துள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்

20.01.09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இந்தாண்டு முதல் ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் நான் பார்க்கும் படங்களின் கதைச்சுருக்கத்தையாவது எப்பாடுபட்டாவது சுருக்கமாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தை பூண்டுள்ளேன்.

எல்லாம் நல்லபடியாக நடக்க முருகன் அருள் வேண்டும். வேண்டுகிறேன்.

இதில் முதல் நிகழ்ச்சியாக நேற்று 19-01-09 திங்கள்கிழமை பார்த்த “The Love Such a Love” என்ற மங்கோலிய நாட்டு திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இது.

சாதாரண கதைதான்.. இயக்கம் சுமார் என்று சொல்லலாம். திரைக்கதை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் சிற்சில இடங்களில் புன்னகை பூக்கவும், நகைக்கவும் செய்தது.

துலாய்க்கு(Tuulaikhuu) பள்ளி இறுதியாண்டு மாணவன். இவனது நண்பர்கள் பாயாரா(Bayaraa), துல்கா(Tulga.) தோழிகள் சோலங்கோ(Solongo), நவேச்சா(Navchaa).

படத்தின் ஹிரோ துலாய்க்கு ஒரு பேக்கு போல இருக்கிறான். இளைஞனுக்குரிய வயது வந்துவிட்டாலும், குணம் வந்துவிடவில்லை. ஆனால் இவனது நண்பன் பாயாரா, சோலங்கோவுடன் காதல் கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலவியிலும் ஈடுபடுகிறான்.

துலாய்க்கு ரெகுலராக ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சென்று அங்கு வெறும் ஒரு கிளாஸ் பால் மட்டுமே அருந்துகிறான். அதற்காகவே அவன் அங்கு செல்லவில்லை. புஜின்(Bujin) என்கிற அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணின் மீது அவனுக்கு ஒரு மையல். அவளைப் பார்ப்பதற்காகவே தினமும் அங்கு சென்று பால் குடிக்கிறான். அவள் கொடுக்கும் பில்களை பத்திரப்படுத்தி பாடப்புத்தகத்தின் நடுவில் வைத்து புத்தகத்தை தலைக்கு வைத்து தூங்குகிறான். இதுவரையிலும் ஒரு தலைக்காதல்.

சோலங்கோவின் அப்பா மீன் வேட்டைக்காக வெளியூர் சென்றுவிட இளசுகள் அவள் வீட்டில் கொட்டமடிக்கிறார்கள். துலாய்க்கா பீர் அடித்து குப்புறப் படுத்துவிடுகிறான். அவனை பெட்ரூமில் படுக்கையில் கிடத்தி ஒரு ஜாலிக்காக முக்கால் நிர்வாணமாக்கிவிட்டுப் போகிறார்கள் நண்பர்கள்.

மற்றொரு அறையில் சோலங்கோவும், பாயாரவும் ஈருடல் ஓருடலாக உருமாறுகிறார்கள். விடிகிறது. திடீரென்று சோலங்கோவின் அப்பா வந்துவிடுகிறார். நண்பர்கள் அவசரம், அவசரமாக கிளம்பி வெளியேறுகிறார்கள். அவசரத்தில் பெட்ரூமில் படுத்திருக்கும் துலாய்க்கை மறந்துபோய்விடுகிறார்கள்.

வீட்டின் உள்ளே வரும் சோலங்கோவின் அப்பா முக்கால் நிர்வாண துலாய்க்காவையும், அரை நிர்வாணக் கோலத்தில் நிற்கும் தன் மகள் சோலங்கோவையும் பார்த்து வழக்கமான அப்பாவைப் போல் கோபப்பட்டு துலாய்க்காவைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு செல்கிறார்.

