இலங்கை : தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது என்ன?

குகன்நாதன் என்கிற இலங்கைத் தமிழர், இன்றைய நிலவரப்படி இலங்கையில் என்ன நடக்கிறது? இந்திய, தமிழக மக்கள், அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்கிற கருத்தில் இந்தக் கட்டுரையை எழுதியனுப்பியுள்ளார்.

கொஞ்சம் பெரியதாக இருந்ததாலும், விவரமாக இருந்ததாலும் தனிப் பதிவாக இடுகிறேன்..

இலங்கையில் என்ன நடக்கிறது?

இந்தக் கேள்விக்கு சரியான விடையைத் தெரிந்துகொள்ளாமலே தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

நீண்ட கட்டுரைகளை எழுதி-அவற்றைப் படித்துப்பார்க்கின்ற அளவிற்கு இன்று தமிழக மக்களிடம் பொறுமை இருக்குமா என்பது தெரியவில்லை.ஆனாலும் சில கேள்விகளை முன்வைப்பது இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புவோம்.

* 1) இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தவேண்டும்
* 2) அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மத்திய அரசு இலங்கையை நிர்ப்பந்திக்கவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராட்டங்களை நடாத்துகின்றன. திருமாவளவன் கூட சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். (சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தபோதே சில நாட்களில் நிறுத்திவிடுவது என்ற முடிவுடனேயே ஆரம்பித்தார் என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பது வேறு விடயம்) ஆக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காகத்தான் இந்த உண்ணாவிரதம் என்பதையும் இவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தை இடையில் முறித்துக்கொண்டு மணலாறு பகுதியில் 2005ம் ஆண்டு மோதலை ஆரம்பித்தபோது பிரபாகரன் மிகத் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். 'தமிழீழத்துக்கான இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்".

ஆக, பிரபாகரன் உலகத்துக்குச் சொன்னது, தமிழீழத்துக்கான போரை, இறுதிப் போரை தான் ஆரம்பித்துவிட்டதாக. இப்போது நடந்துகொண்டிருப்பது இந்தப் போர்தான். தமிழீழத்துக்காக பிரபாகரன் போரை நடாத்திக் கொண்டிருக்கும்போது அதனை நிறுத்தவேண்டும் என்று நீங்கள் யாரைக் கேட்கின்றீர்கள்? அங்கு நடைபெறும் யுத்தத்தில் ஐந்து லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற உங்களின் அக்கறை நியாயமானது என்றால், நீங்கள் அவசரமாக கோரவேண்டியது என்ன? இந்த மக்களை யுத்தம் நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேற்றி, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்பதையல்லவா நீங்கள் உடனடியாக கோரவேண்டும்? ஏன் இதை இன்னமும் நீங்கள் செய்யவில்லை?

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் என்பது உங்களது இரண்டாவது கோரிக்கை. அதுவும் நியாயமானதுதான்.

ஆனால் 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே, இந்நிலையில் அமைதிப் பேச்சுக்கு இலங்கையை வலியுறுத்தும் தார்மீக உரிமை இந்தியாவிடம் இருக்கின்றதா?

இதைத்தான் விடுவோம்.

நோர்வேயின் மேற்பார்வையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதும் பிரபாகரன் கோரியது என்ன?

முதலில் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வுகாணவேண்டும். அதன் பிறகுதான் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பற்றி பேசலாம். ஏ9 வீதி திறக்கப்படவேண்டும் .பிரபாகரன் பேச்சுவாத்த்தைக்கு முன் நிபந்தனையாக வைத்த வீதியைத்தான் ராணுவம் இப்போது மீட்டு, அதனை மக்கள் போக்குவரத்திற்காக திறக்கவிருக்கின்றது. மக்களின் அன்றாட பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சியில்தான் சிறிலங்காப் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். புலிகள் கோரிக்கை விடுத்த மக்களின் அன்றாட பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்குத்தான் சிறிலங்கா அரசாங்கம் இன்று முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றது. அந்தப் பணி முடிவடைந்ததும் இனப்பிச்னைக்கான இறுதித் தீர்வை எட்டவேண்டிய கட்டாயம் இலங்கை அரசிற்கு வரும். அப்போது நீங்கள் அழுத்தங்களை கொடுங்கள்.

விடுதலைப் புலிகளைப் பற்றி இலங்கை அரசைப் பொறுத்தவரை அது ஒரு பயங்கரவாத இயக்கம். இலங்கை அரசை மாத்திரமல்ல, உலகம் எங்கும் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உலகிலுள்ள கொடுர பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகள் மூன்றாவது இயக்கமாக அமெரிக்கா கடந்த 2007ம் ஆண்டிலும் பதிவு செய்தது.

உலகை இன்று அச்சுறுத்தும் பாரிய பிரச்னை (உலகை என்கின்றபோது இந்தியாவையும்தான்) பயங்கரவாதம். மும்பையில் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு பல அப்பாவிகளை பயணம் வைத்திருந்தபோது, இந்தியா உடனே செய்தது என்ன? தனது கொமாண்டோ படையை களத்தில் இறக்கி பயங்கரவாதிகளுடன் போரிட்டது. அவ்வாறு உடனே போரிட்டிராமல், அவர்களுடன் பேச்சுவாhத்தை நடாத்தி பணயக் கைதிகளை உயிருடன் மீட்டிருக்கலாமே?

அவ்வாறு செய்யாமல், பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களை அழித்ததுடன், அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரையாவது உயிருடன் மீட்க முடிந்ததா? பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக களத்தில் இறங்கி யுத்தம் நடாத்திய இந்தியா- இலங்கையில் அந்த அரசு தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தம் புரிகின்றபோது, யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடாத்தவேண்டும் என்று கோருகின்ற தார்மீக உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றதா?

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று உலகம் சொன்னாலும், உங்களைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரு விடுதலை இயக்கம். அப்படியே வைத்துக்கொண்டால், அவ்வாறு நீங்கள் நம்பினால், செய்யவேண்டியது என்ன?

உங்கள் நாட்டில் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் இருந்து முதலில் நீக்குங்கள். புலிகள் இயக்கத்தை உங்கள் நாட்டில் தடைசெய்து வைத்துக்கொண்டு அந்த இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று வேறு ஒரு நாட்டைக் கோருகின்ற தார்மீக உரிமை உங்களுக்கு இல்லை. இந்திய மத்திய அரசு நினைத்தால் சில மணி நேரங்களிலேயே புலிகள் மீதான தடையை நீக்கிவிடலாம். எனவே மத்திய அரசால் செய்யக்கூடிய ஒன்றை முதலில் செய்யுமாறு வலியுறுத்துங்கள். அதற்கான அழுத்தத்தை முதலில் கொடுங்கள்.

தோழர் திருமாவளவன் சில கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார். இந்தக் கோரிக்கைகளை இவர் யாரிடம் விடுக்கின்றார் என்பதே புரியவில்லை. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யவேண்டும் என்று அவர் முதல் கோரிக்கை வைத்திருக்கின்றார். அப்படியெனில் அவர் தனது முதல் கோரிக்கையை வைப்பது இலங்கை அரசாங்கத்திடமோ அல்லது விடுதலைப் புலிகளிடமோதான். இது சாத்தியமானது அல்ல என்பதும் அவருக்கு தெரியாதது அல்ல. ஆனால், பத்துக் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசிடம் முன்வைத்து புலிகளின் யர்ழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த திலீபன் சாகும்வரை தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் .இருந்தானே. அந்த பத்துக் கோரிக்கைகளையும் இந்தியாவால் அப்போது நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதனை அது செய்யவில்லை. அந்த மத்திய அரசிடம் நீங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்யுமாறு கேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று தமிழகம் உண்மையாகவே விரும்பினால், முதலில் செய்யவேண்டியது-

யுத்தத்தில் இடையில் அகப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களை (இது பொதுவான கணிப்பு. ஆனால் அங்கு ஒரு லட்சம் மக்களே தற்போது இருப்பார்கள்) பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றி அவர்கள் குடியிருக்கும் பகுதியை யுத்தமற்ற பகுதியாக பிரகடனப்படுத்தவேண்டும். அந்தப் பகுதியில் புலிகளும் சென்று பதுங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது. அதற்குப் பின்னர் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய (குறைந்த பட்சம் ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்ற) தீர்வு ஒன்றையாவது உடனே சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வலியுறுத்த வேண்டும்.

இதுவே தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது.

இனி நான்...

குகன்நாதன் ஸார்..

புலிகள் மீதான தடையை எமது அரசியல் தலைவர்கள் நீக்க மாட்டார்கள். அதற்கெல்லாம் ஒரு பரந்த மனப்பான்மையுள்ள தலைவர் வேண்டும். அந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு ஆளும் கட்சியில் யாருக்கும் தைரியம் வராது. ராஜீவ் கொலையை மக்கள் முன் வைத்துத்தான் காங்கிரஸ் ராஜீவ் இல்லாத நிலையில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது. பின்னர் ஆட்சியை இழந்தாலும், இன்றளவும் அது இங்கே தியாகமாகத்தான் கருதப்படுகிறது. அந்தச் சூழலில் புலிகள் மீதான தடையை நீக்கினால் அது அவர்களது எதிர்கால ஓட்டு வங்கியையும், காங்கிரஸ் கட்சியின் தியாக பிம்பத்தையும் உடைக்கும் என்பதால் அதனைச் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என்னைக் கேட்டால், நளினிக்கு மன்னிப்பு அளித்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கின்றபோது அதே மன்னிப்பை விடுதலைப்புலிகளுக்கும் வழங்கித் தொலைக்கலாம்.. ஒன்றும் தப்பில்லை என்பேன். எந்தத் தவறுமே தொடர் கதைகளாகத்தான் வருகின்றனவே தவிர திடீரென்று உருவாக்கப்பட்டவையல்ல..

நீங்கள் சொல்லியிருக்கும் யோசனை ஏற்கக்கூடியதுதான்..

ஆனால் எமது மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையை எப்படியாவது தேர்தல் வரைக்கும் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்று அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் இலங்கைப் பிரச்சினையினைத் தீர்த்துவைப்போம் என்று சொல்லி ஓட்டுப் பொறுக்க.. ஒரு நல்ல வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக பேசக்கூடிய, அவர்களைப் பற்றி நினைக்கக்கூடிய பிரதமர்கள் நமக்குக் கிட்டவில்லை.. இந்திராகாந்தியைத் தவிர..

இதோ எமது பிரதமர் பைபாஸ் ஆபரேஷன் செய்ய மருத்துவமனைக்குள் குடிபுகுந்து விட்டார். இனி அவர் வெளியே வந்தவுடன் "ஐயையோ.. ஸார்கிட்ட இப்படி அதிர்ச்சியான விஷயத்தையெல்லாம் சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க.." அப்படீன்னு சொல்லி எமது அரசியல்வியாதிகள் இன்னும் கொஞ்சம் காலம் கடத்தத்தான் போகிறார்கள். அதற்குள் தேர்தல் வந்துவிட்டால் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், ஓட்டுப் பதிவு என்று பிஸியாகிவிடலாம்.. தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதுதான் உண்மை.

ஈழத் தமிழர்கள் எதை நம்பினாலும் நம்புங்கள்.. தயவு செய்து எமது மாநில மற்றும் மத்திய அரசுகளை இம்மியளவுகூட நம்ப வேண்டாம்.. இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். இப்போதைக்கு இவர்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை.. அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது என்பதுதான்..

வேறு என்ன வழி..?

அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துள்ள புதியவர்களின் கடைக்கண் பார்வை கிடைத்தால், இப்பிரச்சினை தனது முடிவை நோக்கி முதல் புள்ளியை இடும் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கான நடைமுறை வழியைப் பற்றி மட்டுமே நாம் யோசிப்போம்.. இதற்கு முதல் முயற்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம்.. இதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி.

70 comments:

கொழுவி said...

இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தை இடையில் முறித்துக்கொண்டு மணலாறு பகுதியில் 2005ம் ஆண்டு மோதலை ஆரம்பித்தபோது//

அண்ணை.. அது மணலாறு இல்லை !
மாவிலாறு... அதிலும் உங்கள் தகவல் தவறானது. மாவிலாறு என்னும் தமிழ் பகுதியில் இருந்து சேருவில என்னும் சிங்கள கிராமம் ஒன்றிற்கு செல்லும் தண்ணீரின் அணைக்கட்டை சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்கள் பூட்டி விட்டார்கள். மாவிலாறு பகுதிக்கான பொருளாதார தடையை நீக்க வேண்டுமென்பதே அவர்கள் கோரிக்கை. இதனால் சேருவில சிங்கள கிராமத்தில் விவசாயிகள் பாதிப்புற்றனர். அணைகட்டை திறந்து விட சொல்லி புலிகளை கேட்டனர். புலிகள் இந்த விடயத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்தார்கள் என்பது உண்மைதான். அதாவது அது பற்றி பேசலாம். தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்கவும் என தயங்கினர். ஆனால் சர்வதேச அழுத்தம் இந்த விடயத்தில் புலிகளை பணிவுற செய்தது. போர் நிறுத்த கண்காணிப்பு பிரதி நிதியொருவருடன் புலிகளின் பிரதிநிதி எழிலன் அணைக்கட்டை திறக்கச் சென்ற சமயம் சிங்கள படைகள் செல் தாக்குதலை செய்தனர்.

----------

இந்த விடயங்கள் சிங்கள மேலாதிக்கத்துக்கு பொறுக்கவில்லை. தண்ணீரை தருவதை எதற்கு அவர்களை கேட்கவேண்டும். அந்த பகுதியை கைப்பற்றி விடலாமே என போரை ஆரம்பித்தனர். (தண்ணீர் தரவில்லையென்ற காரணத்திற்காக போர் தொடுத்து தண்ணீரை பெற்றுக் கொண்ட சிங்களவரின் தில் லை இந்த விடயத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது :))

------------

அடுத்த விடயம்
போர் நடக்கும் பகுதிகள் அந்த மக்களின் சொந்த நிலம். காலம்காலமாக வாழ்ந்த இனம். மக்களை வெளியேற சொல்வதை விட அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் பிற மனிதரைதானே வெளியேற சொல்ல வேண்டும்.. உதாரணமாக சென்னைக்கு கர்நாடக காரர் படையெடுத்தால்
சென்னை மக்கள் அந்த நிலத்தை விட்டு விட்டு போக வற்புறுத்தலாமா.. அல்லது படையெடுத்தவரை போக வற்புறுத்தலாமா..?

-------------------------------

ஆனால் 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே
----------------------------------

எப்போது... ? வர வர பாக்கிறேன். ஆளாளுக்கு போகிற போக்கில் கண்டபடி பொய்களை விதைத்து விட்டு போகிறீர்கள். பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அப்படியே விட்டுவிட மாட்டோம்.
---------------------
பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த போது ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் கேரளாவில் தங்கியிருந்து மருத்துவ வசதி பெற கேட்டாரே.. நினைவிருக்கிறதா? சர்வதேசம் பங்கு கொண்ட ஒரு நிலையில் பேச்சுகள் வெளிநாடுகளில் நிகழ்ந்த நிலையில் ஆன்டன் இந்தியாவில் தங்குவதற்கு ஏன் கேட்டார்? இந்திய அணுகுமுறையை அச் சம்பவமூடாக மாற்றி அவர்களையும் உள்ளிழுக்கும் அரசியல் நகர்வுதான் அது. இந்திய நிலையென்ன என்பதை ஆராயும் செயல்..
-------------------------------

ஈழத்தமிழன் என சொல்லிக் கொள்பவருக்கே இதையெல்லாம் சொல்லிகொடுத்து விளங்கப்படுத்துவது காலக் கொடுமையன்றி வேறென்ன... ?

benza said...

