேவலப்பட்டிருக்க வேண்டாம். இருளிலும் சூரியக் கண்ணாடி அணிந்து, இசைஞானிக்கே சிபாரிசு செய்யும் மமதை வந்த பிறகு இது போன்றவைகளை என்னவென்று சொல்லுவது. என்ன பெரிய இயக்கம்? பாவம். இயல்பாக நடிக்கத் தெரிந்த நடிகரான, நரேனை 'ஓவர் ஆக்ட்' செய்ய வைத்து சொதப்பி இருக்கும் காட்சிகளே இதக்கு சான்று.( 'சித்திரம் பேசுதடியில்' (?!) பாவனா கையில் அடிப்பட்டவுடன் பதறுவது. அஞ்சாதேயில், அஜ்மல் போலீசிடம் அடி வாங்கும்போது பதறுவது ... எல்லாம் ஒரே மாதிரி ஓவர்) இப்போது சேர்க்கை வேறு சரியில்லை. விளங்கின மாதிரிதான்!]]]

இயக்கம் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது நண்பரே..!

அது வேறு.. இது வேறு என்றாகத்தான் பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[உதயகுமார் said...
very nice, brother. i agree this. thanks...!]]]

கருத்தொற்றுமைக்கு மிக்க நன்றிகள் உதயகுமார்..!