சோர்ந்த முகத்துடன் வகுப்பறைக்குள் வரும் துலாய்க்காவிடம் நண்பர்கள் வட்டாரம் “ஸாரி..” சொல்லி அவனை சோலங்கோவின் அப்பா எங்கே அழைத்துச் சென்றார் என்று விசாரிக்கிறார்கள். HIV Test செய்ய தன்னை அழைத்துச் சென்றதாக சோகத்துடன் சொல்கிறான் துலாய்க்கா.

சோலங்கோ திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு பித்த வாந்தியெடுக்க அதை அவள் அப்பா பார்த்துவிட்டு காரணம் கேட்க.. சும்மனாச்சுக்கும் “நான் மாசமா இருக்கேம்ப்பா.. நீங்க கூடிய சீக்கிரம் தாத்தாவாகப் போறீங்க..” என்கிறாள். பிடித்தது சனி துலாய்க்காவுக்கு..

ஸ்கூலுக்கே வந்து துலாய்க்காவை தூக்குகிறார் சோலங்கோவின் அப்பன். ஆனால் நம்ம ஹீரோ நடுவழியிலேயே காரில் இருந்து இறங்கி தப்பித்து ஓடுகிறான். ஆனாலும் விடவில்லை மாமன். துலாய்க்கா வீட்டிற்கு வருவதற்குள் மாமன்காரன், “நாம சம்மந்தியாயிட்டோம்..” என்று துலாய்க்காவின் அப்பன், ஆத்தாவிடம் சொல்லி வீட்டில் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறான்.

இதற்கு மேலும் உண்மையைச் சொல்லவில்லையெனில் தான் பலியாடாகிவிடுவோம் என்பதால் “சோலங்கோவின் கர்ப்பத்துக்கு காரணம் அந்த பாழாய்ப் போன பாயாராதான்..” என்ற உண்மையைச் சொல்கிறான் துலாய்க்கா. தப்பித்த திருப்தியில் துலாய்க்காவின் அப்பனும், ஆத்தாளும் சிரிக்க.. சோலங்கோவின் அப்பனுக்கு புரையேறி, “கயவாளிப் பய.. அவனை விட்டேன்னா பார்..” என்று பாயாராவைத் தேடி ஓடுகிறார்.

நவேச்சா துலாய்க்காவுடன் நெருங்குவதற்கு மிகவும் பிரயத்தனப்படுகிறாள். ஆனால் துலாய்க்காவோ புஜினை கண் கண்ட தெய்வமாக நினைக்கிறான். புஜினியிடம் தன் மனதைத் திறக்கிறான். அவள் தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அவனை அழைக்கிறாள்.

அவளுக்கு கிப்ட் பார்சல் வாங்கிக் கொண்டு வரும்போது நண்பர்கள் குழுமத்திடம் மாட்டிக் கொள்கிறான் துலாய்க்கா. அவர்கள் அவனை விருந்துக்கு அழைக்க.. தான் Durkhan என்ற ஊருக்குச் செல்லவிருப்பதாகவும், அங்கே ஒரு திருமணம் நாளை நடக்கவிருப்பதாகவும் சொல்கிறான்.

“டிரெயினுக்கு இன்னும் நேரம் இருக்கே..” என்று சொல்லி நண்பர்கள் கூட்டம் அவனைத் தூக்கிக் கொண்டு செல்கிறது. நவேச்சா அவன் யாரையோ பார்க்கப் போகிறான் என்பதை உணர்ந்து அவனை இன்னிக்கு மடக்கிரணும் என்று திட்டம் தீட்டுகிறாள்.

கிடைக்கிறது ஒரு வாய்ப்பு. பீர் பாட்டிலில் வோட்காவைக் கலக்குகிறாள். துலாய்க்கா குவார்ட்டர் அடித்து மட்டையாகிறான். புஜின் போன் செய்கிறாள். போனை எடுக்கிறாள் நவேச்சா.. “அவர் என்னுடன் சல்லாபித்துவிட்டு, சோர்ந்து போய் படுத்திருக்கிறார்..” என்று கூச்சநாச்சமில்லாமல் பொய் சொல்கிறாள். புஜின் கோபப்பட்டு துலாய்க்காவை மறந்துவிட முடிவு செய்கிறாள்.