கொழுவி சார் பெருமூச்சுடன் திருத்தங்கள் தந்துளீர்கள் > நன்றி!

மாவிலாறோ மணலாரோ எந்த ஆறாகவும் இருக்கட்டும் >
யுத்தத்தை தொடக்கியவன் எவனாகவும் இருக்கட்டும் >
எழுத்து பிழைகளும் பெயர் பிழைகளும் கடுரையில் வரக்கூடும் அனேகமாக அப் பிழைகள் உணற்சிவசப்படும் போது வரத்தான் செய்யும் >
அவற்றை நாம் எமது myopic கண்களால் பாராது எழுதியவரது நோக்கத்தை அலசுவது தான் சமூக பிரயோஜன செயலாகும் என்பது எனது தாழ்மையான கருத்து >

பாதிகபட்டவர்கள் நாங்கள் > எமது பிள்ளைகளது வெளிநாட்டு பணத்தை
பிடுங்கி அதனால் வாங்கிய துவக்கை எமக்கே எதிராக பிடித்து அடாவடித்தனம் செய்து ''நாம் தான் தமிழரது ஏக பிரதிநிதி'' என்பதை எப்பிடி ஐயா படித்து பட்டம் பெற்று பண்பானவர் என பெயர் வாங்கிய
நீங்கள் அப்பட்டமான பொய்களை நம்புகின்றீர்கள் ?
அல்லது அந்த புலிகளின் பொய்களை நம்புவதுபோல நடிகின்றீர்களா ?
கட்டுரை எழுதியவரது மனப்பாங்கு யதார்த்தமானதே !
கொழுவி அண்ணா கோவிச்சுகாதே நான் சின்னவன் மட்டும் அல்ல
சகலதையும் இழந்த வறியவன் >
தங்களை போன்றோரின் பெருந்தன்மையை யாசிக்கின்றேன் > நன்றி !

கொழுவி said...

//
அனேகமாக அப் பிழைகள் உணற்சிவசப்படும் போது வரத்தான் செய்யும்
//
இதை உங்களுக்கும் பதிலாக சொல்ல முடியும் ஆனாலும் ஒருவர் அடைந்த வலிக்கோ துயரத்திற்கோ பதிலாக சொல்ல முடியாதென்று எனக்குத் தெரியும். புலிகளால் துயரடைந்தவர் வலியடைந்தவர் உள்ளார் எனவும் தெரியும். அது உண்மையும் கூட..

ஆனால் அதற்காக ஏதோ சிங்களம் தமிழர் வாயில் தேனையும் பாலையும் அள்ளிப் பருகியதைப் போலவும் அதற்கு புலிகள் கொப்பளித்து உதறிவிட்டதை போன்றதெனவும் நீங்கள் காட்ட முயல்வதை பாத்து கொண்டிருக்க முடியாதல்லவா...!

ஏகபிரதிகள் என்ற வார்த்தை ஜனநாய் யக வாதிகளுக்கு உவப்பற்றது. ஆனால் ஆகக்குறைந்தது பிரதிநிதிகள் எனச் சொல்வதற்கு புலிகளுக்கு சகல தகுதிகளும் உள்ளது. கருணாவை விட டக்ளசை விட.. ஆனந்தசங்கரியை விட.....
------------------------------------
கட்டுரை எழுதியவரது மனப்பாங்கு யதார்த்தமானதே !//

வேண்டுமென்றே உண்மைகளை திரிப்பவர்கள் யதார்த்தமானவர்களா.. அதாவது வலி பெற்றவர்கள் - துயரடைந்தவர்கள் உண்மைகளை திரித்தே கூறுவார்கள் என்பது யதார்த்தமானதா.. அவ்வாறாயின் புலிகளால் பாதிக்கப் பட்டவர்கள் கூறுவதெல்லாமே திரிக்கப்பட்ட தகவல்கள் தானா..

benza said...

\\கொஞ்சம் பெரியதாக இருந்ததாலும், விவரமாக இருந்ததாலும் தனிப் பதிவாக இடுகிறேன்//

உண்மை தமிழன் > தருணதிற்க்கு பொருத்தமான கட்டுரையை தந்ததுடன் தங்களது கருத்துக்களையும் பகின்றதற்கு எனது மனதார நன்றிகள்

மேலும் குகநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை அறிவிக்க விரும்புகின்றேன் >

குகநாதன் தம்பி > துவக்கு தூக்கியவன் பலருக்கு கீரோவாக இருக்கலாம் >
எமது ''தமிழ் சமுதாய விடுதலை'' என்ற போர்வையில் கொள்ளை கொலை கொடூரம் நடாத்தும் இயக்கங்களில் படிப்பு வராதோர் இணைந்தார்கள் என்பதும்
''படித்தவன் எல்லாம் எங்களுக்கு எதிர்'' என்ற பிரபாகரனின் வசனமும் > என்னுள் இன்றும் உள்ளது >>>

இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக தமிழன் ஒருவர் இருந்தார் >
கடற் படையின் தளபதியாக இனொருவர் இருந்தார் >
உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக மற்றுமொருவர் இருந்தார் >
திறைசேரியினது செயலாராக இருந்து நிதித்துறையை வளிநடாத்தினார் மேலுமொருவர் >
ஆகவே இலங்கையில் தமிழன் ஒருபோதும் அடிமையாக இருக்கவில்லை >
சில வேளைகளில் சில பதவிகளை பகிரும் போது புறகணிக்கப் பட்டுருந்தோம் என்பது உண்மைதான் >

அண்ணனை மதிக்காத தம்பிக்கு நடந்தது தான் தமிழராகிய எமக்கும் நடந்தது !

இலங்கை தமிழர் சகலரும் புலிகளைச் சார்ந்தவர்கள் அல்லது தமிழ் துரோகிகள் என்ற முட்டாள் தனமான கருத்து எப்படிதான் தமிழ் நாட்டு படித்த மக்களிடையே பரவலாக பரவியது ?

சரி, சொல்லுறவன் சொல்லட்டும் அதனை கேட்ட்பவனுக்கு பகுத்தறியும் மன பாங்கு வேண்டாமா சொல்லுங்கள் !

எங்களது சகல குடும்பங்களும் தனித்தனியே பத்தாயிரம் ரூபா தவறாது அளிக்கவேண்டும் என்று வலுகட்டாயமாக பறித்த கதைகளை தற்போதைக்கு ஒதுக்கி விட்டு >>>

தனி ஒரே ஒரு கட்சியினது ஆட்சியை எந்த மடையன் வரவேற்பான் ?

இந்த தனி கட்சி ஆட்சியை உங்கள் மீது திணித்தால் தமிழ் நாட்டு மக்களாகிய நீங்கள் ஆதரிப்பீர்களா ? அதனை ஏற்றுகொள்வீர்களா ?

அல்லது புலிகளின் பணத்தை நக்கிக் கொண்டு இலங்கை தமிழரது எதிர் காலத்தை பாரா முகமாக நாசமாக்கின்ற வழியில் எம்மை தள்ளுகின்றீர்களா ?

புலியின் பிரச்சாரத்தை பகுத்தறியாது
நம்பும் தமிழ் நாட்டு சகோதரி சகோதரனே நேரடியாகப் பாதிக்கப்பட்ட உன் சகோதரனை கை விடாதே !

விபரம் புரியாதானால் இடையுறாது
ஓதுங்கியிரு புண்ணிமாகும் !

benza said...

\\"அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே//

கொழுவி அண்ணை > சந்தர்பம் கூறி விளக்க தெரியலை > குகநாதன் சொன்னது போல பிரபாகரன் சொன்னார் என யாழ் நகரில் பலர் சொல்ல கேள்விபட்ட விஷயம் இது >

அது மாத்திரமல்ல ''வடகத்தையானுக்கு எங்கட அலுவலிலை தலையிட உருமைகிடையாது'' என்றும் கூறினாராமே >

மேலும் அவர் தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வர முன்னர் கூறியது உங்களது காதுக்கு நிற்சயமாக எட்டியிருக்குமே > ''இங்கை இருந்து முதுகிலை கத்தியால் குத்து வாங்கிறதைவிட இலங்கைக்கு போய் நெஞ்சிலை குண்டடிபடுவது திறம்''

ஆட்காட்டி1 said...

அது என்ன வெளி நாட்டுப் பணம். ஏதோ படிச்சுப் பட்டம் பெற்று, பீஅச்டி முடிச்சுப் போனதுகளோ? எல்லாப் பேய்களும் ஓடிப் போயிட்டு அகதி எண்டு கேட்டு அழுது வடிஞ்சிட்டு, இப்ப சீனப் போட்டா? வன்னியில் எம் மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்துக்கும் வெளி நாடுகளில் வசிக்கும் பேய்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.இதுகள் அகதிக் காசுக்கு புலிகள் கட்டி வைச்சு அடிச்சங்கள் எண்டு சொன்னா அவனவன் என்ன செய்வான்? எத்தனை லச்சம் முறைப்பாடுகள் கணக்குப் போட்டுப் பாருங்கோ.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே//

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது !
பிரபாகரன் அவ்வாறு தான் கூறினார் !
இந்திய அமைதி காக்கும் படை அங்கு இருக்கும் போது " இது சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினை இதில் மூன்றாமவர் தலையிட வேண்டாம் உடனே வெளியேற வேண்டும் " என்றும் கூறினார் !

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே//


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது !
பிரபாகரன் அவ்வாறு தான் கூறினார் !
இந்திய அமைதி காக்கும் படை அங்கு இருக்கும் போது " இது சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினை இதில் மூன்றாமவர் தலையிட வேண்டாம் உடனே வெளியேற வேண்டும் " என்றும் கூறினார் !

Adriean said...

உண்மைத் தமிழன், அவசியம் தேவையான பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தங்களுக்கும் குகன்நாதனுக்கும் நன்றி

Anonymous said...

காரணங்களை பட்டியலிட்டு புலிகளை 100 வீதம் எதிர்ப்பவர்கள்.. இங்கே சிங்களை அரசை 1000 வீதம் எதிர்க்கிறார்கள் என்பதே சொல்லாமல் விடுகிற செய்தி..

ஏனெனில் அந்த காரணங்கள் சிங்கள அரசுக்கு மேலதிகமாகவும் பொருந்துகின்றன. ஆக குகநாதனோ benzaloy யோ சிங்கள அரசுகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே உண்மை.

Anonymous said...

கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி
முதலமைச்சர்
சென்னை

இப்போது இது தங்கள் நேரம்

மதிப்புக்குரிய ஐயா,

முழுப்பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு ஒரு தடவை விஜயத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரில் பார்த்தால் தான் எதிலும் முழு நம்பிக்கை ஏற்படும். இங்கே என்ன நடக்கிறது என்று கண்டறிய தாங்கள் ஒரு தடவை இலங்கைக்கு வர வேண்டும். நான் தங்களுக்கு பல கடிதங்களும் தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நியாயமாமன தீர்வுக்கேற்ற பல யோசனைகளுடன் பல வேண்டுகோள்களையும் விடுத்திருந்தேன். உண்மைகளை அறிவதிலேயோ அன்றி எனது கடிதங்களுக்குப் பதில் அனுப்புவதிலேயோ எவரும் பெரிதும் அக்கறைப்படவில்லை. தமிழ் நாட்டில் இன்னுமோர் யாழ்ப்பாணம் உருவாகுவதை அனுமதிக்க வேண்டாமென்று எச்சரித்திருந்தேன். கொடிய விஷப் பாம்புகள் தலையணையின் கீழ் இனப்பெருக்கம் செய்யும் வேளை தமிழ்நாடு கவலையின்றி ஆழ்ந்து தூங்குவதாகவும் எச்சரிக்கை செய்திருந்தேன். எனது வேண்டுகோள்கள், மனுக்கள், எச்சரிக்கைகள் எவற்றையும் யாரும் பொருட்படுத்தாமையால் நான் கூறியவை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

பாராளுமன்ற ஆசனங்களை பெற விடுதலைப் புலிகளே உதவியதால் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உத்தரவுகளுக்கமைய நடக்கின்றபடியால் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் பேசும் தார்மீக கடமை அவர்களுக்கு இல்லாது போனாலும் அவர்கள் முழு தமிழ் நாட்டையும் தப்பாக வழி நடத்த தவறவில்லை. முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் பினாமிகளாக அவர்கள் செயற்படுவதால் அவர்கள் தமது நாணயத்தை இழந்து விட்டனர். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் கொடிய பயங்கர செயல்களை மூடி மறைப்பதால் தமிழ் மக்களின் வெறுப்பையும் பெருமளவில் சம்பாதித்துள்ளனர்.

எனது முழு அக்கறையும் மக்களின் நல்வாழ்வை கருதித்தான் என்பதை தயவு செய்து நம்புங்கள். நான் யாருக்கும் முகவராகவோ அன்றி அரசின் கைக்கூலியாகவோ செயற்படவில்லை. அரசுடன் எல்லா விடயங்களிலும் நான் ஒத்துப் போகிறவன் அல்ல. ஆனால் புலிகளை ஒழிக்கும் விடயத்தில் அரசுக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றேன். அவ்வாறு செயற்படுவதற்கு என்னை மன்னிக்கவும். அவர்களின் கொடூர செயற்பாடுகள் கோட்பாடுகளையும் எல்லைகளையும் தாண்டிவிட்டன. எழுபதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயிர் பலி எடுப்பதற்கு காரணமாக இருந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழ்விழந்தும் விதவைகளாகவும், அநாதைகளாகவும், ஆக்கப்பட்டுள்ளனர். கண்பார்வை இழந்தோர், கால் கைகளை இழந்தோர், உணர்வுகளை இழந்தோர் பல்லாயிரம். தமிழ் மக்களின் தலைமையில் பெரும் இடைவெளி விழுந்துள்ளது. பல முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், கனவான்கள், அரசியற் தலைவர்கள் ஆகியோர் கொல்லப்பட்டும், நாட்டை விட்டு ஓடவும் செய்யப்பட்டுள்ளனர். திரு. சம்பந்தன் போன்ற தலைவர்கள் கூட விடுதலைப் புலி தலைவர்கள் தமிழ்ச்செல்வன் போன்றோரின் வழி காட்டலுக்கு செயற்பட வேண்டியுள்ளது. முன் பின் யோசனையின்றி பேசுவதால் திரு. சம்பந்தன் தன் தகமையை இழந்து விட்டார். அவரின் பேச்சுக்கள் வேறு யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் பேசப்படுவதாக தோன்றுகிறது. பாராளுமன்றத்தில் அவரின் பேச்சுக்கள் ஒருதலைபட்சமாகவும் விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசப்படாமலே நடைபெறுகிறது.

