கம்யூனிஸ்ட்களின் வேலை

கம்யூனிஸ்ட்.. எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை. இன்னின்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம்கிட்ட.. பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்ட.. இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே.. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் அது நம் கம்யூனிஸ்ட்தான்.

அதற்கு அடுத்தாற்போல காங்கிரஸ். என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்.. இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது.. அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்ட பேசிக் கொண்டு, "காலிகளை ஒழித்துவிட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்களை போடுகிறாயா?" என்று கேட்கிறார்கள்.

- பெரியார் உரை (04-11-1973)