மட்டையாகிப் போய் கிடக்கும் நம் சங்கத்து சிங்கம் துலாய்க்காவை பார்த்த கடமை தவறாத நண்பர்கள் கூட்டம். துலாய்க்கா பொய் சொன்னது தெரியாமல் டிரெயினில் துலாய்க்கா சொன்ன Durkhan-க்கு படுக்க வைத்தே அனுப்பி வைக்கிறார்கள்.

Durkhan வந்தவுடன் நட்ட நடு நசியில் துலாய்க்காவை எழுப்புகிறாள் டிக்கெட் பரிசோதகர். அவனை இறக்கிவிட்டுவிட்டு டிரெயின் சென்றுவிட அப்போதுதான் தன் நிலை அவனுக்குப் புரிகிறது. செல்போனில் நண்பர்களைத் தொடர்பு கொண்டு தான் பொய் சொன்னதாகச் சொல்லி தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி சொல்கிறான்.

நண்பர்கள் கூட்டம் தலைதெறிக்க கால்டாக்ஸி போட்டு அவனை அழைக்க வருகிறார்கள். அதே சமயம் ஸ்டேஷன் மாஸ்டர் துலாய்க்கா மேல் பரிதாபப்பட்டு அவனை வேறொரு காரில் அனுப்பி வைக்கிறாள். துலாய்க்கா வீட்டில் வந்து படுக்கவும், அவனது நண்பர்கள் அவனைத் தேடி அவன் Durkhan வரவும் நேரம் சரியாக இருக்கிறது.

நண்பர்கள் மறுபடியும் அவனைத் தேடி வந்து விசாரிக்க.. நடந்ததைச் சொல்கிறான். நண்பர்களுடன் அதே ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சென்று புஜின் பற்றி விசாரிக்கிறான். அங்கே உள்ள யாருமே அவளைப் பற்றிச் சொல்ல மறுக்கிறார்கள். “தெரியவில்லை..” என்கிறார்கள். “அவள் இப்போது அங்கே வேலை செய்யவில்லை..” என்கிறார்கள். துலாய்க்கா இடிந்து போய் விழாமல், ஒடிந்ததைப் போல் காட்டிக் கொண்டு நிற்கிறான்.

நவேச்சா தான் போய் விசாரித்து வருவதாகச் சொல்லி ஒரு ரெஸ்ட்டாரெண்ட் பெண்ணிடம் விசாரிக்கிறாள். புஜினின் அம்மாவுக்கு புற்று நோய் என்றும், புஜின் அவளுடன் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிகிறது. ஆனால் இதையும் நவேச்சா மறைத்துவிட்டு “என்னிடமும் எதுவும் சொல்லவில்லை..” என்று பொய் சொல்கிறாள்.

துலாய்க்கா காதல் நோயால் சவலைப் பிள்ளையாகிறான். “நேரம் கூடி வந்த வேளை.. நீ நெஞ்சை மூடி வைத்த கோழை..” என்று பாடாமலேயே தேவதாஸ் போல் ஆகிறான். நவேச்சா இதுதான் சமயம் என்று அவனை நெருங்க முயல்கிறாள். ஆனால் முடியவில்லை. “என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை.. கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை..” என்று மறுபடியும் சோககீதம் பாடுகிறான் துலாய்க்கா.

நவேச்சாவுக்கு அவனது உண்மையான காதல் புரிகிறது. அவளுக்குள்ளும் ஏதோ ஒன்று செய்ய.. துலாய்க்காவிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். தான்தான் அவர்கள் இருவருக்கும் இடையில் புகுந்து விளையாடிவிட்டதாகச் சொல்கிறாள்.