எவருக்கும், எவரையேனும் கொல்லுகின்ற உரிமை கிடையாது. பல குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள், அப்பாவி தொழிலாளிகள் பாடசாலை பிள்ளைகள் போன்ற சிங்கள சமூகத்தை சேர்ந்தோர் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் பல அப்பாவித் தமிழ் மக்களும் அவர்கள் படைகளுக்கு இலக்கு வைக்கும் கிளேமோர் வெடிகளில் அகப்பட்டு இறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் திரு சம்பந்தனோ அன்றி ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமோ விடுதலைப் புலிகள் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாது அல்லது அவர்களின் கொடூரச் செயல்களால் பல அப்பாவி சிங்கள, தமிழ் மக்கள் கொல்லப்படுவதையோ கண்டித்தது கிடையாது. தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளில் 95 சதவீதத்தை இழந்த விடுதலைப் புலிகள் தற்போது முல்லைத்தீவு தொகுதியின் ஒரு சிறு பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சமூகம் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் தூதரகமும் இலங்கையில் உண்டு. உண்மை முழு உலகிற்கும் தெரியும் இந்த சூழ்நிலையில் மக்கள் படும் துன்பங்களுக்கு அரசை குற்றஞ்சாட்டும் திரு. சும்பந்தன் அவர்கள் பாடசாலை, சுகாதாரம், குடிநீர் போன்றவை போதியளவு இல்லாத ஓர் குற்கிராமதத்தில் இரண்டரை லட்சம் மக்களை பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளமை பற்றி விடுதலைப் புலிகளை கண்டிக்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளை காப்பாற்றவும் தமிழ் நாட்டவரை தப்பாக வழி நடத்துவதற்காகவுமே உண்மை நிலைமையை மறைக்கின்றனர்.

ஐயா, தங்களுக்கு ஓர் முக்கிய பங்களிப்பு இப்போது உண்டு. முதலாவதாக வன்னியில் அகப்பட்டு கொண்ட அப்பாவி மக்களை விடுவித்தல். இரண்டாவதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உதவுதல். அரசு இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளதென்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டு முழு பொய்யானதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் உலகு முழுவதற்கும் முன்னெடுத்துச் செல்லப்படுவதுமாகும். இத்தகைய ஓர் பொய் பிரச்சாரமே தமிழ் நாட்டு மக்களை இலங்கைக்கு எதிராக வீறு கொண்டு எழ வைத்தது. பெரும் ஆர்ப்பாட்டங்களில் மக்களை ஈடுபடவும்; வைத்தது. சிறு அளவில் ஆட்கடத்தல், பணம் பறித்தல், கொலை ஆகியன நடப்பதை நான் மறுக்கவில்லை. அதில் புலிகளுக்கும் வேறு சிலருக்கும் பங்குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்புடைய சிலருக்கும் இத்தகைய குற்றங்களில் பங்கு உண்டா என கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அரசுடையதே. சிங்கள, இஸ்லாமிய பொது மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிக அன்பாகவும் பண்பாகவும் தம் மத்தியில் வாழும் 55 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடன் சமாதானமாக வாழ்கின்றனர். அத் தமிழ் மக்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக கொழும்பிலும் அயல் பட்டணங்களிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

எம் மக்கள் மீது எத்தகைய அக்கறை எனக்கு உண்டென நான் விளக்கத் தேவையில்லை. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்த ஓர் தமிழன். இந்தியர்கள் தாம் முதலில் இந்தியன் என பெருமை கூறுவது போல் நானும் முதலில் இலங்கையனே. இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அதே இனத்தைச் சேர்ந்தவன். நான் நாட்டைவிட்டு ஓடிப்போகவில்லை. குறிப்பாக யுத்தத்தின் இறுதி கட்டங்களில் மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கும் மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மக்களே. நீண்ட காலமாக என்னால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தபட்ட மக்கள் மீது நான் கொண்டுள்ள அக்கறை வேறு எவரேனும் கொண்டுள்ள அக்கறையிலும் குறைந்ததல்ல. மேலும் கூறுவதானால் அதிலும் கூட என்றே கூற வேண்டும். யுத்தத்தை நிறுத்த வேண்டுமென தமிழ் நாட்டு அரசும் மக்களும் கேட்டு போராடியது பிழையான சிந்தனையில் உருவாகியதென்றும், நியாயப்படுத்த முடியாததொன்று எனவும், தயக்கத்துடன் என்றாலும், உறுதியாக கூறுகின்றேன். மற்றும் பல விடயங்களோடு நம் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை முற்றாக அழித்த ஓர் பயங்கரவாத இயக்கத்துடன் அரசு போராடுகின்றது. ஒரு காலத்தில் கௌரவமாக தலை நிமிர்ந்து நின்ற எமது சமூகத்தை யாழ்ப்பாண ஸ்ரீதர் படமாளிகை வாசலில் வரிசையாக கால்கடுக்க நின்று கையேந்த காரணமாக இருந்தவர்களும் விடுதலைப் புலிகளே. வன்னி வாழ் மக்கள் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளிடமிருந்து விடுதலை வேண்டி நின்றதை தமிழ் நாட்டு மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் பல்வேறு பிரிவினரும் தனித்தனியே எடுத்த முயற்சிகளை ஒன்று சேர்த்து நியாயமான ஓர் தீர்வை பெற சமாதானமாகவும், நட்புடனும் செயற்பட்டிருந்தால் இந்திய மத்திய அரசு முழு ஆதரவு தந்திருக்கும். அத்துடன் இலங்கையும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் பல்வேறு உறவுகள் காரணமாக நியாயமான ஓர் தீர்வு காண சாதகமான பங்களிப்பை செய்து இரு நாடுகளும் நெருங்கி வந்து நட்பையும் வளர்க்க உதவியிருக்கும்.

நான் பிறப்பதற்கு முன்பு இலங்கைக்கு வந்த காந்திஜி அவர்கள் இந்தியாவும், இலங்கையும் பகையாளிகளாக இருக்க முடியாது என்று கூறியவற்றை அடிக்கடி கூறி வந்துள்ளேன். அக் கூற்று கூடுதலாக தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் தான் பொருந்தும். மேலும் தாங்கள் அடிக்கடி தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு பற்றி பேசுவீர்கள். அதேபோன்ற தொப்புள்கொடி உறவு சிங்கள மக்களுக்கும் மதுரை தமிழ் மக்களுக்கும் இருப்பதை பற்றி தாங்களோ தமிழ் நாட்டு மக்கள் எவருமோ அறிவார்களோ என எனக்குத் தெரியாது. சிங்கள பௌத்தர் மத்தியில் பெருமளவு பத்தினி வழிபாடு(கண்ணகி) இருப்பதும் அவர்கள் அறிவார்களா?

இனப்பிரச்சனை ஓர் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ளதை பற்றி நான் கூறத் தேவையில்லை. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தாங்கள் ஒரு தடவை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டால் இனப்பிரச்சனை தீர்வுக்கு ஒரு வாய்ப்பு இருக்குமென நம்புகிறேன்.

நன்றி

தங்கள்
உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ.

Anonymous said...

http://dbsjeyaraj.com/dbsj/archives/113#comments

அனைத்து உலக தமிழர்களும் படிக்க வேண்டிய கட்டுரை..

32 வருட புலிகளின் ஆயுத போராட்டம்

டி பி எஸ் ஜெயராஜ்

Anonymous said...

http://dbsjeyaraj.com/dbsj/archives/113#comments

உண்மைத்தமிழன் said...

//கொழுவி said...
இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தை இடையில் முறித்துக்கொண்டு மணலாறு பகுதியில் 2005ம் ஆண்டு மோதலை ஆரம்பித்தபோது//
அண்ணை.. அது மணலாறு இல்லை!
மாவிலாறு. அதிலும் உங்கள் தகவல் தவறானது. மாவிலாறு என்னும் தமிழ் பகுதியில் இருந்து சேருவில என்னும் சிங்கள கிராமம் ஒன்றிற்கு செல்லும் தண்ணீரின் அணைக்கட்டை சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்கள் பூட்டி விட்டார்கள். மாவிலாறு பகுதிக்கான பொருளாதார தடையை நீக்க வேண்டுமென்பதே அவர்கள் கோரிக்கை. இதனால் சேருவில சிங்கள கிராமத்தில் விவசாயிகள் பாதிப்புற்றனர். அணைகட்டை திறந்து விட சொல்லி புலிகளை கேட்டனர். புலிகள் இந்த விடயத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்தார்கள் என்பது உண்மைதான். அதாவது அது பற்றி பேசலாம். தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்கவும் என தயங்கினர். ஆனால் சர்வதேச அழுத்தம் இந்த விடயத்தில் புலிகளை பணிவுற செய்தது. போர் நிறுத்த கண்காணிப்பு பிரதிநிதியொருவருடன் புலிகளின் பிரதிநிதி எழிலன் அணைக்கட்டை திறக்கச் சென்ற சமயம் சிங்கள படைகள் செல் தாக்குதலை செய்தனர்.
இந்த விடயங்கள் சிங்கள மேலாதிக்கத்துக்கு பொறுக்கவில்லை. தண்ணீரை தருவதை எதற்கு அவர்களை கேட்கவேண்டும். அந்த பகுதியை கைப்பற்றி விடலாமே என போரை ஆரம்பித்தனர். (தண்ணீர் தரவில்லையென்ற காரணத்திற்காக போர் தொடுத்து தண்ணீரை பெற்றுக் கொண்ட சிங்களவரின் தில்லை இந்த விடயத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது:))//

தற்போதைய ஈழப் போர்-4 அன்றுதானே ஆரம்பித்தது.

//அடுத்த விடயம். போர் நடக்கும் பகுதிகள் அந்த மக்களின் சொந்த நிலம். காலம் காலமாக வாழ்ந்த இனம். மக்களை வெளியேற சொல்வதைவிட அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் பிற மனிதரைதானே வெளியேற சொல்ல வேண்டும்.. உதாரணமாக சென்னைக்கு கர்நாடககாரர் படையெடுத்தால்
சென்னை மக்கள் அந்த நிலத்தை விட்டு விட்டு போக வற்புறுத்தலாமா.. அல்லது படையெடுத்தவரை போக வற்புறுத்தலாமா..?//

நல்ல கேள்வி கொழுவி.. ஆனாலும் வெளியிலிருந்து எங்களைப் போன்றவர்கள் இதற்கு பதில் சொல்வது கஷ்டம்தான்..

//ஆனால் 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே..
எப்போது... ? வர வர பாக்கிறேன். ஆளாளுக்கு போகிற போக்கில் கண்டபடி பொய்களை விதைத்து விட்டு போகிறீர்கள். பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அப்படியே விட்டுவிட மாட்டோம்.//

அவர் அப்படித்தான் சொன்னார் என்று நானும் பல இடங்களில் படித்திருக்கிறேன் கொழுவி.

//பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் கேரளாவில் தங்கியிருந்து மருத்துவ வசதி பெற கேட்டாரே நினைவிருக்கிறதா? சர்வதேசம் பங்கு கொண்ட ஒரு நிலையில் பேச்சுகள் வெளிநாடுகளில் நிகழ்ந்த நிலையில் ஆன்டன் இந்தியாவில் தங்குவதற்கு ஏன் கேட்டார்? இந்திய அணுகுமுறையை அச்சம்பவமூடாக மாற்றி அவர்களையும் உள்ளிழுக்கும் அரசியல் நகர்வுதான் அது. இந்திய நிலையென்ன என்பதை ஆராயும் செயல்..//

ஆனால் அதுதான் எமது அரசியல் அதிகாரிகளின் சூழ்ச்சியினால் நடக்காமல் போய்விட்டதே..

//ஈழத் தமிழன் என சொல்லிக் கொள்பவருக்கே இதையெல்லாம் சொல்லி கொடுத்து விளங்கப்படுத்துவது காலக்கொடுமையன்றி வேறென்ன?//

இதுக்கெல்லாம் போய் கொழுவி கோச்சுக்கலாமா..? சோம்பேறித்தனப்படலாமா..?

கேட்டது உங்களது சக தோழர்தான்.. சக தமிழர்தான்..

இருக்கின்ற கொஞ்சம், கொஞ்சம் மனஸ்தாபங்களையும் பேசி, பேசித்தான் தீர்க்க வேண்டும்.. வேறு வழியில்லை..

எதிரியாக இருந்தால் சண்டையிடலாம்.. அதுவே சகோதரனாக இருந்தால்.. கருத்து வேறுபாடுகளை பேசியாவது தீர்க்கப் பாருங்கள்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
கொழுவி சார் பெருமூச்சுடன் திருத்தங்கள் தந்துளீர்கள் > நன்றி!
மாவிலாறோ மணலாரோ எந்த ஆறாகவும் இருக்கட்டும் >
யுத்தத்தை தொடக்கியவன் எவனாகவும் இருக்கட்டும் >
எழுத்து பிழைகளும் பெயர் பிழைகளும் கடுரையில் வரக்கூடும் அனேகமாக அப்பிழைகள் உணற்சிவசப்படும் போது வரத்தான் செய்யும் >
அவற்றை நாம் எமது myopic கண்களால் பாராது எழுதியவரது நோக்கத்தை அலசுவதுதான் சமூக பிரயோஜன செயலாகும் என்பது எனது தாழ்மையான கருத்து >
பாதிகபட்டவர்கள் நாங்கள் > எமது பிள்ளைகளது வெளிநாட்டு பணத்தை
பிடுங்கி அதனால் வாங்கிய துவக்கை எமக்கே எதிராக பிடித்து அடாவடித்தனம் செய்து ''நாம்தான் தமிழரது ஏக பிரதிநிதி'' என்பதை எப்பிடி ஐயா படித்து பட்டம் பெற்று பண்பானவர் என பெயர் வாங்கிய
நீங்கள் அப்பட்டமான பொய்களை நம்புகின்றீர்கள்? அல்லது அந்த புலிகளின் பொய்களை நம்புவதுபோல நடிகின்றீர்களா? கட்டுரை எழுதியவரது மனப்பாங்கு யதார்த்தமானதே!
கொழுவி அண்ணா கோவிச்சுகாதே நான் சின்னவன் மட்டும் அல்ல
சகலதையும் இழந்த வறியவன் >
தங்களை போன்றோரின் பெருந்தன்மையை யாசிக்கின்றேன் > நன்றி !//

நன்றி பென்ஸ் ஸார்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்..

அனுபவமே இறைவன் என்பதால் அவ்வளவு எளிதாக மனதை மாற்றிக் கொள்ளவும் இயலாது..

பென்ஸ் ஸார் கலக்கம் வேண்டாம்.. கொழுவியண்ணையோட கருத்து அவருக்கு.. உங்க கருத்து உங்களுக்கு..

உண்மைத்தமிழன் said...

///கொழுவி said...
//அனேகமாக அப்பிழைகள் உணற்சிவசப்படும் போது வரத்தான் செய்யும்.//
இதை உங்களுக்கும் பதிலாக சொல்ல முடியும். ஆனாலும் ஒருவர் அடைந்த வலிக்கோ, துயரத்திற்கோ பதிலாக சொல்ல முடியாதென்று எனக்குத் தெரியும். புலிகளால் துயரடைந்தவர் வலியடைந்தவர் உள்ளார் எனவும் தெரியும். அது உண்மையும் கூட..
ஆனால் அதற்காக ஏதோ சிங்களம் தமிழர் வாயில் தேனையும் பாலையும் அள்ளிப் பருகியதைப் போலவும் அதற்கு புலிகள் கொப்பளித்து உதறிவிட்டதை போன்றதெனவும் நீங்கள் காட்ட முயல்வதை பாத்து கொண்டிருக்க முடியாதல்லவா...!//

கொழுவியாரே..

பென்ஸ் ஸார் அப்படிச் சொல்லவில்லை. சிங்கள ராணுவத்தையும் அவர் விமர்சித்தே வருகிறார். கண்டித்தே வந்திருக்கிறார்.

//ஏக பிரதிகள் என்ற வார்த்தை ஜனநாயகவாதிகளுக்கு உவப்பற்றது. ஆனால் ஆகக் குறைந்தது பிரதிநிதிகள் எனச் சொல்வதற்கு புலிகளுக்கு சகல தகுதிகளும் உள்ளது. கருணாவைவிட டக்ளசைவிட.. ஆனந்தசங்கரியைவிட.//

இதுதான் குழப்பமே.. ஒருமித்தக் கருத்துடன் அநேக தமிழர்கள் இல்லை என்பதுதான் உண்மை..

