இந்திய அரசாங்கம் வேண்டாம்

எங்களுக்குத் தமிழர்களுக்கு - தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் இந்திய யூனியனில் இருக்க விரும்பவில்லை. நாங்கள் எங்களை நாட்டை, தனிப்பட்ட பூரண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஆகவே இந்திய தேசியக் கொடியைக் கொளுத்துவது - இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்படவில்லை என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையக் காட்டுவதேயாகும்.

- 'விடுதலை'(20.07.1955)யில் பெரியார்