இறுதியில் நண்பர்கள் கூட்டத்தின் ஏற்பாட்டில் சோலங்கோவின் தந்தை மருத்துவமனைக்கு சென்று புஜினின் அம்மாவையும், அவளையும் அழைத்து வர.. துலாய்க்காவும், புஜினும் ஒன்று சேர்கிறார்கள்.

இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்.

நல்லா படிச்சு வைச்சுக்குங்க..

அப்பால.. இதே மாதிரி எதுனாச்சும் தமிழ்ப் படம் வந்தா சொல்லுங்க..

பிட் நியூஸ் போட்டு பேஜார் பண்ணிரலாம்..

11 comments:

butterfly Surya said...

படத்தை விட விமர்சனம் நல்லாயிருக்கு..

"இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்"..

படமே 90 நிமிடம் தான்.. இது சூப்பர்.

முருகா.. முருகா..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
படத்தை விட விமர்சனம் நல்லாயிருக்கு..
"இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்"..
படமே 90 நிமிடம் தான்.. இது சூப்பர்.
முருகா.. முருகா..//

அதுல முக்காலே மூணு வீசத்துல கதைய முடிச்சிட்டேன் பூச்சியாரே..!

வருகைக்கு நன்றிகள்.

நையாண்டி நைனா said...

/*இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்.

நல்லா படிச்சு வைச்சுக்குங்க..

அப்பால.. இதே மாதிரி எதுனாச்சும் தமிழ்ப் படம் வந்தா சொல்லுங்க..

பிட் நியூஸ் போட்டு பேஜார் பண்ணிரலாம்..*/

நம்மாளுங்களுக்கு சொந்தமா படம் எடுக்க வேணுமின தெரியாது இருக்கலாம்... ஆனால் காப்பியிங்..ஏடிடிங்... ஆண்டு பேஸ்டிங்க் நல்லாவே தெரியும்.
ஒரு 6, 7 வருசத்துக்கு முன்னே ரெண்டு படம் வந்துச்சு... ரெண்டும் தமிழ்லே தான் வந்துச்சி... அப்பா-அம்மா வை சமாதான படுத்த காதலன் காதலி வீட்டிற்கும், காதலி காதலன் வீட்டிற்கும் போவாங்க... மனத்திலே இடம் பிடிக்க ஒண்ணு சூரியா நடிச்சது..இன்னொன்ணு பிரசாந்த், அதையே பார்த்தோம்....

அப்புறம் இப்போ வீராப்பு-ன்னு ஒரு படம் வந்துச்சி, மலையாள படத்தோட ரீமேக் என்று.. அந்த ஒரிஜினல் மலையாள படமே தமிழ்லே டப் ஆகி வந்துச்சி மக்கள் அதையும் பார்த்தாங்க ரீமேக்கையும் பார்த்தாங்க...

நம்மாளுங்க படம் பார்க்கவா வரானுங்க....?

போங்க ஸார் போங்க....

சத்தியமா சொல்றேன்...
ஒரே கதையே எடுத்துக்கொங்க...
1. விஜய் - அசின்
2. விஜய் - திரிஷா
3. விஜய் - குத்து ரம்யா
4. விஜய் - தமண்னா
5. விஜய் - பாவனா
6. அஜீத் - அசின்
7. அஜீத் - திரிஷா
8. அஜீத் - குத்து ரம்யா
9. அஜீத் - தமண்னா
10. அஜீத் - பாவனா
11.சுந்தர்.C - குருமா(புது வரவு)
12. "ஜித்தன்" ரமேஷ்- சுருமா(புது வரவு)
13. ஜீவா - அம்பையா (புது வரவு)
14. சூரியா - ஜிம்காணா (புது வரவு )
15. விக்ரம் - பொறிச்சா (புது வரவு )

இப்படி நீங்க எல்லா காம்பிணசன்லே எடுத்தாலும் பார்ப்பான், அவன் தமிழன்.

நித்யன் said...

தலைவரே...