//கட்டுரை எழுதியவரது மனப்பாங்கு யதார்த்தமானதே! வேண்டுமென்றே உண்மைகளை திரிப்பவர்கள் யதார்த்தமானவர்களா.. அதாவது வலி பெற்றவர்கள் - துயரடைந்தவர்கள் உண்மைகளை திரித்தே கூறுவார்கள் என்பது யதார்த்தமானதா.. அவ்வாறாயின் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதெல்லாமே திரிக்கப்பட்ட தகவல்கள்தானா..?//

நான் அப்படி நினைக்கவில்லை கொழுவிய. அவரவர் அனுபவம் அவரவரை ஒரு திக்கில் செல்ல வைக்கிறது.வேறொன்றுமில்லை..

புரியாதது புரிகின்றபோது அனைத்துமே புரியும் அனைவருக்கும்.. காத்திருங்கள்.. காத்திருப்போம்..

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
\\கொஞ்சம் பெரியதாக இருந்ததாலும், விவரமாக இருந்ததாலும் தனிப் பதிவாக இடுகிறேன்//
உண்மைதமிழன் > தருணதிற்க்கு பொருத்தமான கட்டுரையை தந்ததுடன் தங்களது கருத்துக்களையும் பகின்றதற்கு எனது மனதார நன்றிகள்.//

நன்றி பென்ஸ் ஸார்.. பார்த்தவுடன் தனிப் பதிவாகப் போட வேண்டும்போல் தோன்றியது. அதனால்தான் எழுதினேன்..

//மேலும் குகநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை அறிவிக்க விரும்புகின்றேன். குகநாதன் தம்பி > துவக்கு தூக்கியவன் பலருக்கு கீரோவாக இருக்கலாம். எமது ''தமிழ் சமுதாய விடுதலை'' என்ற போர்வையில் கொள்ளை, கொலை கொடூரம் நடாத்தும் இயக்கங்களில் படிப்பு வராதோர் இணைந்தார்கள் என்பதும் ''படித்தவன் எல்லாம் எங்களுக்கு எதிர்'' என்ற பிரபாகரனின் வசனமும் என்னுள் இன்றும் உள்ளது. இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக தமிழன் ஒருவர் இருந்தார். கடற் படையின் தளபதியாக இனொருவர் இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மற்றுமொருவர் இருந்தார் >
திறைசேரியினது செயலாராக இருந்து நிதித்துறையை வளிநடாத்தினார் மேலுமொருவர். ஆகவே இலங்கையில் தமிழன் ஒருபோதும் அடிமையாக இருக்கவில்லை. சில வேளைகளில் சில பதவிகளை பகிரும் போது புறகணிக்கப்பட்டுருந்தோம் என்பது உண்மைதான். அண்ணனை மதிக்காத தம்பிக்கு நடந்ததுதான் தமிழராகிய எமக்கும் நடந்தது !
இலங்கை தமிழர் சகலரும் புலிகளைச் சார்ந்தவர்கள் அல்லது தமிழ் துரோகிகள் என்ற முட்டாள் தனமான கருத்து எப்படிதான் தமிழ் நாட்டு படித்த மக்களிடையே பரவலாக பரவியது ?
சரி, சொல்லுறவன் சொல்லட்டும் அதனை கேட்ட்பவனுக்கு பகுத்தறியும் மனபாங்கு வேண்டாமா சொல்லுங்கள்!
எங்களது சகல குடும்பங்களும் தனித்தனியே பத்தாயிரம் ரூபா தவறாது அளிக்கவேண்டும் என்று வலுகட்டாயமாக பறித்த கதைகளை தற்போதைக்கு ஒதுக்கி விட்டு...
தனி ஒரே ஒரு கட்சியினது ஆட்சியை எந்த மடையன் வரவேற்பான் ?
இந்த தனி கட்சி ஆட்சியை உங்கள் மீது திணித்தால் தமிழ் நாட்டு மக்களாகிய நீங்கள் ஆதரிப்பீர்களா ? அதனை ஏற்றுகொள்வீர்களா ?
அல்லது புலிகளின் பணத்தை நக்கிக் கொண்டு இலங்கை தமிழரது எதிர் காலத்தை பாரா முகமாக நாசமாக்கின்ற வழியில் எம்மை தள்ளுகின்றீர்களா ?
புலியின் பிரச்சாரத்தை பகுத்தறியாது
நம்பும் தமிழ் நாட்டு சகோதரி சகோதரனே நேரடியாகப் பாதிக்கப்பட்ட உன் சகோதரனை கை விடாதே !
விபரம் புரியாதானால் இடையுறாது
ஓதுங்கியிரு புண்ணிமாகும்!//

)))))))))))

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
\\"அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே//
கொழுவி அண்ணை > சந்தர்பம் கூறி விளக்க தெரியலை > குகநாதன் சொன்னது போல பிரபாகரன் சொன்னார் என யாழ் நகரில் பலர் சொல்ல கேள்விபட்ட விஷயம் இது//

பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்தபோது பிரபாகரன் இப்படிச் சொன்னதாக துக்ளக்கில் நான் படித்திருக்கிறேன்..

//அது மாத்திரமல்ல. ''வடகத்தையானுக்கு எங்கட அலுவலிலை தலையிட உருமைகிடையாது'' என்றும் கூறினாராமே. மேலும் அவர் தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வர முன்னர் கூறியது உங்களது காதுக்கு நிற்சயமாக எட்டியிருக்குமே > ''இங்கை இருந்து முதுகிலை கத்தியால் குத்து வாங்கிறதைவிட இலங்கைக்கு போய் நெஞ்சிலை குண்டடிபடுவது திறம்''//

இது அவரைக் கைது செய்து பின்பு அவருடைய உண்ணாவிரத மிரட்டலுக்குப் பின்பு எம்.ஜி.ஆர். ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்த பின்பு சொன்னதாக படித்திருக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//ஆட்காட்டி1 said...
அது என்ன வெளி நாட்டுப் பணம். ஏதோ படிச்சுப் பட்டம் பெற்று, பீஅச்டி முடிச்சுப் போனதுகளோ? எல்லாப் பேய்களும் ஓடிப் போயிட்டு அகதி எண்டு கேட்டு அழுது வடிஞ்சிட்டு, இப்ப சீனப் போட்டா? வன்னியில் எம் மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்துக்கும் வெளி நாடுகளில் வசிக்கும் பேய்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இதுகள் அகதிக் காசுக்கு புலிகள் கட்டி வைச்சு அடிச்சங்கள் எண்டு சொன்னா, அவனவன் என்ன செய்வான்? எத்தனை லச்சம் முறைப்பாடுகள் கணக்குப் போட்டுப் பாருங்கோ.//

))))))))))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

///பாஸ்கர் said...
//பிரபாகரன் சொன்னதை நினைவு மீட்டுப் பாருங்கள். "அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே//
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!
பிரபாகரன் அவ்வாறுதான் கூறினார்!
இந்திய அமைதி காக்கும் படை அங்கு இருக்கும் போது "இது சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினை. இதில் மூன்றாமவர் தலையிட வேண்டாம். உடனே வெளியேற வேண்டும்" என்றும் கூறினார்!//

உண்மை.. இதை நானும் ஒத்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Chandran said...
உண்மைத் தமிழன், அவசியம் தேவையான பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தங்களுக்கும் குகன்நாதனுக்கும் நன்றி.//

நன்றி சந்திரன்..

ஈழப் பிரச்சினையில் ஈழத்து சகோதரர்களின் பார்வைகளில் எத்தனை, எத்தனை வித்தியாசங்கள் எண்டு ஆச்சரியமாகத்தான் உள்ளது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
காரணங்களை பட்டியலிட்டு புலிகளை 100 வீதம் எதிர்ப்பவர்கள்.. இங்கே சிங்களை அரசை 1000 வீதம் எதிர்க்கிறார்கள் என்பதே சொல்லாமல் விடுகிற செய்தி.. ஏனெனில் அந்த காரணங்கள் சிங்கள அரசுக்கு மேலதிகமாகவும் பொருந்துகின்றன. ஆக குகநாதனோ benzaloyயோ சிங்கள அரசுகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே உண்மை.//

முற்றிலும் உண்மை.. இவர்களில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

ஆனந்தசங்கரியின் கடிதத்தை தமிழக முதல்வர் படித்தால் சந்தோஷமே..

ஆனால் பதில் எழுதுவாரா என்பது சந்தேகம்தான்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//http://dbsjeyaraj.com/dbsj/archives/113#comments
அனைத்து உலக தமிழர்களும் படிக்க வேண்டிய கட்டுரை.. 32 வருட புலிகளின் ஆயுத போராட்டம்.
டி பி எஸ் ஜெயராஜ்///

படித்தேன்.. கொஞ்சம்தான் உள்ளது என்பது எனது கருத்து.. நிறைய விஷயங்கள் விட்டுப் போயுள்ளன என்பது போல் எனக்குத் தோன்றுகிறது..

வாசகன் said...

இலங்கைப் பிரச்னை பற்றிப் பொதுவாக இரண்டு விதமான கருத்துப் பார்வைகள் இருக்கின்றன.

பீமா என்றொரு தமிழ்படம் வந்தது;படம் என்னவோ பொதுவாகக் குப்பையான படம்தான்.ஆனால் படத்தில் ஒரு தீம் இருக்கும்.

தன் சிறு வயதில் ஒரு தாதாவால் ஒரு சிறுவன் வசீகரிக்கப் படுவான்;காரணம் அந்த தாதா பொதுவாக நல்லவர்களைக் காக்க தாதா அவதாரம் எடுத்திருக்கும் ஒரு தாதா.அந்த தாதா தன் தந்தையை இன்னொரு தாதா அடித்ததைக் கண்டித்து அடித்ததால் அவன் பின்னாலேயே போய் தன் வாழ்வையை அந்த முதல் தாதாவைப் போற்றுவதற்கு செலவழிப்பான்.

விடுதலைப் புலிகள் விதயத்திலும் இந்த வித இழைத் தொடர்பு புலிகளை சிலாகிக்கும் இலங்கைத் தமிழர்களிடையே இருப்பதை அறிய முடிகிறது.அவர்களின் துன்ப காலங்களில் அடிக்கும் தாதாவை எதிர்க்கும் தாதாவாகப் புலிகள் வளர்ந்தார்கள்.எனவே கதாநாயகர் ரேஞ்சுக்கு உயர்ந்தார்கள்.

ஆனால் அடிநாதத்தில் புலிகளும் தாதாக்கள் தான் என்பது உண்மை.அதை கொழுவிகள் உணரவோ ஒத்துக் கொள்ளவோ மாட்டார்கள்;அதற்கான உளவியல் சமூகக் காரணங்கள் ஒத்துக்கொள்ளப் பட முடியாதவையாக இருந்தாலும் புரிந்து கொள்ளப் பட வேண்டியவை.அந்த தாதாத் தனத்தின் காரணமாகத்தான் அவர்கள் மற்ற போராளிக் குழுக்கள் அனைத்தையும் அதன் தலைவர்களையும் கொன்றழித்தார்கள்.


இன்னொரு கரும்புள்ளி இந்திய ராணுவத்தின் மீதானது.அது இலங்கை மண்ணில் நடத்தியதாகச் சொல்லப்படும் கேடுகள் மனிதகுலத்தில் யாரும் ஒத்துக் கொள்ள முடியாதவை.அவை உண்மையில் இந்திய ராணுவத்தால் செய்யப் பட்டவையா என்ற ஒரு கேளவி எழுந்தாலும் அக்காரணத்துக்காக இந்தியத் தலைவரைக் கொல்ல தங்களுக்கு நியாயம் இருக்கிறது என்று புலிகள் நினைத்தது ஒரு வரலாற்றுத் தவறு.

இலங்கையில் அமைதி ஒப்பந்தக் காலத்தில் அது முறிய முழுதான காரணம் கடலில் புலிகள் பிடிபட்டதும் திலீபன் இறப்பும்(இது நிகழக் கூடும் எனப் புலிகள்-பிரபாகரன் எனப் படிக்கவும்- ஊகித்தாலும்,நிகழட்டும் என விரும்பினார்கள்;அந்த இறப்பு அவர்களுக்கத் தேவைப்பட்டது;ஏனெனில் அமைதிப்படையை எதிர்க்க தேவைப்பட்ட வலுவான காரணமாக அது இருந்தது.பின்னர் நிகழ்ந்துது எல்லாமே புலிகளின் கதை வசனப் படிதான் நடந்தது.

நெருடும் ஒரு விதயம் தன் மக்களுக்கு அமைதி என்ன விலை கொடுத்தும் கிடைக்க வேண்டும் என புலிகள் நினைத்திருந்தால் ஒப்பந்தக் காலத்தில் இன்னும் பொறுமையாக இருந்து தொடக்கத்தில் மாகான ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள்.அது ஒரு தொடக்கப் புள்ளிதான்;ஆனால் நல்ல ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

தனி ஈழம்தான் ஒரே தீர்வு;தான் மட்டுமே அதன் தலைவராக இருக்க வேண்டும் எனப் பிரபாகரன் நினைத்ததுதான் 80 களில் காலம் அளித்த அந்த வாய்ப்பை அவர் தூக்கி அடித்தார்.

இந்திய ராணுவம் கேவலப்பட்டு வெளியேறியது;ஒரே ஒரு கேள்வி கேவல்ப்படும் கற்பழிப்புச் செயல்களை அவர்கள் செய்தார்களா என்பது.(சாத்திரி மற்றும் தூயா பதிவுகளையும் உள்ளடக்கி)அது உண்மையெனில் அதற்கான் பதிலை இந்திய ராணுவம்,ராணுவத் தலைமை சொல்லக்கடமைப்ப பட்டது.


இன்றைய தேதியில் தனி ஈழம் என்ற நாடை அடைய முடிந்தாலும் அது போரிம் மூலம் அடையப்பட்டால் அது திரும்பவும் அழிக்கப் படுவதற்கான வாய்ப்பை இலங்கை அரசு எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதே;எனவே அரசியல் ரீதியான தீர்வே நீண்ட காலம் நிலைக்கக் கூடியதான ஒன்றாக இருக்க முடியும்.

ஆனால் பிரபாகரன் தன் வாழ்வு முழுவதிலும் இன்று வரை அந்த வகையான தீர்வை எதிர்த்தே பயணப் பட்டிருக்கிறார் என்பது மிகவும் விசனத்துக்குரியது.

இன்று ஒரு விளிம்பில் நிறுத்தப் பட்டிருக்கும் அவர் எவ்விதமான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதுதான் எதிர்காலத்தில் இலங்கைத்தமிழர் அமைதியான வாழ்வுக்கான ஒரு ஆதாரமாகவோ அல்லது இலங்கையில் முன்னொரு காலம் தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றுக் கதை சொல்லப் படப் போவதற்கு முன்னுரையாகவோ அமையலாம்!

வாசகன் said...

தமிழகம் ஏதும் செய்யாது.

ஏனெனில் இந்தியாதான் ஒரு தேசமாக இதில் தலையிட முடியும்.

தலையிட்டு ஏதாவது ஒரு இணக்கம் காண முடியுமா என்பது கேள்விக்குறி.

ஏனெனில் இன்று புலிகள் இந்தியா செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது,யுத்த நிறுத்தத்தைத்தான்,பிரச்னைக்கான தீர்வை அல்ல.

சிறிது கால அவகாசம் கிடைத்தால் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே சிந்தனை.

அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதுதான் அவர்கள் குறிக்கோள் அதற்காகத்தான் போரை நிறுத்தத் சொல்கிறார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது.

நாங்கள் தலையிடும் வாய்ப்பு இல்லை.உயிர் பிழைக்க வேண்டுமெனில் வன்னியிலிருந்து தப்பித்து ஓடி விடுங்கள் என்னும் செய்தியை அப்பாவி மக்களுக்கு அனைவரும் சேர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது.

இலங்கை,இந்தியா மற்றும் புலிகள் ஆகிய அனைவரின் ஈகோ யுத்ததுத்துக்கிடையில்தான் அவர்கள் வாழ்வு மாட்டிக் கொண்டிருக்கிறது !

benza said...

MGR மூன்றரை லட்ஷம் புலிகளுக்கும் ஓன்றரை லட்ஷம் ஈறோஸ் க்கும் இந்திய ரூபாயில் கொடுத்த காலம் >

குடி வெறி இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம் என புலிகளைப் போற்றிப் புகழ்ந்த காலம் >

ஈறோஸ் கலைந்து புலிகளுடன் சேர்ந்த பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்ட சமயம் ஏகப்பட்ட போராளிகள் 'துண்டு' கொடுத்து விலகினர் >
இவர்களிற் சிலர் எனது வீடு வந்துள்ளனர் >

மாத்தையா கைதாகினதும் இவர்களும் கைதாகி சுமார் ஓன்றரை ஆண்டுகள் பின்னர் வெளி வந்தனர் >

நாம் மனப்பூர்வமாக ஆதரித்த இயக்கம் தான் புலிகள் >

ஆதரவும் கை தட்டலும் கூடியதால் >

தலைக் கனம் ஏறியதால் >

எவரையும் மதிக்காத தன்மையே எமது அபிமான இயக்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் >>>

Anonymous said...

வாசகன், மிக சரியாக கூறியள்ளீர்கள். யுதத நிறுத்தத்தை ஆதரிப்பதும் புலிகளை மீண்டும் பலப்படுத்தி இன்னொரு யுத்தம் செய்வதற்காகவே தவர இலங்கை தமிழர்கள் மீது அக்கறை பட்டல்ல. இலங்கை தமிழர்கள் இவர்களுக்கு பகடக்காய்கள். கல்மடு குளக்கட்டு புலிகள் உடைத்ததை பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இதன் பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கே தவிர இராணுவத்திற்கல்ல.நன்றி உண்மைத்தமிழன்

உண்மைத்தமிழன் said...

//வாசகன் said...
விடுதலைப் புலிகள் விதயத்திலும் இந்த வித இழைத் தொடர்பு புலிகளை சிலாகிக்கும் இலங்கைத் தமிழர்களிடையே இருப்பதை அறிய முடிகிறது.அவர்களின் துன்ப காலங்களில் அடிக்கும் தாதாவை எதிர்க்கும் தாதாவாகப் புலிகள் வளர்ந்தார்கள்.எனவே கதாநாயகர் ரேஞ்சுக்கு உயர்ந்தார்கள். ஆனால் அடிநாதத்தில் புலிகளும் தாதாக்கள்தான் என்பது உண்மை.அதை கொழுவிகள் உணரவோ ஒத்துக் கொள்ளவோ மாட்டார்கள்; அதற்கான உளவியல் சமூகக் காரணங்கள் ஒத்துக்கொள்ளப் பட முடியாதவையாக இருந்தாலும் புரிந்து கொள்ளப்படவேண்டியவை. அந்த தாதாத்தனத்தின் காரணமாகத்தான் அவர்கள் மற்ற போராளிக் குழுக்கள் அனைத்தையும் அதன் தலைவர்களையும் கொன்றழித்தார்கள்.//

சத்தியமான உண்மை வாசகன்.. தன்னைத் தாக்க வருபவர்களைத் தாக்கியவன் என்ற ரீதியில் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கப் போய்.. தங்களைத் தவிர வேறு யாரையுமே நீ அணுகக்கூடாது என்கிற தாதாத்தனத்தில் புலிகள் இறங்கியதால் எத்தனை, எத்தனையோ சகோதர ஈழத் தமிழர்கள் இறந்து போயுள்ளார்கள்.

//இன்னொரு கரும்புள்ளி இந்திய ராணுவத்தின் மீதானது. அது இலங்கை மண்ணில் நடத்தியதாகச் சொல்லப்படும் கேடுகள் மனிதகுலத்தில் யாரும் ஒத்துக் கொள்ள முடியாதவை. அவை உண்மையில் இந்திய ராணுவத்தால் செய்யப்பட்டவையா என்ற ஒரு கேளவி எழுந்தாலும் அக்காரணத்துக்காக இந்தியத் தலைவரைக் கொல்ல தங்களுக்கு நியாயம் இருக்கிறது என்று புலிகள் நினைத்தது ஒரு வரலாற்றுத் தவறு.//

நிச்சயமாக..

//இலங்கையில் அமைதி ஒப்பந்தக் காலத்தில் அது முறிய முழுதான காரணம் கடலில் புலிகள் பிடிபட்டதும் திலீபன் இறப்பும் (இது நிகழக் கூடும் எனப் புலிகள்-பிரபாகரன் எனப் படிக்கவும்- ஊகித்தாலும், நிகழட்டும் என விரும்பினார்கள்; அந்த இறப்பு அவர்களுக்கத் தேவைப்பட்டது; ஏனெனில் அமைதிப்படையை எதிர்க்க தேவைப்பட்ட வலுவான காரணமாக அது இருந்தது. பின்னர் நிகழ்ந்துது எல்லாமே புலிகளின் கதை வசனப்படிதான் நடந்தது.//

வாசகன், இதைத்தான் நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.. திலீபனின் மரணத்தை புலிகளாலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதைச் செய்யாமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தவகையில் திலீபனின் மரணத்திற்கு முதல் காரணம் புலிகள்தான்..

//நெருடும் ஒரு விதயம் தன் மக்களுக்கு அமைதி என்ன விலை கொடுத்தும் கிடைக்க வேண்டும் என புலிகள் நினைத்திருந்தால் ஒப்பந்தக் காலத்தில் இன்னும் பொறுமையாக இருந்து தொடக்கத்தில் மாகான ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். அது ஒரு தொடக்கப் புள்ளிதான்; ஆனால் நல்ல ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.//

புலிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதையே பல முறை மாற்றி மாற்றி பேசியிருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது..

//தனி ஈழம்தான் ஒரே தீர்வு; தான் மட்டுமே அதன் தலைவராக இருக்க வேண்டும் எனப் பிரபாகரன் நினைத்ததுதான் 80களில் காலம் அளித்த அந்த வாய்ப்பை அவர் தூக்கி அடித்தார்.//

இது நிஜமான சர்வாதிகாரம்..

//இந்திய ராணுவம் கேவலப்பட்டு வெளியேறியது; ஒரே ஒரு கேள்வி கேவல்ப்படும் கற்பழிப்புச் செயல்களை அவர்கள் செய்தார்களா என்பது.(சாத்திரி மற்றும் தூயா பதிவுகளையும் உள்ளடக்கி)அது உண்மையெனில் அதற்கான் பதிலை இந்திய ராணுவம், ராணுவத் தலைமை சொல்லக் கடமைப்பட்டது.//

ஆனால் இந்திய ராணுவம் இது பற்றி இதுவரையிலும் கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது.. கருத்து சொல்லவும் விரும்பாமல் உள்ளது.

//இன்றைய தேதியில் தனி ஈழம் என்ற நாடை அடைய முடிந்தாலும் அது போரிம் மூலம் அடையப்பட்டால் அது திரும்பவும் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பை இலங்கை அரசு எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதே; எனவே அரசியல் ரீதியான தீர்வே நீண்ட காலம் நிலைக்கக் கூடியதான ஒன்றாக இருக்க முடியும்.//

உண்மை வாசகன்.. துப்பாக்கியினால் பிரிக்கப்படுவது பின்பு துப்பாக்கியினாலேயே ஆளப்படும் என்பது வரலாற்று உண்மை..

அரசியல் ரீதியான தீர்வு ஒன்றே இலங்கைக்கும், ஈழத்து மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு நன்மை பயக்கும்.

//ஆனால் பிரபாகரன் தன் வாழ்வு முழுவதிலும் இன்றுவரை அந்த வகையான தீர்வை எதிர்த்தே பயணப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் விசனத்துக்குரியது. இன்று ஒரு விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அவர் எவ்விதமான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதுதான் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர் அமைதியான வாழ்வுக்கான ஒரு ஆதாரமாகவோ அல்லது இலங்கையில் முன்னொரு காலம் தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றுக் கதை சொல்லப் படப் போவதற்கு முன்னுரையாகவோ அமையலாம்!//

நன்றி வாசகன். மிக அருமையான பின்னூட்டம் இது..

கடைசி பத்திகள் உள்ளதை அப்படியே சொல்கின்றன..

ஈழத்து மக்களின் வாழ்வும், உயிரும் இப்போது பிரபாகரனின் கையில்தான் உள்ளதே தவிர.. பக்சேவின் கைகளில் இல்லை..

இதை அனைவரும் உணர்ந்தால்தான் உண்மை புலப்படும்.

உண்மைத்தமிழன் said...

//வாசகன் said...
தமிழகம் ஏதும் செய்யாது. ஏனெனில் இந்தியாதான் ஒரு தேசமாக இதில் தலையிட முடியும். தலையிட்டு ஏதாவது ஒரு இணக்கம் காண முடியுமா என்பது கேள்விக்குறி.
ஏனெனில் இன்று புலிகள் இந்தியா செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது, யுத்த நிறுத்தத்தைத்தான், பிரச்னைக்கான தீர்வை அல்ல.
சிறிது கால அவகாசம் கிடைத்தால் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே சிந்தனை. அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் அவர்கள் குறிக்கோள் அதற்காகத்தான் போரை நிறுத்தத் சொல்கிறார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது. நாங்கள் தலையிடும் வாய்ப்பு இல்லை. உயிர் பிழைக்க வேண்டுமெனில் வன்னியிலிருந்து தப்பித்து ஓடி விடுங்கள் என்னும் செய்தியை அப்பாவி மக்களுக்கு அனைவரும் சேர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது.
இலங்கை, இந்தியா மற்றும் புலிகள் ஆகிய அனைவரின் ஈகோ யுத்ததுத்துக்கிடையில்தான் அவர்கள் வாழ்வு மாட்டிக் கொண்டிருக்கிறது!//

வாசகன் நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
MGR மூன்றரை லட்ஷம் புலிகளுக்கும் ஓன்றரை லட்ஷம் ஈறோஸ் க்கும் இந்திய ரூபாயில் கொடுத்த காலம் >
குடி வெறி இல்லாத இயக்கம் நேர்மையான இயக்கம் என புலிகளைப் போற்றிப் புகழ்ந்த காலம் >
ஈறோஸ் கலைந்து புலிகளுடன் சேர்ந்த பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்ட சமயம் ஏகப்பட்ட போராளிகள் 'துண்டு' கொடுத்து விலகினர் >
இவர்களிற் சிலர் எனது வீடு வந்துள்ளனர் >
மாத்தையா கைதாகினதும் இவர்களும் கைதாகி சுமார் ஓன்றரை ஆண்டுகள் பின்னர் வெளி வந்தனர் >
நாம் மனப்பூர்வமாக ஆதரித்த இயக்கம்தான் புலிகள் >
ஆதரவும் கை தட்டலும் கூடியதால் >
தலைக் கனம் ஏறியதால் >
எவரையும் மதிக்காத தன்மையே எமது அபிமான இயக்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.//

பென்ஸ் ஸார்..

மாத்தையா விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது..? ஆளாளுக்கு ஒன்றைச் சொல்கிறார்கள்.

நீங்களாவது உங்களுக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லுங்களேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
வாசகன், மிக சரியாக கூறியள்ளீர்கள். யுதத நிறுத்தத்தை ஆதரிப்பதும் புலிகளை மீண்டும் பலப்படுத்தி இன்னொரு யுத்தம் செய்வதற்காகவே தவர இலங்கை தமிழர்கள் மீது அக்கறைபட்டல்ல. இலங்கை தமிழர்கள் இவர்களுக்கு பகடக்காய்கள். கல்மடு குளக்கட்டு புலிகள் உடைத்ததை பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இதன் பாதிப்பு இலங்கை தமிழர்களுக்கே தவிர இராணுவத்திற்கல்ல. நன்றி உண்மைத்தமிழன்.//

நானும் படித்தேன். உண்மை நிலவரம் என்ன என்று தெரியாததால் குழப்பமாக உள்ளது.

அணைக்கட்டு, நீர்ப்பாசன அணைகள், குளங்கள் எல்லாம் நாட்டின் சொத்துக்கள்.. பிற்காலத்தில் அதே பகுதியில் வாழப் போகும் தமிழர்கள் பயன்படுத்தப் போகும் களங்கள்.. அவைகளைப் போய் குண்டு வைத்து தகர்த்து வெற்றி என்று மார்தட்டுவது முட்டாள்தனம்..

பார்ப்போம்.. நிறைய சிங்கள ராணுவத்தினர் மரணம் என்கிறார்கள். இரு தரப்புமே மெளனம் சாதிக்கிறது. இன்னொரு புறம் முல்லைத்தீவுக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக சிங்கள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரும் தெரிவித்துள்ளார்.

சிக்கிக் கொண்ட அப்பாவி மக்களை நினைத்தால்தான் பாவமாக உள்ளது..

Unknown said...

finally Fonseka and you guys contained ltte and its supporters who believed they are "above ANYONE and EVERYONE"
Thank you india for showing ltte what it is...and where they belong...
Tamil nadu should watch these jokers and traitors like Seeman and nedumaran

benza said...

[[[ Anon Saturday, January 24, 2009 2:23:00 PM
புலிகளை 100 வீதம் எதிர்ப்பவர்கள்.. இங்கே சிங்களை அரசை 1000 வீதம் எதிர்க்கிறார்கள்
ஆக குகநாதனோ benzaloy யோ சிங்கள அரசுகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே
உண்மை. ]]]]]]

அனான் அண்ணை > சிங்கள அரச சேவையில் அரசியல் வாதி ஒருவர் எனது உரிய ப்ரோமோஷன் ல் கைவைத்தார் > பலர் சொல்லியும் இளம் வயதில் பென்ஷன் கு விண்ணப்பித்து வெளியேறினேன் >
ஆனால் எனக்கு சிங்கள அரசு மீது வெறுப்பு இல்லவே
இல்லை >>>

அதில் அவப்போது அங்கம் வகிப்போர்மீது அசாத்திய வெறுப்பு
உள்ளது வாஸ்தவம் >

புலியின் செயல் எம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது எமது
அற்ப பொருளாதாரத்தையும் தரைமட்டமாகியது மிகக்
கொடுமையானது >>>

இவைகளை கொழுவி மற்றும் ஆற்காட்டி புரிந்துகொள்ள
விரும்பமட்டார்கள் >>>

துயில்பவனை எழுப்பலாம் ஆனால் துயில்வன்போல
நடிப்பவனை . . .

benza said...

[[[ சிங்கள, இஸ்லாமிய பொது மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிக அன்பாகவும் பண்பாகவும் தம் மத்தியில் வாழும் 55 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடன் சமாதானமாக வாழ்கின்றனர். அத் தமிழ் மக்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக கொழும்பிலும் அயல் பட்டணங்களிலும் கல்வி பயின்று வருகின்றனர் ]]]

இதை நானும் சொன்னேன் >>>

இப்பொது வன்னி பகுதி மக்களால்
பல காலம் பாரளமன்றத்துக்கு தெரிவு செய்யபட்ட ஆனந்தசங்கரியும் சொல்கின்றார் >>>

இதன் பின்பாவது உண்மை நிலை என்ன என விளங்குமோ ?