துலாய்க்கா மலாய்க்கா... அஜின் புஜின்... என்று கதாபாத்திர பெயர்களை வைத்தே விமர்சனம் எழுதும் உங்கள் உத்தியை, தமிழ் பட விமர்சனங்களோடு நிறுத்தினால் உத்தமம். ஏனோ ஒட்டாமலே போகிறது. இதே கேரக்டர்களுக்கு ராஜா, மீனா என்று பேர் சூட்டினாலும் அப்படியேதான் இருக்குமோ என்னவோ...?

இந்த சுருக்கமான கதைச்சுருக்கம் படித்து சற்று tired ஆனது உண்மைதான்.

சுருக்கப்பதிவிற்கு மிக்க நன்றி...

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
/*இதுதான்பா கண்ணுகளா.. இந்தப் படத்தோட சுருக்கமான கதைச்சுருக்கம்.
நல்லா படிச்சு வைச்சுக்குங்க. அப்பால.. இதே மாதிரி எதுனாச்சும் தமிழ்ப் படம் வந்தா சொல்லுங்க..
பிட் நியூஸ் போட்டு பேஜார் பண்ணிரலாம்..*/
நம்மாளுங்களுக்கு சொந்தமா படம் எடுக்க வேணுமின தெரியாது இருக்கலாம்... ஆனால் காப்பியிங்..ஏடிடிங்... ஆண்டு பேஸ்டிங்க் நல்லாவே தெரியும்.
ஒரு 6, 7 வருசத்துக்கு முன்னே ரெண்டு படம் வந்துச்சு... ரெண்டும் தமிழ்லேதான் வந்துச்சி... அப்பா-அம்மாவை சமாதானபடுத்த காதலன் காதலி வீட்டிற்கும், காதலி காதலன் வீட்டிற்கும் போவாங்க. மனத்திலே இடம் பிடிக்க.. ஒண்ணு சூரியா நடிச்சது.. இன்னொன்ணு பிரசாந்த், அதையே பார்த்தோம். அப்புறம் இப்போ வீராப்புன்னு ஒரு படம் வந்துச்சி, மலையாள படத்தோட ரீமேக் என்று.. அந்த ஒரிஜினல் மலையாள படமே தமிழ்லே டப் ஆகி வந்துச்சி மக்கள் அதையும் பார்த்தாங்க. ரீமேக்கையும் பார்த்தாங்க... நம்மாளுங்க படம் பார்க்கவா வரானுங்க? போங்க ஸார் போங்க. சத்தியமா சொல்றேன்...
ஒரே கதையே எடுத்துக்கொங்க...
1. விஜய் - அசின்
2. விஜய் - திரிஷா
3. விஜய் - குத்து ரம்யா
4. விஜய் - தமண்னா
5. விஜய் - பாவனா
6. அஜீத் - அசின்
7. அஜீத் - திரிஷா
8. அஜீத் - குத்து ரம்யா
9. அஜீத் - தமண்னா
10. அஜீத் - பாவனா
11.சுந்தர்.C - குருமா(புது வரவு)
12. "ஜித்தன்" ரமேஷ்- சுருமா(புது வரவு)
13. ஜீவா - அம்பையா (புது வரவு)
14. சூரியா - ஜிம்காணா (புது வரவு )
15. விக்ரம் - பொறிச்சா (புது வரவு )
இப்படி நீங்க எல்லா காம்பிணசன்லே எடுத்தாலும் பார்ப்பான், அவன் தமிழன்.//

நைனா என்னாச்சு? பொங்கித் தீர்த்துட்டீங்க..

செம காமெடி போங்க.. வீடே அதிருது சிரிப்புல.. அசத்தல் பின்னூட்டம்..

தமிழன் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பார்ப்பான். அதனால்தான் இங்கே நிறைய புது, புது ஹீரோக்கள் அவதாரமெடுத்து வருகிறார்கள்.