யுத்த பகுதியில் இருந்து தப்பி ஓடியோரை தடுத்த புலி
போராளிகளோடு எதிர்த்து கதைத்த பொது மக்களை சுட்டு கொன்று சடலங்களையும் தெருவிலேயே விடும்படி பணித்தானமே
பொறுப்பாளர் >>>

ஏனையோருக்கு அச்சுறுத்தலாம் >>>

இது கற்பனை இல்லை > உயிர் தப்பி ஓடிவந்தோர் வவுனியா அரச மற்றும் சென் சிலுவை பணிபாள்ளர்களிடம் கூறிய முறைப்பாடு >>>

benza said...

[[[ ."அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே..
எப்போது... ? வர வர பாக்கிறேன். ஆளாளுக்கு போகிற போக்கில் கண்டபடி பொய்களை விதைத்து விட்டு போகிறீர்கள். பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அப்படியே விட்டுவிட மாட்டோம் ]]]

கொழுவி அண்ணை அடிப்பாய் போல இருக்குது >>>
கொவப்படாதே உனக்கு ஒரு கதை சொல்லுறன் >>>
பாட நேரத்தில தமிழில் சற்று அதிகமான பற்று கொண்ட ஆசிரியர் சொன்னார் ஒரு நாள் தன் தலையில் கைவைத்து ''இதை நாங்கள் உச்சி என்போம் ஆனால் ஆங்கிலத்தில் TOP OF THE HEAD என்பார்கள் > தமிழ்
எவள்ளவு திறமான பாஷை என்று பார்த்தீர்களா >>>

இதற்கு ஒருவன் சொன்னான் கொழுவி அண்ணை
'' சார் எங்களுக்கு தெரியாதபடியால் ஆங்கிலத்தில் சொல் இல்லை என்று நினைப்பது பிழை சார் ''

இப்ப கொழுவி அண்ணை இவ்வளவு இடுகைகளுக்கு
பிறகாவது என்னில் உண்மைத்தனம் கொஞ்சமாவது
இருக்குதென்று வெளியில் சொல்லாது மனதில்
சொல்லிக்கொள்ளும் !

benza said...

[[[ ஆனாலும் ஒருவர் அடைந்த வலிக்கோ, துயரத்திற்கோ பதிலாக சொல்ல முடியாதென்று எனக்குத் தெரியும்.
புலிகளால் துயரடைந்தவர் வலியடைந்தவர் உள்ளார் எனவும் தெரியும் ]]]

இவ்வளவையும் தெரிந்து வைத்துகொண்டா கொழுவி அண்ணை என்னை அடிக்க வருகின்றாய் >>>

ஆம்மா சும்மா சொல்லபடாது >>>

நீ நம்பிகைதுரோகி இல்லை >>>

அப்பிடித்தான் அண்ணை கொழுவி இருக்கோணும் >>>

புலி என்றால் புலியே தான் > கொலை விழுந்தாலும் கொள்ளை அடிச்சாலும் புலியின் பக்கம் தான் >>>

புலி மக்களை அடித்து திரத்தின போது சொல்லியிருப்பாய்
''தலைவர் ஒரு சொல்லு சொன்னதும் யாழில் இருந்து
ஐந்து லட்சம் சனம் வெளியேறியது'', எண்டு >>>

ஏனென்றால் புலி மக்களை அடித்து திரத்தினது உனக்கு
தெரியாதல்லவா >>>

Don Bosco பள்ளிக்கூடத்திற்கு ஷெல்
அடித்தது Ben சொல்லும் பச்சைப் பொய் அல்லவா >>>

இன்னும் எத்தனையோ அகோரச் சம்பவங்கள் உனக்கு தெரியாது நடந்துவிட்டனவே >>>

உனக்கு தெரியாத சம்பவம் நடந்திருக்க முடியாதே !!!

ஆகவே அது நடந்திருக்க முடியாது >>>
QED

benza said...

வாசகன் நீங்கள் இப்படி சொன்னால் >>>

[[[ அடிநாதத்தில் புலிகளும் தாதாக்கள் தான் என்பது உண்மை.
அதை கொழுவிகள் உணரவோ ஒத்துக் கொள்ளவோ மாட்டார்கள்;
அதற்கான உளவியல் சமூகக் காரணங்கள் ஒத்துக்கொள்ளப் பட
முடியாதவையாக இருந்தாலும் புரிந்து கொள்ளப் பட வேண்டியவை]]]

நாங்கள் கொளிவி அண்ணாவின் கை கரை படிந்தது என்ற
முடிவுக்கு தெளிவாக இறங்கலாமா ?

மேலும் நீங்கள் இதையும் சொன்னீர்கள் >>>

[[[ அந்த தாதாத் தனத்தின் காரணமாகத்தான் அவர்கள் மற்ற
போராளிக் குழுக்கள் அனைத்தையும் அதன் தலைவர்களையும்
கொன்றழித்தார்கள் ]]]

ஆனால் இதையும் சொன்னால் முழுமை பெறுமே !

ஈழத்து காந்தி எனப்பட செல்வநாயகம் அவர்கள் உருவாக்கிய தமிழ் அரசு கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தையும் விட்டு வைத்தார்களா ?

benza said...

[[[ இலங்கை மண்ணில் நடத்தியதாகச் சொல்லப்படும் கேடுகள் மனிதகுலத்தில் யாரும் ஒத்துக் கொள்ள முடியாதவை.அவை உண்மையில் இந்திய ராணுவத்தால் செய்யப் பட்டவையா ]]]

கண்ணால் கண்டதை மற்றும் நம்பிக்கையான நபர்கள் சொன்னதை நான் முழுமையாக நம்புகின்றேன்

என்னை வளர்த்து எடுத்த எனது அக்காவும் எனது தம்பியும்
பகலில் ஒரு வீட்டு விறாந்தையில் ஐந்து இந்திய ராணுவத்தினர் முன்நிலையிலும் நடக்க இயலாத வீட்டுகிளவியின் முன்நிலையிலும் ஒரு சீக்கிய ராணுவத்தான் சுட்டு கொன்று அக்காவின் பாக்[HAND BAG]ல் இருந்த நகைகளை தனது சாக்கில் போடுக்கொண்டானாம்

பின்னர் எமக்கு கிளவி சொன்ன சம்பவம்

அரசாங்க அதிபரது அலுவலகத்தில் ஆடுகளை கட்டி பாதுகாத்து
தேநீர் வைப்பதற்கு அலுவலக கோப்புகளை விறகாக பாவித்ததை கண்டேன்

இப்படி பல நடந்தாலும் மிருகத்தனமாக நடந்ததை நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை

தற்போது இந்திய இராணுவம் கொங்கோ நாட்டில் தங்கம் கடத்தலில்ஈடுபட்டு சில உயிர்களையும் பறித்துள்ளதாக செய்திகள் கசிகின்றன

யுத்த சூழலில் இவை நடப்பவை என்றாலும் அமைதிக்காக
சென்றவர்களை கட்டவிழ்த்து விட்டது ராணுவ அதிகாரிகளே !!!

benza said...

வாசகன் சொன்னது :

[[[ சிறிது கால அவகாசம் கிடைத்தால் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே சிந்தனை.
அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதுதான் அவர்கள் குறிக்கோள் அதற்காகத்தான் போரை நிறுத்தத் சொல்கிறார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது ]]]

அட நான் ஒரு முழு மடையன் தான்

வாசகன் போன்ற தெளிவான சிந்தனை உள்ள சகோதரர்கள்
இருக்கும்போது தனியாக சமருக்கு இறங்கினேனே

இது பொருந்துமா பாருங்கள்

தமிழ் பாஷையோ அல்லது இனமோ தற்காலத்தில் அழிய
சாதியகூறுகள் இல்லை

சிங்களவர் இலங்கையில் 85% தமிழர் 12% எஞ்சிய 3% த்தில்
முஸ்லீம் பறங்கியர் யாவுகர் ஆகியோர் அடங்குவர்

தமிழரை தவிர என்னையோர் சிங்களம் பள்ளிப்பாடமாக
பயில்கின்றனர்

தமிழ் பிள்ளைகள் சிங்களம் படித்தால் தமிழ் மரணித்துவிடும்
என்று துவேசத்தை வளர்த்து தாம் சதாகாலமும் பாராளமன்றம்
செல்லும் குறுக்கு வழியை தமிழ் அரசியல்வாதிகள் பாவித்தனர்

தமிழ் தலைவர்கள் தமது பிள்ளைகளை சிங்களத்தில் படிக்க
வைத்தனர் ஆனால் பொது மகனது பிள்ளை சிங்களம்
படித்தால் தமிழ் இறந்துவிடும்

EMV நாகநாதன் [இந்திய Patel போல இவரை இரும்பு மனிதன்
என்றார்கள்] அவர்களுடைய மகள் பவானி சிங்களத்தில்
புத்தகங்களே எழுதியிருக்கிறார்கள்

நாகநாதன் முறையாக தமிழ் பேச தெரியாத நல்லூர் தொகுதி
பாராளமன்ற உறுப்பினர்

எமது தமிழ் பிள்ளைகள் பாடம் படிக்கும் விவேகத்தில்
குறைந்தவர்கள் அல்ல

எமது பிள்ளைகள் சிங்களம் படித்தால் அறிவும் கூடும்
சிங்கள பிள்ளைகளுக்கே போட்டி குடுத்து ஓடுவார்கள்

நான்கு பாஷைகள் படிக்கும் இக் காலத்தில் மூன்று
படிப்பதா பெரும் பாரம் ?

benza said...

உண்மை தமிழன் இவ்வாறு கூறியுள்ளார் :

[[[ ஈழத்து மக்களின் வாழ்வும், உயிரும் இப்போது பிரபாகரனின் கையில்தான் உள்ளதே தவிர.. பக்சேவின் கைகளில் இல்லை ]]]

பிரபாகரன் அவர்களது இரத்தம் தொய்ந்த கை இப்போது சும்மா வெறும் கை ஆகிவிட்டது

மக்களை பிடித்து வைத்தார் >>> தப்பி ஓடியோரை சுட்டு கொன்றார்

இப்போது மக்களும் இல்லை ஈழமும் இல்லை என
நிற்கதியாக <<<

Anonymous said...

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள

Anonymous said...

தெரியாமத்தான் கேக்குறேன்.
இலங்கை மலையக தமிழர்களுக்கு எந்த புலம்பெயர்ந்த வடக்கு தமிழர்கள் அமைபுவாவது பொருளாதார உதவிகள், வாழ்க்கை முன்னேற வழி செய்து இருக்கிறதா?

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எந்த இலங்கை அமைப்பாவது பொருளாதார உதவி கல்வி என் எந்த உதவியாவது செய்து இருக்கிறதா?

உங்களுக்கு கூச்சல் போடுவதற்க்கும் ரோட்டில் போராட்டம் செய்வதற்க்கு மட்டும் தமிழ்நாடு வேண்டுமா?

பீரங்கி கதை வேற..

இந்த பீரங்கி எல்லாம் மங்களூர் ரானுவ முகாம்க்கு போவுது அதை இலங்கை அனுப்ப போவதாக உடான்ஸ் வேற.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[ Anon Saturday, January 24, 2009 2:23:00 PM
புலிகளை 100 வீதம் எதிர்ப்பவர்கள்.. இங்கே சிங்களை அரசை 1000 வீதம் எதிர்க்கிறார்கள் ஆக குகநாதனோ benzaloy யோ சிங்கள அரசுகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதே
உண்மை. ]]]]]]
அனான் அண்ணை > சிங்கள அரச சேவையில் அரசியல்வாதி ஒருவர் எனது உரிய ப்ரோமோஷன் ல் கை வைத்தார் > பலர் சொல்லியும் இளம் வயதில் பென்ஷன்கு விண்ணப்பித்து வெளியேறினேன் ஆனால் எனக்கு சிங்கள அரசு மீது வெறுப்பு இல்லவே
இல்லை. அதில் அவப்போது அங்கம் வகிப்போர்மீது அசாத்திய வெறுப்பு
உள்ளது வாஸ்தவம் >
புலியின் செயல் எம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது எமது அற்ப பொருளாதாரத்தையும் தரைமட்டமாகியது மிகக்
கொடுமையானது >>>
இவைகளை கொழுவி மற்றும் ஆற்காட்டி புரிந்துகொள்ள
விரும்பமட்டார்கள் >>>
துயில்பவனை எழுப்பலாம் ஆனால் துயில்வன்போல நடிப்பவனை . . .//

பென்ஸ் ஸார் உங்களுடைய இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்..

புலிகளின் தீவிரவாத செயல்கள் கடைசியில் தமிழ் மக்களின் அழிவிற்குத்தான் கொண்டு போய்விட்டது.. துப்பாக்கியால் ஜெயிக்க முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாதபட்சத்தில் தோல்வியினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவி தமிழ் மக்கள்தான். இதனையும் புலி ஆதரவாளர்கள் தயக்கமின்று ஏற்கத்தான் வேண்டும்..

Anonymous said...

அநொன் சார் நான் அ்றிய தமிழ் நாட்டு வம்சாவளி தமிழர்களை இலங்கை தமிழர் மதிக்கவும் இல்லை உதவி செய்யவும் இல்லை

அவர்களது பிராஜாஜன உரிமையை
பதிவதற்கு தொண்டமான் அவர்களின்
தொழிற் சங்கம் ஓர் சில அரசாங்க சேவையில் அப்போது பதவியில் இருந்த இலங்கை தமிழரின் உதவியுடன் செயல்பட்டது என்பது
உண்மை.

Anonymous said...

[[[ திலீபனின் மரணத்தை புலிகளாலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதைச் செய்யாமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தவகையில் திலீபனின் மரணத்திற்கு முதல் காரணம் புலிகள்தான் ]]]

திலீபன் உண்ணாவிரதம் இருப்பதற்கு நல்லூர் கந்தசாமி
கோவில் திடலில் பெரும் பந்தல் போட்டு மேடை அமைத்து
சோடித்து கிட்டு பெரும் எடுப்பில் திலீபனை கை தாங்கலாக
மேடையில் ஏற்றி ''இதிலை இருடா'' என அமர்தியதை
பொது மக்கள் திரளாக நின்று பார்வையிட்டார்கள்

திலீபன் ஏற்கனவே குடல் வியாதியால் பாதிக்கபட்டு
அறுவை சிகிச்சையில் ஆட்டு குடல் பொருத்தபட்டு
வைத்தியர்களால் ஆறு மாத காலக்கெடு கொடுகபட்ட
இளைஞான் என்று பரவலாக அக் காலத்தில் யாழ் நகரில்
பேசபட்ட விஷயம்

திலீபனின் மரணம் தற்கொலை பாணியை சார்ந்தது என்பதே
யதார்த்தமான நிலை

Anonymous said...

Anonymous said...

[[[ துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது ]]]

ஒரு நாளும் நடக்க முடியாத அன்ண்டபுளுகு இது >>>

தினத்தந்தி செய்தி தந்திருக்கலாம் ஆனால் எனது பகுத்தறிவும் எனது சொற்ப இலங்கை - இந்திய
அரசியல் அறிவும் இத செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்கிறதே

அட பாவிபய மவனே இந்த குழப்ப காலத்தில எண்டா உனக்கு இந்த வம்பு

Anonymous said...