தமிழனின் பொறுமைதான் சினிமாக்காரர்களின் ஒரே பலம்.

குருமா, கிருமான்னு போட்டுக் கலக்கிட்டீங்க.. ஒருவேளை இதே பெயருடன் யாராவது ஒரு தாரகை வந்தாலும் வரலாம்..

நையாண்டி நைனாவுக்கு எனது சல்யூட்..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
தலைவரே...//

இத விட்டுத் தொலைய்யா ஏன்யா அதையே புடிச்சு தொங்கிட்டிருக்கீங்க..

//துலாய்க்கா மலாய்க்கா... அஜின் புஜின்... என்று கதாபாத்திர பெயர்களை வைத்தே விமர்சனம் எழுதும் உங்கள் உத்தியை, தமிழ் பட விமர்சனங்களோடு நிறுத்தினால் உத்தமம். ஏனோ ஒட்டாமலே போகிறது.//

அடப்பாவி.. கதையைப் படிக்கும்போது இது வெளிநாட்டுப் படம்னு தெரிய வேண்டாமா..?

//இதே கேரக்டர்களுக்கு ராஜா, மீனா என்று பேர் சூட்டினாலும் அப்படியேதான் இருக்குமோ என்னவோ...?//

கண்டிப்பா நல்லாயிருக்கும் ராசா.. கொஞ்சம் காத்திரு. எப்படியும் இதை யாராச்சும் கொஞ்சமா சுட்டு படமா வரும்.. அப்போ வைச்சுக்கலாம்..

//இந்த சுருக்கமான கதைச்சுருக்கம் படித்து சற்று tired ஆனது உண்மைதான். சுருக்கப் பதிவிற்கு மிக்க நன்றி...//

இதுக்கே டயர்டா..?

ஜாக்கியோட 'அக்னிநட்சத்திரம்' பதிவைப் படிச்சியே.. எப்படி குப்புறக்கடிச்சு படுத்துட்டியா..?

Jackiesekar said...

ஜாக்கியோட 'அக்னிநட்சத்திரம்' பதிவைப் படிச்சியே.. எப்படி குப்புறக்கடிச்சு படுத்துட்டியா..?//

ங்கொய்யால உங்க சண்டையில என்னை ஏன்டா இழுக்கிறிங்க...

உண்மைத்தமிழன் said...

///jackiesekar said...
ஜாக்கியோட 'அக்னிநட்சத்திரம்' பதிவைப் படிச்சியே.. எப்படி குப்புறக்கடிச்சு படுத்துட்டியா..?//
ங்கொய்யால உங்க சண்டையில என்னை ஏன்டா இழுக்கிறிங்க...///

வேற யாரை இழுக்குறது..? நீங்கதான ஸார், எனக்குத் தெரிஞ்ச இளிச்சவாயன்..

benza said...

விமர்சனம் ஓர் மொங்கோலியா படம் என்பதால் படித்தேன் >
அதுதான் சகலதும் சுமார் என்று தொடக்கத்திலேயே சொல்லிடீங்களே >
முனைய தொகிப்பிலும் பார்க்க சுவரஸ்யம் கம்மிதான் >
மிக்க நன்றி

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
விமர்சனம் ஓர் மொங்கோலியா படம் என்பதால் படித்தேன் >
அதுதான் சகலதும் சுமார் என்று தொடக்கத்திலேயே சொல்லிடீங்களே >
முனைய தொகிப்பிலும் பார்க்க சுவரஸ்யம் கம்மிதான் >
மிக்க நன்றி//

நன்றி பென்ஸ் ஸார்..

இயக்கம் சாதாரணமாக இருந்ததால் படத்தில் குறிப்பிட்டு மனதில் நின்ற காட்சிகள் குறைவு.. அதனால்தான் எழுதும்போது என் மனதிலேயே ஒட்டவில்லை.

abeer ahmed said...

See who owns dreamincode.net or any other website:
http://whois.domaintasks.com/dreamincode.net