[[[ unmaithamilan
புலிகளின் தீவிரவாத செயல்கள் கடைசியில் தமிழ் மக்களின் அழிவிற்குத்தான் கொண்டு போய்விட்டது.. துப்பாக்கியால் ஜெயிக்க முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாதபட்சத்தில் தோல்வியினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவி தமிழ் மக்கள்தான். இதனையும் புலி ஆதரவாளர்கள் தயக்கமின்று ஏற்கத்தான் வேண்டும்..
Wednesday, January 28, 2009 9:50:00AM ]]]

உண்மை தமிழன் > ஓர் சிலர் இறந்தார்கள் என்பதே யதார்த்தம் >>>

இலங்கை வான் படை பருத்தித்துறை பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு போட்டு சுமார் முப்பதிஆறு ஆசிரியர்களும் மாணவர்களும்
இறந்தபோது புலிப்படை பொறுப்பாளர் ஒருவர் கூறினார் : ''செத்த சனகணக்கு காணாது''

சனம் கூடுதலாக இறந்தால் தானாம் சர்வதேச கவனம் ஈர்கப்படுமாம்

இதுதானையா நமது ஏகபிரதிநிதிகளுடைய கண்ணிப்பு

ஒரு சிலர் இறந்தால் அது இன மேம்பாடுக்கு கொடுக்கும் பலியே
அன்றி அழிவு இல்லையையா

விடுதலை தர மறுக்கும் புலிகளின் கூற்று

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[சிங்கள, இஸ்லாமிய பொது மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிக அன்பாகவும் பண்பாகவும் தம் மத்தியில் வாழும் 55 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களுடன் சமாதானமாக வாழ்கின்றனர். அத் தமிழ் மக்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக கொழும்பிலும் அயல் பட்டணங்களிலும் கல்வி பயின்று வருகின்றனர் ]]]
இதை நானும் சொன்னேன் >>>
இப்பொது வன்னி பகுதி மக்களால்
பல காலம் பாரளமன்றத்துக்கு தெரிவு செய்யபட்ட ஆனந்தசங்கரியும் சொல்கின்றார் >>>
இதன் பின்பாவது உண்மை நிலை என்ன என விளங்குமோ ?
யுத்த பகுதியில் இருந்து தப்பி ஓடியோரை தடுத்த புலி
போராளிகளோடு எதிர்த்து கதைத்த பொது மக்களை சுட்டு கொன்று சடலங்களையும் தெருவிலேயே விடும்படி பணித்தானமே
பொறுப்பாளர் >>> ஏனையோருக்கு அச்சுறுத்தலாம் >>>
இது கற்பனை இல்லை > உயிர் தப்பி ஓடிவந்தோர் வவுனியா அரச மற்றும் சென் சிலுவை பணிபாள்ளர்களிடம் கூறிய முறைப்பாடு >>>//

நானும் பத்திரிகைகளில் படித்தேன் ஸார்.. ஆனால் ஆனந்தசங்கரி அளவுக்கதிகமான புலி எதிர்ப்பில் பல உண்மைகளை மறைத்து சிங்கள அரசுக்கு ஓவராக ஜால்ரா போடுவதுபோல் எனக்குத் தோன்றுகிறது.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...

[[[ ."அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை அனுமதிக்க முடியாது" என்று அவர் பகிரங்கமாகவே அறிவித்தாரே..
எப்போது... ? வர வர பாக்கிறேன். ஆளாளுக்கு போகிற போக்கில் கண்டபடி பொய்களை விதைத்து விட்டு போகிறீர்கள். பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அப்படியே விட்டுவிட மாட்டோம் ]]]
கொழுவி அண்ணை அடிப்பாய் போல இருக்குது >>>
கொவப்படாதே உனக்கு ஒரு கதை சொல்லுறன் >>>
பாட நேரத்தில தமிழில் சற்று அதிகமான பற்று கொண்ட ஆசிரியர் சொன்னார் ஒரு நாள் தன் தலையில் கைவைத்து ''இதை நாங்கள் உச்சி என்போம் ஆனால் ஆங்கிலத்தில் TOP OF THE HEAD என்பார்கள் > தமிழ்
எவள்ளவு திறமான பாஷை என்று பார்த்தீர்களா >>>
இதற்கு ஒருவன் சொன்னான் கொழுவி அண்ணை
"சார் எங்களுக்கு தெரியாதபடியால் ஆங்கிலத்தில் சொல் இல்லை என்று நினைப்பது பிழை சார்"
இப்ப கொழுவி அண்ணை இவ்வளவு இடுகைகளுக்கு பிறகாவது என்னில் உண்மைத்தனம் கொஞ்சமாவது
இருக்குதென்று வெளியில் சொல்லாது மனதில் சொல்லிக்கொள்ளும்!//

எழுதியது எந்தக் கொழுவி என்று தெரியாததால் யாரை குற்றம் சுமத்துவது பென்ஸ் ஸார்..?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[ஆனாலும் ஒருவர் அடைந்த வலிக்கோ, துயரத்திற்கோ பதிலாக சொல்ல முடியாதென்று எனக்குத் தெரியும். புலிகளால் துயரடைந்தவர் வலியடைந்தவர் உள்ளார் எனவும் தெரியும்]]]
இவ்வளவையும் தெரிந்து வைத்துகொண்டா கொழுவி அண்ணை என்னை அடிக்க வருகின்றாய் >>>
ஆம்மா சும்மா சொல்லபடாது >>>
நீ நம்பிகைதுரோகி இல்லை >>>
அப்பிடித்தான் அண்ணை கொழுவி இருக்கோணும் >>>
புலி என்றால் புலியே தான் > கொலை விழுந்தாலும் கொள்ளை அடிச்சாலும் புலியின் பக்கம் தான் >>>
புலி மக்களை அடித்து திரத்தின போது சொல்லியிருப்பாய் ''தலைவர் ஒரு சொல்லு சொன்னதும் யாழில் இருந்து
ஐந்து லட்சம் சனம் வெளியேறியது'', எண்டு >>>
ஏனென்றால் புலி மக்களை அடித்து திரத்தினது உனக்கு தெரியாதல்லவா >>>
Don Bosco பள்ளிக்கூடத்திற்கு ஷெல்
அடித்தது Ben சொல்லும் பச்சைப் பொய் அல்லவா >>>
இன்னும் எத்தனையோ அகோரச் சம்பவங்கள் உனக்கு தெரியாது நடந்துவிட்டனவே >>>
உனக்கு தெரியாத சம்பவம் நடந்திருக்க முடியாதே!!!
ஆகவே அது நடந்திருக்க முடியாது>>>//

பென்ஸ் ஸார்..

கொழுவிகளுக்குத் தெரியாதது நிறைய நடந்திருக்கலாம்.. ஏனென்றால் உங்களது வயது 71. கொழுவிகளின் ஆவரேஜ் வயது 35 இருக்கலாம் என்பது எனது கருத்து..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
வாசகன் நீங்கள் இப்படி சொன்னால் >>>
[[[ அடிநாதத்தில் புலிகளும் தாதாக்கள்தான் என்பது உண்மை.
அதை கொழுவிகள் உணரவோ ஒத்துக் கொள்ளவோ மாட்டார்கள்;
அதற்கான உளவியல் சமூகக் காரணங்கள் ஒத்துக்கொள்ளப் பட
முடியாதவையாக இருந்தாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை]]]
நாங்கள் கொளிவி அண்ணாவின் கை கரை படிந்தது என்ற முடிவுக்கு தெளிவாக இறங்கலாமா ?
மேலும் நீங்கள் இதையும் சொன்னீர்கள் >>>
[[[அந்த தாதாத் தனத்தின் காரணமாகத்தான் அவர்கள் மற்ற
போராளிக் குழுக்கள் அனைத்தையும் அதன் தலைவர்களையும்
கொன்றழித்தார்கள் ]]]
ஆனால் இதையும் சொன்னால் முழுமை பெறுமே !
ஈழத்து காந்தி எனப்பட செல்வநாயகம் அவர்கள் உருவாக்கிய தமிழ் அரசு கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தையும் விட்டு வைத்தார்களா?//

தமிழகத்து மக்களிடம் புலிகளுக்கான ஆதரவு குறைந்ததற்கு இந்தப் படுகொலையும் ஒரு காரணம்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[ இலங்கை மண்ணில் நடத்தியதாகச் சொல்லப்படும் கேடுகள் மனிதகுலத்தில் யாரும் ஒத்துக் கொள்ள முடியாதவை.அவை உண்மையில் இந்திய ராணுவத்தால் செய்யப்பட்டவையா ]]]
கண்ணால் கண்டதை மற்றும் நம்பிக்கையான நபர்கள் சொன்னதை நான் முழுமையாக நம்புகின்றேன்
என்னை வளர்த்து எடுத்த எனது அக்காவும் எனது தம்பியும்
பகலில் ஒரு வீட்டு விறாந்தையில் ஐந்து இந்திய ராணுவத்தினர் முன்நிலையிலும் நடக்க இயலாத வீட்டுகிளவியின் முன்நிலையிலும் ஒரு சீக்கிய ராணுவத்தான் சுட்டு கொன்று அக்காவின் பாக்[HAND BAG]ல் இருந்த நகைகளை தனது சாக்கில் போடுக்கொண்டானாம்
பின்னர் எமக்கு கிளவி சொன்ன சம்பவம் அரசாங்க அதிபரது அலுவலகத்தில் ஆடுகளை கட்டி பாதுகாத்து தேநீர் வைப்பதற்கு அலுவலக கோப்புகளை விறகாக பாவித்ததை கண்டேன். இப்படி பல நடந்தாலும் மிருகத்தனமாக நடந்ததை நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை
தற்போது இந்திய இராணுவம் கொங்கோ நாட்டில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சில உயிர்களையும் பறித்துள்ளதாக செய்திகள் கசிகின்றன
யுத்த சூழலில் இவை நடப்பவை என்றாலும் அமைதிக்காக
சென்றவர்களை கட்டவிழ்த்துவிட்டது ராணுவ அதிகாரிகளே!!!//

உங்களுடைய இந்தக் கூற்றை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன் பென்ஸ் ஸார்..

வீரர்களின் அத்துமீறலையும், அடாவடியையும், கொடூரத்தையும் அதிகாரிகள் நினைத்தால் தடுத்திருக்க முடியும்..

ஈழத்தில் ஏன் அதிகாரிகள் இதனைச் செய்யவில்லை என்பது புரியவேயில்லை..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
வாசகன் சொன்னது :
[[[சிறிது கால அவகாசம் கிடைத்தால் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே சிந்தனை. அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அவர்கள் குறிக்கோள் அதற்காகத்தான் போரை நிறுத்தத் சொல்கிறார்கள் என்பதை குழந்தைகூட நம்பாது]]]
அட நான் ஒரு முழு மடையன்தான்
வாசகன் போன்ற தெளிவான சிந்தனை உள்ள சகோதரர்கள் இருக்கும்போது தனியாக சமருக்கு இறங்கினேனே
இது பொருந்துமா பாருங்கள்
தமிழ் பாஷையோ அல்லது இனமோ தற்காலத்தில் அழிய சாதியகூறுகள் இல்லை. சிங்களவர் இலங்கையில் 85% தமிழர் 12% எஞ்சிய 3%த்தில்
முஸ்லீம் பறங்கியர் யாவுகர் ஆகியோர் அடங்குவர். தமிழரை தவிர என்னையோர் சிங்களம் பள்ளிப் பாடமாக பயில்கின்றனர். தமிழ் பிள்ளைகள் சிங்களம் படித்தால் தமிழ் மரணித்துவிடும் என்று துவேசத்தை வளர்த்து தாம் சதாகாலமும் பாராளமன்றம் செல்லும் குறுக்கு வழியை தமிழ் அரசியல்வாதிகள் பாவித்தனர். தமிழ் தலைவர்கள் தமது பிள்ளைகளை சிங்களத்தில் படிக்க
வைத்தனர். ஆனால் பொது மகனது பிள்ளை சிங்களம் படித்தால் தமிழ் இறந்துவிடும். EMV நாகநாதன் [இந்திய Patel போல இவரை இரும்பு மனிதன்
என்றார்கள்] அவர்களுடைய மகள் பவானி சிங்களத்தில் புத்தகங்களே எழுதியிருக்கிறார்கள்
நாகநாதன் முறையாக தமிழ் பேச தெரியாத நல்லூர் தொகுதி
பாராளமன்ற உறுப்பினர்
எமது தமிழ் பிள்ளைகள் பாடம் படிக்கும் விவேகத்தில்
குறைந்தவர்கள் அல்ல
எமது பிள்ளைகள் சிங்களம் படித்தால் அறிவும் கூடும்
சிங்கள பிள்ளைகளுக்கே போட்டி குடுத்து ஓடுவார்கள்
நான்கு பாஷைகள் படிக்கும் இக்காலத்தில் மூன்று
படிப்பதா பெரும் பாரம் ?//

பென்ஸ் ஸார்..

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இந்தியை இப்படித்தான் எங்களிடமிருந்து ஓட, ஓட விரட்டினார்கள்.

ஆனால் அவர்களது மகன்கள், பேரன்களை மட்டும் இந்தி படிக்க வைத்து மத்திய அமைச்சராக்கினார்கள்.

கேட்டதற்கு இந்தி தெரியுமே.. ஆங்கிலம் தெரியுமே.. நன்கு படித்தவர்களே என்று சாக்குப் போக்கிச் சொல்லி எங்களை முட்டாளாக்கினார்கள்..

அரசியல்வியாதிகள் எல்லா தேசத்திலும் ஒரே மாதிரியாகத்தான் ஐயா இருக்கிறார்கள்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மை தமிழன் இவ்வாறு கூறியுள்ளார் :
[[[ஈழத்து மக்களின் வாழ்வும், உயிரும் இப்போது பிரபாகரனின் கையில்தான் உள்ளதே தவிர.. பக்சேவின் கைகளில் இல்லை ]]]
பிரபாகரன் அவர்களது இரத்தம் தொய்ந்த கை இப்போது சும்மா வெறும் கை ஆகிவிட்டது. மக்களை பிடித்து வைத்தார். தப்பி ஓடியோரை சுட்டு கொன்றார். இப்போது மக்களும் இல்லை. ஈழமும் இல்லை என
நிற்கதியாக//

இனி என்ன நடக்குமெனில்..

அவ்வப்போது மறைந்திருந்து கொரில்லாத் தாக்குதல் நடத்துவார்.

அவர்களைப் பிடிக்கிறேன் என்று சொல்லி சிங்கள ராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களைப் பிடித்து சித்ரவதை செய்யப் போகின்றனர்.

மனித உரிமை மீறல் என்று நாம் கூப்பாடு போடப் போகிறோம்..

எல்லாம் தற்காப்புக்காக என்று பக்சே கொக்கரிக்கப் போகிறார்..?

என்றைக்கு விடிவு கிடைக்கும்..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள//

இல்லை அனானி. இதில் உண்மையில்லை.

திருவனந்தபுரத்திற்கும், மங்களூருக்கும்தான் டாங்கிகள் அனுப்பப்பட்டன. இலங்கைக்கு அல்ல..

ஊர்ப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன. அனைத்தையுமே உண்மை என்று நம்பி அலற வேண்டாம்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தெரியாமத்தான் கேக்குறேன்.
இலங்கை மலையக தமிழர்களுக்கு எந்த புலம்பெயர்ந்த வடக்கு தமிழர்கள் அமைபுவாவது பொருளாதார உதவிகள், வாழ்க்கை முன்னேற வழி செய்து இருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழர்களுக்கு எந்த இலங்கை அமைப்பாவது பொருளாதார உதவி கல்வி என் எந்த உதவியாவது செய்து இருக்கிறதா?
உங்களுக்கு கூச்சல் போடுவதற்க்கும் ரோட்டில் போராட்டம் செய்வதற்க்கு மட்டும் தமிழ்நாடு வேண்டுமா?
பீரங்கி கதை வேற.. இந்த பீரங்கி எல்லாம் மங்களூர் ரானுவ முகாம்க்கு போவுது அதை இலங்கை அனுப்ப போவதாக உடான்ஸ் வேற.//

விடுங்க அனானி..

பாதிக்கப்பட்டவங்க பயப்படத்தான் செய்வாங்க.. அதான் உண்மை தெரிஞ்சிருச்சே..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அநொன் சார் நான் அ்றிய தமிழ் நாட்டு வம்சாவளி தமிழர்களை இலங்கை தமிழர் மதிக்கவும் இல்லை உதவி செய்யவும் இல்லை.
அவர்களது பிராஜாஜன உரிமையை
பதிவதற்கு தொண்டமான் அவர்களின்
தொழிற் சங்கம் ஓர் சில அரசாங்க சேவையில் அப்போது பதவியில் இருந்த இலங்கை தமிழரின் உதவியுடன் செயல்பட்டது என்பது
உண்மை.//

அப்படியா..? தெரிந்து கொண்டேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
[[[திலீபனின் மரணத்தை புலிகளாலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அதைச் செய்யாமல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்தவகையில் திலீபனின் மரணத்திற்கு முதல் காரணம் புலிகள்தான்]]]
திலீபன் உண்ணாவிரதம் இருப்பதற்கு நல்லூர் கந்தசாமி கோவில் திடலில் பெரும் பந்தல் போட்டு மேடை அமைத்து சோடித்து கிட்டு பெரும் எடுப்பில் திலீபனை கை தாங்கலாக
மேடையில் ஏற்றி ''இதிலை இருடா'' என அமர்தியதை பொது மக்கள் திரளாக நின்று பார்வையிட்டார்கள்.
திலீபன் ஏற்கனவே குடல் வியாதியால் பாதிக்கபட்டு அறுவை சிகிச்சையில் ஆட்டு குடல் பொருத்தபட்டு
வைத்தியர்களால் ஆறு மாத காலக்கெடு கொடுகபட்ட இளைஞான் என்று பரவலாக அக்காலத்தில் யாழ் நகரில் பேசபட்ட விஷயம். திலீபனின் மரணம் தற்கொலை பாணியை சார்ந்தது என்பதே
யதார்த்தமான நிலை.//

உண்மை.. இதைத்தான் நானும் சொன்னேன்..

உண்மையாகவே இது விடுதலை கோரி நடந்த போராட்டமெனில் பிரபாகரன்தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.. அதுதான் முறையும்கூட..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
[[[துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது ]]]
ஒரு நாளும் நடக்க முடியாத அன்ண்டபுளுகு இது >>>
தினத்தந்தி செய்தி தந்திருக்கலாம் ஆனால் எனது பகுத்தறிவும் எனது சொற்ப இலங்கை - இந்திய
அரசியல் அறிவும் இத செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்கிறதே
அட பாவி பய மவனே இந்த குழப்ப காலத்தில எண்டா உனக்கு இந்த வம்பு?//

நம்ப வேண்டாம் அனானி.. இது கட்டுக்கதைதான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
[[[ unmaithamilan புலிகளின் தீவிரவாத செயல்கள் கடைசியில் தமிழ் மக்களின் அழிவிற்குத்தான் கொண்டு போய்விட்டது.. துப்பாக்கியால் ஜெயிக்க முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாதபட்சத்தில் தோல்வியினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவி தமிழ் மக்கள்தான். இதனையும் புலி ஆதரவாளர்கள் தயக்கமின்று ஏற்கத்தான் வேண்டும்..//
உண்மை தமிழன் > ஓர் சிலர் இறந்தார்கள் என்பதே யதார்த்தம் >>>
இலங்கை வான் படை பருத்தித்துறை பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு போட்டு சுமார் முப்பதிஆறு ஆசிரியர்களும் மாணவர்களும் இறந்தபோது புலிப்படை பொறுப்பாளர் ஒருவர் கூறினார் : ''செத்த சன கணக்கு காணாது''
சனம் கூடுதலாக இறந்தால்தானாம் சர்வதேச கவனம் ஈர்கப்படுமாம்
இதுதானையா நமது ஏகபிரதிநிதிகளுடைய கண்ணிப்பு
ஒரு சிலர் இறந்தால் அது இன மேம்பாடுக்கு கொடுக்கும் பலியே
அன்றி அழிவு இல்லையையா
விடுதலை தர மறுக்கும் புலிகளின் கூற்று///

மனம் கனக்கிறது இது போன்ற நிகழ்வுகளைக் கேட்கும்போதெல்லாம்..

மெஸ்மரிஸம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் இந்த அளவுக்கா என்று பிரமிப்பு ஏற்படுகிறது புலிகளை நினைத்தால்..

Anonymous said...

ஐயா

புலிகள் தங்கள் தான் ஈழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாக இருக்க வேண்டெமென்று மற்ற தமிழ் அரசியலாளர்களையும் மனிதர்களையும் கொன்று குவித்தனர்.

புலிகளினால் கொல்லப்பட்ட மற்ற தமிழீழ போர் அமைப்புகள்

TELO
EPRLF
PLOTE

அவற்றின் தலைவர்களும் ஆயிரக்கணாகான போராளீகளீன் ரத்தம் புலிகள் கையில் உள்ளது.

இதைத் தவிற, 'மித வாதி' என கருதப் பட்ட மற்ற தமிழ் அரசியல் அமைப்புகளும், ஆசாமிகளும் புலிகளீனால் ஆயிரக்கணக்கில் கொல்லப் பாட்டனர்.

.T. Duraiyappah [SLFP Mayor of Jaffna on 27.7.75]
A.Thiagarajah [ex ACTC M.P. for Vadukoddai who later joined the UNP on 24.4.81]
K.T.Pulendran [UNP Organiuser for Vavuniya on 19.1.83]
A.J.Rajasooriar [UNP Organiser for Jaffna on 12.8.83]
Mala Ramachandran [UNP MMC for Batticaloa on1.9.83]
Gnanachandiram [Ex District Judge Point Pedro and Government Agent Mullaitivu on 24.2.85]
C.E.Anandarajah [Principal St.Johns College, Jaffna on 26.6.85]
B.K.Thambipillai, [President, Citizens Committee Oddusudan on 22.8.85]
V.Dharmalingam [Ex TULF M.P. for Manipay and father of D.Siddharthan Leader of PLOTE on 2.9.85]
Alalasunderam [Ex TULF M.P. for Kopay on 2.9.95]
P.Kirubakaran [Primary Court Judge on 11.3.86]
Kathiramalai [Sarvodaya leader on 26.9.86]
Vignarajah [Assistant Government Agent Samanthurai on 15.9.87]
Anthonimuttu [Government Agent Batticaloa on 8.10.87]
S.S.Jeganathan [Assistant Government Agent Batticaloa on 8.10.87]
Sinnadurai [Assistant Government Agent Trincomalee on 26.11.87]
M.E.Kandasamy [Principal, Palugamam Maha Vidyalaya on 14.12.87]
S.Siththamparanathan [Principal Vigneswara Vidyalaya Trincomalee on 31.1.88
S.Wijayanandan [District Secretary Ceylon Communist Party on 8.3.88]
Velmurugu Master [TULF Organiser and Citizens Committee Member Kalmunai on 20.3.88]
Rev. Father Chandra Fernando [President, Citizens' Committee, Batticaloa on 6.6.88]
Rajshankar [President Citizen's Committee Tennamarachchi on 27.10.88]
S.Sambandamoorthy [Ex TULF Chairman District Development Council, Batticaloa on 7.3.89]
V.M.Panchalingam [Government Agent, Jaffna on 1.5.89]
K.Pulendran [Assistant Government Agent, Kopay on 28.6.89]
A.Amirthalingam [TULF Leader and National List M.P. on 13.7.89]
V.Yogeswaran [ex TULF M.P for Jaffna on 13.7.89]
Dr. (Mrs) Rajini Thiranagama [Lecturer in Anatomy at the Jaffna University
and co-author of the 'Broken Palmyrah' on 25.9.89]
Ganeshalingam [ex EPRLF Provincial Minister for North & East on 28.1.90]
Sam Thambimuttu [EPRLF MP] and Mrs. Tambimuttu [on 7.5.90]
V.Yogasangari [EPRLF MP in Madras on 19.6.90]

மேலும் மற்றொன்றை மறக்காதீர்கள். இந்த ஒவ்வொரு கொலைகளின் போதும், பல தடவை தற்கொலை குண்டடிப்பாஅல், சம்பத்தப் பட்டவர் தவிற நூற்றுக்கணக்கான அப்பாவிகளும் உயிர் இழந்தனர். உதாரணமாக, ராஜீவ் கொலையின் போது 50 அப்பாவிகளும் கொல்லப் பட்டனர், பலர் உடல் உறுப்பை இழந்தனர்.

ஈழவன்

Anonymous said...

உண்மைத்தமிழன்

TELO மற்ற ஈழ போராளிகளின் மேல், புலிகள் நடத்திய தாக்கிதலை படிக்க.

http://www.asiantribune.com/oldsite/show_article.php?id=85

Date : 2002-11-10
Can LTTE Alone be Allowed to Represent the Tamils in the Peace Talks?
By Velan Kanapathy M.Sc


Earlier, there were about 35 organizations fighting for Tamils’ right. Finally, five of those militant organizations were recognized as the major liberation organization of the Sri Lankan Tamil people. They are Eelam Revolutionary Organization of Students (EROS), Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), Tamil Eelam Liberation Organization (TELO), People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) and Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The LTTE, which worked from the beginning with a hidden agenda, ruthlessly eliminated and banned the other four Sri Lankan Tamil militant organisations in 1986. In this process, it was estimated that in the fratricidal war that ensued, the LTTE killed over 7,500 fighters from the other organizations and over 45,000 fighters belonged to the other organizations fled the country. Because of such calculated draconian measures adopted by the LTTE, it emerged to claim as the self appointed sole representative of the Tamil people.

Similarly, earlier the other Tamil militant organisations, EPRLF, ENDLF and TELO except EROS and PLOTE accepted the Indo- Lanka Accord about 15 years (1987) ago. If the LTTE would had come forward to accept the above Accord earlier, the Tamils and the country would have been spared of the precious lives of 60,000-70,000 Tamils and the wanton destruction of their properties.
------------------------------------


http://en.wikipedia.org/wiki/TELO

"On 29 April that year, they launched an all-out assault on the TELO. TELO bases across Jaffna were shelled with mortars. TELO cadres, whether armed or unarmed, came under rifle attack and were shot dead. No quarter was given, according to eyewitnesses. Those who surrendered were shot dead as they laid down their weapons, and those who attempted to flee were shot as they ran. Civilians were warned not to shelter fugitives. The few TELO cadres who managed to find refuge with other armed groups such as the EPLRF or the EROS were nearly the only ones who survived. On 5 May, the TELO's leader Sri Sabaratnam was shot dead by Sathasivam Krishnakumar of the LTTE, better known as Kittu. In all, over four hundred men had been killed, and the TELO had been virtually wiped out.
"

Anonymous said...

Dear friends,

I know u must be busy. But take 10 minutes of ur valuable time and please read it.

http://irapeke.blogspot.com/2009/02/blog-post.html

http://irapeke.blogspot.com/2009/02/last-statement-by-ku-muthukumar-to-us.html

Also pls forward to all Tamils u know, after all that is all we can do...

Best regards,
Vijay

உண்மைத்தமிழன் said...

//irapeke said...
Dear friends, I know u must be busy. But take 10 minutes of ur valuable time and please read it.
http://irapeke.blogspot.com/2009/02/blog-post.html
http://irapeke.blogspot.com/2009/02/last-statement-by-ku-muthukumar-to-us.html
Also pls forward to all Tamils u know, after all that is all we can do...
Best regards,
Vijay//

நன்றி விஜய்..

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தும் இட்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி..

யாருக்காவது தேவைப்படின் நிச்சயம் தங்களது தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

வருகைக்கு மீண்டும் நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

ஈழவன் ஸார்..

உங்களுடைய பரிதாபப் பட்டியல் நிச்சயம் பரிதாபத்திற்குரியது.. கண்டனத்துக்குரியதுதான்..

இதன் பலனைத்தான் இப்போது புலிகள் அனுபவித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..

அரசன் அன்று கொல்லுவான்.. தெய்வம் நின்றுதான் கொல்லும்..

புரிந்தால் சரி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மைத்தமிழன் TELO மற்ற ஈழ போராளிகளின் மேல், புலிகள் நடத்திய தாக்கிதலை படிக்க.
http://www.asiantribune.com/oldsite/show_article.php?id=85
Date : 2002-11-10
Can LTTE Alone be Allowed to Represent the Tamils in the Peace Talks?
By Velan Kanapathy M.Sc
Earlier, there were about 35 organizations fighting for Tamils’ right. Finally, five of those militant organizations were recognized as the major liberation organization of the Sri Lankan Tamil people. They are Eelam Revolutionary Organization of Students (EROS), Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), Tamil Eelam Liberation Organization (TELO), People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) and Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The LTTE, which worked from the beginning with a hidden agenda, ruthlessly eliminated and banned the other four Sri Lankan Tamil militant organisations in 1986. In this process, it was estimated that in the fratricidal war that ensued, the LTTE killed over 7,500 fighters from the other organizations and over 45,000 fighters belonged to the other organizations fled the country. Because of such calculated draconian measures adopted by the LTTE, it emerged to claim as the self appointed sole representative of the Tamil people.

Similarly, earlier the other Tamil militant organisations, EPRLF, ENDLF and TELO except EROS and PLOTE accepted the Indo- Lanka Accord about 15 years (1987) ago. If the LTTE would had come forward to accept the above Accord earlier, the Tamils and the country would have been spared of the precious lives of 60,000-70,000 Tamils and the wanton destruction of their properties.
http://en.wikipedia.org/wiki/TELO
"On 29 April that year, they launched an all-out assault on the TELO. TELO bases across Jaffna were shelled with mortars. TELO cadres, whether armed or unarmed, came under rifle attack and were shot dead. No quarter was given, according to eyewitnesses. Those who surrendered were shot dead as they laid down their weapons, and those who attempted to flee were shot as they ran. Civilians were warned not to shelter fugitives. The few TELO cadres who managed to find refuge with other armed groups such as the EPLRF or the EROS were nearly the only ones who survived. On 5 May, the TELO's leader Sri Sabaratnam was shot dead by Sathasivam Krishnakumar of the LTTE, better known as Kittu. In all, over four hundred men had been killed, and the TELO had been virtually wiped out.//

அனானியாரே..

இதனை முன்பேயே படித்திருக்கிறேன்.. என்ன செய்ய..?

புலிகளின் கொடூரத்தாலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது மிக மிக கேவலம்..

ஈழத்து மக்களை நினைத்தாலே பாவமாக இருக்கிறது..

மத்தளதுக்கு இரு பக்கமும் இடி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் புருஷர்கள் அவர்கள்தான்..

Anonymous said...

"மத்தளதுக்கு இரு பக்கமும் இடி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் புருஷர்கள் அவர்கள்தான்.."

இதைப் போல் “உதாரண புருடத்துவம்” வேண்டவே வேண்டாம்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
"மத்தளதுக்கு இரு பக்கமும் இடி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணப் புருஷர்கள் அவர்கள்தான்.."
இதைப் போல் “உதாரண புருடத்துவம்” வேண்டவே வேண்டாம்.//

வேறு என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்..?

abeer ahmed said...

See who owns christianguitar.org or any other website:
http://whois.domaintasks.com/christianguitar.org